Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 11
ச.நாகராஜன்
டிக்கட் ப்ளீஸ்?
பிரபல எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டன் (G.K.Chesterton) (பிறப்பு 29-5-1874 மறைவு 14-6-1936) ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு பத்திரிகையை அவர் படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் வந்த டிக்கட் பரிசோதகர், ‘டிக்கட் ப்ளீஸ்?’ என்று கேட்டார்.
உடனே செஸ்டர்டன் தனது பையில் தேட ஆரம்பித்தார்.
டிக்கட் பரிசோதகரோ, “பரவாயில்லை, உங்களிடம் டிக்கட் இருக்கும் என்று எனக்குத் தெரியும். திரும்பி வரும்போது டிக்கட்டை பஞ்ச் செய்கிறேன்” என்றார்.
செஸ்டர்டன், “அதில்லை, நான் எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரிய வேண்டுமல்லவா, அதற்கு டிக்கட் வேண்டுமே” என்றார்.
ஏ.எஸ்.பி. ஐயர் (A.S.P. Iyer) புகழ் பெற்ற எழுத்தாளர், பிரபல நீதிபதியாகவும் திகழ்ந்தவர். (பிறப்பு 26-1-1899 மறைவு 1963)
அவர் கேரளாவில் பிறந்தவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
அவர் ஆக்ஸ்போர்டில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சரித்திரப் பேராசிரியாக இருந்தவர் திரு ஸ்டோன் என்பவர். அசோக மன்னரின் ஸ்தூபங்களைப் பற்றி அவர் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.
அசோக மன்னன் அந்த ஸ்தூபங்களை நிறுவவே இல்லை என்றும் அவர் புகழைப் பரப்ப விரும்பிய ஒருவர் அந்த ஸ்தூபங்களில் அவர் பெயரைப் பொறித்து விட்டார் என்றும் ஸ்டோன் கூறினார். இதைப் பொறுக்கமாட்டாத ஏ.எஸ்.பி. ஐயர் தனது இருக்கையிலிருந்து எழுந்தார்.
பேராசிரியர் ஸ்டோனை நோக்கிச் சுட்டிக் காட்டிய வண்ணம் “கற்கள் எப்போதுமே பொய் சொல்லாது, இந்த ஸ்டோன் ஒருவேளை சொல்லலாம்” (Stones will never lie although this Stone may)
என்று கூறி விட்டு அவர் அமர்ந்தார்.
ஆதாரம் : 16-8-2000 அன்று திரு கே.வெங்கடராமன் என்பவர் ஆங்கில நாளிதழான தி ஹிந்துவில் எழுதிய கடிதம்.11-8-2000 அன்று ‘Ashoka’s edict’ என்று பிரசுரமான கடிதத்திற்கு அவர் இப்படி பதில் எழுதியிருந்தார்.
எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை!
காலம் சென்ற பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒரு சமயம் பாரிஸ் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைப்பொருள் கண்காட்சிக்குச் சென்றிந்தார். அங்கு கலையம்சம் பொருந்திய ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். அப்போது அவரிடம், “ஓவியங்களைப் பார்க்கிறீர்களே, அவற்றைப் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்ட போது அவர் பெருமூச்சு விட்டபடி கூறினார் இப்படி: “எனது வாழ்க்கை முழுவதும் கழிந்த பின்னர் நான் புரிந்து கொண்டது எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை என்பதைத் தான்!” (With a sigh he said, “It has taken me all my life to understand that it is not necessary to understand everything.”)
ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega என்ற நூல்.
83. Kindness is the ornament of prosperity while silence is that of valour. Restraint is the adornment for wisdom and humility, that for learning. Distribution to the deserving embellishes wealth. Lack of anger is the ornament of penance, forbearance that of a powerful one, and sincerity that of following righteousness. Good character, which is the root cause of all these, is the ornament of all.
.தூற்றினால் தூற்றட்டும்; போற்றினால் போற்றட்டும்; தன லக்ஷ்மி வீட்டுக்குள் நுழையட்டும் அல்லது வெளியேறட்டும் ; இன்றே மரணம் வருவதாக இருக்கட்டும் அல்லது பின்னர் வரட்டும் ; இது எவ்வாறானாலும் துணிச்சசல்மிக்கவர்களும் புத்திசாலிகளும் நேர்மையான பாதையிலிருந்து விலக மாரட்டார்கள்– 84
84. Experts in policy or ethics may censure or praise (them); The Goddess of wealth may enter (their house) or leave at will; Death may come (to them) today or in a later eon; regardless, wise and courageous people do not swerve from the path of righteousness.
85. A mouse, making a hole in a basket at night, fell into the mouth of a despairing serpent whose body was constricted in the basket and limbs weak with hunger. Sated with its meat, the serpent quickly exited through the same way. O people! See, it is fate that causes men’s rise and fall.
பாம்பிருந்த பெட்டியொன்றிற் பாரா தெலியொன்று
தூ ம்பு செய்து செல்லச் சுடு பசியாற் — சாம்பிய பாம்
பவ்வெ லியைத் தின்று பின்னர் அவ்வழியே தப்பியதால்
தெய்வ பலம் ஆரறிவார் தேர்ந்து – 85
ஒரு பெட்டிக்குள் பாம்பு அடைப்பட்டுக்கிடந்தது ; அதற்கு ஒரே பசி; அப்போது பெட்டிக்குள் இருக்கும் உணவைச்சா பித்த ஒரு எலி ஓட்டை போட்டு உள்ளே புகுந்தது; காத்திருந்த பாம்பு அதைக்கவ் விப் பிடித்து பசியைத் தீர்த்துக்கொண்டது.. விதியின் போக்கை யார் அறிவார்?-85
XXXX
आलस्यं हि मनुष्याणां शरीरस्थो महारिपुः ।
नास्त्युद्यमसमो बन्धुः कुर्वाणो नावसीदति ॥ 86॥
ஆலஸ்யம் ஹி மனுஷ்யாணாம்
ஶரீரஸ்தோ மஹாரிபுஹு |
நாஸ்த்யுத்யமஸமோ பந்துஹு
குர்வாணோ நாவஸீததி || 1.86 ||
XXXX
“Laziness is a arch enemy residing within all .Industry is man’s matchless friend.”– 86
மனிதர்களுக்குள் உறையும் மிகப்பெரிய எதிரி சோம்பேறித்தனம்; அவனுடைய மிகப்பெரிய நண்பன் தொழில் செய்தல் (முயற்சியில் இறங்கல்) – 86
PART 2- SOURCE OF VATICAN FUNDED DRAVIDIAN ROWDIES
Book title
Story of The World’s Worships, Frank S Dobbins,
Chicago, 1901
For the past 100 years Dravidian rowdies are spreading lies about Hinduism. All those lies are in this book. Of late Vatican is hooking even famous Caranatic Music singers by giving huge sum of money. Now political party scoundrels are spreading the same lies.
