உலக இந்து சமய செய்தி மடல் 8-8-2021 (Post No.9951)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9951

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை AUGUST 8  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’ என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’ அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் அயோத்தியில், உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.மத்திய அரசு அமைத்த, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, கோவிலை கட்டி வருகிறது.

அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மூன்று மாடிகள், ஐந்து மாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகள் முடிந்து, 2023ம் ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசினத்துக்காக கோவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டுக்குள் முடியும் என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

XXX

இந்து கோவில் தாக்குதல்; பாகிஸ்தான் பார்லிமெண்ட் கண்டனம்


பாகிஸ்தானில் ஹிந்து கோவில் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு பார்லிமென்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள போங்க் நகரில் 100க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூட்டமாக சென்று அங்குள்ள ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கோவில் சேதமடைந்துள்ளது. அங்கிருந்த கடவுள் சிலைகளையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

பாகிஸ்தான் பார்லிமெண்டில் இந்த பிரச்னை பற்றி பாக்., ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் வங்வானி பேசுகையில், ”கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது; இது நாட்டுக்கே அவமானம். இதை  கண்டிக்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து கண்டனம் தெரிவித்து, பார்லிமெண்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹிந்து கோவில் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாக்., உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, தானாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக கூறிய நீதிபதி, நடந்த சம்பவம் குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்யவும், கோவிலை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.

இதோ வங்க தேசத்திலிருந்து ஒரு செய்தி

நமது பக்கத்து  நாடான வங்கதேசத்தில் குமிலா மாவட்டத்தில் 1,000 ஆண்டு பழமையான விஷ்ணுவின் கருங்கல் சிலை மீட்கப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்து இந்த சிலை மீட்கப்பட்டுள்ளது. கிராமத்தில் குளம் தோண்டும்போது இந்த சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. போலீசுக்கு தெரிவிக்காமல் வீட்டில் வைத்திருந்ததாக அந்த ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

XXXX

பாரத மாதாவுக்கு ‘நினைவாலயமா? நினைவாலயம் என்பதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு

DINAMALAR NEWS

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் உள்ளது. இங்கு, பாரத மாதா சிலை வைக்க வேண்டும் என்பது, சுப்ரமணிய சிவாவின் கனவு. இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி, பாரத புரத்தில், 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, பாரத மாதா ஆலயம் கட்ட பாடுபட்டார்.

போதுமான நிதி திரட்ட, ஊர் ஊராக நடை பயணம் சென்றார். 1923ல், சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து, பாரத மாதா ஆலயத்துக்கு, அடிக்கல் நாட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், சிவா இறந்து விட்டார். இதனால், அவரது கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், 1.5 கோடி ரூபாயில், அதே பாரத புரத்தில், பாரத மாதாவுக்கு, தமிழக அரசு சார்பில், நினைவாலயமும் அருகில் நுாலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்தார், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்.

 இதற்கிடையில், பாரத மாதாவுக்கு எப்படி “நினைவாலயம்” எழுப்பலாம் என பா.ஜ.,வினர் கேட் கின்றனர்.


இது குறித்து, அக்கட்சியின் மாநில பொருளாளர் சேகர் கூறியதாவது:சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேற, நிறைய பேர் முயற்சி எடுத்தனர். தமிழக காங்., தலைவராக இருந்த குமரி அனந்தனும் முயற்சித்தார். அங்கிருக்கும் மக்களும், பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு ஆலயமும், பக்கத்தில் நுாலகமும் கட்டி முடிக்கப்பட்டது. அதை திறந்து வைப்பதற்குள், இ.பி.எஸ்., ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.



ஆனால், பாரத மாதா “நினைவாலயம்” என, அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு தான் “நினைவாலயம்” கட்டப்படும். கோடிக்கணக்கானவர் மனங்களில் வாழும் தெய்வம் பாரத மாதாவை சாகடித்துள்ளனர். இது, பாரத மாதாவை நேசிக்கும் இந்தியர்களுக்கு தலைக்குனிவு என்று B J P மாநில பொருளாளர் சேகர் கூறினார்.


XXXXX

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செடி, கொடிகள் முளைத்திருந்த ராஜகோபுரத்திற்கு ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தினகரன் செய்தி எதிரொலியாக ெதாடங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் தரைக்கோட்டைகளில் வலுவானதாக தற்போதும் விளங்கி வருவது வேலூர் கோட்டை. வேலூர் கோட்டைக்கு முன்னதாகவே அங்கு சம்புவராயர்களால் ஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு, கோட்டையை கட்டமைத்த விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். என்று தினகரன் நாளிதழில் கடந்த 2ம் தேதி படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக, வேலூர் கோட்டை ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும், ரசாயன கலவை பூசி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து இந்திய தொல்லியல்துறை வேலூர் முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ் சுரேஷ் கூறுகையில், ‘வேலூர் கோட்டை ஜலகண்ேடஸ்வரர் கோயில் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் ரசாயன கலவை பூசி சீரமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பறவைகள் எச்சத்தினால் செடி, கொடிகள் முளைப்பது தடுக்கப்படும். மழைநீரும் கோபுரத்தில் ஊறி பாசி படர்வது, பூஞ்சைகள் படர்வது இருக்காது. இப்பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும், என்றார்.

XXX

திருத்தணி முருகனுக்கு திருப்பதி பாலாஜி  கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா ஆகஸ்ட் 2ம் தேதி நடந்தது. திருத்தணி முருகனுக்கு, திருப்பதி பெருமாள் சீர் கொடுக்கும் சிறப்பு வைபவம் அப்போது  நடந்தது. இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பலர் திருததணிக்குச் சென்றனர்.

அவர்கள், பெருமாள் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் தட்டுகளில் பல விதமான பழங்கள், மங்கள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். அவர்களுக்கு, திருத்தணி முருகன் கோவில் தேர் வீதியில் மேள தாளம் முழங்க சிறப்பு மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாளின் சீர் வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி  தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஒரு தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து சமர்ப்பணம் செய்தார்.

