சேலையூருக்கு வாருங்கள்; ஒரே கல்லில் 20 மாம்பழம் அடிக்கலாம்! (11,871)

Brahma on temple wall

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,871

Date uploaded in London – –  5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

சேலையூர் சென்றால் ஒரே கல்லில் 20 மாங்காய்களை / மாம் பழங்களை அடிக்கலாம். அதாவது எல்லா இஷ்ட தெய்வங்களையும் கும்பிட்ட பலன்  கிடைக்கும்  இதில் சைவ, வைணவ, சாக்த தெய்வங்கள் மட்டுமல்ல. அதர்மத்தை அழிக்கும் , எதிரிகளை ஒழிக்கும் , பில்லி, சூனிய, செய்வினைகளை அகற்றும் உக்கிர தெய்வங்களும் அடக்கம். அதுமட்டுமல்ல இந்துக்கள் வழிபடும் பசுவையும் வணங்கலாம். மேலும் அன்னதானமும் செய்யலாம்; தினசரி யாகத்திலும் பங்கு கொள்ளலாம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் கோவிலுக்குச் சென்றபோது, பெண்கள் பூஜை செய்து கொண்டிருந்ததால் ஸ்ரீ சாந்தானந்தா ஸ்தாபித்த மிகப்பெரிய மகா மேருவைக் காண அருகில் செல்ல முடியவில்லை. ஆகையால் பிப்ரவரி 2023 இந்தியப்பயணத்தின் போது மீண்டும் சென்று தரிசித்தேன். காலை நேரம் எங்களைத் தவிர யாருமே இல்லை..

எனக்கு ஸ்ரீ சாந்தானந்தா ஒரு சிறிய புவனேஸ்வரி மந்திரத்தை, நான்  சின்னப் பையனாக இருந்த பொழுது சொல்லிக்கொடுத்ததால் எப்போதும் குரு காணிக்கை செலுத்துவேன். நல்ல வேளை , அலுவலகம்  திறந்து இருந்ததால் ஒரு அன்னதான டொனேஷன் கொடுத்து வந்தேன்.

எல்லாக் கடவுளரையும் வலம் வருகையில் ஒரு சில புரோகிதர்கள் பிரமாண்டமான யாக குண்டத்தின் முன்னர் அமர்ந்து ஒரு பெரிய மரத்துண்டை  பதம் பார்த்துக்கொண்டு இருந்தனர். புத்தகத்தை படித்தபோதுதான் அது என்ன என்று விளங்கியது

கோவில் இருப்பிடம்

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்

எண் 1, கம்பர் தெரு, மஹாலக்ஷ்மி நகர், சேலையூர் , சென்னை 600 073

போன் 22290134; 22293388

xxxx

சென்னை குரோம்பேட்டை- தாம்பரம் திசையில் ராஜ கீழ் பாக்கம்  பகுதியில் சேலையூர் இருக்கிறது. அங்குள்ள ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, சரபேஸ்வர் போன்ற பெரிய, மிகப்பெரிய, விக்ரகங்களை உடைய கோவில் ஆகும்.

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்தா கட்டிய கோவில்.

புவனேஸ்வரி அம்மனுடன் அமைந்த பெரிய மஹா மேரு முக்கியமாக தரிசிக்க வேண்டிய சந்நிதி. அதற்கு அருகிலேயே ஸ்ரீசாந்தானந்தாவின் சிலையும் உள்ளது.

xxx

நீங்கள் தரிசிக்கவேண்டிய சந்நிதிகள் :

பஞ்ச  ஹேரம்ப கணபதி,

ஸ்ரீ மாதா புவனேஸ்வரி ,

ஸ்ரீ மஹா மேரு –  4 அடி உயரமுள்ள  பஞ்சலோக மேரு

சரபேஸ்வரர்

சுவாமிநாத சுவாமி (முருகன்)

உக்ர பிரத்யங்கரா தேவி

பஞ்சமுக ஆஞ்சநேயர்

சுதர்சன மூர்த்தி

தர்ம சாஸ்தா ஐயப்பன்

அஷ்டா தச புஜ மஹாலஷ்மி

சஹஸ்ரலிங்கம்

சனைச் சரன்

தத்தாத்ரேயர்

சங்கடஹர கணபதி

தன்வந்திரி

ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

கோசாலை

யாக குண்டம்/ யாகம்

ஸ்ரீசாந்தானந்தா

மேற்கண்ட தெய்வங்களில் பிரத்யங்கரா தேவி, சரபேச்வரர் , தன்வந்திரி ஆகியோருக்கு வெகு சில கோவில்களிலேயே சந்நிதிகள் உண்டு.

Xxxx

ஸ்கந்தாஸ்ரம புஸ்தகம் சொல்லும் தகவல் இதோ :-

நித்திய ஸ்ரீ பிரத்யங்கரா – ஸரப– சூலினி ஹோமம்

“நெல்லிக்கனி அளவு அன்னத்தையும் நெய்யையும்  ஹவிர்ப்பாகமாகக் கொடுத்தாலும் அக்னி, அதைப் பெரியதாக்கி , தெய்வங்களுக்குக் கொடுப்பதாக யஜுர் வேதம் கூறுகிறது.

ஸ்ரீ சரபேஸ்வரர் ஆலயம் ஒன்று,  இரண்டுக்கு மேல் இல்லை. ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸ்ரீ சூலினி துர்காதேவிக்கும் ஆலயங்கள் இல்லை என்றே சொல்லலாம் . இந்த நிலையில் கலியுகத்திற்கு தற்சமயம் அவசியமான  மேற்படி தேவதைகளை நமது குருநாதர் ஸத்குரு ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகள் அவர்கள் சென்னை ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் பிரும்மாண்டமாக பஞ்ச லோகத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஆஸ்ரமத்தில் பூஜை, ஹோமம் முதலியன 25-6-1999 முதல் உலக க்ஷேமத்துக்காக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ பிரத்யங்கரா தேவிக்கும் ஸரப சூலினி தேவதைகளுக்கும் சக்தி அதிகரிக்கவும், தெய்வ சாந்நித்யம் ஏற்படவும் பிரத்யங்கரா , ஸரப சூலினி மஹா மூல மந்திரங்களை பல கோடி தடவை வேள்வியாகச் செய்வதாக சுவாமிகள் ஸத்ய சங்கல்பம் எடுத்துக் கொண்டார்கள் பக்தர்கள், நாம நட்சத்திரங்களுடன் உபயதாரர்களாக பங்கு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதைச் செய்யலாம். கோவிலில் விவரங்களைப்  பெறலாம்” .

xxx

எனது கருத்து My Comments 

சுவாமிகள் ஸ்தாபித்த விக்ரகங்கள், சிலைகள் எல்லாம் அளவில் பெரியவை. அதற்குத் தக பிரசாதம், பூஜை, அபிஷேகம் நடைபெற் றால்தான் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் . அந்த வகையில் பார்த்தாலும் நாம் உதவி செய்வது அவசியம்.

இந்தக் கலியுகத்தில் தினமும் அக்நி காரியம் செய்யவேண்டிய பிராமணர்கள் கூட அதைச் செய்வதில்லை; ஆகையால் சுவாமிகளின் ஸத்ய சங்கல்பத்தை நிறைவேற்ற  நாமும் உதவலாமே .

மேலும் சுவாமிகள் எதையுமே மிகப்பெரிய அளவில் சிந்த்தித்து நிறைவேற்றியும் காட்டியுள்ளார். 1960-களில் அவர் புதுக்கோட்டையில் சஹஸ்ரசண்டி ஹோமம் ஏற்பாடு செய்தபோது எனது தந்தை வெ . சந்தானம், தினமணிப் பத்திரிகையில் தினமும் செய்தி வெளியிட்டு அது வெற்றி அடைய உதவினார். அதுமட்டுமல்ல. அப்போது மதுரை மீனாட்சி கோவில் ஆடிவீதியில் நடந்த அனந்த ராம தீட்சிதர் உபன்யாசத்துக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்தனர் . நிதியெழுப்ப ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நாள் தோறும் தொண்டர்களாகப் பணியாற்றினோம்.

மேலும் எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்து ஸ்ரீ சாந்தாந்னதா ஆசீர்வதித்ததாலும் , எங்களுக்கு மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா, இவர் பற்றிச் சொல்கையில் , தானே காடுகளில்  அவர் தவம் செய்வதைக் கண்டதாகச் சொன்னதாலும் சாந்தானந்தா மீது கூடுதல் மரியாதை உண்டு.

ஸாந்தானந்த சுவாமிகள் மதுரையில் அவதரித்து, சுதந்திர போரட்டத்தில் அலிப்பூர் சிறை சென்று, குஜராத், ராஜஸ்தான் ரிஷிகேஷ் சிவாநந்தாஸ்ரமம் வரை சென்று , குற்றாலம், மேற்கு மலைத் தொடர்ச்சி காடுகளில் தவம் செய்து, சேலம், புதுக்கோட்டை , சேலையூர் கோவில்களை ஸ்தாபித்து, சமாதி அடைந்த கதையை தனியாகக் காண்போம்.

xxxx

18-2-23 சிவராத்திரி

18-2-23 சிவராத்திரி அன்று இரவில் சென்னை கே கே நகர் பிள்ளையார் கோவிலில் சிவனுக்கு பால், தேன் அபிஷேகம் நடந்ததையும் கண்டு களித்தேன். என் அண்ணன் குடும்பத்தினர், லிட்டர் லிட்டராக பாலையும் தேனையும் வாங்கிக் கொடுத்தனர். மறுநாள் குடந்தை வட்டாரக் கோவில் பயணம் இருந்ததால் அரை மணி நேர தரிசனத்துடன் திரும்பி வந்தேன். ஓம் நம சிவாய.

