கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர்!!!

Anayar

இசை மூலம் இறைவனை அடைந்த ஆனாய நாயனார்
எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—982; தேதி— 16th April 2014.

அறுபத்து மூன்று சிவனடியார்களின் கதைகளைக் கவிதை வடிவில் தந்தது பெரிய புராணம். இதை நமக்குத் தந்தவர் சேக்கிழார் பெருமான். இதில் வரும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், கண்ணப்பர், நந்தனார் முதலிய கதைகள் பலருக்கும் தெரியும். ஆனால் சேக்கிழார் பாடிய இன்னும் சிலரைப் பற்றி பலருக்கு அதிகம் தெரியாது. குறிப்பாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டே சிவலோகம் சென்ற ஆனாயர் பற்றி பலருக்கும் தெரியாது. புல்லாங்குழலில் நமசிவாய மந்திரத்தை இசைத்தவுடன் சிவனே பூவுலகிற்கு வந்து ஆனாய நாயனாரை புல்லாங்குழல் ஊதிக் கொண்டே அழைத்துச் சென்ற அற்புதமான வரலாற்றை சேக்கிழார் மிக அழகாகப் பாடியுள்ளார். இது உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம்!!

flute, anayanar2

மேல் மழநாடு என்பது சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி. அங்கே திருமங்கலம் என்று ஒரு ஊர். மங்கலம் என்றால் பிராமணர்கள் வாழும் ஊர் என்பது பொருள். ஆனால் அந்த ஊரில் வாழ்ந்த ஒர் மாடு மேய்க்கும் இடையர் பற்றிய கதை இது. அவர் பெயர் ஆனாயர். அவருக்கு தெரிந்தது மாடு மேய்க்கும் தொழில் ஒன்றுதான். கிருஷ்ண பரமாத்மாவின் ஜாதி. ஆனால் கண்ணனுக்கோ உலகில் தெரியாத விஷயம் இல்லை. ஆனாயருக்கு மாடு மேய்க்கும் தொழிலோடு வேறு இரண்டே விஷயங்கள் மட்டும் தெரியும். ஒன்று புல்லாங்குழல் வாசிப்பது, இரண்டு பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பது. அதையும் புல்லாங்குழலிலேயே வாசித்து மகிழ்வார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்த அவரது கவனிப்பில் ஆடு மாடுகள் எல்லாம் சாப்பிட்டுப் பல்கிப் பெருகின. ஒரு நாள் ஒரு கொன்றை மரத்தைப் பார்த்துவிட்டார். அதன் பூக்கள் சரம் சரமாகத் தொங்கியதைக் கண்டவுடன் சிவ பெருமான நினைவில் மூழ்கிவிட்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. ஒரு பச்சைப் பசேல் என்று பச்சைக் கம்பளம் விரித்தார் போன்ற வயல் வெளியில் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தார். தூரத்தில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. ஒரு பக்கம் பச்சை வயல்; மறுபக்கம் நீல மேகம்; இந்தப் பிண்ணனியில் வெள்ளை நிறக் கொக்குகள் சிறகடித்துப் பறந்தன. இந்த அற்புதமான இயற்கை எழிலைப் பார்த்தவுடன் அவருக்கு இவற்றை எல்லாம் படைத்த இறைவன் நினைவுக்கு வரவே வயல் வரப்பிலேயே சமாதி நிலைக்குப் போய்விட்டார். அவருடன் வந்தவர்கள் அவரை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டி இருந்தது. அவர் சமாதி கலைந்து சுய நினைவுக்கு வர சில நாட்கள் ஆயின!!

aanaayanar

நாமாக இருந்தால் இந்த அற்புதமான காட்சியை உடனே மொபைல் போனில் புகைப் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் போட்டு பெருமைப் பட்டிருப்போம். ஆனால் ஆனாய நாயனார், ராம கிருஷ்ண பரமஹம்சர் போன்றோருக்கு சத்யம் – சிவம்—சுந்தரம் மூன்றும் இறைவனின் படைப்பு. எங்கெங்கெல்லாம் சுந்தரம் (அழகு) இருக்கிறதோ அது எல்லாம் அவர்களுக்கு இறைவனையே நினைவுபடுத்தும்.

கொன்றை மரத்தையும் அழகிய பூங்கொத்துக்களையும் கண்ட ஆனாயர் எடுத்தார் புல்லாங்குழலை, இசைத்தார் நமசிவாய மந்திரத்தை! இதைத் தொடர்ந்து அவரைச் சுற்றியிருந்த உலகமெல்லாம் ஆடாது அசங்காது நின்றன. இதோ சேக்கிழார் பாடல் வாயிலாகவே அதைக் காணுங்கள்:

“வள்ளலார் வாசிக்கும்
மணித் துளை வாய் வேய்ங்குழலின்
உள்ளுறை அஞ்செழுத்து
ஆக, ஒழுகி எழும் மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும்
மேல் அமரர் தருவிளை தேன்
தெள் அமுதின் உடன் கலந்து
செவி வார்ப்பது எனத் தேக்க”.

அதாவது அவர் வாசித்தது அமிர்தத்தையும் கற்பக மரம் ஒழுக்கும் தேனையும் கலந்து கொடுத்தது போல இருந்ததாம் (அமரர் தரு= கற்பக விருட்சம்).

அடுத்தாற்போல பசுக்களும் கன்றுகளும் மான் முதலிய காட்டு விலங்குகளும் என்ன செய்தன என்று படியுங்கள்:–

ஆன் நிரைகள் அறுகு அருந்தி
அசைவிடாது அணைந்து அயரப்
பால் நுரை வாய்த் தாய்முலையில்
பற்றும் இளம் கன்றினமும்
தான் உணவு மறந்து ஒழிய
தட மருப்பின் விடைக் குலமும்
மான் முதலாம் கான் விலங்கும்
மயிர் முகிழ்த்து வந்து அணைய.”

பொருள்:– பசுக்கள் சாப்பிட்ட உணவை அசைபோட மறந்தன. கன்றுகள் பாதியில் பால் குடிப்பதை நிறுத்தின. காளைகள் வந்து குழுமின. மான் முதலிய விலங்குகள் மயிர்க்கூச்சம் அடைந்தன.

anayar color

மயில் முதலிய பறவைகள் என்ன செய்தன என்பதையும் நம் கண் முன்னே படம் போலக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்:

ஆடு மயில் இனங்களும் அங்கு
அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த
உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய
மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்.
கூடியவன் கோவலரும்
குறை வினையின் துணை நின்றார்

பொருள்:– மயில்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆனாயரைச் சூழ்ந்து நின்றன. பறவைகள் அவரைச் சுற்றி கூடு கட்டின. இடையர்கள் பாதி வேலைகளைப் போட்டுவிட்டு அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பூமிக்கடியில் வாழும் நாகர்கள், வானத்தில் சென்று கொண்டிருந்த தெய்வ மகளிரான அரம்பையர், வித்யாதரர், சாரணர், கின்னரர், தேவர்கள் ஆகியோர் விமானங்கள் எல்லா வற்றுடனும் அங்கே கூடிவிட்டனர்.

பணி புவனங்களில் உள்ளார்
பயில் பிலங்கள் அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர்
மருங்கு மயங்கினர் மலிர்ந்தார்
தணிவு இல் ஒளி விஞ்சையர்கள்
சாரணர் கின்னரர் அமரர்
அணி விசும்பில் அயர்வு எதி
விமானங்கம் மிசை அணைந்தார்.

இந்தப் பாடல்கள் புல்லாங்குழல் இசையின் மகிமையையும் பாடுவதால் அப்படியே பாடல் வடிவில் படிப்பது இன்பம் பயக்கும்.

