Tamil Cross word புயல் 40 Words (Post No.5703)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –12-07

Post No. 5703


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் சுமார் 40 சொற்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிக்கச் சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முயன்று பாருங்கள்; தெரியாவிட்டால் விடைகளைக் காண்க.

1 2
3 4   5
6 7
8 9
10  11 12
13 14
15 16 17
25
18 19 20 21
22 23 24

குறுக்கே

2.சாம்பார் செய்ய எது தேவை

2.திருமணப் பெண்

2.இது இல்லாவிடில் எதையும் வாங்க முடியாது

4.கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

6.வெற்றி

7.பிரமுகர் வருகை

8.வலிமை

9.பறவைகள் செய்வது

11.பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சப்தஸ்வரம்,

12.மக்கள்

14.கல்யாணம், வாசனை

16.பானை

15.செவ்வகத்தின் ஒரு பகுதி

17.எரிக்கும் கிரியை

18.ஒரு கேந்திரம்

19.இல்லம்

19.இல்லறத் தலைவி

21.எலியின் எதிரி

22.ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படுக்கையில் விழு

கீழே

  1. எது வீசினால் மரங்கள் சாயும்

3.பானை, இசைக்கருவி

4.இடதின் எதிரப்புறம்

5.மரத்தை அறுக்க உதவும் கருவி

7.நகைச் சுவை காட்சி

8.குதிரை

  1. முனிவர்கள் செய்வது
  2. சூரியன்

12.அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.வியாபாரம்

14.உள்ளம்

12.மக்கள்

15.பூமியின் பெயர்

16.ஆண் குரங்கு

17.அடக்கம்

19.குளம், ஏரியின் வாயில்

20 போய்…………, விட்டு………………..

21.சிவபெருமான் பட்டாளம்

24.செயல்

25.தாக்குதல்

25.கர்நாடக, தெலுங்கு ஆள், பிரம்மச்சாரி,

25.சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

 

 

 

ANSWERS–

புயல், துவரம் பருப்பு, துட்டு, விகடம், கடம், வது, வரம், ஜயம், விஜயம், தவம், வலது, சரிகமபதநி, சலம், மனம், சனம், மணம், பூதகணம், ரம்பம், பலம்,பற, பகலவன், கலம், கடுவன், வடு, வன்,

தொடு, மடு, மனை, மனைவி, விடி படு, வினை, பரி, விற்பனை, பூனை, வடுக,  பவன், அகலம், தமனம், தகன, அவநி

 

பு ப் ரு ம் து ட் டு
ல்   ர ம்
ம் வி ம் ம்
ம்
நி ரி ம்
 வ வி ம்
ம் ற்
டு
ன் னை வி பூ னை
ன் தொ டு டு வி

1.புயல்- எது வீசினால் மரங்கள் சாயும்

2.துவரம் பருப்பு- சாம்பார் செய்ய எது தேவை

  1. வது- திருமணப் பெண்

3.துட்டு- இது இல்லாவிடில் எதியும் வாங்க முடியாது

3.கடம்- பானை, இசைக்கருவி

4.வலது- இடதின் எதிரப்புறம்

4.வரம்- கைகேயிக்கு இதைக் கொடுத்தத்தால் தசரதன் கஷ்டப்பட்டார்,

5.ரம்பம்- மரத்தை அறுக்க உதவும் கருவி

6.ஜயம்- வெற்றி

7.விஜயம்- பிரமுகர் வருகை

7.விகடம்- நகைச் சுவை காட்சி

8.பரி- குதிரை

9.பலம்- வலிமை

9.பற- பறவைகள் செய்வது

10.தவம்- முனிவர்கள் செய்வது

11.பகலவன்  — சூரியன்

11.பதநி- பனை மரத்தில் கிடைக்கும் பானம்

12.சரிகமபதநி- சப்தஸ்வரம்,

12.சனம்- மக்கள்

12.சலம்- அசைவு, முள்ளம்பன்றி, நீர், பொய்

13.விற்பனை- வியாபாரம்

14.மனம்- உள்ளம்

14.மணம்- கல்யாணம், வாசனை

15.அகலம்- செவ்வகத்தின் ஒரு பகுதி

15.அவநி  – பூமியின் பெயர்

16.கலம்- பானை

16.கடுவன் — ஆண் குரங்கு

17.தமனம்- அடக்கம்

17.தகன-எரிக்கும் கிரியை

18.பவன்  — ஒரு கேந்திரம்

18.வன்  —  தாக்குதல்

19.மடு- குளம்,ஏரியின் வாயில்

19.மனை– இல்லம்

19.மனைவி- இல்லறத் தலைவி

20.விடு

20.விடு

21.பூனை- எலியின் எதிரி

21.பூதகணம்- சிவபெருமான் பட்டாளம்

22.தொடு- ஐந்து உணர்ச்சிகளிலொன்று,

23.படு- படுக்கையில் விழு

24.வினை- செயல்

25.வடு- சிறுவன், பிரம்மச்சாரி, குற்றம், இளங்காய்

25.வடுக- கர்நாடக,தெலுங்கு ஆள் ,பிரம்மச்சாரி, கடி- பல்லால் செய்யும் செயல்

TAGS–புயல் 40 Words , Tamil Cross word

–subham–

நாலாவது கடவுள் ஹனுமான்! கம்பன் புகழாரம் (Post No.5702)

WRITTEN by London Swaminathan



swami_48@yahoo.com


Date: 26 November 2018


GMT Time uploaded in London –7-47 am

Post No. 5702


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Written for the Radha Madhav Kalyan Mahotsav Souvenir in London released on 25-11-2018

கம்ப ராமாயணத்தில் ஹனுமானை மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கிறான் கம்பன். . ‘சொல்லின் செல்வன்’ என்ற சிறப்புப் பட்டத்தை, அடை மொழியை, ஹனுமானுக்கு ராமன் வழங்கியதைப் பலரும் அறிவர். யுத்த காண்டத்தில் ஓரிடத்தில் எதிரி கூட அனுமனைப் புகழும் ஒரு பாடலை நம் முன் வைக்கிறான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்.

எல்லோருக்கும் தெரிந்த கடவுள் திரிமூர்த்தி- அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்களுக்கு அடுத்தபடியாக யாராவது உளரா? அப்படியானால் அவர் யார்?

