2600 YEAR OLD ANCIENT INDIAN PLASTIC SURGERY! (Post No.4700)

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 10-03 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4700

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

AYURVEDA EXHIBITION – PART 2

 

Sushruta who lived 2600 years ago in India is the Father of Surgery. He described  over 100 medical instruments. He was famous for nose surgery known as rhinoplasty. The amazing thing about the Nose Surgery is that it was used even 300 years ago in India. A British magazine has described it and the magazine news is displayed in the Ayuevdic man in Wellcome Centre in London (For full details of the Ayurvedic exhibition, please read my article posted yesterday here.

The news item says,

“Cowasjee, a man who had his nose reconstructed with the aid of plastic surgery, stipple engraving by W Nutter, after drawing by J Wales 1795.

 

Among the surgical techniques described in the  Ssruta Samhiat is rhinoplasty, the repair of a severed nose. Variations of this technique have survived in India over the centuries. In 1794, an article in the Gentleman’s magazine of London reported an operation carried out on an employee of the British East India Company who had been captured and mutilated during the Mysore Wars. As witnessed by Company surgeons, a flap of skin incised from the forehead was grafted onto the stump from which a new nose was formed. Such reports heled the resurgence of Indian surgical methods in the 1700s and foreshadowed the modern plastic surgery.

 

Here is another anatomical image from Western India. It has Sanskrit and Gujarati terms for body parts. It is like Persian picture, but the Indian artist had added Chakras and Tantric iconography to the spinal column.

Hanuman bringing the Magical Herb Sanjeevani along with the hill. When Lakshmana was injured, Hanauman was asked to get the Life Giving Sanjeevani herb. Since he could identify the herb he uprooted the entire hill where it is grown and brought it to Lanka.

–Subham–

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? (Post No.4699)

Picture of S Nagarajan in Halabedu, Karnataka, August 2017.

 

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-02 am

 

WRITTEN  by S NAGARAJAN

 

Post No. 4699

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நாட்டு நடப்பும் சொந்த அனுபவமும்!

 

பாராட்டுக்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? எனது சில அனுபவங்கள்!

 

ச.நாகராஜன்

 

 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் இருப்பவை எனது சொந்தக் கருத்துக்கள்; சொந்த அனுபவங்கள். இது எவரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது மன உளைச்சலுக்கு ஆளாக்கவோ எழுதப்படவில்லை. நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் இது எவர் மனதையும் நோக வைத்தால் இப்போதே சொல்கிறேன் – Sorry!)

1

பாராட்டிற்கும் கண்டனத்திற்கும் பயன் உண்டா? நமது தமிழ்நாட்டு ஊடகங்கள் போல் அல்லாமல், அரசியல் கட்சிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டினால் பலன் உண்டு.

தீமையையும் கூட, ஒரு பொதுவான நன்மைக்காகக் கண்டித்தால் பலனுண்டு.

தற்பெருமைக்காக அல்ல; ஒரு இன்ஸ்பிரேஷனுக்காகத் தான் இந்த எனது சொந்த அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

2

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.

சாவியும் மணியனும் ஆனந்தவிகடனிலிருந்து விலகி விட்ட காலம் அது.

சாவி தினமணிகதிர் ஆசிரியப் பொறுப்பை வகித்தார். ஆனால் தினமணி கதிர் வெளியீடு பற்றி வரும் பத்தியில் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் என்றே பதிப்பிக்கப்பட்டிருக்கும்.

ஒரு நாள் தினமணி கதிரைப் பிரித்துப் பார்த்த எனக்கு பகீர் என்றிருந்தது.

ஹலோ ராமச்சந்திரா என்ற தலைப்பில் சாவி ஒரு நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்திருந்தார்.

அதில் ஒரு படம்.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி டெலிபோன் ரிசீவரைக் கையில் பிடித்திருக்கும் காட்சி.

அன்றாடம் ராமரை வழிபடும் பக்தர்களுக்கு எப்படி இருக்கும்?

மனம் நொந்தேன். அன்றே பல நண்பர்களும் இது பற்றிப் பேசினர். விளைவு, அன்று மாலையே பல பேர் கையெழுத்திட்ட கண்டனக் கடிதம் தினமணி கதிருக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரம் தினமணி கதிர் வந்தது.

என்ன ஆச்சரியம். பல பக்தர்களின்  மனம் நொந்திருப்பதாகக் கடிதம் வந்ததால் இந்தத் தொடர் இத்துடன் நிறுத்தப்படுகிறது -சாவி என்று அறிவிப்பு வந்தது.

ராம பக்தி ஜெயித்தது!

 

S Nagarajan and S Swaminathan with Great Scholar Dr R Nagaswamy in Chennai, 2017.

 

3

ஏறத்தாழ ஒரு மஞ்சள் பத்திரிகையாகவே தினமணி கதிரை சாவி நடத்திக் கொண்டிருந்தார்.

மிக அருமையான எழுத்தாளரான, மிகவும் (அப்போது) இளைஞரான ஸ்ரீ வேணுகோபாலனை புஷ்பா தங்கதுரையாக மாற்றி ரெட் லைட் ஏரியாவுக்கு அனுப்பி கமலாவின் கதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

வேணுகோபாலன் மிக அருமையான எழுத்தாளர் என்றும் அவரை இப்படிக் கெடுக்கக் கூடாது என்றும் பிரபல மணிக்கொடி எழுத்தாளரும் எனது தந்தையாரின் நண்பருமான கி.ரா. அடிக்கடி என்னிடம் சொல்லி வேதனைப்படுவார். கி.ரா. சிறிது காலம் மதுரையில் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவர் உலக இலக்கியம் பற்றியும் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசுவார். அதில் வேணுகோபாலனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

இந்த ரீதியில் நடந்த கதிரில் ஒரு நாள் ஜெயகாந்தன் கதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. (பெயர் நினைவில்லை- ‘சக்கரம்’ என்ற தலைப்பாக இருக்கலாம்!)

அதைப் பார்த்த எல்லோரும் திடுக்கிட்டனர். இப்படி ஒரு ஆபாசமான கதை தினமணி கதிரில் வரலாமா?

பலரும் வெகுண்டனர். நானும், எனது நண்பர்களும் ஆளுக்கொரு போஸ்ட்கார்டில் கண்டனத்தைத் தெரிவித்து ஏ.என்.சிவராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதினோம்.

இப்போது லண்டனில் வசிக்கும் டாக்டர் நாகசுப்பிரமணியன், அவரது சகோதரர் திரு கிரி உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

பங்களூர் உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் நண்பர்கள் கண்டனக் கடிதங்களை அனுப்பினர்.

அடுத்த வாரம் ஆச்சரியம்!

தினமணி கதிரில் கடைசிப் பக்கத்திற்கு முன் பக்கம் ஒரு அறிவிப்பு வந்தது. என் நினைவிலிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பொருள் கெடாமல் அதைக் கீழே தருகிறேன்,.

“இப்படி ஒரு கதை வெளியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி இப்படிப்பட்ட கதைகள் என் பெயரை ஆசிரியராகப் போட்ட பத்திரிகையில் இடம் பெறாது.” ஏ.என். சிவராமன்.

அன்பர்கள் அனைவரும் மகிழ்ந்தனர்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

அடுத்த வாரம் கதிர் வந்தது. அதன் கடைசிப் பக்கத்தில் இதுவரை ஆசிரியர் : ஏ.என்.சிவராமன் என்று இருந்ததற்குப் பதிலாக ஆசிரியர்: சாவி என்று போடப்பட்டிருந்தது.

