Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 10
காவேரி ஆறு உற்பத்தி ஆனதும் கொங்கு மண்டலத்திலேயே!
ச.நாகராஜன்
முன்னொரு காலத்தில் பார்வதி தேவியாரின் திருமண நாளில் தேவர் முதல் யாவரும் மேருமலையில் திருமண விழாவிற்காக ஒருங்கு திரண்டனர். ஏராளமான சுமை ஏறியதால் வடதிசை அழுந்தியது.
தென் திசையோ மேல் எழுந்தது. பூமியைச் சமனாக்குமாறு அகத்தியரை நோக்கிச் சிவபிரான் கட்டளையிட்டார்.
தமிழ்த் தேர்ச்சியுற்று அகத்தியர் காவிரி நதியைக் கையில் உள்ள கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு கொங்கு நாட்டை அடைந்தார். சூரபத்மன் முதலியோரின் துன்பத்துக்கு ஆற்றாத இந்திரன் வேற்று உருவம் கொண்டு சீர்காழிப் பதியில் நந்தனவனத் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தான்.
நீர் இன்றிச் செடிகள் காயிந்திருந்தமை கண்டு வருத்தமுற்று ஆனைமுகப் பிள்ளியாரை வேண்டினான். வெண் காக்கை வடிவு கொண்ட விநாயகப் பெருமான், அகத்திய முனி வைத்திருந்த கமண்டலத்தைக் கவிழ்த்தார். உள்ளே இருந்த காவேரி நதி நிலத்தில் பீறிட்டுப் பெருக்கெடுத்து சீர்காழி வழியே ஓடியது.
இந்த வரலாற்றைப் பெருமையுடன் கொங்குமண்டல சதகம் 10ஆம் பாடலில் வழங்குகிறது.
சீரார் வளவ னிலம்புன நானாடாச் செழிப்புறவும்
பேரார் வரநதி பெய்துறு பாவம் பிரிந்திறவும்
ஏராரும் பொன்னி புவியுள முன்ன குடமுதவி
வாரார் பெருமை படைத்தது நீள் கொங்கு மண்டலமே
கொங்குமண்டல சதகம் பாடல் 8
பாடலின் பொருள் :
சோழ மண்டலம் நீர்ப்பாசனமாகவும் கங்கை நதி தனது பாவங்களை நீக்கிக் கொள்ளவும் வாய்த்தது காவேரி நதி.
அந்தக் காவேரி நதி அகத்திய முனிவர் கரத்திலிருந்து விழுவதற்கு முதலில் இடம் கொடுத்து உதவியது கொங்கு மண்டலமே.
ஸ்காந்தத்தில் காவிரி நீங்கு படலத்தில் இந்த வரலாறு இப்படி பதிவு செய்யப்படுகிறது:
Part two of Ramayana paintings at Ramaswami Temple in Kumbakonam, Tamil Nadu
Since the pictures are in three rows and the rope fence is before the wall, my photographs are not in order and not in full.
This post is to highlight the significance of such a magnificent art. Temple must bring out all the pictures in book format, view card format, fridge format and curtain format etc.
Had it been Britain or Italy or Spain or Portugal they would have made big money out of the art.
The temple has beautiful sculptures as well. Please see my Tamil articles for the Dasavatara and Ramayana sculptures. Over 200 Ramayana pictures are there. It is believed they are hundreds of years old.
We must preserve them for future generations.
–Subham—
Tags -Ramayana paintings, on walls, Ramaswami temple, part two, Kumbakonam
This is my umpteenth trip to India; may be 40th trip!
Every time I make it a point to visit some new temples; seeing my parents to get their blessings and having Darshan at our Kula Devata temple in Vaitheeswaran Koil and my favourite temple Madurai Meenakshi temple, where we used to play hide and seek in the dark corridors 60 years ago , was also on the itinerary. Now my parents are no more and Meenakashi temple has become Tirupati Balaji temple; no easy access.
So we covered 40 places from Vaitheeswarankoil to Tiruvannamalai.
xxx
We landed in Madras called Chennai on 12th February 2023. We covered 40 temples, Adhistanams, Ashrams in three weeks time.
Kumbakonam is six hours drive (including lunch break) from Chennai. We landed at Srivathsam, an old age community centre for mostly Brahmins and only vegetarians at 3-30 pm . There is a lodge cum restaurant called Divine Inn. You get true Kumbakonam filter copy and typical brahmin food from 5-30 am to 8-30pm.
