Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பகவத்கீதை சொற்கள் Index 17; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -17
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்று வெளியான ‘ரிக் வேதத்தில் புறா ஜோதிடம், தமிழர்களின் அதிசயக் கண்டுபிடிப்பு -1’– என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதையும் படிக்கவும் .
ரிக் வேத RV.10-165 பாடலில் புறா பற்றிய ஆரூடத்தை நேற்று கண்டோம். ஆனால் முதலாவது மண்டலத்தில் உள்ள பாடல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் போல காதல் புறாக்களைக் காட்டுகிறது. புறாக்களை சமாதான தூதுவர்களாக தற்போது மேலை நாடுகள் சித்தரிக்கின்றன. இரண்டாவது உலக மஹா யுத்தம் முடிந்த 50-வது ஆண்டு விழாவினைக் கொண்டாட 1995-ல் பிரிட்டன் வெளியிட்ட இரண்டு பவுன் நாணயத்தில் கூட சமாதானப் புறா ஆலீவ் / ஒலிவ மர இலைகளுடன் பறப்பதை சித்தரித்துள்ளனர்
இந்துக்களின் பரத நாட்டிய முத்திரையில் கபோத / புறா முத்திரையும் ஒன்று.
இந்துக்களின் யோகாசனத்தில் கபோத / புறா ஆசனமும் ஒன்று .
ஆயினும் இணை பிரியா புறா ஜோடிகளை இந்தியா முதலிய நாடுகள் தபால் தலைகளாக வெளியிட்டுள்ளன. இதுவே ரிக் வேத முதலாவது மண்டல மந்திரமும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குக் காட்டுகின்றன .
இதோ முதலாவது மண்டல மந்திரம் –
இது ரிஷி சுனச்சேபன் , இந்திரனை நோக்கிச் சொல்லும் துதி
ரிக். 1-30-4
“இந்த சோமரசம் உனக்காக்கத்தான் படைக்கப்படுகிறது; தன்னுடைய மனைவியான புறவிடம் அன்புடன் நெருங்கும் ஆண் புறா போல நீயும் வருகிறாய் ; எங்கள் துதியை ஏற்றுக் கொள்வாயாக” –1-30-4
எனது உரை
பத்தாவது மண்டலத்தில் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்டோம்.
இதற்கு அடிக்குறிப்பு எழுதிய Ralph T H Griffith ரால்ப் கிரிப்பித் சொல்கிறார்- “புறாவை அபசகுனப் பறவையாக மக்கள் கருதுகின்றனர். மரண தேவனின் தூதனாகக் கருதுகின்றனர் ; இங்கிலாந்தில் வடக்கு லிங்க்கன்ஸைர் பகுதியில் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது, ‘கேள்வி பதில்’ பகுதியில் வெளியாகி இருக்கிறது. மரத்தில் உட்கார்ந்திருக்கும் புறவு வீட்டிற்குள் நுழை ந்தாலோ அல்லது ஆனந்தமாக ஆடி ஓடும் புறா திடீரென்று சாதுவாகி பேசா மடந்தையாக நின்றாலோ அது சாவுக்கு அறிகுறி” .
இது பற்றி நான் சொல்லுவது – இங்கும் கூட புறா சாகப்போகிறதா அல்லது வீட்டிற்குள் இருக்கும் ஒருவர் சாகப்போகிறாரா என்று தெளிவாக இல்லை.
மேலும் 10-165- 4 மந்திரத்தில் ஆந்தை (screeching owl ) காரணமில்லாமல் அலறுவது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இரண்டையம் இணைத்துப் பார்த்தால் ஆந்தை திடீரென்று அலறுவதும் வீட்டிற்குள் தினசரி அவுபாசனம் செய்யும் இடத்தில் திடீரென்று புறா அமர்ந்ததும் ஏதோ கெட்டது நடக்கப்போவதைத் தெளிவாகக் காட்டுகிறது; ஆந்தை அலறுவதும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் அது குரல் கொடுப்பதும், மரணத்தின் அறிகுறி என்பது தமிழர்களின் நம்பிக்கை. சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களிலும் ஆந்தை, கோட்டான், கூகை இருக்கும் இடங்கள் சுடுகாடு அல்லது பாழடைந்த இடமாகவே இருக்கிறது. புறம். 364 காண்க.
மேலும் பிராமணர்களின் அக்கிரஹாரம் மிகவும் சுத்தமான இடம். அங்கு நாயும் கோழியும் கூட நுழையாது என்கிறார் சங்கப் புலவர்- பார்ப்பனர் உருத்திரன் கண்ணனார் – காண்க பெரும். 299, இன்னாநாற்பது -3
ஆக, நாயோ கோழியோ நுழையாத இடத்தில் திடீரென்று ஆந்தையும் புறவும் வந்ததே அப சகுனமாகக் கருதப்படுகிறது. புறவினால் மட்டும் அப்படி வந்ததாகக் கூற முடியாது என்பதே என்னுரை.
முதலாவது மண்டலப் ‘பா’வை மொழிபெயர்த்த ஜம்புநாத ஐயர் , கருத்தரித்த பெட்டையிடம் வரும் புறாப் போல என்கிறார். ஒருவேளை கர்ப்பிணிப் புறவு என்பது சாயனர் உரையாக இருக்கும். இது மேலும் அன்பைக் காட்டுகிறது
xxx
தமிழர்கள் கண்ட அற்புதக் காட்சி!
சிபிச் சக்ரவர்த்தி கதையை இந்தியர்கள் எல்லோரும் அறிவர். அக்நி தேவன் புறா வடிவில் வர, அதை கழுகு வடிவில் இந்திரன் துரத்த, அந்தப்புறா சிபிச் சக்ரவர்த்தியின் மடியில் தஞ்சம புகுந்தது. அதைக் காப்பாற்ற அவன் த ன் உடலையே தருவதற்கு துலாபாரம் செய்ய முயன்று தராசுத் தட்டில் ஏறினான். அப்போது இரண்டு தேவர்களும் அவன் பெருந்தன்மையை உலகத்துக்குக் காட்டவே அவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர். இந்தக் கதை புறநானூறு, சிலப்பதிகாரம் நெடுகிலும் உளது. கண்ணகி தான் வாழ்ந்த சோழர்குடி மன்னனாக சிபியை சித்தரிக்கிறாள். அதற்கு முன் சங்க இலக்கியத்திலும் உளது. (என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காண்க – சோழர்கள் தமிழர்களா?) . இரண்டு புறாக்கள் ஒரு வேடனுக்காக தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்ட புறாக்கதையும் மஹாபாரதத்தில் உளது.)
ஆக வடக்கும் தெற்கும் – இமயம் முதல் குமரி– வரை புறாவை அன்பின் சின்னமாகவே காட்டியுள்ளன.
