அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால்?! (Post No7504)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7504

Date uploaded in London – 28 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால்?!

ச.நாகராஜன்

செகுலர் தேசத்தில் – அதாவது இந்தியா என்னும் பாரதத்தில் அயோக்கியர்கள் பாட புத்தகத்தைத் தயாரித்தால் என்ன ஆகும்?

ஹிந்துக்களை கயவர்கள் போலவும் அழுக்கு ஆசாமிகள் போலவும் சித்தரித்து கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் பரம யோக்கியர் போலவும் எல்லா நல்ல பழக்கங்களையும் உடையவர்கள் போலவும் சித்தரிக்கப்படும்.

சமீபத்தில்  இந்த சதித்திட்டம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்ட்ரல் போர்ட் ஆஃப் செகண்டரி எஜுகேஷன் (CBSE – Central Board of Secondary Education) தயாரித்து வழங்கும் கேஜி பாடபுத்தகத்தில் (KG Textbook) ஹிந்து தர்மத்தையும் ஹிந்துக்களையும்  மறைமுகமாக இழிவுபடுத்தும் பகுதிகள் உள்ளன.

எடுத்துக்காட்டுகள் :

ஒரு பிராமணர் அவமதிக்கப்படும் விதத்தில் ஒரு படம் இருக்கிறது. அதில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும். இந்த பிராமணர் ஒரு வாழைப்பழத் தோலில் கால் வைத்து வழுக்கி விழும் சித்திரத்தில் குழந்தைகள் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

கவனிக்கவும். ஒரு கிறிஸ்தவ பாதிரியோ அல்லது மௌல்வியோ வழுக்கி விழவில்லை. ஒரு பிராமணர் வழுக்கி விழுகிறார்!!

 அடுத்து புதிர் பகுதி:

அதில் குழந்தைகளுக்கு தரப்படும் உதாரணங்கள் இவை:

ராஜா தினமும் குளிப்பதில்லை.

கரண் தினந்தோறும் பல் துலக்குவதில்லை.

கீதா அழுக்கான ஆடைகளை அணிகிறாள்.

ஹனிப் திறந்தவெளியில் விளையாடுகிறான்.

பால் வகுப்பறையில் நேராக உட்கார்கிறான்.

இப்படி ஏராளமான உதாரணங்கள்.

கீதா அழுக்கான உடை – ஆனால் ஹனிப் விளையாடுவதோ திறந்தவெளி!

ராஜா தினமும் குளிப்பதில்லை – ஆனால் பால் வகுப்பில் நேராக உட்கார்கிறான்.

இதை மிக்க இளம் வயதில் படிக்கும் குழந்தைகள் மனதில் ஹிந்துக்கள் அழுக்கானவர்கள், அவர்கள் எந்த நல்ல பழக்கத்தையும் கொண்டிருக்க மாட்டார்கள் என்ற விஷ விதை விதைக்கப்படுகிறது. கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு இப்படி ஒரு விஷ வித்து!

அதே சமயம்  கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எல்லா விதத்திலும் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள்!

பிராமணன் வாழைப்பழத் தோல் தடுக்கி விழும் முட்டாள்; ஆனால் மௌல்வியும் பாதிரியும் பரம விழிப்புணர்ச்சி உள்ளவர்கள்.

என்னடா செக்குலரிஸம் இது.

ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என இப்போது புரியும்!

இப்படி பகிரங்கமாக ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தும் ஒரு பாட புத்தகத்தைத் தயாரித்தது யார்? ஏன்?

நமது அரசியல்சட்டம் 28,29, 30இன் படி மைனாரிடிகளுக்கு அவர்களது வேத புத்தகத்தைச் சொல்லித் தர அனுமதிக்கிறது.

ஆனால் அதே சட்டம் இந்துக்கள் அதிகமாக உள்ள இந்த தேசத்தில் பகவத்கீதை உள்ளிட்ட ஹிந்து தர்ம புத்தகங்களைக் கற்பிக்க அனுமதிக்கவில்லை.

ஏன் இப்படி? செக்குலரிஸம் – இது தான் பதில்!

என்னடா இது செக்குலரிஸம்?!

ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.

விவேகானந்தர் சொன்னது போல விழிமின் எழுமின் என்பது தான் இன்றைய கோஷமாக ஆக வேண்டும்.

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் மீது யாருக்கும் வெறுப்பு இல்லை – ஆனால் அதே சமயம் ஹிந்துக்களை மட்டும் இழிவு படுத்தி தங்கள் தீய நோக்கங்களை அடைய முயற்சிக்கும் தீய சக்திகளை அனுமதிக்கவும் ஹிந்துக்கள் தயாரில்லை!

இதற்குத் தீர்வாக பாரதத்தை தர்ம ராஷ்டிரம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோருவதில் என்ன தவறு?!