மரங்கள் அசையவில்லை. ஆறுகள் ஓடவில்லை, அருவிகள் நீர் ஒழுக்கு இன்றி அப்படியே நின்றன. கடல் அலைகள் வீசவில்லை என்று சேக்கிழார் பாடிக்கொண்டே போகிறார். இப்படி ஸ்தாவர, ஜங்கமப் பொருட்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் சிவனும் உமையும் இந்த இசையில் மயங்கி காளை வாகனத்தில் ஏறிப் புறப்பட்டனர்.

ஆனாயர் குழல் ஓசை
கேட்டருளி அருள் கருணை
தான் ஆய திரு உள்ளம்
உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணர் ஆம்
கண்ணுதலார் விடை உகைத்து
வான் ஆறு வந்து அணைந்தார்
மதி நாறும் சடை தாழ

“உடனே எம்முடன் வருக. வீட்டுக்குள் போய் ‘’ட்ரஸ்’’ எல்லாம் ‘சேஞ்ச்’ (’மாற்ற) பண்ண வேண்டாம். அப்படியே எம்முடன் வருக”– என்று சிவனும் உமையும் கூறினர்:–

“இந்நின்ற நிலையே நம்பால்
அணைவாய் என, அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார்
ஐயர் திருமருங்கு அணைந்தார்”

உடனே விண்ணவர்கள் மலர் மாரி பொழிந்தனர். முனிவர்கள் வந்து வேதம் ஓதினர். ஆனாயர் புல்லாங்குழலை நிறுத்தவே இல்லை. வாசித்துக் கொண்டே சிவனுடன் சென்று விட்டார். இவ்வாறு இசைக் கருவியை வாசித்துக் கொண்டே சிவலோகம் போன ஒரு தொண்டரைப் பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நாமும் கதையை முடித்தோம். நமசிவவாய ஓம்!!

விண்ணவர்கள் மலர் மாரி
மிடைந்து உலகம் மிசை விளங்க,
எண்ணில் அரு முனிவர் குழாம்
இருக்கு மொழி எடுத்து ஏத்த’
அண்ணலார் குழல் கருவி
அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொன் பொதுவினிடைப் புக்கார்.

சுபம்! Contact swami_48@yahoo.com

How did Rare Indian Animal ‘Asunam’ become extinct?

Mythical_Creatures_by_Jesteppi
Chart of mythical animals around the world

Written by London Swaminathan
Post No. 981; dated 15th April 2014

Sonic boom and Sonic bomb
Tamil literature gives us very interesting information about a rare animal called ‘Asunam’. It is phonophobic. It has got a good taste for melodious music. It is more musical than most men. But the minute someone plays on a big drum it dies at once. Sangam Tamil literature is 2000 year old. We have three references to this ‘Asunam’and later literature gives more information. It is not a mythical animal like griffin or Makara or Yali. Somehow palaeontologists and paleo zoologists missed this. Now we get more scientific information about sonic bombs and low frequencies emitted by submarines that killed even giant squids. Dolphins and whales commit mass suicides because of sonar disturbances. So we may look into this extinct animal again armed with all the scientific facts.

homa-bird-2

Mysterious Vedic Bird ‘Homa’

Tamil literature

‘Natrinai’ is one of the anthologies of Sangam Tamil literature and verses 244 and 304 give the following information:
In the mountainous ‘Kurinji’ area, ‘Asunam’ lives in the caves. It listens keenly to the buzzing sound (music) of the bees and beetles. The heroine of a love poem says, “My lover is like an Asunam. When he is near me it gives pleasure. When he is temporarily separated it gives me great sorrow. I am like Asunam attracted by melodious music and then killed by loud beating of the drums.

The commentator explains that the Tamils played on lyre to attract the Asunams from the caves and suddenly played on drums to kill them. Another verse from another Sangam Tamil anthology called ‘Akananuru’ (verse 88) gives similar information. The only difference is that the commentator describes Asunam as a bird here.
‘Nammanik kadikai’– is one of the 18 minor Tamil works. Verse three of the book is very clear about Asunam. It described it as an animal. It compares Asunam with several other people in public life.
The celebrated author Kamban of Kamba Ramayanam compared himself to Asunam! He said, “Among the stalwarts of Tamil language, probably my poems may be like playing drums to Asunams”. Kamban was so humble that he said his poems may not be of good quality, but the fact of the matter is that he is considered one of the great poets of the Tamil speaking world.

homa-bird-1
Homa bird is the logo of Iran Airlines

My Research Findings on ASUNAM:–

My research on the Asunam based on the above verses and Tamil encyclopaedia Abhidana Chintamani has found out the salient features of Asunam stories. I can summarise them as follows:–
1.Though there are only three references in the ancient Sangam literature, we know that it is not a bird, but an animal.
2.It lived in the caves of the mountains which ancient Tamils called ‘Kurinji ‘lands.
3.Asunam loved mellifluous music but susceptible to harsh music particularly high decibel noise. Modern research shows that sounds of 185 decibels or more can kill human beings.
4.Tamils deliberately played on lyre to attract it and killed them by playing on big drums. It may be one of the reasons for its extinction. The other reason is noise pollution. It might have slowly disappeared.
5. Very few references in the 2000 year old Sangam Tamil literature show that it was a rare animal even at that time. Other animals like tigers, elephants and bears are referred to hundreds of times.
6.Ancient Tamils knew the power of sound waves. Modern research in this field has led into the development of sonic bombs. We already knew the effect of sonic booms emitted by supersonic jets. We now know the effect of sonar waves on dolphins and whales.
7.It will be good that if Tamils do more research and find out the fossils from mountainous area.
8.I have given the full details of the poets names with full quotes in the Tamil version of this article and we know where those poets lived in ancient Tamil Nadu. So we can narrow down the area of our search.
9.Adi Shankara who lived in the first century BC or before, adds some interesting details ( I follow Kanchi Paramacharya in dating Adi Shankara, which is supported by Tamil literature. Please read my earlier article for the dating)

China,_testa_di_makara,_
Mythica Hindu Makara in China

Adi Shankara on Deer Hunt
Verse (sloka) 76 of Viveka Chudamani of Adi Shankara says,
The deer, the elephant, the moth, the fish and the honey bee —- these five are annihilated because of their slavery to one or the other of the senses such as sound etc., through their attachment. What then is the condition of a man who is attached to all these five?
The commentators add the following information about deer:
“The deer is always fascinated by melodious sound and the deer hunter sings to charm the deer. Attracted by the melody of sound, the deer has no awareness of the danger it is in and turns in the direction of the music; the hunter soon makes it his target”.
Asunam may belong to the family of deer.

Makara-1thailand
Makara in Thailand

Contact swami_48@yahoo.com

My other articles on related topics:

https://tamilandvedas.wordpress.com/2013/02/16/hindu-eagle-mystery-deepens/

Four Birds in One Sloka: Adi Sankara and Nature | Tamil …
tamilandvedas.wordpress.com/…/four-birds-in-one-sloka-adi-sankara-an…‎
9 -7- 2012

The Mysterious Vedic Homa Bird – Tamil and Vedas
tamilandvedas.wordpress.com/…/the-mysterious-vedic-homa-bird-does-it…‎
10 Dec 2011 –

The Mysterious Vedic Homa Bird: Does It Exist?
1

கடவுள் ஏன் கை, கால்களை கொடுத்தார்?

akhandabhajan2001_1

கடவுள் ஏன் கை, கால்களை கொடுத்தார்? வேதம் முதல் பாரதி வரை தந்த பதில்கள்

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 973; தேதி 12th April 2014

உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இறைவனை வணங்குவதற்கே என்று முதல் முதலில் வேத கால ரிஷிகள் பாடினார்கள். இதில் அற்புதம் என்னவென்றால் தமிழில் இளங்கோ அடிகள், அப்பர், குலசேகர ஆழ்வார், பாரதியார் ஆகிய எல்லோரும் இதே கருத்தை மேலும் மேலும் சுவைபடப் பாடியுள்ளனர்.

