பாரதி போற்றி ஆயிரம் – 48 (Post No.4722)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-03 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4722

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 48

  பாடல்கள் 306 முதல் 317

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

புதுவை விட்டு நீங்கல் மற்றும் மீண்டும் சென்னை வாழ்வு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரண்டு பாடல்கள்

 

 

புதுவை விட்டு நீங்கல்

 

கண்டோம், கேட்டோம் பாரதியின் – சீர்த்தி

   காசினி எங்கும் பரவியதே!

புண்ணிய பாரத எல்லைக்குள் – பாரதி

   எப்பொழு துவருவார் என்றுநோக்கி

கொண்டனர் கோபம் ஆங்கிலேயர் – அதனால்

   காவல் பலமும் கூடியதே!

கொண்ட நாட்டுப் பற்றோங்க – பாரதி

   தமிழகம் செல்ல எண்ணினார்காண்!

 

எண்ணிய எண்ணம் மோலோங்க – பாரதி

   அன்பர் பலரிடம் கூறினார்காண்!

நண்பர் பலரும் பாரதியை – நெருங்கி

   தமிழகம் செல்லத் தடுத்தனர்காண்!

அண்டியே ஊழ்வினை துரத்திடவே – பாரதி

   அனைவ ரிடமும் விடைபெற்றார்!

கண்ணீர் சிந்தக் குடும்பமுடன் – பாரதி

   கன்னிப் பாரதம் நுழைந்தார்காண்!

 

நுழைந்த இடமே வில்லியனூர் – கோழிக்

   குஞ்சை நாடிய பருந்துபோல

விழைந்து வந்த காவலர்கள் – பாரதி

   குடும்பந் தன்னை சூழ்ந்தனரே!

குழைந்து வாடப் பாரதியைக் – காவலர்

   கைது செய்து ஏகினர்காண்!

நுழைத்து கடலூர் சிறைதனிலே – அடைத்து

   நலியச் செய்து வருத்தினர்காண்!

                                                                               

வருதிச் சிறையில் அடைபட்டார் – செய்தி

   த்வியாபித் தெங்கும் பரவியதே!

உருக்கிய ஈயம் வார்த்தகாது – அதுபோல்

   இன்னல் ஏற்றனர் நண்பர்கள்!

வெருவியே தூத்துக் குடிநண்பர் – நாவலர்

   சோம சுந்தர பாரதியார்

வருந்தி விரைந்து சென்னைவந்தார் – பாரதி

   விடுதலை வேண்டிச் செயல்பட்டார்.

 

செயல்படு சுதேச மித்திரனின் – உரிமை

  அரங்க சாமி ஐயங்கார்

அயரா துழைத்தார்! இருவருடன் – காவல்

   அதிகா ரிதுரை கானிங்டன்

தயவும் கூடிட அரும்பணியால் – பாரதி

   தன்னிகர் விடுதலை தானேற்றார்!

துயருடன் இருபத் துநான்கு நாட்கள் – பாரதி

   சிறையில் காலம் கழித்தாரே!

 

கழித்தார் பதினோ ராண்டுகாலம் – புதுவை

   கொடுத்தது அடைக்கலம் பாரதிக்கு!

அழியாப் பொக்கிசம் கட்டுரைகள் – கவிதை

   உணர்ச்சிக் காவியப் படைப்புகள்

எழிலுறு பக்தி கீதங்கள் – விழிப்பினை

   யூட்டும் எழுச்சிப் பாடல்கள்

தொழிலே படைப்பாய் கொண்டவராம் – பாரதி

   தேச விடுதலை வேண்டினாரே!

 

 

 

மீண்டும் சென்னை வாழ்வு

 

வேண்டியே துணைவி விருப்பத்தால் – பாரதி

  ஊராம் கடையம் சென்றாரே!

தீண்டிய வறுமை போக்குதற்கு – எட்டய

   தலமே உகந்தது என்றெண்ணித்

தூண்டிய குடும்பத் துடன்சென்று – தங்கி

   தொண்டினைத் தொடர்ந்தார் பாரதியார்

மாண்புடன் சுதேசமித் திரனுக்கு – கவிதை

   மீண்டும் அனுப்பி தொண்டேற்றார்.

 

தொண்டால் உயர்ந்த காந்தியண்ணல் – ஒத்துழை

   யாமை இயக்கம் நடத்திவந்தார்!

கொண்டார் பயணம் சென்னைக்கு – அங்கு

   கண்டிட விரைந்தார் பாரதியும்!

அண்ணலும் கவிஞரும் சந்தித்து – அறிமுகம்

   ஏற்றனர் இராசா சிஇல்லத்தில்!

பண்ணிசை சுதந்திர கீதத்தை – பாரதி

   பாடக் கேட்டார் காந்தியண்ணல்.

 

காந்தி யடிகளைக் கண்டபின்னே – பாரதி

   சென்றார் எட்டய புரத்திற்கு!

ஏந்திய செய்தி அழைப்புகண்டார் – மீண்டும்

   சுதேச மித்திரன் நாளிதழ்க்கு!

“தேர்ந்த உதவி ஆசிரியர் – பதவி

   துரிதமாய் ஏற்க விரைந்துவாரீர்”

தாந்திற மறிந்து கிடைத்தபணி – பாரதி

   தொழிற்பணி ஏற்க சென்னைசென்றார்!

 

சென்னை சென்று பணியேற்றார் – குடும்ப

   சீல உறவு நன்றேற்றார்!

இன்னிசை திருவல் லிக்கேணி – பகுதியில்

   உற்ற வாழ்விடம் ஏற்றார்காண்

முன்னைய நண்பர் பலருமங்கு – அவர்க்கு

   உறுதுணை புரிந்து வந்தார்காண்

பொன்னிற குவளைக் கண்ணனென்பார் – அவரே

   பாரதி பணியை ஊக்குவித்தார்.

 

ஊக்க மேற்ற பாரதியார் – முன்னை

   உரைகள், கவிகள், ஒருங்குவித்து

ஆக்கம் பெற்றிடத் தொகுத்தளித்தார் – ஆன்ற

   பத்திரி கைப்பணி நன்றேற்றார்!

காக்கும் பார்த்த சாரதியை – வணங்கி

   கவிதைத் தேரில் உலவிவந்தார்!

சாக்தம் சக்தி அருளினாலே – வெற்றிச்

   செயலில் ஏற்போம்! முரசொலித்தார்!

