மாணிக்கவாசகரின் காலம்—2

delhi mus.manikka2

By London Swaminathan
Post No. 882 Date: 3-3- 2014
Part 2 of Age of Manikkavasagar in Tamil

மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கு முந்தியது என்றும் அவருடைய பெயர் சத்தியதாசன் என்றும் ஊர்க் கடவுளரின் பெயரான வேதபுரீஸ்வரர் (வாதவூரர்) மற்றொரு பெயர் என்றும் முதல் பகுதியில் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது மேலும் சில தகவல்களைத் தருகிறேன்.

1.அவர் சம்பந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்திருக்கலாம். மாணிக்கவாசகர் மீது அரசாங்கப் பணம் கையாடல் சுமத்தப்பட்டதாலும் அப்போதைய அரசர்கள் சமண மத ஆதரவாளர்கள் என்பதாலும் சம்பந்தர், அப்பர் முதலானோர் அவரைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

2. மாணிக்கவாசகரின் திருவாசகம் கண்டெடுக்கப்பட்டது தேவாரக் கண்டுபிடிப்புக்கும் பின்னர் நிகழ்ந்ததால் சேக்கிழார் முதலானோர் அவரை விட்டிருக்கலாம். எட்டாம் திருமுறையாக திருவாசகம் எப்போது சேர்க்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இவை எல்லாம் ஊகங்களே. இதைவிட வலுவான அகச் சான்றுகளைக் காண்போம்.

3.ஆகமங்கள் பற்றி மாணிக்கவாசர் பாடியதால் அவர் பிற்காலத்தவர் என்பது பசையற்ற வாதம். சம்பந்தருக்கு முந்தைய திருமூலர், ஆகமங்கள் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.

4. ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைக்கும் மிக மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பாவை என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பாட்டு என்பதால் இப்படி ஒற்றுமை இருக்கலாம் என்பது சரியல்ல. மாணிக்கவாசகர் தனது பாடல்களில் உபநிஷதக் கருத்துக்களை அபரிமிதமாகப் பொழிந்து தள்ளியதை சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய உரைகள் மூலம் அறிகிறோம். ஆனால் ஆண்டாள் ஓர் ‘டீன் ஏஜ் கேர்ள்’ என்பதால் உபநிஷதத்துக்கு இணையான உயர் தத்துவங்களைக் காணமுடியவில்லை. அவர் மிகவும் ‘பிராக்டிகலா’கப் பாடி இருப்பதை பல கட்டுரைகளில் முன்னரே குறிப்பிட்டேன். ஆக, அவருடைஅய நாச்சியார் திருமொழி என்பது திருக்கோவையாரை மனதில் வைத்துப் பாடப்பட்டதாகவும், அவருடைய திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை வைத்துப் பாடப்பட்டதாகவுமே கருத வேண்டியுள்ளது. இரண்டு பாவைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஆராய்ந்தால் நான் சொல்லுவது நன்கு புரியும்.

5. மற்றொரு அகச் சான்று பிள்ளையார் பற்றி அவர் எங்கும் பாடாதது ஆகும். அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடிய கணபதி வழிபாடு, மாணிக்கவாசகர் காலத்தில் பெரிய அளவில் இல்லை. இதனாலும் அவர் காலத்தால் முந்தியவரே.

Thiruvathavur,December 1997-2

6. பிற்காலத்தில் பாடல்களில் குறிப்பிடப்படும் லிங்க வழிபாடும் இது போன்றதே. கணபதி, லிங்க வழிபாடு அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இவை எல்லாம் பாடல்களில் இடம்பெறும் அளவுக்குப் பெரிதாகவில்லை.

7. மாணிக்கவாசகர் பயன்படுத்திய அகவல்பா முதலியன முற்காலத்தியவை. பின்னர் வந்தவர்கள் வெண்பாக்களாகப் பாடித் தள்ளிவிட்டனர். இவர் ஏழு அந்தாதிகளைப் படி இரூக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் இப்படி அந்தாதி பாடி யிருப்பதால் அவர்கள் காலத்தில் இவரும் இருந்திருக்கலாம். தனி ஒருவர் என்று எடுத்துக் கொண்டால் மாணிக்கவாசகர் மட்டுமே அதிகம் அந்தாதி பாடி இருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களைப் பாராட்டும் வகையில் பாடல்களில் பூதம், பேய், பொய் என்ற சொற்களைப் பிரயோகிக்கிறார்.

8. சொல்லாட்சி: பல பழைய சொற் பிரயோகங்களையும், வழக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது. ஆக அவர் சங்கம் மருவிய காலத்தில், ஒருவேளை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தேவார மூவருக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.
9. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சில க்ஷேத்திரங்கள் எது என்றுகூடத் தெரியவில்லை. அவர் சொல்லும் மண்டோதரி சம்பவம் முதலியன மற்றைய இடங்களில் கானப்படவில்லை. மதுரையில் நடந்த பல திருவிளையாடல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர் சம்பந்தருக்குப் பின்னால் வாழ்ந்திருந்தால் அதைத்தான் முதலில் குறிப்பிட்டிருப்பார்.

10. மாணிக்கவாசகர் பாடல்களில் திருக்குறளின் தாக்கமும் தெரிவதால் வள்ளுவவர் காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) ஒட்டியே வாழ்ந்திருக்க வேண்டும்

11. பொன் அம்பலம், காஞ்சி செம்பொற் கோவில் ஆகியன எல்லாம்பாட்டில் வருவதால் பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். ஐயடிகள் காடவர்கோன் (கி.பி 550-575) என்ற பல்லவ மன்னன் பொன் வேய்ந்ததை நாம் அறிவோம்.

12.இவர் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!!!

13.சம்பந்தருக்கு முந்தி வாழ்ந்த கண்ணப்பர், சண்டீசர் ஆகியோரை மாணிக்கவாசகர் பாடுகிறார். சம்பந்தருக்குப் பிற்பட்ட யாரையும் பாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது
14. மாணிக்கவாசகர், தமிழ்ச் சங்க காலத்தைஒட்டி வாழ்ந்தவராக இரூக்கவேண்டும் திருக்கோவையில் ‘உயர் மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகள்’ என்றும் திருவாசகத்தில் ‘தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே’ என்றும் பாடுவது இவர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்று காட்டுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தால் இப்படிப் பாடி இருக்க மாட்டார். கடந்தகாலத்தில் நடந்ததை ‘இறந்த கால’த்தில் பாடி இருப்பார்.

Thiruvathavur,December 1997-3
15.சிதம்பரத்துக்கு ஆதித்ய சோழன் பொன் வேயும் முன்னர் காடவர்கோன் (பல்லவ மன்னன்) பொன் வேய்ந்ததாக அறிகிறோம். ஆக திருமூலரும், மாணிக்கவாசகரும் குறிப்பிடும் பொன் அம்பலம் மிகப் பழைய பொன் அம்பலமே.

16. அப்பர் போல நேரடியாகக் குறிப்பிடாமல் சம்பந்தர், மாணிக்கவாசகரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: இரண்டாம் திருமுறையில் ‘தெரிந்த அடியார் திசைதோறும் குருந்த மரும் குரவின் அலரும் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்’ — என்று பாடுகிறார். மாணிக்கவாசகர், குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் உபதேசம் பெற்றதால் குருந்த மரத்தை அடிக்கடி குறிப்பிடுவது முக்கிய தடயமாகும்.

17.கோவைக்கு இலக்கணமாக இவர் எழுதிய திருக்கோவையாரையே பேராசிரியர் போன்ற உரைகாரர்கள் குறிப்பிடுவதால் மாணிக்கவாசகர், பாண்டிக்கோவைக்கு மிகவும் முந்தியவர்.

18. நவீன எழுத்தாளர்கள் மாணிக்கவாசகரை வரகுணன் காலத்தவர் என்று சொன்னாலும் இஅர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் மந்திரியாக இருந்தவர் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதையும் கவனிக்கவேண்டும்.

19.மாணிக்கவாசகரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சி நரி – பரி ஆன லீலை ஆகும். அவரை பாண்டிய மன்னன் அனுப்பியது குதிரை வாங்குவதற்கே. குதிரை வியாபாரம் நமது கடற்கரையிலும், அருகில் இலங்கையிலும் நடந்தது சங்க இலக்கியக் குறிப்பாலும் இலங்கையில் தமிழ்க் குதிரை வியாபாரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தெரிகிறது.
Thiruvathavur,December 1997

20. மதுரையின் முக்கியப் பெயர்களில் ஒன்று ஆலவாய். இதை மாணிக்கவாசகர் பயன்படுத்தவில்லை ஆனால் சம்பந்தர் பயன்படுத்துகிறார். ‘ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று சம்பந்தர் பாடுவது, தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி– என்ற மாணிக்கவாசகரின் வரிகளின் எதிரொலியாகத் திகழ்கிறது

தொடரும்………………..
Contact swami_48@yahoo.com

Manikkavasagar’s age: History Puzzle solved!

delhi mus.manikka2

By London Swaminathan
Post No 881 Date: 2-3- 2014

Manikkavasagar is one of the four great Tamil Saivite saints. Appar, Sundarar, Sambandar and Manikkavasagar are known as ‘The Four Saints’ in Tamil. All the four revived Saivism in Tamil Nadu after it was under the spell of Jainism and Buddhism for a few centuries. We know the times of the three saints Appar alias Tirunavukkarasar, Sambandar – the Boy Wonder and Sundarar. But the age of Manikkavasagar remained a mystery.

