Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Nothing can stop the man with the right mental attitude from achieving his goal. Nothing on earth can help the man with the wrong attitude. The greatest discovery of this generation is that human beings can alter their lives by altering their attitudes of mind. Never underestimate your potential power to change yourself. A positive attitude is a person’s passport to a better tomorrow.
Think , act and talk with enthusiasm and you will attract positive results.
1. Success begins in the mind.
2. Watch your words– how positive language can help to propel you towards your goals.
3. Heaven helps those who act.
4. Success is a state of mind . If you want success start thinking of yourself as a success.
Better keep yourself clean and bright, you are the window through which you must see the world. Attitudes are secret power working 24 Hrs a day for good or bad. You can’t always control circumstances, but you can control your own thoughts. There is nothing either good or bad but thinking makes it so.
A happy person is not a person in a certain set of circumstances but rather a person with a certain set of attitudes. Your success in life begins and ends with your attitude. You must first clearly see a thing in your mind before you can do it. You have control over the pictures that occupy your mind.
Vision is the art of seeing things invisible to others. If you can dream it then you can do it. Words are of course the most powerful drug used by mankind. Success is going from failure to failure without loss of enthusiasm. If you are positive and enthusiastic then people will want to spent time with you.
Getters do not get – givers get. You can succeed best and quickest by helping others to succeed. Treat every person you encounter with dignity and respect. To change your circumstances, first start thinking differently .
Winners don’t do different things. They do things differently. Hence in order to get success in all your assignments always have a positive attitude. Nothing in this world is impossible to a willing heart. The distance between success and failure can only be measured by one’s desire and attitude.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நகைச்சுவை நாடக மன்னன் அரிஸ்டோபனிஸ்
நாற்பது நகைச்சுவை நாடகங்களை 2400 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி ‘நகைச் சுவை நாடகங்களின் தந்தை என்ற புகழுரை பெற்றவர் (Aristophanes) அரிஸ்டோபனிஸ் . ஆயினும் சாக்ரடீஸைக் குறை சொல்லி அவருக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என்ற இகழுரையும் இவருக்குண்டு. இவர் எழுதிய ஒரு கிண்டல் நாடகம் தவளைகள் பற்றியது . அதை கம்ப ராமாயண, ரிக்வேதத் தவளைப்பாட்டுட ன் ஒப்பிட்டு முன்னரே எழுதினேன் இணைப்பை கட்டுரையின் இறுதியில் காண்க
பிறந்த ஆண்டு- கி.மு.450
இறந்த ஆண்டு – கி.மு.385
இன்றைய தினம் நாம் டெலிவிஷனிலும் திரைப்படங்களிலும் நிறைய முழு நீள நகைச் சுவைப் படங்களை பார்க்கிறோம். இவைகளுக்கு வித்திட்டவர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அரிஸ்டோபனீஸ் ஆவார். சம்ஸ்க்ருத நாடகங்களில் பிராமணர்களுக்கு விதூஷகன் (comedian) என்னும் நகைச்சுவை கதாபாத்திரத்தைக் கொடுப்பது 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த இந்திய வழக்கம். காளிதாசனின் நாடகங்களில் இதைக்காணலாம். ஆகையால்தான் தற்கால திரைப்படங்களிலும் பிராமணரைக் கொண்டு பிராமணர்களைக் கிண்டல், கேலி, நக்கல், பகடி செய்யும் காட்சிகள் இடம்பெறுகின்றன.ஆனால் கிரேக்க நாட்டில் முழு நீள காமெடிக்கள் (comedies) இருந்தன. சம்ஸ்க்ருதம் போல எல்லா நாடகங்களிலும் விதூஷகன் என்னும் கதாபாத்திரம் இருந்ததாக, அதுவும் ஜாதி அடிப்படையிலான நகைச் சுவை நடிகர் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்திலும் கூட பிராமணர்தான் பிராமணர்களைக் கிண்டல் அடிக்கமுடியும். இதைக் கபிலர் என்னும் புலவர் செய்கிறார். காண்க- குறிஞ்சிக் கலி , கலித்தொகை.
அரிஸ்டோபனிஸ் எழுதிய சுமார் 40 நாடகங்களில் நமக்கு இப்போது 11 மட்டுமே கிடைக்கின்றன. இதில் ஒன்று ‘மேகங்கள்’ (The Clouds) என்ற நாடகம் ஆகும். இதுதான் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தது என்று சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ (Plato) குற்றம்சாட்டுகிறார்.
அரிஸ்டோபனிஸ், கிரேக்க நாட்டின் தலை நகரமான ஏதன்ஸில் பிறந்தார். இருபது வயதுக்கு முன்னரே எழுதத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம், கிரேக்க நாட்டில் எல்லாத் துறைகளிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்த காலம் ஆகும் .அப்போது (Athens) ஏதென்ஸ் நகரம் அதன் பரம வைரியான ஸ்பார்ட்டா (Sparta) நகர அரசு மீது போர் தொடுத்தது. இந்தப் போர் 27 ஆண்டுகளுக்கு நீடித்தது.
