Warning Though I was not able to see the forts or the temples I am writing about it to warn the future visitors. No book told us that the temples and the forts are under the control of the archaeological department and so they will be closed at 4 pm. Since we visited the place during summer we thought it would be wise to go in the afternoon. But at quarter to four the staff started closing the main gates. With his permission I ran inside and took some pictures. So please find out the opening and closing times of the places, particularly under government control. As a result of this limited opening hours that is 10- 4 we missed all the temples and the forts.
Date of our visit – 24-3-2019
Where is it?
28 kilometres from
Tindivanam in Viluppuram district.
29 kilomtres from
Tiruvannamalai.
What is there?
Gingee has three inaccessible hills-
KRISHNAGIRI, CHANDRAGIRI AND RAJA GIRI.
The three hills with forts are covered with
massive fortification walls. The Rajagiri citadel is the highest with 800 feet
in height. It is the most inaccessible with 20 meters deep chasm. Now it is
connected by a bridge.
Period- Ninth Century to 13th century
Barracks and Stables
A series of low vaulted and arched cells on the
western side of the Kalyana Mahal are referred to as the barracks and stables.
The archaeological conservation training camp is
located here.
Anaikulam
Located on the south of the barracks, the
Anaikkulam is a fine tank built of stone with cloistered mandapa surrounding
it.
Granary and Gymnasium
This is the largest granary built in stone with
a spacious entrance passage. The walls are nearly three meters thick. The
stucco decorations outside area are typical of the Vijayanagaram period.
A stone structure with a barrel vaulted roof
found on the north eastern side of the granary is said to be the Gymnasium.
Venkatramanana Temple
This sprawling temple with
its striking pillars with carved sculptures narrates the aesthetic skills of
the Nayaks. Many Tamil inscriptions are found in the walls of the Mandapas.
Venugopalaswami Temple
Located to the west of the inner gate of the
lower citadel, this temple contains a remarkable statue of Lord Krishna playing
on the flute with his consorts on his tow. A finely polished, broad and smooth
slab found in front of the temple is another striking feature.
Kamalakkanni Amman Temple
This temple contains a sacrificial altar and
well preserved mural paintings belonging to the Nayak period.
Citadel on Rajagiri hill
On top of Rajagiri Hill, an audience Hall built
in typical Indo Islamic style, is a domed roof supported by a series of
graceful little pointed arches.
The magazine building is also a noteworthy
structure.
The Ranganath temple is built in a typical
Vijayanagar style. A big iron cannon, four meters long and two metres in
circumference can be seen there.
Two kilometers from
Chenji (Gingee) is Thiru Nathar Kundru (hill). The hillock on the western side
of the road has two Jain caves and a huge boulder containing sculptures of all
the 24 Theerthankaras (Jain Saints) in the ninth century style. An open rock
nearby was the place where monk Chandranandi observed 57 days of fasting and
died around sixth century CE.
பாக்யா
16-4-2019 இதழில் வெளியாகியுள்ள அறிவியல் துளிகள் ஒன்பதாம் ஆண்டு ஆறாம் கட்டுரை -அத்தியாயம் 422
காந்த மனிதன் !
ச.நாகராஜன்
மிரோஸ்லா மகோலா (Miroslaw Magola பிறப்பு :- 29-5-1958) இன்று உலகில் வாழும்
அதிசயமான மனிதர்களுள் மிக முக்கியமானவர். அவர் ஒரு காந்த மனிதர்.
ஆம். அவர் உடலே ஒரு காந்த மண்டலமாக இருக்கிறது. காந்தம் இரும்பை
இழுப்பது போல அவர் உடல் காந்த சக்தி கொண்டு காந்தம் இழுக்கும் இரும்பு போன்ற அனைத்தையும்
தன் பால் இழுக்கிறது.
போலந்தைச் சேர்ந்த மகோலா இப்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
சைகோகைனஸிஸ் எனப்படும் அதீத உளவியல் ஆற்றலால் பொருள்களை அப்படியே
அலாக்காகத் தூக்கி வான் வழியே செல்ல வைத்து தன் உடம்புடன் ஒட்டிக் கொள்ள வைக்கிறார்
இந்த அபூர்வ மனிதர்.
1988ஆம் ஆண்டு இந்திய யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்ட மகோலா தியானத்தையும்
யோகா பயிற்சியையும் மேற்கொண்டார்.
