தேள்— ஒரு மர்ம தெய்வம்!

 

படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்

(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)

உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.

 

அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர்.  சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.

 

தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.

கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.

மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.

 

படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி

27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.

தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் தேள் வீரன்

 

படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை

எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.

இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.

சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.

பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.

 

பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.

For more details, see my English post: The Great Scorpion Mystery in History.

Other articles on Snake, Indus Valley etc:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God  around  the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

பஹ்ரைன் அதிசயங்கள்

Picture: Middle East Pasupati Seal

 

பஹ்ரைன் நாட்டின் பழங்காலப் பெயர் தில்முன். இதற்கும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் வணிகத் தொடர்புகள் இருந்ததன. சிந்துவெளி முத்திரைகள் பஹ்ரைன் பகுதியிலும் அவர்களுடைய முத்திரைகள் சிந்துவெளியிலும் கிடைத்துள்ளன. இன்று வளை குடா நாடுகளில் நமது இந்திய ஊழியர்கள் அதிகமானோர் வேலை செய்கின்றனர். இந்தத் தொடர்பு 4000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்பதை அறிகையில் வியப்பு மேலிடுகிறது. முற்கால பஹ்ரைன் நாடு பல மர்மங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது.

 

இந்த தில்முன் நிலப்பரப்பை புனித பூமி என்றும் தூய நிலப் பரப்பு என்றும் பழங்கால நூல்கள் வருணிக்கின்றன. இதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் இங்கு ஏராளமான புதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகின் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இன்றும் ஆர்வத்தோடு மேலும் மேலும் ஆராய்ந்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இதுவரை சிந்துவெளி முத்திரைகளை யாராலும் படிக்கமுடியவில்லை. ஒவ்வொருவரும் அந்த முத்திரைகளுக்கு மனம் போனபோக்கில் வியாக்கியானம் செய்து வருகின்றனர். ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. அங்குள்ள படங்களுக்கும் பஹ்ரைன் படங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

 

உலக மஹா இடுகாடு

பஹரைனில் மிகவும் வியப்பான விஷயம் அங்குள்ள கல்லறைகள்தான். சுமார் 350,000 கல்லறைகள் இருகின்றன. உலகில் இவ்வளவு அதிகமான கல்லறைகள் வேறு எங்கும் இல்லை. இதில் பெரும்பாலானவற்றைத் தோண்டி உள்ளேயிருந்த பொருள்களைக் கொள்ளை அடித்துவிட்டனர். இருந்தபோதிலும் இன்னும் பல, யார் கையும் படாமல் இருப்பதால் 5000 ஆண்டுகளுக்கு முன் அங்கே வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை அறிய முடிகிறது

கல்லறைகள் சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. பெரியவை 4×9 மீட்டர் பரப்புடையவை

பார்பர் என்னும் இடத்தில் ஒரு பழைய கோவில் இருக்கிறது. இது சுமேரிய நீர்க் கடவுள் எங்கை (கங்கை) மற்றும் அவருடைய மனைவியுடையது.

 

குழந்தை சமாதிகள்

கல்லறைகளின் எண்ணிக்கையோடு வேறு ஒரு விஷயமும் ஆராய்ச்சியாளரை வியப்புக்கு உள்ளாக்கிவருகிறது. அது குழந்தை சமாதிகளின் எண்ணிக்கை ஆகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும்1.6. குழந்தை என்னும் விகிதத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு குழந்தைகள் இறந்தது எப்படி? என்பதே கேள்வி. மத்தியக் கிழக்கில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததை யூத மத நூல்களும் பைபிளும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. பினீசியர்கள் மலிக் என்னும் தெய்வத்துக்கு நரபலி கொடுத்ததும் தெரியும் இந்தக் கல்லறைகள் நரபலியைக் குறிக்கின்றனவா?

Pictures: Bull Men, Monkey Gods, Sri Chakra like flowers?

 

பாம்பு புதையல் கல்லறை

மற்றொரு மர்மம் பாம்புக் கல்லறை ஆகும். பாம்புகளை அழகாகப் பதப் படுத்தி புதைத்துள்ளனர். இது தெய்வப் பாம்பா? எதற்காக இப்படிப் புதைத்தனர் என்பதும் தெரியவில்லை. தேள் பற்றிய விஷயங்களும் மர்மமாக உள்ளது. பல முத்திரைகளில் தேள் காணப் படுகிறது. இதே போல எகிப்திலும் சிந்து வெளியிலும் தேள் முத்திரைகள் கிடைத்தன. தேளுக்கும் பெண் தெய்வத்துக்கும் செக்ஸுக்கும் (பாலியல்) தொடர்பு உண்டு. இதுவும் ஆராய்ச்சியாளரின் கவனத்தை ஈர்த்தது.

குரங்கு மர்மம்

மத்தியக் கிழக்கு முழுதும் வாலுடன் நிமிர்ந்து நிற்கும் ஒரு குரங்கு உருவம் நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும். சில காட்சிகள் ராமயணத்தில் வரும் அனுமன் போல இருக்கிறது. ரிக்வேதத்திலும், மகாபாரதத்திலும் வ்ருஷகபி என்னும் குரங்குத் தெய்வம் வருகிறது. இந்தக் குரங்கு வ்ருஷகபியா? ராமாயண ஹனுமனா? ஆராயப்பட வேண்டிய விஷயம்.

 

வேறு பெயர்கள்

பஹ்ரைன் நாட்டின் வேறு பெயர்கள்: தைலோஸ்=இது கிரேக்கர்கள் சூட்டிய பெயர்;ஆர்ட்வஸ்=மயான பூமி, சாம்பல் பூமி; அவால்/அவல்= மாட்டுத் தலை உடைய ஒரு தெய்வத்தின் பெயர். ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றும் வரை இதுவே பஹ்ரைனின் பெயர்; தற்காலப் பெயர் பஹ்ரைன்=இரு கடல்கள்

எனது கருத்து: தைலம், திலம் என்பதெல்லாம் எள், எண்ணெய் என்பதன் சம்ஸ்கிருதப் பெயர். இறந்தவர்களை எரித்துப் புதைத்து எள்ளும் நீரும் இரைத்த பூமி என்னும் பொருளில் இப்படி தில முனை என்று அழைத்தனரோ?

Picture: Monkey figures, Gods on Vahanas

 

பஹ்ரைன் நாட்டின் மனாமா தேசிய மியூசியத்தில் நிறைய தொல்பொருட் சின்னங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தீவிரவாத முஸ்லீம்கள் இதை எதிர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்லாம் தோன்றுவதற்கு முன் இருந்த கலாசாரத்தைப் பாதுகாத்து வைப்பது பிடிக்காது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்த உலகிலேயே மிகப் பெரிய புத்தர் சிலையை, 2200 ஆண்டு பழமையான சிலைகளை தீவிரவாதிகள் அழித்தது உங்களுக்கு நினைவிருக்கும். நல்ல வேளையாக பஹ்ரைனில் இதுவரை நிலவரம் கட்டுக்குள் இருக்கிறது.

தில்முன் (பஹ்ரைன்) பற்றி 4000 ஆண்டுப் பழமையான க்யுனிபார்ம் கல்வெட்டில் அந்த நாட்டின் புகழ் பாடப்பட்டிருக்கிறது: “ இது புண்ய பூமி. இது தூய பூமி. இங்கே அண்டங் காக்கைகள் கத்தாது. சகுனம் காட்டும் பரவைகள் தீய நிமித்தங்களைக் காட்டாது. சிங்கங்கள் கொல்லாது. அண்டங்காக்கைகள் ஆட்டுக் குட்டிகளைக் கொத்திக் கொண்டு போகா. குழந்தைகளைக் கிழித்துப் போடும் காட்டு நாய்களும் இல்லை. புறாக்கள் தலையை மறைக்காது. எனக்கு கண் வலி, தலை வலி என்று யாரும் சொல்லுவதில்லை. நான் ஒரு கிழவன், நான் ஒரு கிழவி என்று யாரும் சொல்லுவதில்லை. கன்னிப் பெண்கள் பாதுகாப்பாக நடந்து போகின்றனர். இறுதிச் சடங்கு செய்யும் புரோகிதர்கள் இல்லை. இந்த்ச் சுவர்கள் அழு குரலைக் கேட்பதில்லை”.

 

ஒரு அதிசயமான ஒற்றுமை என்ன என்றால் பாரத நாட்டைப் பற்றி வடமொழி இலக்கியங்களிலும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் எழுதிய குறிப்புகளிலும் இதே வாசகங்கள் இருக்கின்றன. கம்பன் கூட அயோத்தி நகரையும் கோசல நாட்டையும் இப்படிதான் வருணிக்கின்றான். ஒரு வேளை தில்முன் என்பது இந்தியாதானோ என்று நான் அடிக்கடி சந்தேகப்படுவதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்களோவெனில் தில்முன் என்பது பஹ்ரைன் என்றும், பைலக்கா என்பது குவையத் என்றும் மெலுஹா என்பது சிந்துவெளி என்றும் அடித்துச் சொல்லுகின்றனர்.

