அசோக சக்ரவர்த்தி 50% பிராமணன்! (Post No.6069)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 13 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 18-03


Post No. 6069

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

போலி சந்யாசிகளின் முகத்திரையைக் கிழித்த அசோகன் (Post No.6061)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 11 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 8-48 am


Post No. 6061

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 21 JUNE 2018

 

Time uploaded in London –  14-01  (British Summer Time)

 

Post No. 5135

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மாமன்னன் அசோகன் அமைத்த மருந்துத் தொட்டிகள்! (Post No.5135)

 

சம்ஸ்க்ருதத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரக ஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை போன்ற ஆயுர்வேத நூல்களை நாம் அறிவோம். ஆனால் பாலி மொழியில் உள்ள பௌத்த மத நூல்களில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளை உலகம் அறியாது. புத்தரோ பௌத்தர்களோ மருத்துவ நூல்களை எழுதவில்லை ஆயினும் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய மருத்துவக் குறிப்புகள் அந்த நூல் ல்களிலும் உண்டு.

சில சுவையான செய்திகளை மட்டும் தருவேன்

ஒரு முறை புத்தர் நோய்வாய்ப்பட்டார். உடனே தேவஹித என்ற பிராஹ்மணனிடம் சென்று சுடு நீர் வாங்கி வரும்படி உபவன என்ற சிஷ்யரை அனுப்பி வைத்தார். உடனே அந்தப் ப்ராஹ்மணன் , புத்தரிடம் வந்து அவரை வெந்நீரில் குளிக்கச் சொன்னார். புத்தர் குளித்தவுடன் அவருக்கு வெல்லப்பாகு கலந்த சுடு நீரை சாப்பிட அருளினார். அதைக் குடித்தவுடனே  வாத, பித்த, கப தோஷ வியாதி போயிற்று.

முதலில் மனிதர்களுக்கு ஆசை மூப்பு, பசி என்ற மூன்று நோய்கள் மட்டும் இருந்தன. பின்னர் இது காலப்போக்கில் 96 நோய்களாகப் பல்கிப் பெருகின என்று சுத்தனிபாத என்ற நூல் செப்பும். சிலர் 98 என்றும் பகர்வர்.

புத்தர் காலத்தில் மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னன் பிம்பிசாரன். அவனிடம் புகழ்பெற்ற மருத்துவர் ஜீவகன் இருந்தார். அவர் தக்ஷசீல பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வாங்கினார். அப்போது மகத சாம்ராஜ்யத்தை ஆட்டிப்படைத்த நோய்கள் குஷ்ட ரோகம், க்ஷய ரோகம் (டி.பி.) , இழுப்பு, ஜூரம் முதலியன ஆகும்

 

கொப்புளங்கள் வந்தால் அதன் மீது கடுகுத் தூளைத் தூவி கட்டுப் போட்டனர்.

தலைவலி தீர பலவித மூலிகை எண்ணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் மூக்கு வழியாக குழாய் மூலம் மருந்து கொடுத்தனர். இரட்டைக் குழாய் வழியாக நாசியின் இரு த்வாரங்கள் வழியே மருந்து தந்தனர். குழாய் வழியாக மருந்துப் புகையும் செலுத்தினர்.

 

மஞ்சள் காமாலை நோய்க்கு பசுமாட்டின் மூத்திரம் கலந்த கஷாயம் தந்தனர்.

மூட்டுவலி முதலிய நோய்களுக்கு ஆவிச் சிகிச்சை தரப்பட்டது. ஆறு அடி குழி ஒன்றில் கரியை நிரப்பினர். அதன்மீது மணலைப் பர்ப்பி அதன் மீது மண்ணாலும் களி மண்ணாலும் பூசினர் அதன் மீது மூலிகைகள் போடப்பட்டன. அதிலிருந்து வரும் புகையில் கை, கால் முதலிய உறுப்பைக் காட்ட வைத்தனர். உடலின் எல்லா உறுப்புகளையும் காட்டி புகை பிடிக்க வைத்தனர்.

