8.3 feet long snake skin on Shivalinga found on 16-5-2002
7.5 foot long snake skin found on 21-5-2002 at goddess shrine
snake skin is framed and kept in the shrine
I visited over 40 Temples, Ashrams and Adhistanams (Samadhis) during my February 2023 India Trip. Of the 40++ places some are remarkable for their architecture , statues and miracles. I have written in detail in Tamil. I will just list only the miracles here.
Around Kumbakonam in Tamil Nadu, we have Nava Graha temples. I visited Tirupaampuram (Tiru+ Paampu+ Puram= Mr Snake Town). It is famous for Rahu and Ketu (Chaayaa Grahas= Shadows of Earth and Moon). Sanskrit word Graha means celestial objects with Gravity. English words Gravity, Grip, Grab etc came from Graha in Sanskrit. So it is not Nine “Planets”. It is Nine “celestial objects” with Gravitational Power.
xxxx
In Tiru Pampuram, we see Rahu and Ketu in special sanctum sanctorum. Siva is the main deity. All Hindu Gods and Goddesses are associated with SNAKES. English words Snake and Serpent are Sanskrit words (S+naaka=Snake; Sarppa= Serpent)
In Tiru Paampuram, Shiva Sannidhi (Sanctum sanctorum= Graba Graha) has two Pictures framed with glass. One shows the snake skin 8 foot long that was found in the Goddess Shrine. Another was found on Shiva Linga as garland in 2002. Both are displayed there.
Hindus look at snakes from two different angles. When Shiva wears it as his belt or garland, it means He controls all the Five senses like a Yogi/ saint. So the Five headed Snakes found in sculptures and Thevaram hymns represent Five Senses. If one controls them or channelise them one becomes a saint.
From another angle Snake represents Kundalini Power. Westerners do not know the A B C D of such a mighty power. If one can raise it from the bottom of mental body to the top, one gets liberation (from the cycle of birth and death); Half way through the body, one gets miraculous powers. This will distract many and push them downwards in life. That is why we see many BABAS in jails today.
Snake Towns from Kashmir to Kanyakumari
To teach proper Hinduism, our forefathers constructed SNAKE TEMPLES from Kashmir o Kanyakumari. We see
it in Ananta Nag (snake) district of Kashmir where we have Sesha Nag ( snake) lake and Nagerkoil in Tamil Nadu very near the land’s southern most tip. In between, we see thousands of SNAKE TOWNS in India- from Nagpur in Maharashtra to Nagoor in Tamil Nadu.
I visited three Snake Temples during this Indian Visit. One of them is above mentioned Tiru Paampu Puram = Holy Snake Town or Mr Snake god Town.
You will see huge snake statues erected at the back of the temple. The reason is Hindus associate Snake and Child birth. If one has killed a snake in one’s previous birth, he or she may not have a child in the next birth. So astrologers advise them to go to Snake Temples (Rahu and Ketu Grahas) and pacify the snakes with Pujas and other rituals.
Xxx
I went to another snake temple Tiru Naeswaram ( Holy or Mr Snake God Town). Here Rahu Graha (shadow Planet which cause Grahanas/eclipses by its shadow. It is believed even the milk that was poured on the statue becomes blue. The blue colour represents poison.
Xxx
In Kumbakonam, we have another Shiva temple named Nageswarar Temple. Nageswarar is Shiva with snake as belt or garland. One of the famous 12 Jyotir Lingas also has this name Nagesam.
Kumbakonam temple has an architectural wonder. There we see the Nataraja Mandapa designed as a SUN CHARIOT. One will be reminded of such Sun Chariots in Konark and Hampi. Four elephants and two horses pull that enormous chariot where Goddess Sivakami (consort of Nataraja/ Shiva) plays rhythmic beats and Lord Vishnu play music on his flute.
Kumbakonam Nageswaraar Temple Stone Chariot (This picture is used from another blog; thanks)
Xxx
All these SHIVA temples are portrayed in Thevaram Hymns. That means they are at least 1500 years old.
Xxxx
Tirumeeyachur Goddess Temple
In between Snake Temples we made it a point to visit Lalithaambikai Temple at Tiru Meeyachur. There we saw the beautiful goddess Lalitha Ambikai. This temple is famous because devotees believe that Lalithaa Sahasra Naamam (1000 name of Goddess) originated here. Hayagreeva ( neck as long as of a Horse) gave the 1000 names to Saint Agastya. Today millions of women recite this hymn everyday.
We saw some unusual things there. It is a Shiva temple. Goddesss’ right leg is folded, and left leg is left downward. Devotees offer bangles and sliver or gold anklets as offerings in the temple for fulfilling their vows. 11 or eleven and a half inch long anklet (Kolusu in Tamil) is accepted when it is brought with a proper tax paid receipt. Around Rs 4000 will be the fees for Abhisheka (bathing) and Prasad in Anklet Puja. Three-day advance notice is required for such a ritual. It will be done in the morning for 3 to 4 hours. We got some glass bangles as Prasad.
PARROT WONDER at TIRU MEEYACHUR
After we had the Darshan (Viewing of God) of Shiva we circumambulated the Prakara/ corridor. The priest in the Shiva shrine came running towards us and pointed out a parrot sitting at the mini tower of the shrine (Vimaanam in Sanskrit). He told us that it is a good and auspicious sign to see the sitting parrot which whispers the messages at the ear of Gods in the temple. He advised us to think about all the good things in the world so that they will be fulfilled by the Goddess Lalitha. Whether one believes in such miracles or not, thinking of Good things and praying for them is a positive sign. We did it as we are told.