புரிந்து கொள்ள வேண்டும் – அனைவரும்!

****

tags – செக்குலரிஸம், பாட புத்தகம், விஷம்,அயோக்கியர்

மேலே உள்ள செய்திக்கு ஆதாரமான கட்டுரை Truth 25-10-2019 Volume 87 No 26 – இதழில் வெளியாகியுள்ளது.

நன்றி : Truth

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

Cultural Denigration

It is reported from New Delhi under the caption, “Conspiracy to show Hindus as inferior and glorify minorities in CBSE’s textbook” as follows :

A lesson on degrading Hindus as inferior and  glorifying Muslims and Christians is included in the KG textbook of CBSE (Central Board of Secondary Education). A conspiracy of brainwashing Hindu children has been hatched, thus, creating misunderstanding in them about Hindu Dharma and Hindus. 

In this textbook, a denigrating image of Hindu Brahman has been printed, and the children have been asked to paint it. This Hindu Brahman is shown falling on the ground after slipping on a banana peel. This textbook

not contain any objectionable image of Christian clergy or Muslim moulvi. 

The textbook contains quizzes on a subject such as identifying good and bad habits. It includes examples such as ‘Raja does not bathe every day’. ‘Karan does not brush his teeth every day’, ‘Gita dresses in unhygienic clothes’, ‘Hanif plays in open-air’, ‘Paul sits straight in the classroom’, etc. In these examples, attempts have been made to convince children that Hindu boys and girls have bad habits; whereas, Muslims or Christians have good habits. 

Some devout Hindus said that such a book is creating hatred in the mind of Hindu culture, sanskars and traditions from childhood in a 

systematic manner. (Sanatan Prabhat 1-15 July 2019) 

  1. Such knave tactics to display Hindus in culturally poor show was pursued by the British before independence. Unfortunately the same trend to denigrate Hindus continues to be followed by the secular anti-Hindu institutions and bodies. Non Hindus must be pampered and Hindus humiliated and insulted. This is the so-called secular spirit, a Hindu is supposed to appreciate and inculcate amongst children. The Articles 28,29 and 30 of our constitution also permit teaching of scripture of minority segment in India in educational institutions, but prohibit study of Bhagavad Gita and other books on Hindu Dharma. Unless Bharat is established as a Dharma Rashtra such nefarious tactics to denigrate Hindu culture will continue to prevail.

Thanks : Truth

***********

GREAT HINDU HEROINES PADMINI & RANI SAMYUKTA (Post No.7503)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7503

Date uploaded in London – 27 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

PADMINI, queen of Rana Rattan Sing of Mewar , and a  lady of exquisite beauty, has been deservedly given an exalted place in the epic of Rajput chivalry by col. Tod and also by Malik Mohammad Jayasi in his Padmavati, a classic work of Hindustani literature . The traditional belief is that the immediate cause of Alauddin Khilji’s invasion of Chitor was his infatuation of Padmini.  History records the chivalrous role of Padmini and a number of other women of Mewar at the time when the famous citadel of Chitor was besieged by Alauddin.

The valiant Rajputs offered a heroic resistance against his onslaught for eight months; but at last to give way in view of the superior numerical strength of the Delhi army.  Before the final surrender of the citadel , however of 26th august , 1303, hundreds of brave women , under the leadership of Padmini plunged themselves in to the fire of JAUHAR – self immolation – to escape pollution and captivity by the Muslim invaders.

The funeral pyre was lighted within the great sub terranean retreat in chambers impervious to the light of the day, and the defenders of Chitor beheld in procession the queens, their own wives, and daughters , to the number of several thousands.

This is the greatest sacrifice of women in the history of the world. This is the bravest act of women the world has never seen.  The fair Padmini closed the throng, which was augmented by whatever of female beauty or youth could be tainted Tartar lust. The women were conveyed to the cavern for security. They were saved from dishonour. Thus Padmini and several thousand Hindu women preferred heroic death  to a disgraced existence.

HEROIC SAMYOGITA

In the bardic traditions of Rajasthan there are thrilling references to the selfless patriotism and heroic exploits of her daughters. The bards’ folk songs are echoing in the walls of the mighty forts. Every stone and sand particle in the surrounding Thar desert are reverberating with the glorious sacrifices they made.

The first example in this category is Samyogita (RANI SAMYUKTA), daughter of Jjayachandra, the ruler of Kanauj. She married Prithiviraj in a swayamvara. When Mohammad of Ghor marched with reinforced troops for the second time to meet his adversary Prithiviraj on the Tarain near  Thanesar, she is said to have armed her lord for the encounter and exhorted him with the following words—

“To die is the destiny not only of man but of the gods; all desire to throw off the old garment; but to die well is to live for ever. Think not of self; but of immortality; let your sword divide your foe and I will be your arthaanga (other half) hereafter”

Prithiviraj fought with reckless valour, but was at last overpowered and killed by the Muslim invaders. True to her vow, the devoted spouse sacrificed her life by mounting his funeral pyre.