இந்தப் போரில் மகத்தான ஏதென்ஸ் நகர அரசு தோல்வி அடைந்தது. இதனால் புகழோங்கிய கிரேக்க கலாசாரம் ஆட்டம் கண்டது. நாட்டில் அராஜகம் நிலவியது. ‘அ+ராஜகம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு அரசன் இல்லாத நிலை என்று பொருள். ஆள்பவன் வலுவாக இல்லாவிடில் ‘தடி டுத்தவன் எல்லாம் தண்டல் நாயகம்’ ஆகிவிடுவான். இப்படி ஒரு நிலை ஏதன்ஸில் ஏற்படவே சர்வாதிகாரிகள் ஆட்சி உண்டாகியது . தன்னைச் சுற்றி ஏற்படும் நிகழ்ச்சிகளை நாடகமாக வடித்தார் அரிஸ்டோபனிஸ்; அவர் எழுதிய நாடகங்களில் அரசியல்வாதியை முட்டாளாகவும் சாதாரண குடிமகனை அறிவாளியாகவும் சித்தரித்தார். அதாவது சாதராணக் குடிமகன் அரசியல் தலைவர்களைத் தோற்கடித்து விடுவான்.தத்துவ ஞானிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரையும் குறை சொன்னார். எல்லா இடங்களிலும் நிலவிய ஊழலை எடுத்துக் காட்டினார். இரு பொருள்படும்படி (Satires) அங்கதங்களை இயற்றினார். இதில் அவர் மஹா மேதையான சாக்ரடீஸையும் விடவில்லை. சாக்ரடீஸுக்கு எதிரான குற்றம்சாட்டிய ஏதென்ஸ் அரசு அரிட்டாபனீசின் வசனங்களையும் பயன்படுத்தியது. சாக்ரடீசை அவர் பைத்தியக்காரன் என்றும் அவர் கிரேக்க (Greece) நாட்டில் விஷ- விஷமக் கருத்துக்களை வித்திடுவதாகவும் குற்றம்சாட்டினார். இறுதியில் சாக்ரடீஸ் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
ராமன் பெயர் உள்ளவரை ராவணன் பெயரும் இருக்கும். சாக்ரடீஸ் பெயர் உள்ளவரை அரிஸ்டோபனிஸ் பெயரும் நீடிக்கும்.
8 Aug 2017 — Written by London Swaminathan. Date: 8 August 2017. Time uploaded in London- 20-46. Post No. 4140. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks …
15 Dec 2016 — Aristophanes was the greatest comic playwright of ancient Greece. His comedies are the earliest roots of the film, theatre and television comedies …
Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda …
Jun 5, 2016 – Posts about Fish God written by Tamil and Vedas. … In Plato’s Symposium (189–190 AD), Aristophanes displays knowledge of an ancient myth of …
Tags- அரிஸ்டோபனிஸ் , கிரேக்க , நாடகங்கள், நகைச்சுவை ,
கோடி கிரந்தங்கள் சொல்வதை அரை சுலோகத்தில் சொல்கிறேன். ப்ரஹ்மம் சத்யம். ஜகம் பொய். ஜீவனே ப்ரஹ்மம். அதுவன்றி வேறல்ல.
ஆதி சங்கரரின் இந்த சுலோகத்தின் பொருளை ஜீரணிப்பது அவ்வளவு சுலபம் இல்ல. உலகம் பொய்யா? இதோ நான் காண்கிறேனே இந்த வீடு, இந்த மனிதர்கள், பறவைகள், மரங்கள் எல்லாம் பொய்யா?
ஏன், பாரதியாரே ஒரு பாடல் பாடி விட்டார் இப்படி:-
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?-பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
இப்படிப்பட்ட கவி வாக்கை விட வேறு எப்படி நமது உணர்வுகளைக் கூற முடியும்? காட்சிப் பிழையோ? சொப்பனமா? தோற்ற மயக்கமா? காண்பது தான் சத்தியம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம்.
அப்படியானால் ஆதி சங்கரர் வாக்கு பொய்யா? ஒரு பெரிய அவதாரம் எதைச் சொன்னாலும் அந்த வார்த்தைகளில் பொருள் போய் ஒட்டிக் கொள்ளுமாமே! இதை சாஸ்திரம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
இதென்னடா, பெரிய சிக்கலாக இருக்கிறது. இது பொய்யா, அது பொய்யா, இல்லை இல்லை, இது மெய்யா, அல்லது அது மெய்யா?
இதே சந்தேகம் விவேகானந்தரின் அத்யந்த பக்தரான மன்மத் நாத் கங்கூலிக்கு ஒரு முறை வந்து விட்டது.
எல்லாம் மாயை தானா? என்று அவர் விவேகானந்தரைக் கேட்டார். அத்வைத சிங்கமான ஸ்வாமி விவேகானந்தர் உடனே ஆமாம், ஆமாம் அதில் என்ன சந்தேகம் என்று பதில் கூறினார்.
இல்லை, இதோ பார்க்கிறேனே, இவற்றை எல்லாம் எப்படி மாயை என்று கூற முடியும், விளங்கிக்கொள்ளவே முடியவில்லையே என்றார் சீடர்.
“உனக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?”
“ஆமாம், மாயை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”
“அதை விட வேறு எதையாவது கேளேன்”
“ஊஹூம், வேறு எதுவும் தேவை இல்லை. மாயை பற்றித் தான் அறிய வேண்டும்”
சீடர் அவரை உற்றுப் பார்த்தார். மாயைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.
திடீரென்று எதிரில் இருந்த அனைத்தும் உருகிப் பொடிப் பொடியாக ஆரம்பித்தது. துகள் துகளாக.. இன்னும் சிறிய துகளாக, அதிர்வுகள், ஆனந்த நடனங்கள்.
வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.. வைப்ரேஷன்.
ஒன்றுமே தெரியவில்லை.
மன்மத நாதரால் தாங்க முடியவில்லை இந்தக் காட்சியை.