—subham—

Tags- சேலையூர் ,ஸ்கந்தாஸ்ரமம், பிரத்யங்கரா தேவி, ஸரப சூலினி, சாந்தானந்தா

உலகின் மாபெரும் இதிஹாஸம் மஹாபாரதம்! – கம்ப்யூட்டர் ஆய்வு! (Post No.11,870)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,870

Date uploaded in London –   5 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரத மர்மம்!

உலகின் மாபெரும் இதிஹாஸம் மஹாபாரதம்! – கம்ப்யூட்டர் ஆய்வு!

ச.நாகராஜன்

உலகின் மாபெரும் இதிஹாஸமான மஹாபாரதத்தை கம்ப்யூட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர் மூன்று கணினி நிபுணர்கள்.

இதற்காக அவர்கள் இந்தத் துறையில் உள்ள நவீன உத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

மிக சுவாரசியமான இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் மூவர்.

1) Debarati Das   தேபரதி தாஸ்University of Minnesota Twin Cities

2)  Bhaskarjyoti Das பாஸ்கர்ஜ்யோதி தாஸ் Visvesvaraya Technological University

·         3) Kavi Mahesh கவி மஹேஷ் Indian Institute of Information Technology Dharwad

இது இந்தியாவில் வாரணாசியில் 2106ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையாகும்.

ஆய்வின் தலைப்பு :

A Computational Analysis of Mahabharata

·         வருடம் : January 2016

·         மாநாடு : Conference: International Conference on Natural Language Processing ICON-2016

நடந்த இடம் : At: IIT-BHU, Varanasi, India

இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மஹாபாரத பதிப்பு உள்ள இணைய தளம் :

Project Gutenberg site (http://www.gutenberg.org/ebooks/7864).

இந்த ஆய்வுக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட ஆங்கில நூலை எழுதியவர் :கிஷோரி மோஹன் கங்கூலி (1883-1896)

This is a translation by Kisari Mohan Ganguli done between 1883-1896.

இதில் மஹாபாரதம் 15175 K bytes கொண்டிருப்பது தெரிகிறது.

விமரிசனப் பகுதிகளை நீக்கி விட்டால், ஆங்கில மொழிபெயர்ப்பின் படி  மீதி இருப்பது  13947 K bytes

மஹாபாரதத்தில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கை : 28,58,609

மஹாபாரதத்தில் உள்ள வரிகளின் எண்ணிக்கை 1,18,087

தனித்தன்மை வாய்ந்த வார்த்தைகளின் எண்ணிக்கை 32,506

பர்வங்களின் எண்ணிக்கை 18

முக்கியமான கதாபாத்திரங்கள் 210 பேர்கள் (பத்து முறையாவது இதிஹாஸத்தில் வந்திருப்பவர்கள்)

Table 1:

Key Attributes of Mahabharata Text

Attributes Value Remarks

Size in bytes 15,175 K English translation

Size in bytes 13,947 K After removing comments

Number of words 28,58,609 Using NLTK

Number of unique words 32,506 Using NLTK

Number of sentences 1,18,087 Using NLTK

Number of chapters 18 “parva”

Number of characters 210 appearing at least 10 times

 மஹாபாரதம் உலகின் பெரும் காவியங்களான இலியட் மற்றும் ஒடிஸியை விட, இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தாலும் மிக மிகப் பெரியது. இதில் 18 பர்வங்கள் உள்ளன. நூறு உப பர்வங்கள் உள்ளன.

Mahabharata is larger than Iliad and Odyssey together, compiled many years ago.

This has 18 “parva”s or chapters and each “parva” has many sections.

இவர்களின் ஆய்வறிக்கை முழுதுமாகப் படிக்க வேண்டிய ஒன்று.

இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மூன்று அறிஞர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

மேலும் பல ஆய்வுகளை இவர்கள் செய்து கொண்டிருப்பதாக அறிகிறோம்.

முடிவுகள் நம்மை வியக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

***

Etymology 3000 years ago! (Post No.11,869)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,869

Date uploaded in London – –  4 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Etymology is the study of the origin of words. The history of a word or phrase is shown by tracing its development and relationships.

Yaska was the oldest etymologist known to history. He found the roots of Vedic words. His writing known in Sanskrit as Nirukta, is not only available to us but also studied by Vedic students today. Nirukta is one of the six ancillary subjects, that all the Vedic students must study and pass.

Nirukta is the oldest treatise on etymology, philology and semantics.

He lived before the time of Greeks, Tamil and Latin authors writing books or poems. The wonder is that he mentioned his predecessors. The list of names that he provides us show that India, that is Bharat, was the most literate country in the ancient world. That also proved that Vedic civilization was far ahead of other civilizations. That proved that Sanskrit was the oldest and well developed language.

Though we have older writings in Egyptian, Babylonian cultures, they don’t deal with grammar or linguistics in detail. We have only gibberish and primitive  Gilgamesh poems as part of Middle East literature.

Here is what Yaska, the author of Nirukta (etymology) says:-

His 17 predecessors or his contemporaries:

1.Aagraayana

2.Audumbaraayana

3.Aupamanyava

4.Aurnavaabha

5.Kaaththakya

6.Kautsa

7.Krautuuki

8.Gaarrgya

9.Gaalava

10.Carmaciras

11.Yaitiki

12.Vaarsyaayani

13.Satabalaaksa

14.Saakataayan,

15.Saakapuuni

16.Saakalya

17.Sthaulaasthivi

Xxx

Apart from these individual names, he mentioned many subjects and professions:

Aithihaasikaahaa= historians

Duhitr- daayaadaah= a school of lawgivers who allow a daughter to inherit property of father just like a son.

Nairuktaahaa – etymologists

Parivraajakaahaa – ascetics or theologians

Yajnikaahaa – the ritualists

Vaiyaakarnaahaa = grammarians

Xxx

The existence of such schools of thought shows that specialisation in different subjects must have been prevalent for a considerable time to enable such schools to arise.

This was India before or around 1000 BCE.

We don’t see such a development anywhere in the world around that time.

Text books on these subjects must have existed at the time of Yaska.

Xxx

Six Limbs of Veda Maathaa

According to orthodox tradition, the Nirukta of Yaska is an auxillary treatise which is indispensable for a deep, full and proper knowledge of Vedic stanzas. It is technically called a Vedanga, a limb of the Veda. There are six limbs, Vedangas. The six limbs are

Grammar , phonetics, Ritualistic aphorisms,Metrics, Astronomy and Etymology

Shadango vedo adhyetavyah

Vyaakaranam sikshaa kalpa Chando jyotisham nruktam

Metre is indeed the feet of the Veda, Ritual texts the hands, astronomy the eye, etymology the ear, phonetics the nose and grammar the mouth of the Veda. Therefore, a scholar who has studied the Veda with its limbs becomes great in the world of Brahma.

Chandah paadau tu vedasya hastau kalpo atha padyate

Jyotishaamayanam  chakshurniruktam srotramuchyate

Sikshaagnaanam  tu vedasya mukham vyaakaram smrutam

Tasmaat saangamadheetyaiva brahmaloke mahiiyate

Xxx

Yaska is mentioned and quoted by many scholars in the later days,

Vararuchi in his Niruktasamuchchaya

Skandasvaamin in his commentary on the Rig Veda

Govindasvaamin in his commentary on Baudhaayana dharmasaastra

Medhaatithi in his commentary on the Manu Smriti

Uvata in his commentary on Vajasneyi Samhita

Bhatta bhaaskra Misra in his commentary on the Taittiriya Samhita

Devaraaja Yajvan in his commentary on the Nighantu

Udgiitha and Venkata Maadhava on their commentary on the Rig Veda

Saayana in his commentary on all the four vedas

quoted Yaska’s etymological explanations as authoritative.

Yaska has become, to all commentators, an ifallible guide in the domain of Vedic explanation.

Xxx

We have also got the 64 names of grammarians who lived before Panini of seventh or eighth century BCE

If we place Susrutha’s Sixth century BCE medical treatise together with the above, we can get a bird’s eye view of India’s enormous achievement.

Source book – Woolner Commemoration Volume,  1940 with my inputs

—subham—

Tags- Yaska, Nirukta, list of etymologists, Vedanga, six limbs.

‘பாப் கார்ன்’ POPCORN உணவைக் கண்டுபிடித்தது தமிழனா? (Post.11,868)

Picture of Popcorn

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,868

Date uploaded in London – –  4 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சோளப் பொரியை பாப்கார்ன் POPCORN என்கிறோம். உலகம் முழுதும் திரைப்படக் கொட்டகைகளில் விளையாட்டுத் திடல்களிலும். சூப்பர் மார்க்கெட்டுகளிலும் POP CORN விற்கப்படுகிறது . தமிழில் உள்ள இரண்டு பழமொழிகள் நமக்கு ஒரு முக்கிய உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது

ஆனைப் பசிக்கு சோளப்பொரி IT IS LIKE GIVING POPCORN TO HUNGRY ELEPHANT OR TO ONE WITH HUNGER LIKE AN ELEPANT

சோளக்காட்டு பொம்மை SCARECROW IN A CORNFIELD (FAKE THREAT)

இது போன்ற பழைய மொழிகள் வேறு மொழிகளில் இல்லை.

