சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)

problems

சிதையும், சிந்தையும்; சுவையான பாடல் (Post No.2828)

 

Article written by London swaminathan

 

Date: 21 May 2016

 

Post No. 2828

 

Time uploaded in London :–  7-34 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bee happy

நம் எல்லோருக்கும் தெரிந்த சொற்கள் சிதை, சிந்தை; இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள்; இவைகளை வைத்து ஒரு கவிஞன் அழகான பாடல் யாத்துள்ளான்.

சிதைத் தீ, ஒருவர் இறந்த பின்னர் வெறும் உடலை மட்டும்தான் எரிக்கும்; சிந்தனையில் சோகமிருந்தால் அது நீங்கள் உயிருடன் இருக்கும்போதே உங்களை எரித்துக் கொன்றுவிடும்!

சிதா சிந்தா சமாக்ஞேயா சிந்தா வை பிந்துநாதிகா

சிதா தஹதி நிர்ஜீவம், சிந்தா தஹதி சஜீவகம்

பொருள்:–

சிதை, சிந்தனை பற்றி அறிந்துகொள்ளுங்கள்; இரண்டும் அழிக்கக்கூடியதே. ஆனால் சிதைத் தீயைவிட, சிந்தனை ஒரு சொட்டு (கொஞ்சம்) அதிகம்தான். ஏனெனில் சிதைத் தீ, செத்த பிறகு நம்மை எரிக்கும்; சிந்தனையோ/ கவலையோ உயிருள்ளபோதே நம்மை அழிக்கும்!

 

கொன்றழிக்கும் கவலை: பாரதி

இப்போது இதை பாரதி பாடலுடன் ஒப்பிடுவோம்:–

 

சென்றது இனி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்

தீமை எல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.

 

இதற்குப் பொருள் எழுதத் தேவையே இல்லை; தூய தமிழ்; எளிய தமிழ்; போனதைப் பற்றி கவலைப் படாதே; ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறந்த்து போல எண்ணி அனுபவி (பழைய கஷ்டங்களை எண்ணி கவலைப் படாதே; பயப்படாதே)

 

கவலை – ஒரு பகைவன்!

 

மொய்க்கும் கவலைப் பகை போக்கி

முன்னோன் அருளைத் துணையாக்கி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி

உடலை இரும்புக் கிணையாக்கி

பொய்க்கும் கலியை நான் கொன்று

பூலோகத்தார் கண் முன்னே

மொய்க்கும் கிருதயுகத்தினையே

கொணர்வேன் தெய்வ விதியிஃதே.

positive-quotes-61

பாரதி பாடல் முழுதும், வேதங்களைப் போல பாஸிட்டிவ்/ ஆக்கபூர்வ எண்ணங்களே இருக்கும்.

கவலையை ஒழித்து, உள்ளத்தையும் உடலையும் எஃகு போல வலிமைப் படுத்தி, கிருத யுகத்தையே உண்டாக்குவேன் என்று சொல்கிறான் பாரதி. அவன் உடல் எரிக்கப்பட்டுவிட்டது; ஆனால் அவனது சொற்கள் நமக்கு ஒளியூட்டுகின்றன.

 

சங்கடம் வந்தால்

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட

சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;

சக்தி சக்தி சக்தியென்று சொல்லி – அவள்

சந்நிதியிலே தொழுது நில்லு

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு

சங்கடம் வந்தால் இரண்டு கூறு;

சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்

தண்ணருளென்றே மனது தேறு.

 

கவலையைக் கொல்; அப்படியும் சங்கடம் நீடித்தால், ஏதோ ஒரு நன்மைக்காகத்தான் இதுவும் என்று உணருங்கள் என்கிறான்.

 thinking

சஞ்சலக் குரங்குகள்

கவலை, யோஜனை, பயம் ஆகியன குரங்குகள் போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தாவித்தாவி நம்மை கலக்கும் என்பதால்,கலைமகளை வேண்டுதல் என்ற பாடலில் ‘சஞ்சலக் குரங்குகள்’ (மனம் ஒரு குரங்கு) என்ற அருமையான பதப் பிரயோகம் செய்கிறான். அவன் ஒரு சொல் தச்சன்!

 

கவலையைக் கொல்லுவோம்; எல்லா நலன்களையும் வெல்லுவோம்; அனைவருக்கும் இதைச் சொல்லுவோம்!

 

–சுபம்–

 

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! (Post No.2827)

biography gurdjief

Written  BY S NAGARAJAN

Date: 21 May 2016

 

Post No. 2827

 

 

Time uploaded in London :–  6-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

20-5-16  பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளீயான கட்டுரை

 

 

 Book Gurdjief

 

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்!

ச.நாகராஜன்

 

 

“வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் முடிவற்று தொடரும். ஒன்று மனிதனின் முட்டாள் தனம், இரண்டாவது இறைவனின் கருணை!”

–  குர்ட்ஜியெஃப்

 

 

“மனிதர்களுக்கு நம்பமுடியாதபடி அளப்பரிய ஆற்றல் உண்டு. ஒவ்வொருவருக்கும் இந்த ஆற்றல் உண்டு என்ற போதிலும் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்”

 

 

என்று இப்படி ஒரு கொள்கையை  முன் வைத்தவர் அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப். (GURDJIEFF :தோற்றம் 13-1-1866 மறைவு 29-10-1949)

 

 

சுவை நிறைந்த ஏராளமான சம்பவங்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை. தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவரைப் பற்றி அதிகமாக எழுதப்படவில்லை. ஆகவே பொதுவாக மக்களிடையே அறியப்படாதவர்.

 

ஆனால் மேலை நாடுகளில் இந்த யோகியின் அருமையை அறிந்தோர் ஏராளம் உண்டு.

ஜான் ஜி.பென்னட் (தோற்றம் 8-6-1897 மறைவு 13-12-1974) என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கணித மேதை. பெரிய விஞ்ஞானி. தொழில்துறை நிபுணர்.எழுத்தாளர். உளவியல் துறையில் சிறந்த புத்தகங்களை எழுதியவர்.

 

சிறந்த அறிவியல்  மனப்பான்மை கொண்ட இவர் ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்பைக் கண்டு அதிசயித்தார். அவருடனேயே இருந்து சிஷ்யராக மாறி அவர் காட்டிய வழியில் புதிய் ஆற்றலைப் பெற்றார்.

 

குர்ட்ஜியெஃப் பாரிஸுக்கு அருகில் இருந்த ப்ரியூர் என்ற இடத்தில் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹார்மோனியஸ் டெவலப்மெண்ட் ஆஃப் மேன் (Institue for the Harmonious development of man) என்ற ஒரு நிலையத்தை நடத்தி வந்தார்.

1923ஆம் ஆண்டு ஒரு நாள் அவரைக் காண பென்னட் வந்து சேர்ந்தார்.

 

 

பென்னட்டிற்கு ஒரு பெரிய பிரச்சினை இருந்தது.  நிரந்தரமான வயிற்றுப் போக்கு வியாதியால் அவர் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார்.ஒவ்வொரு நாள் காலை எழுந்திருக்கும் போதும் முந்தைய நாளை விட அதிக பலஹீனமாக ஆகியிருப்பதை அவர் உணர்ந்தார். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலைக்கு  வந்தார்.

ஆனால் ஒரு நாள் காலை படுக்கையிலேயே படுத்திருக்க் வேண்டும் என்று அவர் நினைத்த போது அந்த நினைப்பையும் மீறி அவர் எழுந்தார்.நன்கு உடைகளை அணிந்தார். ஏதோ ஒரு பெரும் சக்தி தன் மீது இறங்கியதைப் போல அவர் உணர்ந்தார்.

காலையில் ந்டைப் பயிற்சிக்குப் பின் அதிக பலஹீனமாக இருப்பது போல உணர்ந்தாலும் கூட நேராக குர்ட்ஜியெஃப் நடத்தி வந்த நடன வகுப்புக்கு வந்து சேர்ந்தார்.

 

அந்த நடன வகுப்போ அதிக சிக்கலான, நளினமான அசைவுகளைக் கொண்ட நடனத்தைக் கற்பிக்கும் ஒரு வகுப்பு. அதில் மிக அதிகமான கவனக்குவிப்பும் அதிக உடல் வலிமையும் தேவை.