ஆண்புறா, வெய்யிலில் வாடிய பெண் புறாவுக்கு விசிறி வீசிய பாடல் கலித்தொகையில் பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடலில் வருகிறது:
இதைவிட அருமையான ஒரு காட்சியைப் பிராமணப் புலவன் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையில் படம் போட்டுக் காட்டுகிறார். புறவுகள் ‘கல் உண்ணும் காட்சி’ அது.
உலகம் முழுதும் பல பறவைகள் கற்களை உண்ணுவதும் அது ஜீரணத்துக்காக செய்யப்படும் நிகழ்வு என்பதும், இப்போது யூ ட்யூப்பில் You Tubeல் மலிந்து கிடக்கிறது. மகேஷ் ராஜா என்பவர் நீலகிரி காடுகளில் கல் உண்ணும் பறவையைப் படம்பிடித்துப் போட்டுள்ளார். வடக்கில் ஒரு இந்திக்காரர், இந்தி மொழி வீடியோவில், செம்மை நிற கற்களைப் பொடித்து, பரப்ப அதை புறாக்கள் ஆனந்தமாக உண்ணுவதை யூ ட்யூபில் காணலாம். ஆக இப்போது இது எல்லோரும் அறிந்த செய்தியாகிவிட்டது; ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்ப்பான் இதைப்பார்த்து அதை அப்படியே எதிர்கால சந்ததிக்கு எழுதிவைத்த அற்புதத்தைக் காணுங்கள் :-
பட்டினப்பாலை நூலை இயற்றிய பார்ப்பனன் உருத்திரங்கண்ணனாரும் குறிஞ்சிக்கலி இயற்றிய பார்ப்பனன் கபிலனும் நிறைய இயற்கை அற்புதங்களை நமக்கு அளிக்கின்றனர். பார்ப்பான் கபிலன் நமக்கு 99 மலர்களை குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் அளித்தான். குருவி, கிளி மூலம் பாரிக்கு உணவு சேகரித்து மூவேந்தர் முற்றுகையை முறியடித்தான்.’ புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று போற்றப்பட்டான்; ஜாதி வெறியை ஒழித்த முதல் தமிழனும் அவன்தான். அங்கவை , சங்கவை என்ற க்ஷத்ரிய குலப் பெண்களை தனது மகள்கள் போலாகி கருதி திருமணம் செய்வித்தான். இப்படி இரண்டு பிராஹ்மணர்கள் நமக்கு அற்புதமான செய்தியை 2000 ஆண்டுக்கு முன் எழுதிவைத்தனர்.
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கு
மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
—பட்டினப்பாலை , வரிகள் 54-58
xxxx
ஆய் தூவி அனம்என, அணிமயில் பெடை எனத்
தூதுணம் புறவு எனத் …………………………..
கலித்தொகை 56, கபிலன் பாடிய குறிஞ்சிக் கலி
தூதுணம் புறவு என்பதற்குக் கல் = தூது , உணம் = உண்ணும் என்று உரைகாரர்கள் செப்புவர்
இதை உலகிற்குப் பதிவு செய்து கொடுத்த 2 அந்தணர்க்கும் வந்தனம் சொல்லுவோம். இப்போது நிறைய You Tube வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.
ஜோடிப் புறாக்களையும் காதல் புறாக்களையும் கீழ்கண்ட பாடல்களில் காணலாம் :-
குடவாயில் கீரத்தனார் அக நானூறு பாடல் 287, 315ல் புறா பற்றிப் பேசுகிறார்.
குன்றியனார், குறுந்தொகை நூலில் பாடல் 79ல் புறாவைப் பாடுகிறார் .
மகிழ்ச்சியுடன் கொஞ்சும் இரண்டு புறாக்களை கள்ளி மரக் காய்கள் வெடித்து , ஒலி உண்டாக்கி விரட்டும் காட்சியை வெண் பூதியார் குறுந்தொகைப் பாடல் 174ல் காட்டுகிறார்; ஆக பல இடங்களில் ஜோடிப் புறாக்கள் பறப்பதை தமிழ்ப் புலவர்கள் காணத் தவறவில்லை.
முடிவுரையாக நான் சொல்லுவது புறாக்கள் மூலம் சகுனம் பார்ப்பது இல்லை. ஆனால் அசாதாரண சூழ்நிலையில் அவை வீட்டிற்குள் வந்து, அப்போது ஆந்தையும் அலறினால் மரணம் சம்பவிக்கும் என்பதே சரி ; பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை உற்பாதங்கள் வருவதற்கு முன்னரும் இப்படி பிராணிகள் அலறுகின்றன.
வாழ்க ஜோடிப் புறாக்கள் !!
from You Tube
–subham–
tags- ரிக் வேதத்தில் ,புறா ஜோதிடம், தமிழர் ,கண்டுபிடிப்பு , சிபிச் சக்ரவர்த்தி, தூதுணம் புறவு,கல் உண்ணும்,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி ராமதீர்த்தர்! – 2
ஸ்வாமி ராமதீர்த்தர் ஒரு கணித மேதை. அவரைப் பற்றி பூரண் சிங், ‘ஸ்வாமி ராமா’ (Puran singh – Swami Rama) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பூரண் சிங் ஸ்வாமி ராமதீர்த்தர் தன்னிடம் கூறியதாக எழுதிய சம்பவம் இது.
ஒரு முறை ஸ்வாமி உயர் கணிதத்தில் சில கடினமான கணக்குகளைத் தீர்வு செய்ய எடுத்துக் கொண்டார். ‘நாளை காலை சூரியன் உதிப்பதற்குள் அவற்றிற்கான தீர்வைக் காண்பேன்; இல்லையேல் என் தலையை உடலிலிருது வெட்டிக் கொள்வேன்’ என்று சபதம் பூண்ட அவர் தலையை வெட்டுவதற்காக ஒரு கூரிய கோடாரியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட சபதம் மிக மிகத் தவறானது தான்; ஆனால் இப்படிப்பட்ட கடுமையான ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டதனால் தான் தனக்கு இருக்கும் அறிவு வந்தது என்றார் அவர். நள்ளிரவிற்குள் நான்கு கணக்குகளில் மூன்றிற்கு அவர் தீர்வைக் கண்டு விட்டார். நான்காவது கணிதத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை.ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.
தான் போட்ட சபதத்திற்குத் தக, கோடாரியை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குப் போனார். அங்கு கூரிய கோடாரியைத் தன் தொண்டையில் வைத்து அறுத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோடாரி முனை கழுத்தில் பட்டு ரத்தம் வெளியேற ஆரம்பித்த தருணம்.
