Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மிகைல் லொமொனோசொவ் MIKHAIL LOMONOSOV , ரஷியாவில் மீனவர் மகனாகப் பிறந்தார். பெரும் கவிஞராகவும் விஞ்ஞானியாகவும், மொழிகள் பற்றிய அறிஞராகவும் உயர்ந்தார். நம்ம ஊர் வேத வியாசரை நினைவு படுத்துகிறார் மிகைல் லொமனோசொவ்.
அவர் பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை செய்தார் .ரஷிய மொழியை இலக்கியத்திற்கு ஏற்றவாறு செம்மைப்படுத்தினார் . தானே பல விஷயங்களையும் கவிதைகளையும் எழுதி முன்னோடியாகத் திகழ்ந்தார்.
மிகைல் லொமனோசொவ் LOMONOSOV ரஷியாவின் வட பகுதியில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்தார்.
அவர் தந்தையின் தொழிலைப் பின்பற்றி மீன் பிடித்து வந்தார். ஆயினும் அவருக்கு அறிவு வேட்கை பிறந்தது. கல்வி கற்கத் துடியாய்த் துடித்தார்.19 வயதானபோது கையில் கால் துட்டுக் காசு இல்லாமல் நடந்தார் , நடந்தார் தலைநகர் மாஸ்கோவுக்கே நடந்தார்.
மாஸ்கோவுக்கு வந்த லொமொனோசொவ் தன்னுடைய குலம், கோத்திரம் ஆகியவற்றை மறைத்து, புலமையை மட்டும் காட்டி, உயரர்ல மக்கள் மட்டுமே கற்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். அவரது புலமையை அறிந்த, ஆசிரியர்கள் அவரை 25 வயதில் உயர்கல்விக்காக ஜெர்மனிக்கு அனுப்பினர். அங்கே அவர் கவிதைகளை எழுதத் துவங்கினார். படிப்பு முடிந்து ரஷியாவுக்குத் திரும்பிய அவருக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகாடமியில் ACADEMY OF St. PETERSBURG ரசாயனப் பேராசிரியர் பதவி கொடுக்கப்பட்டது. இது நடந்தது 1745ம் ஆண்டில்.
ரஷ்யாவின் முதல் ரசாயன சோதனைச் சாலையை முதல் முதலில் நிறுவினார் . பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்தார். பன்னாட்டு ஆராய்ச்சிகளையும் விட இவர் முன்னனியில் நின்றார்; தாய் நாடாகிய ரஷ்யாவை மிகவும் நேசித்த அவர் அங்கே விஞ்ஞானத்தையும் கலாசாரத்தையும் பரப்புவதே தமது கடமை என்று கருதினார்.. அக்காலத்தில் பிரெஞ்சு மொழிதான் பெரிய இலக்கிய மொழி என்று கருதப்பட்டது, அதற்கு மாற்றாக ரஷ்ய மொழி திகழ அவர் அரும்பாடுபட்டார் . ரஷ்யாவின் பல பகுதிகளில் ரஷ்ய மொழி வெவ்வேறுவிதமாகப் புழங்கியது. அவற்றை எல்லாம் ஆராய்ந்து ரஷ்ய மொழியைச் செம்மைப்படுத்தினார். இலக்கியத்துக்காக மூன்று வகை பாணியை – STYLES ஸ்டைலை உருவாக்கினார். கதைகள், சோக நிகழ்வுகள், நகைச்சுவை படைப்புகள், இதிகாசங்கள் ஆகியவற்றுக்கு என தனித்தனி பாணிகளை வகுத்தார். அவரே கவிதைகள் எழுதியதோடு ரஷ்ய மொழியில் நிறைய விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார்.
1812ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, கோயில் உள்ள ஒரு இடத்திற்கு வாரிசுகள் யாரும் இல்லையெனில் அதை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த புது சட்டத்திற்கு ‘Resumption of Inam Lands Regulation’ என்று பெயர் இந்தச் சட்டத்தின் படி ‘Permanent Settlement’ செய்தால் மாஞ்சாலி கிராமம் முழுவதுமே அரசு எடுத்துக் கொள்ளும். பொதுமக்களிடம் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆகவே இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க ஒரு ஆபீஸரை நியமிக்க அரசு முடிவெடுத்தது.
சர் தாமஸ் மன்ரோ அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். அவரை செட்டில்மெண்ட் ஆபீஸராக அரசு நியமித்தது. அரசு அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத நிலையில், ஒரு நாள் தாமஸ் மன்ரோ தானே நேரில் பிருந்தாவனம் வந்தார். அவருடன் கூட அதிகாரிகளும் வந்தனர்.
