Useless 7 and Hopeless 8 from a Tamil Work

Blacksea-bg-beach-dinev

Salt Water Not Useful

Viveka Chintamani is a Tamil poetical work by an anonymous author. The verses are didactic in nature. The language and style show that the verses are only a few centuries old. Some of the verses are out of date. It has got a few anti-women verses. But most of them are useful. It is the gist of age old Tamil wisdom. The beauty of Tamil language and style cannot be reflected in the English translation.

Useless 7
Son who does not help his father in difficult times, food inaccessible when one is hungry, water that does not quench one’s thirst, wife who is not prudent in spending, ruler who could not control his anger, student who doesn’t listen to his teacher and the holy waters that doesn’t washes one’s sins are the Useless seven.

The_Fox_and_the_Grapes

Food at inaccessible place!

Hopeless 8
Following eight won’t help when you are in trouble: step brother (who is not born to the same mother),step mother, wealth invested with another person, greediness, visiting brothels, book knowledge and living with another man’s wife— these eight are hopeless things.

Useless Body Parts
The Feet that never step into a temple, the Head that never bows to God, the Hands that never help others, the Ears that never hears good words, the eyes that never care for the tears of parents or guardians—these body parts are useless. What is the use of keeping them? They deserve burning.

partiality

Step motherly treatment!

Don’t Trust the following
Uneducated people, short tempered leaders, ministers who do not give timely advice, Gods/angels that don’t help, Brahmins who are not well versed in the scriptures, pretending wives—never trust these people.

Rough translation from Tamil by London Swaminathan; contact swami_48@yahoo.com
angry king

Image of Angry King

பயன் இல்லாத ஏழும், உதவாத எட்டும்

Blacksea-bg-beach-dinev

Water Water Everywhere, Not a drop to drink Here (salty!)

விவேக சிந்தாமணி என்னும் நூலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. மொழி நடையைப் பார்க்கையில் கடந்த சில நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. பல கருத்துகள் காலத்தைக் கடந்தும் பயந்தர வல்லவை. இதோ சில பாடல்கள்:

Viveka Chintamani is a Tamil poetical work by an anonymous author. The verses are didactic in nature. The language and style show that the verses are only a few centuries old. Some of the verses are out of date. It has got a few anti-women verses.

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும் பசிக்கு உதவா அன்னம்
தாபத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம்
பயன் இல்லை ஏழும்தானே

The_Fox_and_the_Grapes

Food at inaccessible places

Useless 7

Son who does not help his father in difficult times, food inaccessible when one is hungry, water that does not quench one’s thirst, wife who is not prudent in spending, ruler who could not control his anger, student who doesn’t listen to his teacher and the holy waters that doesn’t washes one’s sins are the Useless seven.

சமயத்திற்கு உதவாத எட்டு விஷயங்கள்
தன்னுடன் பிறவாத் தம்பி
தனைப் பெறாத் தாயார், தந்தை
அன்னியர் இடத்துச் செல்வம்
அரும்பொருள், வேசி ஆசை
மன்னிய ஏட்டின் கல்வி
மறுமனையாட்டி வாழ்க்கை
இன்னவால் கருமம் எட்டும்
இடுக்கத்துக்கு உதவா அன்றே!

Hopeless 8

Following eight won’t help when you are in trouble: step brother (who is not born to the same mother),step mother, wealth invested with another person, greediness, visiting brothels, book knowledge and living with another man’s wife— these eight are hopeless things.

பயனற்ற உடல் உறுப்புகள்
திருப்பதி மிதியாப் பாதம்
சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கீயாக் கைகள்
இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே!

partiality
Step motherly treatment!

Useless Body Parts

The Feet that never step into a temple, the Head that never bows to God, the Hands that never help others, the Ears that never hears good words, the eyes that never care for the tears of parents or guardians—these body parts are useless. What is the use of keeping them? They deserve burning.

நம்பத் தகாதவர்கள்

கல்லாத மாந்தரையும் கடுங் கோபத்
துரைகளையும் காலந்தேர்ந்து
சொல்லாத அமைச்சரையும் துயர்க்கு உதவாத்
தேவரையும் சுருதி நூலில்
வல்லா அந்தணர்தமையும் கொண்டவனோடு
எந்நாளும் வலது பேசி
நல்லாள் போல் அருகிருக்கும் மனைவியையும்
ஒரு நாளும் நம்ப ஒணாதே.

Don’t Trust the following

Uneducated people, short tempered leaders, ministers who do not give timely advice, angels that don’t help, Brahmins who are not well versed in the scriptures, pretending wives—never trust these people.
KING-FULL0506

Picture of Angry King

தொகுப்பு:- லண்டன் சுவாமிநாதன்;
Rough translation by London Swaminathan. Contact swami_48@yahoo.com

13. ஹகுயின் கோயன்கள்!

Daruma,_Hakuin_Ekaku_-
Picture of Hakuin Ekaku

Part 13 of Zen Buddhism by Santanam Nagarajan
13. ஹகுயின் கோயன்கள்!
ச.நாகராஜன்

சென்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள கோயன்களுக்கான சரியான விடைகளைப் பார்க்கலாம்.

1) இப்போது ஒரு கையின் ஓசையைக் கேட்ட நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
விடை: நான் களையைப் பிடுங்குவேன். தரையைச் சுத்தம் செய்வேன். நீங்கள் களைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு மசாஜ் செய்வேன்.
2) ஒரு கையின் ஓசையைக் கேட்பது அவ்வளவு எளிது என்றால் நானும் தான் அதைக் கேட்கிறேனே?
விடை:ஒரு பேச்சும் பேசாமல் மாஸ்டரின் முகத்தில் சிஷ்யர் அறைகிறார்!
3) ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள தீயை அணை!
விடை: விரல் நுனிகளால் சிஷ்யர் தீ ஜுவாலையின் வடிவத்தைச் செய்து காட்டுகிறார்.பிறகு அதை உஸ் என்று ஊதி அணைக்கிறார்.
4) உங்கள் கைகளைப் பயன்படுத்தாமல் என்னை நிற்க வை!
விடை: சிஷ்யர் எழுந்து நிற்கிறார்.இரண்டு மூன்று அடிகள் முன்னால் நடக்கிறார்.
5) வானம் எவ்வளவு உயரம்?
விடை: சிஷ்யர் அறையின் கூரையைச் சுட்டிக் காட்டி
இங்கிருந்து அது ஏழு அடி என்கிறார்.

ஹகுயின் இகாகு
கோயன்கள் வரலாற்றில் தலையாய இடத்தைப் பிடிப்பவர் மாஸ்டர் ஹகுயின் இகாகு. ஜப்பானில் ஹரா என்ற சிறிய கிராமத்தில் 1686ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி ஹகுயின் பிறந்தார்.அவர் பிறந்த காலத்தில் ஜென் பிரிவு தனது க்ஷீண தசையில் இருந்தது.அதை உன்னதமான நிலைக்கு ஏற்றி விட்டார் ஹகுயின். ரிஞ்ஜாய் பிரிவைச் சேர்ந்த அனைவரும் ஹகுயினையே பெரும் மாஸ்டராக இன்றளவும் போற்றி வருகின்றனர்.