நாகேஸ்வரன் = பாம்பு ஈஸ்வரன் என்பது சிவ பெருமானின் திரு நாமங்களில் ஒன்று . 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று நாகேசம். அது தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ளது .
பிப்ரவரி 2023 இந்தியப் பயணத்தில் கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரன் கோவிலுக்கும் சென்றுவந்தோம். முன்னதாக திருப்பாம்புரம், திரு நாகேஸ்வரம் தலங்களைத் தரிசித்தோம்.
இன்று நாகேஸ்வரர் கோவிலை தரிசிப்போம்
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் பாடல்பெற்ற க்ஷேத்திரங்களில் ஒன்று. அப்படியானால் குறைந்தது 1500 ஆண்டுப் பழமை உடையது. இந்தக் கோவிலை நரகாசுரன், சூரியன் ஆகியோர் பூஜித்ததாக கோவில் வரலாறு சொல்லும். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரிய கிரணங்கள், மூலவர் சிலை மீது விழுகிறது. பல கோவில்களில் கர்ப்பக் கிரகத்துக்குள் சூரிய ஒளி புகும் வண்ணம் பிரம்மாண்டமான கோபுரங்களை எழுப்பிய தமிழர்களின் பொறியியலைக் கண்டு வியக்காதோர் எவருமில்லை . சில கோவில்களில் சந்திரனின் ஒளியும் இவ்வாறு விழுகிறது; அற்புதத்திலும் அற்புதம். இது இந்துக்களின் வானவியல் அறிவுக்கும் சான்று பகர்கிறது .
இந்தக் கோவில் அப்பர் பெருமானால் தேவார பாடலில் போற்றப்படுகிறது. அவர் இந்தக் கோவிலைக் குறிப்பிட்டு பாடுகையில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று சொல்லுவதால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு இருந்த பெயரையும் நாம் அறிய முடிகிறது. இது வில்வத்தில் தோன்றிய லிங்கம் என்ற நம்பிக்கையும் உளது (ஒருவேளை, வில்வ மரக் காட்டில் தோன்றியதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது என் சொந்தக் கருத்து ; இதே போல சூரிய ஒளி விழுவதால் சூரியன் பூஜித்த தலம் என்கிறார்கள் போலும்!)
சிவனின் திருநாமம் – நாகேஸ்வரர்
அம்மனின் திருநாமம்- பெரிய நாயகி
இந்தப் பெயருக்கு ஏற்றவாறு பெரிய கோபுரங்களை உடையது இந்தக் கோயில்.
தல மரம் – வில்வம்
தீர்த்தம் :சிங்கமுக தீர்த்தம். தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.
xxx
சிற்பக் கலைச் சிறப்பு – சூரிய ரதம்
இந்தக் கோவிலின் நடராஜ மண்டபம் , ஒரு தேர் போலவும் அதை 2 குதிரைகளும் 4 யானைகளும் இழுப்பது போலவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இது சூரிய தேவன் ஆகும். இதைப் பார்த்தவுடன் கொனாரக்கிலுள்ள சூரிய ரதம் நினைவுக்கு வரும். குடந்தை ரதத்தில் பிரமாண்டமான சக்கரத்தைக் காணலாம். அதன் 12 ஆரங்கள் 12 ராசிகள் ஆகும். இந்த நடராஜ மண்டபத்தில் நட ராஜன் டான்ஸுக்கு / நடனத்துக்கு சிவகாமி அம்மை தாளம் போடுகிறார்; விஷ்ணு மியூசிக் Music தருகிறார்; அதாவது குழல் Flute ஊதுகிறார்.
‘அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த நடம்புரியும் சித்திரப் பொற் பொது உடையான் கோலம் போற்றி, என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் பாடியதற்கு ஏற்ப அமைந்த சிலை வடிவோ என்னும்படி மிக்க அழகாக இருந்தது என்று வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே.
மகாமக உற்சவத்தின் போது இந்தக் கோவில் மூர்த்தியும் மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்குச் செல்லுவார்.
Xxx
‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்‘
‘பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்‘ என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராஜ சபை, சுற்றுச் சுவர்கள், சிங்கமுக தீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் சொம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டினார் .
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.
xxxxx
அப்பர் தேவாரம் – ஆறாம் திருமுறை (Please go to thevaram.org for full meaning)
பாடல் எண் : 1
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 2
கானல்இளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனல்இளங் கடுவிடையொன் றேறி யண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலும்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனல்இளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 3
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே-3
Ratha/ Chariot at Hampi
பாடல் எண் : 4
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே- 4
பாடல் எண் : 7
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
பாடல் எண் : 8
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
பாடல் எண் : 10
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
யிப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
Ratha/ Chariot at Konark
பாடல் எண் : 11
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலும்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே
–subham—
TAGS- குடந்தைக் கீழ்க்கோட்டம் , கும்பகோணம், நாகேஸ்வரர் கோவில், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், கல் ரதம் , பெரியநாயகி , சூரிய ஒளி, கர்ப்பக்கிரகம் , அப்பர் தேவாரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்திய சிற்பக் கலை!
