நியோடைமியம் (NEODYMIUM) பற்றிய சுவையான தகவல் (Post No.10073)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,073

Date uploaded in London – 9 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 36 தனிமங்கள்/மூலகங்கள் குறித்த சுவையான வரலாற்று, ரசாயன, மருத்துவ, தொழில் பயன்பாடு , புவியியல் செய்திகளைக் கண்டோம். மூலகம் (ELEMENT)  என்பது இந்தப் பிரபஞ்சம் என்னும் கட்டிடத்தின் 118 செங்கற்கள் ஆகும். அதில் ஒன்றை எடுத்து அதன் அணுவைப் பிளந்தால் பகவான் கிருஷ்ணன் , தனது விஸ்வரூப தரிசனத்தில் காட்டியது போல பிரம்மாண்ட  சக்தி  வெளிப்படும். முதல் அணுகுண்டு சோதனை நடந்தபோது அந்தக் காட்சியைக் கண்ட அணுசக்தி விஞ்ஞானி  ஜே .ராபர்ட் ஓப்பன்ஹைமர் (J.ROBERT OPPENHEIMER) பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லிக் காட்டினார் .( திவி சூர்ய ஸஹஸ்ரஸ்ய = ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்தது போன்ற; எல்லாம் என்னுள்ளே அடக்கம். ;நீ அழிப்பதற்கு முன்னரே அவை மரணம் என்னும் பள்ளத்தில் விழுவதைக் காண் )

ஆக, எல்லா மூலகங்களையும் பிரித்துக் கொண்டே சென்றால் எஞ்சுவது அதன் அணு.

இப்போது நியோடைமியம் (NEODYMIUM)  என்னும் உலோகம் (மூலகம் ) பற்றிய சுவையான செய்தியைக் காண்போம்.

நியோடைமியம் (NEODYMIUM ) , இரும்பு (IRON) , போரான் (BORON), ஆகிய மூன்றையும் கலந்து உருவாக்கும் (NIB ) காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதைக் கையாளுவோர் கண்களைப் பாதுகாக்க பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டுதான் அதைத் தொடவேண்டும்.அந்த காந்தம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்போது அவை சேரும் வேகத்தில் தூள் பறக்கும். அவை கண்களின் உள்ளே செல்லமுடியும். இந்த நியோடைமியம் (NEODYMIUM)  காந்தத்தில் மிகச் சிறிய காந்தத்தை வாயில் வைத்துக்கொண்டால் கன்னத்தில் பலவகை நகைகளை ஒட்டிக் கொள்ளும் தந்திர வித்தைகளைக் காட்டலாம் .அப்படிச் செய்த பலர் அதை பிரிக்க முடியாமல் தவித்து, இறுதியில் ஆஸ்பத்திரிக்கு ஓடும் நிலையும் ஏற்பட்டது. ஏனெனில் அவை அவ்வளவு சக்தியுடன் ஒட்டிக் கொள்கின்றன. எளிதில் பிரிக்கமுடியாது .

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை போலி கரன்ஸி நோட்டுக்களைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்துகின்றனர். உண்மையான கரன்ஸி (ரூபாய் நோட்டு) அச்சடிக்கும் மை (INK)யில் இரும்புத்துகள் உண்டு. ஆனால் போலி நோட்டு அடிப்பவர்கள் பயன்படுத்தும் மையில் அது இராது. ஆக காந்த சக்தியைப்  பயன்படுத்தி எது அசல், எது போலி என்று கண்டுபிடிக்க நியோடைமியம் (NEODYMIUM ) உதவும்.

சரியான உச்சரிப்பு நீயோடைமியம்.கிரேக்க மொழியில் ‘புதிய இரட்டையர்’ (NEW TWINS) என்று பொருள். ஏனெனில்  ஒரே மாதிரியான குணம் உடைய அபூர்வ  (RARE EARTHS ELEMENTS) மூலக குடும்பத்தைச் சேர்ந்தது இது. மூலக அட்டவணை எனப்படும் பிரியாடிக் டேபிள் (PERIODIC TABLE) அட்டவணையில் லாந்தனம் முதல் லுடேஷியம் (LANTHANUM TO LETETIUM 57 முதல் 71 வரை) வரையுள்ள லாந்தனைட்ஸ் ( LANTHANIDES) என்னும் அணியில் இதுவும் அடக்கம் .

மனித உடலில் இதற்கு அதிக வேலை இல்லை. இதன் தூசி கண்களைப் பாதிக்கும் .பொதுவாகச் சொன்னால் லாந்தனைட்ஸ் அணியிலுள்ள மூலகங்கள் மனித உடலில் மிகச் சிறிய அளவில் எலும்பு, சிறுநீரகம் , கல்லீரலில் இருக்கிறது. தாவ்ரங்ககளின் வேர்கள் இதை கிரகிக்காததால் மனித உடலில் இது சேர்வதும் குறைவே.

மருத்துவத்தில்

காந்த சிகிச்சை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சாதனங்களில் இது உபயோகப்படுத்தப்படுகிறது .

எலியின் உடலில் இதைச் செலுத்தி ஆராய்ந்தனர். இரத்தம் உறைவதை (Blood clotting) அது தடுப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ஆயினும் இதை மனித உடலில் ஏற்றி  இரத்தம் உறைவதைத் தடுக்க முடியுமா என்று ஆராய்ந்தனர். அதில் வெற்றிகிட்டவில்லை. எலி செத்தால் , கேட்பதற்கு நாதி இல்லை; மனிதன் செத்தாலோ……………………………

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1885ம் ஆண்டில் கார்ல் ஆவர் (Carl Auer) என்பவர் இதைக் கண்டுபிடித்தார்.அப்போது அவர் ராபர்ட் புன்செனின் ஆராய்ச்சி மாணவர். புன்சென் பர்னரை (Bunsen Burner)  அறியாத ரசாயன மாணவர் இருக்கமுடியாது

சீனா , அமெரிக்கா , இந்தியா , இலங்கை, ஆஸ்திரேலியா , பிரேசில் ஆகிய நாடுகளில் நியோ டைமியம் கலந்த தாதுக்கள் பெருமளவில் பூமிக்கடியில் உள்ளன. அவைகளை அவர்கள் வெட்டி எடுத்த்து பயன்படுத்துகின்றனர். இதை சுத்தப்படுத்தி பிரிப்பது கடினமானதால் விலையை அதிகரிக்கிறது; ஆகையால் குறைவான அளவே உற்பத்தி செய்யப்படுகிறது . முதலில் இதை மக்னீஷியத்துடன் சேர்த்தால் அதன் பலத்தை அதிகரிப்பது கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அதை போரான் , இரும்புடன் சேர்த்து சக்திவாய்ந்த காந்தங்களை உருவாக்குவது 1983-ல் கண்டுபிடிக்கப்பட்டது. கார்களின் பல பாகங்களிலும் , கம்பியூட்டர் தகவல் சேமிப்பு விஷயத்திலும் ஒலிபெருக்கியிலும் நியோடைமியம் பயன்படுகிறது .