மனித மனத்திற்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதையும் மனித மூளையைப்
பயன்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தினால் அபூர்வ சித்திகளைக் கொள்ளலாம் என்பதையும்
அவர் அனுபவ ரீதியாக உணர்ந்தார்.
வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு கடைசியில் உடலின் காந்தசக்தியால்
பொருள்களைத் தன் உடலில் ஒட்டும் பெரிய சித்தியைப் பெற்றார்.
இவரைப் பல விஞ்ஞானிகளும் ஆராய ஆரம்பித்தனர். ஜெர்மனியில் உள்ள
மாக்ஸ்ப்ளாங்க் இன்ஸ்டிடியூட்டில் பல விஞ்ஞானிகளுக்கு முன் இவர் தனது ஆற்றலைக் காட்ட
அவர்கள் வியந்தனர்.
ஏராளமான அரங்கக் காட்சிகளைப் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு
முன் செய்து காட்டி அவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் இவருக்கும் பகுத்தறிவு நிறுவனமான
ஜேம்ஸ்ராண்டி நிறுவனத்திற்கும் இடைவிடாத போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர் ஒரு பிராட்
என்று பகுத்தறிவாளர் ஜேம்ஸ்ராண்டி கூறவே தன்னைச் சோதிக்காமல் அவர் இப்படிக் கூறுவது
தவறு என்றும் சோதனைக்குத் தான் தயார் என்றும் இவர் பதிலடி கொடுத்து வருகிறார்.
போலந்தில் பிறந்த
மகோலா துரதிர்ஷ்டவசமாக தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தந்தை ஒரு
வாகன விபத்தில் மரணமடைந்தார்; கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்தார்.
1981இல் போலந்தின்
அரசியல் களம் குழப்பமான நிலையை அடைய சோவியத் ரஷியாவின் கொள்கைகளை மகோலா எதிர்த்தார்.
அதனால் அரசின் அடக்குமுறை ஏவி விடப்பட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது திறமையான
வக்கீல் ஜாசெக் டெய்லரின் வாதத்திறமையாலும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலையீட்டாலும்
அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மனைவி குழந்தையுடன் ஜூரிச்சுக்குச் சென்று
குடியேறினார். இவர் போன்றவர்களின் தீவிர முயற்சியால் 1989இல் போலந்தில் கம்யூனிஸ்ட்
ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.
பின்னர் சீனா, நேபாளம்,
திபத், இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்று பல கலைகளையும் கற்றார். 1992 முதல் தீவிரமாக
தனது சைகோகைனஸிஸ் ஆற்றலை உலகினருக்குக் காட்ட ஆரம்பித்தார்.
இரும்பு பாத்திரங்களை
உயரத் தூக்குவது, அங்கும் இங்கும் பறக்க வைப்பது, கீழே இறக்குவது போன்றவற்றை அவையினருக்கு
முன்னே செய்து காட்டியதோடு நூற்றுக் கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்ற ஆரம்பித்தார்.
பிரபல காமடி எழுத்தாளரான
ஸ்டான் லீ ( 28-12-1922 – 12-11-2018) தனது சூபர் ஹ்யூமன் நிகழ்ச்சியில் 2010 ஆண்டு
மகோலாவை அழைக்க அதில் தோன்றி மிகவும் பிரபலமானார் மகோலா! ஹிஸ்டரி சானல், டிஸ்கவரி சேனல்
போன்ற அனைத்து சேனல்களிலும் இவர் தனது ஆற்றலைக் காட்டி உலகினரை அயர வைத்தார்.
ஆங்காங்கே மூளையின்
அபூர்வ ஆற்றலைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தி பவர் ஆஃப் ப்ரெய்ன் (மூளையின் சக்தி)
என்ற இவரது புத்தகம் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம்.
இவரது பல்வேறு
நிகழ்ச்சிகளை (யூடியூப் உள்ளிட்ட) இணையதள சேனல்களில் இன்றும் காணலாம்.
இது தவிர இன்னும் ஏராளமான காந்த மனிதர்கள் உலகில் தங்கள் ஆற்றலைக்
காட்டிப் பவனி வருகின்றனர்.
ருமேனியாவில் புசாரெஸ்டில் உள்ள மருத்துவமனையில் பிஸியோதெராபிஸ்டாகப்
(Physiotherapist) பணி புரியும் ஆரெல் ரெலேனு
(Arurel Raileanu, Bcuharest,
Romania) தனது அதீத காந்த ஆற்றலால் 26 கிலோ எடையுள்ள டி.வி.செட்டையே தூக்கி விட்டார்.
