Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
நாமக்கல் மலையிடையில் கீழ்ப்புறம் பாறையைக் குடைந்து அரங்கநாதனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தூண்களை உடைய மேடை ஒன்று, அதன் அடிப்பாகம் மூன்றடுக்குகள், இரண்டு தூண்களை உடைய கூடம், குகையின் மேல் பாகம் வளைவாக வந்து நீண்டிருக்கும் ஒரு தாழ்வாரம். தூண்களுக்குச் சரியாகச் சுவர் எழுப்பி மூன்று கதவுகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கதவின் வழியாகத் தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். மற்ற இரண்டு வாயில்களும் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுபவை.
உயரமான மேடையில் கார்க்கோடகன் என்னும் பாம்பைப் பாயலாகக் கொண்டு அரங்கநாத சுவாமி சயனகோலம் பூண்டிருக்கிறார். அக்குகையின் மேற்குப் புறச் சுவரின் அருகில் தும்புரு, நாரதர், பதஞ்சலி, பிரமன், நான்கு கந்தர்வர்கள் ஆகியோருடைய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சுவாமியின் பாதத்தின் அருகில் மேடையின் வடக்குச் சுவரில் மது, கைடபர், சந்திரன் ஆகியோரது சிலகள் உள்ளன. சூரியனின் உருவம் சுவாமியின் சிரசுக்குச் சமீபத்தில் தெற்குச் சுவரில் இருக்கிறது. படுக்கையின் கீழ் பஞ்சாயுதங்கள் இருக்கின்றன.
மேடைக்கும் வெளியில் உள்ள இரண்டு தூண்களுக்கும் இடையே சாம்பவந்தன், மகாபலி மற்றும் சில கந்தர்வகள் இருக்க வாமனாவதாரத்தோடு திருவிக்கிரமாவதாரமும் உள்ளன. இதற்கு எதிர்த்த வடக்குச் சுவரில் சிவனும், இடது புறம் விஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணனது சிலை இருக்கிறது. ஏழு முக்கிய நதிகளும், அவற்றின் அருகே பால நரசிம்மனது உருவமும் இருக்கிறது.
அதே நாமக்கல் மலையின் மேல்புறம் பாறையைக் குடைந்து நரசிம்ம சுவாமி கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிற்ப வேலைகளுடனான மூன்று அறைகளும் முன்னால் இரண்டு தூண்களும் ஒரு தாழ்வாரமும் இருக்கின்றன. உயர்த்தப்பட்டதும், இரண்டு இரட்டைத் தூண்களும் உடையதுமான நடுவறை மேடையின் மேல் அமைந்துள்ளது. நரசிம்ம சுவாமியின் உருவம் உட்கார்ந்த நிலையில் இருக்கிறது. சுவாமியின் பீடத்திற்குச் சரியான மட்டத்திற்கு வலது புறத்தில் ஒருவருக்குப் பின் ஒருவராக சந்திரன் – சூரியன் -ஜனகர் ஆகியோரும், இடது புறத்தில் சனந்தனன்-சந்திரன் – பிரம்மா ஆகியோரும் இருக்கிறார்கள். இதில் சூரியனும் சந்திரனும் சாமரம் போடுகின்றனர். ஜனகனும் சனந்தனனும் உயரத்தில் நடக்கும் காரியங்களைத் தெரிவிக்கின்றனர். ருத்திரனும், பிரமனும் இரணியனின் வதத்தின் போது உண்டான கோபத்தைத் தணிக்கின்றனர்.
இரண்டாவது அறையில் இரணியனைத் துடையின் மேல் வைத்து இரு கைகளால் அவன் வயிற்றைக் கீறுவதும், இரண்டு கரங்களால் அவன் கைகால்களைப் பிடித்துக் கொண்டிருப்பதும், மற்றும் இரு கரங்களில் சங்கு சக்கரமும் ,வேறிரண்டு கைகளில் வாளும் வில்லும் கொண்டிருப்பது போலவும் காணப்படுகிறது.
மூன்றாவது அறையில் வராகவதாரம் உள்ளது. வராகத்தின் தலைக்கு மேலே நான்கு வேதங்களாகிய நான்கு தலைகள் உள்ளன. அடியில் ஒரு புறம் ஆதிசேஷனும், மறுபுறம் பூமி தேவியும் கலியுகத்தின் முடிவில் வரப்போகும் பாதங்களைக் காணக் காத்திருக்கின்றனர்.
வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு சுவர்களிலும் இரண்டு மாடங்கள் உள்ளன. தெற்கே இருப்பது வாமனாவதாரம். நடுவில் இருப்பது திருவிக்கிரமன்.
கீழே குடை பிடித்துக் கொண்டிருப்பது வாமனாவதாரம். மேலே தூக்கியுள்ள பாதத்தைப் பிரம்மா பூஜை செய்வது போலவும் அதற்குப் பக்கத்தில் திருவிக்கிரமனது வெற்றிக்காக் ஜாம்பவந்தன் பேரிகை அடிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
கீழே மஹாபலி தானம் கொடுப்பதற்குச் செம்பில் தண்ணீரோடு நிற்கிறான்.
திருவிக்கிரமனது இடது காலுக்கு அருகில் கருடன் சுக்கிரனது முதுகில் ஏறிக் கொண்டு, மாவலியின் கொடையைத் தடுத்ததற்காகத் துன்புறுத்துகிறான். வடக்குச் சுவரில் மாடத்தில் வைகுண்ட நாராயணனது சிலை உள்ளது. தேவர்கள் தஙகளைத் துன்புறுத்துபவனாகைய இரணியனைக் கொல்லும் உருவத்தைக் கண்டு களிக்க, சுவாமி அபய ஹஸ்தம் கொடுப்பது போல இருக்கிறது.
இவ்விரண்டு கோவில்களும் மலையைக் குடைந்தே தூண், கொடுங்கை, மேடை, விக்கிரஹம் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.
நரசிம்ம சுவாமிக்கும், அரங்கநாத சுவாமிக்கும் முறையே தமிழ்ப் பழம் பெயர் சிங்கப் பெருமாள் மற்றும் பள்ளி கொண்ட பெருமாள் எனச் சாஸனம் கூறுகிறது. இது வட கொங்கு நாடு, ஏழூர் நாடைச் சேர்ந்ததாகும்.
இவையெல்லாம் 1906ஆம் ஆண்டு வெளியாகியுள்ள சாஸன பரிசோதனை அறிக்கை பக்கம் 74,75,76-இல் தரப்பட்டுள்ளன.
இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் பாடல் எண் 42இல் கூறுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற நாமக்கல் மலை அதியேந்திர விஷ்ணுக்ரஹ கோவிலைப் பற்றியும் அதைக் குடைந்து உருவாக்கிய அதியன் பற்றியும் கொங்கு மண்டல சதகம் 80ஆம் பாடல் போற்றிப் புகழ்கிறது.
சிற்ப சாஸ்திரத்தில் வல்லுநர்களைக் கொண்டு மலையைக் குடைந்து பழங்கால இதிஹாசக் கதைகளான பிரதிமைகளைச் செதுக்கி அதியேந்திர விஷ்ணுக்கிரஹ என்று ஆலயத்துக்குப் பெயர் கொடுத்து அதியன் வாழ்வதும் கொங்கு மண்டலமே ஆகும்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Dhanadeva is a poet quoted by Sharngadhara Paddhati (1363). His verse mentions eloquent achievements of Shiilaa, Vijjaa, Maarulaa, Morikaa and others as poetesses of distinction.
We have already seen the works of Shila and Vijja.
Vijja alias Vidyavati lived before Rajasekhara’s time. One of her poems is in the Abhidhaa vrtti Maatrikaa of 855 CE . This work is written by Mukula who lived during the period of King Avantivarman of Kashmir (855-883 CE).
Vijja’s most often quoted verse is
Nilotpala dala shyamam Vijjakam mamajanata Vrithaiva Dandinapyuktam Sarma shukla
Mearning “Without knowing me ,Vijjaka , dark like the petal of a blue lotus, vainly has the poet Dandin said that the goddess of learning is all white.”
Some people change the word ‘maam’ in the verse to ‘taam’ and attribute it to a different person.
Of Marula and Morika little is known; but some of their stanzas are quoted in Jalhana’s SUkti Muktavali, 1258 CE
The Kavindra vachana Samuchchaya quotes some stanzas of poetess Bhaavadevi. Another book also gives her stanzas.
