நமக்குத் தொழில் கவிதை! (Post No.10,657)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,657
Date uploaded in London – – 14 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நமக்குத் தொழில் கவிதை!
ச.நாகராஜன்

நமக்குத் தொழில் கவிதை என்றான் மஹாகவி பாரதி.

ஒரே ஒரு கவிதை இயற்றுவது என்பதே இமாலய கஷ்டம்.

இதில் கவிதையையே தொழிலாகக் கொண்டால் கவிஞன் படும் பாடு எவ்வளவு கஷ்டமானது என்பது புரியும்.

ஆசார்ய ஹேமசந்த்ர கவிதை இயற்றுவது எவ்வளவு கஷ்டம் என்பதை நன்கு உணர்ந்து அதை தன் ‘காவ்யானுசாஸன’த்தில் கூறுகிறார்.

முதலில் கவிதை இயற்ற பிரதிபா வேண்டும்.

பிரதிபா என்றால் புதியன உருவாக்கும் மேதையாக இருப்பது, மிகுந்த கற்பனை வளத்தைக் கொண்டிருப்பது, ஆழ்ந்த கருத்தை அனாயாசமாக அழகுறத் தருவது.

இந்த இயற்கையான அதி புத்திசாலித்தனத்தை, ஏராளமான காவியங்களைப் படிப்பதாலும் தன்னைச் சுற்றி இருப்பதை உற்று நோக்குவதாலும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிரதிபா இல்லையேல் கவிஞனும் இல்லை; காவியமும் இல்லை.
இந்த பிரதிபா என்பது இருவகைப் படும் என்கிறார் ஆசார்ய ஹேமசந்திரர்.
ஒன்று : இயற்கையாக அமைவது
இரண்டாவது : வெளிப்புறக் காரணங்களால் அமைவது

இந்த இருவகையான பிரதிபாவை மிக அதிக ஒளியுடனும் அதிக சக்தியுடனும் தருவதற்கு இரு வழிகள் உண்டு.
ஒன்று வியுத்பத்தி எனப்படும்
இரண்டாவது அப்யாஸம் எனப்படும்.
வ்யுத்பத்தி என்றால் மனித குலத்தில் இருக்கக்கூடிய பரந்த அறிவையும் நம்மைச் சுற்றி இருக்கும் பரந்த உலகில் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனித்து அறிவதாகும்.
வ்யுத்பத்தி என்பது படித்துப் படித்து தன் அறிவை சிகரத்தில் ஏற்றுவதையும் குறிக்கிறது.

எத்தனை இலக்கியங்கள்! அதில் தான் எத்தனை வகைகள்! அனைத்தையும் ஒருவன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்,
யாப்பிலக்கணம், மொழியின் நுட்பங்கள், பழக்க வழக்கங்கள், சொற்களின் வல்லமை, வேத, இதிஹாஸ புராணங்கள், மகத்தான காவியங்கள் அனைத்தையும் முதலில் முறைப்படி கற்று உணர வேண்டும். வரலாறு, பூகோளம், பொருளாதாரம், தேசீய நிலவரம், தர்க்கம், சிருங்கார சாஸ்திரம், இதர மனித உணர்வுகளைத் தூண்டும் ரஸங்கள், யோகா உள்ளிட்ட அனைத்தையும் கற்று வல்லவனாதல் வேண்டும்.

ஹேமசந்திரர் கூறுகிறார்:-
“ந ச ஷப்தோ ந ததாச்சயம் ந ஸ ந்யாயோ ந ஸா கலா|
ஜாயதே யன்ன காவ்யாங்கமஹோ பாரோ குரு: கவே||”

இதன் பொருள் : வெறும் சப்தம் இல்லை. வெறும் ஒரு முதுமொழி இல்லை, வெறும் ஒரு கலை இல்லை – அனைத்துமே ஒரு காவியம் எழுதத் தேவை.
ஒரு கவிஞனின் சுமை சொல்ல முடியாத அளவு பெரிது.

மாயவித்தை என்று இந்த்ர ஜால கலையை ஒரு கவிஞன் வெறும் வார்த்தையால் குறிப்பிட்டு விட்டால் அது கவிதை ஆகாது.
அந்தக் கலையின் நுட்பத்தை உணர்ந்து அதில் ஒரு அம்சத்தைக் கோடிட்டுக் காட்டி கேட்பவனை பிரமிக்க வைத்து உயரத்தில் ஏற்ற வேண்டும், அது தான் கவிதை!

எதிலும் ஒரு ஒழுங்குமுறை, நியாயம், நேர்மை, பொருத்தம் வேண்டும் – அவன் உலகுக்கு அளிப்பதில்!
லோகாதிநிபுணதா என்று கூறுகிறார் ஹேமசந்திரர்.
இது கவிஞனுக்கு முக்கியம்.

எதையோ பார்த்தோம், பாடினோம் என்று இருக்கக் கூடாது.
ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவனது பார்வை கூர்மையாக இருப்பதோடு அதில் நிபுணத்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

இது தான் ஐயா கவிதை!

சரி, இதை எல்லோரும் கொண்டிருக்க முடியுமா, கற்றுத் தேற முடியுமா?

இடைவிடாத முயற்சி, ஒரு கவிஞனான ஆசானின் பூரண வழிகாட்டுதல் – இந்த இரண்டும் இருந்தால் கவிஞன் ஆகலாம்.
Practice Makes Perfection என்பது ஆங்கிலப் பழமொழி.
அப்யாஸோ ஹி கௌஸலம் என்பது சம்ஸ்கிருத மொழி.
அப்யாஸம் எனப்படும் இடைவிடா முயற்சியினால் திறமை மேம்படும் என்பது இதன் பொருள்.

ஒரு துளி நீர் ஒரு கல்லைக் கரைக்காது.

“True ease in writing comes from art, not chance,
As those move easiest who have learned to dance.”
என்றார் அலெக்ஸாண்டர் போப் (Alexander Pope, Sound and Sense)
ஆகவே கவிதை எழுத ஆசை கொண்டிருப்பவர் முதலில் ஏராளமான காவியங்களையும், காவிய உத்திகளையும் , கவிஞனின் நுட்பமான பார்வையையும் முதலில் படித்து ரஸித்து, உணர்ந்து அனுபவித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு சொற்கள் செய்யும் ஜால உலகத்தில் நுழையலாம்.

ஆகவே, முதலில் காளிதாஸனையும், கம்பனையும், பாரதியையும் கற்போம்;

பின்னர் கவிதை ஒன்றையும் சற்று முயன்று இயற்றிப் பார்க்கலாம்! நன்கு திறன் கூடி விட்டால் நாமும் சொல்லலாம் – நமக்குத் தொழில் கவிதை என்று!


tags– கவிதை, ஹேமசந்திரர்

அவை, சட்டை, சட்ட – தமிழ் சொற்கள் இல்லை; சட்ட மேலவை என்பது ஸம்ஸ்க்ருதம் (Post.10656)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,656

Date uploaded in London – –    13 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 17

அதர்வண வேதத்தில் உள்ள 63 மந்திரங்கள் உடைய பூமி சூக்தத்தின் மேலும் சுவையான பகுதிகளைக் காண்போம்:-

பாடல்/ மந்திரம் 55

அதோ யத் தேவி ப்ரதமானா புரஸ்தாத் தேவைருக்தாத் வ்ய ஸர்போ மஹித்வம்

ஆத்வா ஸு பூதமவிசத்ததா நீம கல்பயதாஹா ப்ரதிசஸ்சதஸ்ரஹ -55

பாடல் 55 பொருள்

முன்னேறிச் செல்லும் தேவிய!  உன்னை தேவர்கள் போற்றி, உன் புகழை விரிவாக்கியுள்ளனர்.அதனால் உன்னுள் பெரும் புகழ் நுழைந்துவிட்டது நீயே நான்கு திசைகளையும் உனதாக்கிக் கொண்டுவிட்டாய் .

இதன் விளக்கம் – பூமாதேவியை தேவர்களும் புகழ்ந்து போற்றுகின்றனர். அதனால் அவள் புகழ் மேலோங்கி அவள் நாலு திசைகளிலும் கொடிகட்டிப் பறக்கிறாள் .

இதை பாரதியாரும் சத்ரபதி  சிவாஜி பாடலில் சொல்கிறார் ,

தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர்

ஆவலோ டடை யும் அரும்புகழ் நாடு

ஊனமொன்றறியா ஞான மெய்ப் பூமி

வானவர் விழையும் மாட்சியார் தேயம்

பூமி சூக்தப் புலவன்  பூமா தேவி பற்றிப் பகன்றதை, பாரதியார், பாரத தேவி மீது ஏற்றிப் பாடிவிட்டார்!

XXX

பாடல்/ மந்திரம் 56

யே க்ராமா யதரண்யம் யாஹா ஸபா அதி பூம்யாம்

யே ஸம் க்ராமா ஸமிதயஸ் தேஷு சாரு வதேம தே -56

பாடல் 56ன் பொருள்

கிராமங்களில், காடுகளில், பாரிலுள்ள அனைத்து சபைகளில் , மக்கள் கூடும் கூட்டங்களில் , சமிதிகளில் உன் புகழ் படுவோம்; இனிமையானதையே சொல்லுவோம்

இது மிகவும் பொருள் பொதிந்த பாடல். கிராம சபை முதல் ஐ.நா . சபை வரை பூமியை — பாரத பூமியைப் புகழ்வோம் ; காதுக்கு இனிமையானதைப் பேசுவோம்.

என்ன பக்தி பாருங்கள் !!!

இதில் இரண்டு முக்கியமான மொழியியல் LINGUISTIC FACTS விஷயங்கள் வருகின்றன.