பின்னர் சில காலம் கழித்து, சாவியும் கதிரிலிருந்து வெளியேறி விட்டார்.

 

 

4

கண்டனத்திற்குப் பலன் உண்டு என்பது எனது அனுபவம். ‘ஜெனியுன்’ – Genuine- என்று சொல்கிறோமே அது முக்கியம்! இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.

இனி பாராட்டிற்குப் பலன் உண்டா, உண்டு.

இர்விங் வாலஸ் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். த்ரீ சைரன், வோர்ட், ஆர் டாகுமெண்ட், பீஜன் ப்ராஜெக்ட், செவந்த் சீக்ரட் – எந்த நாவல் வேண்டுமென்றாலும் சொல்லுங்கள், என்னிடம் இருக்கும். கதையும் கிட்டத்தட்ட ஃபிங்கர் டிப்ஸில் இருக்கும்.

எமர்ஜென்ஸி காலம். இந்திராவின் தாங்கவொண்ணா அடக்கு முறை.

மதுரை கொதித்தெழுந்தது. அதில் ஏராளமான அனுபவங்கள். அதைச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல; இடமும் இல்லை.

அப்போது ஆர் டாகுமெண்டில் இர்விங் வாலஸ் சித்தரித்திருந்த சூழ்நிலை இந்தியாவில்.

உடனடியாக ஒரு தற்காலிக சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்லைட் அசோஷியேஷன் – எம்.எல்.ஏ. (Moon Light Association MLA)

ஆங்காங்கு நண்பர்களின் வீடுகளில் பத்துப் பேர் சேர்ந்தால் போதும். ஒரு கூட்டம் நடைபெறும். அதில் நான் ஆர் டாகுமெண்ட் கதையைச் சொல்வேன். சரியாக ஒரு மணி நேரம்.

மூன் லைட் என்று சங்கப் பெயர் இருந்தாலும் திருப்பரங்குன்ற மலையின் பின்பக்கம் இருட்டிலும் இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றதுண்டு. அதில் உருவங்கள் தெரியாது; ஆனால் என் குரல் ஒலிக்கும்.

கூட்டம் கலையும் போது எமர்ஜென்ஸியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல உத்வேகம் எழும்.

இப்படிப்பட்ட நாவலை எழுதிய இர்விங் வாலஸைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது.

பாராட்டுவது என்றால் (தர்மத்தை உடனே செய்ய வேண்டும் என்பது போல) உடனடியாகப் பாராட்டி விடுவது என் வழக்கம் -இடம், பொருள், காலம் எதையும் பாராமல்!

 

நண்பர் ஒருவர் – இர்விங் வாலஸ் பைத்தியம்! அவரும் கூடச் சேர்ந்தார்.

வாலஸுக்குக் கடிதம் பறந்தது.

என்ன ஆச்சரியம், ஒரு நாள் நண்பர் ஓடி வந்தார்.

இர்விங் வாலஸ் பதில் எழுதி இருந்தார் – ஒரு போட்டோவும் இணைக்கப்பட்டிருந்தது. அவரும் அவர் மனைவியும் இருந்த போட்டோவில் அவரது கையெழுத்து வேறு.

எங்கள் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த உலகின் மாபெரும் எழுத்தாளர் எங்களைப் பாராட்டி இருந்தது தான் ஆச்சரியம்.

“உங்கள் எழுத்திலிருந்து நீங்களே நல்ல கருத்துக்களை எழுதும் வல்லமை படைத்தவர்கள் என்பதை என்னால் அறிய முடிகிறது.

ஆகவே நீங்கள் தெரிவித்திருக்கும் பொருள் பற்றி நீங்களே எழுத முடியும். ஏற்கனவே பலவற்றில் ஈடுபட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் எனக்குப் போதிய நேரம் இப்போது இல்லை”

அவரது இந்தக் கடிதத்தை நாங்கள் காட்டாத ஆளே இல்லை. (ஆர் டாகுமெண்ட் போன்ற நாவல்களை அவர் எழுத வேண்டுகோள் விடுத்திருந்தோம் எங்கள் கடிதத்தில்)

ஒரே பெருமிதம்.

பாராட்டுக்கு ஒரு பாராட்டு! அது தான் இர்விங்வாலஸ்!

 

இன்னொரு சொந்த அனுபவம்.

எனது தொழிற்சாலையில் நான் ஒரு பொறுப்பு வாய்ந்த மேலாளர்.

காம்பொணண்ட் ஸ்டோர்ஸில் ஒரு இன் சார்ஜ். ஆள் எப்போதும் கடுகடு என்று இருப்பார் என்று எல்லோரும் சொல்வார்கள். எதற்கு இப்படி ஒரு கடுமை, சிடுசிடுப்பு என்று எனக்கும் புரியவில்லை.

ஒரு நாள் ஸ்டோர்ஸுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. சென்றேன். அகஸ்மாத்தாக கராத்தே பற்றிய பேச்சு அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

அங்கிருந்த பணியாளர், அவரைச் சுட்டிக் காட்டி ‘சார், இவர் கராத்தே மாஸ்டர் சார்’ என்றார்.

உடனடியாக அவரைப் பார்த்து, “உண்மையா இது” என்றேன்.

சற்று நெளிந்த அவர் தான் அடைந்திருக்கும் மிகப் பெரிய உயரிய நிலையை – பெல்ட் பெற்றதைக்-  காண்பித்தார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் சாப்பாடு நேரம் வந்து விடும். அப்போது என் மேஜைக்கு வாருங்கள்” என்று சொல்லி விட்டு    (ஒரு மாதிரியான உத்தரவு தான்!) கிளம்பினேன்.

சாப்பாடு நேரத்தில் அவர் சற்று பயந்தவாறு வந்தார்.

(வேலை நேரத்தில் கராத்தே பற்றி பேசியதற்கு கண்டனமோ!?)

“வாருங்கள்” என்று அவரை அழைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரது அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன்.

பிறகு அவர் கிளம்பும் போது உங்களது போட்டோ ஒன்று நாளை காலை எட்டு மணிக்கு என் மேஜையில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு அவரை அனுப்பினேன்.

அடுத்த மாதம் எங்கள் தொழிலகத்தின் பிரபல இதழில் அவர் பற்றிய பேட்டிக் கட்டுரை ஒன்று அவரது  போட்டோவுடன் வந்திருந்தது.

தொழிற்சாலையில் ஒரு பரபரப்பு. அவரை அனைவரும் நேரில் சென்று பாராட்டினர்.

அவர் சிடுசிடுப்பு அன்றிலிருந்து போயே போயிற்று. பெரும் புகழைத் தாங்க முடியாத அவர் எளிமையான மனிதராக ஆகி விட்டார்.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை.

எனது ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர் ( அவரைப் பார்ப்பதே சிம்ம சொப்பனம்; என்ன ஒரு கம்பீரம்; ரோட்டரி தலைவருக்கே உள்ள ஒரு கம்பீரம் அது!) தனது அறைக்குள் நுழைந்தவர், பர்ஸனல் மேனேஜருக்குப் போன் செய்து, “ யாரப்பா அது,கராத்தே மாஸ்டர், அவரை என் ரூமுக்கு அனுப்பு” என்று கூற அலுவலகமும் தொழிற்சாலையும் பரபரப்புக்குள்ளாகியது.

பயந்து நடுநடுங்கியவாறே உள்ளே சென்ற சிடுசிடுப்பு நண்பர் மிகவும் பாராட்டப்பட்டு நிஜ கராத்தே வீரராக வெளியில் வந்தார்.

எனக்கு அவர் கூறிய நன்றி வார்த்தைகள் ஒரு புறம் இருக்கட்டும்! அவர் வேலையே பறி போனது.

