QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,357

Date uploaded in London – –  2 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ விநாயகர் அகவல் பத்து QUIZ

QUIZ SERIES No.57

1.பிற்கால ஔவையார்  வழங்கிய விநாயகர் அகவல் துதியில்  எத்தனை வரிகள் இருக்கின்றன ?

xxxxxx

2.ஔவையார் கண்ட பிள்ளாயாருக்கு எத்தனை கைகள், எத்தனை கண்கள் ?

Xxxx

3.முப்பழம் நுகரும் மூஷிக  வாகனனே என்பது ஔவையார்  சொன்ன வரி. 3 பழங்கள் எவை?

xxxxx

4.மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே என்று ஔவை சொல்லும் வரி திருவாசகத்தில்  எங்கு உள்ளது?

xxxxx

5.ஔவை வரிசையாக எண் பரிபாஷைகளை (Number Symbolism)  உபயோகிக்கிறார். ஐந்தெழுத்து, ஐம்புலன்கள் எல்லோருக்கும் தெரியும்..தலமொரு நான்கும் (4)   தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின்(3)   மயக்கம் அறுத்தே

ஒன்பது (9) வாயில்   ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை (5)   அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து(6)   அங்கிசை நிலையும் (35

இதிலுள்ள 4,  3, 9, 5 , 6 என்பன யாவை ?

xxxxxx

6.இடைபிங் கலையின்   எழுத்து அறிவித்து

கடையில் சுழுமுனைக்   கபாலமுங் காட்டி- என்ற வரிகளில் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்றால் என்ன அர்த்தம் ?

xxxxxx

7.நான்று எழுபாம்பின்   நாவில் உணர்த்தி

குண்டலி அதனில்   கூடிய அசபை

விண்டுஎழு மந்திரம்   வெளிப்பட உரைத்து– என்ற வரிகளில் பாம்பு, அசபை என்றால் என்ன ?

xxxx

8.மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி

சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்

எண்முக மாக இனிது எனக்கருளி

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி– என்பதன் சுருக்கமான பொருள் என்ன ?

xxxx

9.சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி—

இதில் சத்தம், சித்தம் என்பன என்ன ?

xxxxxx

10.ஒளவை எப்படி விநாயகர் அகவலை முடிக்கிறார் பொருள் என்ன ?

xxxxx

விடைகள்

1.ஆறு ஔவையார்களில் பிற்கால ஔவையார்  வழங்கிய விநாயகர் அகவல் துதியில் 72 வரிகள் உள .

Xxxxxx

2.ஐந்து கைகள் மூன்று கண்கள் .

Xxxx

3.மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்

Xxxx

4.மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி என்று சிவபுராண துதியில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.

xxxx

5.மூன்று மலங்கள் – ஆணவம், கன்மம், மாயை

நான்கு தலங்கள் — சரியை, கிரியை, யோகம் , ஞானம் ஆகிய நான்கால் அடையும் சாலோக, சாமீப, சாரூப , சாயுஜ்ய என்னும் நான்கு நிலைகள்

ஐந்து புலன்கள் – கண், காது, , மூக்கு, , வாய், மெய்/உடல்

ஒன்பது வாயில் — பகவான் கிருஷ்ணர் கீதையில் நவத் வாரபுரி என்று உடலை வருணிக்கிறார்;  அவை இரு கண், இரு செவி, நாசியின் இரு துளை, வாய், எருவாய், (Anus) கருவாய் (Genital organ).

ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்

xxxxxx

6.இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்

பிங் கலை  வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்

சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி

Xxxxx

7.பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி

அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

xxxxxx

8. யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும். எட்டு என்பது- ஓசைஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.

xxxx

9.புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக

xxxx

10.கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன்  உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.

xxxxx

விநாயகர் அகவல் – ஔவையார்

சீதக் களபச்   செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு   பலஇசை பாடப்

பொன்னரை ஞாணும்   பூந்துகி லாடையும்

வன்ன மருங்கில்   வளர்ந்தழகு தெறிப்பப்

பேழை வயிறும்   பெரும்பாரக் கோடும் (5

வேழ முகமும்   விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும்   அங்குச பாசமும்

நெஞ்சில் குடிகொண்ட   நீல மேனியும்

நான்ற வாயும்   நாலிரு புயமும்

மூன்று கண்ணும்   மும்மதச் சுவடும் (10

இரண்டு செவியும்   இலங்குபொன் முடியும்

திரண்டமுப் புரிநூல்   திகழொளி மார்பும்

சொற்பதங் கடந்த   துரியமெய்ஞ் ஞான

அற்புதன் ஈன்ற   கற்பகக் களிறே

முப்பழம் நுகரும்   மூஷிக வாகன (15

இப்பொழுது என்னை   ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத்   தானெழுந் தருளி

மாயாப் பிறவி   மயக்கம் அறுத்துத்

திருந்திய முதலைந்து   எழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்துஎன்   உளந்தனில் புகுந்து (20

குருவடி வாகிக்   குவலயந் தன்னில்

திருவடி வைத்துத்   திறமிது பொருளென

வாடா வகைதான்   மகிழ்ந்து எனக்கருளிக்

கோடா யுதத்தால்   கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம்   புகட்டிஎன் செவியில் (25

தெவிட்டாத ஞானத்   தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை   அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின்   இனிது எனக்கருளிக்

கருவிகள் ஒடுங்கும்   கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை   அறுத்து இருள்கடிந்து (30

தலமொரு நான்கும்   தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின்   மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில்   ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை   அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து   அங்கிசை நிலையும் (35

பேறா நிறுத்திப்   பேச்சுரை அறுத்தே

இடைபிங் கலையின்   எழுத்து அறிவித்து

கடையில் சுழுமுனைக்   கபாலமுங் காட்டி

மூன்று மண்டலத்தின்   முட்டிய தூணின்

நான்று எழுபாம்பின்   நாவில் உணர்த்தி (40

குண்டலி அதனில்   கூடிய அசபை

விண்டுஎழு மந்திரம்   வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின்   மூண்டுஎழு கனலைக்

காலால் எழுப்பும்   கருத்து அறிவித்தே

அமுத நிலையும்   ஆதித்தன் இயக்கமும் (45

குமுத சகாயன்   குணத்தையுங் கூறி

இடைச்சக் கரத்தின்   ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின்   உறுப்பையுங் காட்டி

சண்முகத் தூலமும்   சதுர்முக சூக்கமும்

எண்முக மாக   இனிது எனக்கருளி (50

புரியட்ட காயம்   புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும்   தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால   வாயில் காட்டி

இருத்திமுத்தி இனிது   எனக்கு அருளி

என்னை அறிவித்து   எனக்கருள் செய்து (55

முன்னை வினையின்   முதலைக் களைந்து

வாக்கும் மனமும்   இல்லா மனோலயம்

தேக்கியே எந்தன்   சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கும்   ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்   தழுத்திஎன் செவியில் (60

எல்லை யில்லா   ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே   அருள்வழி காட்டி

சத்தத்தி னுள்ளே   சதாசிவம் காட்டி

சித்தத்தி னுள்ளே   சிவலிங்கம் காட்டி

அணுவிற் கணுவாய்   அப்பாலுக் கப்பாலாய் (65

கணுமுற்றி நின்ற   கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும்   விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர்   குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின்   அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின்   நிலையறி வித்து

தத்துவ நிலையைத்   தந்தெனை யாண்ட

வித்தக விநாயக   விரைகழல் சரணே. (72

—- SUBAM —–

TAGS- விநாயகர் அகவல், பொருள் என்ன, ஒளவையார், க்விஸ், கேள்வி-பதில்

S.Nagarajan  Article Index : JULY 2023 (Post No.12,356)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,356

Date uploaded in London –  2 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

SNR Article Index : JULY 2023

JULY  2023

 1-7-23 12210  பழைய கேள்வி தான்; ஆனால் புதிய பதில்கள்!            