வேதத்தில் ரிஷிகள் பிரார்த்தனை

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா:
பத்ரம் பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா:
ஸ்திரை ரங்கைஸ் துவஸ்டுவாம்ஸஸ் தனூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு:
ஓ தேவர்களே! நல்ல மங்களகாரமான செய்திகள் எங்கள் காதுகளில் விழட்டும். போற்றுதலுக்குரிய பெரியோர்களே, எங்கள் கண்கள் மங்களகரமான விஷயங்களைக் காணட்டும். நாங்கள் (வாயால்) உன் புகழைப் பாடிக் கொண்டிருப்போமாக. கடவுளால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் கட்டுடலும் வலிமையான அங்கங்களும் எங்களுக்கு இருக்க அருள் புரிவாயாக (யஜூர் வேதம்)
இதே பிரார்த்தனை அதர்வ சீர்ஷோபநிஷத் முதலிய பல இடங்களிலும் வருகின்றன.

datta speaking
People are listening to Sri Ganapati Sachidanada Swamiji

சிலம்பில் நாராயணன்

முதலில் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட சிலம்பில் இளங்கோ கூறுவதைப் பார்ப்போம்.

இறைவன் நமக்கு நாக்கைக் கொடுத்ததே நாராயணன் புகழ் பாடத்தான் என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு கலக்கினையே;
—————————–
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?

மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?

சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

எல்லோர்க்கும் மூத்தவன் — உலகம் எல்லாம் அவன் உந்தியிடத்தில் தோன்றிய தாமரையில் விரிந்தது — கண்கள், கைகள், வாய். காலடிகள் ஆகியன சிவந்து தோன்றும் அந்தக் கருப்பனை (கிருஷ்ணனை) காணாத கண்களை யாராவது கண் என்று அழைப்பார்களா! அவனைக் கண்கொட்டாமல் பார்க்கவேண்டும். அதை மீறி கண்களை இமைத்தால் அவைகள் கண்களே இல்லை!

அறியாமையின் ஒட்டுமொத்த வடிவம் கம்சன். அவனுடைய வஞ்சனை எல்லாவற்றையும் கண்ணன் சமாளித்தான். பாண்டவர்க்காக அவன் கௌரவர்கள் இடத்தில் தூது சென்றபோது வேதங்கள் எல்லாம் அவனோடு சென்றன. அத்தகையவனின் பெருமையைச் சொல்லாத நாக்கும் ஒரு நாக்கா? நாராயணா என்று சொல்லாத நாக்கை எவரேனும் நாக்கு என்று சொல்ல முடியுமா?

mouth for singing

Sri Sathya Sai Baba singing Bhajan songs

குலசேகர ஆழ்வாரின் முகுந்தமாலா

குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்த மாலையில் 40 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதில் 16ஆவது ஸ்லோகம் கடவுளை வணங்குவதே கை, கால்களின் பணி என்று காட்டுகிறது. ‘’ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ’’ என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இதோ:

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே முராசுரனைக் கொன்ற கண்ணனை தியானம் செய்.
கைகளே திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே தன்னையடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! கண்ணனைக் கண்டு அனுபவியுங்கள்!
கால்களே! எம் பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பருமானை வணங்கு!

வேதத்தில் அவர்கள் படித்த ‘’பத்ரம் கர்ணேபி ஸ்ருனுயாம தேவா” என்ற கருத்துக்களை எல்லோரும் பதிகங்களிலும் பாசுரங்களிலும் பாடுவதைப் படிக்கையில் பேரின்பம் கிட்டும்.

அப்பர் பாடிய திரு அங்க மாலை

தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல் நஞ்சுண்ட கண்டம் தன்னை
எண்தோள் வீசி ஆடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ
செவிகாள்! கேண்மின்களோ! – சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள்! கேண்மின்களோ!
வாயே! வாழ்த்து கண்டாய் – மதயானை யுரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே! வாழ்த்து கண்டாய்

மேலும் பல பாடல்களில் — மூக்கே, நெஞ்சே, கை, ஆக்கை, கால் என்று பல உறுப்புகளும் இறைவனையே வணங்கவேண்டும் என்று பாடுகிறார்..
திருவங்க மாலை 4-9-5 தேவாரத் திருமுறை 4

hands for worship

Swamiji praying with hands

பாரதி பாடல்

நமது காலத்தில் வாழ்ந்த பாரதியும் வேதக் கருத்துக்களை எதிரொலிக்கும் பாடலைப் பாடுகிறார். அவர் பாடிய பாடல்தான் மிக நீண்ட பாடல். 46 பகுதிகளைக் கொண்டது :–
பாடலின் தலைப்பு: சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

கையைச், சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சாதனைகள் யாவினையும்ங் கூடும் – கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும்.

கண்ணைச், சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி வழியினை அது காணும் – கண்ணைச்
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும் – செவி
சக்தி தனக்கே கருவியாக்கு – அது
சக்தி திருப்பாடலினை கேட்கும்.

இதைத் தொடர்ந்து மனம், சித்தம், மதி, அகம் என்று எல்லாவற்றையும் சேர்த்துப் பாடுகிறார். இறுதியாக:-

“சிவ, சக்தி என்றும் வாழி என்று பாடு – சிவ
சக்தி சக்தி என்று குதித்தாடு – சிவ
சக்தி என்றும் வாழி என்று பாடு சிவ
சக்தி சக்தி என்று விளையாடு” —- என்று சொல்லி முடிக்கிறார்.

பாரதி ஆடுவதும் பாடுவதும் விளையாடுவதும் இறைவனைக் குறித்தே!
bodypartsadaptivebook
Body Parts are for worshipping God

Contact swami_48@yahoo.com

கங்கை நதிக்கடியில் தங்கம்: தமிழர் தகவல்!

gold-coins-

Written by London swaminathan
Posted in English as well
Post No 964 Dated 8th April

சில வாரங்களுக்கு முன் வட இந்தியாவில் ஒரே பரபரப்பு! உத்தரப் பிரதேசத்தில் ஒரு சாமியாருக்கு கனவு. அந்தக் கனவில் ஒரு ராஜா தோன்றி அவர் ‘டன்’ கணக்கில் தங்கம் புதைத்து வைத்த இடத்தைச் சொல்லிவிட்டார். இதை சாமியாரும் எல்லோருக்கும் அறிவிக்கவே அவருக்கு நெருக்கமான மந்திரி எல்லோரையும் அகழ்வாராய்ச்சிக்கு அனுப்பிவைத்தார். ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கோடாரி மண் வெட்டிகளுடன் 11 நாட்கள் தோண்டினர். அவருடைய சீடருக்கு இன்னொரு கனவு வரவே அவர் கங்கை நதிக்கரையில் உள்ள வேறு ஒரு இடத்தைச் சொல்லவே அங்கும் தோண்டும் பணி துவங்கியது. தொல்பொருட் துறை, பூகர்ப்பவியல் நிபுணர்கள் எல்லோரும் ‘ஆமாம்சாமி’ போட்டதால் எல்லோருக்கும் நம்பிக்கை வலுத்தது. இறுதில் ஒன்றும் கிடைக்காமல் தங்கம் தேடும் பணியைக் கைவிட்டனர்.

