பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர் ரால்ப் வால்டோ எமர்சன் (Post No.9838)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9838

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Brahma

BY RALPH WALDO EMERSON

If the red slayer think he slays,

Or if the slain think he is slain,

They know not well the subtle ways

I keep, and pass, and turn again.

Far or forgot to me is near;

Shadow and sunlight are the same;

The vanished gods to me appear;

And one to me are shame and fame.

They reckon ill who leave me out;

When me they fly, I am the wings;

I am the doubter and the doubt,

I am the hymn the Brahmin sings.

The strong gods pine for my abode,

And pine in vain the sacred Seven;

But thou, meek lover of the good!

Find me, and turn thy back on heaven.

அமெரிக்காவின் 19-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டுரையாளர் , புலவர் எமர்சன் (RALPH WALDO EMERSON) ஆவார் . இந்து மதமும் இந்தியாவும் இவரது கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பரிணமிக்கிறது. பிரம்மா முதலிய இந்து தெய்வங்கள் இவருடைய கவிதைகளில் பிரகாசிக்கின்றனர். ஆயினும் இவர் இந்துமதம் பற்றி மட்டுமே பாடியவர் என்று நினைத்துவிடக் கூடாது.

எமர்சன், ஒரு பாதிரியாரின் மகன். பாஸ்டன் நகரில் பிறந்தார். பாஸ்டன் பிராமணர்கள் (Boston Brahmans) என்ற அறிஞர்கள் வரிசையில் இவரது குடும்பத்தினரும் உண்டு. தந்தையை எட்டு வயதிலேயே இழந்த போதும் அவர் சேகரித்த இந்தியா, இந்து மதம் பற்றிய புஸ்தகங்களை இவர் படித்ததை இவரது படைப்புகள் மூலம் அறியலாம். அமெரிக்க பண்பாட்டின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

தந்தையைப் போலவே ஹார்வர்டில்(Harvard) கற்றார். அவரைப் போலவே கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் ஆனார். ஆனால் 29 வயதில் இவருக்கும் கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சர்ச்சிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த்தார் . பிரபல எழுத்தாளர் தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle)  நட்பு மலர்ந்தது.

அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் மாசாசூசெட்ஸ் பகுதியில் கான்கார்டில் (Concord)  குடிபுகுந்தார். கல்லூரி விரிவுரையாளராகவும் கட்டுரையாளராகவும் மாறினார். 33 வயதில் , அவருடைய முதல் புஸ்தகம் நேச்சர் (Nature)  அச்சாகியது. அதில் தன்னுடைய எண்ணங்களை பிழிந்து தந்தார்.

பாரம்பர்ய எண்ணங்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனித்துவம் இருக்க வேண்டும். தன்னைத்தானே சார்ந்து வாழ வேண்டும் என்ற கருத்துக்களை விதைத்தார். உங்களுடைய சுய புத்தியைப் பயன்படுத்தி நல்லது கெட்டதைப் பகுத்தறியுங்கள் . இயற்கையோடிணைந்த  எளிய வாழ்க்கை வாழுங்கள் என்று எழுதினார்.

இவருடைய விரிவுரைகள், சொற்பொழிவுகள் இவரைப் புகழ் பெற வைத்தன. ஐரோப்பிய செல்வாக்கிலிருந்து அமெரிக்கா  விடுபடவேண்டும்; .புதிய அமெரிக்க கலாசாரத்தை உருவாக்குவோம் என்று அறைகூவல் விடுத்தார். 38 வயதில் அவர் வெளியிட்ட முதல் கட்டுரைத் தொகுப்பில் இவற்றைக் காணலாம்.

அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தவுடன், 44-ஆவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். பின்னர்  அடிமை ஒழிப்பு இயக்கத்திலும், பெண்ணுரிமை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

பிறந்த தேதி -மே 25, 1803

இறந்த தேதி- ஏப்ரல் 27, 1882

வாழ்ந்த ஆண்டுகள் – 78

இவரது இலக்கிய படைப்புகள் –

1836 – NATURE

1841 – ESSAYS

1844 – ESSAYS

1847 – POEMS

1850- REPRESENTATIVE MEN

1856- ENGLISH TRAITS

1860-  THE CONDUCT OF LIFE

1867 – MAY DAY AND OTHER PIECES

1870- SOCIETY AND SOLITUDE

1893- NATURAL HISTORY OF INTELLECT

Xxxx

எனது முந்தைய கட்டுரைகளிலிருந்து …..

பிளாட்டோவும் நானும் ஒன்றே!

ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.

அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

எமர்ஸன் கேட்டார்:

புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,

படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!

xxxx

HITCH YOUR WAGON TO A STAR

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

—subham–

tags –  பிரம்மா , அமெரிக்க கவிஞர், ரால்ப் வால்டோ எமர்சன் , Emerson, Brahma poem,

எதிர்க் கட்சிகள் தேவையே; எதிரிக் கட்சிகள் கூடாது! ((9837

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9837

Date uploaded in London – 11 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனநாயகம் சிறக்க எதிர்க் கட்சிகள் தேவையே; எதிரிக் கட்சிகள் கூடாது!

ச.நாகராஜன்

ஆட்சி முறைகளில் சிறந்ததாகக் கருதப்படுவது ஜனநாயக ஆட்சி முறையே. அதில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. காசுக்கு ஒட்டு போடுவது, நல்ல விஷயங்களை அரசியலாக்கிக் கெடுப்பது. லஞ்சத்தை அனைத்துத் துறைகளிலும் புகுத்துவது உள்ளிட்ட பல குறைகள் உள்ளன என்றாலும் மக்கள் நினைத்தால் ஊழல் புரிவோர்களையும் சொந்த லாபம் கருதி அராஜகம் செய்வோரையும் தூக்கி எறியும் சக்தியை ஜனநாயகம் தருகிறது.

ஆட்சியாளர்கள் தவறு செய்தோலோ, ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கத் தடுமாறினாலோ எதிர்க் கட்சிகள் தட்டிக் கேட்கும்; தக்க ஆலோசனையையும் தரும்.

இஸ்ரேலை ஒரு லட்சிய நாடாகப் பார்க்க முடிகிறது – தேசத்திற்கு ஒரு ஆபத்து வருகிறது என்கின்ற போது அங்கு கட்சிகள் நடக்கும் விதத்தைப் பார்த்து!

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடானியாஹுவின் (Benjamin Netanyahu) பதவிக்கு ஆபத்து. நாற்காலி ஆடியது. உடனே அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பென்னி கான்ட்ஸை (Benny Gantz) ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இதற்கிடையில் இஸ்லாமிய தீவிரவாதிகளான ஹமாஸுக்கும் (Hamas) இஸ்ரேலுக்கும் ஒரு போர் ஆரம்பித்தது. போர்க்காலம் முழுவதும் எதிர்க்கட்சியும் பென்னி கான்ட்ஸும் பிரதமர் பெஞ்சமின் நேடானியாஹுவிற்கு ஆதரவு அளித்தது. காஸா ஸ்ட்ரிப்பில் (Gaza Strip) ஹமாஸுடனான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியது எதிர்க்கட்சி. பென்னி புது அரசை அமைப்பதைப் பற்றி ஹமாஸ் போர் முடிந்தவுடன் ஆலோசனை செய்வதாக பிரதம மந்திரியிடம் தெரிவித்தார்.

பதவியில் அமர அவர் ஆசைப்படவில்லை.

இங்கு இந்தியாவிற்கு வருவோம். பாகிஸ்தானுக்கும் பங்களா தேஷுக்கும் போர். அப்போது இந்தியா பங்களா தேஷை ஆதரித்தது. இந்திரா காந்தி முழு ஆதரவையும் அளித்தார். பாகிஸ்தான் இரண்டானது. பங்களா தேஷ் உருவானது. அப்போது எதிர்க்கட்சியின் பிரதான தலைவராக இருந்த வாஜ்பாய் இந்திரா காந்தி அவர்களை துர்கா மாதா என்று கூறிப் புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தியே வியந்து போனார் – இப்படிப்பட்ட புகழாரத்தைக் கண்டு.

தேச நலனையே முன் வைத்தார் வாஜ்பாயி.

இப்போது? இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்கை செய்த போது எதிர்க்கட்சிகள் பாராட்டவில்லை. அட, சும்மாவாவது இருந்தார்களா? இல்லை.

ராகுல் காந்தி ராணுவத்தின் திறமையைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் சந்தேகப்பட்டார். எதற்காக சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கேள்வி கேட்டார். ராணுவத்திற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்காமல் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்வதற்கு காரணம் என்ன, அதற்கு ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்டார்!

இஸ்ரேலில் எதிர்க்கட்சித் தலைவர் புதிய அரசை  தன் தலைமையில் ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர் ஹமாஸை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுங்கள், உறுதுணையாக இருக்கிறோம் என்று பிரதம மந்திரிக்கு உறுதி அளித்தார். ஆதாரங்கள் எதையும் கேட்கவும் இல்லை, இஸ்ரேல் ராணுவத்தின் திறமை குறித்து சந்தேகத்தையும் எழுப்பவில்லை. தேசமே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர்.

   ஆனால் இங்கோ புல்வானா ஒரு பிரச்சினையே இல்லை, அது தேர்தலுக்காக எழுப்பப்பட்டது என்று ராகுல் காந்தியும் அவருடன் இணைந்த எதிர்க்கட்சியினரும் கூறினர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய மக்கள் ஒருமித்தமாக ஒன்று இணைகின்ற போது இங்கு நம்மை ஆக்கிரமிக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தால் அதைக் கூட கேள்வி கேட்கின்றன நமது எதிர்க்கட்சிகள். இவை எதிர்க் கட்சிகள் அல்ல, எதிரிக் கட்சிகள். இந்த நிலை மாற வேண்டும்!

ஆனால் பாரத மக்கள் புத்திசாலிகள்! அவர்களுக்கு 1947லிருந்து என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆகவே அரசுக்கு ஆதரவு தெரிவித்து அரசைப் பலப்படுத்துகின்றனர்.

எதிர்க் கட்சிகள் தேசத்திற்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் தாங்கள் இன்னொரு கட்சி என்பதை மறந்து ஒரே கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும். அப்படி வந்தால் சீனாவைக் கண்டும், பாகிஸ்தானைக் கண்டும் இந்தியா அவை என்ன செய்யப் போகின்றன என்று யோசிக்குமா என்ன?

வாஜ்பாயி போன்ற அரசியல் முதிர்ச்சியும் தேசபக்தியும் கொண்ட தலைவர்களே இன்று நாட்டுக்குத் தேவை – எதிர்க் கட்சிகளில்.

தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தால் தான் என்ன, ஒரே குரலாக இந்தியர்கள் 130 கோடி பேரும் சேர்ந்து ஜெய்ஹிந்த் என்று முழங்கினால் இந்தியா வெல்லும், வெல்லத்தானே செய்யும்!

ஜெய்ஹிந்த்!

***

INDEX

இஸ்ரேல், ஹமாஸ் போர், பிரதம மந்திரி பெஞ்சமின் நேடானியாஹுவின் அழைப்பு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ், இந்தியா, வாஜ்பாயி- இந்திரா காந்தி, பங்களா தேஷ் போர், புல்வானா, எதிர்க் கட்சிகள், ஜெய்ஹிந்த்

tags- எதிர்க் கட்சிகள் ,எதிரிக் கட்சிகள் , இஸ்ரேல்

PLEASE JOIN US TODAY SUNDAY 11-7- 2021

11-7-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON MumbaiSri Siddhi Vinayakar Temple10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  15 mts

Kumari Hiranmayi Raghavan

Mrs Kavitha Subramanian 

Mrs Latha Murthy

Mrs Radhika Shrikanth recite Thiruppugaz.

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 70 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAG- publicity11721

RIG VEDA IN BHAGAVAD GITA (Post No.9836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9836

Date uploaded in London –10 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

All the gods are addressed as Friends in the Rig Veda in hundreds of hymns. The seers called their colleagues  ‘comrades’. The same type of relationship exists in the Bhagavad Gita. Arjuna treated Lord Krishna as his friend and Krishna also treated him the same way. In later period Hindu Gods were portrayed in different roles such as husband, father, mother, boss, servant and friend. All these originated in the Rig Veda where Gods and Goddesses were described as sister, brother, father, mother and friend.

Rig Veda has some remarkable mantras to show that they were the source of Bhagavad Gita. ‘One who cooks for himself is a sinner’ – is found in both the Rig Veda and the Bhagavad Gita. ‘Fire sacrifices cause rains’ is also found in both. In the first part of the article,  I will compare some slokas/couplets of Bhagavad Gita with the Rig Vedic mantras.

Xxx

RV 1-24-7

Varuna, King, of hallowed might, sustaineth erect the Tree’s stem in the baseless region

Its rays, whose root is high above, stream downward. Deep may they sink within us, and be hidden RV 1-24-7

In Bhagavad Gita 15-1 we come across with the same upside down TREE simile:-

The Blessed Lord said,

Uurdhvamuulam adhassaakham

Asvattham praahur avyayam ……

They speak of imperishable Aasvattham (Peepal tree) as having its root above and branches below. Its leaves are the Vedas and he who knows this is the knower of Vedas.

In Katha Upanishad also we have,

‘With root above and branches below, this world tree is eternal’.

In Taittiriya Upanishad we have

‘I am the originator of world tree’.

So, The Tree of Life imagery, particularly upside-down tree image has its origin in the Rig Veda. In other cultures, of a later period, we see Tree of Life, but not upside down.

The thinking of ancient Hindus was same for thousands of years.

Xxx

RV 1-25-6

THIS, WITH JOY, THEY BOTH ACCEPT IN COMMON; NEVER DO THEY FAIL

THE EVER FAITHFUL WORSHIPPER.

In Bhagavad-Gita 9-31, we read

Ksipram bhavati dharmatmaa

……

Na me bhaktah pranasyati

“Swiftly does he become a soul of righteousness and obtain lasting peace. O Son of  Kunti, know thou for certain that MY DEVOTEE PERISHES NEVER”.

Rama also said the same in Valmiki Ramayana,

To him who seeks My protection even once and requests help of Me saying, I am yours , I shall give him fearlessness from all beings. This is my resolve- Ramayana  

xxx

1-31-3/4

In the Rig Vedic hymn 1-31 we hear all the famous persons of an older period. Manu, Vivasvan, Yayati, Nahusa, and Kuru appear in the hymn.

This shows the link to 4-1 of Bhagavad Gita, where we see Vivasvan and Manu.

In Bhagavad Gita 4-1, Lord Krishna says,

The Blessed Lord said ,

“I proclaimed this imperishable yoga to Vivasvan,; Vivasvan told it to Manu and Manu spoke it to Iksvaku”.

Hindus believe the root of Dharma is in the Vedas. Upanishads are the gist of Vedas and the Bhagavad Gita is the gist of all Upanishads. Famous acharyas like Sankara commented on these scriptures. Thus we see all the beliefs and customs have its origin in the Rig Veda. Even the Rtus/ seasons are six in both the Rig Veda and Sangam Tamil literature. Elsewhere the seasons are four. Walking Seven Steps with a guest is in the Rig Veda and Sangam Tamil literature. Rivers are feminine, Earth is Mother and Heaven is Father and hundreds of such things are common.

–subham–

tags- Gita and Veda, Rig Veda in Gita

குழந்தைகளுக்கு கதை எழுதிய பிரெஞ்சு ஆசிரியர் லா பாந்தேன் (9835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9835

Date uploaded in London –10 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பஞ்ச தந்திரக் கதைகளையும் கிரேக்க மொழியிலுள்ள ஈசாப் கதைகளையும் தழுவி பிரெஞ்சு மொழியில் கதை எழுதியவர் லா பாந்தேன்

ஷான் தெ லா பாந்தேன்  (JEAN DE LA FONTAINE)  கதைகள் பல மொழிகளில் வெளிவந்தன.

பிறந்த தேதி – ஜூலை 8, 1621

இறந்த தேதி – ஏப்ரல் 13, 1695

வாழ்ந்த ஆண்டுகள் 73.

லா பாந்தேன் (La Fontaine)  , மத்திய பிரான்ஸிலுள்ள ஷாதோ தேரியில் பிறந்தார்.அவருடைய தந்தை ஒரு அரசாங்க அதிகாரி. தனது மகனை கத்தோலிக்க ஏசுமத கல்லூரியில் படிக்க வைத்தார் . லா பாந்தேன்  , நன்கு படித்து வழக்கறிஞர் ஆனார். தந்தை போல அரசு பணியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் வேலை செய்தார் . போதுமான பணம் கிடைக்கவில்லை.

26 வயதில் ஒரு பணக்கார பெண்மணியை (heiress) மணந்தார் . அது நீடிக்கவில்லை. 1658ல் அவரது மனைவி பிரிந்து சென்றார். பின்னர் எழுத்துத் துறையில் இறங்கினார். ஆயினும் புஸ்தகம் அச்சிடக் கையில் காசு இல்லாததால் வள்ளல்களின் (Patrons) ஆதரவை நம்பி வாழ்க்கை நடத்தினார் .

அவருக்கு 43 வயதான போது குட்டிக் கதைகள் என்ற கதைத் தொகுப்பை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்தாலிய கதாசிரியரான ஜியோவன்னி பொக்காஸியோ (Boccaccio) போன்றோரின்  கதைகளை கருவாக வைத்து வேடிக்கைக் கதைகள் எழுதினார். காதல் கதைகளை கிண்டலும் நக்கலும் நிறைக்கும்படி எழுதினார்.

அது அவரது வாழ்நாளிலேயே நான்கு பதிப்புகளைக் கண்டது. ஆயினும் கடைசி தொகுதியை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்தனர். அதிக ஆபாசம் இருப்பதாகக் குற்றம்சாட்டி தடை செய்தனர். அவரும் பிற்கால வாழ்வில் தான் இப்படி எழுதியது தவறே என்று வெட்கப்பட்டார்; வருத்தமுற்றார்.

குழந்தைகளுக்காக, மிருகங்களை (Animal Fables) கதாபாத்திரங்களாக வைத்து, நீதிக்கதைகளை எழுதினார். அப்போது அவருக்கு வயது 47. கிரேக்க நாட்டு ஈசாப் (Aesop) போலவே பிராணிகள் பேசின. இறுதியில் ஒரு நீதியும் இருந்தது. அதில் நகைச் சுவையையும் கலந்தார். வாழ்ககையை நல்லபடி நடத்துவது எப்படி என்று அறிவுரை வழங்கிய போதிலும் லா பாந்தேன் கதைகள் சுற்றி வளைத்துப் பேசின. இதனால் கதைகளின் நீளமும் அதிகரித்தது .

இதனுடைய இரண்டாவது தொகுப்பு வருகையில் ஸம்ஸ்க்ருத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கீழை தேசத்தியக் கதைகளைத் தழுவி எழுதினார். இது முன்னைய படைப்புகளைவிட மேம்பட்டு இருந்தன. பிராணிகள் இடையே நடைபெறும் உரையாடல்களும் சிறப்பாக அமைந்தன. பிரெஞ்சு இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய தொண்டினைக் கருதி அவர் பிரெஞ்சு மொழி அகாடமிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

அகாடமி உறுப்பினர் பதவி மிகவும் கௌரவம் மிக்க பதவி.

இலக்கிய படைப்புகள்

1664 – SHORT TALES

1668- FABLES, FIRST VOLUME

1679- 1694 FABLES, SECOND VOLUME

–SUBHAM–

tags – குழந்தை கதை,   பிரெஞ்சு ஆசிரியர்,  லா பாந்தேன், La Fontaine

நடிகையின் காலில் சுட்ட பின்னர் கூறப்பட்டது : இது இந்தியா இல்லை! (9834)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9834

Date uploaded in London – 10 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

1   

அவள் ஒரு நடிகை. தனது சொந்த நாட்டில் நடித்து அந்த மக்களின் பணத்தாலேயே வாழ்ந்து கொண்டு பிரபலமான நடிகை அவள். கஷ்டமான ஒரு சூழ்நிலையில் சொந்த நாடு இருக்கும் போது நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக தன் சொந்த தேசத்திடமே தேசத்திற்கு விரோதமான சில கேள்விகளைக் கேட்டாள் அவள்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவள் காலைக் குறி பார்த்துச் சுட்டனர்; சுட்டு விட்டுச் சொன்னார்கள் – “இது ஒன்றும் இந்தியா இல்லை!”

இந்தியாவில் தேச துரோகம் செய்து கொண்டே பிரபலமாகவும் இருக்கலாம்; தேசத்திற்கே துரோகம் விளைவிக்கும் கேள்விகளும் கேட்கலாம்! எப்படி இருந்தாலும் கவலை இல்லை.

ஆனால் இஸ்ரேல் அப்படி இல்லை; தகுந்த தண்டனையை அந்த நடிகைக்குக் கொடுத்தது – வாழ்நாள் எல்லாம் ஞாபகம் இருக்கும் தண்டனை!

இஸ்ரேலே, உனக்கு ஒரு சல்யூட்!

2  

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் – மீடியாக்கள்! ஆனால் அந்த அருமையான தூணை கேலிக் கூத்தாக்கும் சேனல்கள் உலகெங்கும் (இந்தியாவில் எண்ண முடியாத அளவில்!) உள்ளன.

அல் ஜஜீரா ( Al Jazeera) என்று ஒரு சேனல்! இந்த அல் ஜஜீரா இஸ்ரேலைப் பற்றித் தொடர்ந்து அவதூறான செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பிக் கொண்டே இருந்தது. இஸ்ரேல் ஒரே ஒரு மணி நேரத்தில் அந்த சேனலின் தலைமையகத்தைப் பொடி பொடியாக்கியது. அது மட்டுமல்ல, இஸ்ரேல், இந்தியா அல்ல என்ற ஒரு செய்தியையும் தந்தது. இந்தியாவில் எவன் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் தேசத் துரோகக் கருத்தைச் சொல்லலாம். பிரிவினை வாதத்தைத் தூண்டலாம், சொல்லலாம்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லலாம்; ஜெய்ஹிந்த் என்பதை கவர்னர் உரையிலிருந்து நீக்கலாம்; அதை சபாஷ் போட்டு ஒரு எம்.எல்.ஏ.சபையில் பேசலாம். என்ன வேண்டுமானாலும் இந்தியாவில் நடக்கும்.

இந்திய அரசு இஸ்ரேலின் வழியில் நடக்க வேண்டும்.

நடந்தால் பல நடிக, நடிகையர், டைரக்டர்கள் நொண்டிக் கொண்டு தான் நடக்க வேண்டி வரும் – வாழ் நாள் முழுவதும்!!

3

யாஸர் அராஃபத், தீவிரவாதி இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தவுடன் அதற்கு ஆதரவு தெரிவித்தது யார் தெரியுமா?

சவூதி அரேபியாவா – இல்லை!

பாகிஸ்தானா – இல்லை!

ஆஃப்கானிஸ்தானா – இல்லை!

இராக்கா – இல்லை!

துருக்கியா – இல்லை!

நன்கு யோசித்துப் பாருங்கள்? யார் உடனே அதை அங்கீகரித்து ஆதரவு தெரிவித்தது.

நாம் தான் இருக்கிறோமே, செகுலர் கண்ட்ரி என்று!

இந்தியா தான் அங்கீகரித்தது!

இந்திரா காந்தி வழக்கம் போல முஸ்லீம்களை தாஜா செய்ய பாலஸ்தீனை அங்கீகரித்தார். ராஜீவ் காந்தியோ அராஃபத்துக்கு ப்ன்னாட்டு புரிதலுக்காக ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru Award for International Understanding) பரிசை அளித்தார்.

அது மட்டுமல்ல, அவர் உலகம் முழுவதும் சுற்ற ஒரு போயிங்கை வேறு பரிசாக அளித்தார்.

அதே அராபத் நன்றி கெட்டு, காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியே தான் என்று ஓ ஐ சியில் – இஸ்லாமிய நாடுகளுக்கான நிறுவனத்தில் (Organisation of Islamic Countries) கூறினார். எப்படிப்பட்ட நன்றி உணர்வு பாருங்கள்!

அது மட்டுமல்ல, அவர் சொன்னார் :” எப்போது பாகிஸ்தான் வேண்டுகிறதோ அப்போது எனது வீரர்கள் காஷ்மீரின் சுதந்திரத்திற்காகப் போரிடுவார்கள்”.

இந்த அராஃபத் 103 நாடுகளில் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு ஆள்!!

6 விமானங்களை கடத்தியவர். 2000 அப்பாவிகளைக் கொன்று குவித்தவர். அப்படிப்பட்ட ஆசாமிக்குத் தான் நமது இண்டர்நேஷனல் அவார்ட்!

எப்படிப்பட்ட நாடு இந்தியா பாருங்கள்!! ராஜீவ் காந்தி, ‘நேரு புரஸ்காரை’ (புரஸ்கார் – பரிசு) தந்தார். அதாவது அதற்கு உரித்தான ஒரு கோடி ரூபாயை அளித்தார். 200 கிராம் தங்கத்தினால் ஆன ஒரு ஷீல்டு வேறு அவருக்குக் கொடுக்கப்பட்டது!

1988இல் அளிக்கப்பட்ட அதன் இன்றைய மதிப்பை சும்மா ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள் – எவ்வளவு? விழி பிதுங்குகிறதா!.

4

இதே அராஃபத் காஷ்மீருக்காக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக இருப்பவரை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும். பாலஸ்தீனத்திலும் இந்தியாவிலும் முஸ்லீம் அல்லாதோரால் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆகவே இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்றார் அஃராபத்.

5

இப்படிப்பட்ட சமீப கால சரித்திரத்தைக் கொண்ட காங்கிரஸ்காரர்கள் இன்றைய அரசுக்கு நமது வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தர விழைகிறார்கள்!

அட பரிதாபமே!

நன்றி :புதுராஜன் ஸ்ரீதரன், ஐ பிஎஸ்(Puthurajan Sridharan, IPS)

Source : Thanks to Truth Weekly magazine, Vol 89 Issue 10 Dated 18-6-2021

***

tags-  நடிகை, இந்தியா, ,அல் ஜஜீரா, இஸ்ரேல்

ரிக் வேதத்தில் பகவத் கீதை! (Post.9833)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9833

Date uploaded in London –9 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை இந்து மதத்தின் பிரிவுகளான அறு சமயத்தாருக்கும் பொதுவானது. ஏனெனில் அதிலுள்ள கருத்துக்கள் உபநிஷத்தின் சாரம் . உபநிஷதங்களும் எல்லோருக்கும் பொதுவானது என்பதை சமய ஆச்சார்யார்கள்  உரை எழுதி ஒப்புக்கொண்டுள்ளனர். பகவத் கீதைக்கும் எல்லோரும் உரை எழுதியுள்ளனர்  உபநிஷதங்கள் வேதத்தின் சாரம். அதை வேதத்தின் முடிபு, துணிபு என்ற பொருளில் வேத + அந்தம்= வேதாந்தம்  என்பார்கள் .

வேதம்தான் தர்மத்தின் மூலம் ; வேதமே இந்துமதத்தின் ஆணிவேர் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.; அதற்கு ஆதாரம் காட்ட வேண்டாமா.? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்றெல்லாம் நம்மாழ்வாரைப் போற்றுகிறார்கள்; இவை அவ்வளவும் உண்மையே என்பதை ரிக் வேதத்தை ஊன்றிப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும் . திருவாசகம், தேவாரத்திலுள்ள வரிகள் ரிக் வேதத்தின் எதிரொலியே ; விறகில் தீயினன் , பாலில் படுநெய் போலப் பரவியவன் என்ற தேவார வரிகள் அப்படியே உள்ளது. அக்கினி என்ற பகவான் பெயரை சிவன் என்று தலைப்பிட்டுவிட்டால் அப்படியே பொருந்துகிறது.

விஷ்ணு என்ற பெயர் பல இடங்களில் தெளிவாக வருகிறது. ஆயினும் சங்கத் தமிழ் இலக்கியம், தொல்காப்பியம் முதலியவற்றில் “சிவன்” என்ற சொல் இல்லாதது போலவே ரிக் வேதத்திலும் இல்லை. ஆனால் சிவனைக் குறிக்கும் வேறு அடை  மொழிகள் புற  நானூற்றில் உள்ளது போலவே ரிக் வேதத்திலும் உண்டு ஒரே ஒரு இடத்தில் சிவ என்ற சொல் வருவது உரிச்  சொல் (adjective) அல்ல, பெயர்ச் சொல்லே (proper noun) ; அது சிவ பெருமானையே குறிக்கும் என்று வில்சன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நான் வேறு ஒரு சுருக்கு வழி  வைத்துள்ளேன். அக்கினி தேவனைப் போற்றும் துதிகளை எல்லாம் சிவன் என்று கருதினால் போதும். நல்ல பொருத்தம் இருக்கிறது சிவனே நெற்றிக் கண்ணில் தீயை உடையவன்;. நடராஜர்  கையிலும் அனல் உண்டு.

சுருக்கமாகச் சொன்னால் வேத கால அக்கினியே சிவனாகவும் முருகனாகவும் வழிபடப்படுகின்றார்கள் .

xxx

இப்போது பகவத் கீதைக்கு மூலமான வேத மந்திரங்களைக் காண்போம்.

RV 1-24-7

மூலமில்லாத சுத்த வானிலே வசிக்கும் சுத்த வலிமையுள்ள அரசனான வருணன், மேலே மூலமுள்ளவையும், கீழே நோக்குபவையுமான கதிர்களிருக்கும் ஒளித் தூணை உச்சத்திலே ஏந்துகிறான் . அந்தக் கிரணங்கள்/ ஒளிக்  கற்றைகள் எங்களுக்குள் இறங்கி மறைவாக நிற்கட்டும் (சீவனுக்கு காரணமான ரசிமிகள் ராணங்களாக  எண்ணில் ஸ்தாபனமாகுக- Jambunathan) RV 1-24-7

Varuna, King, of hallowed might, sustaineth erect the Tree’s stem in the baseless region

Its rays, whose root is high above, stream downward. Deep may they sink within us, and be hidden RV 1-24-7

பகவத் கீதை

ஊர்த்வமுலமத:சாகமச்வத்தம் ப்ராஹு ரவ்யயம்

ச்சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத  ஸ வேத வித் 15-1

பொருள்

மேலே வேருள்ளதும், கீழே கிளையுள்ளதுமான  அசுவத்தமாக முடிவற்றதாய் தோன்றும் ஸம்ஸாரத்தை பேசுகிறார்கள்.எதற்கு இலைகள் வேதங்களோ அந்த மரத்தை எவன் அறிந்தவனோ  அவன் வேதத்தை அறிந்தவன் ஆவான்

இதில் மர உவமையும் அதன் மேல், கீழ்ப் பகுதி விளக்கங்களும் ஒப்பிடத் தக்கவை.

Xxx

RV 1-25-6

THIS, WITH JOY THEY BOTH ACCEPT IN COMMON; NEVER DO THEY FAIL

THE EVER FAITHFUL WORSHIPPER

மித்திரனும், வருணனும் மகிழ்ச்சியுடன் இதை ஏற்கிறார்கள் நம்பிக்கையுடன் தொழும் பக்தர்களை அவர்கள் எப்போதும் கைவிட்டதில்லை. RV 1-25-6

பகவத் கீதை 9-31

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சச்வச்  சாந்திம் நிகச்சதி

கௌந்தேய ப்ரதி ஜானீஹி ந மே பக்த :ப்ரண ச்யதி  9-31

விரைவில் தரும சிந்தனையுடையவன் ஆகின்றான்.சாசுவதமான சாந்தியைப் பெறுகிறான் . குந்தீ புத்திரனே  என்னுடைய பக்தன் நாசம் அடையவே மாட்டான் . இந்த உண்மையை உணர்ந்து உலகுக்கு உரைப்பாயாகுக.

xxxx

1-31-3/4

இந்த இரண்டு மந்திரங்களில் அக்நியானது விவஸ்வா னுக்கும் மனுவுக்கும் முதலில் புலப்பட்டதாக ரிஷிகள் பாடுகின்றனர்.

இதே வரிசை பகவத் கீதையின் நாலாவது அத்தியாயம் முதல் ஸ்லோகத்திலும் உளது..அதற்குப்பின்னர் பாண்டவர்களின் முன்னோர்களா ன யயாதி, புரு முதலியோர் பெயர்களும் வருகின்றன .

பகவத் கீதை 4-1

நான் இந்த அழிவற்ற யோகத்தை முதலில் விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவசுவான் மநுவுக்கு உபதேசித்தார். மநு இக்ஷ்வாகுவுக்கு உரைத்தார். -பகவத் கீதை 4-1

நண்பன் என்ற சொல் நூற்றுக்கணக்கான ரிக்வேத மந்திரங்களில் வருகிறது. கடவுளரையும் சகா க்களையும் ரிஷிகள் நண்பர்களே என்றுதான் அழைக்கின்றனர். அர்ஜுனன் – கிருஷ்ணன் உறவும் நட்பின் அடிப்படையிலே அமைந்தது என்பது வெளிப்படை. விசுவ ரூப தரிசனம் காட்டிய பின்னரும் கூட கிருஷ்ணன் அர்ஜுனனைக் கட்டாயப்படுத்தாமல் , நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்; ஏற்பதும் ஏற்காததும் உனது ரிமை என்று சொல்லிவிடுகிறான்.

குரு  வம்சத்தின் மூதாதையர்களான யயாதி, நஹுஷன் பெயர்களும் இதே துதியில் வருவது குறிப்பிடத்தக்கது இது பகவத் கீதை, மஹாபாரத காலத்தை நிர்ணயிக்கவும் உதவும்..

–subham–

tags – Bhagavad Gita, Rig Veda, Gita in Veda,

2000 கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி (Post.9832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9832

Date uploaded in London –9 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எமிலி டிக்கின்ஸன் (EMILY DICKINSON) என்ற அமெரிக்கப் பெண் கவிஞரின் வாழ்வு மிகவும் மர்மம் மிக்கது. அவர் உயிருடன் இருந்த போது ஏழு கவிதைகள் மட்டுமே வெளியாகின. அவர் இறந்துபோன பின்னர் அவருடைய பெட்டி ஒன்றை சகோதரி திறந்து பார்த்து பிரமித்துப் போனாள் . அதில் 2000 கவிதைகள் இருந்தன.அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அவை முழுதும் அச்சாகின.இன்று அவர் புகழ் அமெரிக்கா முழுதும் பரவி இருக்கிறது. ஆங்கிலக் கவிதை ரசிக்கப்படும் எல்லா இடங்களிலும் எமிலியின் கீர்த்தி பரவிவிட்டது .

எமிலி திருமணம் செய்துகொள்ளவே இல்லை. எப்போதும் வெள்ளை உடையையே அணிந்தார். பல ஆண்டுகளுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி எவரையும் சந்திக்க மறுத்தார். ஆயினும் கடிதங்களை எழுதிக் குவித்தார். அவற்றின் மூலம் எல்லோரையும் தொடர்பு கொண்டார். மரணத்தைத் தனது நண்பன் என்றும் , அதைச் சந்திக்கத் தயார் என்றும் எழுதினார். பிற்காலத்தில் இவர் புகழ் பரவியபோது இவரது வாழ்வைத் சித்தரித்தோர் அவரை  அமைதியான எரிமலை (Silent Volcano) என்றும். பிரஷர் குக்கர் (Pressure Cooker)  என்றும் வருணித்துள்ளனர்

பிறந்த தேதி – டிசம்பர் 10, 1830

இறந்த தேதி – மே 15, 1886

வாழ்ந்த ஆண்டுகள் – 55

எமிலியின் வாழ்க்கை விந்தையானது; புதிரானது. ஒரு சன்யாசினிபோல ஏன் வாழ்ந்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை ; இதுவரை புரிபடவும் இல்லை. எல்லா குடும்பங்களிலும் நடை பெறும் பிரச்சனைகள்தான் இவரது சகோதரி, சகோதரர் வாழ்விலும் இருந்தன. அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்பா, வேலை  நிமித்தம் வெளியூர் சென்றாலும் குழந்தைகளின் படிப்பில் நல்ல கவனம் செலுத்தினார். நல்ல வசதியான குடும்பம்தான் .

 அமெரிக்காவின் மாசசூசட்ஸ் பகுதியில் ஆமர்ஸ்ட்(Amherst)  என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை வழக்கறிஞர்.. பள்ளிக் கல்வியை முடித்த எமிலி, ஒரே ஒரு ஆண்டு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாசித்தார். அது ஒரு பெண்கள் கல்லூரி ஹா ஸ்டல். வீட்டுக்குத் திரும்பியவுடன் அம்மாவுக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டதால் தங்கையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை வகித்தார்.

பகல் முழுதும் ரொட்டி சுடுதல், தையல் வேலை, தோட்ட வேலை, நாயை கூட்டிக்கொண்டு உலா வருதல்; இரவு முழுதும் எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் படித்தல், கவிதை எழுதல் என்று தன வாழ்க்கையை வகுத்துக்கொண்டார். அன்பு, வாழ்க்கை, வலி, வேதனை, மரணம், இயற்கை என்று பல விஷயங்களை கவிதையில் வடித்தார்.

கவிதையைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து மனிதர்களைச் சந்திக்க மறுத்தார். 40 வயது முதல் வீட்டை விட்டு வெளியேறியதே இல்லை. தோட்டத்தின் வேலிதான் அவருக்கு எல்லை. அதைத் தாண்டவுமில்லை. புது முகங்களை சந்தித்ததும் இல்லை. ஏன் இந்த மாறுதல்? இதுவரை எவருக்கும் புரிபடவில்லை. அவரும் எழுதி வைக்கவில்லை. அவர் எழுதிய ஏராளமான கடிதங்களையும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2000 கவிதைகளையும் வைத்து ஊகிக்கத்தான் முடிகிறது. அப்போதும் புதிர் விடுபடவில்லை .

அவர் வாழ்ந்தகாலத்தில் ஒரு சில கவிதைகளே வெளியிடப்பட்டன. அவைகளையும் சிலரே புரிந்து கொண்டனர். அவருடைய காலத்துக்குப் பொருந்தாத விஷ யங்கள்; பொருத்தமில்லாத சொற்கள்  ; ; புதிய எண்ணங்கள்; ஆழ்ந்த பொருள் படைத்தவை. இவரைத் தவிர மற்ற கவிஞர்கள் வார்த்தைகளைக் கொண்டு இந்திரஜாலம் செய்த காலம் அது. சொல் வேட்டுவர்களுக்கு சுவை தரும் கவிதைகளை மற்றவர்கள் எழுதினர்.

அவர் 55 வயதில் இறந்த பின்னர், அவனுடைய தங்கை ஒரு பெட்டியைத் திறந்துபார்த்தபோது சுமார் 2000 கவிதைகள் இருந்தன. 1955ம் ஆண்டு வாக்கில்  அவை முழுதும் அச்சுக்கு வந்தன.

இவ்வளவு கவிதைகளையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடிதங்களையும் எழுதிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்ததால் இவரைப் பற்றி பல திரைப்படங்களும், புஸ்தகங்களும், டெலிவிஷன் தொடர்களும், வானொலி நிகழ்ச்சிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆமெர்ஸ்ட்(Amherst)  என்னும் அமெரிக்க கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தை அமெரிக்க அரசு தேசீய வரலாற்றுச் சின்னமாகஅறிவித்துள்ளது.

எமிலி இறந்த பின்னர் வெளியான அவரது கவிதை நூல்கள் –

1890 – POEMS BY EMILY DICKINSON

1891 – POEMS SECOND SERIES

1896  – POEMS THIRD SERIES

1914 – THE SINGLE HOUND

1955 – THE COMPLETE POEMS OF EMILY DICKINSON

IN THREE VOLUMES

1958 – THE LETTERS  OF EMILY DICKINSON

IN THREE VOLUMES

1961 – FINAL HARVEST

–சுபம்-

tags- 2000 கவிதை, பெட்டி, , அமெரிக்க பெண்மணி, எமிலி டிக்கின்ஸன் ,EMILY DICKINSON,

கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்! (Post No.9831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9831

Date uploaded in London – 9 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர், ஜூலை 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!

ச.நாகராஜன்

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரானா பற்றி ஏராளமான தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். பயப்படுகிறோம்.ஆகவே அதிகாரபூர்வமான அறிவியல் தகவல்களை மட்டுமே அதற்குரிய ஆதாரத்துடன்  அறிந்து கொள்ள வேண்டும்; இதர தகவல்களை ஒதுக்க வேண்டும்.

  1. தடுப்பூசி போடுவது நல்லது. கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

நமது ஊடகங்கள் தடுப்பூசி போடுவது பக்க விளைவை ஏற்படுத்தும் எனு தவறான செய்தியை ஆதாரமின்றிப் பரப்பியது வருந்தத் தக்க ஒரு விஷயம். தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற தகவல்களை, பழைய போட்டோக்களை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவற்றை வெவ்வேறு காரணங்களினால் இறந்தவரைச் சித்தரித்து, கொரானா பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தன. போட்டோக்களில் உள்ளவர்கள் கொரானாவினால் இறந்தது போன்ற ஒரு மாயத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசியை ஆதரிக்கின்றன; அறிவியல் அறிஞர்கள் அனைவரும் இதைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்கின்றனர்.

அமெரிக்காவிலேயே தப்பான தகவல்களை 25 சதவிகித அமெரிக்கர்கள் பரப்புகின்றனர் என்றால் நமது நாட்டில் 100 சதவிகிதம் உடனுக்குடன் வதந்திகளைப் பரப்புவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

ஒரு தகவலை எப்படி உண்மையா, தவறா என அறிவது? விஞ்ஞானிகள் கூறும் வழி இது.

  1. எந்த ஊடகம் இதைக் கூறியது (Check the Source) 2) யார் கூறியது (Check the author 3)  என்ன சொல்லப்பட்டிருக்கிறது (Check the content) இந்த மூன்றையும் நன்றாக ஆய்வு செய்யுங்கள். பின்னர் நம்புங்கள்.

பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ தரும் அறிவுரை இது : தவறான தகவல்களை நம்பாதீர்கள். இப்போது ஒரு தகவல் சரியா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உண்மை அறியும் தகவல் தளங்கள் உள்ளன. அவற்றை உடனடியாகப் பயன்படுத்துங்கள். மற்றவரையும் பயன்படுத்தத் தூண்டுங்கள். தவறான செய்திகளைத் தவறு என்று அனைவருக்கும் தெரிவிப்பதோடு அப்படிப்பட்ட ஊடகங்களைப் பார்க்காதீர்கள்; அவற்றைப் பற்றி அனைவருக்கும் அறிவித்து அப்படிப்பட்ட ஊடகங்களின் செல்வாக்கை (அதாவது டி.ஆர்.பி.ரேடிங்கை) குறையுங்கள். ஸயிண்டிபிக் அமெரிக்கன் தரும் உண்மை அறியும் தளங்கள் இவை:

       Fact-checking organizations such as PolitiFact and FactCheck.org 

  • தடுப்பூசியுடன் முக கவசம் அணிதல் வேண்டும்; சமூக இடைவெளியை இன்னும் சிறிது காலம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஊசியைப் போட்டுக் கொண்ட லக்ஷக்கணக்கானோரில் பத்து சதவிகிதத்திற்கும் கீழானோருக்கு அபாயமில்லாத சாதாரண ஜுரம் வந்திருக்கிறது. இரண்டு டோஸ்கள் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு 95%க்கும் மேலாக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவது ஊசியை முதல் ஊசி போட்டுக் கொண்ட 40 நாட்களுக்குப் பின்னர் போட்டுக் கொள்வது அதன் தடுப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • போலந்து நாட்டு விஞ்ஞானிகள் ஊசி போடுவதற்கு முன்னால் நன்கு உறங்கி, உரிய முறையில் உணவை உட்கொண்டு, சரியானபடி நீரை அருந்தி தக்க உடல்நிலையுடன் செல்வது சிறப்பாகும் என்று அறிவுறுத்துகின்றனர். இது நமது தடுப்புத் திறனை சாதாரணமாகவே அதிகரிக்க வைக்கிறது. பெயின் ரிலீவர் (Pain Reliever) மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது அவர்கள் தரும் இன்னொரு அறிவுரை. கோவிட்-19 தடுப்பூசி போடும் போது இன்னொரு தடுப்பூசி – ஃப்ளூ போன்றவற்றிற்கானவை- போடுதல் கூடாது.
  • பக்க விளைவு எதுவும் வராது. அப்படி அபூர்வமாக ஒருவருக்கு வருவது என்றால் அது ஊசி போட்ட முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் தெரிய வரும். ஆகவே இருபது நிமிடங்கள் ஊசி போட்ட மருத்துவ மனையில் இருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து திரும்பலாம்.

இவ்வளவு சொல்லியும் நீங்கள் சாலையை எட்டிப் பாருங்கள். முக கவசம் அணிவதில்லை. கூட்டம் கூட்டமாகப் போகின்றனர். தடுப்பூசி பற்றி கவலைப்படுவதுமில்லை.

அரசையும் மருத்துவ மனைகளையும் குறை கூறிப் பயனே இல்லை; நாம் உரிய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நமது வீட்டாரையும் அண்டை அயலாரையும் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

கோவிடை வெல்வோம்; ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!

***

tags –  கொரானா , உண்மைகள், முக கவசம், தடுப்பூசி

TAMIL VEDA AND RIG VEDA- PART 2; CLOSE FAMILY RELATIONSHIP (Post No.9830)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9830

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST PART WAS POSTED HERE ON 3RD JULY 2021. HERE IS THE SECOND PART:-

CLOSE RELATIONSHIP BETWEEN FATHER AND SON, AND MOTHER AND HER CHILDREN ARE FOUND BOTH IN THE RIG VEDA AND THE TAMIL VEDAA KNOWN AS TIRUKKURAL. I HAVE COLLECTED SOME MANTRAS FROM THE FIRST 100 MANTRAS OF THE RIG VEDA (RV).

RV 1-26-3

Agni , you are like a father for his son, kinsman for his kinsman and a friend for his worthy friend .

Here in one single mantra we see father, relative and friend. That shows the close-knit society of the Vedic period.

xxx

RV 1-91-20

Skilled in home duties, meet for holy synod, for council meet, a glory to his father .

The meaning is that Lord Soma blesses the worshipper with a worthy son who will shine in the assembly of scholars and bring glory to his father.

Tamil Veda echoes this message in Tiruk Kural:-

The duty of the son to the father is to make others exclaim what penance has he/ father done to be blessed with such a worthy son –KURAL 70

Earlier Valluvar says

What a father expected to do his son is to make him fit to hold the foremost place among the learned – KURAL 67

xxx
Father and son

RV.1-38-1

What now?  when will you take us by both hands , as a dear father his son?

Gods, sacred grass is clipped and spread for you to sit.

This sensual touch of children is also in the Tamil Veda-

The touch of children is delightful to the body, and their voice is pleasing to ear – KURAL 67

The food into which the children’s little hands have been dipped will be far sweeter to the parent than the Amrita – KURAL 64

Sweet is the music of flute and lute to those who know not the melody of their little one’s prattle – KURAL 66

In another Kural couplet Valluvar says that a mother will be happier when she hears that her son is a scholar than the day she gave birth to him.

This shows the approach of Valluvar and Vedic Rishis/seers is same with regard to family duties and relationship.

xxxx

Violence against misers is also found both Tamil Veda Tirukkural and the Rig Veda. Please see the following link:-

VIOLENCE IN RIG VEDA AND TAMIL VEDA AGAINST THE …

https://tamilandvedas.com › 2017/10/21 › violence-in-r…

  1.  

21 Oct 2017 — They went even to the extent of preaching violence against the stingy fellows. The poets of … Break the jaw; Crush him like Sugarcane: Valluvar.

–subham–

tags – Rig Veda-2, Tamil Veda-2