ஆம், ஜே.எம்.டி, ஸ்டோர்ஸ் இன் சார்ஜ் வேலையிலிருந்து அவரை நீக்கி விட்டார்.

அவருக்கு இன்னும் அதிகப் பொறுப்புடன் கூடிய உயர் பதவியான செக்யூரிடி பிரிவில் வேலை தரப்பட்டது.

எனக்கும் மகிழ்ச்சி; பாராட்டி எழுதிய எழுத்துக்கும் ஒரு மஹிமை இருப்பதைப் புரிந்து கொண்டேன். (பின்னொரு காலத்தில் அவர் துபாயில் இருப்பதாகக் கேட்டு மகிழ்ந்தேன்)

பாராட்டுகளுக்கு மிகப் பிரமாதமான பலன் உண்டு.

ஆயிரமாயிரம் பேர் மனதில் புகழ்ந்தாலும் வெளிப்படையாகச் சொல்பவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்!

அதற்கு ஒரு தனிப் பெருமை உண்டு!

(இந்த சமயத்தில் திரு நஞ்சப்பா அவர்களை நினைக்கிறேன். உடனடியாக பாராட்டி கமெண்ட்ஸ் காலத்தில் தன் கருத்தைப் பதிவிடும் இவர் பல்லாயிரத்தில் ஒருவர் தான்! இவர் எந்த ஊரோ! என்ன பொறுப்பில் இருக்கிறாரோ – எனக்குத் தெரியாது. இந்த விநாடி வரை!)

இன்னும் பல சுவையான அனுபவங்கள் உண்டு என்றாலும் கூட கட்டுரை நீண்டு விட்டதால் நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது!

சாரம் இது தான்!

மக்களுக்குத் தீங்கு பயக்கும் விஷயங்களைக் கண்டியுங்கள். லெட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கடிதம் போடுங்கள். பாராட்ட வேண்டியவர்களை – உங்கள் குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, சமூக சேவை, எழுத்து உள்ளிட்ட பணியில் ஈடுபட்டவராக இருந்தாலும் சரி, பாராட்டுங்கள்.

பயன் உண்டு சார், பயன் உண்டு!

என் அனுபவம் பேசுகிறது!

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 43 (Post No.4698)

Date: 4 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-13 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4698

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 255 முதல் 263

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

காப்பு மற்றும் முதல் ஒன்பது பாடல்கள்

காப்பு

சகாயமா யிருந்து நமக்கருளும்

    சீல நல்லூர் அனவரதன்

மகாலய செல்வ விநாயக! நின்

    மலரடி போற்றித் துதிக்கின்றேன்!

உகாமை பெற்று உயர்சிறப்பு

    ஏற்க இயற்றிய காவியமாம்

மகாகவி பாரதி அந்தாதி

    மேதினி போற்ற வரந்தருவாய்.

 

இளமைக் கல்வி

அரசவைப் புலவர் சின்னசாமி – துணைவி

   இலக்குமி அம்மை தவப்பயனாய்

விரவிய ஆயிரத்து எண்ணூற்று – எண்பத்

   திரண்டு திசம்பர் பதினொன்றில்

புரட்சிக் கவிஞர் சேயாக – எட்டய

   புரத்தில் பிறப்பெ டுத்தாரே!

கருவிலே திருவும் பெற்றவராம் – பாரதி

   கண்ணிய சுப்பிர மணியனென்பார்

 

மணியெனக் கருவிலே அறிவொளியும் – வீ ச

   மகிழ்ந்து சேயைக் கண்ட பெற்றோர்

கனிந்தே சுப்பையா பெயர்சூட்டி – செல்வனைக்

   குவலயம் போற்ற வளர்த்தனர் காண்

இனிய மழலை சொல்கேட்டும் – சிறுகை

   அளாவிய செயல்கண் டும் உவந்து

புனிதன் சபையில் சிறந்தோங்க – மகனைப்

   பேணி வளர்த்தனர் ஒருங்கிணைந்து

 

ஒருங்கே புலமை மிகவேற்று – புதல்வனும்

   பிதாவைக் குருவாய் ஏற்றான்காண்!

வருந்திச் சிறுவனை ஏங்கவைத்துத் – தாயும்

   விண்ணுல காளச் சென்றார் காண்!

திருவுடன் கல்வியைச் சிறிதுபெற்று – மணியன்

   தொடக்கப் பள்ளியில் சேர்ந்தானே!

அருந்திறல் கண்டு ஆசிரியர் – குழுவும்

   அவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

 

 

உயர் கல்வியும் பட்டமும்

 

புகழ்ச்சீர் இந்துக் கல்லூரி – நெல்லை

   பள்ளியில் தொடர்ந்து பயின்றானே!

அகவை பதினொன் றாகியது – கலைமகள்

   அருளால் கவிகள் படைத்தனன் காண்!

அகந்தை கொண்ட காந்திமதி – நாதன்

   “பாரதி சின்னப் பயல் என்று

உகந்த ஈற்றடிப் பாவொன்று – இயற்றுக

   என்று பலர்முன் கூறினன்காண்.

 

கூறிய வுடனே, “காந்திமதி – நாதனைப்

   பார்! அதி சின்னப் பயல் என்று

வீ றுடன் ஈற்றடி யமைத்துப்பா – ஒன்று

   சுப்பிர மணியன் விடுத்தனன் காண்!

ஆறுதல் பெற்று எதிர்த்தவனும் – அடங்கி

   மணியன் திறத்தைப் போற்றினன் காண்!

ஏறுபோல் கவிதை இயற்றுகின்ற – மணியன்

   இயல்பை வியந்தனர் புலவர்கள்!

 

புலவர் பலரும் ஒருங்குகூடி – அவர்க்குப்

   “பாரதி பட்டம் வழங்கினர் காண்!

குலவிய ஆசு கவியியற்றும் ஆற்றலை

   பாரதி பெற்றுச் சிறந்தனன் காண்!

நலமுற மூன்று நான்கு ஐந்து – படிவம்

   உயர்நிலைக் கல்வி ஏற்றான் காண்!

நிலவிய வயது பதினான்கில் – பாரதி

   ஏற்றார் மணவினை இல்லறமே!

 

 

இளமைத் திருமணமும் அரசவைக்கவியும்

இல்லற மேற்ற செல்லம்மாள் – கடையம்

   செல்லப் பாவின் செல்வமகள்!

செல்லம் மாளின் வயதேழு – சுந்தர

   சற்குண வதியாய்த் திகழ்ந்தனள் காண்!

பல்வள சிறப்புடன் பாரதியும் – குடும்பம்

   பாங்குடன் நடத்திப் பேர்பெற்றார்!

அல்லல் தொழிலில் ஏற்றதந்தை – நோயால்

   அவதி யுற்று அமரமேற்றார்!

 

அமர மேற்றார் தந்தையுமே – அதனால்

   இன்ன லுற்றார் பாரதியார்!

தமது அத்தை குப்பம்மாள் – இளவலை

   காசிக் கழைத்துச் சென்றனள் காண்!

சமர்த்தன் அங்குஜெய் நாராயண  – பள்ளியில்

   சாலக் கல்வி தொடர்ந்தாரே!

அமன்ற இந்தி சமஸ்கிருதம் – மொழியில்

   தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தாரே!

 

திகழ்ந்த பல்கலை அலகாபாத் – கழகத்

   தேர்விலும் வெற்றி பெற்றார்காண்!

மிகன்சீர் பாரதி சீர் கண்ட – எட்டய

   புரத்தின் அரசர் அங்கு சென்றார்!