சங்கத் தமிழ் இலக்கியத்தில், தங்கத்தை எங்கே ஒளித்துவைத்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.– ஒன்று பாடலிபுத்திரத்தில் கங்கைக்கு அடியில் ஒரு சுரங்கத்தில் பொக்கிஷம், புதையல் வைக்கப்பட்டு இருக்கிறது.– இரண்டு, வேளிரின் பாழியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய சுவையான செய்தி அகநானூற்றில் இருக்கிறது. அதற்கு முன் காஞ்சி பரமாசார்யார் சொன்ன வேறு ஒரு தங்கப் புதையல் கதையைப் பார்ப்போம்:

barGold

வித்யாரண்யருக்கு கிடைத்த தங்கப் புதையல்

சென்னையில் 1957-59–ல் காஞ்சி பரமாசார்யாள் (1894-1994) நடத்திய சொற்பொழிவுகள்:

“வித்தியாரண்யர் ( கி.பி.1331-1386) நான்கு வேதத்துக்கும் சேர்த்து பாஷ்யம் (உரை) பண்ணியிருக்கிறார்……. இவரைப் பற்றி ஒரு கதை சொல்வர். சரித்திரத்தில் இதற்கு ஆதாரம் இருக்கிறதோ என்னவோ? இவர் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் மகாலெட்சுமியைக் குறித்து கடுமையான தபஸ் பண்ணினாராம். ஏகாக்கிர சித்தத்தோடு இவர் பண்ணுகிற தபஸைப் பார்த்து மகாலெட்சுமி பிரத்தியட்சமானாள். இவர் பரம ஏழையாக இருந்தவர். மகாலெட்சுமி, ‘’உனக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டபோது, ‘’எனக்கு நிறைய செல்வத்தைக் கொடு; உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத ஐச்வர்யத்தை எனாக்குக் கொடு’’ என்று இவர் கேட்டாராம். மகாலெட்சுமி, ‘’அப்பா, உனக்கு இந்த ஜன்மத்தில் ஐச்வர்யம் கொடுப்பதற்கு இல்லையே; வேண்டுமானால் அடுத்த ஜன்மாவில் நிறைய ஐச்வர்யத்தை கொடுக்கிறேன்; இந்த ஜன்மாவில் கொடுக்க எனக்கு யோக்கியதை இல்லை’’ என்று சொன்னாளாம்.

அடுத்த ஜன்மாவில் தருகிறேன் என்று சொன்னவுடன் எப்படியாவது ஐச்வர்யத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று உடனே சந்நியாசம் வாங்கிக்கொண்டு, சந்நியாசம் வாங்கிக் கொண்டால் சாஸ்திரப்படி மறு ஜன்மமாகப் போய்விடாதா? ‘’நான் சந்நியாசம் வாங்கிக்கொண்டு விட்டேன். இப்போது ஐச்வர்யத்தை கொடு’’ என்றாராம். உடனே மகாலெட்சுமியும் சொர்ணத்தை வர்ஷித்தாளாம்.

Gold-Bars

நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமாகத் தெரிந்தது; இவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரயர் அழ ஆரம்பித்துவிடாராம். அடடா! என்ன முட்டாள்தனமாகக் கேட்டோம். ஆசிரமம் வாங்கிகொண்டபின் நமக்கு தங்கம் எதற்காக? சந்நியாச ஆஸ்ரமத்தில் இதைத் தொடவும் கூடாதே. கேட்காமல் இருந்திருந்தால் மகாலெட்சுமி அடுத்த ஜன்மத்திலாவது வேண்டிய ஐச்வர்யத்தைக் கொடுப்பாளே. இனி அடுத்த ஜன்மாவிலும் அவள் கொடுக்கமாட்டாள். சந்நியாச ஆஸ்ரமத்தை வாங்கிக் கொண்டுவிட்ட நாம் இப்போது அவள் கொடுத்ததையும் தொட முடியாது என்று அழுதாராம்.

அப்போதுதான் மாலிக்காபூர் தென்னாட்டுக்குப் படையெடுத்டு வந்து, எல்லா ராஜ்யங்களும், எல்லாக் கோயில்களும் சிதறுண்டு போகும்படியாக எல்லாவற்றையும் ரணகளமாகப் பண்ணிவிட்டுப் போயிருந்தான். சரி, இந்த ஐச்வர்யத்தைக் கொண்டு, இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்வது என்று வித்தியாரண்யர் தீர்மானம் பண்ணிக் கொண்டாராம். ஆடு மேய்க்கிற வனுக்கு குறும்பன் என்று பெயர். அப்போது அங்கே ஹரிஹரன், புக்கன் என்ற இரண்டு பேர் —அண்ணன் தம்பி – ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு குறும்பர்களையும் அழைத்து, அந்த துங்கபத்திரை பிரதேசத்திலேயே, ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து அதற்கு ராஜாக்களாக அவர்களை ஏற்படுத்தினார். அந்த ராஜ்யந்தான் விஜய நகர சாம்ராஜ்யம்”.

மேற்கண்டது ஆசாரிய ஸ்வாமிகள் சென்னை உபந்நியாசங்கள் 1957-59, பாகம் 3-ல் உள்ளது.

gold1

தமிழர் கண்ட தங்கப் புதையல்

சங்க கலத்தில் வாழ்ந்த பரணர் என்ற பிராமணப் புலவரும் மாமுலனார் என்ற பிராமணப் புலவரும் ஏராளமான வரலாற்றுச் செய்திகளைப் பாடல்களிலேயே தருகின்றனர். மாமுலனார் வட நாட்டு விஷயங்களை அதிகம் சொல்லுவார். நந்த வம்சம் மற்றும் மௌரியர்கள் பற்றி அவர் பாடுவதைப் பார்க்கையில் அவர் மிகப் பழைய புலவர்களின் பட்டியலில் ஒருவர் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. அவரும் பரணரும் கூறும் ‘’தங்க’’ விஷயங்களைக் காண்போம்.

தொன்முது வேளிர் பாழியில் குவித்து வைத்த தங்கம் பற்றி பரணர் ( அகநானூறு 258) பாடுகிறார்:

நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃதுஒல்லாய் —

பொருள்:- அரிய காவலை உடையது நன்னன் உதியன் என்பவனின் பாழிச் சிலம்பு தொன்மை மிக்க வேளிர்கள் தேடி வைத்த பொன் அங்கே பாதுகாவல் செய்து வைக்கப்பட்ள்ளது. அதனைவிட அரியவள் தலைவி என்பதை நீ நன்றாக அறிவாய். அறிந்திருந்தும் அவளை நாம் நெருங்க மாட்டோம் என்று யான் கூறிய பின்னும் என்கூற்றிற்கு உடன்படாது போனாய்……

raja_raja
Gold Coin of Raja Raja Choza

இதில் தெரிவது என்னவென்றால்
வேளிர்கள் நிறைய தங்கத்தைக் குவித்துவைத்தனர்.
அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதை அடைவதைவிடக் கடினம் என்னுடைய காதலி.

மாமுலனார் தரும் தகவல் இதை விட வியப்பானது.

புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி !

பொருள்:– தோழி வாழ்க! அகன்ற வானிலே உயர்ந்து எழு புகையினைப் போல் விளங்கிப் பனி தவழும் தீச்சுடரைப் போல் தோன்றும் இமய மலை போன்றதோ! அல்லது பலவகைப் பட்ட புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பவரின் சிறந்த பாடலிபுத்திரத்தில் திரண்டிருந்து பின் கங்கையின் நீர் அடியில் மறைந்து போன செல்வமோ! அவ்விரண்டும் இல்லையென்றால் நம்மைவிட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம் யாதோ!
gupt2
Gold Coins of Guptas

தலைவி பேசுவது போல அமைந்த இந்தப் பாடலில் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பாடலிபுரத்தை ஆண்ட நந்த வம்ச அரசர் கங்கை ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து பெருஞ் செல்வத்தை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் அது காணாமற் போனதால் குழீஇக் கரந்த நிதியம்’ என்று சொல்லப்பட்டது.

‘’நிதி’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்— தங்கம், நவரத்னங்கள் போன்ற எல்லாச் செல்வத்தையும் குறிக்கும்.
பாடலிபுத்திரம் என்பது இப்போது பீஹார் மாநிலத் தலை நகரான பாட்னா நகரம் ஆகும்

இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் பாடுகிறார். இதற்கு உரை எழுதியவர்கள், மஹாபத்ம நந்தன் (கி,மு. 345-329) என்று மன்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.

tirupati2
Picture of Golden Tower of Tirupati Balaji Temple

நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி, தோழி ! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்…………….

பொருள்: தோழி, வாழ்வாயாக! வெற்றிச் சிறப்புமிக்க கொடியினையும் காற்றைப் போன்று வேகமான அலங்கரிக்கப்பட்ட தேரினையும் உடையவர்கள் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். பழைய ஆலமரத்தின் கிளைகளுக்கு அடியில் போர் முரசங்களைக் குறுந்தடியினால் அடிக்கின்றனர். மகாபத்ம நந்தன் என்னும் பாடலிபுத்திரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரெனினும் அதற்கு மகிழ்ந்து அங்கேயே தங்கிவிடுபவர் அல்லர் ( என் காதலர்).

2000 ஆண்டுகளுக்கு முன்னர். கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் ஆகியோர் பற்றி நம் புலவர்கள் பாடியது மிகவும் வியப்பான விஷயம். தமிழர்கள் போரின் பொருட்டும், வணிகத்தின் பொருட்டும் கங்கை நதி, இமயம் வரை சென்றதையும் இதில் அறிகிறோம். நந்தர்களின் செல்வம் குறித்தும் அறிகிறோம். அவர்கள் புகழ் தென்னாடு வரை பரவி இருந்தது.

gupta1

இப்பொழுது கங்கை நதிக்கடியில் சுரங்கத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது ‘’வைக்கற்போரில் ஊசியைத் தேடியது போலாகும்’’. அந்த செல்வமும், தமிழர்கள் பாழியிலும் மறைத்து வைத்த செல்வமும் யார் கையில் போய்ச் சேர்ந்ததோ? மாலிக்காபூர் தென்னகக் கோவில்களில் இருந்து ‘’டன்’’ கணக்கில் தங்கம் கொண்டு சென்றதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

contact swami_48@yahoo.com

இராமன் யார்? கம்பன் பதில்

hanuman 4

2014 ஏப்ரல் 8-ஆம் தேதி இராம நவமி; ‘மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரம் இராமன்’ என்று கம்பன் புகழ்கிறான். அத்தகைய இராமன் புகழை நாமும் பாடுவோம்.

கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–956 தேதி ஏப்ரல் 5, 2014

இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்பவன் இராம பிரான். ‘தர்மத்தின் சின்னம் ராமன்’ (ராமோ விக்ரஹவான் தர்ம:, ராமாயணம் 3-37-13) என்று வால்மீகி முனிவன் முன் மொழிவதை கம்பனும் அப்படியே வழி மொழிகிறான். ஒரு பாட்டில் அல்ல, இரண்டு ஒரு பாட்டில் அல்ல; பல பாடல்களில்:–

“குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்”

பரதனே நாட்டை ஆள வேண்டும், இராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போக வேண்டும் என்று கைகேயி உத்தரவிட்டவுடன் ராமன் சென்ற காட்சி மேற்கூறிய பாடலில் உள்ளது. மன்னருக்கே உரித்தான சாமரம் இல்லை, வெண்ணிறக் குடையும் இல்லாமல் ‘விதி’ முன்னே செல்ல, தருமம் போன்ற ராமன் பின்னே சென்றானாம். அவனுடைய விதி — தலை விதி — கைகேயி உருவத்தில் வந்தது. தரும வடிவில் நிற்கும் இராமன், ‘விதியே என்று’ பின்னால் நடந்து செல்கிறான் தன் அம்மாவிடம் விடை பெற்றுக் கொள்ள.

அயோத்தியா காண்டத்தில் ‘தர்ம மூர்த்தி’ என்றே அழைக்கப்படுவதை பின்வரும் பாடல் காட்டும்:–

“புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகழ்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து, யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன்.

பொருள்:– தரும மூர்த்தியாகிய திருமாலே இராமனாக வந்து அவதரித்தான் என்று சொல்வதைத் தவிர, நாம் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது? அந்தத் திறமை மிகுந்த இராமன், எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி— காப்பாற்றி முடிவில் அழிக்கும்– மும்மூர்த்திகளின் செயல்கள் செம்மை அடையும்படி திருத்துபவன் ஆவான். (இந்தப் பகழுரை வசிட்ட முனிவன் வாயிலாக வரும் பாடல்)

ramabronze
Bronze idol of Sri Rama

இன்னொரு பாடலில் சீதையுடன் இராமனை ஒப்பிடுகிறான் கம்பன்:

மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்.
(கலை ஊர் பெண்= மான் வாகனம் உடைய பார்வதி; மலர்மகள்=லெட்சுமி)

பொருள்:– பூமா தேவியைவிட சீதை நல்லவள்; அலைமகள் (லெட்சுமி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி) ஆகிய மூவரையும் விட நல்லவள் சீதை; அவளுடைய கண்களைக் காட்டிலும் நல்லவன் இராமன். பருகுவதற்கான தண்ணிரை விட, பாதுகாக்கும் உயிரை விட, இராமனையே விரும்புவர் கற்றாரும் கல்லாதவரும்.

இறுதியாக வசிட்டன் புகழுரையாக அமைந்த ஒரு பாடலில்,

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
என்ற வரிகளும் படித்து இன்புறத் தக்கது.
(அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்)

”மனிதர்களும் தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் துன்பப்படாமல் தடுத்துக் காப்பதில் இராமனைக் காட்டிலும் சிறந்தவர் யாரும் இல்லை”.

மேலும் பல கட்டுரைகளில் இராமன் புகழ் பாடுவோம்…………..தொடரும்
contact swami_48@yahoo.com

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க!

bengali blow

By London swaminathan
Post No.954 Dated 4th April 2014

நம் எல்லோருக்கும் பட்டினத்தார் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். அதிக நேரம் உங்கள் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கையில் இருக்கும் நேரம் எல்லாம் மூன்று ஒலிகளுக்குள் அடங்கிவிடும் என்கிறார். மூன்று முறை சங்குகள் ஒலிக்குமாம்; பிறகு நாம் இருக்க மாட்டோமாம். புரியவில்லையா?

நான்கே வரிகளில் அவர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் என்று கேளுங்கள்:

முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி. என். ராமச்சந்திரனின் ஆங்கில மொழி பெயர்ப்பைப் படியுங்கள். இன்னும் நன்றாகப் புரியும்:

womanconch

The first of the chanks feeds with milk
The second shackles us with women of dense locks;
The third is sounded to announce our death.
How much, Oh, how much is the weal of worldly life?

