ஆயூர்வேத அதிசயங்கள் (Post No.4712)

Betel-nut cutter with Vishnu and Lakshmi; areca nut tooth paste

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-39 AM

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4712

 

PICTURES ARE TAKEN by London swaminathan

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய அதிசயச் செய்திகள், அபூர்வ படங்கள் இருக்கின்றன. எவ்வளவுதான் சொல்ல முடியும்? இது நாலாவது கட்டுரை. முடிந்தவரை சொல்கிறேன்.

 

ஜோதிட உடம்பு

ஒரு உடலில் 12 ராசிகளை வரைந்த படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாரசீக மொழிக் குறிப்புகள் உள்ளன. 1396 ஆம் ஆண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த (இப்போது இந்த நாட்டின் பெயர் ஈரான்) மன்சூர் இபின் முகமது என்பவர் ஒரு நூல் எழுதினார். அந்த மருத்துவ புஸ்தகத்துக்கு தஸ்ரிக் இ மன்சூரி என்று பெயர். அதில் உடலின் ஐந்து அம்சங்கள் விளக்கப்படுகின்றன: எலும்பு, நரம்பு, சதை, சுத்த ரத்தக் குழாய்கள், அசுத்த ரத்தக் குழாய்கள். அவர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மருத்துவ மேதை காலன் (GALEN, 130-210 CE) என்பவரைப் பின்பற்றி இந்த புஸ்தகத்தை எழுதினார். . இஸ்லாமிய நாடுகளில் இதுதான் முதல் வைத்திய கிரந்தம் என்று சொல்வதற்கிலை. ஆயினும் இந்தக் க்ரந்தத்தின் சிறப்பு யாதெனில் அழகிய வரைபடங்களுடன் வெளியானதே; இதற்கு முந்திய நூல்களில் உடற்கூறுகளின் படங்கள் இல்லை. இதே முறையில்தான் ராஸி மனிதன் படமும் அமைந்துள்ளது

 

உடலின் பல அங்கங்கள், நவக் க்ரஹங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். கண்ணுக்கு சூரியன், மனதுக்கு சந்திரன், ஜனன உறுப்புகளுக்கு சுக்கிரன் என பல க்ரஹங்களுக்குப் பல பணிகள் உண்டு. இதன் அடிப்படையிலேயே பாரசீக 12 ராஸி மனிதன் வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது என் நம்பிக்கை.

மனிதனின் முதுகெலும்புக்கு அருகில் உள்ள தண்டுவடம் வழியாக ஆறு சக்கரங்கள் இருப்பதாக இந்துக்கள் நம்புவர். இத்தகைய ஆறு சக்கரங்களைக் காட்டும் பழைய ஓவியமும் இங்கே உள்ளது. இந்த தண்டு வடத்துக்குக் கீழே பாம்பு சுருண்டு கிடப்பதுபோல மஹத்தான ஒரு சக்தி உறக்க நிலையில் இருப்பதாகவும் அதை தியானம் மூலம் தட்டி எழுப்பி ஆறு சக்கரங்கள் வழியே வழிநடத்தும் வல்லமை உடையோர் ஆன்மீக விழிப்புணர்ச்சி அடைவார்கள் என்றும் அத்தோடு நில்லாமல் நெற்றிக் கண்  (மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண்) திறக்கப்பட்டு அற்புதங்களை செய்ய முடியும் என்றும் இந்துமத நூலகள் செப்பும். இக்கால விஞ்ஞானிகளுக்கோ, மாற்றுமதத்தினருக்கோ இந்த பிரம்மாண்ட ரஹஸியம் இன்று வரை தெரியாது; விளங்காது.

 

விநாயகர் அகவலில் அவ்வையார் கூறுவதை அறிந்தோருக்கு இதன் சிறப்பு புரியும்.

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

 

 

ஆயூர் வேதம் என்றால் ‘நீண்ட வாழ்க்கை வாழ்வதற்கான அறிவு’ என்று பொருள்படும். உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்களின் அடிப்படையில் அமைந்த மருத்துவ முறை இது. இப்பொழுது இந்தியாவுக்கு வெளியிலும் பிரபலமாகிவிட்டது.

 

இந்தக் கண்காட்சிக்கு ‘ஆயுர்வேத மனிதன்’ என்று பெயர் சூட்டியமைக்குக் காரணம் ஒரு நேபாள ஓவியம் ஆகும். இது 200 ஆண்டுப் பழமையானது. நேபாள நாட்டிலிருந்து இந்தியா வழியாக லண்டன் வரை வந்ததிலிருந்தே இதன் சிறப்பு விளங்கும்.

 

இந்த வண்ண ஓவியத்தில் ஆயுர்வேத நூல் அடிப்படையில் உடல் உறுப்புகளும் ரத்த நாளங்களும் காட்டப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘பாவ ப்ரகாஸ’ என்ற சம்ஸ்க்ருத மருத்துவ நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் இந்த ஓவியத்தில் இருக்கின்றன. ஓவியத்தை வரைந்தவர் நல்லறிவு பெற்றிருந்தாலும் சம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதியவர் பிழைபட எழுதியுள்ளார். எழுத்துப் பிழைகளோடு கருத்துப் பிழைகளும் உள.

 

விஷ்ணு-லெட்சுமி உருவத்துடன் கூடிய பித்தளை பாக்குவெட்டியும் கொட்டைப் பாக்கில் இருந்து செய்யப்பட்ட பற்பசையும் காட்சியில் இடம்பெற்று உள்ளன. அந்தக் காலத்தில் மூலிகைகளை பெரிய வரைபடமாக வரைந்த மூலிகைப் புஸ்த்தகத்தையும் காணலாம். இவை எல்லாம் 200-ஆண்டுப் பழமையானவை.

 

பார்க்க அருமையானவை.

–SUBHAM–

வள்ளலாரின் தமிழ்! (Post No.4711)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-51 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4711

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அருட்பா இரகசியம்

வள்ளலாரின் தமிழ்!

ச.நாகராஜன்

 

 

1

 

சமீப கால சரித்திரம் கண்ட ஒரு மாபெரும் மகான் வடலூர் வள்ளலார்.

தமிழை எனிய இனிய சொற்களால் எளிமைப் படுத்தி பழகும் தமிழில் ஞான தத்துவங்களையும் சாகாக் கலையையும், அனைவரும் உளமுருகத் துதிக்க வைக்கும் தோத்திரப் பாடல்களையும் அளித்து ஆச்சரியப்படுத்திய தமிழ்ச் சித்தர் அவர்!

முருகன் அவரை ஆட்கொண்டதால் அவன் அளித்த தமிழைக் கொண்ட தமிழாகரன் அவர்!

 

(உண்மையில் தமிழாகரன் என்ற பெயரை உடைய ஞானசம்பந்தரைத் தன் ஞான குருவாகக் கொண்டவர் ஆயிற்றே. அதனால் இவரும் தமிழாகரனைக் குருவாகக் கொண்ட தமிழாகரன் ஆகிவிட்டாரோ!)

 

அதாவது தமிழை உடலாகக் கொண்டவர்; உயிராகக் கொண்டவர்.

வள்ளலார்.

 

 

2

வள்ளலாரின் பாடல்களைத் தத்துவத்திற்காகவும், இனிமைக்காகவும், ஓசை நயத்திற்காகவும், வெவ்வெறு அணிகளுக்காகவும், பல உவமைகளுக்காகவும், பல ரகசியார்த்தங்களுக்காகவும், மருத்துவத்திற்காகவும், வாழ்முறை நெறிகளுக்காகவும், தமிழுக்காகவும் ஏன் சாகாக் கலையை அறியவும் பலமுறை படிக்கலாம்; படிக்க வேண்டும்.

அவரது வார்த்தை விளையாட்டுக்கள் மிகவும் சுவாரசியமானவை.

அதற்காகவும் ஒரு முறை படிக்கலாம்.

உதாரணத்திற்குச் சில பாடல்கள் இங்கே பார்க்கலாம்.