XXXX

ஆகஸ்ட் 11ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா

108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். லட்சுமி தேவியின் அம்சமாகிய ஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின், பாமாலை பாடி, இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.

இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா 3-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் இன்று கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை.


சென்ற வருடம் போல் இந்த வருடமும் அனைத்து திருவிழா நடைமுறைகளும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆடிப்பூரத் திருவிழாவின் 2-ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஆடிப்பூர விழாவில் 5-ம் திருநாள் 7-ம்தேதியும், கருட சேவை 9-ம்தேதியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான திருஆடிப்பூர தேரோட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது. சென்ற வருடம் போல் இந்த வருடமும் கோவில் பிரகாரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டாள்-ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.

MALAI MALAR NEWS

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

TAGS- TAMILHINDU, NEWS ROUNDUP, 882021, RANI

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 8-8 -2021 (Post No.9950)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9950

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

20 arrested, for attack on Hindu temple in Pakistan

Police in Pakista

n’s Punjab province on Saturday have arrestED 20 people and booked over 150 others for their alleged involvement in an attack on a Hindu temple in a remote town of the country.

The police action came after the country’s Supreme Court on Friday pulled up authorities for failing to stop the attack and ordered the arrest of the culprits, observing that the incident has tarnished the image of the country abroad.

Hundreds of people, carrying sticks, stones and bricks attacked the temple, burning parts of it and damaging the idols, in Bhong area of Rahimyar Khan district of the province in protest against the release by a court of an eight-year-old Hindu boy, who was arrested for allegedly urinating in a local seminary.

“We have so far arrested over 20 suspects allegedly involved in attacking the temple in Bhong,” District Police Officer (DPO) of Rahim Yar Khan Asad Sarfraz told reporters.

He said more arrests are expected in the coming days as police are identifying the suspects through video footage. An FIR has been registered under terrorism and other sections of the Pakistan Penal Code he said.

On Friday, Chief Justice of Pakistan Gulzar Ahmed said that vandalism at the temple had brought shame to the country as police acted like silent spectators. The Chief Justice wondered at the arrest of the eight-year-old boy and asked whether police were incapable of understanding the mental capacity of the minors.

Pakistan’s parliament on Friday condemned the temple attack by adopting a resolution. The hearing in the case has been adjourned till August 13.

India on Thursday summoned the Pakistani charge d’affaires in New Delhi and lodged a firm protest, expressing grave concerns at this reprehensible incident and the continued attacks on the freedom of religion of the minority communities and their places of religious worship in Pakistan.

Hindus form the biggest minority community in Pakistan. According to official estimates, 75 lakh Hindus live in Pakistan. However, according to the community, over 90 lakh Hindus are living in the country. The majority of Pakistan’s Hindu population is settled in Sindh province.

XXXX

Giant sea waves swallow centuries-old temple in Odisha’s Kendrapara district

The marauding sea that had been eroding the coastline in Kendrapara for decades, devouring one village after another, recently razed to the ground the centuries-old Pancha varaahi temple.

Away from their hometown, much of which has been eaten up by the sea, some of its former residents, however, visited Satabhaya village from time to time to pay obeisance at the Pancha varahi temple, although the idol of the deity has also been relocated to the rehabilitation colony.

Shivendra Narayan Bhanjadeo, the scion of an erstwhile royal family of Rajkanika and the trustee of the temple, said Satabhaya has lost its identity with the caving-in of the shrine.

 The distance between the sea and the temple was around three kilometers some three decades ago. Now the sea has successfully gobbled up the centuries-old temple. For all practical purposes, Satabhaya has now lost its geographical identity,” Bhanjadeo added.

XXXX

Swami Vivekananda’s statue unveiled  in London

PICTURE AND NEWS FROM ASIAN VOICE, LONDON

The first outdoor statue of Swami Vivekananda in the United Kingdom, sculpted in Portland stone was unveiled on 28 July to commemorate Swamiji’s arrival to England 125 years ago outside of Harrow Arts Centre in greater London area.

A vision of the late and former Mayor Cllr Mrinal Choudhury, who passed away on 1 August 2020, the statue was unveiled by The Mayor of Harrow Ghazanfar Ali. Deputy Mayor Sasikala Suresh, Manmeet Singh Naran, Minister for Coordination at the Indian High Commission and Swami Sarvasthananda of Ramakrishna Vedanta Centre, UK were also present. 

Swami Vivekananda travelled to the UK twice, in 1895 and 1896, lecturing successfully here. In November 1895, he met Margaret Elizabeth Noble an Irish woman who would become Sister Nivedita. During his second visit to the UK in May 1896 Vivekananda met Max Muller, a noted Indologist from the University of Oxford who wrote Ramakrishna’s first biography in the West.

Xxx

Ayodhya Ram temple likely to open to devotees by 2023-end

The Ram temple in Ayodhya will be opened to the public by the end of 2023, even though the entire complex is expected to be ready only by 2025, a person aware of the matter said on Wednesday.

The foundation stone of the temple was laid by Prime Minister Narendra Modi on August 5, 2020, and a year on, construction is on in full swing.

The ground floor of the temple, where the sanctum sanctorum will be located and where an idol of Ram Lalla will be placed, will be ready for prayers by December 2023 and arrangements are being made to streamline the process of providing security clearances and installing public amenities, said another person aware of the details.

The temple complex, which is expected to incur a cost of ₹900-1,000 crore and will be spread over 110 acres of land, is being built by Larsen & Toubro while Tata Consulting Engineers has been signed on as the project management consultant.

The temple complex will also have a museum, a research centre, and an archival centre.

XXXXX

MADRAS HIGH COURT seeks treatment of ethical treatment of cattle donated to Temples

Pointing out that the religious beliefs have to be respected and the cattle treated in a human and dignified manner as they are also living creatures, the first bench comprising Chief Justice Sanjib Banerjee and Justice P D Audikesavalu sought details of the standard operating procedure that may be in place for the well-being of the cattle.

The bench also appealed to the State to treat such animals in the most ethical manner and as per the intention of the donors until the issue is dealt in a wholesome manner by the court.