 

Gurdjieff31

நடனம் ஆரம்பமானது. தன்னிடம் ஒரு சக்தி வந்திருப்பதை உணர்ந்த பென்னட் நடனம் ஆட ஆரம்பித்தார். அன்று குர்ட்ஜியெஃப் புதிய அபிநயங்களைக் கற்பித்தார். மற்ற மாணவர்களோ அதைப் பின்பற்ற முடியாமல் நின்று விட்டனர். பென்னட்டின் கண்களைத் தீவிரமாக குர்ட்ஜியெஃப் பார்த்தார்.

பென்னட் அதீத சக்தியுடன் ஆடலானார்.

 

நிண்ட நடனப் பயிற்சி  முடிந்தது. தனக்குள் எப்ப்டி இப்படி ஒரு வலிமை வந்து சேர்ந்தது என்று வியந்த பென்னட் தன் சக்தியைச் சோதித்துப் பார்க்க விரும்பி ஒரு மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு குழியைத் தோண்ட ஆரம்பித்தார். சாதாரணமாக அவரால் இரண்டு நிமிடங்கள் கூட அந்தக் குழியைத் தோண்டியிருக்க முடியாது. ஆனால் அன்றோ        கடுமையான வெயிலிலும் கூட அவர் தொடர்ந்து ஒரு மணி நேரம் குழியை வெட்டிக் கொண்டே இருந்தார். பின்னர் அருகிலிருந்த ஒரு காட்டினுள் நுழைந்தார். அங்கே அவர் குர்ட்ஜியெஃப்பைச் சந்தித்தார்.

 

 

எந்த ஒரு பீடிகையும் இன்றி குர்ட்ஜியெஃப் பல்வேறு விதமான சக்திகளைப் பற்றி பென்னட்டுக்குக் கூறலானார்.

“ஒரு மனிதன் ஆற்றலுடன் இருக்க ஒரு விதமான சக்தி வேண்டும். அதை உயரிய உணர்ச்சி ஆற்றல் (higher emotional energy) என்று  அழைக்கலாம். இந்த பிரம்மாண்டமான சக்தியுடன் உலகில் சில பேர்களே இனைக்கப்பட்டுள்ளனர்.அகண்டாகாரமான அந்த சக்தித் தேக்கம் மிக மிகப் பெரியது” என்றார் அவர்.

 

இதன் மூலமாக் பென்னட்டுக்குத் தானும் அந்த சக்தி தேக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்ததோடு தனது சக்தியைச் சிறிது பென்னட்டுக்கும் கொடுத்திருப்பதை அவர் குறிப்பால் உணர்த்தினார்.

 

 

பென்னட் இன்னும் கொஞ்ச தூரம் அடர்ந்த காட்டினுள் சென்றார்.

நான் இப்போது வியப்படையப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டார். அவ்வளவு தான், அங்கிருந்த மரம் ஒவ்வொன்றும் பெரும் வியப்புகுரிய ஒன்றாக மாறி இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் காட்டை விட்டு வெளியே போக முடியாது என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

 

 

பின்னர் பயப்படுவதாக அவர் நினைத்தார். அவ்வளவு தான், நானா திசையிலிருந்தும் அவரைப் பயமுறுத்தும் பல்வேறு தெரியாத தீய சக்திகள் அவர் மீது பாய்ந்தன.

திகைத்துப் போன அவர் சந்தோஷம் என்பதை நினைக்கவே உடலெல்லாம் புல்லிருக்கும் விதத்தில் சந்தோஷம் நிரம்பியது.

பிறகு அன்பு என்பதை அவர் நினைக்க உலகமே அன்பு மயமாகத் தோன்றியது. இந்த அன்பிலிருந்து ஒருகாலத்திலும் தான் விடுபட முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

 

 

இப்படிப்பட்ட அதிசய உணர்வுகள் வேண்ட்வே வேண்டாம் என்று அவர் நினைக்க அவரது அமானுஷய சக்தி அகன்று சாதாரண நிலைக்கு அவர் வந்தார்.

 

எப்படி குர்ட்ஜியெஃப்  அவருக்கு இப்படி ஒரு அபரிமிதமான சக்தியை அளித்தார்?

இது ஒன்றும் அதிசயம் இல்லை. யார் வேண்டுமானாலும் இப்படி ஒரு சக்தியை எல்லயற்ற சக்தித் தேக்கத்திலிருந்து பெறலாம் என்பதே குர்ட்ஜியெஃப்பின் கொள்கை.

 

உலகின் பிரபல விஞ்ஞானியும் உளவியலாளருமான வில்லியம் ஜேம்ஸும் இது பற்றிக் கூறி மனிதனின் ஆற்றல் அளப்பரியது என்று சொல்லி இருக்கிறார்.

 

பென்னட் வாழ்நாள் முழுவதும் குர்ட்ஜியெஃப்பை நேசித்தார். மதித்தார்.

 

abdulkalam

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரெஞ்சு கினியாவில் உள்ள கௌரவ் என்ற இடத்திலிருந்து இன்சாட் – 4 B சாடலைட் ஏவப்படுவதை மேற்பார்வையிட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ஐஎஸ் ஆர் ஓவிலிருந்து இந்திய விஞ்ஞானிகள் பலர் சென்றனர். சோதனையை முடித்து விட்டு இந்தியா திரும்ப அவர்கள் பாரிஸில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்திற்கு வந்தனர்.

 

 

அங்கு அவர்களை விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார். பாஸ்போர்ட்டுகளை செக் செய்த பின்னர் வழக்கமாக அவர்கள் செல்லும் பயணிகளுக்கான இருக்கைகளை நோக்கி அவர்கள் செல்ல முயன்ற போது அந்த அதிகாரி அவர்களைத் தடுத்தார். என் கூட வாருங்கள் என்றார் அவர். விஞ்ஞானிகள் பயந்து போனார்கள். ஏதாவது பிரச்சினையா என்று பயத்துடன் வினவினர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை! எனக்குக் கிடைத்த உத்தரவை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவு தான். கூட வாருங்கள் என்றார்.

 

எல்லோரையும் ஒரு விசேஷமான விஐபி தங்குமிடத்திற்கு அவர் அழைத்துச் சென்று அங்கு அமரச் சொன்னார்.

ஏதோ விபரீதம் தான் என்று எண்ணிய விஞ்ஞானிகள் நாங்கள் சாதாரண எகானமி க்ளாஸ் டிக்கட் தான் வாங்கி இருக்கிறோம். இங்கு தங்க முடியாது என்று தயக்கத்துடன் கூறினர்.

 

அந்த அதிகாரி அப்போது, “டிக்கட்டெல்லாம் தேவையில்லை. சற்று நேரத்திற்கு முன்னர் உங்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்கள் எங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சோதனை முடிந்து திரும்பி வருவார்கள். அவர்களை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். இங்கு உங்கள் விமானம்  புறப்பட இன்னும்  மூன்று மணி நேரம் இருக்கிறது. இங்கு உங்களை சௌகரியமாக வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்றார்.

 

 

விஞ்ஞானிகளுக்கு மெய் சிலிர்த்தது. எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் தங்களின் வரவை நன்கு கணித்து விமான நிலைய அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதியின் அன்புள்ளத்தை நினைத்து அவர்கள் உருகிப் போனார்கள். மாமனிதர் என்று அப்துல்கலாமை காரணம் இல்லாமல் மக்கள் அழைக்கவில்லை!

**********

 

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826)

08.08.67.earth.med

Research article written by London swaminathan

 

Date: 20 May 2016

 

Post No. 2826

 

Time uploaded in London :–  15-36

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணாத ஒரு வழக்கு இந்து மத இலக்கியங்களில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்து பிறந்து அவனருளால் பாணினி, அகத்தியன் ஆகிய இருவரால் இலக்கணம் வரையப்பட்டதால் இந்த வழக்கு நீடிக்கிறது. இரண்டு மொழிகளும் இன்னென்ன சொற்களைக் கொண்டே ஒரு நூல் துவக்கப்பட வேண்டும் என்று சொல்லும். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப் பட்டு வந்துள்ளது.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரிய, திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை மொழியியல் ரீதியாக முன்பே நிரூபித்துவிட்டேன்.