Picture: Graves in the desert

 

பஹ்ரைனில் கிடைத்த முத்திரைகளின் பட்டியல்:

தேள்—36, ஆடு—27,குரங்கு—20,மாடு—90,ஆமை—6,மீன்-6,பாம்பு—15,

கால்சுவடு—36,சந்திரப் பிறை—126,சூரியன்+விண்மீன்—42,கடவுள்+கொடிமரம்—22

காளை மனிதன்—8,நண்டு—6, கழுதை—2, மயில்—1,நிலம்—5

ஒட்டகம், குதிரை, புலி, யானை, காண்டாமிருகம் ஆகிய முத்திரைகள் கிடைக்கவில்லை. அடையாளம் காணமுடியாத பறவைகள் முத்திரைகளில் இருக்கின்றன. நின்ற வடிவிலுள்ள குரங்கு, தேள், பாதச் சுவடு ஆகியன புரியாத புதிராக உள்ளன. சிந்து சமவெளி போல ‘செக்ஸ்’ காட்சிகளும் இருக்கின்றன.

சிந்துவெளி போல கடவுளைச் சுற்றி மிருகங்கள் (பசுபதி) இருப்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்

 

தமிழ் முனிவர் அகஸ்தியர்

Agastya Rishi Statue from Indonesia;location-London V&A Museum.

 

By ச.நாகராஜன்

தமிழ் இலக்கணம் வகுத்த மஹரிஷி

தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.

ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை  உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை.

 

அகத்தியரின் நாடி ஜோதிடம்

தமிழ் சித்தர்களில் மிகப் பெரும் சித்தர் அகத்தியர். அகத்தியர் பெயரால் உலவி வரும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறை சாற்றும். அகத்தியர் சிறந்த ஜோதிட மஹரிஷியும் கூட. குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது.

 

பனை ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பலன்களை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை சொல்வதோடு அவர்களின் முன் ஜென்ம வரலாறும் சுருக்கமாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது.

 

நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும் பெண் என்றால் இடது கைப் பெருவிரலும் காட்டப்படவேண்டும். அகத்தியரின் நாடி ஜோதிட சுவடிகளில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார். ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு (முக்கமல சங்கு ரேகை என்பது போல!)முன் ஜென்மத்தில் செய்த தர்மம் (நல்ல காரியம்) எவ்வளவு, கர்மம் (தீய காரியம்) எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும் (தர்மம் 9 கர்மம் 1- நல்ல ஜாதகர்) இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகர் பிறந்த வருடம், ஜாதகம் தெளிவாகச் சொல்லப்படும். பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவையும் கூட விளக்கப்படும்.

ஆங்கிலேயர் ஒருவரின் பெயரைப் பற்றிச் சுவடி குறிப்பிடும் போது முழத்தில் பாதி இவர் பெயர் என வர அவர் ஜான் (முழத்தில் பாதி சாண்) என்று சொல்லப்பட்ட நேர்த்தியும் நாடி ஜோதிடத்தில் தான் உண்டு!

இப்படிப்பட்ட அகத்தியரின் நாடி ஜோதிடம் உள்ளிட்டவற்றை ரஷ்யர்கள் மொழிபெயர்த்து ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் அகத்தியரின் சுவடிகள் தெரிவிக்கும் போது பிரமிப்பின் உச்சியைத் தான் எட்ட வேண்டியிருக்கும்!

 

அகத்தியரின் பிறப்பு

அகத்தியரைப் பற்றிய பிறப்பு பற்றி மஹாபாரதம் ஆதி பர்வம் கூறுவதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

பிரம்மாவினுடைய புத்திரர் மரீசி. மரீசியினுடைய புத்திரர் காஸ்யபர். காஸ்யபருக்கு தக்ஷப்ராஜாபதியின் புத்திரியாகிய அதிதி என்பவளிடத்தில் பன்னிரெண்டு புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்களுக்கு பன்னிரெண்டு ஆதித்தியர்கள் என்று பெயர். அப்பன்னிருவரில் மித்திரர் என்பவர் ஒருவர். அந்த மஹாத்மாவுக்கு ஊர்வசியின் காரணமாக விந்து வெளியேற அதைக் கும்பத்தில் ஏந்தினார்.அதிலிருந்து அகஸ்தியர் உண்டானார். இந்தக் காரணத்தினால் அவருக்கு கும்ப சம்பவர் என்றும் பெயருண்டு.

Statue of Agastya from Prambanan, Indonesia (Wikipedia picture)

 

அகத்தியரின் மனைவி

அவரது மனைவி லோபாமுத்ரை பற்றிய கதையும் ஒன்று உண்டு. ஒரு சமயம் இவரது முன்னோர்கள் குழியில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் காரணத்தை அகஸ்தியர் வினவ அவர்கள்,”உனக்குக் குழந்தைகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்” என்று பதில் தந்தனர். இதனால் நல்ல மனைவியைத் தேடி அலைந்த அகஸ்தியர் யாரும் அகப்படாததால் ஜீவராசிகளின் சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு அழகான பெண்ணை சிருஷ்டித்தார். அந்தச் சமயம் விதர்ப்ப தேசத்து அரசன் குழந்தை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த சிசுவை மகளாகும் படி அகஸ்தியர் அனுக்ரஹித்தார். நாளுக்கு நாள் அந்தக் குழந்தை அழகுடன் மிளிர்ந்து வளர்ந்தது. அவளுக்கு அந்தணர்கள் லோபாமுத்திரை என்று பெயரிட்டனர். அவளையே தனக்கு கன்னிகாதானம் செய்விக்கும்படி விதர்ப்ப ராஜனைக் கேட்க அவனும் சம்மதித்தான்.அகஸ்தியருக்கும் லோபாமுத்ரைக்கும் திருதா

ஸ்யூ என்ற புத்திரர் ஜெனித்தார்.இப்படி ஒரு சத்புத்திரன் பிறந்ததால் அகஸ்தியரின் முன்னோர்கள் தாம் விரும்பிய நற்கதியை அடைந்தனர்.

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் நடந்த விவாஹத்தின் போது தேவர்கள் அனைவரும் ஹிமகிரியில் கூட வடகோடி உயர்ந்து தென்கோடி தாழ்ந்தது. அதை சரிப்படுத்த ஈஸ்வரன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப அன்றிலிருந்து அகஸ்தியர் பொதியமலை வாசியானார். இந்த விருத்தாந்தத்தை ஸ்கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது.

ஆக இப்படி அகஸ்தியரைப் பற்றிய ஏராளமான தகவல்களை நமது புராணங்களிலும் ஜோதிட நூல்களிலும் சித்த மருத்துவ நூல்களிலும் நாம் படித்து அகத்தியரின் பெருமையை உணரலாம்.

************

My brother S NAGARAJAN is writing a series about all the Great Seers (Rishis) of India. He has already written about the 27 stars and other topics in Astrology. It is all based on science or Hindu scriptures.Next article is about Varahamihira in two parts. All his articles are in Tamil. If you need English translation, please let us know.

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London

பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த திருக்குறள் போல வேறு எம்மொழியிலும் நூல் இல்லை. இனி ஒரு காலத்திலும் இவ்வளவு அழகாக ஒரு புலவர் செய்ய முடியுமா, அப்படியே செய்தாலும் அதை வள்ளுவனை ஏற்றார் போல உலகம் ஏற்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கும். இப்படி வான் புகழ் பெற்று தேன் தமிழில், தென் தமிழில், தெள்ளு தமிழில் குறள் செய்த வள்ளுவன் தமிழில் ஒரு அமைதிப் புரட்சியையும் செய்தான். தமிழில் முதல் தடவையாகத் துணிந்து சம்ஸ்கிருதத்தைப் புகுத்தினான். அதனால் தமிழ் அழகு பெற்றதே அன்றி சோபை குன்றவில்லை. மொழியைக் கெடுக்காமல், அளவோடு செய்தான். நம் காலத்தில் பாரதியார் செய்ததைப் போல.

 

வள்ளுவப் பெருமான், பகவத் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பாற் போலத் தோன்றுகிறது. ஏனெனில் தானம்,தவம் என்ற சொற்றொடரும் குணம் என்ற சொல்லும் சமன் என்ற சொல்லும் பகவத் கீதையில் ஏராளமான ஸ்லோகங்களில் வரும். தமிழில் தைரியமாக இப்படி சம்ஸ்கிருதச் சொற்களுடன் வேறு யாரும் கவிதையையோ பாடலையோ துவக்கியதில்லை.

 

கீதையில் தானம்,தவம் என்ற 2 சொற்களும் சேர்ந்தே வரும் (கீதை 10-5, 16-1,17-7,17-28,18-5; கீதையில் 14ஆவது அத்யாயம் குணத்ரய விபாக யோகம். ஒவ்வொரு செய்யுளிலும் குணம் என்ற சொல் வருகிறது. அதே சொல்லுடன் தவங்கும் ஸ்லோகமும் உண்டு. சமம் என்ற சொல்லுடன் கீதையில் குறைந்தது ஆறு ஸ்லோகங்களாவது துவங்குகின்றன. இதை எல்லாம் பார்க்கையில் அவர் குறளை எட்டுக்கட்டும்போது அவரை அறியாமலே இந்தச் சொற்கள் பீறிட்டெழுந்திருக்க வேண்டும்.