(M= Read as Manikkavasagar)

Neither the three saints of Thevaram mentioned ‘M’ by name nor ‘M mentioned the other three in his two works. This was a great puzzle for the historians.

Manikkavasagar was the author of two Tamil works known as Tiruvasagam and Tirukkovaiyar. Since there is a reference to a great Saivite king Varaguna Pandyan , some scholars thought he lived in the ninth century. Of the two Vargunan Pandyas known to history one was a great devotee of Lord Shiva. So ‘M’ (Manikkavasagar) was placed in his times i.e. ninth century AD.

Thiruvathavur,December 1997

Tiruvathavur Temple (Manikkavasagar’s Birth Place)

But Appar’s Thevaram contradicted this. In one of the Thevaram hymns, Appar who lived in the seventh century mentioned the major event that happened in ‘M’s life time. Lord Shiva brought a lot of horses to the Pandya king and they turned into foxes in the night. Then M was punished for the fraud and Siva rescued him later through his miracles. If we go by Appar’s Thevaram reference to this story, M must have lived before eighth century.

Appar is very reliable and he was the one who mentioned about a clash between Dharumi and Nakkirar, two poets of Sangam age. Later Tiru Vilaiyadal Puranam expanded on this episode.

Now new information has emerged which puts ‘M’ before the Thevaram Triad i.e. the three saints Appar, Sundara, Sambandar who composed the Thevaram hymns on Lord Shiva.

New Data to prove M’s Age:

Periya Purana (Great Purana) written by Sekkizar gives the story of 63 Saivite saints. Manikkavasagar is not included in the Purana. But scholars thought that the basis for Sekkizar’s Purana was two earlier short poems done by Sundara and Nambi Andar Nambi. Both of them refer to ‘Poy Adimai Ilatha Pulavar’, literally translated it would sound ‘the poet(s) whose homage was flawless’ or ‘the poet(s) without hypocrisy’. Nambi andar nambi was the one who took is as a reference in plural and interpreted as poets such as Kapilar, Paranar and other such Sangam poets. Neither Sekkizar nor Sundarar interpreted it as poets in plural.
Famous archaeologist and historian Dr R Nagaswamy, who is well versed in Tamil and Sanskrit, has done a good deal of research into the Sanskrit translations of Periya Puranam. According to him there are two translations UPAMANYU BHAKTA VILASAM and AGASTYA BHAKTA VILASAM. Both these works throw much light on the line ‘Poy Adimai Ilatha Pulavar’. Both treat it as singular and mentioned a Brahmin poet by name Sathyadasan who lived in Vedapuram. They also pointed out that he lived praising Siva for 12 years before reaching the feet of Lord Siva. (Source ‘Poyyili Malai ‘by Dr R Nagaswamy).

Thiruvathavur,December 1997-3
Shrine of Manikka vasagar

Going by the Sanskrit translations, I guess they refer only to Manikkavasagar. The name of the God in Thiruvathavur is Vedapureeswar. This proves that the Vadavur is derived from Vedpuram. Manikkavasagar may have two names, one Sathydasan given by his parents and Vedapura saint (Vathavurar in Tamil).
This means he must have lived at least a century or two before Appar and Sambandar. There are also other proofs to establish his age such as non reference to Ganesh or Shiv linga, the literary genre he used and Tiruvempavai verse which a later poetess Andal copied from him. Second part of my article in Tamil gives more on these aspects.

with sekkizar

The Great Four Saivite Saints with Sekkizar,author of Periya Puranam.

For Tamil references of verses, please follow my Tamil version of this article
Contact swami_48@yahoo.com

மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!!

asia soci,NYmanik

By London Swaminathan
Post No 880 Date: 2-3- 2014
This article is available in English as well.

Q.1.மாணிக்கவாசகரின் காலம் என்ன?
Q.2.அவருடைய உண்மைப் பெயர் என்ன?
A.1.மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.
A.2.அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள். தமிழகத்தைக் காப்பாற்றிய காவலர்கள். நாத்திகம் பேசி நாத்தழும்பி ஏறியவர்களைப் பாதாளப் படுகுழியில் தள்ளிய சமய வீரர்கள். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானிகள். 30,000 தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டிய புனிதர்கள். வேத ஆகம நெறியை வேரூன்ற வைத்த வித்தகர்கள், சத்திய சீலர்கள். இந்த நால்வரும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இட்ட விடுகதையை, புதிரை விடுவிக்க முடியாமல் அறிஞர்கள் தவித்தனர்.

என்ன புதிர்?

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்?
இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
இனி ‘மா’ என்ற சுருக்கெழுத்தில் நான் குறிப்பிடுவதை மாணிக்கவாசகர் என்று நீட்டிப் படிக்கவும்:–
சுருக்கமாகச் சொன்னால் மூவரை ‘மா’ குறிப்பிடவில்லை. ‘மா’வை மூவர் குறிப்பிடவில்லை. ஆனால் சில குறிப்புகள் சில ஆராய்ச்சியாளர்களை ஒரு முடிவுக்கு வர உதவியது. பாவை பாடிய வாயால் கோவையும் பாடியவர் மாணிக்கம். அதாவது திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு ‘மா’ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் எனது ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன.

Thiruvathavur,December 1997
Thiruvathavur near Madurai

சைவ வரலாற்றில் மிக முக்கியமான நக்கீரர்– சிவ பெருமான் மோதல் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு திருவிளையாடல் புராணத்தை உண்மை என்று நிரூபித்தவர் அப்பர் பெருமான்.

நான்கு சைவ சமயத் தூண்களில் நெடுங்காலம் வாழ்ந்தவரும் இவர்தான். பழுத்த சமயவாதி, புரட்சிவாதியும் கூட. சைவத்தில் இருந்து சமணத்துக்குத் தாவி, பின்னர் சமணத்தில் இருந்து சைவத்துக்குத் தாவி, மகேந்திர பல்லவனுடன் பயங்கரமாக மோதிப் பின்னர் அவரையும் சைவ சமயத்துக்கே அழைத்துவந்த—இழுத்து வந்த புரட்சிவாதி. ஆகையால் அவர் சொல்லுவது தவறாக இராது. தருமி என்னும் பார்ப்பனப் புலவர் தமிழ் சங்கம் ஏறியது பற்றி இவர் பாடியதை ‘திருவிளையாடல் புராணம் உண்மையே என்ற கட்டுரையில் காட்டினேன். அதே வாயால் ‘மா’வின் வாழ்க்கையில் நடந்த நரி-பரி ஆக்கல் திருவிளையாடலையும் இவர் பாடி இருக்கிறார். இதை யாரும் புறக்கணிக்க முடியாது.ஆக மா’ அப்பருக்கும் முன் வாழ்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவு.

இப்போது வரகுணன் பற்றிய குறிப்பை ஆராய்வோம். வரலாற்றுக்குத் தெரிந்த வரகுணன்கள் இருவர் உண்டு. அதில் சைவ சமயப் பற்றுடைய ஒருவருடன், ‘மா-’ வை தொடர்புபடுத்துவது நியாயமாகவே தோன்றும். ஆனால் இவரைத் தவிர வேறு வரகுணன்கள் இருந்திருக்கலாம் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனெனில் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது வெறும் ஊகமே. ஆகையால் வேறு சில சான்றுகளைக் காண்போம்.

63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார் பெருமான் ஏன் இவரை (மா–வை) விட்டுவிட்டார்? என்பது மற்றொரு புதிர். இந்தப் புதிருக்குப் பலரும் கூறிய விடை ஏற்புடையதே. திருத்தொண்டர் தொகையில் ‘மா’ பெயர் இல்லாததால் சேக்கிழார் பாடவில்லை. அவருக்கு திருத்தொண்டர் தொகையே ஆதார நூல் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆனால் திருத்தொண்டர் தொகையிலும் ஒரு புதிர் உள்ளது. அதை விடுவித்தால் மா’ பற்றிய புதிர் விட்டுப்போகும்.

