நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

necklace

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

by ச.நாகராஜன்

Post No 1585; Dated 18th January 2015.

Compiled by S Nagarajan

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

कण्ठचामीकरन्यायः

kanthacamikara nyayah

கண்டசாமீகர நியாயம்

கண்டசாமீகரம் – கழுத்தில் அணியும் நெக்லஸ்

கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டு ஊர் முழுவதும் தேடிய கதை என்று சொல்லப்படும் நியாயம் இது.

ஒரு பெண்மணி தன் கழுத்தில் நெக்லஸை அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் தன் நெக்லஸைக் காணோம் என்று தேட ஆரம்பித்தாள். இன்னொருத்தியிடம் அவள் என் நெக்லஸ் எங்கே என்று கேட்ட போது அந்தப் பெண்மணி, உங்கள் கழுத்திலேயே அதை அணிந்திருக்கிறீர்களே, கழுத்திலே பாருங்கள் என்று பதில் சொன்ன போது அவள் நாணினாள்.

இந்த நியாயம் வேறு எங்கேயோ ஒன்றைத் தேடப் போகும் ஒருவன் அது தன்னிடமே இருப்பதை அறியாமல் இருக்கும் போது சுட்டிக் காட்டப்படும் நியாயம். பரவலாக உலக வாழ்க்கையில் வழங்கப்படும் நியாயங்களுள் இதுவும் ஒன்று!


fruit-in-hand

करिवन्यस्तिबर्लवन्यायः

karavinyastabilva nyayah

கரவிந்யஸ்த பில்வ நியாயம்

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்று அறியப்படும் நியாயம் இது. கரத்தில் உள்ள வில்வப்பழம் போல என என்று வழங்கப்படுகிறது.

 

கையில் இருக்கும் வில்வப்பழம் போல வெளிப்படையாக எந்த வித விளக்கமும் தேவையின்றி இருக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் வழங்கப்படுகிறது. நேரடியாக பார்க்க இருக்கும் வில்வக்கனிக்கு விளக்கம் வேறு தேவையா? நன்கு அறிய முடியும் ஒரு விஷயத்திற்கு விளக்கம் எதற்கு வேண்டும்!

kumba yaya

कुम्भधान्यन्यायः

kumbhadhanya nyayah

கும்ப தான்ய நியாயம்

தானியம் நிரம்பி உள்ள ஜாடி எனப்படும் நியாயம் இது. ஒரு பெரிய குதிர் முழுவதும் தானியம் வைத்திருக்கும் ஒருவனுக்கு தானியம் வழங்கி என்ன பயன்? தானம் செய்வதை அது தேவையாய் உள்ள ஏழைகளுக்குச் செய்ய வேண்டும். பணக்காரனுக்கு தானம் செய்து பயன் என்ன?

ஆங்கிலத்தில் TO SEND COAL TO NEW CASTLE  என்று வழங்கப்படுவதை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

vaikkal

काशकुशावलम्बनन्यायः

kasakusavalambana nyayah

காஷகுஷாவலம்பன நியாயம்

வைக்கோல்போரைப் பிடித்த நியாயம்.

ஒரு கப்பல் உடைந்து விடவே அதில் மூழ்க ஆரம்பித்த போது அதில் இருக்கும் ஒருவன் தன் உயிரைக் காக்க எதையேனும் பிடிக்க முயல்கிறான். அவன் கையில் ஒரு சிறு வைக்கோல்போரின் பகுதி தான் கிடைக்கிறது. இருந்தாலும் அதைப் பிடித்துக் கொள்கிறான். எப்படியேனும் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதே அப்போதைய முனைப்பாக இருக்கும் அல்லவா! அது பயனற்ற வீணான முயற்சி என்றாலும் கூட அதைச் செய்கிறான் அவன். அது போல பயனற்ற முயற்சி என்று தெரிந்தும் கூட ஒரு விவாதத்தில் சிறிய விஷயத்தைப் பிடித்துக் கொண்டு தனது தரப்பு வாத த் தை முன் வைக்க முயலும் ஒருவனைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது. இது நகைப்புக்கே இடமாகும்.

villagewell

कूपखानकन्यायः

kupakhanaka nyayah

கூபகானக நியாயம்

கிணறு வெட்டும் நியாயம் இது.

ஒரு கிணறை வெட்டும் போது முதலில் வெட்டுபவனுடைய உடலில் சேறு, சகதி ஆகியவை படியும். ஆனால் நேரம் செல்லச் செல்ல தண்ணீர் பீறிட்டு எழும் போது அந்த சேறும் சகதியும் அதிலிருந்து வரும் தண்ணீராலேயே கழுவப்பட்டு அவன் சுத்தமாவது போல ஒருவன் முதலில் செய்யும் பாவங்கள் எல்லாம் பின்னால் அவன் செய்யும் புண்ய காரியங்கள் மூலம் கழுவப்பட்டு அவன் பாவமற்றவனாகிறான்.

இதுவே கிணறு வெட்டிச் சுத்தமாகின்றவனது நியாயம் ஆகும்.

well

contact swami_48@yahoo.com

****************

கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!

Ghaznavid-A1610.GZ5-Mahmud-MH02.33

கட்டுரையாளர் – லண்டன் சுவாமினாதன்

 

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1582; தேதி 17 ஜனவரி 2015

எனக்கு மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் தமிழ் கற்பித்த ஆசிரியர் ம.க.சிவசுப்பிரமணியம், — நாங்கள் ஏதாவது தவறான விடை எழுதிவிட்டால், என்ன இது?

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்காதருக்கும் முடிச்சு போடுகிறாய்?

 

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் முடிச்சு போடுகிறாய்?

 

ராமநவமிக்கும் ரம்ஜான் பண்டிகைக்கும் முடிச்சு போடுகிறாய்?

 

என்று திட்டுவார். அவர் கஜினி முகமதுவுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தால் அப்படி எங்களைத் திட்டி இருக்க மாட்டார்!!!!

ராஜதரங்கினி என்னும் காஷ்மீர் வரலாற்று நூலில் இருந்து பல சுவைமிகு விஷயங்களை எழுதினேன். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு காஷ்மீரி பிராமணன். அவரது மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட்  ராஜதரங்கினியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அப்போது நேருவும் பண்டிட்டும் வெவ்வேறு சிறைகளில் (பிரிட்டிஷாரால) அடைக்கப்படிருந்தனர். ஆர்.எஸ்.பண்டிட் மிகவும் விசால புத்தி படைத்தவர். ஆங்காங்கே நிறைய விஷயங்களைத் தருகிறார். இதோ சில:

 

ராஜ தரங்கினி என்றால் “அரசர்களின் ஆறு/நதி” எனப் பொருள். இதை கல்ஹணர் என்னும் கவி  “கடவுளின் மொழியான சம்ஸ்கிருதத்தில்” எழுதியது ஏன் என்று ஆர்.எஸ். பண்டிட் விளக்குகிறார்.

MassudOfGhazniCoin

“12-ஆம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிருதம் சீரும் சிறப்புடநும் விளங்கியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. கல்ஹணர் தனது நூலை சம்ஸ்கிருதத்தில் எழுதக் காரணம் இது காச்மீரில் மட்டும் இன்றி உலகம் முழுதும் சிறப்பு அடைய வேண்டும் என்பதற்காகத்தான்”.

 

(கல்ஹணர் கண்ட கனவு பலித்தது. இந்தியாவின் முதல் வரலாற்று நூல் ராஜ தரங்கினி தான் என்று இன்று வெளி நாட்டினர் போற்றுகின்றனர். புராணங்கள்— வரலாற்றை எழுதிய போதும் —  இந்த சக வருஷம் அல்லது கலியுக ஆண்டு அல்லது விக்ரம சஹாப்தம் என்று குறிப்பிடவில்லை. கல்ஹணர் ஒருவர்தான் சக வருடம் மற்றும்  காஷ்மீரில் புழங்கிய லௌகீக வருஷம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முதல் முலில் இந்திய வரலாற்றை 900 ஆண்டுகளுக்கு முன் எழுதினார்)

காஷ்மீரில் க்ஷேமேந்திரா, பில்ஹணர், கல்ஹணர், வாக்பதி முதலிய பிரபல கவிஞர்கள் வாழ்ந்தனர். அதில் பில்ஹணர் எழுதிய ஒரு நூலில் “காஷ்மீர் பெண்கள் தூய சம்ஸ்கிருதம் பேசுவர். அழகிலோ ஒப்பற்ற அழகுடையவர்கள்” என்று புகழ்வதையும் பண்டிட் எடுதுக் காட்டுகிறார். சாளுக்கிய மகாராஜா சபையை அலங்கரித்த கவிஞர் பில்ஹணர் என்றும் அவர்  காஷ்மீர் பண்டிதர்களுக்காக இந்தியாவே ஏங்கி நின்றது என்றும் எழுதியதை பண்டிட் எடுத்துக் கூறுகிறார்.

கஜினி முகமது என்பான், இந்தியா மீது 17 முறை படை எடுத்து இந்துக் கோவில் எல்லாவற்றையும் — குறிப்பாக 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான சோமனாதபுரத்தைத் தரை மட்டம் ஆக்கிக் கொள்ளை அடித்து ஆப்கனிஸ்தானத்தில் உள்ள கஜினியில், தங்க வாசல் கதவுகளைக் — கோட்டைக் கதவுகளை அமைத்தான். அவன் கூட 11 ஆம் நூற்றாண்டில் வெளியிட்ட நாணயங்களில் பாரசீக மொழியுடன் சம்ஸ்கிருத மொழியில் காசுகளை அச்சிட்டான் — இந்தக் காசுகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன என்கிறார் பண்டிட்.