சில கணங்களில் அவரை விடுவித்தார் ஸ்வாமிஜி.
தன் இயல்பான நிலைக்குத் திரும்பிய சீடர் விக்கித்துத் திகைத்திருந்தார்.
பேச முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை.
“இப்போது தெரிகிறதா, மாயை என்றால் என்ன என்று உனக்கு?”
தலையை ஆட்டினார் அவர். மன்மத் நாத் கங்கூலி தனது இந்த அனுபவத்தை அப்படியே எழுதி வைத்துள்ளார்.
அவரது அனுபவங்கள் வேதாந்த கேஸரி பத்திரிகையில் 1960ஆம் ஆண்டு
ஜனவரி மற்றும் ஏப்ரல் இதழ்களில் வெளியாகியுள்ளன.
உலகம் மாயை என்பதை நல்ல விசாரத்தின் மூலம் மட்டுமே தான் அறிந்து கொள்ள முடியும். நான் யார், உலகம் என்ன? இப்படி நித்யா நித்ய விவேக விசாரம் செய்தால் நமது நிலை உயரும்.
அப்போது ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா என்ற அபூர்வமான பெறுதற்கு அரிய ஒரு நிலை பற்றி உணர முடியும்.
விவேகானந்தர் போன்ற மகான்களால் மட்டுமே இப்படி விளக்க முடியும். அதுவும் அந்த சீடர் அதிர்ஷ்டசாலியாக இருந்ததால் அவருக்க்கு இப்படி ஒரு அதிசய அனுபவம் கிடைத்தது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
27-6-2021 SUNDAY PROGRAMME AS BROADCAST
TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London
OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS
Prayer –- BALAKUMAR OF ILFORD, LONDON
MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON KALAHASTHI TEMPLE,8 MTS
Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR AND Smt Banu Chandrasekar, Smt Padma and her husband Sri Bala Kumar ; followed by JAYANTHI SUNDAR and Smt Srilatha Sainath 10 mts
WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN
WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN
–25 MINUTES
TALK BY MRS HEMA SHANMUGASARMA ON BHARATI AND CHILDREN
Profile of Mrs. Hema Shanmugasarma
(Retd.,) Teacher Adviser Colombo Zone
She is a presenter of a Hinduism program named Gnanakalanjiyam aired on Radio Ceylon channel produced by Sri Lanka Broadcast Corporation since last 30 years.
She is a Live Commentator for most of the Hindu temples’ “Kumbabishegam” (consecrated ceremony) & “ther thiruvizha” (Chariot festival) island wide since last 25 years.
She is a Live Commentator of Nallur Murugan Temple, Jaffna continuously for last 15 years, which is produced & telecasted by the leading Tamil channel in Sri Lanka, Shakthi TV.
She is a presenter of a morning religious program ‘’Saiva Nat Sinthanai’’ which is being aired daily on Radio Ceylon channel produced by Sri Lanka Broadcast Corporation.
DURATION- appr. 60 minutes
XXX
INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING
WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .
LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.
TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;
6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் பல நாடக ஆசிரியர்கள் சோக நாடகங்களை (Tragic Dramas) எழுதிவந்தனர் . அந்த வரிசையில் முன்னணியில் நின்றவர் யுரிபிடீஸ் (EURIPIDES) ஆவார். அவருக்கு முன்னால் , ஏஸ்கைலஸ் (AESCHYLUS), சோபோக்ளீஸ் (SOPHOCLES) போன்றோர் சோக நாடகங்களையும் கவிதைகளையும் எழுதினார்கள் . ஆனாலும் அந்த அழுகுணி எழுத்தாளர்க ளிடையையே முதலிடம் பெற்றவர் இவர்தான். சோக எழுத்தாளர்களிடையே மிகவும் சோகமாக எழுதியவர் யூரிபிடீஸ்தான் என்று அரிஸ்டாட்டிலே (ARISTOTLE) கூறிவிட்டார்.
யுரிபிடீஸ், ஏதென்ஸ் நகரத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். கசடறக் கற்றார். அந்தக் கால புகழ்மிகு தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் SOCRATES முதலியோருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்களுடைய போதனைகள் இவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தினால் தலை சிறந்த , கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர் ஆனார் .அவருடைய காலத்தில் எழில் மிகு ஏதென்ஸில் புதிய கொள்கைகள், தத்துவங்கள் துளிர்விட்டன; அந்த புதிய அணுகுமுறையை சிக்கெனப்பிடித்த யூரிபிடீஸ் பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளுக்கு சவால் விட்டார்..
கிரேக்க மக்களின் வாழ்க்கையில் நாடகம் முக்கிய இடம்பெற்றது. அவ்வப்போது நாடகப் போட்டிகளும் நடைபெற்றன. அதில் வெற்றி பெறுவோர், சமுதாயத்தில் பிரமுகர் ஆகிவிடுவார்கள். அவர்கள் எங்கு சென்றினும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தன. முப்பது வயதிலேயே நாடகப் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. மீண்டும் மீண்டும் பகீரதப் பிரயத்தனம் செய்தார் . 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பரிசை வென்றார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும் அன்றோ!’