திடீரென்று ஆகாயத்தில் அந்தக் கணிதத்திற்கான தீர்வு எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். அதை எழுதிக் கொண்டார்.
அந்தக் கடினமான கணிதத்திற்கு அது தான் அபாரமான ஒரிஜினல் தீர்வாக அமைந்தது. அதை தனது கவர்ன்மெண்ட் காலேஜ் பேராசிரியர் முகர்ஜியிடம் காண்பித்தார். பேராசிரியர் பிரமித்துப் போனார்.
இதே போல பல முறை செய்து தான் கணிதத்தில் யாரும் பெறுதற்கரிய பெரும் நிலையை ராமதீர்த்தர் பெற்றார்.
1897ஆம் ஆண்டு. நவம்பர் மாதம். ஸ்வாமி விவேகானந்தரை சனாதன தர்ம சபாவின் சார்பில் சொற்பொழிவாற்ற லாகூருக்கு அழைத்தார் ராமதீர்த்தர். ஹாலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உடனே ஹாலை விட்டு வெளியேறி திறந்தவெளியில் அனைவரும் கேட்டுத் திருப்தியுறும் வகையில் விவேகானந்தர் பேசினார்.
அடுத்த சொற்பொழிவு வேதாந்தம் பற்றியது. ராமதீர்த்தரின் வேண்டுகோளின் பேரில் அந்தச் சொற்பொழிவை ஆற்றினார் ஸ்வாமி விவேகானந்தர். அது ஒரு சர்கஸ் மைதானத்தில் நடந்தது.
மின்னல் போன்ற பளீரென்ற சொற்பொழிவும், ஸ்வாமிஜியின் நா வன்மையும் கூட்டத்தை அப்படியே கட்டிப் போட்டது.
இந்தச் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் தான், சந்யாசியாக தான் ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் உறுதி கொண்டார் ராமதீர்த்தர். ஸ்வாமி விவேகானந்தர் போலவே அமெரிக்கா சென்று வேதாந்தத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இதன் விளைவே தான்!
ஸ்வாமிவிவேகானந்தரைலாகூரில்உள்ளதனதுவீட்டிற்குஅழைத்துச்சென்றுஅவர் ஒரு விருந்தை அளித்தார். கூடவேகுட்வின்உள்ளிட்டவரும்அந்தவிருந்தில்கலந்துகொண்டனர்,
அவர்ஸ்வாமிவிவேகானந்தருக்குஒருகடிகாரத்தைபரிசாகஅளிக்கவே, அதைஅவர்சட்டைப்பையிலேயேமாட்டியஅத்வைதத்தின் சிகரமான ஸ்வாமிஜி, “இதை, நான்இங்கேயேஅணிகிறேன்” என்றுகூறினார். உள்ளது ஒன்றே என்ற
அத்வைதத்தில் ஆழ்ந்து ஊறியதால் ராமதீர்த்தர் தன்னை எப்போதும் ராமா என்று அழைத்துக் கொண்டே பேசுவார். (நான் என்று ஒரு போதும் அவர் பேசுவதில்லை.) இதை மனதில் கொண்டு அவரது உரைகளைப் படிக்க வேண்டும்.
1902ஆம் ஆண்டு. பிப்ரவரி மாதம்.
ஸ்வாமி ராமதீர்த்தர் ஃபைஜாபாத்திற்கு (Fyzabad) விஜயம் செய்தார். அங்கு சனாதன தர்ம சபா சார்பில் அவர் ஒரு சொற்பொழிவாற்றினார். இந்த சபை சாந்தி பிரகாஷ் என்ற சூரஜ் லால் பாண்டே என்பவரால் நிறுவப்பட்ட சபா.
இந்த சபை ஹிந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் பங்கு கொள்ளக் கூடிய ஒரு பொதுவான சபா. தங்கள் தங்கள் மதக் கொள்கைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சபையாக இது அமைந்திருந்தது.
ஸ்வாமி ராமதீர்த்தரின் ஆணைப்படி அவரது சிஷ்யரான நாராயணா, ‘ஆத்மா’ என்ற பொருளில் பேசினார். சொற்பொழிவு முடிந்த பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த மௌல்வி முகம்மது முர்டாஸா அலி கான் (Maulvi Mohammed Murtaza Ali Khan) பல ஆக்ஷேபணைகளை எழுப்பினார்.
ஸ்வாமி ராமதீர்த்தர் மறுநாள் வந்து ஆக்ஷேபணைகளுக்கு அவர் சமாதானங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
மறுநாள் மௌல்வி குறித்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார்.
வாதம் புரிவதற்காக அல்ல; வம்புச் சண்டைக்காக வந்தார்.
ஸ்வாமி ராமதீர்த்தரின் எதிரில் நேருக்கு நேர் அவர் உடகார்ந்தார்.
இருவரின் கண்களும் சந்தித்தன.
அவ்வளவு தான்! மௌல்வி தனது ஆக்ஷேபணைகள் அனைத்தையும் மறந்தார். அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.
கைகளைக் கூப்பியவாறே அவர் ஸ்வாமி ராமதீர்த்தரை நோக்கி, “ஐயனே! மனித்து விடுங்கள் என்னை; உங்களை யார் என்று தெரியாமல் போய் விட்டது! என்னை மன்னித்து விடுங்கள்” என்றார்.
அன்று முதல் அந்த மௌல்வி இனம், ஜாதி கடந்த இறையன்புக்கு ஆளானார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Latest research and study of the Rig Veda (RV) , the oldest book in the world, show that the Vedic Hindus had advanced knowledge of Sun. Though the 30 + foreigners who translated Four Vedas made passing remarks about Hindu Knowledge on Sun, they added words like ‘possibly’, ‘probably’ and sowed seeds of doubts in the readers’ mind. Now we are able to confirm the Hindu knowledge in the following areas
Following 6 points are confirmed now:-
1.The Rishis/seers told us Sun God has a chariot with one wheel that was drawn by Seven Horses. Now we all know that they meant the Rain Bow colours VIBGYOR (violet,indigo,blue, geen, yellow, orange and red. Sun light passed through a prism shows it.
2. Throughout the Ten Mandalas/books of the RV, they report a miracle of Atri Maharishi. In fact he was praised for calculating a total eclipse and its duration. A total eclipse can last for a maximum of seven minutes, which is very rare. One of the solar eclipses was well calculated by Atri and his disciples wondered when he finished reciting a Rig Vedic mantra the sun came out. He was the only one knew the occurrence of eclipse on that day. Well calculated the duration of the Solar Eclipse he recited a mantra for few minutes and the Sun came out of shadow. This is reported as a ‘miracle’ in the Veda.