 

tricolour om

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

‘அத ரிக் வேத:’

‘அத ஸ்ரீமத்பகவத் கீதா’

என்று நூல்கள் ஆரம்பமாகும். நூலின் உள்ளே கடவுள் வாழ்த்து என்ற துதி இருக்கும். அதில் கடவுளின் பல பெயர்கள் வரும். கடவுள் வாழ்த்தே இல்லாவிடினும்

‘அத யோகானுசாசனம்’ (பதஞ்சலி யோக சூத்ரம்)

‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாசா’ (பிரம்ம சூத்ரம்)

அமரகோசம் என்னும் நிகண்டும் ‘அத’ சப்தத்தை மங்கல சொல்லாகப் பட்டியலிட்டுள்ளது.

ஓம்காரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மூல மந்திரத்திலிருந்துதான் பிரபஞ்சமே உற்பத்தியாகியது. இதை மாண்டூக்ய உபநிஷத் நன்கு விளக்கும். நவீன விஞ்ஞாமும் சப்தத்திலிருந்து பிரபஞ்சம் எல்லாம் உருவானதை ஒப்புக் கொள்கிறது.

‘அத’ என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள். அ –என்னும் எழுத்துதான் உலகின் பழைய மொழிகளின் முதல் எழுத்து. ரிக் வேதம் முதலான புனித நூல்கள் அக்னி என்று அ- வில் துவங்கும் அல்லது ஓம் என்னும் மந்திரத்துடன் துவங்கும்.

பழங்காலத்தில் குருமார்கள் மேடையில் அமர்வர். சிஷ்யர்கள் கீழே அமர்வர். குரு, ‘அத வால்மீகி ராமாயண’, ‘அத மஹா பாரத’ என்று உபதேசிக்கத் துவங்குவார்.

முடிவில் ‘சுபம்’ என்றோ ‘சாந்தி’ என்றோ சொல்லி முடிப்பார். உலகில் வேறு எங்கும் காண முடியாத அற்புத இலக்கிய வழக்கு இது.

 

moon night

கடவுளை நேரிடையாக குறிப்பிடாவிட்டால், ‘லோகம்’, ‘விஸ்வம்’, ‘ஸ்வஸ்தி’ போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவர்.

விஷ்ணு சஹஸ்ர நாமம், ஓம் ‘விஸ்வம்’ என்று துவங்கும்.

தமிழ் வழக்கு

சம்ஸ்கிருதம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய தமிழும் இதை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால் தமிழில் பெரிய பட்டியல் உள்ளது.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் என்சைக்ளோபீடியா) வழங்கும் பட்டியல்:–

சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், புகழ், மலை, மதி, நீர், ஆரணம்(வேதம்), சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி (சூரியன்), அமிர்தம் ஆகியனவும் இவை தொடர்பன சொற்களும்.

 

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் காப்பியம் ‘எழுத்து’ என்ற சொல்லுடன் துவங்கும்.

ஆயினும் பெரும்பாலான நூல்கள் ‘உலகம்’ என்ற சொல்லுடன் துவங்கும். முன்காலத்தில் இதை ‘லோகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் என்று கருதினர். ஆனால் எனது ஆராய்ச்சியில் இது இரு மொழிகளுக்கும் பொதுவான சொல் என்பது கண்டறியப்பட்டுளது. (ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழ்-சம்ஸ்கிருத மூல மொழியே காரணம்).

sheep, sun

‘உலகம் உவப்ப வலனேர்பு’

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ – என்று துவங்கும்

மற்ற நூல்களின் முதல் வரிகள்:–

‘உலகந்திரியா’ (மணிமேகலை),

‘உலகம் மூன்றும்’ (வளையாபதி),

‘உலகெலாம் உணர்ந்து’ (பெரிய புராணம்),

‘உலகம் யாவையும்’ (கம்ப ராமாயணம்)

‘நனந்தலை உலகம்’ (முல்லைப் பாட்டு),

‘மூவா முதலா உலகம்’ (சீவக சிந்தாமணி),

‘நீடாழி உலகத்து’ (வில்லி பாரதம்),

‘வையகம் பனிப்ப’ (நெடுநல் வாடை),

‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’ (சிறு பாணாற்றுப்படை),

‘மாநிலஞ்சேவடியாக’ (நற்றிணை)

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மாநிலம், வையகம், உலகம் – ஆகியன ஒரு பொருளுடைத்து.

ஒரு நூலை மங்கலச் சொல்லுடனே துவங்க வேண்டும் என்பது,

“வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண, இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர்” என்னும் சூத்திரத்தில் உளது.

 

 

swastik, om lamps, kotipali shivratri

பழங்கால சம்ஸ்கிருத, பிற்கால தமிழ் கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்தி’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும்.

பழைய தமிழ் திரைப்படங்கள், நூல்கள் எல்லாம் ‘சுபம்’, அல்லது ‘ஓம் சாந்தி’, ‘ஓம் தத்சத்’ என்று முடியும்.

பிரிடிஷ் லைப்ரரியில் நான் காணும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாவல்கள், நாடகங்களிலெல்லாம் இதைக் காண்கிறேன். வடமொழி நாடகம் அனைத்தும் ‘ஸ்வஸ்தி’ வாசகத்துடன் முடிவடையும். காளிதாசன் போன்ற உலக மகா கவிஞனும் கூட கடவுள் வாழ்த்துடன் துவங்கி, ஸ்வஸ்தி வாசகத்துடன் முடிக்கிறான்.

 

தமிழ் வேதமாகிய திருக்குறள் ‘அகர’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும். ‘அ’ – என்ற சொல் அவ்வளவு புனிதமானது. உலகிலேயே மிகவும் பழைய சமய நூலான ரிக் வேதம் அக்னி – என்ற ‘அ’-காரத்துடன் துவங்கும்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் காவியம், ‘திங்கள், ஞாயிறு, மாமழை’ — ஆகிய மூன்றையும் வாழ்த்தித் துவங்கும்.

தொல்காப்பிய சூத்திரத்தில் கடவுள் வாழ்த்து பற்றிக் கூறுகையில், “கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பார். அந்தக் ‘கொடிநிலை’, ‘கந்தழி’, ‘வள்ளி’ இதுதான் என்று சில உரையாசிரியர் பகர்வர். எப்படியாகிலும் இம்மூன்றும் மங்கலச் சொல் பட்டியலில் உள்ள சொற்களே!

உலகில் வேறு எங்குமிலாத இந்த மங்கலச் சொல் வழக்கு இந்து இலக்கியத்தில் மட்டும் இருப்பது பாரதீயப் பண்பாட்டின் தனிப்பெரும் முத்திரை ஆகும்!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

–சுபம்–

 

சமயோசித புத்தி! நறுக்கென பதில்கள்!! (Post No 2821)

politics-clipart

Translated by London swaminathan

 

Date: 18 May 2016

 

Post No. 2821

 

Time uploaded in London :– 8-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(இந்த சம்பவங்கள் ஏற்கனவே இங்கு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டன. மொழி பெயர்ப்பளர்- லண்டன் சுவாமிநாதன்)

அமெரிக்காவில் சென்ற நூற்றண்டில் பிரபல வணிகராக இருந்தவர் மார்க் ஹன்னா. அவர் அரசியலிலும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்.

 

ஒரு நாள் தனது கம்பெனியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு இளம் தொழிலாளி இப்படிச் சொன்னார்:

“இதோ போகிறானே, நம்ம முதலாளி; இவன் நம்மைப் போல குடிசையிலும், நாம அவனைப் போல பங்களாவிலும் வாழனும்; நமக்கு அவனைப் போல நல்ல பணம் இருக்கனும்; அப்பத்தான் இந்தப் பயலுக்கு நாம படற கஷ்டமெல்லாம் தெரியும்”.

 

இது முதலாளி காதில் விழுந்திருக்காது என்று நினைத்து அவன் சொல்லிவிட்டான். ஆனால் இது மார்க் ஹன்னா காதிலும் விழுந்துவிட்டது.

 

மார்க் ஹன்னா தனது அலுவலகத்தில் உட்கார்ந்தபின்னர் அந்த இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்தார். அவன் நினைத்தான், “இன்றோடு நம்ம ‘சீட்டு’ கிழிந்துவிட்டது; வீட்டுக்கு அனுப்பப்போகிறார்” என்று.