 

முரசு கொட்டி சுதந்திரத்தை – வேண்டி

   முழக்க மிட்டார் பாரதியார்!

அரசு ஆங்கில ஆட்சிக்கு – அன்றே

   எதிர்த்து விடுதலை பாடிவிட்டார்!

விரவிய இந்திய சமுதாயம் – விடுதலை

   வேட்கைப் பயனை நன்றிசைத்தார்!

பரவலித் துகண்ணனை வணங்கியபின் – உடைத்த

   தேங்காய் பழமுடன் தினம்வருவார்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

 

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

காதல் நோய்க்கு களிம்பு! அவுரங்கசீப் மகிழ்ச்சி! (Post No..4721)

Date: 9 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-53

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4721

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

லண்டன் ஆயுர்வேதக் கண்காட்சியில் உள்ள பல சுவையான படங்களில்

மேலும் மூன்று படங்களைக் காண்போம். ஒரு படம் அவுரங்கசீப்பின் மகனின் காதல் பைத்தியத்தைத் தீர்க்க ஆலோசனை செய்யும் படமாகும். மொகலாயப் பேரரசின் அஸ்திவாரத்தை தன் மதவெறியால் பெயர்த்தெடுத்த அவுரங்கசீப்புக்கு புதிய பிரச்சனை ஒன்று தோன்றியது. அவரது மகன் பேரழகி, இளவரசி மல்லிகே மல்க் மீது காதல் கொண்டான். இந்தக் காதல் பைத்தியம் அளவுக்குப் போனவுடன், அவுரங்கசீப், யுனானி வைத்தியரை (ஹகீம்) அழைத்தார். அவர் (படத்தில் சிவப்பு வண்ண உடை) ஒரு யுனானி களிம்பை சிபாரிசு செய்தார். இந்தப் படம் பாரசீக எழுத்துக்களுடன் உள்ளது. அவுரங்கசீப் கவலையில் ஆழ்ந்திருக்க ஹகீம் களிம்பு பற்றிச் சொன்னவுடன் அவருக்கு கொஞ்சம் திருப்தி!

 

யுனானி மருத்துவம் என்ற சொல் கிரேக்க சொல்லான ஐயோனிய, யவன என்ற சொல்லில் இருந்து வருகிறது. கிரேக்க மருத்துவர்களான ஹிப்போக்ரடீஸ், காலன் (HIPPOCRATES AND GALEN) ஆகியோரின் சிகிச்சை முறைகளை அராபிரய அறிஞர்கள் இஸ்லாமிய முறைகளுடன் கலந்து தெற்காசிய, மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளில் பரப்பினார்கள். மொகலாயப் பேரரசில் இது பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

 

முதல் பெண் டாக்டர்

கண்காட்சியில் இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மா பாயின் படமும் உள்ளது. இவர் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியில் படித்தபின்னர் பல நாடுகளுக்குச் சென்று பயின்றார். பின்னர் பம்பாய்க்குத் திரும்பி வந்து டாக்டராகப் பணி புரிந்தார். அவ்வகையில் இந்தியாவில் பணி யாற்றிய முதல் இந்தியப் பெண் டாக்டர் இவர்தான். ஆனால் இவருடைய திருமண வாழ்வு, சர்ச்சைக்குள்ளாகி, பின்னர் முறிந்தது. இவர் 11 வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். பருவம் அடைந்தவுடன் சாந்தி முகூர்த்தத்துக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அவரது கணவர் கோர்ட்டை அணுகி வெற்றியும் கண்டார். கோர்ட் அவரை, கணவருடன் வாழ உத்தரவிட்டது. அவர் மறுத்தார். பால கங்காதர திலகர் போன்றோர் கணவர் சொல்வதே இந்து தர்ம விதிகள் என்றனர். கோர்ட்டும் அதையே சொன்னது. ஆனால் மாக்ஸ்முல்லர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தார். இறுதியில் ருக்மா பாய், விக்டோரியா மஹாராணியை அணுகி கோர்ட் உத்தரவை ரத்து செய்தார். அந்தக் காலத்தில் மஹாராஷ்டிரத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட விஷயம் ஆகவிருந்தது.

 

யோகிகளும் அபினியும்

இந்து யோகிகள், குறிப்பாக இமயமலைப் பகுதியில் வசிக்கும் யோகிகள், அபினி (கஞ்சா) சாப்பிடுவதாகச் சொல்லுவர். யோகிகள் அபினி தயாரிக்கும் ஒரு படம் வெல்கம் சென்டர் ஆயுர்வேதக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அதில் சொல்லப்பட்ட விஷயமானது:

“தெற்காசிய மருத்துவ சிக்கிச்சையில் அபினி என்பது ஒரு விஷப் பொருள் அல்ல; அதை மருந்தாகவே கருதுகின்றனர். இது பழங்காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் இல்லை என்றும் இஸ்லாமிய தொடர்பு மூலம் வந்தது என்றும் கருதப்படுகிறது. இது மிகவும் கெட்ட பெயர் எடுத்த போதைப் பொருள் என்றாலும், மேலை நாட்டு, கீழை நாட்டு மருத்துவத்தில், மலேரியா, காலரா, வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது

 

 

எனது கருத்து:

இந்த 200 ஆண்டுக்கு முந்தைய ஓவிய படத்தின் தலைப்பு சந்யாசிகள் அபினி தயரிப்பதாக சொல்கிறது. இது யோகிகளுக்குக் கடவுள் வைக்கும் ஒரு பரீட்சை. இங்கு லண்டனில் பெரிய இன்வெஸ்ட்மென்ட் வங்கியில்(Investment Bank) வேலை வேண்டுமானால், பல இன்டெர்வியூக்கள் இருக்கும்; பல்வேறு குழுக்கள் பல கோணங்களில் ஒரே ஆளை கேள்வி கேட்பர்; அத்தனை இன்டெரியூக்களிலும் பாஸ் செய்பவரே/ தேறுபவரே வேலையில் அமர்த்தப்படுவர். இதே போல விஸ்வாமித்ரர் கதையிலும் பல சோதனைகளில் அவர் தோற்று கடைசீயில் வெற்றி பெற்று வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அந்த வகையில் இந்த ஓபியம் Opium எனப்படும் அபினி/ கஞ்சாவும் கடவுள வைக்கும் ஒரு சோதனை. சமாதி நிலை அல்லது தியானத்துக்கு உதவும் அபினி என்று சில யோகிகள் எடுக்கத் தொடங்குவர். பெரும்பாலோர் அந்த நிலயில் இருந்து மீண்டு அபினி இல்லாமலேயே தியானம் செய்யப் போய்விடுவர்; சிலர் மட்டும் சேற்றில் அழுந்திய பன்றிகள் போல போதைப் பொருளுக்கு அடிமை ஆகிவிடுவர். ஆகவே அபினி என்பது கடவுள் வைக்கும் சோதனை; யோகிகள் எவரும் அபினி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுமில்லை; எழுதியதுமில்லை. ஆகவே அபினியுடன் யோகிகளை இணைத்துக் காண்பது அறியாமையே.

