More Treasures from Colombo Museum (Post No.12,604)- 3 c

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,604

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

This part 3 c

Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).

I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.

Here are some more pictures:

Dancing Maks, swords, Budda statues

3 a – Buddha statues

3 b- Swords, Shields, Fans

3 C- Dance Masks

 Once you go and stand in front of the folk dance scene in the room, a live show comes with lights.

You can watch this in sound and light show in the room.

The pictures are split into 3 a and 3 b and 3 c for uploading convenience.

Guns outside the museum

–subham—

 Tags – Colombo Museum, Buddha, swords, dances, masks

More Treasures from Colombo Museum (Post No.12,604)- 3 b

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,604

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This part 3 b

Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).

I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.

Here are some more pictures:

Dancing Maks, swords, Budda statues

The pictures are split into 3 a and 3 b for convenience. 

–subham—

 Tags – Colombo Museum, Buddha, swords, dances, masks

More Treasures from Colombo Museum (Post No.12,604)-3

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,604

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 3

Yesterday I posted all Hindu objects, Hindu Flags, Gods etc in the Colombo Museum. I visited the National Museum on 8th September 2023. All those interested in Hindu and Buddhist history of Sri Lanka must visit the museum .No one should miss the shop at the exit of the museum where you can buy good books and colourful post cards for a very reasonable price. I bought colour post card each for Rs. 6 (Indian money and Rs 20 in Sri Lankan money).

I bought the book Tamil Inscriptions in the Colombo National Museum.

Here are some more pictures:

New Tamil Lessons- 3; Fifth case suffix ஐந்தாம் வேற்றுமை Ablative (Post No.12,603)

Picture explained below

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,603

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Picture of Mahatma Gandhi:

Tamil is a defective language when it comes to pronunciation; foreign or other language words cant be pronounced in Tamil without grantha/ Sanskrit letters.

A foreigner  who does not know India much will read the above picture as Makaatmaa Kaanthi, because Ha and Ga re not in ancient Tamil.

இதுவரை நான்காம் (4th case) வேற்றுமையைப் Dative Case படித்தோம் To, To Rama, To James, To Mary

ஆறாம் (Sixth case) வேற்றுமையைப் Genitive or Possessive படித்தோம் Of Rama, Of Krishna, Of July

xxxx

இன்று ஐந்தாம் (5h case suffix)  வேற்றுமையைப் Ablative  படிப்போம் From David, From Frankfurt, From Rama, From Latha

From (London/Paris/Madras/Colombo) ராமனிடமிருந்து

ராமன்+ இடமிருந்து  (ன் +இ =னி )= ராமனிடமிருந்து

Raman + Idamirunthu (N+I=NI)= Raamanidamirunthu

Tamil construction is = Raman From

From = Idamirunthu இடமிருந்து

Xxx

One important Point

The above is applicable human beings and gods; but also used in animal stories.

If it is a place like London, New York, Delhi, Madurai you have to use

ILIRUNTHU

இல்+ இலிருந்து

லண்டன்+ இல்+ இருந்து = லண்டனிலிருந்து

London +il+ ilirunthu = LONDONILIRUNTHU

டில்லி +இல் +  இருந்து =டில்லியிலிருந்து

Dilli +il+ ilirunthu = LDILLIYIILIRUNTHU

DILLI is the tamilized form of Delhi

Analysis  ன்+இ = னி ; ல் +இ =லி (N+I= NI; L+I=LI)

xxxx

சுவாமிநாதனிடமிருந்து புத்தகம் வாங்கினேன்

Swaminaathanidamirunthu Puththakam Vaanginen

Swaminathan From Book bought/ got, obtained

xxxx

லண்டனிலிருந்து இன்று வந்தேன்

Londonilirunthu Indru Vanthen

I London from Today Came

(Naan= I,  is not in the sentence; but VanTHEN  indicates first person singular past)

xxxxx

நாளை மதுரைக்கு போவேன்

Naalai Madhuraikku Poven

Tomorrow Madhuraito  will go

(Naan= I,  is not in the sentence; but poVEN indicates first person singular future)

xxxx

இது என்னுடைய பெட்டி

Ithu Ennudaiya Petti

This My Box/suitcase

(Verb IS not in the sentence and yet it is grammatical); in English you must say this IS my suitcase)

xxxx

என்னுடைய பெயர் லண்டன் சுவாமிநாதன்

Ennudaiya Peyar London Swaminathan

My Name (IS ) London Swaminathan

Xxx

உங்களுடைய பெயர் என்ன ?

Ungaludaiya Peyar Enna?

Your name what?

