தங்க உற்பத்தியில் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கு அடுத்த நிலையில் நிற்பது ஆஸ்திரேலியா. இதற்கு அடுத்தாற் போலத்தான் கனடாவும் அமெரிக்காவும் வருகின்றன .
இந்த பூமியில் அதிகமான தங்கத்தை வைத்திருக்கும் நாடு இதுதான் இருபத்தொரு சதவிகித தங்கம் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறது அவுன்ஸ் கணக்கில் முப்பத்தெட்டு கோடி!
Australia has the largest known share of gold resources in the world, at 21%
Australia has reserves of more than 380 million ounces of gold.
மேற்கு ஆஸ்திரேலிய மாகாணத்தில்தான் அதிகத் தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன; 55 நாடுகளுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்கிறது; சீனாதான் அதிக தங்கத்தை இதனிடம் வாங்குகிறது.
Australia exports gold to more than 55 countries.
Production
In 2023, Australia produced an estimated 310,000 metric tons of gold
In 2024, Australia produced around 289 metric tons of gold
Production is expected to recover in 2025, but then decrease in 2030
குவார்ட்ஸ் என்னும் பளிங்குக் கல்லுடன் தங்கமும் கிடைக்கிறது ..
சொக்கத் தங்கம் என்றும் பத்தரைமாற்றுத் தங்கம், என்றும் சொல்லும் தங்கக் கட்டிகளும் அகப்படுகின்றன. இவை டாஸ்மேனியா தீவு முதல் மேற்கு ஆஸ்திரேலியா வரை கிடைக்கின்றன 160 ஆண்டுகளுக்கு முன்னர் விக்டோரியா மாகாணத்தில் கிடைத்த சொக்கத் தங்கம் 78 கிலோ எடை இருந்தது சென்ற ஆண்டு கிடைத்த சொக்கத்த தங்கம் ஒரு லட்சம் டாலர் மதிப்புடைத்து; நாலு கிலோ தங்க கட்டியும் கிடைத்தது .
இந்தியாவிலுள்ள கோலார் தங்கச் சுரங்கம் போன்றவற்றில் மண்ணை அரித்து தங்கத்தை எடுக்கிறோம். ஆஸ்திரேலியாவிலும் இப்படித்தான். ஆயினும் இங்கு கிடப்பது போல முழு தங்கக் கட்டிகல் வேறு எங்கும் கிடைப்பது அரிது.
அதர்வண வேதத்தில் இது பற்றிய குறிப்பு உளது பூமி சூக்தம் பாடல் மந்திரம் 44.
நிதிம் பிப்ரதீ பஹுதா குஹா வசும் மணிம் ஹிரண்யம் ப்ருதிவீ ததாது மே
வஸூனி நோ வஸுதா ராஸமாநா தேவி ததாது – 44
பொருள்
எந்த பூமியானது பல ரஹசிய இடங்களில் செல்வத்தை மறைத்து வைத்திருக்கிறதோ அந்த பூமா தேவியானவள் தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் பிற செல்வங்களையும் எனக்கு அளிக்கட்டும். தயாள குணமுள்ள அவள் அன்புடனும் கருணையுடனும் எங்களுக்குச் செல்வத்தை அளிப்பாள் ஆகுக.-44
இந்தப் பாடல், பூமியின் சுரங்க வளத்தை ( Mineral wealth) வேத கால இந்துக்கள் நன்றாக அறிந்து இருந்ததைக் காட்டுகிறது. இதற்கு முந்தைய ரிக் வேத துதிகளிலேயே தங்க இரத்தின நகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். உலகில் பழங்கால நாகரீகங்களில் எகிப்திலும் இந்தியாவிலும் மட்டுமே நகைகளைக் (Jewellery) காண முடிகிறது . அதிலும் குறிப்பாக உடல் முழுதும் ‘முடி முதல் அடி’ Head to foot Jewels வரையுள்ள நகைகளின் படங்களும் வருணனைகளும் நம்மிடம் மட்டுமே உள்ளன. துருக்கி முதலிய இடங்களில் நகைகளுடன் பெண்கள் இருந்தால், அவர்கள் இந்திய பெண்களாகவே உள்ளனர் . பூமாதேவி தங்கத்தையும் வைரத்தையும் வாரி வழங்குவதால் அவளை தயாள குணம் மிக்கவளே என்று புலவர் புகழ்கிறார்.
Gold nuggets have been found in many places in Australia, including Victoria, Western Australia, and Tasmania. Some of the most notable discoveries include:
The Welcome Stranger: Found in 1869 in Victoria, this nugget is considered by many to be the largest ever found. It weighed over 2,520 troy ounces (78 kg).
A nugget found in Ballarat: Found in 2024, this nugget was estimated to be worth up to $100,000. It was found by Luke Phillips, who runs the YouTube channel Dig It Detecting. A 4.1 kg nugget: Found in Victoria
உலகில் அதிகமான ரத்தினங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா முக்கிய இடம் வகிக்கிறது
Opals ஓபல் எனப்படும் ரத்தினக் கல் உலகிலேயே அதிகமாகக் கிடைக்கும் நாடு இது; இவ்வகைக் கற்களில் ஆஸ்திரேலியாவில் கிடைப்பவை பளபளப்பிலும் வலுவிலும் முதலிடம் பெற்றவை; ஆகையால் ஆஸ்திரேலிய ஒபலுக்கு விலை அதிகம் . இவை பல வண்ணங்களில் கிடைக்கின்றன
Australia has the world’s largest opal fields.
Australian opals are valued for their stability and brilliance.
வைரக்க கற்கள் உற்பத்தியிலும் இதற்குத் தனி இடம் உண்டு . ஆனால் இப்போது ஆப்பிரிக்க நாடுகளும் ரஷ்யாவும் முதல் பத்து இடங்களுக்கு வந்து விட்டன .
உலகில் பல வண்ண வைரங்கள் கிடைப்பது ஆஸ்திரேலியாவின் சிறப்பு. ஓரளவு விலைபடைத்த , அதாவது செமி ப்ரஸ்சஸ் ஸ்டோன்ஸ் SEMI PRECIOUS STONES — ரத்தினக் கற்களில் எல்லா வகைகளும் இங்கே தோண்டி எடுக்கப்படுகின்றன
நீலக்கற்கள் உற்பத்தியில் முதலிடம்
Australian sapphires account for over 70% of the world’s blue sapphire production.