மக்காச் சோளத்தின் MAIZE தாவர இயல் பெயர் –  Zea mays,

சோளத்தின் SORGHUM/ JOWAR தாவர இயல் பெயர் – HOLCUS SORGHUM, SORGHUM BICOLOR

இரண்டும் ஒரே குடும்பத்தைச் (belongs to the Poaceae)

சேர்ந்தவை. மேலும் இரண்டும் 10,000 ஆண்டுகளாக உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்பட் டு வருகிறது ; இரண்டிலும் பொரி செய்யலாம் . ஆனால் இன்றைய பாப் கார்ன் மக்காச் சோளத்திலிருந்துதான் கிடைக்கிறது. பாப்கார்ன் சாப்பிடுவது ஏன் ?

அதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரிக்கலாம் . பெரிய பாக்கெட். ஆனால் உடலுக்குக் கொடுக்கும் கலோரி (எரிபொருள் சக்தி) மிகக்குறைவு . மேலும் கோதுமையில் உள்ள க்ளூட்டன் என்னும் பொருள் பலருக்குஒவ்வாது. ஈந்த க்ளூட்டன் சோளத்தில் இல்லாததால் சோளத்தை க்ளூட்டன் ஒவ்வாமை உடையோர் பயன்படுத்துகின்றனர்

இரண்டு விஷயங்களை ஆராய்ந்த பின்னரே இது பற்றி முடிவு செய்ய வேண்டும் .

முதல் விஷயம்

இந்துக்களுக்கு சோளப்பொரி பற்றியோ சோளம் என்னும் தானியம் பற்றியோ தெரியுமா?

சோளம் என்பது இந்திய தாவரமா ?

சோளம் பற்றி சங்க இலக்கியத்தில் அல்லது சம்ஸ்க்ருத இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றனவா ?

இரண்டாவது விஷயம்

இந்துக்களுக்கு முன்னர், வேறு யாராவது சோளம் பற்றிக் கதைத்து இருக்கிறார்களா ?

மொழியியல் ரீதியில் சோளம்- ஜோவர் – சோர்கம் SOLAM- JOWAR- SORGHUM  என்பதில் எது முதலில் வந்தது ?

மேற்கூறிய இரண்டில் மொழியியல் ஆராய்ச்சிகள் (LINGUISTIC REEARCH)  இந்துக்களுக்கும் குறிப்பாகத் தமிழ் இந்துக்களுக்கும் பெருமை தருகிறது .

பழமொழிகளுக்கு காலமே சொல்லமுடியாது. அவற்றை “பழ” என்ற அடைமொழியுடன் வழங்குவதால் அவை மிகப் பழங்கால அனுபவ மொழிகள் என்று அறியலாம் ;

ஒவ்வொரு கேள்வியாக எடுத்துக்கொள்ளுவோம்

சங்க இலக்கியத்தில் சோளம் இருக்கிறதா ? இல்லை

தமிழில் சோளம் இருக்கிறதா? இருக்கிறது. சீவக சிந்தாமணியில் இறுங்கு என்பதை சோளம் என்று உரை ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் .

இது தவிர பழமொழிகளில் உள்ளது

XXXX

சம்ஸ்க்ருத  இலக்கியத்தில் சோளம் இருக்கிறதா ? இருக்கிறது; ஆனால் பிற்கால இலக்கியங்களில்தான். தமிழுக்கு சற்றுமுன்னர்.

வேறு யாருக்காவது சோளம் பற்றித்  தெரியுமா ?

சோளம் (CORN) என்பதை மக்காச் சோளத்துக்கும் (MAIZE) கம்பு (MILLETS) வகை தானியத்துக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்துகின்றனர். இந்தக் குழப்பம் ஆங்கில மொழியிலும் உள்ளது. POP CORN பாப் கார்ன் பெயரிலுள்ள கார்ன் CORN என்னும் ஆங்கிலச் சொல் சில நாடுகளில் தானியம் (GRAIN) என்ற பொருளிலும் இன்னும் பல நாடுகளில் மக்காச் சோளத்துக்கும்(MAIZE)  இன்றுவரை  பயன்படுகிறது. மேலும் மக்காச் சோளம் இல்லாத சோளத்துக்கு சொர்கம் அல்லது சோர்கம் (SORGHUM) என்ற பெயர் தமிழ்ப் பெயர் ஆகும்.

XXX

Picture of Sorghum Crop

LINGUISTIC SUPPORT

R= L என்பது உலகம் முழுதும் காணப்பாடுகிறது. இந்து மொழியியலில் – சம்ஸ்க்ருதத்தில் — இதற்கான சூத்திரமே உளது ஆக சோளம் என்பதே சோ ர்/ள் கம் ஆகியது

இன்னொரு விநோதத்தையும் காணலாம். எந்த வயலில் பறவைகளை விரட்ட மனித உரு போன்ற பொம்மைகளை (SCARECROW) வைத்தாலும் அதைத் தமிழில் சோளக்காட்டு பொம்மை  என்றுதான் சொல்லுகிறோம். இதைப் பார்க்கையில் தமிழிலும்  சோளம் என்பதற்கு தானியம் என்ற பெயர் தொனிக்கிறது (SOLAM= GRAIN)

இன்று பாப்கார்ன் (சோளப் பொரி ) செய்வதற்கு மக்காச் சோளம்தான் பயன்படுகிறது. அதிசயமான விஷயம் என்னவன்றால் உலகில் அதிகமாக விளையும் தானியம் அரிசி அல்ல; கோதுமை அல்ல; மக்காச் சோளம்தான்!

இது மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் 10, 000 ஆண்டுகளுக்கு முன்னரே (MAIZE) உணவுக்காகப் பயன்படுத்தத்தப்பட்டது தொல்பொருள் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது . பின்னர் தென், வட அமெரிக்காவில் பரவி, உலகெங்கிலும்ம் பயிரானது.

சோளப் பொரியைக் கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சியே தேவை இல்லை. திடீரென்று சோளக்காடோ  தானியக்  கிடங்கோ தீப்பிடித்து எரிந்து  இருந்தால்,  தானாக பொரி கிடைத்திருக்கும். அதைச் சாப்பிட்டவர்கள் மற்றவர்களுக்கும் சொல்லி இருப்பர்; உடனே இது வழக்கத்தில் வந்திருக்கும் .. ஆனால் தமிழில்தான் பொரியை உணவாகப் பயன்படுத்திய குறிப்புகள் உள்ளன. இன்று நாங்கள் லண்டனில் காலை உணவாகச் சாப்பிடும் ரைஸ் கிரிஸ்பீஸ்  RICE CRISPIES  (BREAKFAST CEREAL) என்னும் அரிசிப்பொரியை பாலில் கலந்து உண்ட செய்தி 2000 ஆண்டுப் பழமையான நற்றிணையில் உளது . 1990களில் நான் லண்டன் மேகம் பத்திரிகையில் இதை எழுதினேன். அவை 2009-ல் தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற புஸ்தகமாக வெளியானது .

சோர்கம் பற்றி எதியோப்பியா-எகிப்தில்தான் பழைய தொல்பொருட் துறை தடயம்   – அதாவது 10,000 (8000 BCE) ஆண்டுகளுக்கு முந்தைய தடயம் உள்ளது .

அப்படி இருக்கும்போது தமிழ் இந்துக்களுக்கு எப்படி  இந்த கண்டுபிடிப்புப் பட்டத்தைக் கொடுக்க முடியும்? இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று ஆகாதா ?

இங்குதான் பழமொழியும், மொழியியலும் (PROVERBS AND LINGUISTIC S)நமக்குத் துணைக்கு வருகின்றன .

 ஆனைப் பசிக்கு சோளப் பொரி என்ற பழமொழியில் சோளப் பொரியை உணவாகச் சாப்பிடும் செய்தி வருகிறது. அதிக பசியுள்ளவனுக்கு அது பசியாற்றாது என்ற செய்தியும் அந்தப் பழமொழியில் இருக்கிறது . ஆக பொரி என்பதை உணவாகக் கண்டவர்கள் தமிழர்களே

ஆயினும் இப்போது பாப்கார்ன் செய்யப் பயன்படும் மக்காச் சோளம் மிகவும் பிற்காலத்தில்தான் இந்தியாவுக்கு வந்தது. அதற்கு முன்னரே ஒன்பதாம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியில் சோளம் இருப்பதால், நாம் சொல்லும் பொரி , சொர்கம் SORGHUM என்ற தானியம் ஆகும். இது 8000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தில் இருந்த தடயங்கள் கிடைத்திருப்பதால் இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததாக உணவுப்பண்ட ஆய்வாளர்கள் செப்புவர். ஆக இதில் பொரி செய்து உணவாகப் பயன்படுத்தியத்தைத் தமிழ்ப் பழ மொழி காட்டுவதால் பாப்கார்ன் உணவுப் பண்டத்தை நாம்தான் கண்டுபிடித்தோம் என்று சொன்னால் என்ன தவறு?

Xxxxx

picture of Maize

கி.பி AD.= பொ .ஆ (Common Era)

ஆயுர் வேத நூல்களில் சோளத்தின்  வரலாற்றைக் காண்போம்.

2200 ஆண்டுகளுக்கு முந்திய சரக சம்ஹிதை நூலில் ஜுர் ணா  என்ற பெயரில் சோளம் உள்ளது ; இதுவே ஜோவர் ,சோர்கம் – சோளம் என்று உருமாறியது.

கி.பி.400- சமண நூல் திலோய பண்ணத்தியில் யவ நால அல்லது ஜம  நால என்ற பெயரில் உளது.