தமிழர்களுக்கு இது வியப்பு அளிக்காது. ஏனெனில் தமிழர்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் போற்றினர். புற நானூற்றில் நிறைய புலவர்கள் பெயர்கள் — வால்மீகி, பிரம்மன், தாமோதரன், விஷ்ணுதாசன், கண்ண தாசன், காமாட்சி (காமக்கண்ணி), பூதப்பாண்டியன், சங்கவருணர், சாஸ்தா, கௌசிகன், பரணர், கபிலர் — என்று சம்ஸ்கிருதத்தில் இருப்பதை முன்னரே கண்டோம்.


kashmiri-belle-PH79_l

வள்ளுவர் ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாளுவதையும் முதல் குறள், கடைசி குறள்களில் சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதையும் கண்டோம். அவருடைய மனைவி வாசுகியின் பெயரும் சம்ஸ்கிருதம் என்பதை  அறிவோம். கண்ணகி, கோவலன் அப்பாக்கள் பெயர்கள் கோவலன் (கோபாலன்) பெயர்கள் சம்ஸ்கிருதம் என்பதை நாம் அறிவோம். அப்பரின் சகோதரி திலகவதி, காரைக்கால் அம்மையார் பெயர் புனிதவதி சம்ஸ்கிருதப் பெயர்களே என்பதை எல்லாம் நாம் அறிவோம். ஆக கஜினி முகமது சம்ஸ்கிருதத்தில் நாணயம் வெளியிட்டது —

 

நாணயம் ( நேர்மை) -உடைய –

நாணயம் (காசு, பணம்) உடைய —

நா நயம் (சொல் வளம் ) மிக்க —

தமிழர்களுக்கு வியப்பளிக்காது.

பர்தா என்ற சொல் இந்தியாவில் இல்லை!

 

முகத்தைத் திரை கொண்டு மறைப்பது “தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி” என்று பாரதியார் ஒரு பாட்டில் சாடுகிறார். இதே போல காஷ்மீரிலும் இவ்வழக்கம் இல்லை என்கிறார் பண்டிட். “ சம்ஸ்கிருதத்தில் பர்தா என்ற சொல்லுக்கு இணையான சொல் அகராதியிலேயே இல்லை. இந்தியர்கள், ராணிகள் வசிக்கும் இடத்தை அந்தப்புரம்  —- ( இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரண்மனையின் உட் பகுதி என்று பொருள்) — அல்லது சுத்தாந்த ( தூய உட்பகுதி) என்பர்”

இதற்குப் பின் அவர் ராஜ தரங்க்கிணியில் உள்ள கலப்புத் திருமண விஷயங்களை எடுத்துக் காட்டி காஷ்மீரி பெண்கள் எவ்வளவு சுதந்திரம் அனுபவித்தனர் என்பதையும் காட்டுகிறார். (காஷ்மீர் வரலாற்றை கல்ஹணர் எழுதிய 200 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முஸ்லீம்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்).

“ காஷ்மீர் வரலாற்றில் புகழ்பெற்ற லலிதாத்தியன், சந்திரபீடா ஆகியோர் ஒரு பனியா (வணிகர்) பெண்ணுக்குப் பிறந்தவர்கள்.அவள் ஏற்கனவே திருமணமாகி கணவனை விட்டுப் பிரிந்தவள் ( ஏழாம் நூற்றாண்டில்).

 

சக்ரவர்மன் என்பவன் தீண்டத்தகாத ஜாதி என்று சொல்லப்பட்ட டொம்பா பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அவளுக்கு உயர்ஜாதிப் பெண்கள் சாமரம் வீசினர். அவளுடைய சகோதரர்கள் அமைச்சர்களாக நியமிக்க ப்பட்டனர்” — என்று பல விஷயங்களை ராஜதரங்கினியில் இருந்து எடுத்துக் காட்டுகிறார்.

 

காச்மீர் பெண்கள் அழகில் எவ்வளவு சிறந்தவர்களோ அந்த அளவுக்கு சம்ஸ்கிருதப்பெயர்கள் சூட்டுவதிலும் சிறந்தவர்கள் என்று கல்ஹணர் குறிப்பிடும் பெண்களின் பெயர்ப்பட்டியலையும் தருகிறார். அதை இன்றைய ஆங்கிலப் பகுதிக் கட்டுறையில் காண்க. பின்னர் தமிழில் தருகிறேன்.

 

-சுபம்–

ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!

elephant 3

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!

 

கட்டுரையாளர் – S Nagarajan

 

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1581; தேதி 17 ஜனவரி 2015

 

by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்.

 

अन्धगज न्याय:

Andha gaja nyayah

அந்த கஜ நியாயம்

அந்த: – குருடன் ; கஜ – யானை

 

குருடன் யானையைப் பார்த்த கதை என்று பரவலாக அறியப்படும் நியாயம் இது.

சில குருடர்கள் யானை எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினர். ஒருவன் துதிக்கையைத் தொட, இன்னொருவன் யானையின் காதைத் தொட, இன்னொருவன் யானையின் காலைத் தொட அடுத்தவன் யானையின் வாலைத் தொட்டான்.பின்னர் தாங்கள் கண்ட்தை ஒவ்வொருவரும் விவரிக்க ஆரம்பித்தனர். முதலாமவன் யானை ஒரு கொழுத்த பாம்பு போல இருக்கிறது என்கிறான்.அடுத்தவன் அது ஒரு முறம் போல இருக்கிறது என்கிறான். அடுத்தவன் அது தூணைப் போல இருக்கிறது என்கிறான்..வாலைத் தொட்டவனோ அது ஒரு கயிறு போல இருக்கிறது என்கிறான். ஒருவர் சொன்னதை இன்னொருவர் மறுக்க பெரிய சண்டையே வருகிறது. தான் சொன்னது தான் சரி என்று ஒவ்வொருவனும் நம்பியதால் ஏற்பட்ட குழப்பம் இது.

இந்த நியாயம் ஒரு விஷயத்தின் ஒரு பகுதியையே ஒருவன் பார்க்கும் போது ஏற்படும் தவறை விளக்குகிறது.

ஒரு பக்கம் சார்புடைய, சரி இல்லாத, ஒரு பக்க பார்வையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.


blindmen-elephant

अन्धचटकन्यायः

Andha cataka nyayah

அந்த சடக நியாயம்

அந்த: – குருடன் சடக – குருவி

இது ஒரு குருடன் குருவியைப் பிடித்ததைச் சொல்கிறது. குருடனால் குருவியை எப்படிப் பிடிக்க முடியும்?

திடீரென்று எதிர்பாராமல் தற்செயலாக நிகழ்ந்தவற்றையும் தெய்வீகத்தால் நிகழும் தற்செயல் ஒற்றுமைகளையும் இந்த நியாயம் விளக்குகிறது. தற்செயலாக ஒருவன் ஒரு அரிய காரியத்தைச் செய்து விட்டால் அது அவனது சாமர்த்தியத்தினால் அல்ல; தெய்வீகத்தால் நிகழ்ந்த ஒன்று.

अरण्यरोदनन्यायः

Aranya rodana nyayah

அரண்ய ரோதன நியாயம்

அரண்யம் – காடு ரோதனம் – அழுதல்

காட்டில் உரக்க அழுவதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

ஒருவன் சிலரிடமிருந்து உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். அதுவோ வரவில்லை. அப்போது அவன் மனநிலையைச் சுட்டிக் காட்டுகிறது இது.

காட்டில் அழுது என்ன பிரயோஜனம்? உதவியோ வரப்போவதில்லை! அந்த நிலையை சுட்டிக் காட்ட இந்த நியாயம் பிரயோகிக்கப்படும்.


asoka

अशोकविनकान्यायः

asoka vanika nyayah

அசோக வனிகா நியாயம்

அசோக வன நியாயம் என அழைக்கப்படும் நியாயம் இது.

சீதையை அசோகவனத்தில் ராவணன் சிறை வைக்கிறான். சீதையை அசோகவனத்தில் ஏன் வைக்க வேண்டும். வேறு இடங்கள் இல்லையா? எத்தனையோ இடங்கள் இருக்கிறதே, லங்கையில்!

ஒரு விஷயத்தைச் செய்ய ஏராளமான வழிகள் இருக்கும் போது அத்தனை வழிகளும் நல்ல வழிகளாகவே இருக்கும் போது ஏதோ ஒரு குறிப்பிட்ட வழி சிறந்தது என்றோ உகந்தது என்றோ சொல்ல முடியாமல் இருக்கும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

अजाकृपाणकन्यायः

aja krpanaka nyayah

 

அஜா க்ருபானக நியாயம்

அஜ – ஆடு க்ருபானகம் – கூரிய கத்தி

ஆடும் கூரிய கத்தியும் என்ற இந்த நியாயம் ஆபத்தான விஷயங்களில் ஈடுபடக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்ட எழுந்த ஒன்று.

 

ஆடு ஒன்று கூரிய கத்தி முனையில் தன் கழுத்தை வைத்துச் சொறிந்து கொள்கிறது. இதன் விளைவாக கழுத்து அறுபட்டு இறக்கிறது.

 

இதே போல ஆபத்தான விஷயங்களில் தலையைக் கொடுத்து அழிந்து போவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. ஆபத்தான விஷயங்களில் வலிய ஈடுபடுதல் கூடாது.

இப்படிப்பட்ட நியாயங்கள் தலைமுறை தலைமுறையாக கிராமங்களிலும் நகரங்களிலும் பண்டிதர்களின் பட்டி மன்றங்களிலும் அரச சபைகளிலும் சுட்டிக் காட்டப்பட்டு வந்துள்ளன.