இவரை சோதனை செய்ய வந்த கின்னஸ் ரிகார்ட் நிபுணர்கள் முன்னர் தனது ஆற்றலைக் காண்பிக்கவே
அவர்கள் வியந்தனர்; உலகின் மிகச் சிறந்த காந்த மனிதன் (most powerful human magnet) என்ற கின்னஸ் ரிகார்டை
இவருக்கு வழங்கினர்.
இது ஒருபுறமிருக்க 2011ஆம் ஆண்டு ஆறு வயதுச்
சிறுவன் ஒருவன் தன் விசேஷ காந்த ஆற்றலைக் காண்பித்து உலகினரை வியக்க வைத்தான். க்ரோஷியாவைச்
சேர்ந்த ஐவான் ஸ்டாய்ஜிகோவிக் ( Ivan Stoiljkovic) என்ற சிறுவன் ஊடகங்கள்
முன்னே எவர்சில்வர் பாத்திரங்கள், ரிமோட் கண்ட்ரோல்கள், செல் போன்கள் உள்ளிட்டவற்றைத்
தன் உடலுடன் ஒட்டிக் காண்பித்தான். அவை அப்படியே காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத்
துகள் போல அவனுடன் ஒட்டிக் கொண்டன. ‘மாக்னெடிக் பாய்’ – காந்தச் சிறுவன் என அவனை ஊடகங்கள்
புகழ்ந்தன.
மனிதனுக்கு காந்த
ஆற்றல் கிடையாது என்பது பகுத்தறிவாளர் ஜேம்ஸ் ராண்டியின் கொள்கை. ஒரு காம்பஸை காந்தப்
புலம் உடையதாகச் சொல்லும் ஒரு மனித உடலுக்கு அருகில் கொண்டு சென்றால் அதன் முள் அங்கும்
இங்கும் எல்லாத் திசைகளிலும் ஊசலாடும். ஆனால்
இப்படி ஆற்றல் உள்ளதாகக் கூறும் எவருக்கும் இப்படி ஆற்றல் உள்ளதை காம்பஸ் நிரூபிக்கவில்லையே
என்கிறார் அவர்.
ஆனால் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்கள் பொய்யா என்ன என்று அவரைக்
கிண்டல் செய்கின்றனர் பார்வையாளர்கள்.
பிம் பார்டிகிள் (PYM PARTICLE) என்ற ஒரு புது துகளை
விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளதால், ஒருவேளை இப்படிப்பட்டவர்கள் மீது அந்த விசேஷ துகள்
இருக்குமோ என்று ஒரு விஞ்ஞானி கூறுகிறார்.
ஆக காந்த மனிதர்கள் அறிவியல் கொள்கைக்கு அப்பாற்பட்டு நிஜத்தில் உலா வருவதென்னவோ உண்மை தான்; அவர்களை கின்னஸ் தனது சாதனையாளர் பட்டியலில் சேர்ப்பதும் உண்மை தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மைக்ரோ கம்ப்யூட்டர் புரட்சிக்கு அடிகோலிய கணினித் துறை நிபுணரான
ஸ்டீவ் ஜாப்ஸ் (பிறப்பு : 24-2-1955 – மறைவு : 5-10-2011) ஒரு நாள் அவர் கீழ் பணியாற்றி
வரும் விஞ்ஞானிகளைச் சந்தித்தார். அவர்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஏனெனில் முதல்
ஐ-பாட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு விட்டது. அதை ஸ்டீவ் பார்த்து அங்கீகரிக்க வேண்டியது
தான் பாக்கி.
மிக்க மகிழ்ச்சியுடன் அதை அவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸிடம் தர அவர்
அதை வாங்கிக் கொண்டார். அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்தார். பின்னர் அதை
நுணுகி ஆராய்ந்தார். அதற்குப் பின்னர் அதன் எடை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க
அதைக் கையால் தூக்கிப் பார்த்தார். பின்னர் அனைவரையும் நோக்கி அது சரியில்லை என்று
நிராகரித்து விட்டார். அது மிகவும் பெரிதாக இருக்கிறது என்றும் இன்னும் சிறிதாக இருந்தால்
நல்லது என்றும் தனது அபிப்ராயத்தை அவர் கூறினார்.