ச. நாகராஜன்
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் சிற்பக்கலையை எடுத்து ஒரு ஆய்வை மேற்கொண்டோமானால் அதில் சிறந்து விளங்குவது பாரத தேசத்தின் சிற்பக் கலையே என்பது தெரிய வரும்.
ஆயிரக் கணக்கான கோவில்கள் பாரத தேசமெங்கு பரவி நிறைந்துள்ளன.
கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள் கலை நேர்த்தியுடனும் அறிவியலின் இன்றைய தொழில்நுட்பத் திறனை உள்ளடக்கியும் அமைக்கப்பட்டிருப்பது பிரமிப்பைத் தரும்.
எடுத்துக் காட்டாக மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அறிவியல் ரீதியிலான ஒலி அமைப்பை உள்ளடக்கிய திறனைக் கூறலாம்.
அக்னி புராணம், சிற்பி தனது கலையை உடனே உருவாக்கி விட முடியாது என்று உறுதி படக் கூறுகிறது.
ஒரு சிற்பத்தை வடிவமைப்பதற்கு முன்பாக முதல் நாள் இரவு அந்த சிற்பி உள்ளார்ந்து இறைவனை வழிபட வேண்டும் என்று அது கூறுகிறது.
“இறைவனுக்கு இறைவனே! எனது மனதில் உள்ளதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எனது கனவில் வந்து தெரிவி” என்று ஒரு சிற்பி வேண்டிக் கொள்ள வேண்டும் என்று அது வழி வகை கூறுகிறது.
ஹைதராபாத்திற்கு 60 மைல் தொலைவில் உள்ளது அஜந்தா. இதன் புகழை அறியாதவர் இருக்க முடியாது.
எல்லோராவில் உள்ள கைலாஸ் ஆலயம் பற்றி மும்பை ஆர்ட் காலேஜின் முதல்வராக இருந்த சாலமன் என்பவர் (ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில்) எழுதுகையில் கூறுகிறார் இப்படி:
“கைலாஸர் ஆலயத்தில் உள்ள பெரும் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்து ஹிந்து தெய்வங்கள், தேவதைகளைச் சித்தரிக்கிறது.
சுவர்க்கத்தில் உள்ள தேவதைகள் அங்கு சுவர்களில் மிதக்கின்றனர்.”
அடுத்து மைசூரில் உள்ள சோமநாத்புர ஆலயத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளைப் பார்த்து வியந்த யாத்ரீகர் ‘Through Town and Jungle’
என்ற தனது புத்தகத்தில் சோம்நாத்புர ஆலயத்தின் கோபுரத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் மனதை ஈர்க்கிறது என்றும் ஒவ்வொரு சிற்பமும் அநேக வடிவமைப்புகளையும் சிற்ப நேர்த்தியையும் கொண்டுள்ளது என்றும் கூறி வியக்கிறார்.
ஹாவல் (Havell) என்ற எழுத்தாளர் தனது “Indian Architechture” என்ற நூலில் ஹிந்து கட்டிடக் கலை விற்பன்னர்கள் மட்டும் இல்லையெனில் ஒரு தாஜ்மஹாலோ அல்லது ஜும்மா மஜ்ஜித்தோ அல்லது மோடி மஜ்ஜித்தோ சிறப்புற இப்படி உருவாக சாத்தியமே இல்லை என்கிறார்.
ஹிந்து சிற்பிகளின் மேதையையும் புத்திகூர்மையையும் ஐரோப்பிய மற்றும் முகலாயர்கள் தங்களது மதத்தின் சிறப்பை உயர்த்திக் காட்டப் பயன்படுத்தியுள்ளனர் என்பது அவரது கூற்று.
அராபிய யாத்ரீகரான அல்பெரூனி ஹிந்து தேசத்தைப் பற்றிப் பாராட்டுவது ஒவ்வொருவரையும் வியக்க வைக்கும். தனது கூரிய பார்வையையும் தனது யாத்ரீக அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து அவர் வியந்து கூவுகிறார் இப்படி : “Our people when they see them, wonder at them and are unable to describe them much less to construct anything like them”
“நமது மக்கள் இவற்றைப் பார்க்கும் போது வியப்பு மேலிட, அவை போல அமைப்பது ஒரு புறம் இருக்கட்டும்,
அவற்றை விளக்கக் கூட முடியாமல் இருக்கிறார்கள்.”
கஜினியைச் சேர்ந்த சுல்தான் மஹம்மது மதுராவை அழித்த பிறகு தனது கஜினி கவர்னருக்கு எழுதினான் இப்படி: “இது போன்ற இன்னொரு அமைப்பு இன்னும் இருநூறு ஆண்டுகளானாலும் அமைக்கப்பட முடியாது!”. அவன் மதுரா நகரின் புகழுக்குக் காரணமான லக்ஷக்கணக்கான பக்தர்களைப் புகழ்ந்து ‘லக்ஷக்கணக்கான’ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறான்.
இப்படி பாரத தேசத்திற்கு வந்த யாத்ரீகர்களின் பார்வையையும் மேலை நாட்டு ஆய்வாளர்களின் ஆய்வையும் தனியாக எடுத்துத் தொகுத்து அலசி ஆராய்வோமானால் நமது தேசத்தின் சிற்பக் கலையின் பெருமை வர்ணனைக்கு அப்பாற்பட்டது என்பதை உணர முடியும்!