Krishna also used this trick to destroy Jayadratha who did not know that it was a Solar eclipse day. He thought that the sun was set, and the bugle was sounded marking the end of the battle for that day. In those days they fought Dharma Yuddha. So, after sun set they shook hands and walked home shoulder to shoulder. But Krishna knowing that it was only an eclipse and so urged Arjuna to shoot down Jayadratha, when the eclipsed sun was released. A solar eclipse can happen only on a new moon/Amavasya day. During Mahabharata day it was not a continuous 18 day war. Alternate days were the fighting days.
3.Third wonder is they knew sun is a star. Even people like Griffith who translated Rig Veda reported verbatim the mantra where it was said ‘SUN IS A STAR’. In those days, I mean 120 years ago, they did not even know that there were millions of Suns. But Bhagavad Gita and other hymns talk about Koti Surya (Million Suns). The Viswa Roopa Darshan sloka in the Bhagavad Gita says ‘Divi Surya Sahsrasya’ (1000 suns brightness)
4. All Sanskrit proverbs, slokas and astrological hymns say that Surya/Sun was the Deity for Arogya/ health.
There are umpteen remarks to show this in the oldest book, Rig Veda. They knew human beings need Vitamin D from Sun and so they prescribed lot of rituals under the Sun. Though they did not mention ‘Vitamin D’ they knew sun light gives Vitamin D.
5. Sun Spots were not in the 150 year old science books. But RV talks about Sun Spots several thousand years ago. Foreign translators used ‘Spots on Sun Bird’ or a Bull. They said that the bird and bull mentioned here actually Sun. The hymns said Bird/Bull with Spots. In reality they knew the Sun Spots. Now we know that when the sun spots are big in number, communication on earth is affected because of solar flare ups.
6.Jaundice Treatment :– Treatment for jaundice is both in the Rig Veda and Atharva Veda. The Rishis/ seers talk about treatment with Red Light. Actually jaundice in new born babies is treated with red light. It is called photo therapy. Read below the science behind it:
What is Jaundice?
Jaundice is a common, temporary. and usually harmless condition in newborn infants. It affects both full-term and premature babies, usually appearing during the first week of the baby’s life.
Jaundice occurs when there is a build-up of a naturally occurring substance in the blood called bilirubin . Bilirubin is an orange/red pigment in the blood. Bilirubin is produced by the normal breakdown of red blood cells. It is normal for everyone to have low levels of bilirubin in their blood. As bilirubin begins to build up, it deposits on the fatty tissue under the skin causing the baby’s skin and whites of the baby’s eyes to appear yellow.
What is Phototherapy?
Some “normal” jaundice will disappear within a week or two without treatment. Other babies will require treatment because of the severity of the jaundice, the cause of the jaundice, or how old the baby is when jaundice appears.
Phototherapy (light treatment) is the process of using light to eliminate bilirubin in the blood. Your baby’s skin and blood absorb these light waves. These light waves are absorbed by your baby’s skin and blood and change bilirubin into products, which can pass through their system.
When there were no electric lights 5000 years ago Hindus used fire and sun light.
What is the BiliBlanket?
Your doctor may prescribe the biliblanket as an alternative and/or additional treatment for you child’s jaundice. This system uses fiber optics and represents advanced technology in phototherapy treatment given in the hospital or at home.
The biliblanket provides the highest level of therapeutic light available to treat your baby. This form of light is also found in sunlight. The strength of light form the biliblanket is about the same, as you would get in the shade on a sunny day, yet is safer because the biliblanket filters out potentially harmful ultraviolet and infrared energy
8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam adade’ …
4 Jan 2020 — TWO RARE VEDIC MANTRAS TO CURE SICKNESS– Part 1(Post No.7418) · Research article Written by London Swaminathan · Uploaded in London on – 4 JANUARY …
5 Jan 2020 — Acupressure in Rig Veda HYDROTHERAPY, ACUPRESSURE, MONSOON IN THE RIG VEDA; TWO RARE VEDIC MANTRAS-PART 2 (Post No.7422) Research article …
7 Oct 2021 — Far seeing mother of the eyes”. Greek drama is full of allusions to the link between the eye and the sun. Aeschylus in Prometheus Bound refers …
–subham—
TAGS– six discoveries, in Rig Veda, Sun spots, Photo therapy, sun , a star,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தில் ஏராளமான ஆராய்ச்சி விஷயங்கள் உள்ளன. அதுவும் உலகிலேயே பழமையான நூல் என்பதால் அவற்றின் முக்கியம் அதிகரிக்கிறது. ரிக் வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கத் தமிழ் இலக்கியம் வந்தது. சங்கத் தமிழ் 18 நூல்களிலும் புறாக்கள் பற்றி நிறைய வியப்பான செய்திகள் உள்ளன. ஆண் புறா, வெய்யிலில் வாடும் பெண் புறாவுக்கு சிறகால் விசிறி வீசுவதும், புறாக்கள் ஜீரணத்துக்காக கற்களை சாப்பிடுவதும் சங்கத் தமிழ் புலவர்கள் நேரில் கண்ட காட்சி.
ஆனால் ரிக் வேதத்தில் இரண்டு காட்சிகள் 2 மண்டலங்களில் வியப்பான செய்தியைத் தருகின்றன. அவற்றைக் கண்டுவிட்டு தமிழ் நூல்களை ஆராய்வோம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 165ஆவது துதியைக் (RV. 10-165) காண்போம். இந்தத் துதியை இயற்றியவர் பெயரும் ‘புறா’ ! அதாவது ‘கபோதன்’ அவர் அம்மா பெயர் மரண தேவதை. புறாவுக்கு சம்ஸ்க்ருதத்தில் கபோத என்று பெயர் ; மரண தேவதைக்கு நிர்ருதி என்று பெயர்.
முதல் ஆராய்ச்சி
தமிழ் இலக்கியத்தில் காக்கை பாடினியார் , தேய் புரிப் பழங்கயிற்றனார் , செம்புலப் பெயல் நீரார் என்ற பல விநோதப் பெயர்களைக் காணலாம் . உலகில் இந்துக்களைத் தவிர வேறு எவரும் இந்த உத்தியை – டெக்னீக்கை- கையாளவில்லை.