கம்பன் சொல்கிறான்:- உண்டு, அவன்தான் அனுமன்.

ஒருவரை நண்பர்கள் புகழ்ந்தால் நூற்றுக்கு 75 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஒருவனை அவனுடைய எதிரியே புகழ்ந்தால்- நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம் அல்லவா?

ராவணன் தரப்பைச் சேர்ந்த மாலியவான் கூற்றாக கம்பன் சொல்லும் பாடல் இதோ:

 

முறைகெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின்

குறைஇலை குணங்கட்கு என்னோ கோள்  இலா  வேதம் கூறும்

இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமேதான்

அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.

-மாயா சீதைப் படலம், யுத்த காண்டம்,

பொருள்

உலகப் படைப்பின் முறையே மாற வேண்டுமானாலும், அனுமன், தான் நினைத்ததை செய்து முடித்து விடுவான். அவனிடமுள்ள குணங்களுக்குக் குறைவில்லை. குற்றமற்ற வேதங்கள் சொல்லும் கடவுளர் மூவர்தான் என்பது ஆராயாதோரின் கருத்து ஆகும். ஒலிக்கும் வீரக் கழலை அணிந்த அனுமனோடு முதற் கடவுளர் நால்வர் ஆவர்.

இது அருமையானதொரு பாராட்டு. அனுமனின்றி ராமன் வெற்றி பெற்று இருக்க முடியாது. ஆகவே கம்பன் கூறுவது உண்மையே.

 

இதற்கு முன்னர், ராமனே அனுமனைப் புகழ்ந்த காட்சியையும் காணலாம்.:

ராமனையும் லட்சுமணனையும்  நேரில் பார்த்த அநுமன்

“வெல்கம் டு கிஷ்கிந்தா (Welcome to Kishkinda) ” – என்கிறான். அதாவது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு (உங்கள் வரவு துன்பமில்லாத நல் வரவு ஆகுக) என்கிறான்

இப்படி ஒரு பிரம்மச்சாரிப் பையன் (அனுமன்) வரவேற்றவுடன் ராம லெட்சுமணருக்கு பெரு மகிழ்ச்சி. நீ யார் என்று ராமன் வினவுகிறான்..

உடனே அனுமன்,

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்நாமமும் அனுமன் என்பேன் ” என்று பதில் தருகிறான்.

உடனே ராமனும் அனுமனை எடை போட்டு விடுகிறான். அப்பொழுது ராமன் சொன்ன சொற்கள் அனுமனுக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம் ஆகும்!

 

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ

இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),

இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?

வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?

இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!

TAGS–  நாலாவது கடவுள், ஹனுமான், கம்பன், அநுமன்

-சுபம்-

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த 100 கேள்விகள்! (Post No.5701)

 

Written by S Nagarajan

Date: 26 November 2018

GMT Time uploaded in London –6- 08 am
Post No. 5701

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்!

ச.நாகராஜன்

பாண்டிய மன்னன் கம்பீரமாக வீற்றிருந்தான். அருகிலே அமைச்சர்களும், தளபதியும், ஒற்றர் தலைவரும் நின்றிருந்தனர்.

‘என்ன செய்தி?’ என அமைச்சரை நோக்கி மன்னன் கேட்க, அவர் ஒற்றர் தலைவரை நோக்கித் தலையை அசைத்தார்.

“ மன்னரே! நல்ல செய்தி தான்! வள்ளுவர் தனது தவத்தை முடித்துக் கொண்டு பாண்டிய நாடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்!”

ஆஹா என மன்னன் துள்ளிக் குதித்தான். அமைச்சர் புன்முறுவல் பூத்தார்.

“அமைச்சரே! தெய்வப்புலவரின் திருப்பாதங்கள் இந்த சங்கம் வளர்க்கும் மதுரையில் பதியப் போகிறதா! உடனே கிளம்புவோம்! அவரை உரிய முறைப்படி வரவேற்போம். ராணியிடம் செய்தி தெரிவியுங்கள். மகளிரும் வருவர்”- பாண்டியனின் உற்சாகமான ஆணையை ஆமோதித்த அமைச்சர் குறுகுறுவென்று பாண்டியனைப் பார்த்தார்.

பாண்டியன் : “தங்கள் பார்வையில் ஏதோ ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறதே!”

அமைச்சர் : ஆம் மன்னா! தெய்வப்புலவரின் வருகையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடம் அவர் தவத்தின் பயனையும் அவர் உற்றுணர்ந்த அறிவையும் கொண்டு சேர்க்க வேண்டும். இது மன்னராகிய தங்களின் கடமையாக நான் நினைக்கிறேன்.

பாண்டியன்: அருமை! அருமை! அப்படியே செய்வோம்.  எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மக்களிடம் – ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, வாழ்வியல் மர்மங்களில் அவர்களுக்குத் தோன்றும் சந்தேகங்களை எழுதி அரண்மனையில் சேர்க்கச் சொல்லுங்கள்; புலவர்களை விட்டு விடாதீர்கள்; அவர்களுக்குத் தெய்வப்புலவரின் புலமையின் மீதும் சந்தேகம்; அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் மீதும் பொறாமை! ஆகவே அவர்கள் அறிவுத் தெளிவு பெற இதுவே சரியான சந்தர்ப்பம். வந்து சேரும் கேள்விகளில் தலையாய நூறு கேள்விகளை – அவை ரகசியங்களை விளக்கச் சொல்லும் கேள்விகளாக, என்றும் எல்லோருக்கும், அதாவது மனித குலத்திற்கே பயன்படுபவையாக இருத்தல் வேண்டும். கேள்விகளை நாமே தேர்ந்தெடுப்போம். என்ன சொல்கிறீர்கள்!

அமைச்சர்: உத்தரவு மன்னா! தங்களின் அறிவும் முடிவும் மக்களை எப்போதுமே மேம்படுத்துவதாக அல்லவா அமைகிறது!

*

மன்னரின் வரவேற்பை வள்ளுவப்பிரான் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். பாண்டியனை செங்கொல் தவறாது அரசாளச் செய்யும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தார்.

அம்மன் கோவில் அருகே உள்ள பூங்காவனத்தில் மக்கள் கூட்டம் – ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர்.

