ஏப்ரல் 2019 கோகுலம் கதிர் மாத
இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
தங்கம் தரும் மயக்கம்!
ச.நாகராஜன்
தங்கத்தின் சக்தி தான் எப்படிப்பட்ட சக்தி! தங்கம் என்றவுடன்
அனைவரும் மகிழ்ந்து புன்னகை பூத்து மகிழ்வர்.
உலகம் முழுவதும் நாடு, மதம், இனம், பால், மொழி, அந்தஸ்து ஆகிய
எந்த வித பேதமும் இன்றி அனைவராலும் போற்றப்படும் ஒரு வசீகர சக்தி தங்கம் தான்!
நாம் தங்கத்தைப் பிடித்திருக்கிறோமா அல்லது தங்கம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறதா என்பது தான் தெரியவில்லை என்று பீட்டர் எல்பெர்ன்ஸ்டீன் தனது நூலான ‘தி பவர் ஆஃப் கோல்ட்’-இல் கூறுகிறார்.
தாலிக்கு கொஞ்சமேனும் தங்கம் இல்லா வாழ்க்கை பாரதப் பெண்களைப்
பொறுத்த மட்டில் வாழ்க்கையே இல்லை.
உலகில் எவ்வளவு தங்கம் இருக்கிறது தெரியுமா? பூமியில் உள்ள நிலப்பரப்பு
முழுவதையும் மூடினால் முழங்கால் அளவுக்குத் தங்கம் இருக்கிறதாம்!
இதற்கு மதிப்பு எல்லா நாட்டிலும் இருந்தாலும் நமது நாட்டில்
இதற்கு மவுசு ஒரு படி கூடத்தான்!
இந்தியாவில் எல்லா இல்லங்களிலும் இருக்கும் தங்கம் எவ்வளவு என்று
யாருக்கும் தெரியாது, அவ்வளவு தங்கம்! என்றாலும் கூட ஒரு உத்தேச மதிப்பீட்டின் படி
சுமார் மூன்று லட்சம் டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறதாம்..
அழகுக்கு அழகு செய்கிறது;ஒரு கம்பீரத்தையும் கௌரவத்தையும் தருகிறது.
பணம் இருக்கிறது என்கிற அந்தஸ்தைக் காட்டுகிறது; ஆபத்துக் காலத்தில் கை கொடுத்து உதவுகிறது;
எப்போது வாங்கினாலும் நாள் செல்லச் செல்ல மதிப்பு கூடிக் கொண்டே போகிறது.
ஆகவே தான் தங்கம் சிறந்த முதலீடு என்று கருதப்படுகிறது.
பிக்ஸட் டெபாசிட், ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர், வெள்ளியில் முதலீடு,
ஆங்காங்கே நிலம் அல்லது வீடு வாங்கல் ஆகிய எந்த முதலீட்டை எடுத்துக் கொண்டு பார்த்தாலும்
தங்கத்தில் இருக்கும் கவர்ச்சி வேறு எதிலும் இல்லை என்பது உண்மை தான்!
உலகெங்கும் இதுவரை 1,65,446 டன்கள் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒலிம்பிக் அளவிலான இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பி விடலாம். இதில் ஐம்பது சதவிகிதம் சென்ற 50 ஆண்டுகளில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் தங்கம் பூமியில் புதைந்து கிடக்கிறது.
பல விசித்திர குணாதிசயங்களைக் கொண்டுள்ள ஒரு உலோகம் என்பதால்
இதை அறிவியல் அறிஞர்கள் கூட சற்று மயக்கத்துடன் தான் பார்க்கிறார்கள்.
இதன் அடர்த்தி எண் மிக அதிகம்.இது மிக கனமான உலோகமும் கூட! தண்ணீரை
விட 19.3 மடங்கு அதிகம். அதே சமயம் இதை எப்படி வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்; பல்வேறு
வடிவங்களாக அமைக்கலாம். மற்ற உலோகங்களை ஒப்பிடுகையில் இது மிக மிருதுவானதும் கூட! ஒரு
கிராம் தங்கத்தை ஒரு சதுர மீட்டர் தங்கத் தகடாக மாற்றலாம். அந்தத் தகடில் ஒளி ஊடுருவிப்
பாய்ந்து தகதகத்து நம்மை மயக்கும்; மகிழ்விக்கும்!