மந்த்ராலயம் வந்தவர் கோவிலின் வாயிலில் ஒரு கணம் நின்றார். தன் ஷூவைக் கழட்டினார். தொப்பியையும் எடுத்தார். யாரோ ஒருவருடன் பேச ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் நடந்த அந்த சம்பாஷணை வெகு நேரம் நீடித்தது. கூட வந்தவர்கள் திகைத்தனர். ஏனெனில் மன்ரோவின் முன்னால் யாருமே இல்லை. பேச்சு முடிவிற்கு வந்ததற்கு அடையாளமாக மன்ரோ தனது பாணியில் ஒரு சல்யூட் வைத்தார். அவருக்கு ஆலயத்திலிருந்து மந்த்ரா க்ஷதை கொடுக்க ஆலயத்திலுள்ளோர் வந்த போது தன் கையில் ஏற்கனவே இருந்த அக்ஷதையை அவர் காண்பித்தார். மந்த்ராலய மகானான ராகவேந்திரரே அவர் முன் தோன்றி இந்த இடம் மசூத்கானால் இனாமாக கொடுக்கப்பட்ட வரலாறு அனைத்தையும் உகந்த முறையில் தெள்ளத் தெளிவாகக் கூற மன்ரோவிற்கு அவர் கூற்றின் நியாயம் புரிந்தது. வேறு யாருக்கும அவர் தென்படவில்லை என்பதும் அவர் ஜீவ சமாதி எய்தி நெடுங்காலம் ஆயிற்று என்பதையும் உணர்ந்து கொண்ட மன்ரோவிற்கு பயபக்தி ஏற்பட்டது. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அங்கிருந்து புறப்பட்டார்.
அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்பதை உரிய ஆதாரங்களுடன் மன்ரோ அரசுக்குத் தெரிவிக்க மந்த்ராலயம் உரியபடி பாதுகாக்கப்பட்டது. அவரது உத்தரவு சென்னை கெஜட்டில் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ராகவேந்திரரை தரிசித்து அவர் அருள் பெற்ற இந்த நிலையில் சர் தாமஸ் மன்ரோவிற்கு தற்காலிக ஆளுனராக – கவர்னராக – ப்ரமோஷன் கிடைத்தது. தனது நாற்காலியில் உட்கார்ந்த அவர் கையெழுத்திட வந்த கோப்புகளைப் பார்த்தார். அதில் முதல் கோப்பாக மேலே இருந்தது மந்த்ராலயம் பற்றிய கோப்பு தான். மனமுருகிய அவர் அதில் தனது முதல் கவர்னர் கையெழுத்தைப் போட்டார்.
மன்ரோவின் சிலை சென்னையில் உள்ளதை அனைவரும் அறிவர். குதிரை மீது அவர் அமர்ந்திருக்கும் 15 அடி உயரமுள்ள சிலை 1834இல் இங்கிலாந்தில் செய்யப்பட்டது. 6 டன் எடையுள்ள இந்தப் பெரிய சிலை அங்கிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு 23-10-1839இல் சென்னையில் தீவுத்திடல் அருகே நிறுவப்பட்டது.
இப்படி ராகவேந்திரரின் பக்தரான ஒரு வெள்ளையருக்ககு அவர் அருள் பாலித்ததையும் ஆட்சியாளராக இருந்த அவர் கவர்னராக ப்ரமோஷன் பெற்றதையும் வரலாறு குறிப்பிடுகிறது. அவரது ஆணை கெஜட்டில் வெளியிடப்பட்டதை இன்றும் காணலாம். (Madras Government Gazette in Chapter XI, page 213, with the caption “Manchali Adoni Taluka”.) இந்த அரசாணை இன்றும் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜிலும் மந்த்ராலயத்திலும் காப்பாற்றப்படு வருகிறது.
ராகவேந்திரர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். த்வைத தத்துவத்தை இனிமையாகவும் எளிமையாகவும் அழகுறவும் விளக்கும் திறம்படைத்தவர் அவர். ப்ரம்மசூத்ரத்திற்கு பாஷ்யமாக அவர் எழுதிய தந்த்ர தீபிகா மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். உபநிஷதங்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கவுரைகளும் ஜைமினி சூத்ரத்திற்கு ‘பட்ட சங்க்ரஹா’ என்ற அவரது பாஷ்யமும் மிகவும் போற்றப்படும் நூல்களாகும்.
மந்த்ராலயம் கர்நாடக ஆந்திர எல்லையில் துங்கபத்ரா நதியின் தென்கரையில்
ஆந்திராவில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பங்களூரிலிருந்து இது சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து சுமார் 547 கிலோமீட்டர் தொலைவிலும் ஹைதராபாத்திலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச | பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் ஸ்ரீ காமதேனவே || ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Two dozen foreigners commented on the Soma plant that is praised sky high in the Rig Veda ,the oldest book in the world. All of them have bluffed as much as possible with their hypotheses. They have proved themselves idiots by not answering the main questions. They showed them as ‘clever’ by comparing it with Haoma in the Zend Avesta. But for each of their guesses no evidence is given. All their statements contain ‘may be’, ‘probably’, ‘imaginary proto-proto-proto language’ etc.
What they missed the points or hiding is
1.Is there a culture who drank hallucinating drug at dawn, noon and evening? The Vedic seers clearly say that they prayed before sun rise and then two more times in a day.
