எதையும் நம்பாதே! யாரையும் நம்பாதே!!

 

Marco Polo in Kiribati stamp.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் கிடைக்கும். கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவோர், பிளாக் பெயரையோ, கட்டுரையாளர் லண்டன் சாமிநாதன் பெயரையோ வெளியிட வேண்டுகிறோம். தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.)

இல்லை என்றால் உண்டு?

  1. புத்தர் பற்றி மெகஸ்தனீஸ் சொல்லவில்லை. புத்தர் அப்போது பிரபலமாகவில்லையோ? அசோகர் அவரை பெரிய ‘ஆள்’ ஆக்கிவிட்டாரோ? மதுரை மீனாக்ஷி பற்றி எழுதிய மெகஸ்தனீஸ் (கி.மு.350), புத்தரை அறியாதது ஏனோ!! (மெகஸ்தனீஸ் எழுதிய புத்தகம் ‘இண்டிகா’ முழுதும் நமக்குக் கிடைக்கவில்லை)

 

  1. உப்பு பற்றி வேதம் சொல்லவில்லை. உப்பே இல்லாமல் சாப்பிட்டார்களோ? ஆனால் சர்க்கரையைக் கண்டுபிடித்தது அவர்கள் தானே! (எனது கட்டுரை The Sugarcane Mystery : Indus Valley and Ikshvahu Dynasty காண்க)

 

  1. சிவன் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் இல்லை. தமிழர்களுக்கு ஏழாம் நூற்றாண்டு வரை ஏன் சிவன் என்ற சொல்லே தெரியவில்ல? அவர் தமிழ்க் கடவுளே இல்லையோ?

 

  1. விநாயகர் பற்றி, காளிதாசன், மாணிக்கவாசகர், சங்க இலக்கியத்தில் இல்லை. தமிழர்களுக்கு பிள்ளையார் இறக்குமதி தெய்வமோ? வடக்கேயிருந்து வந்தாரோ? சிறுத்தொண்டர் ,வாதாபிக்குப் போகும் முன் தமிழர்களுக்கு இப்படி ஒரு தெய்வம் இருப்பதே தெரியாதோ? சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் எல்லாம் சிவ மயமாகவும் நாராயணமயமாகவும் இருப்பது ஏன்?

 

  1. மார்க்கோ போலோ சீனாவின் நெடுஞ் சுவர் பற்றி எழுதவில்லை. மார்க்கோ போலோ சினாவின் முக்கிய வழக்கமான தேநீர் அருந்துவது பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? பீங்கான் தட்டுகள், கோப்பைகளுக்கு உலகப் பிரசித்தமான இடம் சீனா. அதை எப்படி அவர் சொல்லாமல் விட்டார்? மார்க்கோபோலோ சீனாவுக்கே போகாமல், ஜெனோவா சிறையில் கைதிகளிடம் கேட்ட கதைகளை எல்லாம் நன்றாக அளந்துவிடாரோ?

 

  1. சிந்து சமவெளியில் பசு மாடு முத்திரைகள் இல்லை, காளை மட்டுமே உள்ளது. ஏன்?—-இந்துக்களுக்கு பசு தெய்வம். வேதங்கள் பசுக்களைப் புகழ்கின்றன. சிந்து சமவெளி மக்களுக்கு பசு புனிதமானதோ?—- அவர்கள் வேத கால நாகரீகமோ? அதனால்தான் பசுக்களை மட்டும் முத்திரையில் குத்தவில்லையோ?

 

  1. ஆதி சங்கரரும் ராமானுஜரும் தமிழர்கள். ஆனால் தமிழில் எழுதாமல் வட மொழியில் மட்டுமே எழுதினர். அவர்களுக்குத் தமிழே தெரியாதோ?

 

  1. மாணிக்கவாசகரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது. யாரும் சொல்லவில்லை. அவர் பெயர் இல்லாப் பூச்சியோ?

 

  1. கடவுள் மாமுனிவர் மாணிக்கவாசகர் பற்றி எழுதிய புத்தகத்தில் மாணிக்கவாசகர் பெயரைச் சொல்லவே யில்லை. அவ்வளவு குரு பக்தியோ? அல்லது ஞாபக மறதியா?

Buddha in Pakistan stamp

10. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பற்றி, மாணிக்கவாசகர் ஒன்றுமே சொல்லவில்லை. ஒருவேளை அவர்களுக்கு முன்னால் வாழ்ந்திருந்தால் மூவரும் அவரைப் பற்றியாவது சொல்லி இருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?

 

11. தமிழர்கள் சிந்து நதி பற்றி, சங்க இலக்கியத்தில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கங்கை நதி பற்றி வியப்பான விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒன்றுமே தெரியாதோ? சிந்து என்ற ஒரு பகுதியையே அறியாத மக்களோ?

 

 

12. சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது பற்றி ஒரு நாட்டின் இலக்கியம் ஒன்றும் பேசாது. அப்படியானால் அவர்கள் சிறு நீர், மலஜலம் கழிக்கும் வழக்கம் இல்லையோ?

 

13. உலக மகா இலக்கண வித்தகர் பாணினி சேர சோழர் பாண்டியர் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தெற்கு திசை பற்றியும் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு தெற்கு திசையே தெரியாதோ! அல்லது தமிழ் நாகரீகம் அப்போது இல்லவே இல்லையோ?

 

14. காளிதாசனின் ஒரு நாடகத்தில் விதூஷகனும் (பிராமணன்), கபிலர் என்ற ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ ஒரு சங்கப் பாடலிலும் மாமிச உணவின் ருசியைப் புகழ்கிறார்கள். இந்த ஐயர்கள் மாமிசம் சாப்பீட்டார்களோ?

 

15. டாக்டர் பட்டத்துக்காக தத்துப் பித்தென்று கண்டதையும் கடையதையும் எழுதும் இவர்களைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. நான் எனது 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியில் சேகரித்த சில உதாரணங்களை மட்டும் மேலே கொடுத்துள்ளேன். இவை எல்லாம் பிஎச்.டி-வாலாக்களுக்கும் பட்டிமன்ற வாய்ச்சாளர்களுக்கும், திண்ணைப்பேச்சு சோம்பேறிகளுக்கும் மட்டுமே பயன்படும் வாதங்கள்—குதர்க்க வாதங்கள்/

 

16. சங்கத் தமிழ் பாடல்களில் மூன்றில் ஒரு பகுதி ஆண்கள் பரத்தையிடம் செல்வதைப் பற்றிப் பாடுவதை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி இது புலவர்கள் மிகைப்படுத்திப் பாடுவது என்று கூறியுள்ளனர். தமிழர்கள் ஒழுக்க சீலர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கொள்கையுடையோர் என்பதை உலகம் அறியும்.

 

Bull on Indus Seal

17. ஆனால் அதே தமிழர்கள் மற்ற சம்ஸ்கிருத நூல்களில் வரும் ஒரு செய்யுளை எடுத்துக் கொண்டு அபத்தமான கருத்துகளை அள்ளித் தெளிக்கும்போது வேதனையாக இருக்கிறது. மனு தர்ம சாத்திரம் பற்றி விஷம் கக்குவது இவர்களுக்கு வாடிக்கை. மனு தர்ம சாத்திரத்தை எல்லா தமிழ் கல்வெட்டுகளும் மன்னர்களும் ஏன் புகழ்ந்தார்கள்? அதில் உள்ள எல்லா விஷயங்களும் உண்மையில் பின்பற்றப்பட்டதா? அதில் எது இடைச் செருகல்? எது உண்மை? அது இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு எப்போது எழுதப்பட்டது? என்பதை எல்லாம் நோக்குவதில்லை.

 

18. ஒரு புத்தமத ‘அறிஞர்’, யாகத்தில் கொல்லப்பட்ட பசுக்களின் ரத்தம் ஆறாக ஓடியது பற்றி கதை அளந்து இருக்கிறார். அவருக்கு இதே வரிகள் (ரத்த ஆறு) சங்கத் தமிழ் இலக்கியத்திலும் கலிங்கத்துப் பரணியிலும் இருப்பது தெரியாது!! புலவர்கள் மிகைப்படுத்தி சொல்லும் விஷயங்களை அப்படியே எடுத்துக் கொள்வோரின் ‘அறிவு’ அபாரமானதுதான்!!!