இப்படிப்பட்ட சிற்பக்கலையின் மகோன்னதத்தை உணராதவர்கள் நாம் என்பதை வருத்தத்தோடு உணர்வதோடு மட்டுமல்லாமல், இதைப் பாராட்டி வியந்து நமது சந்ததியினருக்கு இந்த மாபெரும் உண்மையைத் தெரியப்படுத்த தவறியவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்பதையும் சோகத்தோடு சொல்லவும் வேண்டும்.
இந்த நிலையை மாற்ற ஒவ்வொருவரும் முயன்று அனைவருக்கும் நமது புகழோங்கிய நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.
பிப்ரவரி 2023-ல் திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்களுக்கு விஜயம் செய்தேன். திருப்பாம்புரத்தில் சிவன் மீதும், அம்மன் மீதும் ஏழரை அடி , எட்டு அடிப் பாம்புகள் வந்து அவற்றின் சட்டைகளை மாலையாக அணிவித்துச் சென்றதை நேற்று கண்டோம் .
திருநாகேஸ்வரம் மற்றோர் பரிகார தலம். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு , பலனை அடைகிறார்கள். இது ஒரு சிவன் கோவில்.
திருநாகேஸ்வரம் கோவில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
சுவாமியின் திரு நாமம் – சண்பகாரண்யேஸ்வரர் , நாகநாதசுவாமி
ஒரு காலத்தில் இந்த இடம் சண்பக மரங்கள் நிறைந்த வனம் ஆக இருந்தது
கிரி குஜாம்பிகை சந்நிதி தனியே உள்ளது. சுதையால் ஆன உருவம் ஆதலால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.
பிறையணிவாள் நுதல் அம்மை என்ற பெயருடைய தேவியின் கருவறையில் கார்த்திகை மாத சந்திரன் ஒளி புகும்.
இறைவன் சந்நிதியில் சங்க நிதி, பதும நிதி, மகா சாஸ்தா விக்கிரகங்களும் இருக்கின்றன .
XXXX
கோவில் மிகவும் பெரியது. நான்கு புறங்களும் கோபுரங்கள் உடையது . சூர்ய புஷ்கரணி இங்குள்ள திருக்குளம் ஆகும். தேவாரப்பாடல் பெற்றதால் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடைத்து. ஆதித்ய சோழன் காலத்திலிருந்து வரலாறு உடையது. சேக்கிழாரும், கோவிந்த தீட்சிதரும் போற்றிய தலம் இது .
சந்திரனும் சூரியனும் , ஐந்து தலை நாகமும் இங்கே பூஜித்ததாக ஐதீகம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவை நாச்சியார் சகிதம் தரிசனம் தருகிறார்.
ராகு பகவானுக்கு உள்ள தனி சந்நிதியில் மனித முகத்துடன் ராகு காட்சி தருவது வியப்பான விஷயம். ஏனெனில் பொதுவாக பாம்பு முகத்துடன்தான் ராகு சிலைகள் இருக்கும். ராகு காலத்தில் இங்கு பாலாபிஷேகம் செய்தால் திருமணத் தடைகள், குடும்பச் சண்டைகள், குழந்தை பிறவாமை முதலிய பிரச்சினைகள் தீருமாம் .
(தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.(FROM WIKIPEDIA))
XXX
இங்கு சேக்கிழாருக்கு சந்நிதி இருப்பதுடன் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவும் நடைபெறுகிறது
பெரிய புராணத்தை அருளிய சேக்கிழார், அவரது தம்பி பாலறாவாயர், தாயார் அழகாம்பிகை இங்கே உள்ளனர். சேக்கிழாரின் ஊர் சென்னையில் பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள குன்றத்தூர் ஆகும் . அங்கு சிவபெருமானுக்கு கோவில் கட்டி, அந்தக் கோவிலுக்கு திருநாகேஸ்வரம் என்றே பெயர் சூட்டினார். அவ்வளவு அன்பு இக்கோவிலின் இறைவன் மீது.
அங்கிருந்து அரை மைல் தூரத்தில் உள்ள நத்தம் என்ற இடத்தில் சிறிய குன்றின்மேல் சுப்ரமண்யர் ஆலயமும் கீழே சேக்கிழார் கோயிலும் உள்ளன.
XXX
நரேந்திர மோடி, நச்சினார்க்கினியர், ஐந்து தலைப் பாம்பு
திருநாகேஸ்வரம் தேவாரம் —
சம்பந்தர் , அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பட்ட தேவார பதிகங்கள் நிறைய தகவல்களைத் தருகின்றன .
கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாக ஈச்சரவ னாரே. 1 —அப்பர்
தமிழ் இலக்கியத்தில் அதிகமாக உரை எழுதிய பார்ப்பனன் நச்சினார்க்கினியன். மதுரை நகர பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியன் என்று போற்றப்பட்டவர் . அவருடைய நாமம் இந்த அப்பர் பாட்டில் வருகிறது.
XXX
மோடி= துர்கா தேவி
போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈச் சரவ னாரே. 8
5 தலை நாகம் = ஐந்து புலன்கள்
கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 9
XXXX
தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்
தலையவனை மலையவனை உலக மெல்லாம்
ஆயவனைச் சேயவனை அணியான் றன்னை
அழலவனை நிழலவனை அறிய வொண்ணா
மாயவனை மறையவனை மறையோர் தங்கள்
மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற
தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. 1 — அப்பர், ஆறாம் திருமுறை
XXXX
பாடல் எண் : 1
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.– அப்பர், ஐந்தாம் திருமுறை
XXX
1)
அரையினில் பாம்பை அணிகிற ஐயன் அவன்தாளை
விரைமலர் கொண்டு பணிகிற பத்தர் வினைபோக்கிக்
கரையினில் சேர்த்துக் கருணைசெய் ஈசன் கடிதேகும்
நரைவிடை ஏறும் நலம்தரும் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்
ஆதி சேடன் அன்று போற்ற அருள்செய்தான்
பாதி உடலைப் பார்வ திக்குப் பரிந்தீந்தான்
ஓதித் தொழுவோர் உள்ளத் துள்ளே உறைகின்ற
நாதி ஆவான் நலம்செய் நாகேச் சரத்தானே.– சம்பந்தர் தேவாரம்
TO BE CONTINUED……………………………..
TAGS– திரு நாகேஸ்வரம் , ராகு, பரிகார தலம் , சேக்கிழார் , நீல நிறம் , தேவாரம், மோடி, நச்சினார்க்கினியர்
உண்மை என்ற ஒன்று வரும் போது ஒவ்வொரு மனிதரும் “பொதுவான ஒரு அடிப்படையை” பின்பற்றுகின்றனர். இந்த உண்மை ஜன்னல் (“window of reality” ) மனித குலம் அனைத்திற்குமே பொதுவான ஒன்று தான்!
சுடு தண்ணீரின் உஷ்ணத்தை விட ஐந்து மடங்கு அதிக வெப்பமாக உள்ள எரியும் நிலக்கரி பரப்பட்ட இடத்தின் மீது ஒருவராலும் நடக்க முடியாது என்பதை அனைவரும் உண்மையே என்று ஒப்புக் கொள்வர். அதே போல ஒரு பொருளை மனமானது செல்வாக்குக்கு உட்படுத்த முடியாது என்பதையும் ஒப்புக் கொள்வர்.
ஆனால் இது நடக்கிறதே! பல இடங்களில் இது நிரூபிக்கப்பட்டும் இருக்கிறதே!!
ஒரு சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து நன்றாக ஓய்வான நிலையில் இருந்து தொலைதூரத்தில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ் காலத்தில் நிகழும் அல்லது வருங்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க முடியாது என்பதை அனைவரும் உடனே ஒப்புக் கொள்வர். அதுவும் நாம் ஐம்புலன்களில் காணும் அளவு துல்லியமாகக் காண்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்று உறுதிபடக் கூறுவர்.
ஆனால் ஆஸ்திரேலிய பூர்வ குடியினர் தங்களுக்கு இது சர்வ சாதாரணமான ஒன்று என்கின்றனர். இந்தப் “பரிசு” அவர்களிடம் காலம் காலமாக உள்ளது.
‘ரிமோட் வியூயிங்’ (Remore viewing) எனப்படும் தொலைதூரப் பார்வையை ஏராளமான ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அறிகிறார்கள். அனுபவித்தும் இருக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான சில தகவல்களைப் பெற இந்த தொலைதூரப் பார்வையாளர்களை அணுகுகிறார்கள்.
பல காலமாக நாம் ஏற்றுக் கொண்ட உண்மை ஜன்னல் (reality window) இனியும் கவைக்கு உதவாது. காலத்திற்கு உதவாது. அதை விட்டு வெளியில் வர பல விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.
சில நிபந்தனைகளின் பேரில் உங்கள் மனமானது இந்த வழக்கமான ஜன்னலை விட்டுத் தப்பி ஓடுகிறது. அதிகமதிகம் பேர்கள் தங்களது “இந்த நம்பவே முடியாத, நடக்கவே முடியாத” நிகழ்வுகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். பிரபஞ்சத்தின் பிரக்ஞை மாறுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க பெரிய அளவில் இந்த அனுபவங்களை பெரும்பாலானோர் பெறும் போது ‘நூறாவது குரங்கு’ என்ற கொள்கையின் படி ஒவ்வொருவரும் திடீரென்று இந்த விஷயங்களை நன்கு புரிந்து கொள்வர்; அதை சிலாகித்துப் பேச ஆரம்பிப்பர். இது எப்படி நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பதை ஷெல்ட் ரேக்ஸின் மார்போஜெனிக் ஃபீல்ட் தியரி விளக்குகிறது, (Sheldrake’s Morphogenic Field theory)
எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை!!!
ஏனெனில் கடந்த நூறு ஆண்டுகளில் மேற்கத்திய நாகரிகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக ஆகி விட்டது. தொழில்நுட்பம் மேம்பாடு அடைய அடைய நவீனமாக ஆக ஆக அதை அனைவருமே விரும்பத்தான் செய்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் தர்க்கத்தை அடிப்படையாக – லாஜிக்கை- கொண்ட ஒன்று.
நமக்கு உண்மையைக் காட்டும் ஒரே ஜன்னலின் அடிப்படை தர்க்கம் தான்.
இப்பொழுதைய தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நாம் இன்னொரு வித்தியாசமான தொழிநுட்பத்தைக் கண்டுபிடித்து விழிப்புணர்வைக் கொண்டோமானால், நம்மிடம் உள்ள சம்பிரதாயமான கருவிகளைக் கொண்டு நாம் காணப்போகும் புது உண்மைகளை அளக்க முடியாது எனில் அப்போது நாம் திகைக்கப் போகிறோம்! பிரமிக்கப் போகிறோம். ஏனெனில் நாம் பார்க்கும் வழக்கமான ஜன்னல் வழியான ஒரு பார்வை அல்ல!