ரிக் வேதத்தை, உலக மஹா ஜீனியஸ் – மாமேதை- காக்கா கறுப்பு–என்று அழைக்கப்படும் வேத வியாசர் , நமக்கு தொகுத்துக் கொடுத்தார். அவர் பின்பற்றிய டெக்னீக் இது. அவர் பெயர் ‘தீவுக் கறுப்பன்’ MR BLACK ISLANDER . அவர் பெயரிலேயே இந்த வினோதம் புகுந்துவிட்டது. அவர் யாதவ கிருஷ்ணன், திரவுபதி முதலியோர் அட்டக் கறுப்பு UTTER BLACK ; அதனால் அவர்கள் பெயரே கறுப்பன் (கிருஷ்ணன் MR BLACK), கிருஷ்ணா/ திரவுபதி (MISS BLACK கருப்பாயி) என்று வைத்துக்கொண்டனர். வியாசரும் கறுப்பு . இதனால் அவரை கிருஷ்ண த்வைபாயனர் MR BLACK ISLANDER என்று அழைப்பர். அதாவது கங்கை ஆற்றுத் தீவில் வசிக்கும் கறுப்பன் . கின்னஸ் புஸ்தத்தில் குறிப்பிட இடமில்லாத சாதனை புரிந்தவர் அவர். உலகிலேயே அதிகமாக GREAEST WRITER எழுதியவர் GREATEST COMPILER; தொகுத்தவர்.
ஆகையால் புறா ஜோதிடக் கவிதையில் வரும் ‘புறா’ என்ற பெயரை புலவர் (MR DOVE OR MR PIGEON) பெயராகவும் புறாவினால் மரணம் வரும் மரணதேவதை (நிர்ருதி) பெயரை புலவரின் அம்மா (MRS DEATH) பெயராகவும் சொல்லிவிடுகிறார் வியாசர்.
அந்த உலக மஹா மேதை செய்ததை சங்கத் தமிழ் நூலைத் தொகுத்தோரும் ‘கள்ளக் காப்பி’ (CARBON COPY ) அடித்தனர். அதாவது ஒரு புலவர் வினோதமான சொற்றோடரைக் கையாண்டாலோ அல்லது அவர் பெயர் தெரியாவிட்டாலோ அவர் பாட்டில் உள்ள சொல்லை புலவர் பெயராகக் கூறி விடுவார்கள். இப்படிப் பிறந்ததுதான் காக்கைபாடினியார் முதலிய பெயர்கள். இது போல முதல் முதலில் செய்தவர் வியாசர்.
சங்க இலக்கியத்தில் சுமார் 20 புலவர்களும், ரிக் வேதத்தில் சுமார் 20 பெயர்களும் இப்படி அமைந்த விநோதப் பெயர்கள் ஆகும்
xxxx
இப்போது சப்ஜெக்டு SUBJECT க்கு வருகிறேன்
புறா பற்றி RV.10-165 ல் மிஸ்டர் புறா , அதாவது புலவர் திரு. புறவு MR DOVE என்ன சொன்னார் என்று பார்ப்போம்.
ஸாரி , ஸாரி SORRY SORRY ! அதற்கு முன்னர் வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்துவிட்டது அதையும் சொல்லி விடுகிறேன். சங்க காலத் தமிழர்கள் இப்போது இலங்கைத் தமிழர்கள் பேசுவது போல குறில் சவுண்டை – ஒலியை– அதிகம் பயன்படுத்துவர் ; புறா என்பதற்குப் பதிலாக புறவு என்பர்; விழா என்பதற்குப் பதில் விழவு என்பர் ; பாண்டில் என்பதற்குப் பதில் பண்டி (வண்டி) என்பர். ஆனால் இதே சொற்களுக்கு நெடில் சவுண்டும் சில இடங்களில் உண்டு. சங்கத் தமிழர்களுக்கு வண்டி தெரியாது ஆனால் பண்டி, பாண்டில் தெரியும். இவை எல்லாம் என்னைப் போன்ற மொழி ஆராய்ச்சியாளருக்கு (LINGUISTIC RESEARCHER)S கோதுமை ஹல்வா, பன்னிர் ஜாங்கிரி சாப்பிட்டதுபோல.
நிற்க.
Rig Veda 10-165
1.தேவர்களே ! நிருதியின் தூதனான கபோதன் — புறா –எந்தத் தீமையைக் கருதி இங்கு வந்திருந்தாலும் நாம் அதைப் போற்றுவோமாக ; நாம் பிராய்சசித்தத்தை செய்வோமாக எங்கள் ஆட்களுக்கும் கால்நடைகளுக்கும் சுகம் தோன்றுக .
2.தேவர்களே ! எங்கள் மனைக்கு அனுப்பப்பட்ட பறவையான புறா சுகத்தைத் தருவதாகுக .விப்பிரனான அக்னீ எங்கள் அவியால் இன்புறுவனாக .சிறகுகளில் ஏந்தப்படும் ஆயுதம் எங்களிடமிருந்து விலகுக.
3.சிறகுப் படை புறா எங்களைத் துன்புறுத்தாமலிருக்க. அது அக்கினியின் ஸ்தானமான அரணிக்கட்டையின் மீது அமருகிறது . எங்கள் பசுக்களுக்கும் ஜனங்களுக்கும் சுகம் தோன்றுக. தேவர்களே, புறா , இந்த மனையில் எங்களைத் துன்புறுத்தாமலிருக்க.
4.ஆந்தை வீணாகவே கத்துகிறது ஏனெனில் புறா அக்கினியின் அருகில் அமர்ந்து இருக்கிறான். இந்த வணக்கம் புறாவை தூதுவனாக அனுப்பிய மிருத்யுவான எமனுக்கு அளிக்கப்படுகிறது .
5. தேவர்களே ! நீங்கள் எங்கள் துதியால் துதிக்கப்பட்டு தூத்துவதற்குரிய புறாவைத் துரத்துங்கள் எங்கள் அவியால் மகிழ்ந்து எங்கள் தீமைகளையெல்லாம் விலக்கி , எங்களுக்கு பசுக்களையும் உணவையும் அளியுங்கள் . துரிதமான புறா எங்கள் உணவை விட்டுவிட்டுப் பறந்து செல்க.
இதற்கான அடிக்குறிப்பில் ‘புறா ஒரு தீய பறவைகயாகக் கருதப்படுகிறது; மரணத்தின் தூதனாக உள்ளது’ என்று எழுதப்பட்டுள்ளது
இது பற்றி ரிக் வேத மொழிபெயர்ப்பை, ஆங்கில மொழியில் நமக்குத் தந்த ரால்ப் டி .எச் . கிரிப்பித் என்ன சொல்கிறார். ஆந்தை, புறா பற்றி தமிழ் இலக்கியம் என்ன சொல்கிறது என்பதையும் எனது ஆராய்ச்சிக் குறிப்புகளை யும் அடுத்த கட்டுரையில் காணுங்கள்
Rig Veda 10-165
1. GODS, whatsoever the Dove came hither seeking, sent to us as the envoy of Destruction,
For that let us sing hymns and make atonement. Well be it with our quadrupeds and bipeds.
2. Auspicious be the Dove that hath been sent us, a harmless bird, ye Gods, within our dwelling.
May Agni, Sage, be pleased with our oblation, and may the Missile borne on wings avoid us.