வள்ளுவன் கையாண்ட பல கருத்துக்கள் வடமொழி நூல்களான பர்த்ருஹரியின் சதகங்கள், மனுதர்ம சாஸ்திரம், கீதை, தம்மபதம் ஆகியவற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிறைய கட்டுரைகள் வந்துவிட்டதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை.

 

‘தானம் தவம் இரண்டும்’ (குறள் 19, 295) என்றும், ‘குணம் என்னும் குன்று ஏறி’ என்றும் ‘சமன்’ செய்து என்றும் துணிவாகச் சம்ஸ்கிருதச் சொற்களுடன் குறளைத் துவக்குகிறார். முதல் குறளிலேயே அ’கரம்’, ‘ஆதி பகவன்’ என்றும் அடித்து நொறுக்குகிறார். இந்தத் துணிவு இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்தான் வந்தது. மனம், கருமம், காமம்,தெய்வம், முகம் போன்ற சம்ஸ்கிருதச் சொற்களுடன் இன்னும் நிறைய குறள்களைத் துவக்குகிறார். இவருக்குப் பின் வந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஏராளமான வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த வள்ளுவனே வழி வகுத்தான் போலும்.

 

வள்ளுவன் உள்ளத்தால் பொய்யாதொழுகிய உத்தமன். அதனால்தான் அவன் உலகத்தாற் உள்ளத்துள் எல்லாம் உளன். அவனுக்கு வட மொழி தென் மொழி என்ற காழ்ப்புணர்ச்சி இல்லை. இரு மொழியும் இரு கண்கள் என்பதை உணர்ந்த பெரியோன் அவன். யாராவது திருக்குறளில் இருந்து வடமொழிச் சொற்களை எடுத்தால் அது செல்லரித்துப் போன ஏடு போல, வைரஸ் பாதிப்புக்குள்ளான ‘சாFட்வேர்’ போல ஆகிவிடும்.

 

தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் வட மொழிச் சொற்கள் இல்லாமல் இல்லை. நக்கீரர் கூட ‘உலகம்’ (லோக) என்ற வடமொழிச் சொல்லோடு திருமுருகாற்றுப் படையைத் துவக்குகிறார். சிறுபாணாற்றுப் படை, ‘மணி’மலை என்று துவங்குகிறது. ஆனால் இவ்விரு நூல்களும் பிற்காலத்தில்  எழுந்தவை என்பது சில ஆராய்ச்சியாளரின் கருத்து. சிறுபாணாற்றுப்படை,  கடை எழு வள்ளல்களை வரிசைப்படுத்தி உரைப்பதால், இப்படி ஏற்பட கபிலர் பரணர் காலத்திலிருந்து 200, 300 ஆண்டுகளாவது ஆயிருக்கும். ஆனால் தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததால்தான் “அதிகாரம்” என்ற சொல்லை மூவரும் தங்கள் நூல்களில் பயன்படுத்தினர். (காண்க என் கட்டுரை: தொல்காப்பியர் காலம் தவறு)

The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture.

 

அதிகாரம் என்ற சொல்லைக் கருத்திற் கொண்டால் வள்ளுவன் சம்ஸ்கிருத் சொற்களைப் பயன்படுத்தாத அதிகாரமே இல்லை! ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் குறள்களிலும் காண்கிறோம். நான் ‘ஹைலைட்டரை’க் கொண்டு வடமொழிச் சொற்களை ‘ஹைலைட்’ செய்தபோது எல்லா பக்கங்களிலும் வடமொழிச் சொற்கள்  இருப்பதைக் கண்டேன்.

வள்ளுவனுக்கு பகவத் கீதை அத்துபடி என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் இருக்கிறது. கீதையில்:

“ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மனாஹுதம்

ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம சமாதினா” (4-24)

 

என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. இதே போல உபநிஷதத்தில்

 

“பூர்ணமதப் பூர்ணமிதப் பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” –

என்று ஒரு மந்திரம் வருகிறது. இதே ‘ஸ்டைலில்’—பாணியில்– வள்ளுவனும்

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை —-(குறள் 12)

என்று பாடுகிறான். முன் எவரும் இப்படிச் செய்ததில்லை.

 

வடமொழிச் சொற்பட்டியல்

வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர்  பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது.வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:

 

அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்

 

பொய்யாமொழியைச் சுற்றி ஒரே பொய் மூட்டைகள்!!!

வள்ளுவன் காலம் அவன் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களாலும், புதிய சொற்றொடர்களாலும், பிற்கால இலக்கணத்தாலும் நன்கு தெரிந்த பின்னரும், இதை வையாபுரியார் முதற்கொண்டு பல அறிஞர் பெருமக்கள் எடுத்துக்காட்டிய பின்னரும், சிலர் ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் வள்ளுவனை கி.மு.31 என்று முத்திரை குத்தியது பொய்யாமொழிப் புலவனையே அவமானப் படுத்துவதாகும். இது தொடர்பான பழைய மகாநாட்டில் காரசார விவாதங்கள் நடந்து வெளிநடப்பு நடந்தபின்னர் ஒரு கோஷ்டி இப்படி வள்ளுவருக்குப் பொய்க் காலம் போட்டுக் கொடுத்தது. இதை வள்ளுவனே மன்னிக்கமாட்டான்.

வள்ளுவன் பெருமை அவன் வாழ்ந்த காலத்தால் அல்ல. அவன் எழுதிய நூலால்தான். இன்று வள்ளுவன் இப்படி ஒரு நூல் எழுதியிருந்தாலும் இந்தியாவிலேயே அவன் ஒருவன் தான் இப்படிப்பட்ட சாதனையைச் செய்தவனாக இருந்திருப்பான். ஏற்கனவே நேர்மையற்ற அரசியல்வாதிகள் எல்லாம் அவன் குறளை மேடை தோறும் முழக்கி அவனை மஹாத்மா காந்தியைப் போல மதிப்பு இல்லாமல் நகைப்புக்குரியவராகச் செய்துவிட்டார்கள். அவன் வாழ்ந்த காலம் பற்றிய மோசடியையாவது மாற்றி உண்மையைச் சொன்னால் அவனுக்கு ஆத்ம சாந்தியாவது ஏற்படுமே.

 

மொழியியல் ரீதியில் வள்ளுவனை கி.மு.வில் வைக்க முடியாது. அப்படி வைத்தால் சங்க இலக்கியம் முழுவதையும் கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டுக்குத் தள்ள வேண்டியிருக்கும். அதுவும் முடியாது. கடல் வணிகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகளும் ரோமானிய ,கிரேக்க எழுத்தர் குறிப்புகளும் சங்க இலக்கியத்தை முதல் மூன்று (கி.பி) நூற்றாண்டுகள் தான் என ஐயம் திரிபு அற முடிவு செய்துவிட்டன (காண்க கனக சபைப் பிள்ளை, டாக்டர் இரா.நாகசாமி, கமில் சுவலெபில் நூல்கள்)

 

வள்ளுவன் வடமொழி வாசகத்துடன் பாடலைத் துவக்கியதோடு நிற்காமல் ஆங்காங்கே சில சம்ஸ்கிருதச் சொற்றொடர்களுக்கு அருமையான மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறான். சினம் பற்றிய அதிகாரத்தில் ‘சேர்ந்தாரைக் கொல்லி ‘என்ற சொல் ‘ஆஸ்ரயாச:’ என்பதன் தமிழாக்கம். தாமரைக் கண்ணன் என்பது கமலநயன, அரவிந்தாக்ஷன் என்பதன் தமிழாக்கம். தர்ம,அர்த்த,காம (அறம், பொருள், இன்பம்) என்ற இந்து மதக் கோட்பாடுகளுடன் இந்திரன் முதலாக பல்வேறு இந்துக் கடவுளரையும் குறிப்பிடுகிறார்.

 

வள்ளுவனின் வேறு சில அழகான மொழிபெயர்ப்பு:சம்சார சாகரம்=பிறவிப் பெருங்கடல்,அஹங்காரம்,மமகாரம்=யான்,எனது என்னும் செருக்கு, ரிக்வேதத்தில் வரும் கவீம் கவீனாம்=நூலாருல் நூல் வல்லான், கீதை ஸ்லோகம் உத்தரேத் ஆத்மநாத்மானம்= உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், தர்மோ ரக்ஷதி ரக்ஷித:= அல்லவை தேய அறம் பெருகும்.

 

வள்ளுவர் “இந் நான்கும்”, “இம்முன்றும்” என்று சொல்லுவதும் வட மொழி அணுகுமுறை. பழந்தமிழ் நூல்களில் காணப்படா.

கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து பாக்களில் ஏழு குறள்களில் இறைவனுக்கு பாத நமஸ்காரம் செய்கிறார் (அடி போற்றுதல், தாள் வணங்குதல்). இது சம்ஸ்கிருத நூல்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கக்கூடியது. (Please read my post WHY DO HINDUS WORSHIP SHOES?).