XXX

தமிழ் நூல் சீவக சிந்தாமணி – ஒன்பதாம் நூற்றாண்டு – இறுங்கு (சோளம் )

XXX

கி.பி.1060 – சரக சம்ஹிதையின் வங்காளி மொழி உரையில் ஜுர்ணா = ஜோனார்

XXX

கி.பி.940- கன்னட மொழி நூல் பம்ம பாரத — ஜோள

பின்னர் பிராகிருத மொழி நூல்களில் ஜோவ்ரி , ஜோவாரி

தற்காலத்தில் இந்தி முதலிய மொழிகளில் ஜோவார் ,ஜவார்

சோளம் என்ற தமிழ்ச் சொல் பழமொழியில் மட்டுமே காணப்படுகிறது .

—SUBHAM—

Tags- சோளப்பொரி, சோளம், இறுங்கு, ஆனைப் பசிக்கு சோளப்பொரி, சோளக்காட்டு பொம்மை, ஜுர்ணா, பாப்கார்ன், POPCORN,

வால்மீகி ராமாயணத்தில் வாகனங்கள்! (Post No.11867)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,867

Date uploaded in London –   4 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி

வால்மீகி ராமாயணத்தில் வாகனங்கள்!

ச.நாகராஜன்

ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் பல அபூர்வமான வாகனங்களின் வகைகளை மஹரிஷி வால்மீகி கூறுகிறார்.

அதைப் பற்றிய ஒரு சிறிய பார்வை இதோ:

அஸ்வ கோடகா – பழைய காலத்தில் குதிரைகள் (அஸ்வம் – குதிரை) ரதங்களில் பூட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

யுத்தங்களிலும் இந்த ரதங்கள் வீரர்களை ஏற்றிச் செல்லும்.

கஜ அல்லது ஹஸ்தி : கஜ என்றால் யானை. ஹஸ்தி என்றாலும் யானை என்றே பொருள்.

அரசர்களாலும், அரச குடும்பத்தினராலும் மந்திரிகளாலும், மாபெரும் போர் வீரர்களும் யானை  மீது ஏறிச் செல்வர்.

ரதம் : இரு சக்கரங்களை உடைய ஒரு வாகனம். சாதாரணப் போக்குவரத்திற்கும் போர்க்காலங்களில் போர்க்களங்களிலும் ரதம் பயன்படுத்தப்படும்.

மிகப் பெரும் ஓட்டப் பந்தயப் போட்டிகளிலும் ரதங்கள் எடுத்துச் செல்லப்படுவதுண்டு.

ஒரு குதிரையோ அல்லது பல குதிரைகளோ பூட்டப்பட்டு ரதங்கள் செல்லும்.

ரதத்தை மிக விரைவாக ஓட்டத் தனித் திறமை வேண்டும்.

இப்படிப்பட்ட ரத வீரர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை ராமாயணத்திலும் காணலாம். மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களிலும் காணலாம்.

பல சக்கரங்களைக் கொண்ட ரதங்களுமுண்டு.

சிபிகன் – சிவிகை என்று தமிழில் சொல்லப்படும் பல்லக்கு இது.

ராணிகளும், மிகப் பெரும் மகான்களும் உயர் அதிகாரிகளும் போக்குவரத்து வாகனமாக சிவிகையைப் பயன்படுத்துவது வழக்கம்.

ஸ்வஸ்திகா : –  மிக்க அலங்காரத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படும் படகு இது. அரசர்களும் அரச குடும்பத்தினரும் உயர் அதிகாரிகளும் நதிகளிலும் கடலிலும் செல்லப் பயன்படுத்தப்படும் நீர்ப் போக்குவரத்து வாகனம் இது.

ஸ்வஸ்திகா என்பது குகனது பெரிய படகு. உயர் அரச வம்சத்தினரை ஏற்றிச் செல்வதற்கானது. இதில் தான் பரதன் உள்ளிட்டோரை ஆற்றின் மறு கரைக்கு – சித்ரகூடத்திற்கு குகன் ஏற்றிச் சென்றான்.

புஷ்பகம் : இது ஒரு வான ஊர்தி. (ஏரோபிளேன் – ஆகாய விமானம்)

பல அபூர்வமான அம்சங்களைக் கொண்டது இது.

சுந்தர காண்டம் எட்டு மற்றும் ஒன்பதாம் ஸர்க்கத்தில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

மணி, இரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்டதும் உருக்கின தங்கத்தால் செய்யப்பட்ட பலகணிகளின் வேலைத்திறமைகளையும் உடைய பெரிய விமானம் இது.

இத்தன்மையது என்று சொல்ல முடியாதது. பிறரால் அழிக்க முடியாதது. வேலைத் திறமை கொண்டது. விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது.

மனதின் எண்ணப்படி பலவிதமான கதிகளுடனும் அது செல்லும்.

பற்பல விசித்திர மாளிகைகள் அதற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒருவராலும் தடுக்க முடியாதது.

அதில் செல்பவரின் அபிப்ராயப்படி அது செல்லும்.

அழகிய தோற்றத்தை உடையது.

ஆயிரக் கணக்கானோரால் அது எப்போதும் பாதுகாக்கப்படும்.

தேவ லோகத்தில் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா அதைச் செய்தார்.

அதன் பெயர் புஷ்பகம்.

ஆசையை அதிகரிக்கவல்லது அது.

முழுமையும் ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டது. மூவுலகத்தினராலும் வணங்கத் தக்கது.

பிரம்மாவிடமிருந்து தன் தவத்தால் குபேரன் அதை அடைந்தான்.

குபேரனிடமிருந்து வென்று ராவணன் அதைக் கைப்பற்றினான்.

மான் முதலிய சித்திர வேலைப்பாடுகள் அதில் உண்டு. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் ஒளியால் ஜ்வலிப்பது போல அது கட்டப்பட்டது.

 ஆகாயத்தை உராய்ந்து கொண்டிருப்பது போல மங்களகரமான கோபுரங்கள் அதன் நாற்புறங்களையும் அலங்கரித்தன.

பொன்னாலான படிகள் கொண்டது; அழகிய மேடைகள் கொண்டது.

ஸ்வர்ணங்களாலும் ஸ்படிகங்களாலும் ஜன்னல்களுடனும் காற்றோட்ட வசதியுடனும் அது அமைக்கப்பட்டிருக்கும் ஒன்று. (அதாவது ஏர்கண்டிஷன் என்று இப்போது சொல்லப்படும் குளிர்சாதன வசதி கொண்டது அது)

இந்திர நீலம், மஹா நீலம், பவளம், முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்ட அது பல அடுக்குகளைக் கொண்டது.

அதில் பானம், பக்ஷணம் என உணவு வகைகள் நறுமணத்துடன் இருக்கும்.

இப்படி வர்ணிக்கப்பட்ட புஷ்பக விமானத்தை அனுமன் பார்த்தான்.

இதில் ஏறியே சீதை, ராமர், லக்ஷ்மணர் இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பினர்.

ஆக வால்மீகி மஹரிஷி இப்படிப் பல வாகனங்களைத் தனது இராமாயண காவியத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

***

Bihar in Rig Veda (Post No.11,866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,866

Date uploaded in London – –  3 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Mighty Magadha Empire is known from the times of Buddha. That means it was one of the 16 empires known at the time of Buddha, i.e. Sixth Century BCE. Before it was known as Kikata desa. Rig Veda not only named it, but also gave the king’s name as Pramaganda.

Famous philosopher king Janaka and his daughter Sita Devi were also from Bihar, known as Videha desa.  Yaska of eighth century BCE also mentioned it and said it was at the outskirts of Aryavarta. But from Ramayana and Upanishadic sources we come to know they were high class Hindus. We also come to know the names who participated in the All India Philosophical Conference convened by Janaka. A woman philosopher  by name Gargi Vachaknavi, challenged a great Rishi Yajnavalkya. Brhad Aranyaka Upanishad lists all the philosophers and their localities.

During the Mauryan period, it was known as Maghada. Among the 30 kingdoms mentioned in the Mahabharata, we see Magdha and its king.

In short, we see a continuous history from Rig Vedic times to the time of Buddha. Now we call it Bihar from Buddha ‘Viharas’. This shows that the place name changes according to the ruler’s location or his name or other factors

xxxx

Rig Vedic Reference

The Rig Veda refers this place with reference to Visvamitra Rishi, who was a key player in the world’s first big war. It is called Dasarajna Yuddha, the war of Ten Kings. For the first time in history, we come to know that Ten Kings formed a front and attacked Sudas, a king who was a friend of Vasishta, but later changed his loyalty to Visvamitra.

‘Ten kings War’ also show that there were ten kingdoms at that time apart from Sudas’ kingdom.

Western mischief makers labelled them as ‘tribal chiefs ‘ to minimise the importance. But Rig Veda clearly called them ‘Raja.’

This passage in Rig Veda shows that Vedic civilisation was even in Bihar at the remotest time. The Sanskrit name of the king is another evidence.

Pandavas also belong to Bharata vamsa.

xxx

Here is the Vedic context:

Rig Veda 3-53-14 refers to the land of Kikata, which is identified with Magadha in Bhagavata Purana 1-3-24

Rig Vedic hymns 3-33 and 3-53 in the third Mandala show Visvamitra’s support for the Bharatas and its king Sudas. From hymn 18 of the Seventh Mandala we know a league of Ten Kings attacked Sudas, which was foiled . this famous battle was fought on the banks of Ravi in Punjab.

Enmity between the two great Rishis Vasistha and Visvamitra is known from other hymns.