முதலாளி: “நீ என்னைப் பற்றி சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது சரி, நான் உன் குடிசையில் வாழத் தயார்; நீ என் பங்களாவுக்கு வா; அந்தப் பணம் எல்லாம் எடுத்துக்கொள். அப்படிக் கிடைத்தால் என்ன செய்வாய்?”

இளைஞன்: “உங்களை முதலில் குடிசை வாழ்விலிருந்து உயர்த்தி மேலிடத்துக்கு வர வைப்பேன்”.

இதை கேட்டவுடன் முதலாளி மார்க் ஹன்னாவின் மனம் நெகிழ்ந்தது. உடனே அவனுக்கு சம்பள உயர்வு அளித்தார்.

 

சமயோசிதமான பதில்கள், ஒருவரின் அடி மனத்திலுள்ள நல்ல எண்ணத்தையோ கெட்ட எண்ணத்தையோ பளிச்செனக் காட்டிவிடும்.

 

Xxx

speech-clipart-1

கழுதை அல்ல; நீ ஒரு மிருகம்!

அமெரிக்க காங்கிரஸில் (பார்லிமெண்டின் ஒரு சபை) சாம்ப் கிளார்க் என்பவர் சபாநாயகராக இருந்த போது இந்தியானா மாகாண உறுப்பினர் ஜான்சன், மற்றொரு உறுப்பினர் பேசுகையில் குறுக்கிட்டு, “சீ, கழுதை, பேச்சை நிறுத்து” என்றார்.

 

கழுதை என்று திட்டுவது பார்லிமெண்டில் சொல்லக்கூடாத தகாத சொல் என்று அவர் உடனே ஆட்சேபனை எழுப்பினார். உடனே சபாநாயகர் அதைச் சபைக்குறிப்பிலிருந்து நீக்கினார். ஜான்சனும் மன்னிப்புக் கேட்டார். அப்படியும் விடாமல் தாக்குதலைத் தொடர்ந்தார்.

அந்த உறுப்பினரிடத்தில் கோளாறு இருக்கிறது; குறைபாடு இருக்கிறது என்றார்.

 

உடனே தாக்குதலுக்குள்ளான உறுப்பினர்,

என்ன கோளாறு, குறைபாட்டைக் கண்டீர்? தைரியம் இருந்தால் சொல்” – என்றார்.

உடனே ஜான்சன் சூடாக பதில் தந்தார், “அது எப்படி எனக்குத் தெரியும். மிருக வைத்திய சாலைக்குப் போய்ப் பார்; அவர் சொல்லுவார்” – என்றார்.

இப்பொழுது அந்த உறுப்பினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலில் கழுதை என்பதை நீக்குவதில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மிருக (கால்நடை) மருத்துவ மனைக்குப் போய்ச் சோதனைக்குள்ளாக வேண்டும் – என்பதை நீக்க வைக்க முடியவில்லை. அப்படியே சபைக் குறிப்பேட்டில் பதிவாகியது.

கழுதை என்று நேரடியாகத் திட்ட காங்கிரஸ் (அமெரிக்க பார்லிமெண்ட்) அனுமதிக்காவிட்டாலும் ஒருவரை மிருக வைத்தியசாலைக்குப் போய் உன்னைச் சோதித்துக் கொள் என்று சொல்லுவதை அனுமதித்தது. இதுதான் சமயோசிதம்! அரசியல்வாதிக்கே உரித்தான பேச்சுத் திறமை!!

–சுபம்–

 

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819)

IMG_3212

Written by london swaminathan

 

Date: 17 May 2016

 

Post No. 2819

Time uploaded in London :– 15-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் பாடிய பாடல்கள், அவனுக்கு தமிழ் மீதுள்ள அன்பைக் காட்டுகிறது. ராமன் புகழ் பாட வந்த கம்பன், தமிழின் புகழ் பாட மறக்கவில்லை. எங்கெங் கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தமிழையும், தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனையும் போற்றிப் புகழ்கிறான்.

agastyanepal-carole-r-bolon

‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

ஆரண்ய காண்டத்தில் ராமன், அகத்தியன் சந்திப்பு பற்றி வருணிக்கும் கம்பன்,

ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்

ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

பொருள்:– சக்கராயுதத்தை உடைய திருமாலைப் போல, பெரிய தமிழ் மொழியால் இவ்வுலகத்தை அளந்தவனாகிய அகத்தியன், ஆண்மை மிகுந்த ராம, லெட்சுமணர் அங்கே வந்ததை அறிந்தார். அதனால் மகிழ்ச்சிக் கடல் 14 உலகங்களையும் அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், மாட்சிமைப்பட்ட வரங்களை வழங்கும் ராமன், தன் திருவடிகளில் விழுந்து வணக்குமாறு, அவன்  எதிரே வந்தான்.

 

உழக்கும் மறை நாலினுமுயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’’

 

பொருள்:- அந்த அகத்தியன் நால் வேதங்களையும் பயின்று உயர்வு அடைந்தான். தமிழ் உலகம் பேசும் முரை, தமிழ்ப் புலவரின் செய்யுள் ஆகியவற்றை முறைப்ப்ட ஆராய்ந்து, சிவபெருமான் கற்றுத்தந்த தமிழுக்கு இலக்கணம் செய்து தந்தான். சிவன், ஒளிவீசும் மழு ஆயுதம்,நெற்றியில் நெருப்பை உமிழும் சிவந்த கண்ண்ணை உடையவன்.

 shiva at Dwaraka

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

“நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

 

பொருள்:– அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான்.

 

 

தமிழ்த் தலைவன் யார்? (எனது பழைய கட்டுரையிலிருந்து)

 

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

 

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

சொற்கலை முனிவன்

இன்னொரு செய்யுளில் அகத்தியனை “சொற்கலை முனிவன்” (பால காண்டம்) என்பான் கம்பன். தமிழுக்கு இலக்கணம் வகுத்ததால், அகத்தியனுக்குக் கிடைத்த அடைமொழி இது.

rama look

இராமபிரானுக்கு தமிழ் தெரியும்!

கம்பன் ஒரு அதிசயத் தகவலையும் தருகிறான். ராமனுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியும் என்பான்:–

நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை

தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்

தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்

பொருள்:- பரத கண்டத்தின் தென்பகுதியில் வழங்கும் தமிழ் மொழி எனும் கடலைத் தாண்டியவனும், வடக்கே வழங்கும் சம்ஸ்கிருத மொழியில் கூறப்பட்டுள்ள எல்லா கலைகளுக்கும் எல்லை கண்டவனுமான ராமபிரான், “இனிய சொற்கலைக் கூறி இந்நாள் வரை என்னைப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் சொல்லை மீறி அரசாள்வது எனக்குத் தகுந்தது இல்லை. ஆனால் என் சொல்லை நீ மீறி நடந்தாலோ உனக்கு இழிவு அல்லவோ” (நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம்—லெட்சுமணனிடம் ராமன் சொன்னது)

 

 

எனது பழைய கட்டுரைகள்

 

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில் (17 ஜூலை 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 2 (26 டிசம்பர் 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 1 (9 ஜூன் 2014)

 

–சுபம்–

 

என் கணவர்: ராஜலக்ஷ்மி சந்தானம் (Post No 2819)

 

Damma i pad pictureate: 17 May 2016

Post No. 2818

Time uploaded in London :–5-36 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Both my parents Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam are no more; my brother S Nagarajan sent this old article, today being my mother’s thithi (death anniversary) day —London swaminathan.

