BBC’s Hidden Agenda Exposed (Post No.11,726)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,726

Date uploaded in London – –  29 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Over 200 patriotic Indians gathered in front of the BBC Broadcasting House in Central London today (Sunday 29-1-23) to protest its interference in India. The documentary about Modi shown by the BBC has its own hidden agenda. Under the umbrella of the BBC, Christian organisations, NATO hawks, Human Rights Organisations, Hiding Financial Frauds and criminals in London and supporters of Indian opposition parties want to finish Modi before 2024 election. If they fail to finish Modi through the attacks of Muslims and Muslim countries, they want at least the defeat of Modi in 2024 General Elections.

The purpose the BBC documentary is to create bloodshed in India. They are very notorious in dividing Diana and Charles by their fake BBC documentary. Now they have paid millions as compensation. BBC is already accused of more interested in the bottom of the (female) broadcaster than the part above. A famous BBC broadcaster said the organisation is more interested in figure than the brain, in this way.

Modi stopped foreign funding of all Christian Organisations and so they are angry. Christian priests were leading a life of luxury like Lords. Now they are affected. Human Right Organisations are supported by all the Anti Hindus around the world. Their funding was also stopped by Modi government. So, they are fuming.

Financial criminals took refuge in Britain by giving their Swiss Bank keys to political parties in Western countries. NATO war mongers are against India because India is not opposing Russia.

BBC knows very well that it has its own boot lickers in India. Even Marxists are now supporting the BBC, leave alone the Muslims.

xxx

What happened today in London?

I saw over 200 men and women and teenagers shouting slogans and holding placards; I could hear

Ban Ban BBC

BBC Murdabad

Shame on BBC

Boycott BBC

Apart from these, Vandemataram, Bharat Mata ki Jai, Jai Hind, Modi Modi Modi reverberated the streets of central London. Two persons came with conches and blew them like the Pachajanya of Lord Krishna.

One person was holding a very good board asking WHAT IS YOUR HIDDEN AGENDA BBC?

Another had a board saying,

Heating an eating expenses are increasing in the UK. NHS is not functioning efficiently. Long queues are in front of food banks in London. Look at these first. Why do you worry about India?

Most of them had badges pinned on to their jackets criticising the BBC.

In spite of Train line closures to day 200 people gathered which means 200,000 people expressed their opinion against the BBC.

Patriotic people knew Prime Minster Indira Gandhi banned the BBC. Another Prime Minister Rajiv Gandhi cancelled the visit of his senior minister when the BBC showed the toilets in Dharavi slum of Mumbai saying that India was a toilet.

So all patriotic citizens knew the mischiefs of the BBC. The BBC won’t stop here. They will try level best to destroy Hindus and Hinduism. Now Indians are given a touch stone.

Whoever supports BBC are Anti Hindus, Anti India and Anti Supreme Court of India. There is another touchstone. The Press which gives too much publicity to the Anti Hindu rowdies in the universities are scoundrels.

The heartening thing is that the mood of the nation survey in India predicted a landslide victory for Modi. It is really slap on the face of the BBC.

Conversion maniacs and NATO hawks will join the BBC to launch more attacks on Hindus. Patriots must be ready to face them.

From the days of the Rig Veda, Devas are fighting against demons like the BBC and always winning. God is on the side of Truth.

Bharat Mata ki jai.

–subham–

Tags– BBC, hidden agenda, Protest, London, Anti Hindu

ஸ்ரீ ராமர் அழுதார்; அரை மணி நேரம் மரம் போல நின்றார்! (Post No.11,725)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,725

Date uploaded in London – –  29 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எளிய சம்ஸ்க்ருத மொழியில் உலகத்தின் முதல்  காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். அவருடைய அற்புதமான, உணர்ச்சிப் பரவசமூட்டும் உன்னத காவியத்ததைக் கண்ட  ஒரு சங்கத் தமிழ்ப் புலவர் தன்னுடைய பெரையும் வான்மீகி என்று வைத்துக்கொண்டு தமிழ்க்  கவிதை புனைந்தார் . அது புறநானூற்றில் உள்ளது . நிற்க. 

 வால்மீகி முனிவர் பெரிய மகரிஷி. அவர் வாயிலிருந்து உண்மைகள் மட்டுமே வரும்; இத்தகைய அற்புதமான காட்சி கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது . வாலியை ராமர்,  மரத்தின் பின்னாலிருந்து நின்றுகொண்டு வில் அம்பினால் அடித்துக் கொன்றார். இதை வால்மீகி மறைக்கவில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதினார். இதைக் கண்டு நகைத்து  வாலி எழுப்பிய வினாக்களையும் ராமரது மறு மொழியையும் நமக்கு அப்படியே தந்தார் . எதையும் மறைக்கவில்லை. அப்பொழுது வாலியின் மனைவி தேம்பித் தேம்பி அழுதார். அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் அதைக் கண்டு ராமனும் அழுதார். அது மட்டுமல்ல ஒரு முகூர்த்த காலத்துக்கு பிரமை பிடித்தவர் போல நின்றார்.

நமக்கு ஏதேனும் அதிர்ச்சிதரும் செய்தி கிடைத்தால் எனக்கு அரை மணி நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை அப்படியே நின்றேன் என்று சொல்லுவோம். இதை முதலில் சொன்னவர்  வால்மீகி முனிவர் ; ஒரு முஹூர்த்தம் என்பது 24 நிமிடம் ; இதோ  வால்மீகியின் சொற்கள் :

ததோ நிபதிதாம் தாராம் ச்யுதாம் தாராமிவாம்பராத்

சனை ராச்வா ஸயாமாஸ ஹனுமான் ஹரியூதபஹ

பின்னர் வானர கூட்டத்தலைவனான ஹனுமான் , வானத்திலிருந்து விழுந்த விண் மீன்போல தரையில் வீழ்ந்து கிடந்த தாரைக்கு மெள்ள ஆறுதல் வார்த்தை கூறினார் . சம்ஸ்க்ருத மொழி தெரிந்தவர்கள் கவியின் அழகையும் ரசிக்கலாம் ; வானத்திலிருந்து விழுந்த தாரா = நட்சத்திரம் ; தமிழில் தாரகை என்று சொல்லுவோம்; கீழே விழுந்த பெண் தாரா = வாலியின் மனைவி ; சோகமான கட்டத்திலும் முனிவர் தன் கவிப்புலமையைக் காட்ட சிலேடையைப் பயன்படுத்துகிறார் .

அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் இதையல்லாம் பார்த்த ராமபிரான் என்ன செய்தார் ?