31 கிராம் தங்கத்தை மெல்லிய கம்பியாக மாற்றினால் அது 100 கிலோமீட்டர்
தூரம் இருக்கும்!
தங்கத்தின் மீது எந்தக் கெமிக்கலும் தன் “வேலையைக்” காண்பிக்க முடியாது.
மிகச் சில இரசாயனங்களே தங்கத்தைத் “தாக்க” முடியும்..
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாலும் கூட
அதன் பளபளப்புப் போகாது.
அழகான சிவந்த மங்கையரின் மார்பிலும் தலையிலும் இடையிலும் காலிலும்
வெவ்வேறு ஆபரணமாக மாறி அது தவழும் போது அதன் மதிப்பும் தனி தான்; அதை அணியும் அழகியின்
மதிப்பும் தனி தான்!
ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு பண வீக்கத்தால் மாறுபடலாம்; அரசியல்
மாற்றங்களால் செல்லாமல் போய் விடலாம். அரசாங்கம் நோட்டுக்களை ‘டீமானிடைசேஷன்” செய்து மதிப்பிழக்கச்
செய்யலாம்.
நிலம், வீடு போன்றவை இயற்கைச் சீற்றத்தால் அழிந்து படலாம்; மதிப்புக் குறையலாம்.
ம்யூச்சுவல் ஃபண்ட், ஷேர்கள் நூற்றுக் கணக்கான காரணங்களால் மதிப்பை
இழந்து முதலீட்டு விலையை விடக் குறையலாம், ஏன் ஜீரோ என்ற அளவிற்கு தாழ்ந்து போகலாம்.
ஆனால் தங்கம் ஒன்று மட்டுமே தன்னம்பிக்கை தரும் ஒரு பாதுகாப்பான
இன்வெஸ்ட்மெண்டாக காலம் காலமாக இருந்து வருகிறது. மதிப்பும் குறையாது; மானத்தையும்
இழக்க விடாது!
வீட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் தங்கம் உதவுவதில்லை;
நாட்டிற்கு ஒரு பிரச்சினை என்றால் கூட உதவிக்கு ஓடி வருவது தங்கம் தான்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் ஒரு பிரச்சினை எழுந்த
போது அந்த நாட்டின் பிரதமர் மஹாத்திர் முஹம்மது அந்த நாட்டு மக்களிடம் தங்களிடம் உள்ள
தங்கத்தை அரசாங்கத்திடம் தற்காலிகமாக முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக்
கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தார். மலேசிய மக்களும் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தங்கத்தை
முதலீடு செய்து தங்கப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கம் அரசின் பொக்கிஷத்தை
நிரப்பிய போது நிலைமை சீர் திருந்தியது. உடனே மலேசியா அரசாங்கம் தங்கத்தை மக்களிடம்
திருப்பித் தந்தது.
பெரு நாட்டில் ஏராளமான தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அதில் சுரங்க
வேலை செய்யச் செல்வோர் கிளம்பும் போது வீட்டாரிடம், “அல் லேபர் மில் வாய் நோ சே சி
வொல்வேர்” என்று சொல்வார்களாம். அதாவது, “வேலை செய்யப் போகிறேன். திரும்பி
வருவேனோ வரமாட்டேனோ தெரியாது” என்பது இதன் பொருள். இப்படிச் சொல்லி விட்டு சுரங்க வேலைக்குச்
சென்றால் ஒரு வேளை இறந்து விட்டாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு ஏராளமான நன்மை
வந்து சேருமாம்.
தங்கத்திற்காக உயிரை விடக் கூடத் தயார் என்பதையே இது காட்டுகிறது.
பெரு நாட்டில் மட்டுமல்ல; நமது நாட்டிலும் கூட எதை இழந்தாலும்
இழக்கத் தயார்; ஆனால் தங்கத்தை இழக்கத் தயாரில்லை” என்பது தான்
நிலை.
அப்படிப்பட்ட அருமையான மஞ்சள் உலோகத்தை ‘இன்வெஸ்ட்மெண்ட் டாப்’ என்று சொல்வதில்
என்ன தவறு இருக்கிறது?