Another ancient poetess is Phalguhastini. Some of her stanzas appear in later anthologies. Since Vamana’s Kavylankara Sutra vrtti is quoting her one Stanza ,she must have lived before 800 CE. Vamana was the Minister King Jayapida of Kashmir 779-813 CE.
Chandala vidya! Sadukti karnamrita quotes a verse under the joint authorship of Chandala vidyaa, Kalidasa and Vikramaditya. So she must be from Gupta Period.
Another poetess is Jaghanachapalaa. Her stanza is found in Kavindra Vachana Samuchchaya.
We see two stanzas jointly composed by Bilhana and Rajakanya. Raja Kanya means Princess. Her real name was Shashikala or Chandrakala. Verses of a poetess named Sarasvati hav ebeen quoted in several anthologies beginning with Sadukti Karnamrita. But she lived before eleventh century.
Rajasekhara Charita mentions the following poetesses:- KaAmaliIla Kanakavalli Sunandaa Lalitaangi Madhu Ranga Vimalaanghi
Of these the last three are from Malwa (Madhya Pradesh). We don’t know much about others. We have lost their original works and only quoted stanzas are available now. No where in the world and in no other language we find such a galaxy of poetesses. Sanskrit stands far higher than other ancient languages when it comes to Poets and Poetesses.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Indra by Lalgudi Veda
Across
1. (10 letters)- thunderbolt weapon of Vedic God Indra
7. (6)- name of the fourth month in a year starting with Chitra. Also name of Siva, King in stories
8. (9)- cobra jewel
9. (6)- a tribe’s name, cowherd, those who lived in sea shore in gujarat
1O. (5)- river name; that runs through Surat; it is in between Narmada and Godavari
11. I (7)- first of the 27 stars in Hindu astrology
12. (9) – late BJP prime minister was born in the family of doers of this Yaga.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் நாளிதழில் 7-12-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!
ச.நாகராஜன்
கடன் தொல்லை, தாங்க முடியாத தரித்திரம், வியாபார நஷ்டம், தீராத வறுமை, அளவில்லாச் செலவு என்று இப்படி அல்லல் படுவோருக்கு நமது அறநூல்களும் மகான்களும் காட்டும் ஒரு நல்ல வழி திருவிளக்கைத் தினமும் வீட்டில் ஏற்றுவது தான்!
வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை மகாலெட்சுமியாகக் கருதுகிறது நமது பண்பாடு. வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்வது ஒரு அர்த்தமுள்ள பழக்கம்.
ஏனெனில் தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் தரித்திரம் தொலைவதோடு இனி ஆரம்பிக்க இருக்கும் வாழ்க்கை செல்வ வளம், உடல் ஆரோக்கியம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது என்பதை ஆன்றோர் அனுபவத்தால் கண்டு அதை மரபாகக் கடைப்பிடித்தனர்.
மஹாலட்சுமி வசிக்கும் இடங்களில் முக்கியமானது
மஹாலட்சுமி வாசம் புரியும் இடங்களில் முக்கியமானதாகத் திகழ்வது விளக்கு. தினமும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வழிபடுவது வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
மாலையில் சூரிய அஸ்தமன சமயம் வாயிலின் இரு புறங்களிலும் அகல் விளக்கு ஏற்றி வருவோர் ஒரு நாளும் வறுமை என்ற கொடிய பிணியை அடைய மாட்டார்கள்.
பழைய காலத்தில் மாட விளக்கு என்று திண்ணையின் இரு புறங்களிலும் உள்ள பிறை மாடங்களில் விளக்கை ஏற்றி வைப்பர். அவர்கள் நிம்மதியாகவும் தரித்திரம் இன்றியும் வாழ்ந்து வந்தனர். (இன்று நவீன வாழ்க்கை முறையில் மாடத்தைக் காணோம்!)
சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களில் விளக்கை ஏற்றி வைப்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா’ என்று விளக்கு அணைந்தால் அது தீய சகுனமாகக் கருதப்பட்டதை புறநானூறு (பாடல் 280) குறிப்பிடுகிறது.
ஆயிரக்கணக்கான பாடல்கள் தீபம் பற்றிக் குறிப்பிடுகின்றன.