For instance, this book also talks about SATI (wives burning in funeral pyre of husbands). But Christian frauds, Caldwell gangs and Max Muller gangs hid one big truth. Neither Manu Smrti, nor Rig Veda mentioned SATI. But 2000 year old SANGAM TAMIL LITERATURE glorified it. A PURA NANURU poem is the verse written by Bhutha Pandyan Devi; she ignored Brahmin ministers’ advise and threw herself in her husbands fire. All these facts were hidden by scoundrels. in North India Hindu women shunned Muslim raping them and threw themselves in Fire before the Muslims’ hands touched them. Whole of India knew the story of the greatest Hindu Woman Rani Padmini who threw herself into fire with hundreds of her palace friends before the Rape Maniac Alauddin Khilji entered the palace.
xxxx
This anti Hindu book showed RESCUED (from SATI) HINDU WOMEN and Odisha Hindus breaking Hindu Chariot of Lord Jagannath after becoming Christians. It says 2000 hHindus converted themselves and brough all Hindu Idols to Bishop’s place. Full of Fiction!!
Book is full of poison which the Dravidian rowdies vomit every day. If Vatican money can poison Carnatic Music Singers, cant they change already dirty mouthed politicians?
Here are some MORE pictures:
also read the matter with the pictures
Read the matter with the pictures.
To be continued……………………..
–subham–
Tags- Rare pictures, Part 2, Anti Hindu book, Dirty Dravidians ,Source book,
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 10
கோவில் எண் 9 – திருப்பரையார் அல்லது த்ருபிரயார் ராமர் கோவில்
இந்தக் கோவில் குருவாயூர் அல்லது திருச்சூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் தோன்றிய வரலாறு , சிலைகள் நிறுவிய வரலாறு எல்லாம் சுவையான அடிப்படையில் அமைந்துள்ளன; அது மட்டுமல்லாமல் 6 அடி உயர் ராமர் (விஷ்ணு) சிலையின் கையில் அட்சமாலை இருப்பது இன்னும் ஒரு வியப்பான விஷயம்.
கடற்கரையில் ஒதுங்கிய 4 சிலைகளை, வக்கையில் கைமால் என்ற உள்ளூர் பிரபுவிடம் மீனவர்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அவை ராம லட்சுமண, பரத , சத்ருக்கனன் என்ற நால்வரின் சிலைகள் ஆகும். அவைகளை அவர் 4 இடங்களில் பிரதிஷ்டை செய்து கோவில் உருவாக்க உதவினார். இப்படி நான்கு/ நாலு
இடங்களில் கோவில்கள் உண்டானதால் அவை நாலம்பலம் FOUR TEMPLES என்று அழைக்கப்பட்டன.
அவை அமைந்த இடங்கள் :
ராம பிரான் – திருப்பரையார் கோவில்
பரதன் – இரிஞ்சல குடா கூடல் மாணிக்கம் கோவில்
திருமூழிக்களம் – லட்சுமணன் கோவில்
பையம்மல் – சத்ருக்னன் கோவில்
மலையாள பக்தர்கள் ஆனி / கற்கடக மாதத்தில் இந்த 4 கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
த்ருப்ரையாரில் எங்கே கோவிலை அமைப்பது என்று ஜோதிடர்களுடன் ஆராய்ந்தபோது ஒரு அசரீரி கேட்டது (ஆளற்ற குரல் = அ + சரீரம் = BODYLESS VOICE ) . மயில் எங்கே பறக்கிறதோ அதன் கீழ் கோவிலைக் கட்டவும் என்றது அக்குரல். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் மயில் வரவில்லை. ஒருவர் அங்கே மயில் தோகையுடன் வந்து நின்றார் ஓஹோ! இறைவன் ஓ கே O K சொல்லிவிட்டான் என்று சிலையைப் பிரதிஷ்டை செய்த்தனர். ஆனால் அதன் பிறகு உண்மையிலேயே ஒரு மயில் சற்று தள்ளிப் பறந்து சென்றது. உடனே அங்கே பலிக் (BALI STONE) கல்லை நிறுவினார்கள். அது ஆடிக்கொண்டே இருந்தது. அதாவது நிலையாக நிற்கவில்லை. கேரளத்தில் அபூர்வம் நிகழ்த்தும் சித்தர்கள் , சாமியார்கள் உண்டு. வில்வ மங்கலம் சாமியார் , நாரணத்து ப்ராந்தன் (நாராயண பைத்தியக்காரன் ) ஆகியோர் மிகவும் பிரபலம் ஆனவர்கள். பைத்திய(ப்ராந்தன்) சித்தர், கோவில் தந்திரியை அழைத்து மந்திரங்களை சொல்லி ஒரு ஆணியை அடிக்கச் சொன்னார். கல்லும் ஆடாது , அசங்காது நின்றது. இன்றும் ஆணியைக் காணலாம் .
ஒரு முறை வில்வமங்கல சாமியார் வந்த போது ஸ்ரீ தேவியும் பூதேவியும் கோவிலின் கிழக்கு நுழைவாயிலைத் தவிர்த்து மேற்கு வாசல் வழியாக வந்ததைக் கண்டார். பின்னர் அவர் அந்தகக் கதவுகளை மூடச் சொல்லிலிவிட்டு ஸ்ரீதேவி ,பூதேவீ விக்கிரகங்களை நிறுவினார்.
எல்லா வகையிலும் விநோதங்கள் நிறைந்த கோவில் இது; மூலஸ்தானம் ஒரு பக்கம்; பலி-க்கல் இன்னொரு பக்கம். கோதண்ட ராமர் என்றால் வில் மட்டும் இருக்க வேண்டும்; ஆயினும் இங்கு இருப்பதோ நாலு கைகளை உடைய விஷ்ணு; அதிலும் ஒரு கையில் பிரம்மா போல அட்ச மாலை. சங்கு சக்கரம், வில்/கோதண்டம் மற்றும் மாலை!! .அருகில் பெருமாள் போல ஸ்ரீ , பூ தேவிகள்.
ஆயினும் கோவிலில் ராமாயண மரச் சிற்பங்கள் நிறைந்திருப்பதால் இதை ராமர் கோவில் என்று சொல்லுவதும் பொருத்தமே; அது மட்டுமல்லாமல் பழங்கால ஓவியங்கள் அப்படியே இருக்கினறன .
இன்னொரு வினோதம் என்ன வென்றால் தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் , கணபதி சந்நிதிகள் இருப்பதாகும்.
இவ் வாறு பல அம் சங்கள் கொண்ட இறைவனைப் பலரும் மும்மூர்த்திகளின் வடிவமாகவே காண்பதுண்டு.