 

வெம்பு முயிருக் கோருறவாய்

வேளை நமனும் வருவானேல்

தம்பி தமையன் துணையாமோ

தனையர் மனைவி வருவாரோ

உம்பர் பரவுந் திருத்தணிகை

உயர்மா மலைமேல் இருப்பவர்க்குத்

தும்பக் குடலை யெடுக்காமல்

துக்க வுடலை எடுத்தேனே!

 

தொல்லைக் குடும்பத் துய்ரதனில்

தொலைத்தே னந்தோ காலமெலாம்

அல்ல லகற்றிப் பெரியோரை

யடுத்து மறியேன் அரும்பாவி

செல்வத் தணிகைத் திருமலை வாழ்

தேவா வுன்றன் சந்நிதிக்கு

வில்வக் குடலை யெடுக்காமல்

வீணுக் குடலை யெடுத்தேனே

 

அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப் படுவ தின்றிசிவ

கனியைச் சேரக் கருதுகிலேன்

திவலை யொழிக்குந் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை யெடுக்காமல்

கொழுத்த வுடலை யெடுத்தேனே.

 

 

பாடலின் பொருள் நயம், ஓசை நயம், உருக வைக்கும் பக்தி நயம் பற்றி விளக்க உரையே வேண்டாம்,

வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை – வீணுக் குடலை எடுத்தேனே என்பதில் உள்ள நயம் அவர் தம் தமிழைக் காட்டும் இடம். தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே; குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே என்பதில் நாம் காணுவது வள்ளலாரை அல்ல; நம்மை நாமே காணும் இடமாக அமைகிறது.

 

3

இனி அவரது வார்த்தை விளையாட்டுக்கு இரு பாடல்களைப் பார்ப்போம்!

பகுதி தகுதி விகுதியெனும் பாட்டில்

இகலி லிடையே யிரட்டித் – தகவின்

அருச்சித் தான் முன்னா மதுகடையாங் கண்டீர்

திருச்சிற் சபையானைத் தேர்ந்து.

 

பாடலில் என்ன புரிகிறது? – திருச்சிற்சபையான் மட்டும் புரிகிறது.

மற்ற சீர்கள் சொல்லும் சிறப்பான செய்தி என்ன?

உதவிக்கு நாட வேண்டியவர் கிருபானந்தவாரியார் தான்!

அவரது உரை விளக்கம் படித்தால் உளமும் விளக்கம் அடைகிறது.

 

பகுதி, தகுதி, விகுதி

இந்த மூன்று வார்த்தைகளில் இடையெழுத்து – அதாவது நடுவில் வரும் எழுத்து எது? ‘கு’ ஆகும்.

இதை இரட்டியுங்கள் என்கிறார் அருளாளர்.

இரட்டித்தால் – அதாவது இருமுறை எழுதினால் வருவது

குகு, குகு, குகு!

அதாவது ஆறுமுறை ‘கு’ வருகிறது. அதாவது அறுகு (ஆறுமுறை ‘கு’வை அறுகு என்று தானே கூற வேண்டும். அதாவது அறுகம்புல்!)

 

முதலெழுத்துக்களைக் கூட்டினால் வருவது ப, த, வி.

பத முத்தி ஆகும்.

கடை எழுத்துக்களைக் கூட்டினால் தி, தி, தி. அதாவது மூன்று முறை ‘தி’ வருகிறது. முத்தி.

திருச்சிற்சபையானை அறுகம்புல்லால் அர்ச்சித்தால் பத முத்தியும் ஐக்கிய முத்தியும் சித்திக்கும் என்ற அரிய இரகசியத்தை இந்த புதிர்ப் பாடலில் அருளுகிறார் வள்ளலார்.

 

 

4

இன்னொரு பாடல்:

தாதாதா தாதாதா தாக் குறைக்கென் செய்குதும்யாந்

தாதாதா வென்றுலகிற் றானலைந்தோம் – போதாதா

நந்தா மணியே நமச்சிவா யபொருளே

யெந்தா யெனப் புகழவே.

 

என்ன பொருள், புரியவில்லையே!

கிருபானந்தவாரியார் சுவாமிகளை நாடுகிறோம்; பொருள் விளங்குகிறது.

ஏழு முறை தா வருகிறது; எழு முறை தா! அதாவது எழுதா!

எழுதாக் குறைக்கு என் செய்குதும்? தலையில் எழுதாக் குறைக்கு என்ன செய்வது?

 

தாதா – தாதா என்றால் தெரியுமே; ஆம் வள்ளல்!

மூன்று தா வருகிறது இரண்டாம் அடியில்!

தாதா, தா! வள்ளலே தா என்று அலைந்தோம். இப்படி அலைந்தது போதாதா?

இனியேனும் நந்தா மணியே, நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழுங்கள்; வழிபடுங்கள்; வாழ்க்கையைச் சிறக்க அமையுங்கள்!

 

5

நமக்காகக் குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பாடல்களை அருளியுள்ளார் வள்ளலார் பிரான் – அரிய இரகசியங்களை அடக்கி, இனிய தமிழில்!

 

கொஞ்ச நேரம் ஒதுக்குவோம்; அருட்பாவை ஓதுவோம்!.

என்னென்ன பயன்களைப் பெற முடியும் அருட்பாவைப் படித்தால்.

வாரியார் சுவாமிகளின் திருவருட்பா தொகுதி (1) -யைப் படித்தால் முதல் பக்கத்தில் முதல் பாடலிலேயே பதில் வருகிறது!

 

 

பத்தி வரும் பழவினைகள் பற்ந்தோடும்

மூல மலப் பகுதி மாயும்

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும்

ஆனந்தம் பொங்குஞ் சாந்த

முத்தி வரும் அழியாநன் மோக்கமுறு

முதுகடல்சூ ழுலகி லெல்லாச்

சித்தி வரும் இராமலிங்க தேசிகன்றன்

அருட்பாவைச் சிந்திப்போர்க்கே.

 

அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை!

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 46 (Post No.4710)

DATE – 7 FEBRUARY 2018
Time uploaded in London- 7-31 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4710

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 285 முதல் 290

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

மும்மூர்த்திகள் மற்றும் பாரதிதாசன் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்

 

மும்மூர்த்திகள்

 

ஓங்குசீர் நண்பர் அரவிந்தர் – அவர்தம்

    உயர்ந்த தொண்டைப் போற்றிநல்ல

பாம்புடன் இணைத்து அரனார்க்கு – உற்ற

   பணியா பரணமாய்த் திகழ வைத்தார்!

பாங்குற சோலை நிழலாக – பாரதி

   பற்றிய துணைவரே அரவிந்தர்!

தீங்கிலா பாம்பு அரவிந்தர் – உறவைத்

   திருவுட னேற்றார் புதுவையிலே.

 

புதுவை வந்த மும்மணிகள் – அவர்களே

   பாரதி, வ.வே.சு. அரவிந்தர்!

குதுகல முடனே கடற்கரையில் – மூவரும்

   கூடிக் கருத்து பரிமாறி

சுதந்திரம் பற்றியும் கலந்துபேசி – நாட்டுத்

   தொண்டு புரிந்து வந்தனரே!

புதுவை நண்பராய் நெல்லையப்பர் – கிருட்டின

   மாச்சா ரியாரும் பழகினர்காண்!

 

பழகிய நண்பர் பலருடனும் – பாரதி

   பாரத சுதந்திரம் வேண்டிநின்றார்!

உழன்ற அரிஜன சீடனவன் – கனக்

   லிங்கம் களிப்புறப் பூணூலை

வழங்கி அவனுக் கணிவித்து – பாரதி

   பீடுறு புரட்சி செய்தார்காண்!

முழங்கி சுதந்திரம் வேண்டிநின்று – காளியைப்

   பணிந்து பாரதி பாடினார்காண்!

 

 

பாரதிதாசன்தொடர்பு

 

பாடிய பாரதி பாக்களிலே – “சுதந்திரப்

   பள்ளு தலைப்பு ஒன்றாகும்!

ஈடிலா திருமண நிகழ்ச்சியொன்றை – பாரதி

   உவந்து காணச் சென்றார்காண்!

நாடி வந்த ஓர்தாசன் – அவரே

   கனக சுப்புரத் தினமென்பார்!

பாடினார் பாரதி பாவொன்றை – அதனைப்

   பரிந்து கேட்டார் பாரதியார்!

 

பாரதி அந்தத் தாசனையே அங்கு

   பலர்முன் புகழ்ந்து போற்றினாரே!

வீர சுதந்திரம் வேண்டிநின்றார் – என்ற

   உணர்ச்சிப் பாடலை இசைத்தார்காண்!

தீரன் கனகசுப் புரத்தினமே – பாவேந்

   தரெனும் பாரதி தாசனாவார்!

ஆரமு துபாக்கள் தந்தவரம் – பாரதி

   தாசன் இனிய நண்பரானார்.

 

நண்பர் பாரதி தாசனுமே – அவரொடு

   நெருங்கிப் பழகி வாழ்ந்தாரே!

கண்ணின் மணிபோல் பாரதியின் – குடும்பம்

   தன்னைக் காத்து வந்தாரே!

தொண்டர் பாரதி புகழ்பரப்பும் – தொண்டினைத்

   தொடர்ந்து செய்தார் தாசனுமே!

அண்டி வந்த வறுமையை – நீக்கும்

   ஆருயிர நண்பராய்த் திகழ்ந்தார்காண்

          

                   (மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

 

 

மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-55 AM

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4709

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES; THEY MAY BE SUBJECT TO COPY RIGHT LAWS.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)

 

பொதுவாக ஒரு தேர்தலில் யாருக்குப் பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் இருக்கிறதோ அவர்தான் அரசு அமைப்பார். மைனாரிட்டி– அதாவது சிறு  பான்மைக் கட்சி எதிர்க்கட்சி  வரிசையில் உட்காரும். ஒரு போரில் யாருக்கு அதிக படை பலம் இருக்கிறதோ அவர் வெல்லுவார்; குறைந்த படை பலம் உடைய தரப்பு தோற்கும்; இதை சதுரங்க (செஸ்)  விளையாட்டில்கூடக் காணலாம்.

 

மஹா பாரதத்தில் பாண்டவர் படையில் ஏழு அக்ஷௌகினி சேனையும் துரியோதனாதியரிடம் பதினோரு அக்ஷௌகினி சேனையும் இருந்தது. அது மட்டுமல்ல துரோணர், பீஷமர், அஸ்வத்தாமன், கர்ணன் போன்ற பெரிய வீரர்களைக் கொண்டது துரியோதனன் படை. ஆயினும் மைனாரிட்டி படை பலம் உடைய பாண்டவர் படைதான் இறுதியில் வென்றது. அதாவது, பெ    ரும்பான்மை, சிறுபான்மை என்பதே– அறப் போராட்டத்தில் முக்கியமல்ல– யார் யார் தர்மத்தின் தரப்பில் நிற்கிறார்களோ அவர்கள்  வெல்வார்கள்.

ராமாயணத்திலும் இதே கதைதான்!

 

ராமன் தலைமையிலான குரங்குப் படை எழுபது வெள்ளம்! ஆனால் ராவணன் தலைமையில் இருந்த அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம். இது பற்றிய சுவையான சம்பஷணை இதோ

 

ராம பிரானுடைய படைகள், ஆழ்கடலின் மீது பாலம் கட்டி, அதன் மேல் நடந்து வந்து. இலங்கைக்குள் நுழைந்துவிட்டன. சுவேல மலையின் மீது நின்று ராவணன் படைகளை நோட்டம் விடுகிறான் ராமன்.

 

ராவணன் தனது கோபுர உச்சியில் நின்று ராமனின் வானர சேனையை கண்காணிக்கிறான். திடீரென்று சுரீவன் பறந்து வந்து ராவணனின் மணிமகுடத்தைப் பறித்து ராமன் காலில் சமர்ப்பிக்கிறான்.

 

அதற்குப்பின் ராவணன் அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கிறான். அப்போது நடந்த உரையாடல்:

நிகும்பன் என்ற மந்திரி ராவணனிடம் சொல்கிறான்:-

 

எழுபது வெள்ளத்துற்ற குரக்கினமெயிலை முற்றும்

தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்

அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே

உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

–யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம், கம்ப ராமாயணம்

பொருள்

எழுபது வெள்ளம் என்ற கணக்கை உடைய குரங்குக் கூட்டம் இலங்கை நகர மதிலை முற்றும் வளைத்துக்கொண்டன என்று  எண்ணி மனம் வருந்துகிறாய் போலும்; நம்முடைய படை ஆயிரம் வெள்ளமன்றோ! நம் பகைவர் சூடிய உழிஞையைப் போக்குவதற்கு உன் ஊர்ப்படை நொச்சியை உச்சியில்  கொண்டுள்ளது என்று நிகும்பன் சொன்னான்.

 

தங்களிடம் வலிய ஆயுதங்கள் இருப்பதால் தேவர்களும் முற்காலத்தில் அஞ்சி ஓடினர் என்று நிகும்பன் கூறி முடித்த உடனே மாலியவான் என்பான் கூறுகிறான்:

 

புக்கெரி மடுத்து இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்

சக்கரம் உண்டோ கையில் தசமுகன் தலைகள் ஆன

இக் கிரி பத்தின்  மௌளி இன மணி இடந்து கொண்ட

சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வாளும்

யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம்

பொருள்

இந்த இலங்கை நகரத்துக்குள் புகுந்து தீயை ஊட்டி இதைச் சாம்பலாக்கிவிட்டுப்போன அனுமனுக்குக் கையில் சக்கரம் இருந்ததா? பத்து முகங்களைக் கொண்ட ராவணனின் தலைகள் ஆன பத்து மலையில் உள்ள மகுடத்தின் தொகுதியான மணியைப் பறித்துக் கொண்டுபோன சுக்கிரீவனுக்கு சூலம், வேல், வாள், ஆகியவை உண்டோ?

 

இதற்குப்பின் சீதையை விடுதலை செய்வதே சாலச் சிறந்தது என்று அவன் கூறியவுடன் ராவணன் சினந்து அவனை எள்ளி நகை ஆடுகிறான்.

 

இதிருந்து பெறப்படுவது யாது?

தர்ம- அதர்மப் போராட்டத்தில் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. சிறிய தொகை ஆனாலும் தர்மமே வெல்லும்.

 

மஹாபாரத காலத்திலும், ராமாயண காலத்திலும் தர்மத்தின் தரப்பில் இருந்த படைகள், கூட்டணி குறைவானதே.

 

இனி வரப்போகும் கல்கி அவதார காலத்திலும் அதர்மம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். ஆனால் அறமே வெல்லும்; பாவம் தோற்கும்.

வெள்ளம் என்பது 1 எண்ணைத் தொடர்ந்து 16 பூஜ்யங்கள் உள்ள மிகப்பெரிய எண்.

அக்ஷௌணி என்பது ஒரு லட்சம் படை வீரர்களுக்கு மேலானது, 65000 குதிரைகள் சுமார் 2800 தேர்கள் 2800 யானைகள் கொண்ட ஒரு படை.

 

TAGS–அறம் வெல்லும், பாவம் தோற்கும், வெள்ளம், அக்ஷௌகிணி, பெரும்பான்மை, சிறுபான்மை

 

 

–SUBHAM–

இந்து மத உரையாடல்கள்- சம்வாதங்களின் சுருக்கம் (POST.4707)

Krishna in Rangoli, picture posted by A K R Srinivasan

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-53 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4707

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பிப்ரவரி 2018 இதழில் வெளியான எந்தக் கேள்விக்கும் இதோ விடை என்ற கட்டுரையில் சம்வாதங்களைப் பற்றிப் படித்தோம். சில சம்வாதங்களைப் பற்றிய கட்டுரை இது.

 

 

சில சம்வாதங்களின் சுருக்கம்

ச.நாகராஜன்

Garuda Vahana

1

சம்வாதம் என்றால் என்ன என்பதை அறிய மாதிரிக்காக சில சம்வாதங்களின் சுருக்கம் கீழே தரப்படுகிறது. உரிய நூல்களில் மூல ஸ்லோகங்களைப் படித்தால் அபூர்வ உண்மைகள் தெரிய வரும். படிக்கும் போது நிதானத்துடனும் பொறுமையுடனும் சற்று ஆழ்ந்த விசாரத்தின் அடிப்படையில் படித்தால் நிறைய பலன் கிடைக்கும்.

 

 

பாகவதத்தில் வரும் ஒரு சம்வாதத்தின் சுருக்கம்:

நைமிசாரண்யத்தில் முனிவர்களுக்கிடையே நடந்த அற்புதமான உரையாடல் இது.

 

 

1) ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த, அதற்கு மேம்பட்ட ஒன்றில்லாத நன்மை எது?

 

மிகச் சிறந்த மேம்பட்ட நன்மை ஒவ்வொருவருக்கும் இது தான்:

எப்போதும் இறைவனின் மீது தூய அன்பைக் கொண்டிருப்பது தான்.

 

 

எப்போதும் தொடர்ந்து இறைவனின் புகழைக் கேட்பது (பிரவசனம், கதா உபந்யாசம் , அறவோர் உரை கேட்பது), இறைவனைத் தொடர்ந்து ஞாபகத்தில் இருத்தி வைத்துக் கொள்வது. அவனைத் தொழுவது ஆகியவையே இந்த தூய அன்பிற்கான வழிகள்!

 

 

2) சாஸ்திரங்களின் சாரம் என்ன?

தனது ஒவ்வொரு செயலாலும் கிருஷ்ண பகவானை மகிழச் செய்வது என்பது தான் அனைத்து சாஸ்திரங்களின் சாரம்.

 

 

3) ஏன் பகவான், தானே ஸ்ரீ கிருஷ்ணராக பூவுலகில் அவதரித்தார்?

 

உயிர் வாழ்கின்ற அனைவருக்கும் தன் உண்மையான ஸ்வரூபத்தைக் காட்டியும். லீலைகளை நிகழ்த்தியும் அவர்களைக் கவர்ந்து தன் பக்கம் இழுத்து அவர்கள் அனைவரையும் தனது சொந்த இருப்பிடமான கோலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தான் அவரே நேரில் வந்தார்.

 

 

4) கிருஷ்ண லீலைகள் யாவை?

தேவகியின் மகனாகப் பிறந்தார். நந்தனின் வீட்டில் வளர்ந்தார். பூதனா, கம்ஸன் உள்ளிட்ட பல தீயோரை அழித்தார். நல்லவர்களான பாண்டவருக்கு சகாயமாக அவர்கள் பக்கம் உறுதுணையாக இருந்தார்.மஹாபாரதப் போரில் அறத்தை நிலைநிறுத்தி துஷ்டர்களை அழித்து அவர்களுக்கு உதவினார். இவையும் இன்னும் பலவும் கிருஷ்ணனின் லீலைகள்!

Krishna Bhajan (post by Cuddalore Gopi Bhagavathar)

 

5) இறைவனின்ப் பத்து அவதாரங்களின் நோக்கம் என்ன?

  1. வேதங்களைக் காக்க மச்சாவதாரம்
  2. மந்தார மலையை நிலை நிறுத்த கூர்மாவதாரம்
  3. உலகைத் தூக்கி நிறுத்த வராஹ அவதாரம்
  4. ஹிரண்யகசிபுவை வதம் செய்ய நரசிங்க அவதாரம்
  5. பலி மஹராஜனுக்கு அருள் புரிய வாமன அவதாரம்
  6. தீய மன்னர்களை அழிக்க பரசுராம அவதாரம்
  7. இராவணனை வதம் செய்ய ராமாவதாரம்
  8. அசுரர்களை அழிக்க பலராம அவதாரம்
  9. மிருக பலியைத் தடுக்க புத்தாவதாரம்
  10. கொள்ளையடிப்போரை ஒழிக்க கல்கி அவதாரம்

இவையே அவதார நோக்கங்கள்.

 

 

 

6) ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு தர்மம் யாரைத் தஞ்சம் புகுந்தது?

தர்மம் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் புகுந்து தஞ்சம் அடைந்தது.

 

 

குறிப்பு: – ரிஷிகளின் பெரும்பாலான உரையாடல்கள் நைமிசாரண்யத்தில் ஏன் இடம் பெற்றன. நைமிசாரண்யத்தையே தவம் புரியத் தக்க இடமாக பல ரிஷிகள் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை அறிய இந்தக் கட்டுரையாசிரியர் டிசம்பர் 2012 ஞான ஆலயம் இதழில் எழுதியுள்ள ‘கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள்’ என்ற கட்டுரையைப் படிக்கவும். (ஞான ஆலயம் இதழ்களை பைண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும்.)

 

2

யோக வாசிஷ்டம் ராமருக்கும் வசிஷ்டருக்கும் இடையே நடந்த அற்புதமான உரையாடல். உலகின் வெகு சில நூல்கள் மட்டுமே இதற்கு இணையாக இருக்க முடியும்.

32000 ஸ்லோகங்கள்! உலகின் தற்கால அறிஞர்கள் 158 பேர்கள் கூறிய அனைத்து அபூர்வ விஷயங்களையும் வெகு காலத்திற்கு முன்பேயே இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நூலில் வரும் அற்புத விஷயங்களில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ சில ஸ்லோகங்களின் கருத்துக்கள்.

 

நீண்ட காலம் வியாதியின்றி ஜீவிப்பதற்கான வழியைச் சுட்டிக் காட்டும் ஸ்லோகங்கள் இவை:-

 

உடலைப் பாதிக்கும் வியாதிகள், மற்றவர்கள் இடும் சாபங்கள், மற்றவர்களின் தீய திருஷ்டிகள் ஆகிய அனைத்தும் தாமரை மலர் எப்படி  ஒரு பாறாங்கல்லை மோதி உடைக்க முடியாதோ அது போல மனத்தைப் பக்குவப்படுத்திய ஒருவனுக்கு ஒரு தீங்கும் விளைவிக்க முடியாது.

 

 

நான் விரும்பும் அல்லது விரும்பாத வஸ்துக்களினால் ஏற்படும் கவலைகளைப் பற்றிய விசாரத்தில் ஈடுபட்டு அவற்றை விடுத்து என்னை ஆத்மாவிலேயே நிலை நிறுத்துகிறேன். அதனால் நான நீண்ட காலம் வியாதி இல்லாமல் ஜீவிக்கிறேன்.

 

“இது இன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த அழகிய வஸ்து வேண்டும்” என்பன போன்ற சிந்தனைகள் எனக்கு இல்லை. அதனால் தான் நான் நீண்ட காலம் வியாதி இல்லாமல் ஜீவிக்கிறேன்.

 

 

அலை பாயாமல் என் மனம் ஒருமுனைப்பட்டு இருக்கிறது. துன்பம் இல்லாமல் ஆன்மாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

Rama Pattabishekam, Kalakshetra, Chennai

 

இன்று எனக்கு என்ன நடந்தது? நாளை என்ன நடக்கப் போகிறது? இப்படிப்பட்ட கவலைகள் எனக்கு இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

முதுமை பற்றியும் சாவு பற்றியும் எனக்கு பயமில்லை. ஒரு பெரிய சாம்ராஜ்யமே கிடைத்தாலும் எனக்கு சந்தோஷம் இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

இவர் எனக்கு உறவினர். அவன் எனக்கு அந்நியன். இது என்னுடையது. அது அவனுடையது என்று இப்படி நான் உணர்வதில்லை.ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

 

எடுப்பது, வைப்பது, எழுந்திருப்பது, மூச்சு விடுவது, தூங்குவது  ஆகியவற்றைச் செய்யும் இந்த உடல் என்று என்னை நான் உணர்வதில்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

அலைபாயாத மனோ சக்தியுடன் அழகிய அன்பான களங்கமற்ற பார்வையுடன் எல்லாவற்றையும் நேர்பட நான் காண்கிறேன்.ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

மிகவும் சக்தி வாய்ந்தவனாக நான் இருந்தாலும் கூட வலிமையை எங்கும் பிரயோகிப்பதில்லை. எந்த மனச்சோர்வும் எனக்கு இல்லை. ஏழையாக இருந்தாலும் எனக்கு ஆசை இல்லை.