திருத் தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று ஒரு வரி வருகிறது. யார் இவர்? அல்லது யார் இவர்கள்?

பொய் அடிமை இல்லாத புலவர்

பொய் அடிமை இல்லாத புலவர் என்பது மாணிக்கவாசகரே. இதுவரை ‘மா’ பற்றி எழுதிய யாரும் அவருடை இயற்பெயரைக் கூறாமல் திருவாதவூரர் என்று அவர் பிறந்த ஊரின் பெயராலும் கடவுள் கொடுத்த மாணிக்கவாசகர் என்ற பெயராலுமே அழைத்து வருகின்றனர். மாணிக்கவாசகரின் இயற் பெயர் –தாய் தந்தை இட்ட உண்மைப் பெயர் ‘பொய் அடிமை இல்லாதவர்’ என்பதாகும். இதற்கு ஆதாரம் என்ன?

Thiruvathavur,December 1997-2

Manikkavasagar shrine

டாக்டர் நாகசாமி புத்தகம்

எனது குருநாதர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய கட்டுரையில் இதற்கு ஆதாரம் இருக்கிறது:
டாக்டர் நாகசாமியின் புத்தகத்தின் பெயர் ‘பொய்யிலிமாலை’ அதில் பக்கம் 189-ல் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருடைய கட்டுரைச் சுருக்கம்:

1.திருத் தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்று பாடுகிறார். இது ஒருவரா பலரா என்று தெரியாது.

2. சுந்தரமூர்த்திக்குப் பின், நம்பியாண்டார் நம்பி, இத்தொகையை விரிவாக்கி திருத் தொண்டர் திருவந்தாதி பாடுகையில் கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பலர் என்றும் சங்கப் புலவர் என்றும் பாடிவிட்டார்.
#

3.அடியார் புராணத்தை விரித்துரைத்த சேக்கிழார் பாடலில் பொய்யடிமை இல்லாத புலவர் ஒருவரா பலரா என்று தெளிவாக இல்லை. ஆனால் நம்பி குறிப்பிடும் கபிலர், பரணர், நக்கீரர் பற்றி சேக்கிழார் எதுவுமே குறிப்பிடவில்லை. இது ஏன் எனக் கூற இயலவில்லை.

4.அடியார்கள் புராணத்தை வடமொழியில் தரும் உபமன்யு பக்த விலாசம், இரண்டு விதமாக பொய் அடிமை இலாத புலவரை மொழி பெயர்த்துள்ளது: ‘அஸத்ய தாஸ்ய ரஹித கவி’, ‘ஸத்ய தாஸ்ய கவி’. இதைக் கூர்ந்து படித்தால் புலவர் என்னும் சொல் ஒருவரையே குறிக்கிறது என்பது தெளிவாகிறது
5.அந்தக் கவி (ஸத்யதாஸர்) சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பாடவில்லை. அவர் பக்தியை மெச்சி பரமன் அவருக்குக் கவிபாடும் வரம் அளித்தார். அன்றிலிருந்து எப்பொழுதும் கவிதையால் மகிழ்வித்து சிவபதம் அடைந்தார்.

6. அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

7. நம்பி மட்டும் கபிலர்,பரணர் முதலியோரைக் குறிப்பிட, மற்றவர்கள் ஒருவரே என்று கூறுவது மேலும் ஆராய்ச்சிக்கு உரித்தாகும்
என்று சொல்லி திரு நாகசாமி கட்டுரையை முடிக்கிறார்.

இனி எனது கருத்துகளைக் கூறுகிறேன்:

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் ‘மா’வுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!!!!

மதுரையில் ஒருவர் பிறந்தால் சுந்தரேஸ்வரன் என்றும் திருவாரூரில் ஒருவர் பிறந்தால் தியாகராஜன் என்றும் பெயர் சூட்டுவது போல வேதபுரத்தில் பிறந்த ‘மா’-வுக்கு வேதபுரீஸ்வரர் (தமிழில் வாதவூரர்) என்றும் மற்றொரு செல்லப் பெயராக சத்தியதாசன் என்றும் வைத்திருப்பர். ஆகவே பொய்யடிமை இல்லாத= ஸத்யதாச என்பதும் வேதபுரீஸ்வரர்=வாதவூரர் என்பதும் நாம் வணங்கும் மாணிக்கவாசகரே ஆவார்.

மேலும் பல சான்றுகளை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருவேன்.

மேற்கோள்கள்
1.தருமி பொற்கிழி கதை
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

தொடர்பு கொள்ள: Contact swami_48@yahoo.com

Monkeys in Ancient Tamil Literature

monkey photo

By London swaminathan
Post no 879 dated 1st March 2014

Tamils are keen observers of nature. They are friends of the trees and animals of the forest. They describe everything happening in the forest and attribute human feelings to it. They hear music in the buzzing of the bees and beetles. They hear drums in the thunder. They watch the peacock dance with the background orchestra of these sounds. The descriptions like this go on and on. Here are a few word pictures of the Sangam age poets.

A philandering male sparrow returns late to its nest, and on its return, its mate refuses it admission and makes it outside in the drizzling; and only when evening sets in, it pities and recalls it. A female monkey has clandestine union with a male and trying to escape the notice of its group, looks into a deep pool of clear water, uses it as mirror and sets right its hair on the head. This is described in Natrinai poems 181 and 151 of Sangam Tamil literature.

It is very interesting to note that women doing make up by looking at a mirror– actually water source used as a mirror in this case– , like Andal used the well water to look at herself with a big and beautiful garland.

baboon puzzled

Kishkinda Kanda and Sundra Kanda of Valmiki Ramayana have beautiful descriptions of nature and monkeys’ antics. When the monkey brigade failed to find Sita on the main land, their leader Angada even thinks of committing suicide. But in Tamil literature we have a reference of another monkey actually committing suicide. A monkey bereaved of its loving mate, hands over its young to its kith and kin and commits suicide by falling down from a cleft. This is described in 2000 year old Kuruntokai poem 69.
In such pictures the poets introduce human feelings in to animal activities. In the olden days they thought all these things are exaggeration or poetic imagination. But modern researches show that they had feelings like human beings. What Discovery Channel shows today under Nature was seen and painted in words by the Tamils long ago!

Day light Robbery!

There is a funny account of a cunning monkey in Natrinai poem 57 by Pothumpil Kizar:
A wild cow came and rested under a Venkai tree in the forest. A female monkey wanted to take advantage of the sleepy (stupid) cow. It signs to its troupe to keep quiet. It went and milked the cow and distributed it to its little ones. They had hands full of milk. It is nothing but a day light robbery!!
Another scene in Ainkurunuru shows a monkey using a stem of a plant to beat the thin cloud approaching it (276). People living in high mountains may have enjoyed such scenes. Every time the clouds pass by you like mist, your children try to touch it with their hands.

A poet sees a young boy riding on the back of a buffalo, which is a common scene in Indian villages. He compares it to a monkey on the rocks! (Akananuru 206).

Tamil poets hear different sounds in the forest and imagine a jungle orchestra formed by creatures of the forest. While the peacocks dance, the bees sing tunes. A monkey wanted to play drums and immediately it picks up a jack fruit (which resembles Mrudangam, a drum used in South Indian music) and beats it with its hands (Aka Nanuru 352. It may be a bit of imagination of the poet!

Tamils enjoy watching nature and immortalise it in writing. Poets who lived 2000 years before our time enjoyed the antics of monkeys. Monkeys were the clowns in the jungle dramas. Among the animals, the monkey is depicted most playful. A group of monkeys bathes in the mountain torrents, swings in the swing left hanging by the owners of the Tinai (millets) fields and plays among the branches of the Venkai trees, dropping down flowers on the rocks below (Natrinai 334).

Probably human beings learnt the habit of bathing under the showers from the monkeys!
A poet describes the peacock dance with the accompaniments of forest orchestra as an entertainment to the monkeys in Akananuru verse 82.

The longest description of the torrent is by Nakkirar in Tirumurukatrppatai, the last twenty lines of which depict it (295-316)

Suicide of a Monkey

There are also pathetic descriptions of the sufferings of animals. A female monkey who lost its young one in a deep cleft mourns over its loss by crying aloud among its group (Malaipadukadam lines 311-314). The Tamil novel ‘Thekkadi Raja’ describes the mourning of elephants in the Kerala forests. Elephants’ intelligence is proved by modern research, which the Tamils noticed 2000 years ago. That was described in the ‘Gajendra Moksha’ (Elephant—Crocodile) episode in the Puranas and Tamil literature as well. In Tamil, we see elephants helping another elephant that fell in a ditch by extending the tree branches. I have given innumerable episodes of animals using tools in my other posts. But I read articles in science magazines only now about animals using tools!

tamil kurangu

Kutralam Water Falls

In the modern age ‘Kutrala Kuravanji’ by Trikuta Rasappa Kavirayar is a wonderful poem like Wordsworth’s poems on Daffoldils, Tintern Abbey and Shelly’s Skylark.
The beauty of monkeys in the back ground of a high water falls called Honey falls is painted in words. The female monkeys are dropping fruits by shaking the branches of the fruit trees for which the males are longing. The Honey falls sends its water so high that even the chariot of the Sun finds its path slippery ( In Hindu mythology Lord Sun is supposed to ride a chariot with seven horses (VIBGYOR colours) or with one wheel. The Siddhas who do miracles frequent the place by using air routes!