பல நூல்களிலும் ஒரு விஷயத்தை விளக்கும் போதோ அல்லது உரை எழுதும் போதோ இவை மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டப்படுவதையும் பழம் நூல்களின் வாயிலாக நாம் அறியலாம்.

 

பாரத வாழ்க்கைமுறையின் ஒரு உன்னதமான அறிவு முறை இந்த நியாயங்கள்!

contact swami_48@yahoo.com

தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

scale2

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 

  1. தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

Compiled by ச.நாகராஜன்

Post No. 1578; Dated 16th January 2015

 

“எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க!”

“அங்கே நீதி, நேர்மை நியாயம் எதுவுமே இல்லீங்க!”

“இது நியாயமா!’

அன்றாட வாழ்வில் நாம் இப்படி எத்தனை “நியாயமான” சொற்றொடர்களைக் கேட்டு வருகிறோம்! தீமையான நிகழ்வு எதையும் பார்த்து விட்டால் சாமானியனான எழுத்தறிவற்ற ஒருவனும் கூட “இது என்ன அநியாயமாக இருக்கிறதே” என்று ஆவேசப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த நியாய உணர்வு பாரத தேசமெங்கும் வாழும் அனைவருக்கும் பொதுவான பண்பாட்டுடன் வந்த ஒரு சொல். “ஆ ஸேது ஹிமாசல” – அதாவது ஸேது முதல் இமயம் வரை ஒரே பண்பாடு தான் என்பதற்கான எத்தனையோ காரணங்களில் இங்கு திகழும் பொதுவான நியாயங்களும் ஒரு காரணமே!

பொதுவான நியாயமா? அது என்ன? என்று வியப்போருக்காகவே இந்தத் தொடர்!

இந்த நியாயங்கள் இன்றைய இந்தியாவில் நீதிமன்றங்களால் கூட வெகுவாக அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகின்றன.

சில நியாயங்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம்:

  1. तुलोन्नमन नयायः

tulonnamana nyayah

துலோன்னமன நியாயம்

தராசுத் தட்டை அடிப்படையாக க் கொண்டு எழுந்த நியாயம் இது. ஒரு தராசின் இரு தட்டுகளில் ஒன்று கீழே இறங்கும் போது மற்றொரு தட்டு மேலே எழுகிறது.

தராசு இரண்டும் சமமாக இருக்க வேண்டும் எனில் அதில் உள்ளவையும் சமமாக இருக்க வேண்டும். அது போல நம்முடைய முன்னேற்றமும் கூட சமமாக சீராக அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும். ஒன்றில் மட்டும் இருந்தால் இன்னொரு தட்டு உயரத்தானே செய்யும்! ஒன்றில் மட்டும் உயர்ந்திருந்தால் போதாது, அனைத்திலும் சீரான முன்னேற்றம் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

எடுத்துக்காட்டாக குழந்தைகள் படிக்கும் போது ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று மற்றதில் குறைந்த  மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அங்கு இந்த துலோன்னமன நியாயம் சொல்லப்படும்.

(துலா – தராசு)

Common_Crow_01

  1.  काकाक्षिगोलकन्यायः

kakaksigolaka nyayah

காகாக்ஷிகோலக நியாயம்

காக்கைக்கு ஒரு கண் தான் உண்டு. ஆனால் அது கண்ணை ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரை தேவைப்பட்ட போது சுழற்றிப் பார்க்கும். இதே போல ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ ஒரு வாக்கியத்தில் ஒரு முறைதான் பிரயோகிக்கப்பட்ட போதிலும் கூட அது தேவைப்பட்டால் இரண்டு காரணங்களுக்காக உபயோகிக்கப்படலாம்.

  1. कारणगुणप्रक्रमन्यायः

karanagunaprakrama nyayah

காரண குண ப்ரக்ரம நியாயம்

காரண காரிய விளைவைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. ஒரு காரணத்திற்குரிய சில அம்சங்கள் அதன் விளைவில் ஏற்படுவதை இது சுட்டிக் காட்டுகிறது.

  1. काकदन्तपरीक्षान्यायः

kakadantapariksa nyayah

காக தந்த பரீக்ஷா நியாயம்

ஒரு காகத்தின் பல்லைப் பரிசோதிப்பது பற்றிய நியாயம் இது. பயன்படாத ஒரு விஷயத்தை ஆராய்ந்தால் அல்லது செய்தால் யாருக்கு என்ன லாபம்! அதைச் செய்ய முயலும்போது இந்த காக தந்த பரிக்ஷா நியாயம் சுட்டிக் காட்டப் படுகிறது.

(தந்தம் – பல்)

Cut_sugarcane

  1. आक्षुरसन्यायः

iksurasa nyayah

இக்ஷு ரஸ நியாயம்

கரும்புச் சாறை அடிப்படையாக க் கொண்ட நியாயம் இது. கரும்பைச் சாறை எடுப்பதற்காக கரும்பை நசுக்கி ஒரு உருளையில் விட்டி கடைசிச் சொட்டு சாறு வரை எடுத்து விடுகிறோம். அது போல சில சமயங்களில் சில விஷயங்களில் ஒரு பலனைப் பெற கடுமையான திடமான வலுவான நடவடிக்கையை எடுத்தால் தான் எண்ணிய பலன் கிடைக்கும்.

(இக்ஷு ரஸம் – கரும்புச் சாறு)

 

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகளில் வளவள என்று பேசாமல் இந்த நியாயங்களைச் சுட்டிக் காட்டி விட்டால் சொல்ல வேண்டியதை நறுக்கென்று சொல்லி விடலாம் இல்லையா!

 

பாரத தேசத்தில் இப்படி நியாயங்களைச் சுட்டிக் காட்டி நல்நெறிப் படுத்துவது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வாழ்க்கை முறை!

 

*****************

contact swami_48@yahoo.com

காதா சப்த சதியிருந்து சில சுவையான கவிதைகள்

and1

Godavari basin scenery

கட்டுரையாளர் லண்டன் சுவாமி நாதன்

கட்டுரை எண் — 1564; தேதி  ஜனவரி 11, 2015

 

நானும் எனது தம்பி சூரியநாராயணனும் ஆந்திரத்தில் உள்ள மந்திராலயம் என்னும் தலத்துக்குச் சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதியைத் தரிசித்தோம். அப்பொழுது வரிசையில் நின்று கொண்டிருந்தபோது  தமிழில் பல கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம் அருகில் இருந்த ஒரு பெண்மணி நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வருகிறீர்களா என்று கேட்டார். எங்களுடைய தூய மதுரைத் தமிழை — செந்தமிழை — அவர் கேட்டு மதுரையா என்று பேச்சைத் தொடர்ந்தார்.

 

நாங்களும் விடுவதாக இல்லை. உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்றோம். பிறகு தெரிந்தது அவர் பள்ளத்தூர் கல்லூரி முதல்வர் டாட்டர் சரசுவதி ராமநாதன் என்று. மதுரையில் தினமணிப் பத்திரிக்கையில் எனது தந்தை  வெ.சந்தானம் ஆண்டுதோறும் சுதந்திர தின பட்டி மன்றம் நடத்தி தமிழ் நாடு முழுதும் — பட்டி தொட்டிகள் எல்லாம் — பட்டிமன்றம் என்பதைப் பரப்பினார். அப்பொழுது பெரிய தமிழ் அறிஞர் கூட்டம் மதுரையில் எங்கள் தினமணி அலுவலகத்தில் கூடும். அதில் பல முறை பங்கேற்றவர் டாக்டர் சரசுவதி ராம நாதன். இதை அறிந்தவுடன் அவருக்குப் பெரிய மகிழ்ச்சி. நல்ல தமிழ் பேச்சாளர். அதிக புலமை மிக்கவர்.

நாங்கள் ஆந்திர மண்ணில் இருந்து கோதாவரி , துங்கபத்திரை நதிக்கரை நாகரீகம் பற்றிப் பேச ஆரம்பித்தோம். நான்,  காதா சப்தசதி என்னும் நூலை ஆங்கில மொழிபெயர்ப்பாக லண்டன் பலகலைக் கழக நூலகத்தில் எடுத்துப் படித்தைச் சொல்லி இது தமிழில் வந்தால்  ந ன்றாக இருக்குமே என்றேன். மு.கு ஜகன்நாதராஜா என்ற பேரறிஞர் இந்த பிராக்ருத நூலை  தமிழில் மொழி பெயர்த்து இருப்பதாகவும் அதன் பிரதி தன்னிடம் இருப்பதாகவும் சொல்லி அதை மதுரை சென்ற உடனே எனது சகோதரர் சூரிய நாராயணனுக்கு அனுப்பி வைத்தார்.

and3

எனது சகோதரன் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதல்வராக இருந்ததால் அதை அந்த முகவரிக்கு  அனுப்புவது  அவருக்கு  எளிதாக இருந்தது. அவர் சொன்ன சொல் தவறாமல் எந்த வேகத்தில்  அனுப்பினாரோ அதே வேகத்தில் என் தம்பி அதை லண்டனுக்கு வருவோர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தான். இது எல்லாம் நடந்தது 15 அல்லது, 20 ஆண்டுகளுக்கு முன். அப்போது படித்து நான் எடுத்திருந்த சில நோட்ஸ்களை — குறிப்புகளை கடந்த சில நாட்களில் நான்கு கட்டுரையில் கொடுத்தேன். டாக்டர் சரஸ்வதி ராமனாதனுக்கு நன்றிகள்!!