If you book your room through a resident there, you get discount as well. We paid Rs.1200 per day for a double bed room (AC) instead of 1500 per day. Just six kilometers from Kumbakonam. They are building another community centre called Kausthubam.
My friend Mr V S Srinivasan asked us to get ready by 4-30 pm. We visited six temples in five hours: Ramaswami temple, Chakrapani temple, Sarangapani temple (all Vishnu), Kumbeswar Temple, Nageswar temple and Karumbaayiram Pillaiyar/ Ganesh temple.
Xxx
Ramayana on walls
Ramaswami temple, though only 500 year old, is an art gallery of Ramayana. I posted 20 plus pictures of sculptures there yesterday. They are about Ramayana and Dasavatara. The temple belongs to Nayak Period.
The idols look majestic; no one can forget the Rama, Lakshmana, Bharata ,Satrugna with Sita Devi and Hanuman. The strange thing about these Murtis is Hanuman playing Veena with Ramayana book by his side. My policy is Not to take pictures of idols that are worshipped in the Garba Griha (sanctum sanctorum)
Today I post the Ramayana paintings on the wall in parts (Please all the parts); they need better preservation and better protection. If it is a cathedral in Rome or Madrid or Lisbon, they would have printed View cards, key chains, Coffee Cups, Scores of books with the temple pictures. The temple must print all the pictures in good quality and sell them to fund the temple.
தமிழில் பொருள்படைத்த , நகைச் சுவை மிக்க சமயச் செற்பொழிவுகளை நமக்கு வழங்கிச் சென்றவர் திருமுருக கிருபானந்த வாரியார் . அவர் ஆற்றிய சொற்பொழிவில் கேட்ட ஒரு கதை இதோ:–
( எனது சொற்களில் வடிக்கிறேன் ; பிழை இருப்பின் எமதே )
இந்த பூமியில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன. காக்கைக்கு மயிர் நரைத்து வெள்ளைக் காக்கை ஆனதுண்டா? பன்றிக்கு மயிர் நரைத்து வெள்ளைப் பன்றி ஆகிறதா? ஆனால் மனிதனுக்கு மட்டும் நரை வருகிறதே ஏன் ?
ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது .
என்னுடைய ஊர் காங்கேய நல்லூர்; அங்கிருந்து ஒரு வயதானவர் என்னைப் பார்க்க வந்தார். ஏன் மறுமணம் செய்யவில்லை என்றேன்? பையன்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார்
அவருக்கு நரை வந்தும் ஆசை விடவில்லை (மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது ).
யாருக்கு ஆசை விட்டது? நரையை மறைக்க கருப்பு டை Dye (சாயம் வேறு).
மிருகங்கள் உண்ணவும் உறங்கவும் வாழ்கின்றன
மனிதர்கள் எண்ணவும் (பிறருக்காக) இரங்கவும் வாழ்கின்றனர் .
ஏன் இறைவன் மனிதனுக்கு நரையைக் கொடுத்தான் ?
அதுதான் இறைவன் அனுப்பும் First Notice முதல் நோட்டீஸ் . உனது காலம் விரைவில் முடியப் போகிறது. இப்போதாவது இறைவனை நினை; நாலு பேருக்கு உதவி செய் .
கொஞ்சம் நாளுக்குப் பின்னர் கண்ணாடி தேவைப்படுகிறது .
அது கடவுள் அனுப்பும் Second Notice இரண்டாவது நோட்டீஸ்.
பின்னர் பற்கள் ஆட்டம் காணும். அது Third Notice from God மூன்றாவது நோட்டீஸ் .
அதற்கு அடுத்துவரும் நோட்டீஸ் Last Notice from God – மரணம் .
நரை வந்த பின்னரும் இறை – வனை நினையாவிட்டால் அது நமது பிழை.
வயதான மனிதனுக்குத் தள்ளாதவன் என்று ஏன் தெரியுமா பெயர் ?
அவன் எதையும் வேண்டாம் என்று தள்ளாதவன்!!
ஆசையை ஒதுக்கித் தள்ளாதவன்!!!
(தள்ளாத வயதில் பொல்லாத ஆசைகள்)
புதுமணத் தம்பதிகள் ரயில் பெட்டியில் உட்கார்ந்து இருக்கினறனர்; இவனோ தள்ளாதவன். அந்தப் பெண்ணை வெறித்து வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!