உகந்து பேசி பாரதியை – தம்மூர்

   அழைத்து வந்து உயர்வளித்தார்!

மகிழ்ந்து அரசவைக் கவிஞராக – பாரதி

   எட்டய புரத்தில் பணியேற்றார்

             ( மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

***

 

லண்டனில் ஆயுர்வேதக் கண்காட்சி (Post No.4697)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-58 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4697

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

 

லண்டன் மாநகரில் யூஸ்டன் (Euston or Euston Square) ரயில் நிலையம் அருகில் வெல்கம் சென்டர் (Wellcome Centre) என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிலயம் உள்ளது. இந்தியாவின் ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் தொடர்பான ஏராளமான மருத்துவ பொக்கிஷங்களின் உறைவிடம் இது. இப்பொழுது ஒரு ஆயுர்வேத கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும். ஆனால் திங்கட்கிழமையில் கண்காட்சி மூடப்பட்டிருக்கும்.

 

 

இந்தக் கண்காட்சி பற்றியும் வெல்கம் என்பவர் யார் என்றும் சில செய்திகளைக் காண்போம்.

ஹென்றி வெல்கம் (1853-1936) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் லண்டனுக்கு ஒரு மருந்து விற்பனையாளராக வந்தார். பின்னர் ஒரு பெரிய மருத்துவ தொழில் நிறுவனத்தை அமைத்து வெற்றி கண்டார். அவருக்கு வரலாற்றில்– குறிப்பாக மருத்துவ வரலாற்றில்— பேரார்வம் இருந்தது. அவர் ஒரு தர்ம சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர், பழம்பொருள் சேகரிப்பாளர். ஆகையால் உலகம் முழுதும் குறிப்பாக இமய மலைப் பகுதி மூலிகைச் செல்வங்கள், ஆயுர்வேத நூல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். அவர் சேகரித்த நூல்களும், பொக்கிஷங்களும் உலகம் முழுதும் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. அவர் அமைத்த அறக்கொடை நிறுவனமான வெல்கம் ட்றஸ்ட் (Wellcome Trust) இன்று 70  நாடுகளில் ஆரய்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி செய்கிறது.

 

வெல்கம் சென்டரில் எப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் புதிதாக ஆயுர்வேத கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புத்தகக் கடை, காப்பிக் கடை, நூலகம் ஆகியன இந்த இடத்தின் சிறப்புகள்; எப்போதும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூடி இருப்பர்.

 

ஆயூர்வேதக் காட்சியில் நிறைய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருத பாரசீக, திபெத்திய மொழி நூல்களும் சுவடிகளும் இருக்கின்றன. ஒரு புறம் வீடியோவில் திபெத்திய மூலிகைச் செல்வம் பற்றிய ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மறுபுறம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன்  மருத்துவ செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்.

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அவதரித்த சுஸ்ருதர் என்ற மஹா மேதைதான் உலகில் அறுவைச் சிகிச்சையின் தந்தை (Father of Surgery)  என்ப போற்றப்படுகிறார். அவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய விஷயங்கள் உலகப் பிரசித்தமானவை.

 

சுஸ்ருதர் செயற்கை மூக்கு எப்படிச் செய்வது எப்படிப் பொருத்துவது (Rhinoplasty) என்று சொன்ன விஷயங்களும், அவர் வருணிக்கும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளும் (Surgical Instruments) உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த மருத்துவக் கருவிகள் நம்மிடையே இன்று இல்லாவிடினும், அதன் மாதிரிகளைத் (Replicas) தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

இந்தக் கண்காட்சிக்கு ஆயுர்வேத மனிதன் என்ற பெயர் சூட்டியதற்குக் காரணமாக அமைந்ததது ஒரு 18ஆவது நூற்றாண்டின் நேபாளி ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வண்ணம் ஒரு மனிதனின் உடலுறுப்புகள் ரத்த நாளங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம் இன்று இந்தியாவுக்கு அப்பாலும் பயிலப்படுகிறது.

கண்காட்சியிலுள்ள வேறு பல சுவையான விஷயங்களைத் தனியாகத் தருகிறேன்.

–Subham–

AYURVEDA EXHIBITION IN LONDON (Post No. 4696)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-05 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4696

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

There is a very interesting exhibition in London Wellcome Centre about Ayurveda, the Indian medical system. This is a free exhibition held until 8 April 2018. It is next to the Euston Square underground. The title given to the Exhibition is ‘Ayurvedic Man—Encounters with Indian Medicine’.

What is in the Exhibition?

Valuable collection of Sanskrit manuscripts, pictures and displays of surgical instruments. There is a beautiful video show of Himalayan herbal wealth.

 

A leaflet about the exhibition explains the title as follows:

“The exhibition sheds light on Sir Henry Wellcome’s historical collections that relate to Ayurveda and Indian medicine and traces how health narratives have been shaped by multiple cultural encounters.

The exhibition takes its title and inspiration from the Ayurvedic Man – an 18th century Nepali painting depicting the organs and vessels of the male body according to classical Ayurveda. It showcases an executive range off material from our collections, including Sanskrit, Persian and Tibetan manuscripts, vibrant gouche paintings and erotic manuals.”

 

 

What is Wellcome Centre?

Ninteenth Century philanthropist Sir Henry Wellcome had enormous interest in medical knowledge around the world. He collected lot of medical antiquities. Now it has become a charitable organisation funding medical research in 70 countries. Their website wellcome.ac.uk has full details of their funding, research and library details.

Wellcome collections include rare Ayurveda, Unani books and microfilms of rare medical books around the world.

Now I will show some of the displays:

Sushruta was the Father of Surgery. He describes a lot of surgical instruments. On the basis of his description, model instruments were created. They are displayed in London exhibition. Sushruta describes rhinoplasty – fixing artificial nose. See the pictures below:-

 

  

The Wellcome Centre has another display by the side of the temporary Ayurveda Exhibition. Henry Wellcome’s profile is displayed there.

Henry Welcome was a man of many parts: entrepreneur, philanthropist, patron of science and pioneer of aerial photography. He also created one of  the world’s great  museums: a vast stockpile of evidence about our universal interest in health and the body.

Henry Solomon Wellcome (1853—1936) was born in a Protestant family in America. He came to Britain as an ambitious salesman and remained, initially to help establish Boroughs Wellcome and Co eventually to build a pharmaceutical empire. He also had a fascination for the past and collected lot of treasures with medical, historical and anthropological interests. Now they are housed in museums and libraries around the world. Here is his picture:

 

 

–Subham–

 

‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76! (Post No.4695)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-43 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4695

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

2-2-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 50வது) கட்டுரை!

 

மெடிகல் மிராக்கிள் புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76!

 

.நாகராஜன்

 

 

“எப்போதுமே எதைப்பற்றியாவது புகார் செய்து கொண்டே இருந்தாலோ அல்லது  கோபப்பட்டுக் கொண்டே இருந்தாலோ மற்றவர்களுக்கு உங்களை அணுக நேரமே இருக்காது.

“எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எதையாவது செய்து வெற்றி பெற உங்களுக்கு என்று ஏதோ ஒன்று இருக்கவே செய்யும்.

                             -ஸ்டீபன் ஹாகிங்

 

 

இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபங் ஹாகிங்கிற்கு வயது 76 ஆகிறது. இது ஒரு பெரிய மெடிகல் மிராக்கிள் – மருத்துவ அதிசயம் தான்!