The court while adjourning the case by six weeks after seeking for the necessary report from the state by collating all materials by then, also recorded the petitioner Rangarajan Narasimhan’s submission that once a cow stops producing milk or a male calf is born or there is a bull which is useless in breeding purposes, they are disposed of in an unethical manner by sending them to slaughter houses much against the religious beliefs of the institutions and the donors.

XXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

XXXXXXXXXXXXX

 TAGS- HINDU, NEWS ROUNDUP, 882021, GNANAMAYAM

APRIL 2020 London Swaminathan Articles, Index-89 (Post No.9949)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9949

Date uploaded in London – 8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

April 2020 Index 89

Teacher who hugged a Tiger got killed, 7770;April 1,2020

Stranger Greek Prayers,7774;2/4

Swami s crossword 242020;7775;

Modi is a Magician,Modi is a Ghost buster,7778;3/4

Tamil Sword and Greek Sword,7782;4/4

Swami’s crossword 442020;7784

Advertising Anecdotes,7787;5/4

Mahabharata Puzzle in Sangam Tamil literature, 7791;6/4

Swami’s crossword 642020;7792;

Interesting Historical Information from

Harsha Charita, 7795;7/4

New Information on Brahmin Country and

Shudra country,7798;8/4

Rama and Lakshmana are Udhya and Bidhya Rivers,7799;8/4

Swami s crossword 842020;7800

Don’t trust your Father and Swindler Anecdotes,7804;9/4

Yavanas are Hindus,but not all Yavanas are Greeks,7808;10/4

Swami’s crossword 1042020;7809

Money means Murder,7813;11/4

Atonement for Brahmins, 3000 Gayatri for a month,7819;12/4

Swami’s crossword 1242020;7818

Real Estate and Fire Insurance Anecdotes,7823;13/4

Swami’s crossword 1342020:7824

More folktales,Riches are destructible, Learning is

Indestructible , 7828;14/4

Tamil Siddhars and Vedic Symbolism in poetry, 7831;15/4

Swami s crossword 1542020;7832

Bankers and eagles, Abraham Lincoln 7836;16/4

Swami’s crossword1742020;7841;

Sangam tamil verse throws more light on Rigveda,7842;17/4

The Tamils 3000 years ago, 7845;18/4

More Banks Anecdotes, 7851;19/4

Swami’s crossword 1942020;7852

The Tamils……part 2;7855;20/4

Ascetics who rolled Boulders Every day and Laughed,7856;20/4

Wonder rock in Tamil Nadu 7860;21/4

Prince and the Ascetic, 7862;21/4

Swami’s crossword 2142020;7863

Astrology- Cock and Chicken in

Rome and Greece,7867;22/4

Dog and the Room of Mirrors,7870;24/4

Swami’s crossword 2442020:7877

Tamils knew River Ganga but not Sindhu,24/4:7875

Tolkappiar statue in Indonesia? 7884;27/4

Wealth and Collection Anecdotes,7880;25/4

Swami’s crossword 2742020;7891

31 Quotations on Patience and Forbearance,7889;27/4

Faith story and Mahatma Gandhi,7895;28/4

Panini’s Interesting titbits on 27 Stars,7900;29/4

Swami’s crossword 3042020;7905

Why did Valmiki name Monkey canto as Beauty Canto? 7904;30 April 2020

Xxx

ஏப்ரல் 2020 கட்டுரைகள்

பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !7769, ஏப்ரல் 1, 2020

த .கு.போ 142020, 7771

(தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி)

குக்கூ என்றது கோழி- பெண்களின் மாதவிலக்கு பற்றிய

சுவையான பாடல்,7773;2/4

மோடி ஒரு மந்திரவாதி! மோடி ஒரு தீர்க்கதரிசி, 7779, 3/4

வள்ளல் சீதக்கத்தியை இழந்து வருந்திய

புலவரின் பாடல்கள்; 7776, 3/4

த .கு.போ 342020, 7780

பெண்ணைஎதிர்பார்த்து புலியிடம் சிக்கியா ஆசிரியர், 77834/4

த .கு.போ 542020, 7788

சங்க இலக்கியத்தில் காம் பிரம்மாஸ்மி, 7786;5/4

சங்க இலக்கியத்தில் தரும புத்திரன் யார்? பெரிய புதிர், 7790;6/3

ராமனும் லெட்சுமணனும் உத்ய பித்ய நதிகள் ,7794; 7/4

த .கு.போ.742020; 7796

த .கு.போ.942020; 7805

வீணைக்குள் கத்தியை வைத்துப் படுகொலை 7803;9/4

த .கு.போ.1142020; 7814

யவனர்கள் கிரேக்கர்களா? இல்லை/ஆமாம் ,7812;11/4

மகனே! உன் அப்பாவைக் கூட நம்பாதே 817;12/4

பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப்

 போகின்றன -மநு 7822;13/4

அணுகுண்டுக்கு சக்தி தரும்; மரகதத்துக்கு ஒளியூட்டும் பெரில் லியம்; 7827;14/4

சித்தர் பாடல்களில் எண்கள் – ரிக்வேத எதிரொலி;7835; 16/4

த .கு.போ.1642020; 7837

புறநானூற்றில் 21 யாகங்கள் பற்றிய அதிசயச் செய்திகள், 7840,17/4

அகஸ்தியர் பற்றி தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கல்வெட்டுகள் ,7846, 18/4

த .கு.போ.1842020; 7847

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்;7850;19/4

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்-பகுதி -2, 7855, 20/4

நாடகத்தில் யாருக்கு என்ன கலர்? என்ன மொழி? 7861, 21/4

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம், 7866, 22/4

சிலப்பதிகாரக் கதை- கோழி, யானை சண்டை, 7871, 23/4

த .கு.போ.2342020; 7872

த .கு.போ.2642020; 7886

த .கு.போ.2842020; 7896

ஊ ஊ ஊ ஊ ஊ …. சிலப்பதிகார நரிக்கதை ,7876, 24/4

இந்தோனேஷியாவில் தொல்காப்பியர் சிலை, 7885, 26/4

ரிக்வேத பூகோளம் – மாக்ஸ்முல்லர்களுக்கும்

கால்டுவெல்களுக்கும் செமை அடி ; 25/4; 7881

சூரியனுக்கு மகன் சனி, விளக்கிற்கு மகன் கருப்பு மை ,

மே மாத காலண்டர், 7890, 27/4

வெள்ளைக்காரன் விளக்கங்களை நம்பாதே, 7894, 28/4

27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம்?-1; 7899, 29/4

அஸ்வினி முதல் நட்சத்திரம் இல்லை! 30 ஏப்ரல் 2020, 7903

–சுபம் —

TAGS -INDEX 89, APRIL 2020 INDEX, LONDON SWAMINATHAN

முயற்சியே வெற்றி தரும்! (Post No.9948)

OLYMPIC GOLD MEDAL WINNER NEERAJ CHOPRA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9948

Date uploaded in London –  8 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9862 (வெளியான தேதி: 18-7-2021)

முயற்சியே வெற்றி தரும்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் இருபது சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ஷதேஷு ஜாயதே ஷூர: சஹஸ்ரேஷு ச பண்டித: |

வக்தா தசஸஹஸ்ரேஷ் தாதா பவதி வா ந வா ||

நூற்றில் ஒருவனே சூரனாகிரான். ஆயிரத்தில் ஒருவனே பண்டிதனாகிறான். பத்தாயிரத்தில் ஒருவனே பேச்சாளனாகிறான். ஆனால் ஒரு கொடையாளி பிறக்கிறானோ இல்லையோ யாருக்கும் தெரியாது!

Among hundreds a hero may be born, a scholar among thousands, an orator among tens of thousands but one does not know whether a donor is born or not!

யதி சந்தி குணா: பும்ஸாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் |

நஹி கஸ்தூரிகாமோத: ஷபதேன நிதார்யதே ||

நற்குணங்கள் இருப்பின் அவர்கள் தாமாகவே விகசிக்கிறார்கள். கஸ்தூரியின் மணத்தை யாராலும் உறுதிமொழியாலோ ஸத்யபிரமாணத்தினாலோ தடுத்து விட முடியாது.

If people have merits then they bloom of their own accord. Nobody can stop the fragrance of musk with an oath or swearing.

உத்தமேன ஹி சித்யந்தி கார்யாணி ந மனோரதை: |

ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||

பெரும் திட்டங்கள் முயற்சியினாலேயே வெற்றி பெற்று முடிகின்றன. வெறும் ஆசையினால் அல்ல. தூங்குகின்ற சிங்கத்தின் வாயில் மான் தானாகச் சென்று நுழையாது.

Projects attain consummation surely by endeavor only and not by mere desires. Verily the deer do not enter the mouth of the lion who is fast asleep.

பூர்வஜன்ம க்ருதம் கர்ம தத்தைவமிதி கத்யதே |

தஸ்மாத் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||

பூர்வ ஜன்மத்தில் செய்த கர்மங்களே அதிர்ஷ்டம் அல்லது கடவுள் என்பதாகும்.ஆகவே முயற்சி இல்லாது அதிர்ஷ்டம் அல்லது கடவுள் என்பது இல்லை.

The endeavor made in the last birth is what is known as (luck or) God. Hence no God (or luck) can succeed without endeavor.

அல்பானாமபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்யசாதிகா |

த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மத்ததந்தித: ||

அல்பம் என்றாலும் கூட அந்த வஸ்துக்கள் கூட்டாகச் சேரும் போது ஒரு செயலை முடிக்கின்றன.  மதம் பிடித்த யானை தான் என்றாலும் கூட புல் கட்டுகளால் சேர்க்கப்பட்ட கயிறு அதைப் பிணைத்து விடுகிறது.

The group of even trivial things (united) accomplishes the action. The rutty elephants are tied by means of a rope formed of blades and grass.

***

INDEX

சூரன், பண்டிதன், பேச்சாளன், தனவான்

கஸ்தூரி மணம், நற்குணங்கள்

அதிர்ஷ்டம், கடவுள், முயற்சி

கூட்டாக இருந்தால் வெற்றி

மத யானை, புல்கட்டுக் கயிறு

TAGS- முயற்சி, வெற்றி ,

PLEASE JOIN US TODAY 8-8-2021

8-8-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON THIRUVIDAIMARUDUR TEMPLE8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  BY RANI SRINIVASAN

–20 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 60 minutes 

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS —  PUBLICITY8821

கண்ணதாசன் பாடல்களில் ரிக்வேத வரிகள் ! (Post No.9947)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9947

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழமையான சமய நூல் ரிக்வேதம். தற்காலத்தில் இதன் பழைய பகுதிகள் 3700 ஆண்டுகள் பழமையானது என்று எல்லோரும் எழுதத் துவங்கிவிட்டனர். ஆயினும் இந்துக்களின் பஞ்சாங்கக் கணக்குப்படி இது 5250 ஆண்டுகளுக்கு முன்னரே வியாசரால் சரிபார்க்கப்பட்டது என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது’

ரிக்வேதம் முதலான நான்கு வேதங்களையும் அழகுபடப் பிரித்து தன்னுடைய 4 சீடர்களை அழைத்து பரப்பும் பொறுப்பை ஒப்படைத்ததார் வியாசர். ஆயினும் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும், ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானசாஸ்திர அடிப்படையில் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முறபட்டது என்று எழுதியுள்ளனர்.

இதில் சவிதா, ஆதித்ய என்ற பெயரில் சூரியனைப் போற்றும் மந்திரங்களும், முழுப்பாடல்களும் உள்ளன. ரிக்வேதம் முழுதும் 100, 1000 என்ற எண்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வேறு எந்த பழைய நூல்களிலும் இப்படி 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச(DECIMAL SYSTEM)  முறையைக் காணமுடியாது. நாம் சாதாரணமாக விஷ்ணு ஸஹஸ்ரநாம துதியிலும் கூட விஷ்ணுவை “சஹஸ்ரகோடி யுகதாரிணே” என்று அழைக்கிறோம். ஆயிரம் கோடியுகங்களை  நாம் எண் வடிவில் எழுதிக் காட்டக்கூட முடியாது .

ஆக ஆயிரம் என்பது ரிக் வேதத்தில் குறைந்தது இரண்டு பாடல்களிலாவது சூரியனுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. ‘’ஆயிரம் கொம்புகள் உடைய காளை கடலில் எழுத்து எழுவதாக’ ரிஷிகள் பாடுகின்றனர். இதற்கு பாஷ்யம்/ உரை எழுதிய சாயனர் ஆயிரம் கிரணங்களுடைய சூரியன் கடலில் அல்லது நீர்நிலையில் இருந்து எழுவதாக எழுதியள்ளார். ஆக முதல் வரியே ரிக்வேத வரி.

இன்னொரு ஒப்புமை தாய் என்ற சொல்லில் உள்ளது. சூரியன் ஆணா , பெண்ணா ? உலகிலேயே சூரியனை ஆணாகவும் பெண்ணாகவும் காண்பது இந்தியாவில் மட்டுமே. காயத்ரீ என்ற தேவதை வேத மாதா என்று புகழ ப்படுவாள். அவரை பிராமணர்கள் தினமும் மூன்று முறை சூரியனை நோக்கி தண்ணீரை தானமாகக் கொடுத்துவிட்டு வழிபடுவர். ஒரு காலத்தில் நாலாவது வருணத்தவரைத் தவிர மற்ற எல்லோரும் காயத்ரியை வழிபட்டனர் . ஆக வேத மாதாவை கண்ணதாசன் பாடல் (கர்ணன் திரைப்படம்) தாய் என்று சூரியனைக் குறிப்பிடுவதில் தெளிவாகிறது .

உலகிலேயே இந்துக்கள் மட்டுமே சூரியனை இப்படி ஸவித்ரு தேவனாகவும் காயத்ரீ மாதாவாகவும் வருணிக்கின்றனர். இதுதவிர சூரியனின் புதல்வியை சூர்யா (தமிழில் ஜம்புநாதன் சூரியை என்று மொழிபெயர்ப்பார்) என்றும் சூரியனுக்கு முன்னர் தோன்றும் விடியற் பொழுதை உஷா ( உஷை என்பது தமிழ் வடிவம்) என்றும் வருணிப்பர். அதாவது அனைத்தும் பெண்கள்.

XXX

பாரதியும் கூட காயத்ரீ மந்திரத்தை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் — அவன்

எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல

 மங்களம் வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே …….

என்று அழகாகத் தமிழ் சொற்களில் வடித்துள்ளார்.

சூரியன் உதித்தவுடன் உயிர்கள் எல்லாம் புத்துணர்வு பெற்று உற்சாகத்துடன் புறப்படும் காட்சியையும் வேத விற்பன்னர்கள் குறிப்பிடத் தவறவில்லை .

இதோ சில மந்திர வரிகள்; இவற்றைக் கண்ணதாசனின் “ஆயிரம் கரங்கள் நீட்டி” என்று துவங்கும் திரைப்படப் பாடலுடன் ஒப்பிட்டு மகிழுங்கள்

ரிக் வேதம் 7-55

நாங்கள் ஆயிரம் கொம்புகளோடு சமுத்திரத்திலிருந்து எழும் காளை மாட்டைக் கொண்டு மனிதர்களை உறங்க வைக்கிறோம் (சூரியன் மறையும் பொழுது)

5-1-8

அக்கினியைத் துதிக்கையில் சூரியனை 1000 கொம்புகள் உடையவன் என்று வருணிக்கிறார்கள் . (அது சூரியன் பற்றியது என்று உரைகாரர்கள் குறிப்பிடுவர்.)

5-44-2

ஒளி வீசும் நீ, மானிடர்கள் நலனுக்காக மேகங்களை எல்லாத் திசைகளிலும் பரத்துவாயாக ; நல்ல செயல்களை நடத்தும் நீ, மக்களைக் காப்பவனாகவும் இன்னல் விளைவிக்காதவனும் ஆக இருக்கிறாய். நீ எல்லா மாயைகளுக்கும் அப்பாற்பட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கிறாய்.

5-54-5

நாங்கள் சூரியனைப் போல தேயாதவனாக இருக்க வேண்டும் (சந்திரன் அப்படியல்ல).

5-54-15

நாங்கள் சூரியனைப் போல ஒளிவிட உன் அருளை வேண்டுகிறோம்.

5-81-5

நீ ஒருவனே உயிருள்ள எல்லா பிராணிகளையும் நடத்துகிறாய்;இவ்வுலகத்துக்கு எல்லாம் நீயே அரசனாக இருக்கிறாய்.

5-81-2

நீ எல்லா உருவங்களையும் ஏற்கிறாய்.மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நலத்தைத் தோற்றுவிக்கிறாய்.

5-82-9

உயிரினங்களுக்கு உயிரளிப்பவன் சவிதா /சூரியன்.

5-82-8

எப்போதும் விழித்திருப்பவன்; இரவையும் பகலையும் முந்துபவன்

7-71-1

கருப்பாயி சிவத்த ஆளுக்கு வழி விடுகிறாள் ( சூரியன் வந்தவுடன் இரவு போய்விடுகிறது

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள்நீக்கம் தந்தாய் போற்றி!
தாயினும் சாலப் பரிந்து சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

துாயவர் இதயம்போல துலங்கிடும் ஒளியே போற்றி!
துாரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி!
ஞாயிறு  நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!

கர்ணன் திரைப்படத்தில் T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு இசையுலகச் சக்கரவர்த்திகள் இணைந்து பாடியது.

ஆதித்ய, சவிதா, உஷத் காலம் (விடியற்காலம்/உஷா) என்ற மூன்று தலைப்புகளில் நிறைய பாடல்கள் உள்ளன.  விடியற்காலம் பற்றிய (உஷைபற்றிய ) பாடல்கள் உலகிலேயே மிகவும் அழகான கவிதைகளின் வரிசையில் வைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் போற்றி மகிழும் கவிதைகள் அவை . உதய காலத்தை ஒரு பெண்ணாக வருணித்து ரிஷிகள் பாடி மகிழ்கிறார்கள். உலகிலேயே பொழுது விடியும் முன் குளித்துவிட்டு கடவுளைக் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களே.

–SUBHAM–

tags- கண்ணதாசன் பாடல், ரிக்வேத வரிகள், ஆயிரம் கரங்கள் நீட்டி, சவிதா, ஆதித்ய, உஷா 

NOBEL LAUREATE TAGORE’S QUOTES (Post No.9946)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 9946

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BORN – MAY 7, 1861

DIED – AUGUST 7, 1941

India had many poets and playwrights during the Independence era but Rabindranath Tagore stood out as the ‘multifaceted genius’ who is known for his short stories, poetry, plays, dramas and novels.

Born on 7 May, 1861, Tagore began writing poetry at the young age of eight. He published his first collection when he was only 16 years old under the pseudonym Bhanusimha. From then on, his work as a great scholar, poet, novelist, musician, playwright, and artist took centre stage in his entire life.

Among the many awards to his name, Tagore became the first non-European to win the Nobel Prize in Literature in 1913. He was conferred with the prize for his poetry collection titled Gitanjali.

Tagore’s works were known across the world; they were also widely translated into languages including English, Dutch, German, Spanish, and other European dialects.

Other than his collections, Tagore will always be remembered for composing the National Anthems of two nations. For India, the Jana Gana Mana was composed by him while for Bangladesh Amar Shonar Bangla’s lyrics were written. Meanwhile, the Sri Lankan national anthem was also inspired by one of his works.

Tagore just did not enrich literature in the country, but also contributed to the freedom struggle in the pre-Independence stage. The nation was in mourning when he passed away on 7 August 1941.

On his 80th death anniversary, here are some inspirational quotes written by him:

  • Reach high, for stars lie hidden in you. Dream deep, for every dream, precedes a goal.
  • Don’t limit a child to your own learning, for he was born in another time.
  • You can’t cross the sea merely by standing and staring at the water.
  • The one who plants trees, knowing that he will never sit in their shade, has at least started to understand the meaning of life.
  • Love does not claim possession but gives freedom.
  • If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars.
  • Music fills the infinite between two souls

–From first post newspaper

tags- Tagore quotes

ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா (Post.9945)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9945

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டில்லி நகரில் கால் நூற்றாண்டுக்  காலம்  வாழ்ந்து, இந்தியா பற்றி ஆங்கிலத்தில் எழுதி, புக்கர் (Booker prize) பரிசு வென்ற திருமதி ஜாப்வாலா பிறந்ததோ ஜெர்மனியில்; குடி மகள் ஆனதோ அமெரிக்காவில்! மதமோ யூத மதம்!; மணந்ததோ இந்தியரை! இப்படி பன்னாட்டு வாசனை இருப்பதால் அவரே தன்னை ‘நான் ஒரு வெளியாள்’ I AM AN OUTSIDER என்று அழைத்துக் கொண்டார். இவரது புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படமாயின . இவர் நாவல், திரைக்கதை வசனம், சிறு கதைகள் எழுதுவதில் வல்லவர். பிறர் எழுதிய நாவல்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்றார்; பரிசுளைத் தட்டிச்சென்றார்.

ஜாப்வாலாவின் முழுப்பெயர் ரூத் பிராவர் ஜாப் வாலா RUTH PRAWER JHABWALA. அவர் ஜெர்மனியில் கொலோன் (COLOGNE)  நகரில் போலந்து நாட்டு, யூத மத தம்பதிகளுக்குப் பிறந்தார். ஹிட்லரின் நாஜி கொடுமை தாங்காமல் வெளி நாட்டுக்கு ஓடினார் . அங்கிருந்து வெளியேறக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு வந்தார். லண்டன் குயீன் மேரி கல்லூரியில் பிறந்தார். மும்பையில் பிறந்து டில்லியில் பிரபல கட்டிடக் கலைஞராகத் திகழ்ந்த சைரஸ் ஜாப்வாலா  (CYRUS JHABWALA, PARSI) என்ற பார்சிக்காரரைக் கல்யாணம் செய்துகொண்டார்; மூன்று மகள்களுக்குத் தாய் ஆனார்.

இவருக்கு இந்தியாவைவிட அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்தான் பெயரும் புகழும் அதிகம். சிறந்த ஆங்கில நாவல்களை எழுதினார்.

21 வயதில் பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்றபோது லண்டனுக்கு வந்த சைரஸ் ஜாப் வாலாவைச் சந்தித்து மணந்தார். பின்னர் அவருடன் தில்லிக்குச் சென்று 24 ஆண்டுகள் வாழ்ந்தார்.

இந்தியாவில் இருந்தபோது 29 வயதில் முதல் நாவல் அம்ரிதா AMRITA  வெளியானது. அதற்குப் பின்னர் அவர் எழுதிய நாவல்களும் இந்திய பூமியை அடித்தளமாகக் கொண்டவைதான். ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவை எடைபோடும் விதத்தில் இவருடைய நாவல்கள் இருந்தன. இதனால் வெளிநாட்டினர் மதித்தனர். இந்தியாவை  வெளிநாட்டினர் எடைபோடுவதை ஏற்காத இந்தியர்கள் இவரைக் கண்டு கொள்ள வில்லை.

அவருடைய 48-ஆவது வயதில் HEAT AND DUST ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ நாவல் அச்சானது. ஒரு பிரிட்டிஷ் பெண்மணி  இந்தியாவில் மேற்கொண்ட பயணம் பற்றியது இந்த நாவல். பிரிட்டனின் மிகப்பெரிய இலக்கியப்  பரிசான புக்கர் (BOOKER)பரிசு இதற்குக் கிடைத்தது.

அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பின்னர் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஐவரி, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் இஸ்மாயில் மெர்ச்சன்ட் (JAMES IVORY AND ISMAIL MERCHANT)  ஆகியோருடன் சேர்ந்து திரைப்படத் துறையில் நுழைந்தார். அவர் எழுதிய திரைக்கதை வசனம் இரண்டு முறை ஆஸ்கார் பரிசை ( A ROOM WITH A VIEW AND HOWARDS END ) வென்றது.

23 திரைக்கதை வசனங்கள், 12 நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள் இவருடைய கிரீடத்தில் சூடிய மலர்களாக மணம் வீசுகின்றன  1998ல் பிரிட்டனின் CBE சி.பி.இ. இவருக்கு கொடுக்கப்பட்டது.

பிறந்த தேதி – மே 7, 1927

இறந்த தேதி – ஏப்ரல் 3, 2013

வாழ்ந்த ஆண்டுகள் – 85

எழுதிய நாவல்கள் , கதைகள்:-

1956 – AMRITA

1958 – ESMOND IN INDIA

1960 – THE HOUSEHOLDER

1965 – A BACKWARD PLACE

1968- A STRONGER CLIMATE

1975- HEAT AND DUST

1986 – OUT OF INDIA- SELECTED STORIES

1987- THREE CONTINENTS

1993 – POET AND DANCER

1995- SHARDS OF MEMORY

–SUBHAM-

tags- ஆஸ்கர் பரிசு, நாவல் ஆசிரியை, டில்லிக்காரி ,ஆர் பி ஜாப்வாலா, R P Jhabvala

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! -2 (Post.9944)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9944

Date uploaded in London –  7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

350 ஆண்டுகள் வாழ்ந்த ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்! – 2

மதுரையில் அரசரடி அதிஷ்டானம்

ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.

இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.

அவர் சமாதியின் உள்ளே இருக்கிறார, அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!

முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்

ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.

தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.

குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.

பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின் விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.

ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

ஸ்வாமிகள் வாழ்வில் ஏராளமான அருள் திருவிளையாடல்கள் அவரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒரே ஒரு சுவையான சம்பவத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஸ்வாமிகள் ஒரு சமயம் வட நாட்டில் சிறிது காலம் இருந்தார். அவர் காசியில் இருந்த சமயம் காசி சப் கலெக்டராக பிராம்லி துரை என்பவர் இருந்தார்.

ஒரு நாள் தன் மனைவியுடன் பிராம்லி துரை உல்லாசமாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது குழந்தையானந்தர் அவதூத கோலத்தில் ஆடை எதுவுமின்றி அங்கே நடந்து சென்று கொண்டிருந்தர். இதைக் கண்ட துரைக்குக் கடும் கோபம் வந்து விட்டது. தன் சவுக்கால் அவர் ஸ்வாமிகளை அடித்தார். ஆனால் அவர் அடித்த அடி ஸ்வாமிகள் மீது விழவில்லை. மாறாக அவரது மனைவி மீது விழுந்தது. அவள் அலறினாள். துரைக்கு கோபம் இன்னும் அதிகமானது. ‘ஏதோ ஒரு மாயவேலைக்காரன் இவன்’ என்று எண்ணிய பிராம்லி துரை தன் சேவகர்களை அழைத்து ஸ்வாமிகளை தன் வீட்டுக்கு இழுத்துச் செல்லுமாரு ஆணையிட்டார்.

வீட்டிற்குச் சென்ற துரை அங்கிருந்த அனைவர் உடலில் இருந்தும் சவுக்கடி பட்டதால் ரத்தம் கசிவதைக் கண்டார். அவரது கோபம் உச்சமாகி, “இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்” என்று உத்தரவிட்டார்.

இருட்டறையில் ஸ்வாமிகள் அடைக்கப்பட்டார். பத்திரமாக அவரைப் பூட்டி விட்டு சாவியைத் தானே எடுத்துக் கொண்டு டாக்-கார்ட்டில் பயணமானார் பிராம்லி.

என்ன ஆச்சரியம்! துரையாலேயே பூட்டப்பட்ட ஸ்வாமிகள் அவருக்கு முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். துரைக்கு இப்போது கோபம் போய் பயம் வந்து விட்டது. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார்.

அவர்கள் ஸ்வாமிகளின் மஹிமையைக் கூறி, “அவர் மஹா பெரியவர். நீங்கள் செய்தது பெரிய அபசாரம். அவரிடமே மன்னிப்புக் கேட்பது தான் இதற்கான ஒரே பிராயசித்தம் “ என்றனர்.                                பிராம்லி துரை ஸ்வாமிகளை வணங்கி, தான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினார். ஸ்வாமிகள் கருணையுடன் அவருக்கு அனுக்ரஹித்தார்.

தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக நிஜமாக தனது அஞ்ஞானம் நீங்கிய அந்த தினத்தை நினைவு கூரும் விதமாக, ஆண்டு தோறும் ஸ்வாமிகளுக்கு ஆராதனை நடத்த அவர் ஒரு கட்டளையைக் காசியில் ஏற்படுத்தினார். இன்றும் அந்தக் குறிப்பிட்ட தினத்தில் அவரது கட்டளை தொடர்கிறது.

ஏராளமான அதிசய சம்பவங்களில் இன்னுமொரு சம்பவம் இது: 1920ஆம் வருட வாக்கில் மதுரை ஸ்டேஷனில் கல்யாணராமய்யர் என்பவர் ஸ்டேஷன்மாஸ்டராக இருந்தார். ஒரு நாள் ஸ்வாமிகள் சென்னைக்குப் புறப்படவிருந்த மெயிலில் முதல் வகுப்பில் ஏறி உட்கார்ந்தார். அது ஒரு வெள்ளைக்கார துரைக்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. துரை வந்து தனது இடத்தை விட்டே ஆகவேண்டும் என்று கோபமாகப் பேச, ஸ்டேஷன் மாஸ்டர் வந்து ஸ்வாமிகளைக் கீழே இறக்கி விட்டார். ரயில் கிளம்பும் நேரம் வந்தது. டிரைவர் எஞ்ஜினை இயக்கினார். அது நகரவில்லை. எவ்வளவோ முயன்றும் அது நகரவில்லை என்பதால்  காரணம் என்ன என்று ஆலோசிக்கத் துவங்கவே உடனடியாக அனைவரும் ஸ்வாமிகள் கிழே அமர்ந்திருப்பதால் தான் ரயில் நகரவில்லை என்று கூறினர். ஸ்டேஷன்மாஸ்டர் ஓடோடிவந்து ஸ்வாமிகளிடம் மன்னிப்புக் கேட்டு அவரை துரை இருந்த இடத்தில் அமர்த்தி அவருக்கு வேறு சீட் கொடுத்தார். ரயில் நகர்ந்தது. அதிலிருந்து ஸ்டேஷன் மாஸ்டர் அவரது பரமபக்தராகி விட்டார் என்பதைச் சொல்லவும் தேவையில்லை.

ஸ்வாமிகள் நூற்றுக் கணக்கில் ஆன்மீக ரகசியங்களை அவ்வப்பொழுது குழும் இருக்கும் பக்தர்களிடம் சொல்வதுண்டு. அவற்றில் மாதிரிக்காக ஒன்றே ஒன்றை இங்கே காண்போம்.  லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லும் போது ஆற்றிற்கு கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமாவிற்கும் முன்பும் பின்பும் ஓம் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று பாகீரதி அம்மாள் என்ற ஒரு சிஷ்யைக்கு ஸ்வாமிகள் உபதேசித்தருளினார்.இதுவே சஹஸ்ரநாமம் சொல்லும் சரியான வழி என்பது அனைவருக்கும் புரிந்தது!

ஸ்வாமிகளின் சிஷ்யர் ஸ்ரீ ராமலிங்க ஐயரை நானும் எனது குடும்பத்தினரும் பார்த்துள்ளோம். ஏதேனும் ஒரு பிரச்சினையை பக்தர் கூறினால், அவர் கையில் பிரச்சினைக்குத் தீர்வாக பெரிய எழுத்தில் பதில் வரும். இது ஸ்வாமிகளின் அனுக்ரஹமே என்று அவர் கூறுவார்.

இப்போதும் மதுரை அரசரடி அதிஷ்டானத்தில் அவரை வணங்கி அருள் பெறலாம்! அதிஷ்டானத்தில் அவரது சமாதியில் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம். ஆனந்தமானந்தகரம், ப்ரஸன்னம், ஞானஸ்வரூபம், நிஜபோத யுக்தம், யோகீந்த்ரமீட்யம், பவரோகவேத்யம், ஸ்ரீமத் குரும் நித்யமஹம் பஜாமி! ஸ்ரீமத்குழந்தையானந்தர் பாதகமலம் போற்றி!

                                                           ******

(இந்தக் கட்டுரை எங்கள் குடும்ப நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான திரு கே.எஸ்.வி. ரமணி அவர்களால் ஆராய்ந்து எழுதி ஜூன் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள் திவ்ய சரிதம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது – கட்டுரையாளர்) நன்றி, வணக்கம்!

***

tags குழந்தையானந்த ஸ்வாமிகள்-2

Tamil and English Words 2700 Years Ago- Part 59 (Post No.9943)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9943

Date uploaded in London – 6 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -59 Tamil and English Words 2700 Years Ago- Part 59

6-1-109

Sayanam

It is given as an example.

Sayanam = sleeping position or slanted position

In Tamil also saay is slanted; also used for sleeping.

I was very tired. So oru arai mani neram thalaiyaich saaiththen.

This proves Tami l and Sanskrit have common roots.

சயனம் = தமிழ் சாய்; அவனும் களைப்பில் ஒரு பத்து நிமிஷம் தலையாகி சாய்த்தான்

Xxx

6-1-124

Indra means leader. Foreigners mislead the world by translating Indra with capital I to show that it is the name of one person. That is wrong. Even at Paninis time Indra was used as suffix

Earlier one commentator showed கவீந்திர, கவேந்திர

Kaveendra. Under this sutra Gavendra is given. That means leader of the cows

In Tamil Nadu Rajendran, Mahendran, upendran are common names

இந்திரன்= தலைவன்; ராஜேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன்; ககேந்திரன்

Xxxx

6-1-134

We saw that

Sutra, is used for books and thread in both the languages.

In the same way Patha, paatha mean foot, feet in both these languages. In verses every line or syllable is called patha in Sanskrit and In tamil is Adi;

Patha = foot = Adi; used பத =அடி

செய்யுளிலும் நடப்பதிலு ம் பயன்படுகிறது

Both in walking and writing.

Xxxx

6-1-143

Kustumburu

Coriander, in Tami l it is koththamalli.

Panini used Kustum buru for coriander. It is in Latin. It is closer to Tamil

கொத்தமல்லி  என்ற சொல்  குஸ்தாம்புரு என்ற  சொல்லுடன் தொடர்புடையது.

குஸ்தாம்புரு — க்கு சம்ஸ்க்ருத மூலம் எதுவும் இல்லை

Xxx

6-1-146

Aaspatham ஆஸ்பதம் , அஸ்பத்திரி

Meaning is Place to stay, place to reside, higher place.

After reading the meaning, I wonder whether Hospital and Tamil word Aaspaththiri for Hospital came from this. But I am not sure at the moment. Hospice is another word.

Xxx

6-1-147

Here Panini Sutra is dealing with two words

Ascharya = wonder

Anithya = that which is not permanent, impermanence

ஆஸ்சர்யம் , அநித்யம்

வாழ்க்கை அநித்யமானது. இது மிகவும் ஆச்சர்யமானது

Both these words are in current use. Even Tamils use Aascharyam in daily newspapers and conversations.

Xxx

6-1-152

Kasam is used here for whip.

Even in Tami l Kasai Adi is used for whipping.

கசை அடி

Xxx

6-1-155

Panini used Thuntha

Ajathuntha is the protruding stomach or belly of a goat.

In Tamil Thonthi is also fat belly. தொந்தி /PAUNCH

அஜதுந்த = ஆட்டின் பெருவயிறு

Xxx

6-1-160

Panini used Unja for swing.

Uunjal is swing in Tamil

In Sangam literature it was Uusal

Today both uusal and Unjal are used for swinging.

ஊஞ்சல் , ஊசல் , உஞ்ச விருத்தி

–சுபம்–

Tags- Tamil words in Panini-59