நான் எடிஸன் இல்லையே- விஞ்ஞானி வாக்கு மூலம் (Post No.5733)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 10-24 AM

Post No. 5733


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பிரபல கண்டு பிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு எதிராக ஒரு பேடன் ட் (PATENT SUIT ABOUT SUB DIVIDING ELECTRIC CURRENT) வழக்கு வந்தது. அயர்லாந்தில் பிறந்து பிரிட்டனில் புகழ் பரப்பிய விஞ்ஞானி ஜான் டிண்டாலை (JOHN TYNDALL) சாட்சியாக அழைத்தனர்.

டிண்டால் சாட்சிக் கூண்டில் நின்றார்.

வாதம் தொடர்ந்தது.

ஐயா, டிண்டால் அவர்களே எடிஸனின் இந்த கண்டு பிடிப்பை நீங்களும் செய்து பார்த்தீரா?

ஆமாம். அது உண்மைதான்.

இதில் நீவீர் எந்த அளவுக்கு முன்னேறினீர்?

நானும் எடிஸனும் கண்டு பிடித்தது ஒன்றேதான். ஆனால்……,,,,, அந்த மின் சக்தியை ‘சப் டிவைட்’ செய்வதில் நான் கடைசி படியை மட்டும்- கடைசி உத்தியை மட்டும் – செய்யவில்லை.

ஐயா, இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்தீர்களே! ஏன் அந்த கடைசி   படியை (LAST STEP) நீவீர் செய்யவில்லை?

‘டக்’ கென்று பதில் சொன்னார் டிண்டால்,

“நான் எடிஸன் இல்லையே”.

இந்த வாக்குவாதம் பெரிய உண்மையைப் புலப்படுத்துகிறது. நம்மில் பலருக்கும் பல ஐடியா (IDEAS) க்கள் இருக்கின்றன. ஆனால் நாம் ஏன் புகழ் பெற முடியவில்லை? நாம் இறுதிவரை முயற்சி செய்வதில்லை. அல்லது செயலிலேயே இறங்குவதில்லை.    இன்றைய இன்டெர்நெட், ஐ பேட், மொபைல் போன், பேஸ்புக், ஈ மெயில் எல்லாம் யாரோ ஒருவர் சிந்த்தித்து, சிறிய அளவில் துவக்கினர். உலகமே இன்று அதில் மூழ்கி விட்டது. இன்னும் எத்தனை கண்டு பிடிப்புகள் வரப்போகிறதோ யார் அறிவார்?

50 அல்லது 75 ஆண்டுகளுக்கு முன்னர் யாராவது  உலகில் இவை வரப்போவதை அறிவித்தனரா? விஞ்ஞான புனைக் (Science Fiction) கதைகளில் எவ்வளவோ விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. அவை எல்லாம் கற்பனையே (Fiction) அன்றி கண்டுபிடிப்புகள் ஆகா. எவன் ஒருவன் செயல்முறையில் கொண்டுவருகிறானோ அவனே கண்டுபிடிப்பாளன் (Inventor).

நமக்கும் எவ்வளவோ கவிதை ஐடியாக்கள், கதை ஐடியாக்கள் பிறக்கின்றன.ஆனால் நாம் ஏன் பாரதியார் ஆக முடியவில்லை? நாம் ஏன் கல்கி ஆக முடியவில்லை?

முதலில் எழுத உட்கார வேண்டும். பின்னர்தான் எப்படித் துவங்குவது? எப்படிமுடிப்பது என்ற திணறல் வரும்? முதலில் எல்லோரும் ஏசுவர்; முயன்றால், பின்னர்  எல்லோரும் நம் புகழ் பேசுவர்.

முயற்சி திருவினை ஆக்கும்!

xxxx

கிராம போன் கண்டுபிடித்த கதை!

எடிஸன் கிராமபோன் கண்டுபிடித்த கதையை அவர் சொற்களிலேயே வடித்துத் தருகிறார்:

“நான் டெலிபோன் ஆராய்ச்சித் துறையில் வேலை செய்து வந்தேன். அப்போது கார்பன் பட்டன் ட் ரான்ஸ்மிட்டரை (Carbon Button Transmitter) உருவாக்குவதில் இறங்கியிருந்தேன். எனக்கோ காது சரியாக கேட்காது. எப்படியாவது சப்தம் கேட்கும் வழிமுறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தேன். நான் கண்டுபிடித்த ஒரு கருவியில் ஒரு ஊசியை வைத்து விரலால் அழுத்தினேன். எவ்வளவு அதிர்வுகள் வருகின்றன என்று காட்டியது

திடீரென ஒரு ஐடியா தோன்றியது. இந்த அதிர்வுகளையே ஒலியாக மாற்ற முடியுமா என்று. அதற்கு இடையில் ஒரு பொருளை வைக்க வேண்டும். அதைப் படமாகவும் வரைந்தேன். உடனே என்னிடம் வேலை பார்த்த தலைமை மெக்கானிக் ஜான் க்ரூஸேயை அழைத்தேன். இதோ பார். இப்படி ஒரு எனக்குக் கருவி தேவை. இந்தக் கருவியை செய்து தர எவ்வளவு

பணம் தேவை?.

முப்பது டாலர் கொடுங்கள்.

சரி உடனே வேலையைத் துவக்குங்கள்.

போகிறபோக்கில் எடிஸனைப் பார்த்து ஜான் கேட்டார்.

அது சரி, எதற்காக இந்தக் கருவி?

நான் பேசும் பேச்சை ஒலியாகக் கேட்பதற்குத்தான்.

எடிஸன் ஜோக் அடிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு ஆஹாஹா என்று சித்துக்கொண்டே போய்விட்டார் ஜான் க்ரூஸே.               .

பின்னர் அந்தக் கருவியையும் செய்து கொண்டு வநதார். அதை ஜான் க்ரூஸே முன்னிலையிலேயே சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்தார்

‘மேரி ஹாட் ஏ லிட்டில் லாம்ப் Mary had a Little Lamb’ என்ற நர்சரி பாடலைப் பாடிவிட்டு புதிய கருவியை இயக்கினார்.

அது உடனே அவர் சொன்னதை அப்படியே சொன்னது.

ஜான் க்ரூஸே அதைப் பார்த்துவிட்டு மயக்கமே போட்டுவிட்டார்.

