By London Swaminathan
Post No. 1021: Date 5th May 2014.
அமெரிக்க விண்வெளி (நாஸா) விஞ்ஞானிகளுக்கும் தெரியாத விஷயங்கள் நமக்குத் தெரியும்!!
இந்திய இலக்கியங்களில் எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்கள் உள்ளன. ஒருவர் கண்டுபிடித்த பின்னர் இது எங்கள் சமய நூல்களில் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனரே என்றால் நம்மைப் பார்த்து நகைப்போர் தொகையே அதிகம் இருக்கும். இதுவரை நாம் மட்டுமே அறிந்த பல விஷயங்களை நான் பட்டியலிட்டு எழுதிவிட்டேன். இதோ இன்னும் ஒரு ரகசியம். இதை உலக விஞ்ஞானிகள் அறிந்தால் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.
நாடி ஜோதிடம் உண்மையா?
நாடி ஜோதிடம் என்னும் துறையில் விஷயம் தெரிந்தவர்களைவிட போலிகளும் மோசடிக்காரர்களுமே அதிகம். ஆயினும் இத்துறையில் சில அபூர்வமான விஞ்ஞான விஷயங்கள் உள்ளன. ஒருவருடைய கைகளைப் பார்த்தே அவர்கள் பிறந்த நேரத்தில் வானத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன என்பதை துல்லியமாகச் சொல்லி விடுகின்றனர். பின்னர் அவர்களுடைய எதிர்கால வாழ்வு பற்றி ஆரூடங்களும் சொல்லுவர்.
ஒருவர் பிறந்தபோது வானில் எந்த கிரகம் எந்த இடத்தில் (ராசியில்) இருந்தது என்பதைக் கூறுவது வான சாஸ்திரம். அதற்குப் பின் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன என்ன நேரிடும் என்று சொல்லுவது ஜோதிடம். இரண்டும் வெவ்வேறு துறைகள். என்னுடைய சகோதரர் இருவர் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருகில் கவலூர் என்னும் கிராமத்தில் இருந்த நாடி சோதிடர்களைப் பார்க்கப் போயினர். கைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே கிரக நிலைகளை எழுதிக் கொடுத்துவிட்டனர். பின்னர் சோதிடமும் கூறினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது குடும்ப ஜோதிடர் ஏற்கனவே எழுதிக் கொடுத்த ஜாதகத்தில் இருந்த கிரக நிலைகளையே அந்த நாடி ஜோதிடர்களும் எழுதி இருந்தனர். இது பெரிய அதிசயம். வரப்போகும் மனைவியின் பெயரையும் கூறியிருந்தனர். அதுவரை எல்லாம் உண்மையாக இருந்தது. ஆனால் எதிர்காலம் பற்றிச் சொன்னது நடக்கவில்லை.
கைகளை மட்டும் பார்த்து ஒருவருடைய பிறந்த நாள் கிரக நிலைகளை சொல்லமுடிவது பல வகைகளில் விஞ்ஞானிகளுக்கு உதவும். இந்தக் கலை அழிவதற்கு முன் இதை விஞ்ஞானிகள் ஆராய்வது நம் கடமை. இந்த ரகசியத்தை அறிந்தால் பிரபஞசத்தின் புரியாத புதிர்களை விடுவிக்கமுடியும். இது இந்துக்கள் உலகிற்கு வழங்கும் ஒரு கொடையாக அமையும்!
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. அண்டம், பிண்டம் ஆகிய இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள் அதாவது கோள (முட்டை) வடிவில் இருக்கும் பிரபஞ்சம் அல்லது பூமியைக் குறிக்கும். அதில் இருக்கும் மலைகள், ஆறுகள், தாவரங்கள் ஆகியன உடலில் ரத்த நாளங்கள், முடி முதலியன வடிவில் இருப்பதாகச் சொல்லுவர். இதற்கு மேலும் அழ்ந்த பொருள்களும் உண்டு. நம்முடைய மனமும் பிரபஞ்ச மனமும் ஒன்றாகும் போது காலத்தைக் கடந்து நின்று கடந்த கால, நிகழ் கால, வருங்கால நிகழ்ச்சிகாஇக் காணமுடியும்! மற்றொரு பொருள்: பிரபஞ்சத்தில் எத்தனை அண்டசரசரங்கள் இருக்கின்றனவோ அவைகள் நம்மில் உள்ளன. இமயமலையை பொருட்காட்சி சாலையில் மண்ணில் செய்துவைப்பது போல நம்மை இறைவன் ஒரு சின்ன பொம்மை (மாடல்) யாகப் படித்திருக்கிறான். (‘’பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்’’– என்ற கட்டுரைஅயில் முன்னர் இது விளக்கப்பட்டுள்ளது)
ரேகையைப் பார்த்து உருவத்தை வரையும் அபூர்வ கலை!