We praise Gargi Vachaknavi of Vedic lore as the oldest and most intelligent woman in the world. And in the same way we can praise Rani Samyukta as the most intelligent and bravest woman in the historic period. She and Rani Padmini will inspire Hindu women for generations to come.

Xxx subham xxx

பட்டுப் பூச்சிக்குப் பலத்த காவல்! (Post No.7502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7502

Date uploaded in London – 27 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பட்டுப்பூச்சி உலகம் பற்றி நான் தினமணிக்கதிரில் 18-10-  எழுதிய துணுக்கு செய்தி இது.

இப்பொழுது பிரிட்டன் உள்பட  உலகின் பல பகுதிகளிலும் இது போல காடசியகங்கள் உள்ளன.

பத்திரிக்கையின் பெயர் — தினமணி கதிர்.

தேதி – 18-10-1992

தலைப்பு -அபூர்வப்  பட்டுப்பூச்சிக்குப் பலத்த காவல்

HOW TO FIND US

BUTTERFLY WORLD
Preston Park
Yarm Road
Eaglescliffe
Stockton
TS18 3RH

Tel: 01642 791414
Email: butterflyworldltd@outlook.com

ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்த புகழ்பெற்ற வைரம் திருடுபோன கதை (Post No.7501)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7501

Date uploaded in London – 27 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

TAGS –சினிமா எடுக்க , நெப்போலியன், ஸ்ரீரங்கம் கோவில், ஆர்லோவ் வைரம், கதரைன் மஹாராணி, ரஷ்யா

மொக்கணீசுரர் என்ற திருநாமம் சிவனுக்கு ஏன் உண்டாயிற்று? (Post No.7500)

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 24

WRITTEN BY S NAGARAJAN

Post No.7500

Date uploaded in London – 27 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

thanjavur

கொங்குமண்டலத்தில் ஆறைநாட்டில் கருடக்கோட்டூர் என்று ஒரு ஊர். அதில் இருந்த சிவலிங்கத்திற்கு மொக்கணீசுரர் என்று திருநாமம் ஏற்பட்டது. ஏன்?

சுவையான சிவநேசர் ஒருவரின் வரலாறு இதை விளக்குகிறது.

வணிக குல சிவநேசர் ஒருவர் சிவ தரிசனம் செய்த பின்னர் மட்டுமே உணவருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்.

ஒரு நாள் அவர் பயணம் மேற்கொண்டு ஆறை நாட்டில் உள்ள கருட கோட்டூர் வந்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

கருட கோட்டூர் என்பது அவிநாசியிலிருந்து சத்தியமங்கலம் போகும் பாதையில் ஐந்தாவது மைலில் உள்ள சேவூரிலிருந்து வடமேற்கே செல்லும் கொடி வழியில் சுமார் மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இன்று இங்குள்ள ஆலயம் அழிந்துபட்டு இருக்கிறது. ஊரும் அழிந்து விட்டது. ஆனால் கோட்டூர் பள்ளம் என்று ஊரின் பெயர் மாத்திரம் சொல்லப்படுகிறது. இங்கு செட்டியார் நீராடிய ஓடையை தாழையூற்று என்று சொல்கின்றனர். இந்த ஆல்யத்தில் இருந்த உற்சவமூர்த்திகள் சுமார் முன்னூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் சேவூர் வாலீசப்பெருமாள் கோவிலில் சேர்க்கப்பட்டன.

கருடக்கோட்டூர் வந்த சிவநேசர் நீராடி ஆடையைத் தோய்த்து விட்டு  கரையேறி உடன் வந்த மைத்துனனை நோக்கி, “ சிவதரிசனம் செய்ய வேண்டும். நீ முன் சொல்லிய சிவாலயம் எங்கே இருக்கிறது” என்று கேட்டார். இவரைக் கேலி செய்ய நினைத்த மைத்துனன் முன்னமேயே குதிரைக்குக் கொள் கட்டும் பையில் மணலை நிரப்பி  சிவலிங்கம் போல ஆக்கி கட்டுமாலை ஒன்றையும் சாத்தி வைத்திருந்தான். tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஐயா! இதோ இருக்கிறார், சிவபெருமான், தரிசித்து வாரும்” என்றான் அவன். வணிகர் மிக்க மகிழ்ச்சியுற்று அந்த சிவலிங்கத்தைத் தரிசித்து அது சுயம்பு மூர்த்தி என எண்ணி தோத்திரம் செய்தார். பின்னர் உணவருந்தத் தொடங்கினார்.

vaidyanathaam

இப்போது அவரது மைத்துனன் அவரை நோக்கி, “அத்தான்! இன்று சிவதரிசனம் இன்றி சாப்பிடுகிறீரே, இது சரியா?” என்று கேட்டான்.