 2-7-23 12214  எப்போதும் நினைவில் இருத்த வேண்டியவர்கள்! 

             சுபாஷிதம்                                                

 3-7-23 12218  SNR Article Index : JUNE 2023.

  4-7-23  12222 சுவாமி விவேகானந்தர் தன்னைப் பற்றிக் கூறியவை!                                                            

  5-7-23 12226சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி,    கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – முதல் பகுதி – 2-7-23 மாலைமலர் இதழில் வெளி வந்தது.                                                                              6-7-23 12231 சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி,    கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – இரண்டாம் பகுதி – 2-7-23 மாலைமலர் இதழில் வெளி வந்தது.                                                              7-7-23 12236 நக்ஷத்திர ரகசியம்!                                                                                           8-7-23 12242 மாறி வரும் மும்பை!                                           9-7-23 12247 காலன் வரும் முன்னே காலன் வரமாட்டான் – 6       10-7-23 12252 நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 – அத்தியாயம் 5                     11-7-23 12257 800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்! -(முதல்       பகுதி).                                                                                                                                         12-7-23 12261 800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்! (இரண்டாம்  பகுதி).                                                                                                                 13-7-23 12266 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7     14-7-23 12271 பிசாசு ரௌடி கார்!                                                                                      15-7-23 12276 எது கொடியது? எது இனியது?                                                                   16-7-23 12280 வெற்றி தரும் விஜய யோகம் – சுபாஷித செல்வம்                      17-7-23 12285 சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின்

                               அறிமுகம்! – 1                                                                                                   18-7-23 12290 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6 

19-7-23  12294 நள சம்பு சம்ஸ்கிருத இலக்கியக் கடல் –  2                                 20-7-23 12299 திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!  (முதல்

            பகுதி) – மாலைமலர் 18-7-23 கட்டுரை

21-7-23 12303 திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்!  (இரண்டாம்   பகுதி) – மாலைமலர் 18-7-23 கட்டுரை                       22-7-23 12307 நீதி த்விசஷ்டிகா  – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில    துளிகளின் அறிமுகம்! – 3                                              23-7-23 12311 நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்! (முதல் பகுதி) 20-7-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை                             24-7-23 12316  நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்! (முதல் பகுதி) 20-7-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை                                25-7-23 12320வியாஸ சுபாஷித சங்க்ரஹா  சம்ஸ்கிருத இலக்கியக்     கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 4                                    26-7-23 12325 சரஸ்வதி கண்டாபரணம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் –  சில துளிகளின் அறிமுகம்! – 5.                                         27-7-23 12330  திருக்கருகாவூர்  கர்ப்பரக்ஷாம்பிகை – கர்ப்பரட்சாம்பிகையின் கருணை (பகுதி 1) மாலைமலர் 22-7-23 இதழில் பிரசுரமானது     28-7-23 12334  திருக்கருகாவூர்  கர்ப்பரக்ஷாம்பிகை – கர்ப்பரட்சாம்பிகையின் கருணை (பகுதி 2) மாலைமலர் 22-7-23 இதழில் பிரசுரமானது                           29-7-23 12339 கிராதார்ஜுனீயம் சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில    துளிகளின் அறிமுகம்! – 6                                            30-7-23 12343 இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – முதல் பகுதி – மாலைமலர் 25-7-2023  இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை       31-7-23 12347 இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – இரண்டாம் பகுதி – மாலைமலர் 25-7-2023  இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.

** 

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 1 8 2023 (Post No. 12,355)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,355

Date uploaded in London – –  1 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தக் கட்டத்தில் 9 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்   

12  
    
3   
   4 
5   
67  

குறுக்கே

1.பெரிய அரசி

3.கம்பலை என்றால் நடுக்கம்; அச்சம்; துன்பம்; சச்சரவு; ஆரவாரம்; என்று பொருள்.

4.கள்ள உள்ளம் உடைய  (Left to Right)

5.தெளிவாகக் காணக்கூடியது

6.தாமரை என்பதன் ஸம்ஸ்க்ருதப் பெயர் ; நேருஜியின் மனைவி பெயரிலும் உண்டு

xxxxx

 கீழே

2.மாலை ; கார்லண்ட் என்ற ஆங்கிலச் சொல்லின் வேர்ச்சொல்

4.சரஸ்வதியின் மற்றோரு பெயர்  (go up)

7.முட்டாள் , அறிவு குறைந்தவன்

விடைகள்

1.மஹாராணி ;3.கம்பலை;  4.கபடு (Left to Right)

5.கண்கூடு; 6.கமலம்

xxxxx

2.ஹாரம் ;4.கலை வாணி (go up);7.மண்டு,

ம1ஹா2ராணி
  வா
க3ம்லை
 டுக4 
க5ண்கூடு
க6ம7ம்

–subham—

மூகாம்பிகை, சாரதாம்பிகை, முருதேஸ்வர்- கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற……Part 15 (Post No.12,354)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,354

Date uploaded in London – –  1 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மூகாம்பிகை, சாரதாம்பிகை , முருதேஸ்வர் கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 15  

உடுப்பியிலிருந்து முக்கியமான  கோவில்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்பதை (Distance From Udupi) முதலில் காண்போம். ஓரிரு நாட்களில் உடுப்பியில் ஹோட்டல் அறை எடுத்து தங்கினால் நால் திசைகளிலும் பயணம் செய்து பல முக்கிய இடங்களைக் காணலாம் (கிலோமீட்டரில்)

Sri Manjunatha Swamy Temple, Dharmasthala  தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவில்       110 kms.

Sri Subramanya Kshetra, Subramanya, Kukke  ஸ்ரீ  சுப்ராஹ்மண்ய கோவில் ,குக்கே  164 kms.

Sri Sahasralingeshwara Temple, Uppinangadi உப்பினகடி ஸஹஸ்ர லிங்கேஸ்வர கோவில்108 kms.

Sri Karinjeshwar Temple, Bantwal    பந்த்வால் கரிஞ்சேஸ்வர் கோவில்100 kms.

Sri Durgaparameshwari Temple, Kateel        கதீல் துர்கா பரமேஸ்வரி கோவில் 60 kms.

Sri Ananthapadmanabha Temple, Kudupu  குதுப்பு அந்த பத்மநாப சுவாமிகோவில் 69 kms.

Sri Mangaladevi Temple, Mangalore மங்களூரு மங்களாதேவி கோவில் 63 kms.

Sri Rajarajeshwari Temple, Polali      போலாலி  ராஜ ராஜேஸ்வரி கோவில் 84 kms.

Sri Kadri Manjunatha Temple, Mangalore   கத்ரி மஞ்சு நாத கோவில் 63 kms.

Sri Durgaparameshwari Temple, Bappanadu           பப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோவில் 35 kms.

Sri Gokarnanatha Temple, Kudroli, Mangalore        குத்ரோலி கோகர்ண நாத கோவில் 60 kms.

Sri Mookambika Devi Temple, Kollur            ஸ்ரீ மூகாம்பிகை கோவில்  70 kms.

Sri Sharadamba Temple, Sringeri      சிருங்கேரி சாரதாம்பா 90 kms.

Thousand Pillars Basadi, Moodabidri           55 kms.சமணர் கோவில்

Gomateshwara, Karkala         40 kms.சமணர் கோவில்

Chaturmukha Basadi, Karkala           40 kms.சமணர் கோவில்

The distance between Mangalore and Murudeshwar is 86 miles. The road distance is 97.5 miles.