–சுபம்–

If You are in Love and Sick, there is an Ointment! (Post No.4720)

Date: 9 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-23 am

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4720

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

First Female Doctor in India Rukma Bhai!

‘Ayurvedic Man Exhibition’ in London Wellcome Centre has got pictures of first female doctor of India, Opium making Hindus Yogis, Cow’s Urine as Medicine, Indian Wrestler Picture, Sri Lankan Enema Syringe, Kamadhenu etc with interesting details.

Dr Rukma Bhai (1864-1955) originally from Bombay studied medicine at London School of Medicine for Women and then in a string of other medical colleges in Europe in 1894.As soon as she qualified, she returned to Bombay (Mumbai) and became the first practising female doctor in India. Married at the age of 11, she had lot of problems in her domestic life regarding the consummation right. Though the court ordered her to live with her husband, she refused and got it annulled by the order of Queen Victoria. Her case in the court raised lot of debates in Maharashtra. B G Tilak opposed her saying that it was against Hinduism but Max Muller supported her.

 

Another interesting picture is the recommendation of an ointment to cure love sickness of Aurangzeb’s son. Moghul emperor Aurangzeb ruled India between 1658 and 1707.

 

The Persian inscription in the marbled border says: The Prince is sick in love with Mallikeh Mulk, which is making the king reflective.

“This painting depicts an episode from a romance set in the Moghul court. Emperor Aurangzeb , a Hakim (Unani physician) is at his shoulder with his chief minister. He is worried about his son (in red),who is lovesick for Mallikeh Mulk, a fair princess. The hakim on the lower left recommends an ointment.

Unani (Unani Tibb) is the term for Greco- Arabic traditional medicine as practised in Moghul India and Islamic cultures of South Asia and Central Asia. Its name is derived from the Arabic Yuanaanii meaning Ionian or Greek. Unani is based on the teachings of Greek physicians Hippocrates and Galen as they were islamicised on contact with Muslim scholars and sophisticated centres of learning in the medieval Islamic world.” (from welcome centre).

 

Opium Making Hindu Yogis!

One must be careful with this opium message. If you are applying for a job in any field, there will be an interview for all the applicants. For a post in a prestigious investment bank there are different interviews at different stages by different teams for the same candidate. If you pass in all those interviews you get the job. In the same way God tests Hindu applicants for spiritually higher posts with opium test. It is believed that opium helps you to get in trance in the beginning.  Hindu yogis take it in the beginning and then drop the habit. But if one gets addicted to opium and forgets God, he laughs at you for failing in the first interview itself! So, please be aware that opium is not recommended by Hindu Yogis to spiritual aspirants.

Here is the picture:

 

–Subham–

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை! (Post No.4719)

DATE – 9 FEBRUARY 2018
Time uploaded in London- 7-49 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4719

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

இது தான் இந்தியா!

 

 

சாது அளித்த ருத்ராக்ஷ மாலை!

ச.நாகராஜன்

 
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

1

பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்பதும் ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெற்று இங்கிலாந்திற்குத் திரும்புவதும் வழக்கம்.

 

அந்தக் காலத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது!

சம்பவத்தைப் பார்ப்போம்.

 

2

(பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில்) இந்திய அரசின் உயர் அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ரைட்டர்ஸ் பில்டிங்(Writers’ Building) சென்று தனது பணி ஒய்வு சம்பந்தமான பேப்பர்களைத் தருவதற்காக சாரட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 

பௌ பஜார் (கல்கத்தாவில் உள்ளது) ஒரே டிராபிக். வண்டி நின்றது.

என்ன செய்வது? காத்திருக்கத் தான் வேண்டும், வண்டியை டிரைவர் நகர்த்தும் வரை.

 

சிகார் ஒன்றைப் பற்ற வைத்தார் அவர்.

 

திடீரென்று கோச்சின் வலது பக்கக் கதவு திறந்தது. ஜடாமுடியுடன் கூடிய ஒருவர் எட்டிப் பார்த்தார்.

சாதாரண ஆளாக இருந்திருந்தால் பயந்து திகைத்துப் போயிருப்பார்.

 

ஆனால் அவரோ போலீஸ் ஆபீஸர் ஆயிற்றே! இதற்கெல்லாம் பயப்படுவாரா என்ன? 25 ஆண்டுகளில் இது போல எத்தனை

பேரைப் பார்த்திருப்பார்!

 

“ஹுசூர், இவ்வளவு காலம் அரிய சேவை செய்த பின்னர் பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது கஷ்டமான விஷயமாகத் தான் இருக்கும்! ஆனால் விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்று தானே! வயது வரம்பும் எல்லோருக்கும் ஒன்று தானே”

சர்வ சகஜமாகப் பேச ஆரம்பித்த அந்த ஜடாமுடி சாது இப்படிக் கூறினார் ஆபீஸரிடம்.

 

அவர் அயர்ந்து போனார்.