“இதோ, இப்போது தானே வணங்கி வந்தேன்” என்றார் வணிகர்.

“இல்லையே! அது சிவலிங்கமே இல்லையே!” என்றான் மைத்துனன்.

பல பேருடன் சேர்ந்து கை கொட்டி நகைத்த அவன்,  தான் செய்து வைத்திருந்த கொள்ளுப் பை சிவலிங்கத்தைத் தூக்கினான். அது அசையவில்லை.

மண்ணைப் பறிக்கப் பறிக்க அதன் அடியைக் காணமுடியவில்லை. சுயம்பு மூர்த்தியாக பாதாளம் வரை ஊன்றி நின்றது.

இதைப் பார்த்த மைத்துனனும் ஏனையோரும் ஆச்சரியப்பட்டனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஆஹா! பக்திமான் பாவித்தபடியே சிவலிங்கம் விளங்குவார்” என்று அனைவரும் வியந்து கூறி சிவநேசரைக் கொண்டாடி லிங்கத்தை வணங்கினர்.

சிவநேசர் கண்ணீர் மல்க சிவனைத் துதித்து உள்ளமுருகினார்.

இதனால் மொக்கணீசுரர் என்ற திருநாமம் அந்த சிவலிங்கத்திற்கு ஏற்பட்டது.

இன்றைய கால கட்டத்திலும், ஆலயம் அழிந்து பட்டாலும் கூட, அந்த ஊரைச் சுற்றியுள்ள மக்கள் இந்த வரலாற்றைப் பெருமை படப் பேசி வருகின்றனர்.

இந்த வரலாறைக் கொங்கு மண்டல சதகம் தனது 24ஆம் பாடலில் விளக்குகிறது இப்படி:-

ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்

தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சிகற்றோன்

பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப்புதைக்க

வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள்:- tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிவதரிசன வழிபாடு செய்யும் ஒரு வணிகர் குடக்கோட்டூருக்கு வந்து , ஆடை தோய்த்து, ஸ்நானம் செய்து, நியமம் முடித்து வரும் போது சூழ்ச்சி கொண்ட ஒருவன் , குதிரைக்குக் கொள் கட்டும் பையை மணலில் நட்டு வைத்து (பூமாலை பொட்டு வைத்து அலங்கரித்து), ‘இதோ, சிவலிங்கம்’ என்றான். சிவநேசர் வணங்கினார். அது சிவலிங்கப் பெருமான் ஆயிற்று. அந்தக் குடக்கோட்டூரும் கொங்குமண்டலத்தில் இருக்கும் ஊரேயாகும்.

இந்த வரலாற்றை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கீர்த்தித் திருவகவலில் குறிப்பிடுகிறார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

tiruvakkaarai, sent by Lalgudi Veda

இப்படி:-

“மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி

சொக்க தாகக் காட்டிய தொன்மையும்”

வேம்பத்தூரார் திருவிளையாடல் இந்த வரலாற்றை பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி

எழிறரு மட்டிக் திட்டே மிதலிய புல்லு மிட்டேங்

கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு

முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கனி முட்டக் கட்டி”

சிவபிரான் பக்தர்களுக்கு எப்படியெல்லாம் அருள் பாலித்துத் தன் திருவிளையாடலைச் செய்கிறார் என்பதற்கு இந்த வரலாறும் ஒரு சிறந்த உதாரணமாகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

***

Surprise! Surprise!! Sri Rangam Temple Diamond is in Russian Sceptre (Post No.7499)

Surprise! Surprise!! Sri Rangam Temple Diamond is in Russian Sceptre (Post No.7499)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7499

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

There is an interesting story about a diamond named after a Russian noble man named Count G G Orlov. The story told by Ian Balfour is that it made its way from Sri Rangam Temple to Russia. Count Orlov presented it to Catherine the Great and she asked the Royal jeweller to fix it in the sceptre. It is now in Kremlin in Moscow.

The diamond has many names Moghul Diamond , Dariya-i- Noor, Orlov diamond and possibly Kohinoor diamond. Here is the interesting story as told by Ian Balfour in his book ‘Famous Diamonds’.

subham

நதிக்கரையில் வைரங்கள் (Post No.7498)

நதிக்கரையில் வைரங்கள் (Post No.7498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7498

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

இது இத்தொடரில் வைரங்கள் பற்றிய பன்னிரெண்டாவது கட்டுரை.

வெளியான தேதிகள் – ஜனவரி 3, 1993; அக்டோபர் 4, 1992; அக்ட்டோபர 8, 1992

பத்திரிக்கையின் பெயர்- தினமணி கதிர்

நான் தினமணிக்கு எழுதிய கட்டுரைகள், சில நேரங்களில் வார இணைப்பான

தினமணிக் கதிரிலும் வெளியாவதுண்டு. எல்லா இடங்களிலும் பெயரைத்

திரும்பத் திரும்பப் போடாமல் ‘சுவாமி’ என்றும், ‘நாதன்’ என்றும் எழுதுவர்.

சில நேரங்களில் பெயர் இல்லாமலும் வரும். இதற்குப் பின்னர் நான்

ஜெம்மாலஜி பத்திரிகையில் எழுதியதால் சில விஷயங்களை நீங்கள்  மீண்டும்

படிக்க வேண்டியிருக்கும்.

இத்துடன் மூன்று வைரத் துணுக்குள் உள .

கட்டுரைத் தலைப்புகள் –  நதிக்கரையில் வைரங்கள் ;

உலகின் மிகப்பெரிய வைரம்;

பலத்த பாதுகாப்பில் கோஹினுர் வைரம்

subham

Tags – நதிக்கரை , வைரம், கோஹினுர், பாதுகாப்பு, பெரிய வைரம்

Tags – நதிக்கரை , வைரம், கோஹினுர், பாதுகாப்பு, பெரிய வைரம்

ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்! (Post No.7497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7497

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நிக்கல் என்னும் அற்புத உலோகம் – Part 2 (Post No.7497)

ஆகாயத்திலிருந்து விழும் நிக்கல்!

பூமியில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. காற்றில் எரிந்தது போ க பூமியில் விழும் கற்களே டன்  கணக்கில் என்பர் விஞ்ஞானிகள்

விண்கற்களில் அதிக அளவு இரும்பும் நிக்கலும் இருப்பதால் இதை கத்திகள் செய்ய நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். இது துருப்பிடிக்காததால் இதை பெரு நாட்டு பழங்குடி மக்கள் வெள்ளி என்று கருதினர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பைதுங் என்ற பெயரில் நிக்கல்-துத்தநாக கலப்பு தாதுவை ஏற்றுமதி செய்த்தது. பைதுங் என்றால் வெள்ளை நிற தாமிரம் என்று பொருள் . தாமிரச்  சுரங்கங்களில் கிடைத்த கலவை ஒன்றை ஜெர்மானியர்கள் பேய்த் தாமிரம் என்று அழைத்தனர். அதைக் கண்ணாடிக்கு பச் சை  வர்ணம் ஏற்ற மட்டுமே பயன்படுத்த முடிந்ததால் இந்த அவப்பெயர். நிக்கல் என்பது என்ன என்ற வாதப்  பிரதிவாதங்களை முடிவுக்குக்  கொண்டு வந்தவர் டோர்பெர்ன் பெர்க்மான்  ஆவார். 1775ம் ஆண்டில் இது தனி மூலகம் என்று அவர் அறிவித்தார்.

இப்பொழுது பூமியில் கிடைக்கும் நிக்கலி ன் பெரும்பகுதி ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுவர். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஒண்டாரியோவின் சட்பரி (Sudbury, Ontario, Canada) பகுதியில் ஒரு பிரம்மாண்டமான விண்  கல் (மலை) விழுந்தது. இங்கு 20 கோடி டன்  நிக்கல் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்; விண்ணிலிருந்து வந்த  மலை மோதிய வேகத்தில் பூமிக்கடியில் இருந்த நிக்கல் குழம்பும் வெளியேறி யி ருக்கலாம். பூமியின் மத்திய பாகத்தில் இரும்பும் நிக்கலும் சேர்ந்த திரவம் கொதித்துக்கொண்டே இருக்கிறது .  கனடாவில் 1905 ஆம்  ஆண்டு முதல் 17,000 ஓட்டைகள் போட்டு நிக்கல், தாமிரம் முதலியன எடுத்துவருகின்றனர்.

பொருளாதார உபயோகங்கள்

நிக்கலுக்கும் கந்தகத்துக்கும் இடையே ஒருவித காதல் உண்டு. இதனால் நிக்கல் சல்பைடு தாதுவிலிருந்து அதிகமாக நிக்கல் எடுக்கப்படுகிறது. கனடாவின் ஒண்டாரியோ சுரங்கம் மட்டுமே உலகின் 30 சதவிகித நிக்கலை உற்பத்தி  செய்கிறது. இது தவிர அமெரிக்கா , ரஷ்யா, தென் ஆப்ரிக்காவும் அதிக அளவில் நிக்கல் எடுக்கின்றன.

உலகில் தோண்டி எடுக்கப்படும் நிக்கலில் பாதி ஸ்டெயின்லஸ் ஸ்டீல் செய்யப் பயன்படுகிறது. எவர் சில்வர் என்று நாம்  அழைக்கும் இதை இருபதாம் நூற் றாண்டில் ஒரே நேரத்தில் ஜெர்மனியும் இங்கிலாந்தும் கண்டுபிடித்தன . காசுகள், நாணயங்கள் செய்யவும் பெரும்பகுதி பயன்படுகிறது. அமெரிக்காவில் ஒரு காசின் பெயர் நிக்கல்.. 1865ல் செய்த இந்தக் காசில் — 5 சென்ட் நாணயத்தில்– 25 சதம் நிக்கல் ஆகும்.