முதல் முதலில் அவரது நாடகங்கள் அரங்கேறியபோது வாதப் பிரதிவாதங்கள் வெடித்தன. சர்ச்சைப் புயல் வீசியது. ஏனைய நாடக ஆசிரியர்களைப் போல கிரேக்க நாட்டின் இதிஹாச, புராண கதாநாயகர்களையே அவரும் நாடக மேடை ஏற்றினார். ஆனால் அவர்கள் பேசிய வசனங்களோ புதுமையாக இருந்தன. அவர்கள் யதார்த்த மனிதர்களை போல பேசினர் . இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எல்லோரும் அறிந்த புராண கதாபாத்திரங்கள், தற்காலத்த்தில் வாழ்ந்தால் என்ன செய்வார்கள், எப்படிப் பேசுவார்கள் என்று காட்டினார். அதுமட்டும் அல்லாமல் இரும்பு நெஞ்சம் படைத்த உணர்ச்சிமிக்க ஒரு பெண்ணை முக்கிய கதா பாத்திரமாகவும் நுழைத்தார். அவருடைய மெடியா MEDEA நாடகம் இதற்கு ஒரு சான்று.
92 நாடகங்களை எழுதிய போதும் அவருடைய நான்கு நாடகங்களுக்கு மட்டுமே முதல் பரிசு கிடைத்தது. அவர் இறந்த பின்னர்தான் மேலும் புகழ் பரவியது. அவருடைய நாடகங்களை ரசிகர்கள் நகல்/ படி எடுத்து தொடர்ந்து நடித்தனர். ஆகையால் அவருடைய பல நாடகங்கள் காலத்தை வென்று இப்போது நம் கைகளில் தவழ்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பாரத நாடு பல்லாயிரக்கணக்கான ரிஷிகளையும், மகான்களையும், அருளாளர்களையும், யோகிகளையும், இசையால் இறைவனை வழிபட்ட நாத உபாஸகர்களையும் பெற்ற நாடு. இவர்களில் ஜெயதேவ கோஸ்வாமி தனி இடத்தைப் பெறுகிறார்.
பஜனை சம்பிரதாயத்தில் இன்றளவும் இவரது அஷ்டபதி பாடல்கள் ஜீவத் தன்மையுடன் பாடப்பட்டு லக்ஷக்கணக்கானோருக்கு கிருஷ்ண பக்தியைத் தந்து கொண்டிருக்கிறது.
ஒரிஸா மாநிலத்தில் குர்தா மாவட்டத்தில் உள்ள பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளிசாசன் என்ற இடத்தில் ஜெயதேவர் பிறந்தார். இவர் இயற்றிய இணையற்ற காவியம் கீத கோவிந்தம். இதில் கண்ணன், ராதை, ராதையின் தோழி ஆகிய மூன்று பாத்திரங்களே இடம் பெறுகின்றனர். ராதையின் தெய்வீகக் காதலை இசை வடிவமாக்கி அமைக்கப்பட்ட அழியாத அமிர்த காவியமாகும் இது. விரகதாபம் கிருஷ்ணபக்தியில் குழைய அதில் ஏற்படும் அற்புதமான கீத கோவிந்தத்திற்கு இணையான இசைக் காவியம் இன்றளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கீத கோவிந்தம் மஹா காவிய வரிசையைச் சேர்ந்தது.12 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு கீர்த்தனத்திலும் எட்டு சரணங்கள் உண்டு. அஷ்ட என்றால் எட்டு. ஆகவே இது அஷ்டபதி என்ற பெயரைப் பெற்றது. ஜெயதேவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது தெரிய வருகிறது. லக்ஷ்மணசேனரின் அரசவைக் கவிஞராக இவர் இருந்து வந்தார்.
போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் அவர்கள் செய்த தவப்பயனாக ஜெயதேவர் அவதரித்தார். இளமையிலிருந்தே கிருஷ்ண பக்தியில் ஊறித் திளைத்த ஜெயதேவர் உண்மையான யோகியாக வாழவே விரும்பினார். தனது நண்பரான பராசரருடன் அருகில் இருந்த புரி நகருக்குச் சென்றார். அங்கு தியானம், நாம சங்கீர்த்தனம் என வாழ்க்கையைக் கழிக்க ஆரம்பித்தார். உஞ்சவிருத்தியில் கிடைத்த பிக்ஷையே அவரது ஆகாரமானது. அந்தச் சமயத்தில் சுதேவர் என்ற பிராமணர் புரி நகரில் வசித்து வந்தார். குழந்தைப் பேறு இல்லாத அவர் ஜகந்நாதரை வேண்டினார். பிறந்த குழந்தையை ஜகந்நாதருக்கே அர்ப்பணிப்பதாகவும் உறுதி கூறினார். அழகிய பெண் குழந்தை ஒன்று அவருக்குப் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு பத்மாவதி என்ற பெயரிட்டதோடு அதை ஜகந்நாதருக்கே அர்ப்பணித்தார். அன்று இரவே அவரது கனவில் ஜக்ந்நாதர் தோன்றி அவர் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். மகளை அவர் அருமையாக வளர்த்து வந்த போது ஜகந்நாதர் அவர் கனவில் தோன்றி பத்மாவதியை தனது பக்தனான ஜெயதேவருக்கு மணம் முடிக்கும் படி கூறினார். யார் அந்த ஜெயதேவர் என்று சுதேவர் தேட ஆரம்பித்து அவரைக் கண்டு பிடித்தார். இறைவனின் ஆணையைக் கூறினார். ஆனால் ஜெயதேவருக்கோ மண வாழ்க்கையில் ஆர்வமில்லை. ஆனால் சுதேவர் நடந்ததை எல்லாம் கூறிய போது ஜகந்நாதரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் ஜெயதேவர். மணம் முடிந்தது. தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார் ஜெயதேவர். சில காலம் அங்கு தங்கி விட்டுப் பின்னர் யாத்திரை கிளம்பினார் ஜெயதேவர்.