என்னுடைய கண்டுபிடிப்புகளிலேயே முதலிலிருந்து கச்சிதமாக அமைந்த கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. அதை வணிகரீதியில் உற்பத்தி செய்தபோது ஒரு மாற்றமும் தேவைப்படவில்லை- என்றார் எடிஸன்.

இது போனோ கிராப் (Phonograph) என்று அழக்கப்பட்டு கிராம போன் (Gramophone) என்ற உருவத்தில் உலகத்தினரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.

இப்போதோ எடிஸனுக்கும் மேலான கில்லாடிகள் பல நூதன உபகரணங்களைக்கண்டுபிடித்து நம்மை வருடந்தோறும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.

அலெக்ஸா ALEXA என்ற கருவி வீட்டில் இருந்தால் போதும்; நீங்கள் என்ன கட்டளை இடுகிறீர்களோ அதைச் செய்யும். உங்களுக்கு வேண்டிய பாடலைப் பாடச் சொல்லலாம். இன்றைக்கு மழை பெய்யுமா என்றால்

பெய்யுமா பெய்யாதா என்று சொல்லும். நேரம் கேட்டால் அதையும் செப்பும்.

‘உலகம் போகும் போக்கைப் பார்த்தால் டிங்கிரி டிங்காலே’ என்று பாடலாம், ஆடலாம்.

TAGS– போனோ கிராப், கிராம போன், டிண்டால், முயற்சி திருவினை ஆக்கும், எடிஸன்

-சுபம்–

கண்ணீர் சிந்த வைத்த கண்டுபிடிப்பு! (Post No.5732)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 4 December 2018


GMT Time uploaded in London – 6-56 AM

Post No. 5732


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ராபர்ட் புல்டன் (Robert Fulton) என்பவர் கன்டுபிடித்த நீராவிப் படகு உலக வரலாற்றையே மாற்றியது. பிரம்மாண்டமான போர்க் கப்பல்களும் பிரயாணிகள் கப்பல்களும் உலகக் கடல்களில் பவனி வர, அவரது சிறிய நீராவிப் படகுதான் உதவியது. அவர் பரம ஏழையாக இருந்தவர். அவரது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அவரைச் சந்தித்தவர் எழுதுகிறார்.

நியூ யார்க் நகரிலிருந்து ஆல்பனி பகுதிக்கு ஏதோ ஒரு விநோதமான வாகனம் வந்து இருப்பதாக நகர் எங்கும் பரபரப்பு. அனைவரும் வேடிக்கை பார்க்க அணிதிரண்டு கடற்கரைக்கு வந்தனர். அதை ஓட்டி வந்த ஆள், அதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தார். நானும் அவரது பெயரைக் கேட்டுக் கொண்டு அவரை சந்திக்க விரைந்தேன். அதோ அந்த படகு கேபின் (Cabin Room)  அறையில் இருக்கிறாரே அவர் தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பெயர் புல்டன் என்றனர்.

நான் படகின் கேபின் அறைக்குச் சென்றேன். எளிமையே உருவான ஒருவர் தனிமையில் அமர்ந்துகொண்டு ஏதோ  எழுதிக்கொண்டு இருந்தார்.

ஐயா, தாங்கள்தான் திருவாளர் புல்டன் என்று நினைக்கிறேன்.

ஆமாம், நான் தான்; நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?

இல்லை, நீங்கள் இதே படகில் நியூயார்க் நகருக்குத் திரும்பிச் செல்லப் போகிறீர்களா………?

அப்படித்தான் திட்டம்.

நானும்  உங்கள் கூட பயணம் செய்து நியூயார்க் செல்ல விரும்புகிறேன்.

அதற்கென்ன? வாருன்களேன்.

எவ்வளவு கட்டணம்?

ஆறு டாலர் கொடுங்கள், ஐயா.

உடனே நான் அவருடைய கைகளில் ஆறு டாலர்களை எண்ணிப் போட்டேன்.

அப்படியே பேச்சு மூச்சு நின்று போய் திகைத்து நின்று விட்டார்.முகத்தில் ஒரே திகைப்பு.

ஐயா, ஏதேனும் தப்பாகக் கொடுத்து விட்டேனா? எண்ணிப் பாருங்களேன். கூட வேண்டுமானால்…..

புல்டனின் கண்களில் மள மளவென்று கண்ணீர்த் துளிகள் பெருகின .புல்டன் சொன்னார்:

ஐயா உங்கள் மீது ஏதும் பிசகு இல்லை. அந்த நாள் ஞாபகம் வந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு நீராவி சக்தியை கடல் பயணத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று கண்டு பிடித்தேன். இன்று எனக்குக் கிடைத்த இந்த சிறிய காணிக்கை என் மனதை நெகிழ வைத்துவிட்டது. நான் பட்ட பாட்டுக்குக் கை மேல் கிடைத்த பலன் இது. இந்த தருணத்தை ஒரு ஒயின் ( a bottle of wine) பாட்டிலுடன் கொண்டாடி மகிழ ஆசை. ஆனால் என் செய்வது? இப்போது நான் பரம ஏழை!”

பிற்காலத்தில் அமெரிக்கா முதலிய நாடுகள் அந்த அமெரிக்க எஞ்சினீயர் ராபர்ட் புல்டனைப் பாராட்டி, அஞ்சல்தலைகளும் நாணயங்களும் வெளியிட்டன.

பெரிய நதிகள் மலைகளில் விழும் சிறிய நீர்த்துளிகளால் உண்டகின்றன. பெரிய கண்டுபிடிப்புகள் அறிஞர்களின் சிறிய சிந்தனைத் துளிகளால் மிளிர்கின்றன.

வாழ்க புல்டன்; வளர்க அறிவியல் கண்டுபிடிப்புகள்!

TAGS– 
அறிவியல் கண்டுபிடிப்புகள், 
ராபர்ட் புல்டன்

–சுபம்–

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்!(Post No.5731)

Written by SNagarajan

Date: 4 DECEMBER 2018


GMT Time uploaded in London –5- 44 am


Post No. 5731

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய முதல் 36,500 பாடல்கள்!

ச.நாகராஜன்

தமிழனாய்ப் பிறக்க மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் அடங்கியுள்ள நூல்கள் ஏராளம்.

அறம், பொருள், இன்பம், முக்தி ஆகிய நால்வகைப் பேறுகளையும் தரவல்ல நூல்கள் தமிழில் உள்ளன.