சபை SABHA என்ற சொல்லை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கப் புலவர்களும் அவை என்று மாற்றிப் பாடியுள்ளனர். அதாவது தமிழில் ச- என்னும் எழுத்தில் சொற்கள் வரக்கூடாது என்று பிராமண தொல்காப்பியன் — த்ருண தூமாக்கினி – தடை போட்டுவிட்டான்; ஏனெனில் ஸம்ஸ்க்ருதத்தில் , டஸ் புஸ் என்று ஸ – வில் துவங்கும் சொற்களே அதிகம். ஆகையால் வடக்கிலிருந்து சிவன் அனுப்பிய அகஸ்தியர் — தொல்காப்பியரின் குருநாதர் — ஸ -வுக்குத் தடை விதித்தார் போலும். வியாஸ மகரிஷிக்கு ஸ -கார குக்ஷி என்று பெயர்; நினைத்த இடங்களில் எல்லாம் ஸ – எழுத்தை அள்ளி வீசி விட்டார்.

“ச” வரும் இடமெல்லாம் ஒரு உயிர் எழுத்தைப் போட்டு அவை ஆக்கிவிட்டனர் தமிழர்கள்  .

இந்த ஸபா என்னும் சொல் ரிக்வேதத்தில் வரும் சொல். இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா, தமிழ்நாடு சட்ட மேலவையில் உள்ளது. ஆக தமிழர் பயன்படுத்தும் சட்டை, சட்டம், அவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

ச – வில் துவங்கும் எல்லா சொற்களும்) ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதை 18 மேல் கணக்கு நூல்களிலும் (சங்க இலக்கியம்) 18 கீழ்க் கணக்கு நூல்களிலும் (திருக்குறள், பழமொழி, நாலடியார் முதலியன) காணலாம்.

XXXX

இதையும்விட இரண்டு முக்கிய அதிசயங்கள் உள்ளன.

ஸபா எப்படி அவை ஆனது ?

‘ப = வ’ ஆக மாறி ‘பை = வை’ ஆகிவிட்டது. (B=V; V=B)

இன்றும் வங்கத்தை பெங்கால் BENGAL என்று வ=ப மாற்றத்தைக் காண்கிறோம்.

இந்த ப= வ B= V மாற்றம் 3000 ஆண்டுப் பழமை உடைய ஈரானிய – பாரசீக இலக்கியத்திலும் உளது. அஸ்வ என்பதை அஸ்ப ASVA = ASBA என்பர். ஈரான் என்ற பெயரோ ஆர்ய ARYA = IRAN என்பதன் திரிபு, மரூஉ என்பதை உலகமே ஒப்புக்கொள்கிறது. எப்படித் தமிழிலும் ப- வ ஆனது.??

ஆக லண்டன் சாமிநாதன் சொல்லும் THEORY/HYPOTHESIS  தியரியே சரி; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் வெவ்வேறு குடும்பம் என்று சொல்லும் BISHOP CALDWELL கால்டுவெல் கும்பலுக்கு வேட்டு வைக்கும் சொல் இது.

இதை விடப் பெரிய அதிசயம் ரிக் வேத, அதர்வண வேத “சமிதி” என்னும் சொல்;  கமிதி COMMITTEE  என்று உலக மொழிகளில் புழங்குகிறது ; பிரெஞ்சு மொழி செய்த குழப்பத்தால் ச = க C= K ஆக மாறுகிறது; சமிதி என்பதை SAMITI = COMMITTEE இன்றும் நாம் ஆங்கிலத்தில் கமிட்டி என்று பயன்படுத்துகிறோம். சமிதி என்று எழுதிவிட்டு அதை கமிட்டி என்று உச்சரிக்கிறோம் !!!

காடுகளிலும் கூட புகழ் பரப்புவோம் என்று அதர்வண வேத புலவன் செப்புவது நோக்கற்பாலது. என்ன சிம்பிள் SIMPLE LANGUAGE மொழி பாருங்கள்!! இந்த மந்திரத்தில் உள்ள கிராமம், ஸபா, சமிதி, ஆரண்யம் பூமி – எல்லாம் கிராமத் தமிழனுக்கும் கூடப் புரியும்; தெரியும்

COMMITTEE = SAMITI

SABHA = AVAI; LOK SABHA, RAJYA SABHA

ARANYAM, GRAMA, BHUMI

CHARU = SWEET ; CHARU LATHA

XXX

பாடல்/ மந்திரம் 57

அஸ்வ இவ ரஜோ துதுவே வி தான் ஜனான் ய ஆக்ஷியன் ப்ருதிவீம் யாத ஜாயத

மந்த்ரா க்ரேத் வரீ புவனஸ்ய கோபா வனஸ்பதீனாம் க்ருபிரோஷதீனாம் –

57

பாடல் 57-ன் பொருள்

பூமாதேவி ஆனவள், குதிரை தன்  கால் தூசியை உதறித் தள்ளுவது போல இதுவரை தோன்றியவர்களை எல்லாம் தான் பிறந்த நாளிலிருந்து உதறிவிட்டாள் ; அவள் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறாள்; இந்த ப்  பூமியிலுள்ள  தாவரங்களையும் மரம் செடி கொடிகளையும் காப்பவள் அவளே.

நல்ல கருத்து ; தோன்றிய மனிதர்களை உதறித்தள்ளிய போதும் தொடர்ந்து மரம் செடி கொடி கானகங்களை உதறவில்லை ; பசுமை என்னும் ஆடையுடன், நீலத் திரை கடல் சூழ வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்களின் நிலையாமை பற்றிப் பாடிய புறநானூற்றுப் புலவர் பாடல்களை இது நினைவுபடுத்தும்.

பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம்

ஒருபகல் எழுவர் எய்தியற்றே!

வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு

ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின்

கைவிட்டனரே காதலர்; அதனால்

விட்டோரை விடா அள்திருவே;

விடாஅதோர் இவள் விடப்பட்டாரே

வான்மீகியார், புறம் 358

பொருள்:

கதிரவன் சுற்றும் இந்த வளம் செறிந்த பூமிக்கு ஒரே நாளில் 7 பேர் அரசனானதும் உண்டு. இல்லறத்தையும், துறவறத்தையும் ஒப்பிட்டால் துறவறமே சிறந்தது. தவம் மலை என்றால், இல்லறம் சிறு வெண்கடுகு (ஐயவி) போன்றதாகும். தவம் செய்ய முடியாததால்தான், காதலர்கள் இல்லறத்துக்கு வந்தனர். வீடு பேற்றை விரும்பியோர் இல்லறத்தைக் கைவிட்டனர். யார் வருந்தி வருந்தி அழைக்கவில்லையோ அவளிடம் லெட்சுமி போய் ஒட்டிக்கொள்வாள். இல்வாழ்வில் அழுந்தியோரிடம் தங்க மாட்டாள்.

–தொடரும் ……………………………

tags– அவை, சட்டை, சட்டம் , தமிழ் , மேலவை,  ஸம்ஸ்க்ருதம், சபை

டயபடீஸை புரிந்து கொள்ளுங்கள்; தீர்க்கும் வழிகள் தெரியும்! (Post No.10,655)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,655
Date uploaded in London – – 13 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

பிப்ரவரி 2022 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

டயபடீஸை புரிந்து கொள்ளுங்கள்; அதைத் தீர்க்கும் வழிகள் தெரியும்!
ச.நாகராஜன்

வள்ளுவர் கூறுகிறார் : நோய் நாட வேண்டும், நோய் முதல் நாட வேண்டும் – என்று.

உண்மை தான், முதலில் நோய் என்ன என்று புரிந்து கொண்டு அது ஏன் வந்தது என்று ஆராய்ந்து அதைத் தீர்க்கும் வழிகளைக் கண்டு அவற்றைக் கடைப்பிடித்து நோயைத் தீர்க்க வேண்டும்.
இந்த வகையில் டயபடீஸ் பற்றிய அடிப்படைச் செய்திகளை முதலில் புரிந்து கொள்வது அவசியம்.
முதலில் அதைப் பார்ப்போம்:

டயபடீஸ் என்றவுடனேயே ‘சர்க்கரையைக் குறை’ என்று அனைவரும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆனால் முதலில் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) அதிகமாக என்ன காரணங்கள் என்பதைப் பார்க்க வேண்டும். பல காரணங்களால் அது அதிகரிக்கிறது. உடல் எடை கூடி மிகவும் பருமனாக இருப்பது, நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats), வெஜிடபிள் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களில் உள்ள கொழுப்புகள் (Trans fats), ரிபைன்ட் கார்போ ஹைட்ரேட்ஸ் ஆகிய இவற்றினாலும் முறையற்ற உணவுப் பழக்கங்களினாலும் வாழ்க்கை முறையினாலும் டயபடீஸ் உருவாகிறது. உங்கள் இல்லத்தில் இன்னும் பலருக்கு டயபடீஸ் இருந்தால் அதுவும் ஒரு காரணம் தான்! ஆகவே மொத்தப் பழியையும் சர்க்கரை மேல் போடக் கூடாது என்பது தான் முதல் அடிப்படை உண்மை

டயபடீஸ் என்பது இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டுப் போகும் ஜூரம் போன்ற வியாதி அல்ல. வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கும் ஒன்று அது. முழுவதுமாக அதைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட தொந்தரவு தராத படி அதைக் கட்டுக்குள் வைக்க முடியும். சரியான வழி முறைகளைக் கையாண்டால் அது கூடவே இருந்தாலும் அது நம்மை பாதிக்காதபடி வாழ முடியும்.

03) வயதானவர்களுக்குத் தான் டயபடீஸ் வரும் என்பது தவறான செய்தி. வேலை பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட எந்த வயதிலும் கூட அது வரலாம்.
04) டயபடீஸ் இரு பிரிவாக – டயபடீஸ் 1 டயபடீஸ் 2 என்று – பிரிக்கப் படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டால் கண் பார்வை போகலாம், சிறுநீரகம் பாதிக்கப் படலாம், இன்னும் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படலாம்.