3. Let not the Arrow that hath wings distract us: beside the fire-place, on the hearth it settles.
May, it bring welfare to our men and cattle: here let the Dove, ye Gods, forbear to harm us.
4. The screeching of the owl is ineffective and when beside the fire the Dove hath settled,
To him who sent it hither as an envoy, to him be reverence paid, to Death, to Yama.
5. Drive forth the Dove, chase it with holy verses: rejoicing, bring ye hither food and cattle,
Barring the way against all grief and trouble. Let the swift bird fly forth and leave us vigour.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 1-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை YOU TUBE யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை நான்கு பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஸ்வாமி ராமதீர்த்தர்! – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.
பாரத தேசம் கண்ட மகான்களில் சமீப காலத்தில் வாழ்ந்து நடைமுறை வேதாந்தம் பற்றிய சிந்தனைகளை புது விதத்தில் பரப்பியவர் ஸ்வாமி ராமதீர்த்தர்.பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் முரளிவாலா என்னும் இடத்தில் 1873ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை தீபாவளி தினத்தன்று பண்டிட் ஹீரானந்த கோஸ்வாமி என்ற பண்டிதருக்கு மகனாகப் பிறந்தார் ஸ்வாமி ராமதீர்த்தர். அவருக்கு தீர்த்த ராமர் என்று பெயரிடப்பட்டது. அவரது தாயார் அவர் பிறந்த ஒரு வருடத்தில் மறைந்தார். அவரது தமக்கை தீர்த்த தேவியும் அவரது அத்தை தர்மா கௌரும் அவரை வளர்த்தனர். கணிதத்தில் இயல்பாகவே அபார வல்லமையை அவர் பெற்றிருந்தார். லாகூரில் கவர்ன்மெண்ட் காலேஜில் கணிதத்தில் மாஸ்டர் டிகிரி வாங்கிப் பின்னர் அதே லாகூரிலேயே ஃபொர்மன் கிறிஸ்டியன் காலேஜில் (Forman Christina College, Lahore) கணிதப் பேராசிரியராகப் பணியாற்றலானார்.
1897ஆம் ஆண்டில் ஸ்வாமி விவேகானந்தர் லாகூருக்கு விஜயம் செய்தார். அமெரிக்காவில் அவர் ஆற்றிய அரும் பணியால் உலகம் முழுவதும் அவர் பெயர் புகழுடன் விளங்கிய நிலையில் அவரது லாகூர் விஜயம் ஸ்வாமி ராமதீர்த்தரை வெகுவாக அவர் பால் ஈர்த்தது. அவர் சந்யாசியாகத் தீர்மானித்தார். தனது இளம் மனைவியையும் மகனையும் துறந்து அவர் சந்யாச ஆஸ்ரமத்தை 1899ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று மேற்கொண்டார்.
சந்யாசி ஆனதால் அவர் ஒரு பொழுதும் காசைக் கையால் தொட்டதே இல்லை. அது மட்டுமல்ல, சந்யாச தர்மத்திற்கு உரிய வகையில் தனக்கென்று பெட்டி, படுக்கை, பொருள்கள் என எதையும் ஒரு போதும் அவர் கையில் கூட எடுத்துக் கொண்டு சென்றதே இல்லை.
அவரது அபாரமான சொற்பொழிவுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. தேஹ்ரியை ஆண்ட மஹராஜா கீர்த்திஷா பஹாதூர் அவரைத் தன் செலவில் 1902ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அனுப்பினார். ஜப்பானில் தனது சொற்பொழிவுகளால் அனைவரையும் கவர்ந்த அவர், பின்னர் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். இரு வருடங்கள் கழித்த பின்னர் 1904ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அவருக்கு பெருத்த வரவேற்பு காத்திருந்தது. ஏராளமான இடங்களில் அவரைச் சொற்பொழிவாற்ற அனைவரும் அனைத்தனர். சிஷ்யர்களும் பெருகலாயினர். 1906ஆம் ஆண்டில் நகர்ப்புறத்தில் வாழ்வதைக் குறைத்துக் கொண்ட ஸ்வாமி ராமதீர்த்தர் இமயமலைக் காட்டினுக்குள் சென்றார். அங்கேயே தங்கலானார். நடைமுறை வேதாந்தம் பற்றிய ஒரு அதிகாரபூர்வமான புத்தகத்தை எழுத வேண்டுமென முனைந்தார். ஆனால் அது முடியவில்லை.
கங்கையில் 17-10-1906ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தினார்.
அவர் பிறந்ததும் தீபாவளி தினத்தன்று; அவர் சந்யாச தர்மம் ஏற்றதும் தீபாவளி தினத்தன்று; ஜல சமாதி எய்தியதும் ஒரு தீபாவளி தினத்தன்று! இது ஒரு அதிசயம் அல்லவா?! முப்பத்திமூன்று வயது ஆவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே அவர் தன் உடலைத் தானே உகுத்து விட்டார். ஜல சமாதிக்கு முன்னர் அவர் உருது மொழியில் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் கடைசி பாராவில் அவர் எழுதியிருந்தார் இப்படி:-இந்திரா! ருத்ரா! மருதா! விஷ்ணு! சிவா! கங்கா! பாரத்!
ஓ மரணமே! நிச்சயமாக இந்த உடலை வெடித்துச் சிதறச் செய்! என்னிடம் பயன்படுத்துவதற்கு ஏராளமான உடல்கள் இருக்கின்றன. நான் இந்த தெய்வீக வெள்ளி இழைகளை, சந்திர ஒளிக்கற்றைகளை அணிந்து வாழ்வேன். குன்றில் பாயும் ஓடைகளாக, மலையில் ஓடும் சிற்றோடைகளாக தோற்றம் கொண்டு ஒரு தெய்வீக பாணனாக உலவுவேன். கடலில், அலைகளில் நான் ஆடுவேன். நானே உலவும் தென்றல் காற்று! நானே போதை கொண்ட காற்று! இந்த எனது அனைத்து வடிவங்களும் மாறுகின்ற எனது சஞ்சார வடிவங்கள். நான் அதோ அந்த அங்கிருந்த மலைகளிலிருந்து இறங்கி வந்தேன். இறந்தவர்களை உயிர்ப்பித்தேன். உறங்கியவர்களை விழித்தெழச் செய்தேன்……… இதோ இங்கே போகிறேன். அதோ அங்கே போகிறேன். யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.”
மரணத்திற்கே இப்படி ஒரு செய்தி கொடுத்து அதையே மனித குலத்திற்கான தனது இறுதிச் செய்தியாக மாற்றினார் ராமதீர்த்தர்.
