Positive thoughts help! (Post No 2655)

indra

Compiled by london swaminathan

 

Date: 22 March 2016

 

Post No. 2655

 

Time uploaded in London :– 17-20

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

indra in thailand

The God Indra, travelling one day through a forest, came upon a penitent who, during long terms of meditation and self-castigation, had almost changed himself into a tree stump.

(Penitent = a person who repents for his/her sins)

How long must I yet practise that I may be free, he asked the God SADLY.

Ten more years, said Indra.

Ten whole years? Sighed the sage, and for this complaint, was at once precipitated into hell.

 

Wandering on Indra came upon another penitent. This one was of slight spirituality and hoped to attain salvation by dancing around a tree. He asked the God the same question; but he asked them CHEERFULLY, in the midst of his dancing.

 

It will take you a hundred thousand years, said Indra smiling.

The foolish penitent gave a skip and hop

Only hundred thousand years!

And no sooner had the shout of joy left his lips than he rocketed up to heaven, a liberated soul.

 

Lord Krishna says in the Bhagavad Gita (6-5)

“Let a man lift himself by himself; let him not degrade himself; for the Self  (Atma) alone  is the friend of the self and the Self alone is the enemy of the self.”

–subham-

 

இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654)

harry with kunkum

Written by london swaminathan

 

Date: 22 March 2016

 

Post No. 2654

 

Time uploaded in London :– 12-20

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

panchakanya 3

நேபாள நாட்டிற்குச் சென்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு ஐந்து இளம்பெண்கள் வரவேற்பு கொடுத்தது பற்றி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் நிறைய படங்களும் விரிவான செய்தியும் வந்துள்ளன. அவைகள் மூலம் பல இந்துமத வழக்கங்களை நேபாளியர், அர்த்தம் தெரியாமலேயே பின்பற்றுவது தெரிந்தது.

 

எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும் ‘பஞ்ச கன்யா’ என்பதை, ‘ஐந்து கன்னிப் பெண்கள்’ என்றும் ‘ஐந்து திருமணமாகாத பெண்கள்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு ஐந்து என்பது நேபாளியருக்கு அதிர்ஷ்டகர எண் என்றும் எழுதியுள்ளன. ஆனால் மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லை.

 

‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரனம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.

 

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.

இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. சம்ஸ்கிருத ஸ்லோகம் தெரிகிறதோ, புரிகிறதோ என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களின் மகத்துவத்தை அறியாதோர் இல்லை.அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று கடைசி வரி கூறுகிறது.

prince-harry-nepal_3597889b

சங்க இலக்கிய நூலான பரிபாடலில், மதுரை திருப்பறங்குன்றத்துக்கு வந்த கணவன் மனைவி இந்திரன் – அஹல்யை-கௌதம மகரிஷி ஓவியத்தைக் கோவில் சுவரில் கண்டு விவாதித்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

 

இங்கே இந்த ஐந்து பேரின் வரலாற்றை எழுதப்போவதில்லை. இதிலுள்ள இரண்டு சூட்சுமங்களை மட்டும் ஆராய்வோம். பட்டியலிலுள்ள அகல்யை, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி – யாருமே கன்னிப் பெண் அல்ல. எல்லோரும் திருமணமானவர்கள். பின்னர் ஏன் பஞ்சகன்யா என்று சொல்லுகிறோம்? அவர்கள், மனதளவில் ஒரு கன்னிப் பெண் போல தூய்மையானவர்கள். வேறு ஆடவரை எண்ணாதவர்கள்; ‘செக்ஸ்’ என்பதை, சிற்றின்பக் கருவியாகப் பயன்படுத்தாமல் வம்ச விருத்திக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். அகல்யைகூட இந்திரனால் ஏமாற்றப்பட்டவளே தவிர தானாக அவனை நாடிச் செல்லவில்லை. மேலும் அஹல்யை கதையில், பாபம் செய்தோருக்கும் விமோசனம் உண்டு என்ற தாத்பர்யமும் – உட்கருத்தும் – பொதிந்துள்ளது.

இரண்டாவது சூட்சுமம்- ஆரிய,திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது. இந்துமத புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் காச்யப ரிஷியின் பிள்ளை என்று சொன்னபோதிலும், வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு அடிவருடிய திராவிட இயக்கங்களும் அசுரர்களை திராவிடர் என்றும் தேவர்களை ஆரியர் என்றும் முத்திரை குத்தி எழுதிவருகின்றனர். மேற்கண்ட பட்டியலில் மண்டோதரி என்பார், ராட்சச ராவணனின் மனைவி! தாரா என்பவளோ, குரங்கின அரசன் வாலியின் மனைவி. இவர்களை, தினமும் நினைக்கவேண்டிய புனிதர் பட்டியலில் பழங்காலத்திலேயே சேர்த்து வேற்றுமை பாராட்டாது எல்லாப் பெண்களும் சொல்லிவருவது, ஆரிய-திராவிட இனவெறிப் பிதற்றல்வாதிகளின் மூஞ்சியில் கரி பூசுகிறது.

 

ஆக, நேபாளத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சகன்யா வரவேற்பு, இது எல்லாவற்றையும் நினைவுபடுத்தும். நேபாளத் தலைநகரான காட்மண்டில் ஒரு புத்தர் கோவில் உட்புறம் முழுதும் தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளதால் அதையும் பொற்கோவில் என்றழைப்பர் (எல்லோரும் அறிந்த பொற்கோயில் சீக்கியர்களின் அமிர்தசரஸில் உளது; அதைவிட அதிக தங்கம் உடைய கோவில் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவில்; என் முந்தைய கட்டுரைகளில் விவரம் காண்க). நேபாளத்தில் இந்த புத்தர் கோவிலுக்கும் ஹாரி சென்றுவிட்டு மஞ்சள் துண்டு, செங் குங்குமப்பொட்டு ஆகியவறுடன் கூர்க்கா வீடுகளுக்குச் சென்றார்.

ஆக இளவரசர் ஹாரியின் விஜயம், பஞ்சகன்யா பெருமையை அனைவருக்கும் நினைவுபடுத்தும்.

 

–சுபம்–

 

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்! (Post No 2653)

vivekananda saffron

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 22 March 2016

 

Post No. 2653

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

விவேகானந்தர் வழி

 

பாதிரியாருக்குத் தக்க பாடம் புகட்டிய விவேகானந்தர்!

 

ச.நாகராஜன்

 

கல்கத்தாவில் தன்னைச் சந்திக்க வந்த சிஷ்யர் பிரியநாத் சின்ஹாவிடம், ‘ஒரு மனிதன் தன் ம்தத்தை உண்மையாக நேசிக்கையில் அவன் தைரியசாலியாகவும்  துணிச்சலுடனும் திகழ்வான். அப்படிப்பட்ட தைரியம் ஒற்றுமையை உருவாக்கும்.

அது தான் ஹிந்துக்களிடையே இல்லை’ என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்.

 

 

இதைத் தொடர்ந்து தனது அனுபவம் ஒன்றையும் அவர் கூறலானார்.

 

அவர் மேலை நாட்டுக்குச் செல்கையில் கடற்பயணத்தின் போது இரு பாதிரியார்கள் அவ்ரிடம் வந்து கிறிஸ்தவ மதம் ஹிந்து மதம் ஆகிய இரு மதங்களுக்கிடையே உள்ள நல்ல் அம்சங்கள் மற்றும் தீய அம்சங்களைப் பற்றி விவாதிக்க வலியுறுத்தினர். வாதம் ஆரம்பமானது.