 

 

அழிகின்ற, உடைந்த, தளர்ந்திருக்கின்ற, சக்தியற்ற, குழம்பியிருக்கின்ற, நசுக்கப்பட்டிருக்கின்ற எதையும் நான் புதியதாகவே பார்க்கிறேன். ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

எனக்கு ஒத்துப்போகின்றவையுடன் எனக்கு சந்தோஷம்.  ஒரு மனிதன் கஷ்டப்படும்போது நான் வருத்தமுறுகிறேன். அனைவருக்கும் நான் நண்பன். ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

 

துரதிர்ஷ்டம் பீடித்திருக்கும் காலத்தில் நான் தைரியத்துடனும் அயராமலும் இருக்கிறேன். அதிர்ஷ்டம் கூடியிருக்கும் வளமான காலத்திலோ எல்லோருக்கும் நான் நண்பன். நான் இருப்பதும் இல்லை; இல்லாமல் போவதும் இல்லை. ஆகவே நான் வியாதியின்றி இருக்கிறேன்.

 

மேலே கண்ட ஸ்லோகங்களுக்குப் பொருந்துகின்ற வகையில் யாராவது வாழ முடியுமா?

முடியும்.

 

நமது காலத்திலேயே இதற்கு இலக்கணமாகவும் இதற்கு மேலும் ஜீவன்முக்தராக வாழ்ந்ததற்கு இலக்கணமாகவும் திகழ்ந்தவர் ரமண மஹரிஷி!

 

Ramana Maharishi

 

3

ச்ரேயஸ் எனப்படும் உன்னதமான  மேலாம் நிலையை அடைவது எப்படி என்று நாரத மஹரிஷி காலவரைக் கேட்க அவர் ச்ரேயஸுக்கான காரணங்களை விவரிக்கிறார்.

மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் வரும் இந்த சம்வாதத்தின்

சுருக்கம்:

 

 

பாவ கர்மங்களை விலக்குவது, எப்போதும் புண்ய கர்மங்களைச் செய்து கொண்டிருப்பது, நல்லோர்களுடைய சகவாசம் ஆகியவை ச்ரேயஸ் அடைவதற்கான காரணம்.

 

எல்லா பிராணிகளிடத்திலும் மிருதுவாக இருத்தல், உலக விவகாரங்களில் நேர்மையாக இருத்தல், இனிமையான சொல் ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி ச்ரேயஸை அடைய வைக்கும்.

 

தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பதும், வேலைக்காரர்களைக் கை விடாமல் இருப்பதும் ச்ரேயஸுக்கான காரணங்கள்.

 

 

 

சத்தியத்தைச் சொல்வது ச்ரேயஸ்.

 

அகங்காரத்தைத்  தள்ளுவதும், அஜாக்கிரதையை விலக்குவதும்,  சந்தோஷமாக இருப்பதும், ஒரே விதமாக நடப்பதும் ச்ரேயஸுக்கான காரணங்கள்.

 

 

இரவில் சஞ்சரிப்பது கூடாது.பகலில் தூங்கக் கூடாது.

 

சோம்பலையும், புறங் கூறுவதையும்,மதத்தையும் விடுதல் வேண்டும். உணவு உட்கொள்வதில் மிதமாக இருத்தல் வேண்டும்.

 

பிறரை தூஷித்து நமக்கு மேன்மையைத் தேடிக் கொள்ளக் கூடாது. தனது சொந்த குணங்களினாலேயே விசேஷமான மேன்மையைத் தேட வேண்டும்.

 

புத்திமானானாவன் தெரிந்தவன் தான் என்றாலும் ஒருவனுக்கு அவன் கேளாமல் எதையும் சொல்லக் கூடாது. நியாய விரோதமாய்க் கேட்கிறவனுக்கும் சொல்லக் கூடாது.

 

 

கர்மத்தை தினமும் செய்பவர்கள்,நல்லவர்கள்,பிறருக்குக் கொடுப்பவர்கள், தங்களது தர்மங்களில் பற்றுள்ளவர்கள் ஆகியோரது சேர்க்கையை விரும்ப வேண்டும்.

 

எந்த ராஜ்யத்தில் துஷ்டர்களுக்கு தண்டனையும் நல்லவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறதோ அங்கு வசிக்க வேண்டும்.

இவை அனைத்தும் ச்ரேயஸ் அடைவதற்கான காரணங்களாகும்.

 

 

தேவரிஷியான நாரதருக்கும் காலவருக்கும் இடையே நடந்த இந்த அர்த்தமுள்ள உரையாடல் எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமானது!

***

Draupadi, Picture by Lalgudi Veda

 

4

சத்யபாமாவும் திரௌபதியும் நடத்திய சம்வாதம் பற்றி இந்தக் கட்டுரையாசிரியர் 2007 ஜூலை ஞான ஆலயம் இதழில் ‘பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்’ என்ற கட்டுரையில் விளக்கியுள்ளார். ஆகவே அதைப் படித்தால் இந்த சம்வாதம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

 

ஏராளமான சம்வாதங்களைத் தனியே எடுத்துப் படித்தால் யாருமே சுலபத்தில் அறிய முடியாத பல இரகசிய விஷயங்களை நாம் அறியலாம்!

*****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 45 (Post No.4706)

DATE- 6 FEBRUARY 2018

Time uploaded in London- 6-51 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4706

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 273 முதல் 284

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

புதுச்சேரி பயணம், புதுச்சேரி வாழ்வு மற்றும் புதுவையில் நண்பர்கள் தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரெண்டு பாடல்கள்

 

புதுச்சேரி பயணம்

 

பணித்த பாரதி மொழிகேட்டு – தலைவர்

      பலரும் அவரைப் போற்றினார்காண்!

துணித லுடனே சூரத்தில் – நடந்த

      கூட்டந் தன்னில்  முழக்கமிட்டார்!

துணிந்து தீவிரக் கொள்கைகளை – திலகர்

      தந்த வழியில் எடுத்துரைத்தார்!

கணித்து லாலா லஜபதிராய் – நாடு

      கடத்தப் பட்டதைக் கண்டித்தார்!

 

கண்டித் துஆங்கில ஆட்சிதனைப் – பாக்களால்

      கடிந்து பாடி எதிர்த்திட்டார்!

தண்டனை பெற்று சிறைபுகுந்த – வ.உ.

       சிதம்பர னாரைப் பேட்டி கண்டார்!

அண்டியோர் கொடுமை எடுத்துரைத்து – “இந்தியா

       ஏட்டில் பிரசுரம் செய்தாரே!

நண்பர் திருமா லாச்சாரி – யாரை

       நலித்து சிறையில் அடைத்தனர் காண்.

 

அடைப்பட் டநண்பர் வருந்தாது – அதற்கு

       காரணங் கேட்டு சிறைசென்றார்!

தடையும் “இந்தியா ஏற்றதுகாண் – பாரதி

      தனக்கும் துன்பம் வருமென்று

இடையூ ரகற்ற புதுச்சேரி – மாறு

      வேட மிட்டுச் சென்றாரே!

உடைமை பெற்று தங்குதற்கு – நண்பர்

      குப்பு சாமி உதவினாரே!

 

புதுச்சேரி வாழ்வு

 

உதவி செய்த அன்பர்க்கு – பாரதி

      என்றும் உதவிட மறக்கவில்லை!

இதமாய் கவிதைத் தொகுப்பினுள்ளே – பின்னர்

      உவந்து போற்றிப் பாடினார்காண்!

முதலில் சிறையில் இருந்தவராம் – திருமா

      லாச்சா ரியாரை ஆங்கிலேயர்

விதந்து விடுதலை செய்தனர்காண் – அவரும்

      உடனே சென்றார் புதுச்சேரி

 

புதுச்சே ரியிலே நண்பர்கள் – கூடி

      பணியைத் தொடர எண்ணினரே!

கதுமென அச்சுப் பொறிகளையே – சென்னையி

      லிருந்து கொணரச் செய்தனர்காண்!

புதுமைப் பொலிவுடன் “இந்தியாவை – புதுவைப்

      பதியினில் வெளியீ டுசெய்தனரே!