குழந்தையாக இருந்த போது ஒரு நாள் ஹகுயின் துறவி ஒருவரின் சொற்பொழிவைக் கேட்கப் போனார். அந்தத் துறவி எட்டு கடும் நரகங்களைப் பற்றிப் பேச நரகம் பற்றிய பயம் ஹகுயினுக்கு ஏற்பட்டது. நரகத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் புத்த துறவியாக வேண்டும் என்ற எண்ணம் அவர் ஆழ் மனதில் பதியவே தனது 15ஆம் வயதில் பெற்றோரிடம் அனுமதி பெற்று ஷோயின்-ஜி மடத்தில் அவர் சேர்ந்தார்.அங்குள்ள தலைமை துறவிக்கு உடல் நலக் குறைவு ஏற்படவே அருகிலிருந்த டைஷோ-ஜி மடாலயத்தில் சேர்ந்தார்.தாமரை சூத்திரம் உள்ளிட்ட புத்த மத நூல்களைக் கசடறக் கற்றார்.

19ஆம் வயதில் அவர் பிரபல மாஸ்டரான யான்டோ க்வான்ஹோ பற்றிய கதையைப் படிக்க நேர்ந்தது. க்வான்ஹோவை கொள்ளையர்கள் கொன்றார்கள் என்பதைக் கேட்ட அவர் ஒரு துறவியாக இருந்தும் அவர்களிடமிருந்து கூடத் தப்பிக்க முடியவில்லை எனில் நரகத்திலிருந்து தப்பிப்பது எப்படி சாத்தியம் என்று எண்ணலானார். விளைவு, துறவியாகும் எண்ணத்தைக் கை விட்டு நாடெங்கும் சுற்றித் திரியலானார். ஒரு நாள் கவிஞரும் புத்த துறவியுமான போ என்பவரைச் சந்திக்க நேர்ந்தது.போவின் தொடர்பால் திரும்பவும் துறவியாகும் எண்ணம் அவருக்கு வலுப்பட்டது.
புத்த மடாலய முற்றத்தில் ஏராளமான சுவடிகள் இருப்பதைப் பார்த்த ஹகுயின் அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்கலானார். அதில் மிங் வம்சத்தில் உருவான ஜென் கதைகளைப் பற்றிய புத்தகம் ஒன்றும் இருந்தது. அதில் ஈர்க்கப்பட்ட ஹகுயின் ஜென் பிரிவு போதித்த சூக்ஷ்மங்களை ஆழ்ந்து கற்றார்.

பிறகு இரண்டு வருட காலம் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஒரு நாள் ஐகன்-ஜி என்ற ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார்; அங்கு ஏழு நாட்கள் கடும் தவத்தை மேற்கொண்டார். ஆலய மணி ஓசை அடிப்பதைக் கேட்டவுடன் அங்கு அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது.பின்னர் வாழ்நாள் முழுவதும் கோயென்களைப் பரப்பலானார்.
Hakuin.ClappingMonk
Picture of Hakuin Capping Monk

உள்ளுணர்வின் மூலம் ஆழ்ந்த அர்த்தங்களைப் பல கோயன்களுக்குத் அவர் தெரிந்து கொண்டார்.ஒரு முறை மழை கொட்டுகொட்டென்று கொட்ட முழங்கால் அளவு நீர் பெருகிய நிலையில் ஒரு சிறிய கோயனுக்கு உண்மையான அர்த்தத்தை அவர் தெரிந்து கொண்டார். இப்படிப் பல அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டது.

திடீர் திடீரென இப்படி பல கோயன்களுக்கு அர்த்தங்கள் புரியும் போது அவர் சிரிப்பார். இப்படி அடிக்கடி சிரிப்பதைக் கண்ட அனைவரும் அவரை ஒரு பைத்தியக்காரர் என்று நினைத்தனர்.

தியானம் தான் மிகவும் முக்கியமானது என்பதே அவரது அடிப்படைக் கொள்கையாக இருந்தது.தியானமும் உயிர்த்துடிப்புள்ளதாக இருக்க வேண்டும் என்றார் அவர்.அமைதியாக ஓரிடத்தில் தியானம் செய்வதை விட அன்றாட உலக நடவடிக்கைகளுக்கு இடையே செய்யப்படும் தியானம் ஆயிரம் மடங்கு வலிமை வாய்ந்தது என்று வலியுறுத்தினார் அவர். ஏனெனில் தினசரி வாழ்க்கையில் அன்றாட பிரச்சினைகளுக்கு இடையே தியானத்தை மேற்கொள்வது ஒரு கஷ்டமான காரியம். அப்படிச் செய்யப்படும் தியானம் மேலான ஒரு உள்ளுணர்வைத் தரும் என்றார் ஹகுயின்.

அன்றாட உலகவாழ்க்கையில் ஈடுபடுவோர் பெரும் உள்ளுணர்வு எல்லாவற்றையும் துறந்து காடுகளிலோ அல்லது மடாலயங்களிலோ துறவிகள் செய்யும் தியானத்தினால் வரும் உள்ளுணர்வை விட மேம்பட்ட ஒன்றா என்று ஒருவர் கேள்வியை எழுப்பினார் அவரிடம். அதாவது இருவர் பெறும் ஞானோதயமும் ஒன்று தானே என்பதே அவரது கேள்வி.

இதற்கு ஹகுயின் பதில் அளித்தார் இப்படி:-“ நீ ஒரு துறவியாக இருந்தாலும் கூட உனது பயிற்சி உள்ளார்ந்த்தாக இல்லாவிடில், உனது நோக்கம் தூய்மையானதாக இல்லாவிடில் நீ சாமான்யனை விட எப்படி வேறானவனாக இருக்க முடியும்? சரி, நீ ஒரு சாமான்யனாக இருந்தால், உனது நோக்கம் தூய்மையானதாக இருந்து உனது பயிற்சியும் உள்ளார்ந்த தீவிரத்துடன் இருந்து, நீ பெரும் ஒழுக்கமுள்ளவனாக இருந்தால் அது தூய்மையான துறவியை விட எப்படி வேறானதாக இருக்க முடியும்?

தூய்மையும் நோக்கத்தில் உள்ளார்ந்த ஆர்வமும் ஒழுக்கமும் தான் முக்கியமே தவிர இருக்கும் இடம் எது என்பதில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை என்பதே அவரின் பொருள் பொதிந்த பதில்!

சின்ன உண்மை
தனது அறுபதாம் வயதிற்குப் பின்னர் ஹகுயின் சித்திரக் கலையில் ஆர்வம் செலுத்தினார். 84 வயது வரை வாழ்ந்த அவர் சுமார் ஆயிரம் ஓவியங்களையும் சித்திர எழுத்துக்களையும் வாழ்வின் இறுதிக்குள் படைத்து விட்டார்
-தொடரும்
Part 13 of Zen Buddhism by Santanam Nagarajan

gautama-buddha

மனிதர்களே, உங்கள் ஆயுளை நீட்டிக் கொள்ளுங்கள்!

Caraka samhita

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2
ச.நாகராஜன்

மூன்று மூன்றாகக் கூறப்படும் ஏழு முக்கிய விஷயங்கள்
“ப்ராணைஷணா,தனைஷணா,பரலோகைஷணேதி” என்று மனிதர்களின் மூன்று ஆசைகளை நிர்ணயிக்கும் சரகர் ஏழு விஷயங்களை மூன்று மூன்றாக அழகாகத் தொகுத்துக் கூறுகிறார்.

வாழ்வின் மூன்று ஆதாரங்கள்:- உணவை உட்கொள்ளல், தூக்கம், பிரம்மசர்யத்தை அனுஷ்டித்தல்

மூன்று பலங்கள் :- உடலமைப்பு ரீதியிலான பலம், (பிறப்பிலிருந்தே இருக்கும் உடல் அமைப்பு மன அமைப்பு) தற்காலிகமான பலம். (ஆறு பருவங்களை ஒட்டியும் வயதுக்கேற்பவும் அமைவது), முயன்று ஏற்படுத்திக் கொள்ளும் பலம் (உணவு மற்றும் இதர அம்சங்களான ஓய்வு,உடல் பயிற்சி ஆகியவற்றால் பெறப்படுவது)

வியாதிக்கான மூன்று காரணங்கள்:- இந்திரியங்களை அதிகமாகப் பயன்படுத்தல் (உதாரணமாக கண் என்ற் இந்திரியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பார்ப்போம் – ஒளியை அதிக நேரம் உற்றுப் பார்த்தல் போன்றவை), பயன்படுத்தாமலேயே இருத்தல் (எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண் படைத்த பயனை அடையாமல் இருத்தல் போன்றவை), தவறாகப் பயன்படுத்தல் (பயமுறுத்தும், ஆச்சரியமூட்டும், வெறுப்பைத் தரும், உருக்குலைக்கப்பட்டிருக்கும், எச்சரிக்கையைத் தரும் ஒன்றை மிக அருகிலோ அல்லது தூரத்திலிருந்தோ பார்த்தல் போன்றவை)

வியாதி வரும் மூன்று பாதைகள் :- ஷாகா ( வெளி அமைப்பினால் வருவது – தோல், இரத்தம் போன்றவற்றின் மூலம் வருவது) மர்மஸ்திசந்தயஹ ( பிரதான உறுப்புகள், மூட்டுகள், எலும்புகள் மூலம் வருவது – சிறு நீரகம், இதயம், தலை போன்றவை பிரதான உறுப்புகள்), கோஷ்தா (மைய மண்டலம் மூலம் வருவது – மஹாஸ்ரோதா எனப்படும் பெரும் வழி, சரீர மத்யா எனப்படும் உடலின் மையப் பகுதி, ஆமபக்வாஸய எனப்படும் வயிறு மற்றும் குடல் பகுதி)

மூன்று விதமான வைத்தியர்கள் : – போலி வைத்தியர்கள் (வைத்திய பெட்டி, மருந்துகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் வைத்தியம் பற்றிய அறிவே இல்லாதவர்கள்), வைத்தியர் அல்லாதவர்கள் ((செல்வந்தர்கள், புகழ் பெற்றவர்களின் தோழமையைக் கொண்டு வைத்தியர் போல நடிப்பவர்கள்), உண்மையான வைத்தியர்கள் ( நல்ல ஆழ்ந்த வைத்திய ஞானம் பெற்றவர்கள்)

மூன்று விதமான நிர்வாகங்கள் :- ஆன்மீக ரீதியிலான சிகிச்சை, (மந்திரங்களை ஜபிப்பது, ரத்தினக் கற்களை அணிவது, யந்திரங்கள் தாயத்துக்களைப் பயன்படுத்துவது, விரதங்களை அனுஷ்டிப்பது, தானம் செய்வது, உபவாசம், சாஸ்திரங்கள் கூறியவற்றின் படி நடப்பது போன்றவை ) உடலியலை ஆராய்ந்து தர்க்க ரீதியிலான சிகிச்சை (மருந்துகளை உட்கொள்வது போன்றவை), உளவியல் ரீதியிலான சிகிச்சை(மனதை பாதிக்கும் எதிலிருந்தும் மனதை விலக்கி ஆரோக்கியமாக இருப்பது)

மூன்று விதமான சிகிச்சை முறைகள் :- உடல் ரீதியிலான தோஷங்களுக்கு உள்ளுக்குள் மருந்து சாப்பிடுவது, உடலின் வெளிப் பாகங்களில் மருந்தைப் பயன்படுத்துவது, அறுவை சிகிச்சை
ஆக இப்படி சரகரின் விளக்கத்தைப் பார்த்தால் அவர் தொடாத துறைகளே ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இல்லை என்று ஆகிறது!

எட்டுப் பகுதிகளைக் கொண்ட சரக சம்ஹிதா
சரகரின் ‘சரக சம்ஹிதா’ எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1) சூத்ர ஸ்தானம்: ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு வியாதிகள் வராமல் தடுக்கும் வழிமுறைகளும் இந்தப் பகுதியில் 30 அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது/
2) நிதான ஸ்தானம் : வியாதிகளைக் கண்டறியும் விதத்தை விளக்கும் இது எட்டுப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
3) விமான ஸ்தானம் : வியாதிகளை ஏற்படுத்தும் உடல் ரீதியிலான காரணங்களை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
4) சரீர ஸ்தானம் : உயிர் வாழும் அனைத்தின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை விளக்கும் இது எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
5) இந்த்ரிய ஸ்தானம் : நோய் தீர்வதற்கான முன்கணிப்பை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
6) சிகித்ஸா ஸ்தானம் : நோய்களுக்கான சிகிச்சைகளை விளக்கும் இது முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
7) கல்ப ஸ்தானம் : வாந்தி, பேதி, உள்ளிழுத்தல் சிகிச்சை ஆகியவற்றை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
8) சித்தி ஸ்தானம் : ஒவ்வாமை சிகிச்சைகளை விளக்கும் இது 12 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
இந்த எட்டுப் பகுதிகளும் ஆயுர் வேதம் கூறும் எட்டு கிளைகளை நன்கு விளக்குகின்றன.
சரக சம்ஹிதாவில் சுமார் 8419 செய்யுள்களும் 1111 உரைநடைப் பகுதிகளும் அமைந்துள்ளன.

caraka books-003

மணி,மந்திர ஔஷதம்!
மருந்துகள் மூலிகைகள் ஆகியவற்றுடன் சிகிச்சைக்காக மந்திரங்களும் கூட கூறப்படுகின்றன. ஓம் என்ற பிரணவ மந்திரம், விஷ்ணு சஹஸ்ர நாமம் ஆகியவற்றோடு நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுக்க மந்திரம் சுகமான பிரசவத்திற்கு மந்திரம் என மந்திரங்களும் கூட நூலில் இடம் பெறுகின்றன.

சரகர் ஆங்காங்கு பயணப்பட்டுக் கொண்டே இருந்தவர் என்பதை விளக்கும் விதமாக நூலில் யவனம், சாகம், பாஞ்சாலம், அவந்தி,மலாயா ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
ஆரோக்கியம் மேம்படுவதற்கான அனைத்தையும் அதன் காரணங்களுடன் மிக விளக்கமாக எடுத்துக்கூறுவது சரகரின் தனிச் சிறப்பு.

உதாரணமாக பசும்பாலைப் பற்றி அவர் விவரிக்கையில் மன வளத்திற்கும் ஆற்றலுக்கும் பசும்பால் அதன் ஓஜஸ் சக்தியினால் மிகவும் பயனைத் தருகிறது என்று கூறுகிறார்.
பழங்கள், வேர்கள், மூலிகைகள் என அவர் தரும் பட்டியலும் காரணங்களோடு கூடிய விளக்கங்களும் அனைவரையும் பிரமிக்க வைப்பவை.
.
சின்ன உண்மை
உலகம் தற்செயலாகத் தோன்றவில்லை என்று அறுதி படக் கூறும் சரகர் மனிதர்களின் மூன்று ஆசைகளில் முக்கியமான ஆசையாக அவன் நீடித்த ஆயுளை அடைய வேண்டியது முக்கியம் (ப்ராணைஷனா) என வலியுறுத்துகிறார். கஸ்மாத்? ஏன் என அவரே கேள்வியை எழுப்பி “உயிர் முடிந்து விட்டால் அனைத்துமே முடிந்து விடுகிறதே, அதனால்!” என்று பதிலும் அளிக்கிறார்!

Contact:- swami_48@yahoo.com -தொடரும்

Part Two of Charaka Article.

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்

Charak

ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1

By ச.நாகராஜன்

ஆத்ரேயரின் சிஷ்யர் ஆசார்ய சரகர்

பாரத வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் வரலாற்றைக் கொண்டவர் ஆயுர்வேத ஆசார்யர் சரகர். இவரது சரக சம்ஹிதை 120 அத்தியாயங்களைக் கொண்டது. ஏன், 120 அத்தியாயங்கள் என்ற எண்ணிக்கை? ஒரு மனிதனின் பூரண ஆயுள் 120 என்பது சரகரின் தீர்மானமான எண்ணம். ஆகவே தான் 120 அத்தியாயங்களில் 120 வயது வரை எப்படி வாழலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதே போல பேலர், கஸ்யபர் சுஸ்ருதர் ஆகிய ஆயுர்வேத ஆசார்யர்களும் தங்கள் நூல்களை 120 அத்தியாயங்களாகப் பகுத்துள்ளதும் பாரதத்தின் புராதன மஹரிஷிகள் மனிதனுக்கு பூரண ஆயுர்தயா (பூரண ஆயுள்) 120 வருடங்கள் என நிர்ணயித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.

சரகரின் ‘சரக சம்ஹிதா’ முழு நூலாக இன்று நம்மிடையே கிடைத்துள்ளது. சரகர் ஆயுர்வேதத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமான ஒருவர். அத்ரி மஹரிஷியின் மகனான புனர்வசு ஆத்ரேயரின் சிஷ்யராக சரகர் இருந்தார் என்பதும் ஆத்ரேயர் தனது சிஷ்யர்களான பேலர் அக்னிவேசர் ஜாதுகர்ணர் பராசர்ர், ஹரிதர் காஷிரபாணி ஆகியோருக்கு ஆயுர்வேதத்தைப் பயில்வித்தார் என்பதும் செவி வழிச் செய்திகள். இந்த சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் ஒரு நூலைப் படைத்தனர். அவற்றுள் அக்னி வேசர் எழுதிய நூலே சிறந்தது என்று ரிஷிகள் சொல்லவே அதுவே பிரசித்தி பெற்ற நூலானது. இதை சரகர் செம்மைப் படுத்தினார். ஆகவே சரக சம்ஹிதை என்ற பெயரைப் பெற்றது.

சரகர் கனிஷ்கர் காலத்தவரா?

சரகரின் காலம் சரியாக நிர்ணயிக்கப்பட முடியவில்லை. ஆனால் புராதன சீன ஏடுகளின் மூலம் சரகர் கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.

கி கா யீ மற்றும் டான் ஐயவோ ஆகிய இரு புத்த துறவிகள் கி.பி. 472இல் ஒரு சம்ஸ்கிருத நூலை மொழிபெயர்த்தனர்.அதன் பெயர் சம்யுக்த ரத்ன பீடக சூத்ரா. சம்ஸ்கிருத மூலச் சுவடிகள் தொலைந்து போயின. ஆனால் மொழிபெயர்ப்பு நூல் மட்டும் கிடைத்துள்ளது. புத்தமத சரித்திரத்தைச் சொல்லும் இந்த நூலில் உள்ள கதைகளில் 16வது கதையில் ஏழாவது அத்தியாயத்தில் பிரசித்தி பெற்ற அரசனான தேவபுத்ர கனிஷ்கரின் பெயர் இடம் பெறுகிறது.கனிஷ்கரின் மிக நெருங்கிய நண்பர்கள் மூவர். அஸ்வகோஷர் போதிசத்வர்,பிரதம மந்திரி மாதரர் மற்றும் சரகர். இவர்கள் மூவரும் இணைபிரியாமல் மன்னருடனேயே இருப்பார்கள். ஆக கனிஷ்கர் காலத்தில் சரகர் வாழ்ந்தார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த வாதத்தை மறுக்கும் அறிஞர்கள் சரகர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் பல நூற்றாண்டு காலம் முன்னதாக வாழ்ந்தவர் என்று உறுதி படக் கூறுகிறார்கள். ஆத்ரேய மஹரிஷியின் காலத்தை பல நூற்றாண்டுகாலத்திற்கு முன்பேயே நிர்ணயிக்க வேண்டியிருப்பதால் சரகரின் காலமும் மிக மிக முற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

சரகர் என்றால் சுற்றுபவர் என்று பொருள்

சரகர் என்றால் சுற்றிக் கொண்டிருப்பவர் என்று பொருள். ஆகவே இவர் இடம் விட்டு இடம் பயணப்பட்டுக் கொண்டே இருந்து பரந்த அனுபவத்தைப் பெற்றவர் என்றாகிறது.

சரக சம்ஹிதை சொல்லும் ரகசியங்கள்

ஆயுர்வேதம் என்றால் என்ன, ஒரு மருத்துவரின் குணாதிசயங்கள் எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும், நீடித்த பூரண ஆயுளுக்கு ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும், எது பூரண உணவு, பஞ்ச மஹா பூதங்களும் அதனால் நமக்கு ஏற்படும் பலாபலன்களும் என்னென்ன,மூன்று தோஷங்களான வாத, கப, பித்தம் என்றால் என்ன, மூலிகைகள் யாவை அதனால் ஏற்படும் பயன்கள் யாவை, மருந்தை எப்படி உட்கொள்ள வேண்டும், ஒரு வியாதியை எப்படி குணமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களையும் மனித உடல் பற்றிய அரிய ரகசியங்களையும் சரக சம்ஹிதை நன்கு விளக்குகிறது.

சரகரின் மூன்று ஆசைகள்

சரகர் மூன்று ஆசைகளை வெளியிடுகிறார் : 1) வாழ்வதற்கான உறுதி, 2) வளம் பெறுவதற்கான ஊக்கம், 3) இந்த உலகை விட மேம்பட்ட ஒன்று ஆகியவற்றை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே அவரது ஆசை.

எதையும் மூன்று மூன்றாகச் சொல்வது அவர் பாணி. நன்கு எளிதாக நினைவில் இருத்திக் கொள்வதற்காக இந்த மூன்று மூன்றாகச் சொல்லும் சூத்திர பாணியை அவர் கையாண்டாரோ என்று எண்ணம் சரக சம்ஹிதையைப் படிக்கும் அனைவருக்கும் தோன்றும்.

சின்ன உண்மை
கருவிலிருக்கும் ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் துல்லியமாக நிர்ணயிக்கும் விதத்தை சரகர் தெளிவாக விளக்கியுள்ளார்!
-தொடரும்
Published in September 2013 issue of Healthcare monthly (Tamil magazine).

CONTACT:- swami_48@yahoo.com

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்?

word_amazing

கிருஷ்ணா உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

“ஆச்சர்யவத் பச்யதி கச்சிதேனம் ஆச்சர்யவத் வததி ததைவ சான்ய:
ஆச்சர்யவச்சைன-மன்ய: ச்ருணோதி ச் ருத்வாப்யேனம் வேத ந சைவ கச்சித்
(பகவத் கீதை 2-29)

மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கச்சித்- யததி சித்தயே
யததாமபி சித்தானாம் கச்சின் -மாம் வேத்தி தத்வத:
(பகவத் கீதை 7-3)

பொருள்: எவனோ ஒருவன் இதை ஆச்சரியம் போல் காண்கிறான். அவ்வாறே மேலும் ஒருவன் ஆச்சரியம் போல் பேசுகிறான். மற்றும் ஒருவன் ஆச்சரியம் போல் கேட்கிறான். எவனும் கேட்டும் இதை அறியவே இல்லை (2-29). மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவன் சித்தி பெற முயற்சிக்கிறான். அப்படி முயற்சி செய்யும் சித்தர்களில் யாரோ ஒருவன் என்னை உண்மையில் உணர்கிறான் (7-3)

வள்ளுவரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
(திருக்குறள் 336)

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

amazing 2

காளிதாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

வியாசரே உலகிலேயே ஆச்சர்யமான விஷயம் எது?

மஹாபாரதத்தில் யக்ஷப்ரஸ்னத்தில் பேய் கேட்ட கடைசி நான்கு கேள்விகளுள் ஒன்று: உலகிலேயே அதிசயமான விஷயம் எது?

தர்மர் சொன்ன பதில் (வியாசரின் சொற்களில்):

எவ்வளவோ உயிர்கள் தினமும் இறக்கின்றன. இதைப் பார்த்த பின்னரும் ஒவ்வொருவனும் என்றும் வாழப் போகிறோம் என்று நினைத்து செயல்படுவதுதான் உலகிலேயே மிக ஆச்சரியமான விஷயம்.

Amazing_Words

காஞ்சி பரமாச்சார்யார் சொன்ன அதிசயம்
15-10-1932 சென்னை உபந்யாசம்:

ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாம் எல்லாம் மரணம் அடைவது ஆச்சரியம் அல்ல. இந்த உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்:

நவத்வாரே ஸரீரே அஸ்மினாயு:வசதி சந்ததம்
ஜீவதியத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

Please read my earlier posts:

1.மாநுடப் பிறவி அரிது! அரிது!!
2.‘Jantunam Narajanma Durlabatha:’ -Human Birth is difficult to obtain

700 கட்டுரைகளின் பட்டியலுக்கு தொடர்புகொள்ள
Swami_48@yahoo.com

தீரர்கள் நியாயமான வழியை விட்டு பிறழ மாட்டார்கள்!

vivekananda

சம்ஸ்கிருத செல்வம் by ச.நாகராஜன்–அத்தியாயம் 18

தீரர்கள் நியாயமான வழியை விட்டு பிறழ மாட்டார்கள்!
ஸ்வாமி விவேகானந்தரை அவரது சிஷ்யர் ஒருவர் சந்தித்து 1898ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்வாமிஜியின் அமெரிக்க அனுபவங்களைப் பற்றி விரிவாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வெறி பிடித்த கிறிஸ்தவர்கள் உங்களை எதிர்க்கவில்லையா என்று அவர் ஸ்வாமிஜியைக் கேட்க ஸ்வாமி விவேகானந்தர் பதில் கூறினார் இப்படி:

“என்னைப் பற்றிய அவதூறுகளை பாதிரிகள் பரப்பினார்கள்.ஆனால் அதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை.வஞ்சகத்தினால் உலகில் எந்தப் பெரிய காரியமும் நடைபெறாது.ஒரு வீட்டில் என்னை அழைப்பார்கள்.அங்கே நான் செல்வதற்கு முன்னமேயே என்னைப் பற்றிய அவதூறுகள் பரப்பப்பட்டிருக்கும்.அந்த வீட்டிற்குச் சென்றால் அது பூட்டப் பட்டிருக்கும். சில நாள் கழித்து உண்மையை அறிந்து அவர்களே மீண்டும் வந்து மன்னிப்புக் கேட்பார்கள். சிஷ்யர்களாக ஆவர்.”

இதைக் கூறிவிட்டு ஸ்வாமிஜி பர்த்ருஹரியின் ஸ்லோகம் ஒன்றை எடுத்துக் கூறினார். அது இது தான்:-

நிந்தந்து நீதி நிபுணா: யதிவாஸ்து வந்து
லக்ஷ்மீ: ஸமாவிசது கச்சதுவா யதேஷ்டம் I
அத்யைவ வா மரணமஸ்து யுகாந்தரேவா
ந்யாய்யாத் பத: ப்ரவிசலந்தி பதம் நதீரா: II

பர்த்ருஹரியின் நீதி சதகத்தில் 74வது ஸ்லோகம் இது!

நீதி நிபுணா – நீதியில் நிபுணர்களாக விளங்குவோர்
நிந்தந்து – நிந்தித்தாலும் நிந்திக்கட்டும்
யதிவாஸ்து வந்து- அல்லது ஸ்தோத்திரம் செய்தாலும் செய்யட்டும்
லக்ஷ்மீ: – சம்பத்தானாது
ஸமாவிசது – வந்தாலும் சரி
யதேஷ்டம் கச்சதுவா – தன்னிஷ்டப்படி போனாலும் சரி
அத்யைவ வா – இப்போதே
மரணமஸ்து – மரணம் நேர்ந்தாலும் நேரட்டும்
யுகாந்தரேவா –யுக முடிவில் வந்தாலும் வரட்டும்
தீரா: – தீரர்கள்
ந்யாய்யாத் பத: – நியாய,மான வழியிலிருந்து
பத: – ஒரு அடி கூட
ந விசலந்தி – பிறழ மாட்டார்கள்.

தீர்ர்கள் நியாயமான வழியிலிருந்து ஒரு அடி கூடப் பிறழ மாட்டார்கள். நீதி நிபுணர்கள் நிந்தித்தாலும் போற்றினாலும், செல்வம் வந்தாலும் போனாலும் மரணம் இப்போதோ எப்போதோ வந்தாலும் அவற்றை லக்ஷியம் செய்யாமல் நியாயமான வழியையே பின்பற்றுவார்கள்

ஸ்வாமி விவேகானந்தரின் மனம் கவர்ந்த கவிஞர்களுள் ஒருவர் பர்த்ருஹரி.பின் வரும் அத்தியாயங்களில் ஸ்வாமிஜி மொழிபெயர்த்த பர்த்ருஹரி ஸ்லோகங்களையும் பார்க்கலாம்.
ஸ்வாமிஜியின் உரையாடலை அப்படியே படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட ஆங்கில மூலத்தைப் படிக்கலாம்:

(Complete Works of Swami Vivekananda Volume 7 – From the Diary of a Disciple)

Disciple: Well, sir, did not the bigoted Christians oppose you?
Swamiji: Yes, they did. When people began to honour me, then the Padris were after me. They spread many slanders about me by publishing them in the newspapers. Many asked me to contradict these slanders. But I never took the slightest notice of them. It is my firm conviction that no great work is accomplished in this world by low cunning; so without paying any heed to these vile slanders, I used to work steadily at my mission. The upshot I used to find was that often my slanderers, feeling repentant afterwards, would surrender to me and offer apologies, by themselves contradicting the slanders in the papers. Sometimes it so happened that learning that I had been invited to a certain house, somebody would communicate those slanders to my host, who hearing them, would leave home, locking his door. When I went there to attend the invitation, I found it was deserted and nobody was there. Again a few days afterwards, they themselves, learning the truth, would feel sorry for their previous conduct and come to offer themselves as disciples. The fact is, my son, this whole world is full of mean ways of worldliness. But men of real moral courage and discrimination are never deceived by these. Let the world say what it chooses, I shall tread the path of duty — know this to be the line of action for a hero. Otherwise, if one has to attend day and night to what this man says or that man writes, no great work is achieved in this world. Do you know this Sanskrit Shloka: “Let those who are versed in the ethical codes praise or blame, let Lakshmi, the goddess of Fortune, come or go wherever she wisheth, let death overtake him today or after a century, the wise man never swerves from the path of rectitude.”

Let people praise you or blame you, let fortune smile or frown upon you, let your body fall today or after a Yuga, see that you do not deviate from the path of Truth. How much of tempest and waves one has to weather, before one reaches the haven of Peace! The greater a man has become, the fiercer ordeal he has had to pass through. Their lives have been tested true by the touchstone of practical life, and only then have they been acknowledged great by the world. Those who are faint – hearted and cowardly sink their barks near the shore, frightened by the raging of waves on the sea. He who is a hero never casts a glance at these. Come what may, I must attain my ideal first — this is Purushakara, manly endeavour; without such manly endeavor no amount of Divine help will be of any avail to banish your inertia.

Contact swami_48@yahoo.com

இந்துக்களின் தியாகம்: இரண்டு கதைகள்

Story_of_VritraDadichi
Picture shows Dadichi (top) and Indra killing Vritra

(Already published in English)

ஒரு குடும்பத்துக்காக ஒரு தனி மனிதனைத் தியாகம் செய்யலாம்
ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தையே தியாகம் செய்யலாம்
ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம்
ஒரு ஆத்ம நலனுக்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்
–பஞ்ச தந்திரக் கதைகள் 1-8

தியாகம் என்பது உயரிய பண்புகளில் ஒன்று. புராண, இதிஹாசங்களில் போற்றப்படும் பண்பு. ததீசீ முனிவர் கதையும், ஏரண்ட முனிவர் கதையும் தியாகத்தின் சின்னங்களாக விளங்குகின்றன.
ஆத்மா என்பது என்றுமுளது. அதற்கு அழிவோ பிறப்போ ஒன்றும் இல்லை. ஆத்மா குடி புகுந்த உடலை வேண்டுமானால் அழிக்கமுடியும். அது கிழிந்த போன பழைய சட்டையைத் தூக்கிப் போடுவது போல. இந்தப் பேருண்மையை இந்து ஞானிகள் அறிந்திருப்பதால் உடல் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. பெரிய ஞானிகளுக்குப் புற்று நோய் முதலியன வந்தபோதும் அவர்கள் கவலை கொள்ளாதது ஏன் என்று ஏற்கனவே ஒரு கட்டுரையில் எழுதிவிட்டேன். ஆக உயிர்த் தியாகம் என்பது அவர்களுக்குக் கடினமான செயல் அல்ல.

புறாவுக்காக உடலையே தியாகம் செய்ய முன்வந்த சிபிச் சக்ரவர்த்தி கதையை முன்னரே எழுதிவிட்டேன். மஹாபாரதப் போருக்கு முன்பும், தமிழ் மன்னர்களின் போர்களுக்கு முன்பும் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர்ப்பலி கொடுத்த விஷயங்களையும் எழுதிவிட்டேன். தந்தைக்காக வாழ்நாள் முழுதும் பிரம்மசர்ய விரதம் பூண்ட பீஷ்ம பிதாமஹரின் மகத்தான தியாகம், லெட்சுமணன், பரதன், காந்தாரி முதலியோர் செய்த தியாகங்களையும் நீங்கள் அறிவீர்கள்.

தியாகக் கதைகளில் மிகவும் பழையது ததீசி கதைதான். இது உலகின் மிகப் பெரிய நூலான ரிக்வேதத்திலேயே உள்ளது. மஹாபாரதத்தில் சிறிது வேறுபாட்டுடன் இக்கதை அமைந்துள்ளது. ரகசிய ஞானத்தை அஸ்வினி தேவர்களுக்கு உபதேசித்ததற்காக இந்திரன் கோபப்படுவான் என்று கருதி ததீசி முனிவன் தலைக்குப் பதிலாக குதிரை முகத்தை வைத்ததாகவும், இந்திரன் கோபம் அடங்கியவுடன் ததீசி முனிவரின் உண்மைத் தலையை மீண்டும் வைத்ததாகவும் ஒரு கதை உண்டு.

விருத்திரன் முதலிய அசுரர்களைக் கொல்லுவதற்கு ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் தேவைப்பட்டது எனவும் இதற்கு ததீசி முனிவரே முன்வந்து தன் முதுகெலும்பைக் கொடுத்ததாகவும் உள்ள கதை மிகவும் பிரபலமானது. வள்ளுவன் கூட இக் கதையை மறைமுகமாக ஒரு குறளில் சொல்லுகிறான்:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72)

அன்புள்ளம் கொண்டோர் தம்முடைய எலும்பையும் பிறருக்கு கொடுப்பர் என்று வள்ளுவன் கூறுவது ததீசி முனிவரை மனதில் வைத்துதான். ததீசி முனிவரின் எலும்புகளால் இந்திரன் 99 முறை விருத்திரனை வீழ்த்தியதாக ரிக் வேதப் பாடல் கூறுகிறது. ததீசீ முனிவரின் எலும்புகளால்தான் இந்திரன் வஜ்ராயுதத்தைச் செய்தான் என்பது கதை. இதில் ஒரு நீதி இருக்கிறது: எந்த ஒரு பெரிய சாதனையைச் செய்யவும் தியாகம் என்பது அவசியம் என்பதே நீதி. வேதத்தில் உள்ள கதைகளில் மறை பொருள் இருப்பதால்தான் சங்கத் தமிழர் அவைகளுக்கு நான் மறை என்று பெயரிட்டனர்.

ஏரண்ட முனிவர் கதை

ஏரண்ட முனிவர் கதை அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் இருக்கிறது.
ஜெயசோழன் மகன் கனக சோழன். அவன் மனைவி செண்பகாங்கி. இவன் காலத்தில் காவிரி நதி திருவலஞ்சுழியிலிருந்த விநாயகரை வலம் செய்து பாதாளத்தில் மறைந்தது. இதனால் ஜனங்கள் விசனமுற்று அரசனிடம் முறையிட்டனர். அப்போது ஒரு அசரிரீரி கேட்டது. அரசனே! நீயோ உன் மனைவியோ அல்லது ஒரு ரிஷியோ அந்த பிலத்துள் புகுந்தால் காவிரி திரும்புவள் என்று வானத்தில் எழுந்த குரல் கூறியது.

அரசனும் மனைவியும் பிலத்துள் புகுந்து உயிர்த்தியாகம் செய்ய முயன்றபோது மந்திரிகள் தடுத்து நிறுத்தி, திருக்கோடீஸ்வர்த்தில் தவம் செய்து கொண்டிருந்த ஏரண்ட முனிவரிடம் அழைத்துச் சென்றனர். அவர் அரச தம்பதிகளை வரவேற்று “தீர்க்க சுமங்கலி பவ:” என்று ஆசிர்வதித்தார். மந்திரிகள் நடந்த விசயங்களைக் கூறவே, ஏரண்ட முனிவர் முற்கால ததீசி முனிவரின் தியாகத்தை எடுத்துக் கூறி, தானும் அது போலப் புகழ் எய்தப்போவதாகக் கூறி, பிலத்துள் (பாதாள குகை) புகுந்தார். காவிரி நதியும் முன்போலவே ஓடத் துவங்கியது.

ஏரண்ட முனிவர் வேண்டுகோளின்படி இரண்டு லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்த கனக சோழன் 70 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்துவிட்டு மகன் சுந்தர சோழனுக்குப் பட்டாபிஷேகம் செய்தபின் சிவபதம் அடைந்தார்.

புத்தர், ஆதிசங்கரர், ஏசு, காந்தி போன்ற மதத்தலைவர்களும் நட்டுத் தலைவர்களும் செய்த தியாகங்களை உலகம் அறியும். பைபிளில் ஜான் எழுதிய சுவிசேஷத்தில் ஏசுவின் தியாகத்தைப் புகழ்கிறார்.(ஜான் 15-13)

ஜான் கீட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞன் அழகான கவிதை மூலம் தியாகத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறார்:

“மதத்திற்காக உயிர் நீத்த தியாகிகளைக் கண்டு வியந்தேன்
நினைத்தாலே திகிலும் உதறலும் உண்டானது.
இனி அது நிகழாது; ஏன் எனில் எனது மதத்துக்காக நானும்
உயிர் துறந்து தியாகி ஆகப் போகிறேன்!
எனது மதம் எது தெரியுமா?
எனது மதம் அன்புதான்.
உங்களுக்காகவும் அன்புக்காகவும் உயிர்துறப்பேன்
என் வழி அன்பு மார்கம்; நீங்களே அதன் கோட்பாடு” (ஜான் கீட்ஸ்)

Contact swami_48@yahoo.com
**********

இந்துக்கள் கணித மேதைகள்!

Relative_satellite_sizes

“சஹஸ்ரகோடி யுகதாரிணே நம:”–

உலகிற்கு கணிதத்தைக் கற்பித்தவர்கள் இந்துக்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதினால், நான் எழுதுவதையே படிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஆகையால் நான் ஆதாரத்துடன் தான் எழுதுவேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தை எடுத்தால் பழங்காலத்தில் எழுதப்பட்ட பெரிய எண் ஒரு சமண நூலில் இருப்பதைக் காட்டுவார்கள்.

“சஹஸ்ரகோடி யுகதாரிணே நம:”–என்று விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திர பலஸ்ருதியில் ஒரு வரி வருகிறது. இதன் பொருள் ‘ஆயிரம் கோடி யுகங்களை இயக்குபவர்’. அதே துதியில் ஏராளமான இடங்களில் ‘சஹஸ்ரம்’ (ஆயிரம்) வருகிறது. வள்ளுவர் ஒரு குறளில் அடுக்கிய கோடி வரும் என்று சொல்வதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம். இன்னொரு குறளில் 70 கோடி (குறள் 639) என்று சொல்கிறார்.
ஆயிரம் என்ற சொல், ‘சஹஸ்ரம்’ என்பதிலிருந்து வந்தது என்பதை மொழிநூல் வல்லுநர்கள் அறிவர். கோடி என்பதும் சம்ஸ்கிருத் சொல்லே.

ஒரு யுகம் என்பது கிருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களில் ஒன்றை மட்டும் குறிக்காமல் சதுர்யுகம் (4 யுகம்) என்ற பொருளிலேயே கையாளப்பட்டிருக்கவேண்டும்.
சதுர் யுகக் கணக்கு:

360 மனித ஆண்டுகள்= ஒரு தேவ ஆண்டு
12,000 தேவ ஆண்டுகள்= ஒரு சதுர் யுகம்=
4,32,000 ஆண்டுகள்

இதுபோல ஆயிரம் கோடி யுகங்கள்!! வெள்ளைக்காரர் கணக்கில் 10,000 மில்லியன் யுகங்கள்! (ஒரு கோடி என்பது பத்து மில்லியன்=நூறு லட்சம்).
அதாவது 4,32,000X 1000 கோடி.
அதாவது….
432000 X100000000000=43200000000000000 ஆண்டுகள்.

(இன்னும் ஒரு சுவையான விஷயம்:- 2000 சதுர்யுகம்= பிரம்மாவின் ஒரு நாள். இதுபோன்ற ஆண்டுகளில் பிரம்மாவின் ஆயுள் 100 வருஷம்; என்ன ஐயா! ஒரே கப்சாவாக இருக்கிறது என்று யாராவது சொன்னால் முதல் முதல் “சைன்ஸ் Fபிக்சன்” SCIENCE FICTION கதைகள் எழுதிய பெருமையையாவது இந்துக்களுக்குக் கொடுக்கவேண்டும். மற்ற மதத்தினர் உலகம் கி.மு.4100 வில் துவங்கியது என்று தெரு மூலைகளில் நின்று பிரசாரம் செய்த காலத்தில் இந்துக்கள் மட்டும் இன்றைய வான நூல் நிபுணர்கள் கூறுவதை அன்றே எழுதிவிட்டனர். காலம், கணிதம்— இவை இரண்டிலும் இந்துக்களுக்கிருந்த அறிவு வியப்பூட்டுகிறது. பகவத் கீதையின் விஸ்வரூபதரிசனப் பகுதியைப் படித்துவிட்டு கருந்துளைகள்=பிளாக் ஹோல் BLACK HOLES பற்றிப் படித்தால் நான் சொல்வது விளங்கும்).

big, bigger, biggest

இந்துக் குழந்தைகள் பிள்ளையாரை வணங்கும் சம்ஸ்கிருத ஸ்லோகத்தில் கூட ‘சூர்ய கோடி சமப்ரபா’ என்று கணபதியைப் புகழ்வர். இதில் இரண்டு விஷயங்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டேன். கோடி கோடி கோடி சூரியன்கள் இருப்பது இப்போதுதான் விஞ்ஞானிகளுக்கே தெரியும். ஆனால் அந்தக் காலத்திலேயே இது ஸ்லோக வடிவில் குழந்தைகளுக்குக் கூட சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஒருவருக்கு கற்பனையில் இதுபோல ஒரு சொற்றொடர் வரக் கூட விஞ்ஞான அறிவு இருக்கவேண்டும். இரண்டாவது விஷயம் தசமஸ் ஸ்தானம். இந்த ‘டெசிமல் சிஸ்டத்தை’ DECIMAL SYSTEM எல்லா சம்ஸ்கிருத தமிழ் நூல்களிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் காணலாம்.
ஆதி சங்கரர் விவேக சூடாமணியில்:

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!—என்கிறார். எவ்வளவு பெரிய எண்களைச் சொன்னாலும் அவைகளைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பொது மக்களிடையே கணித அறிவு இருந்ததை இது காட்டுகிறது. தமிழ் கல்வெட்டுகளில் நூறாயிரம் (லக்ஷம்) என்ற அழகிய சொல்லைக் காண்கிறோம்.

1583 ,inscription in Rome
Year 1583 in an inscription Rome

ரிக்வேதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எங்கெங்கெல்லாம் எண்கள் வருகிறதோ அங்கெங்லாம் ஒரு ‘ஹைலைட்டர் HIghlighter ‘பேனாவால் கலர் இட்டால் 100, 1000, 100000 என்பனவற்றை நிறைய இடங்களில் காணலாம். இதற்கு 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் திருக்குறள் எழுதிய வள்ளுவனும் கோடி, ஆயிரம் என்ற சம்ஸ்கிருத சொற்களையும் பல இடங்களில் பயன் படுத்தி இருப்பதைக் காணலாம். விக்ரமாதித்தன் கதைகளிலும் உன் தலை சுக்கு “நூறாக” வெடித்துவிடும் என்று சாபம் கூட டெசிமல் Decimal எண்ணில்தான் வரும்!
1606
Year 1606 in Roman letters

மேலை நாட்டில் இந்த தசமஸ் ஸ்தான முறையையும் இந்து எண்களையும் பயன்படுத்துவது கடந்த பல நூற்றாண்டுகளாகத்தான். அதற்கு முன் அவர்கள் எண்களை எழுதுவதற்கு ஆங்கில (ரோமன் Roman) எழுத்துக்களையே பயனபடுத்தினர். இது அதி பயங்கர குழப்பத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தது. இன்றும் கூட லண்டனில் பல கட்டிடங்களில் இப்படிப் பழங்கால முறையில் எழுதப்பட்ட ஆண்டுகளைக் காணலாம். இப்போது வெள்ளைக்கார குழந்தைகளுக்குக் கூட அது என்ன என்று படிக்கத் தெரியாது. அராபியர் மூலம் இந்துக்கள உலகிற்குக் கொடுத்த இந்து (1,2,3,4,5………..) எண்களே உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது.

tall taller tallest

ஏனைய மத நூல்களில் வரும் எண்கள் மிகவும் சிறியவை. காலத்தைப் பற்றியும் கணிதத்தைப் பற்றியும் இந்து சாத்திரங்களில் இருக்கும் விஷயங்கள் மிகவும் அபூர்வமான கருத்துக்கள். ஐன்ஸ்டைன் போன்ற அறிஞர்கள் அறிந்ததைவிட நம்மவர்களுக்கு கூடுதல் ஞானம் இருப்பதை “எதிர்காலக் கண்டுபிடிப்புகள் பற்றி இந்துக்களின் ஆரூடம்” Hindus’ Future Predictions Part 1, Part 2 என்ற இரண்டு பகுதிக் கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன்.

எனது முந்தைய 625 கட்டுரைகள் பற்றி அறிய தொடர்பு கொள்ளவும்:

Contact London Swaminathan:– swami_48@yahoo.com
Please read my earlier articles on Numbers:
1)Hindu’s Magic Numbers 18, 108, 1008 (Posted on 26 November 2011)
2)MOST HATED NUMBERS 666 and 13 (Posted on 29 July 2012)
3)Amazing TAMIL Mathematics (Posted on 8 August 2012)
4)தமிழர்கள் கணித மேதைகள் (Posted on 8 August 2012)

முன்னேறுவதற்குள்ள ஆறு தடைகள்!

knocking-down-hurdles-

17.சம்ஸ்கிருத செல்வம்
ச.நாகராஜன்

மனிதன் வாழ்க்கையில் முன்னேற உள்ள தடைகள் எவை என்று ஆராயப் புகுந்தார் கவிஞர். தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் தெளிவான விடையை இப்படித் தருகிறார்:-

ஆலஸ்யம் ஸ்த்ரீசேவா சரோகதா ஜன்மபூமி வாத்ஸல்யம் I
அபிமானோ பீருத்வம் ஷட்வ்யாகாதா மஹத்வஸ்ய II

ஆறு தடைகள் ஒருவன் மஹத்தானவன் ஆவதைத் தடுக்கின்றன.
ஆலஸ்யம் – சோம்பேறித்தனம்
ஸ்த்ரீ சேவா – பெண்களுக்கு இணங்கி இருப்பது
சரோகதா – வியாதிகளுடன் இருப்பது
ஜன்மபூமி வாத்ஸல்யம் – பிறந்த இடத்தைப் பெரிதும் நேசித்திருப்பது
அபிமானோ – கர்வம்
பீருத்வம் – பயம்

இந்த ஆறு தடைகளும் தான் ஒருவனை முன்னேறாமல் தடுப்பவை என்கிறார் கவிஞர். எவ்வளவு உண்மை!
hurdles3

சோம்பேறித்தனம் இருந்தால் எதிலும் உருப்பட முடியுமா?திருவள்ளுவர் மடி இன்மை என்ற ஒரு அதிகாரத்தையே (அதிகாரம் 61) வகுத்து பத்து முத்தான குறள்களைத் தந்துள்ளார்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து (குறள் 603)

ஒருவனது குடியை அழிக்கும் இயல்பினை உடைய சோம்பலை மடியிலே கட்டிக் கொண்டு திரியும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கும் முன்னதாகவே அழிந்து விடும் என்பதே இதன் பொருள்.

“Shun idleness. It is a rust that attaches itself to the most brilliant metals” என்று வால்டேர் கூறியதை இங்கு நினைவு கூரலாம்.

பெண்களின் நேசத்தால் பிணையுண்டு இருப்பவர் வெளியில் வேலை பார்க்கச் செல்வது எப்படி?

வியாதிகளுடன் இருக்கும் ஒருவன் அதைத் தீர்க்கும் முயற்சியை மேற்கொள்ளாதவரை எந்த வேலையையாவது செய்யத் தான் முடியுமா?

பிறந்த இடத்தை விட்டு நகரப் பிடிக்காமல் அதன் மீது அதிக வாத்ஸல்யம் கொண்டிருப்பவன் வெளியில் செல்வது எப்படி?’திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றல்லவா ஆன்றோர்கள் அறிவுரை பகர்ந்துள்ளனர்!

கர்வமும், பயமும் முன்னேற்றத் தடைக் கற்கள் அல்லவா!
நன்கு சிந்திக்கும் ஒருவன் இந்த ஆறு தடைகளையும் அகற்றி விட்டால் மஹத்தானவன் ஆவது நிச்சயம் தானே!

Hurdles_Bislett

Pictures are taken from various sites; thanks.
contact london swaminathan:- swami_48@yahoo.com
********