 

இதோ ஐந்தாவது கட்டுரை:

 

இந்த சப்த சதி 700 காதல் கவிதைகள் அடங்கியது என்பதால் படிக்காமல் இருந்து விடாதீர்கள். அதில் சங்கத் தமிழ் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆராய ஏராளமான விஷயங்கள் உள்ளன. அக்கால சமுதாய சூழ் நிலை பற்றி அறியவும் நிறைய செய்திகள் உண்டு.

 

விரசமில்லாத சில செய்திகளை மட்டும் காண்போம். பிராக்ருதக் கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர்  மு.கு.ஜகன்னாதராஜா:

1)அந்திமாலை அஞ்சலி நீரில்

உமையவள் தன் நிழலுருவெழில் கண்டே

இதழ் முணு முணுப்புறும் விதம்பொய் காட்டி

மந்திரம் மறந்த மகேசனை நினைவாம் (700)

அந்தி மாலைப் பொழுதில் சந்தியாவந்தன நீரில் உமாவின் உருவம் பிரதிபிம்பமாகத் தெரிந்தவுடன் காயத்ரி மந்திரம் சொல்வது  போல பொய்யாக சிவன் வாய் அசைந்தது.

 

இதுதான் கடைசி கவிதை. முதல் கவிதையிலும் கவி —  மன்னர் ஹாலன்— சிவனை நினைவு கூர்ந்தார். கடைசியிலும் அவரை நினைத்து கவிதை நூலை முடிக்கிறார். கடவுள் வாழ்த்தும், மங்களமும் சிவன் பெயரில்!


Indian women carry drinking water in the Medak district of Andhra Pradesh

2)மானுடர் உலகில் வாழ்வோருள்ளே

குருடரும் செவிடரும் பெறும்பேருடையர்!

தீயவர் பால் வளர் செல்வம் காணார்

புறம் பழிப்பார் சொல் அறவே கேளார்.(695)

 

இவ்வுலகில் குருடரும் செவிடரும் கூட ஒருவகையில் பாக்கியசாலிகளே! ஏனெனில் கயவர்கள் இடத்தில் செல்வம் வளர்வதைக் குருடர்கள் காண மாட்டார்கள். முதுகுக்குப் பின்னால் புறம்பேசுவார் பேச்சு  — செவிடர்கள் காதில் விழாது

3)மக்கள் குரலிடைத் தொக்குள தேனும் நின்

இன்குரல் தனைத்தன் இருசெவியாரப்

பருகும் நீருடன் பால் கலந்திருந்தும்

குருகு பிரித்திடும் கொள்கையினிவளே

 

பாலையும்  நீரையும் சேர்த்து வைத்தால் அன்னப் பறவை அதில் பாலை மட்டும் பிரித்து உண்ணும். அது போல நமது தலைவி எவ்வளவு இரைச்சலுக்கு  நடுவிலும் காதலநுடைய  குரலை மட்டும் பிரித்துக் கேட்டு மகிழ்கிறாளே என்று வியக்கிறாள் தோழி.


andhar painting 1

4)இங்கே துயில்வள் என் மாமி!

 

இங்கே யானே! இங்கே சுற்றம்!

 

பயணி! இரவில் பார்வையிலாதோய்

என் படுக்கையில் வீழ்ந்திடல் வேண்டா!

கணவன் இல்லாத நேரத்தில் ஒரு வழிப்போக்கன் வீட்டில் வந்து தங்கினான் இதோ பார் இரவில் கண் தெரியாமல் என் மீது விழுந்து விடாதே. இங்கே  நான் படுப்பேன். அங்கே படுப்பவள் என் மாமி. அங்கே  மற்ற உறவினர்கள் படுப்பர்.

 

வழிப்போக்கனுக்கு அவளது ரகசிய மொழி புரிந்தது! அதை தொனிப்பொருள் என்பர். தொன்யாலோகம்  முதலிய வடமொழி அலங்கார சாத்திர பேரசிரியர்கள் இதை எடுத்துக் காட்டாகக் காட்டுவர்.

5)காணின் இன்பம் கண் கட்காகும்

நினைத்தால் மனத்தில் நிலைத்த இன்பம்

உரையாடலிலோ உண்ர்செவிக் கின்பம்

அன்பினர் என்றும் இன்பினராமே

 

அன்புடையாரைக் கண்டாலும் நினைத்தாலும் அவரோடு உரையாடினாலும் இன்பம். அன்புடையார் நட்பை கைவிடக் கூடாது.

 

இதே கருத்து அவ்வையார் வாக்கிலும் வருகிறது:

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க

நல்லார் சொல் கேட்பதும் நன்றே

இணங்கி இருப்பதுவும் நன்றே


andhra vendor

Andhra vendor

6)மரணப் படுக்கையில் வலிமை கூட்டி

மகனை அழைத்துத் தகவுடன் கூறும்

நின்செயல் அமைதல் நீர்க! நீ என்

நாம முரைத்திட நாணுறா வாறே

 

தலைவன் மரணப் படுக்கையில் கிடந்தான். பேசமுடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு மகநை அழைத்து நீ எந்தச் செயல் செய்தாலும் அதை என் பெயர் சொல்ல வெட்கப்படாதபடி செய்யவேண்டும். அதாவது என் பெயருக்கு இழுக்கு வராத செயல்களைச் செய்யவேண்டும்.

7)விலகி நிற்கும் உலுக்கும் கிளையை

நகத்தால் கீறிக் குதிக்கும் குரங்கு!

பண்டு கடித்த வண்டெனக் கருதி

நாவற் கனி தொடாதே கிடந்திடுமே

 

ஒரு குரங்கை வண்டு கடித்தது. ஒரு மரம் முழுதும் நாவல் பழங்கள். அவைகளை வண்டு என்று பயந்து குரங்கு அந்த மரத்தை உலுக்கி அட்டஹாசம் செய்தது!

 

நாவல் பழத்தை வண்டு என்று கருதும் நகைச் சுவை காட்சி தமிழ் இலக்கியத்திலும் உண்டு. (தமிழ் இலக்கியத்தில் நகைச் சுவை என்ற எனது கட்டுரையைக் காண்க)

8)நாவினிலே இனிமை நல்கி உள்ளே

மீவிச் செயலற்று அமைந்து மேலும்

துயர்தரச் சுவைதரும் இயல்பினதாய

கரும்பு போல்வர் கயவருமீங்கே

 

கரும்பு — நாவுக்கு மட்டும் இனிக்கும். உள்ளே போனவுடன் இனிக்காது. அதுவும் பல்லால் கடித்துச் சாறு எடுத்தால்தான் இனிக்கும். அதுபோல கீழோரும் நாவில் இனிப்பாகப் பேசுவர். செயலில் ஒன்றும் செய்யார். கரும்பு போல அவர்களைக் கசக்கினால்தான் பயன்  தருவர்.

 

வள்ளுவரும் இதே கருத்தை வலியுறுத்தும் குறள் இதோ:

 

சொல்லப் பயன்படுவர் மேலோர் கரும்பு போல்

கொல்லப் பயன்படும் கீழ் (குறள் 1078)

ndhra village

9)கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செல்லும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடர் ஓவியத்தே! — (ஹாலன் 1-35)


இந்த ஓவியச் செய்தியைத் தனிக் கட்டுரையாக கொடுத்துவிட்டேன். கணவன் இல்லாத நேரத்தில் கொழுந்தன் ஒரு விதமாகப் பார்க்கவே, அவள் லெட்சுமணன் போல இருங்கள் என்று ஓவியத்தின் மூலம் செய்தி கொடுக்கிறாள்.

 

இது போல பல கவிதைகளைப் படித்து ரசிக்கலாம்.

 

-சுபம்-

kolluru bird

River Godavari, Kolluru

புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை !

gatha_sapt

கட்டுரை எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண் —  1551; தேதி:6 ஜனவரி 2015

பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது. இதில்   சங்க இலக்கிய அகத்துறை பாடல்களைப் போலவே காதல் பாடல்கள் உள்ளன. 700 பாடல்கள் இருப்பதால் `சப்த சதி`  என்று பெயர் இட்டனர். இதைச் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலன் என்ற சாதவாஹன மன்னன் தொகுத்தார் என்பர். இந்த நூல் தோன்றிய வரலாறு ஒரு சுவையான வரலாறு ஆகும். இந்தப் புத்தகத்தில் ஹாலனின் சுமார் 40 கவிதைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் முதலில் அவனுக்குக் கவிபாடும் திறமை கிடையாது.

சாதவாஹனனின் மனைவியின் பெயர் மலயவதி. சம்ஸ்கிருதப் புலமை பெற்ற அறிவாளி. இவ்விருவரும் நீர்விளையாட்டிற்காக ஆற்றங்க்கரைக்குச் சென்று ஒருவர் மீது ஒருவர் நீரை இறைத்து விளையாடினர். அப்பொழுது அவனிடம் அவள் சொன்னாள்: மோதகஸ் தாடய என்று — இதன் பொருள்- மா உதகஸ் தாடய — அதாவது “தண்ணீரால் அடிக்காதீர்கள்”. ஆனால் மன்னனுக்கு வடமொழி தெரியாததால், அவள் மோதகம் (கொழுக்கட்டை) கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு , உடனே கொழுக்கட்டை கொண்டுவாருங்களென்று கட்டளை இட்டான. அவள் குபீர் என்று சிரித்து விட்டாள். வடமொழி சந்தி இலக்கணப்படி மோதக என்பதை மா+உதக என்று பிரிக்க வேண்டும்.

gss 2

உடனே ஹாலனுக்கு அவமானம் தாங்காமல்கல்வி வெறி பிடித்தது! எப்படியாவது சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ஆறே மாதங்க்களில் தனக்கு யார் சம்ஸ்கிருதம் கற்றுத் தரமுடியும் என்று சவால் விட்டான். சர்வ வர்மா என்ற பண்டிதன் தான் கற்பிக்க முடியும் என்றார். அவரது சபையில் இருந்த பிரபல எழுத்தாளர் குணாட்டியரோ முடியவே முடியாது என்றார். அவர்தான் பிருஹத் கதை ( பெருங்கதை) எழுதிய பேரறிஞர். வடமொழி இலக்கணம் கடினமானது என்றும் ஆறு மாத காலத்தில் சர்வ வர்மன் கற்றுத்தந்தால் இனிமேல் தான் சம்ஸ்கிருதத்தில் எழுதுவதையே நிறுத்தி விடுவதாகவும் சூளுரைத்தார்.