வெடி வழிபாடு
ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒரு வினோத வழிபாடு, ஒரு விசித்திர பிரசாதம் இருப்பது இந்து மதத்தின் சிறப்பு லோகோ பின்ன ருசிஹி = உலகம் பலவிதம் என்பது காளிதாசனின் வாக்கு. இங்கு வெடிகளை வெடித்து காணிக்கை/ நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்; ஆதிகாலத்தில் வன விலங்குகள், பக்தர்களின் பாதைகளில் குறுக்கிடக்கூடாது என்பதற்காக இந்துக்கள் செய்த வேலை இது. இப்போது மனித விலங்குகள் அதிகம் ஆகிவிட்டதால் வன விலங்குகள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன.
தலை திரும்பிய ராம பிரான்
பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையின் தலை பக்கவாட்டில் திரும்பியவாறு இருந்தது. கணிப்பாயூர் நம்பூதிரி வந்து தலையைத் திருப்பிவைத்தார் மேலே பட்டுத்துணிகளைப் போட்டுவிட்டு வெளியே வந்தார்; ராமர் மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டார் காலப்போக்கில் ஒரிஜினல் ராமர் விக்கிரகம் தேய் மானம் அடைந்தது . ஜோதிடர்களை அழைத்து ப்ரச்னம் போட்டுப்பார்த்தார்கள்; சிலையை மாற்றாதே என்ற உத்தரவே ப்ரச்னத்துக்கு (ப்ரஸ்னம் என்றால் கேள்வி) விடையாக வந்தது உடனே அர்ச்சகர்கள் புது வழி கண்டு பிடித்தனர் பஞ்ச லோகத்தில் (ஐம்பொன்) ஒரு ஆடை போல செய்து மேலே வைத்துவிட்டனர். அதிலுள்ள முகம் மிகவும் அழகாக அமைந்துவிட்டதால், பக்தர்கள் வைத்த கண்ணை எடுக்க மாட்டார்கள். அவ்வளவு அழகு ! கொள்ளை அழகு !!
திப்பு சுல்தான் தாக்குதல்
கர்நாடகத்தை ஆண்ட ஹைதர் அலி, அவனது மகன் திப்பு சுல்தான் ஆகிய இருவரும் தாக்காத கோவில்கள் மிகச் சிலவே. இந்தக் கோவிலும் மதவெறியன் திப்புவின் வாளுக்குத் தப்பவில்லை. ராமரின் 4 கைகளில் ஒன்றை வெட்டினான்; ரத்தம் கொட்டியது. உடனே பயந்து போய் என்ன செய்வதென்று திகைத்தான். அறிஞர்களின் கூற்றுப்படி வணங்கிவிட்டு கோவிலுக்கு காணிக்கையும் கொடுத்துவிட்டுச் சென்றான் (see page 131 of Temples and Legends of Kerala, K R Vaidyanathan, B V Bhavan, Bombay, 1982).
நமஸ்கார மண்டபமும் நவக்கிரக சிற்பங்களும்
கோவிலின் நடுப்பகுதி வட்டவடிவில் அமைந்தது. கூம்பு வடிவ கோபுரம். நமஸ்கார மண்டபம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது 24 பிரிவுகள் உள்ளன. அங்கே நவக் கிரக மரச் சிற்பங்களும் புராதன ஓவியங்களும் உள .
ஸ்ரீ கோவிலில் ராமாயண சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன .
கூத்து ஆட்டம்
அபிநயங்கள் மூலம் , வாக்கியங்கள் வசனங்கள் இல்லாத கூத்து ஆட்டம் இங்கே நடப்பது கோவிலின் மற்றொரு சிறப்பாகும் ; விருச்சிக மாதத்தில் (நவம்பர் மத்தி ) 12 நாட்களுக்கு கூத்து நடக்கும்; அனுமான் – சீதை சந்திப்பு , மோதிரம் (அங்குலீயம்) கொணர்தல் முதியன கருப்பொருள் ஆக இருக்கும் .
வருடத்தில் இரண்டு பெரிய விழாக்கள் நடைபெறும்; விருச்சிக (நவம்பர்) மாத ஏகாதசி விழா , மீன மாத (மார்ச்- ஏப்ரல்) பூரம் விழா. ஏகாதசி அன்று ஐயப்பன் பவனி, பெருமாள் பவனிகள் ஏராளமான யானைகளுடன் நடக்கும்
இந்தக்கோவில் ஜாமோரின் ZAMORIN என்ற இந்து மன்னர்களின் கீழ் இருந்து 1719- ம் ஆண்டு ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது . பின்னர் திப்பு சுல்தான், டச்சுக்காரர்களை விரட்டி அடித்ததான் . பின்னர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், சுல்தானைத் தோற்கடித்தனர் கொச்சி மன்னர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து கோவிலைப் பெற்றனர். இப்போது கொச்சி தேவஸ்வம் போர்டின் கீழ் வந்துவிட்டது .
–subham—
Tags- ராமர் கோவில், கேரளம் , திருப்பறையார் , நாலம்பலம் ராமாயண சிற்பங்கள் ,திருப்ரையார், திப்பு சுல்தான்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே!
ச.நாகராஜன்
கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்ட ஐந்து விஷயங்கள்
கர்ப்பத்தில் இருக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ஐந்து விஷயங்கள் விதியால் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.
அவை யாவை?
விடை தருகிறது இந்த ஸ்லோகம்.
ஆயு: கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச |
பஞ்சைதாநி ஹி ச்ருஜ்யந்தே கர்பஸ்தஸ்யைவ தேஹின: ||
ஆயுள், தொழில், செல்வம், கல்வி மற்றும் மரணம் ஆகிய ஐந்தும் மனிதர்களுக்கு அவர்கள் கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்டு விட்டன.
கடவுளுக்கே தெரியாத நான்கு விஷயங்கள்
ஒரு அரசன் தன் மனதில் என்ன நினைக்கிறான், ஒரு கருமியிடம் இருக்கும் செல்வம், ஒரு கெட்ட (கிரிமினலின்) மன ஓட்டமும் செய்கையும், பெண்களின் நடத்தை – ஆகிய இந்த நான்கு விஷயங்களையும் கடவுளே கூட அறிய மாட்டார் என்றால் (சாதாரண) மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?
பூர்வஜென்ம புண்ணியத்தால் பெரும் செல்வம் அடைந்த ஒருவன் அடர்ந்த வனத்தை தனது சொந்த நகரமாகக் கருதுவான்; எல்லா மனிதர்களும் மிக நன்றாக தன்னிடம் நடப்பதாக நினைப்பான்; எல்லா நிலமும் ரத்னமயமாக அவனுக்குத் தெரியும்.