இவற்றில் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய 36492 (மிகைப் பாடல்கள் எட்டையும் சேர்த்தால் -முப்பத்தாறாயிரத்து ஐநூறு) பாடல்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மேலோங்கி வரும் இந்த நாளில் இவற்றை http://www.projectmadurai.org போன்ற இணைய தளங்களில் படிக்கலாம்; இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் மட்டுமே படிப்பது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு வருடத்தில் 36500 பாடல்களைப் படித்து முடித்து விடலாம்.

இதன் அளப்பரிய பயனைப் படிப்பவர்களே அறிந்து கொள்ளலாம்.

இந்த தொடர் வரிசையில் அடுத்து இன்னொருமுப்பதினாயிரம் பாடல்களையும் கூடப் படிக்கலாம். அவ்வளவு பெரியது தமிழ்ச் செல்வம்!

பாடல் பட்டியலைக் கீழே பார்ப்போம்.

திருக்குறள்   திருவள்ளுவர் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள் 1330

ஆத்திசூடி     ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 109 பாடல்களும்  – ஆக மொத்தம் 110

கொன்றைவேந்தன் ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 91 பாடல்களும் – ஆக மொத்தம் 92

மூதுரை ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 30 பாடல்களும் – ஆக மொத்தம் 32

நல்வழி ஔவையார் அருளியுள்ள இந்த நூலில் உள்ள பாடல்கள்  கடவுள் வாழ்த்தும் 40 பாடல்களும் – ஆக மொத்தம் 41

பன்னிருதிருமுறைகள்

இந்த நூல் தொகுப்பில் 12 திருமுறைகள் உள்ளன.

முதல், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளை அருளியவர் திருஞானசம்பந்தர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 4147.

நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளை அருளியவர் திருநாவுக்கரசர். இவற்றில் உள்ள மொத்தப் பாடல்கள் 3067.

ஏழாம் திருமுறையை அருளியவர் சுந்தரர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 1026.

எட்டாம் திருமுறையில் திருவாசகம், திருக்கோவையார் இடம் பெற்றுள்ளன; இவற்றை அருளியவர் மாணிக்கவாசகர்.  இந்த எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 1056.

ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கரூவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் அருளியுள்ளனர். இந்த ஒன்பதாம் திருமுறையில் அடங்கியுள்ள மொத்தப் பாடல்கள் 301.

பத்தாம் திருமுறை திருமந்திரம் ஆகும்.திருமந்திரத்தை அருளியவர் திருமூலர். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 3047.

 பதினொன்றாம் திருமுறை பிரபந்தம் ஆகும். இதில் 41 பிரபந்தங்கள் உள்ளன. இவற்றை திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,  சேரமான் பெருமாள்,நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பி ஆண்டார் நம்பி ஆகிய பன்னிருவர் அருளியுள்ளனர். இந்த பதினொன்றாம் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள்  1419.

பன்னிரெண்டாம் திருமுறை பெரிய புராணம் ஆகும். இதை இயற்றி அருளியவர் சேக்கிழார். இந்தத் திருமுறையில் உள்ள மொத்தப் பாடல்கள் 4286.

இந்தப் பன்னிரு திருமுறைகளையும் வானத்தில் ஜொலிக்கும் 27 நட்சத்திரங்கள் போல 27 அருளாளர்கள் அருளியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

பன்னிரு திருமுறைகளிலும் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 18349.

நாலாயிர திவ்ய பிரபந்தம்.

பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளப் பெற்றது நாலாயிர திவ்ய பிரபந்தம். பெயரே சுட்டிக் காட்டுவது போல இதில் உள்ள பாடல்கள் 4000.

நாலடியார்     400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.

அக நானூறு  400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.

புற நானூறு   400 பாடல்கள் – பல புலவர்கள் பாடியதாகும்.

திருப்புகழ்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் 1338 பாடல்கள் உள்ளன.

கம்ப ராமாயணம்

கம்ப ராமாயணத்தில் 10000 பாடல்கள் உள்ளன.

ஆக மேலே கூறிய நூல்களில் உள்ள பாக்களின் மொத்த எண்ணிக்கை 36492 ஆகும்.

மிகைப் பாடல்கள் என ஒரு எட்டையும் சேர்த்தால் மொத்தம் வருவது 36500 பாடல்களாகும்.

ஒரு நாளைக்கு 100 எனப் படிக்க ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் முடித்து விடலாம்.

வீட்டில் ஒரு புனித இடத்தைத் தேர்ந்தெடுத்து – Sacred Corner – பூஜை அறையில் இவற்றைச் சேர்த்து வைக்கலாம். (புத்தகங்கள், சி.டிக்கள், கணினி, அச்சுப் பதித்த தாள்கள் – எந்த வடிவமாக இருந்தால் என்ன)

பூஜை அறை வசதியாக இல்லாதவர்கள் இந்த நூல்களுக்கானதனி ஒரு அலமாரியைக் கொண்டு அதை சுலபமாக அணுகும் இடத்தில் வைக்கலாம்.

அன்றாடம் மனதைக் கவரும் – மனதை நெகிழ வைக்கும் சொற்றொடரைக் குறித்துக் கொள்ள பேப்பர்,பேனாவையும் கொண்டிருத்தல் நல்லது.

இதற்கான  உரைகளும் இணைய தளத்தில் உள்ளன.

ஆகவே பொருள் புரியவில்லை என்று சொல்ல இடமே இல்லை.