 

 

ஏனெனில் 1963ஆம் ஆண்டில் அவர் 21 வயது இளைஞனாக இருக்கும்போது தான் அவருக்கு மூளை சம்பந்தப்பட்ட ஒரு கடுமையான் நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்த நோய்க்குப் பெயர் ஏ.எல்.எஸ். AMYOTROPHIC LATERAL SCLEROSIS – ALS). 

மருத்துவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் உயிர் வாழ்வதே பெரிது என்று கூறி விட்டனர்.

 

இன்று 55 ஆண்டுகள் கழிந்து விட்டன. அவர் உயிர் வாழ்வது மட்டுமல்ல, வாய் பேச முடியாத நிலையிலும் கூட தன் எண்ணங்களையும், கண்டுபிடிப்புகளையும் நவீன குரல் கருவி ஒன்றின் மூலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அதனால் தான் அவரது பிறந்த நாள் அதிசயிக்கத்தக்க, ஆனந்தமூட்டும் ஒரு பிறந்த நாளாக அமைகிறது.

 ஆனால் இப்படிப்பட்ட கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு கொடிய வியாதியோடு போராடிக் கொண்டு அவரால் எப்படி இவ்வளவு நாள் உயிருடன் இருக்க முடிந்தது? பெரிய மருத்துவ நிபுணர்களுக்கும் கூட இதன் காரணத்தைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை!

 

 

இந்த வியாதி வந்தவர்களுக்கு சராசரி ஆயுள் மூன்றே ஆண்டுகள் தாம்! சில பேர் மட்டும் அதாவது 20 சதவிகிதம் பேr ஐந்து ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றனர்! பத்து சதவிகிதம் பேர் 10 ஆண்டுகளும் ஐந்து சதவிகிதம் பேர் 20 ஆண்டுகளும் உயிர் வாழ்கின்றனர்.

 

ஆனால் 55 ஆண்டுகள் என்பது மருத்துவர்களையும் அயர வைக்கும் ஒரு அதிசய ஜீவிதம்!

 

இதற்கு இரு காரணங்களை நிபுணர்கள் முன் வைக்கின்றனர். ஒன்று, குடும்ப மரபணு – ஜெனிடிக்ஸ் – இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வழிவழியாக நீடு வாழ்ந்தவர்கள் பரம்பரையில் வந்ததால் நீடித்த ஆயுள் இருக்கலாம். இரண்டாவது இந்த கொடிய வியாதியை மிக இள வயதில் கண்டு பிடித்து விட்டால் ஒருவேளை அவர்கள் நீடித்து வாழலாம்.

 

நியூராலஜி பேராசிரியரும் மெடிகல் டைரக்டருமான டாக்டர் லியோ மக் க்ளஸ்கி (Dr. Leo McCluskey) பிரபல அறிவியல் இதழான ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழுக்கு 2012 இல் கொடுத்த ஒரு பேட்டியில் ஸ்டீபன் ஹாகிங் உயிர் வாழ்வது ஒரு பெரிய அதிசயமே என்று கூறியுள்ளார். 1942ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டில் இவர் பிறந்தார். அது கலிலியோ இறந்த 300ஆவது நினைவு தினமாக அமைந்தது ஒரு அதிசயம்.

விண்வெளி இயலில் இவர் பெரும் நிபுணர். கருந் துளை (ப்ளாக் ஹோல்) பற்றிய இவரது ஆய்வால் பெரும் புகழ் பெற்றார்.

 

 

‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் என்ற இவரது புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆன ஒரு புத்தகம்; அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் என்று ஒன்று இல்லை என்ற இவரது கொள்கை உலகில் பெரும் பரபரப்பூட்டிய ஒரு கொள்கை. பிரபஞ்சமானது காலம், இடம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்றும் அதற்கு ஒரு எல்லை இல்லை என்றும் இவர் கூறியுள்ளார்.

 

ஏராளமான விருதுகளை வென்றுள்ள இவர்,  பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் நூறு பேர் யார் என்று பி.பி.சியால் 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 25ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

 

 

2007ஆம் ஆண்டு தனது பெண் ல்யூசி ஹாகிங்குடன் இணைந்து இவர் சிறுவர்களுக்கான நூலை எழுதியுள்ளது இந்த விஞ்ஞானியை சற்று வித்தியாசப்படுத்திக் காட்டியது. ஆனால் அதிலும் பல அறிவியல் உண்மைகளையே எளிமை விளக்கங்களுடன் தந்தார்.

 

2008ஆம் ஆண்டு நாஸாவின் ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது இவர் விசேஷ விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது பரபரப்பூட்டும் விதமாக, பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையை நினைத்துப் பார்த்தால் அயல் கிரகங்களில் அறிவு சார்ந்த உயிரினம் இருக்கக் கூடும் என்று இவர் கூறினார்.

ஆனால் மனித இனம் அந்த உயிரினங்களுடன் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில் அயல்கிரக வாசிகள் மரபணு சார்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதால் நமக்கு அவர்களால் வரும் வியாதிகளைத் தடுக்கும் திறன் இருக்காது என்றார்.

 

சீக்கிரமே அயல்கிரகங்களில் மனிதன் குடியேற வேண்டும் என்பதும் இவரது கொள்கை!

 

டிஸ்கவரி சேனலில் அயல்கிரகவாசிகளைப் பற்றி “இன் டு தி யுனிவர்ஸ் வித் ஸ்டீபன் ஹாகிங்” என்று ஒரு நிகழ்ச்சியையும் இவர் நடத்தினார். அதில், ‘அயல்கிரகவாசிகள் தங்கள் கிரகங்களின் ஆதார வளத்தை முற்றிலும் பயன்படுத்தி விட்டு அடுத்த கிரகங்களை வென்று அடிமைப்படுத்த முனையலாம்’ என்று விளக்கி இருந்தார். ‘அல்லது ஒருவேளை அவர்கள் சூரியனின் எல்லையற்ற ஆற்றல் முழுவதையும் ஓரிடத்தில் குவித்து ஒரு வோர்ம் ஹோலை உருவாக்கி விண்வெளிகாலத்தின் வழியே பயணப்பட முனைவர்’ என்றும் பரபரப்பூட்டும் விதத்தில் தெரிவித்தார்.

 

 

இந்த வயதிலும், கடுமையான நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கூட அவர் தெளிவான சிந்தனையுடன் தன் எண்ணங்களையும், கண்டுபிடிப்புகளையும் அவ்வப்பொழுது உலக மக்களுடன் பகிர்ந்து கொள்வதே இவரது தனிச் சிறப்பு.

என்றாலும் கூட உலகினரின் ஒரே ஆச்சரியம், இப்படிப்பட்ட பெரிய விஞ்ஞானிக்கு இன்னும் ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது தான்!

ஸ்டீபன் ஹாகிங் இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்தும் அறிவியல் ஆர்வலர்களுடன் நாமும் இணைந்து அவரை பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சோவியத் விஞ்ஞானியான செர்ஜி ப்ருகொனென்கோ (Sergei Brukhonenko) ரஷியாவில் இதய அறுவை சிகிச்சையில் ஏராளமான முன்னேற்றங்களைக் கொண்டு வந்தவர். ஆனால் அவர் மிருகங்களை வைத்துச் செய்த பரிசோதனைகள் அனைவரையும் திடுக்கிட வைப்பவை. மிருகங்கள் இறந்த பின்னர் அவற்றை அறுத்துச் சோதனை செய்வது என்பது தான் நடைமுறைப் பழக்கம். ஆனால் அவர் அதுவரை காத்திருக்க மாட்டார். அவர் அவை இறப்பதை விரும்புவதில்லை. சாகப் போகும் முன்னர் மயக்க மருந்து கொடுத்த நிலையிலேயே அவர் தனது சோதனைகளைச் செய்வது வழக்கமானது. ஒரு முறை ஒரு நாயின் தலையை வெட்டி உடலின் அருகே தனியே வைத்தார். அதை உடலுடன் காற்று மற்றும் இரத்தம் போக வழி இருக்குமாறு செய்தார். தன் சோதனையைத் தொடர்ந்தார். இன்னொரு முறை இன்னொரு நாயின் உடலில் இருந்த ரத்தம் முழுவதையும் வெளியில் எடுத்தார். பின்னர் உடலில் மீண்டும் ஏற்றி அதை உயிர் பிழைக்க வைத்தார். இதே முறையை இறந்த ஒரு மனிதனின் மீது செய்து பார்த்த போது அதைப் பார்த்த டாக்டர்கள் திக்பிரமை அடைந்தனர். அவன் உயிர் மீண்டு இரு நிமிடம் வரை இருந்தான். பின்னர் டாக்டர்களே தங்கள் சோதனையை நிறுத்தி விட்டனர்!

