அரவிந்தர் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள்

sri-aurobindo

டிசம்பர் 5ஆம் தேதி அரவிந்தர் மஹாசமாதி தினம். அதையொட்டி அவரைப் போற்றும் அஞ்சலிக் கட்டுரை இது.

Post No 730 dated 4th December 2013

அரவிந்த யோகம் by ச.நாகராஜன்

வான் அரசாட்சி இம் மண்ணுலகத்திலே
வளர்ந்து செழித்திடவே
தேனருவி என மோனத்திலே நின்று
தெய்வக் கனல் பொழிந்தான்
மானவ ஜாதிக்கே அமர நிலை பெற
வாழும் வகையளித்தான்
போனது கலியுகம், பூத்தது புதுயுகம்
பூரணன் வாழியவே
வாழ்க அரவிந்தன் வாழ்க பராசக்தி
வல்லபன் வாழியவே!

-கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்

வேத நெறி தழைக்க வந்த அவதாரம்

தேசீயம் தெய்வீகம் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதையே தன் வாழ்க்கையாக்கி மனித குலத்தை சனாதன தர்மம் தந்த வேத நெறியில் உயர்த்த அவதரித்தவரே மஹரிஷி அரவிந்தர்.

மஹாசக்தி வழி நடத்திய புருஷர்

ஒரு மாபெரும் சக்தி அவரை வாழ்க்கை முழுவதும் வழி நடத்தி வந்தது. அந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களோ ஏராளம்!
1908ஆம் ஆண்டு மிர்ஜாபூரில் வெடித்த குண்டைத் தொடர்ந்து அரவிந்தர் அலிபூர் சிறையில் ஒன்பது அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார்.அங்கு அனைத்தையும் வாசுதேவனாகக் கண்டார். ‘சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்’ என்ற மகத்தான அநுபூதியைப் பெற்றார். ஒரு நாள் அவர் உடல் தரையிலிருந்து மேலே சிறிது எழும்பியது. அந்த நிலையில் கைகளையும் உயர்த்தினார். எப்படி முயன்றாலும் அடைய முடியாத ஒரு விசித்திரமான நிலையில் அவர் உடல் இருக்கவே, அதைப் பார்த்த சிறை வார்டர் அரவிந்தர் இறந்து விட்டதாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் ஓடோடி வந்து பார்த்த போது அரவிந்தர் இயல்பான நிலையில் இருந்து.
சிரித்தார். தன்னை இறந்ததாக அறிவித்தவனை முட்டாள் என்றார்!

இயல்பாகவே அரவிந்தருக்குத் தீர்க்கதரிசனக் காட்சிகள் தோன்றி வந்தன. அவரே கூறிய ஒரு சம்பவம் இது:- “ஒரு சமயம் சி.ஆர்.தாஸின் நண்பரான வ.ரா. (பிரபல தமிழ் எழுத்தாளராக பின்னால் புகழ் அடைந்தவர்) என்னைக் காண வருவதாக இருந்தது.அவரது தோற்றம் எப்படி இருக்கும் எனக் காண விரும்பினேன். நன்கு ஒட்ட வெட்டிய தலையோடு உரமான முரட்டு இயல்போடு கூடிய ஒருவரின் தோற்றத்தைக் கண்டேன். ஆனால் வ.ரா நேரில்வந்த போது சாந்த முகம் உள்ள தென்னிந்திய அந்தணருக்கே உரித்தான தோற்றத்துடன் விளங்கினார்! ஆனால் இரு வருடங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்த போது நான் முதலில் எப்படிக் கண்டேனோ அப்படி அவர் மாறிவிட்டிருந்தார்.”

டீ அடிமையாக அவர் இருந்த போது தனது மைத்துனர் எப்போது டீ கொண்டு வருவார் என்று அவர் எண்ணிய சமயத்தில் எதிரே இருந்த சுவரில் டீ வரும் சரியான நேரம் எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் டீயும் வந்தது. “அன்று முதல் தினமும் டீ வரும் நேரம் சுவரில் எழுதப்படுவதைக் கண்டேன்” என்று அரவிந்தர் பின்னால் தன் அனுபவங்களைக் கூறினார்.

பாண்டிச்சேரி செல்!

சிறையில் அவருக்கு உள்ளிருந்து குரல் ஒன்று கிளம்பி அவர் செய்ய வேண்டியதைப் பணித்தது.அது எந்த காரணத்தையும் சொல்லாமல் இதைச் செய்; அதைச் செய் என்று மட்டும் பணித்தது. மற்றவர்கள் எல்லாம் அவரை பிரான்சுக்குச் செல்ல ஆலோசனை தந்த போது அவரது உள்ளார்ந்த குரலோ அவரை பாண்டிச்சேரி செல்லுமாறு கூறியது.31-3-1910 அன்று கல்கத்தாவிலிருந்து கப்பலில் கிளம்பிய அரவிந்தர் 4-4-1910 அன்று மூன்று மணிக்குப் புதுவை வந்து சேர்ந்தார். அங்கு மகத்தான யோக சாதனையைச் செய்தார். எதற்காக புதுவைக்குச் செல்லச் சொன்னதோ அந்த மஹாசக்தியின் விருப்பப்படி அரவிந்த ஆசிரமமும் உருவானது.

1926ஆம் தேதி நவம்பர் மாதம் 24ஆம் தேதி கிருஷ்ணர் பூவுலகில் அவரது உடலில் ஆவிர்பித்ததை அவர் அறிவித்தார். அது இன்றளவும் சித்தி தினமாக்க் கொண்டாடப்படுகிறது. சூபர்மைண்ட் எனப்படும் அதிமானுட மனமும் ஆனந்தமும் பெரும் பணியை நிறைவேற்ற வந்திருப்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்த அன்றைய தினத்தில் அரவிந்தர் தனிமையை நாடித் தன் பெரும் பணியை மேற்கொண்டார். அதன் பின்னர் வருடத்திற்குச் சில குறிப்பிட்ட தினங்களே அவரை தரிசிக்கும் பாக்கியம் சாதகர்களுக்குக் கிடைத்தது.

Sri_aurobindo2

அன்னையின் பார்வை

புதுவை வந்த அன்னை ஆசிரமத்தின் பெரும் சக்தியாக மாறினார்.
அரவிந்த ஆசிரமம் நிறுவப்பட்டவுடன் அன்னை ஆசிரமத்தை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு சாதகர்களுக்கு உற்ற வழிகாட்டியாகவும் ஆனார். அன்னையின் பல்வேறு அபூர்வ சித்திகளையும் சக்திகளையும் அரவிந்தர் எளிதில் உணர்ந்து கொண்டார்.அன்னையின் பார்வை சகல வல்லமை படைத்தது என்பதை அரவிந்தர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
சாதாரணமாக உடல் அளவில் அன்னை பெற்றிருந்த சக்தியைக் கூட அவர் அறிந்து வைத்திருந்தார். ஒரு முறை அன்னையின் பார்வை ஆற்றலைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிட்டார்:-“சிறு வயதில் அன்னைக்கு இருளில் கூடப் பார்க்கும் சக்தி இருந்தது.எங்கும் பார்க்கும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.இப்போது கூட தனக்குப் பின்னால் உள்ள அனைத்தையும் அவரால் பார்க்க முடியும்.அவர் கண்களின் பார்வையை விட இந்தப் பார்வை இன்னும் துல்லியமாக இருக்கும். கண்களை மூடிக் கொண்டாலோ இது இன்னும் நன்கு வேலை செய்யும்.”

கூடவே வரும் துணை

அரவிந்தரின் யோகம் அவருக்காக மட்டும் செய்யப்படவில்லை. அவரே ஒரு முறை,” முக்தியையும் பரிபூரணத்வத்தையும் எனக்கு மட்டும் பெற எண்ணி இருந்தேனென்றால் எனது யோகம் நெடும் காலத்திற்கு முன்னரே முடிந்திருக்கும்.எனது சித்தியானது மற்றவர்கள் அதை அடைவதற்கு ஒரு முன்னோடி தான்.” என்று குறிப்பிட்டார்.ஆக சாதகர்களுக்கு அவர் எப்போதும் உற்ற துணையாக இருந்தார்; இருந்து வருகிறார்!

பிரபல எழுத்தாளரான பால் பிரண்டன் தன்னுடன் உற்ற துணையாக யாரோ கூட வருவது போன்றே உணர்ந்து வந்தார். அரவிந்தரின் போட்டோவைப் பார்த்த போது அது ‘கூட வரும் துணையைப்’ போல இருக்கவில்லை.ஆனால் அரவிந்தரை நேரில் தரிசித்த போது ‘கூட வரும் துணை’ அவரே என்பதை உணர்ந்து கொண்டார்.