In Kuruntokai 278, we see a similar picture where the father monkey climbs over the trees and drops the ripe fruits from there when the young ones peck at them from below. Monkeys and apes are just like human beings in their show of love and affection towards their kith and kin.

There are many more stories and word pictures of nature in Sangam Tamil and later literature.

Source : Valmiki Ramayana,Kutrala Kuravanji by Trikuta Rasappa Kavirayar, The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan.

kurangu ramayan
Ramayana paintings.

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள்

monkey photo

This article is availabe in English as well.

By London swaminathan
Post no 878 dated 1st March 2014

தமிழ்க் குரங்குகளுக்கு அறிவு ஜாஸ்தி!!
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!……..இல்லை…… இல்லை,…..
தமிழ்க் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நாம்தான் உலகில் முதலில் பிறந்தோம் என்று பறை சாற்றிக் கொள்கிறோம் அல்லவா?

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி”

— தமிழ்க் குடி என்று சொல்லுவது உண்மையானால் முதல் குரங்கு தமிழ் குரங்காகத்தானே இருக்க வேண்டும்! நிற்க.

தமிழன் இயற்கையில் ஊறித் திளைத்தவன் என்பது சங்க இலக்கியத்தின் 2000+ பாடல்களைப் படிப்போருக்கு தெள்ளிதின் விளங்கும். அவன் வருணிக்கும் மரம், செடி, கொடி, விலங்கினங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஓவியமாக வரைந்து வைத்தால் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். இன்று நமக்கு மிக நெருங்கிய உடன் பிறப்பான குரங்கை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மனிதனைப் போன்ற உணர்வு குரங்குகளுக்கும் உண்டு என்பதெல்லாம் இப்போதுதான் ‘டிஸ்கவரி சேன்னல்’ முதலியவற்றில் ஆராயப்படுகின்றன. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன், பிராணிகளை உன்னிப்பாகக் கவனித்து அவைகளை உவமைகளாகவும் எழுதி வைத்துவிட்டான்.

“இஞ்சி தின்ன குரங்கு போல”, “குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல”, “குரங்குப் பிடி” என்ற பழமொழிகளை எல்லாம் மனக் கண் முன்னால் ஓவியமாகக் கண்டு பாருங்கள். எவ்வளவு கன கச்சிதமாகச் சொல்லியிருக்கிறான் என்பது புரியும்.

baboon puzzled

இதோ சில காட்சிகள்:
காடுகளில் மயில்கள் ஆடும்போது வண்டுகள் பாடுகின்றனவாம். குரங்குகள் பலாப் பழத்தை மத்தளம் போல வைத்துக் கொண்டு தாளம் போடுகின்றனவாம்.காட்டிற்குள் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா/ இசைக் குழு! இப்படி ஒரு காட்சி. (அகம்.352)

இன்னொரு இடத்தில் ஒரு குரங்கு மழைத் தண்ணீரில் எழும் காற்றுக் குமிழ்களைக் கம்பால் அடித்து மகிழ்கிறதாம் (ஐங்கு 275)

மற்றொரு குரங்கு மயில் முட்டையை எடுத்து பாறை மீது உருட்டி பந்து விளையாடுகிறதாம் (குறு. 38)
கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயிலாடுமுசுவின் குருளை உருட்டும்—(குறு. 38)

குரங்குகள் மரத்தில் கிளைக்கு கிளை தாவிப் போவதையும், ஊஞ்சல் ஆடுவதையும் புலவர்கள் வருணித்து மகிழ்கின்றனர்.

kurangu ramayan
பெண்கள் ‘மேக் அப்’

குரங்குகளுக்குக் கூடப் புணர்ச்சிக்குப் (செக்ஸ்) பின் வெட்கம் வரும் என்பதைக் கவனித்துப் பாடியும் வைத்திருக்கிறான் தமிழன் (நற்றிணை 151)

கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி கருங்காற்
பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன்தலைப் பாறு மயிர் திருத்தும் — ( நற்றிணை 151)

ஒரு ஆண் குரங்குடன், செம்முக மந்தி களவினில் தொடர்பு கொண்டதாம். தன்னுடைய கோஷ்டிக்குக் கலைந்த தலை முடியையும் முகத்தையும் காட்டினால் ரகசியம் வெளியாகி விடும் என்று அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி நீர்ச் சுனையில் கண்ணாடி போல முகம் பார்த்து தலை மயிரை அழகாக சரி செய்து கொண்டதாம். பெண் (குரங்கு) கள் ‘மேக் அப் போடுவது’ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணாடிக்கு முன் நடந்திருக்கிறது!!

இந்தக் காட்சி மிகைப் படுதப்பட்டதல்ல, இப்போது குரங்குகளைப் பற்றி ஆராய்சி செய்வோர் அதற்கு மனிதன் போல சிந்தித்து முடிவு எடுக்கும் புத்தி இருக்கிறது என்பதைச் சோதனைகளில் கண்டு பிடித்து இருக்கிறார்கள். நாம் அவர்களை 2000 ஆண்டு இடைவெளியில் தோற்கடித்து விட்டோம். இது புலவர் இள நாகனார் பாடிய பாடல்.

குரங்கின் மனநிலையை, ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்திலும் சுந்தர காண்டத்திலும் கவிஞர்கள் (வால்மீகி, கம்பன்) அழகாகச் சித்தரித்துள்ளனர். சீதா தேவியைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், குரங்குகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கின்றன.
( நமது அரசியல்வாதிகளுக்கு கோப்பெருஞ்சோழனும், ராமாயணக் குரங்குகளும்தான் உண்ணாவிரத முன்னோடிகள்).

tamil kurangu
தற்கொலை செய்து கொண்ட குரங்கு

தமிழ் இலக்கியமும் இரண்டு பரிதாபக் காட்சிகளை வருணிக்கின்றன:
ஒரு பெண் குரங்கின் குட்டி மலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இறந்துவிட்டது. அது கண்டு பொறாது, தனது கூட்டத்தில் நின்று அழுதது. இதை வருணிக்கிறார் மலைபடுகடாம் கவிஞர் பெருங் கவுசிகனார்:

“கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமேல் யாக்கை கிளையொடு தவன்றி
சிறுமையுற்ற களையாப் பூசல்:- — ( மலைபடு வரி 311- 314)

“தேக்கடி ராஜா” போன்ற தமிழ் நாவல்களைப் படித்தவர்களுக்கு யானைகள் முறையாக துக்கம் அனுஷ்டிப்பது தெரிந்து இருக்கும். மேலை நாட்டினர் இப்போதுதான் விலங்கின அறிவாற்றலை உணரத் துவங்கி இருக்கின்றனர். நமக்கு முன்பே தெரியும்.

மற்றொரு குரங்கு அதன் காதல் கணவன் இறந்ததால், குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலை மீது இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாம் (குறுந்தொகை 69)

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
–(கடுந்தோட் கரவீரனார், குறு. 69)

ஒரு புலவர் குரங்குச் சேட்டையைக் கண்டு அப்படியே வருணிக்கிறார்:
மந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் (ஐங்குறு 276)

மேகங்கள் வேகமாக ஓடுவதைப் பார்த்துவிட்டு ஒரு நறைக்கொடியின் தண்டை எடுத்து அதை அடிக்கப் போகுமாம்.

இன்னொரு பாடலில் எருமை மாட்டின் மீது சவாரி செய்யும் பையனைப் பார்த்த புலவர் அவனை பாறை மேல் உட்கார்ந்து இருக்கும் குரங்குக்கு ஒப்பிட்டு மகிழ்கிறார். (அக.206)

பால் கறந்து விநியோகித்த திருட்டுக் குரங்கு

குரங்குகள் பழங்களைத் திருடுவதையும் தட்டிப் பறிப்பதையும் நாம் கோவில்களில் கண்டிருக்கிறோம். ஆனால் திருட்டுத் தனமாக காட்டுப் பசுவின் பாலைக் கறந்து தன் குட்டிகளுக்கு விநியோகித்த அபூர்வக் காட்சியை ஒரு புலவர் பாடி வைத்திருக்கிறார். “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்பது தமிழ்ப் பழமொழி. அபடிப்பட்ட ஒரு காட்டுப் பசு ஒரு வேங்கை மரத்தின் கீழ் நின்று உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று உறங்கும் வேளையில் இந்தக் குரங்கு தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. அது மட்டுமல்ல. சுற்றத்தாரிரிடம், உஷ், பேசாமல் சும்மா இருங்கள்! என்று சைகை செய்துவிட்டுச் சென்றதாம்! எவ்வளவு குசும்பு!!