Hymn 33 of the Third Mandala contains a dialogue between Visvamitra and the rivers Vipas and Sutudri (Beas and Sutlej), which they want to cross. The sage requests the rivers to stop their course (ramadhvam), to bend low (ni namadhvam) so that the Bharats amy safely cross them with their carts and chariots. The rivers readily agree, but stipulate that the bard will commemorate their kind gesture in hymns. They safely crossed the river. Then Visvamitra told the rivers to swell again and follow its course.

(apart from geography, this is the first River water Miracle which we see in Bhagavata as well where River Yamuna parted away for the baby Krishna to cross. Bible also copied it in Moses episode of Red Sea crossing)

xxx

Banyan tree in the Rig Veda

In the hymn 3-53 we get additional information about the Kikatas. They did not follow the same customs of Vedic Hindus. “what purpose of thine is served by the cows in the land of the Kikatas? They neither milk them for the aasiira nor heat the gharma. O bounteous one, bring to us the wealth of Pramaganda, subject to us the Naicasakha (mantra 3-53-14).

Naicasakha is explained by Yaska as a banyan tree.

Niica- saakha= having down reaching branches bahuvrihi compound (Nirukta 6-32).

Later banyan tree was called nyag-rodha= growing downward;

Aitareya Brahmana (35-4) mentions that the banyan trees of Kurukshetra were the first born of the species.

Based on this, Ksetracandra Chattobhahyaya of Allahabad, identified Kikata with Kurukshetra; but it was not accepted by many scholars.

Banyan tree of Kurukshetra is famous, but banyan trees are found throughout India.

Xxx

Other evidence

Apart from Vedic literary evidence, we come to know about excavations of Indus type of culture in a very wide area up to river Yamuna. Westerners deliberately labelled them ‘Pre Aryan’. But until today no one was able to decipher Indus script and show whether it was pre Aryan. The West mislead the world from the very beginning.

xxx

40,000 year old Bhimbetka

We have found Bhimbetka cave paintings older than 40,000 years in the middle of the thick forests in Madhya Pradesh. Hindu civilisation is at least 40,000 years old. Westerners divided the Hindus by putting racial elements.

So, I will conclude that Kikata is Bihar which is known from the oldest part of Rig Veda.

Shrikant G Talageri who has done detailed research in the Vedas, also identified Rig Vedic Mandalas 6, 3, 7 and early part of First Mandala as the oldest hymns. And Kikata (Bihar) of third Mandala is also part of this oldest part of the Rig Veda.

xxx

Source books- Woolner commemoration Volume, 1940;

The Rigveda, A Historical Analysis by Shrikant G Talageri,2000

Rig Veda translation by R H Griffith (with my inputs)

—subham— 

 tags- Kikata, Magadha, Bihar, Rig Veda, Geography

Amazing Geographical Knowledge of the Vedic Hindus!!

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2015/05/18 › amazing-ge…

18 May 2015 — But foreign “Scholars” described them as tribes! The Great War was described in detail in several hymns in the Rig Veda, but not mentioned in …

Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-1 (Post No. …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2021/06/28 › rivers-in-th…

28 Jun 2021 — A geographical feature of the Indus descending from the defiles of Dardistan is expressed in the grammatical formation ‘Daaraadi Sindhuh‘, …

Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi-2 (Post No. …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2021/06/28 › rivers-in-th…

28 Jun 2021 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Rivers in the Rigveda and Panini’s Ashtadhyayi- …

HIMALAYAS IN THE RIG VEDA AND TAMIL SANGAM …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2022/05/12 › himalayas-i…

12 May 2022 — The Vedas mentioned elephants which are not found in Europe. The Vedas insisted water for all the ceremonies from birth to death.

Tribes in the Rig Veda; Mystery of Hill Tribes of India – Part …

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2016/07/25 › tribes-in-the…

25 Jul 2016 — The oldest religious book in the world is the Rig Veda which is in Sanskrit. It covers a huge geographical area—from Iran to Gangetic plains …

in Rig Veda | Tamil and Vedas

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › in-rig-veda

It can now be proved even by geographical evidence, that Zoroastrians had been settled in India before they immigrated into Persia ……….. That the Zoroastrians …—subham—

tags- Kikata, Magadha, Bihar, Rig Veda, Geography

மீண்டும் வைத்தீஸ்வரன்கோயில் ! குல தெய்வ வழிபாடு ஏன்? (Post No.11,865)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,865

Date uploaded in London – –  3 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கிறிஸ்தவ நாடுகளில் பேட்டைக்குப் பேட்டை பெரிய சர்ச் இருக்கும்; அவரவர் பேட்டையில் உள்ள சர்ச்சுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவர். அந்தந்த Parish Priest பாரிஷ் குருவுக்கு வரும்படி கிடைத்துவிடும். இன்னும் சில நாடுகளில் வரிப் பிடித்தம் போல சம்பளத்திலேயே சர்ச்சுக்குப் பணம் போய்விடும்.

இந்துக்களும் இதே முறையை வேறு வழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர் . பெரிய மன்னர்கள் கோவில்களைக் கட்டி கொஞ்சம் மானியமும் விட்டுச் சென்றனர். ஆனால் அதை சேதமடையாமல் பாதுகாக்கும் பணியை ஊர் மக்களிடம் விட்டுச் சென்றனர். அந்தந்த ஊர் மக்கள், உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் முதலில் பணம் கொடுக்க வேண்டியது குல தெய்வத்துக்குத்தான் .

பல குடும்பங்களில் பல தடைகளும், குறைகளும், சண்டை சச்சரவுகளும் முளைப்பதற்குக் காரணம் குல தெய்வத்தை மறப்பதுதான்.

இது எனது  கற்பனை அல்ல. நான் தரிசித்த சுவாமிஜிக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நல்ல ஜோதிடர்கள் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே அவர்களுக்கு அருள் தரும் குல தெய்வத்தின் பெயரைச் சொல்லிவிடுவார்கள் .

கோமதி என்றால் சங்கரன் கோவில்,சுவாமிநாதன் என்றால் சுவாமி மலை , வைத்திய நாதன் என்றால் வைத்தீஸ்வரன் கோவில், அரங்கநாதன் என்றால் ஸ்ரீரங்கம் என்று குத்துமதிப்பாகச் சொல்லுவது அல்ல. அதை யாருமே செய்யமுடியும்.. ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே அவரவர் தெய்வங்களைக் காட்டிவிடும்.

என்னுடைய அண்ணன் சீனிவாசன், லண்டனுக்கு (August 1990)  வந்தபோது நான் வேலை  பார்த்த பிபிசி அலுவலத்துக்கு அழைத்துச் சென்றேன். ஒலி பரப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருக்காக ஜோதிடம் சொன்னார். பேஸ் ரீடிங் FACE READING முறையில்; ஆளையோ போட்டோவையோ பார்த்துச் சொல்லிவிடுவார் . ஒரு கிறிஸ்தவ ஒலி பரப்பாளரைப்பார்த்து உங்களுக்கு முருகன் குல தெய்வம் என்றார் . அவருக்குக்ச் சிரிப்பு தாங்கவில்லை. மிகவும் மரியாதையாக, என்ன ஸார் நானோ கிறிஸ்தன்; சரியாக இல்லையே எனறார் . பின்னர் ஒரு பெரிய தீ விபத்தில் நீங்கள் சிக்குவீர்கள் என்றார் என்னுடைய அண்ணன் ; அவருக்கு ஆச்சரியம் .

சார் , நான் நைஜீரியாவில் வேலை பார்த்த காலத்தில் பெரிய தீ விபத்திலிருந்து தப்பித்ததே கடவுள் புண்ணியம் ஸார் , என்று சொல்லி சட்டையின் கைப்பகுதியை உயர்த்திக்காட்டினார் . கை வெந்துபோன வெள்ளைத் தழும்புகள் இருந்தன ஆனால் முன்னரே நடந்ததை என் அண்ணன் நடக்கப்போவதாகக் கண்டார். அது ஒன்றே பிழை.

சில மாதங்களுக்குப் பின்னர் இலங்கை சென்றுவிட்டுத் திரும்பி வந்தார் . சுவாமிநாதன், உங்கள் அண்ணன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை . யாழ்ப்பாணத்தில் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு ஊர் முருகன் கோவில் பெயரைச் சொல்லி அங்கே போக வேண்டும் என்றார் . என்ன, அம்மா, நாம் கிறிஸ்தவர் ஆயிற்றே முருகன் எதற்கு என்று கேட்டதற்கு, குடும்பம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதற்கு முன்னர் அந்தக் கடவுள்தான் குல தெய்வம் என்று குறிப்பிட்டாராம் . இதை அவரே என்னிடம் சொன்னவுடன் , சென்னைக்குச் சென்ற என் அண்ணனுக்கு போன் செய்து சொன்னேன் .

அதே விஜயத்தின்போது, என் பரம எதிரி யைப் பார்த்து உங்களை யாராலும் அசைக்க முடியாது. முருகன் அருள் உண்டு என்று சொன்னார். வெளியே வந்தவுடன் நான் என்னுடைய அண்ணனைக் கோபித்துக் கொண்டேன் ; பரம எதிரி என்று தெரிந்தும் இப்படி ஆசீர்வாதம் கொடுத்துவிட்டாயே என்றேன்.

நானாக ஆசீர்வாதம் செய்யவில்லை. அவர் என் முன்னே நின்றவுடன் அவருடைய அம்மா சொன்ன கந்த சஷ்டிக் கவசம்தான் தெரிகிறது என்றார்

ஆகவே உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் செய்யும்  பிரார்த்தனைகளும்  வீண் போகாது. கவசம் போல அவர்களை சுற்றி நின்று காக்கும்.