05) டயபடீஸைப் போக்க இன்சுலின் இஞ்ஜெக்‌ஷன் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டுப் போக முடியாது. அது இதய சம்பந்தமான நோயிலும் கொண்டு விடலாம். ஆகவே இரத்த சர்க்கரை அளவை அவ்வப்பொழுது சரிபார்த்துக் கொண்டிருப்பதோடு இதர உடல் அவயவங்களும் சரியாக இருக்கின்றனவா என்றும் சரி பார்த்துக் கொள்ளல் அவசியம்.
06) சர்க்கரையை அடியோடு உணவில் ஒழிக்க வேண்டும் என்பதில்லை. சரியான சிகிச்சைகள், வாழ்க்கை வழிமுறைகளைக் கையாண்டால் சில சமயம் மட்டும் சர்க்கரைப் பொருள்களை உண்ணவும் முடியும்.

07) டயபடீஸின் கூடப் பிறந்த அக்காள் மனச்சோர்வு. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற கேள்வி கூடவே இருந்து கொண்டிருக்கும். ஆகவே வாழ்க்கையை பாஸிடிவ் நோக்கில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணத்தையும் நாமே இன்பமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
08) பார்டர் டயபடீஸ் எனும் ஜாக்கிரதையான சர்க்கரை அளவு இருப்பின் உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். ரத்த்தத்தில் குளுகோஸ் அளவை அடிக்கடி சரிபார்த்தால் போதும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

09) ரத்த ஓட்டம் குறைவதால் கால்களில் அதன் அறிகுறி தெரியும். அப்படி பாதங்களில் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அதை உரிய முறையில் சிகிச்சை எடுத்துத் தீர்த்துக் கொள்ளல் அவசியம். பாதங்கள் என்பது டயபடீஸைப் பொறுத்த மட்டில் மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய ஒரு அங்கம்.

10) உடல் பயிற்சி, தகுந்த உணவுத் திட்டம், ரத்த சர்க்கரை அளவை அவ்வப்பொழுது கண்காணித்தல், தேவை எனில் டாக்டரின் அறிவுரைப்படி இன்சுலின் போட்டுக் கொள்ளல், மன அமைதி, உற்சாகமான வாழ்க்கை முறை இவையே டயபடீஸ் போக்க தகுந்த வழி முறைகள் ஆகும்.
ஒரு ஒன்பது வழி செக் அப் திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.
அதைப் படித்து தேவையான நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ளலாம் :

1) குடிப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும்.
2) புகை பிடித்தல் தீங்கானது. அதையும் விட வேண்டும்.
3) ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
4) உடல் ரீதியான மெடிகல் செக் அப் இன்றியமையாத ஒன்று.
5)கண் பார்வை சரியாக இருக்கிறதா என்று கண் டாக்டரிடம் செக் அப் செய்வது நல்லது.
6) தடுப்பூசிகள் : போடப்படவேண்டியவற்றைத் தவிர்க்கக் கூடாது.

7) பற்களின் பாதுகாப்பு இன்றியமையாதது. ஈறுகள் சம்பந்தமான வீக்கம், ரத்தம் வடிதல் உள்ளிட்டவை டயபடீஸுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
8) பாதங்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் அதில் வலி, உணர்வற்ற தன்மை இருக்கக்கூடும். சிறிய காயம், வெடிப்பு,வீக்கம் கூட பெரிய அளவு பாதிப்பைத் தரக்கூடும்.
ஆகவே பாதங்கள் பற்றிய கவனிப்பு தேவை. சரியானபடி அதை நீரினால் அலம்பி சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதுமே!
9) டாக்டரின் அறிவுரை, நவீன கால சோதனை முறைகள், நவீன சாதனங்களின் உபயோகிப்பு – இவை எல்லாமே இருக்கும் போது டயபடீஸைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஆனால் உரிய முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் அவசியம் அல்லவா!
***

tags– டயபடீஸ் , வழிகள், சர்க்கரை நோய் 

NO PURDAH IN INDUS VALLEY; GREAT TAMIL POET AND VEDAS AGAINST PURDAH (10,654)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,654

Date uploaded in London – –    12 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

NO PURDAH IS SEEN IN INDUS  VALLEY;GREAT TAMIL POET AND RIG VEDA AGAINST PURDAH, VEIL, HIJAB

Neither in the Indus Valley Civilization nor in the Rig Veda we come across purdah or veil that covers face and head.

Neither in 2000 year old Sangam Tamil literature nor in Sanskrit literature we see face veil or Purdah

All the Temple statues and paintings are semi nude; no veil; we see only bra and covering clothes from waist to foot.

2300 year old sculptures in Buddhist centres Barhut, Sanchi and Amaravati show beautiful ladies without face veil.

The only thing on women’s head is some crown or diadem. In all statues or idols of South Indian goddesses, we see this. Even in the Indus valley one with lot of necklaces, a Mother Goddess, wears a crown/ or headgear in a crude form.

Some people have pointed out that something like a veil is referred to in 8-33-19 and 10-85-30 of the Rig Veda.

In the footnote to 8-33, it is clearly told they referred to one named Asangan was cursed to become a woman and she became a man again. A strange story indeed. In that context the garment is spoken of. Griffith translated it as VEIL and the general meaning of veil is ‘that which conceals, covers’. Only in the context of Muslim women, it means a face cover.

It is a known fact that Muslim women who lived in desert conditions of North Africa and Middle East covered their faces to protect them from sand storms. Muslims in Turkey and several other countries including Bangladesh, Pakistan and Indonesia did not wear veil. Now only fanatical religious leaders force them to put on veil. Even in Iran we saw it only after revolution under Khomeini.

With the background of 2300 year old sculptures, paintings and 4000 year old Indus Valley clay figures we can boldly say Hindus never worn anything like face cover or head cover.

After Muslim invasion in 8th century, North Indian women started covering their head and if necessary their faces to protect their honour.

Bharatiyar ,the greatest of the modern Tamil poets, criticised face veil as the custom of Delhi Turks. Tulukkan or Tuurkkan is the Tamil word for a Muslim. R=L change is universal

Here is what Bharati said:-

KANNAMMA – MY LOVE; REMOVAL OF VEIL

1.IT IS THE CUSTOM WITH DELHI MUSLIMS

TO KEEP THE LOTUS FACE WITH VEIL COVERED

The liana waist and the jutting breast

Are to be veiled, as Sastras so prescribe

2.By veiling the breast and liana -waist

Beauty is not under a Bushel hid;

Amorous art is not taught by word of mouth

Can love flourish behind a veiled visage?

3.’Noble are Aryan customs’ you say

Did ever Aryan dames their faces veil?

Having met more than once and love exchanged

Wherefore this coy persistence- all formal?

4.Who will then dare essay, me to obstruct

If by force I pluck the veil from your face?

Of what avail is pretension idle?

Can ever rind of fruit the eater defy?

–Translation by Dr T N Ramachandran from Tamil

One may wonder why did poet Bharati describe his imaginary lady love Kannamma with a veil? The whole poem is against veil ; perhaps he wanted to boldly attack veil under some disguise. He was disgusted to see Hindu women in North India  covering their head with sari. He lived in Kasi/ Varanasi for some time, and he had widely travelled in North India.

Bharati knew that Hindu women wore it because of Muslim atrocities against Hindu women. Bharatiyar described all these atrocities in two long poems on Guru Govinda Simhan and Veera Sivaji in Tamil.

Rig Vedic references from 8-33-19 and 10-85-30 are not about face veil or head cover. Rig Veda gives three words for dress worn by people

Vaasaas 1-115-4; 7-72-2

Adhivaasas 1-140-9; 10-5-4

Atka or drapi or uttariya , later days sipra  5-54-11, 6-172, 8-7-25

This was called usnisa or pugri in later times.

They can be broadly classified as upper garment, lower garment/ loin cloth and Usnisa, a turban or a diadem or a crown in kings and gods.

Rig Veda Mandala 8 Hymn 33-17/19

1. WE compass thee like waters, we whose grass is trimmed and Soma pressed.
Here where the filter pours its stream, thy worshippers round thee, O Vṛtra-slayer, sit.
2 Men, Vasu! by the Soma, with lauds call thee to the foremost place:
When comest thou athirst unto the juice as home, O Indra, like a bellowing bull?
3 Boldly, Bold Hero, bring us spoil in thousands for the Kaṇvas’ sake.
O active Maghavan, with eager prayer we crave the yellow-hued with store ol kine.
4 Medhyātithi, to Indra sing, drink of the juice to make thee glad.
Close-knit to his Bay Steeds, bolt-armed, beside the juice is he: his chariot is of gold.
5 He Who is praised as strong of hand both right and left, most wise and hold:
Indra who, rich in hundreds, gathers thousands up, honoured as breaker-down of forts.
6 The bold of heart whom none provokes, who stands in bearded confidence;
Much-lauded, very glorious, overthrowing foes, strong Helper, like a bull with might.
7 Who knows what vital ower he wins, drinking beside the flowing juice?
This is the fair-checked God who, joying in the draught, breaks down the castles in his strength.
8 As a wild elephant rushes on this way and that way, mad with heat,’
None may compel thee, yet come hither to the draught: thou movest mighty in thy power.
9 When he, the Mighty, ne’er o’erthrown, steadfast, made ready for the fight,
When Indra Maghavan lists to his praiser’s call, he will not stand aloof, but come.
10 Yea, verily, thou art a Bull, with a bull’s rush. whom none may stay:
Thou Mighty One, art celebrated as a Bull, famed as a Bull both near and far.
11 Thy reins are very bulls in strength, bulls’ strength is in thy golden whip.
Thy car, O Maghavan, thy Bays are strong as bulls: thou, Śatakratu, art a Bull.
12 Let the strong presser press for thee. Bring hither, thou straight-rushing Bull.
The mighty makes the mighty run in flowing streams for thee whom thy Bay Horses bear.
13 Come, thou most potent Indra, come to drink the savoury Soma juice.
Maghavan, very wise, will quickly come to hear the songs, the prayer, the hymns of praise.
14 When thou hast mounted on thy car let thy yoked Bay Steeds carry thee,
Past other men’s libations, Lord of Hundred Powers, thee, Vṛtra-slayer, thee our Friend.
15 O thou Most Lofty One, accept our laud as nearest to thine heart.
May our libations be most sweet to make thee glad, O Soma-drinker, Heavenly Lord.