மகளிர் ஒரு பாலும் ஆண்கள் மறு புறமும் சீராய் அமர்ந்திருக்க பெரிய மேடையில் சிறப்பான ஆசனத்தில் வள்ளுவப் பிரான் அமர்ந்திருந்தார். அவருக்குக் கீழே ஆசனங்களில் மன்னரும், மஹாராணியும், அமைச்சரும், தளபதியும், முக்கிய அரசவை பிரமுகர்களும் அமர்ந்திருக்க மன்னருரும் ராணியும் வள்ளுவருக்குப் பாதபூஜை செய்து மகிழ்ந்தனர்; மக்கள் கரம் தட்டிப் பாராட்டி மகிழ்ந்தன்ர்; பக்தியுடன் வள்ளுவரை வணங்கினர்.

*

சபை ஆரம்பித்தது. மன்னர் வள்ளுவரை நோக்கி, “வாழ்வியல் மர்மங்களை, அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இங்கே பல்லாயிரக் கணக்கானோர் கூடி உள்ளனர். அவர்கள் கேள்விகளோ எண்ணற்றவை. அவற்றில் தலையாய நூறு கேள்விகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

தேர்ந்தெடுத்தவர்களிடமே அந்தக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி விட்டோம். ஆரம்பிக்கலாமா சபையை?

வள்ளுவர் சொற்களில் சிக்கனமானவர். அவர் வாயிலிருந்து வரும் தமிழெல்லாம் அமிர்தம். தலையை அசைத்தார்.

ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்களும் மேடையின் அருகிலே அமர்ந்திருந்து இடக்காகக்  கேட்கும் புலவர்கள் உள்ளிட்டோரும் கற்றோரும் மற்றோரும் அமர்ந்திருக்க முதல் கேள்வியே அற்புத இரகசியத்திற்கான கேள்வியாக அமைந்தது.

சாமானியர் ஒருவர் எழுந்தார்: “வள்ளுவப் பிரானே! நீடு வாழ வேண்டும் என்பதே  மக்கள் அனைவரது ஆசையும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்க அவர் கூறினார்:

மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

கூட்டம் ஆரவாரித்தது. மன்னன் தன் சிரம் வாழ்த்தி மதுரைச் சொக்கரையும் அன்னை மீனாட்சியையும் நினைந்து உருகினான்.மஹாராணியோ கண்ணீர் திவலை சொட்ட பிரார்த்தித்தாள்.

அடுத்த கேள்வி புயலென வந்தது.”வள்ளுவரே! எங்கும் துன்பம்; எனக்கு எப்போதும் துன்பம்; துன்பம் நீங்க வழி என்ன?”

வள்ளுவர் கூறினார்: “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல”

ஒரு பிரமுகர் எழுந்தார் : ஐயனே! என்னிடம் இல்லாத செல்வம் இல்லை; இல்லாத ஆடை, அணி, ஆபரணங்கள், உணவு வகைகள், தோட்டங்கள், மணிகள், ரத்தினங்கள் இல்லை. ஆனால் என்னால் ஒரு பிடி உணவைக் கூட ஏற்க முடியவில்லையே! உடல் வியாதி வருத்துகிறதே! காரணம் என்ன?

வள்ளுவர் கூறினார் :

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

அருகிலிருந்த புலவர்களில் ஒருவர் கர்மவினை பற்றி விளக்கி வள்ளுவரின் சொற்களின் ஆழத்தை விரித்து எடுத்துரைத்தார்.

மக்கள், தம் தம் வினைகளே எதற்கும் காரணமாக அமைவதை வள்ளுவர் எடுத்துரைத்த பாங்கினைக் கண்டு வியந்தனர்.

இன்னொருவர் எழுந்தார் :”ஐயனே! அவர் செல்வம் இருந்தும் உண்ண வகையின்றித் தவிப்பதை எடுத்துரைத்தார். இன்றும் நாளையும் எனக்கு உதவும் உணவுக்குப் பஞ்சமில்லாத ஒரு நல்ல துய்க்கும் சேமிப்பு உபாயத்தைச் சொல்லி அருள்வீர்களாக!

வள்ளுவர் அருளினார் : அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.

புலவர்களில் ஒருவர் ஆஹா என்று கூவி வைப்புழி என்றால் பிற்காலத்தில் பலனைத் தரும் ஒரு சேமிப்பு உத்தரவாதம் என்று கூவி மகிழ்ந்தார்.

கூட்டத்தில் இருவர் ஒரே சமயத்தில் எழுந்தனர்:

“ஐயனே! இந்த உலகத்தில் வியக்கத் தகாதது ஏதாவது உண்டா?”

அதே சமயத்தில் இன்னொருவர், “ஐயனே! கூட இருந்தே குழி பறிக்கிறார்களே, அதைச் செய்யலாமா? என்றார்.

முதல்வரை நோக்கி வள்ளுவர் கூறினார்: வியவற்க எஞ்ஞான்றும் தன்னை

அடுத்தவரை நோக்கிக் கூறினார்: நயவற்க நன்றி பயவா வினை.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

வள்ளுவரின் சீரிய சொற்களுக்கு பண்டிதர்களும், புலவர்களும் பல்வேறு மேற்கொள்களைக் காட்டிப் பேசி மக்களுக்கு உத்வேகம் ஊட்டினர்.

மக்கள் மகிழ்ந்தனர்.

செய்தி நாடெங்கும் பரவ, எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் திரள் மீனாட்சி அம்மன் திருவாலயத்தை நோக்கி வர ஆரம்பித்தது.

மறுநாள் தன் முயற்சி அனைத்தையும் கொண்டு படைவீரர்களை அழைத்து அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்தான் பாண்டியன்; இதை மேற்பார்வை

பார்த்தவர் மஹாராணி.

அடுத்த நாள் சபை ஆரம்பித்தது!

–      தொடரும்

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட் பாக்களின் எண்கள் 3,4,377,226,439,110

Tags– 100 கேள்விகள்

xxxx subham xxx

HUMBUG – NEW INSECT DISCOVERED! (Post No.5700)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 25 November 2018

GMT Time uploaded in London –8-06 am

Post No. 5700

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

SCIENTISTS ANECDOTES

A Cambridge lecturer on the history of chemistry thus describe the celebrated Mr Boyle,
He was a great man; a strong man; he was the father of modern chemistry, and the brother of Earl of Cork.

Xxx

I DON’T KNOW ELECTRICITY!