 

 

இவரது சோதனைகள் சிலவற்றை அப்படியே காமராவில் பிடித்தனர். 1940இல் வெளியான திரைப்படமான ‘எக்ஸ்பெரிமெண்ட்ஸ் இன் தி ரிவைவ்ட் ஆர்கானிஸம்ஸ்’ என்ற  படம் இந்தத் திகைக்க வைக்கும் காட்சிகளைக் காட்டியது!

***

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 42 (Post No.4694)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-21 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4694

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 42

  பாடல்கள் 250 முதல் 254

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

திருமதி சௌந்தரா கைலாசம் பாடல்கள்

தொழுகின்றோம் அருள்க நீயே!

அமரர் கல்கி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

முதல் நாள் : (5-4-1982) சொற்பொழிவு

தொழுகின்றோம் அருள்க நீயே!

 

எழுதுகின்ற எழுத்தாலே என்னென்ன

     என்னென்ன செய்து விட்டாய்!

தொழுதுநின்ற ஏழைதனை, துள்ளுகின்ற

     காளைகளாய் மாற்றி, துன்பம்

உழுதுநின்ற நெஞ்சுகளில் உவகையெனும்

     தேனூற்றி, அச்ச மென்னும்

பழுதுநின்ற இடத்தினிலே, பாரதியே!

      வீரத்தைப் பயிர் செய்தாயே!

 

விட்டவழி கடவுள்நமக் கென்றுநிதம்

     விழிதிறந்து தூங்கும் போக்கை,

கெட்டவழி என்றிடித்துக் கேண்மையினால்

     மனத்தினிலே நல்லதென்று

பட்டவழி, நீசொல்லிப் பாரதத்தைத்

     துயிலெழுப்பி, பரங்கி, மூட்டை

கட்டவழி செய்தாயே, கவலையினைக்

    கொன்றழிக்கப் புறப்பட் டாயே!

 

மண்ணுக்குள் எங்கேயோ மறைந்துதவம்

     செய்கின்ற வேர்தான் – அந்த

விண்ணுக்கும் மணமுதவும்; விதவிதமாய்ப்

     பூப்பூக்க வழிவ குக்கும்!

புண்ணுக்கு மருந்து தர, புதுவாழ்வொன்

     றரும்பிவர புரட்சி என்னும்

பண்ணுக்குச் சுதிசேர்க்கப் பலகாலம்

    புதுவையில்நீ தவஞ்செய் தாயே!

 

உடல்கொண்டு நெடுங்காலம் உலகத்தில்

      வாழ்ந்தாலும் பலரை, காலக்

கடல்கொண்டு மறைத்துவிடும்; கவனத்தின்

      நீக்கிவிடும்; கவிஞன் நீயோ

இடங்கொண்டு மண்மீதில் இருந்ததெலாம்

      சிலகாலம் எனினும், நெஞ்சில்

நடங்கொண்டு காலத்தின் பிடிகளுக்குச்

      சிக்காமல் நழுவி னாயே!

 

பித்தனென நினைத்துன்னை, பிதற்றினர் உண்

     டென்றாலும் பெருமை மிக்க

புத்தனென ஏசுவெனப் புதுவாழ்வு

      மலர்விக்கப் போந்தாய், ஞான

சித்தனென யாமுன்னைச் சிறிதுசிறி

      தாய்த்தெளிந்து, சிரமே தாழ்த்தி,

அத்தனென, அன்னையென அகமுருகித்

      தொழுகின்றோம் அருள்க நீயே!

 

கவிஞர்  திருமதி சௌந்தரா கைலாசம் பிரபலமான தமிழ்க் கவிஞர். ஏராளமான கவிதைகளைப் புனைந்தவர். குமுதம், கல்கி உள்ளிட்ட இதழ்களிலும் கவியரங்கங்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றன. சிறந்த சொற்பொழிவாளர்.

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதியார் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.  சென்னைப் பல்கலைக் கழகநூற்றாண்டு வெள்ளி விழா வெளியீடாக மலர்ந்த ‘பாரதி
என்ற நூலில் உள்ள கவிதை இது. வெளியிட்ட ஆண்டு – 1985.

நன்றி: சென்னை பல்கலைக் கழகம் நன்றி: திருமதி சௌந்தரா கைலாசம்

 

***

Christian Conversion Anecdotes (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-59 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

I gave everything to my sister!

 

A woman was testifying of her conversion in a revival meeting She said,

I was very foolish and vain. Worldly pleasures, especially the fashions were my only thought,

I was fond of silk, satins, ribbons and laces. But my friends, when I saw they were dragging me down to perdition I gave them all to my sister.

 

Xxxx

 

Navy of the Lord!

A young man who had formerly attended Dr Bethune’s meetings , after an absence of a few years called upon him and said,

Dr Bethune, I have become a Christian since I saw you, and have joined the army of the   Lord.

I am very glad to hear it,

said the doctor, and added, with what denomination have you become connected?

The Baptists.

“Oh, the Baptists”, said Dr Bethune,

Why they are not the army, but the Navy of the Lord.

((Baptists are Christians distinguished by baptizing professing believers only (believer’s baptism, as opposed to infant baptism), and doing so by complete immersion (as opposed to affusion or sprinkling))

Xxxx

 

Brandy is better than Water!

A Methodist in America, bragging how well he had instructed some Indians in religion, asked one of them,

If he had not found great comfort last Sunday after receiving the sacrament.

 

“Aye, master, replied the savage, but I wished it had been brandy”.

(wine or water or bread is given during sacrament)

Xxxx

Water is Good, but…

George Cruikshank having become a teetotaller, showed all the vehement zeal of a convert. Douglas Jarrold, meeting him, shortly after his conversion, exclaimed,

Now George, remember that the water is very good anywhere except upon the brain

 

Xxxx

During the Civil war, the late Colonel Gabe Boucher organised a regiment which he controlled as a dictator.

I am a humble servant of the Lord, said an itinerant evangelist who had wandered into camp one day, endeavouring to save the souls of the unfortunate.  I have just left the camp of the Massachusetts, where I was instrumental in leading eight men into paths of righteousness

Adjutant, thundered Colonel Bouch, after a moment’s pause, detail ten men for baptism. Nod — D Massachusetts regiment shall beat mine for piety.”

Xxxx SUBHAM xxx

 

காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்! (Post No.4693)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-44 am

 

Written by London swaminathan

 

Post No. 4693

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

மநு நீதி நூல்- Part 12

 

SLOKA 175, SECOND CHAPTER CONTINUED………………….