இதோ அதை வருணிக்கும் பொதும்பில் கிழாரின் நற்றிணைப் பாடல்:
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சுபதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை குவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பரழ்க் கை நிறை பிழியும்
மா மலை நாட! ( நற்றிணைப் பாடல் 57, பொதும்பில் கிழார்)

தற்காலத்தில் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

இது போன்ற பாடல் குறுந்தொகை 278 லும் உண்டு. தந்தைக் குரங்கு சிந்தும் கனிகளைக் குட்டிக் குரங்குகள் உண்டு உண்டு மகிழ்ந்தனவாம். இன்னும் இப்படிப் பல உள. அத்தனையும் ஒரே நேரத்தில் சுவைத்தால் திகட்டி விடும் அல்லவா !

Contact swami_48@yahoo.com

‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை அழிவைத் தரும்’

Obama_bowing_in_Tokyo

US President Obama bowing to Japanese Emperor.

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-873 தேதி:- 28 பிப்ரவரி 2014

ஆதி சங்கரரின் வினா- விடை ஸ்லோகம் (பிரஸ்ன உத்தர ரத்ன மாலிகா) அற்புதமான கருத்துக்களை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. 67 ஸ்லோகங்களில் எதைப் படித்தாலும் அது திருக்குறளிலும் இருப்பதைக் கண்டு அகம் மகிழ்கிறது, உளம் குளிர்கிறது.

இதோ 200 கேள்விகளில் ஒன்று:
கேள்வி:- யார் முன்னேறுவார்?
பதில்:- அடக்கம் உடையோர்

கேள்வி:- யார் தேய்ந்து போவார்?
பதில்: அகந்தை உடையோர்.

இதை லண்டனில் உள்ள எனது இனிய நண்பர் மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் அழகாகக் கவிதை வடிவில் (67 பாடல்களையும்!) தருகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ:

“பவ வாழ்வில் உயர்வென்னும் பலன் அடைவார் யாரே?
பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே!
அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்?
அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்!
எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்?
எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46)

சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்:
கோ வர்த்ததே விநீத: கோ வா ஹீயதே யோத்ருப்த:
கோ ந ப்ரத்யேதவ்யோ ப்ரூதே யஸ்சான்ருதம் ஸஸவத்.

Touching-Feet
Prime Minister Manmohan Sing bowing to a Hindu Swamiji.

இரண்டு கதைகள்

யாருக்காவது சம்ஸ்கிருதத்தில் உள்ள கீதை, வேதம், உபநிஷத்துக்களைப் படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தால் அவர்கள் ராமகிருஷ்ண உபதேச மஞ்சரியைப் படித்தால் போதும். கதைகள், உவமைகள் மூலம் அத்தனையும் சொல்லிக் கொடுத்து விடுவார்!. இதோ அவர் சொல்லும் கதை:
“ஒரு சீடனுக்கு அவனுடைய குரு மீது அபார பக்தி.. அவர் கூப்பிட்ட உடனே, இருவருக்கும் இடையில் இருந்த நதியைக் கடக்கவேண்டி இருந்தது. குருவின் பெயரைச் சொல்லிக் கொண்டே தண்ணீரில் நடந்து வந்து குருவை நமஸ்கரித்தார். குருவுக்கு அகந்தை வந்து விட்டது. என் பெயருக்கே இவ்வளவு சக்தி இருந்தால் அதைத் தரித்து இருக்கும் எனக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று எண்ணீனார். அவரது சக்தியைச் சோதித்துப் பார்க்க மறு நாள் நதியில் இறங்கினார். “நான், நான், நான்”– எவ்வளவு சக்தி உடையவன் என்று எண்ணிய மாத்திரத்தில் அவர் நதிக்கடியில் போய்ச்சேர்ந்தார். பாவம் நீந்தக் கூடத் தெரியாது!

நம்பிக்கை மகத்தான அற்புதங்களைச் சாதிக்கும். அகந்தை மனிதனை அழித்து விடும்”.

அவர் சொன்ன இன்னொரு கதை:

“சில புத்தகங்களைப் படித்து விட்டவுடனே சிலருக்கு அஹம்காரம் (யான், எனது என்னும் செருக்கு) தலைக்கு ஏறி விடுகிறது. ஒரு நாள் நான் காளிகிருஷ்ண தாகூருடன் கடவுள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். உடனே அவர் சொன்னார், “ அதான், எனக்குத் தெரியுமே” என்று. நான் உடனே அவரிடம் சொன்னேன்: டில்லிக்குப் போய்விட்டு வந்தவன் அதைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வானா? ஒரு நல்ல கனவான் நான் தான் பெரிய கனவான் – என்று கூறிக் கொள்கிறாரா?

“கடவுளே! ஒருவனுக்கு அகந்தை வந்து விட்டால் தலைக் கிறுக்கு வந்து விடுகிறது! அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் அன்றோ! தட்சிணேஸ்வரத்தில் கோவில் தோட்டத்தைக் கூட்டிச் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி இருந்தார். அவளுக்கு கொஞ்சம் நகைகள் கிடைத்துவிட்டன. அவ்வளவுதான்! தலை–கால் புரியவில்லை! ஒரு நாள் தோட்டத்தில் சிலர் அந்தப் பெண்மணியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண் அவர்களிடம் வலியப் போய், : ஏய்! கண் தெரியவில்லையா? விலகிப் போங்கடா— என்றாள். தோட்டத்தைக் கூட்டிப் பெருக்கும் பெண்ணுக்கே இவ்வளவு திமிர் என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?”

(ஆதாரம் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதைகள். ஆங்கிலப் புத்தகம்).

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்கும். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடம் எல்லா புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

baba-ramdev-nitin-gadkari

BJP leader Nithin Gadkri bowing to Yoga Guru Baba Ramdev.

தமிழ்ப் புலவன்– தெய்வப் புலவன்– வள்ளுவன் செப்புவதும் அஃதே:

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும் —121

மற்றொரு குறளில்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து –125

பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு செல்வம் போலத் திகழும்!

இது மட்டுமா? நன்றாக நாக்கை அடக்குங்கள் என்று எச்சரிக்கவும் செய்கிறார்: ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்குங்கள்; யா காவாராயினும் நா காக்க= அட! அட்லீஸ்ட் நாக்கையாவது அடக்குங்களேன். ஏன் என்றால் தீயினால் சுட்ட புண் உள் ஆறும், நாவினால் சுட்டதோ வடுப் போல் என்றும் இருக்கும் என்றும் பகர்வார்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற—95

பணிவுன் இனிய சொல்லற்றலும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அவனுக்கு வேறு எந்த அணிகலன்களும் தேவையே இல்லை!

கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதை 16:1 முதல் 3 ஸ்லோகங்களில் 26 தெய்வீக குணஙகளைப் பட்டியல் இடுகிறார். அதில் புறக்கரணங்களை அடக்குதல் (தம:), பணிவு (ஹ்ரீ:/ நாணம்) ஆகிய இரண்டையும் சேர்த்துள்ளார்.

baba- kalam

Ex President of India Abdul Kalam and Sri Sathya Sai Baba.

தமிழ் இலக்கியத்தில் தலை சாய்ந்த நெற்கதிர்களைப் பணிவுக்கு உவமையாக்குவர் புலவர் பெருமக்கள். கதிர்கள் கனம் தாங்காமல் அவைகள் மணப் பெண் போல தலை குனிந்து பணிவுடன் நிற்கும். நற்குடியில் பிறந்த கற்றோரும், செல்வந்தரும் இது போல அடக்கத்துடன் செயல்படுவராம்.

Contact: swami_48@yahoo.com

யார் நல்ல ஆசிரியர்?

raje2
Rajasthan Chief Minister Vasundhara Raje in a village school.

By London Swaminathan

Post No.871 dated 27th February 2014

ஆதிசங்கரர் எழுதிய வினா- விடை ரத்தின மாலை மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம். வடமொழியில் இதன் பெயர் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். குரு பற்றிய கேள்விகளை மட்டும் இன்று காண்போம்.

3.யார் குரு?

உண்மையை உணர்ந்தவர். மாணவர்களின் நலனை எப்பொழுதும் கருதுபவரே உண்மையான ஆசிரியர் / குரு.