2.If a society used a ‘hallucinating drug’ like this, would it survive? But Vedic culture survived and until today we see Vedic recitation of 20,000 mantras by heart.
3.How come they pray for 100 years life and grandchildren if it is a narcotic drug?
4.Why is no corresponding word in any Indo European language except the old Persian Haoma. We know H = S. But why is it that there are a few references even in the Avesta?
5.Avesta is proved to be later than the Rig Veda and why is not Soma mentioned in 2000 year old Sangam Tamil literature? Sangam Tamils mention many Vedic rites including Yupa pillar, Rajasuyam, Eagle shaped fire altar etc?
6.If the foreigners have identified the plant , as many foreigners claim, why didn’t they produce it and patent it? They could have made billions of dollars every day like coca cola.
7.Above all why is that no one has explained the connection between the falcon/hawk and the Soma plant?
This is an article to show the mysterious connection between the Soma plant and falcon or hawk. This connection deepens the mystery of Soma plant. Foreigners cleverly evade this issue.
Syena and Suparna are used several times in the Rig Veda. They are translated into English as Falcon or hawk and Eagle. Later mythology makes Garuda, the vehicle of Vishnu. Garuda Purana/mythology and Garuda Mantra are used aa antidote for poison and death.
The word Syena (falcon, hawk) alone is used in over 65 mantras in the Rig Veda.
xxxx
Here are some references:
In RV 1-32-14 Indra is compared to a falcon where a mysterious number 99 comes. Rigvedic Hindus were the first people to use decimal system in the world. In the 10,000 +++ Rig Vedic mantras we have hundreds of decimal numbers. But when they named Indra as Mr One Hundred (Satakratu), why did they use 99 in many places?
Here is the mantra
When you killed the snake demon Ahi, you crossed 99 rivers like a falcon? Were you afraid? if so, where from you would seek help?
The same seer named Mr Gold Pillar (Hiranya stupan) praises Indra as a falcon in the next hymn as well RV 1-33-2
I fly to Him (Indra), the invisible wealth giver, like falcon that returns to its nest (here the seer means he flies very fast like a home coming falcon towards Indra).
xxxx
Mysterious Soma RV 1-93-6
In the first five mantras they sing about Soma plant and then in the sixth Mantra Gautama Rahugana says:–
“One of you Matariswan brought from heaven, the Falcon rent the other from the mountain”.
Griffith in his foot note says,
Matarisvan brought Agni/Fire from heaven and Falcon brough Soma from the mountain or cloud, that is, says Sayana , from Svarga on top of Mount Meru.
xxx
Ode to Bird RV 2-42- 1,2,3
We read and praise Ode to Skylark by P B Shelley and Ode o Nightingale by John Keats. But this genre of ‘ode to birds’ began in the Rig Veda. Later Sangam Tamils also followed the Rig Vedic seers. But seer Grtsamada was the first one to sing a Ode to Kapinjala bird. That is the first hymn on Brid of Omen, which is seen in many other cultures in a late period.
Here the seer prays that neither the falcon nor an eagle should kill the Kapinjala bird
Xxx
In RV 3-43-7 Rishi Gathina Visvamitra sings
“Drink of the strong pressed out by strong ones, Indra that which the Falcon brought you when you wished”
Here falcon bringing Soma is referred to.
Xxx
I ate dog meat- Rishi Vamadeva
This is a very famous Mantra which even Manu refers to in his Smrti.
RV 4-18-13
Vamadeva Gautaman says
“In deep distress (poverty) I cooked a dog’s intestines. Among the Gods I found not one to comfort?
My wife I beheld in degradation. The Falcon then brought me the pleasant Soma”.
Here Indra is praised as falcon.
But falcon bringing Soma plant is repeated throughout the Rig Veda.
xxx
RV 4- 26 and 4-27
Both of these hymns praise falcon for bringing the Soma plants:–
“Before all birds he (Indra) ranked this bird, O Maruts; supreme of falcons be this fleet winged Falcon,
Because strong pinioned, with no car to bear him, he brought to Manu the God-loved oblation. (mantra 4-26-4)”
“When the Bird brought it , hence in rapid motion sent on the wide path fleet as thought he hurried
Swift he returned with the sweetness of the Soma and hence the Falcon acquired his glory”. (5)
(This is the reason for writing a Purana on Garuda)
“Bearing the stalk, the Falcon speeding onward, Bird bringing from afar the draught that gladdens,
Friend of the Gods, brought, grasping fast, the Soma which he had taken from yon loftiest heaven “(6)
“The falcon took and brought the Soma, bearing 1000 libations with him, yea, 10, 000.
The Bold One left Malignities behind him, wise, in wild joy of Soma, left the foolish. (7)”
Xxx
Vamadeva Gautama continues in 4-27
“As I lay within the womb, considered all generations of these Gods in order
A hundred iron fortresses confined me but forth I flew with rapid speed a Falcon (4-27-1)
(Note 100 Iron Forts; Has Indus valley got ‘Iron’ Forts?)