 

19. வெளிநாட்டு அறிஞர்’கள் சில இடங்களில் மட்டும் இடைச் செருகல் என்று கதை அளப்பார்கள். மனு போன்ற நூல்களில் இடைச் செருகல் பற்றி பேச மாட்டார்கள். ஒரு நூலின் காலத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்றால் கடைசியாக வந்த பாடலை மட்டும் காட்டுவார்கள். இதெல்லாம் அவர்களுக்கு கைவந்த கலை! இந்திய எண்களையே அராபிய எண்கள் என்று பெயர் சூட்டி நம்மை மட்டம் தட்டியவர்கள்தானே.

 

 

20. இந்தியாவில் உள்ள எல்லா நல்ல விஷயங்களும் பாபிலோனியா, கிரேக்க, எகிப்திய இறக்குமதிகள்!! எல்லா கெட்ட விஷயங்களும் ஆரிய, திராவிட கண்டுபிடிப்புகள்! என்பது அவர்கள் கணிப்பு!

 

21. ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்தும் திராவிடர்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்தும் வந்தவர்கள், ஆரிய சிவனும் திராவிட சிவனும் வேறு வேறு, சிவலிங்கம், யோனி என்பதெல்லாம் மனிதனின் ஜனன உறுப்புகள், சிந்து சமவெளி எழுத்து திராவிட எழுத்து, வேதகால மக்கள் மாடு மேய்த்த நாடோடிகள், பெண்களுக்கு எதிரானவர் மனு, இந்துக்கள் கணவர்கள் இறந்தால் மனைவியை உயிருடன் எரித்துவிடுவார்கள், சிந்து சமவெளி மக்கள்தான் ஜாதியைக் கண்டுபிடித்தவர்கள், பிராமணர்கள் கி.மு 1000-ல் தெற்கே குடியேறியவர்கள்—–இப்படி ஏராளமான ஆதாரமற்ற ,இன்று வரை நிரூபிக்க முடியாத,  பல “கண்டுபிடிப்புகளை” வெளிநாட்டார் புத்தகத்தில் காணலாம்.

Salt pan in Kutch, Gujarat

இதிலிருந்து நாம் அறிய வேண்டிய பாடம்:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்)

எதையும் யாரையும் நம்பாதீர்கள்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லாததால் அது இல்லாமல் போகாது. மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும்.

 

எதையும் முழுக்கப் படிக்காமல் கேள்வி கேட்காதே. யாரோ ஒருவர் எழுதிய ‘ஆய்வுக் கட்டுரையைப்’ படித்துவிட்டு நம்பிவிடாதே. மஹா பாரதம், ராமாயணம், புராணங்களை முழுக்கப் படிக்காமல் வாதம் செய்யாதே. சம்ஸ்கிருதமும் தமிழும் சொல்வதை முழுவதும் படித்த பின்னரே அரை வேக்காட்டு நிலையில் இருந்து ஒருவர் முழு வேக்காட்டு நிலைக்குப் போக முடியும். வெளிநாட்டுக் கருத்துக்களை விட, உள்நாட்டு அறிஞர்களுக்கு அதிக மதிப்புக் கொடு. பழைய விஷயங்களில் முன்னோர்கள் சொன்னதை நம்பு என்பதே நாம் கற்க வேண்டிய பாடம்.

 

இது தொடர்பான முந்தைய கட்டுரைகள்

1/ The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty

2/ Biggest Brain wash in The World

3/ How Old Is Indian civilisation?

4..தமிழ் இனத்தின் வயது என்ன?

5..தமிழன் காதுல பூ

N.B.Pictures are taken from other sites.

1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

TPK temple silpi

Picture of Tirupparankundram drawn by Silpi from Ananda Vikatan magazine

 

1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

தமிழர்கள் மிகவும் தெய்வ பக்தி உடையவர்கள். திருக் குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே பத்து குறள்களில் முத்து முத்தாகக் இறை வழிபாட்டைக் கோர்த்து வைத்துவிட்டார். அது மட்டுமல்ல, பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் பாதங்களில் (தாள், அடி) நமஸ்காரம் செய்தும் எழுதிவிட்டார். உருவ வழிபாட்டுக்குரிய விக்ரகங்கள் அவர் கண் முன்னர் இருந்ததால்தான் இப்படி பாத நமஸ்காரம் செய்யும் 7 குறள்களை எடுத்த எடுப்பிலேயே எழுதிவிட்டார்.

 

இவருக்கு முன்வந்த தொல்காப்பியரோ, வேத கால தெய்வங்களான இந்திரன் (வேந்தன்) வருணன், விஷ்ணு (மாயோன்), ஸ்கந்தன்/ சேயோன் (சிவப்பு நிறமானவன்) ஆகியோரே தமிழர்களின்  தெய்வங்கள் என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

 

பல பாடல்களில் இறைவனின் வாகனங்களையும், கொடிகளையும் நக்கீரர், காவிரிப் பூம்பட்டிணத்து காரிக்கண்ணனார் ஆகியோர் சித்தரிப்பதால் கட்டாயம் சிலைகளுடன் கூடிய கோவில்கள் இருந்திருக்க வேண்டும். ஐந்து ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, –காரைக்கால் அம்மையார் முதல் சுந்தரர் வரை– ஊர் ஊராகச் சென்று பாடிய தலங்களே சுமார் 300 தலங்கள் ஆகும். இவர்களுக்கு முன் வாழ்ந்த மாணிக்கவாசகர் கூறும் சில தலங்கள் என்ன வென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்வார்களும் நூற்றுக்கும் மேலான தலங்களைப் பாடிவிட்டனர். இப்படி 400, 500 இடங்களில் புகழ்பெற்ற கோவில்கள் இருந்து, அவர்களை ஊர் ஊராக பாத யாத்திரை செய்ய வைத்தது என்றால், அந்தக் கோவில்கள் அவர்களுக்கும் முன்னரே பல காலமாக இருந்திருக்க வேண்டும்.

 

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் அறு படை வீடுகளைக் காண்கிறோம். பரிபாடலில் தாமரை வடிவில் அமைந்த மதுரை நகரின் மத்தியில் கோவில் இருந்ததைப் படிக்கிறோம். ஆக 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் வாழ்வில் கோவில்கள் இரண்டறக் கலந்துவிட்டன.

 

இதோ பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் கோவில் பட்டியல்:

“பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீலமேனி நெடியோன் கோயிலும்

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்” (சிலம்பு)

 

“ அமரர் தருக் கோட்டம் வெள்யானை கோட்டப்

புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்

உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க் கோட்டம் வேற் கோட்டம்

வச்சிரக் கோட்டம் புறப்பணையான் வாழ் கோட்டம்

நிக்கந்தன் கோட்டம் நிலாக் கோட்டம்” (சிலம்பு)

 

 

alagarkoil

Picture of Alagar Koil drawn by Silpi for Ananda Viaktan

 

பூம்புகார் எனப்படும் புகாரில் இருந்த கோவில்கள்:

1.பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்= சிவ பெருமான் கோவில்

2.அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில் = முருகன் கோவில்

3.வால்வளை மேனி வலியோன் கோயில் = பலராமன் கோவில்

4.நீலமேனி நெடியோன் கோவில் = கண்ண பிரான் கோயில்

5.மாலை வெண்கொடை மன்னவன் கோயில்= இந்திரன் கோவில்

6.அமரர்தருக் கோட்டம்= கற்பகத் தரு கோட்டம்

7.வெள்யானை கோட்டம்= ஐராவதம்/யானை கோவில்

8.புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்= பலதேவன்

9.பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்= சூரிய தேவன் கோவில்

10.ஊர்க்கோட்டம்= ஊர் காவல் தெய்வமக் கோவில்

11.காமவேள் கோட்டம்= மன்மதன் கோவில்

 

12.வேற்கோட்டம்= முருகன் கோவில்

13.வச்சிரக் கோட்டம்=இந்திரனின் வஜ்ராயுதக் கோவில்

14.புறப்பனையான் வாழ் கோட்டம்= ஐயனார் கோவில்

15.நிக்கந்தன் கோட்டம் = அருகன் கோவில்

16.நிலாக் கோட்டம்= சந்திரன் கோவில்

இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்படுபவை.