உலகில் எழுபது சதவிகித நீல கற்கள் இங்கிருந்தான் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவைகளைத் தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்து பாலிஷ் செய்கிறார்கள் .
பவளம்
உலகிலேயே மிகப்பெரிய பவளத்திட்டுகள் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் அவைகளைக் காப்பதற்காக பவளம் எடுப்பதில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆயினும் ஆஸ்திரேலியாவின் பிங்க் / இளம் சிவப்பு பவளங்கள் ஒப்பற்றவை .
ஆஸ்திரேலியாவில் கிடைக்காத ரத்தினக் கற்கள் இல்லை என்றே சொல்லலாம் agate, chalcedony, sodalite, emerald, ruby, moonstone, aquamarine, peridot and more ஆயினும் இதன் பெருமை ஓபல் மற்றும் நீலக் கற்களால் பெரிய இடத்தில் / முதலிடத்தில் உள்ளது.
முத்து
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்கு மேற்புறமுள்ள கடற்பகுதியிலும், வடமேற்கு ஆஸ்திரேலியாவில் ப்ரூம் என்னும் கடற்பகுதியிலும் மு த்துக் குளியல் நடைபெறுகிறது
Broome in North Western Australia and the Central Coastal region just above Sydney in New South Wales are the most famous sources of pearls in ஆஸ்திரேலியா.
ஆயினும் தற்காலத்தில் கடலோரப்பகுதிகளில் முத்துப் பண்ணைகளை வைத்து செயற்கைகையாக முத்துக்களை செய்வது அதிகரித்துள்ளது பல வண்ண முத்துக்கள் கிடைக்கின்றன.
சிட்னி நகரில் உள்ள ஆஸ்திரேலியா மியூசியத்திலும் ஏனைய மியூசியங்களிலும் பல்லாயிரக் கணக்கான மினரல்/ தாது / ரத்தின சாம்பில்ளைகளைக் காணலாம். மியூசியம் பற்றி தனியான கட்டுரை வரும் .
9 Jan 2020 — 8 Feb 2015 – Posts about Hindu gemmology written by Tamil and Vedas. … I will give some interesting information about gems in his own words:- …
4 May 2012 — A gem studded globe of an Indian king is in Iran. The National Museum in Tehran has many Indian gem wonders. One of them is The Peacock Throne.
21 Apr 2015 – Posts about Gems in Vedas written by Tamil and Vedas. … Only the Egyptian women wore some jewellery like the Hindus. … The Atharva Veda refers to the belief of the people: one that dies of old age becomes who he wears …
8 Feb 2015 – Posts about Hindu gemmology written by Tamil and Vedas. … I will give some interesting information about gems in his own words:- He mentioned 22 gems and … He talks about the beliefs about diamonds. If it is with black …
19 Jul 2017 – Posts about Hindu Beliefs written by Tamil and Vedas. … sources; I have written about his reference to Nagaratna (Cobra gem) a few years ago.
27 Sep 2013 – Hindu Vedas are the oldest religious books in the world. Even conservative estimate of foreigners dates them between 1500 BC and 6000 BC.
GEM STONES IN KALIDASA & TAMIL LITERATURE | Tamil …
13 Feb 2012 – Hindus believed that the snakes carried luminescent gem stones on their … the rain drops become pearls-This was the belief of ancient Indians …
Varahamihira’s Sanskrit book Brhat Samhita is encyclopaedic. He covered very interesting topics in 106 chapters. He deals with Examination of Gem Stones in …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன், இந்தியா, ஆஸ்திரேலியாவிலிருந்து 12-1-2025 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
ஸ்வாமி விவேகானந்தர் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
இன்று ஸ்வாமி விவேகானந்தர் அவதரித்த நன்னாளாகும். பாரதத்தை எழுச்சி பெறச் செய்து புகழோங்கிய பண்டைய பெருமை மிக்க நாட்களை மீண்டும் அடைய விதை ஊன்றிய அவரைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
எவ்வளவு நாள் உனக்காகக் காத்திருந்தேன்!
1881ஆம் வருடம் நவம்பர் மாதம். முதன் முதலாக ராமகிருஷ்ண பரமஹம்ஸரை விவேகானந்தர் தக்ஷிணேஸ்வரத்தில் சந்தித்தார். கங்கையைப் பார்த்திருந்த மேற்குப் பக்க வாயில் வழியே விவேகானந்தர் நுழைந்தார். ஒரு பாடலைப் பாடினார். அவ்வளவு தான், பாடல் முடிந்த பிறகு நரேந்திரனின் கையைப் பிடித்து வட புறம் இருந்த வாரந்தாவிற்குச் சென்ற பரமஹம்ஸர் அறைக் கதவை மூடினார், அவர்களை யாரும் பார்க்க முடியாதபடி!
“இவ்வளவு தாமதமாக நீ வந்தது சரியா? உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன்! உலகியல் சம்பந்தமான வெற்றுப் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துப் போய் விட்டது!“ என்று ஆரம்பித்தவர் அழ ஆரம்பித்தார். பின்னர் அவர் சொன்ன பேருண்மை தான் உலகை அதிசயிக்க வைத்த ஒன்று!
“எனது கடவுளே! எனக்குத் தெரியும். நீங்கள் தான் புராதன ரிஷியான நாராயணரின் அம்சமான நர ரிஷி என்று! இந்த உலகில் மனித குலம் படும் துன்பங்களைத் துடைக்க நீங்கள் அவதாரம் செய்துள்ளீர்கள்” என்றார் பரமஹம்ஸர்.
“இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அப்போது நான் நினைத்தேன் என்று பின்னால் அந்தச் சந்திப்பைப் பற்றிக் கூறினார் அப்போது நரேந்திரனாக இருந்த விவேகானந்தர்! ஆனால் தான் தான் நாராயணர் என்பதை பரமஹம்ஸர் வெளிப்படுத்தவில்லை. ஆனால் பின்னர் விவேகானந்தர் இதை உணர்ந்து கொண்டார்.