Lord Kelvin, the great physicist once paid an unexpected visit to an extensive electrical plant. He had not disclosed his identity and was shown through the plant by a young foreman who painstakingly explained all the rudiments of electrical science, as here manifested to the great man.

When the tour was completed, Kelvin asked him quietly,
What then is electricity?
His guide was stumped.
No matter, Lord Kelvin said kindly,
That is the only thing about electricity which you and I do not know..

Xxxx

NEW INSECT DISCOVERED- HUMBUG


The great naturalist Charles Darwin, was once approached by two small boys of the family whose guest he was.
They had caught a butterfly, a centipede, and a grass hopper.
Taking the centipede s body, the butterfly s wings, the beetle s head and the grasshoppers legs, they had glued them together to make an alarming and original insect.

We caught this bug in the field, they said innocently.
What kind of a bug is it Mr Darwin?
Darwin examined it with great solemnity.
Did you notice whether it hummed when you caught it,boys? He asked gravely.
Yes sir, they answered , trying to conceal their mirth
Just as I thought, said Darwin, it is a humbug.

FROM THE DICTIONARY—-

HUMBUG noun

  1. 1.

deceptive or false talk or behaviour.

“his comments are sheer humbug”

synonyms: hypocrisy, hypocritical talk/behaviour, sanctimoniousness, posturing, cant, empty talk; More

o

verb

  1. 1.

deceive; trick.

“poor Dave is easily humbugged”

synonyms: deceive, trick, delude, mislead, fool, hoodwink, dupe, hoax, take in, beguile, bamboozle, gull, cheat; More

Xxx

USELESS DOCTOR!

The wife of the great physicist Robert A Millikan, happened to pass through the hall of her home in time to hear her maid answer the telephone,
Yes, Mrs Millikan overheard,
This is where Mr Millikan lives, but he is not the kind of doctor that does anybody any good.

Tags- Millikan, Darwin, Humbug, Boyle, Kelvin

XXXX SUBHAM XXXX

யாரடாவன் கூட்டத்துல பாம்பு விடறது? (Post No.5699)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 25 November 2018

GMT Time uploaded in London –7-39 am

Post No. 5699

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சார்ல்ஸ் லாம்ப் (CHARLES LAMB) என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர், கவிஞர். அவர் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். திடீரென்று கூட்டத்தில் ‘உஸ்’ என்ற சப்தம்.  பலமாகக் கேட்டது. திடீரென்று ஒரே நிசப்தம். எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

லாம்ப் கொஞ்சமும் அசரவில்லை. உலகத்தில் மூன்று ஜந்துக்கள்தான் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒலி உண்டாக்கும்

1.குள்ள வாத்து

2.பாம்பு

3.முட்டாள் பயல்

யாரடாவன்? இந்த மூன்றில் இங்கே எது இருக்கிறது? துணிச்சல் இருந்தால் உன் மூஞ்சியைக் காட்டு.

(அவர் இப்படிச் சொன்னபின் பேரமைதி; கூட்டம் இனிதே நடந்தது.)

xxxxx

scientist Scheele

தவறான ஆளுக்கு விருது! அடித்தது குருட்டு யோகம்!

மூலகங்கள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய அஸ்திவாரக் கற்கள். 118 மூலகங்கள் திட, திரவ, வாயு ரூபங்களில் இருக்கும். அவற்றில் ஒன்று மக்னீஷியம் (MAGNESIUM). அதைக் கண்டு பிடித்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஷீல் (SCHEELE) என்பவர் ஆவார்.

ஒருமுறை, பிரெஞ்சு விஞ்ஞானிகள் பாரீஸ் நகருக்கு வந்த சுவீடன் மன்னர் மூன்றாவது குஸ்டாவைச் (GUSTAV III) சந்தித்தனர்.

மன்னரே! நீவீர் எவ்வளவு அதிர்ஷ்ட சாலி; உமது நாடு மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் என்பவரை உடைத்தாய் இருக்கிறதே! அஹோ, பாக்யவான்! என்று சிலாகித்துப் பேசினர்.

மன்னருக்கு ஒரே வெட்கம்: ஏனெனில் அவர் விஞ்ஞான முன்னேற்றம் பற்றி அறியாத ஞான சூன்யம்! இருந்தபோதிலும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு ‘நன்றி நன்றி’ என்று புகன்றார்.

அவர்கள் அந்தப் பக்கம் போனவுடன், சுவீடனுக்கு செய்தி பறந்தது.

“ஷீல் அவர்களுக்கு பிரபு (COUNT) என்ற பட்டம் கொடுத்து கௌரவியுங்கள்”.

சுவீடன் பிரதமர் அந்தச் செய்தியைப் பார்த்து,

அட ராஜாவின் கட்டளை; உடனே நிறை வேற்ற வேண்டும்.உடனே ஷீல்  என்பவரின் விலாசத்தைக் கண்டுபிடித்து முழு விவரமும் அறிக; இங்கே கொணர்க– என்று காரியதரிசிக்குக் கட்டளையிட்டார்.

அவர் உடனே அட்ரஸ் புஸ்தகத்தைப் பார்த்து ஒரு ஷீல் என்பவரைக் கண்டு பிடித்தார்.

மண்டு, மக்கு, முட்டாள் காரியதரிசி கண்டுபிடித்தது இதுதான்ந்— ஷீல் என்பவர் நமது பீரங்கிப் படையில் லெப்டினன்ட் அந்தஸ்தில் இருக்கிறார். நல்ல திறமையான படைவீரன். அது மட்டுமா பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கில்லாடி என்று.

உடனே அந்த ஊர் பேர் தெரியாத ஆசாமிக்கு பிரபு பட்டம் கொடுத்து ஆசனத்தில் அமர்த்தினர்.

மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீல் அவர்களோ, முன்னைப் போலவே சோதனைச் சாலையில் ரசாயனக் குடுவைகளுடனும் சோதனைக் குழாய்களுடனும் மன்றாடிக் கொண்டிருந்தார்.

XXX

டேய் குரங்கு! என்ன முழிக்கிறாய்?