 

அந்த சாதுவை நோக்கினார்: “ ஓ, சாது ஜி, நான் ரிடயர் ஆகப் போகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

அவர் பதில் கூறினார்: “இப்படிப்பட்ட  விஷயங்கள் ஜன சந்தடி உள்ள இந்த இடத்தில் விவரிக்கத் தக்கதல்ல! உங்களை இந்தக் கூட்டத்தில் கண்டுபிடித்து விட்டேன்.அது போதும். சாதுக்களே பெறும் அரிய சித்தியான ஞானத்தின் மூலம் நீங்கள் ஒரு உயர் போலீஸ் அதிகாரி என்பதும் எனக்குத் தெரியும். என்ன பிரமிக்கிறீர்களா? பிரமிக்க வேண்டாம்! நீங்கள் உங்கள் கீழே பணி புரிந்த பலருக்கும் நல்லதைச் செய்திருக்கிறீர்கள். அத்துடன் மட்டுமின்றி கத்தியுடன் கூடிய காளியும் சிவனும் குடி கொண்ட பல தலங்களுக்கு நல்லதைச் செய்துள்ளீர்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே இந்த ராஜ்யத்தில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். அந்தக் கத்திகள் வெறும் இரும்பு அல்ல; உண்மையான உயர் ரக  எஃகால் செய்யப்பட்டவை. இன்னும் நீங்கள் செய்துள்ள பல காரியங்களும் புண்ய கர்மங்கள்! ஆகவே வெகு விரைவில் நீங்கள் அளப்பரிய செல்வத்தை அடையப் போகிறீர்கள்! அதை புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். இதோ இந்த ருத்ராக்ஷ மாலையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ரிகி ராமனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இதோ வண்டிகள் நகர ஆரம்பித்து விட்டன. சாஹப், நான் போகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது சில சமயம் என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள்”

 

சாது போய் விட்டார். வண்டிகள் நகரத் தொடங்கின.

தன் வலது கரத்தில் இருந்த ஏழு முகமுள்ள ருத்ராக்ஷங்கள் கொண்ட மாலையை போலீஸ் அதிகாரி வியப்புடன் பார்த்தார்.அந்த வகை ருத்ராக்ஷம் அடர்ந்த ஹிமாலய  மலையின் உட்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய அரிய வகை ருத்ராக்ஷங்கள்!

 

“என்ன ஆச்சரியம்” என்று கூவினார் போலீஸ் அதிகாரி.

விஷயத்தை அத்துடன் அவர் மறந்து விட்டார்.

 

பணி ஓய்வு பெற்ற அவர் இங்கிலாந்தின் தென் பக்கம் உள்ள ஒரு ஊரில் குடியேறி விட்டார்.

 

பிரச்சினை ஏதும் இல்லாத வசதியான வாழ்க்கை.

ஒரு நாள் வீட்டுத் தோட்டத்தில் நிர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். சிகார் பிடிக்கும் வேளையில் அவருக்கு ஒரு தந்தி வந்தது.

கையெழுத்திட்டு அதை வாங்கிய அவர் தந்தியைப் பிரித்தார்.

அவரது ஒரே சகோதரன் இறந்து விட்டார். அவரோ கல்யாணமாகாத பிரம்மச்சாரி.

 

அவரது திரண்ட செல்வம் எல்லாம் சகோதரரான அவருக்கு வந்து சேர்ந்தது.

 

அமைதியாக அவர் உட்கார்ந்து விட்டார்.

அப்போது ஒரே ஒரு க்ஷண நேரத்தில் அவர் முன் ரிக்கி ராமன் தோன்றினார். பின்பு  மறைந்து விட்டார்.

உட்கார்ந்திருந்த அதிகாரி பரபரப்பாக எழுந்து வீட்டினுள் ஓடினார்.

அங்கு ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்த ஏழு முக ருத்ராக்ஷ மாலையைப் பார்த்தார்.

 

மிகுந்த சோகம் ததும்பிய குரலில்,” ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகி விட்டதே! சாது ஜீ! அதற்கு இப்படி ஒரு விலையா?” என்று கூவினார்!

 

***

1935ஆம் ஆண்டு வெளியான TRUTH ஆங்கில வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. மீண்டும் 3-11-2000 இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி : ட்ரூத்

ஆங்கிலத்திலிருந்து தமிழ் வடிவம்: ச.நாகராஜன்

 

ஒளி மாசின் பாதிப்பு (Post No.4718)

DATE – 9 FEBRUARY 2018

Time uploaded in London- 7-15 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4718

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஐந்தாவது உரை

 

  1. ஒளி மாசின் பாதிப்பு ச.நாகராஜன்

 

உலகில் ஒளி மாசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான  மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!

சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுடன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.

இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.

உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!

ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!

உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில்  ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும்  இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!

 தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம்  கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

 

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால்மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும். ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் இதில் வெற்றி அடைய இன்றியமையாததாகும்.

முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!

***


 

செப்பியது யாரோ? தப்பாமல் சொல்!QUIZ (Post No.4717)

Date: 8 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-43

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4717

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

கீழ்க்கண்ட பாடல்களைப் பாடியது யாரோ? அவர் யாரோ?

  1. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

 

  1. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
    எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய்

 

  1. “உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
    பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
    தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

 

  1. இந்திரன் முதலா எண்திசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக
    வாசவன் மருகா வருக வருக

 

  1. தேனே யமுதே சிந்தைக்கரியாய்

சிறியேன் பிழை பொறுக்குங்

கோனே சிறிதே கொடுமை பகர்ந்தேன்

 

  1. பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்

திருநாளும் நல்ல திருநாள்!

 

  1. உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே

 

  1. ஒரு காலில் சங்கு ஒருகாலில் சக்கரம் உள்ளடி பொறித்தமைந்த

இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்

 

  1. உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

 

 

  1. மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசு அறு விரையே! கரும்பே, தேனே!

 

 

  1. ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்

ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்தவம்மானே

 

  1. தெய்விகச் சாகுந்தலமெனும் நாடகம்

செய்ததெவர் கவிதை? — அயன்

செய்வதனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட் கவிதை

 

  1. அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்

 

  1. அன்றறிவாம் என்னாது அறம் செய்க

 

  1. பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்

புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்

இருளுக்குள் சித்திரத்தின் – திறன்

ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்  கூடுடுமோ?

ANSWERS

  1. தற்கால அவ்வையார்
  2. குமரகுருபரர், சகல கலாவல்லி மாலை
  3. பட்டினத்தார் பாடல்
  4. தேவராய சுவாமிகள், கந்த சஷ்டிக் கவசம்
  5. மாணிக்கவாசகர், திருவாசகம்
  6. காளமேகம், தனிப்பாடல்கள்
  7. சங்க கால அவ்வையார் , புறநானூறு
  8. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம்
  9. கம்பன், கம்ப ராமாயணம்
  10. இளங்கோ, சிலப்பதிகாரம்
  11. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை
  12. பாரதி, பாரதியார் பாடல்கள்
  13. திருமூலர் எழுதிய திருமந்திரம்
  14. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
  15. பாரதிதாசன் பாடல்கள்

 

–subham–

 

 

IF YOU DON’T FIND GOD, YOU MUST LEAVE THE COLLEGE! (Post No.4716)

Date: 8 FEBRUARY 2018

 

Time uploaded in London- 19-54

 

Compiled by London swaminathan

 

Post No. 4716

 

PICTURES ARE TAKEN from various sources; may be subject to copy right laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

Agnostic and Atheist Anecdotes!

