You solved A for Agra puzzle yesterday ; To day I have given eight towns beginning with the letter B
8
1
2
7
B
3
4
6
5
1.Baramullaa – Gateway of Jammu Kashmir; Kashmiris call this town Warmul Summer capital of the state; Sanskrit name Varahamula Kshetra.
2.Bhilai- Famous for the Steel Plant, one of the largest in India, this industrial city is in Chattisgarh. The Steel Plant is renowned as the sole manufacturer of rails in India that are used by the Indian Railways.
3.Bodh Gaya- Bodh Gaya is a village in Bihar. Considered one of the most important Buddhist pilgrimage sites, it’s dominated by the ancient brick Mahabodhi Temple Complex, built to mark the site where the Buddha attained enlightenment beneath a sacred Bodhi Tree; Hindus go there for Pitru Karya.
4.Bhopal- Union Carbide Gas Leak killed 4000 people in 1984 in this city in Madhya Pradesh
5.Bengaluru – In this city HAL is making planes; sending computer personnel around the world
6.Badrinath- One of the four Char Dhams; Vishnu temple is visited by all the Vaishnavites and other Hindus
7.Bikaneer- Pakistani border city in Rajasthan; famous for its Junagarh Fort.
8.Bishnupur- This is Vishnu’s town. Same name is for two towns in Manipur and West Bengal
13.மூன்று + இரண்டு சம்ஸ்க்ருத விக்ரம /வர்மன் மன்னர்கள்
தமிழ் நாட்டில் பல்லவ மன்னர்களின் பெயர்கள் வர்மன் என்று முடிவதை நாம் அறிவோம். ஆனால் மஹேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் ஆகிய பெயர்களுக்கும் முன்னதாக போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மன் யாகம் செயது நட்ட ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டைக் கண்டுபிடித்தவுடன் உலகம் முழுதும் வியப்பு ஏற்பட்டது. இப்பொழுது இந்தோனேஷியா என்னும் உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ காடுகள் கன்னி வனம் — அதாவது மனிதர்கள் கால் சுவடே படாத VIRGIN FOEST வர்ஜின் பாரஸ்ட் என்று கருதினர். ஆனால் அந்தக் காட்டுக்குள்ளே யாகம் செய்து நட்ட யூப நெடுந்தூண்களின் மூலவர்மனின் ஸம்ஸ்ருதக் கல்வெட்டுகள் இருந்தன .இவை நாலாம் , ஐந்தாம் நூற்றாண்டுக் (CE) கல்வெட்டுகள் .
இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் யூபம் என்ற வேதகால ஸம்ஸ்க்ருதச் சொல் புறநானூறு முதலிய 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் நூல்களில் காணக்கிடைப்பதால் அந்த வர்மன் மன்னர்கள் தமிழர்களாக இருக்கக்கூடும் . தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படும் லிபி/ எழுத்து பல்லவ கிரந்த எழுத்துக்கள் மூலம் பரவியது அறிஞர்கள் அறிந்ததே!
இதே போல பர்மாவிலும் ஒரு அதிசயம்!
ப்ரோம் நகரில் பியூ எழுத்தில் உள்ள மூன்று அஸ்தி கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலுள்ள ஆண்டுகள் எந்த சகாப்தம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் எழுத்து அமைதி முதலியவற்றை ஆராய்ந்து நிபுணர்கள் கால நிர்ணயம் செய்தனர் ; அந்தக் கணக்குப்படி பெயர்களும், மன்னர்களின் வயதும் பின்வருமாறு :
678 சூர்ய விக்ரம மரணம் , வயது 64
695 ஹரி விக்ரம மரணம் , வயது 41
718 சிஹா விக்ரம மறைவு , வயது 44
இவை தூய ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்; மேலும் இவர்கள் ஆண்ட விக்ரம வம்சம் பற்றியும் தகவலே இல்லை .
இவை தவிர வேறு சில இடங்களில் பிரபு வர்மன், ஜெய சந்திர வர்மன் ஆகிய பெயர்களும் கிடைத்தன. ஆகவே விக்ரம வம்சம் பல்லவ வம்சம் ஆகியனவும் அங்கு இருந்திருக்க வேண்டும். அருகிலுள்ள கம்போடியாவில் இதுபோன்ற பெயர்கள் பின்னால்தான் வந்தன.
புத்தர் சிலை ஒன்றின் பீடத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் ஹரி விக்ரமனின் மூத்த சகோதரன் ஜெய்ச சந்திர வர்மன் என்றும் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுடைய ஆன்மீக ‘குரு’க்கள் இரு வேறு நகரங்களை ஒரே மாதிரியில் கட்டி அவர்களை தனியாக வாழச் செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
14.அரிமர்தனபுரம்
ஹமாவசா என்பது ஸ்ரீ க்ஷேத்ரத்தின் வேறு பெயர். இதை பர்மிய உச்சரிப்பில் சிசித் என்றும் சுருக்கிவிடுவர். நாமும் ஐராவத நல்லூர் என்பதை அயிலானூர் என்றுதானே சொல்கிறோம் ; ஆரல்வாய் மொழி என்பதை ஆராம்பொலி என்றுதானே சொல்கிறோம்
நகரங்களின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் காணப்படுகின்றன பகான் என்று அழைக்கப்பட்ட நகரின் பெயர் கல்வெட்டில் அரி மர்தன புரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. எதிரிகளை துவம்சம் செய்யும் ஊர் என்பது இதன் பொருள்.
இன்னும் ஒரு நகரின் பெயர் பிஷ்ணுமாயா; ஸம்ஸ்க்ருதப் பெயர் விஷ்ணு மயம் என்பதை இப்படித் திரித்து விடுகின்றனர் இந்த நகரத்தின் மஹாயான புத்த மதப் பிரிவு எழுதிய வரலாற்றில் இதை சண்டி தேவி, பரமேஸ்வரன், கருடன் உதவியுடன் விஷ்ணு , உருவாக்கியதாக எழுதப்பட்டுள்ளது
15.ஐராவதி
இந்தியாவில் இப்போதும் ஷராவதி, வேகவதி, அமராவதி,ஹேமாவதி நதிகளைக் காண்கிறோம். இதே போல பர்மாவின் மிகப் பெரிய, முக்கியமான நதிக்கு ஐராவதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சூட்டியுள்ளனர். இமய மலையிலும் ஒரு ஐராவதி நதி உண்டு; ஐராவதி என்பது காஸ்யபருக்கும், க்ரோதவசா என்ற பெண்ணுக்கும் பிறந்த 10 புதல்விகளில் ஒரு பெண்ணின் பெயர் ஆகும் மஹாபாரதம் முதலிய பல நூல்களில் இந்தச் சொல் பல பெண்களின் பெயர்களாக வருகிறது .