இத்யேவ மார்த்தஸ்ய ரகுப் ரவீரஹ ச்ருத்வா வாச்சோ வால் யநுஜஸ்ய தஸ்ய

சஞ்சாத பாஷ்ப ஹ பரவீர ஹந்தா ராமோ முஹூர்த்தம் விமனா பபூவ

இவ்வண்ணமே வருந்திப் புலம்பும் அந்த சுக்ரீவன் உரைகளைக் கேட்டு , எதிரிகளை அழிக்கவல்ல ரகுகுல சிரேஷ்டரான ராமர் , கண்ணீர் பெருக்கியவராக ஒரு முஹூர்த்த காலத்துக்கு ஒன்றுமே தோன்றாதவராகக் கலங்கி நின்றார்.

xxxxx

 தாரையின் புகழ்மாலை

ஸா தம் ஸமா ஸா த்ய விசுத்த ஸத்வா சோகேன ஸம்ப் ராந்த சரீர பாவா

மனஸ்வினீ வாக்யமுவாச தாரா ராமம்  ரணோத் கர்ஷண லப்த லக்ஷம்

அந்த தாரை வருத்தத்தால் உடலும் உள்ளமும் நிலை கொள்ளாதவளாய் , யுத்தத்தில் நினைத்ததை நடத்திக்கொள்ளும் பெருமையுடைய ஸ்ரீ ராமரை அணுகி கோப தாபம் நீங்கப் பெற்ற சுத்த மனத்தினளாய் இவ் வார்த்தையைக் கூறினாள் ,

த்வமப்ரமேயச்ச துராசதச்ச ஜிதேந்த்ரிய ச்சோத்தம தார்மிகச்ச

அக்ஷய்ய கீர்த்திகிச்ச விசக்ஷணநச்ச க்ஷிதி க்ஷமாவான் க்ஷத ஜோபமாக்ஷஹ

தாரா சொல்கிறாள் :

நீ அளவிடற்கரிய  இயலாதவர் ; யாராலும் எதிர்க்க முடியாதவர், புலன்களை அடக்கியவர், தர்ம நெறியில் நிற்பவர்களின் சிறந்தவர், அழிவற்ற புகழை உடையவர், எல்லாம் செவ்வனே அறிந்தவர், பூமி போல பொறுமை உடையவர், சிவந்த திருக்கண்களை உடையவர் .

“க்ஷ” என்ற எழுத்தைக்கொண்டு பல சொற்களை வால்மீகி முனிவர் உண்டாக்கியதோடு, பூமி போல பொறுமை என்று சொல்லுவதைக் கவனிக்க வேண்டும்..

சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இந்த உவமையைக் காண் கிறோம்.(அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல ……குறள் )

பின்னர் அவர்களுடைய துக்கத்தை ராமனும் பகிர்ந்துகொண்டார் என்று சொல்லி இக்காட்சியை முடிக்கிறார் வால்மீகி .பின்னர் வாலியை தகனம் செய்கிறார் சுக்ரீவன் .

ராவணன், வாலி போன்றோர் தகனம் செய்யப்பட்டது அவர்கள்  இந்து சமய நெறிகளைக் கடைப்பிடித்தவர்கள் என்பதைக் காட்டுகிறது.

தாரா பயன்படுத்தும் அப்ரமேய (அள விடற்கரியவர்), ஜிதேந்த்ரிய  (புலன்களை வென்றவர்), உத்தம  என்பனவெல்லாம் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் வருகிறது . 

–subham—

tags- வாலி, தாரா, ராமர், அழுதார், சுக்ரீவன் 

நயம்படப் பேசுதல் (Post No.11,725)

WRITTEN BY B. KANNAN, NEW DELHI

Post No. 11,725

Date uploaded in London – –  29 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

நயம்படப் பேசுதல்

WRITTEN BY B.KANNAN, NEW DELHI

                    மாம்பழக் கவிச் சிலேடை

பழநி மாம்பழக் கவிசிங்க நாவலர் சிலேடையாகப் பேசி, கூடயிருப்போர் யாவரை யும் மகிழ்விக்கும் இயல்புடையவர். அவர் பல சமயங்களில் இவ்விதம் இருபொருள் படப் பேசி, கேட்போருக்கு வியப்பும்,உவப்பும் ஊட்டியுள்ளார். அவற்றுள் சிலவற்றை

இப்போது பார்க்கலாம்…

மரப்படி

ஒரு சமயம் சேதுசமஸ்தான மன்னர் பொன்னுச்சாமித் தேவர் அரண்மனை மண்ட பத்தில் தனியே அமர்ந்திருந்தார். கவிசிங்க நாவலர் தினசரி வழக்கப்படி அரசருடன் அளவளாவ வந்து கொண்டிருந்தார். மண்டபத்தின் தளவரிசை மரப்பலகைகளால் அமைக்கப் பட்டிருந்தது. நாவலருக்குக் கண்கள் தெரியாதாகையால் அவர் தம் கைத் தடியால் மரப்பலகையின் மீது தட்டித்தட்டி நடந்து சென்றார். யானை வரும் பின்னே, மணியோசை கேட்கும் முன்னே என்பதற்கிணங்க, கைத்தடி ஓசையை உணர்ந்த அர சர், ”புலவர் அவர்களே! வரும்போது படி தட்டுகிறதோ?” என்று நகைத்தபடி கேட்டார்.

நாவலர் மனதில் அது வேறு எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவர் ஆசாரி எனும் பத்தர் குலத்தைச் சார்ந்தவர். ஆகையால் தம் குலத் தொழிலானப் படி தட்டுவதைக் குறித்துதான் மன்னர் தன்னைப் பரிகாசம் செய்கிறார் போலும் என நினைத்தார்.

உடனே தானும் அவருக்கு ஈடுகொடுத்துப் பரிகாசத்துடன் பதிலளித்து அவருடையக் குலத்தையும் குறிப்பிட வேண்டும் எனக் கருதி, “வேடிக்கையாக இருப்பினும் மரப் படிதானே! அது (இந்தச் சாதாரண மனிதனை) தட்டவே தட்டாது!” என்று ‘ர’கரத்தைச் சற்று அழுத்தி ஒலித்து “மறப்படி” எனும் ஓசை தோன்றுமாறு பதிலிருத்தார். இதில் மன்னர் அவர்கள் “மறவர்” இனத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டார், அல்லவா? அதையும் புரிந்து கொண்டுவிட்டார் மன்னர்.

அந்தச் சாதுரியப் பதிலைக் கேட்ட தேவர் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து வந்து, நாவலருக்குக் கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றுத் தன் அருகில் அமர்த் திப் பாராட்டினார்.

பணத்தட்டு:

மற்றொரு சமயம் கவிஞரின் சொல்வன்மை, தமிழார்வம், கவி இயற்றும் புலமை ஆகியவற்றைப் போற்றிட நினைத்த மன்னர் அவருக்குத் தக்கப் பரிசு வழங்க விரும் பினார். ஆஸ்தான அதிகாரியிடம் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு நிரம்பிய வெள்ளித்தட்டு ஒன்றைக் கொண்டு வருமாறு பணித்தார். அவ்வாறே மங்கலப் பொருட்கள் நிரம்பிய வெள்ளித்தட்டு தேவரின் முன் வைக்கப்பட்டது. அதில் தான் அளிக்க நினைத்தப் பரிசுத் தொகையை வைத்துப் புலவரிடம் கொடுக்க எழுந்தார்.

அப்போது புலவர் அருகிலிருந்தக் கையேடு எழுதும் சீடன் (சிலர் தாங்கள் சொல் வதை ஏட்டில் பதிவு செய்துக் கொள்ள உதவியாளரை வைத்திருப்பர். இவர் கண் பார்வையற்றவராதலால் உதவி தேவைப்படுகிறது) மிகவும் மெதுவாக அவரிடம் குனிந்து ‘அது வெள்ளித் தட்டு,ஐயா!’ என்று சொன்னான். பரிசிலுடன் கூடியத் தட் டையும் தனக்கு மன்னர் அளிக்கிறார் எனும் மகிழ்ச்சியுடன் கையேந்திப் பெற்றுக் கொண்டார்.சம்பிரதாயப்படி பரிசை எடுத்துக் கொண்டு, தட்டைத் திருப்பிக் கொடுத்து விடுவார் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பரிசுப் பொருளை எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெள்ளித்தட்டைக் கையில் உயரப் பிடித்து, அவையினருக்குக் கேட்கும்படி,”பணத்தட்டு அரசருக்கா, நமக்கா?” என்று கேட்டார். அக்கேள்வி அனைவருக்கும் வியப்பளித்தது.

சிறிது நேரம் பதில் கூறத் தயங்கிய தேவர் பெருமான் நாவலரின் நோக்கத்தை ஒரு வாறு அனுமானித்துக் கொண்டவராகி, “பணத்தட்டு தங்களுக்கேதான்!” என்றார்.

பணத்தட்டு என்பதற்கு, “பணமுடை”, “செல்வக் குறைவு” எனவும் பொருள் கொள்ள லாம். செல்வச் செழிப்புள்ள வேந்தருக்கு ஏது பணமுடை? அது சாதாரண மனிதர் களுக்குத்தானே பொருந்தும்? இரு பொருள்படும் அச்சொல்லைப் புரிந்துகொண்ட தேவர், “பணத்தட்டு எமக்குத்தான்!” எனக் கூறத் தயங்கினார். ஒருவேளை அப்படிக் கூறியிருப்பாரேயானால், அது பொருத்தம் அற்றதாய் இருப்பது மட்டுமின்றி அவரை ஏளனத்திற்கும் உள்ளாக்கி இருக்கும்.

அரசரின் பதிலைக் கேட்டதும் மகிழ்ச்சியுற்ற நாவலர், வெள்ளித் தட்டைச் சீடனிடம் கொடுத்துப் பரிசுப் பொருள்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

இருவரின் சாதுரியச் சொற்விளையாட்டை ரசித்து அனுபவித்த சபையினர் ‘ஆகா’ காரமிட்டு ஆரவாரித்தனர்.

ஈ வந்தது:

பின்னர் ஒருசமயம், நாவலர் அவர்கள் அன்னை திரிபுரசுந்தரி உடனுறை ஶ்ரீமகு டேஸ்வரர் அருளும் தலமும், சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடியத் தலமுமான ஈரோடு மாவட்டத்திலுள்ளக் கொடுமுடிக்குச் சென்றிருந்தார். அங்குத் தங்கியிருந்த போது அவ்வூரைச் சேர்ந்தத் தமிழ்ப் புலவர் இராசலிங்கக் கவிராயர் என்பவர் அவரைச் சந்திக்க வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், நாவலர் கவி ராயரை நோக்கி,”தங்கள் பெயர் யாதோ?” எனக் கேட்க மற்றவர்,” அடியேன் பெயர் இராசலிங்கம்!” என்று பெயரிலுள்ள முதற்சொல்லான ‘இ’கரத்தைச் சற்று அழுத்தியே உச்சரித்தார்.

அதைக் கேட்ட நாவலர்,”கவிராயரே! இங்கு ‘இ’(ஈ) எங்கே வந்தது? ராசலிங்கம் என்று சொன்னாலே போதுமே. உச்சரிக்கும் போது ‘இ’ மறைந்து நிற்பதுதானே வழக்கம்!” என்றார்.

அதற்குக் கவிராயர், “இருக்கலாம். ஆனால் இங்கு இடம், பொருள் பார்த்துதான் ‘இ’ வந்துள்ளது!” என்று பதில் சொன்னார்.

“தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்!” என வினவினார் நாவலர்.

“கூறுகிறேன், ஐயா! அது வேறொன்றுமில்லை. மாம்பழத்தைச் சுற்றி ‘இ’(ஈ) மொய்க் கத்தானே செய்யும்? அதிலிருந்து எழும் தமிழ் மணத்திற்கு ‘இ’(ஈ) வராமல் இருக்க முடியாதே! மாம்பழமாகியத் தங்களைச் சுற்றி இந்த ‘இ’ராமலிங்கம் வருவதில்என்ன அதிசயம்?” எனச் சாதுரியமாகப் பதிலுரைத்தார் கவிராயர்.

கூடியிருந்தோர் அவர்களின் பேச்சை ரசித்து மகிழ்ந்தனர்.

சாணம் போடு

இலக்கியச் சம்பாஷணையை முடித்துக் கொண்டதும் கவிராயர் நாவலரைத் தம் இல்லத்தில் விருந்துண்ண அழைக்க, நாவலரும் அங்குப் போய்ச் சேர்ந்தார். இருவ ரும் உணவு உட்கொண்ட பிறகு வெற்றிலைப் பாக்கு போடத் துவங்கினர். சாப்பிட்ட இலையை எடுத்ததும் உண்டஇடத்தைப் பசுஞ்சாணம் கொண்டு மெழுகித் துடைப்பது கிராமத்து வழக்கம். அதனால் கவிராயர் வீட்டுப் பெண்களைப் பார்த்து,”அம்மணிகளா! நாவலர் உண்ட இடத்தில் சாணமிடுங்கள்!” என்று கூறி நகைக்கவும் செய்தார்.

கவிராயரின் உட்பொருள் அடங்கியப் பேச்சு நாவலருக்குப் புரிந்துவிட்டது. “முறைவாசல் செய்வது, சாணமிடுவது வீட்டுப் பெண்களுக்கு இயல்புதானே! புதிதாகக் கூறுவது தேவையில்லாததும்,அதைக் குறித்துச் சிரிக்க வேண்டியதும் தவிர்க்கப் படவேண்டியதே!” என்று மனதில் சொல்லிக் கொண்டாலும், வெளிப் படையாக அப்பெண்களிடம் சொன்னார்: “ஆம், அம்மா! சாணத்தை வேறெங்கும் தப்பித்தவறிப் போட்டுவிடாதீர்கள்! ஐயா அவர்கள் சொன்ன இடத்திலேயே போடுங் கள்!” என்று சொல்லித் தானும் சிரித்தார்.

இவ்வுரையாடலில் உண்ட இடம் வாய் எனவும்,’நாவலர் வாயில் சாணம் போடு என்று கவிராயர் சொன்னதை மாற்றி, “சாப்பிட்ட இலை இருந்த இடத்தில் மட்டும் போடு, ஐயா சொன்னபடி வேறு எவ்விடத்தும் போடாதே!’’ எனவும் பொருள்படுமாறு பேசிக் கொண்டது அனைவரும் கேட்டுச் சுவைக்கும் பேச்சாக விளங்கியதைச் சொல் லவும் வேண்டுமோ?

                                                                                                                     இவ்வாறு நாவலரின்‌ வாழ்க்கையில்‌ எவ்வளவோ சுவையானப் பேச்சுகள்‌ நிகழ்ந் துள்ளன. அவையெல்லாமே ஒவ்வொருவிதம்!. 

–subham—

tags-          மாம்பழக் கவி, சிலேடை, பணத்‌ தட்டு, சாணம் போடு

சண்பக பாண்டிய மன்னனுக்கு அடங்காத இரண்டு காரியங்கள்! (Post.11,723)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,723

Date uploaded in London –  29 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் இன்பம்

சண்பக பாண்டிய மன்னனுக்கு அடங்காத இரண்டு காரியங்கள்!

ச.நாகராஜன்

சண்பக பாண்டியன் என்ற மன்னன் புகழ் பெற்றவன். கல்வியின் சிறந்தவன். செல்வத்தில் சிறந்தவன்.

அவனைப் பற்றிக் காளிமுத்துப் புலவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

சுமார் 13க்கும் மேற்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் இரண்டு:

பாண்டிய மன்னனுக்கு அடங்காத காரியம் இரண்டு!

சண்பக பாண்டிய மன்னனுக்கு எல்லாம் அடங்கும் யாவரும் அடங்குவர்.

ஆனால் அவனுக்கும் அடங்காதவை இரண்டு,

இதைப் புலவர் கூறிய போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

சரி, புலவர் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறார் என்றே அரசவையினர் நினைத்தனர்.

ஆனால் பாடல் முடிந்தவுடன் அனைவரும் அவரைப் போற்றினர்.

பாண்டியனின் மகிழ்ச்சிகோ எல்லையே இல்லை.

புலவரை நன்கு ‘கவனித்தான்’ என்று சொல்லவும் வேண்டுமோ?!

மற்றொப்பி லாக்கொடைச் சண்பக மாறவ ரோதயநின்

வெற்குக் கிரண்டுண் டடங்காத காரிய மேருகிரிச்

சுற்றிலுங் கீர்த்தி யடங்காது நின்னுடைத் தோடழுவாக்

கற்றைக் குழலிக்கு மாலடங் காதிது கைகண்டதே

சண்பக பாண்டியனின் புகழ் மேருமலையைச் சுற்றினாலும் அடங்காது. அவனுடைய தோளைத் தழுவாத என் பெண்ணுக்கு மயக்கம் அடங்காது! போதுமா, பாண்டியனின் புகழ்!

பாடலின் பொருள்:

மற்று ஒப்பு இலாகொடை – வேறொரு உவமையில்லாத கொடையை உடைய

சண்பக மாற – சண்பக மாற பாண்டியனே!

வரோதய – வரத்தினால் அவதரித்தவனே!

நின் வெற்றிக்கு – உனது வெற்றிக்கு

அடங்காத காரியம் இரண்டு உண்டு – அடங்காத விஷயங்கள் இரண்டு உள்ளன

(அவை யாவை என்று கேட்டாயெனில்)

கீர்த்தி – உன் புகழானது

மேருகிரி சுற்றிலும் அடங்காது – மேருமலையின் சுற்றுப்புறத்தினும் அடங்கமாட்டாது

நின்னுடைத் தோள் தழுவா – உன்னுடைய தோள்களைத் தழுவாத

கற்றைக் குழலிக்கு – கூந்தல் கற்றையை உடைய என் பெண்ணுக்கு

மால் அடங்காது – காம மயக்கம் அடங்க மாட்டாது

இது கை கண்டது – இந்த விஷயம் கை கண்ட ஒன்றாகும்.

கீர்த்தியும் விரக நோயும் பாண்டியனின் ஆணைக்கு அடங்க மாட்டாதவை.

அடுத்த பாடல் : 

பூணித் திலத்துப் புயல்வீர மாறன் புகல்கவிக்கு

நாணிப் புலவர் செல்லா தென்செய்வ ரிந்தநானிலத்திற்

ஆணிங் கனக மணந்தரிற் பூமணம் யார்கொள்ளுவார்

மாணிக்கந் தித்திக்கி லென்னாகு வற்ற மதுரங்களே

பாண்டியன் செல்வத்தால் மட்டுமில்லை, கல்வியிலும் சிறந்தவனே என்று புகழ்கிறார் புலவர்.

பாடலின் பொருள் :

இந்த நானிலத்தில் – இந்த பூமியில்

பூண் நிலத்துப் புயல்  – முத்து மாலையை அணிந்த மேகம் போன்ற

வீரமாறன் புகல் கவிக்கு – வீர பாண்டியன் சொல்லும் கவிதைக்கு

புலவர் நாணிச் செல்லாது – புலவர்கள் நாணிப் போகாமல்

என் செய்வார் – என்ன தான் செய்வார்கள்?

ஆணிக் கனகம் மணம் தரின் – ஆனிப் பொன்னானது வாசனையை வீசுமாயின்

பூ மணம் யார் கொள்ளுவார்? – பூக்கள் தரும் வாசத்தை யார் ஏற்பார்?

மாணிக்கம் தித்திக்கின் – மாணிக்கம் இனிக்குமாயின்

மற்ற மதுரங்கள் – மற்ற இனிமையான அனைத்துமே

என் ஆகும் – என்ன ஆகுமோ?

சண்பக பாண்டியனைப் பற்றிய புலவரின் சாதுரியப் பாடல்கள் இன்னும் பல உள்ளன.

***

PROTEST AGAINST ANTI HINDU BBC DOCUMENTARY IN LONDON ON SUNDAY TODAY (29-1-2023)

PROTEST AGAINST ANTI HINDU BBC DOCUMENTARY IN LONDON ON SUNDAY TODAY (29-1-2023)

PLEASE JOIN THE PROTEST TO SAVE HINDUS AND INDIA

Posted by London swaminathan, former BBC Broadcaster and Ex Senior Sub Editor, Indian Express Group Ltd.

Please see the ABOVE attachment–SUBHAM–

TAGS- BBC , PROTEST, ANIT HINDU, LONDON

What made Rama the Greatest Man in the World? Gems from Balaakaanda? (Post No.11,722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,722

Date uploaded in London – –  28 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ascetic Valmiki asked Narada to name one person with good qualities. And Narada said,

I know one person Mr D Raama.

He is the son of Dasaratha , King of Ayodhya. He is the best because he is sea, he is moon, he is Himalaya, he is Earth and he is a Man!

Before going into the details, I want to point out the wonderful similarities in Indian literature. Sangam Tamil literature also praise the good kings in the same way.

As cool as Moon in appearance

As patient as Earth

As treasure trove as Sea; as Deep and Vast as ocean.

As High as Himalayas in name and fame

These wonderful similarities show that India is one in Thoughts and Words and Deeds.

Here are the beautiful Slokas/couplets in simple Sanskrit of Valmiki (vaal meekee).

Xxxx

Shaamudrikaa lakshana of Raama

Tamils also repeat this in Sangam Tamil literature: broad chest, knee long arms, strong shoulders etc.

“Possessing a broad chest, armed with a great bow, with fleshy collar bones, knee-long arms, a noble head, a graceful forehead and great prowess, he is the destroyer of foes (sins)”.

महोरस्को महेष्वासो गूढजत्रुररिन्दमः ।
आजानुबाहुस्सुशिरास्सुललाटस्सुविक्रमः ।।1.1.10।।

“Mighty and powerful, he has a well proportioned body, neither tall nor short, shining complexion, well developed chest, large eyes, lustrous body and good qualities”.1-1-11

समस्समविभक्ताङ्गस्स्निग्धवर्ण: प्रतापवान् ।
पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवान् शुभलक्षणः ।। 1.1.11।।

“He (Sri Rama) is a great intellectual, adherent to rules, eloquent, handsome, destroyer of foes (sins), broad shouldered, strongarmed, having conch shaped neck and prominent cheeks”.

बुद्धिमान्नीतिमान्वाग्मी श्रीमान् शत्रुनिबर्हण: ।
विपुलांसो महाबाहु: कम्बुग्रीवो महाहनु: ।।1.1.9।।

Xxx

Virtues

“Pious, firm in his vows, he is ever intent on doing good to his subjects. He is, illustrious, wise, and pure at heart. He is obedient to elders (or accessible to those who are dependent on him) and ever meditating (on the means of protecting those who take refuge in him)”.

धर्मज्ञस्सत्यसन्धश्च प्रजानां च हिते रतः 
यशस्वी ज्ञानसम्पन्नश्शुचिर्वश्यस्समाधिमान् ।।1.1.12।।

प्रजानां च हिते रतः – In Bhagavad Gita , Lord Krishna says Sarva Bhuta Hiterathaahaa (B. G. 12-4).

In Tamil, oldest book Tolkappiam says, Ellarakkum Inbam (happiness to Everyone)

Later Tamil Saivite Siddha Tirumular says,

Let the world get all happiness that I got (Yaan Petra Inbam Peruka Iv Vaiyakam).

Xxx

Rama is sea
“Sri Rama, like sea to rivers, is accessible to men of virtue and has equal disposition towards all. He always has a pleasing appearance”.

सर्वदाभिगतस्सद्भिस्समुद्र इव सिन्धुभिः ।
आर्यस्सर्वसमश्चैव सदैकप्रियदर्शनः ।।1.1.16।।

Vedic Hindus were great sea farers. Rig Veda, the oldest book, talks about Asvins’ sea adventures. They were great geographers. Kalidasa knew the length of Himalayas. He described it as the Measuring Rod of the Earth touching both Eastern and Western oceans (Kumarasambhava sloka 1)

So they always use the simile ‘as all the rivers go to sea.’

Men are rivers; they all go to Rama as refuge, as source of everything.

Brahmins say every day Aakaasaath patitam Toyam Yathaa Gachcati Saagaram… Like all rivers go to the sea at the end, all prayers go to Krishna/Kesava.

And Kalidasa in Raguvamsa says Solar dynasty kings ruled vast land touching both the oceans.

Sangam Tamil poet Ammuvanaar used ‘vast sea’ in many similes.

So when Valmiki says Rama is like sea, it has very deep meaning.

Xxxx

Raama is Sea and Himalaya

Sri Rama, bestowed with all virtues, enhanced the joys of Kausalya, He is like the sea in deportment and like Himavant in fortitude. 

स च सर्वगुणोपेत: कौसल्यानन्दवर्धन: ।

समुद्र इव गाम्भीर्ये धैर्येण हिमवानिव ।।1.1.17।। 

In Tamil Aavuur Muulankizaar, Uruththiran kannanaar (Mr Rudraksha), Perunchithranaar, Mudamosi, Napppasalai and many more use Himalaya as simile. They knew the height of Himalaya and they greet the king Long Live Like Himalaya. Let you have fame as high as Himalaya.

Xxx

Raama is Moon, Kubera, Agni 

The moon like appearance is used throughout Hindu literature for two reasons: its brightness and it is cooling effect in night.

विष्णुना सदृशो वीर्ये सोमवत्प्रियदर्शनः ।

कालाग्निसदृशः क्रोधे क्षमया पृथिवीसमः ।।1.1.18।।

धनदेन समस्त्यागे सत्ये धर्म इवापरः ।

So, from these slokas and later slokas in other Kaandaas, we come to know he was honest, truthful, man of words, believed in the rule of law and at the same time worked for the welfare of people and easily accessible.

—subham—

Tags- Rama, virtues, Sea, Moon, Earth, Bala Kanda, Gems

அறப்பளீசுர சதகம் நிறைவு (Post No.11,721)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,721

Date uploaded in London – –  28 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கொல்லி மலை சதுர கிரியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட சதகம் இந்த நூறாவது பாடலுடன் நிறைவு பெறுகிறது. இதை பொழிப்புரையுடன் வெளியிட்ட தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்கு நன்றி ; என்னுடைய கருத்துக்கள், விமர்சனத்துடன் 100 பாடல்களையும் வெளியிட்டேன். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக .

    இந்நூலின் இறுதிச் செய்யுளில், ‘அம்பலவாண கவிராயனாகும்’

எனத் தம்மைக் குறிக்கிறார். இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும்

ஊரில் வேளாளர் குலத்திற் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்தார். சீர்காழியில் தங்கியிருந்த – இராம நாடகம் பாடிய – சிறப்புப்பெற்ற அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது  .

என்னுடைய மதிப்பீடு:

நூலாசிரியர் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். மனு நீதி, பிராமணர் ஆகியோரைப் புகழ்கிறார். இவர் நல்ல சம்ஸ்க்ருத அறிவு பெற்றிருத்தல் வேண்டும். ஏனெனில் இவர் சொல்லும் பல விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களில்  இருக்கின்றன. ஆயினும் இவரது சொந்த கற்பனையும் நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. 99ஆவது பாடலில் சிவ பெருமானின் 25 வடிவங்களை ஒரே மூச்சில் நமக்கு அளிக்கிறார் . அதற்கு முன்னர் 32 அறங்களையும், , 18 புராணங்களையும் இவ்வாறு ஒவ்வொரு பாட்டில் வழங்குகிறார். மன்மதனின் 5 மலர் அம்புகளும் உடலிலும் உள்ளத்திலும் என்னென்னெ விளைவுகளை உண்டாக்கும் என்று புது முறையில் விளக்குகிறார். ஜோதிடம் உண்மையே என்றும் விளம்புகிறார். இவருடைய  ஒவ்வொரு பாடலும்  வள்ளுவரின் குறள் பாக் கருத்துக்களை ஒட்டியே செல்கின்றன. நல்ல அறிவும் ஒழுக்கமும் உடையவர்தான் இப்படிச் செய்யுள் இயற்ற முடியும்.

 அந்தணர் முதல் வேளாளளார் வரையுள்ள நான்கு வருணத்தையும் புகழ்கிறார். தனக்கு ஆதரவு கொடுத்த மதனவேளுக்கு நன்றி செலுத்தி செய்நன்றி அறிதலுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். எளிய தமிழ் நடை; பெரும்பாலும் பொழிப்புரையின்றியே அர்த்தத்தை அறிய முடிகிறது. நல்ல சிவபக்தர் என்பதை ஒவ்வொரு பாட்டிலும் நமக்கு அளிக்கிறார். இவர் பாடல்களை மாணவர்களுக்கு பாட திட்டத்தில் சேர்ப்பது நலம் பயக்கும் . எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் தமிழ் இணைய கல்விக் கழகம் வசதி செய்து தந்தது பாராட்டத் தக்கது. வாழ்க தமிழ்.

Xxxx

கடைசி பாடலில் சிவனை மீண்டும் புகழ்ந்து பணிவன்போடு தன்னுடைய பாடலையும் ஏற்க வேண்டுகிறார். அவர் பணிவுடன் ‘இழிந்த பாக்கள்’ என்று சொன்னாலும், பாடலைப் படிப்போருக்கு அவருடைய  சொல் நயமும், பொருள் நயமும் , அவரை நல்ல பெரிய கவிஞர் என்றே காட்டும்.  புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?  என்பது தமிழ்ப் பழ மொழி ; இராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயரின் புதல்வர், அவருக்கு சளைத்தவரா என்ன? நல்ல கவி புனைந்து தந்தையின் மகன் என்பதை நிரூபித்துவிட்டார். அவருக்கும் புகழ் சேர்த்துவிட்டார்.

xxxxx

  100. கவி வணக்கம்

மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை

     மருக்கொழுந் துயர்கூ விளம்

  மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட

     மணிமுடி தனிற்பொ றுத்தே

சிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு

     செம்முள்ளி மலர்சூ டவே

  சித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா

     தேவதே வா!தெ ரிந்தேகலைவலா ருரைக்குநன் கவியொடம் பலவாண

     கவிராயன் ஆகு மென்புன்

  கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுன்

     கடன் ஆகும் அடல்நா கமும்

அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அடல் நாகமும் அலைபெருகு கங்கையும் செழுமதியமும்

புனையும் அமலனே – கொல்லும் பாம்பும் அலைமிகுந்த கங்கையும் நல்ல

பிறையும் அணிந்த தூயவனே!, அருமை …….. தேவனே!, மலர் இதழி –

மலர்ந்த கொன்றை, பைங்குவளை – பசிய குவளை, மென்முல்லை –

மெல்லிய முல்லை, மல்லிகை – மருக்கொழுந்து, உயர் கூவிளம் – உயர்ந்த

வில்வம், மற்றும் உள வாச மலர் – வேறும் உள்ள மணமலர், பத்திரம் –

பச்சிலைகள் (ஆகியவற்றை) சிலர் சூட – சில (அடியார்கள்) அணிவிக்க,

மணி முடிதனில் பொறுத்து – நவமணிகள் இழைத்த முடியில் ஏற்று, சிலர்

எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு செம்முள்ளி மலர்சூட – சிலர்

எருக்கமலருடன் காட்டிற் கிடைக்கும், பூளைப்பூவும், பசுமையான

அறுகம்புல்லும் சிவந்த முள்ளி மலரும் அணிவிக்க, சித்தம்வைத்து அவையும்

அங்கீகரித்திடும் மகாதேவ தேவா – மனம் வைத்து அவற்றையும் ஏற்று

அருளும் பெருமைமிக்க தேவ தேவனே!, கலைவலார் தெரிந்து உரைக்கும்

நன்கவியொடு – கலையில் வல்லவர்கள் ஆராய்ந்து கூறும் நல்ல

பாக்களுடன், அம்பலவாண கவிராயன் ஆகும் என் புன்கவியையும் சூடிய –

அம்பலவாண கவிராயன் ஆகிய என் இழிந்த பாவையும் அணிந்தே, மனம் மகிழ்ந்திடுவது உன் கடன் ஆகும் – திருவுள்ளம் களித்தருளுவது உன் கடமை ஆகும்.

அறப்பளீசுர சதகம் மூலமும் உரையும்

முற்றிற்று.

Thanks to தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

—subham—

Tags-  அறப்பளீசுர சதகம், நிறைவு , முடிவு, அம்பலவாணர்

மஹேஸ்வரன், குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!?!! (Post No.11,720)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,720

Date uploaded in London –  28 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!?!! 

ச.நாகராஜன் 

மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கியதாக புராணம் கூறுகிறது.

இப்படி மஹேஸ்வரன் செய்யலாமா? இது கேள்வி.

ஒரு சின்ன விளக்கத்தை முதலிலேயே சுலபமாகக் கூறி விடலாம்.

இப்படி எல்லாம் கேள்விகள் பின்னொரு காலத்தில் எழக்கூடும் என்பதை, அறிவும் ஞானமும் கொண்ட முனிவர்கள் அறிய மாட்டார்களா, என்ன?

சுலபமாக இப்படி ஒரு சரித்திரத்தை எழுதாமலேயே விட்டிருக்கலாமே.

கேள்விகள் எழ சந்தர்ப்பமே கொடுக்காமல் இருந்திருக்கலாமே!

ஆனால் இப்படி ஒரு விவரம் இருக்கிறது. அப்படியானால் கேள்வி எழும்.

அதற்கான பதிலும் அவர்களிடம் இருக்க வேண்டும். இருக்கிறது.

சரி, நிகழ்வுக்குள் செல்வோம்.

***                                                        

முன்னொரு காலத்தில் தேவதாரு வனத்தில் உள்ள முனிவர்கள் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

இந்த உலகத்தின் காரியத்தை – ஜகத்கார்யத்தை – நிர்வகிப்பது – கர்மமே, கர்மம் மட்டுமே தான் என்பது அவர்கள் முடிவு.

அதாவது செயல்களினால் மட்டுமே உலகம் இயங்குகிறது.

இந்த கர்மங்களுக்கு அப்பாலும் ஒரு ஈஸ்வரன் – மேலதிகாரி- இருக்க முடியாது என்பது திண்ணம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

அத்தோடு ஈஸ்வரன் என்ற ஒரு கொள்கையை நம்ப வேண்டாம் என்று திடமாகப் பிரசாரமும் செய்தனர்.

வெறும் கர்மங்களே போதும் என்ற அவர்களின் கொள்கையும் செயலும் பூவுலகை அல்லல் படுத்திக் கொண்டிருந்தது – அவர்களின் அதீத செய்கையினால்!

தேவதாரு வனத்தில் இல்லாத முனிவர்கள், ஈஸ்வர பக்தர்கள், இதனால் திகைத்தனர். ஈஸ்வரனுக்கே ஒரு சங்கடமா? அவர்கள் பிரமித்தனர்.