பீமம் வனம் பவதி தஸ்ய புரம் ப்ரதானம்
சர்வோ ஜன: சுஜனதாமுபயாதி தஸ்ய |
க்ருதஸ்னா ச பூர்பவதி சன்னிதிரத்னபூர்ணா
யஸ்யாஸ்தி பூர்வசுக்ருதம் விபுலம் நரஸ்ய ||
தலையெழுத்தில் எழுதாவிடில் என்ன பிரயோஜனம் இவற்றால்!
ஒருவனுக்கு விதியால் விதிக்கப்பட்டு அவன் தலையெழுத்தில் எழுதப்படவில்லை என்றால், அதிக படிப்பு, கூரிய அறிவு, வீரம், இன்னும் பல நற்குணங்கள் அவனிடம் இருந்தும் பயன் என்ன?
(விதி இல்லையென்றால் இவை அனைத்தும் இருந்தும் பயன் இல்லை என்று பொருள்)
முயற்சியின்றி அதிர்ஷ்டம் மட்டும் ஒன்றையும் சாதித்து விடாது!
ஒரு ரதமானது ஒற்றைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு ஓட முடியாது; அது போல மனித முயற்சி இல்லாமல் அதிர்ஷ்டம் (விதி) மட்டும் தானாகவே எதையும் சாதித்து விட முடியாது.
யதா ஹோயேகேன சக்ரேன ந ரதஸ்ய கதிர்பவேத் |
ஏவம் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||
பிரம்மா, விஷ்ணு, சிவனாலும் முடியாத காரியம்!
பிரம்மா, விஷ்ணு, சிவனாலும் முடியாத காரியம் ஒன்று உண்டு!
அது என்ன?
ஒருவன் நெற்றியில் எழுதி விட்ட கோடுகளை (தலையெழுத்தை அல்லது விதியை) ஹரி, ஹரன் அல்லது பிரம்மா யாராக இருந்தாலும் சரி முற்றிலுமாக அழித்து விட முடியாது.
ஹரிணாபி ஹரேணாபி ப்ரஹ்மணாபி சுரைரபி |
லலாடலிகிதா ரேகா ப்ரிமார்ஷ்டு ந சக்யதே ||
மனதை அடக்குவது மிகவும் கடினம்!
தாயுமானவர் கூறுகிறார்
குதிரையையும், மதயானையையும் வசப்படுத்தி விடலாம்.
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்.
ஒரு சிங்கத்தின் முதில் ஏறி உட்கார்ந்து கொள்ளலாம்.
பாம்பை (கட்செவி) ஆட்டுதலும் செய்ய முடியும்.
நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.
வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம்.
தேவர்களை ஏவல் செய்து வேலை வாங்கலாம்.
என்றும் இளமையோடு இருக்கலாம்.
மற்றொருவர் உடலில் புகுந்து கொள்ளலாம்.
நீரின் மேல் நடக்கலாம். நெருப்பின் மேல் இருக்கலாம்.
நிகரில்லாத சித்திகளைப் பெறலாம்.
ஆனால், மிகவும் கஷ்டமான விஷயம் என்னவெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் தான்”.
இப்படி தேஜோமயானந்தப் பாடலில் அவர் குறிப்பிடுகிறார்
(உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேஜோமயானந்தமே)
ஓ கடவுளே! ஒருவன் சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை அடக்கலாம்; ஆனால் ஒருவன் தனது வலிமையினால் காமத்தினால் வரும் இன்ப விஷயங்கள், குடி, போதை ஆகியவற்றில் ஈடுபட்ட மனதை அடக்கவே முடியாது.
வெள்ளி மலை யான கைலாசத்திலும் தங்க மலையான மேருவிலும் வளரும் மரங்கள் , மற்ற எல்லா மரங்கள் போலத்தானே இருக்கின்றன; அவைகளால் என்ன பயன்? ஆனால் மலய மலையோ கசப்பான கங்காள, கூடஜ, வேப்ப மரங்களையும் சந்தன மர வாசனையால் கமழச் செய்கின்றதே ; ஆகையால் அதைப் போற்றுவோம் .– 8080. Of what avail are the golden and silver mountains, the trees growing on which remain the same trees. We respect the Malaya Mountain, inhabiting which even Kankola, Neem and Kutaja become sandal trees.
கிம் தேன ஹேமகிரிணா ரஜதாத்ரிணா வா
யத்ராஶ்ரிதாஶ்ச தரவஸ்தரவந்த ஏவ |
மன்யாமஹே மலயம் ஏவ யத்ஆஶ்ரயேண
கங்கோலநிம்பகடுஜா அபி ச ந் தனாஃ ஸ்யுஃ –80
xxxxxx
रत्नैर्महार्हैस्तुतुषुर्न देवा
न भेजिरे भीमविषेण भीतिम् ।
सुधां विना न प्रययुर्विरामं
न निश्चितार्थाद्विरमन्ति धीराः – 81
81. The Devas were not content with the precious gems (that emerged from the ocean). They did not take fright at the terrible poison. They did not stop till they obtained ambrosia. Courageous ones do not turn back from the determined goal.
பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அதிலிருந்து வந்த ரத்தினங்களுடன் திருப்தி அடைந்து நின்றுவிடவில்லை.; விஷம் வெளியே வந்த போதும் பயந்து ஓடவில்லை ;அமிர்தம் கிடைக்கும் வரை கடைவதை நிறுத்திவில்லை ; துணிவுள்ளவர்கள் லட்சியத்தை அடையும் வரை பின்வாங்க மாட்டார்கள் .
ரத்னைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ன தேவா
ன பேஜிரே பீமவிஷேண பீதிம் |
ஸுதாம் வினா ன பரயுர்விராமம்
ன னிஶ்சிதார்தாத்விரமன்தி தீராஃ -81
அமுதம் பெற சுரர் பாலாழி கடைந்தார்
அமுதம் பெறு முன்னர் ஆலம் — திமிதிமெ ன்று
மேலெழுந்ததற் கஞ்சார் மேலா மரத்தனங்கள்
பாலெழுந்தவற்றை ப் பரிந்து மன மா லெழுந்து
நாட்டார் அதுகாறும் நாடி எவராலும்
தேடா அமுதம் திரளுமட்டும் — வாடார்
பிடித்த பிடிவிடார் பெற்றி போல் நெஞ்சந்
தடித்த துணிவுடை யார் தாமும் — முடித்தன்றி
எண்ணி முடியுங் கருமம் எப்படியும் கைவிடார்
மண்ணிலே நின்ற வழக்கு — 81
xxxxxx
क्वचित् पृथ्वीशय्यः क्वचिदपि च पर्यङ्कशयनः
क्वचिच्छाकाहारः क्वचिदपि च शाल्योदनरुचिः ।
क्वचित् कण्ठाधारी क्वचिदपि च दिव्याम्बरधरो
मनस्वी कार्यार्थी न गणयति च दुःखं न च सुखम् ॥ ८२॥
82. Sometimes sleeping on the (bare) earth and sometimes on a couch, sometimes eating only vegetables and sometimes tasting rice, sometimes wearing rags and beautiful clothes at other times : A brave person bent upon (accomplishing) a task does not care for comfort or hardship.