Xxxxx
கிழவி கதை
ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள் ; பொல்லாத கிழவி. எதையும் எடுத்துக்கொண்டு விடுவாள்; எதையும் யாருக்கும் கொடுத்ததில்லை ; தானம் கொடுத்ததில்லை ; அவளும் இறந்தாள் ; நரகத்துக்குச் சென்றாள் ; கடும் துயரம் . அந்தப் பக்கம் வந்த தேவ தூதரிடம் அப்பா , கெஞ்சிக் கேட்கிறேன்; என்னை இங்கிருந்து வெளியே எடு– என்றாள்
அவன் கேட்டான் – நீ எப்போதாவது தானம் தருமம் செய்து இருக்கிறாயா ? யாருக்காவது காசு போட்டு தருமம் செய்து இருக்கிறாயா?
பாட்டி சொன்னாள் : ஒரு குருடன் தட்டில் காலணா காசு போட்டேன் ; ஆனால் அவன் பார்க்க முடியாததால் அவன் தட்டிலிருந்து நாலணா எடுத்துக் கொண்டேன் .
அடிப் பாவி !!
தேவதூதன்: வேறு என்ன நல்லது செய்தாய்?
என்னிடம் ஒரு அணா இருந்தது; அந்தக் காலத்தில் அதற்கு 12 தம்பிடிகள். 12 வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டேன். அப்போது ஒருவர் வந்து வயிறு பசிக்கிறது என்றார் . நான் எதையும் கொடுக்கவில்லை. கடைசி வாழைப்பழம் பாதி அழுகி இருந்ததால் அதைத் தூக்கி எறிந்தேன். அவர் பாதி வாழைப்பழத்தைச் சாப்பிட்டுச் சென்றார் – என்றாள்.
அடக்கிழவி ! வா உன்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றான் தேவதூதன்.
நரகத்தில் ஒளியே கிடையாது; கும் மிருட்டு; இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த 4 பாவிகள் , நைஸாக கிழவியின் காலை பிடித்துக்கொண்டார்கள் ; சொர்க்கத்துக்கு வந்த கிழவி பெரிய ஒளியை, வெளிச்சத்தைப்பார்த்து மகிழ்ந்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒருவர் பின் ஒருவராக நாலு பேர் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மேலே வருவது.
டேய் ! யாரடாவன்? எனது அரை வாழைப்பழத்துக்கு நான் சொர்க்கம் செல்கிறேன். நீங்கள் எப்படியடா வர முடியும்? என்றாள்
அவள் மீண்டும் நரகத்துக்குள் விழுந்தாள் யாரோ ஒருவனுக்கு கொடுத்த அரை வாழைப்பழத்தை எனது என்று சொல்லி சொந்தம் கொண்டாடினாள் .
இதனால்தான் அருணகிரி நாதர் யான் , எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை கேட்டு திருப்புகழ் பாடினார்.
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
மெளிது சால மேலாக …… வுரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவ னாதீத …… மருள்வாயே
என்கிறார் அருணகிரிநாதர்
((எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் … நமனையும்
தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை
எளிது சால மேலாக உரையாடும் … மிகவும் எளிதான வகையில்
மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற
எனது யானும் வேறாகி … எனது என்ற மமகாரமும், நான் என்ற
அகங்காரமும் நீங்கி,
எவரும் யாதும் யான் ஆகும் … பிற பொருள்கள் யாவும் நானே
ஆகக்கூடிய
இதய பாவன அதீதம் அருள்வாயே … மனோ பாவத்திற்கு எட்டாத
பெரு நிலையைத் தந்து அருள்வாயாக.(தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்;kaumaram.com)
யான், எனது என்ற எண்ணம் அகல வேண்டும்; எல்லோருக்கும் உதவ வேண்டும்.
Xxxx
கவிழ்த்த பானையும் ; விரியாத பாய் மரமும்
மழையே பெய்யாத ராயல சீமையில் ஒரு நாள் மழை கொட்டித்தீர்த்தது . எல்லோரும் வீட்டிலுள்ள அண்டா , குண்டா, பானை, சட்டி எல்லாவற்றையும், ஓட்டிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் வைத்து நிரப்பிக்கொண்டு இருந்தனர் ; ஒரு கிழவி இருந்தாள் ; உடலை நகர்த்த முடியாத அளவு பலவீனம்;பேத்தியை அழைத்தாள் :
அடியே வீட்டிலுள்ள பானைகளை அந்த ஓட்டுத் தண்ணீர் விழும் இடத்தில் வையடி ; தண்ணீர் எல்லாம் வீணாக்கப் போகிறதே என்றாள் .
