பகுதி 3 – இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? Quiz க்விஸ் (Post No.5599)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 October 2018

GMT Time uploaded in London – 6-42 am

Post No. 5599

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Part 3 Tamil Quiz on Great Indian Women

பகுதி 3 – இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா? Quiz க்விஸ் (Post No.5599)

  1. காகதீய சாம்ராஜ்யத்தின் முழு முதல் மன்னராக ஆட்சி செய்த ராணி. 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகராசி. யார் அவர்?

42.காண்டவ வன (கோண்ட்வானா) ராணி; 500 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆண்ட நங்கை யார்?

43.மராட்டிய பக்தி  இலக்கியத்தில் புகழ்பெற்ற மாதரசி; மாமியாரின் கொடுமையையும் மீறி விட்டலாவைத் தொழுதார். தமிழ் உள்பட பலமொழிகளில் திரைப்படக் கதையானவர். யாரோ அவர் யரோ?

44.மதுரை நாயக்க வம்ச ராணி; ராணி மங்கம்மாளின் பேத்தி. யார் அவள்?

45.கணித மேதை பாஸ்கரரின் புதல்வி; அவரது நீங்காத நினைவுக்காக அவள் பெயரில்  புஸ்தமும் எழுதினார். அந்த புகழுக்குரிய பெண்ணரசி யார்?

46.இந்தியாவின் கவிக்குயில், விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர், வங்காளக் கவிஞர். யார் அவர்?

47.அர்ஜுனன் மணிபுரத்துக்கு வந்தபோது

சித்ராங்கதை என்ற இளவரசியை மணந்தான். அவளுடைய தமிழ்ப் பெயர் என்ன?அவள் பெயரில் நாடகம், நாட்டுப்புற பாடல்கள் உள. அந்த அழகி யார்?

48.தமிழ் கற்கும் அனைவரும் அறிந்த பெண்மணி; சங்க காலம் முதல் மூன்று பெயர்களாவது இவர் பெயரில் நூலெழுதி இருக்கிறார்கள். யார் அந்த மூதாட்டி?

49.மஹாபாரத திரவுபதி போலப் போராட்டக் காரி: துணிச்சல் மிக்க பத்தினித் தெய்வம். 12 வயதில் 16 வயது வணிகனை மணந்த நங்கை யார்?

50.கரிகால் சோழனின் மகள்; காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கணவணை மீட்ட காரிகை யாரோ?

51.திருப்பாவை முப்பதும் செப்பினாள்; பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை. யார் அவர்?

52.காஷ்மீரின் புகழ் பெற்ற சிவ பக்தை; சைவ சித்தாந்தி. யார் அவர்?

53.தட்சிணேஸ்வரத்தில் காளியின் அருட் மழையில் நனைந்தவரின் மனைவி; அவரும் புனிதை; யார்?

54.மஹாத்மா காந்தியின் மனைவி பெயர் என்ன?

55.ஐ.நா.சபையில் தமிழ் முழக்கம், ஸம்ஸ்க்ருத முழக்கம் செய்யும் கான மழை பெய்த புகழ் மிகு, அருள் மிகு பாடகி  யார்?

56.பாரதியாரின் பாடல்களைத் திரைப்படத்தில் பாடி தேசபக்திக் கனல் எழுப்பிய இசையரசி யார்?

57.மேற்கூறிய இரு கர்நாடக  இசையரசிகளுடன் சேர்ந்து இசை மூவர் என்று பெயர் எடுத்தவர்களில் ஒருவர்; ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் சீடர்; லலிதாங்கியின் மகள்; யார் அவர்?

58.நடனம் என்றால் தஞ்சாவூர்  மாது ஒருவரின் பெயரே முழங்கும். யார் அவர்?

59.புத்தரின் மனைவி பெயர், ராகுலனப் பெற்றெடுத்த பெண்ணரசி பெயர் என்ன?

60.மஹாஷ்டிர மாநிலத்தின் கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, கவிஞர், புனே நகரில் பிளேக் நோய் கண்டு இறந்த பெண்மணி யார்?

 

விடைகள்:–

41.ருத்ரமாதேவி

42.ராணி துர்காவதி

43.சக்குபாய்

44.ராணி மீனாட்சி

45.லீலாவதி

46.சரோஜினி நாயுடு

47.அல்லிராணி- சித்ராங்கதா

48.அவ்வையார்

49.கண்ணகி

50.ஆதிமந்தி

51.ஆண்டாள்

52.லல்லேஸ்வரி, காஷ்மீர்

53.சாரதாபாய்

54.கஸ்தூரிபாய்

55.எம்.எஸ்.சுப்புலெட்சுமி

56.டி.கே.பட்டம்மாள்

57.எம்.எல்.வசந்தகுமாரி

58.பால சரஸ்வதி

59.யசோதரா

60.சாவித்ரிபாய் பூலே

ANSWERS

41.RUDRAMA DEVI

42.RANI DURGAVATI

43.SAKKUBHAI

44.MEENAKSHI OF MADURAI

45.LEELAVATI (Lilavati)

46.SAROJINI NAYUDU

47.ALLI RANI/CHITRANGADA

48.AVVAIYAR

49.KANNAKI

50.ADI MANTHI

51.ANDAL

52.LAL DED (Lalleswari) OF KASHMIR

53.SARADA DEVI

54.KASTURIBHAI

55.MS SUBBULAKSHMI

56.DK PATTAMMAL

57.M L VASANTHAKUMARI

58.BALA SARASVATI

59.YASODHARA, WIFE OF BUDDHA, MOTHER OF RAHULA

60.SAVITRIBHAI PHULE

–subham–

ரமண மஹரிஷி பற்றி அரவிந்தர்! (Post No.5598)

WRITTEN BY S NAGARAJAN

Date: 28 October 2018

Time uploaded in London – 5-45 AM (British Summer Time)

Post No. 5598

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ரமண மஹரிஷி பற்றி அரவிந்தர்!