அங்கு குழுமியிருந்தோர் அனைவரும், எப்படி தாங்கள் மிகவும் முயன்று அதை அமைத்தோம் என்று கூறி
அதை இன்னும் சிறியதாக ஆக்க முடியவே முடியாது என்றும் விளக்கினர்.
ஸ்டீவ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
பின்னர் எழுந்து அந்த ஐ- பாடைக் கையில் தூக்கிக் கொண்டு பக்கத்தில்
இருந்த மீன் தொட்டி அருகே சென்றார். அதை தொபேரென்று அந்த மீன் தொட்டிக்குள் போட்டார்.
அனைவரும் திடுக்கிட்டனர்.
மீன் தொட்டியின் அடியை ஐ-பாட் தொட்டது. அதிலிருந்து நீர்க்குமிழிகள்
மேலே வரலாயின.
ஸ்டீவ் ஜாப்ஸ் கூறினார் : “ இதோ பாருங்கள், நீர்க் குமிழிகளை.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் அதில் நிறைய இடம் இருக்கிறதென்று.
அதை இன்னும் சிறியதாக்குங்கள்”
அனைவரும் அங்கிருந்து சென்றனர். ஐ- பாட் தனது சிறிய வடிவத்தைப்
பெற்றது.
லண்டனில்
ராயல் கட்டிடக் கலைஞர் சங்கம் புகழ்பெற்றது. 1980ஆம் ஆண்டில் அவர்கள் வெளியிடும் மாத
இதழில் தாஜ்மஹால் பற்றிய வழக்கமான கதைகளை எதிர்த்து இரண்டு கடிதங்கள்
வெளியிடப்பட்டன.ஒன்று திரு ஓக் எழுதியது; மற்றொன்று நான் எழுதிய கடிதம்.
எங்களுடைய வாதங்களை எவரும் எதிர்த்து எழுதவில்லை. ஓக், பாதுஷாநாமா தொகுதி 1, பக்கம் 403 விஷயத்தை
மேற்கோள் காட்டியிருந்தார். நான் என் கடிதத்தில் கூறியது என்ன?
ஷாஜஹான்
ஆட்சிக் காலத்துக்கு முன்னர் ஆக்ரா நகரம் எப்படி இருந்தது? அதுதான் 17ஆம்நூற்றாண்டு வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் மழுப்பிய விஷயம். ஆங்கிலேயர்களைப் போலவே
டச்சுக்காரர்களும் வியாபாரம் செய்ய நம் நாட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆக்ராவில்ஒரு வணிக நிலையம் இருந்தது. 1620 முதல் 1627 வரை அவர்களுடைய வர்த்தகப்பிரதிநிதியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ
பெல்சார்ட் என்பவர் ஆவார். ஹாலந்து நாட்டிலுள்ள தனது மேலதிகாரிகளுக்கு அவர் 1626ல் ஒரு அறிக்கை தயாரித்து அனுப்பினார்.
அவரும் ஆக்ரா நகரம் அப்போது இருந்த நிலைமையை விளக்குகிறார். இது தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த ஒரு அதிசயம்.
அவர் சொல்கிறார்:-
இது
குறுகலான, ஆனால் நீளமான ஒரு நகரம். ஏனெனில் எல்லா
செல்வந்தர்களும்,
செல்வாக்குமிக்கவர்களும்நதிக் கரைஓரமாக பத்தரை மைல் தொலைவுக்கு
அரண்மனைகளைக் கட்ட்டியுள்ளனர். நான் முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
வடக்கிலிருந்து
துவங்கினால் பஹதூர் கானின் அரணமனை இருக்கிறது. பின்னர் போஜ……….பிறகு
செங்கோட்டை இருக்கிறது. (இதை பெலசார்ட் வருணிக்கிறார்).
அதையும் தாண்டி பெரிய மார்க்கெட் (நகாஸ்)
உளது. அதையும் தண்டி பிரபுக்கள் அரண்மனைகள்- மீர்ஜா அப்துல்லா, ஆகாஅநவுர், மஹபத் கான், காலஞ்சென்ற ராஜா மான்சிங்கின் அரண்மனை, மதோ சிங் அரண்மனை”
இந்த
அறிக்கையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1925ம் ஆண்டு முதல் கிடைக்கிறது. ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியரும்
குறிப்பிடவில்லை. ஏன்? காரணம்மிகவும் தெரிந்ததே.
நதிக்கரையில்
பத்தரை மைல் நீளப் பிரதேசம் முழுதும் அரண்மனைகள் இருப்பதாக 1626ல் பெலசார்ட் கூறியுள்ளார். ராஜாமன்சிங்கின் அரண்மனை, கடைசி அரண்மனைக்கு ஒரு இடம் முன்னதாக
இருந்தது. மனைவியை அடக்கம் செய்வதற்காக ஷாஜஹான் இதை எடுத்துக்கொண்டதாக பாதுஷா நாமா சொல்கிறது. ஆகையால் நாம் தாஜ்மஹால் என்று
எதைச் சொல்கிறோமோ அது ராஜா மான்சிங்கின் அரண்மனையே.இந்த உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்
நம்மிடமிருந்து மறைத்து வைத்திருந்தனர்.
என்னுடைய
முயற்சிகளுக்கு ஒரு பலன் கிடைத்தது; 1982ம் ஆண்டில் தொல்பொருட் துறை ‘தாஜ் மியூஸியம்’ என்று ஒரு சிறு புத்தகம் வெளியிட்டது.
அதன் ஆசிரியர்கள் வழக்கமாகச் சொல்லப்படும் கதைகளை எல்லாம் சொல்லிவிட்டு மும்தாஜ்,
பர்ஹான்பூரில் இறந்தார் அவருடைய சடலம் அங்கே அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு
ஆறு மாதங்களுக்குப் பின்னர் அந்த சடலத்தைத் தோண்டி எடுத்து சவப்பெட்டியை
ஆக்ராவுக்கு அனுப்பினார். அதுவரைக்கும் அந்த இடத்தில் ராஜா மான்சிங்கின் அரண்மனை
இருந்தது” … இதை எழுதிய ஆசிரியர்கள் ஜியாவுதீன் அஹமது தேசாய், கவுல். இப்பொழுது அந்த அரண்மனை
தாஜ்மஹால் என்று அழைக்கப்படுகிறது இதைவிட எப்படி எளிதாகச் சொல்ல முடியும்? ஒரு சடலத்தை அரண்மனையில் புதைக்க
கட்டிடப் பணிகள் எதுவும் தேவையா?
2.சிறு
நீரகக் கல் நோயைத் தீர்க்கும் பிரம்ம தீர்த்தம்
3.தேவார
வைப்புத் தலம்
4.வெட்டுப்பட்ட
சிவலிங்கம்
5.ராஜ
ராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்
6.நிறைய
கல்வெட்டுகள்
7.வயல்
நடுவில், தொலை தூரத்தில் கோவிலமைந்த அதிசயம்
8.நாங்கள்
சென்ற தேதி – 25-3-2019
9.எங்கே
உள்ளது?
இந்த
சிவன் கோவில் திருச்சி மாவட்ட லால்குடி வட்டத்தில் இருக்கிறது. நாங்கள்
திருச்சியிலிருந்து காரில் சென்றோம். பாடலூரிலிருந்து நாலு கிலோ மீட்டர் தொலைவு.
சிவனின்
பெயர்- சுத்த ரத்தினேஸ்வரர்
இறைவியின்
பெயர்- அகிலாண்டேஸ்வரி
தீர்த்தம்
– பிரம்ம தீர்த்தம்
10. கோவில்
பிரகார மேல் சுவற்றில் நவக் கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்.
11. கோவிலில் ஒட்டியுள்ள விளம்பரப் பலகையில் கோவிலின் சிறப்புகள் வரையப்பட்டுள்ளன. (இணைப்பில் விவரம் காண்க)
பென்ஸில்வேனியா பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை
மேற்கொண்டது – எப்படி மூட நம்பிக்கைகள் எனப்படும் சூப்பர்ஸ்டிஷன் பரவுகிறது என்பது
பற்றி.
ஒரு நம்பிக்கையும் இல்லாதவரும் கூட, ஒரு அமைப்பில்
இன்னொருவர் செய்வதைப் பார்த்து அதையே தானும் செய்கிறார். பலரும் இதை வழக்கமாகச்
செய்யும் போது அது ஒரு அர்த்தமில்லாத – மூட நம்பிக்கைப் பழக்கமாக மாறுகிறது;
பரவுகிறது.
திராவிடத் தம்பிகள் கோவிலில் மணி அடிப்பது,
தெய்வச் சிலைகளுக்கு மாலைகளை அணிவிப்பது, கோபுரத்தை நோக்கிக் கும்பிடுவது,
அர்ச்ச்னை செய்வது உள்ளிட்ட ஏராளமான வழிபாட்டு வழக்கங்களைக் கிண்டல் செய்வது
வழக்கம்.
ஆனால் என்ன ஆயிற்று?
தலைவர் சமாதிக்குச் செல்லும் போது செருப்பைக்
கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்ல வேண்டும்.
ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம் சமாதியில்.
கும்பிடலாம் – கையெடுத்து.
அந்தச் சிலைகளைப் பார்த்து ஆனந்திக்கலாம்; கண்ணீர்
வடிக்கலாம்.
அதை மதிப்புடன் நோக்கலாம்; வழிபடலாம்.
அதற்கு ஒருவர் அவமரிதையாக ஏதேனும் செய்து விட்டால்
அவ்வளவு தான் – ஊரே களேபரம் அடையும்.
அட, நீங்கள் தானே சொன்னீர்கள், சிலையை இழித்துப்
பேசினால் சிலை என்ன பேசவா செய்யும் என்று.
ஊது பத்தி எதற்கு, செருப்பை ஏன் அவிழ்க்க வேண்டும்
என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
ஆனால் பகுத்தறிவு மழுங்கி, புதிய மூட நம்பிக்கைகளை மேற்கொண்டு விட்டீர்களே!
இரண்டு வண்ணக் கொடி எதற்கு, ஒரு சின்னம் தான்
எதற்கு? அதற்கு வணக்கம் தான் ஏன், அதை மதிப்பது தான் எதற்கு?
ஏன் பேச்சில் கூட அனைவரும் ஒரே பாட்டர்னைப்
பின்பற்றுவது தான் ஏன்? “வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு” ஊரிலுள்ள அனைத்துப் பெயர்களையும் விளித்து
அழைத்து … அடடா, எத்தனை மணித்துளிகள் வேஸ்ட்!
மூட நம்பிக்கைகளை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுத்
தம்பிகள் வளர்க்கும் புதிய மூட நம்பிக்கைகள்!
இது முந்தையதை விட மோசமானது.
அங்கு மனிதனைத் துதி பாடவில்லை.
இங்கு “செத்து மாயும்” மனிதனைத் தெய்வமாக்கி விடுகிறார்கள்!
அடடா, என்ன ஒரு பகுத்தறிவு!
இதைத் தான் பென்ஸில்வேனியா ஆய்வு நன்கு ஆராய்ந்து
தனது முடிவைச் சொல்கிறது.
“ஒருவனை இன்னொருவன் பார்க்கிறான்; அதன் படி
நடக்கிறான்; அது நாளடைவில் ஒரு பழக்கமாக நம்பிக்கையாக மாறுகிறது.”
ஆனால் ஹிந்து மதத்தில் ஏற்பட்டுள்ள பழக்க
வழக்கங்கள் உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மந்திரங்களைக் கண்ட மஹரிஷிகளால்
ஏற்படுத்தப்பட்டவை.
இவை பற்றிய ஆய்விற்கு அறிவியல் வரவில்லை; வந்தால்
ஒரு வேளை, வியத்தகும் விஷயங்கள் வெளியாகலாம்.
அதனால் தான் விவேகானந்தர் கூறினார் “நமது
மஹரிஷிகள் காலத்தினால் மிகவும் முற்பட்டவர்கள்; அவர்களை சரியாக் அறிந்து கொள்ள
வெகு காலம் ஆகும்” என்று.
அறிவியல் வளர வளர ஹிந்து மதத்தின் நம்பிக்கைகள்,
பழக்க வழக்கங்கள் வியப்பை ஊட்டுகின்றன. அதை அறிவியல் விளக்கும் போது
பிரமிக்கிறோம்.
பகுத்தறிவுகளின் புதிய மூட நம்பிக்கைகள் காலத்தால்
அழிந்து படுபவை. ஆனால் மாறாத நியதிகள் உடைய ஹிந்து பாரம்பரியப் பழக்கங்கள்
உள்ளர்த்தம் கொண்டவை, நீடித்து நிலைப்பவை! இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்!
இவற்றைப் போற்றி அதன் படி நடப்பது நமக்குச்
சிறப்பை அளிக்கும்!