கண்ணாடியில் ஊதா (Purple)  நிறத்தை ஏற்றவும் இது உதவுகிறது . அது பாதுகாப்புக் கண்ணாடிகள் (GOGGLES)  செய்வதற்கு பயன்படுகிறது. நியோடைமியம் ஆக்ஸைடை கிரியா ஊக்கியாகவும் (CATALYSTS ) பயன்படுத்துகின்றனர்

காற்று விசையைப் பயன்படுத்தி மின்சார சக்தி உற்பத்தி செய்யும் டர்பைன்களிலும் நியோடைமியம் காந்தம் உள்ளது

உலோகம்

இரசாயனக் குறியீடு – Nd  (என் டி)

அணு எண்- 60

உருகு நிலை 1021  டிகிரி சி

கொதி நிலை – 3070 டிகிரி சி

இது ஒரு வெள்ளி போன்று பளிச்சென காணப்படும் உலோகம் ஆகும். காற்றில் பட்டால் கருத்துக் போகும் என்பதால் இதை எண்ணைக்கு அடியிலோ பிளாஸ்ட்டிக் பெட்டியிலோ பாதுகாத்து வைக்கிறார்கள். தண்ணீரில் மெதுவாகவும் வெந்நீரில் வேகமாகவும் செயல்படும்.  இதற்கு ஏழு ஐசடோப்புகள் (Isotopes) இருக்கின்றன

Uses in bullet points

1. Magnetic Resonance Imaging System 

2. Magnotherapy

3. Audio Equipment

5. Permanent Magnet Motors

6. Magnetic Separation Technology

7. Microwave Communication Technology

8. Magnetization Technology

tags- நியோடைமியம், NEODYMIUM,  காந்தம்

—subham—

நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?(Post No.10072)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,072

Date uploaded in London – 9 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9948 (வெளியான தேதி: 8-8-2021)

நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் இருபத்திஐந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். மேலும் சில சுபாஷிதங்கள் இதோ:-

பாபாந்நிவாரயதி யோஜயதே ஹிதாய

க்ருஹானி க்ருஹதி குணான் ப்ரகடீகரோதி |

ஆபத்கதம் ச ந ஜஹாதி ததாதி காலே

சன்மித்ரலக்ஷணமிதம் ப்ரவதந்தி சந்த: ||

நல்ல ஒரு நண்பனின் குணங்கள் இவையே :

அவன் பாப காரியங்களைச் செய்வதைத் தடுப்பான். நல்லனவற்றைத் தருவதுடன் சேர்ப்பான். ரகசியங்களைக் காப்பான். நற்குணங்களை அனைவருக்கும் தெரியப்படுத்துவான். ஆபத்துக்காலங்களில் ஒரு போதும் கைவிட்டுப் போக மாட்டான். தேவையான காலங்களில் உதவுவான்.

The following are the qualities of a good friend: he prevents from (doing) sin (-ful acts) associate one with the beneficial things, keeps secrets, brings merits into light, never leaves in calamities, and helps in needy times.

*

ரஹஸ்யபேதோ யாச்ஞயா ச நைஷ்டுர்ய சலசித்ததா |

க்ரோதோ நிஸ்ஸத்யதா தூதமேதந்மித்ரஸ்ய தூஷணம் ||

ஒரு நண்பணின் கெட்ட குணங்கள் இவை:- ரகசியத்தைக் காப்பாற்றாமல் வெளியிடுவது, பிச்சையெடுப்பது, நிஷ்டூரமானதன்மை, சல சித்தம் (அலைபாயும் மனம்) க்ரோதம், பொய் கூறுதல் மற்றும் சூதாடுதல்.

The following are the defects of a friend: betrayal of secrets, begging (something or the other), harshness, fickle-mindedness, short temper, lying, and gambling.

*

யதாம்பஸி ப்ரஸன்னே து ரூபம் பஷ்யதி சக்ஷுஷா |

தத்தத் ப்ரஸ்ன்னேந்த்ரியவான் ஞேயம் ஞானேன பஷ்யதி ||

தெளிவாக நீர் இருக்கும் போது ஒருவன் எப்படி நீரின் அடியில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடிகிறதோ, அதே போல புலன்கள் அமைதியாக தெளிவாக இருக்கும் போது ஒருவனது ஞானத்தால் அனைத்தையும் புரிந்து கொள்ளலாம்,

As one can see things situated in deep waters when the water is clean one can see objects with his wisdom when his senses are clear (calm).

*

ஜிதேந்த்ரியத்வம் வினயஸ்ய காரணம் குணப்ரகர்ஷோ வினயாத்வாப்யதே |

குணாதிகே பும்ஸி ஜனோநுரஜ்யதே ஜனானுராகப்ரபவா ஹி சம்பத: ||

வினயத்திற்குக் காரணம் ஒருவன் புலன்களின் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாடே. நற்குணங்கள் அனைத்தும்  வினயத்தாலேயே அடையப்படுகின்றன. நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் மீது ஜனங்கள்  பிரியம் கொண்டிருக்கின்றனர். அந்த நல்ல அன்பே (எண்ணமே) நிச்சயமான செல்வமாகும்.

Control over (one’s) senses is the cause of modesty. The wealth of merits is  achieved by the modesty. People love the person who has the wealth of  merits and surely riches are the out come of people’s love (good will).

*

கல்பதம: கல்பிதமேவசூதே ஸா காமதுக்காமிதமேவ தோக்தி |

சிந்தாமணிச்சிந்திததமேவ தத்தே சதாம் ஹி சங்க: சகலம் ப்ரசூதே!

கல்பதருவானது விரும்பியதை மட்டுமே தரும். காமதேனு இச்சைப்பட்டதை மட்டுமே தருகிறது. சிந்தாமணியோ நினைத்ததை மட்டுமே தருகிறது. ஆனால் நல்லவர்களின் சேர்க்கையோ அனைத்தையுமே தருகிறது.

The Kalpa tree yields only what is wished for. Kmadheny yields only what is desired and the Cintamani yields only what is contemplated on. But the company of the noble yields everything.

tags-  நல்ல , நண்பன் ,குணங்கள், 

***

CURSES 5000 YEARS AGO! STRANGE CURSES IN RIG VEDA- part 1 (Post No.10071)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,071

Date uploaded in London – 8 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There is a strange hymn in the Rigveda with full of curses. Most of the Hindu inscriptions end with curses. They curse the one who violates the instructions in the inscription or one who damages them. Persian inscriptions also end with similar curses. But the origin of curses lies in the Rigveda the oldest book in the world.

Hindus believe that Veda Vyasa who lived around 3150 BCE divided the Vedas into Four Vedas. So according to Hindus it is at least 5200 years old. The translators of the Vedas in the West never believed in what Hindus believed. They did not practise what Hindus practised. They were only anti Hindu and anti -Indian gang members. Since they translated the Vedas into English , French and German, people thought they were “scholars”. They were hired just to destroy Hinduism. Their appointment letters and the post they held spell it crystal clear.

The curses poem did not interest them much. We can derive much information from it. It is in the name of seer Maitravaruni Vasistha. We knew one famous Vasistha in Ramayana and he was challenged by Visvamitra on many occasions. Parasurama’s father Jamadaghni also figured in the Vedas. Actually the last phase of the Vedas is Rama period. Afterwards we don’t have any verses in the Rigveda. So what Hindus say about chronology is also confirmed by the Rigveda. Hindus say that Rama lived in Treta Yuga and Krishna lived in the later Dwapara Yuga. After Vyasa and Krishna died Kali yuga began. This shows that the following curses are from the Treta Yuga, at least five thousand years old.

(Yugas are calculated in two ways shorter period Yugas and longer period yugas. This will be discussed in another article)

xxx

Curses of Vasistha (RV 7-104)

1.Indra and Soma, burn and destroy the demon foe. Annihilate the fools, slay them and burn them up. Send downward who adds gloom to gloom. Chase them away. Pierce the voracious ones.

2.Let sin around the wicked boil like as a cauldron set amid the flames of fire. Against the foe of prayer, devourer of raw flesh, the vile fiend fierce of eye, keep your perpetual hate against cruel eyed .

My comments

This is a curse against anti god, anti -prayer gangs. The very interesting point is to throw them into cauldron in the middle of fire. Later day pictures of hell show this. Even 1400 years ago, Saivite saint Appar was thrown into a burning Lime kiln but he was saved by Lord Siva.

Another interesting point is that anti Hindu gangs were cannibals. Like Chinese eat scorpions, lizards, rats and snakes today, like the East Europeans eat horses today, there was a gang of cannibals in Vedic period. Even the Rakshasas of Sri Lanka ate human flesh. Story of Agastya show that Vatapi and Ilvalan ate human flesh. And the same story show that the forest was full of human skeletons of seers.

So the curses were thrown against the barbaric tribes.

Cruel eyed : commentators say spy or gossip mongers.

xxx

RV.7-104-3

Indra and Soma , plunge the wicked in the depth, yes, cast them into darkness that has no support. So that none of them may ever return.