இனி அதிகம் பயன்படும் நிக்கல் கலப்பு உலோகங்களைக் காண்போம்.

இன் வார் — 64 சத இரும்பு 34 சத நிக்கல் – மீட்டர்கள், கடிகாரத்தின் உட்பகுதிகள் , அளக்க உதவும் டேப்புகள் செய்ய உதவுகிறது. கா ரணம் – வெப்பத்திலும் விரிவடையாத குணம் உடையது.

நிக்ரோம் – நிக்கலும் 22 சத க்ரோமியமும் – டோஸ்டர், மின்சார அடுப்புகளில் பயன்படுகிறது.

மோனெல் – 70 சத நிக்கல், 30 சத தாமிரம் – கப்பல்களில் பயன்படுகிறது.

பிளாட்டினைட் – 46 சத நிக்கல், 54 சத இரும்பு- மின்சார பல்புகளில்

இன்கோ 276 – 57 சத நிக்கல், 16 சத குரோமியம், 16 சத மாலிப்டினம்  – பூமியைத் தோண்டும் கருவிகள்

ஒவ்வொன்றிலும் வேறு சில உலோகங்களும் தேவைக்கேற்ப இடம்பெறும்.

நிக்கல்-காட்மியம் பாட்டரிகள் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றி பயன்படுத்தப் படுகின்றன. பெயிண்டுகள், மார்ஜரின் (கிரியா ஊக்கியாக ) முதலியன தயாரிக்கும் இடங்களில் இது உபயோகப்படுகிறது.

பூமியிலுள்ள நிக்கல் எல்லாம் மையப்  பகுதியில்  கொதித்துக் கொண்டு இருக்கும் திரவக் குழம்பில் இருப்பதால் நாம் அதை எடுக்க இயலாது. இப்போது நாம் எடுப்பதெல்லாம் விண்வெளியில் இருந்து விழுந்த பாறைகளில் இருப்பதுதான். கடலிலும் 800 கோடி டன் கரைந்து கிடக்கிறது.

நிக்கல் ஆராய்சசி நீடிக்கிறது. சில வகைத் தாவரங்கள் நிலத்திலுள்ள நிக்கலை  உறிஞ்சியும் உயிர்வாழ்வதால் நிக்கல் மண்டிய நிலங்களில் இவற்றை வளர்த்து நிக்கல் விஷத்தை வெளியேற்றலாமா என்றும் முயன்று வருகின்றனர்.

from old Tamil Magazine

–subham–

சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை! (Post No.7496

சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை! (Post No.7496

WRITTEN BY S NAGARAJAN

Post No.7496

Date uploaded in London – 26 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

  சித்தூரின் வரலாறு : சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞை!

ச.நாகராஜன்

சித்தூர் அபூர்வமான வீரர்களைக் கொண்டது. அதன் வரலாற்றில் ஒரு பொன்னேடு தான் சந்தாவின் பீஷ்ம பிரதிக்ஞையைப் பற்றித் தெரிவிக்கிறது.

சித்தூரை ஆண்ட ராணா லாக்கா இப்ராஹிம் லோடியை அடித்து வீழ்த்தித் துரத்தினான். இதனால் அவன் பெயரும் புகழும் எங்கும் பரவின.

அவனது மகன்களில் சந்தா மூத்தவன். பெரும் வீரன். அனைத்து நற்குணங்களின் இருப்பிடமாக அவன் திகழ்ந்தான்.

இதை அறிந்த ஜோத்பூரின் அரசன் தன் மகளை சந்தாவுக்கு மணம் முடிக்க் எண்ணினான்.

அந்தக் கால வழக்கப்படி ஒரு பிராமணரிடம் தேங்காய் உள்ளிட்ட மங்கலப் பொருள்களைத் தந்து மணம் பேசி முடிக்க அனுப்பினான் ஜோத்பூர் அரசன்.

சித்தூர் வந்த பிராமணன் அரசனிடம் தன் மன்னன் கூறியதைச் சொல்லி தேங்காயைச் சமர்ப்பித்தான்.

தேங்காயைப் பெற்ற ராணா லாக்கா விளையாட்டாக சிரித்துக் கொண்டே, “ இதை இந்த முதியவனுக்குக் கொடுத்து பெண் கொடுப்பதாக அல்லவா நினைத்தேன். இப்படி ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்று வேடிக்கையாகக் கேட்க அரசவையில் இருந்த அனைவரும் இந்த நகைச்சுவையைக் கேட்டுச் சிரித்தனர்.