ஒரு குறிக்கோளை அடைய விரும்ம்பும் லட்சியவாதி பஞ்சு மெத்தையிலும் தூங்குவான்; தரையிலும் படுப்பான் வெறும் பழம் காய்களையும் சாப்பிடுவான்; சமைத்த சாதத்தையும் சாப்பிடுவான் கந்தையையும் அணிவான்; பட்டுப் பீதாம்பரங்களையும் அணிவான்;
I published three parts from 1932 book in the past three days; now I am publishing more pictures from another anti Hindu book. Bishop Caldwell gang wrote to Europe Christians that Dravidians worship devils and ghosts. Cadwell wrote to them that Tirunelveli Nadar community, Sanars etc worship ghosts. The also spread the propaganda that Hindus throw their wives into funeral pyres of their husbands. They published pictures of rescued women. They also published pictures showing Brahmins dying holding the tail of a cow and strange pictures of Hindu saints.
Book title
Story of The World’s Worships, Frank S Dobbins,
Chicago, 1901
Here are some pictures:
Tri
Lord Indra
Tri Murthy
Kanpur temple
Brahmins die by holding tails of cows- Christian Propaganda
Hindu boys are taught to worship animas
Hindu Mothers kill childrem poem
Hindu women are Slaves
Hindus commit suicide in front of Temple Raths/ chariots
—subham—
tags – Anti Hindu Pictures, 1901 book, Dravidian , Devil, Worshippers, Caldwell propaganda, anti hindu poems
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 9
கோவில் எண் 8 – எட்டுமானூர் சிவன் கோவில்
கோட்டயம் அருகிலுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் இது.
எட்டுமானூர், ஏற்றமானூர் என்று அழைக்கப்படும் இடம் கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. கோவிலின் த்வஜ ஸ்தம்பம் / கொடிமரம் தங்கத் தகட்டில் ஜொலிப்பதால் அதையும், மேற்கு நோக்கிய கோபுரத்தையும் தொலைவிலிருந்தே காணலாம். சுவாமி மேற்கு நோக்கி இருந்து அருள் புரிகிறார் .முதலில் வலிய விளக்கு எனப்படும் பெரிய விளக்கினை வழிபட்டுவிட்டு சிவனைத் தர்சிக்கச் செல்லுவது மரபு/ சம்பிரதாயம். ஏனெனில் 1545ம் ஆண்டு முதல் சுமார் 500 ஆண்டுகளாக எரியும் விளக்கு இது. ஆகையால் விளக்கிற்கு எண்ணெய் காணிக்கை செலுத்துவது முக்கிய வழிபாடு ஆகும். விளக்கு 3 லிட்டர் எண்ணெய் வரை தக்க வைத்துக்கொள்ளும். பகதர்கள் மேலும் மேலும் ஊற்றினால் கீழேயுள்ள தொட்டியில் அது சேரும். விழாக்காலத்துக்கு தேவையான எண்ணெய் அதில் சேர்ந்துவிடுகிறது. மேலும் திரியில் சேர்ந்துள்ள கருப்பு மையை பெண்கள் கண்களுக்கு இட் டுக் கொள்கிறார்கள். இது கண் நோய்களுக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது .
கரண் என்ற அசுரன் சிவ பெருமானை வேண்டி மூன்று சிவலிங்கங்களைப் பெற்று அவைகளை பிரதிஷ்டை செய்வதற்கு மூன்று இடங்களை தேர்ந்தெடுத்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம். அதில் ஒன்று எட்டுமானூர் .
xxxx
வலிய விளக்கின் கதை
1542-ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது கோவில் வாசலில் நின்று கொண்டிருந்த சிப்பந்திகளிடம் ஒரு தட்டான் தங்கம் போல் ஜொலிக்கும் விளக்கினைக் கொண்டு வந்து, இதை கோவிலில் வையுங்கள் என்றார். ஒவ்வொருவரும் அவரைக் கேலி பேச்சுப் பேசி உதாசீனம் செய்தனர். இவ்வளவு பெரிய விளக்கிற்கு யார் எண்ணெய் ஊற்றுவார்? இது என்ன தண்ணீரில் எரியுமோ? என்றெல்லாம் பகடி பேசினர். அப்போது இடி மின்னலுடன் மழை ஆரம்பமானவுடன் ஒருவர் விளக்கினை எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் ஓடினார் . மழை நின்றபின்னர் அந்த விளக்கு திரிகளுடன் எண்ணெயில் எரிந்து கொண்டிருந்தது. அன்று முதல் இன்றுவரை அணையவில்லை.
இது போல வடலூரில் ராமலிங்க சுவாமிகள் ஏற்றி வைத்த அடுப்பும் விளக்கும் 200 ஆண்டுகளாக இன்றுவரை எரிந்து கொண்டு இருக்கிறது .
2 அடி உயர லிங்கம்
எட்டுமானூரில் இரண்டு அடி உயர லிங்கம் மஹாதேவன் என்று வழிபடப்படுகிறார். அதற்கு முன்னால் அழகிய விக்கிரகமும் இருக்கிறது. 2 நந்திகள் உண்டு. இதில் பஞ்ச லோகத்தால் ஆன நந்தி செம்பகசேரி மன்னர் கொடுத்தது; அவருக்கு வயிற்று வலி வந்த போது கோவிலுக்கு வந்து 41 நாள் விரதம் இருந்தார் ; அந்த நோய் நீங்கியவுடன் இதை நெல் நிரப்பி அளித்தார்.
அதிலுள்ள ஓட்டையிலிருந்து நெல்லை எடுத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு சென்றனர். பின்னர் அது நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது இந்தக் கோவிலின் அமைப்பு, வைக்கம் மஹாதேவர் கோவில் போலவே வட்ட வடிவான கர்ப்பக்கிரகத்துடன் இருக்கும்; ஆயினும் வைக்கம் கோவிலை விடச் சிறியது.
கோவில் கூரை, தூண்கள் ஆகியன செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது
ராமாயண சிற்பங்கள்
கோவிலில் உள்ள தூண்கள், சுவர்கள் ஆகியவற்றில் நல்ல சிற்பங்களைக் காணலாம். ராமாயண காட்சிகள் மரச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ கோவில் எனப்படும் தேவி கோவில், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, கணபதி சந்நிதிகளும் இருக்கினறன. சுவாமிக்கு தங்க வைர மாலைகள் அணிவிக்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்..
10 நாள் உற்சவம்
கும்ப மாதத்தில் (பிப்ரவரி மார்ச்) வருடாந்திர உற்சவம் நடக்கிறது. அதில் எட்டாம் நாள் உற்சவம் முக்கியமானது. அன்று நள்ளிரவுக்குப் பின்னர் சுவாமி, ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அலங் கா ரத்துடன் தரிசனம் தருகிறார். அன்று பக்தர்கள் பெருந்திதிரளாக வருகிறார்கள்.
தங்க யானைகள் – ஏழரைப் பொன்
எட்டாம் நாள், பத்தாம் நாள் திருவிழாக்களின் முக்கிய அம்சம் ஏழரைப் பொன்னால் ஆன தங்க யானைகளைக் காண்பதாகும். இவைகளை திருவாங்க்கூர் மன்னர் அனிச்சம் திருநாள் மார்த்தாண்ட வர்மா , போர் வெற்றிக்குப் பின்னர் கோவிலுக்கு தானமாக அளித்தார் ஏழரைத் துலா தங்கத்தினால் ஆன ஒவ்வொரு யானையும் 2 அடி உயர தங்க யானை.கள் . எட்டாவது யானை ஒரு அடி உயரமே இருப்பதால் ஏழரை பொன் யானை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது
பணக்கார கோவில்
எட்டுமானூர் மஹாதேவர் கோவில் பணக்கார கோவில். சிவன் அருள்பெற்ற மன்னர்கள், எல்லாவற்றையும் தங்கத்தினால் செய்து கொடுத்துவிட்டார்கள் தங்க நகைகள், வைர நகைகள், தங்கக் குடங்கள், தங்கம் பதித்த வலம்புரிச் சங்குகள் ,யானைக்கு தங்க முக பட்டாம், வெள்ளி நந்திகள் முதலியன கோவில் கஜானாவில் உள்ளன.
மான் + ஊர் = மானூர்
ஊருக்கு வெளியே ஐந்து கி.மீ தொலைவில் தேவகிரி உள்ளது. சிவபெருமான் ஒரு மானை உருவாக்கி அங்கே விளையாட விட்டதாக ஒரு கதை. புராணங்களில் வரும் மணிமான் தீர்த்தம் அது. இதனால் எட்டு மானூர் (எட்டி இருக்கும் ) என்று பெயர் ஏற்பட்டதாம். கோவிலுக்கு சிவலிங்கத்தைக் கொண்டுவந்த கரண் தான் இப்படி மான் உருவம் எடுத்தானாம். இது போல இன்னும் பல கதைகளும் உண்டு
வில்வ மங்கள சாமியார் இங்கு வந்து சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து வெல்லமும் வாழைப்பழமு நைவேத்தியம் செய்தார். விஷ்ணு சிலை ஒன்றையும் நிறுவினார் அவர் அஷ்ட மங்கல மூத்தது இடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தார் அந்தக் குடும்பம் எட்டு குடும்பங்களாகப் பெருகியது. மக்கள் எட்டு மனைகளோட ஊர் என்று அழைக்கவே எட்டு மானூர் என்ற பெயர் நிலைத்து நின்றது என்ற விளக்கமும் உண்டு.
சிவ பக்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் என்பதில் ஐயமில்லை
சம்போ மஹாதேவ சிவா சம்போ மஹாதேவா !
—subham —
Tags- கேரள மாநில, புகழ்பெற்ற, 108 கோவில்கள், Part 9, எட்டுமானூர், சிவன் கோவில், தங்க யானைகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 31
கொங்குப் புலவர் சபை!
ச.நாகராஜன்
27-10-2019 அன்று கட்டுரை எண் 7144இல் கம்பர் தமிழுக்குத் தந்த கல்யாண வரி என்ற தலைப்பில் கொங்கு மண்டல சதகம் பாடல் 30 விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டுரை இது.
கம்பர் தமிழுக்குத் தந்த கல்யாண வரியை அவ்வப்பொழுது கொடுக்கக் கூடிய உரிமையை கொங்குப் புலவர் சபை பெற்றது.
அதை விளக்கும் பாடலாக கொங்கு மண்டல சதகம் பாடல் 31 அமைகிறது.
பாடல் இதோ:
வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயுமுரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : குலோத்துங்க மன்னனின் சாசனப்படிக்குண்டான, கல்யாண வரியை ஐந்து பிரிவுகளை உடைய புலவர் வகுப்பினரில் தகுதி வாய்ந்தவர்கள் இவர்கள் என்று தேர்ந்தெடுத்து உரிமை தரும், கொங்குப் புலவர் சங்கம் கூடும் திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.
இதை விவரமாகப் பார்க்கலாம்.
பாணர் அல்லது வாணர் என்பவர்கள் பழந்தமிழ்க் குடிகளுள் மிகவும் சிறந்த பிரிவினர். தங்கள் பாடல்களால் அவர்கள் பெருந்தன்மையையும் வீரத்தையும் வளர்த்து வந்தனர்.
தமது முன்னோர்கள் பாடிய பாடல்களைத் தலைமுறை தலைமுறையாகப் பாடி வருவார்கள். புதிய பாடல்களையும் புனைந்து வருவர். வாணி தேவியே அவர்கள் நாவினின்று செய்யுளாக உதிக்கிறாள்; ஆகவே அவர்கள் தர்மசீலர்கள் என்று போற்றப்பட்டு வந்தனர்.
ஒருவனை, “நீ கெடுவாயாக” என்று அங்கதம் என்னும் அரம் பாடுவார்களாயின் அவர்களால் பாடப்பட்டோர் நிச்சயம் கெட்டுப் போவார்கள். ஆகவே இவர்களிடத்து மக்களிடத்தில் பயம் உண்டு.
வேந்தர்களும் வீரர்களும் இவர்களால் பாடப்படுவதைச் சிறந்த கௌரவமாகக் கருதினர். ஒவ்வொரு ஊராகச் சென்று பயமின்றி இவர்கள் இன்பச் சுவை தரும் அகப்பாட்டுகளையும் வீரம் தரும் புறப்பாட்டுகளையும் பாடி வந்தனர். யாழ் இசைத்து இவர்கள் பாடும் பாடல்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.
இவர்கள் வேற்றரசர்களிடம் தூதும் செல்வதுண்டு. தனது அரசனின் சேனை வலிமையையும் வீரத்த்தையும் கூறுவதோடு மாற்றரசனின் பலமின்மையையும் கூசாமல் நேருக்கு நேர் நின்று எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்கள் இவர்கள்.
ஒருவேளை இரு மன்னர்களிடையே போர் உண்டானால் அதை சமரசம் செய்து தீர்த்து வைப்பவர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர்.
அரசர்கள் நீதி தவறி தவறு இழைத்தார்களெனில் அவர்களை இடித்துரைத்துத் திருத்துவர்.