(Again IS not used in Tamil; short sentences are formed without verbs)

Indian languages are SOV languages; Subject, Object, Verb languages. Verb comes at the end unlike English.

To be continued,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Tags- New Tamil, Lesson 3, ablative case

சீரணி நாகபூஷணி கோவில்: இலங்கைத் தீவின் 108 இந்து ஆலயங்கள்- Part 31 (Post.12,602)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,602

Date uploaded in London – –  –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 31

62.சீரணி நாகபூஷணி கோவில், சண்டிலிப்பாய்

இலங்கையின் வடபகுதி மாகாணமான யாழ்ப்பாணத்தில் , யாழ்ப்பாண நகரிலிருந்து எட்டு மைல் தொலைவில் சண்டிலிப்பாய் கிராமம் இருக்கிறது. நயினாத் தீவு நாகபூஷணி கோவிலுக்கு அடுத்தபடியாகப் பிரபலம் வாய்ந்தது  இந்த சீரணி நாகபூஷணி கோவில். ஏப்ரல் மாத பெளர்ணமித் தேர்த் திருவிழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

சுமார்  125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஷண்முகநாதர் முருகேசப் பிள்ளை என்பவர் தமிழ்நாட்டிலுள்ள காரைக்காலிலிருந்து வந்து குடியேறிய குல நாயக , புனிதவல்ல முதலியார் வழி வந்தவர் ஆவார்.

(முதலியார் என்பது பட்டம் ; ஜாதி அல்ல.)

முருகேசப்பிள்ளை தேவி பக்தர். நாள்தோறும் இறைவன் மீது துதிபாடி நாட்களைக் கழித்து வந்தார். அவர்க்கு ஒரு தேவி யந்திரம் கிடைத்தது. அதாவது மந்திரங்களும் சக்கரங்களும் பொறிக்கப்பட்ட தகடு. ஆயினும் கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு  பண பலம் இல்லை. 1896ம் ஆண்டு சித்திரா பெளர்ணமி அன்று அவருக்கு ஒரு கனவு வந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி அந்த இடத்தைத் தோண்டும்படி கனவில் கட்டளை பிறந்தது. அப்படித் தோண்டிப்பார்த்தபோது அதிசயம் நிகழ்ந்தது. ஒரு ஐம்பொன் அம்பாள் விக்ரகம் கிடைத்தது. பேரானந்தம் அடைந்த அவர் கோவில் கட்டும் பணியில் இறங்கினார் . பக்தர்கள் பண மழை  பொழிந்தனர்..

நம்பினார் கெடுவதில்லை

இது நான்கு மறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால்

அதிக வரம் பெறலாம் — என்று மகா கவி பாரதியார் பாடியது உண்மையானது. ஜூலை மாத ஆடி அமாவாசையில்,  முதல் பூஜை துவங்கியது. அது இன்று வரை நீடிக்கிறது..

1962 ஆம் ஆண்டு பக்தர்கள் ஒன்று கூடி, திருப்பணி சபையை அமைத்தனர் பக்தர்கள் உறுப்பினர்களாகச் சேர்வதில் ஆர்வம் காட்டவே திருப்பணிகள் துவங்கின. மஹா மண்டபம், வசந்த மண்டபம்,, துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிக்கம்பம் ஆகியன புதுப் பொலிவு பெற்றன அம்பாளின் திருவிளையாடல்களைச் சித்தரிக்கும் உருவங்கள்  புதுப்பிக்கப்பட்டு. பிரகார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். மிகவும் அழகான தேர் ஒன்றை கே. தம்பையா குடும்பத்தினர்  நன்கொடையாகக் கொடுத்தனர்.

இப்போது கோவிலுக்குச் செல்லும் தொண்டர்கள், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். தேர்த் திருவிழா போலவே இங்கு நடைபெறும் நவராத்திரி உற்சவமும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

முருகேச பிள்ளைக்கு பூமிக்கடியிலிருந்து கிடைத்த அம்பாள் விக்ரகம் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில்  கோவில் இருந்திருக்க வேண்டும்.  கண்ணகி, இலங்கைக்கு வந்து, வற்றாப்பளை வரைக்கும்,  பல இடங்களுக்குச் சென்றாள் என்றும் அவள் நடந்த வழி எல்லாம் அம்மன் வழிபாடு ஏற்பட்டது என்றும் ஆன்றோர் பகர்வர்..

கோவில் பற்றி மேல் விவரம் வேண்டுவோர் 1963ம் ஆண்டு வெளியான திருப்பணி சபை மலரில் படித்து அறியலாம்.