முதல் சங்கில் நமக்கு நம் தாய் பால் ஊட்டுவாள். நாம் குழந்தையாக இருந்தபோது “நான் பால் குடிக்க மாட்டேன், போ” என்று அடம் பிடிப்போம். நம் தாய் நமக்கு வேடிக்கை காட்டி நமக்கு அமுதூட்ட அந்த சங்கை வாயில் வைத்து ஊதி ஒலி எழுப்பி இருப்பாள். இது நமக்கு இறைவன் விட்ட முதல் எச்சரிக்கை. ஆங்கிலத்தில் வினா விடை போட்டி நடத்துவோர் ஒவ்வொரு குழுவுக்கும் குறித்தநேரம் கொடுப்பர். விளையாட்டு துவங்கும் போது YOUR TIME STARTS NOW ‘யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்’ எனபர். கடிகாரம் ஒவ்வொரு வினடி ‘டிக்,டிக்’ என்று அடிக்கும்போது நம் இருதயம்— நேரம் முடிந்துவிடுமே– என்று ‘டக், டக்’ என்று அடிக்கும். அதுபோல உன் வாழ்நாள் கடிகாரம் இதோ துவங்கிவிட்டது (Your Clock is Ticking) என்று கடவுள் எச்சரிக்கிறார் முதல் சங்கில்!

woman conch
இரண்டாவது சங்கு திருமணத்தில் ஒலிக்கும் சங்கு. அந்தக் காலத்தில் எல்லார் வீட்டு திருமணங்களிலும் சங்கு ஊதி தாலி கட்டுவர். அதாவது அது ஒரு மங்கல வாத்தியம். ஆண்டாள் கூட வாரணம் ஆயிரத்தில் தாம் திருமாலைத் திருமணம் செய்யும் கனவுக் காட்சியை வருணிக்கையில் சங்கு ஊதுவதைக் குறிப்பிடுகிறார்.:—

மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத,
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டே, தோழீ! நான்.
–ஆண்டாள் நாச்சியார் திருமொழி

பட்டினத்தார் என்ன சொல்கிறார்? திருமணத்தன்று நமக்கு விலங்கு பூட்டப்படுகிறது என்பார். பேச்சுத் தமிழிலும் கூட அவன் திமிர் பிடித்த காளை போலத் திரிகிறான். எல்லாம் ‘கால் கட்டு’ போட்டால் சரியாகி விடும் என்று தானே பெரியோர் அங்கலாய்க்கிறார்கள்! சம்ஸ்கிருதத்திலும் இதற்கு சம்சார ‘பந்தம்’ (கட்டு) என்றே பெயர். ஆண்டவன் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது!

sadhu shank
மூன்றாவது சங்கு? கடவுளே சொல்லக் கூடாது! அது நம் காதிலேயே விழாது. ஏனெனில் அது நமது இறுதி ஊர்வலச் சங்கு.

ஆகையால், மெய்யன்பர்களே!

ஒன்றே செய்க!
அதுவும் நன்றே செய்க!!
அதுவும் இன்றே செய்க!!!

என்பது இறைவன் விடுத்த செய்தி ஆகும்.

lot women conch

நாளை நாளை எண்ணாதே
நாளை வீணில் போக்காதே
நாளை செய்யும் காரியத்தை
இன்றே நலமாய் முடித்திடலாம்.
நாளை நம்முடைய முறையோ?
நமனுடைய முறையோ? என்று ஒரு தமிழ் கவிஞர் பாடியது நினைவுக்கு வருகிறது.
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!

Contact swami_48@yahoo.com
Hindu_priest conch_

HYMN OF THE GOLDEN AGE

bharati new

This post is in both English and Tamil. Ten verses of Nammalvar are given below in English and Tamil.

பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்!

கட்டுரை எண் 952 தேதி 3 ஏப்ரல் 2014
தொகுத்து எழுதியர் லண்டன் சுவாமிநாதன்

Dawn of Golden Age

Of the Twelve Great Tamil Vaishnavite saints known as ‘Alvars’, Bharati liked Nammalvar and Andal very much. He has translated some of their hymns way back in 1910s. He was greatly influenced by Nammalvar. Alvar’s revolutionary theme of bringing Golden Age (Krta Yuga) in our own time attracted him very much. He wanted to destroy the Iron Age (Kaliyuga) and its associated evils. He wanted to destroy slavery in all forms and attain freedom. Though Nammalvar meant only spiritual freedom in his hymns, Bharati used it for political freedom as well. When Tsar of Russia was dislodged he hailed it as the dawn of Krta Yuga. In three other songs he praised Krta Yuga and swore that he would establish Krta Yuga on earth. No doubt he brought a Golden Age into Tamil literature through his inimitable poetic style. As long as his poems exist there is every possibility of establishing a real Golden Age in India.

பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தைக் கொன்று கிருத யுகத்தை மீண்டும் இப்பூவுலகில் கொண்டுவருவேன் என்று ஆழ்வார் பாடியது, பாரதியை மிகவும் கவர்ந்தது. பாரதி புரட்சிக் கவியன்றோ. ஆகவே தனது கண் முன்பே ஒரு யுகப் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று அவர் விரும்பியதில் வியப்பொன்றும் இல்லை. கிருத யுகத்தைக் கொண்டுவந்தே தீருவேன் என்ற இக்கருத்து பாரதியாரின் பாடல்களில் பல இடங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. ஆயினும் அவரால் கிருதயுகத்தைக் கொண்டு வர முடிந்ததா? என்ற கேள்வி நமக்குள்ளே எழத்தான் செய்யும். ஆம், அவர் கிருத யுகத்தைக் கொண்டு வந்தார் என்றே நான் உறுதிபடச் சொல்லுவேன். தமிழ் மொழி என்னும் உலகத்தில் அவர் ஒரு கிருத யுகம் படைத்துவிட்டார்! அவருக்கு முன் இருந்த காலத்துக்கு ஒவ்வாத கவிதை நடைகளை விலக்கி விட்டு, கவிதை உலகில் ஒரு கிருத யுகத்தைப் படைத்து விட்டார்! அவருடைய பாடல்கள் எதிர் காலத்தில் உண்மையான கிருத யுகத்தைப் படைக்கும் ஆற்றல் பெற்றவை என்பதிலும் இருவேறு கருதுக்கு இடமே இல்லை.

nammalvar

அவர் பாடல்களில் பரிணமிக்கும் கிருதயுகம்: இதோ சில வரிகள்:

பாடல் 1
“மொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே,
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விஃதியிதே”
பாடல் 2
கிருத யுகத்தினைக் கொணரும் சக்தி இந்து மதத்துக்கு உண்டு என்று ‘ஹிந்து மதாபிமானத்தார் சங்கத்தார்’– என்ற பாடலில் சொல்கிறார்:–

மக்கள் எல்லாம் கவலை என்னும்
ஒரு நரகக் குழியதனில் வீழ்ந்து தவித்து
அழிகின்றார் ஓய்விலாமே
இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகத்
தனை உலகில் இசைக்கவல்ல
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பார் அறியப் புகட்டும் வண்ணம்…………
பாடல் 3

புதிய ருஷியா என்ற கவிதையில் ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி பொங்கப் பாடுகிறார் பாரதி:–
“இடி பட்ட சுவர் போலக் கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ!”
பாடல் 4

சொல் என்ற கவிதையில்
“வலிமை வலிமை என்று பாடுவோம் – என்றும்
வாழும் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் – நெஞ்சில்
கவலை இருள் அனைத்தும் நீங்கினோம்” – என்று பாடுகிறார்.

நம்மாழ்வார் பாடல்களை பாரதியார் மொழிபெயர்த்தது, நமக்கு மேலும் சில உண்மைகளையும் காட்டுகிறது. பாரதியாருக்கு ஆங்கில மொழியில் இருந்த நல்ல புலமையும் அதில் எழுதும் துடிப்பு அவருக்கு இருந்ததும் இதில் தெரிகிறது. 1917ஆம் ஆண்டில் எழுதியது இது. நிறைய விஷயங்களை அவர் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். ஆனால் அவரது தமிழ் கவிதைகள் என்னும் சூரிய ஒளிக்கு முன்பாக அவரது ஆங்கிலப் படைப்புகள் மங்கிவிட்டன.