இவரது வாழ்க்கையில் புல்லரிக்க வைக்கும் ஏராளமான அற்புத சம்பவங்கள் உண்டு. ஒடிஸா மன்னனான சாத்யகி ஒரு பெரும் கவிஞனும் கூட. அவன் ஜெயதேவரின் அஷ்டபதியையும் அதற்குள்ள கீர்த்தியையும் கண்டு பொறாமை கொண்டான். ஜெயதேவரை அழைத்து அவரது கீத கோவிந்தத்தையும் தனது கவிதைகளையும் இறைவன் முன் வைப்போம், எதை இறைவன் அங்கீகரிக்கிறானோ அதுவே உண்மையான கவிதை என்றான். அதன்படியே கீத கோவிந்தமும் மன்னனின் கவிதைகளும் இறைவனின் பாதத்தில் வைக்கப்பட்டு கர்பக்ருஹம் மூடப்பட்டது. மறுநாள் கோவிலுக்குச் சென்று பார்க்கையில் மன்னனின் கவிதைகள் கர்பக்ருஹத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. ஜெயதேவரின் கீத கோவிந்தம் இறைவனின் திருக்கமல பாதங்களில் பிரகாசித்தது. மன்னன் உடனடியாக அவரை வணங்கி அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டான்.
ஜெயதேவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பியதை அறிந்த மன்னன் அவருக்கு நிறைய பணத்தைக் கொடுத்தான். அதை அவர் விரும்பவில்லை. விஷம் போன்றது பணம் என்றார் அவர். மன்னனோ கேட்கவில்லை. ஆகவே மன்னன் தந்த பொருளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் அவர். அவரிடம் நிறைய பணம் இருந்ததை அறிந்து கொண்ட திருடர்கள் சிலர், தனிவழியில் அவர் செல்லும் போது அவரைத் தாக்கி அவர் கைகளையும் கால்களையும் வெட்டினர்; அவரை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு, பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடினர். நல்ல வேளையாக கிணற்றில் தண்ணீரே இல்லை. ஜெயதேவர் மனமுருக இறைவனைத் துதிக்க ஆரம்பித்தார். அந்த வழியே வந்த அரசன் லக்ஷ்மணசேனன் அவரைக் காப்பாற்றி அவரைப் பற்றி முழுதுமாக அறிந்தான். தன் அரசவையில் பிரதான பதவியைத் தந்தான். ஒரு நாள் அரசவையில் ஒரு விழாவை ஒட்டி அனைவருக்கும் வேண்டியது தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயதேவரிடம் பொருளைப் பறித்த திருடர்கள் பிராமணர் வேஷம் பூண்டு அங்கு வந்தனர்; ஜெயதேவரைப் பார்த்துத் திகைத்தனர். ஆனால் ஜெயதேவரோ அவர்களை மனதால் மன்னித்தது மட்டுமின்றி நிறையப் பணத்தை அவர்களிடம் கொடுத்து ஒரு படைத்தலைவனை சில வீரர்களோடு அவர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பினார். படைத்தலைவன் ஆவல் உந்த அந்த பிராமணர்களை நோக்கி எப்படி இப்படிப்பட்ட மகானின் தொடர்பு உங்களுக்குக் கிடைத்தது என்று கேட்டான். அதற்கு அந்தத் திருடர்கள், ‘நாங்கள் அனைவரும் ஒரு மன்னரின் கீழ் சேவை புரிந்து வந்தோம். நாங்கள் அங்கு அரசவையில் அதிகாரிகள். அவர் எங்கள் கீழ் பணி புரிந்தார். அவர் பல தீங்குகளைச் செய்தார். அதற்காக மன்னன் அவருக்கு மரணதண்டனை கொடுத்தான். அதிலிருந்து தப்பி அவர் இங்கு வந்து விட்டார். எங்களைக் கண்டு பயந்து விட்டார்” என்றனர். இந்த இமாலயப் பொய்யை அவர்கள் சொன்ன அந்தக் கணமே தரை பிளந்தது. அவர்கள் அதல பாதாளத்திற்குச் சென்று வீழ்ந்தனர். இதைக் கண்ட படைத்தலைவன் ஆச்சரியமுற்று நடந்ததை எல்லாம் மன்னரிடம் சொன்னான்.
இதைக் கேட்ட ஜெயதேவர் அந்தத் திருடர்களுக்காக மனம் உருகிக் கண்ணீர் சிந்தினார். அதே கணத்தில் அவரது கைகளும் கால்களும் வளர்ந்து முற்றிலும் பூரண குணத்தை அடைந்தன. எழில் வாய்ந்த ஜெயதேவரை தரிசித்த மன்னனின் ஆச்சரியம் பன்மடங்கானது. அவன் உண்மையை எல்லாம் அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். இப்படி ஏராளமான சம்பவங்கள் இறைவனின் திருவருளால் நிகழ்ந்து கொண்டே இருக்கவே, ஜெயதேவரின் புகழ் நாளுக்கு நாள் உலகெங்கும் பரவத் தொடங்கியது. மனமுருகி கிருஷ்ணபக்தியில் திளைத்த அவர் கீத கோவிந்தம் என்னும் மகத்தான கீத மஹாகாவியத்தை இயற்றினார். மக்கள் அவரை பக்த கவி என்று அழைக்கலாயினர். கீதகோவிந்தம் 24 அஷ்டபதிகளைக் கொண்டுள்ளது. இதில் 72 ஸ்லோகங்கள் உள்ளன. தெய்வீகமான இந்த கீதங்கள் இறைவனின் திருவாக்காகவே கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு அஷ்டபதியைச் சொல்லலாம். 19வது அஷ்டபதியில் வரும் வாக்கியங்கள் இவை:
स्मरगरलखण्डनं मम शिरसि मंडनं ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் देहि पदपल्लवमुदारम् । தேஹி பதபல்லவமுதாரம் ज्वलति मयि दारुणो मदनकदनारुणो ஜ்வலதி மயிதாருணோ மதனகதனாருணோ हरतु तदुपाहितविकारम् ॥ ஹரது தத்பாஹிதவிகாரம் கிருஷ்ணர் ராதையிடம் கெஞ்சுகிறார் இப்படி:- மன்மதனின் விஷத்தை நான் அருந்தி விட்டேன். தாபத்தால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உனது மலர்ப்பாதங்களில் எனது சிரசை வைக்கிறேன். அதுவே எனது அனைத்து உபாதைகளுக்கும் தீர்வைத் தரும்.