அவர் தனது கருத்துக்களைச் சொற்பொழிவுகள் மூலமும் கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் கூறினார்; அவர் உவமைக் கதைகளைக் கூறியுள்ளார்; சுவாரசியமான சம்பவங்களையும், புதிர்களையும் விவரித்துள்ளார். தனது கருத்துக்களை பல நோட்புத்தகங்களில் – குறிப்பேடுகளில் – பதிவிட்டுள்ளார். உருது மொழியிலும் அவர் அபார திறமை கொண்டவர். ஆக உருது, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என பன்மொழி வல்லுநராக அவர் திகழ்ந்ததால் அவரது கருத்துக் களஞ்சியம் ஒரு ஆன்மீகச் சுரங்கம் என்றே கூறலாம்.
அவரது வாழ்வில் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. என்றாலும் கூட நேரத்தைக் கருதி அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
The word for dove or pigeon is Kapotah in Sanskrit; Puravu or Puraa in Tamil. In the 2000 year old Tamil literature we come across this bird in at east 75 places. It is associated with arid land in Tamil literature. Though the description of arid land is horrible we don’t see any bad omen linked to dove. But in the Rig Veda , the oldest book in the world, we see a strange reference to this bird linking it with death. In another image in the same Veda, we see its loving nature. Modern symbolism shows it as a bird of peace. Wherever peace is spoken they show White Pigeon. They release pigeons to show that they love peace. Britain issued a coin with pigeon bringing olive leaves to commemorate the 50th anniversary of the end of Second World War.
Wisdom Dictionary, the best source for researchers gives thirty meanings of Dove or Pigeon in different areas such as Natya shastra, Ayur Veda, Architecture and Zoology. But we rarely see its association with death. Kapotah was the name of a clan and name of a seer as well. Even the Rig Vedic verse in the tenth Mandala 10-163 is named after a seer known as Mr Dove or Mr Pigeon.
I will give the two mantras in the Rig Veda where pigeon is referred to and my comments on it:
devāḥ kapota iṣito yad icchan dūto nirṛtyā idam ājagāma | tasmā arcāma kṛṇavāma niṣkṛtiṃ śaṃ no astu dvipade śaṃ catuṣpade ||
“O gods, let us worship for that, desiring which the pigeon sent as Nirṛti‘s messenger, has come to this(ceremony); let us make atonement, may prosperity be given to our bipeds and quadrupeds.” 10-165-1
ṛcā kapotaṃ nudata praṇodam iṣam madantaḥ pari gāṃ nayadhvam | saṃyopayanto duritāni viśvā hitvā na ūrjam pra patāt patiṣṭhaḥ ||
“(Praised) by our hymn, O gods, drive out the pigeon, who deserves to be driven out, exhilarated (by our oblation), bring us food and cattle, dissipating all our misfortunes; abandoning our food, may the swift(pigeon) fly away.” 10-165-5
In between 10-165-1 and 10-16-5 we have three more mantras referring to pigeon in the same tone.
“May the bird sent to our dwellings, the pigeon, be auspicious, O gods, and void of offence, so that the wise Agni may approve of our oblation, and the winged weapon (of mischief) depart from us.” 10-165-2
“May the winged weapon (of mischief) do us no harm; he takes his plural ce upon the touchwood, the seat of Agni; may prosperity attend our cattle and our people, let not the pigeon, gods, do us harm in this (dwelling).” 10-165-3
All these mantras dub pigeon or dove as a bird of bad omen.
In the footnote for the Rig Vedic mantra Ralph T H Griffith adds an interesting note:
A dove, regarded as an ill-omened bird and the messenger of death, has flown into the house. Similarly in North Lincolnshire,
If a pigeon is seen sitting on a tree, or comes into the house, r from being wild suddenly becomes tame, it is Sign of Death, Notes and Querries, 8-382
Xxx
Kindness of Dove
Contrary to this hymn, Seer/Rishi Sunashepa Angirasa paints a different picture in RV 1-30-4
अ॒यमु॑ ते॒ सम॑तसि क॒पोत॑ इव गर्भ॒धिम् । वच॒स्तच्चि॑न्न ओहसे ॥ अयमु ते समतसि कपोत इव गर्भधिम् । वचस्तच्चिन्न ओहसे ॥ ayam u te sam atasi kapota iva garbhadhim | vacas tac cin na ohase ||
“This libation is (prepared) for you; you approach it as a pigeon his pregnant (mate), for on that account do you accept our prayer.” A Tamil poet also refers to it. Male dove fans a female dove because the weather is hot !
xxx
My Comments
Only when a pigeon appears suddenly in an unusual place, then it is considered a bad omen. Hindus considered anything impure that comes to a sacred place a bad omen. Even if a dog entered the place of Fire Sacrifice then they hated it. 2000 year old Sangam Tamil literature described Brahmin Street as a place where no dog or cock enters. Such a purity was maintained in places where they did fire sacrifice in every house thrice a day!
In short ,they did not consider dove as a bird omen in normal circumstances.
Story of Sibi Chakravarthi
The story of Emperor Sibi is in Mahabharata. When a dove took refuge in him, the eagle that chased it for food demanded back its natural prey. But Sibi said that he had to give shelter to anyone who came as a refugee and came to offer his whole body to the eagle . First, he cut a part of his body and put it n the balance to give the weight of flesh equal to the weight of the dove. But it was never balanced despite repeated attempts. Then he himself climbed the balance to give flesh ‘weight for weight’. Then the whole scene changed. The dove appeared as Agni, Lord of Fire , and the Eagle appeared as Indra , Chief of Heaven. This story is referred to in Sangam literature and later Silappadikaram as well Choza kings boasted that they were the descendants of that great emperor Sibi.
There is another story in the epic where two doves sacrificed their lives in the fire for the sake of a hungry hunter. All such stories in the Hindu epics and Hindu fables of Panchatantra show that doves are lovable birds.
In Sangam Tamil Literature
I give some examples from 2000 year old Tamil Sangam Books:
In Akananuru poem 17, a fine contrast is drawn between three pictures, one of an arid tract, another of a quiet home in which the heroine lights up the lamps when the doves call to their mates, and another of a small fertile hill with Kutalam flowers of fragrant smell and a canopy of clouds
In Akananuru poem 2, we see couple of doves fly far away with terror in gusty wind.
In Kuruntokai poem 79, the female doves perching on the Omai tree call their mates with a sorrowful voice
In Kuruntokai poem 174, the ripe seeds of the Kalli trees burst open and scares away the happy pair of pigeons perching on the branches.
In Narrinai poem 305, again we see a dove perching on the Nocci tree calls to its mate in a very clear voice and expresses some grief in it.
In Akananuru poem 287, the waving aerial root of a banyan tree frightens away the doves .
In Palaikkali of Kalittokai (verse 10) we see a male dove is fanning and comforting a female dove in hot weather condition.