ச.நாகராஜன்

1

திலிப் குமார் ராய் பிரபல இசைக் கலைஞர். பல புத்தகங்களை எழுதியவர். பக்தர்.

ரமண மஹரிஷி பக்தியை ஞானமாதா என்று கூறுவதை அவர் கேட்டு மிகவும் பக்தி கொண்டார்.

திலிப் அரவிந்த ஆசிரமத்தில் இருந்த போது முதன் முதலில் ரமணரைப் பற்றி  கேள்விப்பட்டார். அரவிந்தரிடம் அவர் ரமணரைப் பற்றிக் கேட்டபோது அரவிந்தர் மிக குறிப்பிடத்தகுந்த பெரும் வலிமை வாய்ந்த யோகி ரமணர் என்றும் அவரது தவமே இந்திய வெற்றிக்கு வழி வகுத்தது என்றும் குறிப்பிட்டார். இன்னொரு சமயம் அவர் யோகிகளில் ‘ரமணர் ஹெர்குலிஸ்’ என்று கூறினார். ஆகவே தான் அவரை தரிசிக்க ரமணாசிரமம் செல்ல வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ஏற்பட்டது.

திலிப் குமார் ராய் ரமணர் பற்றிக் குறிப்பிட்டதை அவர் சொற்களிலேயே கீழே காணலாம்:

Dilip Kumar Roy of Sri Aurobindo Ashram was a well-known personality of his time and has authored many books. He was a bhakta and a musician. Sri Ramana’s famous quote, “Bhakti is

jnanamata”(the mother of jnana) was in reply to his query whether Sri Ramana advocated jnana and disparaged bhakti.

I first heard of Ramana Maharshi when I was a member of the Ashram of Sri Aurobindo. I asked Sri Aurobindo about the Maharshi and he wrote back that he was a yogi of remarkable strength and attainments and that his tapasya had won ‘glory for India.’ On another occasion he

characterised him as a ‘Hercules among the yogis.’ So I longed to pay a visit to Sri Ramanasramam.

2

.

அரவிந்தருடன் மாலை நேரங்களில் அவரை தரிசித்து அவரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்வது 1938இல் சாத்தியமாக இருந்தது.

23-12 1938

சாதகர் ஒருவர் ரமணாசிரமத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ரமண மஹரிஷி வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அரவிந்தர் விவரித்தார்.

ஆசிரமச் செயல்பாட்டிலும் பக்தர்கள் நடந்து கொண்ட விதத்திலும் சற்று அதிருப்தி கொண்ட ரமணர் மலையை நோக்கி  மெதுவாக நடக்க ஆரம்பித்தார். குன்றின் இடையே ஒரு சிறு இடைவெளியை அவர் கடக்க வேண்டியிருந்தது. அந்த இடைவெளியில் காலை குறுக்காக நீட்டி வைத்துக் கொண்டு ஒரு வயதான கிழவி அமர்ந்திருந்தாள். மஹரிஷி அவரது காலை எடுக்குமாறு வேண்டினார். ஆனால் அவரோ மறுத்தார். மஹரிஷி அவரைக் கோபத்துடன் கடக்க யத்தனித்தார். கோபம் கொண்ட கிழவி, ”ஏன் இப்படி  அமைதியற்று இருக்கிறாய்? அருணாசலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்காமல் ஏன் இப்படி அலைகிறாய்? திரும்பிப் போ, சிவனை அங்கே வழிபடேன்” என்றார்.

கிழவியின் பேச்சு ரமணரின் சிந்தனையைத் தூண்டி விட்டது. அவர் திரும்பி வழி நடந்தார். சிறிது தூரம் சென்ற பின் அவர் திரும்பிப் பார்த்த போது அந்தக் கிழவியை அங்கே காணோம். அப்போது தான் அவருக்கு திடீரென்று தோன்றியது, மஹா சக்தியே கிழவி ரூபத்தில் அங்கு வந்து அவருக்கு அருணாசலத்திலேயே இருக்குமாறு அருளியதாக!

The talk turned to Ramanashram.


Sri Aurobindo:


There are reports that those who stay there permanently are not all in agreement with each other. Do you know that famous story about Maharshi “when being disgusted with the Ashram and the disciples,” he was going away into the mountain. He was passing through a narrow path flanked by the hills. He came upon an old woman sitting with her legs across the path. Maharshi begged her to draw her legs but she would not. Then Maharshi in anger passed across her. She then became very angry and said “Why are you so restless? Why can’t you sit in one place at Arunachala instead of moving about, go back to your place and worship Shiva there?” Her remarks struck him and he retraced his steps. After going some distance he looked back and found that there was nobody. Suddenly it struck him that it was the Divine Mother herself who wanted him to remain at Arunachala.

Of course it was the Divine Mother who asked him to go back. Maharshi was intended to lead this sort of life. He has nothing to do with what happens around him. He remains calm and detached. The man is what he was.

.

3

ஒவ்வொரு கணத்திலும் மஹாசக்தியே ரமணரை வழி நடத்தி வந்தாள். ஆசிரமம் ஆரம்பிப்பதிலோ அல்லது அதை நடத்துவதிலோ ரமணருக்கு அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனால் மஹாசக்திக்கோ அவர் மூலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்ற சங்கல்பம் இருந்தது.

ஒரு கட்டத்தில், “என்னை இம்சிக்கிறா” என்று கூறிய ரமணர், அந்த இம்சையை அன்னையின் கட்டளையாக சிரமேற்கொண்டு ஆசிரமத்தை நடத்த அனுமதி தந்தார் – ஆனால் ஆசிரம விதிமுறைகளை  மிகக் கடுமையாகப் பின்பற்றினாலும் அதில் பற்று சிறிதுமின்றி இருந்தார்.