இலங்கை முழுதும் நாக பூஷணி வழிபாடு

கண்ணகி வழி நடந்த இடம் எல்லாம் அம்பாள் வழிபாடு ஏற்பட்டது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நாகபூஷணி , காளி , துர்கா  கோவில்கள் இலங்கை முழுதும் காணப்படுகின்றன.

நாகபூஷணி கோவில்கள் அராலி தெற்கு , கொண்டாவில் , நவாலி, முல்லைத்த தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் இருக்கின்றன

லண்டனிலும் கூட நாகபூஷணி அம்மனுக்கு இலங்கைத் தமிழ்ர்கள் கோவில் கட்டியுள்ளனர் அதன் கும்பாபிஷேக சிறப்பு மலர்க கமிட்டி கூட்டத்தில் நானும் அழைப்பாளராகக் கலந்து கொண்டு மலருக்கு கட்டுரைகளையும் எழுதிக் கொடுத்தேன்.

Xxxx

63.தெல்லிப்பளை துர்கா கோவில்

யாழ்ப்பாண நகரிலிருந்து காங்கேசந்துறை நோக்கி எட்டு மைல் தொலைவு  பயணம் செய்தால் தெல்லிப்பளை துர்கை அம்மனைத் தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள்  இந்த திசையில் கோவிலை நோக்கிச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தக் கோவில் பிரபலம் அடைந்தாலும் இந்தக் கோவிலுக்கு பழைய வரலாறும் உண்டு

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர், கதிர்காமர் என்ற பக்தர் இந்தியாவுக்குச் சென்று பல தலங்களில் வழிபட்டார். மதுரை, காசி, ராமேஸ்வரம் என்று பல இடங்களுக்கும் சென்று வந்தார்; திரும்பிவருகையில் காசியிலிருந்து தேவியின்  சக்கரம் பொறித்த தகட்டையும் ( சக்தி யந்திரம்) கொண்டுவந்தார். காங்கேசன் துறையில் வந்து இறங்கிய அவர் நடந்து செல்லுகையில் களைப்பு ஏற்பட்டு ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார். அவர் மனதில் தோன்றியபடி அங்குள்ள இலுப்பை மரத்தின் அடியிலேயே தேவி சக்கரத்தை வைத்து வழிபாட்டினைத் துவக்கினார். பக்தர்கள் தொகை பெருகவே கோவில் எழுப்பப்பட்டது 1829-ம் ஆண்டில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது ; காஞ்சிபுரத்திலிருந்து வந்த குருக்கள் முறையான பூஜைகளை நடத்தினார். அப்போதுமுதல், உடையார் கதிரேச பிள்ளை வழிவந்தோர் கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றனர். காலப்போக்கில் மண்டபங்கள் கட்டப்பட்டு அன்னதானம் அளிக்கும் வரைக்கும் வளர்ந்துவிட்டது பிரகாரத்தில் முருகன், பிள்ளையார், பைரவர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன.

சமய நூல்களைக் கற்றுத்தேர்ந்த தங்கம்மா அப்புக்குட்டி என்பவர் இடையறாது செய்த சேவையால் கோவிலின் புகழ் பரவியது

1968-ம் ஆண்டு முதல் வருடாந்திர உற்சவங்கள் ஆரம்பமாயின. 1978-ல் தேர் ஒன்றும்  சேர்ந்தது . ஆகஸ்ட் மாதத்தில்  வருட  விழாக்கள் நடக்கின்றன ராஜ கோபுரம் கட்டப்பட்டு 1981-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

1981ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் முழுவிவரங்களையும் படித்தறியலாம் .

—subham —- 

Tags சீரணி நாகபூஷணி, கோவில், இலங்கை, 108 புகழ் பெற்ற, இந்து ஆலயங்கள், Part 30, தெல்லிப்பளை,  துர்கா கோவில்,

அயல் தேச சொத்து! (Post No.12,601)

Bank of Switzeland 
 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,601

Date uploaded in London –  18 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அயல் தேச சொத்து!

ச.நாகராஜன்

அயல் தேச சொத்தால் என்ன லாபம்?!

அயல் நாட்டில் சொத்து இருக்கிறது – நிறைய! அதனால் என்ன பிரயோஜனம் என்கிறார் கவிஞர்!

கிம் தயா சுமஹத்யாபி ஷ்ரியா தேசாந்ந்தரஸ்தயா |

ரிபவோ யாம் ந பஷ்யந்தி சுஹ்ருபித்ர்யா ந பூஜ்யதே ||

எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி, அயல் நாட்டில் அந்த சொத்து இருக்கிறது என்றால் அதைப் பார்க்கவும் முடியாது ஒருவரின் உறவினராலோ. அல்லது அவரது நண்பர்களாலோ அனுபவிக்க முடியாது.