முதலில் நாராயணர், நர ரிஷியிடம் பூலோகம் போக வேண்டும்; அனைவரின் துயரையும் துடைக்க வேண்டும் என்று கூறிய போது நர ரிஷி பிகு செய்து கொண்டாராம்! போயும் போயும் எதற்காக அங்கே போக வேண்டும் என்று! ஆனால் பூவுலகில் அவதரித்த பின்னர் திரும்பிப் போக வேண்டிய வேளை வந்த போது விவேகானந்தர் பூமியில் அனைவர் படும் துன்பத்தையும் பார்த்து திரும்ப மறுத்து விட்டாராம். இவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்த பின்னரே நான் அங்கு வருவேன் என்றார் அவர்! “பூவுலகில் அனைவரும் முக்தி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பூமிக்கு வர நான் தயார்” என்று வெளிப்படையாகவே ஒருமுறை அவர் குறிப்பிட்டார். நர நாராயண ரிஷிகளுக்கு மனிதர்களை முக்தி பெற வழிகாட்டுவதில் அவ்வளவு அபார பிரியம்!
பரமஹம்ஸரின் வழி காட்டுதலில் கடலைக் கடந்து அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வமத மாநாட்டிற்குச் சென்றார் ஸ்வாமிஜி.
சூரியனுக்கே சான்றிதழா?!
அமெரிக்காவில் பிரபல பேராசிரியரான ஹென்றி ரைட் ஸ்வாமிஜியுடன் அளவளாவிய சிறிது நேரத்திலேயே அவரது அறிவின் ஆழத்தைப் புரிந்து கொண்டு வியந்தார். போஸ்டனிலிருந்து 30 மைல் தொலைவில் இருந்த அன்னிக்ஸ்வாம் என்ற இடத்தில் அமைதியான இடத்தில் தம் இல்லத்தில் தங்கி இருந்த அவர் ஸ்வாமிஜையைத் தன்னுடன் தங்குமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட ஸ்வாமிஜி அவருடன் இரு நாட்கள் கழித்தார். சர்வமத மஹாசபையில் நிச்சயம் ஸ்வாமிஜி கலந்து கொள்ள வேண்டுமென்ற தன் எண்ணத்தை பேராசிரியர் ரைட் வெளிப்படுத்தினார்.
“அமெரிக்கா உங்களை அறிய வேண்டுமானால் அதைத் தவிர வேறு வழியில்லை” என்று ஆணித்தரமாக உரைத்த பேராசிரியரை நோக்கிய ஸ்வாமிஜி,” அந்த சபையில் கலந்து கொள்வதற்கான அறிமுகக் கடிதமோ, சான்றிதழோ என்னிடம் இல்லையே!“ என்று தயங்கிவாறே கூறினார்
“உங்களுக்குச் சான்றிதழா?! சூரியன் பிரகாசிப்பதற்குச் சான்றிதழ் கேட்பது போல அல்லவா இருக்கும் அது!” என்றார் ரைட்
சூரிய ஒளிக்கே ஒரு சான்றிதழா! மின்மினிகள் அதைத் தர இயலுமா? என்பதை உணர்ந்த பெரும் மேதையாக இருந்தார் ரைட்.
பின்னர் நடந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. ஸ்வாமிஜி 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சர்வமத மகாசபையில் கலந்து கொண்டார்.
இந்தியாவைப் பற்றி அறிய விவேகானந்தரைப் படியுங்கள்!
அமெரிக்க சகோதரிகளே! சகோதரர்களே! (Sisters and brothers of America!) என்ற சில சொற்களினாலேயே அமெரிக்கா முழுவதையும் தன் அன்பு வளையத்துக்கு ஆட்படுத்தினார்.
இந்தியாவின் ஆன்மீக சக்தியை உலகெங்கும் அறியச் செய்து உலகப் புகழ் பெற்றார்.
அமெரிக்கர்கள் வியந்த அதிசய புருஷர்!
பிரபல பகுத்தறிவுவாதியும் சொற்பொழிவாளருமான இங்கர்சால் ஸ்வாமிஜியைச் சந்தித்து வியந்து போனார்.
“ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாறைப் பருக விரும்புகிறேன். அதில் என்ன தவறு?” என்று உலோகாயத நோக்கில் அனைத்தையும் அனுபவிப்பதில் என்ன தவறு என்று பூடகமாகக் கேட்ட இங்கர்சாலை நோக்கிப் புன்முறுவல் பூத்த ஸ்வாமிஜி,” அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் கடைசிச் சொட்டு சாறு வரை முழுவதுமாக அருந்த வேண்டும் என்கிறேன் நான்!” என்றார். வேதாந்தம் மூலம் அனைத்தையும் அறிந்து சுவைக்க முடியும் என்ற அவரின் அறிவுரையைக் கேட்ட இங்கர்சால் பெரிதும் மனம் மகிழ்ந்து ஸ்வாமிஜியை மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு வேண்டிக் கொண்டார். அவரது பரந்த மனத்தையும் நோக்கையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அங்குள்ள மதவாதிகளுக்கு இல்லை என்பது இங்கர்சாலின் கருத்து.
பிரபல தொழிலதிபர் ராக்பெல்லர் ஸ்வாமிஜியைச் சந்தித்தார். சில நிமிடங்களே நீடித்த அந்த சந்திப்பில் அவரை அறக்கட்டளை ஆரம்பிக்குமாறு உத்வேகம் ஊட்டினார் ஸ்வாமிஜி. அவர் வாழ்க்கையே மாறிப் போனது.
.பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது : ஸ்வாமிஜி!
ஜோஸபைன் மக்லியாட் (Josephine MacLeod) ஸ்வாமி விவேகானந்தரின் அணுக்க சிஷ்யைகளுள் ஒருவர். .
பேலூர் மடத்தில் ஒரு நாள் சகோதரி நிவேதிதை விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
மடத்தில் இருந்த ஸ்வாமிஜியின் படுக்கை அறையில் ஜன்னலுக்கு அருகில் ஜோஸபைன் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்வாமிஜி ஜோஸபைனைப் பார்த்துச் சொன்னார்: “நான் நாற்பது வயதைப் பார்க்க மாட்டேன்.” (I shall never see forty)
அப்போது அவருக்கு வயது 39.
ஜோஸபைன் கூறினார்:” ஆனால், ஸ்வாமிஜி, புத்தர் தனது பெரும் பணியை 40இல் ஆரம்பித்து 80 முடிய இருந்து தானே செய்தார்.”