உலகிலேயே நகரங்களுக்கும் நதிகளுக்கும் பெண்களின் ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சூட்டியது இந்துக்கள் மட்டுமே.
பிரபல புத்த மத கோவிலின் பெயர் ஆனந்தா கோவில். நம் ஊரில் இன்றும் யோகானந்தா , பரமானந்தா , பிரும்மானந்தா போன்ற பெயர்களில் சன்யாசிகளைக் காண்கிறோம். ஆனந்த என்பது பேரின்பத்தைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்
16.மூன்று புதிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள்
வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் படியெடுத்த கவெட்டுகளில் சுமார் 330 கல்வெட்டுகளில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கினறன. அதற்குப்பின்னர் 3 புதிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் கிடைத்தன. இவை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய அரக்கான் பிரதேசத்தில் ஆட்சி செலுத்தியோர் பற்றியவை.
17. தர்ம சாஸ்திரம்
தர்ம என்பதை பாலி மொழி கொச்சைப்படுத்தி தம்மம் என்றும், தர்ம சாஸ்திரம் என்பதை தம்மதத் என்றும் சொல்லும். முன்னரே த = ச மாற்றம் ஆங்கிலம் தமிழ் மொழியில் இருப்பதைக் காட்டியுள்ளேன்
மனு தர்ம சாஸ்திரத்தை ஒட்டியே பர்மிய சட்டப்புஸ்தகங்களும் இயற்றப்பட்டன. மனு ந்யாய / நீதி என்பதை மனு க்யாய என்பர்
1600ம் ஆண்டு வாக்கில் வேத பண்டிதர்கள், குறிப்பாக பர்மிய அரசவையில் அதர்வண வேத பண்டிதர்க்கள் இருந்தமைக்கு சான்றுகள் உள
18.த்வாரா வதி , லவ புரி
இப்போது இந்த ஊர்கள் பர்மாவின் பூகோள எல்லைக்குள் இல்லாவிடினும் மோன் அரசாட்சியின் கீழ் இருந்த இடங்களும் த்வாராவதி , லவ புரி போன்ற தூய ஸம்ஸகுதத்தில் இருக்கின்றன ; பழங்கால பர்மா என்னும்போது இவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .
பம்பாய் டில்லியில் கேட் வே GATE WAY இருப்பது போல த்வாரா (வாசல்) என்ற பெயரில் நகரம் இருந்தது . ஆங்கிலச் சொல்லான DOOR= DWAAR டோர் / கதவு என்பதே சம்ஸ்க்ருத த்வார என்னும் சொல்லிலிருந்து வந்ததே .
லவ என்ற ராமனின் மகன் பெயரிலிருந்து லவ புரி , லாவோஸ் நாடு ஆகியன உண்டாயிற்று ஹமாவா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஐந்தாம் நூற்றாடுக்கு முன்னரே இந்து மதம் பின்பற்றப்பட்டதைக் கூறுகிறது. கல்வெட்டுச் சான்றுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் புத்த மதம் இதற்குப் பின்னர்தான் பர்மாவுக்கு வந்தது 1422ம் ஆண்டு தேதியிடப்பட்ட பகான் கல்வெட்டில் 255 புஸ்தகங்கள் புத்த மத சங்கத்துக்கு நன்கொடை கொடுத்த செய்தி கிடைக்கிறது ; அதில் பல சம்ஸ்க்ருத நூல்கள் பெயர்களும் உள்ளன.
–SUBHAM—-
Tags- பர்மா, சம்ஸ்க்ருதம், பகுதி 2, ஐராவதி, அரிமர்தனபுரம்
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19
85.சென்ன கேசவ பெருமாள் கோவில், ஆனகரே Shri Chennakeshava Temple, Anekere
இந்த வட்டாரத்தில் மட்டுமே 500-க்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன .சென்னராய பட்டணத்திலிருந்து 5 கி.மீ.தொலைவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலும் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய ஹொய்சளர் கோவில்தான் அழகான தூண்கள் இருக்கின்றன. கல்வெட்டும் இருக்கிறது கிராம தேவதை ஆனக்கரம்மா , பஞ்சசலிங்கேஸ்வரர் கோவில்களும் இருக்கின்றன. ஒரே குறை, கோவில்களைச் சுற்றி வீடுகள் வந்துவிட்டதால் அதற்கிடையே இந்தக் கோவில் மறைந்து கிடக்கிறது கோவிலில் அண்ணாந்து கபார்த்துக்கொண்டே செல்லவேண்டும் .. ஏனெனில் கூரையில் உள்ள ஒவ்வொரு வட்டவடிவ டிசைனும் வெவ்வேறு மாதிரி இருக்கும். கலைடாஸ்க்கோப்பில் பலவடிவங்களைக் காண்பது போல பல வடிவங்கள் !
முக்கிய கன்னட மொழிக் கல்வெட்டு The Halmidi inscription is the oldest known Kannada-language inscription i
பேலூர் வட்டாரத்துக்கு வந்தவர்கள் ஹல்மிதியில் உள்ள கன்னட சாசனத்தைப் பார்க்காமல் போக மாட்டார்கள். ஏனெனில் கன்னட மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் இதுதான் மிகப்பழைய கல்வெட்டு..450 CE – 500 CE. . இது 1500 ஆண்டுப் பழமை உடைத்து. இதன் ஒரிஜினல் மைசூரில் மியூசியத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே இருப்பது வெறும் அச்சுதான் .கடம்ப லிபியில் கன்னட மொழியில் கல்வெட்டு அமைந்துள்ளது.
சமண சமய கோவில்கள் நிறைந்த இடம் இது.