16 Neither in thy decree nor mine, but in another’s he delights,—
The man who brought us unto this.


17 Indra himself hath said, The mind of woman brooks not discipline,
Her intellect hath little weight.


18 His pair of horses, rushing on in their wild transport, draw his car:
High-lifted is the stallion’s yoke.


19 Cast down thine eyes and look not up. More closely set thy feet. Let none
See what thy garment veils, for thou, a Brahman, hast become a dame.

नहि षस्तव नो मम शास्त्रे अन्यस्य रण्यति |
यो अस्मान्वीर आनयत ||
इन्द्रश्चिद घा तदब्रवीत सत्रिया अशास्यं मनः |
उतो अह करतुं रघुम ||
सप्ती चिद घा मदच्युता मिथुना वहतो रथम |
एवेद धूर्व्र्ष्ण उत्तरा ||
अधः पश्यस्व मोपरि सन्तरां पादकौ हर |
मा ते कषप्लकौ दर्शन सत्री हि बरह्मा बभूविथ ||


nahi ṣastava no mama śāstre anyasya raṇyati |
yo asmānvīra ānayat ||
indraścid ghā tadabravīt striyā aśāsyaṃ manaḥ |
uto aha kratuṃ raghum ||
saptī cid ghā madacyutā mithunā vahato ratham |
eved dhūrigvedaṛṣṇa uttarā ||
adhaḥ paśyasva mopari santarāṃ pādakau hara |
mā te kaṣaplakau dṛśan strī hi brahmā babhūvitha ||

XXX

IN THE WEDDING

In South Indian weddings the bride and bride groom must play competition like games in the evening on the wedding day. It is called NALUNGU. Probably this is absent in North Indian weddings. So to surprise the bride groom, they decorate and dress up the bride nicely and put a curtain between the bride and bride groom. After a great suspense it is removed, and the bridegroom will be stunned at the beauty of his bride. He has seen her before several times, but not dressed as a bride. So to make it a memorable moment they introduced a veil or a curtain. Otherwise, it was never a part of Hindu women’s dress until the Muslim invasion; we know the famous story of Padmini and Aladdin Khilji. Just to protect her honour Chittor Rani Padmini  entered fire with hundreds of her girlfriends and servants.

Last but not the least, 3000 year old Egyptian, Greek, Roman statues of females did not wear veil.

XXXX SUBHAM XXXXX

 tags- Purdah, Veil, Muslim, Women, Bharati, Rig Veda, Indus valley

‘பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம் (Post No.10,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,653

Date uploaded in London – –    12 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலைமுகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்

தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.

வேத வாழ்வைக் கடைபிடிக்க வேண்டும்; பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று தற்காலத்தில் பாடிய முதல் கவிஞனும் பாரதிதான் .

பாரதியின் படலைப் படிப்பதற்கு முன்னர் இன்னொரு விஷயத்தையும் கவனிப்போம். இந்தியாவின் புராதனப் பெண்கள் சிலைகள் சாஞ்சி, பர்ஹுத் , அமராவதி முதிய இடங்களில் உள்ளன. அவைதான் பெண்களின் பழைய சிலைகள். அதாவது 2300 ஆண்டுகள் பழமையானவை. அதற்கு முன்னர் இலக்கிய வருணனைகளிலும் முகத்திரை கிடையாது. கல்யாண சடங்குகளின் போது முதல் தடவையாக பெண்ணைப் பார்க்கும்போது SUSPENSE சஸ்பென்ஸ், வியப்பு,வேடிக்கை, கேளிக்கை இருக்க வேண்டும் என்பதற்காக திரைக்குப் பின்னர் உட்கார வைத்து திரையைத் திறந்தனர்.

நமது வீட்டில் சின்னக் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி விளையாடும்போது கூட இப்படி ஒளிந்து கொண்டு முகத்தைக் காட்டினால் அது பெரிதாகச் சிரிக்கும்; ஆனந்தம் அடையும். அது போல பெண்ணை மஹத்தாக அலங்கரித்து திடீரென்று காட்டும்போது, முன்னர் பார்த்த பெண் இவள்தானா அல்லது புதிய தேவதையா என்று மணமகன் வியப்பான் . இந்த விஷயம் ரிக் வேத 10-85 கல்யாண மந்திரத்தில் தெளிவாக உள்ளது. நீயே மஹாராணி என்று அந்த மந்திரம் பெண்ணைப் புகழ்கிறது .

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகில் மிகப்பழமையான ஓவியங்கள் நமக்கு எகிப்தின் பிரமிடுகளில், ஏனைய கட்டிடங்களிலும் கிடைக்கின்றன. அவர்களும் பர்தா அணியவில்லை . சங்கத் தமிழ் நூல்களிலும், கோவில் சிலைகளிலும் பர்தா கிடையாது. அஜந்தா, சித்தன்னவாசல், தஞ்சசைக் கோவில் ஓவியங்களிலும் பெண்கள் பர்தா அணியவில்லை.

முஸ்லீம்கள்  ஏன் அணிந்தார்கள் என்றால் சவூதி அரேபியா போன்ற பாலைவனத்தில் (DESERT SAND STORMS) வாழ்ந்த பெண்கள் தங்களை மணற் புயல் காற்றிலிருந்து காப்பதற்காக அதை அணிந்தனர். முஸ்லீம்கள் வாழ்ந்த துருக்கியில் பர்தா கிடையாது.

பல இனத்தவரும் பர்தா அணிவதாக வைத்துக் கொள்வோம். ஒருவருடைய முகக் குறிப்பைவைத்தது அவர்களுடைய எண்ணங்களை அறிய வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இது பள்ளி ஆசிரியர்கள் , வாடிக்கையாளரை  சந்திக்கும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பெரிய சங்கடத்தை விளைவிக்கும். ஆக PRACTICAL பிராக்டிகல் ஆகப் பார்த்தாலும், விஞ்ஞான SCIENTIFIC  முறையில் பார்த்தாலும் பர்தா  தேவை இல்லை.

இதை முஸ்லீம்களே முன்வந்து செய்தால் இன்னும் அழகாக இருக்கும். இதற்காக ஒரு கோர்ட், ஒரு இயக்கம், ஒரு சட்டம் தேவை இல்லை.

அவர்கள் சமய விழாக்களில் பங்கு கொள்ளும்போது அவர்கள் வழக்கப்படி செய்யலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. ஆக வரலாற்று ரீதியிலும் கிரேக்க, ரோமானிய, எகிப்திய , சீன, இந்து கலாசாரங்களில் பர்தா கிடையாது.

சிலர் ரிக் வேதத்தில் உள்ள 10,552 மந்திரங்களில் இரண்டே மந்திரங்களைக் காட்டி ஏதோ பர்தா இருந்ததாக சொல்ல முனை ன்றனர் . அந்த 8-33 மந்திரத்தின் அடிக்குறிப்பிலேயே கடைசி மூன்று மந்திரங்கள் புரியவில்லை ‘எசகு பிசகாக’ உள்ளது என்று எழுதிவைத்துள்ளனர்.

ரிக்வேதம் முழுதையும் மொழிபெயர்த்த ஜம்புநாத அய்யர் எழுதியுள்ளதை படியுங்கள் :–

8-33-17

ஸ்திரீயினுடைய மனம் கட்டுக்கடங்காதது ; அவளுடைய மனத்  திட்பம் அற்பமாயிருக்கிறது என்று இந்திரன் சொன்னான்.

8-33-18

(17க்கும் 19க்கும் சம்பந்தமில்லாத விஷயம் )

இந்திரனுடைய இரண்டு குதிரைகள் அவனுடைய ரதத்தை வேகமாக இழுக்கின்றன. தேரின் தண்டம் – இணைக்கும் கட்டை — இரண்டு குதிரைகளின் மீது உள்ளன.

8-33-19

உன்னுடைய கண்களைக் கீழே செலுத்தவும்; மேலே பார்க்காதே; கால்களை இருகச் சேர்த்துக் கொள்ளவும் உன் ஆடை மறைத்திருப்பதைக் காணாமல் இருப்பார்களாக.. ஏனெனில் நீ பிராமணனாய்  இருந்து — ஆணாக இருந்து — ஸ்திரியானாய்

இதற்கு ஜம்பு நாத அய்யர் எழுதிய அடிக்குறிப்பு :-

16 முதல் 19 வரையான பாடல் தெளிவாக இல்லை . முந்தைய பாடல்களுடன் தொடர்பும் தெரியவில்லை . 16, 18 இரண்டும் ஒரு பெண் படுவது. 17 ஒரு மனிதன் கூறுவது. 19 இந்திரன் ஆசங்கனிடம் கூறுவது. இந்த ஆசங்கன் கடவுளால் பெண்ணாக மாறுமாறு சபிக்கப்பட்டு பின் ஆணாக மாறினான் என்று ஒரு கதை உண்டு.

ஆக இது பர்தா பற்றியது அல்ல. ஒரு ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாறும்போது உடை பற்றிச் சொன்ன விஷயம். இது பர்தாதான் என்று சாதிப்பார் ஆண் -பெண் – ஆண் ஆனதையும் நம்புகிறார்களா ? பகிரங்கமாகச் சொல்லட்டுமே. அது சரி இப்படி ஓவியமோ சிலையோ பர்தாவுடன் 2300 ஆண்டுகள்ளாக இல்லையே .

XXXXX

கண்ணம்மா என் காதலி –3

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி ! பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்

வல்லி இடையினையும் – ஓங்கி முன்னிற்கும் – இந்த

மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய்

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்

ஆரியப் பெண்களுக்கு திரைகள் உண்டோ?