இன்னோரு உண்மை ;’பிற நாட்டு நால்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்க்கவேண்டும்’ என்றும் நம்முடைய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் பாடியும் எழுதியும் வந்தார். அவரே அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததை நம்மாழ்வார் பாடல் மொழி பெயர்ப்புகள், ரவீந்திரநாத் தாகூரின் பாடல் மொழி பெயர்ப்புகள் காட்டுகின்றன. பன்னிரு ஆழ்வார்களில், அவர் ஆண்டாள், நம்மாழ்வார் ஆகியோரின் பல பாடல்களை மொழி பெயர்த்தார். அதில் பத்துப் பாடல்களை மட்டும் காண்போம்.

ramanujan_nammalvar-hymns
HYMN OF THE GOLDEN AGE
From Nammalvar’s Tiruvaymoli, (August, 1917, Arya)

நம்மாழ்வாரின் திருவாய்மொழி
பொலிக; பொலிக; பொலிக !
போயிற்று வல்லுயிர்ச் சாபம்;
நலியும் நரகமும் நைந்த;
நமனுக்கு இங்கு யாதும் ஒன்றும் இல்லை;
கலியும் கெடும்; கண்டு கொண்மின்;
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து, இசைபாடி,
ஆடி, உழிதரக் கண்டோம்.
1)’Tis glory, glory, glory! For Life’s hard curse has expired; swept out are Pain and Hell, and Death has nought to do here. Mark ye, the Iron Age shall end for we have seen hosts of Vishnu; richly do they enter in and chant His praise and dance and thrive.

கண்டோம், கண்டோம், கண்டோம்;
கண்ணுக்கு இனியன கண்டோம்;
தொண்டீர்; எல்லீரும் வாரீர்;
தொழுது தொழுது நின்று ஆர்த்தும்;
வண்டு ஆர்த் தண்ணந் துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடி நின்று, ஆடி,
பரந்து திரிகின்றனவே.
2)We have seen, we have seen, we have seen, …… seen things full sweet in our eyes, come, ye all lovers of God, let us shout and dance for joy with oft-made surrendering. Wide do they roam on earth singing songs and dancing, the hosts of Krishna who wears the cool and beautiful Tulsi, the desire of the bees.

திரியும் கலியுகம் நீங்கி,
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிருதயுகம் பற்றி,
பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில் வண்ணன், எம்மான்,
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரியப் புகுந்து, இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே.
3)The Iron Age shall change. It shall fade, it shall pass away. The gods shall be in our midst. The mighty Golden Age shall hold the earth and the flood of the highest Bliss shall swell. For the hosts of dark hued Lord , dark hued like the cloud, dark hued like the sea, widely they enter in, singing songs and every where they have seized on their stations.

இடம்கொள் சமயத்தை எல்லாம்
எடுத்துக் களைவன போலே,
தடம் கடல்-பள்ளிப் பெருமான்
தன்னுடைய பூதங்களேயாய்,
கிடந்தும், இருந்தும், எழுந்தும்,
கீதம் பலபலப் பாடி,
நடந்தும், பறந்தும், குனித்தும்,
நாடகம் செய்கின்றனவே.
4)The hosts of our Lord who reclines on the sea of Vastness, behold them thronging hither. Me seems they will tear up all these weeds of grasping cults. And varied songs do they sing, our Lord’s own hosts, as they dance, falling, sitting, standing, marching, leaping, bending.

செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே
ஒக்கின்றது – இவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய்,
மாயத்தினால் எங்கும் மன்னி;
ஐயம் ஒன்று இல்லை; அரக்கர்
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை, தொண்டீர்!
ஊழி பெயர்த்திடும் கொன்றே.
5)And many are the wondrous sights that strike mine eyes. And if by magic Vishnu’s hosts have come in firmly placed themselves everywhere. Nor doubt it, ye fiends and demons, if such be born in our midst, take heed! Ye shall never escape. For the spirit of Time will slay and fling you away.
nammalvar__makers_

கொன்று உயிர் உண்ணும் விசாதி,
பகை, பசி, தீயன எல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான்,
நேமிப்பிரான் போந்தார்;
நன்று இசை பாடியும், துள்ளி
ஆடியும் ஞாலம் பரந்தார்;
சென்று, தொழுது, உய்மின்; தொண்டீர்!
சிந்தையைச் செந்நிறுத்தியே.
6)These hosts of the Lord of the Discus, they are here to free this earth of the devourers of Life, Disease and Hunger, vengeful Hate and all other things of evil. And sweet are their Songs, as they leap and dance, extending wide over earth, go forth, ye lovers of God, and meet these hosts divine; with right minds serve them and be saved.

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர்;
மார்க்கண்டேயனும் கரியே;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா;
கண்ணன் அல்லால், தெய்வம் இல்லை;
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி –
யாயவர்க்கே இறுமினே.
7)The Gods that ye fix in your minds, in His name do they grant you deliverance. Even thus to immortality did the sage Markanda attain. Let none be offended, but there is no other god but Krishna. And let all your sacrifices be to them who are but his forms.

இறுக்கும் இறை இறுத்து, உண்ண,
எல் உலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக;
அத் தெய்வ நாயகன் — தானே;
மறுத் திரு மார்வன் அவன் – தன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி, ஞாலத்து மிக்கார்;
மேவித் தொழுது, உய்ம்மின் நீரே.
8)His forms he has placed in the various worlds as Gods to receive and taste the offerings due. He, our divine sovereign, on whose mole-marked bosom the Goddess Lakshmi rests – his hosts are singing sweetly and deign to increase on earth. O men, approach them, serve and live.

மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள்;
வேதப் புனித இருக்கை
நாவில் கொண்டு, அச்சுதன்—தன்னை
ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து,
மேவித் தொழும் அடியாரும்
பகவரும் மிக்கது உலகே.
9)Go forth and live by serving our Lord, the deathless one. With your tongues chant ye the hymns, the sacred Riks of the Veda, nor err in the laws of wisdom. Oh, rich has become this earth in the blessed ones and the faithful who serve them with flowers and incense and sandal and water.

மிக்க உலகுகள் தோறும்
மேவி, கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும்
இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன; தொண்டீர்;
ஒக்கத் தொழ கிற்றிராகில்,
கலியுகம் ஒன்றும் இல்லையே.
10) In all these rising worlds they have thronged and wide they spread, those beauteous forms of Krishna – the unclad Rudra is there, Indra, Brahma, all. The Iron Age shall cease to be – do ye but unite and serve these.
நம்மாழ்வார் திருவாய்மொழி

Please read the related articles posted already in this blog:

Post No.915 ‘Nammalvar by Bharatiyar’ (posted on 18-3-14)

Contact swami_48@yahoo.com

Agni in the Oldest Tamil Book ‘Tolkappiam’

durga from indonesia

Durga from Java, Indonesia in US museum

By London Swaminathan
Post no.946 Dated 31st March 2014.

The oldest Tamil book available today is Tolkappiam, a grammatical treatise. It is dated around first century BC. It has got clear references to Vedic Gods Indra and Varuna along with Vishnu, Skanda and Durga. They have the Tamil names Venthan, Varunan, Mayon, Seyon and Kotravai respectively. But the reference to Agni is not that clear. Tolkappiar mentioned three deities Kodinilai, Kanthazi and Valli in one of his Sutras in the third chapter ( Porul Adhikaram—Purath thinai Iyal).