 

 

தங்கள் பக்கம் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையில் அந்த பாதிரிமார்கள் இருவரும் மிக மோசமாக ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் திட்ட ஆரம்பித்தனர். ஸ்வாமிஜி பொறுத்துப் பார்த்தார்.

 

 

வசை பாடல் தொடர்ந்தது. ஸ்வாமிஜியால் பொறுக்க முடியாத சூழ்நிலை. ஸ்வாமிஜி இருவரில் ஒருவரின் காலரைப் பற்றினார்.

சிரித்தவாறே ஆனால் மிகவும் தீவிரமான தொனியில் , :”இனியும் என் மதத்தைப் பற்றி தூஷித்தால் இந்தக் கடலில் உங்களைத் தூக்கி வீசி எறிந்து விடுவேன்” என்றார்.

 

ஸ்வாமிஜியின் கட்டுமஸ்தான உடல் வாகு அனைவரும் அறிந்ததே!

 

நடுநடுங்கிப் போன பாதிரியார், “ஐயா! என்னை விட்டு விடுங்கள். நான் போகிறேன்.இனிமேல் இப்படிப் பேச மாட்டேன்” என்று கெஞ்சலானார்.

 

ஸ்வாமிஜி அவரை விடுவித்தார். அன்று முதல் அந்த்ப் பயணம் முழுவதும் ஸ்வாமிஜியிடம் அந்தப் பாதிரியார் மிகுந்த மரியாதையுடன் நடக்கலானார்.இதைக் கூறி முடித்த ஸ்வாமிஜி பிரியநாத்திடம், “உன்னிடம் உன் தாயாரைப் பற்றி ஒருவர் தூஷித்தால் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“அவன் கழுத்தைப் பிடித்து அவனுக்குத் தக்க பாடம் கற்பிப்பேன்” என்றார் பிரியநாத்.

 

அந்த பதிலால் ஸ்வாமிஜி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“நன்றாய் சொன்னாய், சின்ஹா! நீ இப்படி அசைக்க முடியாத நம்பிக்கையை உன் ம்தத்தின் மீது கொண்டால், இந்த பாரத நாட்டின் மீது கொண்டால், உன் சகோதர ஹிந்துக்களை இந்த பாதிரிமார்கள் மதமாற்றம் செய்வதைக் காணப் பொறுக்கமாட்டாய்.. ஒவ்வொரு நாளும் இந்த மதமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும் கூட நீ சும்மாதான் இருக்கிறாய்? எங்கே உன் மதப்பற்று? எங்கே உன் தேசபக்தி? ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ பிரசாரகர்கள் உன் கண் முன்னாலேயே ஹிந்து மதத்தை இழிவு படுத்திப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைக் கண்டித்து ஹிந்து மதத்தைக் காப்பாற்றும் வகையில் எத்தனை பேர் முன் வருகிறார்கள்?” என்று கேட்டார்.

 

ஸ்வாமிஜி எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும் என்று சொன்ன அதே தருணம் நம் மதத்தை நேசித்துப் போற்றுதல் மட்டும் போதாது; மதமாற்றம் என்று வரும் போது அதைத் தடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அதற்குத் தானே உதாரணமாக இருந்ததை தன் கடல் பயண சம்பவம் மூலம் உணர்த்தினார்.

 

 

ஸ்வாமிஜி கூறிய வழியில் நடக்க வேண்டியது நமது கடமை!

************

 

Hindu Welcome to Prince Harry in Nepal (Post No 2652)

panchakanya 3

Compiled by london swaminathan

 

Date: 21 March 2016

 

Post No. 2652

 

Time uploaded in London :– 18-40

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

panchakanya 2

Prince Harry was given a traditional Nepalese welcome yesterday in Kathmandu, Capital of Nepal. Five Virgins, known as Pancha Kanya gave him the welcome by garlanding him. Till recently, Nepal was a Hindu Kingdom. Now they have dropped that claim when they framed a new constitution. Governments may change, constitutions may change. But people’s belief remains the same.

Hindu women remember Five Great Women every day in the morning. They recite a sloka/couplet in Sanskrit that contains the five names. This couplet itself is very significant because it explodes the Aryan- Dravidian myth to pieces. Though our scriptures clearly say that the Asuras or Rakshasas are cousins of Devas, jaundice eyed foreigners deliberately write that they belong to different races. This sloka also is a proof to show that good people are praised and remembered, irrespective of Rakshasa or Deva or Monkey race.

 

Five women praised in the Sanskrit couplet are Ahalya (wife of a seer, Gautama),Draupadi (Wife of Panadava brothers), Sita (wife of Rama), Tara (Wife of Monkey King Vali) and Mandodari (wife of Demon king Ravana).

All the five were featured in the great Hindu epics Mahabharata and Ramayana.

prince-harry-nepal_3597889b

In Nepal the Panchakanya are virgins or not married; but the above five were married. But here the virgin stands for their virgin minds – ever pure! For them sex was an act used for procreation and not for sexual gratification. That is why every Hindu woman remember them every morning. Those who don’t recite such a couplet also know the stories of five women and their contribution to Hindu culture.

Traditional Sanskrit couplet, part of Pratasmaran (Morning Prayer) runs like this:

Ahalyaa, Draupadii, Seetaa, Taaraa, Mandodari tathaa

Panchakanyaah smaren nityam sarva mahaapaataka nasanam

 

Meaning:

By remembering the Five Pure Women Ahalya, Draupadi, Sita, Tara and Mandodari all the great sins are wiped out or destroyed.

This sloka explains all that Hindu women stand for. Draupadi fought for her rights. Sita was ready to undergo all the hardships that her husband went for. Tara established her right by making her son Angada the next king of Kishkinda. Ahalya , a sinner, was reformed and proved that every sinner has a future. Mandodari, a chaste woman, but married to a demon Ravana advised him to send back Sita to Rama.

prince-harry-nepal_3597891b

Report from Nepal according to London Newspapers:

Prince Harry’s visit to Nepal began with a ceremony signifying luck and purity – a welcome from five virgins.

The young women greeted their special guest with gifts of flowers and placed a garland around his neck.

He was given flowers by Ujala Maharjan, 18, Alisha Awale, 18, Reju Maharjan, 19, and Nafisa Dangol, 17, before Maiya Maharjan, 25, put a garland or orange flowers around his neck.

 

The group of five young women – a lucky number in Nepalese culture – with their status as virgins representing purity, greeted their special guest with gifts of flowers and placed a garland of marigolds around his neck.

 

 

Harry was left in awe of the magnificent Hanuman Dhoka Palace complex, named in honour of the monkey god, Hanuman, with its impressive galleried courtyards, featuring beautiful carvings.

 

Much of the monument was built by King Pratap Malla in the 17th century but a 1934 earthquake which struck Nepal destroyed a large amount of the structure.

harry with kunkum

The prince lit a large candle, or lamp, in a metal cup and handed it to a priest guarding the icon at the 600-year-old Golden Temple. The offering of a burning lamp symbolises the impermanence of life.

 

When he arrived Harry was greeted by the temple’s chief abbot, 94-year-old Turtha Raj Shakya, who gave him a gift of an orange holy scarf decorated with eight auspicious symbols of Buddhism.