நல்லதைப் படிப்போம்; நாளும் உயர்வோம்!

tags– ஒவ்வொரு தமிழனும்,படிக்க வேண்டிய,பாடல்கள்

***

காளை- தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5730)

கட்டத்திலுள்ள 25 க்கும் மேலான தமிழ் சொற்களைக் கண்டு பிடியுங்கள்; விடை கீழே உள்ளது

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 13-59 AM

Post No. 5730


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

1              
        2 3      
               
4     5     6 7
              8
          9.    
      10.       15A    
  11.   12       13 14
            15    
          16      

குறுக்கே

1.காளை

2.அவன் எனது……..; அவனின்றி என்னாலொன்றும் செய்ய முடியாது

4.செம்பு

6.பால் தரும் பிராணி

9.மந்திரங்கள் எழுதி பூஜிக்கலாம்

10.ஆச்சர்யம்

11.கார்பன்டைஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஆக்கும் அற்புத ஜீவன்

13.குடித்தால்  ஆடலாம்

14.புதல்வி

15.வணங்கத் தக்கவர்,

16.-குப்பை

கீழே

1.வள்ளுவர் கையில் இருப்பது

2.மணப்பெண்

3.சீரான தாளப் போக்கு

5.மறை; காதோடு காதாக

6.உடகாரலாம், எழுதலாம் இதில்

7. (8)காலடிப் பதிவு; சிறிய

10.நோன்பு

12.கடவுளர் பவனி வரலாம்

13.மென்மை,இனிமை,அன்பு

15 15A- ரோ ஜாவில் உண்டு, வறண்ட நிலத்திலும் மண்டிக் கிடக்கும்


  ரு து        
  ழு     க் கை  
த்          
தா   மி ம்   சு
  ணி     ர்  
      சி   டு
      வி   ப் பு    
    ம்   ள்
          மு னி  
      ம் கூ   வு  

ANSWERS

குறுக்கே

1.எருது-காளை

2.வலக்கை- அவன் எனது……..; அவனின்றி என்னாலொன்றும் செய்ய முடியாது

4.தாமிரம்- செம்பு

6.பசு- பால் தரும் பிராணி

9.தகடு- மந்திரங்கள் எழுதி பூஜிக்கலாம்

10.வியப்பு- ஆச்சர்யம்

11.மரம்- கார்பன்டைஆக்ஸைடை ஆக்ஸிஜன் ஆக்கும் அற்புத ஜீவன்

13.கள்- குடித்தால்  ஆடலாம்

14.மகள்- புதல்வி

15.முனி- வணங்கத் தக்கவர்,

16.கூளம்-குப்பை

கீழே

1.எழுத்தாணி- வள்ளுவர் கையில் இருப்பது

2.வது-மணப்பெண்

3.லயம்- சீரான தாளப் போக்கு

5.ரகசியம்- மறை; காதோடு காதாக

6.பலகை- உடகாரலாம், எழுதலாம் இதில்

7.சு (8)வடு- காலடிப் பதிவு; சிறிய

10.விரதம்- நோன்பு

12.ரதம்- கடவுளர் பவனி வரலாம்

13.கனிவு- மென்மை,இனிமை,அன்பு

15முள் 15Aபுதர்- ரோ ஜாவில் உண்டு, வறண்ட நிலத்திலும் மண்டிக் கிடக்கும்

குறுக்கே

1.எருது,2.வலக்கை,4.தாமிரம்,6.பசு,9.தகடு,10.வியப்பு

11.மரம்,13.கள்,14.மகள்,15.முனி,16.கூளம்

கீழே

1.எழுத்தாணி,2.வது,3.லயம்,5.ரகசியம்,6.பலகை,7.சு (8)வடு

10.விரதம்,12.ரதம்,13.கனிவு,15முள் 15Aபுதர்

XXX SUBHAM  XXX

TWO INVENTIONS THAT CHANGED THE WORLD! (Post No.5729)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 13-13 AM

Post No. 5729


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Inventors anecdotes

Inventor of Steam Boat Shed Tears of Joy!


One of the most interesting incidents of a business nature isthat which concerns the first steam boat fare paid to Robert Fulton. Thenarrator of this, who was also one of the actors on the scene says,


“I chanced to be at Albany on business when Fulton arrived there in his unheard-of craft, which everybody felt so much interest in seeing. Being ready to leave and hearing that this craft was going to return to New York, I repaired on board and inquired for Mr Fulton.
I was referred to the cabin, and there found a plain, gentlemanly man, wholly alone, and engaged in writing.


Mr Fulton, I presume

Yes, sir.

Do you return to New York with this boat?
We shall try to get back, sir.
Can I have a passage down?
You can take your chance with us, sir.

I inquired the amount to be paid, and, after a moment’s hesitation a sum
I think six dollars was named, the amount in coins, I laid in his open hand, and, eye fixed upon it, he remained so long motionless, that I suppose d there might be a miscount, and said to him,


Is that right, sir?


This question roused him as a kind of reverie, and as he looked up to me the big tear was brimming in his eye, and his voice faltered as he said,


Excuse me, sir; but memory was busy as I contemplated this, the first pecuniary reward I have ever received for all my exertions in adapting steam to navigation. I should gladly commemorate the occasion over a bottle of wine with you, but I am really too poor, even for that just now.”


Xxx


‘I was not Thomas Alva Edison’


A step which seems obvious after it has been taken is frequently obscure before the way has been pointed out, no matter how close to it we may have been led by the slow and painful processes of subdividing an electric current

Subsequently a patent suit arose over the matter in which famous English physicist Tyndall, was called upon to testify.
He mentioned that he had followed the same course taken by Edison and had hesitated before the final step which now seemed so childishly clear


One of the attorneys demanded of him
When the next step was so obvious, Why did you not take it?
Because, said Tyndall,


‘I was not Thomas Alva Edison’.

Xxx

How Gramophone was invented!


Thomas A Edison told, himself, about the invention of thephonograph
I was working on the telephone, developing the carbon buttontransmitter. My hearing wasn’t too good and I couldn’t get the sounds asclearly as I wanted to, so I fixed a short needle on the diaphragm of thereceiver. When I left my finger rest lightly on this needle the pricks would showme its amplitude and that is what I wanted to find out.

One day when I was testing this way it occurred to me that ifI could indent a yielding substance with these vibrations I could reverse theprocess and reproduce the sounds. I sat down and made a sketch of a machinethat I thought would do the trick.

Then I called in John Krusei, my chief mechanic. I explainedthe mechanism and asked him what he would charge me for making it. He said hewould make it for thirty dollars and I told him to go ahead. Then he asked mewhat it was for, and I told him it was going to talk. He thought i was jokingand went away laughing.

When he finished the machine and brought it back to me I putthe tin foil on, stared her up, and recited
‘Mary had a little lamb’
When I reversed and the words began to come back, Kruseinearly fell over.

Tags- Robert Fulton, phonograph, Tyndall, Edison, steam boat


Xxx SUBHAM xxx

யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 3 December 2018


GMT Time uploaded in London – 11-38 AM

Post No. 5728


Pictures shown here are taken from various sources including google, Wikipedia,Facebook friends and newspapers. This is a non- commercial blog.