ஒரு பிரபல விலங்கியல் நிபுணர், ஒரு குரங்கைப் பிடித்து அதற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுத்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை; குரங்கு, குரங்காகவே இருந்தது. அவருக்கு ஒரு ‘ஐடியா ‘ (IDEA) தோன்றியது. ஒரு பந்தையும்  மட்டையையும் குரங்கின் கையில் கொடுத்து ஒரு அறைக்குள் பூட்டி வைத்தார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் பேரார்வத்துடன் குரங்கு என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்று கிளம்பினார். சத்தம் இல்லாமல் சாவித் துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்தார். துவாரத்தின் மறு புறத்திலிருந்து ‘இரண்டு விழிகள்’ அதே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன!

(மனிதனுக்குக் குரங்கு புத்தி; குரங்குக்கு மனித புத்தி என்று சொல்லலாமே)

Tags-   கூட்டத்துல பாம்பு,ஷீல்,  மக்னீஷியம், குரங்கு பந்து

–சுபம்–

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்! (Post No.5698)

John Freeman, right, interviewing Carl Gustav

Written by S Nagarajan

Date: 25 November 2018

GMT Time uploaded in London –6- 30 am
Post No. 5698

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

கடவுள் நம்பிக்கை பற்றிக் கூறி வருத்தம் அடைந்த கார்ல் ஜங்!

ச.நாகராஜன்

Jung’s regret over “I don’t need to believe, I know.”

வருடம் 1959. பி.பி.சி.யில் உள்ளோருக்கு ஒரே மகிழ்ச்சி. வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல உளவியலாளர் கார்ல் குஸ்டாவ் ஜங் ஒரு பேட்டி தர ஒத்துக் கொண்டார். ஸ்விட்ஸர்லாந்தில் ஜூரிச் நகரில் ஒரு ஏரிக்கரையின் அருகில் அமைந்திருந்த தனது வீட்டில் அமைதியாக அவர் அமர்ந்திருந்தார். பேட்டி எடுக்க வந்தவர் பிரபல பேட்டியாளர் ஜான் ஃப்ரீமேன்.

ஜான் ஃப்ரீமேன் (John Freeman) (பிறப்பு 19-2-1915; மறைவு 20-12-2014),

சாதாரண பேர்வழி இல்லை. அவர் ஒரு அரசியல்வாதி. ராஜதந்திரி. போர்வீரர். பேட்டி எடுப்பதில் நிபுணர். அவர் சர்ச்சிலை பேட்டி எடுத்த போது அவரைப் பாராட்டியவுடன் சர்ச்சில் கண்ணீர் விட்டுக் கலங்கினார். இந்தியாவின் ஹைகமிஷனராக ஜான் ஃப்ரீமேன் நியமிக்கப்பட்ட போது இந்தியா காமன்வெல்த்திலிருந்து விலகி விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்த போது அதை தனது சாதுரியத்தால் தவிர்க்க வைத்தவர். இங்கிலாந்தின் தூதுவராக அவர் வாஷிங்டனுக்கும் அனுப்பப்பட்டார்.

‘Face to Face’ என்ற அவரது நிகழ்ச்சி தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. இன்றும் கூட அந்த நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பார்க்கலாம். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், எடித் சிட்வெல், சிசில் பீடன், ஈவிலின் வா, ஹென்றி மூர், மார்டின் லூதர் கிங் என ஏராளமான பிரபலங்களை அவர் நேருக்கு நேர் பேட்டி எடுத்துப் புகழ் பெற்றார்.

99 வயது வரை வாழ்ந்து அவர் 20-12-2014இல் மறைந்தார்.

ஆனால் ஜங்குடன் அவர் எடுத்த பேட்டி மட்டும் தனித் தன்மை வாய்ந்த ஒன்றாக இருந்தது. அருமையான அந்தப் பேட்டியில் காமராவிற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்த ஃப்ரீமேன், ஜங்கிடமிருந்து உண்மைகளைப் பெற, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்.

1959இல் ஜங் இந்தப் பேட்டியைத் தந்த போது அவருக்கு வயது 84. இதற்குப் பின்னர் 18 மாதங்களில் அவர் மறைந்தார். (ஜங் பிறப்பு 26-7-1875 மறைவு 6-6-1961).

பேட்டியின் போது நான்கு முறை ஜங், “that  is difficult to say” என்று கூறினார். அப்படி கேள்விகள் கூர்மையாக  இருந்தன. ஆனால் அந்த வயதிலும் அவரது புத்தி கூர்மை வியக்கத் தக்கதாக இருந்தது.

பேட்டி மிக விரிவாகப் போய்க் கொண்டிருந்த போது திடீரென்று ஃப்ரீமேன், “கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டார்.பேட்டி இப்படி அமைந்தது:

Freeman : And did you believe in God?

Jung: Oh! Yes.

Freeman : Do you now believe in God?

Jung : Now? (pause) Difficult to answer. I know. I don’t need to believe. I know.

பின்னர் பேட்டி தொடர்ந்தது.

நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட பின்னர் ஜங் பற்றி கடுமையான விமரிசனம் எழுந்தது. அவர் கிறிஸ்தவ இறையியல் கொள்கை பற்றிச் சற்று விமரிசித்தே வந்தவர். ஆகவே அவர் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டார் என்று அனைவருக்கும் கோபம்!

ஜங்கிற்கு ஒரே வருத்தம். தான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்களே என்று!

ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போன்ற ஒரு விடையாக ஆகி விட்டது!

பின்னால் அவர் எழுதினார் இப்படி: “நான் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்ததை நான் நம்புகிறேன். ஆகவே தெரிந்த ஒன்றைப் பற்றிய நம்பிக்கை என்பது தேவையில்லாத ஒன்று. ஆகவே கடவுள் இருக்கிறார் என்பது நிச்சயமான போது அவர் இருக்கிறாரா என்பது பற்றிய நம்பிக்கை தேவை இல்லையே!”

இதைத் தான் அவர் சொல்லி இருந்தார்!

தனது பதிலை இப்படி விளக்கமாகக் கூறி இருந்தால் இப்படி ஒரு தவறான புரிதல் எழுந்திருக்காதே, விளக்கமாகப் பதிலைச் சொல்லாமல் ஒரே வரியில் சொன்னதால் அது புதிர் போல ஆகி விட்டதே என்று அவர் மிகவும் வருத்தப்பட்டார்.

கடவுள் பற்றிய உண்மை சிக்கலான ஒன்று.கடவுள் ஒரு மர்மம். கடவுளின் தன்மை மனித அறிவுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் நம்பினார்.