The late Dr Jowett, the famous master of Balliol College, Oxford, was met one day in the “quad” by an undergraduate who informed him that he, for his part, could find no positive evidence of the existence of God.

Well, Mr B, said Dr Jowett tartly,

“If you don’t find a god by five o clock this afternoon, you will leave this college!”

 

Xxx

 

Voltaire’s Fear

One day. When D’Alambert and Condorcet were dining with Voltaire, they proposed to converse of atheism, but Voltaire stopped them at once.

Wait, said he, till my servants have withdrawn. I do not wish to have my throat cut tonight.

 

Xxx

 

No Religion

During the riots of 1780 most persons in London, in order to save their houses from being burnt or pulled down, wrote on their doors,

No Popery!

Old Grimaldi, to avoid all mistakes, wrote on his,

‘No religion ‘

(The Gordon Riots of 1780 began as an anti-Catholic protest in London against the Papists Act of 1778, which was intended to reduce official discrimination against British Catholics. The protest evolved into riots and looting.)

Xxx

Is Christ All Powerful?

The Little Louise Napoleon did not respond with particular susceptibility to his religious education. In the course of it, he stumbled upon one of the puzzling problems which is remarked upon by many young theological students.

His instructor had portrayed with great melodrama the anguish and suffering of Christ. Louise manifested little reaction

“Aren’t you grieved ?” demanded his teacher, “to think how these wicked men behaved to our Lord.”

“Well”, objected, Louise

“If he was all powerful, why did he let them?”

Xxxx Subham xxxx

 

 

‘பாரதியும் உலகமும்’ (Post No.4715)

DATE – 8 FEBRUARY 2018
Time uploaded in London- 9-03 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4715

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 47

ம.ப.பெரியசாமித் தூரன் அவர்கள் தொகுத்துள்ள ‘பாரதியும் உலகமும்

 

ச.நாகராஜன்

1

பாரதி ஆர்வலர் ..பெரியசாமித் தூரன் அவர்களைத் தமிழ் உலகம் நன்கு அறியும். மகாகவி பாரதியாரின் 42 அரிய கவிதைகள் ம்ற்றும் கட்டுரைகளை அவர் தொகுத்து பாரதியும் உலகமும் என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

பாரதியாரின் அரிய கட்டுரைகளையும் கவிதைகளையும் அவர் சுதேசமித்திரன் இதழ்களிலிருந்து எப்படித் தொகுத்தெடுத்தார் என்பதை நா.மகாலிங்கம் அவர்கள் தன் அணிந்துரையில் எடுத்துக் கூறுகிறார்.

அதையும் பெரியசாமித் தூரன் வழக்கமாக பாரதி பற்றிய நூலில் அழகாக எழுதுகின்ற முன்னுரையையும் சுட்டிக் காட்டுவதே இந்த நூல் பற்றி இங்கு குறிப்பிடுவதன் நோக்கமாகும்.

 

2

அறிஞர் நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையிலிருந்து ஒரு பகுதி:-

 

தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பிய வீரர் பாரதி. அவர் குரலைக் கேட்டு எழுந்த எண்ணற்ற வாலிபர்களில் திரு. பெரிய சாமித்தூரனும் ஒருவர்.

1928ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தூரன் அவர்களுக்குப் பாரதியாரிடம் பக்தி ஏற்பட்டுவிட்டது. “பாரதி பைத்தியம்’’ என்று சிறப்புப் பெயரும் அப்போதே அவருக்குக் கிடைத்தது.

கல்லூரியில் படிக்கும் அந்த நாட்களிலேயே திரு. பெரியசாமித் தூரன் பாரதியாரின் எழுத்துக்களை எல்லாம் சேர்த்து வெளியிட வேண்டுமென்று ஆர்வமுடன் தொண்டாற்றினார்.

மகாகவி பாரதியார் 1905ஆம் ஆண்டு முதல் 1921ஆம் ஆண்டுவரை பதினாறு ஆண்டுகள் சுதேசமித்திரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளை, கவிதைகளை எல்லாம் சேகரிக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டார்.

பாரதியிடம் கொண்ட பக்தி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. சி. ஆர். சீனிவாசன் அவர்கள் நன்மதிப்பைப் பெற்றார். இதனால் பதினாறு ஆண்டுகளாகச் சுதேசமித்திரன் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளி வந்த பாரதியின் எழுத்துக்களைத் தொகுப்பதற்கு அவர் அனுமதி கிடைத்தது.

பதினாறு ஆண்டுகளில் வெளியான சுதேசமித்திரன் தினசரிப் பத்திரிகை, வாரம் ஒருமுறை வெளியான சுதேசமித்திரன் வாரப் பத்திரிகை, இவற்றின் தாள்களை ஒவ்வொன்றாகப் பரிசோதித்து பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் தொகுப்பது சுலபமான காரியமா? திரு. பெரியசாமித் தூரன் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டு பாரதியின் கட்டுரைகளைத் தொகுத்தார். பாரதியாரோடு நெருங்கிப் பழகிய  திரு. பரலி சு. நெல்லையப்பர், திரு. பி. ஸ்ரீ. ஆகிய அறிஞர்களை அணுகி, அவர்களிடமிருந்து பல அரிய செய்திகளைச் சேர்த்தார். இவைகளை எல்லாம் சேர்த்துபாரதி தமிழ்என்ற பெரிய நூலை 1953ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.

கல்லூரி வாழ்க்கையில் ‘’வனமலர் சங்கம்’’ என்ற சங்கத்தை திரு. பெரியசாமித் தூரன் ஆரம்பித்தார். அதில் நாட்டு விடுதலை, சுதேசி இயக்கம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ள அன்பர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இந்தச் சங்கத்தின் சார்பில்பித்தன்என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில் பாரதியின் கட்டுரைகளை வெளியிட்டார்.

 

3

 

பாரதியார் பைத்தியமாகத் திகழ்ந்த தூரன் அவர்கள் இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையையும் நல்கியுள்ளார்.

அதுவே ஒரு ஆய்வுக் கட்டுரை போல அமைந்துள்ளது.

அதைப் படிக்கும் போது தூரன் அவர்கள் எந்த அளவுக்கு பார்தியில் தோய்ந்தவர் என்பதை நன்கு உணர முடியும்.