 

சர்வ வர்மன் தான் சொன்னபடி ஆறே மாதங்களில் ஹாலனுக்கு சம்ஸ்கிருத இலக்கணத்தைக் கற்றூக் கொடுத்தார். குணாட்டியர் சொன்ன சொல் தவறாமல் அந்த நாட்டைவிட்டே வெளியேறி வேறிடத்திற்குச் சென்றார். பைசாச மொழியில் பெருங்கதை என்னும் நூலைச் செய்தார். குணாட்டியர்,  தான் ஏற்கனவே எழுதிய பெருங்கதையை எரிக்க எத்தனித்தபோது அதை ஹாலனே தடுத்து நிறுத்தி புத்தகத்தைக் காப்பாற்றினார்.

காலப் போக்கில் ஹாலனே பெரும் கவிஞன் ஆனான்

ஏராளமான புலவர்களை ஆதரித்து கவி வத்சலன் என்ற பெயரும் எடுத்தான். விக்ரமாதித்தன் போலவே இவனும் பெரிய அறிவாளி. அவனைப் போலவே இவனது சபையிலும் அறிஞர்கள் இருந்தனர். விக்ரம சஹாப்தம் போலவே சாலிவாஹன சஹாப்தம் என்றும் துவக்கப்பட்டது. ஹாலன் தொகுத்த முக்கிய 700 பாடல்கள் காதா சப்த சதியில் இருக்கின்றன.


gss4

விக்ரமாதித்தன்  சபையை அலங்கரித்த காளிதாசனே இவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தந்திருக்க வேண்டும். விக்ரமாதித்தன் ஆயிரகணக்கில் பொற்காசுகளைக் கவிஞர்களுக்குக்  கொடுத்த ஒரு பாடலும் இந்த சப்த சதியில் இருப்பது இதை மெய்ப்பிக்கிறது. மேலும் காளிதாசனின் உவமைகளை பல ஊர் பேர் தெரியாத புலவர்கள் இதில் (திருடி) பயன்படுத்தியுள்ளனர்.



contact swami_48@yahoo.com

gss3

வள்ளுவர் ‘காமெடி’: சிரிப்பு எத்தனை வகை?

laugh5

President of USA, Obama, laughing

Written by London Swaminathan
Research Article No.1547; Date: 5th January 2015

சிரிப்பது எவ்வளவு அவசியம் என்று இப்போது மருத்துவர்களும் உளவியல் அறிஞர்களும் சொல்லுகின்றனர். வள்ளுவன் இதை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டான. அது மட்டுமல்ல சிரிப்பில், புன்முறுவலில் எத்தனை வகை இருக்கிறது என்பதையும் வெவ்வேறு குறளில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்திக் காட்டுகிறான்.

 

காதலியின் புன்முறுவல், நண்பனின் சிரிப்பு, எள்ளி நகை ஆடுவோரின் ஏளன, இளக்காரச் சிரிப்பு, பகைவர்களின் பொய்யான சிரிப்பு, உண்மையான சிரிப்பு என்று பல இடங்களில் பல பொருள் தொனிக்கப் பாடுகிறான். வள்ளுவனுக்கு ‘காமெடி’ என்றால் என்ன என்பது நன்றாகவே தெரிந்திருக்கிறது. கஷ்டம் வந்தாலும் சிரியுங்கள். அதுதான் சிறந்த மருந்து என்று சொல்லுகிறான். அவன் பெரிய மன நோய் நிபுணன் என்றும் தெரிகிறது.

 

நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும் பாற் பட்டன்று (999)

 

மற்றவர்களோடு சந்தோஷமாகப் பேசிப் பழகாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம், பகல் நேரத்திலும் கூட இருட்டாகவே இருக்கும்.

இந்தக் குறள் மூலம் சிரிப்பு என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

laugh3

இடுக்கண் வருங்கால் நகுக !!

 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்பது இல் (621)

வேலை செய்கையில் கஷ்டம் வந்தால் அதை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டும். அந்த சந்தோஷம்தான் சிறந்த ஆயுதம். அதைவிடச் சிறந்த துணை வேறு ஒன்றும் இல்லை. வள்ளுவன் பெரிய ‘சைக்காலஜிஸ்ட்’ என்பது இதில் தொனிக்கிறது.

 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு (786)

வெளியே சிரித்துச் சிரித்துப் பேசினால் அது உண்மையான நட்பு ஆகிவிடாது. மனதில் மகிழ்ச்சி நிலவ பழக வேண்டும்.

laug1

குடிகாரன் காமெடி

அந்தக் காலத்திலேயே குடிகாரன் காமெடி நிறைய உண்டு என்றும் தெரிகிறது. இன்று சினிமாவிலும் நிஜ வாழ்விலும் பார்க்கிறோம்.

 

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண் சாய்பவர் (927)

எங்கே கள் கிடைக்கும் என்று மறைவாக அறிந்து, யாருக்கும் தெரியாமல் அதைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவனைக் கண்டு ஊரே சிரிக்கும்.

 

போலிச் சிரிப்பு !

 

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப்படும் (824)

வெளியிலே சிரித்து சிரித்துப் பேசி, பின் பக்கமாக நமக்கு குழிபறிக்கும் வஞ்கர்களிடம் மிகவும் பயப்படவேண்டும். நேருக்கு நேர் குறைகூறுவோர் நல்ல எதிரிகள்! மறைவாக எதிரி வேலை செய்பவர்களைக் கண்டால் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. குறள். 817-ல் இதையே சொல்கிறார்.

 

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றாதவர் (187)

சந்தோஷமாகப் பேசி நண்பர்களாக ஆவது சிறந்தது. இது தெரியாத புறங்கூறுவோர் —- (நமக்குப் பின்னால் நம்மைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லுவோர்) — உறவினர்களைக் கூடப்பிரித்து விடுவார்கள்.

 

மிகச் செய்து  தம் எள்ளுவாரை நகச் செய்து

நட்பினுள் சாப்புல்லற்பாற்று (829)

 

வெளியே நண்பர் போல நடித்து உள்ளத்தில் வெறுப்பு வைத்து இருப்பவரை சிரித்துக் கொண்டே விலக்கிவிட வேண்டும்.

laugh2

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு (782)

 

சிரித்து மகிழ்வதற்கு மட்டும் நண்பர்கள் அல்ல;

நண்பர்கள் தப்பு செய்தால் இடித்துரைத்து  நல்வழிப்படுத்த வேண்டும்.

 

பூமாதேவியும், பஞ்சபூதங்களும் சிரிக்கும் !

 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் (271)

பொய்யான ஒழுக்கம் (போலி சந்யாசி) உடையவனைக் கண்டு, அவன் உடம்பில் இருக்கும் ஐம்பூதங்களும் சிரிக்கும்.

 

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்  (1040)

உழைக்காமல், என்னிடம் பணமே இல்லையே, என்று வருந்தும் சோம்பேறிகளைக் கண்டு பூமாதேவி சிரிப்பாள்.

 

கோபம் என்பது, முகத்தில் சிரிப்பினையும், உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும். இதைவிடப் பெரிய பகைவன் யார்? (304)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற

 

நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகை என்ப வாய்மைக் குடிக்கு (953)

முக மலர்ச்சி, தயாள குணம், இனிமையாகப் பேசுதல், மற்றவர்களை மட்டம் தட்டாமல் பழகுதல் ஆகிய நான்கு குணங்களும் நல்ல குடியில் பிறந்தோருக்கு அடையாளங்கள்.

laugh4

பெரியவர்கள் முன்னிலையில் சிரிக்காதீர்கள் !

மன்னர்கள் ( இப்போது பெரியவர்கள், அரசாங்கத்தில் பதவியில் உள்ளவர்கள், முதலமைச்சர்கள் )  முன்னிலையில் சிரிக்கக்கூடாது, பிறர் காதில் ரகசியமாக எதுவும் சொல்லக்கூடாது என்றும் வள்ளுவர் எச்சரிக்கிறார் (694)

 

தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி

நன்றி பயப்பதாம் தூது (685)

ஒரு தூதன் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும். சொல்லக் கூடாதவற்றை நீக்க வேண்டும். பகை அரசர் மகிழும் படி பேச வேண்டும். தனது அரசனுக்கு நன்மை கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

laugh7

காதலிகளின் புன்முறுவல்

 

காமத்துப் பாலில் குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் மூன்று குறள்களில் (1094, 1095, 1098) நகும் என்ற சொல் வருகிறது.

