கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்! (Post No.5723)




Written by S Nagarajan

Date: 2 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 10 am


Post No. 5723





Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog





ஆங்கில இலக்கியம்


கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்!


ச.நாகராஜன்




கடற்கரைக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கடற்கரை மணல் பரப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
அதில் என் பெயரையும் தேதியையும் எழுதினேன். மகிழ்ச்சியுடன் நடந்தேன்.
சற்று தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். அடடா! பெரிய அலை ஒன்று வந்தது.




நான் எழுதிய அனைத்தையும் அடித்துக் கொண்டு போனது!
சரி, போனது போகட்டும், அது இப்படி எனது ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க முடியாதல்லவா?
நிலை நின்று இருக்கப் போகும் அடையாளக் குறிகளை நான் விட்டுச் செல்ல மாட்டேனா, என்ன?


அற்புதமான கருத்தை, மனதைத் தொடும் சொற்களால் சொல்கிறார் பெண் கவிஞர்  
ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்.




ஒரு பெண்ணின் மனதும்  
இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது.
அவர் எழுதியதை – ஆற்றிய செயல்களை – வெளி உலகம் அழிக்க முயல்கிறது.
பெண் தொடர்கிறார், செயலாற்றுகிறார், நிறைய அடையாளங்களை உலகில் நிரப்புகிறார். Every Mark-ஐயும்
அது அழித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா! Lasting Record Stands!
கவிதையைப் பார்ப்போம் வாருங்கள்!







A Name in the Sand
By Hannah Flaff Gould (1789-1865)


[Born in Lancaster, Mass., 1789. Died at Newburyport, Mass., 1865.]




ALONE I walked the ocean strand;    

                                                              
A pearly shell was in my hand:

                                                              
I stooped and wrote upon the sand    

                      
                                        
My name—the year—the day.

                                                              
As onward from the spot I passed,  
5
                                                              
One lingering look behind I cast;    

                                                              
A wave came rolling high and fast,    

                                                             
 
And washed my lines away. 

    

                                                              
And so, me thought,’twill shortly be   

                                                              
With every mark on earth from me:  
10
                           
                                   
A wave of dark oblivion’s sea

                                                              
Will sweep across the place   

                                                              
Where I have trod the sandy shore  

  
                                                            
Of time, and been, to be no more,   

                                                              
Of me—my day—the name I bore, 
15
                                                              
To leave nor track nor trace.  

    

                                                              
And yet, with Him who counts the sands   

                                                              
And holds the waters in his hands,

                           
                                   
I know a lasting record stands

                                                              
Inscribed against my name,   
20
                                                              
Of all this mortal part has wrought, 

                                                              
Of all this thinking soul has thought,  

                                                              
And from these fleeting moments caught  

                                                 
             
For glory or for shame.





ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட் (பிறப்பு 3-7-1789 மறைவு 5-9-1865) அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் லங்காஸ்டரில் பிறந்தவர்.
அவரது தந்தை அமெரிக்க புரட்சிப் போரில் போர்வீரராக இருந்தார். சிறு சிறு கவிதைகளை அவர் எழுத ஆரம்பித்தார். பல பத்திரிகைகள் அவரது கவிதைகளை பிரசுரித்தன.






எப்போதும் சிறிய விஷயமாக ஆரம்பிப்பார். அது பின்னால் பிரம்மாண்டமாகி ஒரு பெரிய கருத்தை வலியுறுத்தும். கடற்கரை மணலில் அவர் எழுதியது ஒரு அலையால் அழிந்து போனது. அவ்வளவு தான், ஒரு சின்ன விஷயம்! ஆனால் அதையே உலகியல் அரங்கிற்கு அவர் பின்னால் கொண்டு வருகிறார்.
என்ன அநியாயம், செய்யும் ஒவ்வொரு செயலையும் – ஒரு பெண்ணின் மனம் நோக, உலகம் அழிக்கிறது.




கடற்கரை மணலில் மேலாக எழுதப்பட்ட பெயரை அலை அடித்துக் கொண்டு போனாலும் கீழே இருக்கும் கிளிஞ்சல் உள்ளிட்டவை இருக்கிறது.




வெளி உலகில் அவர் செய்தவற்றை அழிக்க முயன்றாலும் அத்துடன் அழியாத பல குறியீடுகள் நிலையாக இருக்கும்.
இதற்கெல்லாம் கவலைப்படலாமா, என்ன? செய்கின்ற நல்ல காரியங்களை ஆற்றிக் கொண்டே இருப்போம்!


ஹன்னா தனது கவிதைகளை மூன்று தொகுதிகளாக ‘Poems’ என்ற எளிய தலைப்பில் வெளியிட்டார். பின்னால் தனது எழுத்துப் படைப்புகளையும் Gathered Leaves என்ற தலைப்பில் வெளியிட்டார்.
பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை இவரது படைப்புகள் பெரிதும் கவர்ந்தன. ‘எ நேம் இன் தி சேண்ட்’ என்ற இந்தக் கவிதை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்று.




நம்மை பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ள விடாமல் கால வெள்ளத்தில் அனைத்தும் அடிபட்டுப் போகும் என்பதைச் சொன்னாலும் சரி, அல்லது அந்தக் கால வெள்ளத்தில் நிலை நிறுத்தும் செயல்களைச் செய் என உத்வேகம் மூட்டினாலும் சரி, நமது Lasting Record Stands!






 TAGS- ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்., கடற்கரை மணல்


****

Edison was Sacked Twice! (Post No.5722)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 17-29 am

Post No. 5722


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

I am not a scientist! I am business man!

Thomas A Edison never forgot his role as a business man. The profit motive was an essential part of his temperament. Once he said practically to a friend referring to a newspaper article which discussed him as a scientist,
That is wrong. I am not a scientist. I am an inventor. Faraday was a scientist. He didn’t work for money, he said he hadn’t time. But I do. I measure everything I do by the size of a silver dollar. If it doesn’t come up to that standard, then I know it is no good.

Xxx

Cunning Edison



The late Thomas A Edison had a very beautiful summer residence in which he took great pride. One day he was showing his guests about, pointing out all the various labour saving devices on the premises. Turning back toward the house it was necessary to pass through a turn style which led on to the main path. The guests soon found out that it took considerable force to get through this device.
Mr Edison, one of his guests asked, how is it with all these wonderful modern things around, you still maintain such a heavy turnstile?

Said Mr Edison, his eyes lighting up with laughter,
Well, you see, everyone who pushes the turnstile around pumps eight gallons of water into the tank on my roof.


Xxx

Sacked for Killing Rats!