பாரதி ஆர்வலர்கள் இதை அறிய வேண்டும் என்பதற்காக அவரது முன்னுரையின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.

இதோ பாரதியார் பற்றிய அவரது முன்னுரை:-

 

யதார்த்த நிலையை நன்கு புரிந்து கொண்டு எங்கெங்கு கொடுமை ஓங்குகிறதோ அங்கெல்லாம் அக்கொடுமையைச் சாடித் தமது வலிமையான கவிதைக் குரலாலும் உரை நடைக் குரலாலும், பேச்சுக் குரலாலும் கண்டனம் தெரிவித்து அக்கொடுமையை ஒழிக்கப் பாடுபடுகின்றார். இதில் அவர் சோர்வடைந்ததே இல்லை.

இந்த உணர்வின் அடிப்படையிலேதான் பாரத தேசத்தை அடிமைப் படுத்தி வறுமைக்கும், பிணிக்கும் பஞ்சத்திற்கும் உள்ளாக்கிய ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து முழங்கினார்; பெல்ஜிய நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார்; புதிய ருஷியாவில் கலியுகம் விழுந்து கிருதயுகம் எழுக என்று ஆசி கூறினர்.

 

ஐர்லாந்து, கிரீஸ், பாரசீகம், துருக்கி முதலான நாடுகளுக்கு, பிரிட்டனும், நேசக் கட்சியாரும் இழைத்த அநீதியை வன்மையாகக் கண்டிக்கிறார். இங்ஙனம் கண்டிப்பது மறைமுகமாக பாரத மக்களுக்கு ஆங்கிலேயர் செய்து வந்த அக்கிரமங்கள எடுத்துக்காட்டி அவர்களை எதிர்த்துப் போராடி விடுதலை பெறத்தூண்டுவதற்குப் பயன்பட்டாலும் அது ஒன்றே பாரதியாரின் நோக்கமாக இருக்கவில்லை.

 

பாரதியார் உலக அரசியல் நடைமுறைகளை எவ்வளவு நுட்பமாக அந்தக் காலத்திலே ஆராய்ந்து மக்களுக்குத் தமது இந்தியா வார இதழின் மூலமாக எடுத்து விளக்கினார் என்பதை நாம் காண்கிறோம். உலகத்து நாடுகளின் போக்கை ஒட்டியே இந்தியாவின் போக்கும் அமைய வேண்டி வரும் என்ற உண்மையை
அக்காலத்திலேயே பாரதியார் தமது தொலை நோக்கால் உணர்கின்றார்.

1921ஆம் ஆண்டு செப்டம்பரோடு பாரதியாரின் பேனா ஒய்வு பெற்று விடுகிறது, அதற்குப் பின்னால் 1921 டிசம்பரிலும் 1922 ஆம் ஆண்டு ஜனவரியிலும்தான் சத்யாக்ரஹ இயக்கம்;நேருக்கு நேர் அந்நிய ஆட்சியோடு மோதி சுமார் முப்பதினாயிரம் பேர் சிறை சென்றார்கள்.

                                                              *

 பாரதியார் நடத்திய இந்தியா வார இதழ் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்றது. அது 1910 மார்ச்சுத் திங்களோடு நின்று விடுகிறது.


அந்தக் காலத்திலேயும் சரி, சுதேசமித்திரனில் மீண்டும் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போதும் சரி, பின்னால் அந்த நாளிதழிலேயே உதவி ஆசிரியராக இரண்டாம் முறையாக அமர்ந்த போதும் சரி உலக நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்து அவற்றைப் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு எளிதில் விளங்குமாறு பாரதியார் எழுதுகின்றார்.
பாரசீக தேசத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி இந்தியா வார இதழில் எழுதுவார் (16 மார்ச் 1907); சீனாவிலே பிரதிநிதி ஆட்சி முறைமையைப் பற்றி எழுதுவார் (8 செப்டம்பர் 1906); ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும் என்று கட்டுரை தீட்டுவார் (8 டிசம்பர் 1906): ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்று தெளிவு படுத்துவார் (10 நவம்பர் 1906); ஐர்லாந்தைப்பற்றிப் பரிவோடு எழுதுவார்; துருக்கியின் நிலையை அதே கட்டுரையில் எடுத்துக் கூறுவார் (15 நவம்பர்1920); கிரேக்க தேசத்தின் ஸ்திதியை விவரிப்பார். (19 நவம்பர் 1920).

இவ்வாறு பாரதியார் எழுதுவதைக் காணும்போது நமக்கே வியப்பாக இருக்கிறதல்லவா? இன்று நம்மிடையே உலவிவரும் தமிழ் நாளிதழ்களைப் பாருங்கள். அநேகமாக உலக நடைமுறைகளைப் பற்றி ஒன்றுமே இராது. ஏதாவது நில நடுக்கம் அல்லது விமான விபத்து என்று மட்டும் வரும். அயல் நாடுகள் எவ்வாறு இயங்குகின்றன என்ற தகவல்களைக் காண இயலாது.

பாரதியார் அன்று உலக நடைமுறைகளைக் கூர்ந்து நோக்கி எழுதியது அவருடைய மனிதாபிமானம் என்ற பரந்த நோக்கிலே முக்கியமாக எழுந்ததாகும்.

லார்டுகர்ஸன் இந்திய வைஸ்ராயாக 1899 முதல் 1905 வரை இருந்தவர்; வங்காளப் பிரிவினைக்குக் காரணமாயிருந்து அதை அமல் செய்தவர்; பல அநீதிகளைச் செய்தவர். இவரைப் பற்றி காரசாரமாகக் கண்டித்து பாரதியார் தமது இந்தியா வார இதழிலே எழுதியிருக்கிறார். இருந்தாலும் இவருடைய மனைவியார் இறந்த காலத்தில் பாரதியார் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கத் தவற வில்லை.

லார்டுகர்ஸனும் அவரது மூன்று குழந்தைகளும் அடையக் கூடிய துக்கத்தை நினைக்கும்போது எவரும் பரிதாபம் அடையக் கூடும்என்று தமது இந்தியா வார இதழில் எழுதியுள்ளார்.


‘’
இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது‘’ என்று அவர் தெளிவாக எழுதியுள்ளார் (பார்க்கயூகோள மஹாயுத்தம்).

‘’அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்யஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர, வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூ மண்டல முழுவதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வது உண்மை என்பது தானே விளங்கும்.’