86.கொரவங்கலா பூச்சேஸ்வரர் கோவில் Bucesvara Temple, Koravangala
ஹாசன் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்த ஹொய்சாளர் கோவில் இது.
வல்லாள மன்னர் ஆண்ட காலத்தில் பூச்சி என்பவர் கட்டிய கோவில். மன்னரின் பட்டாபிஷேகத்தை ஒட்டி கட்டப்பட்ட கோவில் என்று கல்வெட்டு சொல்கிறது. 800 ஆண்டு வரலாறு கொண்டது இக்கோவில். சிவன் சந்நிதி , பெருமாள், சூரியன் சந்நிதிகளைக் கண்டு தரிசிக்கலாம்.கோவிந்த்தேஸ்வர, நாகேஸ்வர கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. ராமாயண, மஹாபாரத, பாகவத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.
ஹாசன் வட்டாரத்தில் கோவில் இல்லாத ஊரே இல்லை எண்ணுமளவுக்கு ஏராளமான கோவில்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு சில புகழ்பெற்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டதால் ஒரே மாதிரி தோன்றும். ஆயினும் அவை சில இடங்களில் நன்கு பாதுகாக்கப்பட்டதால் அதிக பயணிகளை ஈர்க்கின்றன
87.ராமநாதபுர சுப்ரமண்ய சுவாமி கோவில் Ramanathapura Sri Subramanya , Rameshwara, Pattabhirama and Agasthyeshwara temples
ஹாசன் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்தைக் கோவில் நகரம் என்றும் தட்சிணா காசி என்றும் அழைப்பதுண்டு; காவிரி நதிக்கரையில் அமைந்த பல கோவில்களும் தரிசிக்க வேண்டியவைதான்.
மார்கழி மாதத்தில் நடக்கும் சுப்ரமண்ய சுவாமி கோவில் ரத உற்சவத்துக்கு பல மாநில மக்கள் வருகின்றனர்.அக்ஸ்த்யேச்வர சுவாமி கோவிலில் பெரிய லிங்கம் இருக்கிறது கணபதி, பரசுராமர், லட்சுமி, சாமுண்டீஸ்வரி திரு உருவங்களும் இருக்கின்றன
சோழர் கால , ஹொய் சாளர் கலை அம்சங்கள் நிறைந்த பல கோவில்கள் இருக்கும் இடம். ராமேஸ்வர, பட்டாபிராம கோவில்கள் இருக்கின்றன.
88.சாந்திகிராம சென்ன கேசவர் கோவில் Shantigrama
ஹாசன் நாரிலிருந்து 13 கி.மீ. தொலைவு; 4 கோவில்கள் உள்ள ஊர். பெரிய கோவில் ஸெளம்ய கேசவர் கோவில்.
கர்நாடக மன்னர்களில் விஷ்ணுவர்தனரும் அவர் மனைவி சாந்தாலா தேவியும் புகழ் பெற்றவர்கள். மஹாராணி சாந்தலா ஆடலிலும் பாடலிலு ம் வல்லவள் . அவள் இந்தக் கோவிலில் திருப்பணிகளை செய்திருக்கிறாள். பெரிய கலை வேலைப்பாடுகள் எதுவும் இல்லை.
ஒன்பது நரசிம்மர் சிலைகள்!
யோக நரசிம்மர் Shantigrama Sri Varada Yoga Bhoga Narasimha Swamy.
இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் அதிகம் வருவது ஸ்ரீ வரத யோக போக நரசிம்ம சுவாமி கோவிலுக்குத்தான் 12ம் ஆம் நூற்றாண்டில் அசல பிரகாச முனி கட்டியது தியான நிலையில் உள்ள நரசிம்மர்.
சோழர் கால கலையின் தாக்கத்தைக் காணலாம் இங்கு கூரையில் செதுக்கப்பட்ட நவ நரசிம்மர் வேறு எங்கும் காணப்படாத அற்புத சிற்பங்கள்.உக்ர , க்ரோத,வீர, விளம்ப, கோப, யோக, அகோர, சுதர்சன, லெட்சுமி நரசிம்மர் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன Ugra, Krodha, Veera, Vilamba, Kopa, Yoga, Aghora, Sudharshana and Lakshmi Narasimha).
மஹாராணி சாந்தலாதேவியின் தந்தை 1123ம் ஆண்டு கட்டிய , அருகிலுள்ள , தர்மேஸ்வர கோவில் , பல திருப்பணிகளால் உருமாறிக்கிடக்கிறது
மன்னர் விஷ்ணுவர்தனரும் அவருக்கு முந்திய அரசர்களும் சமணர்கள் ஆகையால் சாந்திநாத பஸதியையும் கட்டியுள்ளார்
பெங்களூரு- ஹாசன் தேசீய நெடுஞ்சாலை 75ல் இடம்பெறும் இக்கோவில் வளாகம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
89.கூடலி கோவில்கள் Koodali Rushyashrama, Brahmeshwara, Narasimha and Rameshwara temples.
சிவமொக்காவிலிருந்து 16 கி.மீ தொலைவு; தென்பகுதி வாரணாசி என்று இதை அழைப்பர். துங்க நதியும் பத்ரா நதியும் கூடும் இடம்.
ருஷ்யாஸ்ரம, பிரம்மேஸ்வர, நரசிம்ம, ராமேஸ்வர கோவில்கள் இருக்கும் இடம்.
சங்கராசார்யார் ஸ்தாபித்த ஒரு மடமும் இருக்கிறது ; கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்றுச் சிறப்பும் உண்டு.
சங்கராசார்யார் , சாரதாம்பா ஆகியோரை தரிசிக்கலாம். மடத்துக்கு வெளியே பிரம்மேஸ்வர, நரசிம்ம, ராமேஸ்வர கோவில்கள் அமைந்துள்ளன Brahmeshwara, Narasimha and Rameshwara temples. இஸ்லாமியப் படையெடுப்புகளில் நாசமாக்கப்பட்ட ஊர் இது.
இங்குள்ள கோவில்களில் பழமையானது எட்டாம் நூற்றாண்டு சங்கமேஸ்வரர் கோவில் ஆகும் .
picture of shantigrama temple
To be continued…………………………………
Tags- கர்நாடகம், பகுதி 19, 108 கோவில்கள், நவ நரசிம்மர், 9 நரசிம்மர் சிலைகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நாரத பக்தி சூத்ரம்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 8
ச.நாகராஜன்
இறைவனை அடையும் வழிகளான ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகியவை பற்றி ஹிந்து சாஸ்திரங்கள் மிக நுட்பமாக விளக்குகின்றன.