7-104-4

Hurl your deadly crushing bolt down on the wicked fiend from heaven and earth. Burn them to death

7-104-5

Let them sink without a sound.

7-104-6

Indra and Soma, I offer these prayers with wisdom. Accept my prayers; let both of you be united like two horses in the chariot.

Mantra 7

Slay the treacherous fiends; let the wicked have no bliss who evermore assails us with malignity.

Mantra 8

I pursue my way with guileless spirit;  whoever accuses me  with words of falsehood, may the speaker of untruth be crushed like water in the hand.

Mantra 9

Those who harm the righteous must be given to snakes or to Nirruti (Hindu goddess personifying death, decay and destruction)

Mantra 10

May he a thief or a robber, sink to destruction; both himself and offspring.

Mantra 11

May he be swept away himself and children; may all the three earths press him down beneath them.

Mantra 12

A wise man can easily distinguish the true and false.

Soma protects the true and honest

My comments

This is a good quotation. A prudent man can easily find out who is honest. Several Hindu stories in the Vikram and Vetal and Katha sarit sagara stand examples for this.

But Sayana, commentator, gives the story of Kalmashapada here.  I give the story from Who is Who in the Mahabharata by Subash Mazumdar

“ Kalmashpada was a king of Ikshwaku dynasty. He once encountered Shakti, son of sage Vasistha, on a narrow forest path. The question of relative priority as to who should pass first and who should give way, led to heated argument until the king losing his temper started mercilessly whipping \shakti in a demonic raage. Thereupon Shakti collecting his spiritual strength, cursed the king would become a Rakshasa hungering for human flesh wandering the forest for 12 years.

At this juncture Visvamitra who had earlier been bested by Vaishtha and therefore wanted to please Shakti, arranged for a Rakshasa called Kinkara to enter the body of Kalmashapada. Later this curse upon the king was redoubled in force by the pronouncement of a brahmana who was erroneously served human by orders of the king.(It is in Adi Parva of Mahabharata).

The king in his rakshasa form initiated his consumption of human flesh by killing and devouring Shakti himself. Later he also killed Vaishtha’ss other sons.

Once Kalmasha pada , while in Rakshasa form, saw a brahmin couple enjoying conjugal pressure. He killed and ate the Brahmana. Thereupon the brahmana cursed that the king would also die if he ever attempted to enjoy conjugal bliss with his queen.

Years later when he wanted to kill and eat Adashyanti, widow of Shakti, Vasishta sprinkled holy water on him and the curse having ended the king expressed his lifelong indebtedness to Vasishta .

The king wanted a son through his wife Madayanti . but because of Brahmana’s curse, he asked Vasishta to produce a son in his queen. Thus was born prinv Even

e Ashmaka. ( This story is in Mahabharata)

Now we have another confirmation of flesh eating tribes in the olden days.

There are 25 mantras . I have covered only 12 out of 25.

To be continued ……………………………….

Tags- curses, Rigveda, RV.7-104, Vasistha, Kalmashapada 

கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங் (Post No.10070)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,070

Date uploaded in London – 8 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரவுனிங் & கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

விக்ட்டோரியன் கால கவிஞர்களில் புகழ் பெற்றவர் ராபர்ட் ப்ரவுனிங். ROBERT BROWNING அவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு இதாலிக்கு ஓட்டம் பிடித்த எலிசபெத் ப்ரவுனிங்கும் ELIZABETH BROWNING , அவர் மீது 44 காதல் கவிதை மழை பொழிந்து  புகழ் பெற்றார் எலிசபெத் ப்ரவுனிங். இருவருடைய வாழ்க்கையையும் அவர்களது படைப்புகளையும் காண்போம் .

ராபர்ட் ப்ரவ்னிங் எழுதிய பாடல்களில் பழங்கால மக்கள் தங்கள் எண்ணங்களை பேச்சு வடிவிலோ கவிதை வடிவிலோ வெளியிடுவதைக் காணலாம். அவர் எழுதிய நீண்ட கவிதைகளில் முன் காலத்தில் வாழ்ந்த கதா பாத்திரங்கள் பேசுவதைக் காணலாம்.

ப்ரவ்னிங், லண்டனில் பிறந்தார். அவருடைய தந்தை பாங்க் ஆப் இங்கிலாந்தின் BANK OF ENGLAND  கிளார்க்/குமாஸ்தா/எழுத்தர். தாயோ ஜெர்மன் நாட்டுப் பெற்றோர்களுக்குப் பிறந்த நங்கை . நல்ல வசதி படைத்த குடும்பம். ஆகையால் வயிற்றுப பிழைப்பைப் பற்றிக் கவலைப்படாமல் கவிதை எழுதும் நல்ல பாக்கியம் பெற்றவர் ப்ரவ்னிங். குடும்பத்தில் இருந்த பெரிய நூலகத்தில் உள்ள எல்லா புஸ்தகங்களையும் படித்த ப்ரவ்னிங்கிற்கு ஷெல்லி, கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் மிகவும் பிடித்தன. தானும் கவிஞர் ஆக வேண்டும் என்ற வேட்கை பிறந்தது  21 வயதில் பாலின் PAULINE  என்ற கவிதையை இயற்றினார் .

பின்னர் நாடகங்களையும் நீண்ட கதைகள் சொல்லும் PIED PIPER OF HAMLYN ‘பைட் பைபர் ஆப் ஹாம்லின்’ போன்ற கவிதைகளையும்  படைத்தார் . பேச்சு வடிவிலுள்ள கவிதைகளை ட்ராமாடிஸ் பெர்ஸோனே , ட்ரமாட்டிக் லிரிக்ஸ் மென் அன்ட் விமன் , த ரிங் அண்ட் தி புக் முதலியவற்றில் ப டித்து ரசிக்கலாம். இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தைச் (RENAISSANCE PERIOD)  சேர்ந்த ஒரு இளவரசன் அல்லது ஓவியன் அல்லது மத போதகர் வாழ்வில் ஏற்படும் சிக்கலான தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுவார் கவிதைகளில் .

நல்லவரோ கெட்டவரோ , வாழ்க்கையில் கிடைக்கும் அரிய நேரத்தைப் பயன்படுத்தி சாதனைகள் புரியத் தவறுபவர்களை பிரௌனிங் வெறுத்தார். தோல்விகள் அடைந்தாலும் முயற்சி செய்வோருக்கு சொர்க்கத்தில் இன்பம் கிடைக்கும் என்பார் பிரௌனிங் .

எவருக்கும் தெரியாத இடங்களையோ ஆட்களையோ பற்றி அவர் கவிதைகளை வரைந்தார். அதுவும் சுருக்கமான சொற்களைப் பயன்படுத்தி விரிவான விஷயங்களை சொல்ல முனைவார் . இதனால் அவருடைய கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. இதன் காரணமாக 50 வயதுக்கு மேல்தான் அவருக்குப் புகழ் கிடைத்தது.அதற்கு முன்னமே அவருடைய மனைவி எலிசபெத்துக்குப் புகழ் வந்து சேர்ந்தது!

1846-ல் அவர் காதலி எலிசபெத்தைக் கல்யாணம் கட்டி இத்தாலிக்கு ஒடிப்போனார் . இது இருவரின் பெற்றோருக்குத் தெரியாமல் நடந்த, அந்தக் கால புகழ்பெற்ற காதல் கதை. மனைவி இறந்த பின்னரே இங்கிலாந்துக்குத் திரும்பினார்.