ஆக பாரதியார் சொல்லுவதே சரி. இது தில்லித் துலுக்கர் செய்த வழக்கம்

கண்ணம்மா ஏன் முத்திரையுடன் வந்தாள் ? என்று ஒரு கேள்வி எழலாம். ; துலுக்கர் படையெடுப்பின்போது அவர்கள் இந்துப் பெண்கள் மீது நடத்திய தாக்குதலை வீர சிவாஜி பாடலிலும், குரு கோவிந்த் சிம்மன் பாடல்களிலும் பாரதியார் விரிவாகப் பாடி சாடுகிறார். ஆகவே கண்ணம்மா (வடக்கத்திய ராஜபுதன பெண் அல்லது கோபியர் தலைவி ராதா) வை அவர் வடக்கத்திய பெண்ணாக கற்பனை செய்வதே “பர்தா முறை ஒழிக” என்ற கருத்தை விளக்கவே என்று சொன்னால் மிகையாகாது. பாடல் முழுதும் அவர் பிரஸ்தாபித்த ஒரே வழக்கம் பர்தா – முகத் திரைதான்!

-சுபம்-

பர்தா, முகத் திரை, பாரதியார், தில்லித் துருக்கர், வழக்கமடி,பெண்கள்

Soma Yaga in India and Iran (Post No.10,652)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,652

Date uploaded in London – –    12 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Two religions need fire for their worship. Hindu religion and Parsi religion, also known as Zoroastrianism use fire in their worship. Two hundred years ago every Brahmin Hindu family had fire pot in their house. Several hundred years ago, every Brahmin family had three types of fire in every house and they did fire worship three time every day. Now we rarely see fire altar or fire place in Brahmin families. All the fire worship moved to temples. One or two times in a year Brahmins invite priests to their houses to do fire worship at home.

Parsis can’t do any worship without fire. They do Soma yaga like Hindus. They’re the only ones who continue Soma Yaga until this day. Parsi priests import Soma plant from Iran . No book gives the name of the plant. But Hindus used Putika plant as an alternative to extinct Soma plant in the occasional Soma Yaga.

German Indologist, Martin Haug did elaborate research into their Fire Worship and compared it with the Vedic fire sacrifices. He was well versed in several languages and translated Aitareya Brahmana of the Rig Veda.

Sangam Tamil literature praised Tamil brahmins as ‘Three Agni/ fire Brahmins’ , ‘Muth Thee Andanar’. Nowadays you don’t see the Three Fires in any Brahmins house. They are Aahavaeeyam, Gaarhapatyam and Dakshinagniyam.

The Indian Hindus and the Iranian Parsis were practising same type of Yagas at least 2000 years ago.

All the Sanskrit terms are retained in Zend Avesta. If you apply linguistic rules, you can easily identify them. Martin Haug succeeded in this method in 1858.

Hota in the Rigveda becomes Zota in Zend Avesta.

Atharvana or Adhvaryu becomes Athrava in Zend Avesta.

Mantra reciter becomes Maathran in Zend Avesta.

(Rig Vedic words Gatha, Varuna, Indra, Druj, Aramaiti etc retained without any change)

xxxx

Agnicayana ceremony

Here is the full description of Soma Yaga

Two hundred years ago, lot of Brahmins were doing Agnihotra. Martin Haug says in the dominions of Gaikwar at Baroda in Gujarat the number was high. But doing it was expensive. The Peshwas in Mahabharata used to support them. Some Vedic fire sacrifices/ Yajnas/ Yagas lasted for 12 days.

Among the 14 Agnihotris who presented themselves at the Dakshina meeting at Poona , between 15th November and 15th December in 1861, only one could be found who had performed all the numerous sacrifices, some of which require from six to twelve days for their performance and an outlay of many thousand rupees in 1850s.

(In Bhopal Union Carbide Poison Gas Tragedy in 1984, four thousand people died immediately; late many more thousand died in poison gas related sickness; but the homes of Agnihotris were not affected at all)

xxx

Comparisons by Marti Haug

Athrava

The very name for Priest in Zend Avesta is Athrava. In the Vedas it was Atharvan.

The Vedic words Ishti and Ahuti became Ishti and Azuiti in the Zend Avesta.

What is Ishti?

A series of invocations of several deities, accompanied by the offering of sacrificial cakes called Purodasha.

What is Ahuti?

The invocation of one deity with the offering.

But by the time of Zend Avesta, original meaning was lost and only the general meanings ‘gift’, ‘invocation or praise’ have survived.

Xxx

YAGA SPOONS, LADLES

Hota

The Hota, the reciter of the Mantras of the Rigveda is identified with Zaota priest in the Zend Avesta.

Adhvaryu priest , managing priest, prepared everything for Hota.

In Parsi religion Rathwi, nowadays called Rapsi is the servant of chief priest Zaota, nowadays called Zota.

(Through out the Zend Avesta ‘H’ becomes ‘Z’)

Rathwi or Rapsi is the corrupted form of Rithwik in Sanskrit

Xxx

In the Sraoshavavareza, who represents angel Srosh, the Pratiprasthata of the Vedic sacrifices may be recognised, because this priest holds in his hand a wooden sword, during the time of sacrifice, to drive away the evil spirits.

In the Parsi fire sacrifices Atarevaksho is in charge of the vessel in which the fire is, and in the Vedas it is Agnidhra who holds the fire.

Atarevaksho = Agnidhra

Xxxx

Soma Sacrifices

The Yajishn or Ijashne as performed by the Parsi priests contains all the elements which constitute the four or seven of the Jyotistoma cycle of sacrifices of the Vedic Brahmins.

They are the prototypes of all Soma sacrifices.

The Agnistoma, i.e. the ‘praise of Agni/fire’, is the opening sacrifice of this cycle and indispensable for every Agnihotri to gain the object wished for, Heaven , bears a particular resemblance to the performance of Ijashne.

But in Parsi religion the whole ceremony is much shortened.

Xxx

Four goats sacrifice

In the Agnistoma four goats are killed and their flesh is partly offered to the gods by throwing them into fire. Agni/ fire is the mediator between gods and men.

Hindu sacrificer partly eats the flesh. But in Parsi religion, no animal is killed during Ijashne ceremony; only some hair of an ox is placed in a small vessel and shown with other things to the fire. This is a remnant of animal sacrifice. Formerly the Parsis used a piece of meat.

Xxx

Purodasha Cakes

The Purodasha cakes in the Vedic sacrifices , must be offered to various deities in a particular order. Parsis changed it to a small flat bread and called it Darun

Fresh milk is also required during Upasad ceremony. It’s Gaush jivya of Parsis.

(Upasad story in Aitareya Brahmana is already posted here a few days ago).

The Sanskrit word ‘Go’ for cow can be seen in Gaush jivya. ‘Go’ becomes Cow in English.

Ghee or butter is also used in Vedic ceremony. It is Gaush hudhao in Parsi.

Xxx

Udaka shanti

Consecrated Water, called Udaka shanta, is required in Vedic ceremony.

It is called Zaothra in Parsi.

Xxx

Soma Juice

Soma is called Haoma in Parsi. ‘S’ is absent in Persian and Greek. So they changed it to ‘H’ . Sindhu became Hindu because of these people.

The most important part of both the Jyotishtoma sacrifices and the Ijashne ceremony of the Parsi is the juice of the Soma plant.

Nowadays Soma is not available. So Hindus use Putika as a substitute for the Soma plant. Parsis use the branches of a particular shrub grown in Iran/ Persia.

Both the communities bring the plant fresh and extract the juice by reciting Mantras/ verses by using stones. Parsis use pomegranate branch along with the soma plant.

Hindus strains the juice with a cloth whereas the Parsi priests use a metal saucer with nine holes.

In Vedic Jyotistoma ceremony 16 priests take part and all of them taste Soma juice.

Part of the juice is offered to gods in fire.

In Parsi ceremony , two priests take part and very little is drunk by the Zaota priest.

Parsis don’t offer it into the fire.

Vedic priests use variously shaped wooden vessels to throw the juice into Agni, the messenger of gods. Parsis just show it to Agni.

Parsis prepare the juice for second time and throw it into a well.

The two preparations of the Parsis correspond to the morning libation and midday libation of the Vedic people. They are called Pratah savana and Mahyandina savana. Vedic people offered it in the evening as well. But no sacrifice is allowed in the evening or night in Zoroastrian/ Parsi religion.

To be continued

Tags – Haoma, Soma, Yaga, Parsi, Zoarashtian, Fire worship, Zend Avesta

கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்! (Post No.10,651)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,651
Date uploaded in London – – 12 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் அவரது பெருமிதமான, வளமோங்கிய, பக்கங்களை மட்டுமே உலகம் அறிந்து ஆனந்தப் படுகிறது.

அவர் சர்வ மத சபையில் உரையாற்றி உலகையே தன் பக்கம் ஈர்த்து வெற்றி கொண்ட பின் அவரை உலகம் நன்கு புரிந்து கொண்டது; பாராட்டியது.

முழு இந்தியாவும் அப்போது தான் விழித்துக் கொண்டு அவரை வணங்கத் தொடங்கியது.

வாழ்வில் ஏராளமான நாட்களை அவர் உண்ணாமல் மிகுந்த பசியுடன் களித்திருக்கிறார்.

இமயமலையின் உயரத்தில் ஏழ்மையில் வாழும் மக்களிடையே அவர்களே உண்ணுவதற்குப் போதுமான உணவு இல்லாத சமயத்தில் அவர்களை அணுகி உணவு கேட்பதை அவர் தவறாக நினைத்தார்.

இப்படி ஒரு வாழ்வும் எனக்குத் தேவை தானா என்று தன்னைத் தானே அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னால் ராமகிருஷ்ண மடம் பெரிதாக வளர்ந்த போது அவரைக் கண்டு தரிசித்து ஆசி பெற்றோர் ஏராளம்.
மன்மதநாத் கங்கூலி என்னும் ஸ்வாமிஜியின் சீடர் தன் நினைவலைகளை மிக நன்றாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு பதிவு இது.

ஸ்வாமிஜி கூறியதை அவர் வார்த்தைகளிலேயே காண்போம்:
“பிறகு ஹிமாலயத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று உணவுக்குப் பிச்சை கேட்பது எனது வழக்கமானது. மிகக் கடுமையான ஆன்மீக நெறிமுறைகளில் நான் எனது நேரத்தைச் செலவழித்தேன். எனக்குக் கிடைத்த உணவோ மிகவும் மோசமானதாக இருந்தது. பசிக்குப் போதுமானதாகவும் இல்லை.
ஒரு நாள் நான் என்னை பயனற்றவனாகக் கருதினேன். இந்த மலை வாழ் மக்கள் – அவர்களே மிகுந்த ஏழ்மையில் வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமே போதுமான உணவளிக்க வசதி இல்லாதவர்கள்.
இருந்தபோதிலும் எனக்கும் அதில் சிறிது வைத்திருந்து கொடுத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்து என்ன பயன்?

நான் உணவுக்காக வெளியில் செல்வதை நிறுத்தி விட்டேன். இரண்டு நாட்கள் சாப்பிடாமலேயே கழிந்தன. எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் ஒடையிலிருந்து என் கைகளைக் குவித்து அதையே ஒரு கோப்பை போல ஆக்கி, நீரை எடுத்துப் பருகிக் கொண்டிருந்தேன்.

பின்னர் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்தேன். அங்கு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

என் கண்களைத் திறந்த போது என் எதிரே பெரிய வரிப்புலி ஒன்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். பளபளக்கும் கண்களால் அது என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

“அப்பாடா! கடைசி கடைசியாக எனக்கு நிம்மதி கிடைக்கப் போகிறது, இந்த மிருகத்திற்கு இரை கிடைக்கப் போகிறது. இந்த மிருகத்திற்கு இந்த உடல் ஏதோ ஒரு விதத்தில் சேவை செய்தால் சரி தான், அது போதும்!” என்று நினைத்தேன்.
என் கண்களை மூடிக் கொண்டேன். அதன் வரவிற்காகக் காத்திருந்தேன்.

ஆனால் சில விநாடிகள் கழிந்தன; என் மீது அது பாயவில்லை.
ஆகவே என் கண்களைத் திறந்து பார்த்தேன். அது திரும்பிக் கானகத்தின் உள்ளே சென்று கொண்டிருந்தது.

அதற்காக வருத்தப்பட்டேன். ஆனால் பின்னர் புன்முறுவல் பூத்தேன்; ஏனெனில் எனக்குத் தெரியும், “என்னைக் காப்பாற்றியவர் எனது குருவே தான் என்று, அவர் தன் பணி முடியும் வரை என்னைக் காப்பார்”.

மன்மத நாத் கங்கூலியின் நினைவலைகள் வேதாந்த கேசரி இதழில் ஜனவரி மற்றும் ஏப்ரல் 1960 இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அன்பர்கள் அனைவரும் அவரது முழுக் கட்டுரைகளைப் படித்தால் ஸ்வாமிஜியின் பெருமையை உணர்ந்து ஆனந்தமடைவது நிச்சயம்!


tags– புலி, ஸ்வாமி, விவேகானந்தர்,

வெனி, விடி, விசி Veni, Vidi, Vici- ஜூலியஸ் சீஸரும் அதர்வண வேதமும் (10,650)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,650

Date uploaded in London – –    11 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 16

Veni, vidi, vici is a Latin phrase that literally translates to “I came, I saw, I conquered.” – Julius Caesar said it.

ஜூலியஸ் சீசர் என்னும் மன்னன், படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் சொன்ன சொற்கள் வந்தேன், கண்டேன், வென்றேன் Veni, Vidi, Vici .

இதுதான் பாசிட்டிவ் எண்ணங்கள்; வெற்றித் திருமகனின் வாசகங்கள். ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்றான் வள்ளுவன். உண்மையில் வள்ளுவனும் சீஸரும் பகவத் கீதை (11-33) யைக் காப்பி அடித்தார்கள். அதாவது ‘உத்திஷ்ட, யசோ லப = எழுந்திரு புகழடை’ என்று அர்ஜுனனை உசுப்பி விடுகிறான் (11-33) கண்ணன். அதற்கு மூலம் உபநிஷத்தில் உள்ளது

உத்திஷ்ட, ஜாக்ரத , ப்ராப்யவரான் நிபோதத – கடோபநிஷத்

எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும் வரை நிற்காதே!  என்பது விவேகானந்தர் அடிக்கடி இடி முழக்கம் செய்யும் வாசகம்

இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேதத்தில் உள்ளது !!!!!!!

XXXX

அதர்வண வேத பூமி சூக்தத்தில் உள்ள 63 பாடல்களில் முதல் 51 பாடல்களை/ மந்திரங்களை 15 கட்டுரைகளில் கண்டோம். இதோ மேலும் பல சுவையான செய்திகள் :

பாடல்/ மந்திரம் 52

யஸ்யாம் க்ருஷ்ணமருணம்  ஸம்ஹிதே அஹோராத்ரே விஹிதே பூம்யாமதி

வர்ஷேண பூமிஹி ப்ருதிவீ வ்ருதா வ்ருதா  ஸா நோ ததாது பத்ரயா ப்ரியே தாமனிதாமனி -52

பொருள்

எந்த பூமியில் கருப்பும் சிவப்பும் இணைகிறதோ, பகலும் இரவும் ஏற்படுகிறதோ, மழை மேகம் என்னும் மேற் கூரையால் வேயப்பட்டிருக்கிறதோ அந்த பூமாதேவியானவள் எல்லா அன்பு இல்லங்களிலும் மங்களத்தை  நிரப்புவாளாக

அனைத்து ‘தாம’ங்களிலும் என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு இருப்பிடம் என்று பொருள். அதிலும் ‘ப்ரிய’ / அன்புமிக்க என்ற சொல்லும் சேர்ந்திருப்பதைக் கவனிக்கவும். ‘பத்ரம்’ என்பதன் பொருள் மங்களகரமான. ஆக மொத்தத்தில் எல்லாம் POSITIVE WORDS பாசிட்டிவ் சொற்கள் . அத்தோடு அழகான இயற்கை வருணனையும் உள்ளது. பூமியில் தினமும் கருப்பும் சிவப்பும், அதாவது இரவும் பகலும் தோன்றுகிறது ; அங்கே மழை என்னும் கூரையும் உளது. ‘அருணன்’ என்னும் செஞ் சூரியனும் REDDISH SUN கருத்த மேகங்களும் வளம் மிக்க பூமியை சித்தரிக்கிறது

XXX

பாடல்/ மந்திரம் 53

த்யவ்ஸ்  ச ம இதம் ப்ருதிவீ சாந்தரிக்ஷம் ச மே வ்யசஹ

அக்நி ஸூர்ய ஆபோ மேதாம் விஸ்வே தேவாஸ் ச ஸம் ததுஹு -53

பொருள்

பூமியும் வானமும் இடைவெளியும் எனக்கு இந்த மாபெரும் இடத்தை அளித்துள்ளது . சூரியனும், அக்நியும் , தண்ணீரும், எல்லா கடவுளரும் எனக்கு அறிவைக் கொடுத்துள்ளனர்.

புதிய வானம்… புதிய பூமி

புதிய வானம் புதிய பூமி

எங்கும் பனி மழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க

வண்ண பூமழை பொழிகிறது… ஒஹோ ஹோ

புதிய வானம் புதிய பூமி

எங்கும் பனி மழை பொழிகிறது

நான் வருகையிலே என்னை வரவேற்க

வண்ண பூமழை பொழிகிறது… ஒஹோ ஹோ

புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று

இன்று இதயத்தை தொடுகிறது

— என்ற தமிழ்த் திரைப்படப் பாடல் வரிகளை நினைவுபடுத்தும் மந்திரம் இது.

பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில்கின்றனை இன்னும் என் தாயே
வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே!

——பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளி எழுச்சி

சுய முன்னேற்ற புஸ்தகங்கள் அனைத்தும்,  இப்படி சிந்தித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று சொல்கிறது. அதாவது எனக்கு இறைவன் அறிவைக் கொடுத்துவிட்டான்; பிரமாண்டமான இடத்தையம் கொடுத்துவிட்டான். இதில் நான் முன்னேறுவேன்; வெற்றி பெறுவேன் என்ற சொற்களை தினமும் சொல்ல வேண்டும். இதை அடுத்த மந்திரம் காட்டுகிறது .

Xxxx

பாடல்/ மந்திரம் 54

அஹமஸ்மி  ஸஹமான உத்தரோ நாம பூம்யாம்

அபிஷாடஸ்மி விஸ்வாஷா டா சாமாசாம் விஷா ஸஹி ஹி -54

நான் வெற்றி வீரன்; இந்த பூமியிலேயே மிகவும் உயர்ந்தவன் நான்; எங்கும் வெற்றி; எதிலும் வெற்றி ; எல்லா திசையிலும் வெற்றி (எங்கு நோக்கினும் அங்கு நானே வெல்வேன்)

இதுதான் கடோபநிஷத், பகவத் கீதை, திருக்குறள், ஜுவலியஸ் சீசர் ஆகியவற்றில் கண்டோம்.

ஜூலியஸ் சீசர் என்னும் மன்னன், படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் சொன்ன சொற்கள் Veni, Vidi, Vici வந்தேன், கண்டேன், வென்றேன் 

இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேதத்தில் உள்ளது

அதர்வண வேதம் செய்த இந்த முழக்கத்தை பாரதியும் செப்பினான்:

எடுத்த காரியம் யாவினும் வெற்றி

எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே

விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி

………………….

…………………….

என்னுமெண்ணங்கள் யாவினும்  வெற்றி

எங்கும் வெற்றி  எதனினும் வெற்றி

வேதத்தைப் படிப்பதும், பாரதியைப் படிப்பதும் ஒன்றே.

வெற்றி உறுதி

XXX  Subham xxxx

tags- ஜூலியஸ் சீசர் , Veni, Vidi, Vici , வந்தேன், கண்டேன், வென்றேன் , பூமி சூக்த கட்டுரை 16, எடுத்த காரியம், வெற்றி, 

100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2 (Post No.10,649)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,649
Date uploaded in London – – 11 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘ஹெல்த்கேர்’ சென்ற இதழ் கட்டுரையின் தொடர்ச்சி..
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2
ச.நாகராஜன்
(26 முதல் 55 முடிய)

  1. புரிந்து கொள்ளுங்கள் :
    மற்றவர்களின் உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்; புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு தனித் திறனாகும்.
    இந்தத் திறனை உங்களை மூளை எளிதாகக் கற்க முடியும். இதனால் மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்று ஒரு தனித் திறனைப் பெற்றவர்கள் ஆவீர்கள்.
  2. குழுவாகச் சிந்தியுங்கள். ஒரு குழுவாக அமைந்து ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும் போது பல்வேறு யோசனைகளும், கருத்துக்களும் உருவாகும். இது சிந்தனையில் ஊக்கப்படுத்தும் ஒரு புதிய மூளை ஆற்றலைக் கூட்டுவதற்கான, படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.
  3. உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுரை வடிவத்தில் எழுதுங்கள்.
    எழுதுவது என்பது நினவாற்றலை அதிகப்படுத்தும். அத்துடன் எண்ணங்களை சரியான முறையில் வெளிப்படுத்த வழி வகுக்கும். ஒரு பொருள் பற்றி அகலமாகவும் ஆழமாகவும் சிந்திக்க,
    எழுதுவது ஒரு சிறந்த வழியாகும். டயரி, அல்லது இணைய தள ப்ளாக்குகள் அல்லது பத்திரிகைகளுக்கு எழுதுவது என்பது மூளை ஆற்றலைக் கூட்டும். கதைகள் எழுத ஆரம்பித்தால் ஒரு புதிய மட்டத்திற்கு உயரலாம்.
  4. ஹிப்நாடிக் யோசனை என்பது பொய் அல்ல; நிஜம் தான். தனக்குத் தானே ஆழ்நிலை ஹிப்னாடிஸத்தைக் கொண்டால், அது மன அழுத்தத்தை நீக்கும். வலியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கும். சிந்தனையைத் தெளிவாக்கும். இந்தச் சிறந்த வழியை மேற்கொண்டு பார்த்தால் நல்ல பலன் தெரியும்.
  5. 14வது யோசனையாக தொலைக்காட்சியைப் பாருங்கள் என்று தரப்பட்டுள்ளது. உண்மை தான், அதைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாக அதற்கு விடாப்பிடி ‘அடிக்ட்’ ஆக ஆகி தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தால் ஆபத்து தான். மூளை வேலை செய்வது மிக மெதுவாகும். மூளைத் திறனைக் குறைக்கும். ஆகவே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிச்சயமாகத் தொலைக்காட்சியைப் பார்க்காதீர்கள்.
  6. 22வது யோசனையாக ஓவியம் வரையுங்கள் என்று சொல்லப்பட்டிருகிறது. ஓவியம் என்பதை வெறும் பென்சிலால் கூட வரையலாம். ஆனால் நல்ல வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து தூரிகை வைத்து வரைவது சிறப்பாகும். இது படைப்பாற்றலை ஊக்குவிக்கும். வலது பக்க மூளையை முழு ஆற்றலுடன் பயன்படுத்த வண்ண ஓவியம் வரைவதே வழி.
  7. அழுவதில் தவறில்லை. சோக நிகழ்ச்சி ஏற்பட்டால் என்ன செய்வது? தவிர்க்க முடியாத சோகத்தில் உணர்ச்சிகளை வடிகாலாக வெளிப்படுத்தி அழுது விட்டால் மனம் ஆறுதல் அடையும். மூளையில் இரத்த ஓட்டம் ஆரோக்கியத்துடன் பாயும். உண்மையில் பல நிலைகளில், அழுவது மூளையை உள்புறமாக சுத்தப் படுத்துவதாகும். இது மூளை ஆற்றலைக் கூட்டும்.
  8. புதிர்களை விடுவியுங்கள்.
    புதிர்களை விடுவிப்பது மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகும். சிந்தனைக்குச் சவாலாக வேடிக்கையாக அமையும் புதிர்கள் மூளையின் இடது பக்க இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வலது பக்க காட்சிப்படுத்தும் மையத்திற்கு இது தகவலைப் பரிமாறுகிறது.
  9. நியூரோ ஃபீட்பேக் (neurofeedback) என்பது உங்கள் மூளை அலை அமைப்பை கட்டுப்படுத்துகிறது. இது மூளை அமைப்பை கட்டுமானம் செய்வதோடு மூளை நெட் வொர்க்கை நெகிழ்வடையச் செய்கிறது. இந்தக் கலையைக் கற்பதற்குச் சற்று செலவாகும் என்பது ஒரு உண்மை!
  10. நான் என்னும் அகங்காரத்தை விட்டால் அது அந்த அகங்காரத்துடன் சேர்ந்து வரும் உணர்ச்சிகளை உதறித் தள்ளுவதாகும். உடன் விளைவாக ஏற்படுவது பகுத்தறிவுடன் ஆராயும் முனைப்பான அறிவு நமக்குள்ளே புகுவது தான்.
    பகுத்தறிவோ தன்னை உணர வழி வகுக்கும். அதாவது எதிர்காலம் பற்றிய சரியான கணிப்பைக் கொண்டு மூளையை ஆரோக்கியத்துடன் வைத்து நல்ல முடிவுகளை எடுக்க வழி வகுக்கும்.
    தியானம், சுய ஹிப்னாடிஸம், உள்ளார்ந்து விசாரம் செய்வது இவை எல்லாமே சுய விழிப்புணர்வூட்டுவதற்கான வழிகளாகும்.
  11. கல்லூரியிலோ பள்ளியிலோ படிப்பவர் என்றால் அநதப் படிப்பு மூளை ஆற்றலைக் கூட்ட வல்ல ஒரு வழியாகும். பள்ளி, கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டே இருக்கலாமே!
  12. சதுரங்க விளையாட்டு – செஸ் – மனதின் ஆற்றலை – மூளை ஆற்றலைக் கூட்டும் ஒரு விளையாட்டூ ஆகும். பல விதத் திறன்களை இதன் மூலம் பெறலாம்.
  13. சிற்பக் கலை: எதையேனும் சிற்ப அடிப்படையில் செய்வது புதிய திறன்களை வண்ணத்திலும் வடிவத்திலும் ஏற்படுத்தும். இது, படைப்பாற்றலை ஊக்குவித்து இடம், அமைப்பு, பகுத்துப் பார்த்து முடிவு எடுப்பது ஆகியவற்றில் முன்னேற்றத்தை நல்கும்.
  14. சைக்காலஜி டு டே என்ற பிரசித்தி பெற்ற உளவியல் இதழ் ஆராய்ச்சிக் கட்டுரை சுவையான தகவல் ஒன்றைத் தருகிறது. தனது மரபு பற்றி அறிவோர் மூளைத் திறன் பற்றிய சோதனைகளில் முதல் இடத்தைப் பெறுகின்றனர். இதன் காரணம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் முன்னோர் மரபு பற்றி அறிவோர் தற்காலத்திய நடப்பை நன்கு அறிபவர்கள் ஆகின்றனர்.
  15. நல்ல ஒரு விவாதம், பேச்சு மூளை ஆற்றலைக் கூட்டுகிறது என மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றனர்.
  16. எதையும் எப்போதும் ஒரே மாதிரியாகச் செய்து கொண்டே இருக்காமல் சில செயல்களை தன்னிச்சையாக அப்போதே வேறு மாதிரியாகச் செய்து பாருங்கள்.
  17. நல்ல உடல் பயிற்சி மூளைக்கு நல்ல ரத்த ஓட்டத்தைத் தருகிறது. அதற்கான ஆக்ஸிஜன் அப்போது கிடைக்கிறது. ஆகவே அதிக சக்தி கிடைக்கிறது. சிந்திக்கும் ஆற்றல் கூடுகிறது. அப்போது மூளைக்குப் பெரிதும் தேவையான Human Growth Hormone சுரக்கிறது.
  18. உங்கள் இடது கையைப் பயன்படுத்திப் பாருங்கள். (இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கையைப் பயன்படுத்த வேண்டும்), இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இது சிந்தனையை வலுவாக்கும் என்று கண்டுபிடித்துள்ளது.
  19. நல்ல தூக்கத்தை அனுபவித்துத் தூங்குவது மூளை ஆற்றலைக் கூட்டிச் சரியாக சிந்திக்க வைக்கிறது.
  20. இதயம் சம்பந்தமான நோய் இருக்கிறதா, அதிக அளவில் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
  21. டயபடீஸ் -நீரிழிவு நோய் – இருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்.
  22. சேவை நிறுவனங்களில் தன் ஆர்வலராகச் சேருங்கள். இது மன ஆற்றலைக் கூட்டுகிறது; மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
    45 Strength Training மூளை ஆற்றலைக் கூட்டும். எடைகளைப் படிப்படியாக அதிகரித்துத் தூக்குவது BDNF – Brain derived Neurotrophic Factor -ஐக் கூட்டுகிறது. இது நரம்பு செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
    46.நடனப் பயிற்சியும் நல்லது தான். அது மனதிற்கான சவால்களைத் தருகிறது. திட்டமிடல், மற்றவர்களுடன் இணைந்து இருத்தல் உள்ளிட்ட பல ஆற்றல்களை அது வளர்க்கிறது.
  23. கோல்ஃப் விளையாடுவது மூளையின் அமைப்பில் உணர்ச்சிகளை அறிந்து கட்டுப்படுத்தும் பகுதியைச் செம்மை ஆக்குகிறது.
  24. யோகா பழகுங்கள். ஒரே நிலையில் நிலையாக மனதை வைத்திருப்பது, கவனக் குவிப்பு, மூளை ஆற்றல் திறன் கூடுதல் இவை எல்லாம் யோகாவினால் அடையும் பலன்கள். மூளைத் திறன் குறையாமல் இருக்க யோகா ஒரு வழியாகும்.
  25. பகலில் ‘பவர் நேப்’ (Power Nap) எனப்படும் சக்தி தரும் தூக்கத்தைக் கொள்ளுங்கள் ஒரு மணி நேரம் இப்படி உறங்குவோர் தெளிவான சிந்தனை ஆற்றலையும் கூடவே நினைவாற்றலையும் கூட்டிக் கொள்கின்றனர்.
  26. புல்வெளியில் புல் செதுக்குவது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு இரசாயனத்தை வெளிப்படுத்துவதோடு நினைவாற்றலையும் கூட்டுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
  27. பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல் : பல் இடுக்குகளில் சேரும் பலவித உணவுத் துகள்களனது, மூளை நாளங்கள் ஊட்டச் சத்தைப் பெறுவதைத் தடுக்கிறது. ஆகவே அவற்றைச் சுத்தமாக வைத்திருந்தால் மூளைத் திறனும் கூடும்.
  28. தலையைத் தொங்க விட்டுப் படுதிருப்பது நினைவாற்றலைக் கூட்டும். ஏனெனில் இரத்தமானது மேம்பட்ட முறையில் மூளைக்குச் செல்கிறது.
  29. Anagram என்பது ஆங்கிலத்தில் ஒரு வித விளையாட்டு. அதாவது ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துக்களை மாற்றி அமைத்து இன்னொரு புதிய வார்த்தையை உருவாக்குவதே அனக்ராம். எடுத்துக்காட்டாக ஒரு வார்த்தை இதோ: A GENTLEMAN என்பதை மாற்றினால் வருவது ELEGANT MAN!
    இதை விடுவிப்போர் முன்னர் சொன்னது போல உடலில் தலை பாகத்தைச் சற்றுக் கீழே தொங்க விட்ட பின் புதிரை விடுவித்தால் மற்றவரை விட சீக்கிரமாக வெற்றியைப் பெறுகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.
  30. ஆழ்ந்து சுவாசித்தல் : ஆழ்ந்து சுவாசிக்கும் போது ஆக்ஜிஜன் அளவுகள் அதிகமாகி மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. 10 முதல் 15 நிமிடம் வரை தினமும் ஆழ்ந்து சுவாசித்தால் போதும். அது ஒரு பெரிய நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் – ஏனெனில் அப்போது மூளை ஆற்றலின் திறன் அபரிமிதமாகக் கூடும் என்பதால்!
  31. நடைப் பயிற்சி : உடல் பயிற்சி மிக நல்ல விளைவை உடலில் ஏற்படுத்தும் என்பது உறுதி. நடைப் பயிற்சி மூளை ஆற்றலை வெகுவாகக் கூட்டுகிறது. நடைப்பயிற்சி மனதை ஓய்வான நிலையில் நிலை நிறுத்துகிறது. மூளை சிறப்பாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறது. அது மூளையை அங்கும் இங்கும் சற்று அலைபாய விடுவதோடு பிரச்சினை தரும் சிந்தனைகளை அப்புறப்படுத்துகிறது.
    *** தொடரும்