இதைக் கேட்டுக் கொண்டே அரசவையில் நுழைந்த சந்தா, அரசவையினரை நோக்கி, “ சபையோரே! எனது தந்தையார் விளையாட்டாக இதைச் சொல்லி இருந்தாலும் அவர் சொன்னது சொன்னது தான். அந்தப் பெண்ணை நான் மணக்க மாட்டேன். அவளை என் தாயாராகவே பார்ப்பேன்” என்றான்.

அனைவரும் திடுக்கிட்டனர்.   

லாக்கா எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். சந்தா கேட்கவில்லை.

விளையாட்டு இப்போது வினையாகி விட்டது.

தேங்காயைத் திருப்பி அனுப்ப முடியாது. அது மிகத் தீவிர விளைவை உண்டாக்கி போரில் வேண்டுமானாலும் கொண்டு விடும்.

என்ன செய்வது?

நன்கு யோசித்த லாக்கா இறுதியாக ஒரு அஸ்திரத்தைத் தன் மகன் சந்தா மேல் பிரயோகிக்க நினைத்தான். “இதோ பார், மகனே! நீ மட்டும் அவளை மணக்கவில்லை எனில் உனக்கு இந்த ராஜ்யம் கிடைக்காது. ஜோத்பூர் அரசனான ராணாமல்லாவின் மகளை நான் மணந்தேன் எனில் அவளுக்குப் பிறக்கும் மகனே இந்த நாட்டை ஆள்வான்” என்றான்.

இப்படிக் கூறினால் சந்தா உடனே அவளை மணக்கச் சம்மதிப்பான் என்று எண்ணிய லாக்காவிற்கு இப்போது உரிய பதிலை சந்தா வீரத்தோடு கூறினான்: “தந்தையே! உங்கள் பாதத்தைத் தொட்டு வணங்கி இதைக் கூறுகிறேன். எனது புதிய தாய்க்குப் பிறக்கும் மகனே சித்தூரை ஆள்வான். நான் அவனுக்குக் காலம் முழுவதும் துணையாக இருந்து பணிவிடை புரிவேன். இது சத்தியம்” என்றான்.

அனைவரும் திடுக்கிட்டனர்; அவனது சபதம் கேட்டு பிரமித்தனர்.

ஐம்பது வயது லாக்காவிற்கும் ஜோத்பூர் ராணாமல்லாவின் 12 வயது மகளுக்கும் திருமணம் நடந்தது.

பின்னர் உரிய காலத்தில் அவள் ஒரு மகனைப் பெற்றாள்.

அவனுக்கு முகுலன் என்று பெயர் சூட்டப்பட்டது.

முகுலனுக்கு ஐந்து வயது ஆகும் போது கயாவை முஸ்லீம்கள் தாக்கினர்.

இதைக் கேட்ட சித்தூர் அரசன் அதைத் தடுக்கப் படையுடன் செல்ல விழைந்தான்.

மகனை அழைத்த அவன்; “சந்தா! இப்போது கயா நோக்கிச் செல்கிறேன். ஆனால் பெரும் படையை எதிர்த்துப் போரிட வேண்டியிருப்பதால் திரும்புவது சந்தேகம் தான். முகுலனுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டான்.

“தந்தையே! அவனே சித்தூர் அரசன்” என்று கூறிய சந்தா அவனுக்கு மகுடம் சூட்ட ஏற்பாடு செய்யலாம் என்றான்.

ஆனால் லாக்காவிற்கு இது சரியென்று படவில்லை. ஐந்து வயது சிறுவன் எப்படி ஒரு நாட்டை ஆள முடியும்?

ஆனால் சந்தா உறுதியாக இருந்து முகுலனுக்கு மகுடன் சூட்டினான்.

எதிர்பார்த்தபடி லாக்கா திரும்பி வரவில்லை; போரில் அவன் வீர மரணம் எய்தினான்.

முகுலனுக்கு உறுதுணையாக இருந்து சந்தா செய்த ஆட்சி அனைவராலும் பாராட்டப்பட்டது. அனைவரும் அவனைப் புகழ்ந்தனர்.

முகுலனின் அன்னைக்கு இப்போது ஒரு சந்தேகம் தோன்றியது.

இப்படி உறுதுணை என்று சொல்லி தானே அரசாட்சியை சந்தா கைப்பற்றி விடுவானோ?

அன்னையின் இந்த எண்ணத்தை ஒருவாறாக அறிந்த சந்தா மிகவும் வருத்தப்பட்டான்.

நேராக அவளிடம் சென்றான்: “அன்னையே! சித்தூரை விட்டு இன்றே நான் செல்கிறேன். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்; உங்கள் சந்தேகத்தையும் போக்கி விடும். விடை தாருங்கள். ஆனால் என்றேனும் எனது உதவி தேவை எனில் செய்தி அனுப்புங்கள். உடனடியாக ஓடோடி வந்து உங்களுக்குத் தேவையானதைச் செய்வேன்” என்றான். சித்தூரை விட்டு அன்றே அவன் அகன்றான்.