தமது அரசர் வேறு ஒரு அரசனால் சிறைபிடிக்கப்பட்டால் அந்த அரசனிடம் சென்று உரிய முறையில் பேசி தமது அரசனை விடுவிக்கச் செய்வதும் உண்டு. அதே போல ஒரு மன்னன் மாண்டு விட்டால் அவரது மக்களுக்கு பேருதவி புரிவதும் இவர்களே.
கோயிலில் இருக்கும் சாசனங்களை விட இவர்களது பாடல்களே நிலையான சாசனமாகும் என்று இவர்கள் பாடும் பாடல்களை மக்கள் போற்றி மதித்து வந்தனர்.
சங்க நூல்களில் இவர்களின் அருஞ்செயல்கள் குறிக்கப்படுகின்றன.
சிறுபாணாற்றுப் படை உரையில் குறிப்பிடப்படும் பாணர் – பாடுவோர் எனப்படுவர் இவர்களே. இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என இவர்கள் பலவகைப்படுவர்.
பொருநராற்றுப்படை உரையில் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என இவர்கள் குறிக்கப்படுகின்றனர்.
மதுரைக்காஞ்சியில், பாணர் வருக, பாட்டியர் வருக, யாணர்ப் புலவரொடு வைரியர் வருக என்பனவற்றின் உரையில் கவியாகிய புது வருவாயினை உடைய புலவர்களுடன் பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, கூத்தர் வருவாராக எனக் குறிக்கப்படுகின்றனர்.
மலைபடுகடாம் உரையில் கூத்தர் ஆடன்மாக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பாணர்கள் விறல்பெற ஆடுதலால் விறலியர் என்றும் கூறப்படுவர்.
மேலே தரப்பட்டுள்ள கொங்குமண்டல சதகம் பாடல் 31இல் இரண்டாம் அடியில் ‘பழந்தமிழை வாணர் கொள்ள’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை,
“புரவலன் பரிசு கொண்டு மீண்ட
விரவலன் வெயிறெறு விமுங்கா னத்திடை
வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப்
புரவல நாடூர் பெயர்கொடை பராசு
யாங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை”
என்று இலக்கண சூத்திரம் வலியுறுத்துக் கூறுகிறது.
தற்காலத்தில் கொங்குமண்டலத்தார் கொள்ளும் ஐவாணர்கள் :-
பட்டன், புலவன், பண்பாடி, தக்கைகொட்டி மற்றும் கூத்தாடி என்ற ஐவரே ஆவர்.
இதனைக் கொங்கு வேளாளர் கல்யாணத்தில் பாடும் மங்கலவாழ்த்து என்று நாளும் பாராட்டப்படும் நூலில் காணலாம் :
“பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்
திட்டமாய்ச் சோபனஞ் செப்பிமுன் னேவர
அரம்பை மேனமை அணிகொள் திலோத்தமை
திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்
வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
நன்மை சேர்பரத நாட்டிய மாடிட”
என்ற வரிகளால் காணலாம்.
இங்கு பட்டன் – தலைவனை புகழை அவன் முன்னே நின்று பாராட்டுவோன்.
புலவன் – இயற்றமிழால் பாடல் பாடிப் புகழ்வோன்
பண்பாடி – இசைத் தமிழ் பாடுவோன்
தக்கைகொட்டி – தக்கை என்னும் ஒரு வகை வாத்தியத்தை வாசிப்பவன்
கூத்தாடி – நாடகத் தமிழை நடத்துவோன்.
இவர்களில் உயர்வு தாழ்வு வகையாகப் பல உட்பிரிவினரும் உண்டு.
கொங்குமண்டலத்தார் பெரிய நாடு என்று பாராட்டும் கீழ்கரைப் பூந்துறைத் தலைமை நகரான திருச்செங்கோட்டில், மலை முதல் படி அருகில் உள்ள அழகிய விநாயகர் சந்நிதியில் படிகாரர்கள் சபை என்ற ஒரு சபை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டப்படுகிறது.
அப்போது இனிமேல் கம்பர் உரிமையில் பங்கு பெறக் கூடியவர்கள் இவர்கள் எனத் தேர்ந்தெடுத்து சபைத் தலைவரால் வெற்றிலை கொடுக்கப்படுகிறது. அதன் பின்னரே புலவர் அட்டவணையில் பெயர் பதியப்படும்.
இச்சங்க காலத்தில் அப்போது ஏற்படும் சங்கத் தலைவரால் நியமன தாம்பூலம் பெறாதவர் பன்னூலாய்ந்த பெரும் பாவலர் என்றாலும் படி (வரி) பணித்தல் பங்கு கொடுக்கமாட்டார்கள். கல்யாணம் முதலிய முக்கிய சபைகளில் வாழி சொல்லும் தகுதியும் இவருக்கு இல்லை என்பது சங்கத்தாரின் கொள்கை.
கொங்கு வேளாளர் கல்யாணங்களில் இப்புலவர்கள் வாழி சொல்லாவிடில் கல்யாணம் பூர்த்தியானதாகக் கருதப்படமாட்டாது.
புலவர் அப்போது வரவில்லையெனில் அவர்களது உரிமை சன்மானத்தை எடுத்து வைத்த பின்னரே அந்தணர் முதலியோருக்கு பூரி முதலியன தரும் வழக்கம் ஐந்துபடிகாரர் இருக்கும் நாடுகளில் இன்றும் நடந்து வருகிறது.
விவாகம் செய்வோரிடத்து ஏதேனும் சில ஆசாரக் குறைபாடுகள் இருப்பின் புலவர் வாழி சொல்ல மாட்டார்.
புதிதாகப் பெண் கேட்கச் செல்லும் போதும் சில முக்கிய ஆசார நற்காரியங்கள் செய்யும் போதும் புலவரில் ஒருவரேனும் இருக்க வேண்டும் என்று கொங்கு வேளாளர்கள் விரும்புகின்றனர்.
இது நாட்டதிகாரம் பெற்ற பழைய பரம்பரையைச் சார்ந்தவர்களிடத்து இன்றியமையாதது. பெண்களும் புலவர்களை உபசரிப்பர்.
புதிதாக உள்ள செல்வந்தர்களை விட பழையபரம்பரையைச் சேர்ந்த ஏழையை புலவர்கள் மனதார மதிக்கின்றனர்.
இவர்கள் சேர வேளாளர்கள் எனப்படுகின்றனர். இவர்களும் கொங்கு வேளாளர்களைப் போல நன்மை தீமை சடங்குகளுக்கான ஆசாரங்களை நடத்துகிறார்கள்.
இந்தப் புலவர் வகுப்பினர் கொங்குமண்டலத்தில் மட்டுமல்லாது, பாண்டிமண்டலத்து சங்கரநாராயணர் கோவில், ஊற்றுமலை-சொக்கம்பட்டி-புளியங்குடி- எட்டயபுரம் முதலிய இடங்களில் இன்றும் வசித்து வருகின்றனர்.