அருமையான பதில். மதம் என்பதை மறந்து விட்டாலும் கூட இது சரியே. ஒரு ஆசியருக்கு தான் கற்பிக்க வந்ததை (உண்மையை) அறிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க மாணவர்களின் முனேற்றமே அவர்கள் மனதில் இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் குருவிடத்தில் சரண் அடைந்து உபதேசம் பெற்ற எல்லோரும் குருவின் கடாக்ஷத்தால் முன்னேற்றம் கண்டனர். அவர்கள் ஸ்பர்ச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை என்று மூன்று வகைகளில் அருள் பெற்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது சக்தியை ஸ்பரிச தீட்சை மூலம் சுவாமி விவேகானந்தருக்கு மாற்றினார். அதன் மூலம் அவர் உலகப் புகழ்பெற்றார். இந்து மதமும் புனருத்தாரணம் பெற்றது.

சீடர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்தப் பாவங்கள் அனைத்தும் குருவையே சேரும்.

குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.

இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
— திருமூலரின் திருமந்திரம்

shantiniketan

Shantineketan, Calcutta

ஆதி சங்கரர் எடுத்துக் கொள்ளும் அடுத்த கேள்வி

9.எது விஷம்?
குருவின் கட்டளையை மீறுதல்.

ஒருவரை நம்பி குருவாக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவர் மீது பரிபூரண நம்பிக்கை வேண்டும். அவரது உத்தரவை மீறக்கூடாது. அப்படி மீறுவது விஷத்துக்கு ஒப்பானது. குருவை நிந்தித்தல் அதற்கும் மேலான ஆபத்து உடையது.

சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது
குருவின் கட்டளையை மீறாததால் ஞானம் பெற்றவ சத்யகாமன் கதை அது.

குரு, அவனுக்கு இட்ட கட்டளை நான் கொடுத்த மாடுகளின் எண்ணிக்கை ஆயிரமாகப் பெருகும் வரை வராதே என்பதுதான். அவனும் அதையே மனதில் கொண்டு வேறு எதையும் சிந்திக்காமல் மாடு மேய்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான். ஆயிரம் மாடுகள் ஆவதற்குள் அவனுக்குப் பிரம்ம ஞானம் வந்துவிட்டது குருவே அவனைப் பார்த்து நீ ஞானியாக விளங்குகிறாயே உனக்கு யார் உபதேசம் செய்தார்? என்று கேட்கிறார். குருவின் கட்டளையை மீறாமையும், சிரத்தையும், நம்பிக்கையும் அவனுக்கு ஆன்ம ஞானம் ஏற்பட உதவிற்று.

‘’செய்யும் தொழிலே தெய்வம்’’– என்பது எவ்வளவு உண்மை! மாடு மேய்த்தாலும் குருவின் சொற்களில் இருந்த நம்பிக்கை, பிரம்ம ஞானத்தைக் கொடுத்துவிட்டது. எங்கு சிரத்தை இருக்கிறதோ அங்கு ஞானம் பிறக்கும் என்றும் கொள்ளலாம்.

School under the tree boys 2
School in Africa.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன, செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் விலகிப் போ, விலகிப் போ என்று கத்தினான். அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும் என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

பரசுராமனிடம் பொய் சொல்லி வில்வித்தை கற்ற கர்ணனுக்கு நேர்ந்த கதையையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.

Gautama Buddha Park,Noida

School under a tree at Gautama Buddha Park, Noida, India.

Contact swami_48@yahoo.com

Paripādal : Suitable for Dance & Music

tamil puu parithal

Post No 862 Date: 24 February 2014

By Dr R Nagaswamy

Parpādal is a form poetry best suited as a musical composition mainly for dance along with another poetic form “Kali”. This is defined by “Tolkāppiyam ” in the chapter on “Ahattinai Iyal”, sutra 53.

According to the sutra, “the songs suited for enactment both in dance tradition and in worldly tradition ( Nātya dharmi and Loka dharmi) are to be either in Kali or Paripādal format, and this is applicable for Aham themes”. Naccinārkkiniyār, the commentator holds that these two formats ( Kali and Paripādal ) were meant for the five sub divisions of the Aham, ( Kuruncii, Mullai, Marutam, Neiḍal and Pālai) , may not come for other themes . They may be found in some rare instances in the “Kaikkilai” and “Peruntinai” songs which are also subdivisions of Aham. Kali format is confined to Aham themes but Pari pādal may be employed in songs on Gods and Aham themes. So the poems meant for “abhinaya” are found in songs of Kali and Parpādal form for Aham themes. This clearly indicates that all Kali songs are meant for dance.The other poetic formats like, Āciriyam, Venpā, and Vanci may be used for for both Aham and Puram themes.

There are two types of vocal accompaniment for dramatic enactment. One is prose dialogue and the other is vocal music. The first is generally delivered by the actor and the second is generally by background music. The first is generally worldly actions and the second includes both dance modes and worldly actions. The sutra here seems to be relating to the later especially with reference to the background of musical songs. This is evident from the usage in the sutra ” pādal cānra Pulaneri valakkam.” Pulaneri valakkam stands for abhinaya that relates both to visual and audio perceptions meaning dance traditions. ( dramatic art was a branch of dance tradition in ancient times.) So Pulaneri valakkam relates to both visual and vocal actions. Further this sutra says ” pādal cānra” meaning relating to music, in other words musically rendered actions. The sutra therefore relates to musical composition only and that too for dance recitals. In the sense Kali songs are exclusively suited for the five sub divisions of Aham and also for Kaikkilai and Peruntinai, for realizing Śringāra rasa. Paripādal is suited for Aham themes and can also be dedicated to praise of gods as prayer songs. However both the poetic formats are essentially musical compositions for dance -Nātaka valakku and Ulakiyal valakku.

This sutra would clearly demonstrate that both “Kalittokai” anthology and “Paripādal” anthology were dance compositions

Among the present Paripādal collections that have survived we have

5 songs on Vishnu,
9 songs on Murugan and the rest
8 are on Vaikai River.
The first 14 are therefore Devapāni songs falling under prayer songs and the rest are Aham poems on Śringāra.

The Vaikai songs nos 6, 7, 10′,11, 12, and 22 centre around dance accompanied by vocal and instrumental music like Yāz, flute, Mridangam , and Murasu or Mulavu forming a complete troupe of musicians for dance which indicate that they were meant to be danced. The other two poems on Vaikai also refer to dance or music but not with the whole troupe. Evidently all these Vaikai songs are clearly intended for dance. Further it is seen that even the other “Paripādal” poems, though are songs of prayers on gods especially the ones on Murugan, include Sringāra elements. These songs give at the beginning, and end praises of the god, his prowess, his grace etc. They introduce heroes, heroines, and public girls and their different amorous sports mainly with out mentioning the name of either the heroes or other women, in the spirit of Aham tradition and are essentially songs on “Kāmam” theme. So it is evident that the rules of Tolkāppiyam grammar have been followed by these surviving Paripādal songs.

It is well known that Kalittokai songs of sangam anthology were also meant for dance by the very first poems. These establish that the Sangam songs were connected with dance creations.

Dr R Nagaswamy has kindly permitted me to publish the above article. For more of his scholarly articles,
please visit http://www.tamilartsacademy.com

Recent Additions in tamilartsacademy.com

Wealth for world to go (Vol 30)
Porpū Vilaiyum nan Nādu
A king who performed two Velvis
Death is certain; so is rebirth
Don’t insult Brahmins
An analysis of ancient Tamil names
Vedic sacrifices performed by a Pāndya king

Tolkāppiyar on translation (Vol 29)
A Forest Dweller
சங்கப்புலவரின் துணிச்சல்
Ain-kurunuru; Five hundred small poems
தமிழில் முதற்பாட்டு
Praise of Veda by AvvaiyārKaḷa Vēḷvi

Sangam Literature
Srī Rudram – Śiva Śivā (Tamil Arts Vol 28)
Evidence on Dating Sangam Tamil Literature (Tamil Arts Vol 27)
Tamil Sangam (Tamil Arts Vol 27)
Kodunthirappalli (Palakkadu) Agraharam
Lakshmi Narayana Puram (Slide Show)
Brahma Deyam (New)
A Brahmadeya gift by Pāṇdya Arikesari (New)
Pandya Arikesari and Pandikkovai
(Related Article)Sakti Ratham –
A pilgrimage to a Dalit procession (Slideshow)
Dating Sri Bhagavata Puranam
Ernakulattu Appan temple,
Journal Vol 24
Learn Inscriptions
The Vedic Roots of Hindu Iconography
Mirror of Tamil and Sanskrit
Email: nagaswamy@tamilartsacademy.com

Reference to Brahmā in Puranānūru

brahma,1850

Post No. 860 Date : 23 February 2014

by Dr.R.Nāgaswamy

A verse in Puranānūru collection of Tamil literature mentions Brahmā, the Creator. That Śiva and Vishnu were mentioned in Puram no 56 , is well known but that Brahmā is also well known in Sangam age is not so much appreciated. Puram verse number 194 sung by Pakkudukkai Nan ganiyār sang the verse which reads:-

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணிய பிரிந்தோர்
பைதல் உண் கண்பணி வார் புறைப்ப
படைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே

புற நானூறு 194 – பெரும் காஞ்சி’
பக்குடுக்கை நன்கணியார் பாடியது

According to the ancient commentator the word “padaippon” in the verse refers to the Four faced (Nānmukhan) which is undoubtedly a reference to Brahmā the creator. The commentary says, from one house emanates the sound of drum announcing the death of a person and from another house the sound of marriage drum announcing the marriage of a couple. From the later house rises the sweet smell of flower garlands worn by the newly married couple mating, while from the former house the eyes of women who lost their husband in death, shed torrential tears of sorrow. It is indeed the creation of that un cultured Brahmā who created such an awful nature. Cruel is this world. Those who understand the nature of this world should ponder and resort to acts that confer salvation.

