ஆதி சங்கரரின் அற்புத ஸ்துதிகள், நூல்கள்! (Post No.7531)

Written by S Nagarajan               

Post No.7531

Date uploaded in London – – 4 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ச.நாகராஜன்

காலடியில் அவதரித்து 32 ஆண்டுகளே பாரதத்தில் உலவிய பெரும் அவதார புருஷரான ஆதி சங்கரர் இயற்றிய நூல்கள் கணக்கற்றவை.

அவற்றில் உள்ள உபதேச அருளுரைகளும், உண்மைகளும் இரகசிய விளக்கங்களும் எண்ணற்றவை.

அவரது நூல் பட்டியல் இதோ:

  Bhashya Granthas:   1. Brahma Sutras 2. Isavasya Upanishad 3. Kena Upanishad 4. Katha Upanishad 5. Prasna Upanishad 6. Mundaka Upanishad 7. Mandukya Upanishad 8. Mandukya Karida 9. Aitareya Upanishad 10. Taittireeya Upanishad 11. Chhandogya Upanishad 12. Brihad Aranyaka Upanishad 13. Sree Nrisimha Taapaneeya Upanishad 14. Sreemad Bhagawad Geeta 15. Sree Vishnu Sahasranama 16. Sanat Sujateeyam 17. Lalita Tri-satee 18. Hastaamalakeeyam Compiled by S Nagarajan, tamilandvedas.com, swamiindology.blogspot.com     Prakarana Granthas: 19. Viveka Chudamani 20. Aparokshanubhooti 21. Upadesa Sahasri 22. Vaakya Vritti 23. Swaatma Niroopanam 24. Atma-bodha 25. Sarva Vedanta Sara Samgraha 26. Prabodha Sudhakaram 27. Swaatma Prakasika 28. Advaita anubhooti 29. Brahma anuchintanam 30. Prashnouttara Ratnamaalika 31. Sadachara anusandhanam 32. Yaga Taravali 33. Anatmasree Vigarhanam 34. Swaroopa anusandhanam 35. Pancheekaranam 36. Tattwa bodha 37. Prouda anubhooti 38. Brahma Jnanavali 39. Laghu Vakyavritti 40. Bhaja Govindam 41. Prapancha Saaram   Hymns and Meditation Verses: 42. Sri Ganesa Pancharatnam 43. Ganesa Bhujangam 44. Subrahmanya Bhujangam 45. Siva Bhujangam 46. Devi Bhujangam 47. Bhavani Bhujangam 48. Sree Rama Bhujangam 49. Vishnu Bhujangam 50. Sarada Bhujangam 51. Sivananda Lahari 52. Soundarya Lahari 53. Ananda Lahari 54. Sivapaadaadi kesaanta varnana 55. Siva kesaadi padaanta varnana 56. Sree Vishnu-paadaadi-kesanta 57. Uma maheswara Stotram 58. Tripurasundari Vedapada Stotram 59. Tripurasundari Manasapooja 60. Tripurasundari Ashtakam 61. Devi shashti upachara-pooja 62. Mantra matruka Pushpamaala 63. Kanakadhara Stotram 64. Annapoorna Stotram 65. Ardhanareshwara Stotram 66. Bhramanaamba Ashtakam 67. Meenakshi Stotram 68. Meenakshi Pancharatnam 69. Gouri Dasakam 70. Navaratna Malika 71. Kalyana Vrishtistavam 72. Lalitha Pancharatnam 73. Maaya Panchakam 74. Suvarna Mala Stuti 75. Dasa Sloki 76. Veda Sara Siva Stotram 77. Siva Panchaakshara Stotram 78. Sivaaparadha Kshamapana 79. Dakshinamoorthy Ashtakam 80. Dakshinamoorthy Varnamala 81. Mrutyunjaya Manasa Pooja Stotram 82. Siva Namavali Ashtakam 83. Kaala Bhairava Ashtakam 84. Shatpadee Stotram 85. Siva Panchakshara Nakshatra Mala 86. Dwadasa Ling Stotram 87. Kasi Panchakam 88. Hanumat Pancharatnam 89. Lakshmi-Nrisimha Pancharatnam 90. Lakshmi-Nrisimha Karunarasa Stotram 91. Panduranga Ashtakam 92. Achyuta Ashtakam 93. Sree Krishna Ashtakam 94. Hari Stuti 95. Govinda Ashtakam 96. Bhagavat Manasa Pooja 97. Praata Smarana Stotram 98. Jagannatha Ashtakam 99. Guruvashtakam 100. Narmada Ashtakam 101. Yamuna Ashtakam 102. Ganga Ashtakam 103. Manikarnika Ashtakam 104. Nirguna Manasa Pooja 105. Eka Sloki 106. Yati Panchakam 107. Jeevan Mukta Ananda Lahari 108. Dhanya Ashtakam 109. Upadesa (Sadhna) Panchakam 110. Sata Sloki 111. Maneesha Panchakam 112. Advaita Pancharatnam 113. Nirvana Shatakam 114. Devyaparadhakshamapana Stotram  




ஸ்வாமி சின்மயாநந்தா ஆதி சங்கரர் நூல்கள் பற்றி பவன்ஸ் ஜர்னல் இதழில் மே 1988-1989 இல் எழுதிய கட்டுரையில் 139 நூல்களின் பட்டியலைத் தருகிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com   ஆதி சங்கரர் இயற்றிய நூல்களின் விளக்கத்தை ஆன்மீக சிகரத்தில் ஏறிய மகான்கள் மட்டுமே தர முடியும். இந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.   ஸ்வாமி விவேகானந்தர் தனது அருளுரைகளில் சங்கரர் பற்றிய ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளார்.   சமீப காலத்தில் காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் ஏராளமான உபதேச அருளுரைகளிலும் கட்டுரைகளிலும் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய விளக்கங்களைத் தந்து அருளியுள்ளார். கல்கி இதழில் வாரா வாரம் வெளியாகிய ஜகத்குருவின் அருளுரைகள் குறிப்பிடத் தகுந்தவை. அடுத்து ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த பல்வேறு துறவிகள் பல நூல்களில் விளக்கங்களை அளித்துள்ளனர்.   சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்து வெளியீடான சௌந்தர்ய லஹரி குறிப்பிடத்தகுந்த ஒன்று. அண்ணா எழுதிய இந்த விளக்க உரையில் பதத்திற்குப் பதம் தமிழில் அர்த்தம், இரகசியங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.   அடுத்து ஸ்வாமி சின்மயாநந்தரின் நூல்கள் மிகத் தெளிவான விளக்க உரைகளை தந்துள்ளது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் பற்றிப் பலரும் எழுதிய விளக்க நூல்களை எடுத்துக் கொண்டால் பல நூறு பக்கங்களில் அதிசய விளக்கங்களைக் கண்டு பிரமித்துப் போகிறோம்.   இன்னும் சிலர் ஆதி சங்கரரின் ஸ்தோத்திரங்களை மொழி பெயர்த்துத் தமிழிலும் தந்துள்ளனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com   தெய்வீக ஸ்தோத்திரங்களை சங்கரர் அருள்வாக்கில் இயற்றியதை அப்படியே கூற வேண்டும் என்றாலும் அர்த்தம் புரிந்து கொள்ள இந்தத் தமிழ்/ ஆங்கில மொழி பெயர்ப்புகள் உதவும் என்பதில் ஐயமில்லை. அடுத்து வரும் சில கட்டுரைகளில் ஆதி சங்கரரின் நூல்கள் பற்றிய சிறு குறிப்புரைகளைக் கண்டு மகிழலாம்.  


Tags – ஆதி சங்கரர், இயற்றிய நூல்கள், ஸ்துதிகள்,   Adi Shankara Hymns  

SANKARA AND QUANTUM PHYSICS ஆதி சங்கரரும் க்வாண்டம் பிஸிக்ஸும்! (Post No.7305)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 6 DECEMBER 2019

 Time in London – 8-29 AM

Post No. 7305

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

ஆதி சங்கரர் கூறியவற்றிற்கும் க்வாண்டம் பிஸிக்ஸ் கூறுகின்ற கொள்கைக்குமான ஒரு ஒப்பீடு இதோ:

ஆதி சங்கரர் : உலகமே மாயை

க்வாண்டம் பிஸிக்ஸ் : நாம் காணும் உலகமும் புலன்களால் உணரும் உலகமும் உண்மையல்ல; அவைகள் மனதினால் உருவாக்கப்பட்ட வெறும்

3 D உருவகங்களே.

ஆதி சங்கரர் : ப்ரஹ்மம் சத்யா ;ஜகம் மித்யா  – ப்ரஹ்மமே இறுதியான உண்மை

க்வாண்டம் பிஸிக்ஸ் :  அந்த பிரக்ஞையே உண்மை

ஆதி சங்கரர் : பிரம்மாண்டம் என்பதானது உருவாக்கப்பட்டு பரப்ரஹ்மத்தில் கரைந்துபோனது.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்களாயின. பின்னர் சில காலம் கழித்து அவைகள் பிரிந்து பிரக்ஞையுடன் ஒன்றிப் போயின.

ஆதி சங்கரர் : ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம்.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே இருந்தவர்கள், பின்னால் பிரிக்கப்பட்டனர். அவர்கள் பிரக்ஞையுடன் இணையவே வேண்டும்.

ஆதி சங்கரர் : ஜீவன் (தன்னை) உணர்ந்து விட்ட நிலையில் அந்த நிலையே நிர்வாண நிலை. ஜீவன் அப்போது காலம் தேசம்,மனதிற்கு அப்பாற்பட்ட நிலையை அடைகிறது.

க்வாண்டம் பிஸிக்ஸ் : ஒருவன் பிரக்ஞையை ஆழ்ந்து உணர்ந்து விட்டால் அப்போது தேசம், காலம், மனம் எதுவும் இல்லை.

ஆதி சங்கரர் : ஜீவன், தன்னை உண்மை என்றே நம்புகிறான்; அது மனம் இருப்பதின் காரணத்தினால் தான்.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  மனதினால் ஏற்படுத்தப்பட்ட பிரமையே தனிநபரின் தன்மை என்பது.

ஆதி சங்கரர் : புலன்களால் ப்ரஹ்மம் உணரப்பட முடியாது, ஏனெனில் புலன்கள் ஒரு அளவுக்கு உட்பட்டவையே.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  எல்லையற்ற தன்மை என்பது எல்லைக்குட்பட்ட ஊடகங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

ஆதி சங்கரரும் க்வாண்டம் பிஸிக்ஸும் சொல்லும் கூற்றுக்கள் : 

நாம் எல்லோரும் ஒரே பிரக்ஞையில் இருந்து வெவ்வேறு அனுபவங்களை வெவ்வேறு கர்மாவினால் அனுபவிக்கிறோம். இறப்பு என்று ஒன்று இல்லை. வாழ்க்கை என்பது ஒரு கனவு தான். நாம் என்றுமுள்ளவர்கள். நீங்கள் அறிகின்ற (வாறு அந்த) உண்மை இருப்பதில்லை.

க்வாண்டம் பிஸிக்ஸ்  இன்று அறிந்திருப்பவை அனைத்துமே ஆதி சங்கரரின்அத்வைத தத்துவத்தின் ஒரு பகுதியே. அது வேதத்திலிருந்து பெறப்பட்டது. ஆதி சங்கரரை விட வேறொரு பெரிய விஞ்ஞானி இல்லவே இல்லை.

என்றுமே மாறாத உண்மையானது, சாதாரண மக்களால் கடவுள் எனக் கூறப்படுகிறது. பிரக்ஞை என விஞ்ஞானிகள் அதைக் கூறுகின்றனர். இறைசக்தி என நம்பிக்கையுடையோரால் அது கூறப்படும் போது, இயற்கை என நம்பிக்கையற்றவர்கள் (நாத்திகர்கள்) அதைக் கூறுகின்றனர்.

நாம் அனைவரும் ஒரே பிரக்ஞை தான்; ஆனால் நம்முடைய சொந்த செயல்களினால் வேறு வேறாகத் தோற்றம் அளிக்கிறோம்.

ஒரே வரியில் சங்கரர் இதை இப்படிச் சொல்கிறார்:-

ப்ரஹ்மம் சத்யம், ஜகத் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:

ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்; ஜீவன் ப்ரஹ்மனைத் தவிர வேறல்ல. இதுவே உள்ளார்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.

விஞ்ஞானக் களமானாலும் சரி, உலகிற்கு அளித்த கொடைகள் பற்றி எடுத்துக் கொண்டாலும் சரி, ஆதி சங்கரரின் சுயநலமற்ற சேவைக்கு முன் எதுவும் ஈடாகாது.

சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

நன்றி :- ட்ரூத், கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் தொகுதி 87; இதழ் 30

22-11-2019 தேதியிட்ட இதழ்

****

ஆங்கிலத்தில் படிக்க விரும்போர் கீழே உள்ள மூலத்தைப் படித்து மகிழலாம் :-

Here is a Comparison between Adi Shankara and Quantum Physics.

Adi Shankaracharya : This world is (maya) an illusion. 

Quantum Physics : The world we see and perceive are not real, they are just 3D projections of mind. 

Adi Shankaracharya : Brahma sathya jagan mithya–Only the Brahman is the absulote reality

Quantum Physics: Only that conciousness is reality

Adi Shankaracharya :  The Brahamhanda created and dissolved again in to the para – brahman. 

Quantum Physics : The atoms bind together to make planets, stars ,comets and at some time later they dis-integrate and merge with consciousness. 

Adi Shankaracharya : Jivatma is nothing but a separated soul from Brahman. and has to strive to merge with Brahman called moksha. 

Quantum Physics : Everyone was once part of one consciousness later separated. And has to merge back to that consciousness. 

Adi Shankaracharya : When the Jiva becomes realised then it is the state of nirvana, the jiva beyond – time, space and mind. 

Quantum Physics : when someone deeply understands that consciousness then there is no time, no space and no mind. 

Adi Shankaracharya : Jiva feels he is real because of the presence of mind. 

Quantum Physics : Individuality is an illusion that is caused by mind. 

Adi Shankaracharya : Brahman cannot be realised through senses, because they are limited. 

Quantum Physics : Infinity cannot be understood with finite mediums. 

Adi Shankaracharya and Quantum Physics– We are all one consciousness experiencing differently subjectively (because of different karma). There is no such thing as death, life is just a dream. we are eternal beings. The reality as you know does not exist. 

What the entire Quantum physicists have understood is just a part of Advaita Philosophy of Adi Shankaracharya which is purely derieved from the Vedas. There exists none greater a scientist than Adi Shankarcharya. 

The unchanging reality is called God by common people, called consciousness by scientists, called energy by believers, called nature by disbelievers. 

We are all the same consciousness but appear differently because of our own actions. With a single line stated by Shankara

Brahma sathya jagat mitya, jeevo brahmaiva naapara”

 Brahman is the only reality, the living entity is not different from Brahman” that has revealed the inner most knowledge. 

Nothing can match Adi Shankara’ s selfless service in the field of science and contributions to the world. 

Sadasiva samaarambaam shankracharya madyamaam |

Asmadhaachaarya paryanthaam vande guru paramparaam ||

***

Thanks : Truth Weekly

Source : TRUTH VOL.87 NO. 30  Issue dated : 22-11-2019

பாரதியாரும் ஆதி சங்கரரும்! (Post No.5418)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 11 September 2018

 

Time uploaded in London – 8-15 am (British Summer Time)

 

Post No. 5418

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி ‘தேச விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரோ மனிதர்களின் மோட்சம், முக்தி எனப்படும் ‘ஆன்ம விடுதலை’க்குப் போரடினார். ஆதி சங்கரரின் விவேக சூடாமணி ஒரு அற்புதமான கவிதை நூல். பாரதியாரோ 300 க்கும் மேலான கவிதைகளைப் பாடிய பெருங் கவிஞன்.

இருவர் பாட்டிலும் ‘விடுதலை’ பற்றிய பாடல்களில் ஒரே சிந்தனை ஓட்டமும், ஒருமித்த உவமைகளும் இருப்பது, கற்றோருக்கு இன்பம் தரும்.

 

முதலில் பாரதியாரின் வீர சுதந்திரம் வேண்டி நின்றார் கவிதையை ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்

 

வேறொன்று கொள்வாரோ? – என்றும்

 

ஆரமுது உண்ண ஆசை கொண்டார் கள்ளில்

 

அறிவைச் செலுத்துவாரோ? (பாரதியார்)

 

மானுட ஜன்மம் பற்றி பாரதியார் சொல்லும் கருத்து ஆதி சங்கரரும் போற்றிய கருத்து. ‘அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது’- என்பது அவ்வையின் வாக்கு.

 

இதோ ஆதி சங்கரரின் விவேக சூடாமணியின் இரண்டாவது ஸ்லோகம்:-

 

‘ஜந்தூனாம் நரஜன்ம துர்லபதஹ’. மனிதனாய் பிறப்பது அரிது என்கிறார்.

மானுட ஜன்மம் பெறுவதற்கு அரிது’– என்பது இந்தப் பாட்டில் பாரதியின் வரிகள்

XXX

சூரியனை விட்டு விட்டு எவரும் மின்மினிப் பூச்சியை நாடுவரோ என்பது பாரதியின் வாக்கு. ஆதி சங்கரர் சொல்வார்,

சூரியனும் மின்மினியும் போல, அரசனும் சேவகனும் போல, கிணற்று நீரும் கடல் நீரும் போல என்று முரண்பாடுகள் உள்ளன (241).

 

இந்த ஸ்லோகத்திலும்  பாரதி- சங்கரர் ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதைப் பார்க்கிறோம்.

XXXX

கண்கள் இரண்டையும் விற்றுவிட்டுச் சித்திரப் படம் வாங்கினால் சிரிக்க மாட்டார்களா என்பது பாரதியின் கேள்வி.

 

நிலவொளி பிரகாஸிக்கும்போது, சித்திரத்திலெழுதிய நிலவை எந்த புத்திசாலியாவது நாடுவானா என்கிறார் சங்கரர் (522)

 

XXXX

 

பொய்மை எனும் பாம்பு கடித்தவகுக்கு ஒரே மருந்து, பிரம்ம ஞானமே என்பது சங்கரரின் வாதம் (ஸ்லோகம் 61)

 

பாரதி ஒரு பாட்டில் பாடுகிறார்,

‘பயமென்னும் பேய்தனை யடித்தோம்- பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்

வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கடைப் பிடித்தோம்

 

-என்று ஜயபேரிகை கொட்டுகிறார்.

 

இங்கு இருவர் படியதும் பிரம்ம ஞானம், மாயப் பாம்பு பற்றியே.

XXXX

 

குருவின் பெருமையைப் போற்றும் சங்கர்,

குருவின் சொற்களைக் கேட்ட சீடன் எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபட்டுச் சென்றான்; குரு என்பவர் சதானந்தத்தில் திளைத்து உலகையே  தூய்மையாக்குகிறார். அப்போது வேறுபாடுகள் மறையும்; இப்படிப்பட்ட ஆசார்ய- சிஷ்ய ஸம்வாதம் ஐயங்களுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் என்று மூன்று ஸ்லோகங்களில் பாடுகிறார் (576-578)

 

பாரதியும் சுயசரிதையில்,

‘ஞானகுரு தேசிகனைப் போற்றுகின்றேன்

நாடனைத்துந்தானாவான் நலிவிலாதான்

மோனகுரு திருவருளால் பிறப்புமாறி

முற்றிலும் நாம் அமரநிலை சூழ்ந்துவிட்டோம்’

 

என்று ஆனந்தக் கூத்தாடுகிறான்.

 

சங்கரர் தனது 580 ஸ்லோகங்களில் பலமுறை சொல்லும் தத்வமஸி (நீயே அது/கடவுள்) என்ற உபநிஷத வாக்கியத்தையும் பாரதி பாடுகிறான்.

‘சாமி நீ சாமி நீ கடவுள் நீயே

தத்வமஸி தத்வமஸி நீயே அஃதாம்’ என்று பாடுகிறான்.

XXXX

 

ஆதிசங்கரர் போன்றோர் ஞானம் எனும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட போதும் பக்தி மார்க்கம் மூலமே கடவுளை அடைய முடியும் என்பதற்காக விவேக சூடாமணி, சௌந்தர்ய லஹரி, பஜ கோவிந்தம் போல 120க்-கும் மேலான துதிகளைப் பாடி வைத்தார். பாரதியும் பக்தியின் பெருமைதனைப் பாடுவான்,

 

பக்தியினாலே, தெய்வ பக்தியினாலே

 

பக்தியினாலே – இந்தப்

பாரிலெய்திடும் மேன்மைகள் கேளடீ

சித்தந்தெளியும்- இங்கு

செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்

வித்தைகள் சேரும்-நல்ல

வீரருறவு கிடைக்கும், மனத்திடைத்

தத்துவமுண்டாம், நெஞ்சிற்

சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

 

ஆசையைக்கொல்வோம்- புலை

அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட பாசமறுப்போம்……

என்று நீண்டதொருபாடலைப் பாடுகிறார்.

XXXX

எண்ணிய முடிதல் வேண்டும் என்ற பாட்டில், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்’- என்கிறார்.

 

இதே உவமையை ஆதி சங்கரர்,

சூரியனைக் கண்ட இருள் விலகுவது போல, ஞானம் எய்தியவுடன் எல்லாம் பிரம்மத்தில் கரைந்து விடும் என்பார் (ஸ்லோகம் 564). அதாவது எல்லாம் ஒன்றே என்ற உணர்வு பிறக்கும்.

XXX

பாரதியின் வேதாந்தப் பாடல்கள் அனைத்திலும் சங்கரரின் அத்வைதக் கருத்துகளைக் காணலாம். பாரதப் புதல்வர்களின்- தவ சீலர்களின்- கருத்து ஒன்றே என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

 

வாழ்க பாரதி- வளர்க அத்வைதம்

 

–SUBHAM-

 

 

 

வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது? (Post No 4370)

Written by S.NAGARAJAN

 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-03 am

 

 

Post No. 4370

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கிம் என ஆரம்பிக்கும் சுபாஷிதங்களைப் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4217 20-10-2017 அன்று வெளியானது.

அதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை:-

 

 

வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது?

ச.நாகராஜன்

 

கிம் என்று ஆரம்பிக்கும் நூற்றுக் கணக்கான சுபாஷிதங்கள் உள்ளன. ஆதி சங்கரர் அருளிய ப்ரஸ்னோத்தர ரத்னமாலாவில் கிம் என்று ஆரம்பிக்கும் பல கேள்விகளைக் கேட்டு அவர் பதில் அளிக்கிறார்.

 

அவற்றில் சில:-

கிம் ஷோச்யம் கார்பண்யம்

சதி விபவே கிம் ப்ரஷஸ்யமௌதார்யம் I

தனுதரவித்தஸ்ய ததா

ப்ரபவிஷ்னோர் யத்  சஹிஷ்ணுத்வம் II

 

வளமாக இருக்கும் போது எது பரிதாபத்திற்குரியது?

கஞ்சத்தனம்.

அப்போது எது புகழத்தக்கது?

கொடை

அதே போல ஒருவன் வறிய சூழ்நிலையில் இருந்தாலும் சரி  அதிகாரத்தில் இருந்தாலும்  சரி பொறுமையைக் கடைப்பிடிப்பது போற்றத்தக்கது.

இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் கே.வி.சர்மா.

 

 

What is to be pitied when in affluence. Niggardliness.

What is praiseworthy then? Generosity.

Patience is similarly to be commended both when  a  man is in very indigent circumstances as well as he is in power. (Translation by K.V. Sarma)

 

இதே போல கிம் என்று ஆரம்பித்துப் பல கேள்விகளைக் கேட்டு பதிலையும் தருகிறார் ஆதி சங்கரர், மனித குல நன்மைக்காக.

அவற்றைக் கீழே காணலாம்.

 

கிம் விஷம்?

எது விஷம்?

பதில்: அவதீரணா குருஷு

குருவின் கட்டளையை மீறுவது

 

What is poison?

Transgression of preceptor’s orders.

 

கிம் மனுஜேஷு இஷ்டதமம்?

எது மனிதர்களிடம் விரும்பத்தக்கது?

பதில் :ஸ்வ-பர ஹிதாய உத்யதம் ஜன்ம.

தனக்கு மற்றும் பிறர்க்கு என வாழ்க்கையை அர்ப்பணிப்பது.

 

 

What is most desirable for human beings?

Life dedicated to one’s and others welfare.

 

கிம் குருதாயா மூலம்?

எது மேன்மைக்குக் காரணம்?

பதில் : யத் ஏதத் அப்ரார்தனம் நாமம்

பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்காதிருத்தலே மேன்மைக்குக் காரணம்.

 

 

What is the cause of greatness?

That which is known as not asking favours.

 

கிம் துக்கம்?

எது துக்கம்?

பதில் : அசந்தோஷ:

சந்தோஷமற்றிருப்பது.

 

 

What is unhappiness?

Cheerlessness.

 

கிம் ஜாட்யம்?

எது  முட்டாள்தனம்?

பதில் : பாடதோபி அனப்யாஸ”

படித்ததைத் திருப்பிப் படிக்காமலிருப்பது.

 

What is unintelligence?

Not repeating what is learnt.

 

நளினி -தள – கத – ஜலவத் – தரளம் கிம்?

எது தாமரை இலத் தண்ணீ ர போன்று நிலையற்றது?

பதில் : யௌவனம்,தனம் ச ஆயு:

யௌவனம், தனம் மற்றும் ஆயுள்

 

What is transient like the water on the lotus leaf?

Youth, wealth and life.

 

கிம் ச அனர்கம்?

எது விலை மதிப்பற்றது?

பதில்: யதவஸரே தத்தம்

எது சரியான தருணத்தில் வழங்கப்பட்டதோ அது.

 

 

What is priceless?

That which is given at the right moment.

 

ஆமரணாத் கிம் ஷால்யம்?

அம்பு போல மரணம் வரை வருவது எது?

பதில் : ப்ரச்சன்னம் யத் க்ருதம் பாபம்.

ரகசியமாக செய்த பாவம்.

 

 

What paids like a shaft till death?

The sin committed in secrecy

 

இன்னும் பல ‘கிம்’ என்று ஆரம்பிக்கும் கேள்விகள் ப்ரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ளன. படித்துப் பயனடையலாம்.

***