 

கோடி என்ற வடமொழிச் சொல்லை இவர் பயன்படுத்திய அளவு வேறு எந்த பழந்தமிழ் கவிஞனும் பயன்படுத்தியிருக்க மாட்டான். சின்னக் குழந்தை சொல்லும் வடமொழி ஸ்லோகத்தில் கூட “சூர்யகோடி சமப்ரபா” என்ற வடமொழி வாசகம் வரும்.

வேறு யாரும் சொல்லாத இன்னொரு விஷயம். வள்ளுவர் பஞ்ச தந்திரக் கதைகளையும் நன்கு படித்தவர் என்பது குறள்கள் 273, 274, 277, 481, 495, 633 முதலியவை மூலம் தெரிகிறது.

 

வாழ்க வள்ளுவன் புகழ். வளர்க வாய்மை, பொலிக தூய்மை!

ஜோதிடக் கலை மஹரிஷி நாரதர்

by ச.நாகராஜன்

ராமாயணம் உருவாகக் காரணமான மஹரிஷி

 

ஹிந்து வாழ்க்கை முறையில் இதிஹாஸ, புராணங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அந்த இதிஹாஸ புராணங்களில் நாரத மஹரிஷிக்குத் தனி இடம் ஒன்று உண்டு.

 

மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!

 

வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமைப் பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

வால்மீகி தர்ம நாயகனும் பொய்பேசாதவரும் இன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தியுள்ள நாயகன் யார் என்று நாரதரைக் கேட்ட போது அவர் ராமரைப் பற்றிக் கூற, ராமாயணம் எழுந்தது. நாரதர் பாண்டவர்களின் உற்ற நண்பரும் கூட! தேவைப்பட்ட போதெல்லாம் அவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் தந்ததை மஹாபாரதத்தில் வியாஸர் வெகுவாக விரித்துரைப்பதைக் காணலாம்.

வேத வியாஸர் மனம் கலங்கி இருந்த போது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவரின் கலக்கத்தைப் போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் நாரதரே!

 

 

திரிலோக சஞ்சாரி

நாரத பாஞ்சராத்ரத்தின் படி நாரதர் பிரம்மாவின் புத்திரர்.இவரைப் பற்றி பதினெட்டு புராணங்களும் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றன. அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி என்ற பெயர் கொண்ட அவர் மூன்று லோகங்களுக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் க்ஷண நேரத்தில் சென்று விடுவார்.

 

நாரதர் கலகப் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது அவரது பல்முக பரிமாணங்களில் ஒரு சிறிய பரிமாணம் தான். ஆனால் சென்ற நூற்றாண்டில் பிரபலமடைந்த நாடகங்களில் ஹாஸ்ய ரசம் தேவைப்பட்டதால் இரவு முழுவதும் நடந்த நாடகத்தில் அவ்வப்பொழுது நாரதர் தோன்றி சிரிக்க வைத்து மக்களை ‘விழிப்புடன்’ இருக்குமாறு செய்வது வழக்கமாகிப் போனது. அதனால் தேவரிஷியான மிகப் பெரிய மஹரிஷியின் ஒரு சிறிய அம்சத்தையே நாம் வெகுவாக ரசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டு விட்டோம்!

 

நாரதரின் கலகம் நன்மையில் முடியும். ஒரே ஒரு பிரச்சினையை எழுப்பி அதன் மூலம் அவர் பல பெரிய விஷயங்களுக்குத் தீர்வு காண்பதை ஏராளமான கதைகள் விளக்குவதை நாம் அறிவோம்.

ஜோதிடத்தின் மூலகர்த்தா

 

தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷ¡ பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.

ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை!

 

பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம்.வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத சம்ஹிதையில் உள்ள பல சுலோகங்கள் அப்படியே ப்ருஹத் சம்ஹிதாவிலும் இருப்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்! நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!

 

த்ரி ஸ்கந்த ஜோதிஷம்

 

‘ஜோதிஷம் சூர்யாதி க்ரஹணம் போதகம் சாஸ்த்ரம்’ என்பது ஜோதிடம் என்றால் என்ன என்பதை விளக்குகிறது.

கிரஹ சஞ்சாரங்களைத் துல்லியமாக நிர்ணயிக்க உதவும் கணக்குகளும் அதையொட்டி நல்ல காரியங்களை நல்ல நேரங்களில் ஆரம்பித்து நற்பயன் காண்பதையும் நாரத சம்ஹிதா, ஸ்கந்த த்ரியா என்று மூன்று பகுதிகளாக விளக்குகிறது! த்ரிஸ்கந்த ஜோதிஷம் என்ற பெயரில் இன்று பிரபலமாக இது விளங்குகிறது.

 

 

பின்னால் இது விரிந்து சித்தாந்தம், ஹோரா (பராசரர்,ஜைமினி, யவனர் முறைகள்), வாஸ்து சாஸ்திரம் முஹ¥ர்த்தம் உள்ளிட்ட சம்ஹிதா, ப்ரஸ்னம் பார்த்தல், சகுனம் பார்த்தல் என ஐந்தாக விரிவடைந்தது.பிரம்மாவிடமிருந்து நாரதர் ஜோதிடத்தைக் கற்று அதை சௌனகாதி முனிவர்களுக்கு உபதேசித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

 

நாரதரின் இசை

 

நாரதரைப் பற்றிய சுவையான ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம்: தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார். தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர். நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.

 

இப்படிப் பட்ட அனுபவங்களைக் கொண்ட நாரதர் ஜோதிடத்தை எவ்வளவு நுணுக்கமாகச் சொல்லி இருப்பார் என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

 

நாரதரின் வழிபாட்டு நூல்

 

108 பாஞ்சராத்ர நூல்களில் நாரத பாஞ்சராத்ரம் பிரபலமானது. இது கோவிலில் நடைபெறும் வழிபாடுகளைப் பற்றியும் சுத்திகள் பற்றியும், தேவதா பிரதிஷ்டை போன்றவற்றையும் பற்றி விளக்குகிறது. இவற்றின் அடிப்படையாக ஜோதிடம் இலங்குகிறது! நாடக வாயிலாகவும் நமது திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் பார்க்கும் நாரதர் வேறு; ஜோதிடம்,பக்தி, நாட்டியம், பூஜை முறைகள் இவற்றை உபதேசித்து உரைக்கும்  மகத்தான ஞானமுடைய மஹரிஷி நாரதர் வேறு!

 

நல்ல பக்தராக வேண்டுமா, நல்ல ஜோதிடராக வேண்டுமா, நல்ல நாட்டியக் கலைஞராக வேண்டுமா..?

நாட வேண்டிய மஹரிஷி நாரதரே!

 

*******************

சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி

English Version of this article is posted yesterday: London Swaminathan, swami_48@yahoo.com

உலகில் நரபலி இல்லாத நாகரீகம் இல்லை, நரபலி இல்லாத மத நூல்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரீகத்திலும் எகிப்திலும் ஒரு நரபலிக் காட்சி ஒரே மாதிரி வருணிக்கப்படுவது வியப்பூட்டுகிறது. ராமாயணத்தில் ராம பிரான் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சரயு நதியில் குதிக்கிறார். அவருடன் ஆயிரக் கணக்கான மக்களும் குதிக்கின்றனர். புண்ய ஆத்மாவுடன் போனால் சொர்க்கத்துக்கு நேரடி ‘டிக்கட்’ வாங்கியதற்குச் சமம். இதே போல எகிப்திலும் மன்னர் இறந்தவுடன் அவருடைய நெருங்கிய அதிகாரிகள், சேவகர்கள், ராணிகள் ஆகியோரும் உயிருடன் புதைக்கப்பட்டனர். ஆயினும் இப்படிப் புதைக்கப்பட்ட சடலங்களின் முகத்தில் அமைதியே தவழ்கிறது. ஆகையால் முதலில் போதை மருந்தோ விஷமோ ஏற்றியபின்னரே அவர்கள் புதைக்கப் பட்டார்கள்.

 

வேதத்தில், பைபிளில், யூத மத நூல்களில் உயிர்ப்பலி குறிப்புகள் உள்ளன. பஹ்ரைன் நாட்டில் உலக மஹா இடுகாடு (கல்லறை) இருக்கிறது. அங்குள்ள பல்லாயிரக் கணக்கான சடலங்களில் ஏராளமான குழந்தைகள் சடலங்கள் இருப்பது பலருடைய புருவங்களை வியப்பால் உயர்த்துகிறது. இது மாபெரும் குழந்தை பலியோ என்று!

இப்போதெல்லாம் மாயா நாகரீகம் பற்றி எழுதுவோருக்கு நரபலியைக் குறிப்பிடுவது ஒரு ‘பாஷன்’ ஆகிவிட்டது. அதைவிட மோசமான கொடுமை எல்லாம் மறைக்கப்படுகிறது.