17 முதல் 22 வரை சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் அறு படை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (செந்தூர்), திரு ஆவினன் குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல்(திருத்தணி) , பழமுதிர்ச்சோலை( அழகர் கோவில்)

 

23.மதுரை நகர் கோவில்

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை

பூவொடு புரையும் சீறுர் பூவின்

இதழகத்தனைய தெருவம் இதழகத்து

அரும்பொகுட்டனைத்தே அண்ணல் கோயில் (பரிபாடல்)

 

பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வெண்குடை மதுரை நகரின் கோயிலை வலம் வரும்போது மட்டும் தாழ்வாக இருக்குமாம். பிராமணர்கள் வாழ்த்தும் போது மட்டும் அவன் தலை தாழுமாம் (புறநானூறு பாட்ல 6, காரிகிழார்)

 

பணியியர் அத்தை நின்குடையே; முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே!

இறைஞ்சுக, பெரும, நின் சென்னி; சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறம்.6)

 

இது தவிர கொல்லிப் பாவை முதலிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும், குமரிக் கடற்கரை தெய்வம் பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உள்ளன.

 

கொடிகள் , வாகனங்கள் பற்றிய எனது கட்டுரைகளையும் படிக்கவும்:

1.சங்க இலக்கியத்தில் வாகனங்கள்

2.Flags of Ancient Indian Kings

3.Hindu Vahanas in Kalidasa and Tamil Literature

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவதானால் ‘பிளாக்’-கின் பெயரையோ கட்டுரையாளர் (லண்டன் சுவாமிநாதன்) பெயரையோ வெளியிடுங்கள். பெயர் இல்லாமல் தங்கள் கட்டுரை போல வெளியிடுவது–தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும்)

பாகவதம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்!

பகவான் கிருஷ்ணனின் வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் நூல் பாகவதம். ஆனால் கிருஷ்ணனுடன் நிறுத்திக் கொள்ளாமல் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களையும் இது சுவைபடக் கூறும். ஆதிகாலத்தில் பகவத் பெருமையை சங்கீத உபந்யாசமாகச் செய்தவர்களை மட்டுமே பாகவதர் என்று அழைத்தார்கள். இப்போது உபந்யாசம் போய்விட்டது. வெறும் சங்கீதம் மட்டும் இசைப்பவர்களையே பாகவதர் என்று சொல்லிவிட்டோம். காலம் மாற மாற சொற்களின் பொருளும் மாறிவிடுகிறது.

 

பாகவதங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். ராமாயணத்தில் 300 வகைகள் இருக்கின்றன என்று முன்னமேயே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டேன். இதே போல பாகவதத்திலும் பலவகைகள் உண்டு. சிலவற்றில் கூடுதல் அவதாரங்கள் பேசப்படுகின்றன. பெரும்பாலோருக்குத் தெரிந்த கீதை பகவத் கீதை. இது மஹா பாரதத்தில் உள்ளது. மஹா பரதத்திலேயே வேறு பல கீதைகளும் உண்டு.

 

பாகவதத்திலும் பலவேறு கீதைகள் உள்ளன. இது புத்தகத்துக்கு புத்தகம் மாறுபடும்.. ஆயினும் எல்லா கீதைகளிலும் புகழ்பெற்றது பகவத் கீதை, இதற்கு அடுத்தாற்போல மிகவும் புகழ்பெற்றது உத்தவ கீதை. இது பாகவத்தின் 11ஆவது அத்தியாயமாக வருகிறது. பாகவத சப்தாஹம் என்று ஏழே நாட்களில் பாகவதத்தைப் பாராயணம் செய்யும் மரபு உண்டு. அதில் உத்தவ கீதை சொல்லும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும்.

 

லண்டனிலுள்ள எனது நண்பர் வருடந்தோறும் குருவாயூருக்குச் சென்று பாகவத சப்தாஹம் நடத்துகிறார். பாராயணம் செய்யும் பக்தர்கள், அதைக் கேட்க வரும் பக்தர்கள் ஆகியோருக்குச் சாப்பாடு போட லட்சககணக்கில் தனது சொந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்.அவ்வளவு பெருமையும் புண்ணியமும் பாகவதத்துக்கு உண்டு

 

வியாசரின் மகனான சுக முனிவர் சொன்னது பாகவதம். இதைக் கேட்டவன் பரீக்ஷித் மன்னன். இதில் 18,000 ஸ்லோகங்கள் உண்டு. 18 புராணங்களில் மிகவும் பிரபலமானது பாகவத புராணமே.

 

இதிஹாச பாகவதம், புராண பாகவதம், சம்மிதா பாகவதம், உபசம்மீதா பாகவதம், விஷ்ணுரகசிய பாகவதம், விஷ்ணுயாமள பாகவதம், கௌதம சம்மிதா பாகவதம் என வட மொழியில் பல பாகவதங்களும் அவைகளில் 15 வகையான கீதைகளும் இருக்கின்றன.

தமிழில் பாகவதம்

செவ்வைச் சூடுவார் மற்றும் அருளாளதாசர் ஆகிய இருவரும் தமிழில் பாகவதத்தைப் பாடியுள்ளனர். தமிழில் புராண இலக்கியம் மிக மிகப் பெரியது. பல்லாயிரக்கணக்கான படல்களைக் கொண்டது. இவைகளில் ஸ்காந்தம் எனப்படும் கந்தபுராணம் ஒன்றே இன்று படிக்கப்படுகிறது. மற்றவை எல்லாம் நூலகத்தில் பழுப்படைந்து வருகின்றன.

 

ராமநாதபுரம் மாவட்ட வேம்பத்தூரைச் சேர்ந்த மாதவனின் மற்றொரு பெயர் செவ்வைச்சூடுவார். அவரது இதிஹாச பாகவதத்தில் 4970 பாடல்கள் உள்ளன. பத்தாவது அத்தியாயம் கண்ணனின் கதையைக் கூறும். 11ஆவது அத்தியாயம் உத்தவ கீதையைக் கூறும். இரண்டும் முக்கியமானவை.

 

இவருக்கு அடுத்துவந்த அருளாளதாசரின் இயற்பெயர் வரதராஜ அய்யங்கார். இவர்தான் 18 புராணங்களில் ஒன்றான பாகவதத்தை 9167 பாடல்களில் மொழி பெயர்த்தார். இது முன்னதை விட நீண்டதாயினும் செவ்வைசூடுவாரின் பாகவதமே மொழி நடையில் சிறந்தது என்பது தமிழ் அறிஞர்களின் கருத்து. தமிழ் மொழி தெய்வத் தமிழ் ஆகும். ஆயினும் அவைகளில் உள்ள பல்லாயிரக் கணக்கான பாடல்களை படிக்கும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள். பலகலைக்கழக பட்டங்களுக்கும் ஆராய்ச்சிக்கும் படிக்கும் மாணவர்கள் மட்டுமே ஆழமாகப்படிக்கிறார்கள் .(பட்டங்களுக்காக). ஏனையோர் இதைக் கண்டுகொள்ளாதது வருத்தம் தரும் விடயமாகும்.

Pictures are taken from face book, thanks.