இன்னொரு விஷயம் ஒருவருடைய கை ரேகைகளைப் பார்த்து உருவத்தையே வரையும் அல்லது சொல்லும் கலை. இந்த அபூர்வ கலை இப்பொழுது அழிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. குற்றவியல் விஞ்ஞானத்திலும் தடய அறிவியலிலும் கை விரல் ரேகைப்பதிவுகள் பயன் படுத்தப்படுகின்றன. இதுவும் முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.
பிருஹத் கதா என்னும் நூல் தமிழில் பெருங்கதை என்று கவிதை வடிவில் உள்ளது. அருமையான ஒரு இலக்கியம். இதில் ஒரு அபூர்வ காட்சி வருகிறது. மதன மஞ்சிகை என்ற பேரழகி மாடியில் (உப்பரிகையில்) தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாள். அப்பொழுது அந்த வழியாக நரவாணன் என்பவன் யானை மீது பவனி வந்தான். அந்த நேரத்தில் பந்து தவறிப் போய் அவன் மீது விழுந்தது. பந்தை எடுக்க ஓடோடி வந்த ‘அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான்’. காதல் மலர்ந்தது. பந்தை எடுக்காமல் திரும்பி விடுகிறாள். ஆனால் யார் அந்த நங்கை? அவள் பெயர் என்ன? என்பதெல்லாம் நரவாணனுக்குத் தெரியாது.
நண்பன் கோமுகனிடம் பந்தைக் கொடுத்து இதை எறிந்தது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லுகிறான். கோமுகனோ இருந்த இடத்திலேயே அமர்ந்து காரியத்தை முடித்துவிடுகிறான். சந்தனக் கையில் தோய்த்த கையுடன் மதனமஞ்சிகா பந்து விளையாடியதால் அவளுடைய விரல் ரேகைகள் அதில் பதிந்திருந்தன. அந்த சாத்திரத்தில் கோமுகன் வல்லவன். ஆதலால் ரேகையைக் கொண்டே அந்த அழகியின் அங்க அடையாளங் களை வருணிக்கிறான். அந்த அடையாளங்களை உடையவள் மதனா தான் என்பதையும் உறுதிபடக் கூறுகிறான். இதோ அந்த பெருங்கதைப் பாடல்:-
“விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும்
அங்கைக்கு ஏற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக்கு ஏற்ற நன்கு அமைதோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்
மாப்படு வடு உறழ் மலர் நெடுங் கண்ணும்
துப்பு அன வாயும் முத்துஒளி முறுவலும்
ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண் புருவமும்
சேடு அமைசெவியும் சில் இருங்கூந்தலும்
ஒல்குமயிர் ஒழுக்கும் அல்குற்பரப்பும்
மருங்கின் நீளமும் நிறம்கிளர் சேவடித்
தன்மையும் எல்லாம் முன்முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி
பாவை இலக்கணம் பற்றி மற்று அதன்
நிறமும் நீளமும் பிறவும் தெரியாச்
செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
இதன் வடிவு ஒப்போள் இந்நகர் வரைப்பின்
மதனமஞ்சிகை ஆகும்!”
பெருங்கதை 5-8-100/116
இந்துமதம் வெளியிடும் விஞ்ஞான ரகசியங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகள்:
1.வடக்கே தலை வைக்காதே
2. Post No. 934.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி1 (Date 26-3-14)
3. Post No.935. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி2 (Date 26-3-14)
4. Post No. 951.அபாயநோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர், நாகா, (Date 3-4-14)
5. Post No.1003. வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்! (Date 26th April), 2014.
6. அருகம்புல் ரகசியங்கள்
7.நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு
8.நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2
9. ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
10. தக்காளி ரசத்தின் மகிமை
11. ஒரு வேளை உண்பான் யோகி
12.தீபாவளி ரகசியங்கள்
13.பஜனை செய்வது உடம்புக்கு நல்லது (10 ஜூலை 2013)
Please read my Earlier Posts:
Is Brahmastra a Nuclear Weapon?
Time Travel by Two Tamil Saints
Hindu’s Future Predictions (Part 1 and art2)
Science Behind Deepavai (Part 1 and Part 2)
Great Engineers of Ancient India
Post No. 933. Medical Science solves Ten Mysteries in Maha Bharata 26-3-14
Head towards North is wrong
‘OM’ BOOSTS BRAIN POWER
Acoustic Marvel of Madurai Temple
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
Hindu God with “an IPod”
Power of Holy Durva Grass
Science Behind Deepavali-1
Science Behind Deepavali-2
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.