பக்தி மார்க்கத்தைப் பற்றி விளக்குவதில் ஶ்ரீமத் பாகவதம் மற்றும் புராணங்கள் பல்வேறு விஷயங்களை கதைகள், வரலாறுகள், சம்பவங்கள் மூலமாக விளக்குகின்றன.
பக்தி என்ற பெரும் கடலை சூத்திர வடிவில் தருவது நாரத பக்தி சூத்ரம்.
பக்திமான்களில் மிகச் சிறந்தவரான நாரத முனிவர் இதை விளக்குவது மிகவும் பொருத்தமானது; அதை அடையும் நமது பாக்கியம் சிறப்பானது.
மிக அற்புதமான நாரத பக்தி சூத்ரத்தை ஒவ்வொருவரும் படித்துத் தேர்ந்து அதன் படி நடத்தல் இன்றியமையாதது – இந்தக் கலி யுகத்தில்!
இதில் 84 சூத்ரங்கள் உள்ளன. முதல் 24 சூத்ரங்கள் பக்தியின் இயற்கைத் தன்மை பற்றி விளக்குகின்றன.
அடுத்த ஒன்பது சூத்திரங்கள் (25 முதல் 33 முடிய) பக்தி மார்க்கமானது ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் மற்றும் யோக மார்க்கத்தை விட எப்படி உயர்ந்தது என்பதை விளக்குகின்றன.
அடுத்த பதினேழு சூத்திரங்கள் (34 முதல் 50 முடிய) பக்தி மார்க்கத்தை எப்படி அப்யசிப்பது என்பதை அழகுற விரிவாக விளக்குகின்றன.
அடுத்த பதினாறு சூத்ரங்கள் (51 முதல் 66 முடிய) உண்மை பக்தனை அடையாளம் காண்பிக்கும் லக்ஷணங்களை விளக்குகின்றன.
கடைசி பதினெட்டு சூத்ரங்கள் (67 முதல் 84 முடிய) பக்தியில் திளைத்து பக்தி மார்க்கத்தை வாழ்ந்து காண்பிக்கும் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்த மகான்களைப் பற்றிக் கூறுகின்றன.
மொத்தத்தில் பக்தி பற்றிய ஒரு கலைக் களஞ்சிய நூலாக இது திகழ்கிறது.
அதாதோ பக்திம் வியாக்யாஸ்யாம் என்பது முதல் சூத்ரம்.
பக்தியைப் பற்றி இப்போது விவரிப்போம் என்பது இதன் பொருள்.
சாதஸ்மின் பரமப்ரேமரூபா என்கிறது அடுத்த சூத்ரம்.
இறைவனிடம் கொள்ளும் ‘பரம ப்ரேமை’ என்பது கணவன் – மனைவி அல்லது இதர குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் கொள்ளும் ப்ரேமையை விட மிக மிக உயர்ந்தது என்பது இதன் பொருள்.
அம்ருதஸ்வரூபாச என்பது அடுத்த சூத்ரம்.
இந்த பக்தியை அடைவதனால் என்ன பயன் ஏற்படுகிறது?
இந்த ரகசியத்தை மிக மிக அருமையாகச் சொல்கிறது அடுத்த சூத்ரம்.
அதை அடைந்தவன் சித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி
பக்தியில் சிறந்து விளங்குபவன் சித்தனாகிறான்.
அமரத்தன்மையை அடைகிறான்.
திருப்தியை அடைகிறான்.
இப்படி படிப்படியாக பக்தி சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முத்தாய்ப்பாக சூக்ஷ்ம விவரங்களை சூத்ரமாக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் இந்த நூல் தருகிறது.
பக்தியின் சிகரமாக அமைந்த ப்ருந்தாவன கோபியர்கள் 21ஆம் சூத்ரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறார்கள்.
பக்திக்கு நிரூபணம் பக்தியே தான் என்று நாரதர் அறுதியிட்டு உறுதி கூறுகிறார். (சூத்ரம் 30 மற்றும் 59)
ஸத்சங்க மகான்களின் சேர்க்கை கிடைப்பது துர்லபம் என்றும் அதை அடைய வேண்டியதன் அவசியத்தையும் 39ஆம் சூத்ரம் கூறுகிறது.
பக்தனின் லக்ஷணங்களும் செய்கைகளும் விரிவாக கூறப்படுகின்றன சூத்ரம் 67,68,69,70 முதலிய சூத்ரங்களில்.
பக்தி என்பது ஒன்றே தான் என்றாலும் அது 11 விதங்களில் பரிமளிக்கிறது. (சூத்ரம் 82)
இந்த நூலுக்கு பல விரிவுரைகள் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளன.
1952இல் ஸ்வாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள விரிவுரையை ‘The Yoga Vedanta Forest University m Divine Life Society, Rishikesh வெளியிட்டுள்ளது.
Narada Bhakti Sutras – A study என்ற நூலை ஸ்வாமி ஹர்ஷானந்தா கன்னடத்தில் எழுதியுள்ளார். இவர் ஶ்ரீ ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த சந்யாசி ஆவார். இந்த நூலில் 21 அத்தியாயங்கள் உள்ளன. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிக அருமையான நூல் இது.
பக்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆதாரமான அடிப்படை நூல் இது என்பதால் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் நாரத பக்தி சூத்ரம்!
Here are some towns in India; all beginning with letter A; find them .
1.Kerala Town; on the banks of Periyaru; annual Shivaratri festival in the palace is famous.
2. This town is famous for its alluring beauty, panoramic view of the Himalayas, rich cultural heritage, unique handicrafts, and delicious cuisines.
3.This is the island where Veer Savarkar was imprisoned
4.Famous Rama Temple is almost ready in this town
5. This is an important pilgrim center and a small industrial township located at a distance of 26kms from Thane and about 60 kms to the east of Mumbai. Literally means ‘Lord of the sky’, the place is famous for 11th century Ambreshwar Shiva Temple.