ஆகவே அயல்நாட்டில் சொத்து சேர்ப்பது பயனில்லை.

மனைவியைப் பிரிந்த போது இளமையால் என்ன பயன்?

தேவைப்படுபவருக்குக் கொடுக்காமல் தர்மம் செய்தாயா நீ?

மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் செய்யும் சேவையால் என்ன பிரயோஜனம்?

தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொண்ட தம்பதிக்கு ஒரு மகன் பிறக்காவிடில் அதனால் என்ன பயன்?

ஒருவர் தன் மனைவியை விட்டு இளம் வயதில் பிரிந்து வாழ்ந்தால் அந்த இளமையால் என்ன தான பிரயோஜனம்?

கிம் தே க்ருதம் விதரணம் யதி நாதிர்தாய

    கிம் சேவயா யதி பரோபக்ருதௌ ந யத்ன: |

கிம் சங்கமேன தனயோ யதி நேக்ஷணீய:

    கிம் யௌவனே ந விரஹோ யதி வல்லபாயா: ||

சரியான நான்கு கேள்விகளைக் கேட்கிறார் கவிஞர்.

நமக்குத் தெரிந்த, புரியக் கூடியவை தான் பதில்கள்!

மார்பகத்தைக் கையால் மூடிய காரணம் என்ன?

ஒரு பெண் கைகளால் மார்பகங்களையும் உதடுகளையும் மூடிக் கொள்கிறாள்!

ஏன்? காரணத்தைக் கண்டுபிடித்த கவிஞர் சொல்கிறார்:

கிம் த்வம் நிகூகஸே தூதி ஸ்தனௌ வக்த்ரம் ச பாணினா |

சவ்ரணா ஏவ ஷோபந்தே சூராதரபயோதரா: ||

ஓ! எனது தோழியே! ஏன் உனது மார்பகங்களையும் முகத்தையும் (அதாவது உதடுகளையும்) உனது கைகளால் மூடி மறைக்கிறாய்? போர்வீரர்கள், உதடுகள், மார்பகங்கள் எல்லாம் அவர்களின்/அவற்றின் காயத்தினால் பிரகாசமாக இருப்பர்/இருக்கும் (என்பதாலோ!)

மழை மலையைக் கரைக்கிறது!

அத்வா ஜரா தேஹவதாம் பர்வதானாம் ஜலம் ஜரா |

அசம்போகோ ஜரா ஸ்த்ரீணாம்  வாக்‌ஷல்யம் மனஸோ ஜரா ||

பயணம் உடலைத் தளர்த்துகிறது.

மழை மலையைக் கரைக்கிறது.

தாம்பத்ய (பாலியல்) சுகம் இல்லையெனில் பெண்கள் தளர்கிறார்கள்.

வசவு வார்த்தைகள் மனதைத் தளர வைக்கிறது.

புகழில்லாத வாழ்க்கை வீணே!

அந்த: ச ஏவ ச்ருதவர்ஜிதோ ய:

    ஷட: ச ஏவார்திநிரர்தகோ ய: |

பூத: ச ஏவாஸ்தி யஷோ ந யஸ்ய

    தர்மே ந தீர்யஸ்ய ச ஏவ அ ஷோச்ய: ||

ஆன்மீக கல்வி இல்லாதவனே குருடன்.

கெஞ்சிக் கேட்டால் தான் வேலை செய்வேன் என்பவன் கபடன்.

புகழில்லாத வாழ்க்கையோடு இருப்பவன் இறந்தவன்.

தர்மத்தில் மனதைச் செலுத்தாதவன் இரக்கப்படவேண்டியவன்.

எந்த சாஸ்திரங்கள் வீணானவைஏன்?

அன்யானி சாஸ்த்ராணி விநோதமாத்ரம்

    ப்ராப்தேஷு காலேஷு ந தைஸ்ச கிஞ்சித் |

சிகித்ஸிதஜ்யோதிஷமந்த்ரவாதா:

    பதே பதே ப்ரத்யயமாவஹந்தி ||

மற்ற சாஸ்திரங்கள் எல்லாம் பொழுதுபொக்குக்கு மட்டும் உகந்தவையே. மிக முக்கியமான தேவை உள்ள சமயங்களில் அவை உதவாது.

ஆனால் சிகித்ஸை அதாவது மருத்துவம், ஜோதிடம், மந்திர சாஸ்திரம் ஆகியவை மட்டுமே வாழ்க்கையில் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் நம்பிக்கையைத் தருபவை.