எங்கிருந்தாலும் குல தெய்வக்  கோவிலுக்கு வந்து தரிசியுங்கள் ; குல வழ க்கப்படி பொங்கல் வையங்கள்; முடி இறக்குங்கள் ; ஆடு வேண்டுமானாலும் வெட்டுங்கள்; அந்தக் கோவில் சீரும்சிறப்புடனும் விளங்க உதவுங்கள்..

Xxx

1400 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பர் பெருமான் பாடிய தேவாரப்பாடல் இதோ:

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் 

    பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்

வாராத செல்வம் வருவிப் பானை

    மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்

தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்

    திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்

    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.  

பொருள் :

ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,

கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,

தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,

வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே  என்று புலம்புகிறார்  அப்பர்.

(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல்  நாயகி)

எங்கள் குல தெய்வமான பாலாம்பிகா சமேத வைத்யநாத சுவாமி எழுந்தருளிய வைதீஸ்வரன் கோயில் திருத்தலம் பற்றி இதே பிளாக்கில் பல முறை எழுதிவிட்டேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியான கட்டுரை இணைப்பையும் கீழே கொடுத்துள்ளேன் .

சென்ற 2023 பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கி பேரக்குழந்தைக்கு முடியெடுத்தோம் . எங்கள் குடும்ப முதல் மொட்டை வைத்திய நாதனுக்கு; இரண்டாம் மொட்டை திருப்பதி வெங்கடாசலபதிக்கு ..ஹரியும் சிவனும் ஒன்னு ; அறியாதவன் வாயில மண்ணு!

எங்கே உள்ளது?

தமிழ் நாட்டில் மாயூரம் அருகில் உள்ளது.

என்ன கோவில் ?

சிவன் கோவில்

வேறு என்ன சிறப்பு?

அன்னை பாலாம்பிகா சந்நிதியைத் தவிர, செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருகன் சந்நிதி, அங்காரகன் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி ஆகியன முக்கியமானவை .

நாங்கள் ஒவ்வொருமுறை இந்தியாவுக்குச் செல்லும்போதும், தமிழ்நாட்டில் நுழைந்தால் வைத்யநாதன் தரிசனம் இல்லாமல் வருவதில்லை ; காரணம் எங்கள் குல தெய்வம்!!!

கணபதி அர்ச்சனை துவங்கி அருகிலுள்ள அங்காரகன் (செவ்வாய் கிரகம்), பின்னர் வைத்தியநாதன், பாலாம்பிகா, செல்வமுத்துகுமார சாமி, தன்வந்திரி முடிய ஆறு அர்ச்சனைகள் செய்வோம்.

முன்னதாக, புகழ்பெற்ற குளத்தில், வழுக்கி விழாமல், மிக ஜாக்கிரதையாக கால் கழுவி , தலையில் நீரைத் தெளித்துக்கொண்டு பின்னர் கோவில் வழிபாட்டுக்கு வருவோம்

அதற்கு  சற்று முன்னர் உப்பு, மிளகு வாங்கி காணிக்கையாக செலுத்துவோம். ஒரு சாந்து உருண்டை பிரசாதம் கொடுப்பார்கள். அது நோயை எல்லாம் தீர்க்கும்.

நேர்த்திக் கடன் உள்ளவர்கள் வெள்ளியில் ஆன உடல் உறுப்புகளை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவார்கள். உண்டியலில் பணம் போடுவது அவரவர் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தது ; அதே போலத்தான் அய்யர் தட்டில் தட்சிணை போடுவதும்.

வாராத செல்வத்தைப் பெற, தீராத நோயைத் …

tamilandvedas.com

https://tamilandvedas.com › வார…

 1 Jan 2023 — … பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் …

—subham—

Tags-குல தெய்வம், வழிபாடு, அவசியம், வைத்தீஸ்வரன் கோயில்

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 3 (Post No.11,864)

MIRACLE BABY AYA

She was found by rescuers more than 10 hours after the quake hit, her umbilical cord still connected to her dead mother. Her uncle, Khalil al Sawadi, helped to rescue her and took her to hospital, where officials named her Aya – meaning “a sign from God” in Arabic.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,864

Date uploaded in London –   3 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் இரண்டாவது கட்டுரை 11807 என்ற கட்டுரை எண்ணாக 15-3-23 அன்று வெளியிடப்பட்டது. 

காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 3

ச.நாகராஜன் 

பிப்ரவரி ஆறாம் தேதி. வருடம் 2023. 

துருக்கியின் மோசமான தினம் அது. கோரமான பூகம்பம் துருக்கியைத் தாக்கியது. ஏராளமானோர் பலி ஆகினர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்; வெளியே வர முடியாமல் தவித்தனர். உயிரையும் இழந்தனர். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என பால் வித்தியாசமோ அல்லது வயது வித்தியாசமோ, அந்ஸ்து பேதமோ இல்லாமல் காலன் அனைவரையும் தன் பாசக் கயிற்றினால் பிடித்துக் கொண்டான். 

ஆனால் காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான் என்பதற்கான ஒரு அதிசய சம்பவமும் இந்த கோரமான பூகம்ப நிகழ்வில் ஏற்பட்டது. 

ஒரு குழந்தை இடிபாடுகளுக்கு அடியில் பத்து மணி நேரம் கிடந்தது. அதன் தாயார் இறந்து போனார். ஆனால் குழந்தையோ அத்தனை கோரத்திலும் உயிருடன் இருந்தது.

 குழந்தையின் போட்டோ வெளி உலகிற்கு வந்த போது அதன் தொப்புள் கொடி அப்படியே இருந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். அதுவே அந்தக் குழந்தையின் உயிரைக் காத்தது.

 டாக்டர்கள் விரைந்து வந்து குழந்தையைச் சோதித்து குழந்தை நல்ல நிலையில் உயிருடன் இருப்பதை உறுதி செய்தனர். உடனடியாக அந்தக் குழந்தை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அது ஒரு பெண் குழந்தை.

 அந்தப் பெண் குழந்தையை யார் வளர்ப்பது என்ற கேள்வி உடனடியாக எழுந்தது.

ஆயிரக் கணக்கானோர் குழந்தையை வளர்க்க முன் வந்தனர்.  ஆனால் குழந்தை இரத்த சொந்தம் தான் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அதனுடைய அத்தை, மாமாவிடம் தரப்பட்டது. குழந்தையின் மாமாவான கலில் அல் சவாடி, “ எனது குழந்தை, அந்தக் குழந்தை என்று வேறுபாடே கொள்ள மாட்டேன்” என்று உறுதி கூறினார்.

அந்தக் குழந்தை அதன் அம்மாவான அஃப்ராவின் பெயராலே அழைக்கப்படுகிறது.

அதிகாரிகள் அந்தக் குழந்தைக்கு அதை மீட்டவுடனேயே தந்த பெயர்

ஆயா”.

“ஆயா” என்றால் அராபிய மொழியில் அற்புதம் என்று பொருள்.

சவாடி மற்றும் அவரது மனைவி ஹாலாவின் வீடும் கூட பூகம்பத்தில் தவிடு பொடியானது. தனது உறவினர்களுடன் தான் அவர்கள் வசிக்க நேர்ந்திருக்கிறது.

துருக்கி மட்டுமல்ல, உலகமெங்கும் இந்தக் குழந்தை ஒரு ஆனந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்னவோ உண்மை தான்.

 பிரம்மாண்டமான கோரமான பூகம்பத்தில் ஆயிரக் கணக்கானோர் பலியாக, ஆயிரக்கணக்கில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து தவிடுபொடியாக பல மணி நேரம் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிருடன் வந்த குழந்தை “ஆயா”  – ஒரு அற்புதம் – தானே!

 விதியின் வழிகள் விசித்திரமானவை. கடவுளின் போக்கும் காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டது.

 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான் – வரவே மாட்டான்!

**

ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் சாமியார் விமர்சனமும்! (Post No.11,863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,863

Date uploaded in London – –  2 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட நேரமாக இருந்தது. இந்த முறை காஞ்சி காமாட்சி கோவில் , காமகோடி மட த்தில் சங்கராச்சாரியார் சமாதிஆகிய  இரண்டையும் மட்டும் தரிசித்துவிட்டு 12 மணிக்குள் ஓரிக்கை மணி மண்டபத்தை அடைந்தோம். இன்னும் அரை மணி நேரம் திறந்திருக்கும் என்பதால் சட்டைகளைக் கழற்றிவிட்டு மேல் துண்டுடன் மகாபெரியவர் சிலை இருக்கும் மண்டபத்தை அடைந்தோம். ஏராளமானோர் பூக்கள் பழங்களுடன் வந்திருந்தனர்.

வெளியே எண்கோண வடிவ குளம் இருப்பதற்கான போர்டு இருந்தது. அதைக்கூ டப் பார்க்க முயலவில்லை. ஏனெனில் அதை விட அற்புதமான காட்சி மணி மண்டபத்திலேயே காணக் கிடைத்தது. அதாவது பிராமணச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சம்பிரதாய குருகுல முறைப்படி வேதம் படித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களை சட்டை செய்யாமல் வேதம் படிப்பதில் முனைப்பாக இருந்தனர். அ வர்களுடைய அனுமதியைக் கேட்டுவிட்டு , புகைப்படம் எடுத்தேன். ஒரு மாமி மட்டும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றார் . நான் வேதம் பரவுவதை ஆதரிப்பவன்; இப்படியோர் நல்ல பணி நடப்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா என்றேன். அவரும் பதில் பேசவில்லை . படிப்போர் பெண்களாக இருந்திருந்தால் கட்டாயம் அவர் சொன்னதைக் கேட்டிருப்பேன். ஆனால் ஆண்கள் என்பதால் எடுத்தேன்.. பின்னர் அவர்கள் அனைவரும் சந்நிதிக்கும் வரிசையாக வந்தனர் .