This shows that the main import of the poem is not to pass any judgement on Brahmā but to say the nature has both good life and death side by side and there fore one should lead a virtuous life.

The Puranānūru verses are assigned to the beginning of the Current Era. This would show by the turn if the Current era the Tamil people were fully aware of the concept of Trinity of Hindu gods. We have already noted that the Sangam age people of Tamilnad were worshippers of Brahmā, Vishnu,Siva, Indra, Varuna,Subrahmanya and the other thirty three group of gods ( mupattu mukkodi devatās) seen in Pari padal, is sufficient to show the Society was Hindu in nature.

Any view propounded contrary to this is distorted, refutes the available facts and is a political gimmick, that deserves to be rejected. Please also note that this short poem of seven lines uses the following Sanskrit words like pāni, and ulakam showing the integration of the northern with the southern was complete.

Also please note the name of the poet who was a “gani” was in all probability a Jain” it is also known that the earliest known inscription in Tamilnadu assigned to first cent BCE refers to a gani as Kani. The phase of so called Tamil of pre Sanskritisation age does not exist. It can only be considered a deliberate twist of the mischievous.

Email: nagaswamy@tamilartsacademy.com

I have used the picture from another source. Dr R Nagaswamy has given me permission to use his article.
For more articles please visit http://www.tamilartsacademy.com

திருவிளையாடல் புராணம் உண்மையே!

tv sirpam2

Part 1 of Thiru Vilaiyadal Puranam by s. swaminathan

எழுதியவர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 855 தேதி 21 February 2014

பெரும்பற்றப்புலியூரார் (13 ஆம் நூற்றாண்டு) என்ற கவிஞரும் அவருக்குப்பின் வந்த பரஞ்சோதி முனிவர் (17 ஆம் நூற்றாண்டு) என்ற கவிஞரும் இரண்டு திருவிளையாடல் புராணங்களை எழுதினர். இவைகளை ஹாலாஸ்ய மஹாத்மியம் என்றும் சிவ லீலா வர்ணம் என்றும் சம்ஸ்கிருதத்தில் வேறு இரு வடமொழிக் கவிஞர்கள் மொழிபெயர்த்தனர். இது மதுரையில் சிவபெருமான் நடத்திய 64 லீலைகளை புரணக் கதை ரூபத்தில் வருணிக்கின்றன. இதில் பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் வருகின்றன. அவை எல்லாம் வடமொழிப் பெயர்களாக இருப்பதாலும் அந்தப் பெயர்களில் கல்வெட்டுகள் கிடைக்காததாலும் இது உண்மை வரலாறா? கட்டுக கதையா? என்று ஐயப்பாடு நிலவி வந்தது. ஆனால் இது உண்மை வரலாறு என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கின்றன.

பாண்டியர் செப்பேடுகளிலும் சிலப்பதிகாரம், கல்லாடம் போன்ற நூல்களிலும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் (குறிப்பிட்ட மன்னர்களின் பெயர்கள் இல்லாமல்) குரிப்பிடப்படுவதால் இவை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபலமாகிவிட்டதை அறிய முடிகிறது.

மதுரைக்கு வந்த திரு ஞான சம்பந்தர் பல அற்புதங்களைப் புரிந்து கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கியது தேவாரப் பாடல்களாலும் உறுதி செய்யப்படுகிறது. மதுரையிலும் மதுரையைச் சுற்றிலும் ஊர்ப்பெயர்கள் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. இவையெல்லாம் பொய்க் கதைகளால் உருவாக முடியாது. அப்படி உருவானாலும் காலத்தைக் கடந்து நிற்கமுடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழன் செய்த தவப் பயன் அப்பர் பாடிய தேவாரப் பாடல்களாகும். தருமி, பொற்கிழி வாங்கிய வரலாறும், நரியைப் பரியாக்கிய வரலாறும் அப்பரின் தேவாரப் பாடல்களில் வருகிறது.
tv sirpam3

Picture of Tiruvilayadal from Madurai Sri Meenakshi Temple.

திருவிளையாடல் புராணமென்ற திரைப்படம் சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பால் பெரிய வெற்றி அடைந்தது. அதிலுள்ள அருமையான வசனங்களும் ஏ.பி நாகராஜனின் டைரக்சனும் மேலும் மெருகூட்டின. இதிலுள்ள கதைகளுக்கு மதுரையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அன்னக் குழி மண்டபம், மேங்காட்டுப் பொட்டல் (மெய் காட்டிய), கால் மாறிய நடராஜர் உள்ள வெள்ளியம்பலம், புட்டுத் தோப்பு — இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் கட்டுரையாளர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் வசித்ததால் ஆண்டு முழுதும் நடக்கும் திருவிளையாடல் திருவிழாக்களை நேரில் கண்டு ரசித்ததுண்டு.

வளையல் விற்ற திருநாளன்று வளையல் கொடுப்பார்கள். புட்டுத் திருவிழா அன்று புட்டு கிடைக்கும். நரியைப் பரியாக்கிய திருநாளன்று உண்மையான நரியைக் கொண்டுவருவார்கள். அதைப் பார்க்க கூட்டமாகச் செல்வோம். திக்கு விஜயம் அன்று மீனாட்சியும் சிவனும் நான்கு திக்குக்கும் பல்லக்கில் ஓட்டம் ஓட்டமாகச் செல்வார்கள். பல்லக்குகள் பின்னால் நாங்களும் ஓடுவோம். இவை எல்லாம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டும் மாறிக் கொண்டும் வருகின்றன. கால வெள்ளத்தை யாரால் தடுக்க முடியும்?

ther sirpangkal from potramarai

Wooden sculptures from the chariot (Ther); from Potramarai book.

இந்தப் புராணத்தில் கூறப்படும் பாண்டிய மன்னர்கள் உண்மையிலேயே மதுரையை அரசாண்டார்கள் என்றால் அது எந்தக் காலத்தில் என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டு திருவிளையாடல் புராணங்களுக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும் பரஞ்சோதி முனிவரின் புராணமே மிகவும் பிரபலமானது. அதிலுள்ள நிகழ்ச்சிகளின் வரிசையும் மன்னர்களின் வரிசையும் உண்மையா என்று தெரியாது. ஆயினும் அதில் வரும் மாடக் கூடல், தாமரை வடிவில் அமைந்த நகரின் நடுவில் கோவில் இருந்தது ஆகிய செய்திகள் கலித்தொகை, பரிபாடல் ஆகிய சங்க இலக்கிய நூல்களில் இருக்கின்றன.

மதுரையுடன் தமிழ் மொழிக்குள்ள தொடர்பும் ஐம்பது சங்கப் புலவர்களால் தெரிய வருகிறது. மேலும் ஒன்பதாம் நூற்றாண்டு நூலான கல்லாடத்தில் 30க்கும் மேலான லீலைகள் வருகின்றன. இந்த லீலைகள் சார சமுச்சயம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. ஆக இவை அனைத்தும் கட்டாயம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்தது தெரிகிறது. மேலும் களப்பிரர் ஆட்சிக்குப்பின் வந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வரிசையாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் கிடைத்துவிட்டதால் அதற்கு முன் தான் இவை நடந்திருக்க முடியும்.

மீனாட்சி ஆட்சி எப்போது நடந்தது?