6. Once the power centre of mighty rulers, this town is known for spectacular palaces like the Ujjayanta Palace, stunning lakes and several beautiful temples. The city, which is the second-largest in Northeast India after Guwahati, is surrounded by pristine forests, beautiful valleys and roaring waterfalls.
7. it is the site of zoological-horticultural gardens and of Belvedere House, the onetime residence of the former British lieutenant governor of Bengal and now the location of the National Library. The town has a college affiliated with the University of Calcutta in Kolkata
8.It is one of the oldest cities in Rajasthan. Paradoxically, the city is also the most recent of the Rajput kingdoms. Its traditions can be traced back to the realms of Viratnagar that flourished here around 1500 BC. Also known as Matasya Desh, this is where the Pandavas, the mighty heroes of the Mahabharata, spent the last years of their 13-year exile.
1.மாதங்களில் நான் மார்கழி என்று யார் சொன்னார் ?எங்கே சொன்னார் ?
xxxx
2.ஆடி மாதத்துக்கும் சாகுபடிக்கும் என்ன தொடர்பு?
xxxx
3.ஐப்பசியையும் கார்த்திகையையும் சேர்த்து தமிழர்கள் சொல்லுவது என்ன?
xxxxxxx
4.தமிழ் மாதங்கள் என்று நாம் சொல்லும் மாதங்கள் அனைத்தும் என்ன மொழியில் உள்ளன ?
xxxxx.
5தமிழர்கள் என்று பெருமை பேசுவோருக்கு 12 மாதங்களும் தெரிவதில்லை என்று ஒரு சர்வே காட்டுகிறது. உங்களுக்கு 12 மாதங்களின் பெயர்களும் தெரியுமா? சொல்லுங்கள்
xxxxx
6.ஏதோ ஒரு மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்புகின்றனர். அது என்ன மாதம்? ஏன் அப்படி நம்புகிறார்கள் ?
xxxxx
7.தமிழர்களும் பெரும்பாலான இந்தியர்களும் சந்திரனும் ஒரு நட்சத்திரமும்கூடி வானத்தில் காட்சி தரும் அடிப்படை யில் பெயர் சூட்டினர் ;ஆனால் மலையாளிகளும் வேறு சிலரும் வேறு ஒரு முறையில் மாதத்துக்குப் பெயர் சூட்டுவர் . அது என்ன முறை?
xxxx
8.ஆங்கிலக் காலண்டரில் எந்தக் காலத்தில் (எப்போது) ஒரு தமிழ் மாதம் துவங்கும். ஆங்கில மாதங்களின் மடத்தியில் தமிழ் மாதம் துவங்குவதைக் காணலாம்?
xxxx
9.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் வெங்கட் ராமா கோவிந்தா என்ற கோஷத்தையும், சாமியே சரணமய்யப்பா என்ற கோஷத்தையும் எப்போது அதிகம் கேட்கலாம் ?
xxxx
10.தெலுங்கு, கன்னடம் பேசுவோரும் மாதத்தைத் துவக்கும் நாள் எது ?அதிக மாசம் என்றால் என்ன ?
Xxxx
விடைகள்
1.பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் விபூதி யோகத்தில் மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னார். பின்னர் சினிமாப் பாடலில் கண்ணதாசன் சொன்னார்
xxxxx
2.ஆடிப்பட்டம் தேடி விதை என்பது தமிழ்ப் பழமொழி.
xxxxx
3.ஐப்பசி கார்த்திகை அடை மழைக் காலம். அப்போது வடகிழக்குப்
பருவமழை வருவதால் இந்தப் பழமொழி .
xxxxx
4.சம்ஸ்க்ருத மொழியில் உள்ளதை நாம் தமிழில் மொழிபெயர்க்காமல் அதை தமிழ்ப் படுத்தியுள்ளோம்
எடுத்துக்காட்டாக ஆஷாட என்பதை ஆடி என்போம்;. ச்ராவண என்பதை ஆவணி என்போம். இது பற்றி காஞ்சி சுவாமிகள் (1894-1994) ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
6. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பயிர்கள் அறுவைடையாகி வந்திருப்பதால் சோற்றுக்கும் , நெல்லை விற்றுக்கிடைக்கும் பணத்துக்கும் பஞ்சமிராது . மேலும் மழை ஓய்ந்து வெய்யிலும் அதிகம் இல்லாத மாதம் ; பாரம்பரியமாக சுப மாதம் என்பதால் எல்லோரும் எதிர்பார்க்கும் கல்யாணங்களும் நடக்கும். இவை முக்கியக் காரணங்கள் உத்தராயண புண்ய காலம் துவங்கி விடும்
Xxxx
7சூரியன் எந்த ராசிக்குள் பிரவேசிக்கிறானோ அதை வைத்து மாதத்துக்குப் பெயர் சூட்டுவர்.சித்திரையை மேஷ மாதம் என்பர். இதே போல மீனம் சிம்மம் என்றெல்லாம் மாதங்களை அழைப்பர் .
xxxxxx
8.இதை நினைவில் வைத்துக்கொள்ளுவது எளிது. பெரும்பாலும் ஜனவரி 14ல் தை மாதமும், ஏப்ரல் 14ல் சித்திரை மாதமும் துவங்குவதைக் காண்கிறோம்
xxxxx
9..புரட்டாசி மாதத்தில் நேர்த்திக் கடன் கழிக்க வேண்டிக்கொண்டவர்கள் வீடு வீடாகச் சென்று வெங்கட் ராமா கோவிந்தா கோஷம் எழுப்பி அரிசி அல்லது பணம் வசூலிப்பர். கார்த்திகை மாதம் முதல் நாள், ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக்கொண்டு தை மாத மகர ஜோதி வரை, சாமியே சரணம் ஐயப்பா கோஷம் இடுவர்.
xxxxxxx
10.அவர்கள் அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதம் என்று கருதுவதால் அமாவாசை அன்று புதிய மாதம் துவங்கி விட்டது என்று கணக்கிடுகிறார்கள் இதனால் மாதப்பெயர்களில் கொஞ்சம் குழப்பம் ஏற்படும்.
இது தவிர அதிக மாசம் என்பதாலும் குழப்பம் வரும்
அதிக மாசம் என்றால் என்ன ?