**

Part 2 – Hindu Gods, Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12600)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,600

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Part 2

–Subham—

Colombo Museum, Hindi Idols, Hindu Flags

Hindu Gods ,Flags, Lamps and Instruments in Colombo Museum (Post No.12599)-1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,599

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I visited Colombo Museum on 8th September, 2023 and spent there three hours. I took lot of pictures. It is good that they allow photography. My purpose of visit was to see Hindu artefacts and study the history of Hinduism in Sri Lanka . I think they have not displayed all the Gods’ statues and other Hindu symbols. But the beautiful Durga and Surya statues of Choza era welcome us. I saw all the lamps, musical instruments, bells, fans etc. But what surprised me was the flags displayed there with Hanuman, Peacock, Swan and Lion or Narasimha.

Though a brief history of Hinduism was displayed there I wish there is a full section for Ramayana Lanka and other Gods. Over 100 important Hindu temples are there in Sri Lanka. Government publication itself shows nearly 4000 Hindu temples ancient and modern.

Another interesting thing, I found in the Museum was impressions or replica of important inscriptions which are over 2000 years old.

There is  good scope for comparative studies in coins of India and Sri Lanka as well as the Brahmi inscriptions of India and Sri Lanka. The amazing thing is Brahmi script has travelled from Asoka’s Mauryan empire to Sri Lanka covering lakhs of square miles of Indian sub-continent. Later we found them all over Southeast Asia. A chronological study of such things will throw more light on History of India. I have already covered the similarities between Mahavamsa and Tamil literature in my research articles posted here.

I have given below some interesting pictures taken by me:-

–Subham–

Tags- Colombo Museum, Hindu Gods, Statues, Flags, Part 1

New Tamil Lesson 2 (Case Suffixes TO and OF)—Post No.12,598

Picture- கட்டபொம்மனுடைய கைகளில் வாள்

Sword in the hands of Kattabomman (Tamil King Kattabomman)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,598

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Yesterday’s summary

We looked at fourth case, which is called Dative case in English. Here is the summary:

You add either Ukku or kku or Vukku for English “To”

Ramanukku= Ukku added with Raman (To Raman)

Marykku = kku added with Mary (To Mary)

Umaavukku= Vukku added with Umaa; This shows all AA sounding words will take Vukku

Kankalukku = Ukku added with Kangal (eyes)

Singaththukku = aththukku added with Singa/lion; This shows , all AM sounding words drop the last dotted consonant and add Aththukku

Singha+ aththukku

Suppose Mr Guna Singham comes to your house and You tell your wife to give him coffee to drink

Here it is

Guna singhaththukku kaappi Kodu

Give coffee to Guna Singham.

You don’t say Gunasungamukku.

Xxx

In Tamil “ I “ becomes En என் or Enn and then take case suffix AKKU அக்கு.

In the same way You becomes UN or UNN and then take case suffix AKKU அக்கு.

எனக்கு Enakku= to me ,

உனக்கு Unakku= to you

அவனுக்கு Avanukku = to him ,

அவளுக்கு Avalukku = to her

அவர்களுக்கு Avarkalukku = to them

நமக்கு Namakku = to us (Here Naam/ WE becomes Nam and then added with Akku)

எங்களுக்கு Engalukku = to us (Naangal/ WE becomes Engal and then added with ukku)

உங்களுக்கு Ungalukku = to you (plural) என் + அக்கு = எனக்கு

உன் + அக்கு = உனக்கு To You

அவன் + உக்கு = அவனுக்கு (ன்+உ=னு ) to him

அவள் + உக்கு = அவளுக்கு (ள் + உ= ளு ) to her

அவர்கள் + உக்கு = அவர்களுக்கு (ள் + உ= ளு ) to them

xxxx

படத்தின் விளக்கம் picture lines

பெண்ணுடைய கையில் குடம்

Pot in the hand of woman

Now let us look at Genitive or Possessive case.

This is Sixth Case in Tamil  “of = உடைய udaiya”

In English we say Rama’s House , or House of Rama.

In Tamil we add udaiya உடைய or in இன் or athu அது

In இன் , athu அது  are not used much.

Some examples

Raamanudaiya veedu ராமனுடைய வீடு Rama’s House or House of Rama   raamanin veedu ராமனின் வீடு, raamanathu veedu ராமனது வீடு .