ஜங் ஸ்விட்சர்லாந்தில் உள்ள குஸ்நாஸ்ட்டில் இருந்த (Kusnacht, Switzerland)  தனது வீட்டின் வாசல் கதவில் இப்படி லத்தீன் வாசகங்களைப் பொறித்திருந்தார் : “VOCATUS ATQUE NON VOCATUS DEUS ADERIT.” இதன்பொருள், அழைத்தாலும் சரி, அழைக்கா விட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்!  (“Called or not called, the god will be there.)

கார்ல் ஜங் இந்தியாவிற்கு வந்ததைப் பற்றியெல்லாம் அறிவியல் துளிகள் தொடரில் விரிவாக எழுதி இருப்பதால் அதை இங்கு மீண்டும் தரவில்லை.

உலகம் கண்ட உன்னத உளவியலாளர்களில் ஒருவர் ஜங்!

TAGS–கடவுள் நம்பிக்கை,  கார்ல் ஜங்

***

 

பத்து கெட்ட குணங்கள் எவை? (Post No.5697)

 

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 November 2018

GMT Time uploaded in London –15-21
Post No. 5697

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு, தனது மானவ தர்ம சாஸ்திரம் என்னும் மநு ஸ்ம்ருதியில், பத்து கெட்ட குணங்களைப் பட்டியலிட்டு விட்டு மற்ற அனைத்தும் நல்ல காரியங்களே என்று சொல்லுகிறார். மனம், மொழி,மெய் (மனோ, வாக், காயம்) ஆகிய மூன்றும் செய்யக்கூடிய அசுபசெயல்கள் இவை. இதோ பட்டியல்

பர த்ரவ்யேச்வபித்யானம்மனஸா நிஷ்ட சிந்தனம்

விததாபிநிவேசஸ்ச த்ரிவிதம் கர்ம மானஸம் -12-5

ஒருவன் பொருளை எப்படி அபகரிக்கலாம் என்று திட்டம் போடுதல்,

மிகவும் கெட்டசெயல்களை நினைத்தல்

இந்த உடலே ஆத்மா என்று தவறாக நினைத்தல்

–இவை மூன்றும் மனதில் அசுப கர்மங்கள்; அதாவது தவறான சிந்தனை.

xxx

பாருஷ்யமன்ருதம்சைவ பைசுன்யஞ்சாபி ஸர்வசஹ

அஸம்பத்தப்ரலாபஸ்ச வாங்மயம் ஸ்யாச் சதுர்விதம் 12-6

கொடும் சொல், பொய் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சு ஆகிய நான்கும் வாய் மூலம் செய்யும் அசுபகர்மங்கள்

xxxx

அதத்தானாமுபாதானம் ஹிம்ஸாசைவாவிதானதஹ

பரதாரோபஸேவா ச சரீரம் த்ரிவித ஸ்ம்ருதம்

12-7

கொடுக்கத் தகாதவர்களுக்குக் கொடுத்தல்

யாகமின்றி ஹிம்ஸை செய்தல்,

பிறன் மனைவியை விரும்பல்,

ஆகிய மூன்றும் உடலால் செய்யும் தீய செயல்கள்.

இவை பத்தும் இல்லதவர்கள் வாய்மை, மெய்மை, உண்மை என்னும் மூன்று த்ரி கரண சுத்திஉடையவர்கள் ஆவர்.

परद्रव्येष्वभिध्यानं मनसाऽनिष्टचिन्तनम् ।

वितथाभिनिवेशश्च त्रिविधं कर्म मानसम् ॥ Bछ्.Sछ्॥

पारुष्यमनृतं चैव पैशुन्यं चापि सर्वशः ।

असंबद्धप्रलापश्च वाङ्मयं स्याच्चतुर्विधम् ॥ Bछ्.Sछ्॥

अदत्तानामुपादानं हिंसा चैवाविधानतः ।

परदारोपसेवा च शारीरं त्रिविधं स्मृतम् ॥ Bछ्.Sछ्॥

मानसं मनसेवायमुपभुङ्क्ते शुभाशुभम् ।

वाचा वाचा कृतं कर्म कायेनेव च कायिकम् ॥ Bछ्.S

tags–பத்து கெட்ட குணங்கள்

–சுபம்–

SNAKE OR GOOSE OR FOOL IN THE CROWD? (Post No.5696)

 

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 November 2018

GMT Time uploaded in London –14-41
Post No. 5696

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Lecture anecdotes
On the occasion of a lecture which Charles Lamb was once delivering, a loud hiss emanated from somewhere in the audience. There was an embarrassed silence. Lamb, not turning a hair said,
There are only three things that hiss—
A goose
A snake and A fool.
Come forth and be identified.

Xxxx

Picture of Scheele

UNDESERVED GOT THE AWARD

Scientists anecdotes
When Gustavus III of Sweden was in Paris, a deputation of French scientist s called on him. It congratulated him on the happy fortune, that had given him so great a man as Scheele, the discoverer of Magnesium, as his subject and fellow countryman.
The king, who took small interest in the progress of science, felt somewhat ashamed that he should be so ignorant as never even to have heard of the renowned chemist.

He dispatched a courier at once with the laconic order
‘Scheele is to be immediately raised to the dignity of a count’.
‘His Majesty must be obeyed’, said the prime minister, ‘but who in hell is Scheele?’

A secretary was told to make inquiries.’
He came back with very full information, Scheele is a good sort of fellow, said he, a lieutenant in the artillery, a capital shot, and a first -rate hand at billiards.
The next day the lieutenant became a count, and the illustrious scientist was completely forgotten by King and court.

Xxxx

DESTROYER OF BEAUTY
A botanist found a beautiful plant by the wayside. He sat down to analyse it. He pulled it apart and examined every part under a microscope.
When he had finished, he could tell the colour of the flower, its classification and the number of stamens and pistils and petals and bracts, but the life and beauty and the fragrance were gone.

Xxx

MONKEY LOOKING AT YOU!


They tell the story of a celebrated biologist who tried for months to train a monkey to play ball. As a last resort, he shut up the little creature by itself in a room with a bat and a ball. After some considerable time, had elapsed he finally stooped and peeped through the keyhole. He was disconcerted to find himself starting into an intent brown eye.