இவ்வாறு ஹிந்து தர்மம் என்ற கட்டுரையிலே 29 நவம்பர் 1917ல் பாரதியார் எழுதுகின்றார்.
*
அணுகுண்டுப் பூதம்தோன்றி மானிடஇனமே அழிந்து போகுமோ என்று அஞ்சுகின்ற இந் நாளில் பாரதியாருடைய எச்சரிக்கை மிகப் பயனுடையதாகும்; ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.

‘’இப்பொழுது மனிதர் ஒருவருக்கொருவர் பயப்படுவது தான் அதிகம்‘’ என்று பாரதியார் 22 செப்டம்பர் 1916-ல் எழுதினார்.

இன்று இந்த பயம் பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது.

‘’உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா?’’ என்று அதே கட்டுரையில் (லோகோபகாரம்) பாரதியார் கேட்கிறார்.

                                                       4

மேலே அணிந்துரையின் சில பகுதிகளைப் பார்த்தோம். அதன் மூலம் பெரியசாமித் தூரன் எப்படிப்பட்ட பாரதி ஆர்வலர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தூரன் அவர்களின் முன்னுரையின் சில பகுதிகளைப் பார்த்தோம். அதில் அவரது ஆய்வின் சிறப்பை நம்மால் உணர முடிகிறது.

முழு நூலையும் பாரதி ஆ இலவசமாகத் தரவிறக்கம் செய்ய இயலும்.

அதற்கான இணையதளம் : www.projectmadurai.org.

இந்த இணையதளத்தை எவ்வளவு பாராட்டினாலும் அது தகும்.

நூலில் பாரதியாரின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் படித்து இன்புறலாம்.

****

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 47 (Post No.4714)

DATE – 8 FEBRUARY 2018

Time uploaded in London- 8-49 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4714

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 291 முதல் 305

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

இயற்றிய நூல்கள் என்ற அத்தியாயத்தில் உள்ள பதினைந்து பாடல்கள்

இயற்றிய நூல்கள்

திகழ்ந்த சுதேச கீதங்கள் – பாரதி

   தொகுத்தார் “ஜன்ம கீத மென்று!

பகர்ந்த இந்தப் பெரும்பாகம் – பாரதி

   பகுத்துத் தந்தார் இரு மூன்றில்!

நிகரிலா தலைப்பு ஐம்பத்து – மூன்று

   அதிலும் பிரிவுகள் பலவுண்டு!

உகப்புடன் ஆயிரத் துத்தொளாயி – ரத்தொன்

   பதிலே பாரதி இயற்றினாரே!

 

இயற்றிய நூலே “ஜன்ம பூமி – விடுத்தார்

   சமர்ப்பணம் நிவேதா தேவிக்கு!

“இயல்பாய் கதிரவ  னைநோக்கிப் – பூக்கும்

   சூரிய காந்தி மலரைப் போல்

வயவறு மக்கள் நெஞ்சமெலாம் – தர்ம

   வழியில் புகுந்திட விரும்புகிறேன்!

நயந்து பூமி மாதாவும் – தொண்டரும்

    நேயன் பணியை ஏற்பீரே!

 

“ஏற்பீர் தொண்டினை எனவுரைத்து – பாரதி

   முகவுரை, சமர்ப்பணம் தந்தாரே!

ஆற்ற லோடு “ஜன்ம பூமி – சாதி

   இன, மத வேறு பாடின்றி

போற்றி முப்பது கோடிமக்கள் – நெஞ்சில்

   பாய்ந்து புரட்சியை எழுப்பியதே!

ஊற்றாய்ச் சுரந்த “ஜன்ம பூமி – பாரதி

   படைப்பாய் யாமும் நன்றேற்றோம்!

 

நன்றே பாரதி தந்த பாக்கள் – படைப்பில்

   “நாட்டுப் பாட்டாய் உயர்வேற்று

அன்பர் பரலி நெல்லையப்பர் – நூலாய்

   அடுத்து வெளியிட யாம்கண்டோம்!

வந்தே மாதரம் என்பதற்கு – தாயை

   வணங்குவோம் என்பதே பொருளாகும்!

இந்தியத் தாயை வணங்கிடுவோம் – நாட்டுப்

    பாட்டால் போற்றிக் காத்திடுவோம்!

 

காத்து வளர்க்கும் திருமாலாம் -மாயக்

   கண்ணனைப் போற்றி பாரதியார்

ஏத்திப் பாடிய பாக்களையே – பரலி

   நெல்லை யப்பர் இங்கிதமாய்க்

கோத்துக் கண்ணன் பாட்டாகத் – தொகுத்துக்

   கொடுத்தார் பாரதம் விழிப்புறவே!

பாத்திறம் வண்ணப் படைப்பாகக் – கண்ணன்

   பாட்டில் திகழ்ந்தான் எண்ணியாங்கு.

 

எண்ணி யாங்கு வடிவத்தில் – கண்ணன்

   உதித்து அருளும் தந்திடுவான்!

கண்ணனே தோழன், தாய்தந்தை – சேவகன்

   கொற்றவன் சற்குரு சீடனுமாய்

திண்டிறல் காந்தன் காதலனாய் – ஒளிர்ந்து

   தந்தருள் புரியும் தெய்வமவன்!

கண்ணன் பாட்டை வெளியிட்ட – நெல்லை

   யப்பரைப் பாரதி வாழ்த்தினார்காண்!

 

வாழ்த்துரை தந்து வ.வே.சு. – ஐயர்

   கண்ணன் பாட்டைப் போற்றினார்காண்!

ஆழ்ந்த ஞானக் கீதையினை – கண்ணன்

   உலகுக் களித்த பரம்பிரமம்!

வாழ்ந்து காட்டிய பக்தர்க்கு – மகிமை

   வளமெலாந் தந்து காத்தவர்காண்!

தாழ்த்தி இருகை கூப்பியாமும் – கண்ணனை

   துதித்துத் தினமும் போற்றிடுவோம்

 

போற்றிப் பாடினார் மாரியையே – அவளே

   பல்வளம் நல்கும் முத்துமாரி

நாற்றிசை போற்றும் அன்னைமாரி – உப்பளம்

   நல்லூர் வாழும் முத்துமாரி!

ஏற்ற தாழ்வு நீக்குமாரி – அவளே

   ஒற்றுமை தந்து காக்குமாரி!

தேற்ற மனமும் நல்குமாரி – அருளை

  வேண்டிப் பாரதி பாடினார்காண்!