அசோகர் காலத்தில் ஒரு புத்த பிக்ஷுவுக்கு நோய் வந்தது. மருந்து கிடைக்காமல் அவர் இறக்க நேரிட்டது. உடனே பாடலிபுத்திர நகரத்தின் நான்கு வாயில்களிலும் நான்கு பெரிய தொட்டிகள் முழுக்க மருந்துகளை நிரப்பி அனைவருக்கும் மருந்து கிடைக்க அசோகர் வசதி செய்தார். புத்தகோசரின் சமந்தபாஸாதிக என்ற புஸ்தகம் இத்தகவலைத் தருகிறது. அவரது கல்வெட்டு ஒன்று மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தனித்தனியே ஆஸ்பத்திரிகள் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன

–SUBHAM–

மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433)

Written by London swaminathan

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 10-45 am

 

Post No.3433

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

(Posted in English as well)

நம் ஒவ்வொருவரிடையேயும் மகத்தான சக்தி இருக்கிறது. அதைத் தேவை ஏற்படும் போது பிரயோகித்து அதிசயம் நிகழ்த்தலாம். இதோ பேராசிரியர் உஷர்புத் சொன்ன கதை. அவர் முதலில் அமெரிக்காவில் மின்னசோட்டா பலகலைக் கழக சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக இருந்து பின்ன வேதபாரதி என்ர பெயரில் சாமியார் ஆனார்.

 

மாமன்னன் அசோகன் அவன் தலைநகரான பாடலிபுத்ரம் (பாட்னா) அருகில் கங்கை நதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அமைச்சர்கள், பரிவாரம் புடைசூழ நின்றிருந்தான் அசோகன். திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். யாராவது இந்த கங்கை நதியைப் பின்னோக்கி ஓடச் செய்ய முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் திகைத்து நின்றனர்.

 

மாமன்னன் ஆயிற்றே! ஆகவே ஒரு மந்திரி பயந்துகொண்டே சொன்னார்:

“மன்னர் மன்னவா! உலகில் எவ்வளவோ காரியங்களை நடத்த முடியாது என்று நினைப்பர்; ஆனால் உங்களைப் போன்ற மாவீரர்கள் நடத்திக் காட்டிவிடுவீர்கள்; ஆயினும் ஒரு நதி பின்னோக்கிச் சென்றதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. என் பதிலில் குறையிருந்தால் மன்னிக்கவும்” – என்று சொல்லி முடித்தார்.

 

அந்தப் பக்கமாக நடந்து சென்ற ஒரு விலை மாது இதைக் கேட்டுக்கொண்டே இருந்துவிட்டு அருகில் வந்தாள். “நான் செய்வது இழி தொழில் ஆகையால் இங்கு பேசலாமா என்று தெரியாது. மன்னர் அனுமதித்தால் நான் பேசுகிறேன்”.

 

மாமன்னன் அசோகன் “அதற்கென்ன? பெண்ணே, பேசு” என்றான்.

அந்தப் பெண் சொன்னாள். “இதோ பாருங்கள். இப்பொழுது நதியைப் பின்னோக்கி ஓடச் செய்கிறேன். அது தோன்றிய மலையை நோக்கி ஓட வைக்கிறேன்” என்றாள்.

 

எல்லா அமைச்சர்களும் வியப்புடன், “செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். அவள் சொன்னவுடன் நதி மேல் நோக்கி மலையை நோக்கி ஓடத்துவங்கியது. இதனால் வரக்கூடிய இயற்கை விபத்துகளை உணர்ந்த அசோகன் “போதும் போதும் நிறுத்திவிடு; முன்னோக்கியே ஓடச் செய்துவிடு” – என்றான் அவளும் அப்படியே செய்தாள்.

 

மன்னன் கேட்பதற்கு முன்னால் அனைத்து அமைச்சர்களும், “அம்மணி! எப்படி இந்த அதிசயத்தைச் செய்தீர்கள்? என்று வினவினர்.