*** 

தேவர்கள் தவித்தனர். அவர்களுடன் ஈஸ்வர பக்தர்களான முனிவர்களும் சேர்ந்தனர்.

தங்கள் தவத்தின் சக்தியினால் அவர்கள் பரமேஸ்வரனிடம் நேரடியாகச் சென்றனர். முறையிட்டனர்.

பரமேஸ்வரன் அவர்கள் மீது கருணை கொண்டார்.

கர்மம் மட்டுமே தான் எல்லாம் என்று நினைக்கும் முனிவர் கூட்டத்திடம் உபதேசம் எடுபடாது.  கர்மத்திற்கு அப்பாலும் ஒரு சக்தி உள்ளது என்பதை அவர்களே உணர வேண்டும் என்று அவர் திருவுள்ளம் கொண்டார்.

உடனே நாராயணனிடம் ஜகத்திலுள்ளோரை மயக்கும் சுந்தர ரூபம் கொண்ட சுந்தரியாக மாறச் சொன்னார்.

பரமேஸ்வரனின் லீலையைத் தெரிந்து கொண்ட நாராயணன் உலகை மயக்கும் அபூர்வ மோஹினியாக ஆனார்.

இருவரும் அனைவரையும் மயக்கும் யௌவன பருவம் கொண்டு தாருகா வனம் வந்தனர்.

முனிவர்கள் அசந்தனர்; முனிபத்னிகள் பிரமித்தனர்.

என்ன ஒரு லாவண்யம்!

என்ன ஒரு அழகு!!

கர்மபடர்களாக இதுவரை இருந்த முனிவர்கள் காமவசப்பட்டனர்.

அனைவரும் மோஹினியின் பின்னால் ஓட ஆரம்பித்தனர்.

யாகமாவது, கர்மமாவது அனைத்தையும் கை விட்டு விட்டு மோஹினி எந்தப் பக்கம் இருக்கிறாள் என்று தேடி அவளைப் பின் தொடர்ந்தனர்.

ரிஷிகளின் பத்னிகளின் கதையோ வேறு.

அவர்கள் அனைவரும் சுந்தர ரூபனாக விளங்கிய ஈஸ்வரன் பின்னால் காம வசப்பட்டு சென்றனர்.

இப்படி மோஹினியின் பின்னால் முனிவர்களும். ஈஸ்வரனின் பின்னால் ரிஷி பத்னிகளும் திரிய ரிஷிகளின் பிரமசர்ய மஹிமை போனது; பத்னிகளின் பதிவிரதா தர்மம் கெட்டது.

ஒரு க்ஷணத்தில் ஹரியும் ஹரனும் மறையவே ரிஷிகளும் ரிஷி பத்னிகளும் தன் உணர்வு பெற்றனர்.

அடடா, நமது பிரமசர்யம் கெட்டதோடு, ரிஷி பத்னிகளின் பதிவிரதா தர்மமும் பங்கப்பட்டு விட்டதே என்று அவர்கள் வருந்தினர்.

தம்மை இப்படி வருத்தத்திற்குள்ளாக்கிய சுந்தரனையும் சுந்தரனையும் கொன்று விட வேண்டுமென்று என்று எண்ணிய அவர்கள் கடுமையான ஆபிசார ஹோமத்தை மேற்கொண்டனர்.

பலன் இல்லை. பின்னர் அஸ்திர சஸ்திரங்களை ஏவினர். பலன் இல்லை.

‘அட, கர்மாவே, பரம் என்று எண்ணி இருந்தோமே, ஈஸ்வரன் என்று யாருமே இல்லை என்று எண்ணினோமே, நமது கர்மங்கள் பலன் அளிக்கவில்லையே. மந்திரம், அஸ்திரம், சஸ்திரம் எதுவும் பயன் அளிக்கவில்லையே” என்று ஆச்சரியப்பட்டனர்.

கர்மம் பலன் உள்ளது என்றாலும் கூட, அதற்கு அப்பாற்பட்ட மேலான ஒரு சக்தி இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

சுந்தரனே பரம்பொருளாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் பரமேஸ்வரனைத் தொழுது வணங்கினர்.

பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி அருள் பாலித்து தன் திரு நடனத்தை ஆடினார். திரு நடனம் அகிலாண்டகோடி பிரம்மாண்டத்தை இயக்கும் தெய்வீக சக்தி என்பது பொருள்.

அதனால் பிரம்மானந்த அனுபவத்தை ரிஷிகள் பெற்றனர்.

பதிவிரதைகள் அனைவரும் ஈஸ்வரனின் மஹிமையை எண்ணி வியந்து அவனைப் போற்றித் துதித்தனர்.

சரி, இதைக் கேட்டாயிற்று, நாமும் ஈஸ்வரனைப் போல சுந்தர ரூபம் எடுத்து (மேக் அப் போட்டுக் கொண்டு)

வனிதைகளைக் கவரலாம் என்று எண்ணி அதை வாதமாக முன் வைப்பவர்களுக்கும் ஒரு பதில் உண்டு.

நீங்கள் ஹாலாஹல விஷத்தை அருந்தி அதைத் தொண்டையில் நிறுத்தி விட்டு உங்கள் ஜாலங்களைச் செய்யுங்கள் என்பதே பதில்!

ஆகவே தெய்வத்தன்மை பொருந்திய ஆன்றோர்கள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை அறிவதோடு அதை நாமும் ஏன் செய்யக்கூடாது என்ற சந்தேகத்தையும் எழுப்பக் கூடாது.

இதுவே வ்யதிரேக திருஷ்டாந்தத்தின் கருத்து ஆகும்!

***

ராவணனுடன் வாலி ஒப்பந்தம்: உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 (Post No.11,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,719

Date uploaded in London – –  27 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அரக்கன் என்று சங்க இலக்கிய நூலான புறநானூறு வருணிக்கும் இராக்ஷச ராவணன் பெண் பித்தன். சீதையைக் கடத்தும் முன்னரே பல பெண்களைக் கவர்ந்து அவர்களிடம் சாபமும் வாங்கி அழிந்தான் இமய மலையில் சிவ பெருமானிடம் அடி வாங்கிய ராவணன், நர்மதை நதிக்கரையில் கார்த்த வீர்ய அர்ஜுனனிடம் அடி வாங்கி, இனிமேல் அந்தப்பக்கம் வரவே மாட்டேன் என்று ஓடினான். வேதவதி என்னும் மலைவாழ் பழங்குடிப் பெண்ணின் molested tribal girl Vedavathi கூந்தலைப் பிடித்து இழுத்து சாபம் வா ங்ககினான் . அவள் சீதையாகப் பிறந்து அவனை ஒழித்தாள் . இதே போல கிஷ்கிந்தையில் மன்னன் ஆகக் கொலு வீற்றிருந்த வாலியிடமும் வால் ஆட்டினான் ராவணன். இது பற்றிய சுவையான விஷயங்கள் அனைத்தும் வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் உள்ளது.

வாலியிடம் அடிவாங்கிய இராவணன் ஒரு வினோத ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. இனி எதுவானாலும் உனக்குப் பாதி, எனக்குப்பாதி அதாவது உறவினில்  50–50 உதட்டினில் 50–50 . இதில் பெண்களை அனுபவிப்பதும் அடக்கம். இதில் அதிகம் இழந்தவன் ராவணன்தான். அவன்தான் அதிகமான பெண்களைக் கவர்ந்து வந்தவன். இதைக்கூறும் ராமாயண ஸ்லோகங்கள் வாலி, நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த சுவையான செய்தியையும் கூறுகிறது.

xxx

என்னுடைய  ஆராய்ச்சி

இது என்னுடைய  ஆராய்ச்சி முடிவுகளையும் உறுதி செய்கிறது .

ராமாயணத்தில் வரும் கழுகு (ஜடாயு), கரடி (ஜாம்பவான்), வாலி (குரங்கு) என்பனவெல்லாம் உடலில் அணியும் அடையாளங்கள் TOTEM SYMBOLS. உண்மையில் குரங்கோ கழுகோ கரடியோ இல்லை. வாலி இறந்த பின்னர் அவனது உடல் இந்து முறையில் தகனம் CREMATION செய்யப்பட்டது. ஆனால் வேறு சில ராக்கதர்கள் உடல் புதைக்கப்பட்டது BURIAL. மேலும் அனுமன் தன் உருவை மாற்றிக்கொண்டு ஒரு பிரம்மச்சாரி மாணவன் போல வந்தான் என்று கம்பனும் ஒரு பிக்ஷுவாக வந்தான் என்று வால்மீகியும் சொல் வதிலிருந்து அனுமன் குரங்கு முகமூடி வேஷத்தை மாற்றிவிட்டு சாதாரண மனிதன் போல வந்தான் என்பது புலனாகிறது. ராமாயணம் பல ஆயிரம் ஆண்டுப் பழமையானதால் இப்படி உருமாறி , உண்மையியலேயே அவர்கள் குரங்குகள் என்று நம்பவைத்தது . இன்றும் கூட பூடான் நாட்டில் (பூத ஸ்தானம் BHUT+ SHAAN= BHUTAN ) நாட்டில் முகமூடி அணிந்து விழாக் கொண்டாடுகிறார்கள். இலங்கையர் அணிந்த முகமூடிகள் இப்பொழுதும் காட்சிசாலைகளில் உள்ளன.

சுருங்கச் சொல்லின், நவ வியாகரணம் அறிந்த அனுமனும் நாற்கடலில் நீராடி சந்தியாவந்தனம் செய்த வாலியும் சாதாரண இந்துக்கள். ஆனால் தமிழ்நாட்டில் இப்போதும் பல்வேறு ஜாதிகள் பல திருமண, இறுதிச் சடங்கு விதிகளை வை த்திருப்பது போல குரங்கின் அடையாளம் பூண்ட ஒரு இனத்திடையே வினோத வழக்கங்கள் இருந்தன.

நாற்கடல் நீராடியது என்பது தமிழ்க் கல்வெட்டுகளிலும் வருகிறது. இது பற்றிய என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் சுவையான விஷயங்களைத் தந்துள்ளேன்.

XXXX

இதோ ராமாயண ஸ்லோகங்கள் :

க்ருஹீது காமம் தம் க்ருஹ்ய  ராக்ஷஸாமீச்வரம் ஹரிஹி

சதுஷ்வபி ஸமுத்ரேஷு ஸந்த்யா மன்வாஸ்ய வாநரஹ

ராவணம் து முமோசாத  கக்ஷாத் கபி ஸத்தமஹ

பொருள்

வா நரனான அந்த வாலி , தன்னைக் கட்டிப்பிடிக்க விரும்பிய ராவணனை அக்குளில் அமுக்கிப் பிடித்தவண்ணமே நான்கு மா கடல்களிலும் சந்தியாவந்தனத்தைச் செய்த பின் அக்குளிலிருந்து விடுவித்து ராவணனனைக் கீழே போட்டான் .

(வா நரன் = நரர் கள் / மனிதர்கள் ஆனால் வனத்தில் வசிக்கும் மனிதர்கள்; ஆகையால் வன நரர்கள் = வாநரம் TRIBAL COMMUNITY; FOLLOWING THEIR OWN RULES[ VAA NARA= JUNGLE MAN, FORESTER)

ராக்ஷஸேந்த்ரோ  ஹரீந்த்ரம் தமிதம் வசனம் அப்ரவீத்

தாராஹா புத்ராஹா புரம்  ராஷ்ட்ரம் போகாச் சாதன  பாஜனம்

ஸர்வ மேவா விபக்தம் நெள பவிஷ்யதி ஹரீச்வர

பொருள்

ராவணன், ” வானர வீரனே ! மனைவியர் , மக்கள், நகரம் , ராஜ்யம் , சுகபோகத்துக்குரிய பொருள்கள் , உடைகள், பாண்டங்கள், இவையாவும் நம் இருவருக்கும் பொதுவாக இருக்கக்கடவது” என்ற இந்த ஒப்பந்த வார்த்தையை வாலியிடம் சொல்லிக்கொண்டான்.

வாங்கிய அடியில் அலறிப்போன இராவணன், தன்னிடம் உள்ள பெண்கள், நாடு, நகரம் அனைத்திலும் 50 பெர்சென்ட் FIFTY PERCENT வாலிக்கே என்று சொல்லிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.

இந்தக் கதைகளை அகஸ்தியர் சொன்னதாக உத்தர காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50  என்று வாலி ஆடிப்பாடி கூத்தாடி இருப்பான் என்பதை நாம் மனக்கண்களில் காணலாம்.

பாண்டியனுக்கும் ராவணனுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை பழைய உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர் சொன்னதை பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கொடுத்து இருக்கிறேன்.

Picture- Ravana in Sanyasi disguise

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை

https://tamilandvedas.com › ராவ…

24 Jun 2014 — “ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் …

Missing: ஒப்பந்தம் ‎| Must include: ஒப்பந்தம்

இலங்கை அரக்கன் மீது ஞான சம்பந்தர் கடும் …

https://tamilandvedas.com › இலங…

·

18 Nov 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை.

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

https://tamilandvedas.com › நால…

6 Jun 2012 — நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்? சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் …

–SUBHAM—tags- ராவணன் ,வாலி , ஒப்பந்தம், : உறவினில் 50- 50; உதட்டினில் 50- 50 , 

PROTEST AGAINST ANTI HINDU BBC DOCUMENTARY IN LONDON ON SUNDAY 29-1-2023

PROTEST AGAINST ANTI HINDU BBC DOCUMENTARY IN LONDON ON SUNDAY 29-1-2023

PLEASE JOIN THE PROTEST TO SAVE HINDUS AND INDIA

Posted by London swaminathan, former BBC Broadcaster and Ex Senior Sub Editor, Indian Express Group Ltd.

Please see the above attachment–subham—