சந்தா சென்றவுடன் முகுலனின் அன்னை தனது சகோதரனை ஜோத்பூரிலிருந்து வரவழைத்து அரசாட்சியில் தனக்கு உதவுமாறு வேண்டினாள். அவன் வந்தான்.

பின்னர் ராணா மல்லாவே இன்னும் பல அரசு அதிகாரிகளை சித்தூருக்கு அனுப்பினான். இப்போது சித்தூரின் மீது அவனுக்குப் பேராசை பிறந்தது. அதையும் தானே கைப்பற்றி ஆண்டால் என்ன?

இந்த எண்ணம் தோன்றியவுடன் தன் மகளுக்குப் பிறந்த முகுலனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டலானான்.

இதை அறிந்த முகுலனின் அன்னை – ராணா மல்லாவின் சொந்த மகள் -மிகவும் வேதனையுற்றாள்.

இப்போது என்ன செய்வது? அவளுக்குச் சந்தாவின் நினைவு வந்தது.

உடனடியாக அவனுக்குச் செய்தி அனுப்பி, “உடனே வந்து தன்னையும் முகுலனையும் சித்தூர் அரசையும் காப்பாற்றுமாறு” வேண்டினாள்.

செய்தியைப் பெற்றவுடன் சந்தா நேராகச் சித்தூர் விரைந்தான்.

ராணா மல்லாவை அடக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டான்.

ராணா மல்லாவையும் அவனுடன் சேர்ந்த அனைவரையும் கொன்றான். சித்தூர் ராணா மல்லாவிடமிருந்து விடுவிக்கப்பட்டது. ராணா மல்லாவின் மகன் போதாஜி சித்தூரை விட்டு ஓடி விட்டான்.

ராணா முகுலனுக்கு இறுதி வரை சந்தா உதவி செய்தான்.

சந்தாவின் சரிதம் சித்தூர் வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட்ட சரிதம் ஆயிற்று.

***

ஆதாரம் : டிசம்பர் 2018 கல்யாண கல்பதரு ஆங்கில மாத இதழ்

நன்றி : Kalyana – Kalpataru

GREAT POETESSES HONNAMMAA, CHELUVAAMBAA AND GIRIYAMMA (Post No.7495)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7495

Date uploaded in London – 25 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

Literary talents are not confined to the members of the Brahmana and Kshatriya class. A Shudra woman became much reputed as the writer of a socio political  composition in Kannada. Her name was Honnamma and  she probably belonged to Yelanduur in Karnataka. She was working in the palace of Mysore king Chikka Devaraja. She was evidently the favourite maidservant of the chief queen Devaajammani.  She was educated at the instance of the queen by a well known scholar proficient in the Vedas and the Vedanta , who was also the author of a drama  called ‘Mitravinda Govinda.’

This teacher Alasingaaraachaarya , was evidently so pleased with the ability of his pupil that he called her the Goddess of  Charming  Literature  – sarasa saahitya da vara devataa-  this praise of a pupil by a teacher  impressed the king so much he told his queen to get a  literary piece written by Honnamma. Following this she wrote  ‘Hadibadeya Dharma’ ,which deals with the duties of a chaste woman.  This book has become so popular that verses from it are sung even today.  It is also of value from the point of view of history, since it gives the genealogy of the Mysore kings up to the seventeenth century.

XXX

CHELUVAAMBAA

Among the later poetesses of Karnataka , Cheluvambaa was a popular poetess. She was the queen of Mysore kKng Dodda Krishna Raja.  She is reputed as the author of a long poem called V’aramandi Kalyaana’. She has also written lullaby songs  on the greatness of the deity Venkatachala of Tirupati and on the Goddess aAamelumanga. She has in addition written a prose commentary on the ‘Tulaa kKaveri Mahaatmyaa’. She states that she wrote the delightful Varamandii Kalyaana  at the command of her husband.  Her style is very mellifluous.  She flourished about 1725 CE.

Xxx

HELAVANAKATTE GIRIYAMMA

GIRIYAMMAA from Helavakatte was a Brahmana poetess. She is remembered for her devotional poetry , and some of her well known poems deal with such popular themes as the marriage of Sita , the stories of Chandrahasa and Uddalaka. Besides these, she composed  a number of songs  which are quite popular even today.   She was a devotee of lord Renganatha

A point of interest  regarding these songs is that  even the ragas  are specified by her.  We can recognise her songs by the words ‘Helavanakatte Rangayya’ that occurs at the end of the pieces. All her works are in Kannada.  Tradition says that she lived in the village of Komaaranahalli near Harihaa in Karnataka about 250 years ago.

XXXSUBHAMXXX