லண்டனுக்கு அருகில் வசிக்கும்
திரு.காட்போலே, தாஜ்மஹாலின் உண்மைக் கதையை
ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்க்க ஒரு நண்பர் மூலம் என்னை
அணுகினார். நான் மொழி பெயர்த்த கட்டுரையை எனது பிளாக்கில் வெளியிட அனுமதி தந்தார்.
இதோ நீண்ட கட்டுரை:
தாஜ் மஹால்- உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது
தாஜ்
மஹால் பற்றிப்பல கதைகள் உண்டு.ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு
வாக்கியத்தைக் காணலாம்- ‘இதைக் கட்டுவதில் 22 ஆண்டுகளுக்கு 20,000 பேர் ஈடுபட்டனர்’. இது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஒரு
சின்னக் கேள்வி. யாரிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது?
பிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஜே பி டவர்னியர் எழுதிய இந்தியப்பயணம் என்ற நூலில் இருந்துதான் இந்த
எண்ணிக்கை வந்தது. அவர் சிவாஜியின் காலத்தில் இந்தியாவுக்குஆறு முறை—1638 முதல் 1668 வரை — துணிகர பயணங்களை மேற்கொண்டார்..
டாவர்னியர் சொல்கிறார்- “இந்தக் கட்டிடப்பணியின் துவக்கத்தையும் நிறைவையும்
நான் கண்டேன். இதில் 22 ஆண்டுகளுக்கு
20000 ஊழியர்கள் இடைவிடாது
பணியாற்றினர்” என்று.
டவர்னியரின்
புஸ்தகம் முதலில் பிரெஞ்சு மொழியில் 1675ல் வெளியானது.அந்தக் காலத்தில் ஒரு தனி மனிதன் இவ்வளவு நீண்ட பயணம்
செய்வது ஒரு துணிகரச் செயலாகக் கருதப்பட்டது. பயணத்தில் பல கஷ்டங்களைச் சந்திக்க
வேண்டியிருக்கும்;
பலமொழி, கலாசாரம் உடைய ஆட்களுடன் பழக வேண்டியிருக்கும்; அவர்களுடைய நடை உடை பாவனைகளுக்கு ஏற்ப
மாறவேண்டியிருக்கும்; பின்னர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்; இதுவே நம்பமுடியாத சாதனை. அத்தோடு
டவர்னியரோ வைரம் முதலான ரத்தினக் கல்
வியாபாரம் செய்பவர்.ஒரு முறை அல்ல;இரு முறை அல்ல; டவர்னியர் இப்படி ஆறு முறை பயணம்
செய்தார். ஆகையால் அக்காலத்தில் அவருடைய புஸ்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1677 முதல் 1811க்குள் அவருடைய புத்தகம்
ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது .ஒன்பது ஆங்கிலப் பதிப்புகள்
வெளியாகின.அதே காலத்தில் 22 பிரெஞ்சு
மொழிப் பதிப்புகள் வெளியாகின.
1889ம் ஆண்டு டாக்டர் பால் என்பவர்
பிரெஞ்சு புத்தகத்தை மொழி பெயர்த்து முந்திய தகவல்களைத் திருத்தினார். அவர் நிறைய
அடிக்குறிப்புகளையும் சேர்த்து கூடுதல் தகவல் சேர்த்தார். டவர்னியரின் பயணத்தை
நன்கு ஆராய்ந்து அவரது ஆறு பயணங்களின் விவரங்களையும் சேர்த்தார்.
அதிலிருந்து டவர்னியர் இரண்டு முறை மட்டுமே ஆக்ராவுக்கு வந்ததது தெரிகிறது 1640-41 குளிர் காலத்திலும் 1665ம் ஆண்டிலும். இது இன்னொரு சுவையான
வினாவை எழுப்பும்.
ஷாஜஹானின்
மனைவி 1631ம் ஆண்டில் இறந்ததாகவும் உடனே ஷாஜஹான்
தாஜ் மஹல் கட்டிட வேலையைத் துவங்கியதாகவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அது
சரியென்றால் டவர்னியர் தாஜ்மஹால் கட்டத் துவங்கியதைப் பார்த்திருக்க முடியாது.
ஏனெனில் அவர் அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே ஆக்ராவுக்கு வந்தார்.
அவுரங்க
சீப், அவருடைய தந்தையான ஷாஜஹானை ஆக்ராவிலுள்ள செங்கோட்டையில் 1658 முதல் சிறை வைத்து ஆட்சியைக்
கைப்பற்றினார்.அவுரங்கசீப் தாஜ்மஹாலை கட்டி முடித்தார் என்று எந்த வரலாற்று
அறிஞரும் எழுதவில்லை. அது சரியென்றால், டவர்னியர் தாஜ்மஹால் கட்டிடம் நிறைவு அடைந்ததையும் பார்த்திருக்க
முடியாது.
அப்படியானால்
20,000 தொழிலாளர்கள் இடைவிடாது பணியாற்றினர்
என்று டவர்னியர் சொல்லுவது அர்த்தமற்றது.ஏன் இந்த வரலாற்று உண்மையை 117 ஆண்டுகளாக வரலாற்று அறிஞர்கள்மறைத்து வைத்தனர் ? காரணம் மிகவும் தெளிவானதே.இந்த உண்மை, கதையின் அஸ்திவாரத்தையே ஆட்டுகிறது.
பாதுஷாநாமா
– இதுஎன்ன சொல்கிறது?
இந்துக்களுக்கு
வரலாற்று உணர்வே இல்லை என்று பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுவர். முஸ்லீம்
ஆட்சியாளர்கள் மட்டுமே வரலாற்று தகவல்களைப் பதிவு செய்ததாக விளம்புவர்.போகட்டும். நாம் ஷாஜஹான் காலத்தில் எழுதப்பட்ட
பாதுஷா நாமா பக்கம் நம் பார்வையைச் செலுத்துவோம். வங்காளத்தில் இருந்த ஆசியக்
கழகம் 1867, 1868 ஆண்டுகளில் பாதுஷா நாமாவின் பாரஸீகப்
பதிப்பை இரண்டு பகுதிகளாக வெளியிட்டது.ஆங்கிலமேஜர் ஒருவரின் மேற்பார்வையில் இரண்டு
மௌல்விகள் இதைச் செய்தனர். மிகவும் விந்தையான விஷயம் என்னவென்றால் தாஜ் மஹால் எப்படிக்
கட்டப்பட்டது என்று பாதுஷா நாமா சொல்லுவதை
எந்த வரலாற்று ஆசிரியனும் வெளியிடுவதில்லை. ஏன்?
எட்டாவது
நூற்றாண்டில் முகமது பின் காசிம் சிந்து நதி தீரத்தில் நடத்திய தாக்குதலிலிருந்து 19-ஆவது நூற்றாண்டில் மராட்டியர் ஆட்சி
வீழ்ச்சி அடையும் வரையான இந்தியவரலாற்றை எழுதும் மஹத்தான பணியை எலியட் மற்றும் டவ்சன் என்ற இரு ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். அதாவது1200 ஆண்டு வரலாறு. ஆனால் முஸ்லீம்கள்
எழுதிய வரலாற்றை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் எழுதினர். 1867 முதல் 1877 வரை பத்து தொகுதிகளாக அவை வெளியாயின.
ஏழாவது தொகுதி ஷாஜஹான், அவுரங்கசீப் ஆகியோரின் ஆட்சி பற்றியது. அதில் தாஜ்மஹால்
என்றசொல்லே இல்லை.
அவர்கள்
என்னசொல்லியிருக்க வேண்டும்? நாங்கள் ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில் அவரால் அதிகாரபூர்வமாக எழுதிவைக்கப்பட்ட
பாதுஷாநாமாவை ஆதாரமாகக் கொண்டு இந்த வரலாற்றை எழுதியுள்ளோம். அதில் தாஜ் மஹால்
பற்றி எதுவும் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் அப்படி எதுவும்
செப்பவில்லை. வரலாற்று அறினஞர்கள் இதையும் கடந்த 130 ஆண்டுகளாகச் நம்மிடம் சொல்லவில்லை.
1896ம் ஆண்டு ஆக்ராவின் விரிவான வரலாறு என்ற நூலை கான் பகாதூர் சையது முகமது லதீப் எழுதினார்.அவர் பாதுஷாநாமாவை பல முறை மேற்கோள் காட்டினார். ஆனால் பக்கங்களின் எண்களைக் குறிப்பிடவில்லை. பக்கம் 105-ல் அவர் சொல்கிறார்,………………………..
Whistler completed a portrait for a wealthy and highly placed
client, who was dissatisfied with the finished work.
“I really think Mr Whistler, he explained, that it is a bad
work of art.”
Whistler shrugged and looked coolly at the man. He said, “but
then you must admit that you are not a good work of nature.”
(James Abbott
McNeill Whistler was an American artist, active during the American Gilded Age
and based primarily in the United Kingdom. He was averse to sentimentality and
moral allusion in painting, and was a leading proponent of the credo “art
for art’s sake”. Wikipedia
Whistler once admired a picture Rossetti was painting and
sometime afterward asked him how it was going.
“All right, said Rossetti, I have ordered a stunning frame
for it” .
Later Whistler saw it framed, but not at all advanced in
execution. “You have done nothing to it since I saw it, have you?”
“No,oo,said Rossetti, but I have written a stunning sonnet on
the subject”.
“Then, replied Whistler, take out the picture and frame the
sonnet”.
(Gabriel Charles
Dante Rossetti (12 May
1828 – 9 April 1882), generally known as Dante Gabriel Rossetti(/rəˈzɛti/),[1] was a British
poet, illustrator, painter and translator, and a member of the Rossetti family).
Xxx
Whistler and Turner Rivalry
Whistler detested Turner. Unwittingly a lady
approached him one day requesting Mr Whistler, my husband has discovered in an
auction shop what he thinks are two genuine Turners. Would you be kind enough
to come and tell us whether they are genuine Turners or imitation Turners.
Madam, said Whistler, that is a fine distinction.
(Joseph Mallord William TurnerRA (23
April 1775 – 19 December 1851), known as J. M. W. Turner and
contemporarily as William Turner,[a] was an English Romantic painter, printmaker and watercolourist.
He is known for his expressive colourisations, imaginative landscapes and
turbulent, often violent marine paintings.)
Xxx
Bury your
Paintings!
A painter was advised to turn a physician:
For now all his faults were seen; then they would be buried.
Xxx
I like Ladies Room!
Helen Westley, the actress, while playing in a Theatre Guild Show in Chicago, decided to see the sight s of the city. Some days later, a culture bitten colleague enthusiastically raised the subject of her visit to the galleries of the Art Institute. The room of contemporary American painters is superb! She chanted.
“I prefer the Rembrandt room”, commented Frank Reicher. Then everyone turned questioningly to the noted character actress.
“And which room in the museum do you prefer, Helen?” “I, remarked, the incorrigible Miss Westley without blinking an eyelash, “Why I prefer the ladies room.”
(Helen Westley (born Henrietta Remsen Meserole Manney; March 28, 1875 – December 12, 1942) was an American character actress). Xxx Have you seen an Angel? At a showing of the work of Rockwell Kent, a woman, who had been gazing at one of his celebrated angels, approached him and said, No angel ever looked like that! Have you ever seen an angel, Madam? asked Kent.
மேஜர் மஹம்மத் அக்பர்
கான் 1939இல் பிரான்ஸில் பிரிட்டிஷ் எக்ஸ்பிடிஷனரி ஃபோர்ஸில் பணியாற்றியவர். அவர் அலகாபாத்தில்
1942இல் ஜனவரி 11ஆம் தேதி நிகழ்த்திய உரை ஒன்றில் இப்படிக் கூறினார்:
“பிரான்ஸ் தேசத்து மக்கள்
இன்னும் இந்திய துருப்புகள் பிரான்ஸ் தேசத்தில்
வீரத்துடன் போரிட்டதை நினைவு கொண்டிருக்கிறார்கள். சென்ற பெரும் மஹா யுத்தத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் இந்திய ராணுவ வீரர்களுக்கு
விக்டோரியா கிராஸ் அளிக்க முடிவு செய்தார்.
வரலாறு இந்தியர்கள் தங்கள் ரத்தத்தைப் பெருமிதத்துடன் தங்களை அணுகியோருக்கும்
தங்களிடம் அன்பு பாராட்டியவர்களுக்காகவும் அளித்தவர்கள்.
வீரம் செறிந்த இந்திய
ராணுவ வீரர்கள் மிகவும் மோசமான நிலையில் சண்டை புரிந்தவர்கள். இருந்த போதிலும் எப்போதும்
அவர்கள் மலர்ச்சியுடன் இருந்தனர். அவர்களின் மன தைரியம் எப்போதுமே உச்சத்தில் இருந்தது.
**
லெப்டினண்ட் ஜெனரல் சர்
லூயிஸ் ஹீத் இந்திய ராணுவ வீரர்களைப் பாராட்டி இப்படிக் கூறினார்:
இந்திய ராணுவ வீரர்கள்
எதிரியைக் காண நேரிட்ட போதிலெல்லாம் அபார தைரியத்துடன் அவர்களுடன் சண்டையிட்டனர்.
நன்றி : ஆங்கில வார இதழ் ட்ரூத், தொகுதி 9 இதழ் 39 – 30-1-1942
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது:
Major
Md. Akbar Khan who was in the British Expiditionary force in France in 1939 in
a lecture delivered in Allahabad on 11 January (1942) said:
“The French people still remember the valour
of the Indian troops because it was in France during the last Great War that
His Majesty the King decided to give Victoria Cross to Indian soldiers….
History
was full of examples of Indians who proudly shed their blood for those who had
been kind to them and who sought protection in their midst…
The
brace Indian soldiers have fought under the worst conditions, yet they were
always cheerful. Their morale was always high.”
2)
Lieutenant General Sir Luis Heath commending the Indian troops said:
“
The Indians were fighting superbly whenever they got the chance to see and came
to grips with the enemy.”
வத்தக்குழம்பு வைப்பது எப்படி? (Post No.6286) by S Nagarajan
யாருடி போன்? திருப்பித் திருப்பி ஆஃப் செய்றே?
“அது தான் என் ஃபிரண்டும்மா. லக்ஷ்மிம்மா. வெளியூர்லேர்ந்து வந்திருக்கே. பசிங்கறே! இப்ப அவளோட பேச ஆரம்பிச்சா நீ சாப்ட்ட மாதிரி தான். அதான் அப்பறம் பேசிக்கலாம்னு போனை ஆஃப் பண்றேன்.”
“அட, லக்ஷ்மியா! அவளை ஏண்டி கட் பண்றே! அப்படி என்ன பேசுவா, அவ?”
“வத்தக்குழம்பு எப்படி வைக்கறதுன்னு கேட்பா. மோர்க்குழம்பு எப்படி செய்றதுன்னு கேட்பா! அப்பறம் நாளைக்கு விடிஞ்சு போகும்.”
“சீ! அபத்தமா பேசாதடி. அஞ்சு நிமிஷத்திலே நான் சொல்லிக் கொடுத்திடுவேன். அவளைக் கூப்பிடு. அவள் க்ஷேமமா இருக்காளான்னு கேட்ட மாதிரியும் இருக்கும்”
“அம்மா, உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நெனக்கிறேன். நீ இன்னிக்கி பசிலே மயக்கம் போட்டு விழப்போற. எதுக்கும் டாக்டர் இருக்காரான்னு செக் பண்ணிக்கறேன்.”
“எந்த பிராண்டு மாமி. பிஸ்லேரி தான் ஒசத்திங்கிறா. ஆனா என்கிட்ட பட்டர்பிளை தான் வரது”
“பட்டர்பிளையா! அது பறக்கலையோன்னோ. பறக்காம இருந்தா சரி, அதையே வச்சுக்கோ. கொதிக்க வை”
“மாமி எத்தனை டம்ளர்னு சொல்லலையே மாமி”
“உத்தேசமா நாலு டம்ளர் எடேன்”
“டம்ளர் எத்தனை மில்லி லிட்டர் மாமீ?”
“ஓ, அதைக் கேட்கறயா, 150 மில்லி லிட்டர் டம்ளர்லே எடேன்”
கொதிக்க வை.
“மாமி, டெம்ப்ரேச்சர் எவ்வளவு இருக்கணும் மாமி?”
“இதென்னடிம்மா, கேள்வி. கொதிக்கணும் அவ்வளவு தான்!”
“டெம்பரச்சர் சொன்னா சௌகரியமா இருக்கும்”
‘ஒரு நூறு டிகிரி வச்சுக்கோயேன்”
“மாமீ, பாரன்ஹீட்டா, செண்டிக்ரேடா”
“நல்ல வேளை, கெல்வினை விட்டுட்டயே. எனக்குக் கொஞ்சம் தலை சுத்தறது. கொதிக்க வச்சயா இல்லையா?”
“மாமி, கோபிச்சுக்காதேள். நல்ல விவரமா சொல்றேள். அப்பறம்?”
“புளியைத் தனியாக் கரை”
‘எந்தப் புளியை மாமி, கொட்டை இருக்கறதா, இல்லை, கொட்டை எடுத்ததா? மங்களூர் புளியா இல்லை, பிராண்டட் புளியா?”
“ எது கிடைக்கறதோ அதை எடுத்துக்கோ. நன்னா, கரை.’
“எப்படி கரைக்கறது மாமி. வெறும் கையாலயா, க்ளவுஸ் போட்டுக்கணுமா?”
“ஏண்டீ, நீ லாஸ் ஏஞ்சலஸ்லேர்ந்து எப்ப வந்தே? அங்கே ஏதோ கோர்ஸ் படிச்சயாமே, அங்க எப்படி கரைக்கச் சொன்னா?”
“மாமீ! கோபிச்சுக்காதேள். சில சமயம் க்ளவுஸ் போட்டுக்கணும். சில சமயம் கூடாது. சரி புளியைக் கரைக்கறேன். எவ்வளவு கிராம்னு சொல்லலை. அதை உருட்டணுமா, ஸ்குய்ரா போடணுமா, ரெக்ட் ஆங்கிளா ஆக்கணுமான்னும் சொல்லலே!”
“அடி லக்ஷ்மீ! அம்மா மயக்கம் போட்டுட்டா. புளியை கரைச்சு வச்சுக்கோ. ஞாபகமா அடுப்பை ஆஃப் பண்ணிடு. எப்படி ஆஃப் பண்ணணும்னு ஆரம்பிச்சுடாதே. சௌகரியப்பட்டபடி ஆஃப் பண்ணு. இப்ப நான் போனை ஆஃப் பண்றேன்.”