மதுரமா யினிக்கும் “இந்தியாவின் – அமுதை

      மக்கள் மீண்டும் பருகினரே!

 

பருகினர் “இந்தியா அமுதத்தை – பாரதி

      பணியை இனிதே தொடர்ந்தார்காண்!

அருந்தவப் பயனாய் பாரதிக்கு – இரண்டாம்

      மகளாம் சகுந்தலா பிறந்தார்காண்!

திருவுடன் புதுவை அரவிந்தர் – “கர்ம

      யோகின் என்ற ஏட்டினையே

அருந்திறலோடு ஆங்கிலத்தில் – நடத்தி

      அரும்பணி புரிந்து பேர் பெற்றார்!

 

புதுவையில் நண்பர்கள்தொடர்பு

 

பேர்பெறு இதழாம் “கர்மயோகின் – அதனை

     பாரதி தமிழில் மொழிபெயர்த்து

சீர்மிகு நாமம் “கர்மயோகி – பெயரால்

     செந்தமிழ்த் தொண்டு தாம்புரிந்தார்!

தேர்ந்த நல்ல தேசபக்தர் – வ.வே.

     சுப்பிர மணியர் அங்குவந்தார்!

அபூர்வ மிக்க வ.வே.சு. – கடலில்

     குதித்து நீந்திப் புதுவைவந்தார்!

 

புதுவை சீனிவா சாச்சாரி – அவரும்

     பாரதிக் கினிய நண்பராவார்!

புதிய பாரத மாதாவின் – கொடியைக்

    கொணர்ந்து பாடுக பாடலென்றார்!

கதுமெனத் “தாயின் மணிக்கொடிப் – பாரீர்

    கவிதை பாடினார் பாரதியார்!

விதப்புடன் கொடியைப் பறக்கவிட்டு – யாமும்

     வாழ்த்துவம் பாரத அன்னையையே!

 

அன்னை சொல்லைக் கேளாது – சகுந்தலை

      அடமம் செய்த நிலைகண்டு

அன்புடன் மகளை அருகழைத்து – பாரதி

     பாப்பா பாட்டு இசைத்தார்காண்!

துன்பம் நெருங்கி வந்தபோதும் – நீயும்

     தளர வேண்டாம் என்று கூறி

அன்றே பாரதி இசைத்த பாடல் – இன்றும்

     என்றும் சிறப்பால் ஓங்குதுகாண்!

 

ஓங்கிய செட்டியார் மாடிவீட்டில் – பாரதி

     புதுவை தன்னில் குடியிருந்தார்!

தீங்கிழை புயலால் புதுச்சேரி – சேதம்

    திக்கெலாம் நிகழ்ந்தது கண்டாரே!

தாங்கொணாத் துயரால் “புயற் காற்று – கவிதை

     தங்கம் மாளிடம் இசைத்தார்காண்!

ஏங்கித் தவித்த மக்களுக்கு – பாரதி

     உதவி செய்தார் பரிவுடனே!

 

பரிவுடன் பாரதி யோகசித்தி – தோத்திரப்

    பாடலைப் பாடினார் புதுவையிலே!

பெரிதும் இன்னல் உற்றபோது – பாரதி

    யதுகிரி பெண்ணிடம் இசைத்தாரே!

“வரங்கேட் டலெனும் தலைப்பீந்து – சக்தியை

    வேண்டிப் பாரதி பாடினாரே!

அரட்டிப் பெய்த மழைபற்றி – பாரதி

    அடுத்துப் பாடினார் பரவலாக!

 

பரவிய காய்ச்சலால் துன்புற்று – சகுந்தலை

    புலம்பித் தவித்தாள் படுக்கையில்

விரவிய பிரார்த்தனை மேற்கொண்டு – பாரதி

    பாடினார் பாடல் “பக்தியினாலே

வருகை தந்த மருத்துவரும் – பாரதி

    பாடலைக் கேட்டு இலவசமாய்

மருந்து தந்து குணப்படுத்த – அதனால்

    மகளின் உடல்நலம் ஓங்கியதே!

 

                                     (மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

லண்டன் கண்காட்சியில் அரிய SEX செக்ஸ் புஸ்தகம்! (Post No.4705)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-14

 

Written by London swaminathan

 

Post No. 4705

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

AYURVEDA EXHIBITION – PART 3

Model of Heart

லண்டன் யூஸ்டன் ஸ்கொயர் (Euston Square) ஸ்டேஷன் அருகில் உள்ள வெல்கம் சென்டரில் (Wellcome Centre) ஏப்ரல் 8-ம் தேதி வரை ஆயுர்வேத கண்காட்சி நடைபெறும். ஹென்றி வெல்கம் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த மருத்துவ பொக்கிஷங்கள் இங்கே உள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்களும், இந்தி யாவிலிருந்து எடுத்து வர முடியாத ஓலைச் சுவடிகளின் மைக்ரோ பில்ம் (Microfilm) முதலியனவும் இங்கு ஆராய்ச்சியாளருக்கு எப்போதுமே கிடைக்கும்.

 

நான் சில ஆண்டுகளுக்கு முன் வரை லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பித்து வந்தேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வெல்கம் சென்டரில் உள்ள  ஒரு மருத்துவ மாணவர் யுனானி வைத்யத்தில் ஆராய்ச்சி செய்தார். அவர் என்னிடம் தமிழ் கற்றதோடு யுனானி (Unani) பற்றி 100, 150 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகளில் வெளியான விளம்பரங்களை மொழி பெயர்க்கவும் சொன்னார். அது முதற்கொண்டு எனக்கு இந்த வெல்கம் சென்டருடன் தொடர்பு உண்டு.

 

பாம்புக்கடி முதல் செக்ஸ் மருத்துவம் வரை எல்லா இந்திய பொக்கிஷங்களும் இங்கே ஒரே கூரையின் கீழ் அறியலாம். இந்தியாவில் ஒவ்வொரு விஷயத்துக்கும் வேறு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் வெள்ளைக்காரர் என்றால் வாயைப் பிளந்து கொண்டு எல்லாவற்ரையும் தேடிக் கொடுக்கும் நம்மவர்கள், வேட்டி கட்டிக் கொண்டு போகும் நம்மவரை மதிக்கவும் மாட்டார்கள்; எள்ளி நகையாடவும் செய்வர். அவ்விஷயத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியும், வெல்கம் லைப்ரரியும் 100 மடங்கு மேல்.

இன்னொரு சிறப்பையும் சொல்லி ஆக வேண்டும். பிரிட்டிஷ் மியூஸியத்தில் மற்றவர்களுக்குக் காட்டாத அரிய பொக்கிஷங்களை அவ்வப்பொழுது ஸ்பெஷல் கண்காட்சி என்று வைத்து 20, 30 பவுன் கட்டணம் வைத்து விடுகிறார்கள் போட்டொ எடுக்கவும் அனுமதி இல்லை. ஆனால் வெல்கம் லைப்ரரி அனைவருக்கும் இலவசமாக தங்கள் பொக்கிஷங்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. புகைப்படமும் எடுக்கலாம்.

Sex Book பாலியல்

 

இந்தக் கண்காட்சியில் அனங்கரங்க என்ற சம்ஸ்கிருத செக்ஸ் (sex) பாலியல்   நூல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 500 ஆண்டுகளுக்கு முந்திய நூல். இந்தப் புஸ்தகத்தை 18 ஆவது நூற்றாண்டில் படி எடுத்துள்ளனர். இது உலகின் முதல் செக்ஸ் புஸ்தகமான காமசூத்ரத்துடன் ஒப்பிடப்படுகிறது. காம சூத்ரத்தை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியவர் வாத்ஸ்யாயன மஹரிஷி.

 

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அரிய பெரிய பொக்கிஷங்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகங்களை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் காளிதாசன், பாஷா, சூத்ரகன் போன்றோரின் நாடகங்கள், ஹமுராபியை விழுங்கிவிடும் உலகின் முதல் சட்ட நூலான மநு ஸ்ம்ருதி, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரம், உலகின் முதல் தெஸரஸான (Thesarus) அமர கோஷ அகராதி, உலகின் முதல் இண்டெக்ஸான (Index) வேத அநுக்ரமணி, உலகின் முதல் தத்துவ நூலான உபநிஷத், உலகின் முதல் இலக்கண நூலனலான அற்புதம் நிறைந்த பாணிணீய வ்யாகரணம், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம், பரத முனியின் பரத நாட்டிய சாஸ்திரம் — இப்படி தத்துவம், தர்கம், காம சாஸ்திரம், கணிதம், விமானவியல் என்று ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சீனம், கிரேக்கம், லத்தீன், எபிரேயம் தமிழ் ஆகிய அவ்வளவு பழைய மொழிகளின் நூல்களை ஒரு தட்டில் வைத்து ஸம்ஸ்க்ருத நூல்களை மற்றொரு தட்டில் வைத்தால் ஸம்ஸ்க்ருதம் மிக மிக கனமானது என்பது விளங்கும்

 

அவ்வகையில் அநங்க சாஸ்திரம் 10 பக்கங்களில் செக்ஸ் படங்களைக் கொண்டுள்ள ஒரு நூலாகும். ஒவ்வொரு பக்கத்திலும் 37 படங்கள் உண்டு. 17ஆவது நூற்றாண்டு முதல் நேபாள மன்னர்கள் செக்ஸ் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டியதால் இந்த நூல் உருவானது. இதனால் இதில் ஸம்ஸ்க்ருத மற்றும் நேவாரி மொழிகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

காஷ்மீரில் வாங்கிய பொருள்கள் பட்டியல்

 

டாக்டர் பைரா மால் (Dr Paira Mall) என்பவர் இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்தவர். ஐரோப்பாவில் பயிற்சி பெற்றவர். ஆகையால் இவர் 1911ல் காஷ்மீருக்குச் சென்று லண்டன் வெல்கம் சென்டர் மியூசியத்துக்காகப் பொருள்களையும் புஸ்தகங்களையும் வாங்கினார். இந்தப் பட்டியலைப் பார்த்தால் ஹென்றி வெல்கமுக்கு எதில் எதில் ஆர்வம் இருந்தது என்பது புலப்படும், டாக்டர் பைரால் 11 ஆண்டுகளுக்கு இந்த வெல்கம் சென்டருக்காக இந்தியாவில் பணிபுரிந்தார். பாம்புக்கடி மருந்து முதல் முஸ்லீம் தாயத்து வரை பல பொருள்களை காஷ்மீரில் 229 ரூபாய்க்கு வாங்கி லண்டனுக்கு அனுப்பினார். இந்தப் பட்டியலை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இதிலுள்ள சில சுவையான விஷயங்கள்:–

 

காசுகள், தாயத்துகள்

காஷ்மீர் தொப்பி

ஸர்ப்ப வழிபாட்டு படங்கள்

இந்து தெய்வங்களின் படங்கள்

பச்சைக் கல் மீது நோயைப் போக்க எழுதப்பட்ட தாயத்துகள்

அராபிய, பாரஸீக, ஸம்ஸ்க்ருத,

திபெத்திய, சாரதா மொழி பிரதிகள், ஓலை ச்சுவடிகள்

நாவிதர் கத்திகள்

குரான் வரிகள் பொறிக்கப்பட்ட நெற்றிச் சுட்டிகள்

வெள்ளி யந்திரம்

சிவப்பு லிங்கம்

 

முதலியவற்றை வாங்கி லண்டனுக்கு அனுப்பினார்.

ஹென்றி வெல்கமின்  சேகரிப்புகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.

டாக்டர் பைரா மால், இந்தியாவில் தங்கிய 11 ஆண்டுகளும் லண்டனில் இருந்த வெல்கம் சென்டர் அதிகாரி தாம்ஸனுடன் தொடர்புகொண்டு அவ்வப்பொழுது கடிதம் எழுதி வந்தார்.

–சுபம்–

 

What did Dr.Paira Mall buy for Rs.229 for London Museum in 1911? (Post No.4704)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-03 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4704

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

LONDON AYURVEDA EXHIBITION- PART 3

Paira Mall was a doctor born in India and trained in Europe. He was sent to India by Henry Wellcome to collect medical treasures from India. Henry wanted him to collect the books in manuscripts or translations and important herbs. He was one of the several agents Henry employed for collecting valuable materials for his research museum. Paira Mall spent 11 years in India and he was in regular correspondence with Mr C J S Thompson, the curator of Museum.

 

There is a list of things Mr Mall bought in Sri Nagar, Kashmir. It makes a very interesting list and shows what type of things were collected from different parts of the world by Henry Wellcome. Here is the list of things (displayed in Ayurvdic Man Exhibition in London)  he bought in 1911 for 229 rupees 4 annas:

 

Rupees- Annas

One Kashmiri cap with Silver charms –  21- 00

One Brass Amulet necklace                     –       3- 8

1 red Lingam                                                            –           3-8

1 very old stone Hindu medical deity     4-00

Tibetan Stone tablet with Mantra                     3-12

1 Persian manuscript with pictures       14-00

1 Persian manuscript, Animal logic                   4-00

6 jade engraved charms

against several diseases                                      18-00

1 old Persian medical manuscript            12-00

1 Hanuman sketch                                                 2-00

2 forehead silver charms with

Koran Verses –                                                                     14-4

1 kollyrium silver holder for eyes            8-00

1 hollow amulet                                                     1-4

1 silver yantra coin                                                            5-00

2 barber knives                                                       3-00

3 Deity pictures                                                      4-00

1 circumcision apparatus                         2-0

3 coins with Kalma engraved                              4-00

1 very ancient manuscript on bark                   35-00

2 pictures of snake worship-                              2-00

3 Very old Persian manuscripts              15-00

2 old Arabic medical manuscripts                     25-00

Gratuity one Mohammedan Hakim      1-00

Agent                                                                         2-00

Picture of Navayana                                              2-00

4 Sharada manuscripts                                         20-00

———

 

Total                                                                           229-4

 

This receipt was signed by Paira Mall and sent to London.

 

 

It is very interesting to see what were the objects Henry Well come was interested in. Anything to do with cures, medical beliefs and cures for snake bites and other diseases.

 

–Subham–

 

 

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 44 (Post No.4702)

Date: 5 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-08 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4702

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 264 முதல் 272

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

 

சென்னை வாழ்வு,சுதேசமித்திரன் துணையாசிரியர் மற்றும் வ.உ.சி தொடர்பு ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்

 

Picture posted by Bhaskaran Sivaraman

சென்னை வாழ்வு

பணியை ஏற்ற பாரதியார் – அரசவைப்

    புலவராய் மூன்றாண் டுதொண்டேற்றார்!

பிணித்த அன்பால் மூன்றுமாதம் – மதுரை

    சேதுப திஉயர் நிலைப்பள்ளி

பணித்த தமிழா சிரியராக – நற்பணி

    புரிந்து தொண்டு உவந்தேற்றார்!

அணிதவழ் சுதந்தர இயக்கத்தின் – எதிர்ப்பு

    எங்கும் திகழ்ந்தது அடக்குமுறை!

 

அடக்கு முறைகள் நிகழ்ந்ததுகாண் – சென்னை

    சுதேச மித்திரன் ஆசிரியர்

திடமிகு சுப்பிரமணியயர் – பாரதி

    யாரை அழைத்தார் சென்னைக்கு!

கடமை அதுவென பாரதியார் – உணர்ந்து

    கடிது சென்னை சென்றாரே!

நடப்பு உதவி ஆசிரியர் – பணியை

    நாட்ட முடனே ஏற்றாரே!

 

ஏற்றார் எழுத்துப் பணியுடனே – கவியும்

    இயற்றி உணர்ச்சி ஊட்டுவித்தார்!

ஆற்றல் பெற்ற பத்திரிகை – சுதேச

    மித்திரன் அதுவென அறிந்தனர்காண்!

ஏற்ற மிக்க சொற்பொழிவால் – மக்கள்

    இதயந் தன்னைக் கவர்ந்தாரே!

போற்றுதல் பெற்று முதற்பதிப்பு  – “வங்கமே

    வாழிய மித்ரனில் மிளிர்ந்தது காண்!

 

சுதேசமித்திரன் துணையாசிரியர்

 

மிளிர்ந்த பாக்களால் மித்திரனில் – பாரதி

    மக்கள் விழிப்பை மலர்வித்தார்!

களிப்பு மிகுசெய் தியொன்றுகேட்டார் – மூத்தபெண்

    பாரதி யார்க்குப் பிறந்தது காண்!

ஒளிர்ந்த பேச்சால் காசியிலே – கோகலே

    தலைமை யேற்க முழக்கமிட்டார்!

ஒளிதரு காங்கிரஸ் மாநாடு – கல்கத்

    தாவில் நடந்தது பீடுடனே

 

பீடுற நடந்த மாநாட்டில் – தாதா

    பாய்நௌ ரோஜி தலைமையேற்றார்!

நாடியே சென்று உரையாற்றி – கல்கத்

    தாவில் பாரதி பங்கேற்றார்!

ஈடிலா தேவி நிவேதிதாவை – பாரதி

    டம்டம் நகரில் சந்தித்தார்!

பாடிய பாரதி பாக்களெலாம் – மக்களின்

    உணர்வைத் தட்டி எழுப்பினகாண்!

 

எழுப்பிய பாக்களின் மிகைகண்டு – அஞ்சினார்

    சுதேச மித்திரன் ஆசிரியர்!

எழுச்சிப் பாக்களால் இதழுக்கு – தடையும்

    வரக்கூ டுமென்று கூறினார் காண்!

பழுதிலா உதவி ஆசிரியர் – பதவியை

    பட்டென விடுத்தார் பாரதியார்!

விழுமிய நண்பர் திருமலாச் – சாரியார்

    உதவி செய்ய முன்வந்தார்!

 

வ.உ.சி.தொடர்பு

 

முன்வந் துதவிய நண்பராலே – பாரதி

    மாதவத் தொண்டினைத் தொடர்ந்தேற்றார்!

உன்னத “இந்தியா வாரஇதழ் – பாரதி

    உரிமை யோடு நடத்தினாரே!

நன்றே ஏற்றார் வரவேற்பு – “இந்தியா

    நளினம் பெற்று உயர்ந்ததுகாண்!

புன்னகை பூத்து “இந்தியத்தாய் – எங்கும்

    புதுநடை காட்டிப் பவனி வந்தாள்

 

பவனி வந்த “இந்தியத்தாய் – ஒலித்தாள்

    பாரதி சுதேச கீதங்கள்!

அவனி போற்றப் பாரதியார் – முழங்கினார்

    “இந்தியா இதழில் கீதங்கள்!

நவநிதி பெற்றது போலெண்ணி – வஉ

    சிதம்பர னாரும் சென்னைவந்தார்!

அவயம் புகுந்த சிதம்பரனார் – பாரதி

    இருவரும் கட்டித் தழுவினர்காண்!

 

தழுவிய இருபெரும் புரட்சியாளர் – நண்பர்

    தேசத் தொண்டர் கூடினர்காண்!

பொழுதெலாம் சுதந்தரம் வேண்டிநின்றோர் – இருவரும்

    பெட்புடன் தத்தம் வழிசென்றார்!

முழுமூச் சுடனே உழைக்கின்ற – வங்கத்

    தலைவர் விபின்சந் திரபாலை

இழுமென சென்னைக் குஅழைத்து – வந்து

    சொற்பொழி வாற்றப் பணித்தாரே!

                   ( மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

அதிசய மூக்கு ஆபரேஷன்! லண்டன் கண்காட்சி தரும் தகவல்!! (Post No4701)

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 14-56

 

Compiled by London swaminathan

 

Post No. 4701

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

லண்டனில் நடைபெற்றுவரும் ஆயுர்வேதக் கண்காட்சியில் நிறைய புதிய தகல்கள் உள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முன்னர் சுஸ்ருதர் என்ற மாமேதை சம்ஸ்க்ருதத்தில் மருத்துவ நூலை எழுதினார். இதில் உலகம் வியக்கும் இரண்டு விஷயங்கள் இருந்தன. 1.மனிதனுக்கு செயற்கை மூக்கு பொருத்தும் அறுவைச் சிகிச்சையும் 2. நூற்றுக்கணக்கான ஆபரேஷன் (சர்ஜரி= அறுவைச் சிகிச்சை) கருவிகளின் வருணனையும் எல்லா மருத்துவர்களையும் வியப்பில் ஆழ்த்தின. அது சரி! இவை எல்லாம் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பதற்கு என்ன சான்று? என்று கேள்வி கேட்போருக்கு லண்டன் வெல்கம் (WELLCOME CENTRE) சென்டர், ஆதாரத்தோடு படங்களை  வெளியிட்டுள்ளது.

 

 

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்தியாவை ஆண்ட காலத்தில் மைசூர் போர் நடந்தது. அதில் ஒருவரின் மூக்கு சேதம் அடைந்துவிட்டது. அவர் கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியர். அவரைப் பிடித்த மைசூர் வீரர்கள், அவருடைய மூக்கை அறுத்துவிட்டனர். இது பற்றி 1794-ஆம் ஆண்டில் லண்டன் ஜென்டில்மேன் என்னும் பத்திரிக்கை படத்துடன் செய்தி வெளியிட்டது. அதில் சொல்லப்பட்ட தகவலாவது:-  சம்பந்தப்பட்ட ஊழியரின் நெற்றியில் இருந்து கொஞ்சம் சதை வெட்டப்பட்டு அதை மூக்கின் மேல் பதியம் வைத்து செயற்கை மூக்கு உருவாக்கினர். இந்தச் சிகிச்சை நடந்த போது பிரிட்டிஷ் சர்ஜன்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் 1700-ஆம் ஆண்டில் இந்திய சர்ஜரி முறைகள் புத்துயிர் பெற்றன என்று லண்டன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. மேலும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட ஆளின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்வரை நம்மவர்கள் இந்த முறையை நினைவிற்கொண்டு அறுவை செய்ததையும் அதைப் பிரிட்டிஷார் பாராட்டி அதிசய செய்தியாக லண்டன் பத்திரிக்கையில் வெளியீயிட்டதையும் வெல்கம் சென்டர் நமக்குத் தெரி விக்கிறது. இதன் காரணமாக சுஸ்ருதர் சம்ஸ்க்ருத மொழியில் விளக்கிய ஆயுதங்களை இரும்பில் செய்து காட்சிக்கும் வைத்தனர்.

 

இந்தியச் செல்வங்களை (HENRY WELLCOME) ஹென்றி வெல்கம் சேகரித்ததோடு பழைய ஆயுர்வேத நூல்களை மைக்ரோபில்ம் (MICROFILM) எடுத்து லண்டனில் சேகரித்து வைத்துள்ளார்.

இத்து தவிர டில்லி பார்மஸி (மருந்துக் கடை) ஒன்றில் இருந்த அனுமன் படத்தையும் கண்காட்சியில் காணலாம். இதில் மயங்கிக் கிடக்கும் லெட்சுமணனைக் காப்பாற்ற, அனுமன் மலையுட ன் பெயர்த்தெடுத்து சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்த படம் இது.

 

ஆயுர் வேத முறைப்படி உடலின் உறுப்புகளையும், இரத்த நாளங்களையும் கா ட் டும் படமும் , அதாவது ஓவியமும் இங்கே உள்ளது. இது குஜராத்தி, சம்ஸ்க்ருதச் சொற்களுடன் இருப்பதால், இந்தியாவின் மேற்குப் பாகத்தில் இருந்து வந்தது தெரிகிறது. சுமார் 300 ஆண்டு பழமையானது இந்த ஓவியம். இது இந்தியர்களுக்கு எந்த அளவுக்கு உடற்கூறு சாஸ்திரம் தெரிந்தது என்பதற்குச் சான்று.

கண்காட்சி ஏப்ரல் 8 வரை உண்டு. ஆனால் திங்கட்கிழமை கண்காட்சி கிடையாது. அனுமதி இலவசம். யூஸ்டன் ஸ்கொயர் ஸ்    டேஷனுக்கு அடுத்த கட்டிடம் வெல்கம் சென்டர்.

 

இன்னும் சில அதிசயங்களை நாளை காண்போம்.

 

–சுபம்–