நான் அவளைப் பார்க்கும் போது வெட்கத்தால் நிலத்தைப் பார்ப்பாள். நான் பார்க்காத சமயத்தில் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்வாள் (1094)

நேராகப் பார்க்காமல், காணாதவள் போல ஓரக் கண்களால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள் (1095)

 

நான் அவளை ஆசையோடு பார்ப்பேன். அவள் என் மீது கருணை கொண்டு ஒரு மாதிரியாக சாய்த்துப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள். அப்போது அவள் மயில் போல இருப்பாள் (1098)

 

கதுமெனத் தாம் நோக்கி தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து (1173)

முன்பு காதலரைத் தேடி என் கண்கள் ஓடின. இப்போது காதலரைக் காணாது கண்ணீர் விடுகிறன. எனக்கே சிரிப்பு வருகிறது.

laugh8

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு (1140)

என் கண்களுக்கு முன்னாலேயே என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். எனக்கு வந்த கஷ்டம் இவர்களுக்கு வந்தால்தான் தெரியும்! (ஒரு பெண்ணின் புலம்பல்)

குறளில் சிரிப்பு, புன்முறுவல், முகமலர்ச்சி பற்றி வரும் இடங்கள்:–

 

நக=மகிழ 187, 685, 829 மலர 786, சிரிக்க 1173

நகப்படுவர் = இகழப்படுவர் 927

நகல் = மனத்தில் மகிழ்தல் 999

நகா அ = சிரித்து 824

நகுக = மகிழ்க 621

நகுதல் = நகையாடி மகிழ்தல் 784

நகுப = நகைக்கின்றார் 1140

நகும் = இகழ்ந்து சிரிக்கும் 271; மகிழும் 774, இகழ்ந்து தனக்குள் சிரிக்கும் 1040, மகிழும் 1094, 1095, 1095(புன்முறுவல்

laugh6

World Laughing Day, Mumbai

நகை = சிரிப்பு 182, 304, 694, 817, விளையாட்டு 871, 878, 995 முகமலர்ச்சி 953, சிரிப்பு 1274

வள்ளுவர் காலத்தில் சிரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பதை இவை காட்டும்.

–சுபம்–

 

சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசய மனிதர்கள்! -1

natasha demkina.2

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1460; தேதி 5 டிசம்பர், 2014.

“என்னால் விளக்கமுடியாத எதையும் ஃப்ராட் என்று சொல்லும் காலத்துகேற்ற முட்டாள்தனத்தை என்னால் செய்ய முடியாது” – கார்ல் ஜங் (இங்கிலாந்து சைக்கிகல் ரிஸர்ச் சொஸைடியில் 1919ஆம் ஆண்டு பேசியது)
விஞ்ஞானத்திற்கு சவாலாக விளங்கும் சூப்பர் சக்திகளைக் கொண்டுள்ள பலரையும் பார்த்து விஞ்ஞானம் வியப்பதோடு அவர்களின் மீது ஆராய்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளது, இப்போதும் நடத்தி வருகிறது. அவர்களில் குறிப்பிடத் தகுந்த சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

எக்ஸ்ரே கண்கள் கொண்ட நடாஷா
ரஷிய பெண்மணியான நடாஷா டெம்கினா மனிதர்களின் உடலின் உள்ளேயும் பார்க்க வல்லவர். அதாவது எக்ஸ்ரே கண்களைக் கொண்டவர். மனிதர்களின் உடல் உறுப்புகளைப் “பார்த்து” அவர்களுக்கு என்ன வியாதி என்பதை அவர் கண்டுபிடித்து விடுவார். பத்து வயது வரை எல்லா சிறுமிகளையும் போல அவரும் சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால் அந்த வயதில் திடீரென்று அவருக்கு அபூர்வ சக்தி வந்து சேர்ந்தது.!

அந்த சக்தி வந்ததைப் பற்றி நடாஷாவே இப்படிக் கூறியுள்ளார்:” வீட்டில் எனது தாயாருடன் இருந்த போது ஒரு நாள் எனக்கு ஒரு காட்சி விரிந்தது. எனது தாயாரின் உடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவருடைய உறுப்புகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது இதைக் காண்பதற்காக எனது சாதாரணக் காட்சியிலிருந்து மாறி ‘மெடிகல் விஷனைப்’ பார்க்க மாற வேண்டியிருக்கிறது. நான் பார்ப்பவரின் உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் ஒரே ஒரு வினாடி வண்ணப்படமாக தெரியும். பின்னர் அதைப் பற்றிய என் ஆய்வை மேற்கொள்வேன்”

நடாஷாவின் இந்த அதிசயப் பார்வைக்கு விஞ்ஞானத்தில் இதுவரை விளக்கம் இல்லை!
natasha demkina

காந்த உடல் கொண்ட லியூ தோ

மலாசியாவைச் சேர்ந்தவர் லியூ தோ. உலோகத் துண்டுகளை அவர் உடலோடு ஒட்டிக் கொள்வார். விஞ்ஞானிகள் அவர் உடலை ஆராய்ந்தனர். ஆனால் காந்த சக்தியை அவர் எப்படி எதனால் கொண்டுள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க இதுவரை முடியவில்லை. எப்படி தோலுடன் ஏராளமான உலோகத் துண்டுகளை ஒட்ட வைத்துக் கொண்டு அவர் பாலன்ஸுடன் இருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. காந்த சக்தி மனிதர் லியூ தோ விஞ்ஞானத்திற்கு ஒரு புதிய சவால்!

magnetic-man Liew Thow
Magnetic man Liew Thow

அபார நினைவாற்றல் கொண்ட டேனியல் டெம்மெட்
உலகின் அபார நினைவாற்றல் மேதை என்ற புகழைக் கொண்டிருப்பவர் டேனியல் டெம்மெட்! ஏராளமான தகவல்களை இவர் நினைவில் தக்க வைத்துக் கொள்கிறார். ‘பை’ என்ற கணிதக் குறியீட்டை சாதாரணமாக 3.142 என்று சொல்லி முடிப்பது வழக்கம். ஆனால் இவரோ 22,514 இலக்கம் வரை பையின் இலக்கங்களைக் கூறுகிறார். ஐந்து மணி ஒன்பது நிமிடங்களில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி இந்த நிகழ்ச்சியை நிகழ்த்தி அறிவியல் உலகையே அதிசயிக்க வைத்தார். இப்படிப்பட்ட அபூர்வ நினைவாற்றல் எப்படி அவருக்கு வாய்த்துள்ளது என்பதை ஒருவராலும் விளக்க முடியவில்லை. ஆனால் இவரோ தன் சக்தியைப் பற்றி,” எனது மனத்தில் பத்தாயிரம் எண்கள் முழுதாக அதன் உருவம், வண்ணம், வடிவம் ஆகியவற்றுடன் தெளிவாகத் தெரிகிறது.” என்கிறார். இதனால் அவருக்கு எல்லா விஷயங்களையும் தெளிவாக மற்ற சாதாரண மனிதரை விட அதிகமாக நினைவில் கொள்ள முடிகிறதாம்.

அவரது நினைவாற்றல் சக்தியின் படி 289 என்ற எண்ணின் சித்திரம் மிகவும் கோரமான ஒன்று. 333 என்ற எண்ணின் சித்திரமோ மிகவும் கவர்ச்சிகரமானது. ‘பை’ மிகவும் அழகிய ஒன்று. இந்த எண்களின் சக்தியினால் தான் நியூமராலஜி எனப்படும் எண் சாஸ்திரமும் எண்களின் அலைவெண்களும் தர்க்க ரீதியான உலகத்தில் தன் சக்தியைக் காண்பிக்கிறதோ என்னவோ!
அபூர்வமான நினைவாற்றல் மேதையான டேனியல் டெம்மெட்டும் அறிவியலுக்கு இன்றைய சவால் தான்!

தூக்கம் தேவையில்லாத அல் ஹெர்பின்
தூங்காமல் யாராலாவது உலகத்தில் வாழ முடியுமா? முடியும் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறார் அல் ஹெர்பின்!

இவருக்கு அபூர்வமான இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதி இருந்தது என்கின்றனர்! ஒரு சமயம் அவர் தொடர்ந்து பத்து வருட காலம் தூங்காமல் இருந்தாராம்! இதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர்கள் அவரை ஆய்வு செய்வதற்காக அழைத்தனர்.

அல் ஹெர்பினின் வீட்டில் படுக்கையோ அல்லது படுக்கை அறையோ இல்லாதது கண்டு அவர்கள் திகைத்தனர்! வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் அல் ஹெர்பின் ஒரு நாற்காலியில் அப்படியே அமர்வது வழக்கம். அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்குச் செல்லும் நேரத்தில் எழுந்திருந்து வேலைக்குச் செல்வார்! நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த அவர் பழுத்த வயதான 94ஆம் வயது முடிய வாழ்ந்தார்.
superpowers-83276664710

எஃகினால் ஆன வயிறுள்ள மைக்கேல் லோடிடோ

சாதாரண மனிதர்கள் ஜீரணிக்க முடியாத அனைத்தையும் ஜீரணிக்கும் வல்லமை வாய்ந்த வயிறை உடையவர் மைக்கேல் லோடிடோ. கண்ணாடித் துண்டுகள், உலோகங்கள், ரப்பர் மற்றும் இதர பொருள்கள் அனைத்தையும் ‘அல்வா’ போல விழுங்கும் இந்த அபூர்வ மனிதரைக் கண்டு விஞ்ஞானம் வியக்கிறது. இதனால் இவருக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லை என்பது கூடுதல் போனஸான அபூர்வ விஷயம்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விண்ணிலிருந்து விண்கற்கள் (meteorites) ஒருபோதும் பூமியில் விழுவதில்லை, விழவும் விழாது என்பது பழைய கால நம்பிக்கை. விண்கற்கள் பூமியில் விழுந்த சம்பவங்களை அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் அந்தக் காலத்தில் அது கட்டுக்கதை என்றே கூறி வந்தனர். கடவுள் பூமியில் (மனிதர்களின் தலை மீது) ஒருபோதும் கற்களைப் போட மாட்டார் என்பது மதவாதிகளின் கொள்கையாக இருந்தது! பிரான்ஸ் நாட்டில் ப்ரெஞ்ச் அகாடமி ஆஃப் சயின்
ஸஸ்,” வானத்திலிருந்து கற்கள் விழவே விழாது” என்று அறுதியிட்டு உறுதி கூறியது.