 

பாடினார் பாரதி குயில்பாட்டு – அதுவே

   பெட்புறு கற்பனைக் காவியமாம்!

ஈடிலா இன்பக் காதலையும் – காதலால்

   ஏங்கித் தவிக்கும் நிலையினையும்

வாடியே பல்லுயிர் இவ்வுலகில் – ஒவ்வா

   விருப்பினால் துடிக்கும் தன்னுணர்வும்

கோடியாய் விரித்துப் பாடினாரே – பாரதி

   குயிலின் பாட்டும் உயர்ந்ததுகாண்!

 

உயர்ந்த ஞானம் தருபவராம் – மணக்குளம்

   விநாயகர் அருளை வேண்டியுமே

நியம வெண்பா, கலித்துறையும் – அகவல்

   நாடி விருத்தம் மாறிவர

நயமுற நாற்பது பாடல்களால் – விநாயகர்

   நான்மணி மாலையும் பாடினார்காண்

இயன்றஅந் தாதித்  தொடையுடனே – பாரதி

   ஆக்கினார் பரம்பொருள் ஒன்றென்று!

 

ஒன்றென நொண்டிச் சிந்துகொண்டு – பாரதி

   ஒப்பிலா காவியம் படைத்தார்காண்

கம்பனுக் கடுத்தோர் காப்பியமாய் – பாரதி

   பாஞ்சா லிசபதம் இயற்றினார்காண்

ஒன்றிய எளிய தமிழ்நடைக்கு – உகந்த

   சான்று பாஞ்சா லிசபதமாம்!

நன்றே பொருட்சுவை வளத்துடனே – புதிதாய்

   நவின்றார் பாரதி பெண்மையையே!

 

பெண்மையை உயர்த்தி காட்டிடவும் – தேசப்

   பற்றினை மக்களுக் கூட்டிடவும்

எண்ணி வடித்த காப்பியமே – பாரதி

   பாஞ்சா லிசபதம் என்றறிவோம்!

திண்டிறல் வியாசர், வில்லியுமே – கூறா

   கவியின் கூற்றைக் கண்டோம்யாம்!

பெண்மை புரட்சி புதுநடைக்கு – தமிழில்

   புதுமை பாரதி கூட்டினார்காண்!

 

கூட்டிய வசன காவியமாய் – பாரதி

   கொடுத்த நூலே ஞானரதம்

தீட்டினார் அதனை சென்னையில் – அதனை

   மாண்புற முடித்தார் புதுவையிலே!

பூட்டிய ஞான ரதமேறி – சத்திய

   உலகங் கண்டு வியந்தார்காண்!

காட்சிகள் அனைத்தும் கற்பனையே – பாரதி

   கவினுறு படைப்பே ஞானரதம்.

 

ஞான ரதத்துடன் சுயசரிதை – உவந்தே

   புதுவை தன்னில் இயற்றினார்காண்

ஞானப் பாடல் பாடினாரே – பாரதம்

   ஞானமே என்று விளக்கினாரே!

மானம் உயர்ந்த பாரதத்தில் – புத்தர்

   மகானுந் தோன்றி ஞானமீந்தார்!

ஆனவை பலப்பல பாரதியார் – இயற்றி

   ஏற்றார் சீர்த்தி எங்கெங்கும்

 

எங்கும் பாரதி கீர்த்தியோங்க – அறிந்தார்

   சோம சுந்தர பாரதியார்!

இங்கித மாக ஆங்கிலத்தில் – “வாழும்

   மிகப்பெரி யகவிஞர் பாரதியார்

என்றே போற்றிக் கட்டுரையும் – எழுதி

   பாரதி புகழை ஓங்கவைத்தார்!

மன்பதை ஆங்கில நாடெங்கும் – பாரதி

   மாண்புகழ் பெருகக் கண்டோம்யாம்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

‘SHOCKING’ BLESSING OF LIVING BUDDHA! (Post No.4713)

Date: 7 FEBRUARY 2018

 

Time uploaded in London- 16-18

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4713

 

PICTURES ARE TAKEN from various sources; may be subject to copy right laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

Pagan Gods

According to a story told by Roy Chapman Andrews, the famous explorer, the Living Buddha of Mongolia, a personage only a stage less exalted than the Great Lama of Tibet, was a man of original ideas. One of the regular ceremonies of his office was the laying on of hands to many worshippers and lesser priests who came daily for his blessings. The Buddha conceived a mass blessing. He had a small American Delco generator in his palace. This he rigged up with a wire stretching down a long area way. The many pilgrims would line up clutching the wire and each received a memorable blessing as the Living Buddha threw the switch by his throne.

Dr Andrews was invited to partake of the blessing, which courtesy he could not refuse. He reports that the shock nearly knocked him over.

 

Xxx

Atheists and Agnostics Anecdotes

The noted agnostic Colonel Robert Ingersoll, during a visit with Henry Ward Beecher, noted a beautiful globe portraying the constellations and stars of the heavens.

This is just what I have been looking for, he said after examining it. Who made it?

Repeated Beecher in simulated astonishment,

Why Colonel, nobody made it; it just happened.

 

Xxx

Doubtful Agnostic!!

Someone once charged David Hume , the agnostic, being inconsistent because he went to hear the orthodox, Scotch minister, John Brown.

Hume replied, “I don’t believe all that he says, but he does. And once a week I like to hear a man who believes what he says”.

 

Xxx

Sculptor Recognised his God!

A Portuguese SCULPTOR, upon his death bed, had a crucifix placed before his eyes by a confessor, who said,

“Behold the god whom you have so much offended.”

“Do you recollect him now?”

“Alas! Yes, Father”, replied the dying man.

“It was I who made him”.

 

Xxx

 

Permission only to Ingersoll!

When Philips brooks was recovering from an illness, and was denying himself for all visitors, Robert G Ingersoll , the agnostic called. The bishop called him at once.

I appreciate this very much, said Mr Ingersoll, but why do you see me when you deny yourself to your friends?

 

It is this way, said the bishop, I feel confident of seeing my friends in the next world, but this may be my last chance of seeing you

 

Xxx

Did a whale swallow Jonah?

Once while addressing an open air meeting, an atheist asked Bishop Carpenter f he believed that Jonah was swallowed by the whale.

When I get to heaven, I will ask Jonah , said his lordship.

But supposing, the other persisted, he is not there?

Then you will have to ask him,was the quick retort.

 

Xxx Subham xxxx