Tags- Scheele, Charles Lamb, Training monkeys, scientists

XXXX SUBHAM XXX

H FOR HINDU WORD SEARCH (Post No.5695)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 24 November 2018

GMT Time uploaded in London –9-07 AM
Post No. 5695

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

H FOR HINDU WORD SEARCH HAS AT LEAST 18 WORDS STARTING IN H. IF YOU CANT FIND THE 18 WORDS, READ THE TIPS. IF YOU STILLMISS SOMEWORDS GO TO THE ANSWER GIVEN AT THE END.

IFYOU FINISH THE TIPS WITH QUESTION MARKS, YOU MAY USE IT AS A QUIZ

H R A D I K A H A PU
I H A H U H A H A V A I
D O Y H A R H H R H A S
I M A A R A A A I S H A
M A L L A W N Y S A D K
B H A A H D U A C Y U A
A A M H I I M G H R Y Y
I V I A R R A R A A A N
T I H L A A N I N H L A
S S A H H V D A R
A H S K A Y N A R I H I
H A L A Y U D H A R A H

TIPS FOR YOU

1 A YADAVA WHO FOUGHT ON THE KAURAVA SIDE; FATHER OF KRITA GRANDFATHER OF KUNTI’S FATHER SHURA ALSO HAD THE SAME NAME

2.RAKSHASI MOTHER OF GHATOTKACHA BY BHIMA

  1. HEAVENLY MUSICIAN’ USED BY LORD SHIVA LIKE ‘WALKMAN’ (SONY) IN HIS EARS TO LISTEN TO MUSIC
  2. HEAVENLY MUSICIAN’ USED BY LORD SHIVA LIKE ‘WALKMAN’ (SONY) IN HIS EARS TO LISTEN TO MUSIC

5.LORD VISHNU

  1. LORD SHIVA

7.LORD SHIVA AND VISHNU APPEARED AS ONE SHARING BODY 50/50

  1. AN ANCIENT KING; ALSO THE NAME OF AN AVATAR OF VISHNU WITH HORSE HEAD
  2. A KING KNOWN FOR HIS TRUTHFULNESS, WHO INSPIRED GANDHIJI

10.KING OF AYODHYA IN ANCIENT TIMES. FATHER OF VASUMANA THROUGH MADHAVI

  1. FIRE SACRIFICE

12 WHAT IS OFFERED IN FIRE SACRIFICE

13.CAUSE OF NARASIMHAVATAR

14.POISON THAT CAME FROM THE OCEAN

  1. SON OF WIND; WHERE RAMA IS HE IS THERE

16.TWIN BROTHER OF A DEMON; BOTH KILLED BY VISHNU

17.GREATEST AGRICULTURIST; WHO SPREAD CULTIVATION WHEREVER HE WENT; ALWAYS CARRIED A PLOUGH

18.FOREFATHER OF KAURAVAS AND PANDAVAS; FOUNDER OF A CITY IN HIS NAME

19.HISTORICAL MOUNTAIN SUNG BY KALIDASA AND SANGAM TAMIL POETS

20.ONE OF THE SEVEN HOLY CITIES.

H R A D I K A H A PU
I H A H U H A H A V A I
D O Y H A R H H R H A S
I M A A R A A A I S H A
M A L L A W N Y S A D K
B H A A H D U A C Y U A
A A M H I I M G H R Y Y
I V I A R R A R A A A N
T I H L A A N I N H L A
S S A H H V D A R
A H S K A Y N A R I H I
H A L A Y U D H A R A H

ANSWERS

HRADIKA- A YADAVA WHO FOUGHT ON THE KAURAVA SIDE; FATHER OF KRITA VARMA.GRANDFATHER OF KUNTI’S FATHER SHURA ALSO HAD THE SAME NAME

HIDIMBA- RAKSHASI MOTHER OF GHATOTKACHA BY BHIMA

HAHA- HEAVENLY MUSICIAN’ USED BY LORD SHIVA LIKE ‘WALKMAN’ (SONY) IN HIS EARS TO LISTEN TO MUSIC

HUHU- HEAVENLY MUSICIAN’ USED BY LORD SHIVA LIKE ‘WALKMAN’ (SONY) IN HIS EARS TO LISTEN TO MUSIC

HARI- LORD VISHNU

HARA- LORD SHIVA

HARIHARA- LORD SHIVA AND VISHNU APPEARED AS ONE SHARING BODY 50/50

HAYAGRIVA- AN ANCIENT KING; ALSO THE NAME OF AN AVATAR OF VISHNU WITH HORSE HEAD

HARISCHANDRA- A KING KNOWN FOR HIS TRUTHFULNESS

HARYASHVA- KING OF AYODHYA IN ANCIENT TIMES. FATHER OF VASUMANA THROUGH MADHAVI

HOMA – FIRE SACRIFICE

HAVIS- WHAT IS OFFERED IN FIRE SACRIFICE

HIRANYAKASHIPU- CAUSE OF NARASIMHAVATAR

HALAHALA- POISON THAT CAME FROM THE OCEAN

HANUMAN- SON OF WIND; WHERE RAMA IS HE IS THERE

HIRANYAKSHA- TWIN BROTHER OF A DEMON; BOTH KILLED BY VISHNU

HALAYUDHA- GREATEST AGRICULTURIST; WHO SPREAD CULTIVATION WHEREVER HE WENT; ALWAYS CARRIED A PLOUGH

HASTI- FOREFATHER OF KAURAVAS AND PANDAVAS; FOUNDER OF A CITY IN HIS NAME

HIMALAYA- HISTORICAL MOUNTAIN SUNG BY KALIDASA AND SANGAM TAMIL POETS

HARIDWAR- ONE OF THE SEVEN HOLY CITIES.

–SUBHAM–

சிரிப்பு யோகாவும்! – உண்மை யோகாவும்! ! (Post No.5694)

Written by S Nagarajan

Date: 24 November 2018

GMT Time uploaded in London –6-52 am
Post No. 5694

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நாட்டு நடப்பு

சிரிப்பு (தரும்) யோகாவும்! – உடல் மன நலத்திற்கான உண்மை யோகாவும்!

ச.நாகராஜன்

ஹிந்து மதத்திற்கும் பாரதத்திற்கும் சிறப்பு தரும் ஒரு பெரிய பயிற்சி யோகா!

இந்த வார்த்தையை எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள் நமது நாட்டில் சிலரும், மேலை நாட்டில் பலரும்!