இதை உடைத்தவர் எர்னஸ்ட் கால்ட்னி என்னும் இயற்பியல் விஞ்ஞானி. ஒரு தகட்டின் மீது நுண்துகளைப் பரப்பி வெவ்வேறு ஒலி அலைகளை ஒலிக்கச் செய்து நுண்துகள்கள் வெவ்வேறு வடிவம் எடுப்பதை நிரூபித்துக் காட்டிய மாமேதை இவர். வைப்ரேஷன் எனப்படும் அதிர்தல் பற்றிய அபூர்வ விஷயங்களைத் தன் சோதனைகள் மூலம் இவர் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார்..1794இல் விண்கற்கள் விண்ணிலிருந்து வந்து பூமியில் விழுகின்றன என்பதை ஒரு நூல் வாயிலாக வெளியிட்டார். பிரான்ஸில் பர்போடன் என்னுமிடத்தில் 1790ஆம் ஆண்டில் விண்ணிலிருந்து விழுந்த கற்களைப் பற்றி இவர் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.இந்தக் கற்கள் விழுவதை 300 பேர்கள் தங்கள் கண்களால் நேரடியாகக் கண்டிருந்தனர்.

விண்ணிலிருந்து தான் விண்கற்கள் விழுகின்றன என்ற இவரது கூற்றை அனைவரும் கேலி செய்தனர்.
1803ஆம் ஆண்டில் தான் இவர் கூறியது சரி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. ஜீன் பாப்டிஸ் என்ற இன்னொரு அறிஞர் இப்படி விண்கற்கள் விழுவதை பல்வேறு விதமாக நிரூபித்துக் காட்டியதால் மக்கள் அதை ஏற்க வேண்டியதாயிற்று.

மந்திர ஒலிகளுக்குச் சக்தி உண்டு என்பதை நிரூபிக்க கால்ட்னியின் சித்திரங்கள் பெரிதும் உதவின. அபூர்வ அறிவியல் மேதை கால்ட்னி என்பதை காலம் கடந்து இப்போது நம்மால் உணர முடிகிறது!

Contact swami_48@yahoo.com (This articles was written by my brother S Nagarajan for a Tamil magazine)

பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்

Maha Kavi

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 டிசம்பர் மாத காலண்டர்

முக்கிய நாட்கள்: — டிசம்பர் 2 கீதா ஜயந்தி, 5 திருக் கார்த்திகை, 6 சர்வாலய தீபம், 11 பாரதியார் பிறந்த நாள், 21 ஹனுமத் ஜயந்தி, 25 கிறிஸ்துமஸ்; அமாவாசை:22, சுபமுஹூர்த்த நாள்:– 1, பௌர்ணமி – 6, ஏகாதசி- 2, 18

பாரதி பாடல்களிலிருந்து 31 முக்கிய மேற்கோள்கள்

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1444; தேதி 29 நவம்பர், 2014.

டிசம்பர் 1 திங்கட் கிழமை
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா !

டிசம்பர் 2 செவ்வாய்க் கிழமை
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

டிசம்பர் 3 புதன் கிழமை
அன்பென்று கொட்டு முரசே – மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால்

டிசம்பர் 4 வியாழக் கிழமை
தங்க மதலைகள் ஈன்றமுது ஊட்டித்
தழுவியது இந்நாடே – மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே

டிசம்பர் 5 வெள்ளிக் கிழமை
யாகத்திலே தவ வேகத்திலே – தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினிலே உயர் நாடு

bharati2

டிசம்பர் 6 சனிக் கிழமை
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்

டிசம்பர் 7 ஞாயிற்றுக் கிழமை
பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார்மிசை ஏதொரு நூல் இது போலே

டிசம்பர் 8 திங்கட் கிழமை
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை

டிசம்பர் 9 செவ்வாய்க் கிழமை
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
அன்பினில் போகும் என்றே – இங்கு
முன்பு மொழிந்து உலகாண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை மொழி

டிசம்பர் 10 புதன் கிழமை
நாவினில் வேதம் உடையவள் கையில்
நலம் திகழ் வாளுடையாள் – தனை
மேவினர்க்கு இன்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்

bharati3

டிசம்பர் 11 வியாழக் கிழமை
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய் – அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்

டிசம்பர் 12 வெள்ளிக் கிழமை
பேரிய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடு என்றே அறி

டிசம்பர் 13 சனிக் கிழமை
பேசுகவோ சத்தியமே, செய்க தர்மமே என்று ஒலி செய்
முத்தி தரும் வேத முரசு

டிசம்பர் 14 ஞாயிற்றுக் கிழமை
இனி ஒரு விதி செய்வோம் — அதை
எந்த நாளும் காப்போம்;
தனி ஒருவனுக்கு உண்விலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

டிசம்பர் 15 திங்கட் கிழமை
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நநட்டு மன்னர்

bharati4

டிசம்பர் 16 செவ்வாய்க் கிழமை
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர் வீரம்
செறிந்த தமிழ்நாடு

டிசம்பர் 17 புதன் கிழமை
உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

டிசம்பர் 18 வியாழக் கிழமை
வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திரு நாடு

டிசம்பர் 19 வெள்ளிக் கிழமை
ஆண்களோடு பெண்களும்
சரி நிகர் சமானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே

டிசம்பர் 20 சனிக் கிழமை
வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

bharati5

டிசம்பர் 21 ஞாயிற்றுக் கிழமை
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீர் அதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்

டிசம்பர் 22 திங்கட் கிழமை
ஆதி மறை தோன்றிய நல் ஆரிய நாடு எந்நாளும்
நீதி மறைவின்றி நிலைத்த திரு நாடு

டிசம்பர் 23 செவ்வாய்க் கிழமை
பெண் என்று சொல்லிடிலோ – ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! நினது
எண்ணம் இரங்காதோ?

டிசம்பர் 24 புதன் கிழமை
காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசை எல்லாம் நாம் அன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

டிசம்பர் 25 வியாழக் கிழமை
பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப்
பாம்பைப் பிளந்து உயிர் குடித்தோம்;
வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்
வேதவாழ்வினைக் கைப் பிடித்தோம்

bharati stamp

டிசம்பர் 26 வெள்ளிக் கிழமை
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று – அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று
நேர்த்தி திகழும் அந்த ஒளியை – எந்த
நேரமும் போற்று சக்தி என்று

டிசம்பர் 27 சனிக் கிழமை
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்

டிசம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 29 திங்கட் கிழமை
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்

30 செவ்வாய்க் கிழமை
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா

31 புதன் கிழமை
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

மகாவம்சத்தில் அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1

tamil poets
Images of Tamil Poets

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291; தேதி: 16 செப்டம்பர் 2014

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது நாலாவது கட்டுரை.

மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:

சங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–

1.கபிலன்
சங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.

தமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))

கபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.

2.பரணன்
கபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். “வரலாறு எழுதிய முதல் தமிழன்” — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.

இந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.

3.உதியன்
இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது!!!

4.கல்லாடன்
கல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் “நாகன்” என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

athiyaman

Tamil poetess Avvaiyar with Chieftain Athiyaman

5.நாகன்
நாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல “நாகன்” பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக ஒன்றும் சொல்ல இயலவில்லை.

6.இளநாகன்
மருதன் இளநாகன் என்ற புலவன் சங்ககாலத்தில் சக்கைப்போடு போட்ட புலவர்களில் ஒருவர். கபிலன், பரணன், இளநாகன், கல்லாடன் என்று சங்க காலப் பெயர்கள் எல்லாம் மகாவம்சத்தில் ஒருங்கே வருவதை யாரும் தன்னிச்சையாக நடந்த ஒற்றுமை Accidental Coincidence –“கோஇன்சிடென்ஸ்”– என்று ஒதுக்க முடியாது (காண்க:– அத்தியாயம் 35)

perunthalai saaathanaar and kumanan

Tamil chieftain Kumanan with the Tamil poet

7.குமணன் கதை
புறநானூற்றில் பாடல் 158 முதல் 165 வரை குமணன் கதை வருகிறது. குமணன் என்ற சிற்றரசனை அவன் தம்பி இளங்குமணன் விரட்டிவிட்டு நாட்டை ஆள்கிறான். அது மட்டுமல்ல. அண்ணன் தலையைக் கொண்டு வருவோருக்கு பெரும் பரிசு தருவேன் என்றும் அறிவிக்கிறான் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் இதுகண்டு வருத்தம் அடைகிறார். இருவரிடையே சமரசம் செய்ய ஒரு திட்டம் தீட்டுகிறார்.

காட்டில் வாழ்ந்த பெரிய குமணனைச் சந்தித்துப் பாடுகிறார். அவன் இந்தப் புலவர் காசுக்காகப் பாடும் புலவன் என்று எண்ணி, “அன்பரே, பொருள் அற்ற நிலையில் வாடுபவன் நான். இதோ இந்த வாளை எடுத்துக் கொள்ளும். இதனைக் கொண்டு என்னைக் கொல்லும். அப்படிக் கொன்றபின் என் தலையை என் தம்பி இளம் குமணனிடம் கொடுத்தால் உமக்குப் பெரும் பொருள் கிட்டும்” — என்கிறான். என்னே! தமிழர்களின் பெருந்தன்மை! தான் இறந்தாலும் புலவருக்குப் பணம் கிடைத்து வறுமை நீங்கினால் போதும் என்று எண்ணுகிறான்.