ஸ்வாமிஜி பதில் கூறினார் : “எனது செய்தியை நான் கூறி விட்டேன். நான் போக வேண்டும்.”
“ஏன் போக வேண்டும்?”
“பெரிய மரத்தின் நிழல் சிறிய மரங்களை வளர விடாது. அவர்களுக்கு வழி விட நான் போக வேண்டும்.” (The shadow of a big tree will not let the smaller trees grow up, I must go to make room.)
இதன் பின்னர் ஜோஸபைன் இமயமலை சென்றார். பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார்
Date uploaded in Sydney, Australia – 14 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
YELLOW CRESTED COCKATOO
(Following Information is collected from various websites)
Fifty Wonders of Australia -Part 1 (Post No.14,093)
1. Australia is the only country that is also a continent
Australia is the only country that can be considered a continent as well. It’s also the 6th largest country in the world! Geographically speaking, Australia is part of Oceania, a region of the planet that includes Australasia, Melanesia, Micronesia, and Polynesia. There is also a subregion of Oceania called Australasia, which includes Australia, New Guinea, New Zealand, and a few other surrounding islands.
2. Australia has some of the world’s most unique wildlife
Australia is home to unique wildlife, including the platypus and echidna, the only two mammals in the world that lay eggs. 80% of Australia’s mammals, reptiles, and frogs are endemic.
Around 80% of the wildlife is endemic to Australia, meaning it can only be found here! According to the Australian Wildlife Conservancy, 87% of mammals, 93% of reptiles, 94% of frogs, and 45% of birds in Australia ONLY exist in Australia.
From iconic kangaroos and koalas, to elusive echidnas and wombats, you can see some of the world’s most unique wildlife Down Under. Australia is also home to the only mammals that lay eggs: the platypus and the echidna.
3. The Australian Alps receive more snowfall than Switzerland
Many travellers don’t know that there is snow in Australia! Visitors can ski and snowboard in the Snowy Mountains of southern New South Wales and northern Victoria. This area, sometimes called the Australian Alps, is home to the country’s only mountains that exceed 2,000 metres.
According to the National Bureau of Meteorology, around 1cm of fresh snowfall hits the Swiss Alps each year, whereas around 4cm of fresh snow falls on the Australian Alps. So although the Swiss Alps have more snow overall, the Australian Alps may receive more fresh snowfall each year!
The Australian Alps are home to unique plants and animals, including alpine daisies, snow gums, mountain pygmy possums, and Bogong moths.
BABY KANGAROO IN MOTHER’S POUCH 4. The word “selfie” was invented in Australia
A “selfie” is a word used to describe a photo that you take of yourself. This word may be common knowledge to most people today, but “selfie” was only added to Oxford Dictionaries in 2013.
Supposedly the first recorded use of the word “selfie” was in 2002 on an internet forum by a group of Australians. So Aussies have claimed to invent the popular word! Which doesn’t come as a surprise when you consider the fun, snappy nature of most Australian slang words.
5. Australia is home to the world’s longest fence
Many places in Australia have dingo fences, which are designed to protect livestock from predatory wild dingos. Australia has a dingo fence that is roughly 5,600km long and stretches through three states, from Queensland to New South Wales to South Australia. It’s the world’s longest fence and is longer than the Great Wall of China!
6. K’gari (Fraser Island) is the largest sand island in the world
Many travellers in Australia visit K’gari, formerly known as Fraser Island, for its majestic natural landscapes and adventurous activities. K’gari (Fraser Island) is famous because it’s the largest sand island in the world.
The island is around 1,655 square kilometres and can only be accessed with a 4WD. Regular cars couldn’t handle the sandy tracks of K’gari! Though it’s a sand island, K’gari is covered in dense rainforests that mysteriously grow out of the sand. It appears to be magic, but K’gari’s forests have formed a symbiotic relationship with the sand so beautiful flora and fauna can thrive.
LAUGHING BIRD KOOKABURRA
7. Australia has over 60 wine regions
Not many people associate Australia with wine, but the country is one of the world’s top wine producers. There are around 65 different wine regions in Australia, which combined produce approximately 1 billion litres of wine every year. Among the most famous of Australia’s wine regions include Hunter Valley, Barossa Valley, Margaret River Valley, and Clare Valley.
8. The Blue Mountains are named due to the blue haze of Eucalyptus Trees
One of the best day trips from Sydney is the Blue Mountains. Full of hiking trails, waterfalls, and charming towns, the Blue Mountains are a UNESCO World Heritage Site and a great place to connect with nature in Australia.
The Blue Mountains are named because the Eucalyptus trees in the forests release oils that combine with light and water vapor to create a blue fog. This natural mist leaves a mystical blue haze over the valleys.
PLATYPUS
9. You can find some of the whitest sand in the world in Australia
Australia has numerous beaches which may have some of the whitest sand in the world! The actual records for the whitest sand in the world fluctuate constantly, and there are lots of different ways to measure it. But Hyams Beach in Jervis Bay, NSW and Lucky Bay in Cape Le Grand National Park, WA have both been on the list for the world’s whitest sand at some point in time.
Queensland is also home to a few beaches that have spectacularly white sand. Whitehaven Beach in the Whitsundays and Lake McKenzie on K’gari (Fraser Island) both have soft, silky sand that is around 98% pure silica. This is not only beautiful to see and touch, but it’s a natural phenomenon because scientists cannot figure out how all this pure silica ended up in these areas!
10. Convicts helped form Australia’s first official police force
Great Britain sent a fleet of ships full of convicts over to Australia in the late 1700s in the hopes of setting up a penal colony. The convicts arrived in Sydney in 1788, which became the site of the first European settlement in Australia.
Eventually, as more Europeans came to Australia, the convicts were released from jail early and got themselves jobs. Supposedly some convicts were even involved in Australia’s first official police force. As such, British convicts played a huge part in the colonisation of Australia.
11. Aboriginal and Torres Strait Islander cultures are some of the oldest living cultures in the world
The European colonisation unfortunately led to horrifying oppression, genocide, and displacement of Australia’s First Nations People. Prior to European invasion of Australia, the history and culture of humans on the continent spans back up to 50,000 – 60,000 years! It’s hard to estimate the exact age of native Australian cultures, but they are believed to be one of the oldest communities in the world.
A fascinating aspect of these ancient Australian cultures is their art. Aboriginal rock art is known to be one of the oldest surviving human art forms, and you can see this ancient art with your own eyes in many places around Australia. Make an effort to connect with these special cultures while you’re touring Australia and take time to acknowledge the Traditional Owners of the Land wherever you go!
12. Tasmania has the cleanest air in the world
More specifically, Cape Grim in northwest Tasmania is said to have the cleanest air in the world. According to the Cape Grim Baseline Air Pollution Station, the strong winds that blow in from the Southern Ocean near Antarctica help keep the air pure and free of pollutants. So take that much-needed “breath of fresh air” to a new level by heading down to Tassie and inhaling the cleanest air on Earth!
13. Australia is the only continent in the world without an active volcano
Another one of the most interesting facts about Australia is that it’s the only continent with no active volcanoes. Which is great, because travellers are already concerned enough about the scary spiders and snakes in Australia, we don’t need volcanic eruptions thrown into the mix!
But in all seriousness, Australia is one of the safest countries in the world to visit. Even with the notorious deadly wildlife (most of which isn’t even that deadly and is super rare to see while travelling), Australia is a safe and secure place to travel.
14. The Great Barrier Reef is the largest coral reef system in the world
Stretching through Australia’s Coral Sea for around 2,300km, the Great Barrier Reef is the largest collection of corals in the world. It’s also the largest ecosystem on the planet, with around 2,900 individual reefs, 900 islands, and vast numbers of living organisms. Don’t miss the chance to see the glorious corals and sea creatures of the precious Great Barrier Reef when you visit Australia!
6-3-2018 ல் வடலூருக்குச் சென்று வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் சந்நி நிதியைத் தரிசித்தேன்; திருவருட்பா புஸ்தகத்தை மீண்டும் வாங்கினேன்; சத்திய ஞான சபைக்கு எதிரே உள்ள மூலிகைக் கடைக்கும் சென்றேன்; அவைகளைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டு அறிந்து கொண்டேன்; என்னுடன் வந்த, மதுரையில் கல்லூரி பிரின்சிபால் வேலை பார்த்த, என் தம்பி சந்தானம் சூரிய நாராயணன், மூலிகைப் பிரியன் ஆனதால் சில மூலிகைப் பொடிகளை விலைக்கும் வாங்கினான் . நான் நிறைய புகைப்படங்கள் எடுத்ததோடு வந்ததும் –லண்டனுக்குத் திரும்பி வந்ததும் – மூலிகை அச்சுப் பிரதிகளை வெளியிட்டேன் ; இப்போது வள்ளலாருக்கு மூலிகை மேலிருந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் காண்போம்.
பொதுவாக அவர் குறிப்பிடும் மூலிகைகள் தமிழ் கூறு நல்லுலகத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மூலிகைகள்தான்.
வள்ளலார்/ மூலிகைகள் என்று கூகுள் GOOGLE Vallalar.org செய்தால் நிறைய விஷயங்கள்ல் கிடைக்கின்றன. ஆயினும் பெரும்பாலானோர் தாங்கள் சொல்லும் விஷயங்களுக்கு ஆதாரம் காட்டவில்லை.
சூரிய உதயத்துக்கு முன் எழுந்து, விபூதி பூசி நாளைத் துவங்க வேண்டும் என்று வள்ளலார் சொல்கிறார் ; பல் துலக்க எந்த மரங்களின் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பட்டியல் கொடுக்கிறார் ; கிருஹஸ்தர்கள் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு) போடுவதை வலியுறுத்துகிறார். மேலும் பல வகை வாழைப்பழங்களைச் சாப்பிடச் சொல்கிறார் ; புலால் உணவை அறவே தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்
வள்ளலார்.ஆர்க் Vallalar.org என்ற இணைய தளத்தில் உள்ள நித்ய கரும விதியில் இவைகளைப் பற்றிச் சொல்வதைக் காண்போம்.
****
நித்திய கரும விதி
1. சாதாரண விதி
சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1 விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.
பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.2 பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும்.
வேலங்குச்சி ஆலம்விழுது – இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து,3 அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, துளையிலை4முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு – இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.
சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை – இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.
இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் – இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.10 இரவில் தயிர்11கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். சுமார்12 நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக்12 கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.
பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும்.
பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது மிகுந்த தீவிரமுமாகாது,5 முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் – ஆகும். அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.
கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.6 பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் – இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.7 அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் – இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் – இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம்.
மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று.
கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை – இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும்.
சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, வேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.
பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது.8 சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும்9 தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். பகற் போஜனஞ் செய்த
சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது.
*****
2. பொது விதி
1. ஆறு மாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக் காக்கட்டான் முதலானவைகளால் விரேசனம்16
வாங்கிக் கொள்ளுதல்.
2. நாலு மாதத்திற்கு ஒரு தரம், மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு17 வாங்கிக் கொள்ளல்.
3. ஒரு வருடத்திற்கு ஒருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ்18 செய்து கொள்ளல்.
4. நாலு நாளைக்கு ஒருதரம்,அத்தி முதலிய வஸ்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந்
தீட்டல்.
5. ஒரு பக்ஷம் அல்லது ஒரு வார வட்டத்திற்கு ஒருதரம், சாவதானமாக நல்ல நினைப்போடு தன் வசத்திலிருந்து,
மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல். இது விருத்தர்களுக்கு விதித்ததல்ல.
6. வாரவட்டம் அல்லது நாலு தினத்திற் கொருதரம், முலைப்பால், பொன்னாங்கண்ணி முதலிய தயிலமிட்டுக்
வெற்றிலை போடுதல் பல் துலக்கம்ல் பற்றிய விஷயங்களை வள்ளலார்.ஆர்க் இணைய தளத்திலிருந்து அறிக.
மேலே கூறியவற்றில் மூலிகைகளின் பெயர்களை நான் தடித்த எழுத்தில் காட்டியுள்ளேன். அவற்றிலிருந்து வள்ளலார் வலியுறுத்தும் முக்கிய மூலிகைகள் எவை என்பதையும் அறியலாம்.
Date uploaded in Sydney, Australia – 14 January 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலக அதிசயங்களில் ஒன்று ஆஸ்திரேலிய பவளப் பாறைகளாகும். நவரத்தினங்களில் முத்தும் பவளமும் கடலில் வாழும் பிராணிகளிடமிருந்து கிடைக்கின்றன . பவளம் என்பது உயிருள்ள பிராணிகள்; அவைகள் இறந்த பின்னர் கிடைக்கும் பொருளையே நாம் பாலிஷ் செய்து பவளமாகப் பயன்படுத்துகிறோம்.
Great Barrier Reef
இந்த பவளப்பாறைகள் 1600 மைல் நீளத்துக்கு பசிபிக் மஹா சமுத்திரத்தில் பரந்து விரிந்து வாழ்கின்றன . இவைகளுக்கு இடையே 4000 வகை மீன்கள் வசிக்கினறன .இறைவனின் வண்ண ஜாலத்தை நமக்கு காட்டுவது பவளங்கள் வாழும் கடற்பகுதிதான். பழைய பவளங்கள் இறந்து பாறைகள் ஆகிவிடுகின்றன.
இவை வியாபித்த பரப்பு 3,48,000 சதுர கிலோமீட்டர் ;இவைகளில் 900 தீவுகளும் 3000 தனித்தனிப் பாறைத் திட்டுகளும் உண்டு.
சீனாவின் நெடுஞ்சுவரை விடப் பெரிது; விண்வெளியிலிருந்து காணக்கூடிய ஒரே உயிர் வாழும் அமைப்பு இது ஒன்றுதான்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் நகரிலிருந்து படகுகளில் சென்று பவளத் திட்டுகளைக் காணலாம்.
ஜூன் முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியின் கடல் இளம் சூடாக இருப்பதால் பவளப்பாறைகளைக் காணவும் நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் உகந்த தருணம் ஆகும்.
பவளப் பறைகளைக் கண்ணாடிப் படகுகளிலிருந்து மட்டும் காணாமல் பலர், ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல்லிங் ஹெலிகாப்டர் சுற்றுலா முதலிவற்றின் மூலமும் கண்டு ரசிக்க இது உதவும்.
இதற்கு 2015-ஆம் ஆண்டில் நான் சென்றபின்னர் எழுதிய கட்டுரையில் மேல் விவரங்களைக் காணலாம்.
உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef). இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதைக் காண வேண்டுமென்று 30 ஆண்டுகளாக இருந்த கனவு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு உறவினர்கள் அழைக்கவே, இந்த இடத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று திட உறுதி பூண்டேன். ஏனெனில் பி.பி.சி.தமிழோசையில் வேலை பார்க்கும்போது “வினவுங்கள் விடை தருவோம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி சொல்லியிருந்தேன். அப்போது டெலிவிஷன் டாக்குமெண்டரி (TV Documentary) பார்த்த அடிப்படையில் இது பற்றிப் பேசினேன். என்றாவது ஒரு நாள் இதைக்காண வாய்ப்பு கிட்டும் என்று தெரியும்.
நான் ஜனவரியில் சிட்னி (Sydney) நகருக்குப் பயணமானேன். அங்கு செல்வதற்கு முன்னாலேயே Great Barrier Reef கிரேட் பார்ரியர் ரீF எனப்படும் பெரும்பவளத் திட்டுகள் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். சிட்னி நகரிலிருந்து 1300 மைல் தொலைவில் இருப்பதால் விமானத்தில் சென்றோம். அங்கு பல வீர தீரச் செயல்கள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் வீட்டிலிருந்து வந்த இருவருக்கு சமுத்திரம் என்றால் அச்சம். ஆகவே இந்த முறை கொஞ்சம் குறைத்து வாசிப்போம் என்ற பாணியில் சேவையை ஏற்பாடு செய்தோம். ஆகவே ஐந்து மணி நேர கப்பல் (Ferry) சவாரி மட்டும் போதும் என்று சொன்னோம்.
சிட்னியிலிருந்து 1300 மைல் தொலைவிலுள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் ஊரிலிருந்துதான் நிறைய படகு சேவை இருப்பதால் அங்கு விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். பெரும் பவளத்திட்டுகள் பவளப் பூச்சிகளால் உருவாக்கப்படுபவை. அது 1600 மைல் நீளத்துக்குப் பரவியிருந்தாலும் ஒரு சில ஊர்களிலிருந்து சென்று பார்க்கவே வசதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்து மணி நேர சேவையில் முதலில் பெரியகப்பலில் எல்லோரையும் ஏற்றிச்சென்று பசிபிக் மஹா சமுத்திரத்தில் (Pacific Ocean) 35 மைல் தொலைவிலுள்ள க்ரீன் ஐலண்ட் (Green Island) என்னும் பசுமைத் தீவில் இறக்கிவிடுவார்கள். உண்மையிலேயே பசுமையான மரங்களுண்டு. நிறைய கடைகளும் காப்பி விடுதிகளும், சின்ன மிருகக் காட்சி சாலையும் இருக்கின்றன. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைக்குச் சென்றால் பலரும் முகமூடி, சுவாசக் குழாய் அணிந்து கடலுக்குள் செல்லுவதைக் காணலாம். எல்லாவற்றிற்குமுதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். முன்னமேயே இதற்கெல்லாம் கட்டணம் செலுத்திவிடுவதால், அவர்கள் நமக்காகக் காத்திருப்பர். நாங்கள் போனபோது நிறைய ஜப்பானிய, சீன பயணிகளைத் தான் கண்டோம்
இந்த இடத்தில் மூச்சுக் குழல் (snorkelling) அணிந்து கடலில் மூழ்குவோர், கடலுக்கடியில் செல்லும் குட்டி நீர்மூழ்கியில் (Submersible vehicles) செல்லுவோர், கண்ணாடி ஜன்னல் பொறுத்தப்பட்ட படகில் (Glass Bottomed Boats) செல்லுவோர் என்று பயணிகளை வகைப்படுத்தி அதற்கான கப்பலில் ஏற்றுவர். நாங்கள் கண்ணாடி ஜன்னல் படகுக்குக் காசு கட்டி இருந்தோம். இது 45 நிமிட பயணம். ஒரு பெரிய படகில் எதிரும் புதிருமாக 20+20 = 40 பேர் அமர்ந்திருப்போம். எங்களுக்கு மூன்றடி கீழே படகின் அடிப்புறத்தில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். படகு புறப்பட்டவுடன் பெரும் பவளத் திட்டு புராணத்தை படகோட்டி சொல்லுவார். அந்த நேர்முக வருணனை நடக்கும் போதே நாம் கேமரா சகிதம் கீழே பார்த்துக் கொண்டிருக்க, பலவகையான பவளப் பாறைகள், கடல் பிராணிகள், தாவரங்கள், ஆமைகள், வண்ண வண்ண மீன்கள் என்று பார்த்துக் கொண்டே போகலாம். இடையிடையே அவர் மீன்களுக்கான இரையைக் கடலில் எறிவார். அதைச் சாப்பிட மீன்கள் துள்ளிக் கொண்டுவர, அந்த மீன்களைச் சாப்பிட பறவைகள் பறந்துவர எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். நாங்கள் 20 வகை மீன்களையாவது பார்த்திருப்போம். சில மீன்கள் மிகப் பெரியவை.