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

 

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் துணைவியார் தனது கணவரைப் பற்றிய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

வெ.சந்தானம் தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

என் கணவர்

—————–

ராஜலக்ஷ்மி சந்தானம்

 

சுதந்திரப் போர்

சுதந்திரப் போராட்ட காலம் ஒரு தனி சகாப்தம் என்றால் அது மிகையல்ல. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களும் ஒருங்கிணைந்து காந்திஜியின் தலைமையில் ஓரணியில் இணைந்து தங்களிடம் இருந்தவற்றையெல்லாம் தேசத்திற்காக அர்ப்பணித்த உன்னதமான காலம் அது. அந்தக் காலத்தில் தான் பெருங்கடலில் சிறு துளிகள் போல மணிக்கொடி இலக்கியகர்த்தாக்கள் ஓரணியில் சேர்ந்தனர். திருவாளர்கள் வ.ரா, பி.எஸ்.ராமையா, ஸ்டாலின் சீனிவாசன், ஏ.என்.சிவராமன் போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் குழுவில் என் கணவர் திரு வெ.சந்தானமும் ஒருவர். ஆனால் அவர் தன்னைப் பற்றி எந்தக் காலத்திலும் விளம்பரப்படுத்திக் கொண்டதே இல்லை. அதனால் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அவர் ஆற்றிய இலக்கியப் பணி. தேசப் பணி, ஆன்மீகப் பணி முழுவதுமாகத் தெரியாது.

 

 

திருமணம்

தஞ்சாவூரில் நான் பத்தாவது படித்து முடித்திருந்தேன். 1935ம் வருடம் அது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர் எனது கணவரிடம் தஞ்சாவூரில் ஒரு படித்த பெண் இருப்பதாகவும் சென்று பார்க்குமாறும் தூண்டினார். என்னைப் பெண் பார்க்க அவர் மட்டுமே தனியாக வந்தார்.

 

 

என் தந்தையார் கல்யாணராமையர் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர். தஞ்சாவூரைச் சுற்றி உள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வது அவரது பணியின் ஒரு பகுதி. பட்டுக்கோட்டை. சேண்டாகோட்டை, கீவளூர் என பல இடங்களுக்கும் அவர் சென்றாலும் குடும்பத்தினராகிய நாங்கள் தஞ்சாவூரிலேயே இருந்தோம்.

 

நான் வயலின் லோயர், ஹையர் மற்றும் அதற்கு அடுத்து இருந்த வித்வான் ஆகிய அனைத்திலும் பாஸ் செய்ததைக் கேட்டதும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

 

எனது குரு திரு கே.ஸி. தியாகராஜன் மிகுந்த பிரபலமான சங்கீத மேதை. எனது கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் நடந்தது. ரிஸப்ஷன் சென்னையில். ராஜாஜி நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். இப்படி மிகப் பெரிய தேசீயத் தலைவர்களைப் பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இலக்கியப் பணியும் தேச சேவையும்

தினமும் உற்சாகமாக நண்பர்கள் குழு கூடும்.

 

இலக்கியம் சங்கீதம் பாரதி பாடல்கள் என ஏக அமர்க்களமாக விவாதங்கள் சுவையுடனும் நட்புடனும் நடைபெறும். அனைவரும் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.

 

 

சென்னையில் நாங்கள் ஜாகை இருந்த இடம் திருவல்லிக்கேணி. கடற்கரையில் தினமும் நண்பர்கள் கூடுவது வழக்கமானது.

பாரதி உலகக் கவிஞர் தான் என்பதை நிலை நாட்ட  அங்கு தான் முடிவு எடுக்கப்பட்டது. ஆளுக்கு ஒரு கோணத்தில் பாரதியை அலசி ஆராய்ந்து கட்டுரைகளை எழுத முடிவும் அங்கே தான் எடுக்கப்பட்டது.

 

 

என் கணவர் முதலில் சுதந்திரச் சங்கு போன்ற சிறிய பத்திரிக்கையிலும் பணி ஆற்றியிருக்கிறார். மணிக்கொடியில் அவரது இலக்கியப் பணி சிறந்து விளங்கியது.பி.எஸ்.ராமையா மிக நெருங்கிய நண்பர். மணிக்கொடியை போஸ்ட் செய்வது ஈறாக அனைத்துப் பணிகளையும் இந்த இலக்கியக் குழாமே செய்தது.

 

 

இடையில் சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி நாடெங்கும் கிளர்ச்சி எழுந்தது. அதில் வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுமாறு கூறும் தீவிரமான ஒரு பிரசுரம் ஆயிரக்கணக்கில் அடிக்கப்பட்டு  எங்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. துண்டுபிரசுரங்களை கடற்கரையில் சென்று அனைவரிடமும் விநியோகம் செய்யும் பணி என் கணவருடையது.

 

 

இந்த பிரசுரங்களை என் வீட்டில் பார்த்த ஒரு நபர் போலீசிடம் இதைச் சொல்ல அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் நல்ல வேளையாக உரிய நேரத்தில் பிரசுரங்கள் அகற்றப்பட்டன.என்றாலும் போலீசார் கடற்கரைக்குச் சென்று பிரசுரங்களைக் கட்டுக் கட்டாக வைத்து விநியோகம் செய்த என் கணவரை கைது செய்தனர். அவர் வேலூர் சிறையில் ஆறு மாத காலம் இருந்தார்.அங்கே காமராஜர் முதலான அனைவருடனும் நல்ல சினேகம் ஏற்பட்டது.

விடுதலையானவுடன் பத்திரிகைப் பணி தொடர்ந்தது.. மணிக்கொடி நின்றவுடன் தினமணியில் சேர்ந்தார்.

அப்போது லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனாவை தமிழில் மொழி பெயர்த்தார்.பல கதை கட்டுரைகளை எழுதினார்.

 

 

மதுரையில் பணி

 

தினமணியின் மதுரைப் பதிப்பு 1950ல் தொடங்கியவுடன் இவரை மதுரைப் பதிப்புக்கு பொறுப்பாக நியமித்தனர். மதுரை வந்தோம். மீனாட்சி பட்டணம் இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது. காஞ்சி காமகோடி பெரியவாள், சிருங்கேரி பெரியவாள் ஆகியோரிடம் அளவற்ற ஈடுபாட்டினால் அடிக்கடி அவர்களை தரிசனம் செய்வது வழக்கமானது, அவர்களது அருளுரைகளை எல்லாம் தினமணி அப்படியே வெளியிடும். அந்த ஞான பொக்கிஷமே இன்று நமக்கு நூல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. திருமுருக கிருபானந்தவாரியார், சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தரம தீக்ஷ¢தர்,திரு முத்துராமலிங்க தேவர் என ஆன்மீகவாதிகள் நூற்றுக் கணக்கானோரின் பழக்கம் இந்த கால கட்டத்தில் ஏற்பட்டது. இவர்கள் அனைவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் அனைத்தையும் முழுவதுமாக தினமணி பிரசுரிக்கும்.

அத்தோடு அனைத்து ஆன்மீக இலக்கிய சங்கங்களும் தலைமை வகிக்க இவரை அழைக்கவே இவற்றை ஊக்குவிக்க தனது வேலைப்பளுவிற்கு இடையேயும் செல்வார்.

 

 

தென் தமிழகமெங்கும் இவர் பங்கேற்காத இலக்கிய ஆன்மீக சங்கங்களே இல்லை எனலாம். திரு ஏ.கே.செட்டியார், திரு சா.கணேசன் திரு ஏ.சீனிவாசராகவன் உள்ளிட்டோர் வீட்டிற்கு வருவர்.வானொலியில் பத்திரிக்கையாளர் பணி பற்றி அடிக்கடி உரையாற்றியதும் உண்டு.

 

 

சுவாமிஜி கிருஷ்ணா

 

சுவாமிஜி கிருஷ்ணா அச்சன்கோவிலில் பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் சிலையை நிறுவிய பெரிய மகான். அவர் கணபதி ஹோமத்தை தனது சிறுவயதிலிருந்தே தினமும் நடத்தி கணபதியை பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவருடன் ஈடுபாடு ஏற்பட்டு அவர் குருவாக மந்த்ரோபதேசம் செய்தார்.கணபதி ஹோமத்தைத் தொடங்கி வைத்தார். எனது இல்லத்திற்கு பிரவசனகர்த்தாக்கள் வந்து தங்கி ராமாயண மஹாபாரத உபந்யாஸத்தை கிருஷ்ணாராயர் கோவில் தெருவிலுள்ள ஹனுமார் கோவிலில் நடத்துவார்கள்.

 

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளுக்கு அடிக்கடி பி¨க்ஷயிட்ட பாக்கியமும் எனக்கு உண்டு.

 

இந்து முன்னணி தலைவரான கோபால்ஜி உள்ளிட்டோர் அடிக்கடி எங்கள் இல்லத்திற்கு வருவர்.

 

 

இப்படி கடந்த ஐம்பது ஆண்டு கால ஆன்மீக தேசீய இலக்கிய வரலாறை எடுத்துக் கொண்டால் நல்லனவற்றைப் பரப்புவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு அவர் வாழ்ந்தார்.

 

 

சுதந்திர நாளன்று பேசிய இறுதிப் பேச்சு

1998 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றி ஆயிற்றா என்பதே அவர் பேசிய கடைசி பேச்சு. கொடி ஏற்றி ஆகி விட்டது என்ற பதிலைக் கேட்டு அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

 

 

ஒரு பெரிய இயக்கம் வளர அடிக்கல்லாக இருப்பவர் பலர். அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதே இல்லை. அதில் புகழ் பணம் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.இந்த வகையில் என் கணவரை முதல் வரிசையில் கூறலாம். எனது ஐந்து புத்திரர்களும் ஒரு பெண்ணும் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர்.நானும் தேக திடத்துடன் இறைவன் நாமத்தை உச்சரித்து வருகிறேன்.

ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்து இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தேசத்திற்காகவும் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் ஆசை. தேசமும் தெய்வீகமும் செழிக்கட்டும்.

 

**********************

 

 

 

 

வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816)

IMG_9826

Written by london swaminathan

 

Date: 16 May 2016

 

Post No. 2816

Time uploaded in London :– காலை 9-05

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்?

 

வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்

ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்

வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்

ஏதக்கோன் இல்லை இனிது

 

பொருள்:

நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.

கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.

 

ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.

 

இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.

 

சம்ஸ்கிருதத்திலும் அழகான பாடல் உண்டு (நான் முன்னர் எழுதிய கட்டுரையிலுந்து)

paari vallal

Pari, who gave his chariot to a climbing plant, one of the Seven Tamil Philanthrophists

தானதூஷணம்

அநாதரோ விலம்பஸ்ச வைமுயம் சாப்ரியம் வச:

பஸ்சாத் பவதி ஸந்தாபோ தான தூஷண பஞ்சகம்.

 

 

ஐந்து வகைத் தானங்கள் குறையுடைய தானம்; அவையாவன:

அநாதர- மரியாதை இல்லாமல் வழங்கும் தானம்

விலம்ப: – தாமதமாகக் கொடுக்கும் தானம்

வைமுக – முக்கியம் கொடுக்காமல் இருப்பது

அப்ரியம்வச: – திட்டிக் கொண்டே கொடுப்பது

பஸ்சாத் சந்தாப- கொடுத்த பின்னர் வருந்துவது

உத்தமன், மத்திமன், அதமன்

தமிழில் நீதிவெண்பா பாடல் ஒன்றும், இதே கருத்தை அழகாக விளக்கும்:

தானறிந்தோருக்குதவி தன்னாலமையுமெனில்

தானுவந்தீதல் தலையாமே—ஆனதனால்

சொன்னாற் புரிதலிடை சொல்லியும் பன்னாள் மறுத்துப்

பின்னாட் புரிவதுவே பின்.

 

பொருள்:– ஒருவர் தான் அறிந்த ஒருவருக்கு உதவி செய்ய முடியுமானால், அவர் கேட்கும் முன்னால், மகிழ்ச்சியுடன் தானே வலியப் போய் உதவி செய்தால், அது தலையானது; முதன்மையானது; உத்தமம்.

அவர் கேட்ட பின்னர், உதவி செய்வது இடைப்பட்டது; மத்திமம்.

அவர் கேட்ட பின்னரும் பல நாள் தாமதித்து, பின்பு உதவுவது கடைப்பட்டது; கடைத்தரமானது; அதமம்.

அன்பர்களே! நண்பர்களே! நாம் எல்லோரும் உத்தமர்களாக வாழ்வோம்! அல்லது வாழ முற்படுவோம்.

ஆங்கிலப் பழமொழிகளிலும் இதே கருத்தைக் காணலாம்:–

He gives twice who gives quickly

To refuse and to give tardily is all the same

He that is long a giving knows not how to give

Long tarrying takes all the thanks away

 

 

முந்தைய கட்டுரைகள்:

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல் (12 மே, 2016)

நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (25 பிப்ரவரி 2016)

–சுபம்–

 

காளிதாஸன் மீது போஜனின் நட்பு!!(Post No.2815)

kalidasa-

Kalidasa Statue in China

Written  BY S NAGARAJAN
Date: 16 May 2016

 

Post No. 2815

 

 

Time uploaded in London :–  5-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சமஸ்கிருதச் செல்வம்

 

காளிதாஸன் மீது போஜனின் நட்பு!!

ச.நாகராஜன்

abhijnanasakuntalam_of_kalidas

World Famous Drama Sakunatala of Kalidasa

மாபெரும் மன்னனான போஜன் சிறந்த அறிவாளியும் கூட.

அவன் காளிதாஸன் மீது வைத்திருந்த அன்பை வார்த்தைகளால் விளக்க முடியாது. என்றாலும் கூட அந்த மாபெரும் மன்னன் காளிதாஸன் மீது தான் கொண்டிருக்கும்  அன்பை தன் வார்த்தைகளிலேயே விளக்குகிறான் இப்படி:

 

கச்சதம் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வதோபி வா

மா மூன்மன: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே

 

போஜ மஹாராஜன் காளிதாஸனைப் பார்த்து நேரில் கூறுவது இந்தக் கவிதையாக மலர்ந்துள்ளது.

 

“ஓ, கவிஞரே! நடக்கும் போதும் சும்மா இருக்கும் போதும், விழித்திருக்கும் போதும் அல்லது தூங்கும் போதும் எனது மனம் உன்னை விட்டு ஒரு பொழுதும் விலகி இருக்காது.”

 

எப்படி ஒரு அருமையான நட்பு மன்னன் – கவிஞன் நட்பு!

அறிவுக்கு மன்னன் கொடுத்த மதிப்பு அந்த அரிய நட்பு!

 

இதை S.B.Nair  அழகுற ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் இப்படி:

 

When walking or keeping still, when waking or sleeping may my mind never remain far away from you, O, the Poet!

 

இந்த அரிய கவிதைக் கூற்று பல்லகரின் போஜ ப்ரபந்தத்தில் 158வது செய்யுளாக அமைகிறது!

 

வரலாறு கூறும் ஒரு அரிய நட்பு போஜ – காளிதாஸன் நட்பு!

 

xxxxxx

 

சமஸ்கிருத செல்வம்

இறந்ததற்குச் சமம்!

ச.நாகராஜன்

 

கங்கை, வித்யா, குழந்தை, யக்ஞ தட்சிணை இவற்றின் மதிப்பை எப்படி அறிவது?

 

சாணக்யர்  தெளிவாகக் கூறுகிறார் இப்படி:

 

கங்கா ஹீனோ ஹதோ தேஷோ வித்யா ஹீனம் ஹதம் குலம்

அப்ரசுதா ஹதோ நாரீ   ஹதோ யக்ஞஸ்த்வ தக்ஷிணா:

 

இதன் பொருள் என்ன?

 

கங்கை இல்லாத தேசம் இறந்த சுடுகாடு தான்!

ஞானம் அல்லது படிப்பறிவு இல்லாத குடும்பம் செத்த குடும்பம் தான்!

 

குழந்தை இல்லாத பெண் இருந்தும் இறந்தவளே!

யக்ஞ தட்சிணை தராத யக்ஞம் பயனற்ற யக்ஞமே!

 

இதை எஸ்.பி. நாயர் (S.B.Nair)  ஆங்கிலத்தில் அழகுற இப்படி மொழியாக்கம் செய்கிறார்:

 

Dead is a land without Ganga:

Dead is a family without wisdom:

Dead is a barren woman;

Dead is a sacrifice not followed by gifts (to the Brahmanas)

 

சுருக்கமாகச் சொல்லும் போதே அழுத்தமாகச் சொல்வது கவிஞர்களின் இயல்பு. இப்போது கங்கை, வித்யா, குழந்தை, யக்ஞ தட்சிணை ஆகியவற்றின் மதிப்பும் முக்கியத்துவமும் நன்கு புரிகிறது, இல்லையா!