அந்தச் சிறுமி ‘கேரம் போர்டு’ carrom board விளையாடிக்கொண்டிருந்தாள் ; வேண்டா வெறுப்பாக நாலு பானைகளை நாலு இடங்களில் வைத்தாள்
மழையும் நின்றது ; பாட்டி ஆர்வத்தோடு மெல்ல நகர்ந்து வந்து பார்த்தாள் ; பானையில் ஒரு சொட்டுக்கூட தண்ணீர் இல்லை. ஏன் ?
அந்த அறியாத சிறுமி பானைகளைத் தலைகீழாக கவிழ்த்து வைத்திருந்தாள்
நாமும் அது போலத்தான் இருக்கிறோம். இறைவன் அருள் மழை பொ ழிகிறான் ; நாம் கவிழ்த்த பானைகளாக இருக்கிறோம் ; திறந்த மனது இருக்க வேண்டும் ; மனது அகன்று விசாலமாக இருக்க வேண்டும் .
xxx
நாகப்பட்டினத்தில் 12 பாய் மரக்கப்பல்கள் இருந்தன.
துறை முகத்தில் கடலில் அந்த மரக்கப்பல்கள் நின்றன ;
நல்ல காற்று அடித்தது ; நாலு கப்பல்கள் அழகாகச் சென்றன .
நகராத 8 கப்பல்கள் காற்று ஒழிக ; காற்று ஒழிக ;என்று கோஷம் போட்டன .
அது காற்றின் பிழை அன்று; நான்கு கப்பல்களின் பாய் மரம் விரிந்து இருந்தன ; அவை காற்றின் சக்தியால் அழகாக மிதந்து சென்றன; மீதி எட்டுக் கப்பல்களின் பாய் மரம் ஒடுங்கி இருந்தன .
நாமும் அப்படித்தான் இருக்கிறோம்; இறைவனின் அருள் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது ; அதை ஏந்துவதற்கு நமக்கு விரிந்த மனம், திறந்த மனம் வேண்டும்
(கடவுள் ஒழிக என்று கோஷமிட்டுப் பலன் இல்லை).
நாம் எல்லோரும் இறைவனின் அருள் மழையையும் , அருள் காற்றையும் பெற வேண்டும் .
எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் . அருணகிரிநாதர் வேண்டியது போல யான், எனது என்ற எண்ணத்திலிருந்து விடுதலை பெறவேண்டும்
(வாரியார் சொற்பொழிவில் கேட்டதில் நினைவில் நின்றதை எழுதியுள்ளேன் ).
அனைவரும் யூ டியூபிலும் , ஒலித் தட்டு , ஒலி நாடாக்களில் கேட்டு மகிழ்க.
–subham—
Tags- கிருபானந்த வாரியார் , யான், எனது, கிழவி கதை, கவிழ்ந்த பானை , பாய்மரக் கப்பல் , தள்ளாதவன், நரை , ஏன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹாபாரத மர்மம்!
இறைவன் கொடுத்த அங்கங்களைக் காப்பது எப்படி?
ச.நாகராஜன்
இறைவன் மனிதனைப் படைத்து பல அங்கங்களைக் கொடுத்திருக்கிறான். அதைக் காக்கும் விதத்தையும் பெரியோர் மூலமாக நம்மை அறிய வைக்கிறான்.
மஹாபாரதத்தில் விளக்கப்படாத ரகசியம் எதுவுமில்லை.
இந்த அங்க ரகசியங்களையும் சாந்தி பர்வம் 275வது அத்தியாயத்தில் விளக்கமாகக் காணலாம்.
கைகள் முதலானவற்றைக் கொண்டு நான்கு துவாரங்களைக் கொண்டது மனித சரீரம்.
சரீரம், இந்திரியம், மனம், புத்தி என்ற நான்கு முகங்களைக் கொண்டவன் புருஷன்.
வேதவாக்கியத்தால் விராட், ஹிரண்டகர்ப்பன், அந்தர்யாமி, சுத்தம் என்கின்ற நான்கு விதமாக ஜீவன் அடைகிறான்.
கைகளும் வாக்கும் உதரமும் ஜனன ஸ்தானம் என்கின்ற குறியும் அந்தத் தேவர்களுக்கு வாயில்கள்.
அந்த வாயில்களை ஒவ்வொருவரும் காக்க வேண்டும்.