மைல் கணக்கில் மங்களூரு- முருதேஷ்வர் கோவில் ரயில் நிலையம் 86 மைல் சாலை வழியாக 97.5 மைல்

Xxxxx

Sringeri Sharadamba Temple

நிலாவர்

சீதா நதியின் கரையில் அமைந்த இடம் ஒரு புனித ஸ்நான கட்டம் ஆகும் .விருச்சிக மாத பஞ்சமியன்று , பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நதியில் புனித ஸ்நானம் செய்ய வருகின்றனர். உடுப்பியிலிருந்து 18 கி.மீ தொலைவில் இருக்கிறது இங்கு மஹிஷமர்தினி என்னும் துர்கா கோவில் இருக்கிறது

Xxxx

72.கொல்லூர் மூகாம்பிகை கோவில் Sri Mookambika Devi Temple, Kollur

இது முக்கியமான சக்தி/ தேவி வழிபாட்டுத் தலம் .

இக் கோயிலின் பிரதான தெய்வமாக சுயம்பு மூர்த்தமான ஜோதிர்லிங்கம் ஆகும். இதன் நடுவில் தங்கத்தினாலான வரிகளையுடய ஒரு பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவியர்களையும் வலப்புறம் மும்மூர்த்திகளையும் குறிக்கிறது. இதனுடன் நான்கு கைகளையுடய பஞ்சலோகத்தாலான மூகாம்பிகை திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இது உடுப்பியிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்குள்ள மூகாம்பிகை தேவிக்கு மூன்று கண்களும் நான்கு கரங்களும் உள்ளன. இரு கரங்களில் சக்கரமும் சங்கும் ஏந்தி இருக்கும் அன்னை, மற்ற இரு கரங்களில் ஒரு கை அபயகரமாகவும் இன்னொரு கை தன் பாதத்தைச் சுட்டிக்காட்டும் படியாகவும் பத்மாசனத்தில் அமர்ந்தபடி இருக்கிறாள்.

கேரள பாணியில் ஆண்கள் சட்டை அணியாமல் மேல் துண்டுடன் தான் செல்ல வேண்டும்.

அன்னை மூகாம்பிகை தேவிக்கு MGR எம்.ஜி.ஆர். தங்க வாள் காணிக்கை செலுத்தினார். இதைத் தொடர்ந்து 2004ல் அங்கே சென்ற ஜெயலலிதாஅந்தக் கோவிலுக்கு 30,000 ரூபாயும் ஒரு டன் நெய்யும் காணிக்கையாகக் கொடுத்தார்.

ஆதிசங்கரர் நிறுவிய மந்திர தந்திர ஸ்ரீ சக்ரமே மூகாம்பிகை கோவிலின் புகழுக்கும் காரணம். ‘மூக’ என்றால் தமிழில் ஊமை என்று பொருள். மூகனாக இருந்த, ஒரு அசுரனை அன்னை பார்வதி அழித்ததால் இந்த தேவிக்கு மூகாம்பிகை என்று பெயர்; சிலையைப் பார்த்தால் கொள்ளை அழகு!

அனைவரும் உடனே தரிசிக்க வேண்டிய அன்னை மூகாம்பிகை.

நான் அங்கு  வாங்கிய படத்தை தினசரி டைரியில் வைத்து அனுதினமும்  வழிபடுகிறேன். பூஜை அறையில் தனி படம்.

xxxx

மனைவிக்கு போட்ட கட்டளையை நானே மீறிய இடம்.

எங்கே சாமி படத்தைப் பார்த்தாலும் வாங்குவது; அதை பூஜை அறைக்குள் வைத்து பூ வைப்பது என் மனைவியின் வாடிக்கை. இது எனக்கு எரிச்சலைத் தந்தது ஆகையால்  இனி சாமி படமே வாங்ககூடாது . பழைய படங்களை, டிஸ்போஸ் பண்ண முடியாமல் தவிக்க நேரிடுகிறது. சுவாமிகள் சொல்லும்படி பழைய படங்ககளை நதிகளில் தூக்கி எறிந்தால் லண்டனில் தண்டனை அபராதம் வேறு  என்று எச்சரித்து இருந்தேன் .

என் கட்டளை மீறப்பட்ட முதல் இடம் எங்கள் குல தெய்வம் குடிகொண்ட வைத்தீஸ்வரன் கோவில் . அங்கு நிறைய படங்கள் வாங்கி ஒன்று பூஜை அறையில் இருக்கிறது. ஆகையால் இந்த முறை எந்தப் படமும் வாங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அர்ச்சனை எல்லாம் முடிந்தது கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் நமஸ்காரம் செய்தவுடன் ஆசீர்வாத மந்திரம் சொல்லித் பட்டர் ஒரு  பூஜைத் தட்டைக் கொடுத்தார் . பின்னர் ஒரு விபூதி பாக்கெட்டுடன் படத்தையும் கொடுத்து இதை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார் . இதைவிட வேறு அசரீரி வேறு தேவையா? பயபக்தியுடன் வாங்கி பூஜை அறையில் வைத்தோம் . நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினை க்கிறது .

மனைவிக்கு போட்ட கட்டளையை நானே மீறிய இடம் மூகாம்பிகை கோவில்.

தரிசனத்தை முடித்துக் கொண்டு அரை மணி நேரத்துக்குள் வெளியே வந்து விட்டோம். பக்கத்திலேயே சாலையில் கடை வைத்து ஒருவர் பல சைஸ்களில் மூகாம்பிகை படங்களை விற்றுக் கொண்டிருந்தார். என்னை அறியாமலேயே ஒரு படத்தை விலைக்கு வாங்கினேன் . காரணம் அவ்வளவு அழகு; அவ்வளவு லட்சணம் ; அருள் பொங்கும் முகம்!!! சாமி படமே வாங்கக்கூடாது  என்ற கட்டளையை மட்டும் மீறுபவன் அல்ல. புஸ்தகமே வாங்கக்கூடாது என்ற கட்டளையையும் அடிக்கடி மீறுகிறேன் !!!

Xxx

73.சிருங்கேரி சாரதாம்பாள் கோவில்

ஆதிசங்கரர் நிறுவிய மடமும்   ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயமும் அமைந்துள்ளது.  இந்த இடத்தில் ஒரு தவளை நாகத்திற்கு கடும் வெயிலில் குடை பிடிப்பதைக் கண்டு வியந்து , ஆதி சங்கரர் இந்த இடத்தைத்  தேர்ந்தெடுத்துள்ளார். இயற்கையின் விதிகளை மீறி பகைமை உணர்வை மிருகங்களே கைவிட்ட இடமாதலால் அன்பின், அமைதியின் இருப்பிடம் அது .

ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. 14ம் நூற்றாண்டில், வித்யாரண்யர், சந்தன விக்ரகத்தை கல் மற்றும் தங்கத்தாலான விக்ரகமாக மாற்றினார் . கேரள பாணியில் மரத்தால் அமைந்த இக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் கல் கட்டிடம் எழுந்தது  . தூங்க பத்திரா ஆற்றைக் கடந்தால் அடுத்த கரையில் சிருங்கேரி சங்கராச்சார்யரையும், மடத்தையும் தரிசிக்கலாம்.

Xxxxxx

74. முருதேஸ்வர் கோவில்

“ஸ்ரீ முருதேஸ்வரர்” சிவன் கோவில் 500 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உடைய கோவில்

அரபிக் கடல் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவிலுக்கு 20 நிலைகள் கொண்ட அழகிய , மிக உயரமான ராஜகோபுரம் இருக்கிறது. இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கிறது. இதர தெய்வங்களுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. சனிபகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது.. கந்துக குன்றின் மீது அமைந்த கோவில் இது.