வேதத்தின் ஒரு கிளை (shaka) யையும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (Ancillary subjects) ஒருவர் கற்றுத் தேற வாழ்நாள் முழுதையும் செலவிடவேண்டும். அதற்குத் துணிந்து அங்கே வந்திருந்த இளைஞர்களுக்கு காமாட்சி அன்னையின் அருளும் காஞ்சிப் பெரியவரின் பரிபூரண ஆசியும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் வேதத்தில் நம்பிக்கையுடைய நம்மைப் போன்றோர் நன்கொடை தந்தும் வேறு பல வழிகளில் உதவியும் வேதாகம  கல்வியைப் பரப்ப வேண்டும்.

நானும் ராமர் பாலம் கட்ட அணில் உதவியதுபோல கொஞ்சம் உதவினேன்.

xxx

மணி  மண்டப மகிமை

இது 2011ல்தான் பாலாற்றங்கரையில் வெங்கடேச அய்யர் என்பவரின் முயற்சியால் உருவானது. பல சதுர ஏக்கர் பரப்பில் கோவிலும் (மணி மண்டபம்) குளமும் ‘கோ’ (cow) சாலையும் அமைந்துள்ளது ; பெரிய கோபுரமும் பெரியவர் வாழ்ந்த 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 100 தூண் மண்டபமும் பாண்டிய, சோழ , பல்லவ கட்டிட  பாணியில் அமைக்கப்பட்ட்டுள்ளன. பெரிய நந்தி, பெரிய மணி , சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள், எண்கோண குளம், நடுவில் மண்டபம் எல்லாவற்ரையும் அமைக்க அவர்கள் எத்தனை அரும் பாடு பாட்டார்களோ !.

புதுப்புது கோவில்கள், புதுப்புது சிலைகள் அமைப்பதைவிட 1000 ,2000 ஆண்டு பழமை உடைய கோவில்களை பராமரிக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆயினும் 100 ஆண்டு வாழ்ந்து காஞ்சிக்கும் இந்து மதத்துக்கும் புகழ் சேர்த்த மஹா பெரியவருக்குக் காஞ்சியில் மணி மண்டபம் அமைத்தது சாலப்பொருத்தமே..

Xxx

இந்து மதத்தில் உண்மைச் சாமியார் உண்டா?

கொஞ்ச காலத்து முன்னர் எனக்கு ஆங்கிலத்தில் ஒரு ஈமெயில் email வந்தது.

ஐயா /  Sir

நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து மெத்த மகிழ்ச்சி . எனக்கும் ஒரு நல்ல சாமியாரைப் பார்க்க ஆசை. யாராவது ஒருவர் பெயரைச் சொல்லி, அவர் இருக்கும் முகவரியையும் தந்து உதவுங்கள் என்று எழுதி இருந்தார்.

நான் அவருக்குப் பணிவுடன் பதில் எழுதினேன். ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கேள்வியைக் கேட்டிருந்தால் காஞ்சிப் பெரியவர் பெயரைச் சொல்லி முகவரி கொடுத்திருப்பேன். அதற்கு முன்னர் ரமண மகரிஷி, ராம கிருஷ்ண பரமஹம்சர் முதலியோர் இருந்தனர். இப்போது அப்படி திறந்த குடிசையில் வாழும் சாமியார்கள் இல்லாததால் நான் துணிவுடன் யார் பெயரையும் சொல்ல மாட்டேன்.

கட்டாயம் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர்களை எழுதினால் நீங்கள் எனக்கு 100 துணைக் கேள்விகளை எழுப்பித் துளைத்து எடுத்து விடுவீர்கள்.

அவர் ஏன் காரில் போகிறார்?

அவர் ஏன் கூலிங் கிளாஸ் அணிகிறார்?

அவருக்கு எதற்கு எலக்ட்ரானிக் கேட் செக்யூரிட்டி?

அவர் ஏன் பல மாடிக்கட்டிடத்தில் வசிக்கிறார் ?

அவர் ஏன் ஆண்களையும்,பெண்களையும் தனித்தனியே தனது அறைக்கு அழைக்கிறார்?

இப்படி 100 கேள்விகள் கேட்பீர்கள்; நானும் அவர்களுடன் வாழாததால் உங்களுக்கு உண்மையான பதில்களைத் தர இயலாது. காஞ்சிப் பெரியவர், ரமணர் முதலிய பெரியோர் விஷயத்தில் இந்தக் கேள்விகளே எழாது.

ஆகையால் நீங்களே பிரபல மடங்களுக்குச் சென்று உண்மைப்பொருளைத் தேடுங்கள் ; கட்டாயம் சிருங்கேரி, காஞ்சி போன்ற  மடங்களில் பெரியார்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வு திறந்த குடிசையில் இல்லாததால் நீங்களே சென்று ஐயம் தெளியுங்கள் என்றேன்.

xxx

இங்கே, காந்திஜி சொன்ன விஷயம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது.

ஓ  காந்திஜி அவர்களே! தினமும் மாலையில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது, எதற்காக இரண்டு இளம்பெண்களின் தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு போகிறீர்கள்? கைத்தாங்கல் கொடுக்க வேறு ஆளே கிடைக்கவில்லையோ.? என்று ஒருவர் கடிதம் எழுதினார்.

அவருக்கு காந்திஜி பணிவுடன் பதில் எழுதினார். மிகவும் நியாயமான கேள்வி. இதற்கு நான் எத்தனை நீளமான பதில் எழுதினாலும் நீங்கள் நம்பாது போகலாம். தயவு செய்து  என்னுடன் சில நாட்களுக்காவது வந்து தங்கிப் பாருங்கள் என்று.

இப்படி இன்று எத்தனை தலைவர்கள் எழுத முடியும் ? சிந்தித்துப் பாருங்கள்

xxxx

உங்களிடம், உங்கள் 20 வயது மகனோ மகளோ இப்படி நல்லவர் யார் எனக்குக்  காட்டுங்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?

அப்படியே நீங்கள் பதில் சொன்னாலும் அவர்கள் எதிர்க் கேள்வியோ, புதிர்க் கேள்வியோ போடாமல் நீங்கள் சொல்லுவதை அப்படியே ஏற்பார்களா? எண்ணிப் பாருங்கள் .

xxx

சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்

அடடா, முடிப்பதற்குள் வேறு இரண்டு விஷயங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன . ரிக் வேதக் கிளை (சாகை) ஒன்றை முழுதுமாகக் கற்றுத்  தேர்ந்து காஞ்சி மஹா சுவாமிகளிடம், சால்வை, பசுமாடு, தங்கக்காசு பெற்றவர் கூத்தனூர் சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகள். மதுரை டி .வி. எஸ் நிறுவனத்தார் அவரை ராமாயண சொற்பொழிவுகளை நிகழ்த்த அழைப்பார்கள்.அவர் தங்கும் நாட்களை நீடிக்கச் செய்து எங்கள் வீட்டுக்குப்  பக்கத்திலுள்ள கிருஷ்ணாராயர் தெப்பக்குளத்தெரு ஆஞ்சனேயர் கோவிலிலும் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தச்  சொல்லுவார்கள் . நாங்கள் மதுரை வடக்கு மாசி வீதி, குட்ஷெ ட் தெருக்களில் வசித்த காலங்களில் எங்கள் வீட்டில்தான் தங்குவார். நாங்களும் தினமணிப் பத்திரிகையில் அவருடைய உபன்யாசங்களை வெளியிட்டு வந்தோம் .

அவர் உத்தமோத்தமர்களே ! என்று சொல்லி உபன்யாசத்தைத் துவங்குவார். என் அருகில் தினமும் அமரும் ஒரு அன்பர். இங்கு எவன் உத்தமன்; என் உள்பட எல்லோரும் அயோக்கியர்கள் என்பார். அவருடைய ஹானஸ்டியை HONESTY மெச்சி நானும் ‘ஆமாம் சாமி’ போடுவேன்.சமயச் சொற்பொழிவு கேட்போரிடையே இந்த நிலை  என்றால், வேறு இடங்களில் கேட்கவே வேண்டாம்.

Xxxx

சுவாமி சாந்தானந்தாவின் ஸத்யமான வாக்கு

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் , காடுகளில் தவத்தை முடித்துக்கொண்டு பொது சேவையில் இறங்கிய காலம். எப்போது மதுரைக்கு வந்தாலும் எங்கள் வீட்டில் பிட்சை (அன்னம்) ஏற்றுவிட்டு என் தந்தை வெ . சந்தானத்திடம் ‘தினமணி’க்கான செய்திகளைக் கொடுத்து விட்டுப்போவார். பிரமாண்டமான சஹஸ்ர சண்டி யக்ஞத்தை ஏற்பாடு செய்த சமயம். அப்போது திராவிடக் கழகத்தினர் , யாகத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அதை எனது தந்தை அவரிடம் சுட்டிக்காட்டியபோது,

அவாள் ஏன் அப்படிச் செய்யறாள் ? நான் ஸத்யமான வாக்கைத்தானே சொல்லறேன் ;

நான் சொல்றது ஸத்யமான வாக்கு ,ஸத்யமான வாக்கு  என்று திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

அவர் போன பின்னர் நாங்கள் எல்லோரும் அடக்கடவுளே, உலக நடப்புகளை அறியாத அப்பாவி (INNOCENT) சாமியாராக இருக்கிறாரே என்று அதிசயப்படுவோம். நெடிய உருவம். முகத்திலோ ஆயிரம் வாட் பல்பு 1000 WATT BULB போட்டது போல தேஜஸ். நீண்ட சடையோ 100 கிலோ வெயிட் WEIGHT  இருக்கும். அது தரையில் புரள நடந்துவருவார். அற்புதமான காட்சி.

xxx

தேனி வேதபுரி ஆஸ்ரம ஓம்காரானந்தா

Following matter is repeated by me :

முன்னரே நான் எழுதியதை மீண்டும் சுருக்கமாக எழுதி விடை பெறு கிறேன் . அண்மைக் காலத்தில் கொரோனா வியாதியால் திடீரென்று உயிரிழந்த உத்தமர் , பேரறிஞர், தேனி நகர ஓம்காரானந்தா ஆவார் . அவரை இரண்டு முறை லண்டனுக்கு அழைத்து உபன்யாசங்களை ஏற்பாடு செய்தேன் . மூன்றாவது முறை அவரே டாக்டர் சொன்னதால் லண்டன் பயணத்தை CANCEL கேன்சல் செய்தார்.