 

Already wearing a garland of orange flowers given to him by the five young women, the prince said: “Orange is the colour of the day.”

 

Golden Temple of Nepal

 

He was then taken into the tiny main courtyard of the temple, no bigger than half a tennis court, in which stood a large pagoda-style shrine as well as the shrine of the Buddha – covered in gold leaf, giving the temple its name.

As the prince stooped through a low doorway to enter the courtyard, he looked around him and said “Wow”.

 

 

Local conservationist Anil Chitraker showed him around the building, explaining the significance of prayer wheels, bronze statues of monkeys and elephants that relate to stories told by the Buddha, and the importance of the temple itself, which serves as a religious and community hub for 5,000 people.

After lighting the lamp, the prince gave it to Sujan Shakya, 32, one of two priests guarding the shrine of the Buddha.

 

 

The chief priest, or baphaca, in the temple is 10-year-old Sumit Shakya, who is serving one month as guardian of the shrine. Tradition dictates that the job must always be done by a boy aged under 12, who must not leave the temple for the month that he is in charge.

 

 

The temple was built in 1409 on the site of a 12th century Buddhist monastery, and only survived last year’s earthquake because of just-completed work to replace all of its rotting wooden beams.

 

Mr Chitraker said of the lamp-lighting ceremony: “In the Buddhist tradition, all this knowledge needs to spread, so when you light one lamp with the other lamp it symbolises how knowledge and wisdom spreads around the world.

“The butter that is being used to fuel the lamp ultimately runs out so it also symbolises the impermanence of life.”

 

 

He went on: “The earthquake was devastating, so between the palace he has seen and the Golden Temple, it shows how a 2,600-year-old institution established by Buddha comes to life when there is a disaster.

 

“The people pooled their food, they pooled their fuel, they cooked for 800 people at the same time and they took care of their houses. Five days after the earthquake some people were already moving back into their houses.”

–subham-

அனுமனைப் பிடித்தவரை ஆலோசகர் ஆக்குகிறோம்! (Post No 2651)

Quill_(PSF)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 21 March 2016

 

Post No. 2651

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

letter-writing-fountain-p-007

நையாண்டி மடல் 6

 

அனுமனைப் பிடித்தவரை ஆலோகர் ஆக்குகிறோம்!

 

ச.நாகராஜன்

 

என் இனிய முட்டாள்களே!

 

வாக்குக் கொடுத்தபடி இந்தக் கட்டுரையில் கட்டிங் பற்றிய இரகசியங்களை ஆரம்பிக்கிறோம்.

 

ஆனால் உள்ளபடியே ஒன்று சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் போதே உள்ளங்கை அரிக்கிறது.

 

 

தம்பீ! கழகக் கண்மணீ!!

 

இதற்கு டாக்டர் தேவையில்லை என்பதை நீயே நன்கு அறிவாய்.

உன் கை வைத்தியமே போதும். புரிந்து கொண்டிருப்பாய்.

‘இந்தியத் திருநாட்டில் ஆங்காங்கே கோலாகலம், குதூகலம். இவற்றில் பங்கேற்பீர்களா?’ என வடவர் சேனல்கள் நம்மை மடக்கிக் கேட்கின்றன.

 

பெருமிதத்துடன் கூறுகிறோம்- பங்கேற்க மாட்டோம் என்று!

என்னை?

 

தொன்னையில் நெய் வழியும் போது கையை ஏந்துபவன் கபோதி அல்லவோ! இந்தத் தத்துவத்திற்கு இணங்க பல மாநில கோலாகலங்களில் இந்த முட்டாள்கள் கழகம் பங்கு பெறாது என்பதைத் திட்டவட்ட்மாகத் தெளிவு படுத்துகிறேன்.

ஏன் இந்த முடிவு என்கிறாயா?

 

இங்கு தான் இருக்கிறது இரகசியம்!

நமது கொள்கைகளின் ஆணி வேரைச் சொல்ல வேண்டியது இங்கு என் தலையாய கடமை ஆகிறது.

 

மொத்தமும் சுருட்டு

 

letter-writing-day-fun

மொத்தமும் சுருட்டு; உனக்கு நீயே; நாளையும் நாமே என்ற மூன்று முத்தான கொள்கைகளின் அடிப்படையில் வளர்பவர்கள் நாம்!

 

மொத்தமும் சுருட்டு என்பதற்கான உள் அர்த்தம் உனக்கே தெரியும். வெளி அர்த்தத்தை மட்டும் இங்கு பகிர முடியும்!

பீடி குடிக்காதே, சிகரட் உடல் நலத்திற்குத் தீங்கு பயக்கும் என்று தான் விளம்பரங்கள் வருகின்றனவே தவிர சுருட்டு பிடிக்காதே என்று சேனலில் எதிலாவது பார்த்த்து உண்டா, நீ?!

 

 

ஆகவே நல்ல எண்ணத்தில் மொத்தமும் சுருட்டு என்கிறோம் நாம்!

 

 

உனக்கு நீயே என்ற கொள்கையின் படி எங்கும் நீ பதவிக்காக நிறக் வேண்டாம். தீட்டாக நாம் கருதும் ஓட்டுக்காக அலைய வேண்டாம். உனக்கு வேண்டிய பதவியை, உனக்கு வேண்டிய காலம் வரைக்கும் நீயே நிர்ணயித்துக் கொள்! இந்தப் பதவிக்குப் போட்டி போட்டு உன்னிடம் வருவோருக்கு நீ காண்பிக்க வேண்டிய அறிவிப்புப் பலகை நாளையும் நாமே என்பது தான்! மறந்து விடாதே. பலகையில் அன்றாடம் தேதியை மாற்ற மறக்காதே!

 

எவருக்கும் விலையுண்டு என்பதை விலையில்லாப் புத்தகம் கூட வாங்கிப் படிக்காத எனக்கா தெரியாது?

 

 

கஷடப்பட்டு ஆடி ஓடி அவலாகி நொந்து நூடில்ஸாகி வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அவர்களின் உள்ளங்கையைக் கொஞ்சம் உரசினால் போதும், நம் முட்டாள்கள் கழகத்தில் முன்னணி உறுப்பினர்களாக – கண்மணிகளைக் காப்பவர்களாகக்- களம் இறங்கி விடுவார்கள்.

 

 

இங்கு தான் நிற்கிறது, கட்டிங்!

 

இதை நான் கண்டுபிடித்த இரகசியத்தையும் அதைப் பரவலாக்கிய விதத்தையும் இதற்கு உதவும் அபாயகரமான ஆயுதத்தையும் பற்றி உன்னிடம் பகிர வருகிறேன், பகிரங்கமாக!

 

 

இதற்கிடையில் இன்று நாம் கேள்விப்பட்ட செய்தி இது! நமது மாண்புமிகு அதிகாரிகள் ஓடிக் கொண்டிருந்த காரில் ஆடிக் கொண்டிருந்த சில பேர்வழிகளைப் பிடிக்க அவர்கள் முழித்த முழியினாலும் உளறளினாலும் சந்தேகப்பட்டு காரை சோதனை செய்த போது யாரைப் பிடித்தார்கள் என்கிறாய்?

anjile ondru petran, hanuman

அனுமன் சிலையை பிடித்தோம்

 

அனுமாரை! ஆமாம்! அஞ்சிலே ஒன்றான வாயு பெற்றான், அஞ்சிலே ஒன்றான கடலைத் தாவி அஞ்சிலே ஒன்றான வான் வழியே சென்று அஞ்சிலே ஒன்று ஆன பூமியின் மகளைக் கண்டதாகக் கூறப்படுகிறதே, அவனைத் தான்!