கீதத்தை இயற்றிவிட்டாலும் கூட ஜெயதேவருக்கு அவரது வாக்கியங்கள் சற்று மனதை உறுத்தின. மகோன்னதமான அவதாரமான கிருஷ்ணர் ஒரு கோபிகையிடம் இப்படிக் கெஞ்சுவாரா? கெஞ்சுவதும் முறையோ! சீச்சீ, தப்பாக எழுதி விட்டேன் என்று அவர் மனம் நொந்தார். உடனே ஓலைச் சுவடியிலிருந்து அதை அழித்து நீக்கினார். அப்போது தான் மனம் சற்று சாந்தியை அடைந்தது. படுக்கச் சென்றார். மறுநாள் காலையில் ஓலைச் சுவடியைப் பிரித்துப் பார்த்த போது அழகாக அது அப்படியே இருந்தது. திகைத்துப் போன ஜெயதேவர் ஓலைச் சுவடியை நெருப்பில் காட்டினார்.நெருப்பில் சுவடி எரியவே இல்லை. கிருஷ்ணரின் திருவுள்ளத்தை அறிந்து கொண்ட ஜெயதேவர் தெய்வீக விளையாட்டில் தான் ஒரு சிறு கருவியே என்பதை உணர்ந்து கண்ணீர் பெருக்கினார்.
இந்த அஷ்டபதியைப் பற்றி இன்னும் ஒரு செய்தியும் கூறப்படுகிறது. 19ஆம் அஷ்டபதியை ஆரம்பித்த ஜெயதேவர், ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் வரை எழுதினார். அதற்குப் பின்னர் வார்த்தைகள் தடைப்பட்டு நின்று விட்டன. அவரை ஆற்றில் குளித்து விட்டு வருமாறு கூறினார் பத்மாவதி. அவரும் சுவடியைக் கீழே வைத்து விட்டுக் கிளம்பினார். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அவர் அஷ்டபதியைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்து தேஹி பதபல்லவமுதாரம் என்று எழுதி விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜெயதேவர் தனது சுவடியைத் தருமாறு கேட்க, “இப்பொழுது தானே வந்து எழுதினீர்கள்” என்று பத்மாவதி கூற சுவடியைப் பார்த்த ஜெயதேவர் திகைத்துப் போனார் ‘தேஹி பதபல்லவமுதாரம்’ என்ற வரியைப் பார்த்து அதை எழுதியருளியது கிருஷ்ணரே என்பதை உணர்ந்து கிருஷ்ணரின் தெய்வீக விளையாடலால் ஆனந்தம் கொண்டார். தனக்குக் கிடைக்காத கிருஷ்ண தரிசனம் தனது மனைவிக்குக் கிடைத்ததை எண்ணி அவர் ஆனந்தப்பட்டார்; பத்மாவதி தேவியும் பக்தியால் உருகினார்.
ஜெயஜகதீச ஹரே என்ற அஷ்டபதியில் பத்து அவதாரங்களையும் அவர் விவரிக்கிறார். ஒவ்வொரு அவதாரமும் அவர் அகக்கண்ணில் தோன்ற அதை அப்படியே கீதமாக இசைத்தார். ஒவ்வொரு அஷ்டபதிக்கும் உரிய ராகம் ஒன்று உண்டு. அந்த பத்ததி அப்படியே இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜெயதேவருக்கு ஏற்ற பத்தினியாக பத்மாவதி திகழ்ந்தார். ராணியிடன் அந்தரங்கமாக அவர் பழகி வந்தார். ஒருமுறை அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ராணி கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் சதியே சிறந்தவள் என்ற தனது கருத்தைச் சொல்ல அதை பத்மாவதி உடனே மறுத்தார். கணவன் இறந்தார் என்ற சேதியைக் கேட்ட அந்த மாத்திரத்திலேயே உயிரை விடுபவள் அல்லவா உண்மை சதி என்று பத்மாவதி தன் கருத்தைக் கூற ராணிக்குச் சற்று பொறாமை ஏற்பட்டது.
ஒருநாள் அவர் பத்மாவதியிடம் முதலைக் கண்ணீர் வடித்து அவரது கணவர் ஜெயதேவர் காட்டிலே மிருகங்களால் கொல்லப்பட்டார் என்று கூறினார். அதைக் கேட்ட அந்தக் கணமே பத்மாவதி தன் உயிரை விட்டார். இதைப் பார்த்த ராணி திகைத்துப் போனார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஜெயதேவரையும் மன்னரையும் அழைத்து வருத்தத்துடன் உண்மையைக் கூறினாள். ஜெயதேவர் சற்றும் கலங்கவில்லை. நான் தான் உயிரோடு இருக்கிறேனே, அது தெரிந்தால் அவள் உயிருடன் எழுவாள் என்று கூறி கிருஷ்ணரை நோக்கி மனமுருகப் பிரார்த்தித்தார். அஷ்டபதியைப் பாட ஆரம்பித்தார். பின்னர் மனைவியை அழைக்க, அவர் எழுந்தார். ராணியின் வேதனையைப் போக்கியதால் அவர் மிகவும் மகிழ்ந்தார்.
கங்கையில் தினமும் குளிக்கும் பழக்கமுடைய ஜெயதேவருக்கு வயதான காலத்தில் கங்கா நதிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் கங்கையே பாய்ந்து வந்து அவரது வீட்டிற்கு அருகில் வந்தாள் என்று கூறப்படுகிறது.
இறுதி காலத்தில் பிருந்தாவனம் சென்ற அவர் அங்கேயே கிருஷ்ணருடன் ஐக்கியமானார்.
இசை நாடகமாகவும், ராதா கல்யாணங்களில் பாடப்படுவதாகவும் உள்ள அஷ்டபதிகளின் பெருமை இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும், பஜனைஉற்சவம் செய்வோருக்கும் சாமான்யர்களுக்கும் இஷ்டமான ஒன்று. சந்தன சர்சித நீல களேபர எனத் தொடங்கும் அஷ்டபதி நாடெங்கும் பிரசித்தமான ஒன்று. 19ம் அஷ்டபதி சஞ்சீவி அஷ்டபதி என்று அழைக்கப்படுகிறது. இதைப் பாடினால் நோய் அனைத்தும் தீரும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ராதா வதன எனத் தொடங்கும் 22ஆம் அஷ்டபதி கல்யாண அஷ்டபதி என்று கூறப்படுகிறது.ராதை என்ற ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றுவதை இசைக்கும் கீதம் இது.
24 அஷ்டபதிகளும் கிரமம் மாறாமால் இன்றும் ஆயிரக்கணக்கான இல்லங்களில் ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டை ப்ரஹ்ம ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர் அஷ்டபதி இசைக்கப்படும் ராதா கல்யாணத்தை வெகுவாகப் பல இடங்களிலும் பரப்பியவர்களுள் முக்கியமானவர். இன்றும் ஆயிரக்கணக்கான இடங்களில் கீத கீத கோவிந்தம் பாடப்படுகிறது; அதைக் கேட்போர் கிருஷ்ணரின் திருவடியை நிச்சயமாகச் சேரும் பாக்கியவான்களே!
ஜயது ஜயது ஜயதேவ! நன்றி வணக்கம்!
tags – Tags- அஷ்டபதி பாடல்கள் ,ஜெயதேவர் , கீத கோவிந்தம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -56
Xxxx
PANINI SUTRA 5-4-42
VARTTIKA adds Mangalaamangala vachanam……… etc
For long I have been trying to find the link between Mangala in Sanskrit and Manjal/turmeric in Tamil..
In Tamil Manjal (yellow colour turmeric stands for anything auspicious that is Mangala in Sanskrit .
But I couldn’t find a definite link, though the sound Mangala and Manjal means same for a Hindu.
That is Auspicious .
There may be a missing link somewhere.
The background for my hypothesis is yellow skinned people are called Mongoloid race.
In Vietnamese, Mau vang is yellow, closer to Tamil.
In Swahili it is Manjano, closer to Tamil.
In many cultures they for a word that has similar colour. For instance, one may say lemon fruit colour.
So we have lot of different names for Yellow.
This is from one article on yellow skin:–
The conceptual relationship between East Asians and yellow skin did not begin in Chinese culture or Western readings of East Asian cultural symbols, but in anthropological and medical records that described variations in skin color. Eighteenth-century taxonomers such as Carl Linnaeus, as well as Victorian scientists and early anthropologists, assigned colours to all racial groups, and once East Asians were lumped together as members of the “Mongolian race” they began to be considered yellow.
It shows Mongol means Manjal/yellow.
மங்கள , மங்கல என்றால் சுபம் தரக்கூடிய நிகழ்ச்சி, சம்பவம், செய்தி என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது. இதை தமிழர்களும் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் இதற்கு இணையாக மஞ்சள்/Turmeric உள்ளது. எல்லா மங்களகரமான காரியங்களும் மஞ்சள் குங்குமத்துடன்தான் துவங்கும். ஆயினும் சம்ஸ்க்ருதத்தில் மஞ்சள் கிழங்குக்கும் மஞ்சள் நிறத்துக்கும் (Yellow colour) தமிழுடன் தொடர்பில்லாத சொற்கள்தான் உளது.
ஆயினும் காணாமற்போன இணைப்புச் சொற்களைக் (Missing Links) கண்டுபிடித்துவிட்டால் மஞ்சள் = மங்கல் தொடர்பை நிரூபிக்கலாம்.
எனது ஆராய்ச்சியில் இரண்டே சொற்கள்தான் கிடைத்தன. வியட்நாமிய மொழியிலும் கிழக்கு ஆப்ரிக்க ஸ்வாஹிலி மொழியிலும்தான் மஞ்சள் ஒலிக்கு நெருக்கமான ஒலி வருகிறது.