ஆனால் இந்த மாற்றுத் தொழில்நுட்பங்கள் நம்மிடம் ஏற்கனவே உள்ளன. அது வரும் நூற்றாண்டின் விஞ்ஞானமாக அமையும். அவை இயற்கையில் உள்ள பல விசித்திரங்களைக் காணும்; காண்பிக்கும்!
ரெஸொனென்ஸ் (Resonance ) எனப்படும் ஒத்ததிர்வும் அவற்றில் ஒன்று. நிலையான காந்தத்தில் சுற்றி உள்ள காந்த பிரதேசம் இன்னொன்று.
இப்போதுள்ள க்வாண்டம் பிஸிக்ஸ் மூலம் செய்யப்படும் பயன்பாடுகள் நமக்கு விசித்திரமாகத் தோன்றும் பலவற்றில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்க இனி வரும் காலத்தில் நம்மை இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.
உதாரணத்திற்குச் சொல்லப் போனால் காலம் என்பது நிலையானது என்று கருதப்பட்டு வந்தது. அதாவது விநாடிகள், நிமிடங்கள், மணிகள் என்று ஒரே வேகத்தில் எப்போதும் டிக் டிக் டிக் என்று அடித்துக் கொண்டே செல்லும் ஒன்று என்று ஒவ்வொருவரிடமும் சொல்லப்பட்டது.
ஆனால் ஒரு அற்புதமான கருவி ஒன்று சில வருடங்களுக்கு முன்னர் டாக்டர் நிலோலை கோஜிரெவ் (Dr. Nilolai Kozyrev) என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது. அது காலத்தின் மிக மிக நுண்ணிய வேறுபாடுகளைக் குறிக்க வல்ல ஒரு கருவி. ஒரு சிறிய இயந்திர அல்லது இரசாயன நிகழ்வு சோதனைப்படுத்தப்படும் போது காலமானது காரணத்தின் பக்கம் மெலிதாகவும் அதன் விளைவாக ஏற்படும் காரியம் என்னும் விளைவின் பக்கம் அடர்த்தியாகவும் இருப்பது அந்தக் கருவியின் மூலம் காணப்பட்டு நிரூபிக்கப்பட்டு விட்டது. அதாவது காலம் நிலையான ஒன்று அல்ல வேறுபாடுகளைக் கொள்ளும் ஒன்று என்பது அறியப்படுகிறது.
எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.
இயற்கை விசித்திரங்கள் நிறைந்தது. நடைமுறை விஞ்ஞானமானது இந்த விரும்பத்தகாத வரவேற்கப்பட முடியாத நிகழ்வுகளை ஒதுக்கிப் புறம் தள்ளி வந்தது – இது வரை! ஏனெனில் அது அவர்களுக்குப் புரியவில்லை. ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது. ஒரு புதிய இனமான விஞ்ஞானிகளின் குழு, இப்போதைய விஞ்ஞானிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமின்றி இருக்கும் குழு, உண்மையை உண்மை என்று உடைத்துச் சொல்ல விரும்பும் ஒரு அருமையான குழு, வழக்கமான விஞ்ஞானிகள் பார்க்கும் ஜன்னலை விட்டு விட்டு வேறு வழியாக அனைத்தையும் பார்க்க நினைக்கிறது, விழைகிறது, உண்மைகளைக் காண்கிறது!
இந்தப் புதிய இனம் தான் 21ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானிகள்.. இந்த சிறுபான்மை விஞ்ஞானிகளிடமிருந்து இனி வரும் காலத்தில் நிறையக் கேட்கப் போகிறோம்! ஏனெனில் ….
எதுவுமே பார்ப்பது போல நிஜத்தில் இல்லை.
குறிப்பு : ஜேம்ஸ் எஃப் காயில் எழுதிய கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை இது.
முக்கியக் குறிப்பு : நூறாவது குரங்கு இந்தக் கட்டுரையாளர் எழுதிய அறிவியல் துளிகள் ஆறாவது பாகம் பதினொன்றாம் அத்தியாயத்தில் காணலாம். அதீத உளவியல் ஆய்வுகள் பற்றியும் அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் பற்றியும் காலம் பற்றிய ரகசியங்களையும் இந்தக் கட்டுரையாளர் எழுதிய அறிவுக்கும் அப்பால் நூலில் காணலாம்.
அனைத்துப் புத்தகங்களும் www.pustaka.co.in இல் காணலாம். படிக்கவும், மின்னணு நூலாக வாங்கவும், அச்சுப் பதிப்பாக வாங்கவும் முடியும்.
நாகபுரி முதல் நாகர்கோவில் வரை எங்கு நோக்கினும் பாம்பு பெயர்களில் ஊர்களைக் கொ ண்ட ஒரே நாடு இந்தியா. காஷ்மீரில் இமயமலை உச்சியில் உள்ள அனந்த நாகம் ஜில்லாவிலுள்ள சேஷசநா கம் ஏரியிலி ருந்து தமிழ்நாட்டிலுள்ள திருப் பாம்பு புரம் வரை எங்கும் பாம்பின் பெயர் உண்டு. இந்து தெய்வங்களில் பாம்புகளை அணியாத தெய்வங்கள் மிகக் குறைவு.. சிவன் கழுத்திலும், திருமாலின் படுக்கையிலும் பாம்பு இருப்பதை பாடாத நாயன்மார்களோ , ஆழ்வார்களோ கிடையாது .
எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், பாம்பின் பெயர்களை உடைய மூன்று ஊர்களுக்குச் சென்றேன்.
திருப்பாம்புரம்
திருநாகேஸ்வரம்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்
xxxx
இந்து தெய்வங்கள் பாம்புகளைக் கழுத்திலோ கையிலோ வைத்திருப்பது ஏன்?
பாம்பு என்பதை குண்டலினி சக்தி என்ற வடிவத்தில் நேர்முகமாகக் காண்பர்.
பாம்பு என்பதை தீய சக்திகளான வடிவத்தில் புலன் இன்பத்தை அடக்குவதற்கும் பயன்படுத்துவர். கிரேக்க நாட்டில் பாம்புகளைக் கையில் கொண்ட பெண் தெய்வங்களும் ரிக்வேதத்தில், சிந்து சமவெளியில் உள்ள பாம்பு ராணிகள் பற்றியும் உலகெங்கிலும் பாம்பு வழிபாடு என்ற என்னுடைய நூலில் விளக்கியுள்ளேன். பாம்பாட்டிச் சித்தர் பாடல்களை உங்களில் பலரும் அறிவீர்கள்.
முதலில் நான் கண்ட திருப்பாம்புரத்திற்குச் செல்வோம்.
திருப்பாம்புரம்
ராகுவும் கேதுவும் ஒரே உடலுடன் (ஏக சரீரி) இறைவனை வழிபட்ட தலம் இது என்பதால் ஜாதகத்தில் ராகு, கேது திசை நடந்தாலோ, அவ்விருவருக்கும் பரிகாரம் செய்ய வேண்டியிருந்தாலோ இந்தக் கோவிலுக்குச் செல்லும்படி , ஜோதிடர்கள் பரிந்துரைப்பார்கள். ஆகையால் நவக்கிரக பரிகாரத் தலங்களில் இதுவும் ஒன்று.
வன்னிமரத்துக்கு அடியில் பெரிய நாகர் சிலைகளைக் காணலாம்.
பாம்பு புரம் என்பது மருவி பாம்புரம் ஆகியது. நாகராஜன் பூஜித்த தலம் . ஆதி சேடனுடைய மூல விக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் கோவிலில் உள்ளன
இறைவன் திரு நாமம் – பாம்புரேஸ்வரர் , திருப்பாம்புரமுடையார்
இறைவி – வண்டார் குழலி , மாமலையாட்டியாள்
தல விருட்சம் – வன்னி மரம்
பேரளத்திலிருந்து மேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.
15 கல்வெட்டுகள் இருக்கின்றன ; அவை ராஜராஜன், ராஜேந்திரன், திரிபுவன வீரதேவன் , மூன்றாம் குலோத்துங்கன்,, சுந்தர பாண்டியன், சரபோஜி மன்னர் காலத்தவை .
xxxx
கல்வெட்டு தரும் செய்திகள் :
சோழியதரையன் வேளான் தாமோதரையானால் மண்டபம் கட்ட நிலம் தானம் கொடுக்கப்பட்டது.
சரபோஜி மன்னன் பிரதிநிதியான சுபேதார் ராகு பண்டிதராயன் வசந்த மண்டபத்தைக் கட்டினான் .
திருப்பாம்புரத்தில் 1209-ம் ஆண்டில் கடும் பஞ்சம் நிலவியது. ஒரு பொற்காசுக்கு மூன்று படி நெல்தான் கிடைத்தது. பஞ்சத்தால் வாடிய ஒரு வேளாளன் தன்னுடைய இரண்டு பெண்களை 100 பொற்காசுக்குக் கோயிலுக்கு அடிமையாக விற்றான் .
Xxxx
கோவிலுக்குள் 8 அடி நீள பாம்பு அதிசயம்
2002ம் ஆண்டில் கோவில் கர்ப்பகிரகத்தைத் திறந்தபோது , பட்டர் ஒரு அதிசயத்தைக் கண்டார். ஒரு ஏழரை அடி நீளப் பாம்பு, தனது சட்டையை (பாம்புத் தோல்) அழகாக சிவலிங்கத்தின் மீது மாலை போல விட்டுச் சென்றிருந்தது. இதை அறிந்தவுடன் ஏராளமான மக்கள் வந்து அதைத் தரிசித்தனர். கோவில் நிர்வாகம் அந்தப் பாம்பின் சட்டையை அப்படியே கண்ணாடி பிரேமுக்குள் வைத்து , சந்நிதியில் பாதுகாக்கிறது . இன்றும் அதைக் காணலாம்.
26-5-2002 பெளர்ணமி ஞாயிற்றுக்கிழமையன்று பாம்பு தனது தோலை சிவ லிங்கம் மீது மாலையாக அணிவித்துச் சென்ற காட்சி. இதன் நீளம் 8-3 அடி
21-3-2002 அன்று பாம்பு தனது தோலை அம்மன் வண்டார் பூங்குழலி மீது மாலையாக அணிவித்துச் சென்ற காட்சி. இதன் நீளம்- 7-5 அடி
Xxxx
குழந்தை பிறக்காதோர் , பாம்புகளை வழிபட்டால் குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாகர் பிரதிஷ்டைகளைக் காணலாம். பாம்பின் பெயர்களுடைய ஊர்களில் பெரிய நாகர் (பாம்பு) சிலைகளைக் காணலாம். ஆங்கிலத்தில் உள்ள ஸ்நேக் , ஸர்பண்ட் என்பற சொற்கள் தூய ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்!!!
S+ naaka= SNAKE
Sarpa= Serpent
xxx
திருப்பாம்புரம் தேவாரம்
துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. 1.41.3
குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தா முள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரண முரிசெய்து போர் த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே. 1.41.10
பார்மலிந்தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந்தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நான்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே. 1.41.11
திருச்சிற்றம்பலம்
அடுத்த கட்டுரையில் மேலும் இரண்டு நாகேஸ்வரர்களைத் தரிசிப்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பார்ப்பதெல்லாம் நிஜமல்ல! – 3
ச.நாகராஜன்
உங்கள் வீட்டு வீடியோவை எடுத்துக் கொள்வோம்.
நீங்கள் இப்போது வீடியோ மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா, அது வெற்றிடத்தைத் தான் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சப் அடாமிக் பார்டிகிள்ஸ் (Sub atomic particles) தம்மைச் சுற்றிலும் பெரும் ஸ்பேஸ் (Space) எனப்படும் வெளியைக் கொண்டிருக்கிறது.
பிரபஞ்சத்தைப் பார்த்தால் அதிலுள்ள அனைத்துமே அதே போன்ற சப் அடாமிக் பார்டிகிள்ஸினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
திரையிலிருந்து கண்ணை உயர்த்துங்கள், சுற்றிப் பாருங்கள். பார்க்கும் அனைத்துமே சப் அடாமிக் பார்டிகிள்ஸினாலேயே தான் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ப்பு பூனையையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டி இருக்கிறது. வெற்றிடம் தான்! இது பற்றிய சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயம் தான்! எல்லாமே அதே போலத்தான் – ஒன்றே ஒன்றைத் தவிர – அது தான் மனித பிரக்ஞை!
ஆம், இந்த விதிக்கு ஒரே ஒரு விலக்கு உண்டு, அது தான் மனித பிரக்ஞை!
பிரக்ஞை விழுப்புணர்ச்சி (Conscious Awareness) இருக்கிறதே, அது மட்டுமே தனியாக பிரபஞ்சம் முழுவதிலும் இருக்கிறது. இது ஒரு விசித்திரம் தான்!
சப் அடாமிக் என்று சொல்லப்படுவதை விட மனிதனின் பிரக்ஞை மிகவும் உயரியது. இந்த கட்டுப்படுத்தப்பட்ட பிரக்ஞை அசேதனம் அல்லது ஜடமான மேட்டர் (matter) மீது – பொருள் மீது – செல்வாக்கு செலுத்துகிறது. மனித மனம் செல்வாக்கு செலுத்தாத எதுவுமே இல்லை என்பதே உண்மை.
அதை ஏன் செய்ய முடியாது என்றால் நாம் அதைச் செய்யும்படி எதிர்பார்க்கப்படவில்லை.
இதே நிலை தான் விஞ்ஞானிகளுக்கும் – aperture test- அபெர்சர் சோதனையில் உள்ளது.
இந்த விதமாக அறிவியல் ரீதியாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே போனால் பிரக்ஞையின் தனித்தன்மையானது உயிரற்ற பொருள் மீதும் தனது செல்வாக்கைச் செலுத்தும் என்பதை உணரலாம்.
ஐன்ஸ்டீன் ஆற்றலும் பொருண்மையும் ஒன்றுக்கொன்று மாற்றப்படக்கூடியது – நியூக்ளியர் ரீ – ஆக் ஷனில் உள்ளது போல (energy and mass are interchangeable as in a nuclear reaction) என்றார்.
உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள சோதனைச் சாலைகள் மனித மனம் உருவாக்கும் விசையை அளக்க இப்போது தயார் – சைக்கோ கைனடிக் சோதனைகள் மூலம்!
சரி, முடிவு தான் என்ன?, என்றால் மிகத் தெளிவாகப் புலப்படுவது இது தான் :- பொருண்மையும் ஆற்றலும் ஒன்றுக் கொன்று மாற்றப்படக்கூடியது, மனித பிரக்ஞையால் உருவாக்கப்படும் ஆற்றலானது அதற்கு இணையான பொருண்மைக்குச் சமமாக மாற்றப்படலாம்- இதற்கான வழி முறை விசுவலைசேஷன் (VISUALIZATION) எனப்படுகிறது.
இது மனோசக்தி உள்ளவர்களால் பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பிரபஞ்சத்தில் நாம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல!
நாம் பிறக்கும் போது நம்மை யாரும் ‘புரோகிராம்’ செய்யவில்லை. நாம் மென்பொருள் அதாவது சாஃப்ட்வேர் இல்லாத கணினி போல இருக்கிறோம்.
நாள்தோறும் மேம்பாட்டை அடையும் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென உருவாக்கிக் கொள்ளும் ஒரு சட்டத்தில் தன்னை அமைத்துக் கொள்கிறார். வளர்ந்து கொண்டே இருக்கும் போது மற்றவர்களுடன் கலந்து வாழ ஒரு அடிப்படையான உண்மைக்கு நாம் பழக்கப்படுத்தப் படுகிறோம். இதை நாம் வழக்கமாக பள்ளிகளிலும் சமூக குழுக்களிலும் இணைந்து கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் செல்வாக்கும் கூடவே இருக்கிறது.