அற்புதமான ரமண அவதாரம் பராசக்தியின் சங்கல்பம் என்றே முடிவு செய்யலாம்.

***

ஆதாரம் : EVENING TALKS with SRI AUROBINDO – Recorded by A. B. PURANI

PART 3 OF 100 GREAT INDIAN WOMEN QUIZ (Post No.5597)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 October 2018

Time uploaded in London – 21-36

(British Summer Time)

Post No. 5597

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Can you name these women?

PART 3 (First two parts contain another forty famous names)

 

41.Woman of Kakatiya Kingdom who ruled as monarch 800 years ago.

42.Queen of Gondwana (Khandava Vana) who ruled an area of Uttar Pradesh 500 years ago.

43.A great Marathi woman devotee of Vithala who  lived with cruel mother in law; films were made in many languages on her.

44.A Nayak queen of Madurai, grand daughter of Rani Mangammal

45.Daugher of mathematician Bhaskara,a book in her name was written by him

46.Nightingale of India, Freedom fighter, great poet

47.Arjuna married Chitrangada, princess of Manipura, during his visit to Tamil Nadu. What is her Tamil name, who is the source for dramas and folk songs?

48.Great poetess of Tamil language; scholars believe at least 3 poets lived in her name

49.Heroine of a famous Tamil epic; as bold as Draupadi of Mahabharata; worshiped as goddess

50.Daughter Karikal Choza, a chaste woman who brought her husband back from the Kaveri floods

51.Devotional Vaishnavite poet, author of beautiful poems who merged with god

52.Great mystic Poet of Kashmiri Shaivism

53.Wife of a great saint of Bengal and herself a saint

54.Wife of Mahatma Gandhi

55.Great Tamil singer who took Carnatic music to United Nations

56.One of the three great singers of Carnatic music who popularized Poet Bharatiyar’s songs through films

57.Another Tamil musician, daughter of musician Lalithangi and disciple of G N Balasubramanian

58.Popular Classical Bharatanatyam of dancer of Thanjavur; synonymous with Bharatnatyam in Tamil Nadu

59.Wife of Buddhaa, mother of Rahula

60.Social reformer, poet and educationist of Maharashtra who died of Plague in Pune

 

ANSWERS

41.RUDRAMA DEVI

42.RANI DURGAVATI

43.SAKKUBHAI

44.MEENAKSHI OF MADURAI

45.LEELAVATI (Lilavati)

46.SAROJINI NAYUDU

47.ALLI RANI/CHITRANGADA

48.AVVAIYAR

49.KANNAKI

50.ADI MANTHI

51.ANDAL

52.LAL DED (Lalleswari) OF KASHMIR

53.SARADA DEVI

54.KASTURIBHAI

55.MS SUBBULAKSHMI

56.DK PATTAMMAL

57.M L VASANTHAKUMARI

58.BALA SARASVATI

59.YASODHARA, WIFE OF BUDDHA, MOTHER OF RAHULA

60.SAVITRIBHAI PHULE

–subham–

2.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 2

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 October 2018

Time uploaded in London – 6-18 am

(British Summer Time)

Post No. 5596

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

2.இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 2

முதல் பகுதியில் 20 இந்தியப் பெண்க   ளைக் கண்டோம் . மேலும்

இருபது பேரைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்; இலக்கியத்தில், சரித்திரத்தில், வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவர்கள்

இவர்கள்; யார் இவர்?

21.புத்தர் காலத்தில், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசன் உதயணனின் அன்பு மனைவி; நாடகத்திலும், கதைகளிலும் நீங்காத இடம் பெற்றவள்; யார் அவர்?

22.ஹர்ஷவர்தனனின் அன்பு சகோதரி. அவருடைய கணவர் போரிலிறக்கவே, காட்டில் சிக்கிய இப்பெண்ணை மலைஜாதி மக்கள் உதவியுடன் ஹர்ஷன் மீட்டான்.   யார்?

23.தமிழ்க் கவிஞன் கம்பனின் மகன் அம்பிகாபதி. அவருடைய காதலி யார்?

24.ஹிந்து சாம்ராஜ்யம் ஸ்தாபிக்க வீர சிவாஜிக்கு கதைகள் மூலம் ஊற்றுணர்ச்சி தந்த தாய் யார்?

25.போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல கணவனைப் பின்தொடர்ந்து வந்து அவரது மதுரை வெற்றியை ‘மதுரா விஜயம்’ நூல் மூலம் தந்த பெண் யார்?

26.ஆப்கானிஸ்தானில் இப்போது காண்டஹார் என்று அழைக்கப்படும் பகுதியிருந்து வந்த பெண்; கணவனுக்குக் கண் தெரியாததால்,வாழ்நாள் முழுதும் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த பத்தினி யார்?

27.துணிச்சல்மிக்க உண்மை விளம்பி; மகனைப் பள்ளிக்கு அனுப்பி, உன்  தந்தை பெயரைக் கேட்பார் குருநாதர்; தாய்க்கே தெரியாது என்று சொல். ஸத்யகாமனை அனுப்பிய தாய் யார்?

28.உலகமே வியக்கும் இலக்கண புஸ்தகத்தை எழுதியவரின் தாயார் யார்? தன்னை தாயார் பெயரைச் சொல்லி …….புத்ரன் என்று அழைத்தார். பெருமைக்குரிய தாய் யார்?

29.வெளிநாட்டில் தோன்றிய மதங்கள் எல்லாம் கடவுளை ‘அவன்’ HE என்று ஆண்மகனாக எழுதின. ஆனால் இந்துக்களோ பெண்களுக்கு மதிப்பளித்து ‘கடவுளர்க்கெல்லாம் தாய்’ (Mother of all Gods)  என்ற பட்டத்தைப் பெண்ணுக்குக் கொடுத்தது, யார் அவர்?

30.செட்டியார் குலத்தில் அவதரித்து, தென் கிழக்காசிய நாடுகளில் புகழ்பரப்பிய, எலும்பும் தோலுமான சிவ பக்தை யார்?

31.கௌதம புத்தரை ஈன்றெடுத்தவர்; சுத்தோதனனின் மனைவி யாரோ?

32.சீதை மனம் நொந்து தற்கோலை பற்றி பேசிய போதெல்லாம், நல்ல செய்தி வழங்கிய பெண்; விபீஷணனின் மகள் யாரோ?

33.கணவர் கண்டேர் ராவ் ஹோல்கர் போரில் கொல்லப்பட்ட போதும் ,தானே சென்று சண்டையிட்ட மாள்வ தேச வீராங்கனையின் பெயர் என்ன?

34.’ஜான்ஸி கீ ராணி’ என்று புகழ்பெற்றவர். 1857ம் ஆண்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்த முதல் சுதந்திர யுத்தத்தில் வீரப் போரிட்டவர். அவர் யார்?

35.பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட கிட்டூர் ராணி; கர்நாடகத்தில் இவர் பெயரை அறியாதார் இல்லை; யார் அவர்?

36.கூன் பாண்டியனை, ‘நின்ற சீர் நெடுமாறனாக’ மாற்ற உதவியவர்; மிகு சைவம் தழைத்தோங்க உதவிய பாண்டிய ராணி யார்?

37.ஆங்கிலப் படைகளை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ராணி; ராமநாதபுரத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யார்?

38.ராஜ ராஜ சோழனை மாபெரும் கோவில்கள் சமைக்கவும், நாடுகளை வெல்லவும் ஊக்கம் தந்த பெண்; தானும் தானம் செய்து கல்வெட்டுகளில் அழியா இடம் பெற்ற மாதரசி யார்?

  1. மதுரை மாநகரில் அழியாத பல கட்டிடம் கட்டிடய பெண்ணரசி யார்?

40.படையெடுத்து வந்த முஸ்லீம் மன்னரின் கை படாமல் மானம் காத்த மாதர் குல திலகம். இன்றும் 100 கோடி இந்துக்களை, தன் உயிர்த் தியாகம் மூலம் பெருமிதம் கொள்ளச் செய்யும் உத்தம பத்தினி யார்?

விடைகள்:-

21.வாசவதத்தா, 22.ராஜ்யஸ்ரீ, 23.அமராவதி, 24.ஜீஜாபாய் 25.கங்காதேவி,

26.காந்தாரி, 27.ஜாபாலா, 28.தாக்ஷி, 29.அதிதி, 30.காரைக்கால் அம்மையார், 31.மாயாதேவி, 32.த்ரிஜடை 33.அஹல்யாபாய் ஹோல்கர், 34.லக்ஷ்மிபாய், 35.கிட்டூர் ராணி சென்னம்மா, 36.மங்கையர்க்கரசியார், 37.வேலு நாச்சியார், 38.குந்தவை,39.ராணி மங்கம்மா, 40.சித்தூர் ராணி பத்மினி (பத்மாவதி)

–subham–

தங்க புத்தர்! (Post No.5595)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 October 2018

Time uploaded in London – 5-43 AM (British Summer Time)

Post No. 5595

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 26-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி நான்காம்) கட்டுரை  

தங்க புத்தர்!

ச.நாகராஜன்

அறிவியலுக்கும் புத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு நாளுக்கு நாள் அது வலுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், ‘எதையும் நீயே ஆராய்ந்து பார்த்து, கண்டுபிடித்து ஒப்புக்கொள்’ என்ற புத்தரின் உபதேசம் தான்! அறிவியலும் இதையே தானே சொல்கிறது!!

அத்துடன் கூட இப்போதுள்ள தலாய்லாமா பிரபல விஞ்ஞானிகளை தனது தர்மஸ்தலாவிற்கு வரவழைத்து அறிவியலும் புத்த மதக் கொள்கைகளும் இணைவதற்கான பாலமாக இலங்குகிறார். அவரது அறிவுரைப்படி நிறைய லாமாக்களும், புத்த பிக்ஷுக்களும் அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த பரிசோதனை மையங்களுக்குச் சென்று தன்னார்வத்துடன் தியானம் உள்ளிட்ட பல வித சோதனைகளுக்கும் உள்ளாகின்றனர்; வியக்கவைக்கும் உண்மைகளை வெளியுலகிற்கு அளிக்கின்றனர்.

புத்த மதத்தை இப்போது “மனம் பற்றிய அறிவியல்” (Science of Mind) என்று கூறத் தொடங்கியுள்ளனர். நீல்ஸ் போர், ஓப்பன்ஹீமர், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் புத்த மதக் கொள்கைகளை தங்கள் ஆய்வு உரைகளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

புத்த மதத்திற்கும் தங்கத்திற்கும் கூட நிறைய தொடர்பு உண்டு; புத்தமதத்தைப் பொறுத்த வரை தங்கம் சூரியனுடன் இணைக்கப்படும் அரிய ஒரு உலோகம். தீ ஜுவாலை அல்லது அறிவு அல்லது விழிப்பு ஆகியவற்றுடன் தங்கம் தொடர்பு படுத்தப்படுகிறது. அறிவு, ஞானம், தூய்மை, சந்தோஷம், சுதந்திரம் ஆகிய அனைத்துமே தங்கத்தினால் குறிப்பிடப்படுகிறது.

அறிவியலும் கூட சூரியனையும் தங்கத்தையும் அவற்றின் பல அரிய சிறப்புக்களுக்காக ஆராய்கிறது; வியப்பூட்டும் உண்மைகளை விளக்குகிறது.

புத்த மதம் அறிவுறுத்தும் அஷ்ட மங்கலம் எனப்படும் எட்டுப் பொருள்களான ஜோடி மீன்கள் இரண்டு, தங்கத் தாமரை, எட்டு ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரம் உள்ளிட்ட அனைத்தும் தங்கத்தால் செய்யப்படுபவையே. சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் நல்கும், சிரிக்கும் புத்தர் – லாஃபிங் புத்தா – சிலைகளில் பொதுவாக தங்கப் பூச்சு பூசப்படுகிறது.

உலகெங்கும் ஏராளமான இடங்களில் புத்தரின் சிலைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன; ஆனால் அதை விட கூடுதலான் அளவில் புத்தரின் திருவுருவம் தங்கத்தில் வார்த்து எடுக்கப்பட்டுள்ளது. திபத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் பத்தரைமாத்து தங்கத்தால் பூசப்பட்டுள்ளன. தாய்லாந்தில் பாங்காக்கில் உள்ள வாட் ட்ரைமிட் ஆலயத்தில் உள்ள தங்க புத்தர் முழுவதும் தங்கத்தால் ஆனது. இதன் எடை மலைக்க வைக்கும் 5.5 டன்கள்! இதன் உயரம் 3.91 மீட்டர்.அகலம் 3.01 மீட்டர். உலகின் மிகப் பெரிய தங்க புத்தர் சிலை இது தான்!

பண்டைக் காலத்தில் அயுத்தயா என்னும் இடம்  சிதிலமடைய அங்கு இந்த சிலை யாரும் கவனிப்பாரின்றி கிடந்தது. பாங்காக் புதிய தலைநகரமாக ஆக்கப்படவே அப்போதிருந்த அரசன் பழைய சிலைகளை புதிய இடத்தில் நிறுவுமாறு கட்டளையிட்டான். சிலைகள் நகர்ந்தன. தங்க புத்தரும் பாங்காக்கில் வாட் சோடாநரம் என்ற இடத்தில் ஒரு ஆலயத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டது. அந்த ஆலயமும் இடியும் நிலைக்கு வரவே சிலை வாட் ட்ரைமட் ஆலயத்திற்கு வந்தது. அங்கு இடமே இல்லாததால் தகரத்தைக் கூரையாகக் கொண்ட ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டது. புது கட்டிடம் ஒன்று கட்டப்படவே 1954ஆம் ஆண்டு சிலையை அங்கு கொண்டு போவதற்காக சிலையை எடுத்தனர். அப்போது சிலை சிறிது சேதமடைந்தது. சாதாரணமாக இது ஒரு துரதிர்ஷ்டமாகக் கருதப்படும். ஆனால் அதுவே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக அமைந்தது. தங்க புத்தர் தானே வெளிப்பட்டார்.

சிலையில் சிறிது தங்கம் தென்படவே ஜாக்கிரதையாக மேல் பூச்சைப் பிரித்தனர். உள்ளே அற்புதமான தங்க மய புத்தர் தரிசனம் தந்தார்.

அதை முறைப்படி ஆராயவே அதன் மதிப்பு உலகிற்குத் தெரிய வந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய தங்கச் சிலையாக பாங்காக்கில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் தங்க புத்தர்!

அறிவியல் அறிஞர்களின் பார்வை புத்த மதத்தின் பக்கம் இப்போது திரும்பவே, தங்க புத்தரின் சிலையை தரிசிக்க சாமான்யர்களுடன் விஞ்ஞானிகளும் வருகின்றனர்.

பாங்காக்கில் தங்க பிரேமில் மஞ்சள் வண்ணத்தில் பல புத்தரின் படங்களை ஆங்காங்கே வீடுகளிலும், ஹோட்டல்களிலும், பார்க்கலாம். அத்துடன் அங்குள்ள பெரிய கட்டிடங்கள் கூட தங்கம் மற்றும் மஞ்சள் வண்ணக்கலவையிலான உட்புற அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அறிவியலும் ஆன்மீகமும் தங்கம் மூலம் இணையும் ஒரு தலமாக பாங்காக் வாட் ட்ரைமின் ஆலயத் தலம் திகழ்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி வாழ்க்கையை அணுக வேண்டிய முறையைக் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியாக அமைகிறது. அவருக்கு 67 வயது ஆகி விட்ட நிலையில் ஒரு நாள் மாலையில் அவர் தனது லாபரட்டரியிலிருந்து வீடு திரும்பினார். இரவு சாப்பாடு முடிந்த போது ஒரு ஆள் ஓடி வந்து ஒரு அவசரத் தகவலைச் சொன்னான். சில மைல்கள் தள்ளி இருந்த எடிஸனின் ஆய்வு மற்றும் உற்பத்தி கம்பெனி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்த மோசமான அவசரத் தகவல்.

அவர் மிக அமைதியாக தனது மகனை நோக்கிக் கூறினார் : “போ,போ! சீக்கிரம் உன் அம்மாவையும் அவளது தோழிகளையும் அழைத்து வா. இப்படிப்பட்ட தீப்பிடிக்கும் காட்சியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.” ஒரு குழந்தையின் குதூகலத்துடன் இதைக் கூறிய எடிஸன், “நீ கவலைப்படாதே! தேவையில்லாத எல்லாக் குப்பையும் ஒரு வழியாக ஒழிந்து போயிருக்கும்” என்றார்.

ஒரு கெட்டதில் நல்லதைப் பார்க்கும் உடன்மறை எண்ணம் கொண்ட எடிஸன் வாழ்வில் மோசமான நிகழ்ச்சி எப்போது  நடந்த போதும், “சரி போ! அப்படி நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும்” என்ற தைரியத்துடனேயே இருந்தார்

மனம் உடைந்து போகாத நிலையில் அவர் மறுநாள் பத்திரிகையாளரிடம், தான் திரும்பித் தொழிலை ஆரம்பிக்க முடியாத அளவுக்கு மிகவும் வயதான ஒருவன் அல்ல என்று கூறினார். “இது போல எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்து விட்டேன். சலிப்பும் சோர்வும் மனிதனை அணுகாதபடிக்கு வைக்கும் நிகழ்வுகள் இவை” என்றார்.

முற்றிலும் அழிந்து போன தொழிலகம் மூன்றே வாரங்களில்  பழையபடி இயங்கத் துவங்கியது. நான்காம் வாரத்திலிருந்து பழையபடி இரண்டு ஷிப்ட் வேலை துவங்கியது. புதிய தயாரிப்புகளை உலகிற்கு வழங்க ஆரம்பித்தது. அன்றைய மதிப்பில் தீப்பிடித்ததால் நஷ்டம் பத்து லட்சம் டாலர்கள்! (இன்றைய மதிப்பில் 230 லட்சம் டாலர்கள்!) எடிஸன் தன் உழைப்பினாலும் தைரியத்தினாலும் அந்த வருடமே அன்றைய மதிப்பில் நூறு லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டிக் காட்டினார். மனித வரலாற்றில் வெகு சில பேர்களே இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகளை துணிவுடன் எதிர்கொண்டு அதையும் மீறி நல்ல முன்னேற்றத்தை அடைந்து காண்பித்திருக்கிறார்கள். தைரியமும் உழைப்புமே உயர்வுக்கான வழி!

QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-2! (Post No.5594)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 October 2018

Time uploaded in London – 12-24

(British Summer Time)

Post No. 5593

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

UP TO QUESTION.20 GIVEN IN PART 1

HERE IS PART 2

CAN YOU NAME THESE FAMOUS WOMEN IN INDIAN HISTORY WHO ARE PART OF OUR HISTORY BOOKS,SCRIPTURES, DRAMAS OR INSCRIPTIONS?

21.LEGENDARY QUEEN OF GREAT KING UDAYANA OF SIXTH CENTURY BCE, CONTEMPORARY OF BUDDHA

22.KING HARSHAVARDHANA’S SISTER, WHO HARSHA RESCUED FROM FOREST

23.ONE OF LEGENDARY LOVERS- POET KAMBAN’S SON AMBIKAPATHY’S LADYLOVE

24.WOMAN WHO INSPIRED VEERA SHIVAJI BY TELLING HIM HEROIC HINDU TALES

25.FIRST WAR CORRESPONDENT OF INDIA WHO ACCOMPANIED HER HUSBAND AND WROTE MATHURA VIJAYAM- LIVE COMMENTARY ON DESTRUCTION OF MUSLIM RULE IN MADURAI.

26.GREAT WOMAN FROM KANDAHAR IN AFGHANISTAN WHO BLINDFOLDED HERSELF BECAUSE HER HUSBAND WAS BLIND

  1. A VEDIC WOMAN WHO BOLDLY SENT HER SON TO VEDIC SCHOOL AND INFORMED HIM ‘I DON’T KNOW YOUR FATHER’. TELL MY NAME TO THE TEACHER.
  1. MOTHER OF GRAMMARIAN AND HE WAS THE AUTHOR OF AMAZING WORLD’S FIRST GRAMMAR BOOK

29.WHEN ABRAHAMIC RELIGIONS CALLED GOD AS ‘HE’, HINDUS GAVE GREAT RESPECT TO WOMEN AND CALLED THIS WOMAN ‘ MOTHER OF GODS’, PERSONIFICATION OF INFINITY,SUSTAINER OF ALL THINGS, ‘UNBOUND, LIMITLESS POWER’.

30.THIS WOMAN FROM EAST COAST OF INDIA SPREAD HER NAME TO SOUTH EAST ASIA; GREAT DEVOTEE OF LORD SHIVA; SHE BECAME A SKELETON AND WAS CALLED ‘MADAM GHOST’

31.MOTHER OF GAUTAMA BUDDHA, WIFE OF SUDDHODANA

32.THIS WOMAN WAS VIBBISHANA’S DAUGHTER AND GAVE POSITIVE THOUGHTS TO SITA DEVI WHENEVER SHE BECAME SUICIDAL.

33.GREAT MALWA QUEEN WHO LED ARMIES WHEN HER HUSBAND KAHNDERAO HOLKAR WAS KILLED IN A BATTLE

34.’JHANSI KI RANI’ WHO FOUGHT AGAINST THE BRITISH; HEROINE OF 1857  FIRTST WAR OF INDIAN INDEPENDENCE; WAR AGAINST THE BRITISH

35.GREAT QUEEN OF KITTOOR IN KARNATAKA WHO FOUGHT AGAINST THE BRITISH

36.A GREAT DEVOTEE OF SHIVA AND QUEEN OF PANDYA KING WHO REVIVED SAIVISM IN PANDYA KINGDOM

37.FIRST QUEEN TO FIGHT AGAINST THE BRITISH; RULED IN RAMANATHAPURAM AREA OF TAMIL NADU

38.GREAT PRINCESS WHO INSPIRED THE MIGHTY CHOZA KING RAJARAJA TO BUILD SHIVA TEMPLE IN THANJAVUR; PERSONALLY DONATED TO VARIOUS TEMPLES

39.FAMOUS QUEEN OF MADURAI WHO WAS KNOWN FOR HER BUILDING WORK IN MADURAI.

  1. A WOMAN WHO INSPIRES MILLIONS OF HINDUS EVEN TODAY BY SACRIFICING HERSELF IN FIRE TO SAVE HER HONOUR FROM ALAUDDINN KHILJI, MUSLIM INVADER.

ANSWERS:-

21.VASAVADATTA

22.HARSHA’S SISTER RAJYASHRI

23.AMARAVATHY

24.JEEJABHAI

25.GANGADEVI

26.GANDHARI

27.JABALA (Satyakaman was her son)

28.DAKSHI

29.ADITI

30.PUNITHAVATHY (PEYAAR, KARAIKKAL AMMAIYAAR)

31.MAYADEVI

32.TRIJADA

33.AHALYABHAI

34.RANI LAKSHMIBHAI

35.CHITTOOR RANI CHENNAMMA

36.MANGAYARKARASI

37.RANI VELU NACHIAR

38.KUNTAVAI

39.RANI MANGAMMAL

40.CHITTOOR RANI PADMINI (PADMAVATI)

–subham–

இந்த நூறு இந்தியப் பெண்களைத் தெரியுமா?- QUIZ PART 1 (Post No.5593)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 October 2018

Time uploaded in London – 7-15 AM

(British Summer Time)

Post No. 5593

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தியாவின் புகழ்பெற்ற நூறு பெண்களைத் தெரியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்:-

1.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாக்ஞவல்கிய ரிஷியுடன் தத்துவ விவாதம் நடத்திய வித்தகி யார்?

2.கிரேக்கர்களும், தமிழர்களும், ரோமானியர்களும் புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால்,ஜனகன் சபையில், ஒரு பெரிய முனிவரைக் கேள்வி கேட்ட உலகின் முதல் புத்திசாலிப் பெண் யார்?

3.அழகு, இளமை, ஆரோக்கியம் ஆகியவற்றை அஸ்வினி தேவர்களிடம் பெற்ற வேத காலக் கவிதாமணி யார்?

4.பல பிராணிகளின் அழகிய உறுப்புகளைச் சேர்த்து அகஸ்திய முனிவர் படைத்த பேரழகி யார்?

5.கற்பின் சின்னம்-புதுமணத் தம்பதியர், தேன் நிலவு அறைக்குள் நுழைவதற்கு முன் வானத்தில் பார்த்த, சங்கத் தமிழ் இலக்கியம் போற்றும் பெண் யார்?

6.அழகிய மிதிலை நகரின் பெயரைத் தாங்கும் பெண்மணி?

7.எம (யமன்) தருமனையும் தனது புத்திசாலித்தனத்தால் மடக்கி, கணவனை மீட்டு வந்த புகழ்மிகு, அருள் மிகு, திரு மிகு பெண் யாரோ? செப்பு

8.ராமபிரானுக்கு சுட்ட பழம் கொடுத்த கிழவி யார்?

9.மஹாராஷ்டிரத்தில் அபங்கம் பாடி, புகழ்பெற்ற பக்தை– ஞானேஸ்வரின் சகோதரி– யார்?

10.சீதையின் அழகு காட்டில் கெட்டுப் போகக்கூடாது என்பதற்காக முகப் பூச்சு ‘க்ரீம்’ கொடுத்தவர் எவர்?

 

11.துருபதனின் மகள்- மஹாபாரத வீராங்கனை- நினைவு இருக்கிறதா?

12.ஒரு தவற்றுக்காக கல்லாகி, ராமன் காலடி பெற்று, உயிர்பெற்ற உத்தமி பெயரைச் சொல்லுங்கள்

13.மயனின் மகள்- இலங்கை வாசி- எல்லோரும் காலையில் நினைவுகூறும் ஐவரில் ஒருவர்– அவர் யாரோ? செப்பு

14.வாலியின் மனைவி– காலையில் பெண்கள் போற்றும் பஞ்ச கன்யைகளில் ஒருவர்– தெரியுமா பெயர்?

15.அவள் பெயர் ப்ருதா; அவளின்றி பாண்டவர் இல்லை; யார்? யார்?

16.காதல் கடிதம் கொடுத்து அனுப்ப அன்னப் பறவையை தூதுவிட்ட அழகியைத் தெரியுமா?

17.கானக அழகி- உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்குப் புகழ் ஈட்டிய நாடகத்தின் வனிதாமணி– புனிதை- அவள் பெயர்?

18.கடல் தந்த அமுதம்– விஸ்வாமித்திரனை வசீகரிக்கச் சென்று அவர் சாபத்தில் கல்லான கன்னிகை; அவள் யாரோ?

19.பஜனை என்றால் இவள் பாட்டு இல்லாமல் இல்லை- கிரிதர நாகர என்ற முத்திரையுடன் முடியும் ஆயிரத்துக்கும் மேலான கிருஷ்ண கானம் பாடிய புனிதவதி யார்?

20.வங்கதேசத்தில் பிறந்து, டேராடூனில் சமாதி அடைந்த, ஹரித்வாரில் ஆஸ்ரமம்  உடைய, பெண் சந்யாஸினி யார்?

 

இதோ விடைகள்:

1.மைத்ரேயி, 2.கார்கி வாசக்னவி, 3.கோஷா, 4.லோபாமுத்ரா, 5.அருந்ததி, 6.மைதிலி (சீதை), 7.சாவித்ரி  8.சபரி, 9.முக்தாபாய் 10.அநசுயா, 11.திரவுபதி, 12.அஹல்யா 13.மண்டோதரி, 14.தாரா, 15.குந்தி, 16.தமயந்தி, 17.சகுந்தலை 18.ரம்பா, 19.மீரா பாய், 20. மா ஆநந்த மயீ

–SUBHAM–

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்! (Post No.5592)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 October 2018

Time uploaded in London – 6-41 AM (British Summer Time)

Post No. 5592

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்!

ச.நாகராஜன்

சீர்காழியில் அவதரித்து, தேவாரம் அருளிய திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.

ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும். அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.

அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.

அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.

 

அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.

இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டம் வருமாறு:-

1.116 திரு நீலகண்டப் பதிகம்  

பண் – வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.1
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.2
1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.3
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.4
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.5
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.8
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.9
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.10
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
1.116.11

(இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.) முதலாம் திருமுறை

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த திருக்கொடி மாடச் செங்குன்றூர் உள்ள மண்டலம் கொங்கு மண்டலமே என்று கொங்குமண்டலச் சதகத்தின் 48ஆம் பாடல் கொங்கு மண்டலத்தைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:-

திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்         பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்   திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்     வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே

இப்பாடலின் திரண்ட பொருள் : – சீர்காழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்த  மூர்த்தி நாயனார்  திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குத் திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியிருந்த சமயம் அவ்வடியார்களை நளிர் ஜுரம் தீண்டவே. “அவ்வினைக் கிவ்வினையாம்” என்ற பாடலைத் தொடக்கமாகக் கொண்டு பதிகம் அருளவே அவ்வூர் மட்டுமன்றி அந்நாடு முழுவதும் அந்நோய் தீர்ந்தது. அப்படி ஓதப்பெற்ற தலத்தைக் கொண்டது கொங்கு மண்டலமே.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

***

QUIZ ON 100 GREAT INDIAN WOMEN PART-1! (Post No.5591)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 20-46

(British Summer Time)

Post No. 5591

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

  1. WHO WAS THE WIFE OF RISHI YAJNAWALKYA THAT DISCUSSED THE MYSTERIES OF RELIGION WITH HIM?

2.WHO WAS THE WOMAN WHO CHALLENGED ANCIENT SEE YAJNAWALKYA IN JANAKA’S ASSEMBLY ON PHILOSOPHICAL MATTERS?

3.CAN YOU NAME THE VEDIC WOMAN WHO THE ASVINS GAVE YOUTH,BEAUTY AND HEALTH TO GET A HUSBAND ?

4.WHICH WOMAN WAS CREATED BY SAGE AGASTYA WITH THE GRACEFUL PARTS OF DIFFERENT LIVING BEINGS?

5.WHO IS THE EMBODIMENT OF CHASTIY IN HINDU LITERATURE?

6.CAN YOU NAME THE WOMAN WHO WAS NAMED AFTER HER NATIVE PLACE MITHILAPURI?

7.WHO WAS THE GREAT WOMAN WHO MADE YAMA TO YIELD AND GIVE HER HUSBAND’S LIFE BACK?

8.NAME THE WOMAN WHO GAVE SITA DEVI AN OINTMENT TO KEEP HER BEAUTIFUL?

9.DO YOU KNOW THE WOMAN WHO GAVE BERRIES TO RAMA AFTER TASTING THEM?

10.SISTER OF VARKARI SAINT JNANESWAR WHO COMPOSED 41 ABHANGS; WHO IS IT?

11.DAUGHTER OF DRUPADA; MOST FAMOUS WOMAN IN MAHABHARATA; CAN YOU NAME HER?

12.A WOMAN WHO REMAINED LIKE A STONE TILL RAMA’S FEET  RESTORED HER MENTAL HEALTH? DO YOU KNOW HER?

13.MAYA’S DAUGHTER; RESIDENT OF LANKA; ONE OF FIVE HOLY WOMEN REMEMBERED BY HINDUS EVERYDAY.

 

14.VALI’S WIFE; PART OF FIVE  GREAT WOMEN.

15.THIS WOMAN’S ANOTHER NAME IS PRUTHA IN MAHABHARATA.

  1. A WOMAN WHO USED SWANS TO SEND LOVE LETTERS
  2. A FOREST BEAUTY AND THE HEROINS OF KALIDASA’S MOST FAMOUS DRAMA

18.ONE OF THE CELESTIAL BEAUTIES WHO CAME OUT DURING  THE CHURNING OF OCEAN; INDRA SENT HER TO SEDUCE VISVAMITRA AND WAS CURSED TO TURN INTO A STONE FOR A LONG PERIOD.

19.DEVOTEE OF KRISHNA AND HER BHAJANS ARE VERY FAMOUS;HER SIGNATURE IN HER POEMS IS GIRIDHARA NAGARA. WHO IS THAT GREAT WOMAN?

20.HINDU SAINT BORN IN BANGLADESH AND DIED IN DEHRADUN.  HER ASHRAM IS  IN HARIDWAR.  DO YOU KNOW THAT GREAT WOMAN SAINT?

 

ANSWERS

1.MAITREYI , 2.GARGI, 3.GOSHA, 4.LOPAMUDRA, 5.ARUNDHATI, 6.SITA DEVI (MYTHILI), 7.SAVITRI, 8. ANASUYA, 9.SABARI,10.MUKTABHAI , 11.DRAUPADI, 12.AHALYA, 13.MANDODARI, 14.TARA, 15.KUNTI ,16.DAMAYANTI, 17.SAKUNTHALA, 18.RAMBA, 19.MEERABHAI, 20.MA ANANDA MAYI

–SUBHAM–

வள்ளுவரின் சகோதரி அவ்வையார் (Post No.5590)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 16-49

(British Summer Time)

Post No. 5590

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அவ்வையார், திருவள்ளுவர் ஆகியோர் சகோதர, சகோதரிகள் என்றும், எழுவராகப் பிர்றந்தவர்கள் என்றும் 75 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் உள்ளது. உண்மையோ பொய்யோ, அந்தக் காலத்தில் இந்தப் புத்தககங்கள் பள்ளிக்கூட சிலபஸிலும் இருந்தது.

ஏற்கனவே சில செய்திகளை இங்கு வெளியிட்டுள்ளேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டுபிடித்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு புத்தகம் இதோ:–

புஸ்தகத்தின் பெயர் பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்

ஆசிரியர்- திவான் பஹாதூர் வி.கிருஷ்ணமாச்சாரியார்

ஆண்டு-1906

இத்தகைய செய்திகளை ஒளிக்காது, மறைக்காது எல்லோருக்குமளித்து , ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரைக் கொண்டு, காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து துணிபுகளை வெளியிடுவதே நனி சிறந்தது.

 

 

 

 

old articles

திருவள்ளுவர் யார் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about திருவள்ளுவர் யார் written by Tamil and Vedas

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) | Tamil and …

tamilandvedas.com/2016/02/12…

–subham—