tags– 100 வழிகள் ,  மூளை ஆற்றல்

ஞானப் படகு, ஞான விளக்கு,  ஞானத் தீ,  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் (Post.10,648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,648

Date uploaded in London – –    10 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞானப் படகு ஞான விளக்கு  ஞானத் தீ  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் 

பகவத் கீதையை ஆத்ம ஞானத்திற்காக படிப்பது அவசியம். அதற்குப் பின்னர் அதிலுள்ள இலக்கிய நயத்துக்காகவும் படிக்கலாம். கிருஷ்ணன் போர்க்களத்தில் பேசினாலும் தெளிவாக உவமைகளுடன் பேசுகிறார். ஆனால் போர் துவங்குவதற்கு முன்னர்தான் இந்த சம்பாஷணை நடந்தது .

நமக்கு ஒரு சந்தேகம் வரும். முதல் அத்தியாயத்திலேயே தாரை தம்பட்டைகள் முழங்கின ; போர் முரசுகள் ஒலித்தன. அவரவர் கையிலுள்ள சங்குகள் ஊதின . அதையும் கூட முதலில் செய்தவர்கள் துரியோதனாதிகள்தான். அப்படி இருக்க, 700 ஸ்லோகம் உடைய 1400 வரிகள் உடைய உரையாடல் நடந்திருக்குமா? அப்போது எதிர்த் தரப்பினர் என்ன செய்திருப்பார்கள் என்றெல்லாம் நாம் எண்ணலாம். உண்மையில் வருணனைகள்- குறிப்பாக விஸ்வரூப தரிசன வருணனைகள் –முதலியவற்றை நீக்கிவிட்டால் பேசிய பகுதி இன்னும் குறைவே. அதிலும் திரும்பத் திரும்ப சொன்ன கருத்துக்கள் எல்லாம் சஞ்சயன் வாயிலாக வந்து வியாசர் எழுத்தில் பொறிக்கப்பட்டபோது கொஞ்சம்  கூடுதலாகத்தான் வரும்.

உங்கள் நண்பர்களுடன் டெலிபோனில், WHATSAPP வாட்ஸப்பில் அரைமணி நேரம் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே ரிக்கார்ட் RECORD  செய்து எழுதிப்பாருங்கள். அரை மணி நேர பேச்சு அரை பகவத் கீதை அளவுக்கு வந்து விடும்!!!

ஞானம் என்னும் சொல்லுடன் பல சித்திரங்களை சேர்த்து, கிருஷ்ணன் விளக்குகிறார்.; இதோ ஒரு சின்ன பட்டியல் :-

பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும் பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

அது சரி போர் முழக்கம் செய்தாகிவிட்டது; இரு தரப்பும்; பின்னர் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொண்டு இருக்கையில் எதிர் தரப்பில், SUSPENSE சஸ்பென்ஸ் வந்திருக்காதா ? அல்லது SUSPICION ஸஸ்பிஷன் / சந்தேகம் ஆவது வந்திருக்காதா என்று நாம் எண்ணலாம். பழங்காலத்தில் நடந்தது தர்ம யுத்தம்; எதிரி கையில் ஆயுதம் எடுத்தால்தான் அவனுடன் சண்டை போடுவர்; அவர்கள் வேடிக்கை பார்க்கையிலோ, தண்ணீர் குடிக்கையிலோ தாக்க மாட்டார்கள். ஆக அர்ஜுனனும் அவனது சகோதரர் நால்வரும் ஆயுதம் எடுக்காதவரை துரோணரோ பீஷ்மரோ சண்டையை துவக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கண்ணன் விடுவதாக இல்லை; நம்ம ஊரில் அரசியல் மேடைகளில் எவர் கையிலாவது MIKE மைக் கிடைத்தால் எப்படி அவர் முதுகைத் தட்டி உட்கார வைக்கும் வரை பேசுவாரோ அப்படி கிருஷ்ண பரமாத்மாவும் .வெட்டி முழக்கு கிறார் ; ஆயினும் கூட நம்மவூர் சிறந்த பேச்சாளர் போல சில, பல உவமைகளை உருவகங்களையும் அள்ளி  வீசுகிறார்.

பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும் பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் பார்ப்போம்

மனிதனும் கடவுள் ஆகலாம்.; ஆசை, பயம், கோபம் இல்லாமல் என்னைச் சரண் அடைந்தவர்கள் என் மயமாகி விடுவர் ;இந்தஞானத் தவத்தால் அவர்கள் பரிசுத்தமானவுடன் என்னை போல ஆகி விடுவார்கள் கோபமே இல்லாமல் வாழ்வது ஒரு தவம்; ஆசையே இல்லாமல் வாழ்வதும் ஒரு தவம்; பயமே இல்லாமல் வாழ்வதும் ஒரு தவம். இவைதான் ஞானத் தவம்; கையில் கால் பணம் தேவை இல்லை; இதை யாரும், எந்த ஜாதியினரும், மதத்தினரும், கடவுள் நம்பிக்கையே இல்லாதவரும் கூட இதைக் கடைப்பிடிக்கலாம். வள்ளுவனும் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்கிறார்.

ரிக் வேதமும் கூட ‘வித்வான் அம்ருத இஹ பவதி’ என்று புருஷ சூக்தத்தில் சொல்கிறது .

பாரதி பாடல் நெடுகிலும் கீதையின் தாக்கத்தைக் காணலாம். அவரும் ‘ஞான வாள்’ முதலியன பற்றிப் பாடுவதோடு எல்லோரும் அமர நிலையை அடையும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்று மூன்று முறை உறுதிபடக் கூறுகிறார்.

4-19ல் கண்ணன் ஞானத் தீயில் ஆசைகளைப் பொசுக்கினவனை மக்கள் பண்டிதர்கள்/ அறிவாளிகள் என்று அழைப்பர் என்கிறார்.

4-27ல் ஞான தீபம் பற்றி உவமிக்கையில் அறியாமை என்னும் இருள் அகன்றால் இந்திரியங்கள் செய்யும் தொழில்களை வேள்வியில் பொசுக்கலாம் என்று சொல்கிறார்.

தீயில் மந்திரம் சொல்லி ஆஹுதி கொடுப்பது மட்டுமே வேள்வி என்பதல்ல. குணங்களைக் கடைப்பிடிப்பதும் ஒரு வகை வேள்வியே.

இந்து மாதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இதற்கான மந்திரத்தை உச்சரிக்கிறார்கள்.; பாவிகளுக்குள் கொடும்பாவியாக ஒருவன் இருந்தாலும் கூட ஞானம் என்னும் படகினால் அந்த பாவ நதியைக் கடந்து விடலாம் என்று 4-36 ல் பகர்கிறார். ஆக ஒரே நாலாம் அத்தியாயத்தில் கண்ணன் ஞானம் என்னும் சொல்லை வைத்து சிலம்பம் ஆடுகிறார் என்றே சொல்லவேண்டும்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் கூட தங்கள் பாடல்களில் இறைவனை  ஞான விளக்கு, தீபம்  என்று பாடிப் பரவியுள்ளனர்!

(ஞான) சக்ஷு = கண், ப்லவ = படகு, தீப = விளக்கு, அக்கினி = தீ, தபஸ்= தவம்

–SUBHAM

tags- ஞானப் படகு, ஞான விளக்கு , ஞானத் தீ,  ஞானக் கண் , ஞான வேள்வி , ஞானத் தவம் , பகவத் கீதை