அந்தப் புலவர் ஒரு பெரிய வாழை மரத்தின் அடிப்பகுதியை வெட்டி அதில் செந்நிறச் சாயம் பூசி, ஈரமான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து இளங் குமணனிடம் சென்று பாடுகிறார். “பார், உன் அண்ணனின் பெருந்தன்மையை” கையில் வாளைக் கொடுத்து தலையைச் சீவச்செய்து அதைக்கொடுத்து உன்னிடம் பரிசு பெறச் சொன்னான் என்கிறார். வாளையும், வாழைத் தண்டையும் கண்டு அண்ணன் இறந்தானே என்று கண்ணீர் வடித்து தன் தவறை உணர்கிறான். “அது அண்ணன் தலை அல்ல, வெறும் வாழை மட்டையே, வருந்தற்க” என்றவுடன் மனம் மாறி அண்ணனை அழைத்துவந்து ஆட்சியை ஒப்படைக்கிறான்.

மகாவம்சம் அத்தியாயம் 36-ல் சங்க கால குமணன் கதை போலவே ஒரு கதை வருகிறது. கோதகாபயன் என்ற மந்திரி திடீர்ப் புரட்சியில் இறங்கி படை எடுக்கவே சங்கபோதி என்னும் அரசன் தப்பி ஓடுகிறான். அப்போது வழியில் தனக்கு உணவு கொடுத்த ஒரு வழிப்போக்கனிடம் என் தலையைச் சீவி கோதகாபயனிடம் கொடு; உனக்கு நிறைய பொருள் கிடைக்கும் என்கிறான். ஆனால் வழிப்போகன் மறுத்துவிடுகிறான். அவனுக்கு உதவுவதற்காக அரசன் அங்கேயே அமர்ந்து உயிர்விடுகிறான். உடனே அந்த வழிப்போக்கன் , சங்கபோதியின் தலையை கோதகாபய னிடம் கொடுக்கவே நிறைய பொருள் கிடைக்கிறது. இறந்துபோன மன்னனுக்கு உரிய ஈமச் சடங்குகளை கோதகாபயன் செய்தான்

8.மனுநீதிச் சோழன் கதை
அத்தியாயம் 21-ல் சோழ நாட்டில் இருந்துவந்த ஏலாரா இலங்கையை 44 ஆண்டுகளுக்குச் சீரும் சிறப்புடனும் ஆண்டான். அவன் சயன அறையில் ஆராய்ச்சிமணி தொங்க விட்டிருந்தான். குறை தீர வருவோர் அதை அடிக்கலாம்.. ஏலாராவின் மகன் ஒருநாள் ஒரு ரதத்தை ஓட்டிச் சென்ற போது அதில் ஒரு பசுங்கன்று அடிபட்டு இறந்தது. உடனே தாய்ப்பசு அரண்மனைக்கு வந்து நீதிகோரி ஆராய்ச்சி மணியை அடிக்கவே மன்னன் தனது மகனை தேர்ச் சக்கரத்தின் அடியில் கொல்கிறான்.

இந்தக் கதை அப்படியே மனுநீதிச் சோழன் என்ற பெயரில் தமிழ் இலக்கியத்தில் உள்ளது. நாம் திருவாரூரில் இது நடந்ததாகக் கூற, மகாவம்சமோ தீசவாபியில் நடந்ததாகச் சொல்லும். ஆனால் இருவரும் சோழ வம்சத்தினர். இது வியப்பான ஒற்றுமை. மேலும் ஆராய வேண்டிய விஷயம். ஏலாராவைத் துட்டகாமினி கொன்ற பின்னரும் அவனுக்கு உரிய மரியாதை செய்கிறான். அவன் தகனம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த இலங்கை மன்னர் ஒவ்வொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செய்வது மரபாகிவிட்டது. நீதி நேர்மை தவறாது ஆண்ட மாபெரும் தமிழன் ஏலாரன் (அத்தியாயம் 25ல் காண்க).

elara
Stories of Elara of Sri Lanka and Manu Neethi Choza of Tamil Nadu are similar.

9.மலய மலை/ சந்தனக் கட்டை
பல இலங்கை மன்னர்கள் மலய மலையில் வந்து தங்கி படை திரட்டிச் சென்றதை மகாவம்சத்தில் காணலாம். அதே போல பொதியம், மலயம் ஆகியவற்றின் சந்தனமும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. (உ.ம்: அத்தியாயம் 28 மற்றும் 36, 37)

10.பறவைகள் அரிசி கொணர்தல்
அத்தியாயம் 5 & 11:– அசோகன் மற்றும் தேவனாம்ப்ரிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பறவைகள் அரிசி கொண்டுவந்தன என்பது கபிலர் காலத்தில் நடந்தது போல இருக்கிறது. மூவேந்தர்களும் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, புலவர் கபிலர் கிளிகளையும் குருவிகளையும் பழக்கி அரிசி கொண்டுவந்தார் என்று சங்க இலக்கியம் கூறும்.

11.பாரா நட்பு
கோப்பெருஞ்சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் (வடக்கிருத்தல்) இருந்தபோது பிசிராந்தையார் என்னும் கிழப் புலவருக்கு ஒரு இடம் ஒதுக்கச் சொன்னார். “யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்” – என்று அற்புதமான பாடல் (காண்க புறம்.191) பாடிய அந்தக் கிழவனாரோ மன்னரைப் பார்த்ததே இல்லை. ஆயினும் இருவரும் நண்பர்கள்!! மன்னன் சொன்னபடியே புலவரும் வந்தார்!! அதேபோல இலங்கை மன்னன் தேவனாம்ப்ரியன் காலத்தில் ரத்தினங்களும் விலை உயர்ந்த உலோகங்களும் கிடைத்தன. அவற்றை இதுவரை பார்த்தே இராத அசோகனுக்கு அனுப்புகிறார்!

siva_kuthirai

12.குதிரை வியாபாரிகள்/ மாணிக்கவாசகர்
அத்தியாயம் 21-ல் சேனன், குட்டகன் என்ற இரண்டு தமிழர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு வருகிறது. இவர்கள் குதிரை வியாபாரிகளின் பிள்ளைகள். இதைப் படிக்கையில் மாணிக்கவாசகரின் கதை நினைவுக்கு வரும். அவரது காலமும் சம்பந்தருக்கு முந்தியது என்று நான் கட்டுரையில் நிரூபித்திருக்கிறேன்.

13.தேர் விழா
சிலப்பதிகாரத்தில் சமணர்களின் தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். மகாவம்சத்தில் புத்தமத தேர்த் திருவிழா பற்றி படிக்கிறோம். போதிமரத்தைத் தேரில் வைத்து ஊர்வலம் விடுகின்றனர். பிரபல பிராமணர் கிராமம் வந்தவுடன் அதைத் தரையில் இறக்கி மன்னன் மரியாதை செலுத்துகிறான்.

14.கார்த்திகை விழா
கார்த்திகை விழா சங்க இலக்கியத்திலும் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இதை இலங்கை மன்னரும் கொண்டாடியதை அத்தியாயம் 17-ல் காணலாம்.

karaikal
Karaikal Ammaiyar walking on head

15.மந்திர மாங்கனி
காரைக்கால் அம்மையார் என்ற சைவப் பெரியார் காலத்தால் சம்பந்தர் முதலிய நால்வருக்கும் முந்தியவர். இவர் திருமணம் ஆனபின் மந்திர மாங்கனி வரவழைத்ததும் இவரது கணவர், மனைவியின் அமானுஷ்ய சக்திகளைக் கண்டு பயந்து ஒதுக்கி வைத்துவிடுகிறார். பின்னர் அப்பெண்மணி சிவனடியாராக மாறி அற்புதமான திருவந்தாதிகளைப் பாடி தமிழில் அந்தாதி இலக்கியம் தோன்ற படி அமைத்துத் தருகிறார்.

மகா வம்சத்தில் 15ஆம் அத்தியாயத்தில் ஒருதேரர், மாம்பழத்தச் சாப்பிட்டு கொட்டையைப் போடவுடன் அது உடனே மீண்டும் வளர்ந்து கனிகள் நிறைந்த மா மரமாயிற்று!

16.உண்பது நாழி
உண்பது நாழி உடுப்பவை இரண்டே (புறம் 189) — என்பது மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரரின் கூற்று. இந்த அருமையான சொல் மகாவம்சம் 36 ஆம் அத்தியயத்தில் வருகிறது. குஜ நாகன் தம்பி குஞ்சநாகன் ஆட்சிக்க்காலத்தில் ஏக நாழிகைப் பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு விளக்கம் கூறும் மகாவம்ச உரை நாழி என்பது கையளவைக் குறிக்கும் ஒரு அளவை என்றும் ஒரு கவளம் சோறு இது என்றும் கூறும். ஒரு கவளம் கூடச் சோறு கிடைக்காத காலம் ஏக நாழிப் பஞ்சம் என்று அழைக்கப்பட்டது. நாழி என்னும் சொல்ல் இப்போது புழக்கத்தில் இல்லை.

05FR-KARAIKKAL_29905g

Magic mango incident of Karaikal ammaiyar

27 காரணங்களில் 16 காரணங்களை இங்கே பட்டியலிட்டேன். அடுத்த கட்டுரையில் மிக முக்கியமான, பாண்டிய ராஜகுமாரி—விஜயன் திருமணம், யானையை விட்டு குழந்தையைக் கொல்ல முயன்றது, கஜபாகு என்னும் மன்னனால் சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கண்டறிந்தது, சோழ நாட்டுப் புத்த பிட்சு இலங்கையில் போர்க்கொடி உயர்த்தியது, நாகர்களின் பட்டியல் முதலியவற்றைக் காண்போம்.