இது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். அதை புருஷோத்தம மாதம் என்று சொல்லி சுப காரியங்களை விலக்குவார்கள் சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடும் போது ஒரு ஆண்டுக்கு 365 நாள் வராது. குறையும்; இப்படித் துண்டு விழும் நாட்களை சேர்த்து 13 ஆவது சந்திர மாதமாக காலண்டரில் சேர்ப்பர் . இது அதிக மாச/ மாத எனப்படும்.
–subham—
Tags- மாதங்கள் , பெயர்கள், அதிக மாதம் , புருஷோத்தம மாதம், பழமொழி, தை பிறந்தால்
பர்மாவில் பாலி , பியூ , மோன் , பர்மிய மொழிகள் பேசப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன இந்த நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்ததால், தெரியாத மொழிகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. பாலி என்பது சம்ஸ்கிருத மொழியின் பேச்சு வழக்கு; . சம்ஸ்க்ருதம் தெரிந்த எவரும் பாலி சொற்களை புரிந்து கொள்ளலாம்.
பிராமி என்பது சரஸ்வதியின் பெயர். பிரம்மா என்பவர் அவளுடைய கணவர். இந்த பிராமி எழுத்திலிருந்துதான் தமிழ் உள்பட, தென் கிழக்காசிய மொழிகள் உள்பட, தென் ஆசிய மொழி எழுத்துக்கள் வந்தன. சுருங்கச் சொன்னால் தெற்காசியா முழுதும் இந்துக்கள் நாகரீகத்தையும் மொழி அறிவையும் பரப்பினர்.
பர்மா என்ற பெயர் பிரம்மா தேசம் என்பதன் மரூஉ ; சிலர் இது பாமர் என்னும் பர்மிய மக்களின் பெயரிலிருந்து வந்ததாக செப்புவார்கள். ஆனால் அந்த பாமர் என்னும் சொல் எங்கிருந்து வந்தது என்று சொல்ல முடியாமல் திகைக்கின்றனர் . பர்மா, மியன்மார் என்பனவெல்லாம் பிரம்மன் (கடவுள் ) அல்லது பிரம்மா (மும் மூர்த்திகளில் ஒருவர்) அல்லது பிராமணர்கள் — என்ற மூன்று சொற்களில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்று மொழி இயல் அறிவுடையோர் வாதிடுகின்றனர்.
xxxx
ஒரே தமிழ் கல்வெட்டிலும் சம்ஸ்க்ருதம்
பர்மாவில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் , பெரும்பாலும் தூய சம்ஸ்க்ருத வரிகளில்தான் துவங்குகிறது . தமிழ் மொழியும் இதற்கு விலக்கல்ல. சுமார் 800 ஆண்டு பழமை உடைய ஒரே தமிழ் கல்வெட்டுதான் பார்மாவில் கிடைத்தது. அதுவும் குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்தமாலா என்ற சம்ஸ்க்ருத நூலிலுள்ள ஒரு ஸ்லோகத்துடன்தான் துவங்குகிறது!
இப்போது சம்ஸ்க்ருத சொற்களின் பட்டியலைக் காண்போம் :-
1.ஸ்ரீ க்ஷேத்ரம் – முக்கியமான ஊரின் பெயர் ஸ்ரீ க்ஷேத்ரம்; இது காஷ்மீ ரிலுள்ள ஸ்ரீநகரம் போன்றது. ஒரிஸ்ஸாவில் உள்ள புரி நகருக்கும் இந்தப் பெயர் உண்டு . இதை பர்மிய உச்சரிப்பில் சரே க்ஷேத்தரா என்பர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்பதை சிறி என்று இலங்கையர் எழுதுவது போல.
2.மும்பை என்ற தேவியின் பெயரை வெள்ளைக்காரர்கள் பம்பாய் என்றது போல. பர்மா என்பதை பர்மிய மொழியில் மியான்மா என்பர் .
3.பர்மாவின் முக்கிய அரசர்களில் ஒருவர் பெயர் அநிருத்த (1044-1077); இது விஷ்ணு ஸஹஸ்ரநாம பெயரில் ஒன்று. இதை பர்மிய உச்சகரிப்பில் அனவ்ரஹ்தா என்பர் .
4. இன்னும் ஒரு மன்னரின் பெயர் நரசிங்கன் . அதை பர்மியர்கள் நரதெய்ங்க என்கிறார்கள் .
உலகம் முழுதும் இந்த “த = ஷ , ச = த” மாற்றத்தைக் காணலாம். தமிழர்களும், ஆங்கிலேயர்களும் இப்படி உச்சரிப்பை மாற்றுவதால் பர்மியர்களைக் குறை சொல்ல முடியாது !
பாஷை என்பதை தமிழ்ப்படுத்தி பாடை என்றும் , விஷயம் என்பதை விடயம் என்றும் எழுதுகிறோம் .
ஆங்கிலத்திலும் எடுகேடியன் என்று எழுதிவிட்டு அதை எஜுகேஷன் என்கிறோம். ஏராளமான சொற்களில் TION என்பதை SION என்றுதான் உச்சரிக்கிறோம். இது உலகம் முழுதும் இந்துக்கள் பரப்பிய மொழி. அதே போல ஜே என்பதை ஒய் (J=Y) என்று மாற்றுவதும் இந்துக்கள் உலகம் முழுதும் பரப்பியதே; இதனால் தான் யூத என்பதை ஜுத என்றும் ஏசு என்பதை ஜீசஸ் என்றும் ஜோசப் என்பதை யூசுப் என்றும் ஜேக்கப் என்பதை யாகூப் என்றும் எழுதுகின்றனர்.
மூன்று நான்கு மொழி இயல் விதிகளைத் தெரிந்து கொண்டால் அத்தனை பர்மிய சொற்களின் சம்ஸ்க்ருத மூலத்தையும் கண்டுபிடித்து விடலாம் .