நான் தருகிறேன் உத்தரவாதம்

பாரதம் சுதந்திரம் அடைவது பற்றிய பேச்சை சில சீடர்கள் எழுப்பிய போது அவர்களுள் ஒருவர் “அப்படி ஒரு சுதந்திரம் வர உத்தரவாதம் வேண்டுமே” என்றார். உடனே அரவிந்தர், “ அதற்கு நான் தருகிறேன் உத்தரவாதம்” என்று கூற அனைவரும் வியப்படைந்தனர். அவர் அளித்த உறுதியின் படியே பாரதம் சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் அவரது பிறந்த நாள். எனது பிறந்த நாள் பரிசாக இரண்டு பகுதிகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அவர் பிரிவினை பற்றிக் கூறினார். ஆனால்,” பாரதப் பிரிவினை இயற்கையானதல்ல; அது போக வேண்டும். போய் விடும்” என்று தீர்க்கதரிசன வாக்கைக் கூறியுள்ளார்.

பாரத தேசம் மகோன்னதமான நிலையை எய்தும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள அரவிந்தர் அந்த உயரிய நிலை உலகம் முழுவதும் மேம்படுவதற்கான ஒரு ஆரம்பம் என்று அருளினார். அவரது அற்புதமான பூரண யோகம் இதை நோக்கமாகக் கொண்டே அனுஷ்டிக்கப்பட்டு பூரணாத்மாக்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பவானி பாரதி

பவானி பாரதி என்ற அற்புதமான சதகத்தை – நூறு பாடல்கள் கொண்ட சம்ஸ்கிருத நூலை அரவிந்தர் யாத்துள்ளார். உக்கிர மான காளியின் அற்புதவர்ணனைகளுடன் மயிர்க்கூச்சலெழுப்பும் சொற்களுடன் உள்ள ஸ்லோகங்களில் உத்திஷ்ட (எழுமின்)
ஜாக்ரத (விழிமின்) என்ற ஆவேசமூட்டும் சொற்களைக் காணலாம். அதில் இனி வேதகோஷம் முழங்கும் என்றும் துஷ்டன் அழிவான் என்றும் புகழோங்கிய நிலையை பாரதம் அடையும் என்றும் பாடியுள்ளார்.

அரவிந்தரின் பணி பாரதத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அதன் பண்டைய நாகரிகத்தை உணர்த்தி அதன் அடிப்படையில் புதிய யுகத்தை உலகத்தில் நிர்மாணிப்பதே!

அரவிந்த யோகம்

அரவிந்த யோகம் என்றால் என்ன என்பதை -கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார் அழகுற இப்படி விளக்குகிறார்:-
பக்தி யோகம், நிஷ்காம்ய கர்ம யோகம்,கடவுளைத் தியானத்தால் கலந்து நிற்கும் ஞான யோகம், எல்லோரையும் சமமாகக் காணும் சர்வாத்ம சித்தி எல்லாம் ஒருங்கே சேர்ந்தது ஶ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்.

அரவிந்த யோகம் உலகை உயர்த்துகிறது.அழகில் தெய்வத்தைக் காண்கிறது.அழகை ஆத்ம பரிபூரணத்திற்கு ஒரு வழியாக்குகிறது.வாழ்வைக் குறுக்கி ஒடுக்காமல் விரிந்து பொலியச் செய்கிறது.உலக வாழ்வையே தெய்வ சித்தி பெற ஓர் அகண்ட சமரஸ யோகமாக்குகிறது.

இதுகாறும் உலகில் பெரியார்கள் வகுத்த யோக சாதனங்களின் நன்மைகளை எல்லாம் தன்னகத்துக் கொண்டுள்ளது அரவிந்த யோகம்.அது ஒரு தோட்ட ரோஜாக்களை ஒரு சிறு அத்தர் புட்டியில் காண்பது போன்றது. அது மனிதனில் தெய்வத்தை விளக்குகிறது. வாழ்வை எல்லாம் யோகமாக்குகிறது.”

அரவிந்த யோகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட சாதகர்கள் பெருமளவில் பெருகும் போது இந்தியா அமர நிலையை எய்தும் முறையை உலகிற்குக் கற்பிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

சின்ன உண்மை!
பவானி பாரதி மிகவும் சக்தி வாய்ந்த உக்ரமான சொற்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்ட நூல். மாதிரிக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம்:-
இதயத்திற்கு அம்ருதத்வத்தை வழங்கும் வேத கோஷ முழக்கத்தை மீண்டும் நான் வனங்களில் கேட்கிறேன். ஆன்ம ஞானத்தை அடைந்த, பெருக்கெடுத்தோடும் மனித குல வெள்ளமானது ரிஷிகளின் குடில்களை நோக்கிப் பாய்கிறது.
பவானி பாரதி 93 ஆம் ஸ்லோகம்
Contact swami_48@yahoo.com

*****************

யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!

doctor-joke-funny-picture

சம்ஸ்கிருத செல்வம் by S Nagarajan
அத்தியாயம் 19

Post No 728

யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!
இந்தக் கால ஆஸ்பத்திரிகளையும் மருத்துவர்களையும் நினைத்தாலேயே மனம் பதை பதைக்கிறது.
மருத்துவக் காப்பீடு செய்திருந்தால் அதில் உள்ள கடைசி பைசா வரை மருத்துவர்கள் கறந்து விடுகின்றனர். இல்லையேல் ‘அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்’ என்று உயிர் போகுமுன்னே பணத்தையும் போக வைத்து விடுகின்றனர்.

இதை எண்ணிப் பார்த்தார் பழைய காலக் கவிஞர் ஒருவர். அந்தக் காலத்திலும் இதே நிலை தான் போலும்! அப்படியே மனதில் தோன்றியதை கவிதையாகப் பொழிந்து விடுகிறார் இப்படி:-

வைத்யராஜ! நமஸ்துப்யம் யமராஜ சஹோதர I
யமஸ்து ஹரதி ப்ராணான் த்வம் து ப்ராணான் தனானி ச II

doctor joke2

வைத்ய ராஜ – ஓ வைத்திய ராஜரே! (Oh! King among Doctors!)
யமராஜ சஹோதர – யமராஜனின் சகோதரரே!
நமஸ்துப்யம் – உமக்கு நமஸ்காரம்!
யமஸ்து ஹரதி – யமனின் வருகை
ப்ராணான் – உயிரை எடுப்பதற்காக மட்டுமே
த்வம் து – ஆனால் உமது வருகையோ
ப்ராணான் ச தனானி – உயிரோடு எங்கள் பணத்தையும்
அபகரிப்பதற்காகவே!
இதே போல இன்னொரு பாடலும் உள்ளது!

Doctor-and-Patient

வைத்யராஜ! நமஸ்துப்யம் க்‌ஷயிதா சேஷ மானவ I
த்வயி வின்யஸ்தபாரோயம் க்ருதாந்த: சுகமேததே II

வைத்யராஜ! – ஓ வைத்திய ராஜரே! (Oh! Doctor!)
நமஸ்துப்யம் – உமக்கு நமஸ்காரம்!
க்‌ஷயிதா சேஷ மானவ – நீரே அனைத்து மனிதர்களையும் அழிப்பவர்!
த்வயி வின்யஸ்தபாரோயம் – உம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு
க்ருதாந்த: – அனைத்து உயிர்களையும் எடுக்கும் எமராஜன்
சுகமேததே – சுகமாக ஓய்வு எடுக்கிறான்

யமன் ‘ரெஸ்ட்’ எடுக்க உதவி செய்யும் வைத்ய ராஜனுக்கு தனது மனமார்ந்த ‘வணக்கத்தைச்’ சொல்கிறார் கவிஞர்!

வைத்தியர்களுக்கு ஆதரவாக வைத்தியர்களின் குணங்களைப் பற்றி எடுத்துக் கூறி சமாதானம் அடைகிறார் இன்னொரு கவிஞர்!அவரது பாடல் இது தான்:-

வ்யாதேஸ்தத்வ பரிஞானம் வேதநாயாஸ்ச நிக்ரஹ: I
ஏதத் வைத்யஸ்ச வைத்யத்வம் ந வைத்ய: ப்ரபுராயுஷ: II

வ்யாதேஸ்தத்வ பரிஞானம் – வியாதிகளின் மூல காரணங்களை உணர்வதும்
வேதநாயாஸ்ச நிக்ரஹ: – அவற்றினால் ஏற்படும் வேதனைகளைக் குறைப்பதும் ஆகிய
ஏதத் வைத்யஸ்ச வைத்யத்வம் – இவையே ஒரு வைத்தியரின் குணங்களாகும்
ஆயுஷ: – ஆயுளுக்கு (ஆயுள் இவ்வளவு என்று அதை தருவதற்கான)
ப்ரபு – எஜமானன் (அதிகாரி)
ந – (வைத்தியர்) இல்லை!
doctor8

ஒரு டாக்டரின் கடமையையும் அவர் இந்தக் காலத்தில் எப்படிச் செயல் படுகிறார் என்பதையும் அந்தக் காலத்திலேயே சொல்லி விட்டார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் ஆச்சரியம் தான் வருகிறது இல்லையா!
*******************

கண்ணன் கூறும் 26 தெய்வீக குணங்கள்

hiding krishna

Post No 727; Dated 30th November,2013

by london swaminathan

பகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் (16– ஸ்லோகம் 1 முதல் 3) கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். இந்த உரை கல்லில் அந்த சாமியார்களை உரசிப் பாருங்கள். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’!!!

இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்:

1.அச்சமின்மை (அபயம்)
2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)
3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி)
4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி)
5.ஐம்புலனடக்கம் (தம:)
6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்)
7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்)
8.தவம் (தப:)
9.நேர்மை (ஆர்ஜவம்)
10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)
11.உண்மை (சத்யம்)
12.சினமின்மை (அக்ரோத:)
13.துறவு (த்யாகம்)
14.அமைதி (சாந்தி)
15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy)
16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)
17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்)
18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை)
19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்)
20.மன உறுதி (அசாபலம்)
21.தைரியம், துணிவு (தேஜ:)
22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)
23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)
24.சுத்தம் (சௌசம்)
25.வஞ்சனை இன்மை (அத்ரோஹ:)
26. செருக்கின்மை ( ந அதிமானிதா )

flute krishna

இந்த மூன்று ஸ்லோகங்களையும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்:

அபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி:
தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம் (16-1)

அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம்
தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம் (16-2)

தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா
பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத (16-3)

எனது முந்தைய கீதைக் கட்டுரைகள்:
Read also my earlier posts:

1).One Minute Bhagavad Gita
2). Bhagavad Gita through a Story
3).Bhagavad Gita in Tabular Columns
4). 45 commentaries on Bhagavad Gita
5). G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6).A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2)

16. உள்ளொளி பெற்ற உத்தமர்!

bankei yotaku

Post No. 724 dated 28th November 2013
By ச.நாகராஜன்

Part 16 of the History of Zen Buddhism in Tamil by Santanam Nagarajan

”பிறக்காத புத்த மனம்” என்பது புத்த மதத்தில் ஏற்கனவே இருந்த ஒன்று தான் என்றாலும், பாங்கெய் அதற்கு ஒரு புது பரிமாணத்தையும் அழுத்தத்தையும் தந்து அதை பிரபலமாக்கினார். பாங்கெயைப் பொ’றுத்த வரையில் மனம் அபாரமான சக்தி வாய்ந்த ஒன்று. உலகத்தைப் பிரதிபலிக்கும் உயிருள்ள கண்ணாடி அது! பார்த்த அனைத்தையும் பிரதிபலிப்பதோடு அனைத்தையும் அது சேர்த்து வைத்திருக்கும் ஒன்றும் கூட. யாரானாலும் சரி,அனைத்துப் பதிவுகளையும் ஒவ்வொன்றாக அகற்றி விட்டால் போதும், ஞானம் பெற்று விடலாம் என்று அவர் சுலபமாக உபதேசித்தார்.

‘பிறக்காத மனம்’ பற்றி ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம். இலை உதிர் காலத்தில் ஒரு மரத்தின் அடியில் உட்காரும் ஒருவன் இலைகளை அகற்றி இடத்தைச் சுத்தப் படுத்துகிறான். ஆனால் மரத்திலிருந்து இலைகள் கீழே விழுந்து கொண்டே இருக்கின்றன. அந்தக் கணத்தில் அவன் இலைகளை அகற்றி விட்டாலும் கூட தொடர்ந்து இலைகள் விழுந்து கொண்டே தான் இருக்கும். அதே போல கோபம் பற்றிய எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து நீங்கள் அகற்றி விட்டாலும் கூட அதைத் தொடர்ந்து எழும் எண்ணங்கள் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதே இல்லை.ஆனால் அப்படி எழும் எண்ணங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமலும் அதைப் பொருட்படுத்தாமலும் அதை நிறுத்த முயற்சி செய்யாமலும் இருந்து விட்டால் அது தான் ‘பிறக்காத புத்த மனம்’ ஆகும்.

பாங்கெய் ஒரு போதும் தனது கொள்கைகளையும் விதிமுறைகளையும் யார் மீதும் திணிக்கவில்லை.அதே போல ஜாதி, அந்தஸ்து, இனம், பால் ஆகிய எதுவும் ஆன்மீகப் பாதையில் குறுக்கிட முடியாது என்பது அவரது திண்ணமான எண்ணம். ஒரு நாள் சாமான்ய படிப்பறிவில்லாத ஒரு பெண்மணி அவரிடம் வந்து,” பெண்கள் எல்லோரும் கர்மாவினால் பெரும் பாரத்தைச் சுமந்து கட்டுப்பட்டவர்கள் என்று எல்லோரும் சொல்கிறார்களே! அவர்களால் புத்தத்வத்தை உணர முடியுமா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள். அதற்கு பாங்கெய்,”நீ எப்போதிலிருந்து பெண்ணாக ஆனாய்?” என்று எளிமையாகக் கேட்டு ஆழ்ந்த உண்மையை விளக்கி விட்டார்!
japanese_art

1690 ஆம் ஆண்டிலேயே மிகவும் பிரபலமான துறவியாக அவர் ஆகிவிட்டார். அவர் பேச்சைக் கேட்பதற்காக யோமோஞ்ஜி ஆலயத்தில் ஆயிரத்தி எழுநூறு புத்த துறவிகள் ஜப்பான் முழுவதிலுமிருந்தும் வந்து கூடினர். அவரது அருளுரைகள் அனைத்தும் தெளிவாக பதிவு செய்யப்பட்டன. 1693இல் அவரது உடல்நிலை சற்று மோசமடைந்தது. அவர் இன்னும் சில காலமே இருப்பார் என்பதை ஊகித்த அவரது சீடர்கள் தங்களது பணம், நேரம் உழைப்பைத் தந்து அவருக்கு ஒரு பகோடாவை அமைக்க முயன்றனர்.இரவு பகலாக வேலை தொடர்ந்தது.பெரும்பாலும் இரவு நேரத்தில் சந்திர ஒளியில் பகோடா பணி தொடர்ந்தது. இறுதி நேரம் வந்ததை ஒட்டி பாங்கெய் மூன்று தினங்கள் கடைசிச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி விட்டு ஆலயத்தினுள் சென்று அமைதியை நாடினார்; 1693ஆம் ஆண்டு செப்டம்பரில் நிர்வாணம் அடைந்தார். அவரது அஸ்தி யோமோஞ்ஜி மற்றும் ந்யாஹாஜி ஆகிய இரண்டு முக்கிய ஆலயங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்ட்து. 1740ஆண்டு அரசாங்கத்தின் உயரிய விருதான கோகுஷி எனப்படும் ‘நேஷனல் மாஸ்டர்’ என்ற விருதை அளித்து அரசு அவரை கௌரவித்தது.

முன்னமேயே அவரது உயரிய ஞான நிலையை சீனாவிலிருந்து வந்த பெரும் மகானே உலகிற்கு அறிவித்து விட்டார். டாவோ –சே சாவோ யுவான் என்ற மாபெரும் துறவி நாகசாகிக்கு வந்தார். அப்போது பெங்காயின் குருவான உம்போ அவரை டாவோ –சே சாவோ யுவானை தரிசிக்குமாறு அறிவுறுத்தினார். டாவோ சேக்கு ஜப்பானிய மொழி தெரியாது, சீன மொழி மட்டுமே தெரியும், ஆனால் அவர் எழுதிக் காண்பித்து தான் சொல்ல விரும்பியதைச் சொன்னார். ஏனெனில் எழுத்து வடிவத்தில் சீன மொழியையும் ஜப்பானிய மொழியையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.அவை ஒரே அர்த்தத்தையே தரும். டாவோ சே பாங்கெயின் உள்ளொளியை உடனே புரிந்து கொண்டார்.ஆனால் அவரது ஞானம் பூர்த்தியாகவில்லை என்று தெரிவித்தார்.

பாங்கெய் டாவோ சேயின் சிஷ்யர்களின் வட்டத்திற்குச் சென்றார். அங்கு அவர் சொல்வதை நன்கு கூர்ந்து கேட்டார். தியான அறையில் இருந்த போது ஒரு நாள் மாலை நேர சந்தியாகால நிழலில் அவர் ஞானவொளி அனுபவத்தைப் பெற்றார். ஜென் சம்பிரதாயப்படி உடனே டாவோ சேயிடம் சென்று தன் அனுபவத்தைக் கூறினார்.

“ பிறப்பையும் இறப்பையும் பற்றி என்ன?” என்று ஒரு பிரஷினால் எழுதிக் கேட்டார் பாங்கெய்.
“யாருடைய பிறப்பு, இறப்பு பற்றி?” என்று பதில் கேள்வியை எழுதிக் கேட்டார் டாவோ சே.

பாங்கெய் வெறுமனே தன் கைகளை நீட்டினார், அவ்வளவு தான்! டாவோ சே மீண்டும் எழுதுவதற்காக பிரஷை எடுக்க முயலுகையில் பாங்கெய் அதைப் பிடுங்கி தரையில் எறிந்தார். மறு நாள் காலை டாவோ சே தன் சீடர்களிடம் பாங்கெய் ஜென் பயிற்சியை முற்றிலுமாக முடித்து விட்டார் என்று அறிவித்தார்.
உள்ளொளி பெற்ற பின்னர் சொல்லும் எழுத்தும் தான் ஏது?!

bankei yotaku

சின்ன உண்மை
பாங்கெயின் முக்கியமான அருளுரை இது:- “சத்தியத்தின் உள்ளே ஆழ்ந்து செல்லச் செல்ல அது இன்னும் அதிக ஆழம் உடையதாக இருக்கும்”
-தொடரும்

15. பாங்கெய் யோடாகு (Bankei Yotaku)

Buddha with 1000s

Byச.நாகராஜன்

(Part 15 of The History of Zen Buddhism in Tamil)

ஹகுயின் போல ஜென் பிரிவில் நூற்றுக் கணக்கான குருமார்கள் ஆயிரக்கணக்கான சாதகர்களுக்கு அற்புதமாக போதித்துள்ளனர். பாங்கெய் யோடாகு (1622 -1693) Bankei Yotaku குறிப்பிடத் தகுந்த ஜென் மாஸ்டர்களுள் ஒருவர்.

அவரது பேச்சைக் கேட்க ஐயாயிரம் பேர் – பத்தாயிரம் பேர் ஏன் சில சமயம் ஐம்பதினாயிரம் பேர்கள் திரண்டனர். அவர் கடினமான சூத்ரங்களைச் சொல்வதில்லை. பண்டிதர்களுக்கு மட்டுமே புரிகின்ற வார்த்தை ஜாலங்களையும் செய்வதில்லை. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் எளிய சொற்களால் அனைவரையும் அவர் கவர்ந்தார்.

ஏராளமான சுவையான சம்பவங்களை அவர் வாழ்க்கையிலிருந்து கூறலாம்.
அவரது கீர்த்தியைக் கேள்விப்பட்ட நிசிரென் பிரிவைச் சேர்ந்த ஒரு துறவிக்கு வெகுவாகக் கோபம் வந்தது. ஒரு முறை அவரை விட்டு விட்டு பாங்கெயின் பேச்சைக் கேட்க அனைவரும் சென்று விட்டதால் அவரது ஆத்திரம் எல்லை கடந்தது. நேராக பாங்கெய் பேசுகின்ற இடத்திற்கு வந்தார். அவருடன் வாதம் புரிந்து அவரை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே, “ஏய், ஜென் மாஸ்டர்! நீ எல்லோரையும் கீழ்ப்படிய வைத்து விடுவாயாமே! எங்கே என்னைக் கீழ்ப்படிய வை, பார்ப்போம்!” என்று சவால் விட்டார்.

“வாருங்கள், என் பக்கம் வாருங்கள்!” என்று அவரை அழைத்தார் பாங்கெய்.
கூட்டத்தை விலக்கியவாறே பாங்கெயை அணுகினார் அவர்.
“எனது இடப்புறம் வாருங்கள்” என்றார் பாங்கெய்.

அவர் பாங்கெயினின் இடப்புறம் வந்தார். “இல்லை,இல்லை, நீங்கள் வலப்புறம் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.வலப்பக்கம் வாருங்கள்” என்றார் பாங்கெய்.
அவர் வலப்பக்கம் வந்தார். அவரை நோக்கிய பாங்கெய் “பாருங்கள்! நீங்கள் நன்கு கீழ்ப்படிகிறீர்கள்! எந்தப் பக்கம் வரச் சொன்னாலும் வருகிறீர்கள்! நீங்கள் அற்புதமான ஒரு கனவான். இப்போது இங்கே உட்கார்ந்து சொல்வதைக் கேளுங்கள்” என்றார், பிறகென்ன, அவர் கீழே உட்கார்ந்து கேட்டார். அவரது சிஷ்யராக ஆனார்.

இன்னொரு சம்பவம்:-
துறவி ஒருவர் பாங்கெயிடம் வந்தார். “ எனக்கு எப்போதும் முன்கோபம் வருகிறது. எவ்வளவோ முறை எனது மாஸ்டர் அதை விட்டு விடுமாறு கூறியும் என்னால் முடியவில்லை. இதை விட்டு விட ஏதாவது செய்ய வேண்டும் என்று உளமார நினைக்கிறேன். ஆனால் எதைச் செய்தாலும் அதை விட முடியவில்லை. உங்கள் போதனைகளால் அதை விட்டு விடலாம் என்று உங்களிடம் வந்திருக்கிறேன்” என்றார்.

அவரை நோக்கிய பாங்கெய்,” அட்டா, சுவாரசியமாக இருக்கிறதே நீங்கள் சொல்வது! உங்கள் முன்கோபம் உங்களிடம் இப்போது இருக்கிறதா, அதைச் சற்று காண்பியுங்கள். நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்றார்.

துறவியோ,” எனக்கு இப்போது கோபமே இல்லை. திடீரென்று கோபம் வந்து விடும்” என்றார்.
பாங்கெய்: “ஓஹோ! நீங்கள் அத்துடன் பிறக்கவில்லை போலும்! நீங்களே அவ்வப்பொழுது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அதை உருவாக்கி வெளியில் காண்பிப்பீர்கள் போலும்! அதைக் காண்பிக்காத போது அது எங்கே இருக்கிறது? அடுத்தவர்களை எதிர்த்து உங்கள் வழியே சிறந்த்து என்று நினைத்து உங்களுடைய ஒரு தலையான மனப்பான்மையால் நீங்களே கடினமாக உழைத்து அதை உருவாக்குக்கிறீர்கள் ஆனால் வமிசாவளியாக உங்கள் பெற்றோரே இதைத் தந்து விட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். எப்படிப்பட்ட விசுவாசமில்லாத மகனாக நீங்கள் இருக்கிறீர்கள்! ஒவ்வொருவரும் பிறக்கும் போது புத்தரின் மனதை பெற்றோரிடமிருந்து பெறுகிறார். பாரபட்சமாக இருப்பதால் தன்னிடம் முன்கோபம் போன்றவை வந்து விட்டதாக ஒரு மாயையினால் எண்ணுகிறார். வமிசாவளியாக இவை வருகின்றன என்று எண்ணுவது தவறு. நீங்கள் கோபப்படாமல் இருக்கும் போது அந்தக் கோபம் எங்கே இருக்கிறது? இது போன்றே தான் எல்லா மாயைக:ளும்! நீங்கள் அவற்றை உருவாக்காவிடில்,அவை இல்லாமலேயே போய் விடும்! கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சுயநலமான ஆசைகளால் உருவாக்கப்படுகின்றன! மாயையான சில மனப் பழக்கங்கள் உங்களுடனேயே இயல்பாகப் பிறக்காதவை. இதைத் தான் அனைவரும் உணரத் தவறுகின்றனர்”
MaghapujaDay

அன்பான பாங்கெயின் உபதேசத்தைக் கேட்டவுடன் அந்த துறவி முன் கோபத்தை மட்டும் விட்டு விடவில்லை. அனைத்துக் கெட்ட பழக்கங்களையும் துறந்து அற்புதமான ஒரு துறவியாக மாறினார்.
எந்தக் கெட்ட பழக்கமுமே நம்மிடம் பிறக்காதவை என்பதை அவர் சுட்டிக் காட்டியதால் “அன்பார்ன்” (Unborn) என்ற செல்லப் பெயரால் அவரை அழைக்கலாயினர்.

பாங்கெய் யோடாகு (Bankei Yotaku) அபூர்வமான ஜென் மாஸ்டர்களில் ஒருவர். கன்பூஸியஸை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் ஹமாடா என்ற நகரில் அவர் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சாமுராய். 1632இல் அவரது பத்தாம் வயதில் அவரது தந்தை இறந்தார். எதை எடுத்தாலும் குடைந்து குடைந்து கேள்விகளைக் கேட்பது இளமையிலிருந்தே அவருக்குப் பழக்கமாகி விட்டது. அவரது கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு பள்ளி விட்டு இன்னொரு பள்ளி, ஒரு துறவி விட்டு இன்னொரு துறவி என்று அவர் மாறிக் கொண்டே இருந்தார்.

இறுதியில் உம்போ என்ற மகானைச் சந்தித்தார். 1638இல் அவர் உம்போவின் சிஷ்யராக ஆனார். சில வருடங்கள் அவருடன் கழித்த பின்னர் புனிதத் தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்டார்..1647ஆம் ஆண்டு மனிதனின் உள்ளார்ந்த இயற்கை எது என்று கண்டுபிடிக்க தீவிரமான தவத்தை மேற்கொண்ட அவர் சிறிய அளவு உணவையே உட்கொள்ள ஆரம்பித்தார். விளைவு, ஒரு நாள் தொண்டையை ஏதோ அடைப்பது போன்ற ஒரு உணர்வை அடைந்தார். தனது சக்தியை எல்லாம் ஒருங்கு திரட்டி தொண்டைய அடைத்திருப்பதைக் காறி உமிழ்ந்தார். உடனடியாக அவரது பலஹீனம் மறைந்தது. இதுவரை அவர் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு அவருக்கு விடை கிடைத்தது. ஆதி மூலமாக இருக்கும் மனம் பிறக்காத ஒன்று – ஒரிஜினல் மைண்ட் இஸ் அன்பார்ன் – என்ற பேருண்மையை அவர் கண்டு பிடித்து உணர்ந்தார். அன்பார்ன் என்ற செல்லப் பெயருடன் பிரபலமானார்.

Bankei_Zen

சின்ன உண்மை
பாங்கெய்க்கு சூத்ரங்கள், கோயன்கள், சீன குருமார்களின் போதனைகள் ஆகிய எதுவும் பிடிக்காது. 30 நாட்கள் நீங்கள் பிறக்காமல் – “அன்பார்ன்” ஆக -இருந்து பாருங்கள், போதும் என்பார்!
-தொடரும்

‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’

B_Id_437744_Miss_Universe

Post No 720 dated 24rd November 2013 (In Tamil and English)

Compiled and translated into English by London Swaminathan

“A man’s face is his autobiography. A woman’s face is her work of fiction.”
― Oscar Wilde

தமிழிலும் வடமொழியிலும் பெண்களைப் பாராட்டியும் போற்றியும், புகழந்தும் ஏராளமான பாடல்கள், கவிதைகள் உள்ளன. மாதா, பிதா,குரு, தெய்வம் என்ற வரிசையில் முதலிடம் பெறுவதும், கடவுளின் உடலில் ஒரு பாதியைப் (அர்த்தநாரீஸ்வரர்) பெற்ற பெருமையும் பெண்ணுக்கே உண்டு. இதுபற்றி ‘உலகிலேயே அறிவாளியான பெண்’ என்ற கட்டுரையிலும், பெண்கள் பற்றிய பழமொழித் தொகுப்பிலும் ஏற்கனவே தந்து விட்டேன். தாய் என்ற நிலையில் வைக்கையில் புகழுரையும், வேசி, தேவதாசி என்ற நிலையில் இகழ்ச்சியும் பெறுபவர்கள் பெண்கள். பட்டினத்தார் பாடல்களிலும், அருணகிரியின் திருப்புகழ்களிலும் இதைக் காண்கிறோம்.

விவேக சிந்தாமணி என்ற நூலில் கொஞ்சம் கூடுதலாகவே பெண் எதிர்ப்பு உணர்வு காணப்படுகிறது. அதை எழுதிய ஆசிரியரை தமிழ் கூறு நல்லுலகம் அறிய முடியாததால் அவரது மனப்பாங்கிற்குக் காரணம் என்ன என்று தெரியவில்லை. இதோ சில பெண் எதிர்ப்புப் பாடல்கள்:

1.மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்
புகழ் தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன் சென்றான் மான் பின்;
தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும் தானும் மாண்டான்
நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர் உலகோர் நகைப்பர்தாமே.

Emperor Dasaratha died because he listened to Kaikeyi; Rama went after a deer to satisfy lotus like Sita; Ravana died with all his relatives after listening to his sister; listening to women will bring disasters and you will be a laughing stock.

2.பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம் மூடப் பேடி லோபர்
முண்டைகளுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரென மொழியொணாதே
உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்ன தென உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக் கொடுப்பா ர் அழிவழக்கே
செய்வதவர் அறிவுதானே

Hen pecked husbands are eunuchs and reckless; one can’t even compare them with misers and widows. They are not men at all. Those who don’t know what fame and dharma, are the ones who always support the wrong side. They support injustice and harm those who ask for help.

B_Id_437738_Isler

3.ஆலகால விடத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடும் தூதரை நம்பலாம்
கள்ள வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.

You may trust a deadly poison and a flowing river and gale force wind. You can trust a mad elephant or a man eating tiger. You can even trust messengers of death and robbers; but those who trust sari clad women will surely be left to suffer (This verse is used in a Tamil film)

4.படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
கொடு மதக் குவடென வளர்த்திடும் குஞ்சரத்தையும் நம்பலாம்
குலுங்கப் பேசி நகைத்திடும் சிறுகுமரர் தம்மையும் நம்பலாம்
கடை இலக்கமும் எழுதிவிட்ட கணக்கர் தம்மையும் நம்பலாம்
காக்கைபோல் விழி பார்த்திடும் குடி காணியாளரை நம்பலாம்
நடை குலுக்கி மினுக்கிய நகை நகைத்திடு மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய்காணுமே
B_Id_437742_Isler

You can trust instant killing poison; you can even trust the old waylaying Neeli; you can trust a mad elephant, you can trust the laughing cheats, fraudulent accountants, land lords who rule the lands with crow like vision but never ever trust cat walking, laughing women with shiny jewellery. Never trust. Never trust.
(For Neeli story, read my post The Ghost that killed 72 Tamils)

5.அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி
அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங்கருத்த குழல்
சின்னஞ் சிறுத்த இடை பெண்
எண்னெஞ் சுருக்கவ டென்னெஞ்சுகற்ற
கலை என்னென்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கி அவள் வில்லங்கம் இட்டபடி
தெய்வங்களுக்கு அபயமே

A Woman with more beautiful gait than a swan, more powerful eyes than poison, with words sweeter than nectar, with big breasts and dark curly hair and a thin waist made me go crazy. How can I describe the impact she made; that harlot has landed me in big trouble. Only God can save me now!

Above verses are from Viveka Chinthamani, a modern day Tamil poem by an anonymous author. The book is famous for its moral teachings and notorious for its anti women tirade. Though Arunagirinathar and Pattinathar also composed many poems with anti women lines, they were against only characterless women. Hindu literature places women in high esteem which I have already explained in my post ‘Most Intelligent Woman in the Ancient World’.

Tamils are not alone in this attack; look at the quotes from some western writers.

“A man’s face is his autobiography. A woman’s face is her work of fiction.”
― Oscar Wilde

Here’s all you have to know about men and women: women are crazy, men are stupid. And the main reason women are crazy is that men are stupid.”
― George Carlin, When Will Jesus Bring The Pork Chops?

“As usual, there is a great woman behind every idiot.”
― John Lennon

“Dispute not with her: she is lunatic.”
― William Shakespeare, Richard III

“Good girls go to heaven, bad girls go everywhere.”
― Mae West, Wit & Wisdom of Mae West
“Like a compass needle that points north, a man’s accusing finger always finds a woman. Always.”
― Khaled Hosseini

“There is always one woman to save you from another and as that woman saves you she makes ready to destroy”
― Charles Bukowski, Love is a Dog from Hell

“It’s absolutely unfair for women to say that guys only want one thing: sex. We also want food.”
― Jarod Kintz, $3.33

“I have been crying,” she replied, simply, “and it has done me good. It helps a woman you know, just as swearing helps a man.”
― Horace Annesley Vachell, The Romance of Judge Ketchum

B_Id_437745_Gabriela_Isler

Please read my earlier articles:

1.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 1
2.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2

3.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 1
4.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

5.Most Intelligent Woman in the Ancient World

பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்

sathya-sai-baba-laughingramana-maharshi

November 23rd is Sri Sathya Sai Baba’s Birth Day
(Post No 718 dated 21st November 2013)

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் வாழ்வும் பகவான் ரமணரின் வாக்கும் புகட்டும் அற்புத உண்மைகள்!
ச.நாகராஜன்

என் செயல்களைக் கூர்ந்து கவனியுங்கள்

“எனது வாழ்க்கையே என் செய்தி” (MY LIFE IS MY MESSAGE) என்று ஒரு முறை பக்தர்களுக்கு அருளுரையாக வழங்கிய ஸ்ரீ சத்ய சாயிபாபா தன் செயல்களைக் கூர்ந்து கவனிக்குமாறும் அதன்படியே நடக்குமாறும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இறைவனே மானிட உருவமாக அவதாரம் எடுத்துள்ளபோது அது தரும் செய்தி மகத்தான செய்தியாக அல்லவா அமைகிறது. தனது ஜீவிதத்தில் ஒவ்வொரு கணத்தையும் மனித குலப் படிப்பினைக்காக அர்ப்பணித்த அவதாரத்தின் முக்கிய செய்திகளில் ஒன்று தியாகம்!
‘சர்வ சங்க பரித்யாகினே நம:’ என்று அவரது அஷ்டோத்தரத்தில் நாம் அன்றாடம் கூறும் போது கோடானு கோடி பணத்தையும் அவர் நிர்மாணித்த அனைத்தையும் க்ஷண நேரத்தில் துறந்து ஏக வெளியுடன் இரண்டறக் கலந்த ஸ்வாமியின் பெரும் தியாகத்தை நினைத்து நம் மெய் சிலிர்க்கிறது.

சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி

அவர் வாழ்வில் ஏட்டின் ஒரு பக்கம் இதோ:
1979ஆம் ஆண்டு லெப்டினண்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று இரண்டு லட்சம் இந்தியப் படைவீர்ர்களுக்குத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பைப் பெற்ற எம்.எல்.கிப்பர், பாபாவின் அணுக்கத் தொண்டர். 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியை அவர் ‘த்ரூ தார்மிக் டைலம்மாஸ்’ என்ற தனது கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சூபர் ஸ்பெஷாலிடி (Super Speciality Hospital) ஆஸ்பத்திரியின் கட்டுமான வேலைகள் இரவு பகலாக இடைவிடாது வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆஸ்பத்திரிக்குத் தேவையான மெஷின்களும் உபகரணங்களும் உலகெங்கிலும் இருந்து “பறந்து” வந்து கொண்டிருந்தன. ஆஸ்பத்திரி தரை பாலிஷ் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குறித்த காலத்தில் திறப்பு விழா நடைபெற வேண்டும் என்ற பரபரப்பு பிரசாந்தி நிலையத்தில் ஆரம்பித்து உலகெங்கும் பரவி இருந்தது.

இந்த பிரம்மாண்டமான ஆஸ்பத்திரி உலக அதிசயமாக ஐந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.இன்னும் பத்து நாட்களே இருந்தன திறப்பு விழாவிற்கு. அன்று காலை ஸ்வாமி இன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்து நேராக பல்கலைக்கழக மாணவர்களிடம் போனார். அவர் கையில் ஒரு கடிதம் இருந்தது. மாணவர்களிடம் அதைக் காட்டி ஸ்வாமி, இந்திய ஜனாதிபதி திரு ஆர்.வெங்கடராமன் ஐந்து மாதங்களில் இந்த ஆஸ்பத்திரி கட்டி முடித்திருப்பது ஒரு அற்புதம் என்று எழுதி இருப்பதாகக் கூறினார். இதுவே அரசினால் கட்டப்பட்டிருந்தால் ஐந்து வருடம் ஆகி இருக்கும். இதைச் சொல்லி விட்டு தனது இன்டர்வியூ அறைக்கு ஸ்வாமி மீண்டும் திரும்பினார்.

satya_sai_baba

செல்லும் வழியில் இருந்த கிப்பர், ஸ்வாமியிடம், “ மானேஜ்மெண்ட் மாணவர்களுக்கு ஐந்து மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட ஆஸ்பத்திரி அருமையான ஒரு கேஸ் ஸ்டடியாக அமையும்” என்று குறிப்பிட்டார். இதைக் கேட்டவாறே நடந்த ஸ்வாமி திரும்பினார். அவரைப் பார்த்தார். ஒரு சில வினாடிகள் கழிந்தன.பிறகு மேலே வானத்தில் அவர் கண்கள் பதிந்தன. ”இல்லை, எந்த மானேஜ்மெண்டிற்கும் வேண்டாம்” என்றவர் ஒரு ஸ்லோகத்தை உச்சரித்தார்.

“ந கர்மணா, ந ப்ரஜயா, தனேன
த்யாகேனைகே அம்ருதத்வமான்சு”

(கர்மத்தினால் அல்ல, ப்ரஜைகளால் அல்ல, பணத்தினால் அல்ல, தியாகத்தினால் மட்டுமே அம்ருதத்வம் அடையப்பட முடியும்)
இதைச் சொல்லி விட்டு மெல்ல அவர் நடக்கலானார்.

அற்புதமான பிரம்மாண்டமான ஒரு பெரும் காரியத்தைச் செய்து விட்டு அதைப் பற்றிச் சிறிதும் பெருமைப்படக்கூடாது என்பதோடு கர்மத்தையும் அதனால் வந்த பெருமையையும் கூட தியாகம் செய் என்ற தைத்திரீய உபநிஷத்தின் மந்திரத்தை உபதேசமாக தக்கதொரு தருணத்தில் அவர் அருளியது அனைவரையும் பிரமிக்க வைத்தது; நெகிழ வைத்தது. மனித குலத்திற்கு அவர் வாழ்க்கை தந்த செய்தி இதுவே!

201106_sai_baba

அவரது மறைவுக்குப் பின்னர் தனி அறையில் கட்டுக் கூடப் பிரிக்கப் படாமல் கிடந்த பெரும் பணக் கட்டுகள் கீதையில் கண்ணபிரான் கூறிய “பற்றில்லாத செயலை”ப் பறை சாற்றின!

ஆத்ம பிரதக்ஷிணமே உண்மை பிரதக்ஷிணம்

இதே போல பகவான் ரமணரும் தான் அடைந்த பெரும் ஞான நிலையைக் காட்டாது காண்போர்க்கும் பழகுவோருக்கும் எளியனாக இருந்தார். பெரும் ரகசியங்களை அனாயாசமாக போகிற போக்கில் சொல்லிச் சென்று விடுவார். பக்குவிகள் பக்கென்று அந்த உபதேசத்தைப் பற்றிக் கொள்வர். அவர் கூறியஒரே ஒரு பெரும் ரகசியத்தைப் பார்க்கலாம்:

1946ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி (இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இரவு 8.47க்கு வானில் ஜோதியாக ஐக்கியமானார் பகவான் என்பது நினைவு கூறத் தகுந்தது)
காலை எட்டு மணிக்கு அணுக்க பக்தை நாகம்மா, பகவான் அமர்ந்திருந்த ஹாலை இரண்டு முறை சுற்றி விட்டு பின் சந்நிதிக்கு வந்து பகவானுக்கு நமஸ்காரம் செய்தார். “ ஓ! நீ கூட சுற்ற ஆரம்பிச்சாச்சா. ஒருவர் சுற்றி விட்டால் எல்லோரும் அப்படிச் சுற்றுவது தான் முறையான செயல் என்று நினைத்துச் சுற்ற ஆரம்பிப்பார்கள்” என்ற பகவான் பெரும் ரகசியத்தை சில சொற்களாலேயே விளக்கி விட்டார்.

“உண்மையான பிரதக்ஷிணம் எது தெரியுமா? ஆன்மாவைச் சுற்றுவது தான். ஆத்ம பிரதக்ஷிணம் தான் உண்மையான பிரதக்ஷிணம். நாம் ஆன்மா. நமக்குள் எண்ணற்ற கோளங்கள் சுழல்கின்றன என்று உணர வேண்டும். ரிபு கீதையில் உள்ள பாடல் இதை வர்ணிக்கிறது.

பூரண ஆனந்த ஆன்மா அகம் என்று எண்ணல்
புகழ் புஷ்பாஞ்சலி ஆகும் அனந்த கோடி
காரியமாம் பிரமாண்டம் என்னிடத்தே
கற்பிதமாய் சுழலும் எனும் தியானம் தானே
நேரதுவாய் வலம் வரலாம் என்றுமென்னை
நிகிலருமே வந்திப்பார் நானெப்போதும்
யாரையுமே வந்திக்கேன் என்னும் தியானம்
ஆன்ம மகாலிங்கத்தின் வணங்கலாமே

standing ramana

(இதன் பொருள் : பூரண ஆனந்தமான ஆன்மாவே நான் என்று எண்ணுவது அனந்த கோடி புகழ் அஞ்சலிக்கும் புஷ்பாஞ்சலிக்கும் நிகராகும். என்னுள் அண்டங்கள் அனைத்தும் கற்பிதமாய்ச் சுழல்கின்றன என்னும் எண்ணமே உண்மையான வலம் வருதல் ஆகும். அகிலமும் தன்னை வணங்குமென்றும் தான் யாரையும் எப்போதும் வணங்கேனென்றும் உணருபவன் மகாலிங்கமான ஆன்மாவை வணங்குகிறான்).

பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்தும் சூக்ஷ்மாண்டத்தில் உண்டு அதாவது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்ற அற்புதமான பேருண்மையை அந்தக் கணத்தில் அங்கு குழுமி இருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

யோகவாசிஷ்டத்தில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஏராளமான உலகங்கள் இருக்கின்றன என்று உபதேசிக்கப்படுகிறது, விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்காத மெய்ஞான உண்மையை பகவான் ரமணர் எளிதாக விளக்கி விட்டார். இப்படி அவர் விளக்கிய ரகசியங்கள் பற்பல!

மகான்களும் அவதாரங்களும் தங்கள் வாழ்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் வாக்கின் மூலமாகவும் பேருண்மைகளை விளக்குவர் என்பதற்கு நம் காலத்தில் வாழ்ந்த பகவான் பாபாவும் பகவான் ரமணருமே சிறந்த எடுத்துக்காட்டுகள் ஏப்ரல் மாதம் மஹா சமாதி அடைந்த இருவரையும் போற்றி வணங்கி அவர்கள் காட்டிய வழியில் நடப்போம்!

(பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் மஹா சமாதி தினம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியும் பகவான் ரமணரின் மஹா சமாதி தினம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியும் வந்ததை ஒட்டி ஞான ஆலயம் ஆன்மீக
மாத பத்திரிக்கை ஏப்ரல் 2013 இதழில் வெளியான கட்டுரை. Written by Santanam Nagarajan)

November 23rd is Baba’s Birth Day. contact swami_48@yahoo.com

****************

Buddha and Tamil Saint on Good thoughts!

VALLUVAR_big

Buddha Daibutsu, Kamakura
–London Swaminathan—

Post No 717 dated 21 November 2013

Buddha was great but he said nothing new. Whatever he said was already known to the Hindus. But his emphasis was on certain aspects of existing Hindu principles. Some people were more into rituals in his days. Others were more into yoga and meditation. Buddha insisted only eight important things. He never contradicted the existing things but complemented to them. If one reads Dhammapada, one will feel reading a Hindu scripture. I compare below some of the Buddha’s teachings with that of Tirukkural in Tamil whose author Tiruvalluvar lived at least 1000 years after the Buddha. Gautama Buddha lived in the sixth century before Christ and Valluvar lived in the fifth century after Christ.

Tiruvalluvar’s Tirukkural was called Tamil Veda by his contemporaries. One of the poets who praised him for his contribution said, “Sanskrit is famous because of the Vedas and Tamil is famous because of Tirukkural”.
Buddhist Holy book is called Dhamma (Dharma)pada. That is the first word of Bhagavad Gita (Dharma kshetre) and first section of Tirukkural (Araththupaal)!

Dharma cannot be translated into English with one simple word!

Here are the words of Buddha:

“What we are today comes from our thoughts of yesterday, and our present thoughts build our life of tomorrow: our life is the creation of our mind.

If a man speaks or acts with an impure mind, suffering follows him as the wheel of the cart follows the beast that draws the cart.

If a man speaks or acts with a pure mind, joy follows him as his own shadow”.
-Dhammapada 1-1/2

It is interesting to compare it with Lord Krishna’s words in Gita (6-5)
“Let a man lift himself by himself; let him not degrade himself; for the Self alone is the friend of the self and the Self alone is the enemy of the self.

In the chapter on Hatred, Valluvar said,

“The evil of hatred is the grief of griefs. If it is rooted out, you can enjoy the joy of joys (854)
Nip in the bud the feeling of hostility and you prosper well. For one is fast ruined by fomenting hatred (858)

Out of hatred arise all evils; the smile of good will usher in peace and prosperity (860)

Buddha said,
For hate is not conquered by hate; hate is conquered by love. This is a law eternal (1-5)

Valluvar said,
The best punishment for those who do evil to you, is to shame them by returning good for evil (Kural 314).

Jesus said,
Whoever strikes thee on the right cheek,
Turn to him the other also. (Matt 5,39)
Great men think alike!

Read other articles in Great men think alike series; also One Minute Interview with the Buddha, Lord Krishna (in English), Tiruvalluvar (in Tamil).

Contact swami_48@yahoo.com

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

map Egypt Luxor

–லண்டன் சுவாமிநாதன்—

POST No. 716 dated 21 Novemeber 2013

“உன்னையே நீ அறிவாய்”, “உள்ளம் பெருங்கோயில்” என்ற கருத்துக்கள் இந்துக்களுக்குக் கரதலைப் பாடமாகத் தெரிந்தவை. ‘மனக் கோயில், மனமே கோயிலாகக் கொண்டவன்’ என்று இறைவனைப் பாராட்டும் வரிகள் தேவாரம், திவ்யப்பிரபந்தம், திருமந்திரம், திருவாசகத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.

எகிப்து நாட்டில் தீப்ஸ் என்னுமிடத்தில் உள்ள லக்ஸார் கோவிலில் இந்த இந்து மதக் கருத்துக்கள் எழுத்தில் இருக்கின்றன. இந்தக் கோவில்கள் 3500 ஆண்டுகள் பழமையானவை. அப்போதே இந்துமதக் கருத்துக்கள் அங்கே பரவி இருந்தன. உபநிஷத் சொன்ன கருத்துக்களை பிற்காலத்தில் சாக்ரடீஸ் மேலை உலத்தில் பரப்பினார். அதற்குப் பின்னர் திருமூலர் அவைகளைத் தமிழில்—எளிய தமிழில்—எல்லோருக்கும் புரியும்படியாகப் பாடி வைத்தார்.

சாக்ரடீஸின் சீடர் பிளட்டோ இந்தக் கருத்துக்களை அவரது சீடர் அரிஸ்டாடிலுக்குச் சொன்னார். அவர் தனது சீடரான அலெக்ஸாண்டருக்குச் சொன்னார். இதைக் கேட்டுப் பிரமித்துப் போன மஹா அலெக்ஸாண்டர் எப்படியாவது இந்து மத சந்யாசிகளைக் கிரேக்க நாட்டுக்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்று அரும்பாடுபட்டார். இதை “ஒரு யோகியின் சுயசரிதை” நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா போன்றோர் (நடிகர் ரஜினிகாந்தின் குருவின் வழிவந்தவர் பரமஹம்ச யோகாந்தா) கூறியுள்ளனர். எல்லா விவரங்களையும் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்” என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

court_ramesisluxor

கீழ்கண்ட பகுதியை விக்கிபீடியாவில் இருந்து எடுத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்:
“பழங்கால லக்ஸார் கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.முன் பகுதியில் ஆரம்ப உபதேசம் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். உள்ளே இருக்கும் பகுதிக்குத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உயரிய ஞானமும் அந்தர்முகமாகப் பார்க்கவல்லவர் மட்டுமே அங்கே பிரவேசிக்கலாம். வெளிப்புறக் கோவிலில் இருக்கும் பொன்மொழிகளில் ஒன்று “ உடலே இறைவனின் திருக்கோயில்”. இதனால்தான் உன்னையே நீ அறிவாய் என்று மனிதர்களுக்குச் சொல்லப்படுகிறது. உள்ளே உள்ள பொன்மொழிகளில் ,”மனிதனே , உன்னையே நீ அறிவாய். பின்னர் நீ கடவுளை அறிவாய்” என்று எழுதப்பட்டுள்ளது.

Ancient Egyptian
“There are two parts of the ancient Luxor temple: the outer temple where the beginning initiates are allowed to come, and the inner temple where one can enter only after proven worthy and ready to acquire the higher knowledge and insights. One of the proverbs in the Outer Temple is “The body is the house of God.” That is why it is said, “Man know thyself.”[20] In the Inner Temple, one of the many proverbs is “Man, know thyself … and thou shalt know the gods.”[21]”

large_5Luxor_Temp..__Egypt

ஏற்கனவே நான் எழுதிய எகிப்து தொடர்பான மூன்று, நான்கு கட்டுரைகளில் அதர்வண வேத மந்திரக் கருத்துக்கள் அங்கே இருப்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். காஞ்சி மஹா பெரியவர் சென்னையில் 1930களில் நடத்திய சொற்பொழிவுகளில் உலகம் முழுதும் இந்துமதக் கருத்துக்கள் இருப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பின்னர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்: “இப்படி நான் சொன்னதால் இந்துக்கள் அங்கெல்லாம் போய் தங்கள் மதத்தைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் ஒரே மதம்தான் உலகம் முழுதும் இருந்தது. அதுதான் சநாதன தர்மம்” (இந்து மதத்தின் பழைய பெயர்) என்று சொல்லி இருக்கிறார்.

இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:

1.”தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”

2.”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)

3. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

கீதையில் கண்ண பிரானும் இதை வலியுறுத்துகிறான்:
எவன் தானே தன்னை வெல்கிறானோ அவனே அவனுக்கு உறவினன் (பந்து).தன்னை வெல்லாதவனுக்கு தானே பகைவன் (6-6)

‘திருமூலருடன் 60 வினாடி பேட்டி’ என்ற எனது முந்தைய கற்பனைப் பேட்டியில் மேல் விவரம் காண்க.

tutakhamun

Tutankhamun in Luxor

எது சொர்க்கம்? எது நரகம்?

12_11_17_heaven_hell

Part 14 of History of Zen Buddhism in Tamil by Santanam Nagarajan

Part 14. அப்படியா?! By ச.நாகராஜன்

ஹகுயின் வாழ்க்கை சுவாரசியம் ததும்பிய ஒன்று. அதில் ஏராளமான சுவையான சம்பவங்களைப் பார்க்க முடியும். மிகவும் பிரபலமான இரு சம்பவங்களைப் பார்க்கலாம்:

ஜப்பானிய இளம் பெண் ஒருத்தியின் பெற்றோர்கள் ஹகுயின் வாழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு உணவு விடுதியை நடத்தி வந்தனர். ஒரு நாள் தனது பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அவர்கள் திகைத்தனர். தங்கள் பெண்ணிடம் அவளது கர்ப்பத்திற்குக் காரணமானவன் யார் என்று கேட்டுக் குடைந்தனர். அவளோ லேசில் பதில் சொல்வதாயில்லை. பெரும் முயற்சிக்குப் பின்னர் அவள் ஹகுயினே இதற்குக் காரணம் என்று சொன்னாள். பெரும் கோபம் அடைந்த பெற்றோர் ஹகுயினிடம் வந்து நடந்ததைச் சொல்லிக் கத்தினர்.

“அப்படியா?” என்று மட்டும் சொன்னார் ஹகுயின்!

அவளுக்குக் குழந்தை பிறந்தது.அந்தக் குழந்தையை எடுத்து வந்த இளம் பெண்ணின் பெற்றோர் ஹகுயினிடம் தந்தனர். அதைச் செல்லமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க ஆரம்பித்தார் ஹகுயின். இதற்குள் இந்தச் சம்பவம் ஊரெல்லாம் பரவி ஹகுயினின் பெயர் மிகவும் கெட்டு விட்டது. ஒரு வருடம் கழிந்தது. அந்தப் பெண்ணால் இனியும் பொறுக்க முடியவில்லை.தனது பெற்றோரிடம் அவள் உண்மையைக் கூறினாள்.அந்தக் குழந்தையின் நிஜமான தந்தை மீன் சந்தையில் இருக்கும் ஒரு இளைஞன் தான் என்று! உடனே அவளது பெற்றோர் ஹகுயினிடம் ஓடி வந்தனர். நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டனர். குழந்தையைத் தங்களிடம் திருப்பித் தருமாறு வேண்டினர்.

எல்லாவற்றையும் கேட்ட ஹகுயின் “அப்படியா?” என்று மட்டும் சொன்னார். குழந்தையை அவர்களிடம் மனமுவந்து திருப்பிக் கொடுத்தார். இதனால் அவர் புகழ் எல்லா இடங்களிலும் பரவி எப்படிப்பட்ட உன்னதமான குரு அவர் என்று அவரைப் போற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர்.

heaven-hell

இன்னொரு சம்பவம்:
ஒரு நாள் போர்வீரன் ஒருவன் ஹகுயினிடம் வந்தான். “உண்மையிலேயே நரகமும் சுவர்க்கமும் இருக்கிறதா?” என்று கேட்டான்.
“நீ யார்?” என்று கேட்டார் ஹகுயின்.
“நான் ஒரு சாமுராய்” என்றான் அந்தப் போர்வீரன்.
“நீ ஒரு சாமுராயா” என்று வியந்து கூவினார் ஹகுயின்.
“உன்னைக் காவலனாக எந்த மன்னன் தான் வைத்திருக்கிறானோ! உன்னுடைய முகம் பிச்சைக்காரன் போலத் தோற்றமளிக்கிறதே!” என்றார் ஹகுயின்.

இதைக் கேட்டு வெகுண்ட அவன் தன் வாளை உருவினான். ஆனால் ஹகுயினோ பயப்படவில்லை.தொடர்ந்து பேசலானார்.”ஓ! உன்னிடம் ஒரு கத்தி இருக்கிறதா! உன்னுடைய ஆயுதம் உன் புத்தியைப் போலவே மழுங்கி இருக்கிறது!”

அந்தப் போர்வீரன் வாளை ஓங்கவே, “இதோ நரகத்தின் வாயில் திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.

இதைக் கேட்ட மாத்திரத்தில் அவரது பெருமையையும் அவர் போதிக்கும் விதத்தையும் உணர்ந்த அந்த வீரன் தன் வாளை இடையில் செருகினான்.

“இதோ சொர்க்கத்தின் கதவு திறக்கிறது” என்று ஹகுயின் கூவினார்.
அந்த வீரனுக்கு எது சொர்க்கம், எது நரகம் என்று இப்போது புரிந்து விட்டது!ஹகுயினுக்குத் தலை வணங்கி அவன் விடை பெற்றுச் சென்றான்.

ஹகுயின் அதிகம் பேச மாட்டார்.சில சொற்களிலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுவார். மௌனமாக இருப்பதே அவரது இயல்பு. இதை விளக்கி ஓஷோ (முன்னாளில் ஆசார்ய ரஜனீஷ்) ஹகுயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்கியுள்ளார்.

hell-heaven

ஒரு முறை ஜப்பானிய மன்னன் ஹகுயினை ஒரு உபதேச உரை நிகழ்த்துவதற்காக அழைத்தான். ராணி, மன்னன், ராஜ குரு,மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் அரசவையில் அவர் பேச்சைக் கேட்பதற்காக ஆவலுடன் குழுமினர். ஹகுயின் அங்கு வந்தார். ஒரு நிமிடம் நின்றார்.சபையிலிருந்தோரை சுற்றிப் பார்த்தார். பின்னர் சபா மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

மன்னன் மந்திரியிடம், “ இது என்ன? நாம் இவர் சொல்லப் போவதைக் கேட்பதற்காக வந்திருக்கிறோம். ஒன்றுமே பேசாமல் போகிறாரே!” என்றான்.

மந்திரி கூறினார்-””அரசே! நான் இதுவரை கேட்ட பிரசங்கங்களிலேயே இது தான் அற்புதமானது! நீங்கள் உபதேச உரை கேட்டீர்கள். அவர் அதைச் செய்து காண்பித்து விட்டார். அவர் மௌனமாக சில விநாடிகள் நின்றார். அவரே மௌனமாக ஆனார். ஒரே மௌனம்! உபதேசித்ததை விட்டு விட்டீர்கள். ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களே”

மௌனத்தை எப்படி விளக்க முடியும்! மௌனத்தினாலே தான் விளக்க முடியும்!
அரசன் புரிந்து கொண்டான். எதையும் ஹகுயின் வாழ்ந்து காட்டிப் புரிய வைப்பார்.

பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்ட ஹகுயின் 31ஆம் வயதில் ஷோயின்-ஜி மடாலயத்திற்குத் திரும்பி வந்தார். அங்கே தலைமை குருவாக ஆனார். முதல் குரு என்று பொருள் படும் தாய்-இசிஸா என்ற வார்த்தையால் அவர் மரியாதையுடன் அழைக்கப்பட்டார். ஹகுயின் என்ற அவரது பெயருக்கான அர்த்தம் ‘வெண்மையில் ஒளிக்கப்பட்டது’ என்பதாகும். 1768ஆம் ஆண்டுஜனவரி 18ஆம் தேதியன்று 83ஆம் வயதில் அவர் நிர்வாணம் அடைந்தார். பக்குவ நிலையுடன் ஞானம் அடைந்த 90 வாரிசுகளை அவர் உருவாக்கியது ஒன்றே அவர் எப்படிப்பட்ட மாபெரும் குருவாகத் திகழ்ந்தார் என்பதை உணர்த்தும்.

சின்ன உண்மை
ஹகுயின் தியானப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். மிகவும் பிரபலமான அந்தப் பாடலில் நீங்கள் ‘முழுமை’ அடைந்து விட்டால் கடவுளின் அருள் கிடைக்கும்.கடவுள் அங்கு இருப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப் பாடியே ஜென் பிரிவினர் தியானத்தைச் செய்தல் மரபு.
-தொடரும்