அதிசய அனுமார் சிலை

 

ஆஞ்சனேயர் என்றும் அனுமார் என்றும் மாருதி என்றும் போற்றப்படும் பஜ்ரங்க பலி இந்தியா முழுதும் பிரபலமாகி வருகிறார். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவ்வப்போது சில கடவுளர் பிரபலமாவது இந்துக்களுக்குப் புதிதல்ல. “கருத்து ஒன்றே, கடவுள் உருவங்கள் மாறு படலாம்—“ஏகம் சத், விப்ராஹா பஹுதா வதந்தி” என்று உலகின் பழமையான சமய நூல் ரிக் வேதம் கூறும்: “உண்மை ஒன்றே, அறிஞர்கள் பல்விதமாகப் பகர்வர்”- என்பது இதன் பொருள்.

 

மாநிலத்துக்கு மாநிலம் போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய அனுமார் சிலைகளை நிறுவி வருகின்றன. 125 அடி முதல் 150 அடி வரை விண்ணைத் தொடும் வகையில் அனுமார்கள் ஆகாசத்துக்கும் பூமிக்கும் வளர்ந்து வருகிறார்கள்! புதிய காலம், புதிய அணுகுமுறை– தவறே இல்லை. அதற்காக ஆகம முறைப்படி அமைந்த சுசீந்திரம் கோவில் 18 அடி உயர அனுமாரையும் நாமக்கல் ஆஞ்சநேயரையும் மறந்து விடக்கூடாது.

 

அனுமார் இந்தியாவின் ‘சூப்பர்மேன்’. ஆங்கிலத்தில் தற்காலத்தில் எழுந்த சித்திரப் படக் கதைப் புத்தகங்களில் (காமிக்ஸ்) வரும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேண்டம் ஆகிய அனைத்தையும் தோற்கடிக்கும் அத்தனை சாகசங்களையும் அனுமன் அன்றே செய்துவிட்டான் என்பதை சுந்தரகாண்டம் படிப்போர் அறிவர். அவன் ‘சொல்லின் செல்வன்’ மட்டும் அல்ல. அளப்பறிய அற்புதங்களைச் செய்தவன். உலகின் முதல் மூலிகை மருத்துவன் அவன். இமய மலைக்குச் சென்று சஞ்சீவீ மூலிகையைக் கொண்டு மாண்டோரை மீட்டவன் அவன்.

 

போரில் இறப்போர் சுவர்க்கம் புகுவர் என்பது புறநானூற்றிலும் உண்டு, ரிக்வேதத்திலும் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களிலும் உண்டு. வேதத்திலும் சங்கத் தமிழ் பாடல்களிலும் வீர மாதா, வீர அன்னை பாடல்கள் இருப்பதை ஏற்கனவே எழுதிவிட்டேன். ஆக போரில் இறப்போர் வீரர்களே. ஆனால் இதைவிட பெரிய வீரம் புலன்களை வெல்லும் வீரம். “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்”– என்று அவ்வைப் பாட்டியும் புகழ்வார்.

 

மற்ற நாடுகளில் ஏ.கே-47 துப்பாக்கியால் அதிகம் பேரைச் சுட்டுக் கொல்வோரே வீரர்கள். இந்தியாவில் இதைவிடப் பெரிய “மஹா வீரர்கள்” உண்டு.  புலனை வென்ற மஹாவீரர்கள் அவர்கள். ஆஞ்சநேயர் அவர்களில் ஒருவர். மற்றொருவர் சமண மத 24-ஆவது தீர்த்தங்கரர் மஹாவீரர். இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய மஹாவீரர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். ‘நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்’ என்ற கட்டுரையில் மாமன்னரையே துச்சமாகத் ,துரும்பாக மதித்த சாமியார் பற்றி எழுதினேன். ஆக அனுமாருக்கு, மஹாவீரனுக்கு புதிய கோவில்கள் எழுப்பி நாட்டின் இளைஞர்களை பிரம்மச்சர்ய பாதையில் கொண்டு செல்வது நல்லதே. நாட்டின் தலை நகராம் டில்லியில் இப்படிப்படட் ஒரு கோவில் 108 அடி ஆஞ்சநேயருடன் உருவாகியுள்ளது.

டில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ‘சங்கட மோக்ஷன் தாம்’ (கோவில்) ஒரு ஒப்பற்ற, நூதனமான அனுமார் கோவில் ஆகும். அதிபயங்கர டில்லிப் போக்குவரத்துக்கு இடையே, பறக்கும் மெட்ரோ ரயில் பாதை அருகே பிரம்ம்மாண்ட உருவத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்கும் இந்த அனுமாரை யாரும் மறைக்க முடியாது, மறக்கவும் முடியாது. இது 35 அடி அஸ்திவாரத்துடன் அமைந்த பெரிய அனுமன் சிலை. அனுமனின் மயிர்க்கால்கள் தோறும் ராம நாமம் கேட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிரஞ்சீவியான அனுமன் இருதயத்திலே எப்போதும சீதா ராமன் குடி கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. இதை உணர்த்தும் வண்ணம் வாரத்துக்கு இரண்டு முறை நெஞ்சைத் திறந்து காட்டுகிறார். எலெக்ட்ரானிக் முறையால் இயக்கப்படும் இந்த அதி நவீன ஆஞ்சநேயனைக் காண லட்சக்கணக்கானோர் கூடி நிற்பர்.

 

மக்களின் நம்பிக்கை அளவு கடந்தது. வட இந்திய மக்களுக்கு அனுமன், ஓர் சூப்பர்மேன் அல்ல, சூப்பர் கடவுளே. தினமும் வெல்லம், உளுந்து, எள், கடுகு எண்ணை, கருப்புத் துணி, இரும்புப் பொருட்கள், பூ, பழம் ஆகியன கொண்டு வருகின்றனர். சிலைக்குக் கீழே பிரம்மாண்டமான தண்ணீர்த் தொட்டி உள்ளது. வாரத்துக்கு இருமுறை அனுமன் நெஞ்சைத் திறக்க, ராமரும் சீதையும் வெளியே தோன்ற பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுகிறார்கள். ஒலிபெருக்கி மூலமும் ராம நாமம் ஒலிக்கிறது.

எனது முந்திய கட்டுரைகளையும் படித்து இன்புறுக:

1.நாமும் அனுமார் ஆகலாம், 2.ராமாயண வினா விடை, (3-9) ‘ராமாயணா ஒண்டர்ஸ்’ (ஆங்கிலத்தில் ஏழு பகுதிகள்)

 

ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

Krishna and Balarama paying respect to their parents

(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்)

 

ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

உலகிலேயே அதிக புத்திசாலியான பெண்கள் இந்தியாவில்தான் உள்ளனர். இன்று அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிய பதவிகளில் இந்தியர்கள் இருப்பது வேத காலத்திலேயே துவங்கியது. அப்போது உலகில் பெரும்பாலான மக்களுக்கு நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாது. பெண்களை அடக்கி வைத்திருந்தனர். இந்தியாவில் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் கொடிகட்டிப் பறந்தனர். ஐயா, இதற்கெல்லாம் அதாரம் எங்கே என்று கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்:

 

1.ஜனகர் கூட்டிய அறிஞர்கள் சபையில் ஆத்மா, பிரம்மம் ஆகியன பற்றி ஒரு பட்டிமண்டபம் நடத்தினார். அதில் வெற்றி பெறுவோருக்கு ஆயிரம் பொற்கிழிகள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அப்போது மிகவும் புகழ் பெற்ற யாக்ஞவல்கியர் என்ற அறிஞர் (ரிஷி) எனக்கே இந்த கேள்விக்கு விடை தெரியும் என்று சொல்லி, “ஏ சிஷ்யா, பசு மாடுகளை எனது ஆஸ்ரமத்துக்கு ஓட்டிச் செல்”’ என்று உத்தரவிட்டார். சபையே பேசாமல் இருந்தது. செல்வி கார்க்கி வாசக்னவி என்ற பெண் எழுந்து நின்று, ‘நிறுத்துங்கள்’, என்று தடுத்து யாக்ஞவல்கியர் உடன் வாதம் புரிந்தாள். இதில் தெரிவது என்ன? பெண்கள் சுதந்திரமாக ‘அசெம்பிளி’களுக்கு வரலாம். விவாதத்தில் பங்கு கொள்ளலாம்.

2.கி.மு1500 வாக்கில் எழுதப்பட்ட ரிக்வேதத்தில் 450-க்கும் மேலான கவிஞர்கள் “இயற்றிய” பாடல்கள் உள்ளன. இவைகளை அவர்கள் காதில் கேட்டு எழுதியதால் வேதத்தை ‘ஸ்ருதி’ (கேட்கப்பட்டவை) என்பர். இதில் 27 பெண் கவிஞர்கள் உள்ளனர்! இது உலக மகா அதிசயம்! உலகின் பழமையான பெண் கவிஞர்கள் இவர்கள் தான்!!

 

3.இதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் 450 க்கும் மேலான தமிழ்க் கவிஞர்கள் பாட்டுக்களை எட்டுக்கட்டினர். அவைகளை அற்புதமான, படிக்கப் படிக்கத் தெவிட்டாத, பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகையிலும் படிக்கலாம். அவர்களில் 40-க்கும் அதிகமான பெண் கவிஞர்கள் இருக்கிறார்கள். உலகில் இப்படிப்பட்ட எண்ணிக்கையில் கிரேக்க, இலத்தீன், எபிரேய, சீன மொழிகளில் கூட இல்லை, இல்லவே இல்லை.

 

4.வேதகாலம் முதல் தமிழ் சங்க காலம் வரை எடுத்துக்கொண்டால் இந்தியப் பெண்களை மிஞ்ச உலகில் யாரும் இல்லை, இல்லவே இல்லை, முன்னர் கூறிய யாக்ஞவல்கிய மஹரிஷிக்கு இரண்டு மனைவியர். ‘அன்பே, ஆருயிரே! என் சொத்து சுகங்களைப் பிரிக்கும் காலம் வந்துவிட்டது, யாருக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள் என்று இரண்டு ‘டார்லிங்’குகளிடம் சொன்னார். காத்யாயனி என்ற மனைவி சொத்து சுகங்களை வாங்கிக் கொண்டாள். மைத்ரேயி என்ற மனைவி, எனக்கு முக்தி தரும் விஷயங்களே போதும் என்று ஒதுங்கிக் கொண்டாள். இத்தகைய பெண்களை பிரம்ம வாதினிகள் என்பர். தமிழிலும் ஆறு அவ்வையார்கள்= பிரம்மவாதினிகள் உண்டு. சங்க காலம் முதல்16, 17ஆம் நூற்றாண்டுகள் வரை ஏகப்பட்ட அவ்வையார்கள் வாழ்ந்தனர். இவர்கள் எல்லோரும் இறைவனை/ தர்மத்தை நாடிய பிரம்மவாதினிகள்.

 

5.உலகில் இந்தியப் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் எங்கும் கண்டதில்லை! எட்டு வகையான திருமண வாய்ப்புகள் (ஆப்ஷன்ஸ்) கொடுக்கப்பட்டன. காதல் திருமணம் முதல் கடத்தல் திருமணம் வரை எட்டுவகையான திருமணங்கள் அனுமதிக்கப்பட்டன. மனுதர்ம சாத்திரத்தில் கூறிய இந்த எட்டுவகைகளை தமிழில் முதல் நூல் எழுதிய தொல்காப்பியரும் அப்படியே ஏற்றுக் கொண்டார். வேதத்தில் குறிப்பிடும் இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் ஆகிய நால்வரையும் தமிழர் தெய்வங்களாக முதல் முதலில் பிரகடனப் படுத்திய புண்ணியவான் தொல்காப்பியர் /த்ருணதூமாக்கினி என்ற அந்தணர் என்பதை “தொல்காப்பியர் காலம் என்ன?’ என்ற ஆய்வுகட்டுரைகளில் எழுதியுள்ளேன்.

6.ஆரிய-திராவிட வாதம்புரிவோருக்கு மேற்கூறிய விஷயங்கள் செமையடி கொடுக்கும். அதுமட்டுமல்ல. ஸ்வயம்வரம் என்ற சுதந்திர திருமண முறை இந்திய க்ஷத்திரியர் இடையே மட்டு இருந்தது. மஹா பாரதம், பாகவதம், இராமாயணத்தில் எட்டுவகைத் திருமணங்களுக்கும் உதாரணங்கள் உண்டு. அவைகளைத் தனிக் கட்டுரையில் தருகிறேன். ஆரியர்கள் வெளியே இருந்துவந்தவர்கள் என்று கூறும் வெளிநாட்டு அறிஞர்கள (!?!?) ஜாதி முறை, திருமண முறை, யாக யக்ஞங்கள், எதற்கெடுத்தாலும் தண்ணீரை பயன்படுத்தல் ஆகியவைகளை விளக்க முடியாமல் முழி பிதுங்கித் தவிக்கிறார்கள். பாதி “அறிஞர்கள்”, இந்தப் பழி பாவங்களை திராவிடர்கள் என்று ஒரு இனத்தைக் கற்பித்து அவர்கள் மீது ஏற்றிவிட்டார்கள்!

 

7.மனு தர்ம சாத்திரத்தை எள்ளி நகையாடுவது வெளி நாட்டு அறிஞர்களுக்கு கைவந்த கலை! ஆனால் மனுநீதிச் சோழன் முதல் 16ஆம் நூற்றாண்டு வரை– கல்வெட்டுகள் ,செப்புப் பட்டயங்கள் வரை– கம்பராமாயணம் முதலான கவிதைகள் வரை– ஆயிரக் கணக்கான இடங்களில் தமிழர்கள் “மனு நீதி தவறாது வாழ்ந்தார்கள், ஆட்சி செய்தார்கள்” என்று எழுதி இருக்கிறது.  பெண்களைப் பற்றி மிகவும் உயர்வாக கூறுகிறார் மனு:

 

8.” எங்கே பெண்கள் பெருமைப் படுத்தப்படுகிறார்களோ அங்கேதான் இறைவன் மகிழ்ச்சி அடைகிறான். எங்கே பெண்கள் பெருமைப் படுத்தப்படவில்லையோ அங்கே நடைபெறும் பூஜைகள் வீணாகப் போகும்”—மனு 3-56, மஹா பாரதம் 13-4-5

 

9. ஒரு குரு (ஆசார்யா), பத்து ஆசிரியர்களை (உபாத்யாயா) விடச் சிறந்தவர்; ஒரு தந்தை நூறு குருக்களை விட சிறந்தவர்; ஆனால் ஒரு தாயோ ஆயிரம் தந்தையரை விடச் சிறந்தவள்—மனு 2-145

10. ஒரு பெண்ணுக்கு சிறு வயதில் தந்தை பாதுகாப்பு வழங்குகிறார் ; இளம் வயதில் கணவன் பாதுகாப்பு வழங்குகிறார்; முதிய வயதில் மகன் பாதுகாப்பு வழங்குகிறார்; எப்போதுமே அவர் பாதுகாப்பு இன்றி இருப்பதில்லை—மனு 9-9

 

11. மாத்ரு தேவோ பவ= அன்னை என்பவள் கடவுள் என்றும் மனைவி என்பவள் ‘கணவனில் பாதி’ என்றும் வேதம் கூறுகிறது. சிவனுக்கு வாம/ இடது பாகத்தில் இருப்பதை அர்த்தநாரீஸ்வரர் என்று இந்துக்கள் வழிபடுவர். இதை பைபிளும் இடது எலும்பு மூலம் ஆடம் என்ற ஆண்மகன் ஈவ் (ஏவாள்) என்ற பெண்மணியை உருவாக்கினான் என்று சொல்லும். உபநிஷத்திலும் இக்கதை உள்ளதை காஞ்சி மஹாஸ்வாமிகள் தனது உபந்யாசத்தில் விளக்கியுள்ளார். ( Read my posts in this blog THREE APPLES THAT CHANGED THE WORLD & SANSKRIத் IN THE BIBLE)

 

12.வேதத்தில் உள்ள கல்யாண மந்திரங்கள் தற்கால சினிமா காதல் கவிதைகளை விட மிகவும் சுவையானவை; சப்த சதி மந்திரத்தில் துர்க்கையை மணக்க விரும்பும் அசுரர்களிடத்தில் துர்க்கை கூறுகிறாள்: “ யார் என்னை போரில் வெல்கிறார்களோ, எனது கர்வத்தை அடக்குகிறார்களோ, எனக்கு சமமானவர்களோ அவர்களே எனது கணவராகத் தகுதி உடையோர்” என்கிறார். வேத காலப் பெண்கள் என்ன எதிர்பார்த்தார்கள் என்பது இதில் தெளிவாகிறது. கைகேயி போன்றோர் யுத்தகளத்தில் ரதங்களை ஓட்டி வரம் பெற்ற கதைகளை நாம் அறிவோம். ‘வேத மாதாவும் வீர அன்னையும்’ என்ற கட்டுரையில் இது பற்றி எழுதிவிட்டேன்.

 

13.காளிதாசன் காவ்யங்களிலும் ராஜசேகரன் நூல்களிலும் பெண்கள் புகழப்படுகின்றனர். சம்ஸ்கிருத மொழியில் எல்லா நற்குணங்களும் பெண்பால் சொற்களாகவே இருக்கும்.. பகவத் கீதையில் விபூதியோகத்தில் தனது சிறப்புகளை எடுத்தோதும் கிருஷ்ண பரமாத்மா (கீதை 10-34):

பெண்களுக்குள் நான் ஸ்ரீ (லெட்சுமி) ஆகவும் வாக் (சரஸ்வதி) ஆகவும், கீர்த்தி( புகழ்) ஆகவும் ஸ்ம்ருதி (நினைவாற்றல்) ஆகவும் மேதா ஆகவும் (அறிவு/ ஞானம்) த்ருதி (திட உறுதி)  ஆகவும் க்ஷமா (பொறுமை) ஆகவும் விளங்குகிறேன் என்கிறார். இந்தியா முழுதும் பெண்கள் பெயர்கள் பெரும்பாலும் நல்ல குணங்கள் பற்றிய சொற்களாகவே இருக்கும்.

 

(முன்னாள் முதலமைச்சர் திரு கருணாநிதி வீட்டில் கருணா (நிதி), தயா (ளுஅம்மாள்), கனி (மொழி), தயா (நிதிமாறன்) கலா (நிதிமாறன்) முதலிய சம்ஸ்கிருத சொற்களைக் காணலாம்!!!

 

14.தமிழ் நாட்டு கிராமங்களில் வழிபடப்படும் ராக்காயீ, மூக்காயீ, மகமாயீ எல்லாம் வேதத்தில் குறிப்பிடப்படும் ராகா, மூகா, மஹா மாயா என்று காஞ்சி மஹாஸ்வாமிகள் தனது சொற்பொழிவுகளில் அழகாக, அற்புதமாக விளக்கியுள்ளார்.

பெண்கள் வாழ்க! பெண்கள் வெல்க!!

Pictures are taken from other sites;Thanks.

செய்யும் தொழிலே தெய்வம்: கதை மூலம் பகவத்கீதை

 

தஞ்சாவூரில் மகத்தான கோவிலை நிர்மானித்தான் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. கோவில் கட்டும் வேலை நடை பெற்றபோது அதனை மேற்பார்வையிடச் சென்றான். ஒரு ஆள் மிகவும் கஷ்டப்பட்டு கற்களை உடைத்து அவைகளை சரியான அளவுக்கு வெட்டிக் கொண்டிருந்தார். மன்னன் அவன் அருகில் சென்று ஐயா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான்.

 

மன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்றான் பணிவாக.

மன்னன் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். அவன் சொன்னான்,

மன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்துச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறேன் என்றான் பணிவாக.

மன்னன் மேலும் சிறிது தூரம் நடந்தான். மற்றொருவன் அதே பணியைச் செய்துகொண்டிருந்தான். ஐயா என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? என்று கேட்டான். அவன் பதில் சொன்னான்,

 

மன்னர், மன்னவா, வணக்கம், நான் கல் உடைத்து அவைகளைக் கொண்டு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டிவருகிறேன் என்றான் பணிவாக.

 

மூவரும் செய்யும் தொழில் ஒன்றுதான், மூவருக்கும் சம்பளம் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக அந்தத் தொழிலை அணுகினார்கள். எல்லோருக்கும் குடும்பமும் பணமும் முக்கியமே. ஆயினும் ஒருவன் வெறும் கல் உடைப்பதையே நினைத்தான். மற்றொருவன் குடும்பத்தைக் காப்பதையே பெரிதாக நினைத்தான், மூன்றாமவனோ இதைப் புனிதப் பணியாக, சிவனுக்குச் செய்யும் பெரும் கைங்கர்யமாகப் பார்த்தான். இதுவே சரியான பார்வை.

 

எந்தப் பணியையும் தன்னலம் இன்றி, பிறர் நலத்துக்காகச் செய்யவேண்டும். தன் குடும்பத்தின் ஜீவியம் அதில் அடங்கி இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதையே ஆக்கபூர்வமான, இன்பம் கொடுக்கும் தெய்வீகப் பணியாகச் செய்ய வேண்டும். செய்யும் வேலையின் பலனில் பற்று வைக்காமல் ஒரு கடமையாகச் செய்துவரவேண்டும். இது கீதையின் மையக் கருத்துக்களில் ஒன்று.

ராஜராஜன் பற்றி இன்னொரு கதையும் வழக்கில் உள்ளது. அவன் ஒரு முறை மேற்பர்வை இடும் போது தலைமைச் சிற்பி இருக்கும் இடத்துக்குச் சென்றான். மன்னர் வந்ததைக் கூடக் கவனிக்காமல் சிற்பியானவன் கண்ணும் கருத்துமாகச் சிற்பங்களைச் செதுக்குவதிலேயே கவனமாக இருந்தான்.

 

அவனைப் போன்ற பெரிய சிற்பிகளுக்கு எடுபிடி வேலை செய்ய சின்ன வேலைக்காரர்கள்/அடைப்பக்காரர்கள் அருகில் நிற்பார்கள். அவர்கள் தேவைப் படும்போதெல்லாம் வெற்றிலை,பாக்கு மடித்துக் கொடுப்பார்கள். வெற்றிலையைக் குதப்பித் துப்புவதற்கு ஒரு கலசத்தையும் ஏந்தி நிற்பார்கள். ஒரு முறை மன்னர் ராஜ ராஜன் போய் அருகில் நின்றபோது , அடைப்பைக்காரனென்று நினைத்து

ஏ வெற்றிலை மடித்துக் கொடு என்று உத்தரவிட்டான் சிற்பி.

உடனே ராஜராஜன் வெற்றிலை மடித்துக்கொடுத்தான்.

 

சிறிது நேரம் கழித்து வாயில் குதப்பிய எச்சில் வெற்றிலையைப் புளிச்சென்று துப்பினான். அதையும் கலசத்தில் ஏந்தினான மன்னன். எதேச்சையாக சிற்பி நிமிர்ந்து பார்த்தபோது மன்னரிடம் இப்படி எடுபிடி வேலைகள் செய்யச் சொன்னதை எண்ணி பயந்து நடுங்கினான். ஆனால் ராஜ ராஜனோ சிற்பியின் ஈடுபாட்டையும் ஒருமுக கவனத்தையும் பாராட்டிச் சென்றான். சிற்பிக்குப் பன் மடங்கு உற்சாகம் அதிகரித்தது.

 

செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதினான் சிற்பி. அவனுக்கு வேலையில் இருந்த கவனமும் ஈடுபாடும் அவன் அதை தெய்வீகப் பணியாகக் கருதியதைக் காட்டுகிறது. நாமும் பலனில் பற்று வைக்காமல் நமது கடமையைச் செய்தோமானால் நம் பணி சிறக்கும், நாடும் செழிக்கும்.

 

Earlier articles on Krishna posted by me:

 

1.ONE MINUTE BHAGHAVAD GITA

2.Krishna’s Diamond in USA?

3.Atom bomb to Zoo of Bhagavad Gita

4.Krishna’s Restaurant in Dwaraka: Hot Satwic Food Sold

5.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி (Tamil))

6.கண்ணன் வழி….தனீ…..வழி!(Tamil)

7.கொலவெறி வைரம்

8. 45 Commentaries on Bhagavad Gita

(Pictures are taken from other websites.Thanks)

 

 

 

தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா

எகிப்திய அரசி கிளியோபாட்ராவைப் பற்றி பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. இதே போல திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றியும் பல கதைகள் உண்டு. இருவரிடையேயும் முழுக்க முழுக்க ஒற்றுமை காணப்படாவிடினும் சில விஷயங்களில் ஒற்றுமை நிலவுகிறது. இதோ சுவையான செய்திகள்:

 

முதலில் கிளியோபாட்ரா (கி.மு 69-30):

கி.மு 69-ல் ராஜ வம்சத்தில் பிறந்தார். அலெக்சாண்டருக்குப் பின்னர் எகிப்தை ஆண்ட டாலமி அரச வம்சத்தில் உதித்தார். இங்கே ஒரு புதிர். இவர் கிரேக்க வம்சம் இல்லை, ஆப்பிரிக்க கறுப்பினப் பெண் என்று. இதுவரை முடிவு தெரியாத சர்ச்சை. அவருடைய அம்மா யார் என்பதும் உறுதியாகத் தெரியாது. இவரது தந்தையான 12ஆவது டாலமி இறந்தவுடன் இவர் 13ஆவது டாலமியை மணந்தார். அதாவது சகோதரனை கல்யாணம் செய்துகொண்டார். இது எகிப்து நாட்டில் இருந்த வழக்கம்-சகோதர திருமணம்! அதிகாரம் இருக்கும் இடத்தில் மோதல் இருக்கத்தான் செய்யும். சகோதர்ருடன் மோதல்.

கிளியோபாட்ர சிரியா நாட்டுக்குத் தப்பிச்சென்று பெரும்படையுடன் திரும்பிவந்தார். அப்போது ரோமாபுரியை ஆண்ட ஜூலியஸ் சீசர் பாம்பி மன்னனைத் துரத்திக்கொண்டுவந்தார். அவன் எகிப்தில் தஞ்சம் புகுந்தான். காத்திருந்த அழகி (?) கிளி (யோபாட்ரா),  ஒரு கம்பளத்தில் தன்னைச் சுற்றிக்கொண்டு ஜூலியஸ் சிசரிடம் பரிசாகக் கொடுக்கச் சொன்னார். கம்பளத்தை விரித்தபோது வெளியே வந்த கிளியின் அழகில் ஜூலியஸ் மயங்கினார். இருவருக்கும் காதல்,கல்யாணம், முடிவில் ஒரு மகன். மீண்டும் சர்சை. பிற்காலத்தில் இந்த மகன் தனக்குப் பிறந்தவன் இல்லை என்று ஜூலியஸ் சொல்லிவிட்டார்.

 

ஜூலியஸ் சீசர் போரில் கொல்லப்பட்டவுடன் கிளி எகிப்துக்குப் பறந்தது. ஜூலியஸுக்குப் பின்னர் வந்த ஆண்டனி இவளை அழைக்கவே காதல், கல்யாணம், மூன்று மகன்கள்! நல்ல சந்தர்ப்பம் வாய்க்கவே எகிப்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தைத் திருப்பிப் பெற்றுக்கொண்டு அலெக்சாண்ட்ரியா நகருக்கு வந்தார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்த தம்பதிகளுடன் மூன்று பிள்ளைகளும் அமர்ந்த காட்சியைக் காண நாடே திரண்டுவந்தது. இது நடந்தது கி.மு 34 ஆம் ஆண்டு.

கி.மு.31-ல் பெரும் போர் ரோமாபுரியில் மூண்டது. கிளியோ கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பினர். இதைக் கேட்ட ஆண்டனி தற்கொலை செய்துகொண்டார். அதைக் கேட்ட கிளியோபாட்ரா ஒரு நல்ல பாம்பை நெஞ்சில் வைத்து கடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். ஆங்கில மாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி கிளியோபாட்ரா நாடகம் உள்பட ஏராளமான திரைப்படங்களும் கிளியின் நினைவைப் போற்றி வளர்க்கின்றன. அவர் பாம்பு கடித்து இறந்தாரா, அழகைப் பராமரிக்க தினமும் கழுதைப் பாலில் குளித்தாரா—எல்லாமே சர்ச்சைக்குரிய புதிர்கள்!!!

 

இனி மங்கம்மாள் (1689-1704) பற்றிய சுவை மிகு செய்திகள்:

கிளி (யோபாட்ரா) யைப் போலவே இவரும் அழகானவர். கிளி போலவே பல போர் புரிந்தவர். கிளி போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும். மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, கிளி வரலாறு போலவே உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எஉதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இவை.

அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா. அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை(1659-1682) மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

 

மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.

மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை  உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.

 

அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

ஆர்.சத்தியநாத அய்யர் எழுதிய நாயக்கர் வரலாறு, டாக்டர் தேவகுஞ்சரி எழுதிய மதுரை வரலாறு, நா.பார்த்தசாரதி எழுதிய ‘ராணி மங்கம்மாள்’ என்னும் சரித்திர நாவல் ஆகியவற்றையும் படித்து இன்புறுக.

 

Pictures are taken from different sites. Thanks. Contact: swami_48@yahoo.com

 

(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்).

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி. எதையும் இளமையில் செய்தால் மிகவும் எளிதாகவும் வாழ்க்கை முழுதும் பயன் தருவதாகவும் அமையும். இன்னொரு பழமொழி ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதாகும். இதை விளக்க குமரகுருபரர் எழுதிய ‘நீதிநெறி விளக்கத்தில்’ ஒரு அருமையான பாடல் உள்ளது.

 

பல்லக்கு மூங்கில்

“ வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்

வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்

வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து

தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

பொருள்: இளமையில் பல்லக்குத் தண்டு போல வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் மன்னர்களைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயரும். அப்படி வளையாத மூங்கிலின் கதியோ பரிதாபமானது. கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத் திரியும். இதேபோல இளமையில் கஷ்டப்பட்டு கல்வி கற்பவர்கள் மேல்நிலையையும் கல்லாதவர்கள் தாழ்வான நிலையையும் அடைகின்றனர்.

குமர குருபரர், ஒரு மூங்கில் கழியை வைத்து அழகான கருத்தை விளக்குகிறார். கோவிலில் இருந்து உலா வரும் சுவாமியை பல்லக்கில் தூக்கி வருவதை அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான வளைந்த மூங்கில் எங்கே விளைகிறது? எங்கேயும் விளையாது. மூங்கில் வளரும் காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடுவார்கள். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம்.

இளைஞன் முதுகில் யானை!

ஒரு சர்கஸில் 5 அல்லது 6 டன் எடை உடைய ஒரு யானை சுமார் 100 கிலோ எடை உடைய ஒரு மனிதன் மேல் நிற்பதைப் பார்த்து எல்லோரும் வியந்தார்கள். அவன் படுத்தவுடன் அவன் மீது ஒரு பெரிய பலகையை வைப்பார்கள். அதன் மீது யானை ஏறி நிற்கும். இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர் அவரைப் பேட்டி காணச் சென்றார். ‘நீங்கள் யோகாசனம் பயின்று ஏதேனும் அபூர்வ சக்தி பெற்றிருக்கிறீர்களா? எப்படி இதைச் செய்ய முடிகிறது? என்று பத்திரிகை நிருபர் கேட்டார். அதற்கு அந்த இளைஞர், நான் பள்ளிக்கூடம் கூட போனது இல்லை, எனக்கு யோகமும் தெரியாது, ஆசனமும் தெரியாது. இந்த யானை குட்டியாக இருந்தபோது இந்த சர்க்கஸ் அதை விலைக்கு வாங்கியது. அன்று முதல் என் மீது ஏறி நிற்கும் பயிற்சியைத் துவக்கினார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதானபோதும் எனக்கு பாரம் தெரிவதில்லை என்றார்.