அவருக்கு லண்டனில், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு ஏற்பாடு செய்தேன்.

முதல் நாள் போன் PHONE  செய்து,  நாளை எவ்வளவு கூட்டம் வரும்? எத்தகைய ஆடியன்ஸ் AUDIENCE  என்று தெரிந்தால் சுவாமிகளிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவேன் என்றேன்.

அவர் சொன்னார் : தம்பீ, கவலைப்படா தீங்க ; தமிழ் ஸ்கூல் பிள்ளைகள் 100 பேரையும் ஆசிரியர்கள் அழைத்து வந்துவிடுவார்கள்.

இதைக்கேட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே! அவர் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்தவர். வேத வேதாந்தங்களின் கரை கண்டவர். சின்னப் பிள்ளைங்க வருவாங்கன்னு சொல்றீங்களே !என்றேன் (டெலிபோனில்)

அவர் சொன்னார்; தம்பீ ! நீங்க உண்மையான சாமியார் ஒருவர் இந்தியாலேருந்து வரார்னு சொன்னீங்க. . எங்க பிள்ளைங்க எல்லாரும் சினிமாவிலே வேஷம் போட்டு வரும் சாமியாரத்தான் பாத்திருக்காங்க. அதானாலத்தான்….. என்று இழுத்தார்.

ஒரு நொடியில் அவர் என் ஞானக் கண்களைத் திறந்தார். உண்மையான , திறந்த வாழ்வு உடைய சாமியார்களை நம் சிறுவர்களுக்குக் காட்டினாலே போதும். அவர்கள் பெரிய, அடுக்கு மொழிச் சொற்பொழிவுகளை பேச வேண்டும் என்று அவசியமில்லை.! அது ஞான ஒளியைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை .

உண்மைச் சாமியார்களைத் தேடுவோம்அவர்களையே நாடுவோம்

–subham—

Tags- உண்மைச் சாமியார் , ஓரிக்கை மணி மண்டபம், சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ,  சுவாமி சாந்தானந்தா, ஓம்காரானந்தா

ஓட்டுப் போட டிப்ஸ் தரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி! (Post 11,862)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,862

Date uploaded in London –   2 APRIL 2023                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge. 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஓட்டுப் போட டிப்ஸ் தரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி!

ச.நாகராஜன்

ஶ்ரீ பி.கே.பாசு என்பவர் இந்திய அரசாங்கத்தில் செக்ரட்டரி பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.

 அவர் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு கடிதத்தை நண்பர்களுக்கும் நாட்டில் வாழும் சகாக்களுக்கும் எழுதியுள்ளார்.

அது இது தான்:

நண்பர்களே, சக தேசவாசிகளே

ஒரு ஐஏஎஸ் ஆபிஸராக பணியாற்றிய நான் எல்லா கட்சிகளிடமிருந்து சம அளவில் தூரத்திலேயே இருந்து வந்திருக்கிறேன்.

எனது முதலும் முற்றிலுமான விஸ்வாசம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எனது மனச்சாட்சிக்கும் தான்.

எனது பணிக்காலத்தில் ஏராளமான அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

எனக்கு பணி செய்ய ஒதுக்கப்பட்ட மாநிலம் பீஹார். அங்கு கர்பூரி தாகூர், ஜகந்நாத் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், பிந்தேஸ்வரி டுபே, பகவத் ஜா ஆஜாத், சச்சிதானந்த சிங், லல்லு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோரை முதல் மந்திரிகளாகப் பார்த்திருக்கிறேன்.

மத்திய அரசிலோ என்றால், கல்பநாத் ராய், என் கே பி சால்வே, வேணுகோபாலாசாரி, ஒய் கே ஆலக், அருண் சௌரி, பி. சிதம்பரம் ஷரத் பவார் ஆகியோரை எனது மந்திரிகளாகப் பார்த்திருக்கிறேன்.

இது தவிர, ப்ரணாப் முகர்ஜி, ஜஸ்வந்த் சிங், அருண் ஜெய்ட்லி ஆகியோரையும் மந்திரிகளாகப் பார்க்க வேண்டியிருந்தது,

 ஆனால் இந்த யாரும் என்னை நினைவு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

தேவே கௌடா, ஆர் கே குஜ்ரால், நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாயி, மன் மோஹன் சிங் ஆகியோரையும் பிரதம மந்திரிகளாக நெருக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

நான் அக்ரிகல்சுரல் செக்ரடரியாக பணியாற்றிய பின்னர் 2012 மே மாதம் பணி ஓய்வு பெற்றேன்.

மேலே கூறியவற்றால் ஓரளவு போதிய அனுபவம் பெற்றவன் தான் நான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் பதவிக்கு வந்த பிரதம மந்திரியின் பணி பற்றி நான் கவனித்து வருகிறேன். உண்மையைச் சொல்லப் போனால், சென்ட்ரல் அட்மினிஸ்ட்ரேடிவ் டிரிப்யூனலில் ஒரு அங்கத்தினராக இருந்து ஓய்வு பெற்றவன் நான்.

நமது பிரதம மந்திரியைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதற்கான காரணம் இந்த  மனிதரிடம் சுபாஷ் சந்திர போஸ், லோகமான்ய பால கங்காதர திலகர், சர்தார் வல்லப் பாய் படேல் போன்றவர்களிடம் இருக்கும், இதர தலைவர்களிடம் இல்லாத ஒரு தேசீய வெறி இருப்பதைப் பார்க்கிறேன்.

நான் பிரதம மந்திரி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவரைப் பார்க்க விண்ணப்பித்தேன். 2017 மே மாதம் CATஇலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இதைச் செய்தேன்.

ஓய்வு பெற்ற பின் எந்த வித பணியையும்   நான் அடைவதற்காக அவரைப் பார்க்க விரும்பவில்லை என்பதைத் தெளிவு படுத்தினேன்.

குறிப்பிட்ட தேதியான 22 ஆம் தேதி ஜூலை 2017இல் அவரைச் சந்தித்தேன்.

அவர் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து என்னை வரவேற்றார். 

இரு கைகளாலும் என்னை இந்திய முறைப்படி வரவேற்றார்.

15 முதல் 20 நிமிடங்கள் வரை அவருடன் இருக்க முடிந்தது. நான் தான் அதில் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கவனமாக எனது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்பொழுது குறிப்பாக தேவையான கேள்விகளைக் கேட்டார்.

நான் எழுந்த போது அவரும் எழுந்து இரு கரங்களாலும் 

 எனது கரங்களைக் குலுக்கினார்.

அவருடன் இருந்த நேரம் முழுவதும் மிகுந்த மரியாதையுடன் என்னை நடத்தினார். 

இப்படிப்பட்ட ஒரு மரியாதையை ஒருபோதும் வெறேங்கும் நான் கண்டதில்லை. இப்படி ஒரு சாமானியனுடன் இந்திய பிரதம மந்திரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வே எனக்கு இல்லை.

ஆக நண்பர்களே, எல்லோரையும் எனது நெடிய பணிக் காலத்தில் நான் பார்த்து விட்டேன்.

இவர் ஒரு  sui generis!

(ஆம் ஒப்பற்ற ஒரு தனிப்பெரும் மனிதர்!!)

உலகில் இந்தியாவிற்கு கர்வமான தனி ஒரு இடத்தைத் தர இங்கு இருக்கிறார்.

அவரது முதலும் முடிவுமான முன்னுரிமை நாடு தான்!

அவரது நெருங்கிய உறவினர்கள் எப்படி இப்போது வாழ்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்ட விஷயங்களுக்கு அவர் எப்படி தைரியமாக முடிவை எடுத்துள்ளார் என்பதைப் பாருங்கள் :

ஜி எஸ் டி, வங்கி திவால் சட்டம், ஸ்வச்ச பாரத் திட்டம், ஆயுஷ்மான் திட்டம், விவசாயிகளின் இன்ஷூரன்ஸ் திட்டம் டி பி டி, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், கிராமப்புற மின் இணைப்பு,  நாட்டின் ஒவ்வொரு மூலைக்குமான சாலை இணைப்பு,  அரக்கத்தனமான பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது, பயங்கரமான  ட்ராகனை முடக்கியது, கட்டமைப்பில் உயர ஏறும் கோலாகலம், நமது பாதுகாப்பை வலுப்படுத்துவது, உலகில் இந்தியாவின் சித்திரத்தை உயர்த்துவது.

இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.