அவள் சொன்னாள்,

 

“வாழ்நாள் முழுதும் ஒருவர் ஏதேனும் ஒரு உறுதிமொழி அல்லது விரதத்தைக் கடைப் பிடித்து அதை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தால் மகத்தான சக்தி வரும். அந்த சக்தியை ஒரே ஒரு முறை மட்டும் இப்படி செலவிடலாம்

“நான் சொல்லுவது உண்மையானால்”, “நான் செய்தது உண்மையானால்” என்று சொல்லிவிட்டு இப்படிக் கட்டளையிடால அது நிறைவேறும் என்றாள்.

 

அம்மணி நீங்கள் என்ன உண்மையை , உறுதி மொழியை ரகசியமாகக் கடைப்பிடித்தீர்கள்? என்று கேட்டார்கள்.

நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விலை மாதர் தொழிலில் இறங்கினேன். அப்பொழுது இந்தத் தொழிலிலும் ஏதேனும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியுமா என்று வியந்தேன். அன்று என் மனதில் தோன்றியது. “மாமன்னன் வந்தாலும் சரி குஷ்ட ரோகி வந்தாலும் சரி; அவர்களுக்கு மனத்தளவிலும் உடல் அளவிலும் சமமான இன்பம் கொடுப்பேன்” என்ற திட விரதம் பூண்டேன். அந்த விரதத்தை இன்றுதான் முதல் தடவையாக உங்களிடம் சொல்லுகிறேன். ஒரு விரதத்தை ஏற்று அதை வாழ்நாள் முழுதும் கடைப் பிடித்தால் அப்பொழுது மகத்தான சக்தி சேரும். அதை ஒரே ஒரு முறை பயன்படுத்தலாம்! என்று சொல்லிவிட்டு அவள் வந்த வழியே திரும்பிச் சென்றாள்.

 

என் கருத்துகள்:-

 

இதுபோல மனத்தின் மகத்தான சக்தியைக் காட்டும் சில கதைகள் நினைவுக்கு வருகின்றன. இவைகளை முன்னரே எழுதிவிட்டதால் தலைப்பை மட்டும் தருகிறேன்:-

1.நோயுற்ற ஹுமாயுனைக் காப்பாற்ற, அவனது தந்தை (Babar) மூன்றுமுறை வலம் வந்து “அல்லாவே! என் உயிரை எடுத்துக் கொண்டு என் மகனைக் காப்பாற்று” என்ற சம்பவம்

2.துரியோதணனைக் காப்பாற்ற “நிர்வாணமாக நில்; என் பார்வை படுமிடம் எல்லாம் பலம் பெறுவாய்; உன்னை யாரும் கொல்லமுடியாது” என்று சொல்லியும் அவன் தனது மர்ம ஸ்தானங்களை மறைத்த சம்பவம்

 

3.திரிசங்கு மன்னனை விஸ்வாமித்திரன் சொர்க்கத்துக்கு அனுப்பிய சம்பவம் — இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

 

–Subham–

 

 

 

இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்?

river map_srilanka

Ganges is everywhere in Sri Lanka!

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1295; தேதி: 18 செப்டம்பர் 2014
This is already published in English.

மஹாவம்சத்தில் உள்ள பல வரலாற்று உண்மைகளையும் அதிசயங்களையும் 1995 முதல் ஆராய்ச்சி செய்துவந்தேன். சில நாட்களுக்கு முன் இந்தத் தொடரைத் துவங்கினேன். மஹாவம்ச ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பில் இது 6-ஆவது கட்டுரை.

சில மாதங்களுக்கு முன் சேரன் செங்குட்டுவனுக்கு காடு வாழ் குறவர், குறத்தியர் சமர்ப்பித்த பரிசுப் பொருட்களின் பட்டியலை சிலப்பதிகாரத்தில் இருந்து எழுதினேன். மறைந்து கிடக்கும் சில அரிய விஷயங்களை வெளிக் கொணர்வதற்காக பலரும் பாராட்டி எழுதினர். இதோ அசோகனின் ஆருயிர்த் தோழனும், இலங்கையின் புகழ்மிகு மாமன்னனுமான தேவனாம் பிரிய திஸ்ஸன் அனுப்பிய சில பரிசுப் பொருட்கள்:-

(( ஆதாரம் : மஹாவம்சம் அத்தியாயம் 11 ))

kaluganga

Gift list from Devanampriya
மூன்று அரிய ரத்தினங்கள்
அதிசய (ரத்தின) மூங்கில் தண்டுகள்
வலம்புரிச் சங்கு
எட்டுவித முத்துகள்

எட்டுவித முத்துக்கள் என்ன என்பதை மஹாவம்ச அற்புதச் செய்திகள் என்ற கட்டுரையில் சில நாட்களுக்கு முன் எழுதி விட்டேன். 99 சகோதர்களைக் கொலை செய்ததற்காக “சண்டாள அசோகன்” என்று அழைக்கப்பட்ட அசோகன் புத்த தர்மத்தைத் தழுவி நல்லவன் ஆனபின் “தர்ம அசோகன்” என்று அழைக்கப்பட்டதாக மஹாவம்சம் இயம்பும்.

தேவானாம் ப்ரியன் (தெய்வங்களுக்குப் பிரியமானவன்) என்ற அடை மொழியை இலங்கை, இந்திய மன்னர் இருவரும் வைத்துக்கொண்டனர். இந்தியாவில் அசோகன் கல்வெட்டுகளில் பெரும்பாலும் தேவானாம் ப்ரியன் என்ற பட்டப் பெயரே இருக்கிறது.

இலங்கையில் இருந்து வந்த அரிய ரத்தினங்களையும் ரத்தின மூங்கில் தண்டுகளையும் பார்த்த அசோகன் அசந்தே போய்விட்டான். இப்படிப்பட்ட அரிய பொருட்களை நான் கண்டதே இல்லையே என்று விமர்சிக்கிறான். உடனே இலங்கையின் மாமன்னனாக முடிசூட்டப் போகும் தேவானாம்ப்ரிய திஸ்ஸனுக்குப் பட்டாபிஷேகத்துக்குத் தேவையான பொருட் பட்டியலை அறிஞர் பெருமக்கள் ஆலோசனையுடன் தயாரிக்கிறான். அதில் முக்கியமான இரண்டு பொருட்கள்: கங்கை நீர், வலம்புரிச் சங்கு!! புத்த மதத்தினர் இந்துக்காளாகவே வாழ்ந்தனர்.

(வலம்புரிச் சங்கு பற்றி முன்னரே நான் ஒரு ஆய்வுகட்டுரை எழுதியுள்ளேன். அதில் சங்கின் மகிமையைக் கண்டுகொள்க)

askokar, by thiru arul grand father, fb

இதோ அசோகன் அனுப்பிய பொருட்களின் பட்டியல்:

Gift list from Asoka
வெண் சாமரம், மகுடம், வாள் வெண்கொற்றக் குடை, பாதுகைகள், தலைப்பாகை, காதணிகள், கமண்டலம், ஆரங்கள், மஞ்சள் சந்தனக்கட்டைகள், சுத்தமே செய்யத் தேவை இல்லாத ஆடைகள், விலை உயர்ந்த அங்கி, நாகர் கொணர்ந்த தைலம், செம்மண், அனோதத் தடாக நீர், கங்கை நீர், வலம்புரிச் சங்கு, பொற்கலசங்கள், விலை உயர்ந்த மெத்தை.

இவை அனைத்தும் பட்டாபிஷேகத்துக்குத் தேவையானவை

பருவம் கொழிக்கும் எழில் மங்கை
உயர்ந்த மூலிகைகள்
6000 வண்டி நிறைய பறவைகள் கொணர்ந்த மலை அரிசி

இலங்கையில் கங்கை நதி

இந்தியர்கள் உலகம் முழுவதும் நாகரீகத்தை எடுத்துச் சென்றனர். இதனால் உலகம் முழுதும் எல்லா நதிகளின் பெயரும் தண் (ணீர்) என்ற தமிழ் சொல்லிலோ அல்லது கங்கை என்ற பெயரிலோ இருக்கும். தண்ணீருக்கு மட்டுமே சம்ஸ்கிருதத்தில் 280 சொற்கள் உண்டு. அதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

இலங்கையில் எல்லா நதிகளையும் கங்கை என்றே அழைப்பர். “நதி” என்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல்லே “கங்கை”!! உலகம் முழுதும் கங்கை உண்டு என்பதை முந்தைய ஆய்வுக்கட்டுரையில் தந்துள்ளேன். மீகாங் என்ற தென் கிழக்கு ஆசிய நாட்டு நதி “மா கங்கா” என்றும் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுக்குள் ஓடும் “காங்கோ” என்பது கங்கையின் மரூஉ என்றும் எகிப்தின் நைல் நதி நீல நிறத்தில் இருப்பதால் நைல் என்றும் லண்டனில் ஓடும் தேம்ஸ் நதி, வால்மீகி வாழ்ந்த தமஸா நதி போல மந்தமாகப் (தாமஸமாக) பாய்வதால் தேம்ஸ் என்று அழைக்கப்டுவதாக கின்னஸ் நூல் கூறி இருப்பதையும் விளக்கி இருக்கிறேன். ஐரோப்பாவில் டான்யூப் முதலிய நதிகள் “தண்”ணீர் என்ற வேச் சொல்லில் இருந்து பிறந்தவை என்பது அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள எல்லா மொழிகளையும் தமிழ், சம்ஸ்கிருதம் என்ற இரண்டு மொழிகளில் அடக்கிவிடலாம் இரண்டும் பாரத மண்ணில் பிறந்தவை. இவ்விரு மொழிகளையும் சிவபெருமான் அளித்ததாக திருவிளையாடல் புராணம் பகரும். தென்கிழக்காசியா முழுதும் எல்லா மொழி எழுத்துக்களும் அசோகன் பயன் படுத்திய பிராமி லிபியில் இருந்து வந்தவையே. ஆனால் இவை எல்லாம் தமிழ்நாடு வழியாக பல்லவ கிரந்தம் என்னும் எழுத்தில் இருந்து சென்றவை. இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் எழுத்துக்களும் பிராமி லிபியில் இருந்து வந்தவையே. பிராமி என்பது சரஸ்வதி தேவியின் பெயர். சிங்களம் முதல் பாஷா இந்தோநேஷியன் வரை எல்லாம் நாம் உலகிற்கு வழங்கிய கொடையே!

jai_silver_wterpot
Jaipur Maharaja took Ganges water in six huge silver pots to England by ship

இங்கிலாந்துக்கு கப்பலில் கங்கை நீர்
கங்கை நீர் — நாகரீகம் தோன்றிய நாள் முதல் பிரசித்தமானது. இன்றும் லண்டனில் நாங்கள் பூஜையில் உபயோகிக்கிறோம். மதுரை மீனாட்சி கோவிலுக்கு ‘டன்’ கணக்கில் லாரிகளில் வருவதாக ம.க.சுந்தரேச பட்டர் என்னிடம் சொல்லுவார். ஜெய்ப்பூர் மகாராஜா கப்பலில் இங்கிலாந்துக்குச் சென்றபோது ஆறு பிரமாண்டமான வெள்ளிப் பானைகளில் கங்கை ஜலம் கொண்டு சென்றார். இன்றும் பூஜைகளில் எந்த நீரை வைத்தாலும் அதில் கங்கையை ஆவாஹனம் செய்யும் வழக்கம் உண்டு. தீபாவளிக்கு எங்கு குளித்தாலும் கங்கையில் குளித்த புனிதம் உண்டு என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து “கங்கா ஸ்நானம் ஆயிற்றா?” என்பர். “அல்வா சாப்பிட்டாயா? லட்டு சாப்பிட்டாயா? பட்டாசு வெடித்தாயா?” என்பதெல்லாம் பின்னர் வரும் கேள்விகளே!

ganga jal
Ganges water seller in Rishikesh

கங்கா மதா கீ ஜெய்!!

கட்டுரைக்கு உதவிய நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ் பிரவேட் லிமிட்டெட், சென்னை-17, இரண்டாம் பதிப்பு 1986, விலை ரூ 25.

மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

killing 3

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1285; தேதி: 13 செப்டம்பர் 2014
மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது மூன்றாவது கட்டுரை

மாமன்னன் அசோகன் பற்றி மூன்று அதிசய விஷயங்கள், இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூலான மஹாவம்சத்தில் உள்ளன.

1)“தர்ம: அசோகன் அவனுடைய 99 சகோதரர்களைக் கொன்று பதவிக்கு வந்தான். அவனுக்கு முந்தைய ஆறு பேர் ஒவ்வொருவரும் அவரவர் அப்பாவைக் கொன்றுதான் பதவிக்கு வந்தனர்.

2) தர்ம அசோகனுக்கு முன்னர் கறுப்பு அசோகன் என்பவன் ஒருவன் ஆண்டான். ((வெள்ளைக்காரகள் எழுதிய இந்திய வரலாற்றில் இவனைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்)).

3) அசோகனின் மனமாற்றத்துக்கு காரணமான “கலிங்கப் போர்” பற்றி மஹாவம்சத்தில் எதுவுமே சொல்லவில்லை!!
150 ஆண்டுகளுக்கு உன் வெள்ளைக்காரர்கள் எழுதிய வரலாற்றைதான் இன்னும் நம்மவர்கள் படித்துவருகிறார்கள். அவர்கள் இந்துமத புராண அரசர் பட்டியலை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு புத்தமத செய்திகள மட்டும் எடுத்துகொண்டனர். புத்த மதம் இந்து மதத்தின் எதிரி என்று எண்ணி ஏமாந்து அதற்கு மட்டும் ஆதரவு கொடுத்தனர். சமண மதம் பல நாடுகளுக்குப் பரவாததால் அந்த மதத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.

இந்துமத புராண அரசர் பட்டியலை ஏற்றால் மனித குலம் கி.மு.4004ல் தோன்றியது என்ற பைபிள் பிரசாரகர்களின் கூற்று எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விடும் அது மட்டும் அல்ல. கலீலியோ, கோபர்நிகஸ் போல உயிரையோ கண்களையோ இழக்க நேரிடும். இதற்கெல்லாம் பயந்த ஆங்கில, ஜெர்மானிய அறிஞர்கள் (?? !!) இந்து புராண அரசர் வரிசையை அப்படியே குப்பையில் வீசிவிட்டனர். இதனால் கறுப்பு அசோகன் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை.

புராணங்களில் முன்னுக்குப் பின்முரணான அரசர் பட்டியல் இருப்பது உண்மையே. ஆனால் சமண, பௌத்த, கிறிஸ்தவ நூல்கள் எல்லாவற்றிலும் முரணான விஷயங்கள் உண்டு. நூற்றுக்கணக்கன பைபிள்கள் முரண்பட்டு நிற்கவே அத்தனையையும் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான் டி நோபிளில் தீக்கிரையாக்கிவிட்டு ஒரே பைபிள் வைத்துக் கொண்டனர். அதிலும் முரண்பாடு உண்டு, யூதமத கதைகளுக்கும் கிறிஸ்தவ மதக் கதைகளுக்கும் இடையேயும் ஒரே விஷயம் பற்றி முரண்பாடு உண்டு என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர்.

மஹாவம்ச படுகொலைப் பட்டியலைக் கொடுப்பதற்குக் காரணம் இது பற்றி இந்தியர்கள் ஆராய்ந்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும் என்பதே—அதாவது இந்தியா பற்றி இதில் கூறப்பட்ட விஷயங்களின் உண்மையைக் கண்டறிதல் நம் கடமை. வெள்ளைக்காரன் எழுதியவற்றை இன்றும் அப்படியே பாடப்புத்தகத்தில் வைத்திருப்பது மடமை!!!

படுகொலைப் பட்டியல்:—

1)அத்தியாயம் 4:
பிம்பிசாரன் மகன் அஜாத சத்ரு அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அஜாத சத்ருவின் மகனான உதயபட்டகன் அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
உதயபட்டகன் மகனான அநிருத்தன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்
அநிருத்தன் மகனான முண்டா, அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.
முண்டாவின் மகனான நாகதாசகன், அவன் தந்தையைக் கொன்று அரசு கட்டில் ஏறினான்.

மக்களுக்கு ஒரே கோபம், “இதென்னடா அப்பனைக் கொல்லும் வம்சமாக இருக்கிறதே!” — என்று ஆத்திரம் கொண்டு நாகதாசகனை நாடு கடத்தி விட்டு மந்திரி சிசுபாலனை அரசன் ஆக்கினர்.
அவனுடைய மகன் காலாசோகன் (கறுப்பு அசோகன்) 28 ஆண்டுக்காலம் ஆட்சிபுரிந்தான். அவன் தான் புத்த மதத்தின் இரண்டாவது மாநாட்டை நடத்தினான்.

அப்போது புத்தர் சமாதி அடைந்து (பரி நிர்வாணம் எய்தி) நூறு ஆண்டுகள் ஆயிற்று. ஆளாளுக்கு “புத்தர் சொன்னது இது — புத்தர் சொன்னது அது” என்று பிரசாரம் செய்யத் துவங்கினர் (அதாவது புத்த மதத்துக்குள் பிளவுகள் தோன்றத் துவங்கின).

killing 2

2) அத்தியாயம் 5:
பிந்துசாரன் மகனான் ‘’தர்ம’’ அசோகன், அவனது சகோதர்கள் 99 பேரையும் கொன்றுவிட்டு ஜம்பூத்வீபம் முழுதையும் அரசாளத் துவங்கினான். இவர்கள் மாற்றாந் தாய்களுக்குப் பிறந்தவர்கள்.
(( புத்த மதத்தைத் தழுவுவதற்குக் காரணமான அவனது கலிங்கப் போர் பற்றி மகாவம்சம் எதையும் சொல்லவில்லை!! ))

3) அத்தியாயம் 7:
விஜயனின் முதல் மனைவி குவன்னா ஒரு யக்ஷிணி வம்சப் பெண். மதுரையில் இருந்து பாண்டிய நாட்டுத் தமிழ் பெண் வந்துவிட்டதால் அவரை ராணியாக்கப் போகிறேன், தயவுசெய்து நீ உன் இரண்டு மகன்களுடன் ஓடிப்போய்விடு என்று கெஞ்சுகிறான். அவள் முதலில் தயங்கிவிட்டு வெளியே போனவுடன் யக்ஷர்களில் ஒருவன் ஒரே குத்தில் அவளைக் கொலை செய்கிறான். இரண்டு பிள்ளைகளும் வெளியே நின்றதால் தப்பித்துவிடுகின்றனர்.

4) அத்தியாயம் 9:
இளவரசர்கள், காலவேலன் என்ற அடிமையையும், சித்தன் என்ற இடையனையும் கொலை செய்கின்றனர்.

5) அத்தியாயம் 10:
இளவரசர்கள் எட்டு மாமன்மார்களையும் எதிரிப் படைகளையும் கொன்று குவித்து எலும்புக்கூடு மலையை உருவாக்குகின்றனர்.

killing 1

தமிழர் படுகொலைகள்

6)அத்தியாயம் 33:
தளபதி கம்மஹாரதகன், மன்னன் கல்லாட நாகனை தலைநகரிலேயே வெற்றிகொண்டான். அந்த துரோகியை அரசனுடைய தம்பியான காமனி கொன்றான்.
பாஹியா என்ற தமிழன் புலஹதா என்ற தமிழனைக் கொன்று 2 வருடம் ஆண்டான்.
படைத்தலைவன் பணயமாறன், பாஹியாவைக் கொன்று 7 வருடம் ஆண்டான்.
பணயமாறனை பிழையாமாறன் கொன்று 7 மாதம் ஆண்டான்.
தாதிகன் என்ற தமிழன் பிழையாமாறனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
இந்த ஐந்து தமிழர்களும் ஆண்ட காலம் 14 வருடம், 7 மாதங்கள்.

தனசிவன் என்பவனை அரசன், வில் எய்து கொன்றான்
கபதீசன் என்ற மந்திரி மரியாதையாக நடந்துகொள்ளாததால் அவனை அரசன் கொன்றான்

7) அத்தியாயம் 34:

ராணி அனுலா , வடுகன் என்ற தமிழ்த் தச்சனைத் திருமணம் செய்துகொள்கிறாள். விறகுவெட்டி மீது காதல் கொண்டு வடுகனை விஷம்வைத்துக் கொலை செய்கிறாள்.
அடுத்ததாக நிலீயன் என்ற பிராமணன் மீது காதல் கொண்டு விறகுவெட்டி திஸ்ஸனைத் தீர்த்துக் கட்டினாள்.
பின்னர் நிலீயனையும் விஷம் வைத்துக் கொண்ருவிட்டு தானே 4 மாதங்களுக்கு நாட்டை ஆள்கிறாள்.
அந்தக் காமாந்தகி அனுலாவை குடகன்ன திஸ்ஸா என்பவன் போரில் கொல்கிறான்.

8) அத்தியாயம் 35:
இலங்கைத்தீவு முழுதும் உயிர்க்கொலை கூடாது என்று அரசன் உத்தரவிட்டான். அவனை அவன் சகோதரன் கனிராஜனு திஸ்ஸ கொன்றுவிட்டு 3 வருடங்கள் ஆண்டான்!!
தீசவாபியில் நடந்த விழாவின்போது சந்தமுகசிவனைக் கொன்றுவிட்டு அவன் தம்பி யசாலக தீசன் 8 வருடங்கள் ஆண்டான்.
சுபா என்பவன் அரசன் போல நடிப்பது வழக்கம். அதை அரசனும் ரசித்து மகிழ்வான் அவன் ஒருநாள் அரசன் தலையைச் சீவுமாறு உத்தரவிட்டு தானே அரசாளத் துவங்கினான். விளையாட்டு வினை ஆயிற்று!!

வசபன் என்ற பெயர்கொண்டவன் அடுத்ததாக அரசாளுவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயருள்ள எல்லா இளைஞர்களையும் கொல்ல அரசன் உத்தரவிட்டான். அப்படியும் வசபன் என்பவன் அரசன் ஆகிவிடுகிறான்.

9) அத்தியாயம் 36:
குஜநாகன் தம்பி, குஞ்சநாகன் என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு 2 வருடங்கள் ஆண்டான்.
அபயன் என்பவன் மலயத்தில் அரசனைக் கொன்று 8 வருடங்கள் ஆண்டான்.
மூன்று லம்பகர்ணர்களில் ஒருவனான சங்கதீசன் விஜயகுமாரன் என்ற அரசனிடம் சேவகம் புரிந்து பின்னர் அவனைக் கொலை செய்கிறான். அவன் 4 வருடங்கள் ஆண்டான்.
அவனை மக்கள் விஷம் வைத்த நாவல் பழம் மூலம் கொலை செய்கின்றனர்.

ஜேததீசன் என்ற மன்னன் துரோகம் செய்த மந்திரிகளைத் தந்திரமாகக் கொல்கிறான். தந்தையின் சவ ஊர்வலத்தில் எல்லோரையும் வரவழைத்து சவம் அண்மனை வாசலைத் தாண்டியவுடன் கதவை மூடி அனைத்து அமைச்சர்களையும் தீர்த்துக்கட்டுகிறான். அவர்களின் உடல்களை கம்பத்தில் நட்டு வைக்கிறான்.

THAILAND-SOUTH-UNREST

10) அத்தியாயம் 37:
மகாவம்சம் படுகொலைகளுடன் துவங்கி படுகொலைகளுடன் முடிகிறது. மஹாவிகாரத்தை இடித்ததால் கோபம் கொண்ட ராணி ( மஹாசேனன் மனைவி ) தேரர் சங்கமித்ராவையும், அமைச்சர் சோனாவையும் ஒரு தொழிலாளி மூலம் படுகொலை செய்கிறாள்.

போரில் கொல்லப்படவர்களை நான் கணக்கில் சேர்க்கவில்லை. ஏனெனில் ஆதிகாலம் முதல் போரில் கொல்வது அநியாயம் அல்ல, படுகொலை அல்ல என்று உலகம் ஒப்புக்கொள்கிறது. இன்றுவரை நீடிக்கும் சர்வதேச விதிமுறைகளும் நடைமுறைகளும் இதை ஏற்கின்றன.

அன்பென்று கொட்டு முரசே—மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் – பாரதியார்

–சுபம்–
Pictures are taken from different websites; not related to stories here;thanks.