உலகை, ஏன் பிரபஞ்சத்தையே உருவாக்கிய மூலகங்கள் 118. அவைகளில் மூன்று தனிச் சிறப்புமிக்கவை. எளிதில் பிளவு பட்டு(fissile)  பிரம்மாண்டமனான சக்தியை வெளியிடும். மின் சக்தியையும் உண்டாக்கல்லாம். அணு குண்டு போட்டு உலகையும் அழிக்கலாம்.அந்த மூன்று

1.தோரியம்- இந்தியாவில் அதிகம் கிடைக்கிறது

2.ப்ளூடோனிஉயம்

3.யுரேனியம்.

இந்த மூன்றில்  ‘கில்லாடி’  யுரேனியம்தான். அதிகம் கிடைப்பது- அமெரிக்கா, ஆஸ்திரேலியா,கனடா.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது- என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.யுரேனியம் தேய்ந்து ஈயம் ஆகி விடும் ஆனால் இது இயற்காஇயில் நடக்க ’‘நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டகாலலலலம்ம்ம்ம்ம்ம்’’ ஆகும்.

தானாக அணுசக்தியை வெளியிட்டு பிரியவல்ல, மூன்று கதிரியக்க மூலகங்களில் மிகவும் அபகீர்த்தி வாய்ந்தது யுரேனியம்தான். இதைக் கொண்டு உருவாக்கிய இரண்டு அணுகுண்டுகள்தான் உலக வரலாற்றை மாற்றின. அதாவது இரண்டாவது உலக மஹா யுத்தத்தை முடிக்க ஜப்பானின் தலையில்  அமெரிக்கா போட்ட யுரேனியம் அணுகுண்டுகள்.

இதில் முதல் குண்டுக்கு வைத்த பெயர் சி’ன்னப் பையன்’ (little boy) .அதை 1945-ம் ஆண்டில் ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. ‘சின்னப்பையன்’ அடுத்த நொடியில் 50,000 கட்டிடங்களை தரை மட்டம் ஆக்கினான். 75,000 பேரைக் கொன்றான். இது நடந்தது ஆகஸ்ட் 6. அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் நாகசாகி நகர் மீது மற்றொரு குண்டு போட்டு அதை நாஸசாஹியாக மாற்றியது அமெரிக்கா. அதன் பிறகு ஜப்பான் சரண் அடைந்தது. உலகின் கதையும் மாறியது.

வரலாற்றை நிறுத்திவிட்டு விஞ்ஞானத்துக்கு வருகிறேன். இந்த யுரேனியத்தில் இருந்து கதிரியக்கம் (radiation) வரும். அது புற்று நோயை(cancer)  உண்டாக்கும். மனிதனின் மரபணுக்களைச் சிதைத்து ஊனமுள்ள குழந்தைகளை உருவாக்கும்.

கிரேக்க புராணத்தில் வானத்தின் தேவதை யுரேனஸ் (Uranus). ஒளிவீசும்இந்த உலோகத்துக்கு, இதைக் கண்டுபிடித்தவர், இதற்கும் அந்த தேவதையின் பெயரைச் சூட்டிநாமகரணம் செய்தார்.

யுரேனியத்துக்கு எவ்வளவு கெட்ட பெயர் உண்டோ அவ்வளவு நல்ல பெயரும் உண்டு. இது  பிரியும்போது ஏற்படும் வெப்ப சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கலாம். இந்தியா உள்பட உலகம் முழுதும் அணு சக்தி மின்சக்தி நிலையங்கள் இருக்கின்றன. இதனால் நிலக்கரி சுரங்கங்கள் செயலிழந்து போயின. ஒரு கிலோ யுரேனியம் உலோகம், 1500 டன் நிலக்கரி எரிக்கும் சக்தியை உருவாக்கும்.

ஆனால் இதிலும் பிரச்சனைகள் உண்டு. நிலக்கரி எரிவதை நிறுத்தினால் புறச்சூழல் மாசு குறையும் என்று சந்தோஷப்பட்டோம். யுரேனிய எரிப்பினால் வரும் கழிவுப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. ஒன்று கதிரியக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் ஆகவே அதைப் பெட்டிப்பாம்பாகக் கட்டிப்போட வேண்டும். அதாவது கதிரியக்கம் வெளியே வராதபடி  கடலுக்கு அடியில்  ஈயப் பெட்டிக்குள் புதைக்க வேண்டும். இரண்டாவது பிரச்சனை இந்த அணு மின்சக்தி ஆலைகளில் பயன்படுதப்பட்ட யுரேனியக் கழிவைக் கொண்டு அணுகுண்டு செய்யலாம். இந்தியா வெடித்த அணுகுண்டுகளும் இப்படி செய்யப்பட்டவைதான். பல நாடுகள் யுரேனியத்தைக் கடத்தி அணுகுண்டுகளைச் செய்கின்றன. என்ன செய்வது?

கத்தியைக் கண்டு பிடித்தோம். சமையல் அறையில் காய்கறி வெட்டவும்பயன்படுத்துகிறோம். எங்கள் லண்டனில் வாரத்துக்கு ஒருவர் வீதம் கத்திக் குத்தில் சாகவும்பயன்படுகிறது. எதுவானாலும் இறுதி முடிவு மனிதன் கையில்தான்.

யுரேனியத்தின் அணு எண் 92

கொதி நிலை 1132 DEGREE C

உருகு நிலை  3754 DEGREE C

அரக்கனாகவும் தேவனாகவும் செயல்படும் இந்த யுரேனியம் காட்சிக்கு இனியன். பார்த்தால் அப்பாவி! வெள்ளி நிற உலோகம், தங்கம் போல தட்டிக் கொட்டலாம்.

யுரேனியம் மூன்று வகையில் அவதாரம் எடுக்கும்; இதை வேதி இயல் விஞ்ஞானிகள் ஐஸ்டோப்புகள் (Isotopes) என்பர்;

யுரேனியம்- 234

யுரேனியம்- 235

யுரேனியம்- 238

யுரேனியம்- 235 இரண்டாகப் பிரியும் காலத்தில், ஏராளமான வகை மூலகங்களாக அது மாறிக்கொண்டே வந்து இறுதியில் ஈயமாக மாறி நின்று விடும். பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையில் கிரிப்டான் முதல் யூரோபியம் வரையுள்ள மூலகங்களாக வாய்ப்பு உண்டு.