5.பஞ்ச கல்யாணி
அநிருத்த என்ற புகழ் பெற்ற மன்னன் இறந்தபோது அவனுக்கு இரண்டு மகன்கள் . ஒருவர் மன்னராவதற்கு முன்னர் மணந்துகொண்ட பெண்ணுக்குப் பிறந்த சாவ்ளு ; மற்றோர் மகன் இந்திய இளவரசி
பஞ்ச கல்யாணி என்பவருக்குப் பிறந்தவர-.ஞான சித்த ; . அருமையான சம்ஸ்க்ருதப் பெயர் பஞ்ச கல்யாணி. அவருடைய இன்னும் ஒரு பெயர் வைசாலி .; நாம் காந்தார திலிருந்து வந்த ராணியை காந்தாரி என்றும் , மிதிலா நகரிலிருந்து வந்த சீதையை மைதிலி என்றும் அழைப்பது போல..
6.வைசாலி
வைசாலி என்பது புத்தரின் வாழ்க்கையில் மிகவும் தொடர்புடைய பீஹார் மாநில ஊராகும். இதே பெயரில் பர்மாவிலும் ஒரு நகர் உண்டு.
7.ஞான சித்த
பஞ்ச கல்யாணிக்குப் பிறந்த மகன் பெயர் கியான் சித்து. இது ஞான சித்த என்பதன் திரிபு.
8.ஸ்ரீ வஜ்ர ஆபரண (மான லோல ; சாவ்ளு )
சாவ்ளு பதவி ஏற்கையில் வைத்துக் கொண்ட பெயர் ஸ்ரீ வஜ்ர ஆபரண; உலகம் முழுதும் ப= வ B=V ஆக மாறுவதையும் மொழியியல் அறிஞர்கள் அறிவர் ஆகையால் பஜ்ராபண என்று பர்மியர் உச்சரிப்பர். வங்கம் என்பதை பெங்கால், பங்களாதேஷ் என்பது போல..
9.சந்திரா தேவி.
தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலைநகர்களில் இருந்து ஆண்டதைப் போல பர்மாவிலும் ஒரே நேரத்தில் பல ஆட்சிகள் இருந்தன. பெகு நகர மன்னனின் மனைவியின் பெயர் சந்த / சந்திரா தேவி. இன்னும் ஒரு பெயர் மணி சந்தா ; அவளுடன் ஞானசித்தாவுக்கு (கியான் சித்து) கள்ளத் தொடர்பு இருந்ததாக ஒரு பேச்சு .
10..நராதிபதி
இந்தியாவில் ஜனாதிபதி என்று சொல்கிறோம். இதற்கு இணையான சொல் நர +அதிபதி = நராதிபதி.
நராதிபதி 1256- முதல் 1287 வரை பகான் (Pagan) பிரதேசத்தை ஆண்டார். பர்மிய எழுத்துக்களில் இவர் பெயரை நரதிஹபதே என்பர்
11.வேலுவதி
இது பாதி தமிழ், பாதி சம்ஸ்க்ருதம் உடைய பெயர்.. இவர் ஒரு பர்மிய மஹாராணி. வதி , மதி, பதி என்று முடியும் சொற்களை வேத காலத்தலிருந்து இந்துக்கள் பயன்படுத்திவருகின்றனர் வதி , பதி என்ற சம்ஸ்க்ருத பின்னொட்டுக்களை இன்றும் பார்வதி, சுமதி போன்ற பெயர்களில் காண்கிறோம். அவ்வகையில் வேலு வதி சிறப்புடையது
12.ஸ்வர்ண பூமி
சம்ஸ்க்ருத நூல்கள் பர்மா என்பதை சொர்ணபூமி என்றே குறிப்பிடுகின்றன. இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தங்க நாடு அல்லது தங்கம் கொழிக்கும் நாடு என்று பொ ருள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
–
கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை
(இரண்டாம் பகுதி )
ச. நாகராஜன்
ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட தலம்
தசரத மஹாராஜா புத்திரர்களை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த விழைந்தபோது அந்த யாகத்திற்கு தலைமை ஏற்று அதை நடத்தி வைத்தவர் ரிஷ்ய சிருங்கரே. கவிச் சக்கரவர்த்தி கம்பன் ரிஷ்யசிருங்கரை, ‘அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டன்’ (மறையே உருவெடுத்தது போன்று விளங்கும் சிறந்தவன்) என்று வர்ணிக்கிறான்.
அப்படிப்பட்ட அரும் முனிவரே ராமரின் ஜனனத்திற்கும் காரணமாக அமைகிறார். ஆக சிருங்கேரி ராமாயண காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பழம்பெரும் அரிய தவ பூமியாக மிளிர்கிறது.
இக்காலத்திலும் கூட தவம் புரிய விழைவோர் இந்த அழகிய மலைத் தொடரைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து வருகின்றனர்.
சாரதாம்பிகை
சிருங்கேரி பகுதியில் உள்ள வர்ஷா என்ற மலையிலிருந்து பாய்கின்ற நதியே துங்கா நதி. கிழைக்குத் திக்கில் துங்காவோடு கலக்கும் நதியே பத்ரா. அமைதி மிக்க அழகிய வனாந்தரப் பிரதேசத்தில் இந்த இரு நதிகளின் சங்கமத்தில் அமைந்த இடமே சிருங்கேரி.
இங்கு சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் ஆதி சங்கரர். முக்கிய தெய்வங்கள் சாரதாம்பிகை – சந்திர மௌலீஸ்வரர்.
தீர்த்தம் – துங்கபத்ரா தீர்த்தம்.
சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.
சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு விழாவில் கலந்து கொண்டு சாரதையை வழிபடுகின்றனர்.
‘சாரத’ என்ற சொல்லுக்குப் பண்டிதர்கள் என்ற பொருளும் உண்டு. இவர்களால் பூஜிக்கப்படுபவள் சாரதை.
நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம்.
லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். மேற்கண்ட அர்த்தங்களுடன் சாரதா ஆராத்யா என்று இந்தச் சொல்லைப் பிரித்து விஷ்ணு, ப்ரம்மா ஆக்யோரால் ஆராதிக்கப்பட்டவள் சாரதை என்ற பொருளையும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே சாரதாம்பிகையை வழிபட்டோருக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டுகிறது என்பது ஐதீகம்.
சாரதாம்பிகை ஆலயம்
சிருங்கேரி மடத்தின் உள்ளே இருக்கும் ஸ்ரீ சாரதை, சங்கர பகவத்பாதர், வித்யா சங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர் உள்ளிட்ட ஏராளமான கோவில்களை தரிசித்து அன்பர்கள் பக்திப் பரவசம் அடைகின்றனர்.