“When with loud cry from heaven down sped the Falcon, then hasting like the wind he bore the Bold One.
Then, wildly raging in his mind, the archer Krssanu aimed and loosed the string to strike him (3)
The Falcon bore him from heaven’s lofty summit as the swift car of Indra’s Friend bore Bhujyu
Then downward hither fell a flying feather of the Bird hasting forward in his journey (4)
The mystery of falcon’s connection to Soma or hawk goes beyond fourth Mandala. I have given examples only from the first four mandalas. There are over 65 references for Syena alone. I will deal with Suparna (Eagle, Garuda) separately.
My conclusion
The Falcon’s link to Soma is not explained by anyone satisfactorily. This mystery continues in Garuda Purana, where Garuda bringing Amrita instead of Soma.
Soma is a not a narcotic drug. No drug addict will waste it by pouring into fire three times day. If it is a rare and expensive drug they would have consumed it gladly and that degraded society would have died by this time.
More over the drug addicts don’t need to spread cut Dharbaa grass in an orderly fshin before Fire and invoke Gods to drink it. We see the violence and suicides that follow the addicts of drug or drinking in the Western Society. On the contrary, the Vedic seers who drank Soma elixir lived 100 years singing the Glory of God.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆண் மகனை எழுத்தாளர் என்றால் பெண் மகளை எழுத்தாளி என்று சொல்லலாம் அல்லவா ? அவ்வகையில் பயங்கரக் கதைகளை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி, எழுத்தாளி மேரி ஷெல்லி MARY SHELLEY ஆவார். அவர் உருவாக்கிய பிராங்கென்ஸ்டைன் FRANKENSTEIN பூதம் உலகப் புகழ்பெற்றாதோடு ஏராளமான டெலிவிஷன், திரைப்படக் காட்சிகளுக்கும் வழிவகுத்தது.
மேரி ஷெல்லியின் காதலர், நமது பாரதியார் புகழும் ஆங்கிலக் கவிஞர் பெர்சி பி. ஷெல்லி PERCY BYSSHE SHELLEY ஆவார். பாரதியார் ஒரு காலத்தில் ‘ஷெல்லிதாசன்’ என்ற புனைப்பெயரோடு எழுதியதுண்டு.
ஒரு நாள் மேரி , அவருடைய காதலரும், எதிர்காலக் கணவருமான பெர்சி பி. ஷெல்லி, புகழ் பெற்ற கவிஞர் பைரன் LORD BYRON ஆகியோர் காரசார உரையாடலில் ஈடுபட்டிருந்தனர். யார் அதி பயங்கரக் கதை எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? என்று அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட்டது. அதன் விளைவாக மேரி ஷெல்லி எழுதிய நாவல்தான் ‘பிராங்கென்ஸ்டைன்’ FRANKENSTEIN .
அவருடைய முழுப்பெயர் மேரி வுல்ஸ்டன்க்ராப்ட் காட்வின் MARY WOLLSTONECRAFT GODWIN . அவர் லண்டனில் கீர்த்தி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தார். மேரியின் தந்தை வில்லியம் காட்வின் WILLIAM GODWIN அரசியல் விமர்சகர், நாவல் ஆசிரியர். திருமணம் உள்பட பல்வேறு சமூக விஷயங்களில் புரட்சிக் கருத்துக்களை உடையவர் வில்லியம் காட்வின். அவருடைய தாயார் பெண் உரிமைப் போராளி. ஆனால் மேரி பிறந்த 11ஆவது நாளில் தாயாரின் உயிர் பிரிந்தது.
வீட்டிலேயே கல்வி கற்றார் மேரி . வீட்டிற்கு வரும் பெரும் இலக்கியப் புள்ளிகளை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதில் ஒருவர் கவிஞர் பெர்சி ஷெல்லி. 16 வயதில் அவருடன் பிரான்சுக்கு ஓடிப்போனார். காதலின் வேகம்!
அவர்களுடைய முதல் குழந்தை இத்தாலியின் வெனிஸ் நகரில் இளம் வயதில் இறந்தது . இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தவுடன் இரண்டாவது குழந்தையான வில்லியம் பிறந்தான் .
‘பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்’ என்ற பழமொழிக்கேற்ப அவருடைய வாழ்வில் துன்பம் தொடர்ந்து வந்தது. பெர்சி ஷெல்லியின் முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால்தான் அவர் மேரியை மணந்தார். பிறந்த இரண்டாவது குழந்தை வில்லியமும் இத்தாலிக்குத் திரும்பிச் சென்றபோது இறந்தான்.
மேரிக்கு 21 வயதானபோது அவர் எழுதிய பயங்கரக் கதைதான் பிராங்கென்ஸ்டைன்.