According to the oldest commentator Ilampuranar, Kodinilai is the Sun, Kanthazi is Fire (Agni) and Valli is the Moon. It is mentioned in his rule/Sutra on the prayer. Anyone will readily agree with him given the mention of the Vedic gods Indra and Varuna by Tolkappiam. But the strangest thing about these words Kodinilay and Kanthazi is that they are not found anywhere in the Sangam Tamil literature. Another strange thing about this book is that it never mentioned about Lord Shiva. Foreigners who wrote about the Indus Valley civilisations wrote that Dravidians worshipped Lord Shiva. But the oldest book never mentioned it. Sangam Tamil literature has many references to Shiva without using the word ‘’Shiva’’. His attributes as we in the Yajur Veda such as Trinetra, Neelakanda etc, are there in the Sangam Tamil literature.

three_fires_1

Brahmin’s Three Fires: Kanchi Paramacharya’s Talk

Another interesting reference to Fire God is in another Tamil book. It is about the Three Fires that are found in Brahmin’s house. But this is from Sangam Tamil literature, not from Tolkappiam. I will give it in the words of Kanchi Paramacharya Swamiji (1894—1994):–

“In a Tamil work as ancient as the Purananuru, there is a reference to God with his long matted hair chanting the Vedas all the time, the Vedas with the six limbs (Sadanga). I read this in an article recently. The following appears in another Purananuru passage: The rulers of three Tamil Kingdoms – Cera, Cola and Pandya – were always at war. But on one occasion the three were seen together as friends in the same place. The old lady Avvai saw the three kings together and was immensely delighted. She wished to compare the scene to something worthy. And how did she express her idea? “The three of you”, she said, “seen together remind me of the three sacred fires in a Brahmin’s household, garhapatyagini, ahavaniyagni and dakshinagni.”
Even after the Sangam period, the Tamil rulers continued to give away gifts of lads free of tax to Brahmins. They promoted scriptural learning by establishing Vedic schools throughout the land.
(Tamil version of this article carries all the original references).

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Cave

‘No Basis for Aryan –Dravidian Race theory’

Kanchi Paramacharya said,

“Researchers in modern times propagate the view that the Vedas came to the south from the north, that the south had another religion and religious texts. This view of theirs, along with the theory that Northerners are Aryans and the Southerners are Dravidians, had created a conflict among the people. But if you truly examine Sanskrit and ancient Tamil texts you will find no basis for such a view or for the race theory. The researchers say that one should not be deceived by placing blind faith in the Shastras. But, in the end, what obtains today? Many people have come to accept the view of these researchers without examining it properly; merely because the research scholars concerned claim that their view is ‘rational; and ‘scientific’.

In the Vedas and Shastras there are indeed matters that have to be accepted in faith. But there are also scriptural aspects that can be examined rationally. If we inquire into such texts together with the ancient works in Tamil we will realise that the race theory is baseless. The fact that there was such a thing as Tamil religion will also be seen to be unfounded. It is a matter for regret that wrong notions have arisen with regards to subjects of great value, along with lack of faith in the Shastras. All these must go and the Vedic culture flourishes again, a culture that brings good to all the worlds and all the creatures. This is the prayer we must always make to the Lord”.

Kanchi Paramacharya’s Talk as in pages 741 and 745/6 of Hindhu Dharma, Bharatiya Vidya Bhavan, Mumbai. Year of Publication 2000.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi,Jharkand.

Please read my earlier posts:
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book
Three Tamil Sangams: Myth or Reality
Contact swami_48@yahoo.com

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

durga in MBPuram
Durga (Mahishasura Mardhani) in Mahabalipuram,Tamil Nadu

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 945 தேதி- 31st March 2014.

முந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.

சிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.

தொல்காப்பியக் கடவுளரைக் காண்போம்:–

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயதீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)

என்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.

முல்லை= திருமால்
குறிஞ்சி = முருகன்
மருதம் = இந்திரன்
நெய்தல் = வருணன்

durga from indonesia

Durga from Java, Indonesia in US Museum.

கீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.

கொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)
“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

three_fires_1

புறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ

இந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:

“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது? என்று திகைத்தார்.

இமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா? அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.

பிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே!! நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

ajanta Cave14_DurgaSamhara
Durga in Ajanta Caves

கண் இமைக்காத தேவர்கள்

தேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.
தேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.

இதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–

“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)

இதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.

Durga in Dulmi (Jharkhand)
Durga in Dulmi (Jharkahand)

தென்புலத்தார் வழிபாடு

இறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.

காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)
இது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–

1.காட்சி= கல்லைக் கண்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)
2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்
3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)
4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்
5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்
6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம்!. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி!!)

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)

என்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.

சங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varua In the Oldest Tamil Book

Contact swami_48@yahoo.com

Do you want Ladder or Boat to reach God?

ladderVocational-

thoni

By London Swaminathan
Post No. 929 Date: 24th March 2014

Sanskrit language has got thousands of golden sayings, proverbs and maxims. Nyaya Sastra means logic. There are plenty of Nyayas as part of this bulk section of the literature. Nyaya means reasoning or inferring a principle from the given example. Two of those Nyayas – Markata Nyaya and Marjara Nyaya — are very popular among the devotees. Devotees are broadly classified into Monkey (Markata) group and Cat (Marjara) group. But the famous Tamil Saivite saint of the seventh century Appar alias Tirunavukkarasu has found out some new similes to convey the same message. Let us look at it after understanding Markata and Marjara Nyaya.

Markata and Marjaraka Nyaya

A monkey (markata in Sanskrit) jumps from tree to tree. But it never helps its baby to come with it during its journey. Only the little one has to take care of itself by holding on to its mummy. We can see little monkeys clutching the belly of mother monkey. But its grip is proverbial. It never loses its grip. Mummy also knows it will never fall down. Some devotees are like this monkey. They hold on to God with their efforts. This is called Markata Nyaya.
A macaque monkey, with an offspring clut

If you watch cats (marjara) it is quite different from monkeys. Here only the mummy cares about the kittens. Kittens never bother about mum when it moves from one place to another. The cat carries its baby kitten in its mouth without hurting it. (When the same cat catches a rat or mouse it is a different grip!) Some devotees are like this. They leave everything to God. When they make absolute surrender, God takes care of the devotees like the mother cats. This called Marjara Nyaya.

cat kitten action

Tamil Innovation

Appar was a great scholar. His 4900 hymns are full of similes, metaphors and proverbs. He used ladder and boat for the Markata and Marjara Nyyas. He was very innovative
What does a ladder do? It helps anyone to climb up. But the climber has to hold on to it. The ladder physically does nothing. We can compare this to Markata Nyaya. Like the little ones clutching mummy’s tummy, devotees hold on to it.

What does a boat do? As soon as you board it the boat man sails it. After boarding it, you need not do anything. You leave all the responsibility to the boat man. So if we leave all the worries to God and surrenders to him, he will take care of us and take us to the destination i.e. Moksha. We can compare this to Marjara Nyaya.

I have already given another example where he changed the frog in to turtle in the ‘’Frog in the Well’’ story. So it is the ‘’Turtle in the Well’’ in Appar’s hymns.

Appar’s innovative ladder and boat Nyayas are in the Saivite anthology Thevaram:

On His matted hair He fosters a goodly crescent
He is the ladder leading His devotees mad after Him
To moksha; unto me caught up in a male storm
Of the sea of misery. He is the ark that transports me
To the other shore; He, the wearer of swaying white kuzai
Is the pure lustre unto me. His serviteur; He is
The touchstone of the radiant golden coin; He is the Hara
That abides at cool Avaduthurai; I, the lowly cur,
Reached His feet and stand redeemed. (Thevaram 6-461)
Translation was done by Dr T N Ramachandran.

Contact swami_48@yahoo.com