இதையும் தாண்டிச் செல்லுவோரை Outer Reef அவுட்டர் ரீF க்கு அழைத்துச் செல்லுவர். அங்கு குட்டி நீர்மூழ்கி வாகனங்களில் ஏறினால் பெரிய ஜன்னல் வழியாக இன்னும் அதிக மீன் வகைகளையும், பெரிய பவளப் பாறைகளையும் காணலாம்.
பவளத்திட்டு மகாத்மியம் அல்லது புராணம்
விண்வெளியில் பறக்கும் வீரர்களும் பவளத்திட்டு இருக்குமிடத்தை எளிதில் காணமுடிகிறதாம். கடலில் சூரிய வெளிச்சம் எந்த அளவுக்குப் போகுமோ அந்த அளவுக்கே பவளப் பூச்சிகள் வளரும். சுண்ணாம்பால் வீடுகட்டி அதில் வசிக்கும். அது இறந்தவுடன் அதன்மீது அடுத்த தலைமுறை வீடு கட்டும் இப்படி வளர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளில் 1600 மைல் வரை பரவிவிட்டது பெரும்பவளத் திட்டு. இத்தான் உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் பிராணி. ஆனால் ஒரு பிராணி அல்ல. பல்லாயிரம் பிராணிகள்.
இந்தியாவிலும் குஜராத் கடலோரம், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பவளப் பாறைகள் உண்டு.அவை சிறிய பரப்பளவில் இருப்பவை. மேலும் மீனவர்கள் அதை அழித்துச் சுருக்கிவிட்டனர்.
ஆஸ்திரேலியப் பெரும்பவளத்திட்டு வருடத்தில் ஒரு நாள் திடீரென முட்டைகளை வெளியிடும். அந்த நாளில் கடல் முழுவதும் தக்காளி சூப் போல மாறிவிடும். அந்த முட்டைகளைச் சாப்பிட ஏராளமான மீன் வகைகள் படையெடுக்கும். ஒவ்வொறு முட்டையும் பல மைல்கள் நீந்திச் சென்று குடியமரும். யார் இதையெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சொல்லிதந்தார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட நாளன்று எல்லாம் கருவை வெளியேற்றுகின்றன, அவைகளைத் தூண்டிவிடுவது என்ன என்பதெலாம் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் சென்ற கேர்ன்ஸ் நகரில் பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன.
இந்தப் பெரும் பவளத்திட்டில்
600வகையான பவளங்கள்
100வகையான ஜெல்லி மீன்கள்
3000வகையான கிழிஞ்சல்கள், சங்குகள், சோழிகள்
500வகையான கடற்புழுக்கள்
1625வகையான மீன்கள்
130வகையான சுறாமீன்கள், மாண்டா ரேய்ஸ்
30வகையான திமிங்கிலங்கள், டால்பின்கள் உள்ளன.
இந்து சாஸ்திரப்படி முத்தும், பவளமும் நவரத்தினங்களில் சேர்க்கை. இரண்டும் கடல் பிராணிகளால் உண்டாக்கப்படுபவை. செம்பவளம் என்பது ஒரு வகைப் பவளம். ஆனால் கருப்பு முதல் பல வண்ணங்களிலும் பவளங்கள் கிடைக்கும்!
மூன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வியாபித்துள்ள இப்பவளத் திட்டு பல நாடுகளின் பரப்பளவுக்குச் சமம். ஐரோப்பாவில் பிரிட்டன், ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இப்பவளத்திட்டில் அடக்கிவிடலாம்!
இங்குள்ள ஜெல்லி மீன்களில் சில மிகவும் விஷம் வாய்ந்தவை. சில சுறாமீன்கள் மனிதர்களை வேட்டை ஆடக்கூடியவை. பெரிய ஆமைகளும் கடல் நண்டுகளும் இங்கே பவனி வரும். ஆஸ்திரேலிய அரசு இதைக் கண்ணும் கருத்துமாக காத்துவருகிறது. இது, அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்.
நாங்கள் ஒரு தவறு செய்தோம். கேர்ன்ஸில் ஒர் இரவு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த நாள் பிரிஸ்பேன் நகருக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனால் அங்கு போனவுடந்தான் தெரிந்தது Cairns கேர்ன்ஸ் நகரில் வேறு ஒரு அதிசயமும் பார்க்க இருக்கிறது என்பது. அங்கு பக்கத்திலுள்ள பெரிய மலையில் அடர்ந்த பசுமையான மழைவனக் காடுகள் இருக்கின்றன. இதற்கு ஒரு முழு நாள் தேவை. போகும் போது கேபிள் காரிலும் வரும்போது ரயிலிலும் அழைத்து வருவர். காடுகளையும் பெரிய நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம்.
அடுத்த முறை கடலில் நீர்மூழ்கி, வானில் கேபிள் கார் பவனி எல்லாவற்றையும் அனுபவிக்க திட்டமிட்டோம். எல்லாம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
வாழ்க இயற்கை; வளர்க காடுகளும் பவளத் திட்டும்!
—subham—
Tags– ஆஸ்திரேலிய, பவளப் பாறை, ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் ,பாருங்கள், Part 4 , உலகின் மிகப் பெரிய, இயற்கை அதிசயம், பெரும் பவளத் திட்டு
இந்தக் கட்டத்தில் பொங்கல் பண்டிகை தொடர்பான 14 முக்கியச் சொற்கள் உள்ளன; கண்டுபிடியுங்கள்.