அந்தக் காலத்தில் இருள் சூழ்ந்த, பேய் பிடித்த மாளிகைகள் , கோட்டை கொத்தளங்களை வருணித்து அந்தப் பின்னணியில் கதை எழுதுவது மரபு. அதே பாணியில் மேரியும் ஒரு பூதத்தைப் படைத்தார். அதை எதிர்கால விஞ்ஞானப் புனைக்கதைகளின் முன்னோடி என்று விளம் புவோர் பலர். ஒரு விஞ்ஞானி உயிரினங்களை உண்டாக்கும் ஆராய்ச்சி செய்கிறான். அது தவறான வழியில் போய், பிராங்கென்ஸ்டைன் என்ற பயங்கர மனிதனை- பூதத்தை உருவாக்கிவிடுகிறது. அதுவே விஞ்ஞானியையும் கொன்றுவிடுகிறது.
இதுபோன்ற புதுமைக் கதையை மக்கள் வரவேற்றனர். மக்கள் இதை வைத்து பல நாடகங்கள், திரைப்படங்களைத் தயாரித்தனர் . அவர் வாழ்வில் மேலும் ஒரு துயரம், புகழ் பெற்ற கவிஞர் ஷெல்லி அவரது 29ஆவது வயதில் படகு விபத்தில் இறந்ததாகும் . இதனால் 1822ல் மேரி இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தார்.
26 வயதில் இரண்டாவது நாவல் ஆன வால்பெர்க்கா VALPERGA வை பதிப்பித்தார். அவர் கவிதைகளையும் மேலும் பல நாவல்களையும் எழுதினார். தனது பயணங்கள் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். மனித குலம் அழிவது பற்றிய THE LAST MAN தி லாஸ்ட் மேன் என்ற நாவலையும் வெளியிட்டார். ஆயினும் முதல் நாவலுக்குக் கிடைத்த வெற்றி இவைகளுக்குக் கிடைக்கவில்லை . இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
பிறந்த தேதி – ஆகஸ்ட் 30, 1797
இறந்த தேதி – பிப்ரவரி 1, 1851
வாழ்ந்த ஆண்டுகள் – 53
வெளியிட்ட நூல்கள் PUBLICATIONS
1817-HISTORY OF SIX WEEKS’ TOUR
1818 – FRANKENSTEIN
1828- VALPERGA
1826- THE LAST MAN
1830- THE FORTUNES OF PERKIN WARBECK
1835- LODORE
1837 – FALKNER
1844 – RAMBLES IN GERMANY AND ITALY
PUBLISED AFTER SHE DIED
1987 – THE JOURNALS OF MARY SHELEY ( 2VOLS)
–SUBHAM–
MARY’S MOTHER
TAGS- MARY SHELLEY, FRANKENSTEIN, மேரி ஷெல்லி, பிராங்கென்ஸ்டைன்,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அன்றிலிருந்து அவர், அற்புதமாக சீதாதேவி தானே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த மூலராமரின் பூஜையை உரிய முறையில் செய்து அனைவருக்கும் அக்ஷதை வழங்கி கடினமான ஸ்லோகங்களுக்கு விளக்கவுரையும் அளித்து வரலானார்.
நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு ஏராளமான ஸ்தலங்களுக்கு அவர் விஜயம் செய்தார். செல்லும் வழியில் எல்லாம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். உலகமே வியந்தது அவரது அருளாற்றலைக் கண்டு.
அத்வைனி என்ற இடத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன் அவன் பெயர் வெங்கண்ணா. எழுத்தறிவு இல்லாத அவனுக்கு அருள் பாலித்த ராகவேந்திரர் அவனுக்கு அக்ஷதை பிரசாதம் வழங்கினார். அவன் ராகவேந்திரரின் நாமத்தை உச்சரித்து வரலானான்.
அந்தக் காலத்தில் அரசு புரிந்த சுல்தானின் பிரதிநிதியாக இருந்தவன் அஸதுல்லாகான் என்பவன். அவன் வெங்கண்ணாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான். திகைத்துப் போன வெங்கண்ணா ராகவேந்திரரை நினைத்து வேண்ட, அவர் அருளால் அதை வெகு எளிதாகப் படிக்க முடிந்தது. இதனால் மகிழ்ந்த அஸதுல்லாகான் வெங்கண்ணாவை அன்புடன் அரவணைத்து ஆதரிக்கலானான். காலகிரமத்தில் அவன் திவானாக நியமிக்கப்பட்டான்.
இப்படி ராகவேந்திரர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம். தஞ்சாவூரில் பல காலம் வசித்து வந்த ராகவேந்திரர் கும்பகோணத்திற்கு மீண்டும் வந்தார். ஒருநாள் அங்கு வந்த சில பிராமணர்கள், ‘ராகவேந்திரர் நினைத்ததை எல்லாம் தருபவராமே, நாம் சில பண்டங்களை நினைத்துக் கொண்டால் அவர் தருவாரா என்று பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டனர். காவிரிக் கரையில் இருந்த அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பட்சணத்தை நினைத்துக் கொண்டனர். அப்போது ராகவேந்திரரின் காஷாயத்தை துவைப்பதற்காக வந்த அவரது சீடன் ஒருவன், “வாருங்கள், சீக்கிரம் வாருங்கள், உங்களுக்கான அனைத்து பக்ஷணங்களும் தயார்” என்றான்.