அணு மின்சார நிலையங்களில் (Nuclear Reactors)  யுரேனியம்- 235 பயன்படுகிறது. இது வெளியிடும் மூலகஐஸ்டோப்புகளில், மிகவும் ஆபத்தானவை ஸ்ட் ரா ன்ஷியம்-90, அயோடின் -131 ஐஸ்டோப்புகள்ஆகும். ஏனெனில் மனித உடல் இவைகளை எளிதில் கிரஹிக்கும். அவற்றின் கதிரியக்கம் புற்றுநோய் முதலான நோய்களை உண்டாக்கும்.

பிரிட்டனில் செல்லாபீல்ட், ரஷ்யாவில் (உக்ரைன்) செர்னோபிள் ஆகிய இடங்களில் அணு உலை விபத்து நடந்தபோது பெரும் பிரச்சனை ஏற்பட்டது அயோடின்-131 ஐசடோப்பால்தான்.

யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் பெர்லின் (ஜெர்மனி) நகரைச் சேர்ந்த கிளாப்ராத் என்பவர். 1789ம் ஆண்டில் இது நடந்தது. அவர்தான் ‘யுரான்’ என்று நாமகரணம் செய்தார். ஆனால் இதன் மஹிமை/தீமை தெரியாமல் இதை கண்ணாடிகளுக்கு கலர் ஊட்டப் பயன்படுத்தினர்.

1896ல் தான் இதன் கதிரியக்க குணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாரிஸ் நகரில் ஹென்றி பெக்கரல் என்பவர் டேபிள் டிராயரில் வைத்திருந்த போட்டோ பிலிமில் ஒளிக்கசிவு ஏற்பட்ட தடயம் கிடைத்தது. எப்படி இருட்டறையில் இது நடக்க முடியும் என்று  பெக்கரல் வியந்தார். பின்னர்தான் தெரிந்தது அதே இடத்தில் வைத்திருந்த யுரேனிய உப்புதான் இந்த விஷமத்தைச் செய்தது என்று. பின்னர் இதன் விஷமத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு செய்யும் புது வரலாறு உருவானது.

யுரேனியம் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்

மனித உடலில் 0.1 மில்லிகிராம் யுரேனியம் உள்ளது

சில வகைத் தாவரங்கள் நிறைய அளவு யுரேனியத்தைச் சேகரித்து வைக்கின்றன.என்னகாரணம் என்று தெரியவில்லை. ஆனல் அதிசயத்திலும் அதிசயம் அவை அதனால் பாதிக்கப் படுவதில்லை.

பாசியைவிட சற்று உயர்ந்த நிலையில் வைக்கப்படும் லைகன்ஸ் இவ்வாறு சேகரித்து வைக்கின்றன. ட் ர பீலியா இன்வல்யூடா (trapelia involuta) என்ற லைகன்(lichens) இப்படிச் செய்கிறது.

சிட் ரோ பாக்டர் என்ற பக்டீரியாவும் இப்படிச் செய்கிறது.

ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தினர் 2000 ஆண்டுப் பழமையான  ரோமானிய கண்ணாடிகளை ஆராய்ந்ததில்  அவர்களும் அந்தக் காலத்தில் கண்ணாடிக்கு நிறம் ஏற்ற யுரேனியம் ஆக்ஸைடைப் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களைப் பொறுத்தமட்டில் அது கலர் ஊட்டும் ஒரு உப்பு. யுரேனியம் என்று தெரியாது.

இப்படி பல சுவையான செய்தி உடைய யுரேனியத்தின் விலை மிகவும் அதிகம்.அணுகுண்டு செய்யலாமே!!!

Tags- 
யுரேனியம், கதிரியக்கம்,
அணுகுண்டு

–சுபம்–

லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!! (Post No.5727)

Written by SNagarajan

Date: 3 DECEMBER 2018


GMT Time uploaded in London –9- 51 am


Post No. 5727

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஹிந்தி பக்தி இலக்கியம்

லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!

ச.நாகராஜன்

பாரதம் கண்ட பெரும் பக்தர்களுள் ஒருவர் கபீர்தாஸ்!

கபீர்தாஸரின் தோஹாக்கள் மிக அற்புதமானவை! பெருங் கருத்துக்களைக் குறள் போல இரு வரிகளில் அவர் அடக்கிச் சொல்லும் விதம் அற்புதம்! அத்துடன் அவரது சொல் விளையாட்டும் மிக பிரமாதமாக இருக்கும்.

அவரது சிறந்த பாடல்களில் ஒன்று இது.

லாலி மேரே லால் கி, ஜித தேகூ தித லால் |

லாலி தேகன் மை கயி, மை பீ ஹோ கயி லால் ||

Laali meri laal ki, jit dekhu tit laal

Laali dekhan mein gayi, mein bhi ho gayi laal

लाली मेरे लाल की, जित देखू तित लाल |

लाली देखन में गयी, में भी हो गयी लाल ||

எனது அன்பிற்குரிய சிவப்பைப் பார்க்கப் போனேன்!

எங்கு நோக்கினும் செக்கச் சிவப்பு!

செக்கச் சிவந்த சிவப்பைப் பார்க்கப் போனேனா?

நானும் சிவப்பாகவே மாறி விட்டேனே!

The redness (illumination)of my beloved is everywhere

When I went to see the redness I also became illuminated

MEANING

When a devoteerealizes God, he sees illumination of God all over the world. He also mergesinto God’s love in such a way that all the differences between him and Goddisappears. He realizes

இதன் பொருள் ஆழ்ந்த இறை உணர்வு கொண்ட பொருள் ஆகும்.

இறைவனைப் பார்க்கப் போகிறார் கபீர். மிக ஒளி பொருந்திய சிவப்பு வண்ணமாக செஞ்ஜோதியாக பிரகாசிக்கிறது இறைவனின் ஒளி வெள்ளம்! அது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளிர்கிறது.

ஆசையுடன் செஞ்ஜோதியைப் பார்க்கப் போன கபீர்

செக்கச் சிவந்த ஜோதியுடன் ஒன்றாகவே கலந்து விட்டார்.

அடடா! என்ன அற்புதம்!

திருஞான சம்பந்தர் தனக்கு விருப்பமில்லாமல் இறைவனின் ஆணைப்படி தனது திருமணத்தை முடித்தவுடன் இறைவனை வேண்ட ஒளி வெள்ளம் பிரகாசிக்கிறது. அதற்குள் தன்னுடன் இருந்தவர்களுடன் உள்ளே செல்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி, ஒரு தனிப் பெரும் கருணை அல்லவா!

ஜோதி வெள்ளத்தைக் கண்ட வள்ளலார் அதற்குள் செல்கிறார், நம்மையும் வா, வா என்று அழைக்கிறார்!

அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்பது தெளிந்த பின் சிவம் எனும் ஜோதியை தியானிக்க ஆரம்பித்த திருமூலர் சிவமாகவே அமர்ந்திருக்கும் கதை தான்!

நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் மாபெரும் இரகசியம் ஒன்றை விளக்குகிறார். பக்தியில் கரை கண்டவர் அல்லவா அவர்! மக்கள் உய்ய வேண்டி,பெரும் ரகசியத்தைத் தனது சூத்திரத்தில்  சொல்கிறார்.

55வது சூத்ரம் இது:

தத் ப்ராப்ய ததேவாவலோக்யதி, ததேவ ஸ்ருணோதி, ததேவ பாஷ்யதி, ததேவ சிந்தயதி

Thad prapya thadevaavalokayathi, thadeva srunothi, thadeva bhashayathi, thadeva chinthayadhi.

One who possesses this love of “devotion”, is able to only see Him everywhere, is able to only hear of Him always, is able to only talk about Him always and always thinks about iHim .

தத் சிந்தனம்

தத் வாக்யம்

தத் ஆவலோக்யம்

தத் பரம்

பரம்பொருளின் மீது பக்தி கொண்ட ஒருவன் அதைப் பற்றியே சிந்திக்கிறான் (தத் சிந்தனம்) ;அதைப் பற்றியே பேசுகிறான்  (தத் வாக்யம்) ; அதை மட்டுமே எங்கும் பார்க்கிறான்(தத் ஆவலோக்யம்)!

 கடைசியில் அதாகவே ஆகிறான்.(தத் பரம்)

கபீர்தாஸரின் பக்தி அனுபவமும் இது தான் என உணர முடிகிறது.

லாலி தேகன் மை கயி (செஞ்ஜோதியைப் பார்க்கப் போனேன்)

ஜித தேகூ தித லால் (எங்கு பார்க்கினும் செம்மை தான்)

மை பீ ஹோ கயி லால்! (அதில் கலந்து நானும் சிவப்பாகிப் போனேன்)

பக்தரின் வெற்றிகரமான பயணம் இது; இரண்டற இறைவனுடன் ஒன்றாக ஆகிய அற்புத, புனிதப் பயணம்!

கபீர் தாஸரின் தோஹா ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கும்!

TAGS– லாலி தேகன் மை கயி,  
கபீர் 

***

Uranium Wonders (Post No.5726)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 20-49

Post No. 5726


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

       
 

Uranium Wonders


In 1912, R T Gunther of Oxford University a first century CE Roman villa onCape Posilipo on the Bay of Naples, and came across a mosaic in which therewere curiously coloured glass pieces. When these were analysed it wasdiscovered that their tint was due to the presence of uranium oxide. They mighthave deliberately added this mineral to colour the glass.

In 1998, researchers from the Natural History Museum, London, discovered thatthe lichen Trapelia involuta was happily growing on spoil heaps from an abandonedUranium mine in Cornwall, UK. X Ray investigations showed that the lichen wasabsorbing and storing, uranium in the walls of its outer fruit cells, althoughfor what purpose is not known. Yet the lichen appeared to be unaffected by it.

Although uranium is radioactive, it is not particularly rare and is moreabundant than tin. While uranium itself is not particularly dangerous, some ofits decay products do pose a threat, especially radon.

When a uranium-235 atom splits in two , it can produce all kinds of otherelements , but most tend to be in the weight range s of 90-105( krypton toruthenium) and 135-145(technetium to europium). Among the former isstrontium-90 which was particularly worrying. This element is easily absorbedby human beings and dangerously radioactive.
Another radioactive element released by uranium fission is iodine-131, which isequally worrying. During the nuclear reactor break down s in Sellafield, UK andChernobyl, Russia, this dangerously radio active element was absorbed by humanbeings.


Chemical Symbol U


Atomic number 92


Melting point 1132 degree C


Boiling point 3754 degree C

Uranium is a silvery, ductile, malleable, radioactive metal. It is one of the three fissile material s, the others being plutonium and thorium.

Uranium has three radioactive isotopes


Uranium 238 with a half life of 4-5 billion years
Uranium 235 with 700 millions years
Uranium 234 is produced when uranium 235 decays .

Uranium isotopes decay until they become lead. The presence of lead and uraniumhelp us to date the rocks. Even the earths age 4-57 billion year was discoveredin this way.

Atomic bomb
The first atom bomb used in Second World War was a uranium bomb. Code namedLittle Boy it was dropped on the Japanese city Hiroshima on 6 th August byAmerica. It destroyed 50000 buildings and 75000 people. Enriched uranium 235was used to make this bomb. Another bomb was dropped on Nagasaki on 9 thAugust.


The good use of uranium is in the production of electricity in the nuclearpower plants. In theory one kilogram of uranium can produce energy equivalentto 1500 tonnes of coal. So it is a big energy source. Nuclear power red navalvessels are used by several countries. Though there is lot of good things aboutthis element the biggest worry is disposing the wastage. More over the leftover of uranium reactors can be used to make bombs.

Large deposits of uranium are found in Canada, USA, Australia and South Africa..


Uranium compounds are used in industry.



The element was named after the Greek god Uranus, god of sky. The strange thingabout this element is some micro- organisms absorb it and survive without anybad effect. Bacterium Citrobacter readily absorbs uranyl ions. In 1789 M H Klaprothdiscovered uranium compound and named it Uranium. 

TAGS- uranium, atom bomb, radio active
Subham

INDIAN POETS WORD SEARCH (Post No.5725)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 14-17

Post No. 5725


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Over 15 great poets’ names are in the Word Search Square. If you cant find them look at the answer.

Just some clues

initial letters are in Red.

The poets who composed Ramayana in Tamil, Hindi and Sanskrit

Marathi, Guajarati, Bengali poets.