இவர்களை மதித்து இவர் தம் பழம்பெரும் பண்பாட்டை வழிவழியாக காத்து வருவது தமிழர் தம் கடமையாகும்.
Sub marine fire- Vadamukagni; Badavagni; Hindu discovery
इतः स्वपिति केशवः कुलमितस्तदीयद्वीषा-
मितश्च शरणार्थिनां शिखरिणां गणाः शेरते ।
इतोऽपि वडवानलः सह समस्तसंवर्तकै-
रहो विततमूर्जितं भारसहं च सिन्धोर्वपुः ॥ ७७॥
இதஹ ஸ்வபிதி கேஶவஹ குலம் இதஸ்ததீயத்விஷாம்
இதஶ்ச ஶரணார்தினாம் ஶிகரிணாம் கணாஹா ஶேரதே |
இதோஅபி படவானலஹ ஸஹ ஸமஸ்தஸம்வர்தகைரு
அஹோ விததம் ஊர்ஜிதம் பாரஸஹம்ச ஸின்தோர்வபுஹு –77
கடலிடத்தில் ஓர் பால் கரியமால் வாழ்வார்
ஆடலரக்கர் ஓர் பால் அமர்வார் — திடமுடைய
மாமலைகள் ஓர்பால் வடவானலமொரு பால்
தாமிருக்கும் மேன்மை பெரிதாம் –77
77. To one side lies Vishnu. Elsewhere, the clan of his foes (the demons) lives. In another part rest the group of mountains seeking refuge. In yet another side, the marine fire resides along with all the apocalyptic clouds. Oh, how vast, mighty and capable is the expanse of the ocean.
ஒரு புறத்தில் விஷ்ணு; மறுபுறத்தில் கடலில் ஒளிந்திருக்கும் அரக்கர்கள்; இன்னொரு புறத்தில் கடலில் தஞ் சம் புகுந்த மலைகள், இன்னொரு புறமோ உலகினை அழிக்க காள மே கத்துடன் காத்து நிற்கும் வட முகாக்கினி இந்தக் கடல்தான் எவ்வளவு பெரியது! எவ்வளவு சக்தி வாய்ந்தது !
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
तृष्णां छिन्धि भज क्षमां जहि मदं पापे रतिं मा कृथाः
கீர்திம் பாலய து:கிதே குரு தயாம் ஏதத்ஸதாம் சேஷ்டிதம் || 1.78||
ஆசையகற்றி அரும்பொறை மேற்கொண்டு
மோச மதத்தை முறுக்கியழித்– தேசுகின்ற
து ற்செய்கையின் மனத்தை த் தோயா தடக்கி மெய்யே
பற்பலர்க்கும் பேசிப் பணிவுடனே சற் சனங்கள்
போம் வழியிற் சென்று புலவர் ப் பணிந் தெளியோ ர்
ஆம்பலர்க்கும் நன்மை செயற் காதரித்து தாம் பகைமை
பூண்டோர்க்கும் நீதி புரிந் தறிவால் மாண்டோர்க்
கடக்கம் செலுத்தி அரும்புகழ்க்கு பங்கத்
தொடக்க மிலாத துகள் தீர் நடக்கையுடன்
வாழ்ந்து துயரப் படுவோர்க்கன்பு வழங்குவதே
ஆழ்ந்தறிவின் மேலோர்க் கழகு –78
78. Check (your) desire, practice patience, give up pride, and do not take pleasure in sinful deeds. Speak the truth, follow the path of good people, and serve the learned people. Respect those who deserve respect, appease enemies, and conceal your merits. Protect (your) good reputation and show mercy to those in sorrow. This is the definition of good people.
உங்கள் ஆசையைக் கட்டுப்படுத்துங்கள் கர்வத்தினை விடுங்கள் ;பாவ காரியங்களில் இன்பத்தினை நாடாதீர்கள்;உண்மையே பேசுங்கள் நல்லோரைப் பின்பற்றுங்கள்;கற்றோருக்கு சேவை செய்யுங்கள் மரியாதை கொடுக்க வேண்டியவர்களை மதித்து நடங்கள் உங்கள் பெருமைகளை தம்பட்டம் அடிக்காதீர்கள் துக்கத்தில் உழல்வோருக்கு உதவுங்கள் எதிரிகளுக்கும் தயவு காட்டுங்கள் ;இதுவே நல்லவரின் இலக்கணம் – 78
xxxxxxxxxxxxxxx
मनसि वचसि काये पुण्यपीयूषपूर्णाः
त्रिभुवनमुपकारश्रेणिभिः प्रीणयन्तः ।
परगुणपरमाणून् पर्वतीकृत्य नित्यं
निजहृदि विकसन्तः सन्ति सन्तः कियन्तः 79
மனஸி வசஸி காயே புண்ய பீயூஷபூர்ணாஸ்
த்ரிபுவனம் உபகாரஶ்ரேணிபிஹி ப்ரீணயன்தஹ |
பரகுணபரமாணூன்பர்வதீக்ருத்ய நித்யம்
நிஜஹ்ருதி விகஸந்தஹ ஸந்தி ஸந்தஹ கியந்தஹ—79
மனமாதி மூன்றால் மருவு நற்செய்கை
தினமாற்றல் என்கின்ற தெய்வ க் – கன மருந்தாற்
பூரணரா யார்ர்க்கு மன்பு பூண்டுதவி செய்வதற்குக்
காரணராய் மற்றவர் பாற் காணுகின்ற — ஏர ணுவா ம்
சற்குண மேனுமதைத் தாமலை போலே மதித்து
நிற்கு மனங்கொண்ட நிமல – சற்குணர்கள்
இவ்வுலகில் எங்கும் இருப்போர் சிலராவார்
தெய்வ கதியா மிதனைத் தேர்– 79
79. There are a few good people, filled with the nectar of purity in thought, word and action, pleasing the three worlds with a series of beneficial acts. They make a mountain of the tiniest virtues of others and rejoice in their heart.
சொல்லிலும் செயலிலும், சிந்தனையிலும் தூய்மை உடைய சிலர் இருக்கின்றனர்; நல்ல செயல்களினால் முருவுளக்கங்களையும் அவர்கள் திருப்திப்படுத்துகிறார்கள் மற்றவர்களிடத்தில் கடுகளவு நல்ல குணம் இருந்தாலும் அதை மலை போலக் காட்டி மகிழ்வார்கள்- 79
–subham–
Tags- பர்த்ருஹரி , நீதிசதகம் , பகுதி 24, ஸ்லோகம் 77,78, 79, Bhartruhari, Nitisataka, part 24, slokas 77,78,79 Badavagni