விளக்கின் வகைகள்
விளக்கில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அனைத்துமே நலம் பயம் பயப்பவை தான்.
களிமண்ணால் ஆன அகல் விளக்கு எளியோரும் ஏற்றி முன்னேற வழி வகுப்பது.
குத்து விளக்கு பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கும் ஒன்று. இன்றைய காலத்தில் எல்லோர் வீட்டிலும் இடம் பெறும் ஒன்று.
தூங்கா விளக்கு இடைவிடாது இறைவன் சந்நிதியில் எரியும் விளக்கு.
காமாட்சி விளக்கு மணப்பெண்ணின் சீதனமாக வரும் விளக்கு.
தொங்கு விளக்கு கோவில்களில் தொங்கும் விளக்கு.
இன்னும் நந்தா விளக்கு, யானை விளக்கு, கிளி விளக்கு,பாவை விளக்கு, வாசமாலை விளக்கு, சரவிளக்கு, அன்ன விளக்கு, தூண்டாமணி விளக்கு என இப்படி பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு அம்சம், வரலாறு உண்டு.
விளக்கை ஏற்றும் திசைகள்
விளக்கை கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து ஏற்றலாம். தெற்கு திசையைப் பார்த்து மட்டும் ஏற்றுதல் கூடாது.
இதன் அரிய பலன்கள்:
துன்பம் விலகும்.
கடன் தொல்லை போகும்
மங்களம் உண்டாகும்
திருமணத் தடை நீங்கும்
பல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர்.
விளக்கின் முகங்கள்
விளக்கில் ஒரு முகத்திலிருந்து பல முகங்கள் வரை உண்டு.
ஒரு முகம் மட்டும் உள்ள விளக்கு நோய்களை நீக்கும்.
இரண்டு முகம் உள்ள விளக்கு குடும்ப ஒற்றுமையை நிலைப்படுத்தும்.
மூன்று முகம் உள்ள விளக்கு சகோதர சகோதரிகளிடையே நல்லுறைவை மேம்படுத்தும். புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.
நான்கு முகம் வாகன சுகம், வியாபார வளத்தைத் தரும்.
ஐந்து முகம் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்களைத் தரும். சகல சௌபாக்கியத்தையும் தரும்.
ஆறு முகம் சத்ருக்களை வெல்லும். ரோகம் நீக்கும்.
ஏழு முகம் : திருமணத்தை நடைபெற வைக்கும்.
இப்படி ஒவ்வொரு விளக்கும் நற்பயன்களையே தரும். அனைத்திற்கும் அடிநாதமாக இருக்கும் செல்வம் பெருகும். மங்களம் தங்கும்.
எண்ணெயும் திரியும்
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நல்லெண்ணெய் சௌபாக்கியத்தைத் தரும்.
பசு நெய் மகாலட்சுமியை வரவேற்று தங்கச் செய்யும்.
கடலை எண்ணெய் மட்டும் கூடாது. அது தீய பலன்களைத் தரும்.
திரிகளிலும் பருத்திப் பஞ்சு, தாமரைத் தண்டு, வெள்ளெருக்கு எனப் பல வகைகள் உண்டு.
பருத்திப் பஞ்சினால் உள்ள திரி சௌபாக்கியத்தையும், தாமரைத் தண்டைத் திரியாக இடுவது குழந்தைச் செல்வத்தையும் வெள்ளெருக்குப் பட்டை செல்வ வளத்தையும் ஏற்படுத்தும்.
குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளைக் குறிப்பதாக ஆகிறது. மும்மூர்த்திகளையும் போற்றி வணங்குவதாக ஆகிறது!
குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கமாக மாவிளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு போன்றவற்றை ஏற்றுவதால் குடும்பத்தினருக்கு சகல நலன்களும் கிட்டும்; இவற்றை அந்தந்தக் குடும்பப் பெரியோர்கள் விடாது செய்யும்படி இளைய தலைமுறையினரை அறிவுறுத்துவர்; இதனால் இது பரம்பரை பரம்பரையாக்த் தொடர்கிறது.
தீப மங்கள ஜோதி நமோ நம
திருவிளக்கு உலகியல் வாழ்க்கைக்கான செல்வ வளத்தையும் சௌபாக்கியத்தையும் மட்டும் தரும் ஒன்றல்ல.
ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து பெறுதற்கு அரிதான முக்திக்கும் வழிவகை செய்யும் ஒரு அரிய சாதனம்.
இறைவன் ஜோதி வடிவம் என்பதை நமது அருளாளர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடி வலியுறுத்தியுள்ளனர்.
தமஸோ மா ஜோதிர் கமய: – இருளிலிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்க என்பதே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேத பிரார்த்தனை!
திருவண்ணாமலை அக்னி தலம். அங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை அன்று தீபத் திருவிழா உலகம் கண்டிராத அரிய திருவிழாவாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஜோதி வடிவாகச் சிவன் எழும்ப, முடியையும் அடியையும் பிரமனும் விஷ்ணுவும் காண முடியாத நிலையை இத் திருவிழா புலப்படுத்துகிறது.
திருவண்ணாமலை மஹா தீபத்தில் ஏழு அடி உயரமுள்ள தாமிர விளக்கு பயன்படுத்தப்படுகிறது. தீபம் எரிய 3000 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திரியாக 3000 அடி நீளத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் இடை விடாமல் பதினோரு நாட்கள் எரிய பயன்படுத்தப்படுகிறது.
முக்திக்கு வழி காட்டும் இந்த ஜோதியைத் தான் தீப மங்கள ஜோதி நமோ நம என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஜோதியைக் கும்பிடுவதே சிவ வாழ்வாகும். ‘ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோஹமது தந்து எனை ஆள்வாய்’ எனப் பெரிய மந்திர ரகசியத்தை அருணகிரிநாதர் (வாதினை யடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்) விளக்குகிறார். (சோஹம் = ஸ + அஹம் = அவனே நான் என்று பொருள் – சிவனே நான்!)
அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோர் ‘மாசற்ற ஜோதியை’ வர்ணித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர்; நம்மையும் அடையச் செய்கின்றனர்!
அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை
சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலார் ‘அருட் பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற தாரக மந்திரத்தை அருளியதோடு ஜோதியின் பெருமையை அருட்பெருஞ்சோதி அகவலில் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறார்.
சாகாக் கலையை ஜோதி வழிபாடு கற்பிக்கிறது என்பது அவரது அருளுரை.
‘மடல் எல்லாம் மூளை மலர்ந்திட
அமுதம் உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பி’
என்று இப்படி மனித உடலானது ஜோதி உடலாகப் படிப்படியாக மாறும் விதத்தை அவர் உலகினர் முன் வைக்கிறார்.
அவரது பாடல்களை ஊன்றிக் கற்போர் அறிவது : ‘ஜோதி வழிபாட்டால் சிவ அருள் சித்திக்கும்; நீடித்த நோயற்ற வாழ்வும் பெரும் பேறும் கிடைக்கும் என்பதையே!
வள்ளலார் கூறும் இன்னொரு முக்கியமான அறிவுரை – இரவில் விளக்கில்லாமல் இருக்கும் அறையில் படுத்து உறங்கக் கூடாது என்பது தான். விளக்கு எரியும் அறையில் படுப்பது ஆயுளை நீட்டிக்கும் என அவர் வலியுறுத்துகிறார்.
உலக மக்கள் இன்புற ஆழ்வார்கள் ஏற்றும் அற்புத விளக்கு!
ஆழ்வார்களோவெனில் உலகம் முழுவதுற்குமான நன்மைக்கு விளக்கை ஏற்றி வைக்கின்றனர்.
வையமே அகல்; வார் கடலே நெய். சூரியனே விளக்கு; துன்பமாகிய கடல் என்னும் இடர் ஆழி நீங்க, சுடர் ஆழி வண்ணனுக்கு பாமாலை சூட்டித் தீபம் ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
பூதத்தாழ்வாரோ அன்பை அகலாகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக ஊற்றி இன்புருகு சிந்தையை திரியாக ஆக்கி ஞானத் தமிழால் நாராயணனுக்கு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா போதிக்கும் தீப தியானம்
முக்திக்கு வழி கோலும் ஒரு அடிப்படையை யோக வழிமுறையாக தீப தியானம் அருளாளர்களால் பண்டைக் காலம் தொட்டே பரிந்துரைக்கப்பட்டு வந்திருக்கிறது.
நவீன காலத்தில் கணினி தொழில்நுட்பம், தொழிற்சாலைகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மன இறுக்கத்திற்கும், மன உளைச்சலுக்கும் இது ஒரு அருமருந்து. இந்த தியானம் உலகியல் பலன்களை முதலில் தந்து பின்னர் ஆன்மீக சிகரத்தில் ஏற்றி விடும்.
ஸ்ரீ சத்யசாயி பாபா இந்த தியானத்தை மிகவும் வற்புறுத்துகிறார்.
அவர் தனது அருளுரையில், “மனிதன் தெய்வீகமானவன். அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள தியானம் இன்றியமையாதது. நான் உங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தியான முறையைத் தருகிறேன்” என்று கூறி தீப தியான முறையை விளக்குகிறார் இப்படி:- (Sathya Sai Speaks Volume 6 உரை எண் 50)
“தினந்தோறும் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். நீங்கள் அமைதியை உணரும் போது பின்னர் நிச்சயமாக இதற்கென அதிக நேரத்தை ஒதுக்குவீர்கள். உதயத்திற்கு முன்னர் இதைச் செய்யுங்கள். ஏனெனில் உடலானது தூக்கத்தினால் புத்துணர்ச்சி பெறுகிறது. பகல் நேரத்திலோ பல்வேறு செயல்களினால் உடல் மற்றும் மன ஆற்றல் சிதறுபடுகிறது.
ஒரு விளக்கைச் சிறிய நேராக எரியும் சுடருடன் உங்கள் முன்னர் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை தீபங்களை அந்தத் தீபம் ஏற்றினாலும் கூட அது தன் சுய ஒளியில் சிறிதும் குறைந்து போவதில்லை. ஆகவே சுடர் என்றுமுள்ள நிரந்தரப் பொருளுக்கான பொருத்தமான அடையாளம். அதன் முன்னர் பத்மாசனம் அல்லது உங்களுக்கு சௌகரியமானபடி அமர்ந்து கொள்ளுங்கள். சுடரை நேராகப் பாருங்கள். பின்னர் கண்களை மூடிக் கொண்டு அதை உங்கள் அகத்தில் இரு கண்களின் புருவங்களுக்கிடையே உணர முயலுங்கள்.
அதிலிருந்து அது உங்கள் இதயத் தாமரைக்கு செல்லும் பாதையெல்லாம் ஒளி பெறச் செய்தவாறே இறங்கட்டும். மார்பில் உள்ள இதயத்தின் நடுவே அது செல்லும் போது தாமரை மலரின் இதழ்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரிவது போலக் கற்பனை செய்யுங்கள். அது ஒவ்வொரு எண்ணத்தையும், உணர்ச்சியையும், உணர்வையும் ஒளியில் குளிப்பாட்டி இருளை அகற்றுவது போல எண்ணுங்கள்.
இப்போது ஒளியின் முன்னர் இருளுக்கு இடம் இல்லை. சுடரை பெரிதாக, அகலமாக இன்னும் அதிக பிரகாசமாக ஆக்குங்க்ள். அது உங்கள் அங்கமெல்லாம் பரவட்டும். அதை நீங்கள் நன்கு உணர்கிறீர்கள். அதுவே அன்பின் ஒளியாக ஆகட்டும். அது உங்கள், நாக்கு, கண்கள், காதுகள் உள்ளிட்ட இடங்களை அடையட்டும். அனைத்து உலகையும் அந்த ஒளி அன்பால் அணைக்கட்டும்.
இதை தினந்தோறும் விடாமல் செய்யுங்கள். நீங்கள் தெய்வீகமாக, சுத்தமானவராக, அமைதி உள்ளவராக ஆகி விடுவீர்கள்.”
ஏற்றம் பெற திருவிளக்கு ஏற்ற வேண்டும்
ஆக திருவிளக்கு ஏற்றுதலும் அதன் வழிபாடும் உலக வாழ்வில் சகல நலன்களையும் அருள்வதோடு அதற்கப்பாலும் உள்ள முக்தியை அடையவும் வழி வகுக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
திரு விளக்கு தினமும் ஏற்றுவோம்; செல்வச் சிகரத்தில் ஏறுவோம் ; தெய்வீக உணர்வை அடைந்து உயர்வோம்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. (6 எழுத்துக்கள்) – கம்பனின் மகன்
5.(4) – கல்யாணத்தில் கிடைக்கும்
6.(4) – ஒரு எடை ; இப்போ து உபயோகத்தில் இல்லை ;13 பலம்
7. (3)- அவ்வையார் இயற்றியது ;வாக்குண்டாம் என்ற பெயரும் உண்டு
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பசிபிக் மஹா சமுத்திரத்திலுள்ள ஈஸ்டர் தீவுகள் இன்றும் மர்மத் தீவாகவே இருக்கிறது .
சிந்து- சரஸ்வதி தீர நாகரீக எழுத்துக்கள் பற்றி அவ்வப்போது புதுக்கதைகள் வருவது போல இந்தத் தீவு பற்றியும் பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் . ஆ னால் முடிவாக ஏற்கும் கொள்கை எதுவும் இல்லை.
இதோ நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரை –
Xxx
South Africa- old and out of date item
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி
Tags- ஈஸ்டர் தீவுகள், மர்ம சிலைகள், தென் ஆப்பிரிக்கா, பிரித்தாளும் சூழ்ச்சி.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
புதிர்கள் : இப்பகுதியில் கட்டுரை எண்கள் 6575 -வெளியான தேதி 20-6-19 மற்றும் 6609 வெளியான தேதி 28-6-19; 6680 – வெளியான தேதி 26-7-19; 6755 – வெளியான தேதி 10-8-19:
7208 – வெளியான தேதி 13-11-19 7233 வெளியான தேதி 19-11-19 ஆகியவற்றைத் தொடர்ந்து ஏழாம் பகுதி இதோ:-
லட்சம் புதிர்கள், விடுகதைகள், மாயாஜால மாஜிக்குகள், புதிர்க் கணக்குகள்! – 7 (71 முதல் 80 முடிய)
ச.நாகராஜன்
A team has nine players. How many possible bating orders there?
The red corpuscles in the human body are said to have a thickness of .00008 inch. Approximately how high would all the corpuscles in an average adult’s body be if they could be piled on top of one another without compression?
Do you know the surface area of the globe, counting all continents and oceans?
What is the distance between earth and the sun?
A bottle and its cork together cost Rs 1.10 and the bottle costs Rs 1 more than its cork. What is the price of the bottle.
What is a Cipher?
A frog stars climbing a 30 ft wall. Each hour he climbs 3 ft and slips back 2. How many days it take him to reach the top and get out?
Carpenter’s Jig-Saw : Gopal had four pieces of 8 inches board, respectively 5,6,7 and 9 ft long. From this timber he wanted to construct a rectangular board, strengthened by three battens making the fewest possible cuts. He found he could do it without wasting any wood. How many saw -cuts did he make and what were the length and breadth of the finished board?
A clock strikes six in five seconds. How long does it take to strike twelve?
If five spiders can catch five fiies in five minutes, how many spiders are required to catch a hundred flies in a hundred minutes?
Answers
91 or 362880
About 110,000,000 feet
About 500 million Square kilometres
About 150,000,000 kilometres
No, the answer is not Rs 1/. If the cost of the bottle were Re 1/ and that of the cork 10 Paise then the bottle would cost only 90 Paise more than the cork. Considering it more carefully we come out with the correct answer : 105 Paise.
‘Cipher’ means Zero. The word ‘Cipher’ comes from the Arabic Sifr. Our word ‘Zero’ is derived from the word.
The answer is not 30 hours. At the end of 27 hours he is 3 ft from the top. And during the 28th hour he climbs the remaining 3 ft and he is out. So the answer is 28 hours.
Three Saw-cuts 7 x 2 ft
Eleven Seconds
Five Spiders
Thanks to Mrs Shakuntala Devi for putting for the puzzles 1 to 7.
tags- riddles and puzzles – part 7, shakuntala devi, லட்சம் புதிர்கள்-7
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இது பாபிலோனிய இலக்கியத்தின் சுருக்கமான ஒரு அறிக்கை .
–subham–
Tags- மெசபொடேமியா , இலக்கியம், துதிப்பாடல் , பெண் புலவர்