The great moral satirist, Hogarth, was once drawing in a room
where many of his friends were assembled, and among them a young lady. As she
stood by Hogarth, she expressed a wish to learn to draw caricature.
“Alas! Young lady, said Hogarth, it is not a faculty to be
envied. Take my advice, never draw caricature — by the long practice of it I
have lost the enjoyment of beauty. I never see a face but distorted. I have
never the satisfaction of to behold the human face divine.”
William Hogarth
Painter
Description
William Hogarth
FRSA was an English painter, printmaker, pictorial satirist, social critic, and
editorial cartoonist. Wikipedia
Abraham Lincoln was shown a picture done by a very
indifferent hand, and asked to give a opinion of it.
Why? said Lincoln, the painter is a very good painter and
observes the Lord’s commandments
What do you mean by that, Mr Lincoln?
Why I think, answered Lincoln, that he hath not made to
himself the likeness of anything that is in the heaven above, or that is in the
earth beneath or that is in the waters under the earth.
Xxx
Nature is creeping up
On one occasion a woman said to Whistler,
I just came up from the country this morning along the Thames
and there was an exquisite haze in the atmosphere which reminded me so much of
your little things. It was really a perfect series of Whistlers.
“Yes, Madame, Whistler responded gravely,
Nature is creeping up.”
James Abbott McNeill Whistler
American artist
Description
James Abbott
McNeill Whistler was an American artist, active during the American Gilded Age
and based primarily in the United Kingdom. He was averse to sentimentality and
moral allusion in painting, and was a leading proponent of the credo “art
for art’s sake”. Wikipedia
Degas stopped to look at each canvas, and presently gave a little exclamation of disgust. “To think, he remarked, that not one of these fellows has ever gone so far to ask himself what art is all about!”
“Well, what is all about? “Countered the critic. “I have spent my whole life trying to find out . If I knew I should have done something about it long ago”.
Xxx Thank God, I don’t know my style!
Ambroise Vollard once told Degas of a painter who had come to
him, exclaiming,
“At last I have found my true style!”
“Well, said Degas, I am glad I have not found my style yet. I
would be bored to death.”
Edgar Degas
French artist
Description
Edgar Degas was a
French artist famous for his paintings, sculptures, prints, and drawings. He is
especially identified with the subject of dance; more than half of his works
depict dancers. Regarded as one of the founders of Impressionism, he rejected the
term, preferring to be called a realist.Wikipedia
Just before
boarding the BA flight to London I was clicking pictures near Gate 14 in
Chennai Airport on 3rd April 2019. See the beautiful statues,
pictures and wood works.
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 10-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
சுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த
எளிய வழிகள்!
ச.நாகராஜன்
நாம் வாழும் இடத்தை மாசற்ற நிலையில்
வைத்துக் கொள்ள எளிய வழிகள் ஏராளம் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதன் மூலமாக
காற்று, நீர், வசிக்குமிடம் ஆகியவை மாசு நீங்கியதாக அமைந்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும்.
எளிய வழிகளைப் பார்ப்போமா?
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கூடியமட்டில்
தவிர்ப்போம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பைகளை மட்டுமே பயன்படுத்துவோம். மளிகை சாமான்கள்
வாங்க கடைக்குச் செல்லும் போது நமது துணிப்பைகளைக் கொண்டு செல்வோம்.
அச்சடிப்பதை எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவிற்குக் குறைப்போம். பேப்பர் பயன்பாட்டைக் கூடுமானமட்டில் தவிர்ப்போம். எழுத
வேண்டிய தருணங்களில் பேப்பரின் இரு புறமும் எழுதுவோம்.
நீர், ஜூஸ் போன்றவற்றிற்கான பாட்டில்களைப்
பயன்படுத்தும் போது மறுசுழற்சிக்குள்ளாக்கக் கூடிய பாட்டில்களையே பயன்படுத்துவோம்.
கூடுமானமட்டில் மின்சாரத்தைக்
குறைவாகப் பயன்படுத்துவோம்; மின் சக்தியைச் சேமிப்போம்; நமது செலவையும் குறைப்போம்.
நீரைச் சுத்தமாக இருக்கும்படி
மூடி வைத்துப் பாதுகாப்போம். நீரைத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம். திறந்த
குழாயில் வரும் நீரைப் பயன்படுத்தி நீரை வீணாக்காது பக்கெட்டுகளில் நீரைப் பிடித்து
வைத்து தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.அவ்வப்பொழுது குழாய்களைப் பராமரித்து
நீர் ஒழுகாமல் இருக்கும்படியும் நீர் வீணாகாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வோம்.
குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு
நடந்து செல்வோம் அல்லது சைக்கிளில் செல்வோம்.அவசியம் ஏற்படும் போது மட்டும் கார்களில்
பலருடனும் இணைந்து செல்லும் ஏற்பாட்டைச் செய்து கொண்டு செல்வோம்.
தனி நபருக்கு மட்டும் என்று கார்
எடுத்து ஓட்டும் நிலையைத் தவிர்ப்போம்.
வாகனப் பயன்பாட்டில் வெளிவரும்
புகை நாட்டையே மாசு படுத்தும் என்பதால் அதி நவீன கார் எஞ்ஜின்களை மட்டுமே பயன்படுத்துவோம்.
சிறு அளவில் என்றாலும் எங்கெல்லாம்
சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சோலார் எனர்ஜியைப் பயன்படுத்தி மற்றவருக்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்வோம்.
இது பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து
அனைவருக்கும் ஊட்டுவதை தேசீயக் கடமையாக எண்ணிச் செயலாற்றுவோம்.
நாம் செய்யக்கூடிய அனைத்தையும்
திட்டமிட்டுச் செய்து நமது பகுதியை சுற்றுப்புறச் சூழல் மேம்பட்ட பகுதியாக மாற்றுவோம்.
During my visit
to India in March 2019, I visited Samadhis of four great people
1.Sannu
Munivar Samadhi in Mel Malaiyanur Angala Parameswari Amman Temple
2.Karuvur
Siddhar Samadhi in Karur
3.Sadhasiva
Brahmendral Samadhi in Nerur
4.Saangu
Siddhalingar Samaadhi in Chennai.
I went to
Siruvachur Mathura Kali Amman Temple with my brother. There was a big crowd and
a long queue. But we were told that was a less crowded day and normally one will
have to pay extra money to go through the special gate. It is near Perambalur
in Trichy district.
The temple
is open on Mondays and Fridays only. But during annual festival it is open
continuously.Other days the goddess is said to reside in the nearby hill.
People offer
Maa vilakku (Flour Lamp) prepared in the temple to the goddess. Maa Vilakku is
Rice Flour Mixed with jaggery and in the middle they light the ghee lamp. It is
done in front of the goddess shrine.
The temple
is connected with Kannaki of Silappadikaram epic and Choza kings. Swami Brahmendra
installed a Chakra (mysterious diagram drawn on a metal) here. The temple receives
good income and it has got a golden chariot
Ghost busing slab
We went to
Angala Parameswaari Temple in Mel Malaiyanur after visiting Chenji Fort. The goddess
is in an ant hill. A long queue was there.
Just before
the main shrine I saw a marble slab with a special design and a display board. That
area was protected so that no one could step on it.
The message
on the board runs like this-
A saint named Sannu Munivar lived here many centuries ago. He attained Jeeva Samadhi in the temple here and on his Samadhi is Pey Medai. i.e Ghost busting Slab. (Jeeva Samadhi means one will enter the grave while the person was alive. Even after a building was erected over thee Samadhi he is supposed to live there for ever. That means anyone visiting the place will get his blessings). If any one possessed by evil spirits sits on it the person will be cured. This belief continues until today”—says the display board in Tamil. On the fence leading to the shrine I saw bangles offered to god.
I was wondering
about the design of the marble slab. later I saw it in another temple in Namakkal.
A Facebook friend also featured some Kolam (Rangoli) in the same pattern.
In both the
temples people offer clothes, bells, thread, swings etc to get issues. Young women
pray to get married quickly. One can feel the good and positive vibrations in
both the shrines. Villagers from the surrounding towns throng the place with
great faith and devotion. Lemon garlands and flower garlands are sold outside
the temples.
Sakti Kendras (Goddess Shrines) are situated throughout India from Kashmir to Kanyakumari. People believe goddess’ body parts fell in different places and they became Power (Sakti) Centres. Mel Malayanur is one such power centres according to local stories.
ADDRESS OF
THE TEMPLE
The Executive Officer,
Sri Angala Parameshwari Temple,
Melmalaiyanoor,
Gingee Taluk,
Villupuram District,
Tamilnadu – 604204.
Phone Number : +91 4145 234291
Email : mail@angalammantemple
In both the temples animals and birds are offered
to goddess.
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 9-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
மாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்!
ச.நாகராஜன்
சுத்தமான காற்று ஆரோக்கிய வாழ்வைத் தரும் என்பதும் மாசு படுத்தப்பட்ட
காற்று ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும் என்பதும் அறிவியல் போதிக்கும் உண்மைகள்.
சுத்தமற்று இருக்கும் காற்றை நாம் சுவாசிக்கும் போது மூளை தன்
இயல்பான செயல் திறனை இழக்கிறது; தொழிலாளர்கள்
உற்பத்தி செய்யும் செயல்திறனை இழக்கின்றனர்; மாணவர்களால் இயல்பாக படிக்க முடிவதில்லை
என்பன போன்றவற்றை ஏற்கனவே அறிவியல் ஆய்வுகள் தெளிவு படுத்தியுள்ளன.
இப்போது மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
(Masschusetts Institute of Technology – MIT) தனது ஆய்வு ஒன்றின் மூலம் மாசு படுத்தப்பட்ட
காற்று மனிதனின் சந்தோஷத்தையும் குறைக்கிறது என்பதை அறிவித்துள்ளது.
இதை இந்த ஆய்வைச் செய்த
இணைப் பேராசிரியரான சிகி ஜெங் (Siqi
Zheng), “சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்பட்டு பெருமளவில் காற்று அசுத்தமடைந்த நாட்களில்
அதை சுவாசிக்கும் மக்கள் பெருமளவு எரிச்சலுடன் இருப்பதோடு அபாயகரமான முடிவுகளைப் பல்வேறு
விஷயங்களிலும் எடுக்கின்றனர்” என்று கூறுகிறார். பின்னால் தாங்கள் எடுத்த முடிவுகளுக்காக
அவர்கள் வருத்தமும் அடைகின்றனர்.
இந்த ஆய்வானது 144 சீன நகர்களில் எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர்
இதில் பங்கு கொண்டனர்.
காற்றின் தரத்தை அளக்க உதவும் அளவீடுகளில் நுண்மத் துகள்கள்
அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதில் பங்கு கொண்டோர் சமூக ஊடகங்களின் மூலமாகத் தங்களின் கருத்துக்களைப்
பதிவு செய்தனர்.
இதில் பெறப்பட்ட ஏராளமான தரவு எனப்படும் Dataக்களின் மூலமாக காற்று
மாசுக்கும் மனிதனின் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கும் நேரடி தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
World Health Organization எனப்படும் உலக சுகாதார நிறுவனம் ஆறு மாசுகள் மனிதர்களின் ஆரோக்கியத்தைச்
சீர்கேடு அடையச் செய்வதாக இனம் காட்டியுள்ளது. நுண்மத் துகள்கள், தரை மட்ட ஓஜோன், கார்பன்
மானாக்ஸைடு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்சைடு, காரீயம்
(Particle
pollution, ground-level ozone, carbon monoxide, sulfur oxides, nitrogen oxides,
and lead) இவற்றினால் சுவாசக் கோளாறுகள்,
இதயக் கோளாறுகள், நரம்பு மண்டல சீர்கேடுகள், கண்களில் எரிச்சல், தோல் வியாதிகள் உள்ளிட்ட
பல வியாதிகளும் உருவாகின்றன. ஆஸ்த்மா, நுரையீரல்
கான்ஸர், அல்ஜெமிர் மற்றும் பார்கின்ஸன் வியாதி,
மனக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்திற்கும் மாசுபடுத்தப்பட்ட காற்றே காரணம் என்பது
அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்
கொள்வது நமது இன்றியமையாத கடமையாக இன்று ஆகி விட்டது. இதை உணர்வோம்; உயர்வோம்!