எப்படிக் காப்பது?
கை, கால்களைப் பாதுகாப்பது எப்படி?
புத்திசாலியாக இருக்கும் ஒருவன் சொக்கட்டான் காய்களால் சூதாட்டம் ஆடக் கூடாது.
பிறருடைய பொருளைக் கவரக் கூடாது.
உறவினரல்லாதவருடைய ஹவிஸைக் கிரகிக்கக் கூடாது. அதாவது அவருக்கு யாகம் செய்விக்கக் கூடாது.
கோபமடைந்து ஒருவரை அடிக்கக் கூடாது.
இப்படி இருந்தால் அவனுடைய கால்களும் கைகளும் நன்கு பாதுகாக்கப்பட்டவையாக ஆகும்.
வாக்கைப் பாதுகாப்பது எப்படி?
கடும் சொல்லைச் சொல்லக் கூடாது.
வீண் வார்த்தை சொல்லக் கூடாது.
கோள் சொல்லக் கூடாது.
மற்றவரைக் குறித்து அபவாதம் சொல்லக் கூடாது.
சத்தியத்தையே விரதமாகக் கொள்ள வேண்டும்.
அஜாக்கிரதையின்றி மிதமாகப் பேச வேண்டும்.
இப்படி இருந்தால் ஒருவனுடைய வாக்கு நன்கு காக்கப்பட்டதாகும்.
உதரவாயிலைக் காப்பது எப்படி?
உணவு உட்கொள்ளாமல் இருக்கக் கூடாது.
அதிக உணவையும் உட்கொள்ளக் கூடாது.
நாக்கு சபலமின்றி இருத்தல் வேண்டும்.
உணவைத் தேடி பெரியோர் வரத்தக்க வகையில் இருத்தல் வேண்டும்.
சரீர யாத்திரைக்குத் தேவையான அளவு உணவை உட்கொள்ள வேண்டும்.
இப்படி இருப்பவனது உதரவாயில் (வயிறு) நன்கு காக்கப்பட்டதாகும்.
ஜனன ஸ்தானம் எனப்படும் குறியைக் காப்பது எப்படி?
பிறன் மனைவியை விரும்பக் கூடாது.
ருதுவில்லாத காலத்தில் தனது மனைவியை உறவுக்கு அழைக்கக்கூடாது.
பத்நி விரதனாக இருக்க வேண்டும். அதாவது விவாம் செய்து கொள்ளாத பெண்களை விலக்க வேண்டும்.
இப்படிப்பட்டவனுடைய ஜனன ஸ்தானம் எனப்படும் குறி நன்கு காக்கப்பட்டதாகும்.
இப்படி எந்த புத்திசாலியினுடைய குறி, உதரம், கைகள், நான்காவதான வாக்கு ஆகிய நான்கு வாயில்களும் நன்கு காப்பாற்றப்படுகின்றனவோ அவன் தான் இரு பிறப்பை உடையவன்.
இந்த துவாரங்களைக் காப்பாற்றாதவனுக்கு அனைத்துமே பயனற்றவை ஆகி விடும்.
இது கபிலருக்கும் ஸ்யூரமரஸ்மிக்கும் நடந்த உரையாடலில் இடம் பெறுகிறது.
இந்த உரையாடலில் ஏராளமான ரகசிய விஷயங்களைப் பற்றி முற்றிலுமாக அறிய முடிகிறது.
என்று பாடத் தோன்றுகிறது . முதலில் பக்தியுடன் ராம பிரான் குடும்பத்தைப் பார்த்து, ரசித்து, , பக்தி செலுத்திவிட்டுப் பின்னர் ராமாயணக் காட்சிகளைக் காட்டும் சிற்பங்களையும் சித்திரங்களையும் மணிக்கணக்கில் ரசிக்கலாம் .
ஆயினும் பிப்ரவரி 19ம் தேதி (2023) தேதியன்று 5 மணி நேரத்துக்குள் ஆறு கோவில்களை பார்க்கத் திட்டமிட்டதால். என்னுடைய I pad ஐ பேட் மூலம் முடிந்த மட்டும் படம் பிடித்தேன் .
(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ….
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே- பாவை விளக்கு திரைப்படப் பாடல்).
XXX
முதலில் ராமசாமியைத் தரிசிப்போம். மாலை நாலரை மணி வாக்கில் கோவிலுக்குள் நுழைந்துவிட்டோம். பட்டாசார்யார் சரியாக 5 மணிக்கு சந்நிதியைத் திறந்தார். அற்புத தரிசனம்.