சிந்து சமவெளி முத்திரைகள்

சிந்து சமவெளியில் ஒருமுத்திரையில் ஒரு ஆள் ஒரு தெய்வத்தின் முன்னால் மண்டிபோட்டு உடகார்ந்திருக்கிறார். அவர் பக்கத்தில் பூதாகரமான ஒரு ஆடு நிற்கிறது. அதன் முகம் கிட்டத்தட்ட ஒரு மனித முகம் போல இருக்கிறது. அவருக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூல் இருக்கிறது. அதன் மேல் ஒரு மனித தலை இருக்கிறது. அவருடைய தலை மயிர் இரட்டைக் கொண்டையாக முடியப் பட்டிருக்கிறது (டபுள் பன்). இதே போலத்தான் மத்திய கிழக்கு நரபலி சிலைகளிலும் கொண்டை இருக்கும். இது மொஹஞ்சதாரோ முத்திரை.

காளிபங்கன் என்ற இடத்தில் இன்னும் ஒரு முத்திரை கிடைத்தது. அதில் விநோதமான புலி உருவ தெய்வத்துக்கு முன்னால் இரண்டு வீரர்கள் ஈட்டிச் சண்டை போடுகின்றனர். ஒருவர் உடலை மற்றொருவர் ஈட்டி துளைக்கிறது. இதே காட்சி எகிப்தில் ஒரு தந்த சிற்பத்தில் இருக்கிறது அது டஜேர் (Pharoah Djer) என்ற மன்னனுடையது.

சுமேரியாவில் ஜில்காமேஷ் (2700 BC)  காலத்தில் இருந்து கல்லறையில் அதிகாரிகளும் புதைக்கப் பட்டனர்.

 

இந்தியாவில் பழங்காலத்தில் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. கணவன் இறந்த பின்னர் அவனுடன் மனையும் எரிக்கப்பட்டாள். ஆனால் இதில் கட்டாயம் ஏதும் இல்லை. பாண்டுவின் மனைவி குந்தி, கணவன் இறந்த பின்னரும் பஞ்ச பாண்டவர்களைப் போற்றி வளர்த்தாள். புறநானூற்றில் ஒரு பாடல் வருகிறது. பாண்டிய மன்னன் பூதப் பாண்டியன் இறந்தபின்னர் அவன் மனைவி தீயில் பாய முனைகிறாள். மந்திரிமார்கள் எவ்வளவோ தடுத்தும் அவள் தீயில் பாய்ந்து உயிர் நீத்ததைப் பார்க்கிறோம்.

மஹா பரதத்தில் கள பலி

மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்னால் அர்ஜுனன்–உலூபி மகன் அறவான் களபலி கொடுக்கிறான். அவனது தலை இன்றும் வட தமிழ் நாட்டில் பல கோவில்களில் வழிபடப்படுகிறது. ராஜஸ்தான், நேபாளம், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அவன் போற்றி வழிபடப் படுகிறான்.

தமிழ் நாட்டில் நவகண்டம்

போருக்கு முன்னால் வீரர்கள் காளியின் சிலைக்கு முன்னால் தலையை அறுத்து நவகண்டம் கொடுப்பது தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் நடந்தது. மக்களுக்கு தியாக உணர்வையும் தேசபக்த வீர உணர்வையும் ஏற்படுத்த இப்படிக் கள பலி கொடுத்தனர். உடலில் ஒன்பது இடங்களில் கத்தியால் வெட்டி உயிர் கொடுக்கும் நவகண்ட வீரர்களை மக்கள் சிலைவைத்து வழிபட்டனர். தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட நவகண்ட சிலைகள் உள்ளன.

தொல்காப்பியம், மணிமேகலை, கலிங்கத்துப் பரணி ஆகிய நூல்களில் இந்தப் பழக்கம் வருணிக்கப்படுகிறது. ராமாயண காலத்தில் இலங்கையில் இந்த வழக்கம் இருந்ததை ராவணன் புதல்வர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகீயோர் பயங்கரமான நிகும்பிளா குகையில் நடத்திய சடங்குகள் காட்டுகின்றன.

இதுதவிர பலவிதமான உயிர்த் தியாகங்கள் இலக்கியத்திலும் வரலாற்றிலும் காணக் கிடக்கின்றன. முஸ்லீம் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படை எடுப்பு காலத்தில் அவர்களை அச்சுறுத்தவும் மக்களை வீறு கொண்டு எழச்செய்யவும் கோபுரத்திலிருந்து குதித்து உயிர் நீத்தனர். அலாவுதீன் கில்ஜியின் கையில் சிக்கி காமவெறிக்கு ஆளாக விரும்பாத ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி நூற்றுக் கணக்கான அழகிகளுடன் தீப்பாய்ந்தாள்.

 

குருகோவிந்த சிம்மன்

முஸ்லீம் படை எடுப்பாளர்களின் கொடுமையிலிருந்து சீக்கியர்களைக் காப்பாற்ற குருகோவிந்த சிம்மன் ஒரு தந்திரம் செய்தார். காளி தேவி உயிர்ப் பலி கேட்கிறாள் எனக்கு ஐந்து வீரர்கள் தேவை என்று அறிவித்தார். கூட்டத்தில் இருந்து ஒவ்வொரு வீரராக முன்வந்தனர். ஒவ்வொரு வரையும் ‘பலி கொடுத்த’ ரத்தம் சிந்தும் கத்தியைக் காட்டிய பின்னரும் மேலும் மேலும் வீரர்கள் உயிர்ப் பலி தர முனவந்தனர். ஆனால் அவர் வெட்டியது மனிதனை அல்ல. மிருகங்களை வெட்டி அதன் ரத்தத்தையே காட்டினார். உயிர்ப் பலி தர முன்வந்த ஐவரையும் சீக்கிய குருமார்களாக ஆக்கினார். பாரதியார் குருகோவிந்தர் என்ற தலைப்பில் பாடிய அருமையான கவிதை இந்த ‘உயிர்ப் பலி காட்சியை’ வருணிக்கிறது.

 

என்னுடைய பிற கட்டுரைகள்: Read my other posts on Indus and Egypt:

1.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty

2.Ghosts in Indus Seals and Indian Literature

3.Flags: Indus Valley- Egypt Similarity

4.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu

5.Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

6.Indra on Elephant Vahana in Indus Valley

7.Vishnu Seal in Indus Valley Civilization

8.Indus Script Deciphered

9.Tamil articles: சிந்து சமவெளியில் பேய் முத்திரை

10.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்

11.கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?

Picture: Gold Rishaba Vahana of Madurai Meenakshi Temple

இந்துக் கடவுளருக்கு வெவ்வேறு வாகனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் அமைந்தது எப்படி என்பது பற்றி சுவையான கதைகளும் இருக்கின்றன. பெரும்பாலும் இவைகள் தத்துவத்தின் பெயரில் அமைந்த கதைகள்தான். வேத காலம் முதல் இந்து மதத்தில் வாகனங்கள் உண்டு. சங்கத் தமிழ் இலக்கியத்திலும் வாகனக் குறிப்புகள் இருப்பதைத் தனிக் கட்டுரையில் கண்டோம். உலகம் முழுதும் இந்து வாகனங்கள் இருப்பதை சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, கிரேக்க, ரோமானிய நாகரீகத்தில் கண்டோம்.

 

இப்போது எந்தக் கடவுளருக்கு என்ன வாகனங்கள என்று சைவ, வைணவ ஆகமங்கள் கூறுவதைக் காண்போம்:

1.ஸ்ரீ மஹா கணபதி—மூஞ்சுறு Ganesh/Vinayaka=Mouse

2.வேல் முருகன் —மயில்  Kartikeya/Skanda/Murugan–Peacock

3.சிவ பெருமான் காளை, நந்தி Shiva=Bull/ Nandhi

4.ராஜ ராஜேஸ்வரி—சிம்மம் Raja Rajeswari= Lion

5.மஹா விஷ்ணு— கருடன் Vishnu= Garuda/Eagle

6.பைரவர்— நாய் Bhairava=Dog

7.சாஸ்தா—குதிரை Sastha= Horse

8.அய்யப்பன்— புலி Ayyappa= Tiger

9.சனைச்சரன்–காகம் Sani/Saturn= Crow

10.கல்கி—- குதிரை Kalki Avatar=Horse

 

11.இந்திரன்—ஐராவதம் யானை Indra= Airavata/ Elephant

12.லெட்சுமி—செந்தாமரை, ஆந்தை Lakshmi= Red Lotus, Owl

13.சரஸ்வதி— வெண் தாமரை, அன்னம் Sarasvati=White Lotus, Swan

14.கங்காதேவி—மகரம்/முதலை Ganga Devi= Crocodile

15.மன்மதன், ரதி—கிளி Manamatha & Rathi= Parrot

16.குபேரன்—மனிதன், கிளி, குதிரை, கீரி Kubera= Man,Parrot or Horse

17.விஷ்ணு— சேஷ (பாம்பு) வாகனம் Vishnu= 7 headed Snake/ Sesha

18.கண்ணன் —ஆல இலை Krishna=Banyan leaf

19.பிரம்மா— அன்னம் Brahma= Swan

20.கார்த்திகேயன்- காண்டாமிருகம் (வியட்நாம்) Kartikeya=Rhino (Vietnam)

 

21.சண்டி தேவி—பன்றி/வராஹம் (சுஜனாகாட்) Chandi= Pig

22.சிந்தி இன மஹான்—மீன் Sindhi saint= Fish

23.கண்டபேரண்ட பட்சி— மன்னார்குடி ராஜகோபாலசுவாமி

Ganda Beranda Bird= Mannarkudi Rajagopalswamy

24. வருணன் — மகரம் Varuna= Makara (Shark or Crcodile)

25. அக்னி— ஆடு Agni / Fire= Ram

26.துர்க்கை—கலைமான் Durga= Antelope

27. மருத்— மான் Marut= Deer

28.நேபாளத்தில் லெட்சுமி— ஆமை, வங்காளத்தில் —ஆந்தை

Lakshmi in Nepal=Turtle, In Bengal=owl

29.tதுர்க்கை—புலி அல்லது சிங்கம் Durga= Lion or Tiger

30.சாமுண்டி—ஆந்தை Chamundi- Owl

Picture: Navagrahas with Vahanas

31.கழுதை—அஸ்வினிதேவர்கள், இந்திரா, அக்னி

Asvini Devas= Donkey (also for Indra and Agni)

32.பிண வாகனம்—நிருதி Dead Body= Niruthi

33. சூரியன்—ஏழு குதிரைகள் Sun= 7 Horse Chariot

34.ராகு, சஷ்டி— பூனை Rahu/ Shasti= Cat

35.ரதி- புறா Rathi= Pigeon

கீழ்கண்ட (36 to 43) வாகனங்கள் பொதுவாக கோவில்களில் எல்லா தெய்வங்களையும் உலா விடப் பயன்படுத்துகின்றனர்

36.சூரிய பிரபை—வட தமிழ்நாட்டு தெய்வங்கள்

Surya Prabha (SUN)= Northern Districts of Tamil Nadu

37.சந்திர பிரபை– வட தமிழ்நாட்டு தெய்வங்கள்

Chandra Prabha (MOON)= Northern Districts of Tamil Nadu

38. கற்பக விருட்சம் Karpaka Vrksha= (Wish fulfilling Tree)

39. காமதேனு Kamadenu= Wish fulfilling Cow

 

40. கைலாச வாகனம் Kailash Vahana= Siva

41.பூபால வாகனம் Bhupala Vahanam= Vishnu

42.புருஷாமிருக வாகனம் Purusha Mrugam

43.பூத வாகனம் Bhuta Vahanam= Shiva

44.புன்னைமர வாகனம் Punnai Tree Vahana= krishna

45.காராம்பசு வாகனம் Karampasu Vahanam (See Kamadhenu)

46.ஆடுகள் பூட்டிய ரதம்—பூஷன் Goat Chariot=Pushan

47.ஏழு பசுக்கள் பூட்டிய ரதம்—உஷஸ் 7 Cow Chariot=Ushas

48.காளி—யாளி Kali= Yali (Yali is a mythical animal)

48.பாம்பு—மானசா தேவி Snake= Manasa Devi

49.சீதளா தேவி– கழுதை Seetala= Donkey

50.விஸ்வகர்மா—யானை  Viswakarma= Elephant

 

நவக்ரஹ வாகனங்கள் (Nine Planets)

சூரியன்- ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் Sun=Horse Chaiot

சந்திரன்- மான்கள் பூட்டிய ரதம், Antelope chariot= Moon

செவ்வாய்—ஆட்டுக் கிடா/ Mars=Ram

புதன்- குதிரை Bhudan/ Mercury= Horse

வியாழன்/பிருஹஸ்பதி—யானை Jupiter= Elephant

சுக்ரன்/வெள்ளி—குதிரை/ முதலை Venus= Horse/ Crocodile

சனி—காகம் Saturn / Saniswarea= Crow

ராகு— சிங்கம் அல்லது பூனை அல்லது புலி Rahu= Lion/ Cat/Tiger

கேது— மீன் Ketu=Fish

இரண்டாவது பட்டியலில் சப்த மாதா, அஷ்ட பைரவ வாகனங்களைக் காண்போம்.

Other Vahana Articles written and posted by me

Please read my other articles on Vahanas in my blogs:

1.Iraq: 7 Gods Procession on Vahanas,2.Deer Chariot: Rig Veda to Santa Claus, 3.Hindu Vahanas around the World,4.Vahanas in Kalidasa and Tamil Literature, 5.Who Rides What Vahanas? Tamil Articles: 6.உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்,7.சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள், 8.வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?9.எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?

Contact: swami_48@yahoo.com

****************

வாகனங்கள் தோன்றியது எங்கே? ஏன்? எப்போது?

வேத காலம் முதல் இன்று வரை தெய்வங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் ஒரே மதம் இந்துமதம் தான். சிந்து சமவெளியிலும் யானை மேல் நிற்கும் உருவத்தைக் கண்டோம். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்கிருத நுல்ல்களிலும் சிற்பங்களிலும், பழைய காசுகளிலும் வாகன உருவங்கள் காணப்படுகின்றன. காலக் கண்க்கீட்டின்படி பார்த்தால் சுமேரியாவில் கி.மு.3500 முதல் வாகனங்கள் இருக்கின்றன. ஆயினும் கலாசார தொடர்ச்சியைப் பார்க்கையில் இந்தியாதான் இதன் தாயகமாக இருந்திருக்க வேண்டும் என்று துணிய முடிகிறது.

 

வாகனங்கள் என்பது என்ன? இறவனைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் உருவங்கள். பெரும்பாலும் மிருகங்கள் அல்லது பறவைகள் இந்தப் பணியைச் செய்கின்றன. தேர்கள், சப்பரங்கள், மலை, சூரியன் ,சந்திரன், ராவணன், அனுமன் போன்றோரையும் வாகனங்களாகக் காண்கிறோம். கொடிகள் தோன்றியது இந்தியாவில தான். இதை முன் ஒரு கட்டுரையில் விளக்கிவிட்டேன். முதலில் கொடிகளில் என்ன சின்னங்களைக் கண்டோமோ அதுவே பிற்காலத்தில் வாகனமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள் முருகனின் மயில் கொடி மயில் வாகனமாக மாறியதையும், விஷ்ணுவின் கருடக் கொடி, அவரது கருட வாகனமாக மாறியதையும் சிவனின் ரிஷபக் கொடி ரிஷப வாகனமாக மாறியதையும் காணலாம்.

 

பிற்காலத்தில் வாகனங்களுக்கு தத்துவ பூர்வ விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. பிள்ளையார் போன்ற ஒரு கனமான உருவம் எலி மீது போக முடியுமா என்று கேட்கும் போது தீய சக்திகளை இறைவன் அடக்கி ஆள்வதையே இது காட்டுகிறது என்று விளக்கப்படுகிறது. இவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்த கதைகள்.

 

பல தெய்வங்களுக்கான காயத்ரி மந்திரங்களில் எதை நாம் இன்று வாகனமாகக் கருதுகிறோமோ அதை கொடியாகவே மந்திரம் சொல்லுகிறது. எடுத்துக் காட்டாக சனைச்வர காயத்ரி மந்திரத்தைப் பார்ப்போம். காகத்வஜாய (காக்கைக் கொடியோன்) என்று மந்திரத்தில் வருகிறது. ஆனால் காக்கை வாகனம் என்று நாம் சொல்லுவதோடு சிற்பங்களில் அப்படியே பார்க்கிறோம்.

 

வாகனங்களின் சின்னங்கள் எப்படித் தோன்றியது என்பதற்கு சிலர் ஆரிய திராவிட வாதத்தைப் புகுத்தி அபத்தமான விளக்கங்களைக் கொடுக்கின்றனர். பிராணிகள் அல்லது காலுக்கு அடியில் உள்ள அரக்கர்கள், திராவிடர்களை வசப்படுத்தி அடிமைப்படுத்தியதைக் காட்டுகிறது என்பது அவர்களது வாதம். இது உண்மையல்ல என்பதற்கு எனது கட்டுரையில் கொடுத்துள்ள வெளிநாட்டுத் தெய்வ வாகனங்களே சான்று. அங்கும் பிராணிகளைப் பார்க்கிறோம். ஆகவே இவை பொருந்தா வாதங்கள்.

முதல் கட்டத்தில் கொடிகளீல் இருந்த சின்னங்களே வாகனங்களாக மாறின. இரண்டாம் கட்டத்தில் அவைகளுக்கு தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டன என்பதே எனது துணிபு. ஆனால் வெளிநாட்டுத் தெய்வங்களுக்கு எப்படி சிம்ம வாகனம், மான் வாகனம், புலி வாகனம் என்பன வந்தது என்பது தெரியவில்லை. ஒருவேளை விலங்குகளையும் வசப்படுத்தும் சக்தி தெய்வங்களுக்கு உண்டு என்பதை இவை காட்டக்கூடும்.

 

இராக் நாட்டில் ஏழு கடவுளர் வாகனக்களில் பவனிவரும் காட்சியை விளக்கி படங்களையும் கொடுத்திருக்கிறேன் (ஆங்கிலக் கட்டுரையில்). துருக்கியில் எழிலிகாய என்னும் இடத்தில் 12 தெய்வங்கள் அணிவகுத்துப் போகின்றனர். இந்தப் படத்தையும் பிரசுரித்துள்ளேன். இவர்கள் துவாதச ஆதித்யர்களாக இருக்கலாம். இராக், துருக்கி, சிரியா ஆகிய முஸ்லீம் நாடுகள் கி.மு 1800 முதல் வேத கால தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்களாக இருந்ததை வெளிநாட்டு அறிஞர்கள்தான் முதலில் நமக்கே சொன்னார்கள். வேத கால தெய்வங்களைக் குறிப்பிடும் கி.மு.1400 கல்வெட்டு துருக்கி-சிரியா எல்லை பகுதியில் கண்டெடுக்கப்ப்பட்டது. அந்த பகுதியில் வாகனக் குறிப்புகள் கிடைப்பதாலும் சம்ஸ்கிருத மொழியில் குதிரைப் பயிற்சி நடைபெற்றதாலும் இந்துக்காளே வாகனங்களுக்கு காரண கர்த்தாக்கள் என்றால் மிகையாகா.

 

Please read my other articles on Vahanas in my blogs:

Iraq: 7 Gods Procession on Vahanas

Deer Chariot: Rig Veda to Santa Claus

Hindu Vahanas around the World

Vahanas in Kalidasa and Tamil Literature

 

உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்

வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?

 

சங்க இலக்கியத்தில் வாகனங்கள்

 

Picture shows Garuda Vahana

தமிழ் சங்க இலக்கியம் ஈராயிரம் ஆண்டு பழமையுடையது. அதில் இந்துக் கடவுளரின் வாகனங்களைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன. இந்து மதம் எந்த அளவுக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.  தமிழ்நாட்டுக் கோவில்களில் வாகனங்கள் பவனி வரும் அளவுக்கு வேறு எந்த மாநிலக் கோவில்களிலும் இல்லை என்று சொல்லலாம். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற இதர மாநிலங்களில் மிகப் பெரிய கோவில்களில் மட்டுமே வாகன ஊர்வலம், திரு உலா நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி கோவிலில் ரிஷப வாகனம் மட்டும் ஆண்டுக்கு 18 முறை உலா வருகிறது. இத்தோடு காமதேனு, கிளி, கற்பக விருட்சம், கயிலாய மலை, யானை, குதிரை, யாளி, பூத வாகனங்களும் அற்புதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. மதுரை பெருமாள் கோவிலின் கருட வாகனங்கள், அழகர்கோவில் அழகரின் குதிரை வாகனம், ஆருத்ரா தரிசன நடராஜர் ஊர்வலம் ஆகியவற்றைக் காணக் கண் கோடி வேண்டும்.

தெய்வத் திரு உருவங்களையும் வாகனங்களையும் செய்து உலகம் முழுதுமுள்ள கோவில்களுக்கு அனுப்பும் பணியையும் தமிழ்நாடே செய்துவருகிறது.

வாகனங்கள் வேத காலத்திலேயே தோன்றிவிட்டன. மருத் என்னும் காற்றுத் தெய்வத்துக்கு மான் வாகனம், வருணனுக்கு சுறாமீன் வாகனம், இந்திரனுக்கு யானை வாகனம்.

முதலில் கொடியில் இருந்த சின்னங்களே பிற்காலத்தில் வாகனமாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இதை இலக்கியக் குறிப்புகளில் இருந்து தெளிவாகப் பெறலாம்.

 

Picture shows Hamsa Vahana

காளிதாசனின் காலத்தைக் கணக்கிட சங்க இலக்கியம் எப்படி துணை செய்கிறது என்பதை ஏற்கனவே ஐந்தாறு கட்டுரைகளில் விளக்கினேன். அவன் சங்க காலத்துக்கு முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இப்போது அவன் அளித்த வாகனக் குறிப்புகள் தமிழ் இலக்கியத்திலும் வருவது அவன் காலத்தால் முந்தியவன் என்பதை மேலும் உறுதி செய்கிறது.

புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் சிவனின் வாகனமும் கொடியும் ரிஷபம் (ஏறு) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் (மஹாதேவன்) பாடுகிறார்.

ரிஷபக் கொடி: காளிதாசனின் ரகு வம்சம்11-44;

விஷ்ணுவின் கருட வாகனம்: ரகு 10-13;10-61

இந்திரன் வாகனம் 4 மருப்புடைய யானை- திரு முருகாற்றுப்படை 155-159

நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் யமதர்ம ராஜனின் எருமை வாகனம் பாற்றிப் பாடுகிறார்- பாடல் 1- வரி 25/26

முருகப் பெருமானின் பிணிமுக (யானை) ஊர்தி: புறம் 56;முருகு 247;பரிபாடல் 5-2, 8-10, 17-49, சிலம்பு 24-8-3;

முருகப் பெருமானின் யானையை பிணிமுகம் என்று அழைப்பர்:

பிணிமுக ஊர்தி வெல்போர் இறைவன் (பரி.17-49)

பிணிமுக ஊர்தி ஒண்செய்யோன்-புறம் 56

மயில் வாகனம் : மேகதூதம் பாடல் 46 (காளிதாசன்); பாடல் 54ல் சிவ பெருமானின் விடை ஏறு (ரிஷபம்). மகாபாரதத்திலும் இதே குறிப்பு வருகிறது (8-24)

மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம் 56)

முருகன் மஞ்ஞையன் (முருகு 210)

விரைமயில் மேல் ஞாயிறு (பரி 18-26)

சேவலங்கொடியோன் (குறுந்தொகை கடவுள் வாழ்த்து)

சேவலங்கொடியன் (முருகு 210)

கலித்தொகையில் சிவபெருமானின் காளைவாகனம் வருகிறது (150-13; 26-5)

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரின் கொடி வாகனங்கள் பற்றிப் பாடிப் பரவுகிறார்.

காளிதாசனும் கொடியும் வாகனமும் சிவனுக்கு ஒன்றுதான் என்று சொல்லி வ்ருஷபத்வஜன், வ்ருஷாங்கன், வ்ருஷபாருடன் என்று ரகு வம்சம் ,குமார சம்பவம் ஆகியவற்றில் புகழ்கிறார். இதைத் தமிழ் புலவர்களும் பாடியதை மேலே கண்டோம்.

காளிதாசன் இந்திரனின் வஜ்ரக் கொடி, வாகனம் ஐராவதம் ஆகியன பற்றியும் பாடுகிறார் ( ரகு3-56; 1-36. ரகு வம்சத்தில் முருகனின் மயில் பற்றி  ‘மயூரப் ப்ருஷ்ட ஆஸ்ரயினா குஹேன’ என்று சொல்கிறார்.

திருமாலின் சேஷ வாகனம்: பெரும் பானாற்றுப்படை-372/5

பரிபாடல் 8-2: புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்

பரி 13ல் : சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ (திருமால்)

புறம் 58- பலராமனின் பனைக்கொடியைக் குறிக்கும், தொல்காப்பியமும் பனைக் கொடியைக் குறிப்பிடுகிறது.

ஆக கொடியையும் வாகனத்தையும் மாறி மாறி ஒரே கடவுளருக்கு தமிழ் ,சம்ஸ்கிருத இலக்கியங்கள் பகர்வதாலேயே கொடியிலிருந்து வாகனம் தோன்றியதாக நான் கூறினேன்.

பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் வாகனம் பற்றிய மேலும் பல சுவையான கதைகளைக் கூறுகின்றன. திரு ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் துர்க்கைக்கு மான் வாகனம் இருப்பதை ‘கலையதூர்தி’ என்ற சொல்லால் விளக்குகிறார்.

“திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வம் ஆன பலவும்”– (பதிகம் 921, இரண்டாம் திருமுறை)

தொடரும்……….

Please read my other articles on Vahanas in my blogs:

Iraq: 7 Gods Procession on Vahanas

Deer Chariot: Rig Veda to Santa Claus

Hindu Vahanas around the World

Vahanas in Kalidasa and Tamil Literature

உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்

வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?

Who Rides What Vahanas?

Contact: swami_48@yahoo.com

ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி

This article is written by my brother S Nagarajan as part of a series of articles on great rishis/seers of ancient India.More to follow: london swaminathan

ஸ்ரீ ஜோசியம்

ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி

By ச.நாகராஜன்

 

ரிஷிகளுள் நான் பிருகு : கிருஷ்ணரின் பிரகடனம்

 ரிஷிகளுள் நான் பிருகு (மஹரிஷீணாம் ப்ருகுரஹம்-கீதை பத்தாம் அத்தியாயம் சுலோகம் 25) என்று கிருஷ்ணனால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சிறந்த மஹரிஷி பிருகு ஆவார். சப்த ரிஷிகளுள் ஒருவர்.ஜோதிடக் கலையைக் கண்ட 18 ரிஷிகளுள் ஒருவர். பிரம்மா படைத்த பிரஜாபதிகளுள் ஒருவர். பிரம்மா மனதில் நினைத்தவுடன் இவர் தோன்றியதால் இவரை பிரம்மாவின் மானஸ புத்திரர் என்று புராணங்கள் புகழ்கின்றன. பாகவதத்தில் இவர் விரிவாகப் பேசப்படுகிறார்.மஹாபாரதத்திலும் வாயு புராணத்திலும் கூட இவரது கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. தக்ஷனின் மகளான க்யாதியை இவர் மணம் புரிந்தார். அவள் மூலம் தாதா விதாதா என இரு புத்திரர்கள் இவருக்கு உண்டு. சுக்ரனும் சியவனரும்கூட இவரது புத்திரர்களே!