One more interesting reference is in Pattinappalai of Sangam Period where the poet Kadiyaloor Uruththiran Kannanar (Mr Rudraksha) says doves eat stones. I saw a recent video in You Tube where a gentleman powders the red stones and feeds the doves. Hundreds of pigeons competing with one another, eat it happily. This helps them in digestion they say. Though this might have been noticed by many others a Tamil poet has documented it in his poem 2000 years ago!
Apart from these , we have passing reference to doves along with other birds. So the picture we get is doves are in pairs or one calling the other which shows mutual love.
Doves and pigeons in other cultures are already described in many websites. But the Hindu view of doves and pigeons is not dealt with in detail. Wisdom library gives 30 references and Sangam and later Tamil literature give at least 75 references. We have enough materials to write an encyclopaedia on Doves in Hindu Literature.
Kapota- Dove- Asana
–subham—
Tags- Pigeon, Bad omen, Rig Veda, Eating stones, Tamil literature, Love, Peace
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாக அமைவதும் 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான த்வாரகா திருத்தலம் ஆகும். “அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரித்வாரகாவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகா” என்பது அனைவரும் அறிந்த ஏழு மோக்ஷபுரிகளைப் பற்றிய ஸ்லோகமாகும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள இத்தலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்ட தலமாகும்.
மூலவர் திரு நாமம் : த்வாரகாதீசன், கல்யாண நாராயணன்.
கருப்பு நிறத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இவர் காட்சி அளிக்கிறார்.
தாயார் திரு நாமம் : கல்யாண நாச்சியார், ருக்மிணி தீர்த்தம் :கோமதி நதி அல்லது சமுத்ர சங்கமம் அல்லது பிரபாச தீர்த்தம் விமானம் : ஹேமகூட விமானம்
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண மற்றும் இலக்கிய வரலாறுகள் உண்டு. ஒரு சமயம் ஜராசந்தன் மக்களைப் பெரிதளவும் கொடுமைப் படுத்த, உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சமுத்திர ராஜனிடம் இந்த இடத்தைக் கேட்டுப் பெற்றார்; விஸ்வகர்மாவை வைத்து இந்த நகரை நிர்மாணித்தார். உலகமே வியக்கும் வண்ணம் ஸ்வர்க்கத்திற்கு நிகராக அகன்ற சாலைகளுடனும் பல தீர்த்தங்களுடனும் இந்த நகர் நிர்மாணிக்கப்பட்டது. அவரது கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் ஐந்து அடுக்கு நிலைகொண்ட த்வாரகாதீசர் ஆலயத்தை நிர்மாணித்தார்.
இப்போதுள்ள த்வாரகா பொதுவாக இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது. த்வாரகா புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி கோமுகி த்வாரகா ஆகும். இன்னொரு பகுதி பேட் த்வாரகா ஆகும்.
ஸ்வர்க்கத்திற்கு செல்லும் வாயிலாக இது அமைவதால் இது த்வாரகா என்ற பெயரைப் பெற்றது. இங்கிருந்து தான் யாதவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்தனர்.
இங்குள்ள கோவிலில் அனைத்து பக்தர்களும் ஸ்வர்க வாயிலின் வழியே உள்ளே சென்று மோக்ஷ வாயில் வழியே வெளியே வருவது வழக்கம்.
கோவிலிலிருந்து அருகே உள்ள கோமதி நதி கடலில் கலக்கும் சங்கமத்தை அடையலாம். இந்த சங்கமத்தில் நீராடி விட்டுப் பின்னர் கோவில் தரிசனத்தை மேற்கொள்வது ஐதீகம். கோவிலிலிருந்து படகு மூலம் சென்றால் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணரின் அஷ்ட பட்டமகிஷிகளுக்கான கோவில்கள் உள்ளன. பேட் த்வாரகா என்ற சிறு தீவில் தான் கிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். இங்கு தான் அவரது அரண்மனை, அந்தப்புரம் ஆகியவை அமைந்திருந்தன. பால்ய கால நண்பரான குசேலர் இங்கு தான் வாழ்ந்து வந்தார். இங்கு தான் கிருஷ்ணர் சங்காசுரனை வதம் செய்தார்.
த்வாரகா ஆலயத்தில் லக்ஷ்மிநாராயணர், ருக்மிணி, திரிவிக்ரமன், தேவகி, ஜாம்பவதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள சங்கமத்தில் ரங்கன் காட், நாராயண் காட், காவூகாட், வசுதேவ காட், பாண்டவன் காட், பிரம்ம காட், பார்வதி காட், கங்கா காட், சுரதன் காட், கர்க்காரி காட், அனுமன் காட், நாராயண பலி காட் என பன்னிரெண்டு துறைகள் உள்ளன. இங்குள்ள ரிஷபா குண்டத்திலும் பக்தர்கள் நீராடுவது மரபாகும். இத்தலம் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இங்கு ஏராளமான மகான்களும் அருளாளர்களும் காலம் காலமாக வந்து கிருஷ்ணரை தரிசித்து பல பாடல்களைப் புனைந்துள்ளனர். ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், ஞானேஸ்வரர், பக்த மீரா, கிருஷ்ண சைதன்யர், வல்லபாசாரியர் என்று இங்கு வந்த அருளாளர்களின் பட்டியல் மீக நீண்ட ஒன்றாகும். கிருஷ்ணரைப் பற்றிப் பாரத தேச மொழிகள் அனைத்திலும் அற்புதமான இலக்கியங்கள் ஆயிரக்கணக்கில் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களோ பல்லாயிரம் ஆகும்.
பெரியாழ்வார் ஐந்து பாசுரங்கள், ஆண்டாள் நான்கு பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்கள், நம்மாழ்வார் ஒரு பாசுரம் ஆக மொத்தம் 13 பாசுரங்களை ஆழ்வார்கள் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.
இங்கு 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வருடங்கள் நடந்துள்ள பல அகழ்வாராய்ச்சிகளில் இந்தத் தலம் பண்டைய காலத்தில் புகழோங்கி இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து உலகையே மகிழ வைத்துள்ளன. வசுதேவருக்கும் தேவகிக்கும் மதுராபுரியில் மகனாக அவதரித்த கிருஷ்ணர் ஆயர்பாடியில் யசோதா பாலனாக வளர்ந்தார். ஏராளமான அருள் லீலைகளைப் புரிந்தார். த்வாரகாவை நிர்மாணித்து, ஆண்டு, மறத்தை அழித்து அறத்தை நிலைநாட்டிய பின்னர் தனது அவதார காரியம் நிறைவேறியவுடன் அவர் இங்கிருந்து தான் தனது விஷ்ணு லோகத்திற்குச் சென்றார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
பெரியாழ்வாரின் அருள் வாக்கு இது:
தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் ஜோதி நம்பி! வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே