Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உபநிஷத்துகளில் மிகப்பழமையானது பிருகதாரண்ய உபநிஷத். மேலைநாட்டினரும் கூட இதை கி மு 800 என்று தேதி குறிப்பிடுகின்றனர். அதில் வரும் கதை இதோ: பிரஜாபதிக்கு தேவர், மனிதர், அசுரர் மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூவரும் பிரம்மசர்யத்தை அனுஷ்டித்து தந்தையிடமே
tags –த த த கதை, ஐ.நா சபை , காஞ்சி சுவாமிகள் ,மைத்ரீம் பஜத பாடல்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று May 2-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
XXXX
கும்ப மேளா நிறைவு-பிரதமர் வேண்டுகோளை ஏற்று அமைதியாக நடந்தது
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் ஏப்ரல் 27 ம் தேதி
நடந்தது. பிரதமர் வேண்டுகோளை ஏற்று வெறும் சம்பிரதாய மாக நடத்தப்பட்டது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கொரோனா தாக்கம் காரணமாக, இதன் நாட்கள் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 30 ம் தேதி
முடிவடைந்தது. கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கங்கை நதியில் குவிந்து புனித நீராடினர்.
கும்பமேளாவில் கடைசி புனித நீராடல் ஏப்ரல் 27 ம் தேதி
மதியம்வரை, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சுமார் 700 மடாதிபதிகள் புனித நீராடினர். எந்த ஆரவாரமும் இல்லாமல் வெறும் சம்பிரதாய அளவில் புனித நீராடல் சடங்கை மேற்கொண்டனர்.மற்ற படித்துறைகளில் பக்தர்கள் கூட்டமும் மிகக்குறைவாகவே காணப்பட்டது.. மடாதிபதிகளின் ஒத்துழைப்புக்கு கும்பமேளா அதிகாரி தீபக் ராவத் நன்றி தெரிவித்தார்.
XXXX
23 ஆண்டுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்திய நாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வ முத்துக்குமார சுவாமி, நவக் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தன்வந்திரிசுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
செவ்வாய் பரிகார தலமாகவும், நோய் தீர்க்கும் தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு
ஏப்ரல் 29 ம் தேதி வியாழக்கிழமையன்று கும்பாபிஷேகம் நடந்தது. ஏப்ரல் 29 காலை புனிதநீர் அடங்கிய கடங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட புறப்பட்டு கோயிலை வலம் வந்து கற்பக வினாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகிஅம்மன், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் மூலவர் விமானங்கள், 6 கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னியிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
கோவிலை சுற்றியுள்ள வீடுகளில் இருந்த பக்தர்கள் மாடிகள் மீது ஏறி குடமுழுக்கை தரிசனம் செய்தனர்.
XXXX
திருப்பதி ஏழுமலையானுக்கு ‘இன்னோவா‘ கார் நன்கொடை
திருமலைபாலாஜி வெங்கடாசலபதி கோவிலுக்கு , 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘இன்னோவா‘ கார் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள ஹர்ஷா டயோட்டா நிறுவனத்தினர், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா காரை, நேற்று நன்கொடையாக வழங்கினர். காருக்கு மாவிலை, சந்தன குங்குமம் இட்டு, அலங்கரித்து பூஜை செய்து, பழங்கள் படைத்து வழிபட்டு, அதிகாரிகள் அதன் சாவியை பெற்றுக் கொண்டனர்.
அசோக் லேலண்ட் நிறுவனம் பாலாஜி வெங்கடாசலபதி கோவிலுக்கு ஒரு மினி பஸ்ஸை நன்கொடையாக கொடுத்தது
XXXX
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.94½ லட்சம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் சமீபத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது காணிக்கையாக கோவில் உண்டியலில் பணம், தங்கநகை, வெள்ளிநகை போன்றவற்றை செலுத்தினார்கள். கடந்த 34 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி திருத்தணி முருகன் கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது.
கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.96 லட்சத்து 51 ஆயிரத்து 200 செலுத்தி இருந்தனர். மேலும் 560 கிராம் தங்கம், 4 கிலோ 900 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
XXXX
திருவண்ணாமலையில் ஸ்டாலின் மகள் கிரிவலம்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை, தடையை மீறி, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அவர்களை போலீசார் தடுக்கவில்லை என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலால், 14வது மாதமாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சித்ரா பவுர்ணமி திதி நேரத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும், தி.மு.க., மருத்துவ அணி மாநில துணைத் தலைவருமான கம்பன் உள்ளிட்ட மூன்று பேர், முக கவசம் அணிந்து, கிரிவலம் சென்றனர்.
இவர்கள் மூவரும், இரவு, 8:50 மணியளவில், கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தை கடந்த போது, ‘இவர்களை மட்டும் எப்படி கிரிவலம் செல்ல அனுமதித்தனர்’ என, உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்பினர். அந்த பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், கிரிவலப் பாதையில் ஆங்காங்கே இருந்த போலீசாரும், இவர்களை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து, கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் கேட்க முயன்றபோது, மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பி.ஆர்.ஓ., முத்தமிழ் செல்வன் கூறுகையில், ”மாவட்ட நிர்வாகத்திடம், ஸ்டாலின் மகள் கிரிவலம் செல்ல அனுமதி கேட்கவில்லை; அனுமதியும் தரவில்லை,” என்றார்.
XXXXX
தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி வைகையில் கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் .27 நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு அழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு ஆடி வீதியில் செயற்கையாக வைகை ஆறு செட் அமைக்கப்பட்டு, காலை ஆண்டாள் மாலை சாற்றுதல் முடிந்த பின், ஆடி வீதியில் காலை 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதாக கருதி அழகர் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பச்சை பட்டுடுத்தி அழகர் அருள்பாலித்தார்.
7-ம் நாள் விழா காலையில் கோவில் ஆடி வீதியின் வடக்கு பகுதியில் ஏற்கனவே மாதிரியாக அமைக்கப்பட்ட வைகை ஆறு பகுதியில் கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
அங்கு மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக கடலூர் மாவட்டத்தில், கைவினைக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட 3 அடி உயர புதிய மண்டூக முனிவர் சிலை அங்கிருந்து அழகர்கோவில் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்து, விழாவில் வைக்கப்பட்டது. XXXX
சட்ட விதிகளின்படி கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா? அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
சட்ட விதிகளின்படி, கோவில் யானைகள் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி என்ற இரு யானைகளையும் பராமரிப்பது தொடர்பாகவும், பாகன்களை நியமிப்பது தொடர்பாகவும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு வனப்பகுதியில், யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானையைப் பாகன் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது குறித்து நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்ட விதிகளைக் கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என, இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தமிழக வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படும் வகையில், புதிய கொள்கை வகுப்பது தொடர்பாக யானைகள் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடந்த 23-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு, அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்..ஜூன் மாதத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
XXXXXX
கொரோனா மையம் அமைக்க ஈஷா பள்ளிகள் ஒப்படைப்பு
: ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தன், ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம். ‘இந்த சவாலில் இருந்து வெளிவர, நம் சமூகம் ஒன்றிணைந்து, அரசு நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 வயது நோயாளியை காப்பாற்ற தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்த 85 வயது முதியவர் வீட்டில் இறந்தார்.
மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் நாராயண் தபோல்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். கொரோனாவுக்கு நாக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட 40 வயது கணவருக்கு மருத்துவமனையில் படுக்கை வேண்டி பலரிடம் அவரது மனைவி கெஞ்சினார்.
இதையறிந்த தபோல்கர் டாக்டரிடம் ‘எனக்கு 85 வயது. வாழ்ந்து முடித்துவிட்டேன். பெண்ணின் கணவரை காப்பாற்றுவது தான் முக்கியம். என்னை ‘டிஸ்சார்ஜ்‘ செய்து அவருக்கு படுக்கையை வழங்குங்கள்‘ எனக் கூறினார்.
‘உங்கள் நிலை ஆபத்தாக உள்ளது. வீட்டுக்கு செல்வது நல்லதல்ல‘ என டாக்டர்கள் கூறியும் தபோல்கர் தன் படுக்கையை பெண்ணின் கணவருக்கு வழங்கிவிட்டு வீடு திரும்பினார். அதன்பின் மூன்று நாட்களில் தபோல்கர் இறந்துவிட்டார். தபோல்கர் செய்த உதவியால் பெண்ணின் கணவர் பிழைத்துவிட்டார் .தபோல்கர் தியாகத்தை பலரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
Xxx
Kumbha Mela ends: 70 lakh participated in ‘scaled down’ mela
Seventy lakh devotees participated in Haridwar’s Kumbh Mela, the mammoth religious congregation ended on Friday
Despite the second wave of Covid, huge number of people gathered around Haridwar to take a dip in the holy Ganga t
The 2021 event was a comparatively modest event — reduced to just one month and scaled down midway due to the raging pandemic.
Held over three months in normal circumstances, the Kumbh Mela this time formally begun as late as April 1.
Three shahi snans took place during the event on April 12, 14 and 27, the last one being reduced to a largely symbolic event.
The crowds began petering out after an appeal by Prime Minister Narendra Modi to the seers to keep their representation in Kumbh symbolic.
The Joona Akhada, the largest among the sects which attend the mela, was the first to respond to Modi’s appeal, followed by several other akhadas which withdrew from the event.
Ordinary devotees then followed their example.
Mela organisers claim that the event, among the largest religious gatherings on earth, passed off without any serious untoward incident anywhere in the Kumbh Mela Kshetra spread over an area of 641 hectares from Haridwar to Devprayag.
“A stampede, a clash or a dispute among seers of different Akhadas marked most of the editions of the event in the past. But this time, despite the extraordinary circumstances arising out of a strong second wave of coronavirus, the Kumbh Mela passed off without any interruption.
xxxx
Uttarakhand government suspends Char Dham yatra
The Uttarakhand government on Thursday decided to suspend the Char Dham Yatra this year due to the second wave of the COVID-19 pandemic.
However, the portals of the four revered shrines — Kedarnath, Badrinath, Gangotri and Yamunotri — will open at the decided time.
Tirath Singh Rawat, Chief Minister of Uttarakhand, said, “Given the pandemic situation, the Char Dham Yatra for pilgrims has been suspended for this year. The portals of all the four shrines will open at the decided time. Only the priests will conduct all rituals which will continue as per tradition.”
The date for opening the portals of Badrinath shrine is May 18 which was announced on the occasion of Basant Panchami. The portals of Kedarnath shrine will open on May 17.
The portals of Yamunotri shrine will be opened on May 14 while the portals of Gangotri shrine will be opened on May 15 on the occasion of Akshay Tritya.
Last year, the Yatra started for pilgrims of Uttarakhand on July 1 while for pilgrims from outside the state, it was opened in the last week of July.
The number of daily pilgrims was fixed at 800 for the Kedarnath shrine, 1200 for Badrinath, 600 for Gangotri and 400 for Yamunotri last year.
Earlier this month, the Uttarakhand High Court had directed the state government to formulate guidelines for the yatra.
In comparison to 2019 when more than 38 lakh pilgrims visited the Char Dham of Uttarakhand, the numbers came down to 4.2 lakh in 2020 due to the COVID-19 pandemic.
XxXX
Dalai Lama contributes to India’s fight against pandemic
Tibetan spiritual leader the Dalai Lama on Tuesday announced to contribute to the PM-Cares Fund as a token of solidarity with fellow Indian brothers and sisters. “I have been following the continuing challenge that the Covid-19 pandemic has been posing across the world, including in India, with concern,” the Dalai Lama said in a statement.
“At this critical time, during this alarming Covid-19 surge, I have asked the Dalai Lama Trust to make a donation to the PM-CARES Fund as a token of our solidarity with fellow Indian brothers and sisters.
“May I take this opportunity to express my deep appreciation for all the efforts that are being made to tackle this devastating pandemic, especially by those courageously working on the frontline. I pray that the pandemic threat will end soon,” the elderly Buddhist monk added.
The Tibetan administration in exile is based in the north Indian hill town of Dharamshala in Himachal Pradesh.
Xxx
Hingula jatra kicks off without devotees
Here is some news from Odisha
The famous nine-day Maa Hingula Jatra took off at Gopalprasad village under Talcher block here on Monday though with Covid restrictions.
However, all customary rituals were carried out amid safety protocol, as the goddess appeared in the form of fire at Hingula temple.
While devotees flock to the ‘pitha sthala’ every year to seek darshan of the goddess, this year was different as gatherings were banned by the district administration and all entry routes sealed by police.
“We had deployed two platoons of police force at Gopalprasad where Maa had appeared, to prevent crowd. The first day of the jatra was peaceful and no untoward incident reported,”
Legend has it that Maa Hingula, who is the presiding deity in the kitchen of Jagannath temple in Puri, leaves the temple on this day to give darshan to devotees.
xxxx
Madras High Court order on Temple Elephants
The Madras High Court on Tuesday (April 27) appealed to the relevant authorities to ensure that the elephants held in captivity by the various temples are treated in a humane and dignified manner, are provided sufficient food and water and shelter from the heat, and not otherwise beaten or mistreated in any manner or form.
The Bench of Chief Justice Sanjib Banerjee and Justice Senthilkumar Ramamoorthy was presiding over a Public Interest Litigation filed by one Rangarajan Narasimhan, concerning temple elephants and other elephants owned by private individuals.
The Court noted that there were two aspects to the present matter:-
Treatment of the elephants in captivity, particularly in several temples in the State.
Desirable prohibition of the wonderful animal being domesticated or used as a beast of burden any further
The Petitioner submitted that two elephants by the names of Andal and Lakshmi at the Srirangam Temple were without mahouts. Though the State didn’t admit the position, however, the Court remarked,
“It has to be immediately looked into whether the two elephants are interacting with any person who is attending to them, since elephants are known to be attached to individuals and even emotional to some extent.”
Further, asking the relevant authorities to ensure that the elephants are treated in a humane and dignified manner, the Court also remarked that they should be provided with sufficient food and water and shelter from the heat and not otherwise beaten or mistreated in any manner or form.
A report on the compliance of such rules at every temple site with any captive elephant has been directed to be filed when the matter appears next on June 8.
xxxx
Octogenarian RSS worker gives up hospital bed for younger patient, later dies at home
An 85-year-old man in India who selflessly abandoned his hospital bed to make way for a younger patient has passed away from the coronavirus at home, said reports. Narayan Dabhalkar, a retired statistician, and Hindu organisation RSS worker walked out of the casualty ward of the Indira Gandhi Rughnalaya (IGR) government hospital in Nagpur, Maharashtra, against the advice of doctors – and despite his blood oxygen levels falling – after he witnessed a woman pleading with staff to admit her 40-year-old husband to the crowded medical facility.
“I am 85,” Mr Dabhalkar reportedly told staff. “I have lived my life. Saving the life of a young man is more important. Their children are young… please give my bed to them.” Discharged and collected by his daughter Aasawari Kothiwan, he died three days later at home.
Xxxx
TOYOTA INNOVA CRYSTA DONATED to balaji temple
The M/s Harsha Motors has donated a Toyota Innova Crysta vehicle worth Rs.20 lakhs to Tirupati Tirumala Devsathanam on Sunday morning.
On behalf of Harsha Toyota Sri Bhanuprakash Reddy handed over the vehicle keys to Srivari temple Deputy EO Sri Harindranath in front of Temple after special pujas.
ASHOK LEYLAND DONATES MINI BUS TO TTD
The auto giant Ashok Leyland Co, Chennai has donated a Rs.24 lakh worth mini bus of 34 seat capacity to TTD on Saturday.
On behalf of Ashok Leyland, Sri K Mohan, it’s Sales Head handed over the vehicle keys to Srivari temple Dy EO Sri Harindranath in front of Srivari temple after special pujas etc.
xxxxxxxxxxxxxxx
Comedian withdraws video after outfit run by BJP MLA’s son takes offence
A comedian has withdrawn a video from social media platforms after an organisation run by a Madhya Pradesh BJP MLA’s son accused him of hurting religious sentiments.
Ranjeet Kaushal, also known as Ranjeet Bhaiya, told PTI on Saturday that he got a call from a person from `Hindu Rakshak’, an outfit run by BJP MLA Malini Laxman Singh Gaud’s son Eklavya.
Eklavya Singh was in news earlier this year when he filed a case against comedian Munawar Faruqui for allegedly cracking jokes about Hindu deities, leading to the latter’s arrest.
“A man rang me up from Eklavya Singh’s office. He told me my video has hurt religious feelings and I have no right to mock a religion. I felt he was right so I apologised and withdrew the video,” Kaushal said.
“I had no intention to hurt anybody’s religious feelings. The video had a message against infanticide in the end,” the comedian added.
A Hindu Rakshak spokesperson said Kaushal withdrew the video about Navratri after the organisation issued him a “first and last warning”.
xxxxxxxxxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
சுதந்திரப் போராட்டத்தில் எவ்வளவோ தியாகங்கள்! எவ்வளவோ வீரர்கள் தங்கள் சொத்து சுகத்தை இழந்து சிறையில் வாடினார்கள்.
அந்தச் சிறைவாசத்தில் மலர்ந்தது ஒரு சிறைவாச இலக்கியம். பண்டிட் ஜவஹர்லால் நேரு சிறையிலே படித்தார்; எழுதினார். மஹாத்மா காந்திஜி சிறையிலே படித்தார்; எழுதினார். வினோபா பாவே கீதைச் சொற்பொழிவுகளை சகாக்களுக்காக சிறையிலே நிகழ்த்தினார்; அது கீரைப் பேருரைகளாக மலர்ந்தது. ராஜாஜி ஜெயில் டைரி எழுதினார். அது சரித்திரக் குறிப்பாக மாறியது. அதே போல சுதந்திரப் போராட்ட வீரரான பட்டாபி சீதாராமையா சிறையிலே பல அருமையான சுவையான செய்திகளைப் படித்தார்; சேகரித்தார். தேதியிட்டு எழுதப்பட்ட அந்தக் குறிப்புகள் பின்னால் Feathers and Stones என்று அழகிய புத்தகமாக மலர்ந்தது.
அதில் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். அவரது செய்தி சேகரிக்கும் பாங்கு மற்றும் அழகிய நடை ஆகியவற்றிற்காக.
7-11-1942 தேதியிட்ட அழகிய தகவல் இது.
இதோ அவரது எழுத்து (தமிழாக்கம் என்னுடையது) :
மௌலானா சில பழைய சரித்திரப் புத்தகங்களை ஆர்டர் செய்திருந்தார். அதில் கிராமப் புறத்தில் வாழும் மக்களின் நுண்ணறிவு பற்றிய செய்திகள் இருந்தன. ஒரு செய்தி இது!
xxx
மலைப்பாம்பு விழுங்கிய சிறுவன்!
ஒரு மிகப் பெரிய மலைப்பாம்பு ஒரு பையனை விழுங்க ஆரம்பித்தது. அவன் கால்களைப் பிடித்து அது இழுக்க அவன் ஓவென்று அலறினான். என்னென்னவோ முயற்சிகளைச் செய்து பார்த்தான் அந்தச் சிறுவன். ஒன்றும் பலிக்கவில்லை. பாம்பு பிடித்த பிடி விடவில்லை. பாம்பின் கண்களில் புழுதியை வாரி இறைத்தான். ஆனால் அதுவோ கொஞ்சம் கொஞ்சமாக அவனை மார்பு வரை விழுங்கி விட்டது. அவன் கைகளை வெளியில் நீட்டிக் கொண்டு ஓவென்று உரக்கக் கத்தினான். அந்தக் கூக்குரலைக் கேட்டு கிராம மக்கள் குழுமினர். பாம்பின் தலையில் அடித்தால் அது அந்தப் பையனையும் பாதிக்கும். ஏனெனில் அவன் உடலின் பெரும்பகுதி அந்தத் தலைப் பகுதியில் தான் இருந்தது. வாலைப் பிடிக்கலாமோ என்றால் அது கோபத்தில் பையனை ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது? ஆகவே அவர்கள் யோசித்தனர். அனைவரும் கழிகளை எடுத்துக் கொண்டு பாம்பின் முதுகெலும்பில் அடித்தனர். அது இறந்தது. பையன் காப்பாற்றப்பட்டான். அவனை உடனே வெளியில் இழுத்தனர். அவன் உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. உடம்பு முழுவது சிறு சிறு காயங்கள் மட்டும் இருந்தன.
பின்னர் அனைவரும் பாம்பின் உடலைப் பிளந்தனர். உள்ளே பார்த்தால் ஒரு ஆடும் ஒரு முயலும் இருந்தது.
xxxx
கழுகு தூக்கிச் சென்ற குழந்தை!
அதே புத்தகம் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தது.
ஒரு பெரிய கழுகு ஒரு சிறு குழந்தையைத் தூக்கிச் சென்று விட்டது. கிராம மக்கள் குழந்தையின் தந்தை போட்ட கூக்குரலைக் கேட்டு குழுமி விட்டனர். கழுகோ குழந்தையை ஒரு பாறையின் மேல் வைத்து விட்டது. குழந்தையின் தந்தை பாறை மீது ஏறினார். ஆனால் வழுக்கி விழுந்து விட்டார். பின்னர் குழந்தையின் தாய் துணிச்சலுடன் பக்குவமாக பாறையின் மீது ஏறினார். குழந்தையைக் காப்பாற்றி விட்டார். குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்தக் கழுகு குழந்தைக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பறந்து விட்டது.
xxx
சிறுத்தைகள் வேட்டையாடும் மான்கள்!
இன்னொரு குறிப்பு வேட்டையாடுவது பற்றியது. 1943இல் பதிவு செய்யப்பட்ட சுவையான குறிப்பு இது:-
ஹர்லாட் லாம்ப்ஸ் (Harlod Lamb) உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒரு சம்பவம் இது. தைமூரைப் பற்றியது. அந்தக் காலத்தில், (ஏன் இந்தக் காலத்திலும் கூடத்தான்,) மான்களை வேட்டையாட மன்னர்கள் சிறுத்தைகளைப் பயன்படுத்துவார்களாம். எப்படி? சிறுத்தைகளின் கண்களைக் கட்டி விட்டு அவற்றை குதிரைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார்கள். மான்கள் கூட்டமாக இருக்கும் இடத்திற்குச் சென்றவுடன் சிறுத்தைகளின் கண் கட்டை அவிழ்த்து குதிரையிலிருந்து அவற்றைக் கீழே இறக்கி விடுவார்கள். கண்களைத் திறந்தவுடன் எதிரிலிருக்கும் மான்களின் மீது பாய்ந்து அவற்றைச் சிறுத்தைகள் கொன்று விடுமாம். இது அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு!
இப்படி ஏராளமான செய்திகளைப் பார்க்கிறோம் பட்டாபி சீதாராமையா புத்தகத்தில்!
Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS
OPENING ANNOUNCEMENT & PRAYER
SONG BY MISS SAHANA FROM PONDICHERRY— 7
XXX
TALK BY Dr HARIHARA SREENIVASA RAO ON TEMPLE ARCHITECTURE IN ENGLISH-12 mts
Dr. Harihara Sreenivasa Rao , Bengaluru
D.O.B: 01-07-1948
Born in Harihara in Davanagere district, Karnataka. Hailing from a family who is devoted to taking care of rituals and various operations of Shri Harihareshwara Temple in Harihara for generations.
A Science graduate, having a Diploma in Civil Engg., done M.A. in Inscriptions and finally PhD. in Hydrology based on Inscriptions and Literature.
DR HARIHARA SREENIVASA RAO SAYS,
“Throughout my sessions on this platform, I will speak about various aspects of temple architectures, idols, inscriptions, acoustics, yoga, effects of lullaby with respect to their relation and effects in terms of spirituality and various religious aspects. Later I will touch upon a few aspects and traits of Hydrology and explain how throughout the passage of time it has given shape to various religious thoughts, spirituality, and literature”.
XXX
SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5
SHANMATHA TALK SERIES- KAUMARAM- MURUGAN WORSHIP– BY TIRUCHY MR K GANESAN-12 MTS
Ashtapathi 12 by London Balasubramanyam – 7 mts
BENGALURU MR .S. NAGARAJAN’S TALK ON “YOGA VASISTHAM”- 10 MINUTES
DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6
MANGALAM
TOTAL TIME- APPR. 65 MINUTES
XXXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .
LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 2-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!
வாத்ஸல்ய ஸஹிதா தேனு: யதா வத்ஸ மனுவ்ரஜேத் |
ததானுகச்சேத் ஸா தேவி ஸ்வபக்தம் சரணாகதம் ||
தன்னைச் சரணாகதி அடைந்தவனை, கன்றை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து போகும் பசு போல வாத்ஸல்யத்துடன் அனுசரித்து தேவி ரக்ஷிக்கிறாள்
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் யோனி பீடமாகத் திகழும் காமாக்யா ஆகும். அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப்படும் காமரூபத்தில் அமைந்துள்ள இது அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலாச்சல் மலையில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில், இந்த மலை மீது அமைந்துள்ள காமாக்யா தேவி ஆலயம் பழம் பெரும் சரித்திரத்தைக் கொண்டது. இதை காளிகா புராணமும் யோகினி தந்த்ரமும் விரிவாக விளக்குகிறது. வேத வியாஸரின் தேவி பாகவதமும் இந்தத் தலத்தைப் பற்றிக் கூறுகிறது. நான்கு ஆதி சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். பழைய காலத்தில் காமரூபம் என்று மிக பிரசித்தமாக இருந்த இது, பூமியின் மிகப் புனிதமான ஸ்தலம் என்று தந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் விக்ரஹம் ஏதும் இல்லை. மாறாக யோனி வடிவத்தில் உள்ள ஒரு பாறை மட்டுமே இங்கு வணங்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு நீரூற்றிலிருந்து தொடர்ந்து நீர் சுரக்கிறது. அதைத் தீர்த்தமாக பக்தர்கள் போற்றுகின்றனர்.
ஒரு மலையின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு பூர்த்தியாகாத படிக்கட்டுகள் உள்ளன. இதைப் பற்றிய புராண வரலாறும் ஒன்று உண்டு. நரகாசுரன் என்னும் அசுரன் தேவியை மணக்க எண்ணினான். அதற்கு தேவி ஒரு நிபந்தனையை விதித்தாள். ஒரே இரவில் தன் கோவிலுக்கு நீலாச்சல் மலையில் படிகள் அமைக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அசுரன் படிக்கட்டுகளை அமைக்கும் போது தேவி காக்கையின் குரலை எழுப்பவே அசுரன் விடிந்து விட்டது என்று எண்ணி படிக்கட்டுகளைப் பூர்த்தியாக்காமல் விட்டுச் சென்றான். ஆகவே பூர்த்தியாகாத படிக்கட்டுகளே இன்றும் உள்ளன.
பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவள் என்பதால் காமாக்கியா தேவி என்ற பெயரை அம்பாள் பெறுகிறாள்.
தச மஹா வித்யா என்று சொல்லப்படும் கமலாத்மிகா, தூமாவதி, தாரா, காளி, திரிபுரசுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, மாதங்கி, பகளாமுகி ஆகிய பத்து தேவியரில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய மூவரின் விக்ரஹங்கள் பிரதான கோவிலில் இருக்க, மீதி ஏழு தேவியருக்கும் தனித் தனி கோவில்கள் அமைந்துள்ளன. தேவி உபாசகர்களுக்கு மிக முக்கிய ஸ்தலமாகத் திகழும் இந்த ஆலயம் தாந்திரீகர்களுக்கு பிரதானமான கேந்திரமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அம்புபச்சி மேளா என்ற திருவிழாவில் பல்லாயிரக்கணக்கில் தாந்திரீகர்களும் பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.
காமாக்யா தேவியை பாண்டவர்கள் வழிபட்டதை மஹாபாரதம் கூறுகிறது. பீஷ்மபர்வத்தில் அர்ஜுனனும் யுதிஷ்டிரரும் காமாக்யா தேவியைப் பிரார்த்தித்ததைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.
பல்வேறு காலங்களில் படையெடுப்புகளால் கோவில் தகர்க்கப்பட்டாலும் கூட, அவ்வப்பொழுது ஆண்ட அனைத்து மன்னர்களும் ஆலயத்தைப் புதுப்பித்து வந்ததை வரலாறு விவரித்துக் கூறுகிறது.
காமாக்யா ஆலயத்தின் கீழே முன்னூறு அடி தூரத்தில் பைரவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. 1971இல் ஸ்ரீராமகாந்த தேவ் சர்மா என்பவர் பைரவருக்கு ஒரு கோவிலை எழுப்பினார். அதற்கு அருகே அவர் கூர்மப்ரிஷ்த சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இது ஒரு அபூர்வமான வகை ஸ்ரீசக்ரமாகும். தேவிக்கே உரித்தான ஸ்ரீசக்ரம் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ காமாக்யா தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
One million probate records went on line on seventh of January 2014. Many interesting details about the wills left by famous people emerged from those records.
Shakespeare famously and curiously left his second best bed to his wife while Jane Austen allocated £51000(in today’s money) to her much loved dearest sister Cassandra- but only a paltry £3600 to brother Henry.
One million such records are available to download from the website of the National Archives for a fee. They are in ancestry.co.uk
The Probate span five centuries from 1384 to 1858, for those who left amounts greater than £5,which by the nineteenth century was roughly the same as £530 today.
Among the finest benefactors was the explorer Sir Francis drake who left £40,£15000 in today’s money, to the ‘poore people of Plymouth’ when he died in 1596.
George Frederic Handel, the German born composer left £600 to build a monument of himself in Westminster Abbey. That is about £90,000 in today’s money.
William Shakespeare bequeathed £150 to both his daughters, (more than £380000 today) and gave his wife the pleasure of his ‘second best bed’.
William Pitt, The Elder, the acclaimed politician left £3500 to his son William and £1750 to his son James Charles and £1750 to his daughter Lady Harriet £ one million today.
Jane Austen, the author left £700 of her 800 estate to her sister Cassandra. Her brother Henry inherited 50 £(£3600 today) and £50 was given to Madame Bigoen, who acted as a nurse to her family.
Sir Francis Bacon, the philosopher, scientist and author left a lot of money to his staff. He gave servant Robert Halpeny the equivalent of £800,000, provisions of hay, firewood and timber. Fellow worker Stephen Paise was given £700,000 and a bed.
Xxxsubhamxxxx
Tags — wills, Shakespeare, Bacon, Jane Austen, Handel
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
உலகத் தமிழர் பேரமைப்பு வெளியிட்ட நாலாம் ஆண்டு நிறைவு மாநாட்டு மலரரில் என் கட்டுரை 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் போட்டோ காப்பியை நான் இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அதை சாதாரண வோர்ட் WORD வடிவில் வெளியிடுகிறேன்.எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் நீக்காமல் பலரும் வெளியிட்டால் தமிழ் வளரும்; தமிழர்கள் செழிப்படைவர்.
சுனாமி (TSUNAMI) என்னும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர் மக்கள் இதைப் பற்றி அறிய பெரிய ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (சுனாமி) தாக்குதல்கள் குறித்து நிறைய குறிப்புகள் உள்ளன.
கடலுக்குத் தமிழில் “முந்நீர்” என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் “முந்நீர்” என்ற சொல் வருகிறது. (புறநானூற்றுப் பாடல்களில் 9, 13, 20, 30, 35, 60, 66,137, 154 முதலியன) “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் “சுனாமி” எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.
தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த சுனாமியை கடல்கோள் என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென் மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன.
சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும் சங்கக் காலத்துக்குப்பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென் பகுதியை கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:
(முற்காலத்தில் கடல் பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகில் உள்ள சேர சோழ நாடுகளை வென்று புலிக்கொடி வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்)
பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு, தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
– சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22
(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வட்திசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்)
சிலப்பதிகாரத்தில் மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடி யார்க்கு நல்லார் 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக் கடல் விழுங்கியதாகக் கூருகிறார். அந்த 49 நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்கக் காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், வேறு சில பாடல்களும் மட்டும் நமக்குக் கிடைத்தன.
கொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் (Pliny) குறிப்பிடுவதால் இந்த கடல்கோள்கள் கி. மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.
பல சங்கப் பாடல்கள் சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் (Earth quake) கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாக பாடுகின்றன.
“நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும் இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்”
– குறுந்தொகை 373
“நிலம், நீர், தீ ஆகியன அவைகளின் இயல்பான நிலையிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும்” என்று கூறுவதிலிருந்து இத்தைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.
“பெருநிலங்கிளறினும்” (நற்றிணை 201) “நிலம்புடை பெயர்வதாயினும்” (நற்றிணை 9) “நிலத்திறம் பெயருங்காலை யாயினும்” (பதிற்றுப்பத்து 63-6) “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.
வடவைத்தீயும் மடங்கலும்
கடலுக்கடியில் “வடவை” என்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்து உலகை அழிக்கும் என்றும் சங்கநூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத்தீயை “வடமுகாக்கினி” என்றும் அது குதிரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. “வடவை” என்பது கடலுக்கடியில் உள்ள எரிமலைகளா (Submarine Volcanos) என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக் கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டபோது மர்மத்தீ ஒன்று கடலில் தோன்றியது. இது புயலின் போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்போது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவை தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத் தெரிகிறது.
BIG BANG AND BIG CRUNCH
சங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் “மடங்கல்”. இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறிவதாக எழுதியுள்ளனர். இப்படிப் பிரபஞ்சம் உருவானதற்கு மாபெரும் வெடிப்பு (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்கக் காலத்திலேயே இருப்பது வியப்புக்குறியது. (மடங்கல்: பரிபாடல் 1-47, 3-8, கலித்தொகை 2-3, 105-20, 120-8, 122-1, பதிற்றுப்பத்து 62-8 முதலியன)
பாண்டியனும் பரசுராமனும்
தமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI 11-17) வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போல செய்து அதை கடல் கழுவும்படி கடற்கரையில் வைத்ததாகவும் கடல் பொங்கியபோது வேலை எரிந்து அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாராமும் திருவிளையாடல் புராணமும் கூறும். இவை பழங்காலச் சடங்குகளையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளை புராணக் கதைகள் என்று சொல்லி ஒதுக்கி விடாமல் அதன் பின்னுள்ள உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூட கடற்கரையில் மன்னர்கள் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வழிபடும் வழக்கம் இருந்தது. காளிதாசன் என்ற மாபெரும் வடமொழிக் கவிஞனும் சிவனின் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் இலங்கையில் சிவனின் – புத்தரின் பாதச்சுவடுகள் உள்ளன.
பரசுராமன் (விட்டுணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) கேரளத்துக்கு வந்தபோது கடலும் மலையும் ஒட்டியிருந்ததாம். பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கி கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் கடல் சுவற வேல்விட்ட பாண்டியன் ஆட்சி செய்த காலாத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் இப்படி புராணக்கதைகளாக மாறிவிட்டன .
(அகத்திய முனிவர் விந்திய மலையை பங்கம் செய்தார், கடலைக் குடித்தார் என்பதெல்லாம் அவர் நிலம் வழியாக தென்னிந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியாவரை சென்று நாகரிகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது)
இராவணன் மலையை தூக்கியதாகவும் சிவபெருமான் கோபம் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிப் பின்னர் அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும் புராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனை பொறுக்காமல் சீதையை பூமாதேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது. இவை எல்லாம் அந்தந்த காலத்தில் நடந்த பூகம்பங்கள்தான். (Earth quakes) காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தி மக்கள் கதை கட்டிவிடுகின்றனர். தற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், ‘மண்ணைக் கவ்வினார்’, ‘மூக்குடைப்பட்டார்’, ‘முகத்தில் கரிபூசிக் கொண்டார்’, ‘பலத்த அடி வாங்கினார்’ என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லாருக்கும் விளங்கும்.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்த பாண்டிய மன்னன் சுனாமியில் இறந்தானா அல்லது கடற்படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.
ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தாயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்.
பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல – பரிபாடல் 2-1/4
ஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும். என்றும் பின்னர் பன்னிரு சூரியர்களும் வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62-5) மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது. இறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
வானவன் விழாக்கோண்மாநகரொழிந்தது
மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள்
அணிநகர்தன்னை யலைகடல் கொள்கென
விட்டனள் சாபம் பட்டதிதுவால்
இந்திர விழாவை மன்னன் கொண்டாடா விட்டால் மன்னனது நாட்டை கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.
வராகவதாரத்தில் விட்டுணு பன்றி (Wild Boar) வடிவம் கொண்டு பூமியை கடலிலிருந்து மீட்டதாக கூறுவதும் புவியியல் மாற்றத்தையே (Geological Change after the Ice Age) . கடல் நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக்கதை வழியாகத் தருகிறார்கள். இது போன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறை பொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளை பகுத்தறிவது நம் கடமை.
Xxxxx subham xxxxx
tags- சுனாமி, சங்க இலக்கியம், கடல்கோள், பஃறுளி , குமரிக்கோடு,