Four women poets are in the square 12

 M I R A V U L L A V
E K A N A T H I S K
    I B A K     V A A
  I   M E H T A E D L
T     A S A Y V D I H
A     K A L I D A S A
R   N A R S I N G A N
  A V V A I     N L A
H   V A L M I K I A U  
  B E R O G A T G T  

answers

VYASA, VALMIKI,,KAMBAR, VALLUVAR, BHARATI, AVVAI,TULSIDAS,EKANATH, NARSING MEHTA, KABIR, TAGORE,KALIDASA GANGA DEVI,KALHANA,MIRA.

tags- Poets, word search

-subham-

எலி அடித்தேன்; வேலை போச்சு- தாமஸ் ஆல்வா எடிஸன் (Post No.5724)



WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 8-29 am

Post No. 5724

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பிரபல விஞ்ஞானியும் கண்டு பிடிப்பாளருமான தாமஸ்  ஆல்வா எடிசன் இரண்டு முறை வேலையை இழந்தார். இதை அவர் சிரித்துக் கொண்டே சுவைபட உரைப்பதைக் கேளுங்கள்:

“ஒரு தந்தி ஆபீஸில் வேலைக்குப் போனேன். நிறைய தந்திகள் வந்து கொண்டே இருந்தன.இந்தப் பாழாய்ப்போன மிஷின் இப்படி மெதுவாக வேலை செய்கிறதே; இதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தந்திகள் குவிந்தன. அவைகளைப் பார்க்கவும் இல்லை; மற்றவர்களுக்கு அனுப்பவும் இல்லை. மானேஜர் அய்யா வந்தார். இன்றுடன் உன் சீட்டு கிழிந்தது; வீட்டுக்குப்போ என்றார். நானும் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் வீட்டுக்குப் போனேன்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா? என்றார் ஆல்வா!”

இன்னொரு ஆபீஸுக்கு வேலைக்குப் போனேன். அந்தப் பாழாய்ப் போன ஆபீஸில் எங்கு பார்த்தாலும் எலிகள்; கரப்பான் பூச்சிகள். நானா சும்மா இருப்பேன்; ஒரு அருமையான கருவியைக் கண்டு பிடித்தேன். அந்தக் கருவி அவைகளைக் கொசு அடிப்பது போலக் கொன்று குவித்தன. எனக்கு இந்தப் படுகொலையில் பேராநந்தம்; அலுவலகத் தரை முழுதும் இரத்த வெள்ளம்! எலிகளும் பூச்சிகளும் கால் பட்ட இடமெல்லாம் கிடந்தன. மானேஜர் அய்யா வந்தார். ஏனய்யா, எடிஸனாரே! அலுவலகத்தை சுடுகாடாக மாற்றி விட்டீரே; இதுக்கா உமக்கு சம்பளம்? வீட்டுக்குப் போம்! என்றார்.

நாயை அடிப்பானேன், XXXXயைச் சுமப்பானேன் – என்ற பழமொழிக்கு இணங்க வீட்டுக்கு வந்தேன்.

சிரித்துக் கொண்டே மிடுக்காகச் சொன்னார் எடிஸன்.

மானேஜர் அய்யா, ஆல்வாவுக்கு அல்வா கொடுத்த கதை இது

xxxx

நான் விஞ்ஞானி அல்ல; பணமே எனக்குக் குறி

ஒரு முறை தாமஸ் ஆல்வா எடிஸனைப் பாராட்டி ஒரு கட்டுரை , ஒரு பத்திரிக்கையில், வெளியானது. அதை நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

“அந்தக் கட்டுரை முழுக்க தப்பு. நான் விஞ்ஞானி அல்ல. நான் ‘பக்கா பிஸினஸ்மேன்’; வியாபாரி; எனக்கு எல்லாம் ‘துட்டு’ பற்றியே சிந்தனை; ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு வெள்ளிப்பணம் கையில் வரும் என்று எண்ணித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பேன். பாரடேயை வேண்டுமானால் விஞ்ஞானி என்று சொல்லலாம். அவர் எனக்குப் பணம் சம்பாதிக்க நேரமே இல்லை என்பவர். எனக்கு காசேதான் கடவுள்– என்றார் ஆல்வா

xxxx

தந்திரக்கார எடிஸன்!!!

தாமஸ் ஆல்வா எடிஸன் ஒரு பங்களா வைத்திருந்தார். அது கோடை காலத்தில் தங்கும் விடுதி; எல்லோருக்கும் பெருமையாகச் சுற்றிக் காண்பிப்பார். அங்கே எல்லா நவீன வசதிகளும் , அதிசயமான கருவிகளும் இருக்கும். ஒரு முறை ஒரு பார்வையாளர் கூட்டம் வந்தது. எல்லோரையும் சுற்றிக் காண்பித்தார். தோட்டத்தின் வழியாக அடுத்த பகுதிக்குச் செல்ல வேண்டியி ருந்தது. அங்கு ஒரு கம்பியால் மறைக்கப்பட்ட தள்ளும் கேட் (வாசல்) இருந்தது. ஒவ்வொருவரும் அதைத் தள்ளினால் அது நகரும்; ஒவ்வொருவராக செல்லலாம். அதைத் தள்ள மகத்தான சக்தி தேவையாக இருந்தது.

ஒருவருக்கு வியப்பு ; ஐயா எடிசனாரே! வீடு முழுக்க அதி நவீன கருவிகளை வைத்திருக்கிறீர்; இங்கு மட்டும் நாங்கள் மூச்சுப் பிடித்துத் தள்ள வேண்டிய  கம்பி கிராதி கேட் வைத்திருக்கிறீரே என்ன காரணமோ? என்று வினவினார்.

தந்திரக்கார எடிஸன் சிரித்துக்கொண்டே செப்பினார்:

நீங்கள் ஒவ்வொருவரும் மூச்சுப் பிடித்து அதைத் தள்ளி உள்ளே போகும்போதும் எட்டு காலன் தண்ணீர் என் (தோட்டத்து) வீட்டில் பாயும் என்றார்.

நல்ல தந்திரமான கண்டுபிடிப்பு!

எடிஸனோ கொக்கோ!

TAGS-விஞ்ஞானி, எடிஸன், காசேதான் கடவுள்,  எலி அடித்தேன்

–சுபம்–