 

 

அந்த அனுமன் சிலையை ஆவணம் இல்லாததால் பிடித்தோம் என்று சொல்ல , ஐயோ நாங்கள் பஜனையில் அல்லவா மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தோம், மெய்மறந்து ராம் ராம் என்று உருகிப் பாடிக் கொண்டிருந்தோம் என்று அவர்கள் கதற கோவிலில் நிறுவ வேண்டிய அனுமன் அரசு கருவூலத்தில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்துளான் தற்போது!

இந்த மாண்புமிகு அதிகாரிகளைக் கண்டு மனம் மிக மகிழ்கிறோம்!

 

இவர்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவர்களை உயர் மட்ட கொள்கைப் பரப்பு ஆலோசகர்களாக உடனடியாக நியமிக்கிறோம்.

 

 

அத்தோடு ஐயன் வள்ளுவன சிலை உள்ளிட்ட ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோரை குதூகலக் கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டி தார்பாலின் போட்டு மூடி மறைத்த சிங்கங்களை -எங்கள் தங்கங்களையும் உயர் மட்ட ஆலோசகர் குழுவில் இணைக்கிறோம்.

 

 

திருக்கோயில் நகரில் ஒரு செய்தி. ஆயிரம் குடங்கள் ஒரு பெரிய கண்டெய்னரில் இருந்ததாம். இருக்கலாமா? நம் மேதகு உறுப்பினர்கள் அவற்றைக் கைப்பற்றி விட்டனர். அங்குள்ள பால்குடம் எடுக்கும் தாய்க்குலம், ‘நாங்கள் ஆர்டர் செய்ததை அள்ளிட்டுப் போறீங்க்ளேடா பாடையிலே போற பாவிங்களா’ என்று குய்யோ முறையோ என்று கத்த, சத்தம் போடாமல் அவை அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இதில் தீரத்துடன் செயல் பட்டவர்களையும் நாம் நம் கழகத்தில் இணைக்கிறோம்.

பால் குடத்தைக் கைப்பற்றினால் சட்டியினால் நம்மை அடிப்பார்கள், புலியை முறம் கொண்டு விரட்டிய போர்க்கள வீராங்கனைகள். ஆகவே அந்த இடத்திலிருந்து நைஸாக நகர்ந்து விட்டோம்.

 

 

இப்போது போகும் வேகத்தைப் பார்த்தால் உறுப்பினர்களை விட முட்டாள் கழக ஆலோசகர்கள் அதிகமாகி விடுவார்களோ என அச்சப்படுகிறோம். துச்சமாக நினைக்க, இது ஒரு சின்னச் செய்தி அல்ல் என்பதால் மிச்சம் மீதி இன்றி இது பற்றி விசாரித்து கழகக் கண்மணிகளை இலட்சம் இலட்சமாகச் சேர்க்க வழி வகுப்போம்; அதற்கு அணி அணியாக.

 

புறநானூற்றுப் போர் வாளே பொங்கி வா!

 

 

புறநானூற்றுப் போர் வாளே பொங்கி வா!

அகநானூற்று அட்டகாசமே. ஆர்ப்பாட்டத்துடன் வா!

கலிங்கத்துப் பரணியின் கட்டாரியே, கடகடவென்று சிரித்து வா, சீறி வா!

குறுந்தொகையின் குத்தீட்டியே குமுறி வா!

 

 

இனி கட்டிங்கிற்கு வருவோம்:

நான் பிறந்தது வளப்பமான ப்ழைய கால சில்லாவிலே ஒரு குக்கிராமத்திலே என்பதை வரலாற்று அறிஞர்கள் உனக்குத் தெளிவு படத் தினமும் கூறி வந்திருப்பார்கள்.

அந்தப் பழைய பொன்னான நாளிலே தான் ‘ப்ள்ளிக்கு வா பள்ளிக்கு வா’ என்று நச்சரித்தான் ஒரு பழைய கால ஜாலக்காரன். அ –அம்மா; ஆ-ஆடு என்று ஆரம்பிக்கும்  மோசக்காரன்

 

அவனிடமே என் எண்ணத்தை வெளிப்படையாக வெடுக்கென்று சொன்னேன்: உன்னிடமிருந்து ஓடப் போகிறேன். அதற்காக நான் திருட்டு பிளேன் ஏறப் போகிறேன் என்று!

 

 

அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.- ஹ ஹ ஹா என்று,

‘பிளேன் வருவதற்கு விமான நிலையம் வேண்டுமடா, ஓடு பாதை வேண்டுமடா ஆயிரம் ஏக்கர் அளவுக்கு, முழு முட்டாளே’ என்றான்.

 

 

உடனே ஓடினேன், ஓடினேன், கிராமத்தைச் சுற்றி ஓடினேன். இரண்டே நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கு வந்து விட்டேன். ஏனெனில் உனக்கே தெரியும் குக்கிராமம் அந்த அளவுக்கு மிகச் சிறியதென்று. அங்கு கபடி விளையாடக் கூட் கையளவு திடல் இல்லை!

 

 

மாற்று வழியை யோசித்து மாநகருக்கு வந்து விட்டேன்.

கையிலே இருந்ததோ நாலணா! நாளைக்கு என்ன செய்வது?

என் நிலை கேட்டு.. .. ..  நிலை கெட்டு .. .. .. ..

உன் கண்களில் பனிக்கும் நீரைப் பார்க்கிறேன். கலங்காதே!

 

அடுத்த மடலில் கட்டிங் பிறந்த வரலாறைத் தொடர்கிறேன்.

அதுவரை அன்பு நெஞ்சங்களே சற்று விடை கொடுங்கள்.

 

மு மு க தலைவர்

 

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

உருகும் பனிப்பாறைகள்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! (Post No.2648)

o-ANTARCTICA-SUMMER-ICE-MELT-facebook

Ice Floes on the Southern Ocean

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 20 March 2016

 

Post No. 2648

 

Time uploaded in London :–  6-29 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 4-3-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

உருகும் பனிப்பாறைகள்; உயரும் உஷ்ணநிலை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

ச.நாகராஜன்

 

arctic

பூமி வெப்பமயமாதல் என்பது ஏதோ ஒரு கணிப்பு அல்ல; அது இப்போது நடக்கின்ற ஒரு உண்மை நிகழ்வு ஜேம்ஸ் ஹான்ஸன்

பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஸியஸ் உய்ரந்து விட்டதாக பிரிட்டனின் விஞ்ஞானிகள் கவலையுடன் எச்சரித்துள்ளனர்..பூமியில் நான்கு டிகிரி செல்ஸியஸ் உயர்ந்தால் என்னென்ன நடக்கும் என்ற விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையைத் தொடர்ந்து நவம்பர் 2015இல் முடிந்த இவர்களின் ஆய்வு முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது. விளைவுகள் என்ன? பூமியில் உள்ள அனைத்துக் கடல்களும் பொங்கி எழும்!66 கோடி மக்கள் வாழ்கின்ற பரப்பை நீரினுள் மூழ்கடித்து பல கோடி பேரை விழுங்கும்.

 

இரண்டே இரண்டு டிகிரி உஷ்ணநிலை உயர்வு கூட 28 கோடி பேருக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.

இது ஒரு புறம் இருக்க, பூமியின் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்தி வருகின்றன. இதனால் நமக்கென்ன என்று சும்மா இருக்க முடியாது.இந்த உயர்வு பூமியின் சுழற்சியைச் சற்று மெதுவாக ஆக்கி இருக்கிறது. பூமி சற்று மெதுவாகச் சுழன்றால் பூமியில் பகல் நேரம் சற்று அதிகமாக ஆகும்.

விஞ்ஞானிகள் கடந்த கால சரித்திரத்தில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் நிலைகளைச் சரியாகக் கணித்துக் கூற முடியும்.பூமியின் உட்பகுதியையும் அவர்கள் கவனித்து வருகின்றனர்.

இயற்பியல் பேராசிரியரான மாத்யூ டம்பெர்ரி (Mathieu Dumberry),” கடந்த நூற்றாண்டில் கடல் மட்ட மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள, பூமியின் உட்பகுதியை நன்கு ஆராய வேண்டியிருக்கிறது.” என்கிறார்.

antarctic_sea_ice-spl

 

பனிப்பாறைகள் உருகுவதால் துருவத்தின் அருகே வசிக்கும் மக்கள் கூட்ட்ம் இடம் பெயர்ந்து பூமத்திய ரேகைப் பகுதியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இது மட்டுமின்றி சந்திரனின் ஆகர்ஷணமும் பூமியின் சுழற்சியில் தாக்கம் ஏற்படுத்தி அதை மெதுவாகச் சுழல வைக்கிறது. இந்தக் காரணங்களினால் பூமியின் பகல் நேரம் சற்று அதிகரித்துள்ளது. எவ்வளவு என்று கேட்டு தெரிந்து கொண்டால் ‘பூ’ இதற்கா இவ்வள்வு ஆர்ப்பாட்டம் என்று சாமானிய மனிதன் விமரிக்கக் கூடும்.

பகல் நேரத்தின் அதிகரிப்பு அடுத்த நூற்றாண்டில் 1.7மில்லி செகண்டாக இருக்கும்.

 

 

இந்த உஷ்ண நிலை உயர்வும் பனிப்பாறை உருகுதலும் ஏன் ஏற்படுகின்றன?

நாம் அன்றாடம் உபயோகிக்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் கக்கும் நச்சுப் புகை தான் காரணம். இவை சுற்றுப்புறத்தை மாசு படுத்தி நாம் சுவாசிக்கும் காற்றையும் அசுத்தமாக்குகின்றன. இதனால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள் பல! சுவாசக் கோளாறுகளில் ஆரம்பித்து மாரடைப்பு வரை அனைத்து வியாதிகளையும் இன்றைய மோசமான சுற்றுப்புறச் சூழ்நிலை ஏறபடுத்துகிறது.

நல்ல காற்றை கிராமங்களில் மட்டுமே சிறிது சுவாசிக்க முடிகிறது.

 

vitality 1

பழைய காலங்களில், பாட்டில் வாட்டர், கேன் வாட்டர்’  என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆனால் இன்றோ அவை அன்றாட நடைமுறை ஆகி விட்டது!

அடுத்து வரப்போவது பாட்டில் காற்று அல்லது கேன் காற்று! நல்ல காற்றை நகரங்களில் சுவாசிக்க முடியவில்லை என்பதால் நீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது போல காற்றையும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப் போகிறார்கள்.

 

 

சிரிப்புக்கான செய்தி அல்ல இது. உண்மையிலேயே நடைமுறைக்கு வந்து விட்ட உண்மை இது.

சீனாவில் சுற்றுப்புறச் சூழல் மிக அதிக அளவில் கெட்டு விட்டது. லட்சக் கணக்கான வாகனங்கள் உள்ளிட்ட பல காரணங்களினால் காற்று மாசின் அளவு எல்லை மீறிப் போய்விட்டது.

 

vitality 2

இதைப் பார்த்த கனடாவைச் சேர்ந்த  ஒரு நிறுவனம் ‘சுத்தக் காற்றை’ பாட்டிலில் அடைத்து விற்க ஆரம்பித்துள்ளது.மலைக் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 28 டாலர்கள் தான் – அதாவது சுமார் 1680 ரூபாய்! கனடிய சுத்தக் காற்று இடங்களான பான்ஃப் மற்றும் லேக் லூஸியிலிருந்து பிடிக்கப்படும் காற்று சீனாவில் இப்போது அமோக விற்பனையைக் கண்டுள்ளது. ‘ப்ரீமியம் ஆக்ஸிஜன்’ – அதாவது முதல் தர ஆக்ஸிஜன் என்ற பெயரில் கிடைக்கப் பெறும் இதை 1680 ரூபாய் கொடுத்து வாங்க சீன மக்கள் தயார். இந்த நிறுவனத்தின் பெயர் வைடாலிடி ஏர் (Vitality Air) இந்த நிறுவனத்தின் சீன பிரதிநிதியான ஹாரிஸன் வேங் என்பவர் இண்டர்நெட்டில் இது விற்பனைக்கு வந்த செய்தி தெரிவிக்கப்பட்ட உடனேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்க்கப்பட்டதாகக் கூறுகிறார்.

 

 

நமது நாட்டில் தலைநகர் டில்லியின் காற்று நீதிபதிகளையே கவலையுறச் செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூற வைத்திருக்கிறது. அடுத்த கவலைக்குரிய நகரம் சென்னை! இங்கும் பாட்டில் காற்று வர நீண்ட காலம் ஆகாது.

 

 

இதைத் தவிர்க்க வாகனப் பயன்பாட்டை அனைத்து மக்களும் கட்டுப்படுத்த வேண்டும். இது ஒன்றே வழி. நடக்க முடிந்த இடங்களில் நடக்கலாம். ஒவ்வொருவரும் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்வதைத் தவிர்த்து நிறைய பேர் அமரக்கூடிய பஸ்களில் பயணிக்கலாம். நவீன மாசைக் கட்டுப்படுத்தும் எஞ்சின் உள்ள வாகனங்களையே வாங்கலாம். அரசின் வற்புறுத்தலோ அல்லது சட்டமோ இல்லாமல் தாமாகவே வாகனங்களின் புகைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை அவ்வப்பொழுது மேற்கொள்ளலாம். மரங்களை வளர்ப்பதன் மூலம் உயிர்க்காற்றான ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்க வழி வகுக்கலாம்.

vitality 3

 

மக்கள் மனம் வைத்தால் நம் சந்ததியினருக்கு சுத்தக் காற்றையும் சுத்த நீரையும் நிச்சயமாக வழங்க முடியும்!

விஞ்ஞானிகள் எச்சரித்து விட்டார்கள்; விழிக்க வேண்டியது மக்கள் கடமை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1893ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது. கப்பல் ஒன்றில் ஸ்வாமி விவேகானந்தருடன் சக பயணியாக பிரபல தொழிலதிபரான ஜாம்ஷெட்ஜி டாட்டா ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். கப்பலில் பயணித்ததால் பலமுறை ஸ்வாமிஜியுடன் பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.இந்தியாவை ஆன்மீக உணர்வினால் தட்டி எழுப்ப விழைந்த வீரத்துறவி விஞ்ஞானத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததை எண்ணி அவர் அதிசயித்தார். ஸ்வாமிஜியின் திட்டங்களை எல்லாம் கேட்ட அவருக்கு பெரும் உத்வேகம் ஏற்பட்டது.இந்தியாவில் முதல் எஃகு உருக்காலையை அவர் ஆரம்பித்தார். ஆரம்பித்தவுடன் ஸ்வாமிஜிக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார் இப்படி: “ ஐந்து வருடங்களுக்கு முன்னர் உங்களுடன் சக பயணியாக நான் பயணித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் பேசிக்கொண்டிருந்த படி இந்தியாவில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை நான் ஆரம்பித்துள்ளதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.”

 

tata

ஸ்வாமிஜியால் உத்வேகம் ஊட்டப்பட்ட டாட்டா அவர் தன்னை வழி நடத்த வேண்டும் என்று விரும்பினார். அவரை தனது ஆய்வு நிறுவனத்திற்கு முதல் டைரக்டராக ஆக்க வேண்டும் என்ற பெரும் விருப்பம் இருந்தது.

 

ஆனால் ஸ்வாமிஜி  பல துறையினரையும் தட்டி எழுப்பி ஊக்குவித்து இந்தியாவின் மொத்த எழுச்சியில்  கவனம் செலுத்தியதால் தனிப் பொறுப்புகளை ஏற்கவில்லை.

 

ஒரு சிறிய கப்பல் சந்திப்பு இந்திய ஆலை வரலாற்றிலும் விஞ்ஞான ஆய்வுக் கூட வரலாற்றிலும் ஒரு பெரிய விதையை விதைத்தது அதிசயம் தானே!

**************

 

Why I Love Bombay: Edwin Arnold (Post No. 2647)

Bombay_Mumbai_Harbour_Scene_c1880

Compiled by london swaminathan

 

Date: 19 March 2016

 

Post No. 2647

 

Time uploaded in London :–  18-11

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

From the book India Revisited by Edwin Arnold Published in London in 1886

 

(Pictures are taken from different sources, not from Edwin’s book)

oldbombay2_grande

Augustus said of Rome, “I found it mud; I leave it marble,” and the visitor to India who traverses the Fort and the Esplanade Road after so long an absence as mine might justly exclaim “I left Bombay a town of warehouses and offices; I find her a city of parks and palaces.”

 

“Even the main native streets of business and traffic are considerably developed and improved, with almost more colour and animation than of old. A tide of seething Asiatic humanity ebbs and flows up and down the Bhendi Bazaar, and through the chief mercantile thoroughfares. Nowhere could be seen a play of livelier hues, a busier and brighter city of life! Besides the endless crowds of Hindu, Gujerati, and Mahratta people coming and going – some in gay dresses, but most with next to none at all – between the rows of grotesquely painted houses and temples, there are to be studied here specimens of every race and nation of the East.

Arabs from Muscat, Persins from the Gulf, Aghans from the Northern Frontier, black shaggy Biluchis, negroes of Zanzibar, islanders from the Maldives and Laccadives, Malagashes, Malays, and Chinese throng and jostle with Parsees in their sloping hats, with Jews, Lascars, fishermen, Rajpoots, Fakirs ,Europeans, Sepoys and Sahibs. Innumerable carts drawn by patient, sleepy-eyes oxen, thread their creaking way amid tram car, buggies, victorias, palanquins and handsome English carriages. Familiar to me but absolutely bewildering to my two companions, under the fierce, scorching, blinding sun light of midday, is this play of keen colours, and this tide of ceaseless clamorous existence.

OldBombay-110624_8_2665237

But the background of Hindu fashions and manners remains unchanged and unchangeable. Still, as ever the motely population lives its accustomed life in the public gaze, doing a thousand things in the roadway, in the gutter, or in the little open shop, which the European performs inside his closed abode. The unclad merchant posts up his account of pice and annas with a reed upon long rolls of paper under the eyes of all the world.

 

The barber shaves his customer, and sets right his ears, nostrils and fingers, on the side walk. The shampooer cracks the joints and grinds the muscles of his clients wherever they happen to meet together.

The Guru drones out his Sanskrit slokas to the little class of brown-eyed Brahman boys; the bansula player pipes; the sitar singer twangs his wires; worshippers stand with clasped palms before the images of Rama and Parvati, or deck the Lingam with votive flowers; the beggars squat in the sun, rocking themselves to an fro the monotonous cry of ‘Dharrum’; the bheesties go about with water skin sprinkling the dust; the bhangy coolies trot with balanced bamboos; the slim bare limber Indian girls glide along with baskets full of chupatties or bratties of cow dung on their heads, and with small naked babies astride upon their hips.

 

Everywhere, behind and amid the vast bustle of modern Bombay, abides ancient, placid, conservative India, with her immutable customs and deeply rooted popular habits derived unbroken from time immemorial days. And overhead in every open space, or vista of quaint roof tops, and avenues of red, blue, or saffron hued houses, the feathered crowns of   the date trees wave, the sacred fig swings its aerial roots and shelters the squirrel and the parrot, while the air is peopled with hordes of  ubiquitous, clamorous, grey necked crows, and full of ‘Kites of Govinda’, wheeling and screaming under a cloudless canopy of sunlight.  The abundance of anima life even in the suburbs of this great capital appears once more wonderful, albeit so well-known and remembered of old. You cannot drop a morsel of bread or fruit but forty keen beaked , sleek, desperately audacious crows crowds to snatch the spoil; and in the tamarind tree which overhangs our veranadh may at this moment may be counted more than a hundred red throated parakeets, chattering and darting, like live fruit, among the dark green branches. India does not change!”

postcard-20005-horiz

In the beginning Mr Arnold says:-

“The transformation effected in this great and populous capital of India during the past twenty years does not vey plainly manifest itself until the traveller has landed. From the new light house at the Colaba Point, Bombay looks like what it always was, a handsome city seated on two bays, of which one is richly diversified by islands, rising,  green, and picturesque, from the quiet water, and the other has for its background, the crescent of the Esplanade and the bungalow dotted heights  of Malabar Hill.

 

He who has been long absent from India and returns here to visit her, sees strange and beautiful buildings towering above the well-remembered yellow and white houses, but misses the old line of ramparts, and the wide expanse of the Maidan behind Back Bay which we used to call ‘Aceldama, the place to bury strangers in”.

 

And the first drive which he takes from the Apollo Bunder – now styled Wellington Pier – reveals a series of really splendid edifices, which have completely altered the previous aspect of Bombay.

light of asia

Picture  of Edwin Arnold and his book.

Close to the landing-place, the pretty façade of the Yacht Club –one of the latest additions to the city – is the first to attract attention, designed in a pleasing mixture of Swiss and Hindu styles. In the cool corridors of that waterside resort we found a kindly welcome to the Indian shores and afterwards on our way to a temporary home, passed, with admiring eyes, the Secretariat, the University, the Courts of Justice, the magnificent new railway station, the Town Hall, and the General Post Office, all very remarkable structures, conceived for the most part with a happy inspiration, which blends the Gothic and the Indian schools of architecture. It is impossible here to describe the features of these splendid edifices in detail, or the extraordinary changes which have rendered the Bombay of today hardly recognisable to one who knew the place in the time of the Mutiny and in those years which followed it.

 

-subham-

முஸ்லீம் படைகளை விரட்டிய அர்கால் தேச ராணி! (Post No 2646)

ARKAL RANI (3)

Compiled by london swaminathan

 

Date: 19 March 2016

 

Post No. 2646

 

Time uploaded in London :–  15-14

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நஜருதீன் என்ற மன்னன் டில்லியை ஆண்டு வந்தபொழுது பிரயாகை (இப்பொழுது அதன் பெயர் அலஹாபாத்) அருகிலுள்ள அர்கால் என்னும் பிரதேசத்தை கௌதமன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் டில்லி அரசனுக்குக் கப்பம் கட்ட மறுத்தான். உடனே நஜருதீன், தன் கீழிருந்த டில்லி கவர்னர் தலைமையில் பெரும்படையை அனுப்பினான். ஆனால், கௌதமன் அவர்களைக் கொன்று குவித்தான். டில்லி கவர்னர் படை தோற்றோடியது.

 

கௌதமனின் முன்னோர்களும் மாவீரர்கள்; தோல்வியே கண்டறியாதவர்கள். ஆகையால் குல வழக்கப்படி வெற்றி விருந்து நடத்தினான். நகர மக்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்து கொண்டாடினர். அன்றைய தினம் பௌர்ணமி. முழு நிலவு ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது.

 

அர்கால் மஹாராணி, அதவது கௌதமனின் மனைவி, ஒரு மஹா பதிவிரதை; தெய்வ பக்தி மிகுந்தவள்; முன்னோர்கள் பின்பற்றிய பௌர்ணமி விரதத்தைக் கடைப்பிடிப்பவள்; சத்திய விரதை; உண்மை விளம்பி. வழக்கம்போல கங்கையில் புனித நீராடி விரதம் அனுஷ்டிக்க எண்ணினாள். ஆனால் கணவனிடம் அனுமதி கேட்டால், போகாதே என்பான். ஏனெனில் இன்னும் எதிரிப்படைகள் கங்கையின் மறு புறத்தில் நிலைகொண்டிருந்தன. மேலும் டில்லியிலிருந்து மேலும் படைகளைப் பெற்று டில்லி கவர்னர் தாக்கக்கூடும். கணவன் சொல்லையும் மீறி எந்தச் செயலையும் செய்யும் பழக்கமும் அவளுக்குக் கிடையாது. ஆகையால் அர்கால் மஹாராணி வேறொரு திட்டம் போட்டாள். தோழிகளுடன், நைஸாக நழுவி, கங்கைக்குப் போய் புனித ஸ்நானம் செய்து, கணவன் நலனுக்கும், நாட்டு மக்கள் நலனுக்கும் விரதம் இருக்க எண்ணினாள்.

நசருத்தீன்

ஒவ்வொரு தோழியும் சந்தடி செய்யமல் விருந்திலிருந்து நழுவி மஹாராணியுடன் கங்கை நதிக்கு வந்தனர். ஒரு ராணி குளிப்பதானால் ரஹசியமாகவா குளிக்கமுடியும்? ராணிக்கே உரிய பரிவாரங்களுடன் ஆரவாரத்துடன் குளித்தாள். இதற்குள் டில்லி கவர்னரின் காதுக்கு இந்தச் செய்தி போய்விட்டது. அவன் தனது மகளை அனுப்பி உளவு விவரங்களச் சேகரித்தான். உண்மை தெரிந்தவுடன் ராணியைப் பிடித்து பணயம் வைத்து பேரம் பேசலாம், கௌதமனை மடக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, படைகளுடன் வந்தான்.

 

மஹாராணி, இதற்குள் குதிரை மீது புறப்பட்டாள். அவளை விரட்டி வந்த, டில்லிப் படையினர் அவளைச் சுற்றி வளைத்தனர். அவள் தோழிகளின் நடுவே நின்று கவர்னரை நோக்கிக் கூறினாள், “ சீச்சீ! நீ ஒரு ஆண் மகனா அல்லது பேடியா? என் கணவனிடம் தோற்றோடிவிட்டு, தனிமையில் நிற்கும் ஒரு பெண்ணைப் பிடிக்கிறாயே,  இதுதான் உன் வீரமா? நான் ரஜபுத்ர குலத்தில் உதித்தவள்; என் கணவனும் ரஜபுத்ர வீரன். இங்கே கூடியிருக்கும் மக்களில், யாரேனும் ரஜபுத்ரர்கள் இருந்தால், உங்கள் சகோதரியாகிய என்னைக் காப்பாற்றுங்கள்”.

 

இதைக் கேட்டவுடன் அங்கேயிருந்த இந்துக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களில் நிர்பயசந்தன், உபயசந்தன் என்ற இரண்டு வீரர்கள் முன்னுக்கு வந்து தாக்குதலுக்குத் தலைமை வகித்தனர். பெரும் சண்டை நடந்தது. இரு படைகளிலும் சேதம் ஏற்பட்டது. இதற்குள் கௌதமனுக்கும் தகவல் போனது. அவன் பொறுக்கியெடுத்த சில வீரர்களுடன் குதிரையில் விரைந்து வந்து முஸ்லீம் படைகளை ஓட ஓட விரட்டினான்.

 

மன்னன் கௌதமனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உபயசந்தன், மன்னர் குலத்தில் பிறக்காவிடினும், அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்வித்து, ராவ் (ராய= ராஜ) என்ற பட்டத்தைக் கொடுத்தான். ராஜஸ்தான் கிராம மக்கள் இன்றும் இந்த வீர,தீரச் செயல்களைக் கிராமீயப் பாடல்களாகப் பாடி ஆனந்தக் களிப்பு அடைகின்றனர். நிர்பயன், உபயன் ஆகிய இவ்விருவரின் புகழ் ஒரு புறம் பரவியது.மறு புறமோ பெண்ணிடம் ‘வீரம்’ காட்டிய டில்லி மன்னன், டில்லி கவர்னர் ஆகியோரின் இழிசெயல் தூற்றப்பட்டது.

புராதன இந்தியர்களின் சரித்திரம் ஒரு வீர காவியம்!

 

தீரத்திலே படை வீரத்திலே – நெஞ்சில்

ஈரத்திலே உபகாரத்திலே

சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு

தருவதிலே உயர்நாடு – இந்தப்

 

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு – (மஹாகவி சுப்ரமண்ய பாரதி)

1947 vikatan

–சுபம்-

 

 

ஜம் ஜம் பங்கஜம்: நையாண்டி மடல் எண்-5 ( Post No.2645)

Rue de l'Étuve - Stoofstraat, Bruxelles - Brussel, België

Rue de l’Étuve – Stoofstraat, Bruxelles – Brussel, België

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 19 March 2016

 

Post No. 2645

 

Time uploaded in London :–  8-29 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

WARNING:  PICTURE SCANNED FOR  JUST THE JOBBRUSSELS:

Urinating boy statue in Brussels

 

நையாண்டி மடல் எண் 5

 

ஜம் ஜம் பங்கஜம் பங்கேற்கும் தலை நகர் சேனல் நிகழ்ச்சி!

.நாகராஜன்

 

என் அன்புக்குரிய முட்டாள்களே!

 

CUTTING  பற்றிய மடல் தயார்! அதை வெளியிடும் நேரத்தில் அவசரத் தொலைபேசி அழைப்பு என உதவியாளர் கூற யார் என்றேன்.

சொன்னார். என்னையா என்றேன்!

நமது அறிவுக் களஞ்சியங்கள் பணி புரியும் தலைநகரின் பல்கலைக் கழகம் என்றதும் உள்ளமெலாம் பூரித்தது. உடலெல்லாம் சிலிர்த்தது.

பேசினேன். வேறொன்றுமில்லை. ஆதரித்து ஒரு அறிக்கை வேண்டுமாம்.

 

 

தர வேண்டியதை நான் தந்தால், தர வேண்டியதை அவர்கள் தருவார்கள், இல்லையா? புரிந்து கொண்டாயா?

சரி விஷயத்துக்கு நேரடியாக வருகிறேன்.

இதில் என்ன தப்பு இருக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. 31 வயதே ஆன பச்சிளம் பாலகன் ஒருவன் சோலை நிரம்பிய பல்கலைக்கழகத்தின் நட்ட நடுப் பகுதியில் அழகிய மாலை நேரத்தில் அவசரமாக இயற்கை உபாதையைக் கழித்தான்.

ஒன்னுக்குப் போனான் என்று சொல்லி விட்டால் முட்டாள்களாகிய உங்களுக்கு சுலபமாகப் புரியும்.

 

சொல்லுங்கள், இதில் என்ன தவறு இருக்கிறது முட்டாள்களே!

சாலையிலே சிறுநீர் கழித்தானாம், பாலகன்! இது ஒரு தப்பா? அதை ஒரு பெண் பார்த்தாளாம்! அவள் பருவ மங்கையா, பார்க்க சிறுமியா?

கேட்கிறேன் அர்த்தமுள்ள அபூர்வமான இந்த வினாவை. விடை தருவார்களா, வீணர்கள்?

அந்தரங்க உறுப்பைக் காண்பித்ததாக புகார் கூறிய பருவ மங்கை தன் கண்ணை மூடிக் கொண்டு போயிருக்கலாம். புகாராவது கொடுக்காமல் இருந்திருக்கலாம்.

 

 

அந்தப் பாலகனை ஆசிரியை அழைக்க அவர்கள் உல்லாசமே, சல்லாபமே என்ற படத்தை வீடியோவில் நெருங்கி இருந்து பார்த்தார். இதில் என்ன தவறு?                                              ஐயகோ! இதையெல்லாம் அரசியல் ஆக்க நினைக்கிறார்கள் கோணல் புத்தியுள்ள கொடுமதியாளர்கள்.

stalin urinating

 

stalin 2

 

stalin 3

Daily Mail pictures of urinating Stalin statue at Kiev, Capital of Ukraine. Anti Communist activists put it, but the authorities dismantled it later.

இதை கண்டித்து இன்றைய இரவு , “இந்தியா அறிய விரும்புகிறது” நிகழ்ச்சியில் ஒரு விவாதம் நடைபெற உள்ளது, அல்லவா? அதற்கு நம் கழகத்தின் சார்பில் மகளிர் பேரணியின் மாண்புமிகு முட்டாள் ஆன ஜம் ஜம் பங்கஜம் அவர்கள் அனுப்பப்படுகிறார்.

அதென்ன அவர் பெயர் தாய்த் தமிழில் இல்லையே எனக் கலங்கல் வேண்டா. அலட்டல் வேண்டா.

 

 

அருமைத் தம்பீ! எம்பீ! நம்பீ!

வடவர்களின் ஆதிக்கத்தில் உள்ள சேனல்களில் அவர்கள் விரும்பும் பெயர் இருந்தால் தானே நாம் இடம் பெற முடியும்? உரிமையைப் பெற முடியும்? சிந்தி!

 

ஜம் ஜம் பங்கஜம், “மேலாடை நழுவி விழ, பூவாடை பூசி வர” பாடலுக்கு எத்தனை முறை மேலாடையை நழுவ விட்டுள்ளார் என்பதை எண்ணுவதற்காகவே எண்ணற்ற முறைகள் அந்தப் படத்தைப் பார்த்த கழகக் கண்மணிகளின் எண்ணிக்கையை யாவரே அறிவர்?!

 

 

அவர் இந்த விவாதம் நடக்கும் அரங்கத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் ஆடையை அடிக்கடி நழுவ விட அதை நான்கு காமராமேன்களும் படம் பிடிக்க மற்றவர்கள் பக்கம் காமராக்களும் திரும்புவதில்லை அவர்களுக்கு வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்ற உண்மையை உனக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளம் குளிர்கிறதா?

 

அங்கு கூலிக்காக வரவழைக்கப்பட்ட 90 பார்வையாளர்களும் எதிரி கட்சிக்கென வந்திரக்கும் சிறு நரிக் கூட்டத்தைச் சிதற அடித்து விட மாட்டார்களா? அவர்களுக்குப் பேச இடம் கொடுத்தால் தானே!

 

 

இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணி ஜம் ஜம் பங்கஜம் பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் டி ஆர் பி ரேட் எகிறுகிறது என்பதற்குத் தானே காரணம் என நினைத்தாராம்.

குட்டிப் பெண்மணி! என் கண்மணி! அப்படி இல்லை அம்மணீ! அதற்கான காரணம் ஜம் ஜம் பங்கஜத்தின் லிப்ஸ்டிக்கும் தலையை அடிக்கடி கோதி விட்டுப் பார்க்கும் கொக்கரிக்கும் கண் சிமிட்டுப் பார்வையும் தான்! இதை சேனல் இயக்குநர் அந்தப் பெண்மணீயிடம் சொன்ன போது அவர் மருண்டார்; சுருண்டார்.

 

 

என்றாலும் அவருக்கு அடுத்த நாட்டிலிருந்து வரும் படியை எண்ணி, வரும்படியை எண்ணி, வாய் மூடி பணியைத் தொடர்கிறார்.

கொஞ்ஜம் கொஞ்ஜமாக நம் ஜம் ஜம் ஜாம் ஜாம் என்று அந்தச் சேனலையே முட்டாள்களுக்கு உரியதாக ஆக்கப் போகிறார், அன்பர்களே, நண்பர்களே!

“என்னையா, கன்னையா, என்னையா பார்க்கிறாய்?

 

 

சின்னையா, சீர் ஐயா, நீ சிரித்தால் நான் வேர்க்கிறேன்”

என்ற ஜம் ஜம்மின் நடனக் காட்சியை சின்ன உடையில் சின்னத் திரையில் அதே விவாதத்தின் போது ஒரு சின்ன ப்ரேக் என்று சொன்னவுடன் பார்க்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

தலை நகரின் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குப் பேராதரவு தர முட்டாள்கள் கழகம் முன்னே நிற்கும், இனி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இயற்கை உபாதைகளைக் கழிக்கலாம், ஆசிரியைகள் மாணவர்கள் பேதமின்றி நினைத்த இடத்தில் நினைத்த போது அந்தரங்கம் பேசலாம் என்ற என் கொள்கை முழக்கத்தை நீங்கள் வேண்டி விரும்பிக் கேட்டதற்கிணங்க இப்போது அறிவிக்கிறேன்.

 

அடுத்த மடல் கட்டிங் பற்றியே என்று அறுதியிட்டு உறுதி கூறி விடை பெறுகிறேன்.

 

மு மு கழகத் தலைவர்

 

–subham-