I got fired twice, said Edison.
The first time was when I was a telegraph operator. It was my fault, alright, but I got so interested in the dinged machine and its workings that I began to see how I could improve it. But I forgot all about the messages that were coming over the wire, and I left a lot of messages unsent and undelivered. Of course, they discharged me and I didn’t blame them, he added.

Then he laughed again, I got a job in an office, and there were a fearful lot of rats; terribly old office, you know. I got up a thing that killed them like flies— the same with cockroaches. The floor used to be covered with dead roaches and they fired me for that.


Thomas A Edison, sacked twice, business man
Xxx Subham xxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- (Post No.5721)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 14-19 am

Post No. 5721


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தக் கட்டத்தில் 25-க்கும் மேலான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடிக்க, கீழேயுள்ள குறிப்புகள் உதவும். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1




23
 4



9a





5


6

78






9.
10







11





12


1314



15.



16.17


18

19.

குறுக்கே

1. முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்

2. -இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது

4. 3. வீட்டுக்குத் தேவை; திருட்டைத் தடுக்கும்

5. -கை

5. அழுக்கு

6. 7. (8) – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது

9.யானை தின்னும்

11.புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு

12. கெட்ட– தின் எதிர்ப்பதம்

14.துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்

15. எழுப்பு

16.வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி

19.பேரனுக்குப் பாட்டி சொல்லுவது

கீழே

1. சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி

2. அம்பின் துணைவன்

4. அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்

6. கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்

7. கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்

8. கட்டிடம் கட்ட உதவும்

8. குருகுலத்தில் கிடைப்பது

9. எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்

9. a – மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்

10.வாழ்

11.சிடுமூஞ்சி

11.ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது

12.இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது

13.-பாடல் பிரியன்

14.துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்

15.மக்கள் வசிக்கும் பூமி

16. இது உடையான் படைக்கு அஞ்சான்

17. போய்,,,,, விட்டு,,,,,, கை,,,,,,,

18. கையில் அணிவது

answer:–

Answer:–

ண்ணாடி

விசாடுட் பூ


மு

ல்

சுமா 
ட்
லைச்சிம்
லை
டை
ழை





பி
முப்பு
ல்

ம்சு
புப்சு
த்


விடு

கா

தை

குறுக்கே

1.கண்ணாடி,2.விசா,4.பூட்டு ,3சாவி, 5.மாசு, 6.மலைச் 8.சி (7)கரம்,

9.தழை,11.முகப்பு, 12.நல்ல , 15.உசுப்பு, 16.தவிடு,14.சுகம்,19.கதை

கீழே

1.கவட்டை, 3.பூமாலை, 2.வில்- அம்பின் துணைவன், 9.தலை முடி,

6.மழை, 7.சிவப்பு, 8.கல்வி, 8.கல்,8.கரம் ,10.வசி, 11.முதலை,

18.காப்பு, 17.விடு,11.முசுடு, 12.நத்தை, 13.கவி, 14.சுடு, 15.உலகம்,

16.தம்பி,

குறுக்கே

1.கண்ணாடி- முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்

2.விசா-இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது

4.பூட்டு 3.சாவி- வீட்டுக்குத் தேவை;திருட்டைத் தடுக்கும்

5.கரம் -கை

5.மாசு – அழுக்கு

6.மலைச் 7.சி (8)கரம் – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது

9.தழை- யானை தின்னும்

11.முகப்பு- புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு

12.நல்ல- கெட்ட– தின் எதிர்ப்பதம்

15.உசுப்பு- எழுப்பு

16.தவிடு- வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி

14.சுகம்- துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்

19.கதை- பேரனுக்குப் பாட்டி சொல்லுவது

கீழே

1.கவட்டை- சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி

2.வில்- அம்பின் துணைவன்

4.பூமாலை- அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்

6.மழை- கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்

7.சிவப்பு- கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்

8.கல்- கட்டிடம் கட்ட உதவும்

8.கல்வி- குருகுலத்தில் கிடைப்பது

9.தலை-எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்

9.aமுடி- மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்

10.வசி- வாழ்

11.முசுடு- சிடுமூஞ்சி

11.முதலை- ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது

12.நத்தை- இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது

13.கவி-பாடல் பிரியன்

14.சுடு- துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்

15.உலகம்- மக்கள் வசிக்கும் பூமி

16.தம்பி- இது உடையான் படைக்கு அஞ்சான்

17.விடு

18.காப்பு- கையில் அணிவது

TAGS-குறுக்கெழுத்துப் போட்டி,கண்ணாடி

–subham–

‘கடலில் கரைத்த பெருங்காயம்’ – கம்பன் கவிநயம் (Post No.5720)



WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 8-24 am

Post No. 5720


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கம்பன் தனது இராமகாதையில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான். ஒருவனுக்கு எவ்வளவோ பழமொழிகள் தெரிந்திருந்தாலும் அதைக் கையாளுமிடத்தினால்தான் அதன் மகிமை புரியும். காளிதாசன் உலகப் புகழ்பெற்றதற்கு, அவன் கையாண்ட 1200 உவமைகள் மட்டும்    காரணம் அல்ல. அதை அவன் பொருத்திக் காட்டிய இடத்தால்தான் அவனை ‘உவமைக்கோர் காளிதாசன்’ என்று உலகம் புகழ்கிறது. அதுபோலக் கம்பனும் உரிய இடத்தில், அரிய வழக்குகளைக் காட்டுவதன் மூலம் இராமாயணத்துக்கு மெருகூட்டினான்.

‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ என்ற பழமொழியை நாம் அறிவோம். அதைப் பயன்படுத்துகிறான் கம்பன்.

இதோ அந்தப் பாடல்

அருங்கடல் கடந்து இவ்வூரை அள் எரி மடுத்து வெள்ளக்

கருங்கடல் கட்டி மேருக்கடந்து ஒரு மருந்து காட்டி

குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் எனக் களிப்புக் கொண்டேன்

பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமைப்பெற்றி

பொருள்

“கடத்தற்கரிய கடலைக் கடந்தேன்; இலங்கைக்கு நெருப்பு வைத்தேன்; கடலுக்கு அணை/பாலம் கட்ட உதவினேன்; மேரு மலையைக் கடந்து சென்று சஞ்சீவி மருந்தினைக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்து உனக்கு இணையான குரங்கு இந்த உலகில் இல்லை என்று இராமன் சொன்னான். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது நான் இராமனுக்குச் செய்யும் தொண்டு கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆயிற்றே!”