மீனாட்சி பற்றிய மறைமுகக் குறிப்பு கிரேக்க தூதரான மெகஸ்தனீஸ் (கி.மு. 330-290) எழுதிய இண்டிகா என்ற நூலில் இருந்து கிடைக்கிறது. பண்டேயா என்ற தெற்கத்திய தேசத்தை ஒரு பெண் அரசி ஆண்டதாக அவன் எழுதியுள்ளான். ஆக குறைந்தது 2300 ஆண்டுகளுக்கு முன் மீனாட்சி ஆட்சி புரிந்தது இதில் இருந்து தெரிகிறது. ஆக மலயத்துவஜ பாண்டியன் கி.மு நாலாம் நூற்றாண்டில் ஆண்டிருக்க வேண்டும். இதை மஹாவம்சமும் அதரிக்கிறது. இலங்கையில் வந்து இறங்கிய ஒரிஸ்ஸா மன்னன் விஜயனுக்கு ராஜ வம்ச பெண்கள் இலங்கையில் இல்லாததால் அவனுக்கும் அவனது அமைச்சர்களுக்கும் பெண் கொடுத்து உதவியது பாண்டிய நாடே! இது நடந்தது கி.மு 543 வாக்கில்( காண்க: மஹா வம்சம்)

மதுரையை அரசாண்ட மீனாட்சியும் வடக்கத்திய தொடர்புடைய பெண்மணியாக இருக்கக்கூடும். மலத்துவஜனின் மனைவியான காஞ்சன மாலா (மீனாட்சியின் தாய்) சூரிய குல வேந்தன் சூரசேனனின் மகள். சூரிய குலம் என்பது சோழ தேசத்தைக் குறித்தாலும் கூட, அவர்களும் வடக்கத்திய மன்னர்களே என்பதை “சோழர்கள் தமிழர்களா?” என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன். மேலும் பாண்டியர்—பாண்டவர் தொடர்புக்கும் சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையால் மெகஸ்தனீஸ் சொல்லுவது உண்மையே என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதை எல்லாம் ராமயாணம், மஹா பாரதம், காத்யாயனர் (கி.மு நாலாம் நூற்றாண்டு) நூல், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டுகள், மதுரையைச் சுற்றியுள்ள பிராமி கல்வெட்டுகள், காளிதாசரின் ரகுவம்சம் ஆகியன உறுதிப் படுத்துகின்றன.

ther sirpangkal from potramarai3

தருமி பொற்கிழி கதை

நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

திருவிளையாடல் சினிமாவில் மிகவும் மறக்க முடியாத லீலை நாகேஷும் சிவாஜியும் சேர்ந்து நடித்த தருமி பொற்கிழி கதையாகும். இதை அப்பர் பெருமான் தன் பாட்டில் கூறுவதும் சிவன் எழுதிக் கொடுத்த பாட்டு குறுந்தொகை என்னும் சங்க நூலில் இருப்பதும் இதன் காலத்தை ஓரளவுக்குக் காட்டிவிடுகிறது. அப்பரின் காலம் மஹேந்திர பல்லவனின் காலம் (கி.பி 600- 630). ஆக கி. பி. 600-க்கு முன்னர்தான் தருமி கதை நடந்திருக்க வேண்டும். சங்க இலக்கியம் முழுதும் கி.பி.300க்கு முன் எழுதப்பட்டதாக பொதுவான கருத்து இருப்பதால் சிவன் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை கவிதையும் அப்போதுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆக, தருமி கதையின் காலத்தை கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் வைக்கலாம்.

நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

மாணிக்க வாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்ல என்பதற்கு நரி பரியாக்கிய குறிப்பு உதவுகிறது. நரியைப் பரியாக்கிய நிகழ்ச்சியையும் அப்பர் தேவாரத்தில் காண்கிறோம். ஆக, மாணிக்கவாசகரும் அப்பர், சம்பந்தர் காலத்துக்கு முந்தையவரே. (இதற்கு மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அதைத் தனியாக எழுதுவேன்).

தருமி காலத்தில் அரசாண்ட மன்னன் செண்பக பாண்டியன். அவன் தான் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்று ஆராய, அது பெரிய மோதலில் முடிந்தது. அதில் நக்கீரரும் சம்பந்தப் பட்டிருப்பதால் கட்டாயம் முதல் மூன்று நூற்றாண்டுக்குள்தான் நடந்திருக்க வேண்டும். தருமி சம்பவத்தைத் தெள்ளத் தெளிவாக அப்பர் குறிப்பிடுவதால் மஹேந்திர பல்லவன் காலத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர்தான் இது நடந்திருக்கவேண்டும்.

மேலும் சில செய்திகள்

சிலப்பதிகாரத்தில் வன்னி மரம் – லிங்கம் கதை இருக்கிறது. கடல் மேல் வேல் விட்ட கதை, மேகம் சிறை செய்யப்பட்ட நான்மாடக் கூடல் கதைகளும் உள்ளன. இந்தக் காவியம், குறள், தொல்காப்பியம் ஆகிய மூன்றும் ஐந்தாம் நூற்றண்டில் எழுந்தவை என்பது என் கணிப்பு. முன்னரே எழுதியுள்ளேன் (காண்க ‘தொல்காப்பியம் காலம் தவறு’).

பராந்தக வீர நாராயணனின் ( 895—907; ஒன்பதாம் நூற்றாண்டு) கல்வெட்டிலும் இச் செய்திகள் உள்ளன.

குலசேகர பாண்டியன் காலத்தில் கீரந்தை சம்பவம் நடந்தது. அவன் தான் பொற்கை பாண்டியன். இந்தக் கதையும் சிலப்பதிகாரத்தில் உள்ளதால் எல்லாம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்தவை.

சம்ஸ்கிருதப் பெயர்கள் இருப்பதால் இவர்கள் முற்கால மன்னர்களாகவே இருக்க வேண்டும். கடலில் மூழ்கிய தென்மதுரை மன்னர் பெயர்களிலும் மாகீர்த்தி முதலிய வடமொழிப் பெயர்கள் உண்டு. தென் கன்னடத்தை ஆண்ட ஆலூபா மன்னர்கள் பாண்டியருடன் தொடர்புடையவர்கள். அவர்களில் தனஞ்ஜயன், சித்திரவாகனன் முதலிய மஹா பாரதப் பெயர்கள் பாண்டியர் பெயர்களாக வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*மதுரைப் பேராலவாயார் அகநானூற்றில் நெடுஞ்செழியன் ஆண்ட மதுரையைப் பாடுகையில் மலை போன்ற மதில்கள் பற்றிப் பாடுகிறார்.

*சேரமான் பெருமாள் நாயனார்,சுந்தரர், பாண பத்திரர், அவ்வையார் ஆகியோர் சம காலத்தவர்கள். (சங்க கால அவ்வை வேறு)

*ஸ்ரீமாறன் என்ற பாண்டிய மன்னனின் சம்ஸ்கிருத பெயர் வியட்னாமில் இரண்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது.

*ப்ளினி (கி.பி.75) கொற்கையிலிருந்து மதுரைக்கு தலை நகர் மாறியதைக் குறிப்பிடுகிறார். கொற்கை= கபாடபுரம்?

மேலும் மூர்த்திநாயனார் போன்ற களப்பிரர் கால மன்னர்களை பெரியபுராணத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் சம்ஸ்கிருத பெயருடைய இவர் பற்றி வரலாறு பூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை. இருந்தபோதிலும் இது உண்மை என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

தி வி புராணத்தில் உக்கிரகுமாரன், வீரபாண்டியன் வரலாறுகள்: —இதில் கடற்கோள், வரட்சி, இமயம் வரை பயணம் ஆகியன இருப்பதால் இவைகளை உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் அதிகம் கானப்படும் பாம்புக் கடி பற்றி பல குறிப்புகள் வருகின்றன. ஒரு பாண்டியன் புலி அடித்து இறந்தது, மற்றொரு பாண்டியன் காமப் பிசாசாக வாழ்ந்தது ஆகிய எல்லாம் உண்மை வரலாற்றை எழுதுவார் போலவே எழுதப்பட்டுள்ளன. மற்ற பாண்டிய மன்னர்களின் குணாதிசயங்களை, காளிதாசன் சூரிய குல மன்னர்களின் பெருமைகளை வருணிப்பதுபோலவே பரஞ்சோதியாரும் வருணித்துள்ளார்.

ஒரு தனி மகாநாடு கூட்டிப் பொறுமையாக உட்கார்ந்து ஆராய்ந்தோமானால் மேலும் பல உண்மைகளை வெளிக் கொணரலாம்.

(தி.வி.புராணம் மதுரை, கூடல், ஆலவாய் என்ற வரிசையில் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் காலமுறை வளர்ச்சியைக் குறிக்கிறதா என்றும் காணவேண்டும் வங்கியசேகரன் காலத்தில் மதுரை நகரம் ஆலவாய் ஆகியது. மதுரைப் பேராலவாயார் என்ற புலவர் சங்க நூல்களில் காணப்படுகிறார்.)

Continued in part-2

(Pictures are from the Book Potramarai and Temple Souvenirs;thanks)

தொடர்பு முகவரி : swami_48@yhaoo.com