*********

 

ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை (கட்டுரை எண். 2814)

ராம சீதா

Written by london swaminathan

 

Date: 15 May 2016

 

Post No. 2814

Time uploaded in London :–  17-24

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

ராமரும் லெட்சுமணரும் வனவாசத்துக்குப் புறப்பட்டனர். சீதையுடன் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் பஞ்சவடி என்ற இடத்தை அடைந்தனர். ஐந்து ஆலமரங்கள் அழகாக ஒரே இடத்தில் இருந்ததால் அந்த இடத்துக்கு சம்ஸ்கிருதத்தில் பஞ்சவடி ( தமிழில் 5 ஆலமரம்) என்று பெயர்.

 

அங்கே பர்ணசாலை அமைக்க தீர்மானித்தனர் (இலைகளால் வேயப்படும் குடிசைக்கு பர்ணசாலை என்று சம்ஸ்கிருதத்தில் பெயர்). இங்கே பர்ணசாலை அமைக்க, இந்த இடத்துக்குச் சொந்தக்காரரைச் சந்தித்து அனுமதி பெற்று வா என்று லெட்சுமணனை ராமபிரான் அனுப்பினார்.

 

லெட்சுமணன், அந்த இடத்தின் சொந்தக்காரரைத் தேடிப்போகையில் ஒரு மரத்துக்கு அடியில் ஒரு சிறு உருவம் தோன்றியது. அவர்தான் அந்த இடத்தின் சொந்தக்காரர் என்று லெட்சுமணன் நினைத்தான். அவரிடம் அனுமதி பெறுவதற்காக அவன் அங்கே தியானத்தில் அமர்ந்தான். அவனது தியானத்தில் ஒரு உருவம் பற்றிய வருணனை மனக் கண்கள் முன்னால் வந்தது. அதாவது குணம் குறியுடையதாக ஒரு உருவம் கையால் நாக்கை இழுத்துப் பிடிப்பது போலும், மற்றொரு கையால் கௌபீனத்தை (கோமணத்தை) இழுத்துப் பிடிப்பது போலும் கண்டான். தியானம் முடிந்தவுடன் ராமனிடம் வந்து தான் கண்ட காட்சியைச்சொன்னான்.

RAMA ARCH

இராமன் உடனே நமக்கு உத்தரவு கிடைத்துவிட்டது. நாம் குடிசை அமைக்கும் பணியைத் துவக்கலாம் என்றான்.

எப்படி அண்ணா, உத்தரவுகிடைத்தது என்று நினைக்கிறாய்? என்று இளவல் (தம்பி) வினவினான்.

 

நாக்கை இழுத்துப் பிடிக்கும் காட்சி– எவனுக்கு சுவையையும், சொல்லையும் அடக்கி ஆளும் திறன் உண்டோ என்பதையும் கோமணத்தை இழுத்துப்பிடிக்கும் காட்சி— எவனுக்கு காமத்தை அடக்கி ஆளும் திறன் உண்டோ — அவனுக்கு எங்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதையே காட்டுகிறது என்று ராமன் விளக்கினான். நாம் அந்நெறியில் பிறழாது வாழ்வதால் நமக்கு உத்தரவாகிவிட்டது என்றான்.

 

இருவரும் குடில் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்து முடித்தனர்.

‘யா காவாராயினும் நா காக்க’ – என்ற வள்ளுவன் சொல்லும், ‘இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்’ – என்ற பெரியோர் வாக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.

 

ஆனந்த ராமாயணம்

‘300 ராமாயணம்’ என்று ஒருவர் ஆங்கிலத்தில் நூல் எழுதினார். ஆனால் நான் பிரிட்டிஷ் லைப்ரரிக்கு போகும் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தமிழ் ராமாயணம் கிடைத்து வருவதைப் பார்க்கையில் 3000 ராமாயணங்கள் இருக்கலாம் என்று எழுதினேன். சென்ற வாரம் பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்ற போது ராமஸ்வாமி அய்யர் என்பவர் பாடல் வடிவில் சில ராமாயண காண்டங்களை இயற்றி அதற்கு ‘ராமஸ்வாமீயம்’ என்று பெயர் கொடுத்திருப்பதைக் கண்டேன். அந்த நூலின் சில பக்கங்களையும் அட்டையையும் ‘பேஸ்புக்கில்’ வெளியிட்டேன்.

 

ஆனந்த ராமாயணம் என்பது வால்மீகி, கம்பன், துளசி ராமாயணம் அளவுக்குப் பிரசித்தமாகவில்லை. இதையும் வால்மீகி இயற்றினார் என்றே சொல்லுவர். இதில் ஒன்பது காண்டங்களும் 12,252 ஸ்லோகங்களும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. வால்மீகி ராமாயணத்தில் காணப்படாத பல விஷயங்களும் கதைகளும் இதில் இருக்கின்றன.

-சுபம்-

 

சந்திரனில் ஒரு கிராமம்!(Post No 2812)

moon value

Written  BY S NAGARAJAN

Date: 15 May 2016

 

Post No. 2812

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 13-5-16  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 

 

சந்திரனில் ஒரு கிராமம்!

ச.நாகராஜன்

 

 

“சந்திரனைக் குறி வையுங்கள். ஒருவேளை தவறி விட்டாலும் ஒரு நட்சத்திரத்தை அடையலாம்.”

டபிள்யூ க்ளிமெண்ட் ஸ்டோன்

 

 

உல்கெங்கும் சந்திரனில் ஒரு கிராமம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2016 ஏப்ரல்  மாத ஆரம்பத்தில் 32வது விண்வெளி கருத்தரங்கம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் எப்படி இந்த கிராம திட்டத்தை நிறைவேற்றுவது என்பதை ஆர்வலர்கள் தீவிரமாகப் பரிசீலித்தனர்.

 

 

நாஸாவோ செவ்வாய்ப் பயணத்தில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பதால் சந்திரனில் கிராமம் அமைக்கும் திட்டத்திற்கு அவ்வளவாக ஆதர்வு காட்டவில்லை.

 

 

ஆனால் சந்திரனில் ஒரு தளத்தை முதலில் அமைத்து விட்டால் அங்கிருந்து செவ்வாய்க்குச் செல்லும் பயணம் சுலபமாகும் என்று அங்கு குழுமியிருந்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கருத்தை முன் வைத்தனர்.இரண்டாயிரத்து இருபதுகளில் இது முடிந்து விட்டால் இரண்டாயிரத்து முப்பதுகளில் செவ்வாய்ப் பயணம் உருவாகி விடும் என்பது அவர்களின் கணிப்பு.

இதற்கிடையில் இப்போது வெளியாகி உலகில் பரபரப்பூட்டை ஊட்டும் ஒரு புத்தகமாக பால் ஸ்புடிஸ் என்ப்வர் எழுதிய ‘தி வால்யூ ஆஃப்  தி மூன்’ என்ற புத்தகம் அமைகிறது.

 

 

ஸ்புடிஸ் சந்திரனைப் பற்றிய ஒரு ஸ்பெஷலிஸ்ட். முதலில் சந்திரனில் மனித குலம் குடியேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கும் விஞ்ஞானி.

ரொபாட்டுகளையும் மனிதர்களையும் சந்திரனுக்கு அனுப்பி அங்கிருக்கும் நீர் உள்ளிட்ட அனைத்து ஆதார வளங்களையும் பயன்படுத்தி அற்புதமான ஒரு குடியிருப்பை அமைத்து விடலாம் என்பது அவரது ஆலோசனை.

 

 

இந்தியாவின் சந்திராயன் – 1 திட்டத்தை அவர் வெகுவாக ஆதரிக்கிறார்.

 

நாஸாவின் செவ்வாய் மோகத்தில் அவருக்கு சந்தேகம்! சமீப காலத்தில் நிச்சயமாக செவ்வாய்க்குச் செல்ல  முடியாது; அப்படியே போனாலும் அது மனிதனின் கால் பதிக்கும் பயணமாகவே அமையும். ஆனால் சந்திரன் அருகில்  இருக்கும் கிரகம். அதில் காலனி ஏற்படுத்துவது என்பது சுலபம் என்கிறார் அவர்.