சிரித்துக் கொண்டே இருந்தால் சிரிப்பு யோகாவாம். பின்னால் நடந்து கொண்டே சென்றால் அது ஒரு யோகாவாம்! சாப்பிடுவதும் யோகா, செக்ஸும் யோகா.. இப்படி யோகாவை எல்லா வார்த்தைகளிலும் சேர்த்து கமர்ஷியல் செய்வதை தின வார இதழ்களில் அன்றாடம் பார்க்கலாம்.

இதே போல தவறாகப் பயன்படுத்தும் இன்னொரு வார்த்தை கோஷண்ட்! இண்டெலிஜென்ட் கோஷண்ட் என்று நுண்ணறிவை அளக்க ஒரு மதிப்பீட்டு எண்ணைச் சொன்னார் ஒரு விஞ்ஞானி. இந்த கோஷண்ட் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு, எமோஷனல் கோஷண்ட், லவ் கோஷண்ட், செக்ஸ் கோஷண்ட்  … இப்படி எதற்கு வேண்டுமானாலும் கோஷண்டைச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

யோகா என்பது மனிதனின் ஆன்மா பரமாத்மாவுடன் சங்கமம் ஆகும் ஒரு இணைப்பு- ஒரு சேர்க்கை – ஒரு கூடுதல்!

இது புனிதமானது. இந்தப் புனிதத்திற்கு உடல் ஒரு இன்றியமையாத பாலம். ஆகவே உடலைப் பேணுவது தேவையாகிறது.

உடம்பினுக்குள் உறு பொருள் கண்டேன்; உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!

பதஞ்சலி முனிவர் யோக சூத்ரத்தை வகுத்தார். படிப்படியாக யோகம் பற்றி விளக்கியுள்ளார். யோகா சித்தவிருத்தி நிரோத:  – யோகம் என்பது அலைபாயும் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது தான்!

இதற்கு ஒருமுனைப்படுத்தப்பட்ட ஒரு  தெய்வீகப் பொருளின் மீதான குவிப்பு தேவை என்றார் அவர்.

இதயத்தின் மீது இந்தக் குவிப்புடன் இறைவனை தியானித்தால் நலம் பயக்கும் என்பது அவர் உபதேசம். யோகம் இறை சக்தியுடன் இணைய வழி வகுக்கும் என்பது அவரது அருளுரை.

ராஜ யோகம், கர்ம யோகம், லய யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பயிற்சி முறைக்குத் தக்கவாறு யோகம் பலபடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

அவரவர்க்குப் பிடித்தபடி, தேவைக்குத் தக்கபடி, சூழ்நிலைக்கும் முயற்சிக்கும் ஏற்றபடி இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்; முன்னேறலாம்.

அனைத்தின் இலட்சியம் ஒன்றே தான். இறைவனுடன் சேர்வது.

இதை சிரிப்பு யோகம், செக்ஸ் யோகம் என்றெல்லாம் சொல்லிக் கேலிக் கூத்தாக்குவது எந்த விதத்தில் நியாயம்?!

யோகம் என்ற அற்புதமான தெய்வீகச் சொல் அசிங்கப்படுத்தப் படுகிறது.

இதை அறிந்தபிறகு நாமாவது

யோகம் என்பதை கண்ட சொல்லுடன் சேர்க்காமல் இருப்போமாக!

Truth 12-10-18 86ஆம் தொகுதி, 26ஆம் இதழில் வெளி வந்துள்ள யோகா பற்றிய ஒரு பகுதியை ஆங்கில மூலத்தில் கீழே தருகிறோம்.

நன்றி : ட்ரூத் வார இதழ்

***

Practice of Yoga: Yoga is gaining popularity in various countries and Yogasana is proving to be a plausible alternative for persons of different ages for physical health improvement. It is necessary to know what Yoga is, in the spiritual sense.Yoga in general is the process of unification of Atma with — Paramatma (the Supreme Being), Shiva (one of the three principal Hindu Gods) with Shakti (Goddess Durga), Jeeva (the living being) with Brahma (The Supreme Entity) etc.– which are all the same in the ultimate analysis.

According to Patanjal Yoga Sutra (1/2) ‹Yoga chitta vruththii nirodha:– Yoga is the process by which one can control or absolutely stop the diverse and distracting waves of the mind. This control finally leads to a blissful state: Samadhi (trance). To reach this state you require first an undivided concentration on a single pure or divine object, whatever you like – yadhabhimat dhyanat va (Yogasutra 1/39). It is better for the believers to concentrate on the worship of God with all devotion in so many forms and through so many ways: ESWARA: PRANIDHAANAM VAA (Yoga Sutra 1/23).

Again if you can concentrate – on the heart (or the divine figure) of a saint who is above all material attachments whatsoever– this is also an easy and fruitful method to attain  Samadhi– Veetha raga vishyam va chiththam (Yogasutra : 1/36). This is Raja Yoga– the most popular yoga round the world– in a nut shell.

Besides Raja Yoga, there are other important schools of Yoga– Karma Yoga, Bhakti Yoga, Jnana Yoga, Laya Yoga, Hatha yoga etc.– the target of all of them being almost the same: by different ways to reach the same destination– to get connected or united with the Supreme Power.

   One should remember that only physical fitness and mental peace cannot bestow upon us the spiritual bliss, which is joy thousand times deeper, which is joy immense without any parallel.

That’s why the Upanishad has clearly declared : (NALPE SUKAMASTI H=BHUMIVA SUKAM (Chandokya Upanishad 7/23/1). There is no genuine joy in the physical world, it is all there in the spiritual realm.

Not only that, if you can have an electrical connection with the power house, you get so many benefits out of it so soon: light, fan, TV, computer etc all get energized or empowered in a moment. Similarly if we can establish a hot line with the Supreme Power through Yoga, we become empowered in the physical, mental, intellectual, material as well as spiritual planes simultaneously. But tragically enough, we are either totally disconnected or at best loose- connected with the Super Power. What a loss indeed, how very foolish – to keep ourselves away from this Super Power which is the  summum bonum of human life !!

(Courtesy– Sahaj Kriya Yoga, Vol I by Kinkar Vitthal Ramanuja).

Courtesy : Truth Weekly 12-10-18 issue Vol 86 Issue 26

Tags– சிரிப்பு யோகா,உண்மை யோகா

***