பிருகு சம்ஹிதா உருவான கதை!

 ஜோதிடக் கலையைத் தொகுத்து முதல் முதலில் வழங்கியதால் இவர் ஜோதிடக் கலையின் பிதா என அனைவராலும் அறியப்படுகிறார்.இவர் இயற்றிய பிருகு சம்ஹிதா வேத காலத்தில் எழுதப்பட்ட சிறந்த ஜோதிடக் கலை நூலாகும்.

இந்த நூல் எழுந்த விதத்தைப் பற்றியும் கூட ஒரு சுவையான கதை உண்டு. ஒரு முறை சரஸ்வதி நதிக்கரையில் மஹா யக்ஞம் ஒன்று நடக்கும் போது ரிஷிகளின் சபை கூடியது.அதில் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரில் யாரை பிரதானமாக யக்ஞத்தில் வைப்பது என்பதை யாராலும் நிர்ணயிக்கமுடியவில்லை.அவர்கள் பிருகுவை நாடினர். பிருகுவோ இதை சோதனை செய்து அறிய விரும்பினார்.

அவர் முதலில் பிரம்மாவைப் பார்க்க பிரம்மலோகம் சென்று அவரை மதிக்காத விதத்தில் நடந்துகொண்டார். அதைப் பார்த்த பிரம்மா அவர் மீது கோபம் கொண்டார்.சரஸ்வதி தடுக்கவே பிரம்மா சாபம் ஏதும் தரவில்லை. ஆனால் பிரம்மாவின் கோபம் கண்டு பிருகு அவருக்கு கலியுகத்தில் இனி கோவிலே இருக்காது என்று சாபம் தந்து நேராக சிவனைப் பார்க்கச் கைலாசம் சென்றார்.அங்கே நந்தி அவரைத் தடுத்து விட்டார். பிருகு தன்னை சிவன் அவமதித்து விட்டார் என்று கருதி சிவனை இனி லிங்க வடிவிலேயே அனைவரும் வழிபடட்டும் என்று சாபம் தந்து விட்டு விஷ்ணு லோகம் சென்றார்.

அங்கே விஷ்ணு நித்திரையில் இருக்க, அவரை எழுந்திருக்குமாறு பிருகு வேண்டினார். ஆனால் அவர் விழிக்காமல் இருக்கவே அவர் மார்பில் தன் காலால் உதைத்தார்! விஷ்ணு எழுந்து நடந்ததைப் புரிந்து கொண்டு. “மஹரிஷி, வலுவான என் மார்பால் தங்கள் காலுக்கு ஒன்றும் ஆகவில்லையே” என பரிவுடன் விசாரித்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிருகு எந்த நிலையிலும் கோபமே வராத விஷ்ணுவே மூவரில் சிறந்தவர் என மகாயக்ஞ ரிஷிகளிடம் தெரிவித்தார். அவர் விஷ்ணுவை மார்பில் உதைத்த இடமே    ஸ்ரீ வத்ஸம் எனப் பெயர் பெற்றது! தன் பாதத்தால் விஷ்ணுவை சோதித்ததால் இவருக்கு பாத ப்ருகு என்ற பெயரும் உண்டு!

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மஹாலக்ஷ்மி விஷ்ணுவை பிருகு காலால் உதைத்து அவமானப்படுத்தியதைப் பொறுக்க முடியாமல்  “இனி ஒரு போதும் அந்தணர்களிடம் நான் வசிக்க மாட்டேன்”(அதாவது அவர்கள் ஏழ்மையிலேயே இருக்க வேண்டும்) என்று சாபம் தந்தார். ஆனால் மஹாலக்ஷ்மியிடம் பிருகு மஹரிஷி தான் ஏன் அப்படிச் செய்தேன் என்பதை விளக்கி  மூவரில் விஷ்ணுவே சிறந்தவர் என்பதைக் கண்டதாகச் சொல்லி சாப நிவிர்த்திக்கு விண்ணப்பித்தார்.

உடனே மஹாலக்ஷ்மி ‘எந்த அந்தணர்கள் விஷ்ணுவை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இந்த சாபம் பொருந்தாது’ என்று சாப நிவிர்த்தி தந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தான் பிருகு தனது புகழ் பெற்ற நூலான பிருகு  சம்ஹிதாவை இயற்றினார். இதன் மூலம் அந்தணர்கள் அனைவரும் இதைக் கற்றுத் தேர்ந்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

நாலரை கோடி கிரக சேர்க்கைகளுக்கான பலன்கள்!

 பிருகு சம்ஹிதாவில் சுமார் 50 லட்சம் ஜாதகங்களின் பலாபலன்கள் சொல்லப்படுகின்றன. இதை அவர் விநாயகரின் உதவியுடன் தொகுத்தார்.

இவற்றை உரிய முறையில் அலசி ஆராய்ந்து பார்த்தால் நாலரைக் கோடி ஜாதகர்களின் கிரக சேர்க்கைகளுக்கான பலாபலன்களை நன்கு அறிந்து சொல்ல முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே தான் இது அனைவரது எதிர்காலத்தையும் கூற வழி வகுக்கும் முதல் ஜோதிட நூல் எனக் கருதப்படுகிறது.

இந்த நூலில் அனைவரது ஜாதகங்கள், அந்த ஜாதகங்களுக்கான பலன்கள், ஜாதகர்களின்,முந்தைய பிறப்புகள், பிருகுவின் கேள்விகள், தொலைந்து போன ஜாதகங்கள் பற்றிய விஷயங்கள், பரிகாரங்கள்,பல்வேறு விதிகள், புத்திர பாக்கியம், ராஜ தர்மம் மற்றும் அரசர்கள் வெற்றி பெறுவதற்கான வழிகள்,ஸ்தீரிகளின் இயற்கை ஆகியவை பற்றிய விரிவான விளக்கங்களைக் காணலாம்.பிருகு தனது ஜோதிட சாஸ்திரத்தை தனது மகன் சுக்ரனுக்குக் கற்றுத் தர அது அவர் மூலம் எல்லோரையும் அடைந்தது.

பிருகு சம்ஹிதா சுவடிகள் 

 

பிருகு சம்ஹிதா முழு நூல் வடிவில் நமக்கு இன்று கிடைக்கவில்லை. காரணம் முகலாயப் படை எடுப்பின் போது அரக்கத்தனமாக இந்த நூல் அழிக்கப்பட்டது. அத்தோடு நாலந்தா தீக்கிரையாக்கப்பட்ட போது அதிலிருந்த பிருகு சம்ஹிதா சுவடிகளும் அழிந்து பட்டன.பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பிருகு சம்ஹிதா சுவடிகள் இன்று காணக் கிடைக்கின்றன.(ஹோஷியார்பூரில் மட்டும் பத்துக் குடும்பங்களிடம் பிருகு சம்ஹிதா சுவடிகள் உள்ளனவாம்) என்றாலும் கூட சுவடிகள் வடிவில் இல்லாது சுருக்கமான புத்தக வடிவில் பிருகு சம்ஹிதா பல்வேறு பதிப்பகங்களால் பதிக்கப்பட்டிருப்பதால் இதை அடைவது எளிது. இதை பல நூலகங்களிலும் கூடப் படிக்க முடியும்!

(பலரும் தங்களுக்கு வேண்டிய ஜாதகங்களைக் கிழித்துக் கொண்டு செல்லும் துர்பாக்கிய நிலை இருப்பதால் நூலகர்களின் விசேஷ அனுமதியுடனேயே இதை குறிப்புதவி பகுதியில் பெற்றுப் படிக்க முடியும்) பிருகு ஸ்மிருதி,பிருகு சில்ப சம்ஹிதா, பிருகு சூத்ரங்கள், பிருகு உபநிஷத், பிருகு கீதை ஆகிய நூல்களும் இவர் இயற்றிய நூல்களாகும்.

பிருகு மஹரிஷி தவம் புரிந்த இடமான பலியா 

உத்தரபிரதேசத்தில் பீஹார் எல்லையை ஒட்டி உள்ள பலியா மாவட்டத்தில் பிருகு மஹரிஷியின் ஆசிரமம் உள்ளது.இங்கு தான் அவர் தனது பெரும் தவத்தைச் செய்தார். பலியா கங்கைக் கரையில் அமைந்த அழகிய சிறு நகரம்.காசியிலிருந்து வடகிழக்கில் 120 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது, பிருகு மஹரிஷிக்கு குஜராத்தில் நர்மதை நதிக் கரையில் பரூச்சில் ஒரு கோவிலும் உள்ளது.பரூச்சின் முந்தைய கால பெயர் பிருகு கச்சபம் என்பதாகும்!

ஜோதிட ஆர்வலர்கள் பிருகு சம்ஹிதாவைக் கற்பதன் மூலம் பல கிரகசேர்க்கைகளை அறிந்து ஒரு ஜாதகரின் பலன்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்!

**********************************************