 

இது நம் வாழ்க்கையில் பெரிய உண்மையைப் போதிக்கிறது. பல்லக்கு மூங்கில் போல வளையவும், பெரிய பாரத்தைச் சுமக்கவும் இளமை முதல் பயிற்சி தேவை.

 

(20000 தமிழ் பழமொழிகள், பெண்கள் பற்றிய பழமொழிகள், யானை பற்றிய பழமொழிகள் முதலிய பழமொழிக் கட்டுரைகள் ஏற்கனவே இந்த பிளாக்கில் ஏற்றப்பட்டுள்ளன).

 

 

21 லிட்டர் கொழுக்கட்டை எதற்காக?

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாக்ஷி கோவிலில் பல புரியாத புதிர்கள் உள்ளன. திருக்கல்யாண மஹாலில் இருக்கும் பூகோள ,ககோள வட்டங்கள், வெள்ளியம்பலத்தில் வலது காலை தூக்கி ஆடும் நடராஜர், முக்குறுணி விநாயகர் ஆகியன அவற்றில் சில. 55 ஆண்டுகளாக நான் தரிசித்து வரும் முக்குறுணி விநாயகரை சென்ற வாரம் இந்தியா சென்றிருந்த போது மீண்டும் தரிசித்தேன். அதே அழகு, அதே கம்பீரம்! கோவிலுக்கு வெளியே மதுரையே தலை கீழாக மாறிவிட்டது. ஆனால் எனது இஷ்ட தெய்வம் பிள்ளையார் மாறவில்லை.

இந்தப் பிள்ளையார் பற்றிய சுவையான விவரங்கள்:

இந்த கற்சிலை எட்டு அடி உயரம் உடையது. நாயக்க மன்னர்களில் மிகவும் கீர்த்தி வாய்ந்த திருமலை நாயக்கர் (1623- 1659), மதுரை நகருக்கு வெளியே வண்டியூரில் ஒரு குளத்தை அமைக்க திட்டமிட்டார். அதற்காக நிலத்தைத் தோண்டிய போது இந்த எட்டு அடி விநாயகர் சிலை பூமிக்கடியில் இருந்து கிடைத்தது. இது எப்படி அங்கே போனது? ஏதாவது பெரிய கோவில் அங்கே இருந்ததா? அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டின் கோவில்களைச் சூறையாடி அழித்தபோது அங்கிருந்த கோவில் அழிந்ததா? என்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்காமல் ஒரு புதிர் நீடிக்கிறது.

இந்த விநாயகர் திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்களில் உள்ள பழமையான பாணியில் அமையவில்லை. ஆகவே பிற்காலத்தைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும். மதுரை மீனாக்ஷி கோவிலில் மட்டும் சுமார் 100 பிள்ளையார்கள் சிலைகள் இருக்கின்றன!

ராட்சத கொழுக்கட்டை (மோதகம்)

இதைப் பற்றிய இன்னொரு புதிர் 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக்கட்டையாகும். இதை பழைய அளவுகோலில் சொல்லவேண்டுமானால் முக்குறுணி என்று சொல்ல வேண்டும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம்.. பிள்ளையார் சதுர்த்தி நாளன்று இவ்வளவு பெரிய கொழுக்கட்டையை நெய்வேத்தியம் செய்வார்கள். அதை ஒட்டியே இவருக்கு முக்குறுணி விநாயகர்/ பிள்ளையார் என்ற பெயர் வந்தது. ஏன் முக்குறுணி என்பதற்கு சரியான விடை கிடைக்காமல் புதிர் நீடிக்கிறது. இந்தப் பிள்ளையாருக்கு முன் உள்ள விளக்குகளில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்கள் இருக்கின்றன.

நான்கு கரங்களுடன் காணப்படும் இப்பிள்ளையாரை கோவிலில் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தவர் கந்தப் பொடி பெத்து செட்டி ஆவார்.

இன்னொரு அதிசயம் என்னவென்றால் தெற்குக் கோபுரத்துக்கு வெளியே தெற்குச் சித்திரை வீதி உள்ளது. அந்த ரோட்டிலிருந்து கொண்டே சைக்கிள் பஸ்களில் போவோர்கூட கோவிலுக்கு மிகவும் உள்ளே அமைந்திருக்கும் பிள்ளையாரைத் தரிசிக்கமுடியும். அப்படிப்பட்ட நேர்கோட்டில்  இதை அமைத்திருப்பது பழங்காலத் தமிழரின் கட்டிடக் கலைச் சிறப்புக்கு மற்றொரு எடுத்துக் காட்டு.

மீனாக்ஷி கோவிலின் ஏனைய அதிசயங்களை கீழ்கண்ட ஆங்கிலக் கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:

1. The Wonder That is Madurai Meenakshi Temple

2. Musical Pillars in Hindu Temples

3. Acoustic Marvel of Madurai Temple

Ramanuja and Non Brahmins

 

(1) Penitence for Pride— As told by Mukulbhai Kalarthi, Ahmedabad

Ramanujacharya lived in Tamil Nadu and Karnataka between 1017 AD and 1137 AD. He lived for 120 years.

On account of old age the renowned Vaishnava preceptor and propounder of the philosophy of Vishistadwaita (Qualified Monism), Ramanuja had become very weak. Therefore, while going to the river for his daily bath he had to take the help of someone.

Going to the river he would rest his hand on the shoulder of one of his Brahmin disciples. But while returning home, he took the help of a disciple, belonging to the lowest caste Shudra.

The orthodox people were greatly perturbed at this peculiar behaviour of the preceptor. Therefore one day some of them got together and went to Ramanuja and said to him, “Revered teacher, should you desire, you can take the help of the untouchable disciple before your bath. But once after the bath you have made yourself clean, you ought not to touch him”.

The preceptor replied, “Brothers, I place my hand on the shoulder of him, whom you consider an untouchable, after my bath, only to wash away the dirt of pride, which still sticks to me because of my belonging to the so called highest caste. And this dirt cannot be washed away with mere water!”

 

(2) Story of Kanchipurna (Thiru Kachi Nambi) as told by Swami Sivananda

“One of Ramanuja’s disciples, by name Kanchipurna, was serving in the temple at Kancheepuram. Although a Shudra, Kanchipurna was so very pious and good that the people of the place had great respect and reverence for him. At present, there is a temple at Kancheepuram where Kanchipurna’s image has been installed and where he is worshipped as a saint.

Young Ramanuja came under Kanchipurna’s influence and had such reverence for him that he invited him to dinner in his house. Ramanuja’s intention was to attend on Kanchipurna and personally serve him at dinner and himself take meals afterwards. Unfortunately, Kanchipurna came to dinner when Ramanuja was not at home, and took his meals being served by Ramanuja’s wife. When Ramanuja returned home, he found the house washed and his wife bathing for having served meals to a Shudra. This irritated Ramanuja very much and turned him against his wife who was an orthodox lady of a different social ideal. After a few incidents of this nature, Ramanuja abandoned the life of a householder and became a Sannyasin”— Swami Sivananda of Divine Life Society.

(3) Acme of Compassion –As told by Swami Ramdas of Anandashram

“You must have heard of the three great teachers : Shankara, Ramanuja and Madhwa. They have established their systems of philosophy in India. Ramanuja went to a Master and asked him to initiate him. The Master gave him God’s name and also advised him not to give this NAME to anybody, adding if he did so, he would go to hell. At once Ramanuja went to the top of the local temple (at Sri Perumpudur near Madras) and shouted, “ I am going to give you all a NAME which will save you. My master has given me that Name”. He uttered the name loudly so that everybody could here.

 

(God’s name he uttered was OM NAMO NARAYANA)

The Master heard about it and asked why he did so in spite of his warning. Ramanuja’s reply was, “I am prepared to go to hell a hundred times if I can save thousands”.

Compiled by swami_48@yahoo.com