சிவ பிரான் சிலையின் உயரம் 123 அடி ;

கோபுரத்தின் உயரம் 237 அடி..

இந்தியாவில் உள்ள கோபுரங்களில் மிக உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று

கோபுரத்தின் உச்சி வரை லிப்ட் LIFT அமைத்திருப்பது  மற்றொரு சிறப்பு.

அங்கிருந்து அரபிக்  கடலையும் சிவன் சிலையையும் கண்குளிர தரிசிக்கலாம்

சிலைகள் பூங்காவில் இராவணன் , கிருஷ்ணார்ஜுனா , கணேசர், சூர்ய நாராயணர்  சிலைகளையும் பெரிய அளவில் சமைத்திருக்கிறார்கள் 

சிவ பிரான் சிலைக்கு அடியிலுள்ள குகை மியூசியத்தில் ராவணனின் லீலைகளையும் காணலாம் .

சிவனிடம் ஆத்ம லிங்கத்தை ராவணன் தவம் செய்து வாங்கினார் . அந்த  லிங்கத்தை கணபதி தந்திரமாக இங்கே இறக்கிப் பிரதிஷ்டை செய்துவிட்டார்.

முருதேஸ்வரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் மங்களூர் நகரம் இருக்கிறது. மைல் கணக்கில் மங்களூரு- முருதேஷ்வர் கோவில் ரயில் நிலையம் 86 மைல் ; சாலை வழியாக 97.5 மைல்.

To be continued…………………………………………….

Tags- சிருங்கேரி, சாரதாம்பா கோவில், முருதேஸ்வர் , கொல்லூர், மூகாம்பிகை, மனைவிக்கு கட்டளை, நானே  மீறினேன்

QUIZ தமிழ் சங்கம் பத்து QUIZ (Post No.12,353)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,353

Date uploaded in London – –  1 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

QUIZ தமிழ் சங்கம் பத்து QUIZ

1.மூன்று தமிழ் சங்கங்களும் எவ்வளவு காலம் இருந்தன ?

XXXX

2.மதுரையில் நாலாவது தமிழ் சங்கத்தைத் துவக்கியது யார்?

XXXX

3.இரண்டாம் தமிழ் சங்கத்தின் நூல்கள் யாவை ?

XXXX

4.முதல் தமிழ் சங்க மன்னரின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?

XXXXX

5.இரண்டாம் தமிழ் சங்க மன்னரின் தலை நகரின் ஸம்ஸ்க்ருதப் பெயர் என்ன?

XXXXX

6.மூன்று தமிழ் சங்கங்கள் கால புலவர்கள் எண்ணிக்கை என்ன ?

XXXX

7.முதல் இரண்டு தமிழ் சங்க நகர்களுக்கு என்ன நேர்ந்தது ?

XXXX

8.கடைச் சங்கம் என்னும் மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்தது  உண்மைதான்  என்பதைக் காட்டும் நூல்கள் எவை ?

XXX

9.தமிழ் சங்க ஆண்டுகள் பொய் என்று சொல்லுவோர் என்ன காரணங்களைக் காட்டுகின்றனர் ?

XXXX

10.மொழியியல், மானுடவியல், அறிவியல், புவியியல் ஆகிய விஞ்ஞான அடிப்படையில் சங்கதாதை அணுகுவோர்  CONCLUSION முடிபு என்ன?

XXXX

ANSWERS

1.தலை, இடை, கடை என்று மூன்று தமிழ் சங்கங்கள் இருந்த ஆண்டுகள்   4440+3700+1850 = 10,020 ஆண்டுகள்

XXXXX

2.மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.

XXXXX

3.இரண்டாம் தமிழ் சங்கத்தின் நூல்கள்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் இத்தொடக்கத்தன; அவர்கள் கால இலக்கணம் :அகத்தியம், தொல்காப்பியம்மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம்

XXXX

4.ஜெயமா கீர்த்தி ; ஜெயா மஹா கீர்த்தி; அவருடன் தமிழ் வளர்த்த அகஸ்தியரின் பெயரும் தமிழ் அல்ல. ரிக்வேதத்தில் உள்ள  பெயர்

XXXX

5.கபாடபுரம்

XXXXX

6.மூன்று தமிழ் சங்கங்கள் கால புலவர்கள் எண்ணிக்கை4449 +3700+ 4449 புலவர்கள். உலகில் எந்த நாட்டு வரலாற்றிலும் இப்படிப் புலவர்கள் இருந் தாக வரலாறே இல்லை .

XXXXX

7.அவை சுனாமி பேரலைகள் தோன்றியபோது கடலில் மூழ்கின

XXXXX

8.சங்க கால நூல்கள், பிற்கால உரையாசிரியர்கள் , திருப்பாவை, அப்பர் தேவாரம், வால்மீகி ராமாயணம் அர்த்த சாஸ்திரம்

XXXXX

9.சங்கம் என்ற சொல்லே தமிழ் அல்ல ; தொல்காப்பிய இலக்கணப்படி தமிழ் மொழியில் ச என்னும் சொல்லே இருக்கக்கூடாது. நம்மிடமுள்ள சங்க கால நூல்களிலும் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல் இல்லை.

மேலும் இங்கே கூறிய 4440+3700+1850 என்பன எல்லாம் 37 என்னும் எண்ணால் வகுப்படக்கூடியது என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை காட்டியுள்ளார் ; ஆகையால் இவை இயங்கிய காலம் 120+100+50 ஆண்டுகள் தான் .

மொழியியல் அறிஞர்கள் உலகில் எந்த மொழியும் மாறாமல் இருந்தது இல்லை என்று காட்டியுள்ளனர். நாம் தலைச் சங்க புலவர், இடைச் சங்க புலவர் என்று காட்டிய பாடல்கள் நாம் அறிந்த தமிழில் இருப்பதால் இவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை .

நமக்குத் தெரிந்த எந்த மொழிக்கும் 10,000 ஆண்டு வரலாறு இல்லை

இவை எல்லாம் பிற்கால ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகள்

மூன்று தமிழ் சங்கங்களிலும் நிறைய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் காட்டப்பட்டுள்ளன

 அரசர்கள் புலவர்கள் எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்டுள்ளன. 10,000 +ஆண்டுகளில்  197 மன்னர்கள் மட்டுமே ஆண்டனர் என்பது உலகில் எந்த நாட்டு வரலாற்றிலும் இல்லை. ஒரு மன்னருக்கு 20 அல்லது 25 ஆண்டு என்பதே உலகில் காணப்படும் AVERAGEஆவரேஜ்/ சராசரி. தமிழர்கள் ஒரு மன்னருக்கு 50 ஆண்டுகள் கொடுப்பது  வியப்புக்குரிய கற்பனை!

XXXX

10.தலை, இடை, கடை என்று மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தது  உண்மையே ; பொய் இல்லை.

தென் மதுரையும், கபாடபுரமும் கடலில் மூழ்கியது  உண்மையே; நமக்கு குஜராத்தில் துவாரகா, தமிழ் நாட்டில் புகார் ஆகியன கடலில் மூழ்கியமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன . புலவர்கள் எண்ணிக்கையும் அரசர்கள் எண்ணிக்கையும் , சங்கங்கள் இருந்த கால எண்ணிக்கையும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள்.

–SUBHAM—

TAGS- QUIZ , தமிழ் சங்கம் பத்து, தலை, இடை, கடை ,மூன்று தமிழ் சங்கங்கள்

ஹிட்லரும் ஜோதிடமும்! (Post No.12,352)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,352

Date uploaded in London –  1 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 14

ஹிட்லரும் ஜோதிடமும்! 

.நாகராஜன்

பகுதி 18

ஹிட்லருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா?

உண்டு ஏராளமானோரும் இல்லை என்று பலரும் கருதுகின்றனர்.

உண்டு என்று கருதுவோர் அதற்கான சான்றாக ஸ்விட்சர்லாந்து ஜோதிடரான கார்ல் எர்ன்ஸ்ட் க்ராஃப்ட்- ஐச் (Karl Ernst Krafft) சுட்டிக் காட்டுகின்றனர். (க்ராஃப்ட் – தோற்றம் 10-5-1900 மறைவு 8-1-1945)

க்ராஃப்ட், ஜோதிடமும் ஒரு விஞ்ஞானம் தான் என்று கூறியதோடு தன் கருத்தை நிலைநிறுத்த வெகுவாகப் பாடுபட்டார். ‘எ ட்ரியடைஸ் ஆஃப் மாடர்ன் அஸ்ட்ராலஜி’ (A Treatise on Modern Astrology) என்ற புத்தகத்தை அவர் ஸ்விட்சர்லாந்தில் வெளியிட்டார்.

ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களுடைய பிறந்த தேதிகளில் உள்ள அதிசய ஒற்றுமைகளையும் அவர்களின் உருவத்தில் உள்ள ஒற்றுமைகளையும் சுட்டிக் காட்டிய அவர் ‘ஆஸ்ட்ரல் ஹெரிடிடி’ (Astral Heridity) என்ற புதிய சொற்றொடரையே உருவாக்கினார்.

தனது  சொந்த நாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அவர் நாஜிக் கொள்கையில் ஊன்றியவர். அவர் ஜெர்மனிக்கு வந்து அங்கேயே தங்கலானார்.

நாஸ்ட்ரடாமஸ் பற்றி நன்கு ஆராய்ந்து விளக்க முடியாத நாஸ்ட்ரடாமஸ் செய்யுள்களுக்கெல்லாம் அவர் சரியான விளக்கம் கொடுத்து அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.

 1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியில் அதிகாரத்திற்கு வந்த போது 1939இல் உலகப் போர் ஏற்படும் என்பதை க்ராஃப்ட் சரியாகக் கணித்துக் கூறி விட்டார்.

ப்ளூடோ கிரகத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அவரே தான் முதலில் கூறினார்.  கடக ராசிக்கு ப்ளூடோ நகரும் போது1914இல் முதல் உலகப் போர் உருவானது. அதே போல ஒரு நிலைமை 1939இல் ப்ளூடோ சிம்ம ராசிக்குப் பெயரும் போது ஏற்படும், உலகப் போர் உருவாகும் என்றார் அவர்.

தனக்கு எதிராக ஜோதிடம் சொன்ன அனைவரையும் சிறையில் தூக்கிப் போடுங்கள் என்ற ஹிட்லரின் ஆணைப்படி சுமார் 600 ஜோதிடர்கள் சிறையில் போடப்பட்டனர். அவர்களுள் க்ராஃப்டும் ஒருவர்.

ஹிட்லரின் பிரசார மந்திரியான கோயபல்ஸின் மனைவி மகதாவுக்கு நாஸ்ட்ரடாமஸ் கணிப்பின் மீது ஒரு அபாரமான ஈடுபாடு உண்டு.

“இன்னும் 290 வருடங்களில் பிரிட்டனை ஆளும் அரச வம்சம் ஏழு முறை மாறும். பின்னர் ஜெர்மனிக்கும் இன்னொரு ஜெர்மானிய இனத்திற்கும் போர் மூளும். போலந்தை பிரிட்டன் காப்பாற்றும்” என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

இதன் படியே நடந்தது. 1649ல் இதை நாஸ்ட்ரடாமஸ் கூறினார். 290 வருடங்கள் கழித்து 1939இல் போர் மூண்டது.

மகதா மூலம் க்ராஃப்ட் கோயபல்ஸுக்கு அறிமுகமாக அவர் நாஜித் தலைவர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த ஜோதிடராக ஆகி விட்டார்.

1939ஆம் ஆண்டு, ஹிட்லரின் உயிருக்கு நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து பத்தாம் தேதிக்குள் ஆபத்து ஏற்படும் என்று அவர்  டாக்டர் ஹென்ரிச் பெசல் என்ற தனது நண்பருக்கு நவம்பர் 2ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார்.

 அதே போல 8ஆம் தேதி மூனிச்சில் பீர் ஹாலில் ஒரு குண்டு வெடித்தது. அதில் கலந்து கொள்ள இருந்த ஹிட்லர் சரியாக 13 நிமிடம் தாமதமாக வந்ததால் பிழைத்தார். இது க்ராஃப்டின்  புகழை உயர்த்தியது.

க்ராப்ஃட் கைது செய்யப்பட்டாலும் கூட பின்னர் எதிரிகளின் ஜாதகங்களைக் கணித்து நடக்கப் போவதைச் சொல்லுமாறு பணிக்கப்பட்டார்.

1941, ஜுன் மாதத்திற்குள் இங்கிலாந்தும் ஜெர்மனியும் சமாதானத்திற்கு உடன்படாவிடில் போரின் போக்கு ஜெர்மனிக்கு எதிரானதாக ஆகும் என்பது அவரது கணிப்பு.

இதனால் ஹிட்லருக்குக் கோபம் ஏற்பட 1941 ஜூன் 12ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 1944இல் கைது செய்யப்பட்டார்.  புச்சன்வால்ட் சித்திரவதை முகாமிற்கு அவர் கொண்டு செல்லப்படும் போது 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

ஹிட்லரைப் பற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள், அவர் ஜாதகத்தை ‘நான்சென்ஸ்’ என்று ஒதுக்கியதாகச் சொல்கின்றனர்.

ஆனால் அதே சமயம் அவர் ஜோதிடம், யோகா உள்ளிட்ட கலைகள் பற்றி மிகத் தீவிரமாகப் படித்தவர் என்பது மட்டும் உண்மை.

***

ஆகஸ்ட் 2023 நற்சிந்தனை காலண்டர் (Post.12,351)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,351

Date uploaded in London – –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆகஸ்ட்  3- ஆடிப் பெருக்கு 9- ஆடி கார்த்திகை15 சுதந்திர தினம் 16 ஆடி அமாவாசை 25 வரலெட்சுமி நோன்பு;  29- ஓணம் 30 ஆவணி அவிட்டம்யஜுர் உபாகர்மா ; ‘ரக்ஷாபந்தன்’.31 காயத்ரி ஜபம்

அமாவாசை-16;  பெளர்ணமி-130 ஏகாதசி உண்ணா விரத நாட்கள் -1127;

சுபமுகூர்த்த நாட்கள்—2021

xxxx

விவேகானந்தர் உரைகளிலிருந்து தொகுத்த பொன்மொழிகள்

Xxxx

ஆகஸ்ட் 1 செவ்வாய்க் கிழமை

ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமாஎந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்த்தி இருக்கிறீர்களாஎங்காவது பல்வீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள். அவர்கள் நிலங்களில் நீங்கள் குடி ஏறி இருக்கிறீர்கள். உங்களுடைய அமெரிக்காஆஸ்திரேலியாநியுஜிலாந்துபசிபிக் தீவுகள்தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்னதாம் வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும்” –  சுவாமி விவேகானந்தர் ,பக்கம் 136, எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)

Xxxx

ஆகஸ்ட் 2 புதன் கிழமை

பாரத தேசம் முழுவதும் எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்துக்கு அடியிலுள்ள எல்லா மண்ணையும் வாரியெடுத்து மேற்கத்திய நாடுகளின் மீது வீசினாலும்கூடநீங்கள் இன்று எங்கள் மீது சேறு வீசுகிற அளவில் தினையளவுகூடப் பதிலுக்குப் பதில் செய்ததாக ஆகாது.” — பக்கம் 156, சுவாமி விவேகானந்தர் ,

எழுமின் விழிமின் (Published by Vivekananda Kendra; compiled by Eknath Ranade)

xxx

ஆகஸ்ட் 3 வியாழக்  கிழமை

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்

உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்…!

xxx

ஆகஸ்ட் 4 வெள்ளிக் கிழமை

உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான்

வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான

முதல் அறிகுறி.

xxx

ஆகஸ்ட் 5 சனிக் கிழமை

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும்

உனக்குள்ளேயே உள்ளன.

– xxxxx

ஆகஸ்ட் 6 ஞாயிற்றுக் கிழமை

பலமே வாழ்வு. பலவீனமே மரணம்..!

xxxx

ஆகஸ்ட் 7 திங்கட் கிழமை

இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான்

உண்மை ஞானம் உதிக்கும்.

அந்த உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

xxxx

ஆகஸ்ட் 8 செவ்வாய்க் கிழமை

கபடம் இல்லாத நாத்திகன்

வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

xxx

ஆகஸ்ட் 9 புதன் கிழமை

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்

ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

xxx

ஆகஸ்ட் 10 வியாழக்  கிழமை

உண்மைக்காக எதையும் துறக்கலாம்.

ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

xxx

ஆகஸ்ட் 11 வெள்ளிக் கிழமை

நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

xxxx

ஆகஸ்ட் 12 சனிக் கிழமை

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

xxxxx

ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக் கிழமை

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

xxxx

ஆகஸ்ட் 14 திங்கட் கிழமை

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது. 

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

xxxx

ஆகஸ்ட் 15 செவ்வாய்க் கிழமை

 செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

xxxxx

ஆகஸ்ட் 16 புதன் கிழமை

சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

xxxx

ஆகஸ்ட் 17 வியாழக்  கிழமை

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

xxxxx

ஆகஸ்ட் 18 வெள்ளிக் கிழமை

வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்

பூவை போல் மென்மையானது

தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானது.

xxxx

ஆகஸ்ட் 19 சனிக் கிழமை

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

xxxx

ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக் கிழமை

இதயம் சொல்வதை செய்; வெற்றியோ, தோல்வியோ, அதை

தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு

xxxx

ஆகஸ்ட் 21 திங்கட் கிழமை

உங்கள் திறமைகளின் மட்டத்துக்கு உங்கள் இலக்குகளைக் குறைக்காதீர்கள். அதற்கு பதிலாக, உங்கள் திறமைகளை உங்கள் இலக்குகளின் உயரத்திற்கு உயர்த்துங்கள்.

xxxxx

ஆகஸ்ட் 22 செவ்வாய்க் கிழமை

எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நிற்காதே

xxxx

ஆகஸ்ட் 23 புதன் கிழமை

மற் றவர்களுக்காக வாழ் பவனே உயிர் வாழ் பவன் ; ஏனையோர் செத்தாருள்  வைக்கப்படும்

xxxx

ஆகஸ்ட் 24 வியாழக்  கிழமை

ஒருவர் அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்தைப் பெறலாம், ஆனால் அவர் தனது உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் அடிமையாக இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் தூய மகிழ்ச்சியை அவரால் உணர முடியாது.

Xxxxx

ஆகஸ்ட் 25 வெள்ளிக் கிழமை

 மனதில் தைரியமும், இதயத்தில் அன்பும் உள்ளவர்கள் என்னுடன் வரட்டும். வேறு யாரும் எனக்குத் தேவையில்லை.

Xxxxx

ஆகஸ்ட் 26 சனிக் கிழமை

நீங்கள் தூய்மையானவராக இருந்தால், நீங்கள் வலிமையானவராக இருந்தால், தனி ஒருவரான நீங்கள் இந்த முழு உலகத்துக்குச் சமனானவர்.

xxxx

 ஆகஸ்ட் 27 ஞாயிற்றுக் கிழமை

இதயம் எனும் புத்தகம் திறக்கப்பட்டவருக்கு வேறு புத்தகங்கள் தேவையில்லை.

xxxxx

ஆகஸ்ட் 28 திங்கட் கிழமை

ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் நீங்களே பேசுங்கள், இல்லையெனில் இந்த உலகில் உள்ள ஒரு சிறந்த நபருடனான சந்திப்பை நீங்கள் தவறவிடக்கூடும்.

Xxxxx

ஆகஸ்ட் 29 செவ்வாய்க் கிழமை

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர். எல்லாச் சக்தியும் உங்களிடம் உள்ளது. உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

xxxx

ஆகஸ்ட் 31 வியாழக்  கிழமை

 எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ்.

Xxxx

Bonus Quotes

“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று சொல்.

நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றது ஆகிவிடும்.

xxxx

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று

எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

Xxxx

—-SUBHAM—–

ஆகஸ்ட் காலண்டர், விவேகானந்தர், பொன்மொழிகள், மேற்கோள்கள்

AUGUST 2023 GOOD THOUGHTS CALENDAR (Post No.12,350)

With Nehruji and Indira

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,350

Date uploaded in London – –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

With Mrs Indira Gandhi

MA ANANDAMAYI QUOTATIONS

This month’s calendar contains Ma Ananda Mayi’s Golden sayings.

Anandamayi Ma (Nirmala Sundari;) 30 April 1896 – 27 August 1982)

FESTIVAL DAYS –August 3- Aadipperukku  in Tamil Nadu ; 15 Indian Independence Day ; 16 Aadi Amavaasai ; 25 Varalkshmi Vrat  29- Onam ; 30 Yajur Upakarma and Raksha Bandhan ;  31 Gayatri Japa

New Moon Day-16;  Full Moon Says -1, 30 Ekadasi Fasting Days -11, 27;

Auspicious days —20, 21.

xxxx

Sri Anandamoyi Ma –Sayings

August 1 Tuesday

He alone knows to whom He will reveal Himself under which form. By what path and in what manner He attracts any particular man to Himself with great force is incomprehensible to the human intellect. The Path differs indeed for different pilgrims.

xxxx

August 2 Wednesday

People have various visions of gods and goddesses (in me) according to their own predilections. What I was before, I am now, and shall be hereafter. I am also whatever you or anybody may think I am ;why don’t you look at it this way: the yearnings (of seekers after Truth) have brought about this body. All of you have wanted it and so you have found it. That is all you need to know.

xxxx

August 3 Thursday

Your sorrow, your pain, your agony is indeed my sorrow. This body understands everything. You may want to leave this body. But this body won’t leave you for a single day – it does not and never will leave you. One, who has once been attracted to this body, even though he may make a thousand attempts, will not be able to efface or blot out the memory of this body. It will remain and persist in his memory for all time.

xxxxx

August  4 Friday

You should kindle fire by any means, either with clarified butter or sandalwood or even straw. Once alight, the fire burns on; all worries, darkness and gloom gradually disappear. The fire will burn to ash all obstacles.

xxxxx

August 5 Saturday

Always bear this in mind: Everything is in God’s hands, and you are His tool to be used by Him as He pleases. Try to grasp the significance of ‘all is His’. and you will immediately feel free from all burdens. What will be the result of your surrender to Him? None will seem alien, all will be your very own Self.

xxxxx

August 6 Sunday

To believe in Him under any particular form is not enough. Accept Him in His numberless forms, shapes and modes of being, in everything that exists. Aim at the whole and all your actions will be whole.

xxxxx

August 7 Monday

Just as fire burns away all dross and rubbish, so the three fold suffering purges man’s heart from all impurity and results in a growing single mindedness in his search after Truth. When he becomes deeply conscious of his weakness and tormented by the thoughts of his undesirable impulses and distressing characteristics, when afflictions like poverty, bereavement or humiliation make him feel his life is futile, then and then only does he develop real faith and religious fervor, and becomes anxious to surrender himself at the feet of the Supreme Being. Suffering should therefore be welcomed. Never does the soft moonlight appear more soothing than after the scorching heat of a summer day.

Xxxxx

August 8 Tuesday.

Enquire: ‘Who am I?’ and you will find the answer. Look at a tree: from one seed arises a huge tree; from it comes numerous seeds, each one of which in its turn grows into a tree. No two fruits are alike. Yet it is one life that throbs in every particle of the tree. So, it is the same Atman everywhere.

Xxxxx

August 9 Wednesday

Precious gems are profoundly buried in the earth and can only be extracted at the expense of great labour.

xxxx

August 10 Thursday

Divine happiness, even the tiniest particle of a grain of it, never leaves one again;  and when one attains to the essence of things and finds one’s Self–this is supreme happiness. When it is found, nothing else remains to be found; the sense of want will not awaken anymore, and the heart’s torment will be stilled forever. Do not be satisfied with fragmentary happiness, which is invariably interrupted by shocks and blows of fate; but become complete, and having attained to perfection, be YOURSELF.

xxxxx

August  11 Friday

As you love your own body, so regard everyone as equal to your own body. When the Supreme Experience supervenes, everyone’s service is revealed as one’s own service. Call it a bird, an insect, an animal or a man, call it by any name you please, one serves one’s own Self in every one of them.

xxxxx

August 12 Saturday

Try to treat with equal love all the people with whom you have relations. Thus the abyss between ‘myself’ and ‘yourself’ will be filled in, which is the goal of all religious worship.

xxxx

August 13 Sunday

All creation is that. There is beauty in the birds and in the animals. They too eat and drink like us, mate and multiply; but there is this difference: we can realize our true nature, the Atman. Having been born as human beings, we must not waste this opportunity. At least for a few seconds every day, we must enquire as to who we are. It is no use taking a return ticket over and over again. From birth to death, and death to birth is samsara. But really we have no birth and death. We must realize that.

xxxxx

August 14 Monday

God is within everyone, but man goes out in search of Him. This is what constitutes God’s Play and God’s Creation.

xxxx

August 15 Tuesday

Even though you may want to push God the Mother aside, She will never leave you. Are you not her offspring? A mother does what is good and beneficial for her child. She gives to her scion exactly what is needed, not more and not less. Her forgiveness knows no limits, this is why she is called MOTHER.

xxxxx

August 16 Wednesday

If with deep faith, devotion and love you can exclaim: ‘Mother, come to me, I cannot pass my days without you’, rest assured, the Universal Mother will spread out Her arms and clasp you to Her heart. Don’t look up to Her only as a mysterious refuge in your hour of distress. Keep in mind, She is always very, very near as the Force that guides your life. She Herself is the supreme refuge of every sentient being. With this conviction proceed. She will take the brunt of your burdens from your shoulders and make them light.

xxx

August 17 Thursday

Whenever you possibly can, sustain the flow of a sacred Name. To repeat His name is to be in His presence. If you associate with the Supreme Friend, He will reveal His true being to you.

xxxx

August  18 Friday

Joys and sorrows are time-born and cannot last. Therefore, do not be perturbed by these. The greater the difficulties and obstructions, the more intense will be your endeavor to cling to His feet and the more will your prayer increase from within. And when the time is ripe, you will gain mastery over this power.

xxxxx

August 19 Saturday

If God is the Lord of the world, He can do with it as he pleases. Suppose you have grown beautiful flowers in your garden, but decide to plant fruit trees in their place, won’t you have to remove the flowers? If you have a fine house, but wish to build a larger and better one on the same plot, you demolish the old one. The freedom that is yours in small things, God exercises in great ones. In both is He, in destruction as well as in construction. The history of nations, families and individuals is the great Lila (divine sport) that He stages with Himself.

xxxxx

August 20 Sunday

Whenever you have the opportunity, give to the poor, feed the hungry, nurse the sick – do service as a religious duty and you will come to know by direct perception that the person served, the one who serves and the act of service are separate only in appearance.

xxxx

August 21 Monday 

Tread the path of immortality, where no death exists and no disease.

XXX

August 22 Tuesday

Endeavour to concentrate on the breath; this will provide a check on the mind preventing it from wandering away to outer objects.

XXX

August 23 Wednesday

Let your mind be like a beautiful flower that may be offered to the Lord in worship.

XXXX

August 24 Thursday

The Guru actually emerges from within. When genuine search takes effect, his genuine manifestation is bound to occur; it cannot possibly be otherwise.

XXX

August 25 Friday

Whenever you have the chance, laugh as much as you can.

By this all the rigid knots in your body will be loosened. But to laugh superficially is not enough: your whole being must be united in laughter, both inwardly and outwardly.

XXXX

August 26 Saturday

The signification of the word guru is Jagadguru (World Teacher). A World Teacher is one who diverts men from the path leading to death and puts him on the path of Immortality. He who does this is the inner Guru.

XXXX 

August 27 Sunday

When engaged in japa you are attentively to mark the motions of your breathing – inhaling and exhaling; if your mind tries to stray to and fro, forcibly attune it to your breathing; this will slowly set in the process of calming your mind.

XXX

August 28 Monday

God is without form, without quality as well as with form and quality.

Watch and see with what endless variety of beautiful forms

He plays the play of his maya with Himself alone.

The lila of the all pervading One goes on and on in this way in infinite diversity.

He is without beginning and without end.

He is the whole and also the part.

The whole and part together make up real Perfection.

XXX

August 29 Tuesday

All sorrow is due to the fact that many are seen where there is only One.

Duality is pain. So long as man does not wake up to his identity with the One, the cycle of birth and death continues for him.

XXXX

August 30 Wednesday

‘If the breath and the mind become one-pointed and steady, then the mind expands to infinity.’

XXX

August 31 Thursday

INTERESTING STORY

A wealthy merchant went on a business trip. A thief in the disguise of a businessman joined him, intent on robbing him at the earliest suitable occasion. Every morning, before leaving the inn which they happened to have put up for the night, the merchant would count his money quite openly and then put it into his pocket. At night the merchant went to sleep seemingly without suspicion. While he was asleep the thief would frantically search through all the belongings of the merchant without being able to find the money. After several nights of frustrating searching, the thief finally in resignation confessed to the merchant his true intention and pleaded with him to tell him how he was able to hide his money so successfully. The merchant replied casually: ‘I knew from the very beginning what you were up to. So, every night I placed the money under YOUR pillow. I could safely sleep, knowing full well that that would be the one place where you would never look.’

God is within everyone, but man goes out in search of Him. This is what constitutes God’s Play and God’s Creation.

—SUBHAM—

TAGS- August 2023 calendar, Ma Anandamayi, quotations, sayings,

QUIZ பகவத் கீதை பத்து QUIZ (Post No.12,349)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,349

Date uploaded in London – –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.55

QUIZ பகவத் கீதை பத்து QUIZ

1.எந்த பகவத் கீதை வாசகத்தை இந்திய அரசு தபால் தலையில் வெளியிட்டது ?

xxxxx

2.உடலுக்கு அழிவு உண்டு; ஆனால் ஆத்துமாவுக்கு அழிவில்லை என்பதை கிருஷ்ணர் எங்கே சொல்கிறார் ?

xxxx

3.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரி எது?

xxx

4.நல்லோரைக் காப்பேன்; தீயோரை அழிப்பேன் என்று எந்த அத்தியாயத்தில் சொல்கிறார்?

xxxx

5.பகவத் கீதையில் எத்தனை அத்தியாயங்கள் உள்ளன? எத்தனை ஸ்லோகங்கள் இருக்கின்றன   ?

xxxx

6.உன்னையே நீ அறிவாய் KNOW THYSELF என்று கிரேக்கர்கள் சொன்னதாக கலைக் களஞ்சியங்கள் சொல்லும். ஆனால் அதற்கு முன்னரே கிருஷ்ணர் எங்கு சொன்னார் ?

Xxxx

7.கடவுளை நாடி வருவோர் 4 வகையாம். அவர்கள் யார்?

xxx

8.நரகத்துக்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக கிருஷ்ணர் கூறுகிறார் ?

xxx

9.”ஓடும் இருநிதியு மொன்றாகக் கண்டவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே” என்ற தாயுமானவர் “

கூற்று பகவத் கீதையில் எப்படி உள்ளது ?

xxxx

10.முருகன், அரச மரம் பற்றி கிருஷ்ணர் சொல்வது என்ன ?

XXXX

விடைகள்

1.நீ செய்யும் செயல்களை பற்றில்லாமல் செய்

கர்மன் ஏவ அதிகாரஸ்தே மா பலேஷூ கதாசன (2-47): கருமத்திலேயே உனக்கு அதிகாரம், ஒருபோதும் பலனில் இல்லை

xxx

2.இரண்டாம் அத்தியாயத்தில்;

ந ஜாயதே ம்ரியதே வா கதா சிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:

(2-20) ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. இல்லாமல் இருந்து மறுபடியும் உண்டாவதும் இல்லை. என்றும் உள்ளது, அழியாதது.

xxxx

3.க்லைப்யம் மாஸ்ம கம: ந ஏதத் த்வயீ உபபத்யதே( 2-3) :

பேடித்தனத்தை அடையாதே.இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது.

இதுதான் கீதையின்  முக்கிய மெஸேஜ்MESSAGE என்று அவர் பேசியுள்ளார்.

xxxx

4.நாலாவது அத்தியாயத்தில்

பரித்ராணாய சாதூணாம், விநாசாய துஷ்க்ருதாம் (4-8) :

சாதுக்களைக் காத்தற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும் யுகம் தோறும் அவதரிப்பேன்.- கிருஷ்ணர்

xxx

5.பதினெட்டு அத்தியாயங்கள்; 700 ஸ்லோகங்கள்

XXXXX

6.ஆத்மவான் பவ: (2-45) : உன்னையே நீ அறிவாய்

xxx

7.நாலு பேர் என்னைத் தேடி வருகிறார்கள்  (7-16) -சதுர்விதா ஜனாஹா பஜந்தே மாம் – 1.துயரம் உள்ளவன், 2.ஞானத்தை நாடுபவன், 3.பணம் வேண்டியவன்,  4.ஞானி

xxx

8.நரகத்தின் மூன்று வாசல்கள் -(16-21) – காமம், கோபம், லோபம்/ (பேராசை)

XXX

9.சம லோஷ்ட்டாச்ம காஞ்சனஹ

ஓடு , பொன்  ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் குணக் குன்று/ யோகி  ஆவான் 14-24; 6-8

XXXXXX

10.சேனாதிபதிகளில் நான் முருகன் – 10-24

மரங்களுள் நான் அரச மரம் என்று அழைக்கப்படும் அஸ்வத்த மரம் ஆவேன் 10-28

—-SUBHAM—-

TAGS- பகவத் கீதை, க்விஸ், கேள்வி பதில்

QUIZ  ரிஷி முனிவர்கள் QUIZ (Post No12,348)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,348

Date uploaded in London – –  31 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Quiz Series No.54

QUIZ  ரிஷி முனிவர்கள் QUIZ

1.வேதங்களைக் கற்பதற்கு மூன்று ஆயுட்காலம் போதவில்லை; இன்னும் 100 ஆண்டுகள் வேண்டும் என்று  சொன்ன ரிஷி யார் ?

xxx

2.அந்தக் காலத்தில் ஒவ்வொருவரும் ஒரு அடையாள (Totem Symbol) சின்னத்தை வைத்துக்கொண்டனர். அதன்  பெயரால் அந்த ரிஷிகளை அழைத்தனர் ?கீழ்கண்ட சின்னங்களுக்கு உரிய முனிவர்கள் ரிஷிகள் யார் ?

கருடன் –

வலியன்-

காட்டுக்காடை –

செம்போத்து –

விச்சுளி –

காக்கை –

நரையான் –

மயில்-

கிளி –

ஆந்தை –

ஆமை-

மான் –

Xxxxx

3.வேடனாக வாழ்ந்து, நாரதரைச் சந்தித்த பின்னர் , முனிவர் யார் ?

XXXXX

4.எந்த ரிஷியை ஏமாற்றி அழகிகள் , தசரதனிடம் அழைத்து வந்தனர் ?

Xxxx

5.ஒரு ரிஷியின் கழுத்தில் விளையாட்டாக பாம்பினைப் போட்டு , சாபத்தால் அழிந்தவர் பரீட்சித்.. சாபம் இட்ட ரிஷி யார்?

xxxxx

6.கடலினைக் கடந்து தென் கிழக்காசியாவுக்குப் போனார்; காவிரி நதியை அரபிக்கடலில் விழுந்து வீணாகாமல் தமிழ் நாட்டுக்குத் திரு   ப்பி விட்டார். விந்திய மலை வழியாக சாலை போட்டார்;  யார் அந்த ரிஷி ?

XXXX

7.வான நூலில் ஆஸ்திரேலியா முதலிய நாடுகளின் கொடியில் இருக்கும் SOUTHERN CROSS சதர்ன் க்ராஸ் என்ற திரிசங்கு நட்சத்திர மண்டலத்தை உருவாக்கிய முனிவர்/ ரிஷி யார் ?

XXXXX

8.கிருஷ்ணரின் குரு யார் ?

XXXX

9.அனுசுயா என்ற ரிஷி பத்தினியின் கணவரின் பெயர் என்ன ?

XXXX

10.சகுந்தலை என்ற பெண் குழந்தை பறவைகள் இடையே கிடந்தாள். அவளை எடுத்து வளர்த்த முனிவர் யார் ?

XXXXXXXX

ANSWERS

1.பரத்வாஜ மகரிஷி

XXXX

2.கருடன் – வசிஷ்டர்

வலியன்- பரத்துவாஜர் (காகம் என்றும் சொல்லுவர்)

காட்டுக்காடை – கெளதமர்

செம்போத்து – துர்வாசர்

விச்சுளி – கசியபர்

காக்கை – புலஸ்தியர்

நரையான் – நாரதர்

மயில்- அகஸ்தியர்

கிளி – விசுவாமித்திரர்

ஆந்தை – கெளசிகர் / விசுவாமித்திரர்

ஆமை- காஸ்யபர்

மான் – ரிஷ்ய ஸ்ருங்கர்

Xxxx

3.ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர்

XXXX

4.மான்போல தலையில் கொம்பு போன்ற புடைப்பு,  இருந்த கலைக்கோட்டு முனிவரை ;

கலை என்றால் மான் ; கோடு என்றால் புடைப்பு, சிகரம், உச்சி..

சம்ஸ்க்ருதத்தில் ரிஷ்ய ஸ்ருங்கர் என்பதைக் கம்பராமாயணத்தில் கம்பன், கலைக்கோட்டு முனிவர என்று மொழிபெயர்த் தான்.

XXXXX

5.சமீகர் என்ற ரிஷி

XXXX

6.அகஸ்திய மகரிஷி

XXXXX

7.விசுவாமித்திர முனிவர்

XXXX

8.சாந்தீபனி முனிவர்

XXXXX

9.அனுசுயா, இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண். இவள் அத்ரி முனிவரின் மனைவி ஆவாள்.

XXXX

10.கண்வர்.

—-SUBHAM—

Tags- ரிஷி, முனிவர்கள் க்விஸ், கேள்வி பதில், கண்வர் , திரிசங்கு, நட்சத்திரம்