En veedu என் வீடு, ennudaiya veedu என்னுடைய வீடு , rnathu எனது My House

Un உன் , unnudaiya உன்னுடைய ,unathu  உனது  Your House (House= Veedu)

Nam நம் , nammudaiya நம்முடைய, Namathu நமது Our House

Engal எங்கள், Engaludaiya எங்களுடைய  Emathu எமது Our House

Ungal உங்கள் , Ungaludaiya உங்களுடைய  Umathu உமது Your House (Plural or respectful)

Veetin Kathavu வீட்டின் கதவு Door of the House

Manithanin Uyaram மனிதனின் உயரம் (Man’s Height)

Yaanaiyin Uyaram யானையின் உயரம் (Elephant’s House)

Paambin Visham பாம்பின் விஷம் (Poison of Snake or  Snake’s poison)

Singaththinudaiya Parkal சிங்கத்துடைய பற்கள் (Lion’s Teeth or Teeth of Lion)

Singaththin Parkal சிங்கத்தின்  பற்கள் (Lion’s Teeth or Teeth of Lion)

Note: Am sounded words take Aththin or Aththudaiya)

Raamanathu ராமனது Rama’s , veettathu வீட்டது of House , naattinathu நாட்டினது of the country are not common

நாடு = நாட்  ட்

வீடு = வீட் ட்

oblique  and then doubling

என் = என் ன்

நாட்டினது, நாட்டின், நாட்டுடைய

வீட்டினது , வீட்டின், வீட்டுடைய

என் ன் + உடைய = என்னுடைய

If there is no doubling of N , it will be எனுடைய which is wrong.

What is doubling?

N = ன் is used twice

E.g. உன்  ன் = doubling

Word Meanings

வீடுveedu= house;  யானை yaanai= elephant; பாம்பு paambu= snake, serpent; சிங்கம் Singham/(Simha in Sanskrit)=lion;

பல்Pal= tooth, பற்கள் Parkal= Teeth,  மனிதன் Manithan= man விஷம்visham= poison, நாடுnaadu = country; கதவுkathavu= door

To be continued…………………….

Tags- Possessive, Genitive, Of, Udaiya

நாகபூஷணி அம்பாள் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 30 (Post No.12,597)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,597

Date uploaded in London – –  –  17 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 30

ஜூன் 19ம் தேதி விழா துவங்கும் முன் அம்மன் வீதியில் 3 பாம்புகள் வந்ததைக் கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

61.நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்

உலகில் பாம்பை வழிபடாத பழைய கலாசாரம் ஏதுமில்லை. வேதத்தில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் சிந்து சமவெளியில் பாம்பு வழிபாட்டைக் காண்கிறோம். . கிரேக்க நாட்டில் மைசீனிய மினோவன் (Mycenean, Minoan Civilizations)  நாகரீகத்தில் காண்கிறோம். எகிப்து நாட்டிலோ மன்னர்களே சிவ பெருமான் தலையில் நாகம் இருப்பதுபோல மகுடம் வைத்திருப்பதையும் பார்க்கலாம். ஆயினும் இந்தியாவில் உள்ளது போல பாம்பு வழிபாட்டை, நாகர் வழிப்பாட்டினை வேறு எங்கும் காணமுடியாது. இன்றும் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் நாக பஞ்சமி விழாக்களில் உயிருள்ள பாம்புகளையே பெண்கள் பூஜிப்பதைக் காணலாம். இந்தியாவில் நாகர்கோவில் முதல் இமயமலை வரை நாகர் பெயரில் தலங்களும் கோவில்களும் இருப்பிடத்தை எல்லோரும் அறிவார்கள்.

SNAKE, SERPENT

ஆங்கிலத்தில் பாம்புக்கு உள்ள இரண்டு பெயர்களும் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்பதை மொழி இயல் வல்லுநர்கள் அறிவார்கள் . ஸ்னேக் SNAKE  என்பது நாகத்திலிருந்து வந்த சொல் ஸ் +நாக = ஸ் நேக ; மற்றும் ஒரு சொல் SERPENT சர்பென்ட்; இது ஸர்ப்ப என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே .

SNAKES NEAR THE TEMPLE

இலங்கைக்கு தனிச் சிறப்பு என்னெவென்றால் நாட்டின் பெயரே நாகத் தீவு; நாக நாடு. ஆதி குடிகள் நாகர்கள்  என்று மஹாவம்சமும் மணி மேகலை  என்னும் தமிழ் மொழிக் காப்பியமும் காட்டுகின்றன ; அதிலும் சிறப்புடைய இடம் நயினாத்தீவு என்னும் தீவாகும். இதுவே மணிமேகலை குறிப்பிடும் நாகத்தீவுநாக நாடு, மணி பல்லவம் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்து.