2-58. வலது கையில் ஜலம் எடுத்து ஆசமனம் செய்வதில் 4 வகைகள் உண்டு. உள்ளங்கையில் பிரம்ம தீர்த்தம், காய தீர்த்தம், தேவ தீர்த்தம், பித்ரு தீர்த்தம் விடுவதற்காக 4 பகுதிகள் இருக்கின்றன. பிராமணர் ஆசமனத்துக்கு, முதல் மூன்றையே பயன்படுத்த வேண்டும் (175)

 

2-59. பெரு விரலின் நடுக்கணுவால் விடுவது பிரம்ம தீர்த்தம்; சுண்டு விரலின் அடிக்கணுவால் விடுவது காய தீர்த்தம்; விரல்களின் நுனிப்பகுதியால் விடுதல் தேவ தீர்த்தம்; பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையிலுள்ள பகுதியால் விடுதல் பித்ரு தீர்த்தம்.

 

2-60. ஆசமனம் எனப்படுவது நீரினால் செய்யும் தூய்மை. மூன்று முறை மந்திரம் சொல்லி நீர் உண்ட பின், இரு முறை வாயைத் துடைக்க வேண்டும். கண், காது, மூக்கு, தோள், மா ர்பு, தலை இவற்றையும் தொட்டுத் துடைப்பதாகும்.

 

2-61. தர்ம விதிகளை அறிந்தவன், சூடு இல்லாத நுரை இல்லாத தெளிந்த நீரால் கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பார்த்து, நின்றவாறு ஆசமனம் செய்வது சிறந்தது.

 

2-62. ஆசமன ஜலத்தை உட்கொள்கையில், பிராமணன் மார்பு வரையிலும் க்ஷத்ரியன் கழுத்து வரையிலும், வைஸ்யன் உள்நாக்கு வரையிலும், ஏனையோர் (சூத்திரர்) நாவிலும் உதட்டிலும் ஜலம் படும்படியாக்ச் செய்யவேண்டும்

 

2-63. பூணூல் அல்லது மேலாடை இடது தோளில் இருந்து புறப்பட்டு கால் வரை செல்ல வேண்டும். இது உபவீதம் எனப்படும். இடது தோளில் மாற்றிப் போட்டால் அது பிராசீனா விதி எனப்படும். மாலையாகப் போடுதல் நிவிதம் என்றும் சொல்லப்படும். (180)

2-64. இவ்வாறு மூன்று வர்ணத்தார் அணியும் பூணூல், தோல், தண்டம், மேலாடை ஆகியன சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ பழையனவற்றை நீரில் போட்டுவிட்டு, புதியது தரிக்க வெண்டும்.

Brahmin boys; picture by P Swaminathan

 

2-65. இந்த மூன்று வருணத்தாரும் முறையே 16, 22, 24 வயதில் முடியிறக்க வேண்டும்

2-66. இத்தகைய சடங்குகள் ஏல்லாம் பெண் குழந்தைகளுக்கும் உண்டு. ஆனால் மந்திரம் இல்லாமல் வெறும் சடங்காக செய்தால் போதும்.

 

2-67. பெண்களுக்கு கல்யாணம்தான் உபநயனம் ; அதாவது பூணூல் போடுவது போல; கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுல வாசம்; இல்லறம் நடத்துவதே சமிதாதானம் ஆகும்.

 

கற்றுணர்ந்து செயல்படல்

 

2-68. இவ்வாறு உபநயனம் முதலியன மூலம் இரண்டாவது பிறப்பு எடுத்து புனித மார்கத்தில் செல்லுதலைக் கூறினேன். இனி அவரவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுவேன். (185)

 

2-69. குரு தனது சீடனுக்கும், தந்தை தனது மகனுக்கும் தூய்மையாக இருத்தல், ஒழுக்கத்துடன் வாழ்தல், தீ வளர்த்து ஹோமம் செய்தல் ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும். காலை, நண்பகல், மாலை ஆகிய சந்தி நேரங்களில் செய்யவேண்டிய வழிபாடுகளையும் சொல்லித் தர வேண்டும்.

 

2-70. வேதம் ஓதும் மாணவன் முதலில் ஆசமனம் செய்துவிட்டுக் கைகளைக் கட்டிக்கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு புலன் அடக்கத்துடன் வேதம் ஓத வேண்டும்

 

2-71. வேதம் கற்பதற்கு முன்னரும் பின்னரும் குரு வணக்கம் செய்தலும் கைகட்டிக் கொண்டு வேதம் படித்தலும் பிரம்மாஞ்சலி எனப்படும்

 

2-72.குருவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வலது கையால் அவரது வலது பாதத்தையும் இடது கையால் இடப் பாதத்தையும் தொட்டு வணங்க வேண்டும் (190)

 

2-73. உபதேசிக்கும் குருவும் சோம்பலில்லாமல் மாணவர்களுக்கு ‘’துவங்குக’’ என்றும் ‘’நிறுத்துக’’ என்றும் கட்டளை இட வேண்டும்

 

பிரணவ மந்திரத்தின் பெருமை

2-74. வேதம் கற்கும்போது துவக்கத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் சொல்லித் துவங்க வேண்டும்; இதே போல முடிக்கையிலும் ஓம் சொல்ல வேண்டும்; துவங்கும் போது ஓம் சொல்லாவிடில் வேதம் மனதில் பதியாது; இறுதியில் ஓம் சொல்லி முடிக்காவிடில் கற்ற வேதம் நினைவிற் நிற்காது.

 

2-75..பிரணவ (ஓம்) மந்திரத்தை உச்சரிக்கும் முன் தர்ப்பையைப் பரப்பி, கிழக்கு நோக்கி அமர்ந்து மூன்று முறை பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தல் வேண்டும்; பின்னரே பாடம் கற்கலாம்.

 

2-76. பிரம்மா, மூன்று வேத சாரங்களான அகார, உகார, மகார, சப்தங்களினால் பிரணவத்தை உண்டாக்கினார். அவரே பூர், புவர், சுவர் ஆகிய புனித மந்திரங்களையும் உண்டாக்கினார்.

 

2-77. மேலும் ‘’தத்’’ என்ற துவக்கத்தை உடைய மூன்று அடி காயத்ரியையும் மூன்று வேதங்களில் இருந்தே உண்டாக்கினார். (195)

2-78. இந்த பிரணவத்தையும் ‘’பூர் புவர் சுவர்’’ மற்றும் காயத்ரியையும் சந்தியா காலங்களில் ஓதும் பிராமணன் மூன்று வேதங்களையும் ஓதிய புண்ணியத்தை அடைகிறான்.

 

2-79. இந்த காயத்ரீ மந்திரத்தை ஊருக்கு வெளியே காடு, மலை, நதி தீரத்தில் தினமும் ஆயிரம் முறை ஜபிப்பவன் ஒரு மாதம் ஜபித்தால் மஹா பாதகத்தில் இருந்து விடுபடுவான். பாம்பு அதன் தோலில் இருந்து எப்படி விடுபடுகிறதோ அது போல பாவங்கள் நீங்கும்.

 

2-80. இந்த ஜபம்- உபநயனம் ஆகிய இல்லாத மூன்று வருணத்தாரும் பெரியோர்களினால் நிந்திக்கப்படுவார்கள்

 

 

2-81. காயத்ரீயை மோட்சத்துக்கான வழியாகச் சொல்லுகிறார்கள்.

 

2-82. எவன் மூன்று வருடத்துக்குச் சோம்பல் இல்லாமல், தினமும் இடைவிடாது காயத்ரீயை ஜபிக்கிறானோ, அவன் வாயுவைப் போல ஆகாயத்தில் , தன் இஷ்டப்படி உருவம் எடுத்து  சஞ்சரிக்கிறான். இறைவனுடன் ஒன்றிவிடுகிறான் (200)

2-83. பிரணவம் பரப்பிரம்மம் ஆகவும், பிராணாயாமம், சாந்திராயனம் முதலியவற்றைக் காட்டிலும் மேலானதாகவும் சொல்லப்படுகிறது; காயத்ரீயைச் ஜபிப் பவனுக்குப் பாபம் இல்லை. காயத்ரிக்கு மேலான மந்திரம் இல்லை. அவன் சத்தியத்தையே சொல்லுவதால் இதைச் செய்பவனுக்கு மௌன விரதம் தேவை இல்லை.

 

2-84. வேதத்தில் உள்ள யாக யக்ஞாதி கருமங்கள் அழியக்கூடிய பலத்தையே தரும்; ஆனால் பிரணவம், பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டி மோட்சத்தைக் கொடுக்கிறபடியால், அதற்கு அழிவற்றது (அக்ஷரம் = அழியாதது)  என்றும் பிரம்மனால் (by Bahma) சொல்லப்பட்டிருக்கிறது

 

2-85. ஒரு பிராமணன் ‘’ஓம்’’ உடன் காயத்ரீயைச் சொன்னால் இந்த ஜப யக்ஞமாவது அமாவாசை, பௌர்ணமியில் செய்யும் யாகங்களைவிட பத்து படங்கு பலன் தரக்கூடியது. அதை யார் காதிலும் விழாமல் ரஹசியமாகச்  செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும். மனதில் அதன் பொருளை அறிந்து சொன்னால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர்.(203)

 

2-86. பஞ்ச மஹா யக்ஞங்களில் பிரம்ம யக்ஞம் ஒன்றைத்தவிர மற்ற நான்கும் காயத்ரீயை விட மதிப்புக் குறைந்தவையே. காயத்ரீயின் மஹிமையில் பதினாறில் ஒரு பங்கு கூட அவைகளுக்கு இல்லை.

 

2-87. காயத்ரீ ஜபத்தால் பிராஹ்மணன் நிச்சயமாக மோட்சத்தை அடைகிறான். அவன் வேறு எதையும் செய்தாலும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அந்தணர் என்போர் அறவோர்; மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் (குறள் வரிகள்); அவன் எல்லோருடைய நண்பன் ஆகிறான்.

 

2-88. தேரை ஓட்டும் சாரதி குதிரைகளை கடிவாளம் போட்டு அடக்குவது போல, அறிவுடையார்,  மனம் என்னும் குதிரைகளை அடக்க வேண்டும். புலன் இன்பங்களை நாடி ஓடும் மனது, கட்டுக்கடங்காத குதிரைகளுக்கு உவமை.(206)

 

எனது கருத்து:-

 

பூணூல், தண்டம், மேலாடை, குருகுல வாசம், பிக்ஷை  எடுத்தல் முதலியவற்றை மூன்று வருணத்தாருக்கும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இப்போது பிராமணர் தவிர மற்ற எல்லோரும் சூத்திரர்கள் என்ற அரசியல் பிரசாரத்தால் மக்கள் குழம்பிக் கிடக்கின்றனர். ஆளும் அரசியல்வாதிகள், வணிகப் பெருமக்கள், விவசாயிகள் முதலியோரும் பூணூல் அணிந்து வேதம் கற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால் இதை நடத்திக் கொடுக்கும் பணிக்கு பிராஹ்மணர் தலைமை வகித்தனர்.

 

மேலும் பெண்களுக்கும் மந்திரம் இல்லாமல் எல்லாச் சடங்குகளையும் செய்க என்று மநு கூறுவதிலிருந்து அவர் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர் என்பது தெரிகிறது. ஏனெனில் கதைகளில் கூட மூன்று வருணத்தார் இவற்றைச் செய்ததாகப் படிப்பதில்லை. ஆகவே அவர் ஸரஸ்வதி நதி பாய்ந்த காலத்தில் இதை எழுதினார் என்பது தெளிவாகிறது. பிற்காலத்தில் இடைச் செருகல்கள், குறிப்பாக சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 

தற்காலத்தில் வேதம் படிப்பதையும், காயத்ரீ சொல்லுவதையும் எல்லோருக்கும் பொதுவாக்கினார் சத்ய சாய் பாபா போன்ற மஹான்கள். இது ஜனகர் காலத்திலும் அவருக்கு முந்தியும் இருந்ததை நாம் உபநிஷத்து மூலம் அறிகிறோம். அப்பொழுது கார்க்கி போன்ற பெண்கள் பெரிய சபைகளில் வாதம் செய்ததைப் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம். ஆகவே பெண்களும் , மற்ற ஜாதியினரும் வேதம் அறிந்தவர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது.

 

 

‘’ஓம்’’ என்னும் பிரணவ மந்திரத்தையும், காயத்ரீ மந்திரத்தையும் மிக உச்சாணிக் கொம்பில் வைக்கிறார் மநு. பிராஹ்மணர்கள், காயத்ரீ மந்திரத்தைப் பிடித்துக் கொண்டால் போதும்,  வேறு யாக யக்ஞங்கள் இல்லாவிட்டாலும் ஒன்றும் தவறில்லை என்று அடித்துக் கூறுகிறார் மநு.

 

மேலும், மாநசீகமாகச் செய்யும் (மனதுக்குள்) காயத்ரீக்கு ஆயிரம் மடங்கு பலன் என்று மநு செப்புவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

குருவுக்கு எப்படி வணக்கம் செலுத்த வேண்டும் என்று மநு கூறுவதும், குருவானவர் இப்போது ‘சொல்’, இப்போது ‘நிறுத்து’ என்று சொல்ல வேண்டும் என்று மநு கட்டளையிடுவது நோக்கற்பாலது. ஆசிரியர் என்பவர், மாணவர்களை வகுப்பறையில் உட்கார வைத்துவிட்டு மற்ற அலுவல்களைச் செய்ய முடியாது; முழுக் கவனமும் மாணவர் மீது இருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகிறது.

மநு  தனது நூல் முழுதும்— துவக்கம் முதல், இறுதி வரை — புலன் அடக்கத்தையும் ஸத்தியத்தையும் வலியுறுத்துவதை நன்கு கவனிக்கவும். இவை இரண்டும் இருக்கும் எல்லோரும் பிராஹ்மணர்களே;  வேதம், காயத்ரீ எல்லாம் இதற்குப் பின்னரே. அதனால்தான் வள்ளுவனும் மநு சொன்னதை அப்படியே சொன்னான்—

மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (134)

 

மநு சொன்ன முதல் 200 ஸ்லோகங்களிலேயே பல அதிசய விஷயங்களைக் கண்டு வருகிறோம்; இன்னும் 2400 ஸ்லோகங்களில் பல அதிசயங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………………….

 

ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு! (Post No.4692)

Date: 2 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-28 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4692

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் நான்காவது உரை

 

  1. ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு!

 

ச.நாகராஜன்

 

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!

இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.

அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப்படுகின்றனர்.

செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன், தூக்கமின்மையுடன் சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.

இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.

நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு  எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.

உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.

ஆகவே வீட்டினுள்ளே உபயோகிக்கும் மின் விளக்குகளையும், சாலைகள் மற்றும் இதர இடங்களில் நாம் உபயோகிக்கும் மின் விளக்குகளையும் மிக மிகக் குறைந்த அளவில் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினால் ஒளி மாசும் அகலும்; செலவும் குறையும்; வெப்ப மயமாதலும் குறையும்.

உணர்ந்து செயல்படுவோம்!

***