ராமன் பட்டாபிஷேகக் காட்சியில் லக்ஷ்மணன், சீதா தேவி, பாரத, சத்ருக்னன் ஆகியோரை ஒருங்கே காணலாம். அவர்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்க ஆஞ்சநேயர் வீணாகானம் செய்கிறார். ராமாயண பாராயண புஸ்தகமும் வைத்திருக்கிறார். இராமச்சந்திர மூர்த்தியும் சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கின்றார்கள். பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, இலக்குமணன் கோதண்டத்தை தாங்கிய வண்ணம் கரங்குவித்து காட்சி தருகிறார். இது தஞ்சை நாயக்கர் காலத்தில் தோன்றிய கோவில். ஆகையால் மங்களாசாசனம் செய்யப்படவில்லை; அதாவது ஆழ்வார்கள் அறியாத புதிய கோவில் இது. சுமார் 500 ஆண்டுக்குட்பட்டதே . ஆனால் உருவத் திருமேனிகள் கம்பீரமாகக் காட்சி தருகின்றன. பார்த்தால் மறக்க முடியாத அற்புத வடிவங்கள்.
xxxx
கோவிலா ? கலைக்கூடமா ?
சந்நிதிக்கு முன்னர் உள்ள மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. அங்கு ராமாயணக் காட்சிகளையும் தசாவதார உருவங்களையும் தனித் தனியே தூண்கள் தோறும் காணலாம்.
பிரகாரத்தில் ராமாயணக் கதையை சித்திர ராமாயணமாக வரைந்து வண்ணமும் தீட்டியுள்ளனர். ஒவ்வொரு படத்தையும் ராமாயணக் கதை அறிந்தவர்கள் நன்றாக ரசிக்கலாம்.
சிற்பங்களுடன் சுமார் 60 தூண்களும்,, சுவர்களில் 200 சித்திரங்களும் இருக்கின்றன.
XXXX
இந்த இடத்திற்கு இன்னும் கொஞ்சம் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை. சித்திரங்களை நெருங்காமல் இருக்க கயிறு கட்டி இருக்கிறார்கள். அது படம் எடுப்பதை பாதிக்கிறது . சில அடி தூரத்தில் கம்பி வேலி போட்டால் படங்களையும் பாதுகாக்கலாம் . மற்றவர்கள் படமும் எடுக்கலாம். கோவில் நிர்வாகமே அங்குள்ள சிற்பங்களையும் படங்களையும் அச்சிட்டு விற்கலாம்.
மஹாஸ்வாமிகள் பிங்கள வருடம் ஆச்விஜ மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி திதி – 13-11-1917 அன்று பெங்களூர் நகரில் கைபு ராமா சாஸ்திரிகள் மற்றும் வெங்கடலக்ஷ்மி அம்மாள் ஆகிய புண்ணிய தம்பதிகளுக்கு மூத்த புத்திரனாக அவதரித்தார்கள்.
அவருக்கு ஶ்ரீநிவாஸன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
ப்ராஜபதி வருடம் – 1931ஆம் ஆண்டு அவர் சந்யாஸ ஆஸ்ரமத்தை ஏற்றார்.
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் குருவின் தரிசனத்திற்காக 24-8-1954 அன்று சிருங்கேரி வந்தார். தரிசனம் பெற்றார். மகிழ்ச்சியுற்றார்.
ஏராளமான ஞானிகள், தலைவர்கள், சாதகர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் உலகெங்கிலுமிருந்து வந்து அவரை தரிசித்தார்கள். அருளாசி பெற்றார்கள்.
சுக்ல வருடம் பாத்ரபத சுக்ல ஸப்தமி – 21-9-1989 அன்று அவர் விதேஹ முக்தி அடைந்தார்கள்.
அவர் 21-12-1982 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரமஹம்ஸி கங்கா ஆசிரமம் என்ற இடத்தில் ஒரு மாபெரும் கூட்டத்தில் அருளுரை வழங்கினார்.
அப்போது அம்பாளைத் தகுந்த வகையில் தியானம் செய்து எவ்வாறு மக்கள் தங்களுக்கு வேண்டியதை அடையலாம் என்ற ரகசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
நீண்ட ஆயுளை விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?
அதற்கான ஆதார பூர்வமான ஸ்லோகத்தை அவர் அப்போது கூறி அருளினார் இப்படி:
சீர்ஷாம்போருஹமத்யே சீதலபீயூஷவர்ஷிணீம் பவதீம் |
அநுதினமனுசிந்தயதாமாயுஷ்யம் பவதி புஷ்கலமவன்யாம் ||
தலையிலுள்ள தாமரையினுள் இருந்து கொண்டு அம்பாள் குளிர்ந்த அம்ருதத்தைப் பொழிவதாக யார் அனுதினமும் தியானிப்பார்களோ அவர்களின் ஆயுள் இவ்வுலகில் அதிகரிக்கும்.
ஆசார்யாள் பின்னர் லம்பிகா யோகம் என்னும் அதிசய யோகம் பற்றி விளக்கினார். சாஸ்திரம் மட்டுமின்றி, நமது அனுபவமும் கூட தலையில் ஒரு தாமரை இருப்பதையே உணர்த்துகிறது என்றும் அவர் அந்த உரையில் அருளினார்.
லலிதா சஹஸ்ர நாமத்தில் 105வது நாமமாக வரும் நாமம்:
ஸஹஸ்ராராம்புஜாரூடா
ஸஹஸ்ர (கணக்கில்லாத) தளங்களையுடையது ஸஹஸ்ரார பத்மம். ப்ரும்ஹ ரந்த்ரத்தின் கீழ் இருப்பது. அந்த பத்மத்தின் மேல் எழுந்தருளியிருப்பவள். (அங்கு வரும்படி செய்யப்பட்டவள்)
அடுத்த 106வது நாமமாகத் திகழ்வது :
ஸுதா ஸாராபி வர்ஷிணீ
மேலே சொல்லியபடி ஸஹஸ்ரார பத்மத்தின் நடுவிலிருக்கும் சந்த்ர மண்டலத்திலிருந்து அம்ருதத்தை (ஸமஸ்த நாடிகளிலும்)
பெருகும் படி செய்கிறவள்.
சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர்,
ஸுதாதாரா ஸாரை: சரணயுகலாந்தர் விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ:
– சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 10
என்று கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
இந்த ஸ்லோகத்தின் பொருள்:
தாயே! உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான
ஆதார சக்ரத்தை அடைந்து, த உருவத்தைச் சர்ப்பம் போல் வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.
இம்மாதிரி அம்ருதப்ரவாஹம் ஆவதைப் பற்றி சுருதியும் கூறுகிறது இப்படி:-
அம்ருதஸ்ய தாரா பஹுதா தோஹமானம் |
சரணம் கோ லோகே ஸுதிதாம் ததாது |
இந்த நாமமானது, ஸுதாதாராபிவரிஷிணீ என்றும் சொல்லப்படும்.
மனித குலத்தின் மீதுள்ள எல்லையற்ற கருணையால் அவ்வப்பொழுது தோன்றும் ஆசார்யர்கள் இப்படிப்பட்ட ரகசியங்களை உசிதமான சமயத்தில் எடுத்துரைத்து வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் நீடித்த ஆயுளுக்கான ரகசியத்தை இப்படி சிருங்கேரி மஹா ஸ்வாமிகள் எடுத்துரைத்துள்ளார்.
ஆதாரம் நன்றி : – யோகமும் ஞானமும் ஜீவன் முக்தியும்
சிருங்கேரி ஜகத்குருவின் ஆன்மீக சாதனை என்னும் தெய்வீக லீலை குறித்த விவரங்களை அருமையாகத் தரும் நூல்
கிடைக்கும் இடம் : ஶ்ரீ வித்யாதீர்த்த ஃபவுண்டேஷன், Sri Vidyatheertha Foundation, G 8, Sai Karuna Apartments, 49 Five Furlong Road, Guindy, Chennai 600032
போன் : 90031 92825
***
எனது தந்தையார் மதுரை தினமணி பொறுப்பாசிரியராக இருந்த போது அவ்வப்பொழுது சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் அருளுரையைப் பிரசுரிப்பது வழக்கம்.
ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் மதுரைக்கு விஜயம் செய்த போது எங்கள் இல்லத்தில் எழுந்தருளி பரிபூரண ஆசிகளை வழங்கியதோடு ஒவ்வொருவருக்கும் ப்ரசாதம் கொடுத்து அனுக்ரஹித்தார்.
People believed that the River Kaveri took a right turn here and so it is called by this name. Others believe that the trunk of the elephant faced god Vinayaka is turning or curving towards right is the reason for the name. Both may be right.
Appar , one of the Four Great Saivite Singers, composed hymns on the God Siva here.
Siva temple famous for its architectural pillars and granite windows.
Ganesh here is called White Vinayaka = Swetha Vinayaka.
Moreover its made up of sea shells (Sea Animal shells and white in colour)
There is a beautiful Ashta Bhuja Kali- Eight Armed.
The temple needs renovation and refurbishment.
I took some pictures from outside.
I always avoid taking the pictures of the idols.
We went there in February 2023.
There are paintings/ pictures on the wall; they need protection and preservation as well.
Swamimalai , one of the Six Abodes of Lord Skanda/ Murugan/ Kartikeyan is very near.
கும்பகோணத்துக்கு பிப்ரவரி 19, 2023 அன்று மதியம் 3 மணிக்குச் சென்றோம். இரவு எட்டரை மணிக்குள் 6 கோவில்களைத் தரிசித்தோம். அதாவது ஒரே கல்லில் ஆறு மாங்காய்கள் !
ராமசாமி,சக்ரபாணி, சாரங்கபாணி , கரும்பாயிரம் பிள்ளையார் , நாகேஸ்வரர், கும்பேஸ்வரர் கோவில்கள்.
கும்பகோணத்திலும் சுற்று வட்டாரங்களிலும் உள்ள கோவில்களைத் தரிசிக்க பல வாரங்கள் தேவைப்படும்.
முதலில் சாரங்க பாணி கோவிலையும் சக்ரபாணிகோவிலையும் தரிசிப்போம்.
குடந்தை சாரங்கபாணி கோவிலுக்கு பாஸ்கர க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
மூலவர் சாரங்க பாணி, ஆராவமுதன்
தாயார் – கோமளவல்லி , படிதாண்டாப்பத்தினி
ஹேம ரிஷியின் புதல்வியாகத் தோன்றிய கோமளவல்லியை பெருமாள் மணந்ததாக ஐதீகம்
தீர்த்தம் –ஹேம புஷ்கரிணி (பொற்றாமரை)
திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை
இங்கு சயன திருக்கோலத்தில் இருந்தாலும் இந்த வடிவம், உத்தான சாயி என்று அழைக்கப்படுகிறார். திருமழிசை ஆழ்வாருக்காக “கிடந்தவாறு எழுந்திருக்க ” முயலும் நிலையில் இருப்பதால் இந்தப் பெயர்.
பெருமாளுக்கு எதிரே நதி தேவதைகள் வணங்குவது இந்தக் கோவிலின் சிறப்பு.
இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், நாதமுனிகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்கத் துவங்கியதும் இங்குதான். திருவா
ய்மொழிகளைக் கேட்டவுடன் அவருக்கு இந்த எண்ணம் உதித்தது.
மேலும் ஒரு சிறப்பு திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குத் தரிசனம் கொடுத்ததாகும். இந்தக் கோலத்தைக் கருவறையில் காணலாம்.
பெருமாளின் சித்திரைத் தேர் மிகவும் பிரசித்தமானது. பெருமாள் சந்நிதியே தேர் வடிவ மண்டபத்தல் சக்கரங்களுடன் காணப்படுகிறது மஹேந்திர பல்லவனால் கட்டப்பட்ட மண்டபமும் இருக்கிறது.
ஆழ்வார் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும் தொகுத்த நாதமுனிகள் பெருமாளை ஆராவமுதாழ்வான் என்று போற்றினார் . நம்மாழ்வார் திராவிட சுருதி தர்சகர் என்கிறார்.
ஏழு ஆழ்வார்கள் 51 பாசுரங்கள் பாடி மங்களா சாஸனம் செய்த பெருமை உடையது.
Xxxx
சக்ரபாணி கோவில்
சக்ரபாணி கோவிலில் , பெருமாள் அஷ்ட புஜங்களுடன் காட்சி தருகிறார்.சாரங்க பாணியும் சக்ர பாணியும் சகோதர்கள் என்று கருதப்படுவதால் பல உற்சவங்கள் சேர்த்து நடைபெறுகின்றன.
தாயார் விஜயவல்லி , சுதர்சனவல்லி
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது
xxxx
12 கருட சேவை
கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.
முதலாம் சரபோஜியின் (கி.பி.1712-1728) பித்தளை உருவம் கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையில் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது.
விஷ்ணுவுக்கு 3 கண்கள்
மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தலம் இது.