LONDON CALLING (HINDUS) 12-7-2021 (Post No.9847)

WRITTEN BYLONDON SWAMINATHAN

Post No. 9847

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-7- 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

ASHTAPATHI -22 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -8 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Bodhendral

– 12 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

London swaminathan Talk read by Sri Kalyanasundaram, Producer, Gnanamayam- 5 mts

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-  broadcast1272021

LONDON CALLING (TAMILS) 11-7-2021 (Post No.9846)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9846

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-7-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON MumbaiSri Siddhi Vinayakar Temple10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  15 mts

Kumari Hiranmayi Raghavan

Mrs Kavitha Subramanian 

Mrs Latha Murthy

Mrs Radhika Shrikanth recite Thiruppugaz.

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 70 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast 1172021

பகவந்நாம போதேந்திரர் (Post No.9845)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9845

Date uploaded in London – 13 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 12-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

போதேந்திரர்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். புண்ய பூமியான பாரதத்தில் தெற்கே நாயன்மார்களும், ஆழ்வார்களும் பதிகங்களாலும் பாசுரங்களாலும் பக்தி மழை பொழியச் செய்தனர். அதே போல வடக்கே, சைதன்ய மஹா பிரபு, மீராபாய், ஜெயதேவர், துளஸி தாஸர், சமர்த்த ராமதாஸர், பத்ராசல ராமதாஸர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மகான்கள் தோன்றி பக்தி மார்க்கத்தைப் பரப்பினர்.

இஸ்லாமியரின் படையெடுப்பால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன ; என்றாலும் இந்து தர்மத்தைப் பாதுகாத்து இன்றைய தலைமுறையினர் வரை அப்படியே அந்த தர்மத்தை வழுவாது வழங்கியவர்கள் இந்த அருளாளர்களே. இவர்களில் குறிப்பிடத் தகுந்த பெரும் மகானாக அவதரித்தவர் பகவந் நாம போதேந்திர சுவாமிகள்.  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது பட்டம் பெற்று அந்தப் பீடத்தை அலங்கரித்தவர்  ஸ்ரீ விஸ்வாதிகேந்த்ர ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் கேசவ பாண்டுரங்கர் என்ற ஒரு பிராமணர் கைங்கரியம் செய்து வந்தார். அவருக்கு வெகுகாலம் வரை மகப்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனை வேண்ட, இறைவனின் திருவருளால் அவருக்கு ஒரு ஆண் குழந்தை 1610 ஆம் ஆண்டு பிறந்தது. காஞ்சியில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கேசவ பாண்டுரங்கர் தம் குருநாதரிடம் காட்டக் கொண்டு வந்தார். குழந்தையை ஆசீர்வதித்த ஆத்ம போதேந்திரர் அந்தக் குழந்தையை  ஸ்ரீமடத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி கேசவரிடம் கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். ஆனால் தன் மனைவியைக் கேட்கவில்லையே என்ற அவர் மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் வந்து நடந்ததைச் சொன்ன போது பதிவிரத சிகாமணியான அவரது மனைவி சுகுணா, ‘அது நமது பாக்கியமே என்று கூற அவர் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தை புருஷோத்தமன் பக்தியோடு வளர்ந்தது; தனது சேவையைச் செய்ய ஆரம்பித்தது. 15 வயதிற்குள் வேத, தர்ம, சாஸ்திரங்களை முற்றுமாகக் கற்றுத் தேர்ந்தார் புருஷோத்தமர்.

சில வருடங்கள் கழிந்தன. அப்போது  ஸ்ரீஜகத்குரு காசிக்கு யாத்திரையாகச் சென்றார். புருஷோத்தமனும் காசிக்கு யாத்திரை சென்று குருநாதரை தரிசிப்பது என்று தீர்மானம் செய்து கொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஞானசாகரனையும் காசிக்கு அழைத்தார்; அவரும் உடன் வர இணங்கினார். அவர்கள் இருவரும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டனர். “காசிக்குச் செல்லும் போது இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால், அடுத்தவர் அவருக்கு ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தானும் தனது உயிரைத் தியாகம் செய்து விட வேண்டும் – இப்படி இருவரும் முடிவு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஞானசாகரன் இறந்து விடவே, அவருக்கு உரிய கிரியைகளைச் செய்த புருஷோத்தமன் காசி சென்று தன் குருநாதரை தரிசித்து நடந்ததைச் சொல்லி தான் தனது உயிரை கங்கை நதியில் தியாகம் செய்யப் போவதாகவும், அதற்கு குருதேவரின் அனுமதி வேண்டும் என்றும் வேண்டினார்.

ஆசார்யாள், புருஷோத்தமன் சொல்வது அனைத்தையும் கேட்டு விட்டுப் பின்னர், “நீ பிராண தியாகம் செய்ய வேண்டாம். எப்போது ஒருவன் சந்யாசம் வாங்கிக் கொள்கிறானோ அப்போதே அவன் மறு ஜென்மம் எடுத்ததாக ஆகி விடுகிறது. அப்போது தர்ம சாஸ்திரத்தை ஒட்டி உனது சத்தியத்தைக் காப்பாற்றியதாக் ஆகி விடுகிறது என்று கூறி அருளினார். உடனே புருஷோத்தமனும் அதை ஏற்று சந்யாசம் மேற்கொண்டார். அவர் பகவன் நாம போதேந்திராள் என்ற யோகபட்டத்தையும் பெற்றார்.

ஆசார்யரின் ஆக்ஞைப் படி அவர் காஞ்சிக்குத் திரும்பிச் சென்றார்.

போதேந்திரரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் அந்தக் காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியரின் ஆதிக்கமும் அட்டூழியமும் நிறைந்த காலம் அது. தக்ஷிண தேசத்திலிருந்து ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வட தேச யாத்திரைக்குக் கிளம்பினார். வழியில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் இரவு தங்கினர். நள்ளிரவில் பிராமணரின் மனைவியாகிய அந்த அழகிய பெண்ணை இஸ்லாமியன் ஒருவன் வாயைப் பொத்தி கூக்குரலிட முடியாதபடி செய்து தூக்கிச் சென்று விட்டான். காலையில் மனைவியைக் காணாது திகைத்து அழுது புலம்பிய பிராமணர் தன் யாத்திரையைத் தொடர்ந்தார்; காசிக்குச் சென்றார். முரடர்களிடம் உள்ள பயத்தினால் அந்தக் கிராம மக்கள் எதையும் அந்த பிராமணரிடம் சொல்லவில்லை. காசிக்குச் சென்று தன் யாத்திரையை முடித்த அந்த பிராமணர் மீண்டும் திரும்பி வரும் போது அதே கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் காலையில் ஒரு குளத்தில் குளித்து விட்டு குளக்கரையில் தனது அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  அங்கு முஸ்லீம் ஆடை அணிந்து வந்த ஒரு பெண்மணி அவரிடம் வந்து கதறி அழுதாள். “நான் தான் உங்கள் மனைவி. ஒரு மஹாபாவி என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டான். அவன் வருவதற்குள் நாம் தப்பி ஓடி விடலாம் என்றாள் அவள். அத்தோடு தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு வேலைக்காரியாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் அழுது புலம்பினாள். அவளது நிலையைக் கண்டு வருந்திய பிராமணர், இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று பார்க்கலாம் என்றார். அங்குள்ள சிலர் அதே ஊரில் இருக்கும் ஜகந்நாத கவியைச் சந்தித்துக் கேட்டால் அவருக்கு தக்க விடை கிடைக்கும் என்றனர். ஜகந்தாத கவியைச் சந்தித்த தம்பதி நடந்ததைக் கூற, ஜகந்நாதர் மூன்று  முறை ராம ராம ராம என்று கூறினால் போதும், அவளை ஏற்றுக் கொண்டு விடலாம் என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜகந்நாத கவியின் அன்னையார் அங்கு வந்தார். அவர் அத்வைத மகரந்தம் உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற பண்டிதரான லக்ஷ்மிதரர் என்னும் பிரசித்தமான கவிஞரின் மனைவி. அவர் தனது மகனான ஜகந்நாத கவியிடம், “ மூன்று முறை வேண்டாமே! எத்தனை பாவமானாலும் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே போதுமே, அனைத்துப் பாவங்களும் தீருமே என்றார்.

வழிப்போக்கராக அந்த கிராமத்திற்கு வந்து இதையெல்லாம் திண்ணையிலிருந்து கேட்டு கொண்டிருந்த பகவந்நாம போதேந்திரர் ஜகந்நாதரிடம் இதற்கு ஆதாரம் உள்ளதா என்றார்.

உடனே ஜகந்நாதர் தனது தந்தையான லக்ஷ்மிதரர் இயற்றிய ‘பகவந்நாம கௌமுதி என்ற நூலை ஆதாரமாகக் காட்டினார்.

பொழுது விடிந்தது. அங்கு வந்த பிராமணர் தனது மனைவியைக் குளத்தில் இறங்கி ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னார். அவரது மனைவியும் ஸ்நானம் செய்து கொண்டே ராம நாமத்தை உச்சரித்தார். என்ன ஆச்சரியம்!  முன்போலவே காதில் தோடு அணிந்தும், நெற்றியில் குங்குமப் பொட்டுடனும், பழையபடி புடவையை உடுத்தியும் அவரது மனைவி காட்சி அளித்தாள். கண் எதிரே பிரத்யக்ஷமாக ராம நாமத்தின் மஹிமையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்றே அவள் கையினாலேயே பிக்ஷையை வாங்கிக் கொண்ட போதேந்திரர் பகவந்நாம கௌமுதி நூலின் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு காஞ்சி வந்து சேர்ந்தார்.

குருவான ஆத்ம போதேந்திரர் தனது சீடரான பகவந்நாம போதேந்திரரை பீடாரோகணம் செய்வித்தார். அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக பீடம் ஏறினார். சுமார் 50 வருடங்கள் பகவந்நாம மஹிமையை உலகெங்கும் உபதேசித்து அனைவரையும் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்தார் போதேந்திரர்.

ஸ்ரீஜகத்குரு போதேந்திராளும் அவரது குருவும் இராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது கெடில நதி தீரத்தில் குரு சித்தி அடைந்தார். அவரது சமாதி இருப்பதை வடவாம்பலம் கிராமத்தில் காஞ்சி காமகோடி பெரியவாள் 68வதுபீடாதிபதி  ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது தீர்க்க திருஷ்டியால் கண்டு பிடித்து 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிருந்தாவன பிரதிஷ்டை செய்வித்தார்.

போதேந்திரர், தனது குருவின் மனோரதமாகிய இராமேஸ்வர யாத்திரையை பூர்த்தி செய்தார். திரும்பி வரும் போது திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு திருவிசைநல்லூர் ஐயாவாளின் மஹிமையை அறிந்து கொண்டார். அவருடன் அறிமுகம் ஏற்பட இருவரும் பகவன் நாம கீர்த்தனையை செய்து ஆனந்தமாய் அதைப் பரப்பிய வண்ணம் இருந்தனர்.

பிறகு இருவரும் ஒரு முறை பிரம்பூர் என்ற கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினர். அங்கு ஒரு ஊமைப் பையன் இருந்தான். அவனைப் பேசும்படி அருள் பாலித்து அவர், அவனைப் பேசச் செய்தார். அந்தப் பையனும் இராம பஜனை செய்யத் துவங்கினான். அந்த ஊரில் அவர் ஒரு ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வாமிகள் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஸ்ரீமடத்தின் பொறுப்பை தனது சீடரான அத்வைதாத் பிரகாசகரிடம் ஒப்படைத்து அவரை 60வது பீடாதிபதியாக ஆக்கினார். நாம சங்கீர்த்தன மஹிமையை உலகிற்கு போதிப்பதில் அதிகம் ஈடுபட்டார்.  ஸ்வாமிகள்  ஸ்ரீதர ஐயாவாளின் மறைவுக்குப் பின்னர் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திருவிடைமருதூரில் சில காலம் வசித்தார். அருகிலுள்ள கோவிந்தபுரமும் அவரைக் கவர்ந்தது. ‘பகவன் நாம ரஸோதயம் உள்ளிட்ட எட்டு நூல்களை அவர் இயற்றியுள்ளார். தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ராம நாமத்தை உச்சரிப்பது அவரது அன்றாடப் பழக்கம்.

ஸ்வாமிகள் காலத்தில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்வாமிகள் எப்போதும் தனிமையில் இருப்பார். மாலை நேரத்தில் காவேரிக் கரையில் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் விளையாடுவார். அந்தச் சமயத்தில் பல அதிசயங்களை அவர் செய்வார். அதைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்வர்.

கோடை காலத்தில் குழி தோண்டி மண்ணை வண்டி வண்டியாக எடுப்பது மக்களின் வழக்கம். அப்போது அந்தக் குழியில் அமர்ந்து சிறுவர்களை விட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்வது போதேந்திரரின் வழக்கம். ‘யாரிடமும் சொல்லாதீர்கள், நாளை வந்து பாருங்கள் என்று அவர், அந்தச் சிறுவர்களை அனுப்பி விடுவார். மறுநாள் சிறுவர்கள் குழியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த போதேந்திரர் வெளியே வருவார். அடிக்கடி இப்படி நடந்தது. ஒரு நாள் ஸ்வாமிகளைக் காணாத ஊர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கவே சிறுவர்கள் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் கூறி ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். ஊர் மக்கள் குழியிலிருந்த மண்ணை அகற்ற முற்பட்டனர். ஆனால் அப்போது ஒரு ஒலி எழுந்தது: “நாம் இவ்விடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக யோக சக்தியால் உலக நலனுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்கு விக்னம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் எவர் ஒருவர் தினமும் லட்சத்து எண்ணாயிரம் தரம் நாம ஜபத்தைச் செய்கிறாரோ அந்த பக்குவமுடைய பக்தருக்கு நாம் தரிசனம் தருவோம். இந்த இடத்தில் பிருந்தாவனம் அமைத்து ஆராதித்தும் வரலாம்.

இந்த அருளுரைப்படியே அவர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

கோவிந்தபுரம் கிராமத்தில் சாலிவாஹன சகாப்தம் பிரஜோத்பத்தி வருடம் ப்ரோஷ்டபத மாதம் பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி அடைந்து  பிரம்ம ஸ்வரூபமாய் விளங்க ஆரம்பித்தார். அது 1692ஆம் ஆண்டாகும்.

புரட்டாசி மாதம் மாளய பக்ஷத்தில்  ‘யதி மஹாளயம் என்று கூறப்படும்  கிருஷ்ண பக்ஷ துவாதசியில்  வருடந்தோறும் போதேந்த்ராளின் ஆராதனை இன்றளவும் நடை பெற்று வருகிறது. பக்தர்கள் அவருடைய ஆராதனையை அங்குள்ள பிருந்தாவனத்தில் கூடி சிறப்பாக இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

இன்று அங்குள்ள அதிஷ்டானத்திற்கு செல்வோர் பாரம்பரிய முறைப்படி மேலாடை இன்றி பயபக்தியுடன் உள்ளே சென்று வணங்குவது மரபாக இருக்கிறது.

இந்த அதிஷ்டானத்தில் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.சேங்காலிபுரம் ப்ரஹ்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பேரனும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் சீடருமான ப்ரஹ்ம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்களின் அரும் முயற்சியால் இந்த பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தக் கோவிலையும் அதிஷ்டானத்தையும் தரிசிக்க கோவிந்தபுரத்திற்கு பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர். ‘கலௌ சங்கீர்த்ய கேசவம் என்ற அருள் மொழிக்கு இணங்க கலியுகத்தில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் ஒன்றே சுலபமான வழி என்பதை போதிக்க அவதரித்துள்ள மகான்களில் போதேந்திரர் மிகவும் பூஜிக்கத் தகுந்த சிறப்பான மகான். அவரை வணங்கி நாம ஜபம் செய்வோம்; நலம் பெறுவோம்

நன்றி வணக்கம்!

ஸர்வ லோக சரண்யாய போதேந்த்ர குரு மூர்த்தயே!

ஸ்ரீதரார்ய ஸ்வரூபாய நாமோத்ராய மங்களம் ||

நன்றி, வணக்கம்!

***

OLD ARTICLES IN THE BLOG ON BODHENDRAL



Do Saints’ Samadhis have Divine Power? Can They do …

https://tamilandvedas.com › 2014/06/11 › do-saints-sa…

  1.  
  2.  

11 Jun 2014 — Shirdi Baba Shrine with Samdhi Written by London Swaminathan Post No.1099; Dated 11th June 2014. Hindus believe that by visiting the …

tags- பகவந்நாம, போதேந்திரர், 

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர் (Post.9844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9844

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜங்கிள் புக் JUNGLE BOOK  என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.

பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865

இறந்ததேதி – ஜனவரி 18, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 70

1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா  பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது.  காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.

இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM  என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த  நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.

வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.

-சுபம்–

Publications

1888 – SOLDIERS THREE

1888 – BAA, BAA, BLACK SHEEP

1890 – WEE WILLIE WINKIE

1892- BARRACK ROOM BALLADS

1894- THE JUNGLE BOOK

1899- STALKY AND CO

1901- KIM

1902 – JUST SO STORIES

1906- PUCK OF POOK’S HILL

–SUBHAM—

tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக்  , ஆங்கில,  சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling

August 2019 London Swaminathan Articles; Index 81 (Post No.9843)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9843

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

August 2019 Index 81

Women in 100 Hindu Law Books,6711;1 August, 2019

My visit to Chennai museum-8;6712; 1/8

Swami s Mahabharata Puzzle 1819;6714;1/8

Swastika Mystery, Not found in the Middle East,6717;2/8

My visit to Chennai museum-9; 6719;2/8

My visit-10;6724; 3/8

Animal Medicines and anAmulets in Tamil and Shakespearean works , 6721;3/8

Greatness of Number Six in Hinduism and Judaism, 6729;4/8

My visit -11;6730;4/8

Where is God? One orange if you tell me, 6733; 5/8

My visit-12; 5/8; 6735

Number 6 means Brahmins 6737;6/8

Swami s Idea corner- Quotations on currency notes and Missing Cauldron,6738;6/8

Doctors Anecdotes, 6742; 7/8

Swami s crossword 7819;

Largest and Longest Stone Inscription in tho world, 6746;8/8

What is the true meaning of Sloka? Did Sholapur become Sloka? 6752;9/8

Number Six in the oldest Tamil Book, 6757;10/8

More about Music Pillars in Hindu temples, 6759;10/8

Roll on the road and get rid of your sins,6762;11/8

List of 150 Great Hindu Astronomers &300 Sanskrit books

on Astronomers ,6763;11/8

Swami s crossword 12819;6767:12/8

Is he gone yet? Newspaper phone call to a sick VIP,6768;12/8

Sickness in the guise of a lady,6772;13/8

Archbishop s Strange Disease, 6779;14/8

Swami s crossword 15819;6884;

Story of Golden Bowl in Lalita Vistara and Borobudur 6882;15/8

The Story of the Greedy Merchants,6888;16/8

Swami s crossword 16819;6889

Sacred Number Seven,6893;17/8

World Wonder in Chennai- Oldest working Steam Engine,

6896;18/8

More about Holy Seven,6901;19/8

Swami s crossword 19819;6902

Chennai Sea Wonder, 6905;20/8

Seven Worst Sins and Seven Virtue s, 6906;20/8

The Mystery of Hindu skeleton Lake gets deeper, 6909;21/8

Hindu Wonder near Madurai,6910;21/8

Swami s crossword 21819;6912

Train went back for an old lady, 6916;22/8

Tirupati Temple Wonder and Tamil Wonder,6922;23/8

Horse and Husband! Medical Jokes!6926;24/8

Number Seven in Rigveda, Greece, Australia,China and

Middle East ,6928;24/8

London Mahalakshmi Templ e Ratha Yatra,6932;25/7

Swami s crossword 25819;632;

Astrology Dictionary, Tamil English Dictionary from

Sri Lanka ,6936;26/8

Four Wives of Krishnadevaraya, 6937;26/8

Swami s crossword 26819;6938

Notting hill Carnival in London,6940;27/8

Krishnadevaraya s visit to Kumbakonam Mahamakam, 6941;27/8

List of Sexy Plants,6946;28/8

Swami s crossword 29819;6950

Sweeter than liquor is Love,6953;30/8

Seven Valued Logic in Jainism, 6957;31/8

Xxx

TAMIL ARTICLES FROM AUGUST 2019

நூறு சட்ட புஸ்தகங்கள்! ஸ்ம்ருதிகள், 6709; ஆகஸ்ட் 1, 2019

கொண்டுவந்து போட்டு கொளுத்து , 6710; 1/8

தமிழ்ப் புதிர் 1819; 6713

சுவஸ்திகா இல்லாத இடம் எது?6716; 2/8

த.கு.போ. 2819, 618

த.கு.போ . தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி

சென்னை அருங்காட்சியக  வளாகத்தில் அரிய மரங்கள் ;6722; 3/8

இரண்டாம் உலக மஹா யுத்தம் – மலே சியாவில்

ஜப்பானியர் அட்டூழியம்- 1 , 623, 3/8

அலகாபாத் கல்வெட்டில் அதிசய சம்ஸ்க்ருதம், 6726, 4/8

இரண்டாம் உலக …. 2, 6727; 4/8

த.கு.போ 4819; 6728

ஆறாம் நம்பர் அகிசயங்கள் ! இந்துமத-யூத மத ஒற்றுமை; 6732; 5/8

த.கு.போ 5819; 6734

800 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் ,6739, 6/8

கல்வெட்டுகளில் ஜோதிடமும் சங்கீதமும், 6741, 7/8

ஆறு கால பூஜை,அருகலாஉற்சவம், 6 THOLIL 6751

வாளும் குண்டூசியும் – காந்திஜியும் நாதிர்ஷாவும்

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய் தி, 6756,

துலுக்கப்  படைகளை விரட்டிய அனுமன் பாடல் 6758,19/8

த .கு.போ.8819; 6747

75 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா, 6748, 8/8

ஹிட்லரும் முசோலோனியும் , 6749, 8/8

தொல்காப்பியத்தில் உயிரியல் விஞ்ஞானம்,6761, 11/8

லண்டன் சாலையில் உருண்ட பக்தர்கள் , அதிசயக் காட்சி ,6765,12/8

150 இந்திய வானிலை விஞ்ஞானிகளும் 300 சம்ஸ்க்ருத நூல்களும், 6766, 12/8

ஐயர் குடுமி அவிழத்தது ஏன் ?6770, 13/8 (சாணக்கியன் )

150 இந்திய ….2 (6773), 13/8

டாக்டரிடம் நோயாளியின் கடைசி வேண்டுகோள், 6776, 14/8

150 இந்திய …..3, 6773, 14/8

ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும் (பாரதிதாசன் கவிதை , 6778, 14/8

பெண் வடிவில் நோய் போனது, 6881, 15/8

த.கு.போ 15819,6883

சுஜாதா கொடுத்த தங்கக் கிண்ணம், 6886, 16/8

ஐயோ பாதிரியாரே ! அது என் கால், பெண் வெட்கம்; 6887, 16/8

வியாபாரிகளின் பேராசை- பழைய கதை, புதிய வியாக்கியானம், 6891, 17/8

த.கு.போ.17819, 6892

தில்லை சிதம்பரத்தில் 75 மரம், செடி , கொடிகள் ,6897, 18/8

த.கு.போ.18819, 6892

அதிசய எண் ஏழு , புனித எண் 7, 6900, 19/8

தமிழ் இலக்கியத்தில் எண் ஏழு, ,6904, 20/8

த.கு.போ.20819, 6907

இமயமலை ஏரி அதிசயம்,- உலகப் பத்திரிகைகள் அலசல், 6911, 21/8

மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு, 6915,22/8

த.கு.போ.21819, 6913

இலங்கைக்கு இலவச  சுற்றுலா -1, 6917, 22/8

த.கு.போ.23819, 6923

த.கு.போ.24819, 6929

த.கு.போ.27819, 6942

கோவில் செங்கலில் வெளிநாட்டுக்காரர் உருவம், ,6919,23/8

கால் முறிவுக்கு அதிசய சிகிச்சை !கிழவிக்காக

திரும்பிப்போன ரயில் 6920,23/8

இலங்கைக்கு இலவச  சுற்றுலா -2, 6921, 23/8

திருப்பதியில் அதிசயம் ! உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் ,

6925, 24/8

தமிழ் இசையில் எண் ஏழு ,6927, 24/8

தமிழ் தமாஷ் : உ.வே.சா.  ஐயங்கார் ஜோக்ஸ் , 6931, ,25/8

குதிரையா, கணவனா ? எது முக்கியம்?6935, 26/8

மாமன்னர்  கிருஷ்ணதேவராயரின் 4 மனைவி மர்மம், 6943, 27/8

தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா  5800 கிலோ

6945, 28/8

மன்னர் வருகிறார் , கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு ; மதுரையில்

3 நாள் தங்கல், 6947, 28/8

த.கு.போ.29819, 6951,29/819,6951

பாம்பும் வசம்பும்,6949, 29/8

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள், 6948, 29/8

கச்சேரியில் டிங்கிள் , டிங்கிள் , லிட்டில் ஸ்டார் ,6954, 30/8

த .கு.போ.31819, 6960

தமிநாட்டுப் போர்க்களங்கள், 6958

நூறு கோண் – ஒரு அணு- தமிழ் ரகசியங்கள் , 6959, ஆகஸ்ட் 31, 2019

–subham—

Tags- Index August 2019, Index 81

ஆலயம் அறிவோம் – மும்பை சித்தி விநாயகர் ஆலயம்(Post No.9842)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9842

Date uploaded in London – –   12 JULY   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே

விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து

கபில தேவ நாயனார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பாரதத்தின் வணிகச் சிறப்பு நகரான மும்பையிலிருந்து அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயமாகும்.

மும்பை நகரில் மிகுந்த போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் உள்ள பிரபா தேவி பகுதியில் காகாசாஹிப் காட்கில் ரோடு, எஸ்.கே, போலே ரோட் சந்திப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தோன்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு. டியூபாய் படீல் என்ற பணக்காரப் பெண்மணி மாதுங்காவில் வசித்து வந்தார். ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவர் அவர். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவர் விநாயக பக்தர். தனக்கு குழந்தைப் பேறு வேண்டி விநாயகருக்கு இந்த ஆலயத்தை அமைத்தார். ஆனால் அவருக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் போயிற்று. என்றாலும் இங்கு வந்து வழிபடும் பெண்மணிகளுக்குக் குழந்தைச் செல்வத்தை அருள வேண்டுமென அவர் மனமுருகப் பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தனை பலிக்கும் விதமாக இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் தடைகள் நீங்கின. வளங்கள் ஓங்கின. குழந்தைச் செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களும் வரவே சித்தி விநாயகர், வரம் தரும் வர சித்தி விநாயகராகப் பிரசித்தி பெற்றார். பக்தர்களும்,அரசியல் வாதிகளும், திரைப்பட நடிக, நடிகையரும், கலைஞர்களும், சாமான்யர்களும் காலை ஐந்தரை மணி முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாக இங்கு வந்து விநாயகரை வழிபட்டு அவர் அருள் கிடைக்கப் பெற்று ஆனந்தத்தில் திளைக்கின்றனர். இவரை நவசாலா பவனர கணபதி என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் உள்ள இந்தக் கோவில் ஐந்து அடுக்கு கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேலே சுமார் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசமும் உள்ளது.

விநாயகர் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகராக அமைகிறார். சாதாரணமாக விநாயகரின் தும்பிக்கை இடப்புறமே வளைந்து இருக்கும். இந்த விநாயகருக்கு உள்ள தனிச் சிறப்பு இவரது துதிக்கை வலப்புறமாகத் திரும்பி இருப்பது தான். இவருக்கு சிவபிரான் போல நெற்றியிலும் ஒரு கண் உண்டு. நான்கு கரங்களை இவர் கொண்டிருப்பதால் சதுர் புஜ விநாயகர் என்று அனைவரும் இவரை அழைக்கின்றனர். மேற்புற வலது கையில் தாமரை மலரையும் இடது கையில் கோடாரியையும் ஏந்தி இருக்கிறார். கீழே உள்ள கரங்களில் வலது கரத்தில் ஜபமாலையையும் இடது கரத்தில் மோதகத்தையும் கொண்டுள்ளார். பூணூலுக்குப் பதிலாக ஒரு நாகம் வலது தோளில் ஆரம்பித்து வயிற்றின் இடது பக்கம் வரை செல்கிறது.

விநாயகரின் இன்னொரு முக்கியமான சிறப்பு அம்சம் இவரது இரு பக்கங்களிலும் ஸித்தி, புத்தி ஆகிய இருவரும் இருப்பது தான். புத்தியை ரித்தி என்று வடக்கே சொல்வது பழக்கம் என்பதால் இவரை ஸித்தி, ரித்தி விநாயகர் என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய நவீன யுகத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் நைவேத்தியம் ஒரு பிரத்யேகமான லிஃப்ட் மூலம் கர்பகிரஹத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகருக்கு படைக்கப்படுகிறது.

பழைய காலத்தில் விநாயகரின் அருகே ஒரு பெரிய ஏரி இருந்தது.  இதர கட்டிடங்களும் இருந்தன. ஆனால் காலப் போக்கில் ஏரி இல்லை; கட்டிடங்கள் மாறி விட்டன. என்றாலும் விநாயகர் தனது இடத்தில் அப்படியே இருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்; அவ்வப்பொழுது கோவில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

1952ஆம் ஆண்டில் மும்பையில் எலிஃபின்ஸ்டன் சாலை அருகில் உள்ள சயானி சாலையை விரிவு படுத்தினர். அப்போது சாலையைத் தோண்டிய போது ஒரு அனுமார் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த அனுமார் இந்த சித்தி விநாயகர் ஆலையில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக இங்கு அநுமாருக்கும் தனி சந்நிதி ஒன்று உண்டு. மஹராஷ்டிரத்திற்கே உரித்தான முறையில் இங்கு விநாயக சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மஹராஷ்டிரத்தை ஆண்ட பேஷ்வாக்கள் விநாயக சதுர்த்தியைப் பெரும் விழாவாக ஆக்கிக் கொண்டாடினர். பால கங்காதர திலகர் நாட்டு மக்களை ஒன்றிணைக்க இந்த பண்டிகையை மக்கள் பண்டிகையாக மாற்றினார். வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற மக்கள் சக்தியை ஒருங்கிணைத்தார்.

1891இல் இப்படி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட விழா இன்று தேசிய அளவில் தேசீய விழாவாக மாறி விட்டது. விநாயகர் பாரத தேசத்தைக் காக்கும் தெய்வமாக, தடைகள் அகற்றும் தெய்வமாக இமயம் முதல் குமரி வரை கொண்டாடப்படுகிறார். அதற்கு மும்பை சித்தி விநாயகர் கோவிலில் கூடும் திரளான பக்தர்களே சாட்சி!ஏராளமான அளவில் பக்தர் கூட்டம் திரள்வதால் அனைவரும் கியூவில் நின்று விநாயகரை தரிசிக்கின்றனர்.  பாராட்டும் விதமான கட்டுப்பாட்டை அனைவரும் அனுஷ்டிக்கின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மும்பை சித்திவிநாயகர், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.       

அருள் பிரகாச வள்ளலார் பெருமானின் அருள் வாக்கு இது :

                                                             முன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்

சொன்னவனே தூய் மெய்ச் சுகத்தவனே – என்னவனே

சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின் தாள் சரண்!

நன்றி வணக்கம்!     

  ***

Tags- மும்பை சித்தி விநாயகர் ஆலயம்

சரணாகதியே சகலமும் தரும்: புராணத்துளிகள் (Post No.9841)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9841

Date uploaded in London – 12 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 11 கட்டுரை எண் 9807 வெளியான தேதி

3-7-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 12

(34 முதல் – 40 முடிய)

ச.நாகராஜன்

34. எது சிறந்த செயல்?

தத் கர்ம ஹரிதோஷம் யத் ஸா வித்யா தன்மதிர்யயா |

தத் வர்ணம் தத் குலம் ச்ரேஷ்டம் ததாஸ்ரமம் சுபம் பவேத் ||
                              ஸ்ரீமத் பாகவதம் 4/29/49           

எது ஹரிக்குத் திருப்தியாக இருக்கிறதோ அதுவே சிறந்த செயல். அவனை நோக்கி பக்தி செலுத்தச் செய்வது எதுவோ அதுவே சிறந்த வித்யா. அவனது பாதகமலத்தை நோக்கி எந்த ஜாதி மனதை இட்டுச் செல்கிறதோ அதுவே சிறந்த ஜாதி. எந்த குலம் அவனை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதுவே சிறந்த குலம். எந்த ஆஸ்ரமம் (வர்ணாசிரம தர்மங்கள்) அவனை நோக்கி இட்டுச் செல்கிறதோ அதுவே புனிதமானது.

*

35.சரணாகதியே சகலமும் தரும்

ஹரிதேஹப்ருதாமாத்மா ஸ்வயம் ப்ரக்ருதிரீஸ்வர: |

தத்பாதமூலம் சரணம் யத: க்ஷேமோ ந்ருணாமிஹ ||

                                   ஸ்ரீமத் பாகவதம் 4/29/50       

ஸ்ரீஹரியே ஆத்மா. ப்ரக்ருதியும் (இயற்கை) ஈஸ்வரனும் (எங்கும் நிறைகின்ற இறைவன்) உடல் சார்ந்தவை. அவனது பாத கமலங்களில் சரணடைவது எல்லா க்ஷேமத்தையும் (நலத்தையும்) தரும்.

*

36. எவனை வித்வான் என்று கூறலாம்?

ஸ வை ப்ரியதமஷ்சாத்மா யதோ ந பயமன்வபி |

இதி வேத ஸ வை வித்வான்  யோ வித்வான் ஸ குருர்ஹரி: ||

                                           ஸ்ரீமத் பாகவதம் 4/29/51

அவரே (ஸ்ரீஹரியே) அனைவருக்கும் பிரியமானவர். அவரிடமிருந்து கிஞ்சித்தும் பயம் எழாது. எவன் ஒருவன் இதை அறிகிறானோ அவனே வித்வான் (அனைத்தும் அறிந்தவன்). அவனே அவனுக்கு குரு கடவுளும் அவனும் ஒன்றாகிறான்.

*

37. ஆயிரம் ஜன்மம் கழித்து வருவது எது?

ந்ருணாம் ஜன்ம ஸஹஸ்ரேன பக்தௌ ப்ரீதிர்ஹி ஜாயதே |

கலௌ பக்தி: கலௌ பக்திதர்பக்த்யா க்ருஷ்ண: புரஸ்தித: ||

பத்ம புராணம் (உத்தர காண்டம்) 194/19

பக்திக்கென ஆயிரம் ஜன்மங்கள் கடுமையான முயற்சி செய்த பின்னரே ஒருவனுக்கு இறைபக்தி வருகிறது. கலியுகத்தில் பக்தி ஒன்றே நமக்கான புகலிடம். பக்தியினால் ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் கிட்டுகிறது.

*

38. பக்தர்களில் சிறந்த பக்தர் யார்?

யே மே பக்தஜனா: பார்த்த ந மே பக்தாஸ்ச தே ஜனா: |

மத்பக்தானாஞ்ச யே பக்தா: தே மே பக்ததமா மதா: ||

ஆதிபுராணம் – 112/91

என்னிடம் மட்டுமே பக்தி செலுத்துபவர் எனது பக்தனாக மாட்டார். என்னிடம் பக்தி செலுத்தும் பக்தனிடம் பக்தி செலுத்துபவரே எனது சிறந்த பக்தராவார்.

*

39. எந்தப் பாவம் போகவே போகாது?

அத்யுக்ரோ வைஷ்ணவத்ரோஹோ வேதாதிஷு ஸுவிஸ்ருத: |

ந சக்யதே வாரயிதும் கல்பகோடிஷதரைபி: ||

ஆதிபுராணம் – 112/91

வைஷ்ணவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களின் பாவமானது கோடி கோடி கல்பங்கள் ஆனாலும் போகாது, தீர்க்க முடியாது என்று வேதங்கள் அறைகின்றன. (வைஷ்ணவன் – தூய பக்தன்)

*

40. மூவுலகங்களிலும் துன்பப் படுபவர் யார்?

பக்தித்ரோஹகரா யே ச தே சீதந்தி ஜகத்ரயே |

துர்வாஸா துக்கமாபன்ன: புரா பக்திவிநிந்தக: ||

பத்ம புராணம் (உத்தர காண்டம்) 194/20

பக்திக்கு எவர் ஒருவர் தீங்கு இழைக்கிறாரோ அவர் மூவுலகங்களிலும் துன்பப் படுவார். ஒரு பக்தனைத் தூற்றியதால் துர்வாஸர் துக்கத்திற்குள்ளானார்.

(குறிப்பு : துர்வாஸரின் கதை அனைவரும் அறிந்த ஒன்று. அம்பரீஷனை அவர் அவமதித்ததால் அவர் பெரும் அல்லலுக்கு உள்ளானார்)

***

INDEX

ஸ்ரீமத் பாகவதம்,ஆதிபுராணம்,பத்ம புராணம் (உத்தர காண்டம்) ஸ்லோகங்கள்

சிறந்த செயல் ஹரி பக்தியே

ஹரி சரணாகதியே சகலமும் தரும்

ஹரியை அறிபவனே வித்வான்

பக்தர்களிடம் பக்தி செலுத்துபவனே சிறந்த பக்தன்

வைஷ்ணவ துரோகம் என்ற பாவம் கோடி கல்பமானாலும் போகாது

பக்தனை அவமதிப்பவன் மூன்று உலகங்களிலும் துன்பப்படுவான்

நன்றி : Truth Vol89, No 2 Dated 23-4-21 (Slokas taken from this issue)

***

tags –  சரணாகதி, புராணத்துளிகள், 

PLEASE JOIN US TODAY SUNDAY 12-7- 2021

12-7- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

ASHTAPATHI -22 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -8 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Bodhendral

– 12 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

London swaminathan Talk read by Sri Kalyanasundaram, Producer, Gnanamayam- 10 mts

TOTAL TIME- APPR. 50 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-publicity1272021

உலக இந்து சமய செய்தி மடல் 11-7-2021 (Post.9840)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9840

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 11 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

xxx

கூசமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.

‘கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை போல், ‘கூ’ என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர். இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூக வலை தளத்தில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது’ என்றார்.

கூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இப்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கணக்கு துவக்கியுள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்’ என, கூறப்பட்டுள்ளது

XXX

முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத்

காஸியாபாத்: இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டம் காசியாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.

கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

XXXX

திருப்பதி கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூைஜகள் நடந்து வருகிறது. அர்ஜித சேவைகள் மற்றும் பூைஜகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப் படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் கோவில் உள்ளே மடப்பள்ளியில் 

தயாரிக்கப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தி உள்ளது.

முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவைகளை முன்பதிவு செய்த வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் 

அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள். ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது.

ஆனால் தற்போது முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ைநவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்ைமச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

XXXXX

புரி ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந் தேதி வரை 144 தடை – கோவில் நிர்வாகக்குழு முடிவு

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் தடையை மீறி பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக, ரத யாத்திரை செல்லும் கிராண்ட் சாலையில் 144 தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி இரவு முதல் 13-ந்தேதி காலை வரை இந்த தடை அமல்படுத்த கோவில் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.

யாத்திரை செல்லும் பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற 3 தேர்களையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையாளர்கள் இழுத்து செல்வார்கள் எனவும், இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த சேவையாளர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புரியில் மட்டும் யாத்திரை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் எந்த துணிச்சலான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒடிசாவின் புரியில் மட்டுமே ரத யாத்திரை நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு புரியில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.அவற்றை ஒடிசா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து வைரஸ் பரவலால் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிக பலியை சந்தித்துள்ளோம்.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்துவது சரியாக இருக்காது. கடவுள் விரும்பினால் அடுத்தாண்டு சிறப்பாக கொண்டாடலாம். புரியைத் தவிர மற்ற இடங்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது.இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

XXXX

பெண் அர்ச்சகர் நியமனம் அவசியமா?

‘தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டப்படி, அடுத்த 100 நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். ”அது மட்டுமல்ல, தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இது, தமிழக அரசியல்வாதிகள், ஆன்மிகவாதி களிடையே பெரும் விவாதப் பொருளானது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, இதுபற்றி கூறியதாவது:அர்ச்சகர்கள் என்பவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் பூஜிக்கும் கடவுளின் ஊழியர்கள். அவர்கள், வணங்கும் கடவுளுக்கும், பூஜை செய்யும் கோவிலின் ஆகம விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர்.ஆகம விதிகளை பின்பற்றி பூஜை செய்யும் கோவிலுக்கு செல்லும் முன், அர்ச்சகர்கள், தங்கள் வீடுகளிலும், வழிபாடுகளை நடத்துவர். மணமானவர்கள், ஆச்சார்யார்கள், வாழ்நாள் அர்ச்சகர்கள் என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் உள்ளன. விதிகளை கடைப்பிடிக்கும் முன், முறைப்படி தீட்சையும் பெறுகின்றனர்.


அர்ச்சகர்கள் கோவிலுக்குள் நுழையும் முன், பஞ்ச சுத்திகரணா என்னும், ஐந்து வித சுத்தத்தை கடைப்பிடிப்பர்.. இந்த விதிகளை தொய்வில்லாமல் பின்பற்றுவோர், அந்தந்த கோவிலுக்கு உரிய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகராகலாம். சமூக சமத்துவம் என்ற பெயரில், அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகராக்கலாம் என்பது, மேற்கத்திய கலாசாரத்தை ஒன்றிய கருத்தாக இருக்கலாம்.ஹிந்து மதத்தில், பெண்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மதங்களில் இல்லாத வகையில், பெண் தெய்வ வழிபாடும் உள்ளது. பெண்கள் வழிபடும் இல்லங்களில், தேவதைகள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அர்ச்சகராவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கை உடையது. கோவில்கள் என்பவை, மதச் சின்னங்கள். இதில், அரசு தலையிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெண் அர்ச்சகர் நியமனத்தில், அனைத்து தரப்பு வல்லுனர் குழுவை நியமித்து, கருத்து கேட்டு முடிவு எடுப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். நாகசாமி தொல்லியல் அறிஞர் –

XXX

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் சுவாமி பிரகாஷானந்தா, 99 வயதில் இறந்தார்

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலத்தின் பழமையான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான சுவாமி பிரகாஷானந்தா வயது தொடர்பான வியாதிகளால் இறந்தார் என்று மட வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 99.

ஆன்மீகத் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அடங்குவர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், சுவாமி பிரகாஷானந்தாவை அறிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கம் என்று பாராட்டினார்.

“சுவாமி பிரகாஷானந்தா ஜி அறிவு மற்றும் ஆன்மீகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரது தன்னலமற்ற சேவை செயல்கள் ஏழை ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தன. உன்னதமான எண்ணங்களை பிரபலப்படுத்துவதில் அவர் முன்னிலை வகித்தார்
ஸ்ரீ நாராயண குரு. அவரது மறைவால் வேதனை. ஓம் சாந்தி, ”என்று ட்வீட் TWEET செய்துள்ளார்.

சுவாமி பிரகாஷானந்தா, -சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தை உலகளவில் மதிக்கப்படும் ஆன்மீக மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தார்.

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN


நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 11-7-2021 (Post No.9839)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9839

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by SUJATHA RENGANATHAN .

XXX

Almost all of us are descendants of Hindus says Assam CM Himanta Biswa

Asserting that Hindutva is a way of life, Assam Chief Minister Himanta Biswa Sarma has said that adherents of most religions are descendants of Hindus.

“Hindutva is a way of life. How can I or anybody stop it? It has been flowing through the ages. Almost all of us are descendants of Hindus. A Christian or a Muslim has also descended from Hindus at some point in time,” PTI quoted Sarma as saying on Saturday.

He further stressed that the Hindutva began 5,000 years ago and it cannot be stopped.

While addressing a press conference organised to mark the completion of the second month of his government in the state, the BJP leader said Hindutva cannot be “removed” as it will mean “moving away from one’s roots and motherland”.

Assam CM backs ‘Love Jihad’ law

Backing the law against ‘Love Jihad’ to check the menace of men marrying women by concealing their religious identity and other information, the Assam chief minister said he has reservations for the term but asserted that nobody will be allowed to cheat a woman.

“The government will not tolerate any woman being cheated by anyone – whether Hindu or Muslim. Appropriate action will be taken against such offenders to ensure the safety and security of our sisters,” he said.

xxxx

Uttarakhand govt to send Gangajal in tankers if Kanwar yatra not allowed

With Kanwar Yatra on hold, the Uttarakhand government is planning to transport Gangajal in tankers to other states such as Uttar Pradesh, Delhi, Haryana, Madhya Pradesh and Bihar to ensure that yatris do not miss the annual pilgrimage and are able to perform the rituals without travelling to Haridwar.

The Uttarakhand state government had on June 30 issued orders cancelling the yatra in view of the Covid-19 situation, but has been requested by its Uttar Pradesh counterpart to reconsider the decision.

“In case, the yatra is not permitted due to recent strict stance of the high court on religious gatherings, the Uttarakhand government is planning to transport Gangajal in tankers to the states from where maximum number of pilgrims arrives. The final decision on the yatra will be taken soon. If it is permitted, then it will be with restrictions,” said a state government official.

Maximum Kanwar yatris come to Haridwar from the states of Delhi, UP, Haryana, Rajasthan, Punjab, Bihar, Odisha, Jharkhand, Chhattisgarh and MP.  In 2019, over 3.5 crore devotees had visited Haridwar in the auspicious month of SRAWAN.

XXX

RSS Joins Koo App

Amidst the faceoff between American microblogging platform Twitter and the Government of India, Twitter’s rival and indigenous microblogging platform Koo on Friday said the Rashtriya Swayamsevak Sangh (RSS) has joined its platform to connect with people in Indian languages.

Koo, which has been projected as an alternative to Twitter, is witnessing an exceedingly increasing userbase on the made in India platform. Koo is widely being adopted by the BJP leaders and also those among the citizens who are vocally criticising Twitter for flouting Indian laws especially the new IT rules.

“With over 5 million members, RSS is the progenitor and leader of a large body of organisations with a presence across various facets of Indian society,” the company said in a statement.  

Founded by serial entrepreneur Aprameya Radhakrishna, founder of TaxiForSure, and Mayank Bidawatka, who previously formed companies like MediaAnt and Goodbox, Koo now has over 6.5 million users.  

“A made in India platform, Koo enables organizations to strengthen local reach and connect with communities in various parts of India. The RSS’s official spokesperson, Rajiv Tuli, has also joined Koo,” the company said.

‘Those who indulge in lynching are against Hindutva’: RSS chief Mohan Bhagwat

Rashtriya Swayamsevak Sangh chief Mohan Bhagwat on Sunday said the concept of Hindu-Muslim unity is misleading because there is nothing to unite as they are no different. Speaking at an event organised by Muslim Rashtriya Manch, which is the Muslim wing of the RSS, Bhagwat said there can never be any dominance of either Hindus or Muslims. “There can only be the dominance of Indians,” Bhagwat said, as news agency PTI reported.

“It has been proven that we’re descendants of the same ancestors from the last 40,000 years. People of India have the same DNA,” the RSS chief said adding that politics can’t unite people. “There are some works that politics can’t do. Politics can’t unite people. Politics can’t become a tool to unite people but can become a weapon to distort unity,” he said, as quoted by news agency ANI.

Those who are indulging in lynching are against Hindutva, the RSS chief said but he also mentioned that sometimes some false cases of lynching have also been registered against people.

Bhagwat said Muslims are not in danger in India as development is not possible without any unity in the country and for unity, dialogue is needed, not discord. “Don’t get trapped in the cycle of fear that Islam is in danger in India,” he said.

xxxx

Pollution in Yamuna: Mathura priests ban entry of politicians

The priests have put up a huge banner on the Ghats of the river in Mathura, saying “They all are liars who swear on Yamuna ji. They are only seen when elections are near. These culprits of mother Yamuna and officials are banned from roaming around the Yamuna River and performing puja.” 

A local priest, Radhey Shyam, said, “Several political leaders visit the Yamuna River during elections but disappear after winning polls. But this time we will not let that happen and are making our intentions clear through this banner.” 

He further said, “Political leaders have assured us time and again that Yamuna would be cleared of pollutants but nothing has changed on the ground.” 

National president of Akhil Bhartiya Teerth Purohit Mahasabha, Mahesh Pathak, also said that the river water was getting worse every day despite the fact that a party, which claims to understand the Hindu sentiments attached to the river, was in power in the state.” 

Xxx

Odisah CM Naveen Patnaik asks admin to complete Rath Yatra rituals on time

Chief Minister Naveen Patnaik on Thursday asked Puri district administration and other stakeholders to ensure that all rituals of the Rath Yatra on July 12 are completed on time.

Reviewing the preparations at a high-level meeting virtually, the Chief Minister said the Rath Yatra will be held this year during a very critical period like last time. Devotees from the entire world can have a darshan of Lord Jagannath through television and social media, he added.

The Chief Minister sought the cooperation of all sevayats and people of Puri for completion of the festival on time. He thanked all for completion of last year’s Rath Yatra in a hassle-free manner. 

The State government has exempted Puri town from weekend shutdown on Saturday in the interest of general public as curfew has been clamped by the district administration from July 11 to  July 13 in view of the Rath Yatra.

Xxx

People perform rituals at Triveni Sangama

As the district administration has given permission to the people to perform rituals for the deceased members of their families at Triveni Sangama in Bhaganandala, the ‘Asthi Visarjana’ was carried out by people on Tuesday.

Following the Covid-19 lockdown, there was a ban on religious rituals for the last two months. Many people had requested the district administration to permit to carry out the ‘Asthi Visarjana’ ritual as the process has to be done within 16 days of the death.


Triveni Sangama is known to the best place to carry out the ritual, owing to religious beliefs.

XXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY SUJATHA RENGANATHAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

tags –  hindu news, 1172021