உ
த்
த
ரா
ய
ண
ம்
X
மு
த
ல்
க
ங்
பொ
ச
ங்
க
ரா
ந்
தி
X
தே
தி
ரு
அ
டு
ப்
பு
X
X
ம்
ன்
ய
ரி
சூ
பா
னை
பு
கோ
X
ம
தை
ம
க
ர
ல
சி
ஞ்
இ
வெ
ல்
ல
ம்
X
ச
X
வி
ற
கு
X
ரு
ண்
டை
ச
ர்
க்
க
ரை
எ
ள்
விடைகள்
பொங்கல், பானை, கோலம், வெல்லம், சூரியன், கரும்பு, இஞ்சி ,மஞ்சள் , விறகு அடுப்பு சர்க்கரை, மகர சங்கராந்தி, தை மாதம் முதல் தேதி, உத்தராயணம், எள் உருண்டை (மகாராஷ்டிரம் உள்பட வட இந்தியாவில் இன்று எள்ளும் வெல்லமும் கலந்த தின்பண்டங்களை வழங்குவார்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விண்வெளிச் செய்தி
21-12-2024 கல்கிஆன்லைன் வெளியிட்ட கட்டுரை
உலக சாதனையை முறியடித்த சீன விண்வெளி வீரர்கள்!
ச. நாகராஜன்
நன்றி : படம் : சி எம் எஸ் ஈ ஓ
கங்கணம் கட்டிக் கொண்டு சீனா சந்திரனை அடைய தனது முன்னேற்றத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறது.
சீன விண்வெளி வீரர்கள் சீனாவுக்கான பிரத்யேக விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்திலிருந்து ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமாக விண்வெளியில் நடந்து ஏற்கனவே உள்ள உலக சாதனையை முறியடித்துள்ளார்கள்.
10 நிமிட நேரம் அதிகம் நடந்து ஏற்கனவே உள்ள சாதனையை இவர்கள் முறியடித்தது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகும்.
சீன விண்வெளி வீரர்களான காய் ஸுயேஸேயும் சாங் லிங்டாங்கும் (Cai Xushe and Song Lingdong) சென்ஷோ 19 விண்கலத் திட்டத்தில் 2024 டிசம்பர் 16ம் நாள் திங்கள் இரவன்று விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து டிசம்பர் 17ம்நாளான செவ்வாயன்று காலை வரை நடை பயின்றனர்.
இதை சீனாவின் மனித இயக்க விண்வெளி பொறியியல் அலுவலகம் (CMSEO –Chinas’ Manned Space Engineering Office) உறுதிப்படுத்தி விட்டது.
இது முந்தைய சாதனையான EVA எனப்படும்எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடியை முறியடித்திருக்கிறது என்று நாஸாவும் அறிவித்து விட்டது. முந்தைய சாதனை எட்டு மணி நேரம் 56 நிமிடங்களாகும்.
நாஸா விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்க விண்வெளிவீரர்களான ஜேம்ஸ் வாஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் ஆகியர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே வந்து 2001 மார்ச் மாதம் இந்த சாதனையை நிகழ்த்தினர்.
டியாங்காங்கிற்கு சென்ஷோ 19 விண்கலமானது ஆறு மாதம் தங்குவதற்கான திட்டத்தோடு அக்டோபர் 29ம் தேதி வந்தது.
இந்த விண்வெளி நடையின் போது காய் ஸுயேஸேயும் சாங்கும் மிகுந்த நெருக்கத்துடன் சாதனையைச் செய்தனர். விண்கலத்தின் உள்ளேயிருந்து இன்னொரு வீரரான வாங் ஹாவோஸே அவர்களுக்கு உதவி செய்தார்.
விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு ரோபாட் கை உதவியது. கீழே பூமியில் தரை நிலையத்தில் அறிவியல் ஆய்வாளர்கள் விண்வெளி நிலையத்தின் குப்பையிலிருந்து பாதுகாக்கும் சாதனத்தை நிறுவி முடித்தனர். இதர பாதுகாப்புப் பணிகளையும் அவர்கள் நிறைவேற்றி உறுதி செய்தனர். இந்தச் செய்தியை முழுமையாக 17-12-24 செவ்வாய்க் கிழமையன்று சி எம் எஸ் ஈ ஓ (CMSEO) உறுதி செய்தது.
34 வயதான சாங் இந்த எக்ஸ்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிடி பணியைத் திறம்பட முடித்து விட்டார் என்று பெருமிதத்துடன் கூறியது.
இந்த விண்வெளி நடையை டிசம்பர் 17ம் தேதி ஜி எம் டி நேரம் இரவு 11.51 p.mக்கு சென்ஷோ கமாண்டரான காய் ஆரம்பித்தார். 90 நிமிடங்களுக்குப் பிறகு அவருடன் இணைந்தார் சாங்.
இருவரும் காலை 8.57க்கு மீண்டும் உள்ளே சென்றனர். அதாவது இந்த ஒன்பது மணி நேரம் ஆறு நிமிடங்கள் என்பது பழைய சாதனையை விட பத்து நிமிடங்கள் அதிகம் என்பதால் சீன வீரர்கள் புது சாதனையை உருவாக்கி விட்டனர்.
இது சீனாவின் விண்வெளி கலத்திலிருந்து வெளியே வரும் 17வது முயற்சியாகும்.
டியாந்ஹே (Tianhe) எனப்படும் அடிப்படை கலமானது 2021 ஏப்ரல் மாதம் விண்வெளியை அடைய இன்னும் கூடுதலாக வென்ஷியன் மற்றும் மெங்ஷியன் (Wentian and Mengtian) என்ற இரு கலங்கள் 2022 ஜூலை மற்றும் நவம்பரில் தாய்க் கலத்துடன் இணைந்தன. இது ‘T’ வடிவில் உள்ளது; பூமிக்கு வெளியில் உள்ள விண்வெளி நிலையமாக இது தன்னுடைய ஓடுபாதையில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சீனா சந்திரனின் மீது பதித்த தன் பார்வையை விடுவதாயில்லை.
வெவ்வேறு ஆயத்த பணிகளை மிகுந்த பொருள் செலவில் அது திறம்பட செய்து வருகிறது!