சங்கத் தமிழ் நூல்களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் 20 புலவர்களின் பெயர்கள் நாக என்று முடிவடைகிறது இவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருதன் இளநாகன் . இது போன்ற பெயர்கள் மகா வம்சத்திலும் உள்ளது. குப்தர்  கால  கல்வெட்டுகளும் நாகர் பெயர்களைக் கூறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் தினசரி சந்தியா வந்தனத்திலும் பாம்பினை வழிபடுகிறார்கள் (நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில்)..

இந்து தெய்வங்களில் பாம்பினைப் பயன்படுத்தாத தெய்வங்களே இல்லை. இதைப் பார்த்து பெளத்தர்களும் சமணர்களும் கூட தங்கள் தலைவர்களுக்கு  பாம்பினைச் சூட்டியுள்ளனர். இந்துக்கள் பாம்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை மேலை நாட்டு வெள்ளைக்காரர்கள் புஸ்தகத்தில் எழுதிய பின்னர் தான் நம்மவர்களுக்கே தெரிந்தது. நாக பஞ்சமி விழாக்களை படம் எடுத்தது வெளிநாட்டில் காட்டியோர் இதைச் சொல்லி எல்லோரும் பாம்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். பாம்புதான் நம்முடைய வயல்வெளிகளின் காவலர்கள். பாம்பின் எண்ணிக்கை குறைந்தால் அறுவடை குறைந்து விடும்; வயல் வெளிகளில்  தானியங்களை அழி க்கும் எலிகளின், பூச்சிகளின் எண்ணிக்கை பல கோடி ஆகும்; எலிகளின் முதல் எதிரி பாம்பு; மனிதனின் முதல் நண்பன் பாம்பு. இதனால், பெண்கள் பாம்பு இருக்கும் புற்றுகளை வணங்கி  பால் வார்க்கிறார்கள் ( (மதுரையில் பேச்சி அம்மன் கோவிலில் புற்றுக்குப் பால் விடுவதை நான் பள்ளிக்கூட நாட்களில் வேடிக்கை பார்ப்பேன்)

சில அரைவேக்காட்டுப் பேர்வழிகள் நாகர்கள் வழிபாடு தமிழ் நாட்டில் மட்டும் இருப்பதாகக் கதைப்பார்கள். அதுகளுக்கு மஹாபாரதத்தில் ரிக்வேதத்திலும் குப்தர் கல்வெட்டிலும் நாகர்கள் பெயர்கள் வருவது தெரியாது. பரமபத சோபான படத்தில் நவ நாகர்களின் பெயர்கள் இருப்பதைக் காணலாம். இந்துக்கள் கண்டுபிடித்த இந்த BOARD GAME போர்ட் கேம் ஐ இன்று உலகம் முழுதும் SNAKES AND LADDER ஸ்னேக்ஸ் அண்ட் லேடர் என்று விளையாடுகிறார்கள். தென் அமெரிக்க முழுதும் பரவிய மாயா நாகரீகமே Mayan Civilization அர்ஜுனன் காலத்தில் அங்கு சென்ற நாகர்களின் நாகரீகமே!  இமய மலையில் நிறைய நாகர் தலங்கள் உள்ளன ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஷிர்க்கான் நாகா கோவில் உள்ளது (Temple of Shirgan Naaga., Himachal Pradesh ). காஷ்மீரில் அனந்த நாக , வெரி நாக (Anant nag, Veri nag)  தலங்கள் இருப்பதும் இந்த அசடுகளுக்குத் தெரியாது

எவ்வளவுதான் சொன்னாலும் சிவனுக்கும் அம்பாளுக்கும் மிக நெருக்கமானது பாம்பு. இதை நாகநாதன்நாகேஸ்வரன், நாகாம்பாள், நாகேஸ்வரி  ,நாக பூஷணி என்ற பெயர்களிலிருந்து அறியலாம்.

xxx

இப்பொழுது இலங்கையின் வடபகுதியில் நயினாத் தீவில் இடம்பெற்றுள்ள நாகபூஷணி அம்பாள் கோவிலின் சிறப்புகளைக் காணலாம் .

நாக என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள்; பூஷண BHUSHANA  என்ற ஸம்ஸ்ருதச் சொல்லுக்கு ஆபரணம், அலங்காரம் என்று பொருள்  ஐந்து நாகத்தை குடையாக  அணிந்தவள் நாகபூஷணி Bhūṣaṇa (भूषण) refers to “ornament (for the body)” BHUSHANI

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறுகிறது நயினா தீவு.

சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, கோவலனின் பெற்றோர்களான மாநாய்க்கன் , மாசாத்தன் பெயர்களை இந்தக் கோவிலின் வரலாற்றில் காணலாம். அவர்கள் கண்ட ஒரு அற்புதக் காட்சியே கோவில் உருவாகக் காரணம் ஆனது . ஒரு பாம்பு,  பூவினை வாயில் ஏந்தி இந்தத் தீவினை நோக்கி நீந்தி வந்தது. அதைத் துரத்திக் கொண்டு ஒரு கருடன் வந்தது. உடனே நாகம், கடல் நடுவில் இருக்கும் இரண்டு கம்பம் போன்ற பாறைகளுக்கு இடையே தஞ்சம்  புகுந்தது .  அப்போது மாநாயக்கன் என்னும் வணிகன் அதை விரட்டவே பாம்பு தனது பயணத்தைக் தொடர்ந்து  நாகபூஷணிக்கு பூவை சமர்ப்பித்தது. இதைக் கண்ட வணிகர் இங்கு கோவிலை எழுப்பினார்.

இந்திரன் சாபம் தீரவும் அர்ஜுனன் சாபம் தீரவும் இங்கு வந்து அம்பாளை வழிபட்டதாகவும் கர்ணன் பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன.

இந்தியா முழுதும் சக்தி பீடங்கள் இருப்பதையும் அவை எல்லாம் தக்ஷ யாகத்தினை சிவன் அழித்த  பின்னர், இறந்த பார்வதியின் உடலை சிவன் கொண்டுவந்தபோது ஒவ்வொரு உறுப்பும் விழுந்த இடமெல்லாம் அருள் மழை பொழியும் தலங்களாக ,மாறின என்றும் அறிவோம். அவ்வாறு சக்தி தேவியின் உடல் உறுப்புகளில் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்றும் பிற்கால சம்ஸ்க்ருத நூல்கள் பகரும்.

எது எப்படியாகிலும் நாக பூஷணியின் அருளுக்காக இங்கு பக்தி சிரத்தையோடு வரும் இந்துக்கள், சிங்கள பெளத்தர்கள் எண்ணிக்கைக்கு குறைவில்லை..

பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர் .

1935 ஆம் ஆண்டில் ராஜ கோபுரம் உயர்ந்தது . 1949ம் ஆண்டில் கோவில் நிர்வாகம், தர்மகர்த்தா போர்டின்/ சபையின் கீழ் வந்தது.

அம்பாளுக்காக அழகிய தேர் 1957ல் கட்டப்பட்டது

கிழக்கு நோக்கிய இந்தக்கோவில், ஆர்ப்பரிக்கும் அலை கடலினை நோக்கி அமைத்திருக்கிறது இதனால் படகிலோ, கப்பலிலோ வரும்பக்தர்கள்  தொலைலிருந்தே  இரு  கரங்களையும்  உயர்த்தி வணங்குகிறார்கள் .

கோபுர தரிசனம்  கோடி புண்யம்ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது தமிழ்ச் சான்றோர் செப்பிய நன் மொழிகள் அல்லவா!!

கோவிலின் கருவறையில் 5 தலை நாகத்தின் கீழ் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். பிரகாத்தில் நமக்கு அருள்புரிய சப்த மாதர்களும் துர்கா தேவியும் காத்திருக்கின்றனர்.

உள் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சூரிய சந்திரர், நவ கிரக சந்நிதிகள் இருக்கின்றன.

தினசரி பூஜைகளோடு ஆண்டுதோறும் நடக்கும் விழாவுக்கும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். விழாக்களுக்கு வருவோர் தங்குவதற்கு வசதிகளையும் அன்னதானத்தையும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நைனாத் தீவின் பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது நைனாத் தீவு சாமியார் ஆவார் . முத்துக் குமார சாமி என்ற பெயரில் பிறந்த அவர், பெரிய ஞானியாகி, 1949 ஆம் ஆண்டில் சமாதி ஆனார். தீவுக்கு வருவோர் அந்த சமாதியையும் கும்பிட்டுச் செல்லுவது வழக்கம் .

xxx

இந்த அம்மன் மீது பல புலவர்கள் பாமாலை சூடியுள்ளனர் .

கோவில் பற்றிய நூல்கள்

நயினை நாகேஸ்வரி , குல சபாநாதன், 1962

நயினை நாகபூசணி , என்.கே. சண்முக நாத பிள்ளை, 1981

To be continued………………………………………………

Tags-  நயினை , நாகபூசணி , அம்பாள், நைனா தீவு, நாகத் தீவு,  நாக நாடு, நாகர்கள்  , மணி மேகலை