ராபர்ட் ப்ரவ்னிங்

பிறந்த தேதி – மே 7, 1812

இ றந்த தேதி- டிசம்பர் 12, 1889

வாழ்ந்த ஆண்டுகள் – 77

அவர் எழுதிய கவிதைகள் /நூல்கள்

1835- PARACELSUS

1840 – SORDELLO

1842- DRAMATIC LYRICS

(INCLUDING PIED PIPER OF HAMLYN)

1845- DRAMATIC ROMANCES AND LYRICS

1855 – MEN AND WOMEN

1864- DRAMATIS PERSONAE

1869-69 – THE RING AND THE BOOK

1879-80- DRAMATIC IDYLS

1889- ASOLANDO

XXX

கணவர் மீதான காதல் கவிதைகளால் புகழ் பெற்றவர்

இங்கிலாந்தின் தலை சிறந்த பெண் கவிஞர் எலிசபெத் பாரட்  ப்ரவ்னிங் ELIZABETH BARRET BROWNING என்று கருதப்பட்ட காலம் உண்டு. தற்காலத்தில் அவர் காதல் கவிதைகளினால் பிரபலமானவர் என்ற கருத்தே நிலவுகிறது . ஜமைக்கா தீவில் பெரிய தோட்டம் துரவுகளை வைத்திருந்த பணக்காரருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் மூத்தவர் எலிசபெத்.

வீட்டிலேயே கல்வி கற்றார். ஆங்கிலத்துடன் கிரேக்க , லத்தீன் மொழிகளையும் கற்றுத் தேர்ந்து நிறைய எழுதினார், படித்தார்.

பத்து வயதிலேயே நீண்ட கவிதை எழுதினார். நட்டங்களை எழுதி  அவற்றை குடும்ப நர்சரிகளில் நடிக்கவும் செய்தார். 14 வயதில் அவரது தந்தையே மாரத்தன் சண்டை THE BATTLE OF MARATHON என்ற கவிதையை வெளியிட்டார்.

15 வயதில் காச நோய் (TB) கண்டு முதுகெலும்பு அரிக்கப்பட்டது . இதனால் வாழ்நாள் முழுதும் உடலூனம் நீடித்தது. அவருடைய சகோதரர் இறந்தது,அவரிடைய மன நிலையைப் பாதித்ததால் லண்டனிலுள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஒரு அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29.

இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கவிதைகளை எட்கர் ஆலன் போ மற்றும் அவரை விட வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவ்னிங் ஆகியோர் பாராட்டினார்கள். இதன் மூலம் அவர் புகழ் அதிகரித்தது

ராபர்ட்டும் எலிசபெத்தும் சந்தித்தனர்; காதல் மலர்ந்தது; எலிசபெத்தின் தந்தையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இருவரையும் ரஹஸ்ய திருமணம் செய்துகொண்டு இத்தாலி நாட்டுக்கு குடியேறினார்கள்.அங்கு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 15 ஆண்டுகளுக்கு சுகபோக வாழ்க்கை நடத்தினர். SONNETS FROM THE PORTUGESE ‘சான்னட்ஸ் பிரம் த போர்ச்சுகீஸ்’ என்ற கவிதைத் தொகுப்பு 1850ல் அச்சிடப்பட்டது. இதில் தான் அவர் தனது காதல் கணவன் மீது எழுதிய 44 கவிதைகள் இருக்கின்றன. கருங் கூந்தல் படைத்த எலிசபெத்தை ராபர்ட் “அட என் போர்ச்சுகீஸ் அன்பே! ஆருயிரே!” என்று அழைப்பார் . அதனால்தான் கவிதைத்தொகுப்பின் பெயரில் ‘போர்ச்சுகீஸ்’ உளது.

எலிசபெத்  ப்ரவ்னிங்

பிறந்த தேதி – மார்ச் 6, 1806

இறந்த தேதி- ஜூன் 29, 1861

வாழ்ந்த ஆண்டுகள் – 55

அவர் எழுதிய கவிதைகள்

1838 – THE SERAPHIM AND OTHER POEMS

1844 – POEMS

1850- SONNETS FROM THE PORTUGESE

1851 – CASA GUIDI WINDOWS

1856- AURORA LEIGH

1860- POEMS BEFORE CONGRESS

PUBLISHED AFTER SHE DIED

162- LAST POEMS

-SUBHAM–

TAGS- ஆங்கிலக் கவிஞர், ராபர்ட் ப்ரவுனிங், கணவர் ,காதல் கவிதைகள்,  எலிசபெத் ப்ரவுனிங்,

ELIZABETH, ROBERT, BROWNING

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 2 (Post No.10069)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,069

Date uploaded in London – 8 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 2

சதகம் என்றால் நூறு என்று பொருள் நமக்கு தயா சதகத்தில் இன்று அதனுடைய  பலஸ்ருதியையும் சேர்த்து 102 ஸ்லோகங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் அருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. எடுத்துக் காட்டாக ஒரே ஒரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

தயா சதகத்தில் 91வது ஸ்லோகம் இது:-

ஸ்மரணம் ப்ரணாமகரணம் ததாமிதா, கதனம் ச ஜாதுசிதனங்கவைரிண: !

பரமம் பவாதிர்ஹரமன்ப தேஹினாம், த்வதயே கதிஸ்தவ தயே கரியஸி ||

ஜாதுசித் – எப்போதோ ஒரு கணம், அனங்கவைரிண: ஸ்மரணம் – சிவனுடைய நினைவு, ப்ரணாம் கரணம் – சிவனுடைய வணக்கம், ததா அபிதாகஹனம் -சிவனுடைய பேரைச் சொல்வது – ஆகிய இவை அயே அம்ப – ஏ தாயே!, த்வத் – உன் காரணத்தால், தேஹினாம் – மனிதருக்கு, பரமம் – மேலான, பவ ஆர்த்தி ஹரம் – பிறவிக் கஷ்டத்தைத் தவிர்ப்பதாக ஆகின்றன. ஹே தயே – ஹே, சிவ தயா தேவியே! த்வ – உன்னுடைய, கதி: – போக்கே, கரியஸி மேலானது

ஒரு முறை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை அலங்கரித்து அவர் வாழ்ந்த வீதி வழியே சென்ற ஊர்வலத்தில் இருந்தவர்கள் அவரை அவமதிக்கும் விதத்தில் அவர் வீட்டில் நிற்காமல் அவர் வீட்டை வேகமாகக் கடந்து சென்றனர். ஆனால் அடுத்த வீட்டிற்குச் சென்ற ஊர்வலத்தினர் கிருஷ்ணரின் படத்தைக் காணாமல் திகைத்தனர். அது ஐயாவாளின் வீட்டில் இருந்தது. அவர் தாயார் பாவத்தில் இருந்து, டோலா நவரத்னமாலிகா என்ற துதியை இயற்றிப் பாடினார்.

ஒரு முறை வேஷதாரியாக வந்து கோவிந்தசாமி என்பவர் அவரை அவமதித்தார். அவரைக் காவேரிக் கரையில் இறைவன் சொப்பனத்தில் விரட்டவே, அவர் மனம் திருந்தி அவரை வணங்கிப் போற்றி அவரது பக்தராகவே ஆனார்.

ஒரு சமயம் திருட்டுக் கொள்ளைக்காரர்களுக்காக அவர் பஜனை செய்ய அவர்கள் திருடிய நவரத்னக் குவியலை அவர்கள் ஐயாவாளிடம் கொடுத்துச் சராணகதி அடைந்தனர்.  அவற்றை மஹாலிங்க மூர்த்திக்கு நாகாபரணமாகச் செய்து அணிவித்தார்.

இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் எங்கும் பேசப்படவே அவர் புகழ் பரவியது.

தனது வாழ்நாளில் அவர் சம்ஸ்கிருதத்தில் ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். காவேரியின் எல்லையற்ற மஹிமையை அவர் அருமையாக விவரித்துள்ளார்.

“காவேரி கங்கையை விடப் புனிதமானது. காவேரி திருமாலின் தலை, இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் பெருமை பெற்று விளங்குகிறாள். மைசூர் ஸ்ரீரங்கபட்டணம், ஸ்ரீரங்கம்,  கொள்ளிடக்கரை அரங்கம் எனற மூன்று அரங்கங்களும் காவேரி நதியைப் புனிதமாக்குகின்றன. காவேரி நீரானது அன்பையும், அறிவையும், அருளையும் பெருக்குகின்றது. உலகில் உள்ளோர் தொடர்ந்து செய்யும் எல்லா பாவங்களையும் காவேரியில் ஸ்நானம் செய்த ஒரு நொடிப்பொழுதில் இறைவன் அருளே காவேரியாக இருந்து நீக்கி விடுகிறது. என்று இப்படி அவர் காவேரியின் மஹிமையைப் பாடிப் போற்றுகிறார்.

ஒரு சமயம் திருவிசைநல்லூரும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும் மழையின்றி பெரிதும் வறண்டிருந்த போது மக்கள் நீரின்றி வருந்தினர். உடனே ஐயாவாள் திருவிசைநல்லூரில் எழுந்தருளியிருக்கும் கர்கடேஸ்வர மீது குளீராஷ்டகம் என்ற ஸ்துதியை இயற்றிப் பாட மழை கொட்டோ கொட்டென்று பெய்து அனைவரையும் மகிழச் செய்தது.

ஐயாவாளின் மனைவி அவருக்கு முன்னமேயே இறைவன் திருவடி சேர்ந்தார்.

தனது 85ஆம் வயதில் ஒரு நாள் தனது இறுதிக் காலம் நெருங்குவதை தனது சீடர்களுக்குக் குறிப்பால் உணர்த்தினார் ஐயாவாள்.

ஒருநாள் வழக்கம் போல மஹாலிங்க ஸ்வாமியை வழிபடச் சென்ற ஐயாவாள் சந்நிதியில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யும் போது மறைந்து பகவானுடன் ஐக்கியமானார். இறைவனுடன் இப்படி அவர் ஐக்கியமானதைக் கண்ட உலகம் வியந்து பிரமித்தது.

ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மடம் கங்காவதரண மஹோத்ஸவத்தை பத்து நாள் உற்சவமாக ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறது. கார்த்திகை மாதம் அவரது இல்லத்தில் அமாவாசை தினத்தை ஒட்டி பெருந்திரளான பக்தர்கள் குழுமுவது வழக்கம்.

வடமொழியில் வல்லவரான ஐயாவாளின் முக்கியமான நூல்களுள் ஆக்யாசஷ்டி, சிவன் மீது பாடப்படும் தயா சதகம், மாத்ருபூத சதகம், ஸ்துதி பத்ததி, சிவ பக்தி கல்பலதிகா, சிவ பக்த லக்ஷணம், தாராவலீ ஸ்தோத்ரம், ஆர்த்திஹர ஸ்தோத்ரம், குளீ ராஷ்டகம், ஜம்புநாதாஷ்டகம், தோஷ பரிஹாராஷ்டகம், க்ருஷ்ண த்வாதச மஞ்சரி, அச்சுதாஷ்டகம், டோலா நவரத்ன மாலிகா, நாமாம்ருத ரஸாயனம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். இவை அனைத்தையும் அன்பர்கள் https://www.sriayyaval.org/works.html என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் – டவுன்லோட் – செய்து கொள்ளலாம். அவர் இயற்றிய பகவன் நாம பூஷணம் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

காவேரி தீர மஹான்களில் பெரிதும் போற்றப்பட்ட மஹான்களில் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் மிக உயர்ந்த உன்னத ஸ்தானத்தைப் பெற்றிருக்கும் மஹான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! நன்றி, வணக்கம்.

                        ***                 

முற்றும்

Tags- தயா சதகம், ஸ்ரீதர வெங்கடேச, ஐயாவாள், சிவ பக்தி,

நவரத்ன மாலிகா, கோவிந்தசாமி

LONDON CALLING (GNANAMAYAM) 6-9-2021(Post No.10068)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,068

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

6 -9– 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  இறை வணக்கம்

சுந்தரி சாத்தப்பன் சிங்கப்பூர்

Talk by SITARAMAN SUBRAMANIAN, MUMBAI- 20 mts

தலைப்பு: புகழ்க் குடை – கவிஞர் திருலோக சீதாராம் – ஓர் அறிமுகம்

சுப்ரமணியன் சீதாராம் – ஓர் அறிமுகம்

சுப்ரமணியன் சீதாராம் தமிழ்க் கவிஞர் திருலோக சீதாராம் (1917-1973) – ராஜாமணி  தம்பதிகளின் 7 மக்களில் 5 வதாகப் பிறந்தவர்.

தந்தை திருலோகம் மறைந்த பொழுது 17 ஆண்டுகளே நிரம்பி இருந்தாலும், தந்தையுடன் அவரின் இறுதி மூன்று ஆண்டுகள் உடனிருந்து அவருடன் பயணங்கள் சென்று இலக்கிய சொற்பொழிவுகள் கேட்பது, எழுத்தாளர்கள் சந்திப்பு என்று பயிற்சி பெற்றவர். திருலோகத்தின் எழுத்துக்கள் அனைத்தையும் பயின்றவர். கவிஞர் 1973ல் மறைந்தவுடன், தன் கல்லூரி படிப்பை தொடராமல் அவர் நடத்தி வந்த “கவிஞர் அச்சகம்” என்ற அச்சகத்தையும் “சிவாஜி” மாத இதழையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 1977ல் வங்கிப் பணியில் சேர்ந்து 2016 இறுதி வரை பணி புரிந்தார். இந்தியாவில் 30 ஆண்டுகளும் துபாயில் 9 ஆண்டுகளும் வங்கிப் பணியில் இருந்தார். வங்கிப் பணியின் பல துறைகளிலும் பணி செய்திருந்தாலும், ‘கருவூலம் மற்றும் இடர் மேலாண்மை’ துறைகளில் (Treasury and Risk Management) வல்லுநராக விளங்கினார். தற்பொழுது இவ்விரு துறைகளில் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

திருலோகத்தின் கவிதைகளை சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என்.ராமச்சந்திரன் அவர்களுடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் நூலாக 2014ல் வெளிக்கொணர்வதில் பங்காற்றினார். திருலோகத்தின் வாழ்க்கையை ஆவணப் படமாக தயாரித்து 2016ல் வெளியிட்டார். திருலோகத்தின் நூற்றாண்டு விழாவை சென்னையில் ஏப்ரல் 1, 2017 அன்று ஏற்பாடு செய்து நடத்தினார். தற்பொழுது லண்டனில் இருந்து பரதநாட்டிய கலைஞர் டாக்டர் சாமுண்டீஸ்வரி குப்புஸ்வாமி தயாரித்து வரும் “குருவிக்கூடு” என்ற திருலோகத்தின் கவிதை நாடகத்தை நாட்டிய நாடகப்  படமாக உருவாக்கும்  முயற்சியில் பங்களிப்பு செய்து வருகிறார்.

DOCUMENTARY ON SRI TRILOKA SITARAM

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU Mr.S NAGARAJAN ON “SAINT SRIDHARA AYYAVAL”- 15 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -10 mts

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXXXXXXXXXXXXXXX

BHARATI CENTENARY COMMEMORATION TALKS AND SONGS

SONG BY MR YOGESWARAN SONG FROM GERMANY

NEW POEMS:

DR A.NARAYANAN POEMS ON BHARATI READ BY RANI  SRINIVASAN, LONDON

TALKS BY

பாரதி போற்றிய காளி

சிறப்புரை முனைவர் திருமதி M.S

ஶ்ரீலக்ஷ்மி அவர்கள்

***

Group song – Om Shakti, Om Shakti

Talk by SRIDHARA BHATTAR,SYDNEY, AUSTRALIA

ஶ்ரீதரபட்டர், சிட்னி, ஆஸ்திரேலியா

‘பாரதியும் கண்ணனும்’

***

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags – broadcast692021

LONDON CALLING (THAMIL MUZAKKAM) 5-9-2021(Post No.10067)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,067

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

5-9-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –  MISS SUBHASHREE AND MISS SUBHA HARI, Australia

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  Ganesh Shrine in Thiruvalanchuzi in Tamil Nadu– 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND – MISS SHREYA SRINIVASAN AND MR SRINIVASAN  10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MISS LAYASHREE KALYANASUNDARAM

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY London Swaminathan

–25 MINUTES

Talk by Sri Thirukkudal Mukuntharajan on Life Story of Alvars (Kulasekhara alvar)

XXXX

SPECIAL PROGRAMME -MAHA KAVI BHARATI’S 100th ANNIVERSARY

டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், மலேசியா

தலைப்பு – பாரதியின் பக்தி

Talk by Tiruchi Mr K Ganesan on Bharati

Talk by Mr மஹாதேவ ஐயர் ஜயராம சர்மா ஆஸ்திரேலியா

தலைப்பு

*எனது பார்வையில் பாரதியார்*

XXXX

பாரதி பாடல் வழங்குபவர்

திருமதி ஜனனி ஐயர், ஆஸ்திரேலியா

Mrs Janani Iyer, Australia

XXXX

BHARATI SONGS BY OTHERS (Suseela, Ilford, London; Master Kashyap, Dubai)

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast592021,

பாரதி மீது (நாராயணன்) கவிதைகள் (Post No.10066)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,066

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டன் ஞானமயம் ஒலி பரப்பு கொண்டாடிய பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் லண்டன் ராணி சீனிவாசன் வாசித்த லண்டன் நாராயணன் எழுதிய பாரதி கவிதைகள் ; (தேதி 6-9-2021)

பாரதிரும் பாரதி

தேன் மதுரத் தமிழில்

தெளிவானக் கவிதையில்

தேரோட்டிய கவிஞன் பாரதி பாரத

தேசத்தின் விடுதலை இயக்கத்தில்

தேயாத புகழ் பெற்ற சாரதி !

 வேதிய  குலத்தோ னாயினும்

சாதியெனும் பிரிவில் சரியாது

சந்தனம் பூசி அறவணைத்தானோ

அந்தண ரல்லாரையும்  சாதி

இரண்டொழிய  வேறில்லையென்று

வறுமை இவன் வாழ்வில் அதிக

உரிமை கொண்டாடினும் விலகாதோ

நேர்மை யெனும் இவன் போர்வை

போறாமையிலும் பொறுமை நகையாக

எளிமையிலும் என்றும் இன்புற்றான்

கவிதையெனும் கடலில் கப்பலோட்டிக் கரை

கண்டானோ பக்தி புரட்சிக்விதை நாட்டுப்பற்று

ஆன்மீகமெனும் துறைகளாகக் காவியங்ள் படைத்துக்

கலங்கரை விளக்காக ஏற்றி வைத்த ஈடில்லாக் கவி

கலங்காமல் கலக்கினானோ நாடாண்ட அன்னியனை!

எழுத்தென்னும்  ஏவுகணையை கவிதை

எனும் வில்லில் பொருத்தி  வைத்த இலக்கோ

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்

என்றுமடியுமெங்கள் அடிமையில் மோகம்

ஐய்யோ! தாகம் தீரா மரணமோ இக்கவிக்கு

வந்துதித்து வளர்ந்த  நாடோ பரதேசியாதிக்கமாக

வறுமையே வாழ்க்கை வாக்கே அவன் செல்வமாக

வருந்தியதோ அன்னியனாதிக்கமும் சமூகக்கேடுமாக

வாழிய பாரதம் வாழிய சுதந்திரமென வாழ்ந்த தமிழன்

வீடடைந்தானோ விடுதலை வேட்கையிலே

நாராயணன்,

(Dr A.Narayanan, London)

பாரதிரும் = பார் + அதிரும்

XXXX

பாரதிக்கோரஞ்சலி

தீக்குள் விரலை விட்டுக் கரி எடுத்துப்

பாரதிரும் கவிதை தீட்டியோனே பாரதி

போருணர்ச்சிப் பொழிவ தவன் மொழி

சமூகக் கூச்சலே அவன் கவிதையின்

பேரிரைச்சலாய் சாதி இரண்டொழிய

வேறில்லையெனப் பறைச் சாற்றிக்

கோத்திரம் கேட்டாலாத் திரமடைந்து

முப்புரி நூலோ மூவர்ணத் துரிமை

யென சரித்திரம் படைத்தோனுக்கு

தரித்திரமே உதாரமென வறுமைக்கு

வருமானம் புலவன் வறுமையே என

வருத்தமடையா இவனே புலவர்களில்

புரவலன், ஐய்யோ! என்னே!கொடுமை

காலனின் கணிசம் இவன்

கொண்ட ஆயுளிலும் வறுமை!

நாராயணன்

(DR A. NARAYANAN, LONDON)

Xxx

Other Poems written by Dr A Narayanan

உதிரும் இலைகள்

வீசிய தென்றலில் விழுமோ இலைகள்

பசுமையோ பழுத்ததோ வெனத்  தருவோ

உணரா இலையி னிழப்பை காற்றோ

அறியா இலையின் நிலையை

உடைமையில் உரிமை இலைக் கில்லை

கடமையில் பார பட்சம் காற்றுக் கில்லைப்

போன்றோ ஆத்மா உடலுக்கும் உயிருக்கும்

ஒப்பந்தம் முடிய ஒண்டுமோ வெங்கோ கண்டு

கொள்ளாது துய்த்தது மரணவாய் முதியோனோ

இளையோனாக இருப்பதுமில் லாததும்

இயற்கையை இறைவ னியக்கும் வழி

நாராயணன்

xxxx

                           அறுபடும் அறம்

அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப

அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது

வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ

வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது

வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ 

வானவரும் வையகத்தோரு மென்றும் வாழ்த்துவர்

நிறைவான செல்வன் பறை சாற்றிச் செய்யுமறம்

தரை மட்ட நிலையில் வளரும் புல்லாகும்

குறை செல்வமுள்ளோன் மறைவாய் செய்யுமறம்

உறைவிடமோ இறைவனின் பாதமே

நாராயணன் 

XXX

  மாலனோ மாயனோ

ஒன்றோ பலவோ

ஒன்றினின்று பலவோ

பலகூடி ஒன்றோ

படைப்பில் பலவும்

ஒன்றுமாய் நின்று

மாயையில் மக்களை

மேய்ப்பவன் மாலனே

நாராயணன்

-subham–

tags –  பாரதி , நாராயணன் கவிதைகள், 

DUMB CAN SPEAK, LAME CAN CLIMB A HILL – FAMOUS SLOKA IN RIG VEDA!(Post No.10065)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,065

Date uploaded in London – 7 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There is a famous sloka in Sanskrit which is known to all Krishna devotees. But not many people know that it is based on a mantra in the Rigveda, oldest book in the world. It is amazing to see all the Bhakti verses have their origin in the Rigveda. Many scholars have written that Bhakti movement was a later development in Hinduism. It is not correct. Most of the famous lines found in Tamil Tevaram and Divya Prabandham are in the Rigveda. Tamil saint Tirumoolar used the cow symbolism found in the Rigveda. Sangam Tamil poot Mamoolanar used the Sky-Boat- Sun symbolism in Akananuru that is found in the Rigveda. I am pretty sure that we may see all the lines in Meera Bhajan or earlier Jeya deva Ashtapathis and Purandaradasa’s Kritis/compositions.

Tamils rightly called all the Bhakti verses as (Tiru) Marai, meaning Vedas. And the saints themselves say that they repeat what is found in the Vedas. Great Tamil saint Tiru Gnana Sambandar quotes Rigveda very often (rukku  in Tamil) .Nammalvar, greatest of the Tamil Vaishnavite saints, has the epithet ‘Maran who did Veda in Tamil’( வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்).

In the Vedas the devotional lines are attributed to Indra, Agni, Asvins instead of Shiva and Vishnu. For a Hindu all are same, only the names are different. Throughout the Vedas we see the same attributes are given to different gods. We see the same in all Sahsranamas (1008 holy names) attributed to different Gods in modern Sanskrit.

Bhagavad-Gita also has Bhakti Yoga in addition to Gnana and Karma Yogas.

Here is the oft quoted Sanskrit verse :–

Mookam Karoti Vachalam

Pangum Langhayate Girim

Yatkripa Tamaham Vande

Paramananda Madhavam

DIVINE GRACE OF KRISHNA can make a dumb man eloquent and a lame man climb mountains!

मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं ।

यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ॥

Another translation of the same verse:-

Muukam Karoti Vaacaalam Panggum Langghayate Girim |

Yat-Krpaa Tamaham Vande Param-Aananda Maadhavam ||

(I salute Lord Madhava by whose grace the dumb can become eloquent and the lame can cross over mountains).

In the Rig Veda hymn 112 in the first Mandala we see

RV.1-112-8

Mighty ones with what powers you gave Pravraj aid what time you made the BLIND AND LAME TO SEE AND WALK

This is verse where the seer Kutsa Angiras ives a long list of miracles done by the Twins ‘Asvins’.

A rig Vedic poet says

I saw it, I saw it, I saw Indra’s chariot with my own eyes in front of me.

This is echoed by Appar in Tevaram and Bhoothathalvar and Nammalvar in Divya Prabandham.

Appar says I saw his foot(prints). That is Lord Shiva’s foot.

Boothathalvar says I saw his body, his hands and the Light Emitting  Sacred Wheel in his hand.

Nammalvar says I saw I saw I saw, I saw the sweetest scene by my own eyes. Comrades! come and join me in praising Him.

Mooka Kavi and Kumaraguruparar are some examples who composed verses after getting cured of their dumbness.

The Rig Vedic seers address Gods as dear friends and they always call their companions ‘ Comrades.’ So the Alvars and Saivite Nayanmars juse the same expressions that were found in the oldest book.

Vedas praise all gods as Bright Lights and equal to Sun, that is also found in Tamil verses.

(I have written this matter in Tamil sometime ago; I give below the relevant verses n Taml)

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்

யத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

 பொருள்

பேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.

இதற்கான மூலம்  இந்த மந்திரத்தில் (RV.1-112-8) வருகிறது

முடவனான பராவிரஜனை நடக்கச் செய்தீர்கள், குருடனான ரிஜ்ராகவனைக் கண் பார்வை பெறச் செய்தீர்கள்,சப்பாணியான சுரோணனை நகரச் செய்தீர்கள் என்று குத்ச ஆங்கீரசன் அஸ்வினி தேவர்களைப் புகழ்கிறார்.RV 1-112-8

xxxx

கண்டேன் அவர் திருப்பாதம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

—–அப்பர் தேவாரம்

xxx

கண்டோம் கண்டோம்

கண்டோம் கண்டோம் கண்டோம்

      கண்ணுக்கு இனியன கண்டோம்

தொண்டீர் எல்லீரும் வாரீர்

      தொழுது தொழுது நின்று ஆர்த்தும்

வண்டு ஆர் தண் அம் துழாயான்

      மாதவன் பூதங்கள் மண்மேல்

பண் தான் பாடி நின்று ஆடி

      பரந்து திரிகின்றனவே    –நம்மாழ்வார் -திருவாய்மொழி, வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்

xxx

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்

கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன்

உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்

மறு நோய் செறுவான் வலி    — பூதத்தாழ்வார்        (67)

ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 2 (Post.9654)

http://swamiindology.blogspot.com ›

  1.  

27 May 2021 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்.

Tagged with Mukam karoti vachalam – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › mukam-karoti-vachal…

  1.  

23 Feb 2013 — Mookam karoti vachalam, Pangum langhayate girim. Yat krupa tamham vande, Paramanand Madhavam. (I salute Lord Madhava by whose grace the dumb …

–subham–

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 1 (Post No.10064)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,064

Date uploaded in London – 7 September   2021        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 6-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

ஸ்ரோதர வெங்கடேசம் ஸ்மராம்யஹம் ஸ்ரோதர வெங்கடேசம்!

சிவசிந்தாநவிலோலம்,சிவகதாததிகேலம், சிவராமாஸ்ரமபாலம், சிவகைவல்யானுகூலம்!

கங்கையிற் புனிதமாய காவிரி தீரம் கண்ட மகான்கள் பலர். அவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்கிறார் திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! இவர் 1635ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். 1720 இல்  மறைந்தார்.

அற்புதமான இவர் சரித்திரம் பல அபூர்வமான நிகழ்ச்சிகளைக் கொண்டதாகும்.

தெலுங்கு பிராமணரான இவர் கர்நாடகத்தில் மைசூரில் தந்தை தாயுடன் வசித்து வந்தார். மைசூர் அரசாங்கத்தில் இவரது தந்தையார் லிங்கராயர் திவானாகப் பதவி வகித்து வந்தார். பெற்றோர்கள் காலமானவுடன் இவரை மைசூர் மஹாராஜா தன்னிடம் திவானாகப் பணி செய்ய அழைத்தார். ஆனால் இவருக்கோ அந்த ‘மன்னர் சேவகம் பிடிக்கவில்லை. மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட மைசூர் அரசர் அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவைக் கேள்விப்பட்ட ஸ்ரீதர ஐயாவாள் மன்னரின் வீரர்கள் தனது வீட்டிற்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே  தனது வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டார். யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். அனைவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள அரசனின் வீரர்கள் அவர் இல்லம் வந்த போது அங்கு எடுத்துச் செல்லும்படியாக ஒன்றுமே இல்லை. ஸ்ரீதர ஐயாவாளும் அவரது மனைவி லக்ஷ்மியும்  உஞ்சவிருத்தி ஜீவனம் செய்ய ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்ட மைசூர் மன்னர் மனம் மிக வருந்தினார். தனது செயலுக்கு மன்னிக்க வேண்டும் என்று அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அவர்களும் அரசனை மன்னித்து விட்டு மைசூரை விட்டுப் புறப்பட்டனர். தீர்த்த யாத்திரையை மேற்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் திருச்சி, ஜம்புகேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய ஸ்தலங்களை தரிசித்தார். திருச்சியில் மாத்ருபூதேஸ்வர சதகத்தைப் பாடி வழிபட்டார். ஒவ்வொரு ஸ்தலத்திலும் பாடல்களைப் பாடித் துதித்த அவர், சகாஜிராஜபுரம் என்று அழைக்கப்பட்ட திருவிசைநல்லூரை வந்து அடைந்தார். 1685ஆம் ஆண்டு முதல் 1712ம் ஆண்டு முடிய தஞ்சையை ஆண்ட இரண்டாம் ஷாஷி 45 வேத பண்டிதர்களுக்கு தானமாக அளித்ததால் இந்த ஊர் அந்தப் பெயரைப் பெற்றது. மிகவும் ரமயமான அந்த ஊர் அவரது மனதைக் கவரவே அங்கேயே தங்கலானார்.

தங்கள் ஊருக்கு வந்து தங்கியுள்ள மஹானின் மஹிமையை ஊரார் நன்கு உணர்ந்தனர். தஞ்சை அரசனான ஷாஜியை அணுகிய ஊர் மக்கள் தங்கள் ஊரில் வசிக்கும் மகானின் பெருமையைச் சொல்லி அவர் வாழ்வதற்காக ஒரு வேலி நிலத்தையும் ஒரு வீட்டையும் அளிக்குமாறு வேண்டினர். தஞ்சை அரசனும் மனமுவந்து அதை அளித்தார். ஊர் மக்கள் இதை ஸ்ரீதர ஐயாவாளிடம் சொன்னால் அவர் இதை ஏற்க மாட்டார் என்பதை அறிந்து அதைச் சொல்லாமல் அங்கேயே வசிக்குமாறு செய்தனர்.

தஞ்சையை ஆண்ட மன்னரான ஷாஜி ஸ்ரீதர ஐயாவாளைப் பெரிதும் போற்றி வணங்கியவர். ஐயாவாள் அவருக்குப் பல விதத்திலும் ஆலோசனை சொல்லுவது வழக்கம். அவரது பெருமையை உணர்த்தும் வண்ணம் அவரது வாழ்க்கை வரலாற்றை எட்டு சர்க்கம் அடங்கிய ஷாஷி ராஜ சரித்ரம் அல்லது ஷாஹேந்த்ர விலாஸம் என்ற நூலாக அவர் எழுதினார். அதில் அவர் ஷாஜியின் ராமேஸ்வர யாத்திரையைக் குறிப்பிடுகிறார். ஷாஜிக்காக அவர்  பதமணி மஞ்சரி என்ற சம்ஸ்க்ருத அகராதி நூலையும் இயற்றினார்.

தினமும் உஞ்சவிருத்தி செய்து சாப்பிடுவது அவரது வழக்கமானது. பகலில் கர்கடேஸ்வரர் தரிசனம் செய்வதும்  மாலையில் அருகில் உள்ள திருவிடைமருதூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் மஹாலிங்க ஸ்வாமியை தரிசிப்பதும் அவரது வழக்கம்.

தன்னிடம் வரும் மாணாக்கர்களுக்கு அவர் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பார். நாட்கள் கழிந்தன. சிறந்த பாகவதோத்தமராகத் திகழ்ந்த அவர் நாமசங்கீர்த்தன மஹிமையை உலகெங்கும் பரப்பினார். தவளை ஒன்று கரக், கரக், கரக் என்று போடும் சத்தத்தில் கூட ஹர ஹர ஹர என்ற நாமம் தெரிவதாக அவர் கண்டார். ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் சதாசிவ ப்ரஹ்மேந்திராள் மற்றும் போதேந்திர ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தனர். போதேந்திரர் திருவிசைநல்லூருக்கு மிக அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து நாம மஹிமை பற்றியும் இதர ஆன்மீக விஷயங்களையும் பற்றிப் பேசி அதை உரிய வகையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாயினர். செங்கோட்டை ஆவுடை அக்காள் உள்ளிட்டவர்கள் அவரிடமிருந்து நாம மஹிமையைக் கேட்டறிந்தனர். ஆவுடை அக்காள் தனது பாடல்களில் ஐயாவாளைக் குறிப்பிடுகிறார்.

ஒரு நாள் தனது தாயாருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டியிருந்த தினத்தன்று காவேரிக்கு ஸ்நானம் செய்ய அவர் சென்றார்.  அங்கே வழியில் ஒரு தாழ்ந்த குலத்தவன் பசியால் வருந்தி இரண்டு நாட்கள் ஏதும் சாப்பிடாமல் வாடி இருந்ததைக் கண்டார். அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து சிரார்த்தத்திற்காக சமைத்த உணவை அவனுக்கு அளித்து உண்ணுமாறு செய்தார். பசியாறிய அவன் திருப்தியுற்றான். ஆனால் இதைக் கண்ட ஊர் பிராமணர்கள் அவரது இல்லம் சென்று, “சிரார்த்த தினத்தன்று இப்படிச் செய்யலாமா? நீங்கள் சுத்தி செய்து கொண்டால் தான் உங்கள் வீட்டிற்குள் நாங்கள் நுழைவோம். கங்கையில் நீங்கள் ஸ்நானம் செய்ய வேண்டும்என்று கண்டிப்பாகக் கூறினர்.

அவர் இறைவனைத் துதித்து கூர்ச்சத்தைப் போட்டு மந்திரங்களைச் சொல்ல திரிமூர்த்திகளும் பிராமணர்களாக வந்தனர். அவரும் சிரார்த்தத்தை முறையாகச் செய்து முடித்தார். இதைப் பார்த்த ஊரார் அதிசயித்தனர்.

ஊர் அபவாதம் நீங்க அவர் கங்கைக்கு யாத்திரையாகக் கிளம்ப யத்தனிக்க, கங்கை அவர் முன் தோன்றி, “நான் கார்த்திகை  மாதம் அமாவாசையன்று உங்கள் இல்லத்திற்கு வருகிறேன் என்று கூறி மறைந்தாள்.

கார்த்திகை அமாவாசை தினம் வந்தது. அன்று அவர் கிணற்றின் முன் நின்று கங்காஷ்டகத்தை இயற்றிப் பாட கங்கை கிணற்றில் புகுந்தாள். கிணற்றிலிருந்து கங்கை நீர் பெருகிப் பொங்கி வீட்டை நிறைத்து வெளியில் வீதியிலும் பிரவாகமாக ஓட ஆரம்பித்தது. எல்லோரும் அவரது மஹிமையை உணர்ந்தனர்.

இன்று வரை கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அவரது இல்லத்தில் கங்கை வருவதும் பக்தர்கள் அங்கு ஸ்நானம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஒரு சமயம், தஞ்சாவூரில் அவர் இருந்த போது  ஒரு சிறு பையனைப் பாம்பு கடித்து விட்டது. அவன் இறந்து போனான். அவன் மீது கருணை கொண்ட அவர் 29 துதிப்பாடல்கள் அடங்கிய தாராவளி ஸ்துதி என்ற துதியை இயற்றிப் பாட பாம்பின் விஷம் கீழே இறங்கி கடிபட்ட பையன் உயிரைப் பெற்றான்.

இதனால் அவர் மஹிமையை உலகம் நன்கு உணர்ந்தது.

தினமும் மாலையில் மஹாலிங்க ஸ்வாமியையும் ப்ருஹத் சுந்தர குஜாம்பாளையும்  அவர் தரிசித்து வரும் நாளில் ஐப்பசி மாதம் ஒரு நாள் மழை கொட்டு கொட்டென்று கொட்ட காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஐயாவாள் வெளியே செல்ல முடியாத அளவு  மழை இருக்கவே அவர் மனம் மிக வருந்தினார். தரிசனம் முடிந்த பின்னரேயே உணவு அருந்துவது அவர் பழக்கம் என்பதால் உணவும் உண்ணாமல் அவர் தியானத்திலேயே இருந்தார். அப்போது இரவு நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கதவைத் திறந்தார். அங்கு திருவிடைமருதூர் அர்ச்சகர் கையில் பிரசாதத் தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

“நீங்கள் ஸ்வாமியை தரிசிக்காமல் உணவு உண்ணுவதில்லை என்பதை நான் அறிவேன். வீரசோழன் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் இருப்பதும் எனக்குத் தெரியும். அதிர்ஷ்டவசமாக ஒரு படகுக்காரன் என்னை இங்கு கொண்டு வந்து விட்டான். இதோ, பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் அர்ச்சகர்.

மஹாலிங்க ஸ்வாமியின் கருணையை எண்ணி அதை எடுத்து உண்ட ஐயாவாள் அர்ச்சகரை வீட்டில் இரவு நேரத்தில் படுத்து உறங்க ஒரு போர்வையைக் கொடுத்தார்.

காலையில் அர்ச்சகரைக் காணோம். நேராகக் கோவில் சென்ற ஐயாவாள் குருக்களைக் கண்டு, “ என்ன, சொல்லாமல் கிளம்பி விட்டீர்களே என்று சொல்ல அவர் திகைத்தார். “நான் வந்தால் அல்லவா சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும். நேற்று பெயத மழையில் நான் எப்படி உங்கள் இல்லத்திற்கு வர முடியும்? என்று அவர் வியப்புடன் கேட்டார்.

அர்ச்சகருடன் அவர் கர்பக்ருஹம் சென்று பார்க்கையில் அவர் அர்ச்சகருக்கு அளித்த போர்வை அங்கு இருந்தது.

இறைவனே அர்ச்சகர் உருவில் அவர் இல்லம்  எழுந்தருளியிருப்பதை அறிந்த அவர் விழிகளில் கண்ணீர் ததும்ப இறைவனின் கருணையை நினைத்து வழிபட்டார். அவர் நாவிலிருந்து தயா சதகம் என்ற அற்புத சதகம் வெளிப்பட்டது. இந்த சம்பவம் எங்கும் பரவ அவரது மஹிமை இன்னும் அதிகமாக மக்களால் உணரப்பட்டது.

                    **                 தொடரும்

Xxxxxxxxxxxx

tags- திருவிசைநல்லூர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 1,