இதனால் திகைத்துப் போன அவர்கள் நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டனர். அப்போது அவன் கையிலிருந்த காஷாயம் கீழே நழுவி விழுந்தது. அவன் உடனே, “நான் என்ன சொன்னேன். ஒன்றுமே சொல்லவில்லையே” என்றான். ‘இல்லை நீ சொன்னதை நினைத்துப் பார்’ என்றனர் பிராமணர்கள். அப்போது நழுவி விழுந்த காஷாயத்தைக் கையில் எடுத்த அந்த சிஷ்யன் உடனே அவர்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அவர்களுக்கு உடனே புரிந்து விட்டது – அந்த சிஷ்யன் கூறுவது எல்லாம் அந்த காஷாயத்தை அவன் தொட்டதால் ஏற்பட்ட மகிமையாலேயே என்று. அவர்கள் மடத்திற்குச் செல்ல அங்கு அவர்கள் நினைத்த உணவு வகைகள் அனைத்தும் கிடைத்தன. அங்கு வந்த ராகவேந்திரர், “ வேண்டியது கிடைத்ததா?” என்று பரிவுடன் விசாரித்தார்.
இப்படி அன்றாடம் நடக்கும் அற்புதங்கள் ஏராளமாக இருந்தன; அவரது அருள் புகழ் நாடெங்கும் பரவியது. எழுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து அருள் பாலித்த ஸ்வாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்ய உத்தேசித்து மாஞ்சாலி என்ற கிராமத்தை உகந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்த இடம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1671ஆம் ஆண்டு சிராவண கிருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று அவர் ஜீவ சமாதி அடைந்தார். அந்த கிராமம் மந்த்ராலயம் என இனி அழைக்கப்படும் என்றும் அவர் அருளினார். அப்போது ஆண்டு வந்த சுல்தான் மசூத்கான் அந்த கிராமத்தை ராகவேந்திரருக்கு அளித்தான். பிருந்தாவன பிரவேசத்திற்கு முன்னர் அவர் அற்புதமான ஒரு உரையைத் தனது பக்தர்களுக்காக ஆற்றினார்.
மந்த்ராலயத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் மூலம் நாடெங்கும் சுமார் 300 பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவரை வணங்குவோர் அடையும் பலன்களை வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாது.
துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் அவர் ஜீவனுடன் இன்றும் இருந்து அருள் பாலிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தினமும் அதிகாலையில் அவர் துங்கபத்ரா நதிக்கு நீராடச் செல்லும் பாதக்குறடுகளின் சப்தம் எழுகிறது. அதே போல அவர் மூலராமருக்கு பூஜை செய்யும் போது எழும் மணி ஓசையும் தினம் கேட்கிறது.
ராயர் என்று பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படும் ராகவேந்திரர் மதராஸ் பிரஸ்டென்ஸி என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட சென்னை ராஜ்யத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத் தலைவராக இருந்த சர் தாமஸ் மன்ரோவிற்கு தரிசனம் தந்த சம்பவம் சுவையான ஒன்று. (மன்ரோ பிறந்த தேதி : 27/5/1761 மறைந்த தேதி : 6/7/1827)
குஹ = மறைவான; ரகசிய பேர்வழி; நேர் வழியற்றவன்; மறைக்கக்கூடிய மோசடிக்காரன்
ஸ்வட் = பேச்சுக்காரன் ; சவடால் பேர்வழி
Xxx
6-1-219 to 6-1-221
Vathee examples are given by commentators.
Two amazing things are here—
1.From Vedic days all rivers are feminine and motherly
2.Most of the rivers and several female names end with suffix Vathee
We know the most famous river Sarasvathee.
Here commentators give examples : Rivers Udumbharaavathee, Saraavathee, Ajiravathee, Ahivathee, Muneevathee
From Vedic days until this day we see feminine names end with Vathi or Mathi and Masculine names end with Pathi. I have a strong feeling Indus Script has these endings/suffix
‘வதீ’ என்பது பெண்பால் சொல்; எல்லா நதிகளும் வேதகாலம் முதல் இன்று வரை ‘வதீ’ என்ற சொல்லுடன் முடியும். நிறைய பெண்களின் பெயர்களும் ‘வதி’ என்றும் ‘மதி’ என்றும் முடியும்; சரஸ்வதி, பார்வதி, இந்து மதி, சந்திரமதி , காந்திமதி .
சரஸ்வதீ நதி எல்லோரும் அறிந்த பெயர்கள்.
ஆண்களின் பெயர்கள் – ‘பதி’ என்று முடியும் – கணபதி, லெட்சுமிபதி , பசுபதி ,பிருஹஸ்பதி, ஜனாதிபதி , ராஷ்ட்ரபதி , கிருஹபதி
சிந்து சமவெளியிலும் பதி, மதி, வதி – இருக்க வேண்டும் என்பது என் துணிபு .
இன்னும் ஒரு உண்மை:- நதிகள் = பெண்கள் / தாய்மார்கள் ; அவர்களின் கணவன்–கடல் ;
இந்தக் கருத்தும் வேத காலம் முதல் இன்று வரை தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உளது.
உரைகாரர்கள் கொடுக்கும் நதிகளின் பெயர்கள் அனைத்தும் ‘வதீ’ என்றே முடிவடைகின்றன .
Xxx
6-2-3
Panini used varna for colours
It is used in most of the Indian languages.
In Tamil it become Varna or Vanna
வர்ணம் = வண்ணம் பாணினி காலம் முதல் 2700 ஆண்டுகளாக உபயோகத்தில் உளது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டன் கவிஞர் ஏ .நாராயணன், ஆகஸ்ட் 2021ல் எழுதிய 4 கவிதைகள் :
(ரசாயன பாடத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அத்திபள்ளி நாராயணன் சமீபகாலமாக கவிதை மழை பொழிந்து வருகிறார்.அவருடைய கவிதைகள் இந்த ‘பிளாக்’கில் முன்னரே வெளியாகியுள்ளன- SWAMINATHAN.)
xxx
தாமரையோ மறையோ
குவித்த கரமொத்த தாமரை மொட்டு
குட்டை நீரில் நெட்டாய் நிற்கத் தொட்
டதோ காலை இளங்கதிரோன் விரிந்ததோ
இதழ்கள் முத்துப் பனித்துளிகள் ஒத்தணம்
கொடுக்க அடுக்கடுக்காய் இதழ்கள்
நடுவே மகரந்தமே மந்தகாசமாக
நறுமணம் வீசிய நல் வரவேற்பில்
தேனீக்களிதழ் இதழாய்த் தாவித்தாவிய
ரீங்காரமோ! தாமரையிலமர்ந்த பிரம்மன்
ஓதிய வேதம் பதிந்த இதழ்கள் துடிப்பு?
இதழ் பதிந்த வேதத்தை மொட்டு நிலை
யிலிரவெலா மோதிப் பயின்றுக் காலை
யிலே கதிரோன் தட்டி எழுப்ப விரித்த
இதழ்களில் மொய்த்த வண்டுகள் வேதம்
பயில வேதமே இனிய நாதமாய் ஒலித்த
வாணியின் வீணை இசையோ! இவ்வண்டு
களின் ரீங்காரமாயின் வேதமும் நாதமும்
கமலக்கண்ணனிடம் சங்கமமான சாம
வேதமாய் வேய் குழலொலித்த கானம்
தாமரை தன்னுள்ளடக்கிய மறையே
— நாராயணன்
xxxx
எது வழி?
உருவமும் அருவமும் அவரவர் அறி வழி
தருவதும் பெருவதும் அவரவர் தவ நெறி
நிற்பதும் நடப்பது மவன் விதித்த வழி
நிர்க்குணமும் சகுணமும் நிழலும்
நிசமும் போன்ற மொழி
சமத்துவமும் தத்துவமும்
சம நிலை மனமொழி
அரியும் அயனும் அவரவர் அறியும் வழி
— நாராயணன்
xxxx
மாலனோ மாயனோ
ஒன்றோ பலவோ
ஒன்றினின்று பலவோ
பலகூடி ஒன்றோ
படைப்பில் பலவும்
ஒன்றுமாய் நின்று
மாயையில் மக்களை
மேய்ப்பவன் மாலனே
–நாராயணன்
xxx
அறுபடும்அறம்
அவரவர் அறம் அவரவர் நிலைக்கேற்ப
அதனினு மினிதோ இருப்பதைப் பகிர்வது
வழிந்தோடும் ஏரி வாய்க்காலாய்ப் பாய்வது போலோ
வரம்புக்கு விஞ்சிய செல்வன் வாரிக் கொடுப்பது
வறுமையிலு மிருந்ததைப் பகிர்ந்தின்புறுவோனையோ
வானவரும் வையகத்தோருமென்றும் வாழ்த்துவர்
நாராயணன்
–subham—
tags- நாராயணன், கவிதைகள், எது வழி , தாமரை, அறுபடும் அறம் ,மாலனோ ,மாயனோ
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இது எங்கள் தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ .சந்தானம், மதுரைக் கல்லூரி பேராசிரியர் தி. சேஷாத்ரி எழுதிய துளசி இராமாயண நூலுக்கு எழுதிய முன்னுரை. ஆகஸ்ட் 15ம் தேதி அவருடைய நினைவு தினம். அன்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி இது
BOOK DATED 2 OCTOBER 1954
AUTHOR – T SESHADRI, HINDI LECTURER, MADURA COLLEGE, MADURAI, MADRAS STATE (TAMIL NADU).
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
முதல் உலக யுத்தம் முடிந்த காலத்தில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக உருவானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி. ALDOUS HUXLEY அவருடைய கட்டுரைகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுவன.
பிரேவ் நியூ ஒர்ல்ட் BRAVE NEW WORLD என்ற அவருடைய புதினம் மிகவும் வரவேற்பைப் பெற்றது.
ஹக்ஸ்லி மிகவும் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தை நாடே அறியும். ஏனெனில் ஹக்ஸ்லியின் தாத்தா தாமஸ் ஹக்ஸ்லி ஒரு உயிரியல் விஞ்ஞானி. டார்வினின் பரிணாமக் கொள்கை THEORY OF EVOLUTION உருவாக அவரும் உதவி செய்தார். ஆகையால் அவருக்கும் ஈடன் கல்லூரியிலும் ETON COLLEGE ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்க வாய்ப்பு கிடைத்தது. ஆயினும் அவருக்கு 16 வயதில் ஏற்பட்ட ஒரு கண் நோய் அவரை ஏறத்தாழ குருடராக (nearly blind) ஆக்கிவிட்டது.
முதல் உலகப் போரில் சண்டை போட வேண்டும் அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற அவருடைய ஆசை பொய்யாய் பழங் கனவாய்ப் போயிற்று. அதிலும் ஒரு நன்மை விளைந்தது. அவர் கவிதை எழுதுவதிலும் கதை எழுதுவதிலும் கவனத்தைச் செலுத்தினார். 27 வயதிலேயே அவருடைய முதல் நாவல் க்ரோம் யெல்லோ CHROME YELLOW வெளியானது ; சமுதாயத்தின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும் நக்கலும் நகைச் சுவையும் மிகுந்த நாவல் அது. அடுத்து வந்த 4 நாவல்களில் ஒன்றுதான் பிரேவ் நியூ வோர்ல்ட் . இது அவருக்கு இலக்கிய உலகிலும் சமூகத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்தது.
எதிர்காலத்தில் உருவாகும் கட்டுப்பாடு மிக்க, தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு சமுதாயத்தை வருணிக்கும் நாவல் அது. அதில் ரிக் வேத தாக்கத்தையும் காணலாம்.மக்களை எப்போதும் மகிழ்சசியில் திளைக்கச் செய்ய ‘சோமா’ SOMA என்னும் ஒரு அபூர்வ குளிகை உருவாக்கப்படுவது குறித்து அந்த நாவல் பேசுகிறது. ரிக் வேதத்தின் 10 மண்டலங்களிலும் உள்ள பல்லாயிரம் மந்திரங்களில் அற்புதமான சோமரசம் பற்றி ரிஷிகள் பாடியுள்ளனர். (ஆனால் அந்தக் குளிகை இப்போது அழிந்து போயிற்று) ‘சோமா’ வுடன் ஹக்ஸ்லி நிறுத்தவில்லை. எந்த வேலை பார்க்க என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டு குழந்தை பெறும் அறிவியல் முன்னேற்றம் குறித்தும் எழுதியிருக்கிறார். ஆயினும் மக்கள் ஆன்மா ( SOULLESS, EMOTIONLESS) இல்லாதவர்களாக உணர்ச்சி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்று சொல்லி மேலை நாட்டு நாகரீகத்தின் மீது கேள்விக்குறிகளைப் போடுகிறார் . அதாவது தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்து நிற்கும் அதே நேரத்தில் மக்கள் அடிப்படை பண்புகளை இழப்பத்தைச் சித்தரிக்கும் நாவலே BRAVE NEW WORLD பிரேவ் நியூ வோர்ல்ட் / துணிச்சல் மிக்க புதிய உலகம்.
தீவு என்ற அவருடைய கடைசி நாவலில் நிறைய இந்துமத குறிப்புகள் வருகின்றன . சிவ பெருமானுடைய ஆனந்த நடனம், மோக்ஷம், முருகன் மைலேந்திர என்ற தமிழ் கதாபாத்திரம், ராஜா, ராணி, மற்றும் நிறைய சம்ஸ்க்ருத சொற்கள் இடம்பெறுகின்றன . இது மத தாக்கத்தை இதில் அதிகம் காணலாம்.
பிரான்ஸ், இதாலி ஆகிய நாடுகளில் வசித்துவிட்டு ஹக்ஸ்லி, அமெரிக்காவுக்குச் சென்று ஹாலிவுட்டில் சினிமா கதை வசனம் எழுதினார். வாழ்நாளின் இறுதிவரை கலிபோர்னியாவில் இருந்து நாவல்கள், கவிதைகள், தத்துவம் பற்றிய கட்டுரைகள் , அரசியல் விஷயங்கள் ஆகியவற்றை எழுதி வந்தார் . ரிக் வேத சோமா குளிகை பற்றிய அவருடைய சிந்தனை மனதை மாற்றக்கூடிய மருந்துகளை (MIND ALTERIG DRUGS) உருவாக்கும் விஷயம் பற்றியும் எழுதத் தூண்டியது. இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகள் பற்றியும் இரண்டு புஸ்தகங்களை எழுதினார்.