இன்னும் ஒரு தொடர்பு, மங்கோலிய இனத்தவரின் தோல் (Mongolian Race) நிறம் மஞ்சள் என்ற நம்பிக்கையாகும். ஆனால் இது இன வேற்றுமை பாராட்டும்விதத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானியர்களையும் சீனர்களையும் குறிக்க உருவாக்கப்பட்டதாக சமூகவியலாளர் கூறுவர் . எனினும் என் கருத்துப்படி மஞ்சள் நிறம் , மங்கோலியர் தோல் நிறம் ஒன்றே. ஆக இதை ஒரு தொடர்பாக கொள்ளலாம். இன வேற்றுமை பயத்தால் இதை என்சைக்ளோபீடியாக்கள் காட்டுவதில்லை.
Xxxx
5-4-47
Commentators add chharithra= conduct
That which is happening, in other words , history
Charithram in Tamil is used for history, life history.
Chara = chala = walk ; in Tamil also
Nada ththai = conduct
Nada ppu = happening
Nada = chara = chala = SEL/Tamil = go
Selavu = travel, payanam in Tamil
சரித்திரம் என்றால் நட+த்தை ; எது நடக்கிறதோ அது.
தமிழிலும் இதே பொருளில் நாட்டு நடப்பு, கூட்டம் நடக்கிறது என்றும் சொல்லுகிறோம்.
நீண்டகாலமாக நடப்பது சரித்திரம்.
நட என்பதற்கு இணையான செல் என்பதும் சம்ஸ்க்ருதத்தில் உளது.
சர = சல= செல்= செலவு /பயணம்
நேதாஜியின் புகழ் பெற்ற அறைகூவல் , ‘தில்லி சலோ’
பழம் தமிழில் ‘செலவு’ என்றால் பயணம்.
ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் “நட , நடப்பு, வரலாறு” என்பதையும்
“சர = சல = செல் = செலவு” என்பதையும் ஒரே வழியில் உருவாக்குகின்றன .
Xxx
5-4-51
Rahas – rahasyam/secret
It is used even in Tamil; but a Sanskrit word.
Cakshus – eyes
Saalshaath – seen with your own eyes
Saakshi- eye witness
Though Sanskrit words used in Tamil
ரஹஸ்யம் = இரகசியம்; இன்றும் தமிழர்கள் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொல்லாகும்
சக்ஷு என்றால் கண்; இதை வைத்து சாக்ஷாத் , சாக்ஷி /சாட்சி என்ற சொற்களையும் தமிழில் பயன்படுத்துகிறோம்.
Xxx
5-4-57
Commentators add
Pata Pata sound; repeated sound
Used in Tamil as well
From which comes
Pattaasu – fire crackers
Pata pata endru pattas vediththathu= பட பட என்று பட்டாசு வெடி த்தது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஜூன் 27-ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYANARAYANAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXX
வழக்கை சந்திக்க தயார் வி.எச்.பி., அறைகூவல்
நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்’ என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல் புரிந்துள்ளதாக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்திற்கு சந்தை விலையை விட குறைவாகவே கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:
ராமர் கோவிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது.
இதில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டும் எதிர்கட்சிகள், ஆதாரமில்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகாமல் உள்ளன. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
XXXX
யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது- பிரதமர் சிறப்புரை
உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி திங்கட் கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
அப்போது, ‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் என்றார்.
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை என தெரிவித்தார்.
TIMES SQUARE, NEW YORK, USA
யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதைப்போல உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற
நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களை செய்து அசத்தினர்
XXX
ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை
மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.
இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.. 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஆங்கிலேயர்கள் கொடுத்த அடிமை பெயர் தான் இந்தியா…சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம்.
இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். இந்தியாவின் பண்டைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதே, நமது நாகரீகத்தின் ஆன்மாவாக திகழ முடியும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள் மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.
ஆகவே, அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?. இந்தியா என்னும் பெயரை சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் நமக்கு கொடுத்தனர். இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? நமது குழந்தைகளுக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா நடித்த தலைவி ஜெயலலிதா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே தலைவி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போனது. அந்த படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்
XXX
காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது.
கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன
.கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
XXXX
கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை :அமைச்சர் பேட்டி
நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும் திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு திருக்கோயில் பணியாளர்களுக்கான கொரோனோ நோய் தொற்று பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்து அறநிலை துறை கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம் கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி தற்போது தமிழகத்தில் 207.பேர பயிற்சி முடித்து உள்ளனர்.சைவ மற்றும் வைணம் வழிபாட்டு தலங்களில் பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுத்திய பின் கோயில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறது அதை உடனடியாக சட்டரீதியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியாா் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வித்யாதான அறக்கட்டளைக்கு வித்யாதான அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலையாக ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.
அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். அந்தப் பக்தருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
XXXX
வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க பாபா ராம்தேவ் முறையீடு
கடந்த மாதம், யோகா குருவான பாபா ராம்தேவ், ‘அலோபதி மருத்துவம் குறித்து வெளியிட்ட கருத்துக்களுக்கு , இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அலோபதி மருந்துகள் குறித்த கருத்துகளை ‘வாபஸ்’ பெறும்படி, பாபா ராம்தேவிடம் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்று, பாபா ராம்தேவும், தன் கருத்தை திரும்ப பெற்றார்.எனினும், பாபா ராம்தேவுக்கு எதிராக, பல மாநிலங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், பாபா ராம்தேவ் முறையிட்டு உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:எனக்கு எதிராக, போலீசாரிடம் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவ