
Written by S NAGARAJAN
Date: 20 MAY 2018
Time uploaded in London – 6-28 AM (British Summer Time)
Post No. 5027
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் மே 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆரோக்கிய ரகசியம்
நமது நூல்கள் தரும் நுட்பமான கருத்துக்கள்!
ச.நாகராஜன்
நமது ஆயுர்வேத நூல்களிலும், வைத்ய நூல்களிலும் இதர சுபாஷித நூல்களிலும் ஆரோக்கியம் பற்றிய ஏராளமான நுட்பமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது அடிப்படையான விஷயம். இதை முதலில் தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான மருத்துவ உதவியைப் பெற்று நோய்களிலிருந்து மீளலாம்.
நோயே இல்லாத ஆரோக்கிய வாழ்வைப் பெறவும் இந்தக் கருத்துக்கள் இன்றியமையாதவை.
சில கருத்துக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்படுகின்றன.
1
நோய் வருவதற்கான நான்கு காரணங்கள்
ரோக நிமித்தம்
- ஆகண்டுகா – Exogenous – வெளியிலிருந்து
- வாதம்
- பித்தம்
- ஸ்லேஷ்மா
சரக சம்ஹிதை (சூத்ர 20-3)

2
நோயாளியின் நான்கு குணங்கள்
ரோகாதுரா குணா:
1) ஸ்மிருதி – நல்ல ஞாபக சக்தி (good memory)
2) நிர்தேசா – மருத்துவ அறிவுரையின் படி நடத்தல் (follwoing the prescription)
3) அபீருத்வா – பயமின்மை (fearlessness)
4) ஞானபாகா – தடையற்ற வெளிப்பாடுகள் (uninhibited expressions)
சரக சம்ஹிதை (சூத்ர 9-9)
3
நோயைப் போக்கத் தேவையான அம்சங்கள்
Aspects of therapeutics for the cure of disease
1)பிஷக் – வைத்தியர் (Physician0
2) த்ரவ்யாணி – மருந்துகள் (Medicines)
3) உபஸ்தாதா – உடன் இருந்து உதவி செய்பவர் -Upasthata
4) ரோகி – வியாதியஸ்தர் – Rogi
சரக சம்ஹிதை (சூத்ர 9-3)
4
வைத்யருக்கான குணங்கள்
வைத்ய குணா:
1) மிகச் சிறந்த மருத்துவ அறிவு (ச்ருதே பர்யாவதாதத்வம்)
2) பரந்த மருத்துவ அனுபவம் (பஹுஷோ த்ருஷ்டகர்மதா)
3) திறமை (தாக்ஷ்யம்)
4) சுத்தம் (சௌசம்)
சரக சம்ஹிதை (சூத்ர 9-6)

5
அறுவை சிகிச்சை நிபுணருக்கான குணங்கள்
சஸ்த்ர வைத்ய குணா:
பயப்படாமை – சௌர்யம்
எளிதாகக் கையாளும் தன்மை – ஆசுக்ரியா
சஸ்த்ரதைக்ச்ன்யம் – மிகக் கூர்மையான கருவிகள்
வியர்வை இல்லாமல் இருத்தல், நடுங்காமல் இருத்தல் -அஸ்வேதவேபது
குழப்பமின்றி இருத்தல் – அஸம்மோஹ:
சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 5-10)
6
நோயாளிகளிடம் வைத்யரின் அணுகுமுறை
வைத்ய வ்ருத்தி
நட்பு – (மைத்ரி)
தயை – (காருண்யா)
சந்தோஷம் – (ப்ரீதி)
இரக்கம் – (உபேக்ஷணம்)
சரக சம்ஹிதை (சூத்ர 9-26)
7
நோய் அறிதல்
வியவஹார தர்ஷணம் (Diagnosis)
கேட்டல்- (ஆகம)
உரையாடுதல் – (வியவஹாரா)
சிகிச்சை – (சிகித்ஸா)
முடுவெடுத்தல் – (நிர்ணயா)
நாரத ஸ்மிருதி (1-36)

8
நோய் அறிதல்
ரோக விஞ்ஞானம்
நோய் வருவதற்கான காரணம் – நிதானம்
முந்தைய நிலை – பூர்வரூபா
தோற்றம் – ரூபா
நோய்க்குத் தீர்வு – உபசாயா
முடிவு – சம்ப்ராப்தி
மாதவ நிதானம் (1-4)
9
வியாதிகளின் வகைகள்
வியாதி
தொற்று நோய் – (ஆகண்டவா)
உடல் சம்பந்தமானது – (சரீரா)
மனோ வியாதி – (மானஸா)
இயற்கையானது – (ஸ்வாபாவிகா)
சுஸ்ருத சம்ஹிதா (சூத்ர 1-23)
10
எலும்பு வகைகள்
அஸ்திவர்கா
தட்டை – (கபாலா)
பல் – (ருசகா)
குருத்தெலும்பு – (தருணா – cartilege)
வட்ட வடிவமானது – (வளயா)
நீளமானது – (நாளகா)
சுஸ்ருத சம்ஹிதா (சரீர 5-20)
11
மருந்துக் கஷாயங்கள்
கஷாயம்
அத்தி – (சமி)
அரசு – (அஸ்வத்தா)
ஆலமரம் – (ந்யாக்ரோதா)
புரசு – (பலாச)
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக ஆராய்ந்து எது நல்லது, யார் வியாதியை நீக்கத் தகுதியானவர்கள் என்பன போன்றவற்றை ஆயிரக் கணக்கான செய்யுள்கள் தருகின்றன.
அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வைத்தியர்கள் ஒவ்வொரு கிராமம்தோறும் இருந்து மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகப் பாடுபட்டனர். பாரம்பரிய வழியிலான அந்த ஆயுர்வேத மருத்துவம் பற்றி அறிவது நமது கடமை – நமது நலனுக்காகவே!
***
You must be logged in to post a comment.