இது மாயா சீதைப் படலத்தில் (யுத்த காண்டம்) வரும் பாடல்; அதாவது இந்திரஜித், சீதையைப் போல் ஒரு மாய உருவத்தைச் செய்து, அதை அனுமன் முன்னிலையில் கொணர்ந்து வெட்டியபோது, அனுமன் புலம்பிய புலம்பல் இது.

‘கோட்டம்’– என்ற சொல்லுக்கு ‘வாசனை தரும் பொருள்’ என்று அர்த்தம். இங்கே  கடல் என்ற சொல்லுடன் வருகையில் அது பழமொழியை ஒட்டியே வந்தது.

இந்தப் பாடலிலும் இதற்கு முந்தைய ஓரிரு பாடல்களிலும் அனுமனின் சாகசச் செயல்கள் அனைத்தையும் கம்பன் பட்டியலிடுவது, அனுமன் துதி/தோத்திரம் போல அமைந்துளது.

அனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவதற்குக் காரணம், அவன் ஒரு பத்திரிக்கையாளன் போல – journalist ஜர்னலிஸ்ட் போல- எழுத, பேச, சொல்ல வல்லவன். சீதை எங்கு இருக்கிறாள் என்று அறிய பல்லாயிரம் குரங்குகளை எண் திசைக்கும் ஏவிய இராமன், சீதை பற்றிய செய்திக்காக காத்திருந்தபோது, அனுமன் வந்தவுடன் சொன்ன செய்தி ‘கண்டனன் சீதையை’ என்பதாகும். அத்தைப் பாட்டி கதை சொல்லுவது போலச் சொல்லாமல், பத்திரிக்கை தலைப்பு போல ‘கண்டேன் சீதையை’ என்றான். இராமன் அவனை கட்டி அணைத்தான். இது பழைய பாடல். அதை இப்போது அனுமன் நினைவு கூறுவதன் மூலம் அந்தக் காட்சியும் அதன் முக்கியத்துவமும் மீண்டும் வருகிறது;

இதோ அந்தப் பாடல்,

வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன

செஞ்சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற

அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்றயான் அரக்கன் கொல்லத்

துஞ்சினாள் என்றும் சொல்லத்தோன்றினேன் தோற்றம் ஈதால்

பொருள்

சீதையே! சிறந்த வில்லாற்றல் கொண்ட இராமபிரான் வஞ்சிக் கொடி போன்ற உன்னை எங்கும் காணாது, தன் உயிரையே மறந்து உன்னைத் தேடியபோது, அவன் மனம் மகிழ்வுறுமாறு, ‘அழகிய சொல் உடையாளைக் கண்களால் கண்டேன்’ என்ற நல்ல செய்தியைக் கொடுத்தேன். இப்போது நானே போய் அரக்கன் தாக்கியபோது சீதை செத்துவிட்டாள் என்று சொல்லப் போகிறேனே; இதற்காகவா பிறந்தேன்.

இது சீதையின் மாயத் தோற்றத்தை இராவணன் புதல்வனான இந்திரஜித் வெட்டியபோது பாடிய பாடல்.

ஆக, அனுமனுடைய சாகசப் பட்டியலுடன், இங்கே கம்பன் கவிநயத்தையும் ரசிக்க முடிகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!

TAGS– இராமகாதை, கம்பன், கவிநயம், பெருங்காயம்

–சுபம்–

ஒபிஸிடி கோட் – 1 (Post No.5719)

Written by S Nagarajan

Date: 1 DECEMBER 2018


GMT Time uploaded in London –5- 39 am


Post No. 5719

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அறிவியல் துளிகள் 403 (எட்டாம் ஆண்டு முப்பத்தொன்பதாம் கட்டுரை)

ஒபிஸிடி கோட் – 1

ச.நாகராஜன்

(குறிப்பு : இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.இங்கு வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது)

அமெரிக்காவில் யாரைப் பார்த்தாலும் இப்போது உபவாசத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நொறுக்குத் தீனிகள் கிடையாது; நினைத்தபடி சாப்பாடு கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த உணவுக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு திடீரென ஏற்படக் காரணம் என்ன?

ஒபிஸிடி கோட்! (The Obesity Code) 2016ல் வெளியாகி இன்றைய ட்ரெண்டில் முன்னணியில் நிற்கும் புத்தகம் இது. இதை எழுதியவர் டாக்டர் ஜேஸன் பங் (Jason Fung). 

உடலின் எடை கூடி, பருமனாக இருக்கும் பெண்மணிகளும் ஆண்களும் தங்களின் உடல் பருமனைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமே. வெளியில் சகஜமாகப் போக முடியாது; எதையும் நினைத்தபடி உண்ண முடியாது; அதிலும் நீரிழிவு நோய்- டயபடீஸ் 2 – இருந்தாலோ அவ்வளவு தான்; ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள்! இவர்களுக்கெல்லாம் வரபிரசாதமாக இந்த டிரெண்ட் புத்தகம் அமைந்துள்ளது. பல பழைய கால பத்தாம்பசலிக் கொள்கைகளைத் தூக்கி எறிகிறது இந்தப் புத்தகம்.

இப்போதைய கொள்கையின் படி கலோரிகளை வைத்து உடல் எடையைப் பற்றிய அளவை நாம் கண்காணிக்கிறோம். 20 வயதுடைய ஒரு இளைஞனுக்கு அன்றாட தேவை 2800 கலோரிகள். 60 வயதுடைய ஒருவருக்கு அன்றாட தேவை 2496 கலோரிகள். அன்றாடம் நாம் உண்ணும் உணவை இதன் அடிப்படையில் நாம் தேர்வு செய்கிறோம்.

100 கிராம் காரட்டில் இருப்பது 35 கலோரிகள். 100 கிராம் பீன்ஸில் 117 கலோரிகளும், 118 கிராம் வாழைப்பழத்தில் 106 கலோரிகளும், 100 கிராம் தயிரில் 156 கலோரிகளும். 100 கிராம் வெந்த அரிசி சாதத்தில் 116 கலோரிகளும் உள்ளன. இப்படி கணக்கிட்டு நமது அன்றாட உணவை நாம் சாப்பிடுகிறோம் – உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க.

உள்ளே நாம் ஏற்கும் கலோரிகளைப் போல அதை அன்றாடம் செலவழிக்கவும் வேண்டும். இல்லையேல் அது கொழுப்பாக மாறி எடையை ஏற்றும். ஆக நடைப்பயிற்சி 28 நிமிடம் மேற்கொண்டால் 110 கலோரிகளையும், ஓடினால் 10 நிமிடங்களில் அதே கலோரிகளையும் இழக்கிறோம். ஆக இந்த உடல் இயக்கம் நமது அன்றாடத் தேவை ஆகிறது. இப்படி உடல் இயக்கம் மூலமாக நாம் இழக்கும் கலோரிகளால் குறையும் எடை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்கிறார் பங். ஆகவே அவரது அறிவுரை, முக்கியமாக உங்கள் உடலின் இன்சுலின் அளவைப் பாருங்கள் என்பதே! தொடர்ந்து தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக உடலில் இன்சுலின் அளவு மிகவும் ஏறி விடும்.

ஆகவே ஹார்மோனல் இம்பாலன்ஸ் எனப்படும் ஹார்மோன்களின் சமச்சீரின்மை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். முக்கியமாக ஹார்மோன்களில் இன்சுலின் அளவை நாம் கண்காணித்து அதன் சமச்சீர்தன்மையை பராமரித்து வர வேண்டும். இதற்கான வழியாக, இடைவெளி விட்டு மேற்கொள்ளும் உபவாசத்தை – Intermittant Fastingஐ – மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறார் டாக்டர் பங்.

உணவை உட்கொள்ளும் போது நமது உடலில் உள்ள இன்சுலினின் அளவு ஏறுகிறது; நமது உடலில் உள்ள திசுக்களைச் சக்தி பெறச் செய்கிறது. நமக்குத் தேவையில்லாத அதிகப்படி சக்தியானது க்ளைகோஜனாக மாறி நமது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.

உடனடியாகத் தேவைப்படும் அதிகப்படி சக்தி தசைகளிலும், கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது.  இன்னும் கொஞ்சம் சக்தி தேவை என்ற நிலையில், க்ளைகோஜன் சக்தியைத் தருகிறது.மற்றவை கொழுப்பாக மாறுகிறது.

இந்த ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை இன்றைய நமது சூழ்நிலையின் காரணமாகவே ஏற்படுகிறது. உணவு வகைகளில் நமது விருப்பத் தேர்வுகள், பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளிலும் கேன்களிலும் அடைக்கப்படும் உணவு வகைகள், மிகுந்த அளவில் ஏற்றப்பட்ட சர்க்கரைச் சத்துக்களுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவை கட்டுப்பாடற்ற சந்தையில் கிடைக்கின்றன; அவற்றை ஆவலுடன் அவ்வப்பொழுது சாப்பிடுவதோடு நொறுக்குத் தீனியாக வேறு ஏராளமானவற்றைச் சாப்பிடுகிறோம். விளவு பருமனான உடல்; அத்துடன் டயபடீஸ்-2 போன்ற வியாதிகள்!

இத்துடன் இன்றைய வாழ்க்கை முறையிலான வேகம், பரபரப்பு, மன அழுத்தம் ஆகியவற்றோடு எந்த வித உடல் இயக்கமும் இல்லாமல் டி.வி முன்னால் உட்காரும் வாழ்க்கை முறை வேறு சேர்ந்து கொள்கிறது!

இதைப் போக்கும் வழி தான் ஒபிஸிடி கோட்! உடல் பருமனை நீற்கும் வழி முறை!

டோரொண்டோவில் இண்டென்ஸிவ் டயடரி மானேஜ்மெண்ட் ( தீவிர உணவுத்திட்ட நிர்வாகம்) என்னும் சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் டாக்டர் பங் தன்னிடம் சிகிச்சைக்காக வருவோரிடம் பல்லாண்டுகளாகச் சோதித்து ஒரு புதிய வழிமுறைக் கண்டுபிடித்துள்ளார்.

உடல் பருமனை அறிவியல் ரீதியாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை.

இதைத் தான் ஒபிஸிடி கோடில் – உடல் பருமனைக் குறைக்கும் வழி என்ற தனது புத்தகத்தில் – அவர் தந்துள்ளார்.

சுருக்கமாக அவரது வழிமுறையைப் பார்ப்போம் ..

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

க்ரோவர் ஸாண்டர்ஸ் க்ராண்ட்ஸ் (பிறப்பு 5-11-1931 மறைவு 14-2-2002 – Grover Sanders Krantz) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மானிடவியலர் (ஆந்த்ரோபாலஜிஸ்ட்). மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். பிக் ஃபுட் (Big Foot) எனப்படும் பிரம்மாண்டமான புராண கால வரலாற்று பற்றிய ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டதால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அவர் அந்த மனிதனைப் பார்க்கவில்லை என்றாலும் அதைப் பார்த்ததாகக் கூறிய பலரை நேரில் சந்தித்து விவரங்களைச் சேகரித்தார்.

வாழ்நாளின் இறுதியில் எட்டு மாதங்கள் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துன்புற்றார். தனது மரணத்திற்குப் பின்னும் தனது உடல் பயன்பட வேண்டும் என்ற தனது ஆசையை அவர் தனது நண்பரான டேவிட் ஹண்டிடம் வெளியிட்டார். “எனது உடலைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனது நாயும் உடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

அவர் இறந்தவுடன், அவர் விருப்பப்படி  அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யப்படவில்லை. அது மானிடவியல் பிரிவுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அது பதப்படுத்தப்பட்டு  மீண்டும் 2003ஆம் ஆண்டு நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரிக்கு அனுப்பப்பட்டது. அவரது விருப்பப்படி அவரது நாய்கள் க்ளைட், இக்கி, யாஹூ ஆகிய மூன்று நாய்களும் பச்சை பெட்டியில் வைக்கப்பட்டன.

2009இல் அவரது எலும்புக்கூடு கலை நோக்குடன் அழகுற மேம்படுத்தப்பட்டது. அவரது நாயான க்ளைடின் எலும்புக்கூடும் அப்படியே செய்யப்பட்டது. இரு எலும்புக்கூடுகளும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செத்தும் கொடுத்தார் க்ரோவர் க்ராண்ட்ஸ்!

Tags- 

 ஒபிஸிடி கோட்! (The Obesity Code)

***

மருந்துச்சரக்கு குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5718)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 17-43

Post No. 5718


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSS WORD

இந்தக்குறுக்கெழுத்துப் போட்டியில் மருந்துச் சரக்குகள் உள்பட 25 சொற்கள் உள. கண்டுபிடிக்க  உதவுமாறு சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்க இயலாவிடில் விடையைக் காண்க.


1



2  










3
  4

5
  







6
7    8

  9






   

 







 





10
  


11
12







13



14
15
16
17











18

19






 

  

  20



குறுக்கே

1–இனிப்பான மருந்துச் சரக்கு

3.தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்

5. சாப்பிட உதவும்

8.செவிப் புலன்

9.365 நாட்கள்

10.வீடு

11.ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்

14.கோவிலில் வழிபடும் உருவம்

15.மூலிகை வகையறா

16.ஈர்ப்பு

19.வானத்தில் தரிசிக்கலாம்

20.களவு

கீழே

2.தராசு

3.பல் வலிக்கு உதவும்

4.சுற்றிச் சுற்றி வரலாம்

5.) 7 நாட்கள் உடையது

6.தலையில் உள்ளது; மிக முக்கியம்

7.ஓட்டை, வாயில்

10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!

11.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்

12.தூம கேதுவின் பகுதி

13.இது ஒரு குஸ்திக் கலை

17.கல்யாணத்துக்குப் பார்க்கலாம்

18.ஜாதி மலர்

19.குழந்தையின் முதல் படி

20.மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;

20. மலைக்கோவில்



தி
து  ர  ம்




லா



  ல  ம்
வா
   ய்



ட் 

மூ
து    கா

  வ
ரு

ளை

    க்

  ங்

 ம்ர்

தி

   க



கைஜா
   ம்
ஜீ
பு




தி


லை
சிச்

ர்

ல்


ப்

மு

ருன்



  டு

  ரு 

  தி



 ANSWERS

1.அதி மதுரம்

2.துலாம்

3.இலவங்கம்

3.இலவம்

4.வட்டம்

5.வாரம்

5.வாய்

6.மூளை

7.துவாரம்—

8.காது-

9.வருட

10.ஜாதிக் (8)காய்

10.ஜாகை

11.ஜீரகம்

11.ஜீயர்-

12.புகை

13.வர்ம

14.சிலை-

15.பச் (14)சிலை

16.கவர்

17.வரன்

18.முல்லை

19.கருடன்

19.கரு

20.திருப்பதி 11.ஜீயர்

20.திருடு

1.அதி மதுரம் –இனிப்பான மருந்துச் சரக்கு

2.துலாம்- தராசு

3.இலவங்கம்- பல் வலிக்கு உதவும்

3.இலவம்- தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்

5.வாரம்– 7 நாட்கள் உடையது

5.வாய்- சாப்பிட உதவும்

6.மூளை- தலையில் உள்ளது; மிக முக்கியம்

7.துவாரம்– ஓட்டை, வாயில்

8.காது- செவிப் புலன்

9.வருட- 365 நாட்கள்

10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!

10.ஜாகை- வீடு

11ஜீயர்-.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்; மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;

11.ஜீரகம்- ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்

12.புகை- தூம கேதுவின் பகுதி

13.வர்ம-இது ஒரு குஸ்திக் கலை

14.சிலை- கோவிலில் வழிபடும் உருவம்

15.பச் (14) சிலை- மூலிகை வகையறா

16.கவர்- ஈர்ப்பு

17.வரன் —கல்யாணத்துக்குப் பார்க்கலாம்

18.முல்லை- ஜாதி மலர்

19.கருடன் —  வானத்தில் தரிசிக்கலாம்

19.கரு – குழந்தையின் முதல் படி

20.திருடு- களவு

20. திருப்பதி- மலைக்கோவில்

TAGS—மருந்துச் சரக்கு, குறுக்கெழுத்து, போட்டி

–SUBHAM–

AGE IS NO CRITERION FOR GREATNESS – BHARTRUHARI (Post No.5717)


WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 13-57

Post No. 5717


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Nitisataka 34,35,36


The lion, though young, attacks the mighty elephant The energy of the noble minded man proceeds from his natural disposition, not from his youth. It is the nature of the brave to aspire for the highest even when young. Indeed, age is no criterion for greatness.

सिंहः शिशुरपि निपतति
मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां
न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥

Age is no bar for attaining name and fame. This is proved by Hindu mythological characters such as Dhruva, Prahlada, Markandeya and Vedic boys like Nachiketas , Aruni and Satyakama Jabala . Great philosophers hers like Shankara attained fame when they were  young. Tamil saint Sambandar composed poems when he was 3 years old.




Age is No Bar -Authors who wrote before they were 30

Japanese Novelist Abe Kobo started to write at the age of 24. He won a prize when he was 26

Nigerian novelist Chinua Achebe published his first novel when he was 28.

English fantasy writer Douglas Adams published when he was 27.

English essayist, poet and playwright Joseph Addison

American poet, novelist, screenwriter James Agee published his first book when he was 25.

Israeli novelist and Nobel laureate SY Agnon published his first book When he was 20.

Ghanian playwright, poet and novelist AMA ATA Aidoo published her famous play when she was 28

American poet, short story writer and b
Novelist Conrad Aiken became famous with his first collection of poems when He was 25


xxxxx

Wealth is more important than Virtues!

Two great poets emphasize the importance of wealth in their books.

I give below translation of the same couplets by two authors.

Wealth of kindliness is real wealth.
Material wealth is possessed by even the basest— Kural 241

The best of all possessions is the wealth of compassion
For the meanest of men too possess worldly wealth- Kural 241

As those without riches can have no enjoyments in this world so also are those without the grace of compassion denied the blessings of the world above— Kural 247

Even as happiness in the world depends wholly on material possessions
Happiness in the world beyond will surely depend upon compassion-Kural 247

Both Bhartruhari and Tamil poet Tiruvalluvar agree on the point that material possessions account was for happiness on this earth..

Both the poets say that even the basest of men possess wealth.

In another couplet Tiruvalluvar in his Tirukkural say

The demon of poverty, when he overtake s one, the joys of this life
As well as the next one are lost to him -1042 
Infernal poverty blasts the joys of the earth and of heaven- 1042 


Our noble birth may go to the lower regions; our virtues may perish; our moral character may fall as if from a lofty mountain; our family may be consumed by fire; a thunderbolt may strike our might as it were an enemy; let us keep our money, for without this all the collected virtues are but a heap of grass.


जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां
शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थो‌உस्तु नः केवलं
येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥

If a man be wealthy, he is of good family he is wise, he is learned in scriptures, he is virtuous, eloquent, handsome. All the virtues attach themselves to gold.

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥

The importance given to the rich people has not changed from the ancient times; we see the same state of affairs even today. Money power boosts one to higher positions and higher awards.

TAGS- age no bar, no criterion, Niti sataka 34,35, 36, wealth

–subham–

‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’ (Post No.5716)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 7-55 AM

Post No. 5716


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரி நீதி சதக தொடர்ச்சி 34,35, 36

‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?’ (Post No.5716)

ஸ்லோகம் 34

சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.

ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு

ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு

“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?”

என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை

xxx

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்  

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

 மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர்  தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது

பர்த்ருஹரி சொல்கிறார்,

நம்முடைய பரம்பரை எக்கேடு கெட்டுப் போகட்டும்; நம்முடைய குணங்கள் அதல, பாதாளத்துக்குப் போகட்டும்; நம்முடைய அடக்கம் மலை உச்சியிலிருந்து விழட்டும்; நம்முடைய பெருந்தனமை தீயில் கருகட்டும்; நம்முடைய துணிவை வஜ்ராயுதம் துண்டிக்கட்டும்; இப்படியெல்லாம் நடந்தாலும் பணமும் வசதியும் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்;  பணமும் வசதியும் இல்லாவிடில் மற்ற குணங்கள் அனைத்தும் புல்லுக்குச் சமானம்!

ஜாதிர்யாது ரஸாதலம் குணகணஸ்தத்ராப்யதோ கச்சதாம்

சீலம் சைலதடாப்தத்வபிஜனஹ ஸந்தஹ்யதாம் வஹ்னினா

சௌர்யம் வைரிணி வஜ்ரமாசு நிபதத்வர்த்தோ அஸ்து நஹ கேவலம்

யேனைகேன வினா குணாஸ்த்ருண லவப்ராயாஹா ஸமஸ்தா இமே – 35

பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.

வள்ளுவன் மொழியும் மற்றுமொரு குறளும் நோக்கற்பாலது

இன்மை என ஒருபாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும் -குறள் 1042

வறுமை என்னும் கொடிய பாவி ஒருவனைப் பற்றிக்கொண்டால் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பம் தொடர்ந்து வரும்– என்பது வள்ளுவன் வாய்ச்சொல்.

பணம் இருந்தால்தான் மற்ற நல்ல காரியங்களை செய்ய முடியும்; அது இல்லாவிடில், அதை நாடித் தேடி ஓடுவதிலேயே வாழ்நாள் கழிந்துவிடும் என்பது சொல்லாமலே விளங்கும்

பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-

யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ

ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ

ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ

ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36

பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.

இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.

சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120

பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்

பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்

ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்

செத்த பிணத்திற் கடை- பாடல் 281

அப்பர் செப்பியது,

மாடுதானதில்லெனின் மானுடர்

பாடுதான் செல்வாரில்லை- (அப்பர் தேவாரம், கொண்டீசரம்-3) என்று மாடு (செல்வம்) இல்லாதவர் படும் பாட்டைப் பாடுவார் அப்பர்

எட்டானும் பத்தானும்  இல்லாதார்க்கிவ்வுலகில் இன்பமே போல்

ஒட்டாவே கண்டீர்- என்று திருத்தக்க தேவரும் சீவக சிந்தாமணியில் விளம்புவார்.

xxx

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)

பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே

இசை: கே.வி .மஹாதேவன்

பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்

பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே

இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே (பணம்)

ஒன்றும் தெரியாத  ஆளானாலும் பணமிருந்தாலே

அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)

உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்

பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)

இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு

அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள்  கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)

நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)

xxx

सिंहः शिशुरपि निपतति
मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां
न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥

जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां
शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थो‌உस्तु नः केवलं
येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥

TAGS- பணம் பந்தியிலே, சிங்கத்தின் கால்கள், நீதி சதக 34,35, 36

–subham–

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! (post No.5715)

Written by S Nagarajan

Date: 30 November 2018

GMT Time uploaded in London –6- 05 am
Post No. 5715

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சங்கர விஜயம்

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! காஞ்சி காமகோடி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே!!

ச.நாகராஜன்

1

காஞ்சி காமகோடி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே என்பதில் ஒரு சிறிதளவும் ஐயமில்லை.

இதனை ஒரு விவாதப் பொருளாக மாற்றி விவாதிப்பதில் சிலருக்கு ஆனந்தம். ஆனால், ‘Kanci Kamakodi Mutt : A Myth or Reality’ என்ற ஆய்வுப் புத்தகத்தைப் படித்தவர்க்கு நல்ல தெளிவு பிறக்கும். விவாதத்தில் ஒரு தெளிவும் வேண்டியது தானே! அப்போது தானே ஒரு முற்றுப்புள்ளியுடன் அது அடங்கும்!

இதை எழுதியவர் டாக்டர் டபிள்யூ. ஆர். அந்தார்கர் (Dr W.R.Antarkar). இந்தப் புத்தகம் வெளியான ஆண்டு 2001. பக்கங்கள் 168. இதை எனக்கு அனுப்பியவர் எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன். அவருக்கு எனது உளம் கலந்த

நன்றிகள்!

2

நூல் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் பேருண்மை : காஞ்சி காமகோடி மடமானது ஆதி சங்கரராலேயே ஸ்தாபிக்கப்பட்டது. இது அவர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம். இதை ஸ்தாபித்தது மட்டுமன்றி அதன் முதல் பீடாதிபதியாகவும் அவரே இருந்து அருளினார்.

அத்வைத சித்தாந்தத்தை உலகிற்குச் சரியான முறையில் அருள அவர் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்; ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையிலும் அவை குறிக்கும் நான்கு மகா வாக்கியங்களைக் குறிக்கும் வகையிலும் பாரதத்தின் நான்கு திசைகளில் அவர் நான்கு மடங்களை ஸ்தாபித்தார்.

இது ஒரு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அசைக்கமுடியாத பல்வேறு நூல்களின் அடிப்படையில் அவர் காஞ்சி மடத்தையும் ஸ்தாபித்தார் என்பதை இந்த நூலாசிரியர் விரித்துரைக்கிறார்.

இந்த நூலை ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட், புனே பிரசுரித்துள்ளது. இதைப் பிரசுரித்ததற்கான காரணத்தைச் சொல்ல வருகையில், 1) இது பற்றிய முடிந்த முடிபான முடிவு என்று ஒன்று இல்லை என்பதால் புதிய ஆய்வுக்கான கள நோக்கைப் பாராட்ட வேண்டியதே 2) இதை சமர்ப்பிக்கும் அந்தார்கர் தான் எடுத்துக் கொண்டுள்ள ஆய்வுப் பொருளை சரியாக குறிக்கோளுடன் ஆய்ந்துள்ளார்; அதில் ஒரு வித பாரபட்ச நோக்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வுப் பார்வை அவருடையது மட்டுமே; இது இந்த நிறுவனத்தின் பார்வை அல்ல என்று இப்படி பண்டார்கர் ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கௌரவ செயலாளர் எம்.ஜி. தாத்பலே (M.G.Dhadphale) தெளிவு படுத்துகிறார்.

இந்த ஆய்வுப் பேப்பர் 1960ஆம் வருடம் புனே பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்று.

 

காஞ்சி காமகோடி மடம் பற்றி இரு நிலைப்பாடுகள் உண்டு.

முதலாவது : த்வாரகா, கேதார்நாத்,பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களில் மடங்களை நிறுவிய பின்னர் ஆதி சங்கரர் காஞ்சிபுரம் வந்தார். ஐந்தாவது மடமாக காஞ்சிகாமகோடி மடத்தை நிறுவி அதன் முதல் பீடாதிபதியாக அவரே அங்கம் வகித்தார். 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக அப்போதைய காஞ்சி மடத்தின் பீடாதிபதி மடத்தின் தலைமையிடத்தைத் தஞ்சாவூருக்கு மாற்றினார். பின்னர் கும்பகோணத்திற்கு மடம் மாற்றப்பட்டது.

இன்னொரு நிலைப்பாடு:  ஆதி சங்கரர் நான்கு மடங்களை மட்டுமே நிறுவினார். த்வாரகா, கேதார்நாத், பூரி, சிருங்கேரி ஆகிய இடங்களில் மட்டுமே அவர் ஆமாத்ய மடங்களை நிறுவினார்.

காஞ்சி மடம் என்று இப்போது சொல்லப்படும் மடமானது உண்மையில் கும்பகோண மடம் தான்; அது தஞ்சாவூரில் ஸ்தாபிக்கப்பட்டு பின்னர்கி.பி.1821ஆம் ஆண்டு வாக்கில் சரபோஜி மன்னரின் ஆதரவால் கும்பகோணத்திற்கு மாற்றப்பட்ட ஒன்று. இந்த மடம் உண்மையில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையே. இது தாமிர பட்டயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1839ஆம் ஆண்டு காஞ்சி கோவிலுடனான தொடர்பு மடத்திற்கு ஏற்படுத்தப்பட்டது. கோவிலின் தர்மகர்த்தா பொறுப்பை அது 1842ஆம் ஆண்டு பெற்றது.

1845ஆம் ஆண்டு ஜம்புகேஸ்வர தலத்தில் தாடங்க பிரதிஷ்டையை கும்பகோண மடம் செய்தது.

ஒரு தால பத்ரத்தின் படி (பனையோலை) மஹாதேவ சரஸ்வதி என்பவர் சிருங்கேரியிலிருந்து தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார். இவரே கும்பகோண மடத்தின் முதல் பீடாதிபதியாக இருந்திருக்கக்கூடும். அவர் சென்னைக்கருகில் சமாதியானார்; ஆனால் இதை நிரூபிக்க சான்றுகள் இல்லை.

கோவிந்த தீக்ஷிதர் என்பவர் தஞ்சாவூர் அரசரின் அமைச்சர். அவர் கும்பகோணத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். அவர் சந்யாசத்திற்குப் பின்னர் சந்த்ரசேகர சரஸ்வதி என்று நாமகரணம் செய்யப்பட்டார். அவர் மிகுந்த செல்வாக்குள்ளவர். எனவே அவர் மூலம் கும்பகோண மடம் அரசரின் பேராதரவைப் பெற்றது.

மேற்கண்ட இரு நிலைகளைத் தவிர பல்வேறு நூல்கள் காஞ்சி மடத்தின் ஆசாரியர்கள் பலகாலம் தலைமையிடத்தை விட்டு பாரதத்தின் பல்வேறு இடங்களில் சஞ்சாரம் செய்து வந்தனர் என்றும் குறிப்பிடுகின்றன.

நூற்றுக் கணக்கான நூல்கள். நூற்றுக் கணக்கான ஆதாரங்கள்!

காஞ்சி மடத்தைப் பற்றி சங்கர விஜயம் நூலில் குறிப்பிடப்படவில்லை என்பதை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் ஆனந்தானந்தகிரி அவர்கள் எழுதிய சங்கர விஜயம் நூலில் சிருங்கேரி மடமே குறிப்பிடப்படவில்லை. அப்படி எனில் சிருங்கேரி மடத்தை ஆதி சங்கரர் ஸ்தாபிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடுமா என்ன? என்கிறார் இந்த ஆய்வாளர்,நூலாசிரியர்.

பகவத்பாதாப்யுதயா என்ற நூலில் காஞ்சி காமகோடி மடம் சொல்லப்பட்டுள்ளது. நான்கு மடங்களுடன் கூட ஆதி சங்கரர் ஐந்தாவது மடமாக காஞ்சி காமகோடி மடத்தையும் ஸ்தாபித்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

இந்த நூலாசிரியர் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் பிரதமர் நரசிம்மராவ் ஆகியோரின் உதவியுடன் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு அரிய நூலைப் பெற முயற்சி எடுத்த போதும் அவரது கடித்தைக் கூடப் பெற்றதாக அந்த பல்கலைக்கழகம் பதில் அளிக்கவில்லை. அந்த நூலும் பார்க்கப்படவில்லை. இந்த நூலில் தான் சர்மா என்பவர் கூறும் (காஞ்சி மடம் ஐந்தாவது மடம் இல்லை என்பதற்கான)  ஆதாரங்கள் உள்ளன.

ஆக தனது முயற்சியால் போலி வாதங்களை பொய் பிரச்சாரங்களையும் உதறி விட்டு விட்டு உண்மையான ஆதாரங்களை மட்டும் தன் ஆய்விற்கு எடுத்து அவற்றை விரித்துரைக்கிறார் நூலாசிரியர்.

இந்த உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கூறும் முடிவு:

நான்கு மடங்களுடன் கூட ஐந்தாவது மடமாக ஆதி சங்கரர் காஞ்சி காமகோடி மடத்தை ஸ்தாபித்தது மட்டுமன்றி அவரே அதன் முதல் பீடாதிபதியாக அக்ராசனம் வகித்து அருளினார்; அவர் மறைந்ததும் காஞ்சியிலேயே!

பல ஆதாரங்களை விளக்கும் இந்த நூலை  அன்பர்கள் படித்தால் இது பற்றிய தெளிவைப் பெறலாம்!

நூலைப் படித்தவுடன் நமக்குத் தோன்றுவது இது தான் :-

காஞ்சி காமகோடி பீடத்தில் ஏறும் அருளாளர்களுக்கு சரஸ்வதி என்ற பட்டப் பெயரும் சிருங்கேரி பீடத்தில் ஏறும் அருளாளர்களுக்கு பாரதி என்ற பட்டப்பெயரும் சூட்டப்படுவது மரபு என்பதை அனைவரும் அறிவோம்!

சரஸ்வதிக்கே சர்டிபிகேட்டா! காஞ்சி மடம் ஆதி சங்கரர் ஸ்தாபித்ததே தான்!!

Tags–சரஸ்வதி, காமகோடி மடம்,  காஞ்சி, ‘Kanci Kamakodi Mutt : A Myth or Reality’

****

31 பாரதியார் பொன் மொழிகள் (Post No.5714)

 

compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 29 November 2018

GMT Time uploaded in London – 16-17

Post No. 5714
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்

அமாவாஸை- 6, பௌர்ணமி- 22; ஏகாதஸி உபவாஸ நாட்கள்- 3, 18.

சுப முகூர்த்த நாட்கள்- 12, 13, 14

டிசம்பர் மாத (கார்த்திகை/மார்கழி) காலண்டரை பாரதியார் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன.

டிசம்பர் 2018 காலண்டர்; விளம்பி கார்த்திகை-மார்கழி மாதம்

 

டிசம்பர் 1 சனிக்கிழமை

அருவி போலக் கவி பொழிய-எங்கள்

அன்னை பாதம் பணிவேனே

குருவிப்பாட்டை யான்பாடி- அந்தக்

கோதை பாதம் அணிவேனே

டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

மாணுயர் பாரத தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே

டிசம்பர் 3 திங்கட்கிழமை

அச்சப்பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளையும் கனியாய்

வாராய், நிலவே வா

டிசம்பர் 4 செவ்வாய்க்கிழமை

மந்திரம் கூறுவோம், உண்மையே தெய்வம்

கவலையற்றிருத்தலே வீடு, களியே அமிழ்தம்,

பயன்வரும் செய்கையே அறமாம்.

டிசம்பர் 5 புதன் கிழமை

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

ஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

டிசம்பர் 6 வியாழக் கிழமை

கடல் நமது தலை மேலே கவிழவில்லை

ஊர்கள் கலைந்து போகவில்லை

உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது

இஃதெல்லாம் அவளுடைய திருவருள்

டிசம்பர் 7 வெள்ளிக் கிழமை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்

சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது

 

டிசம்பர் 8 சனிக்கிழமை

புகழே, புகழே, புகழே

புகழுக்கோர் புரையுண்டாயின்

இகழே, இகழே, இகழே

டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

இன்பம் இன்பம் இன்பம்

இன்பத்திற்கோர் எல்லை காணில்

துன்பம் துன்பம் துன்பம்

டிசம்பர் 10 திங்கட்கிழமை

நாதம், நாதம், நாதம்

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்

டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமை

தாளம், தாளம், தாளம்

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்

டிசம்பர் 12 புதன் கிழமை

பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்

மண்ணே, மண்ணே, மண்ணே

டிசம்பர் 13 வியாழக் கிழமை

ஆதியாலாதியப்பா!- கண்ணா!

அறிவினைக் கடந்த விண்ண்கப் பொருளே

சோதிக்குச் சோதியப்பா!– என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

டிசம்பர் 14 வெள்ளிக் கிழமை

பெண்டீர் தமையுடையீர்!பெண்களுடன் பிறந்தீர்

பெண் பாவமன்றோ? பெரியவசை கொள்வீரோ?

கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் (திரவுபதி)

 

டிசம்பர் 15 சனிக்கிழமை

பேயரசு செய்தால்பிணம் தின்னும் சாத்திரங்கள்

டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

டிசம்பர் 17 திங்கட்கிழமை

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை

கோயிற் பூசை செய்வோர் சிலையக் கொண்டுவிற்றல் போலும்

வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்

ஆயிரங்களான நீதி யவை உண்ர்ந்த தரும

தேயம் வைத்திழந்தான், சீச்சீ சிறியர் செய்கை செய்தான்

டிசம்பர் 19 புதன் கிழமை

ஆங்கொரு கல்லை வாயிற்படி என்

றமைத்தனன் சிற்பி,மற்றொன்றை

ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்

றுயர்த்தினான், உலகினோர் தாய் நீ!

டிசம்பர் 20 வியாழக் கிழமை

யாங்கனே எவரை, எங்கனஞ்சமைத்தற்

கெண்ணமோ அங்கன்ம் சமைப்பாய்

ஈங்குனைச் சரணென்றெய்டினேன், என்னை

இருங்கலைப் புலவனாக்குதியே

டிசம்பர் 21 வெள்ளிக் கிழமை

இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்.

 

டிசம்பர் 22 சனிக்கிழமை

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்

பொருட்கெல்லாம் இயற்கையாயின்

இடையின்றிக் கலை மகளே! நினதருளில்

எனதுள்ளம் இயங்கொணாதோ?

டிசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல மங்களம்  வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே

(காயத்ரி மந்திரத்தின் மொழி பெயர்ப்பு)

டிசம்பர் 24 திங்கட்கிழமை

‘கிழவியர் தபசியர் போல்- பழங்

கிளிக்கதை படிப்பவன், பொறுமையென்றும்

பழவினை முடிவென்றும்- சொலிப்

பதுங்கி நிற்போன், மறத் தனமையிலான்

வழ வழ தருமன்’

டிசம்பர் 25 செவ்வாய்க்கிழமை

நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக1 தீமையை ஓட்டுக!

டிசம்பர் 26 புதன் கிழமை

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி

யொருசில பேய்கள் வந்தே

துன்பபடுத்துது, மந்திரஞ்செய்து

தொலைத்திட வேண்டுமையே!

டிசம்பர் 27 வியாழக் கிழமை

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

பூணும் வட நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு

 

டிசம்பர் 28 வெள்ளிக் கிழமை

தில்லித் துருக்கர் செய்த வழ்க்கமடி! பெண்கள்

திரையிட்டு முகமலர் மரைத்து வைத்தல்

வல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும்- இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்

டிசம்பர் 29 சனிக்கிழமை

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ

டிசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

அதை தொழுது படித்திடடி பாப்பா!

உயிர்களிடத்தில் அன்பு வேணும்- தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்

டிசம்பர் 31 திங்கட்கிழமை

சாமி நீ! சாமி நீ! கடவுள் நீயே!

தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்

HAPPY NEW YEAR

TAGS- பாரதியார், பொன் மொழிகள், டிசம்பர் 2018, நற்சிந்தனை, காலண்டர்

 

–SUBHAM–