ஆதியில் பாறையில் செதுக்கப்பட்ட ஶ்ரீ சக்ரத்தின் மீது சந்தனத்தில் செதுக்கப்பட்ட சாரதா தேவியின் மூல விக்கிரகம் அமைக்கப்பட்டது.
அந்நியரின் படையெடுப்பால் சிதிலமடைந்திருந்த ஆலயத்தை சிருங்கேரி மடத்தின் 12வது மடாதிபதியாகத் திகழ்ந்த வித்யாரண்யர் புதுப்பித்தார். இப்போது காணப்படும் சாரதா தேவியின் சுவர்ண விக்கிரகத்தை அவரே சந்தன விக்கிரத்தின் மீது அமைத்தார்.
தினமும் இங்கு சாரதாம்பிகை- சந்திரமௌளீஸ்வர் பூஜை ஶ்ரீ சங்கராசாரியரால் நடைபெறுகிறது. ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம், சாரதா தேவியின் குங்கும பிரசாதம், ஆசாரியர் அருளித்தரும் மந்திர அட்சதை ஆகியவற்றைப் பெற்று பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.
இருக்கும் இடம்
சிருங்கேரி, கர்நாடகத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. பங்களூரிலிருந்து சிருங்கேரி சுமார் 258 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்தலம் உடுப்பியாகும். சென்னையிலிருந்து சாலை வழியாகச் சென்றால் சுமார் 648 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
சாரதாம்பிகை தோத்திரம் சாரதையை வணங்குவோர் ‘பரம வித்யாவை’ அடைகின்றனர் என்று கூறி அருளுகிறது.
1.தேன் என்ற சொல்லுக்கு நிகரான மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமா?
XXXXXX
2.தேன்களில் பல வகை உண்டு ; குறைந்தது மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமா? பூக்கள், பழங்கள் பெயரைச் சொல்லாதீர்கள் .
XXXXX
தேனுடன் தொடர்புடைய , எல்லோருக்கும் தெரிந்த ஒரு பறவை எது?
XXXXXX
4.உலகிலேயே பழைய தேன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது ?
Xxxx
5.காடுகளில் மக்களும் வேடர்களும் என்ன சாப்பிட்டனர் ? காடுகளில் முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்க என்ன கொடுத்தனர் ?
XXXXXX
6.பழைய நூலான சரக சம்ஹிதை சம்ஸ்க்ருத மொழியில் தேன் பற்றி என்ன சொல்கிறது?
XXXXX
7.சர்க்கரைக்கும் தேனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
xxxxx
8.தேனீக்கள் பூக்களிலிருந்து தேனைச் சேகரிப்பதை எல்லோரும் அறிவோம்; வேறு எந்தப் பிராணி அல்லது பூச்சியாவது தேன் உற்பத்தி செய்கிறதா ?
xxxx
9.தேன் ஏன் கெடுவது இல்லை ?
xxxx
10.தேன் எப்படி உற்பத்தியாகிறது?.
Xxx
விடைகள்
1.கள் , பிரசம், நறவு, (மது)
xxxx
2.மலைத் தேன், கொம்புத் தேன், பொந்துத் தேன் , புற்றுத் தேன் , மனைத் தேன்
xxxxx
3.தேன் சிட்டு
xxxxx
4.எகிப்திய பிரமிடுகளில் பழைய தேன் கண்டுபிடிக்கப்பட்டது
xxxxx
5.மக்களும் வேடர்களும் சாப்பிட்ட உணவு:தேனும் தினைமாவும் ; முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்கமது பர்க்கம் கொடுத்தனர் — இதில் தேனுடன் தயிர், நெய் அல்லது பால் கலந்து கொடுப்பது பெரிய உபசாரம் என்று இதிஹாச புராணங்கள் கூறுகின்றன.
xxxx
6.சரகர் எடுத்திய நூலில் மக்ஷிக , பிரமர செளத்ர பைத்தக என்ற நான்கு வகித்த தேன் களைக் குறிப்பிட்டு (Makshika, Bhramara, Kshaudra and Paittaka) செந்நிற தேனீக்கள் கொண்டுவரும் தேன்தான் மிகச் சிறந்தது என்கிறார். அது நல்லெண்ணெயின் நிறத்தில் இருக்கும் என்றும் சொல்கிறார் .
xxxx
7.சர்க்கரை அல்லது சீனியில் உள்ள இனிப்பு சுக்ரோஸ்; ஆனால் தேனிலுள்ள இனிப்பு குளூக்கோஸ், ப்ரக்டொஸ் .
தேனிலுள்ள சத்துக்கள்
பிரக்டோஸ்:fRUCTOSE 38.2%
குளுக்கோஸ்:Glucose 31.3%
மால்டோஸ்: Maltose 7.1%
சுக்ரோஸ்Sucrose 1.3%
நீர்: Water 17.2%
சர்க்கரை: Sugar 1.5%
சாம்பல்: Ah 0.2%
மற்றவை : Other ingredients 3.2%
xxxxx
8.ஆம்; குளவி வகைகளில் சில தேனை சேகரிக்கின்றன. அவை தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் காணப்படுகின்றன Some wasp species, such as Brachygastra lecheguana and Brachygastra mellifica, found in South and Central America, are known to feed on nectar and produce honey.
xxxxx
9.அதில் எந்த கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளரமுடியாது ; அதனால் கெடுவது இல்லை ;தேன் கெடாமல் இருப்பதற்குக் தேநீக்கள் அதை செய்யும் முறையும் ஒரு காரணம்.
xxxxx
10.தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும் ஒரு பிரிவு (Forager Bees) உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees) அளிக்கும்.
தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்ச் சத்து குறைந்துவிடும். இப்படிச் செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம் தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid) மாற்றிவிடும் தே ன் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அடைகளின் அறைகளில் தேனை வைத்து தனது சிறகுகளால் விசிறிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாது காக்கிறது. ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial) கிருமிகளைக் கொல்லு ம் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை .
XXXX
—subham—
Tags– தேன் , வகைகள், கெடுவதில்லை, உற்பத்தி ஆகும் விதம், குளவி , பெயர்கள், பழைய தேன்