 

 

சந்திரனில் நீர் இருப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தப் பனிக்கட்டி நீரைப் பயன்படுத்துவதோடு சந்திரனில் எப்போதுமே வெளிச்சமாக இருக்கும் பகுதியைப் பயன்படுத்தினால் சூரிய ஒளி பிரதேசத்தில் சரியான தளம் ஒன்றை அமைக்க முடியும். அங்கிருந்து மனிதர்களின் சந்திரனுக்கும் பூமிக்குமான பயணம் சுலபமாகும், சாடலைட்டுகளை சர்வீஸ் செயவதும் சுலபம். இது இன்னும் தொலைதூரப் பயணங்களுக்கு வழி வகுத்து அப்பயணங்களை எளிதாக்கும் என்று விவரமாக அவர் விளக்குகிறார்.

 

 

இந்த திட்டத்திற்கு 2011இல் உத்தேசிக்கப்பட்ட செலவு சுமார் 88 பில்லியன் டாலராகும் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

இப்போது கொஞ்சம் கூட செலவாகும்.

ஆனால் சந்திர தளத்தை அமைத்து விட்டால் டெலி ஆபரேடட் ரொபாட்டுகள் அனைத்து வேலைகளையும் அங்கு செய்து மனிதர்கள் வாழத் தக்க ஒரு கிராமத்தை உருவாக்கி விடும். சந்திரனில் தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏராளமான காரணங்கள் உள்ளன.

 

முதலில் தளம் அமைக்கும் தேசத்தின் கௌரவம் உயரும். அறிவியல் புதிய பரிமாணத்தை எட்டும். வணிகம் உயரும். சந்திர பயணங்கள் ஏற்பட்டு கிரகங்களுக்கு இடையேயான பயணம் ஆரம்பிக்கும்.

 

 

 

1972இலிருந்து ஒருவரும் சந்திரனுக்குச் செல்லவில்லை. இரண்டாயிர்த்து இருபதுகளிலிருந்து இந்த நிலை மாறும். இப்படி ஒரு சந்திர கிராமம் அமைய வேண்டுமெனில் மேலும் பல கருத்தரங்கங்கள் தேவை. இதை ஜாம் செஷன் என்று அழைக்கின்றனர்.

 

ஆனால் இப்படிப்பட்ட தளம் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட ப்ல நாடுகளும் விரும்புகின்றன. அனைத்து நாடுகளும் இந்த திட்டத்தில் இணைந்தால் திட்டம் வெற்றி பெறும்.

 

 

யூரோப்பிய ஸ்பேஸ் ஏஜன்ஸியின் டைரக்டராக 2015இல் பொறுப்பெற்றவுடன் ஜோஹன் டயட்ரிச் வோர்னர்  இதை வலியுறுத்தினார்.

 

சந்திர கான்க்ரீட்டைக் கொண்டு பாறைகள் உள்ள பகுதியில் விண்வெளி வீரர்களுக்கு ஒரு கிராமம் அமைக்கலாம். கிராமம் என்றால் ஒரு சர்ச், ஒரு டவுன் ஹால், வீடுகள் என்று அர்த்தமில்லை. ரொபாட்டுகள்  மற்றும் மனிதர்களின் செய்ல்பாட்டிற்கு உதவும் ஒரு தளம், அவ்வளவு தான்,

 

ஆனால் இதிலும் அபாயங்கள் இல்லாமல் இல்லை. சந்திரனின் உஷ்ணநிலை மாறுபாடு அபாரமாக இருக்கும். சூரிய கதிரியக்கம் வேறு அதிகம். அத்துடன் விண்கற்கள் மோதாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் மீறி நாம் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்றார் அவர்.

 

 

விண்வெளி வீரர்கள் சிறிது சிறிதாக அங்கு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கின்றனர். ஓடுபாதையில் விண்கலத்திலேயே உருவாக்கப்பட்ட உணவுவகைகளை அவர்கள் சாப்பிடுவது உள்ளிட்ட பல முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

 

விண்வெளி கருத்தரங்கமும் சந்திர தளம் அமைப்பதற்கு ஆதரவாக வெளியாகியுள்ள புதிய புத்தகமும் நல்ல முயற்சிக்கான ஆரம்பம் என்று சந்திரப் பிரியர்கள் கருதுகின்றனர்.

 

einstein

 

அறிவியல் அறிஞர்கள் வாழ்வில .. ..

 

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மனிதாபிமானம் மிக்க சிறந்த ஒரு மனிதரும் கூட என்று அவரது வாழ்க்கைச் சமபவங்கள் பல நிரூபித்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று இது:

 

1903ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார் மேரி க்யூரி. (தோற்றம் 7-11-1867 மறைவு 4-7-1934). அவரது கணவரான பியரியுடன் இணைந்து இப்பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.

1906ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு விபத்தில் அவர் கணவர் அகால மரணம் அடைய அவர் விதவையானார். பெரும் துக்கம் அவரை ஆட்கொண்டது.

 

 

காலப்போக்கில் ஆறுதல் அடைந்த அவர்  மனம், பால் லாங்வின் (Paul Langevin) என்ற  இயற்பியல் பேராசிரியரின் மீது நாட்டம் கொண்டது. பால் தன் மனைவியிடமிருந்து ஒதுங்கித் தனித்து வாழ்ந்து வந்தார். ஏனெனில் அடிதடிக்குத் தயங்காதவர் அவர் மனைவி.

 

இருவரின் காதலும் வளர்ந்ததைப் பார்க்கச் சகிக்காத பாலின் மனைவி  அவரது வீட்டின் கதவை உடைத்து காதல் கடிதங்களைக் கைப்பற்ற ஒரு ஆள் மூலமாக ஏற்பாடு செய்தார். அந்தக் கடிதங்களை பத்திரிகைகளுக்கு வேறு அனுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வளவு தான், பத்திரிகைகள் மேரி க்யூரியைக் கண்டபடி சித்தரிக்க ஆரம்பித்தன.

 

 

 

இதனால் மிகவும் மன வருத்தமுற்றார் அவர். இதற்கிடையே ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பிரம்மாண்டமான அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் அங்கே ஐன்ஸ்டீனைச் சந்தித்தார். மாநாட்டிலிருந்து திரும்பி பாரிஸுக்கு வந்த அவர் தன் வீட்டின் முன்னால் திரண்டிருந்த கோபம் கொண்ட கும்ப்லைக் கண்டு திடுக்கிட்டார். வீட்டை விட்டு தனது மகள்களுடன் வெளியேறிய அவர் தன் நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புக நேர்ந்தது.

 

இதைக் கேட்ட ஐன்ஸ்டீன் மிகுந்த வருத்தம் அடைந்தார். மேரி க்யூரியை அபூர்வமான அறிவு கொண்ட பிழையில்லாத நேர்மையான பெண்மணி என்று அவர் கணித்து வைத்திருந்தார். ஆனால் பத்திரிகைகளும் மஞ்சள் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக அவரைச் சித்தரித்து அவருக்கு களங்கத்தை உண்டாக்கின. குறிப்பாக அவரது அறிவியல் சாதனையை மட்டம் தட்ட வேண்டும் என்பதே அவற்றின் குறிக்கோளாக இருந்தது.

 

 

ஆறுதல் கடிதங்கள் எழுதுவதில் புகழ் பெற்ற ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு கடிதத்தை மேரி க்யூரிக்கு எழுதி அதில் தனது உறுதியான ஆதரவை அவருக்குத் தெரிவித்தார். களங்கமே இல்லாத நபர் என்று மேரியை ஐன்ஸ்டீன் புகழ்ந்தார்.

 

“இந்தக் கடிதத்தை எழுதுவதைப் பார்த்துச் சிரிக்க வேண்டாம், ஆனால் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் கோபமடைகிறேன், உங்களின் அறிவையும் உங்கள் ஆற்றலையும் நேர்மையையும் பார்த்து நான் வியக்கிறேன். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் உங்களைச் சந்தித்ததில் பெருமைப் படுகிறேன். கண்டதை எல்லாம் படித்து குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கும் லாங்வினுக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நீண்ட கடிதம் ஒன்றை ஐன்ஸ்டீன் எழுதினார்.

 

இதைப் பார்த்த மேரி பெரும் ஆறுதலை அடைந்தார். தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த கடிதத்தை ‘ஐன்ஸ்டீன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில்  வால்டர் ஐஸக்ஸன் என்பவர் வெளியிட்டுள்ளார்.

**********