பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்! (Post No.5848)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 December 2018
GMT Time uploaded in London –20-40
Post No. 5848


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 44 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்

இதோ பாடல் 45

கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.

காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.

மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.

நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.

தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.

ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.

குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;

சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;

ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.

தேவர்களைத் துன்புறுத்தினான்.

எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.

திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079

பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.

ஈசாப்   கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில்  பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.

பிறன் மனை நோக்காத பேராண்மை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146

பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–

பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.

இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.

அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா

ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம்  ஹி துராத்மனாம்-45

xxxxxx

பாடல் 46

கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா?

துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்

மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46

தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்

தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!

தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்

நண்ணுவரோ மற்றதனை நாடு- நீதிவெண்பா

பொருள்

பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.

 பசுவுக்கு நீர்பால்; பாம்புக்கு நீர் – விஷம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட

தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு

ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்

களியாம் கடையாயார் மாட்டு- அறநெறிச்சாரம்

பொருள்

பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;

கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;

பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;

உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.

தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.

अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥

दुर्जनः परिहर्तव्यो
विद्यया‌உलकृतो‌உपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥

tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால்

Xxxxxxxxxxxxxx  subham xxxxxxxxxxxxxxxxxxxx

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்(Post No.5420)

Written by S NAGARAJAN

Date: 12 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 8-08 AM (British Summer Time)

 

Post No. 5420

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பசு ஹிந்துக்களுக்கு தெய்வம்; அதை வதை செய்யாதே!

 

ச.நாகராஜன்

 

பசு ஹிந்துக்களுக்கு வெறும் மிருகம் அல்ல; அது தெய்வம்.

ஆகவே தான் அதை வதை செய்யக்கூடாது என்கின்றனர் ஹிந்துக்கள்.

பசுவின் பெருமையையும் முக்கியத்துவத்தையும் பொருளாதார ரீதியாக வல்லுநர்கள் சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தார்மீக ரீதியாக நமது இதிஹாஸ புராணங்கள் பசுவின் மேன்மையைப் பற்றிக் கூறுவதை நாம் முதலில் ஏற்கிறோம்.

பத்ம புராணத்தில் பாதாள காண்டத்தில் 18 மற்றும் 19 அத்தியாயங்களில் வரும் ஒரு சம்பவம் பசுவின் பெருமையைக் கூறுகிறது.

ஜனக மஹாராஜா தனது புவி வாழ்வை விட்ட உடனேயே, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவர்களுடன் கூடிய ஒரு அழகிய விமானம் வந்தது.

அதில் ஏறிச் சென்ற ஜனகர் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியில் யமபுரியைக் கடக்க நேர்ந்தது.

அது யமபுரியைக் கடக்கும் போது தீனமான குரல் ஒன்று எழுந்தது.”ஓ ! ஜனக மன்னரே! தர்மவானே! இந்த இடத்தை விட்டுப் போகாதீர்கள். உங்கள் உடலைத் தொட்டுச் செல்லும் காற்று இந்தப் பக்கம் வீசும் போது எங்களது துன்பத்தை அது வெகுவாகக் குறைக்கிறது.”

இந்தக் குரலைக் கேட்ட ஜனகமன்னர் உடனே, “ஓ, அப்படியானால் நான் இங்கேயே இருக்கிறேன்” என்றார்.

அவரது இந்த முடிவைக் கேட்ட யமதர்ம ராஜன், “மன்னரே! இங்கு இருக்க வேண்டாம்.இது பாவிகள் இருக்கும் இடம். நாம் மேலே செல்வோம்” என்றான்.

ஆனால் ஜனகரோ, “ முதலில் இந்த துன்பத்திலிருந்து இவர்களை மீட்போம். அப்புறம் தான் என்னால் நிம்மதியாக சொர்க்கத்திற்குச்  செல்ல முடியும்” என்றார்.

உடனே யமதர்மன், “ மன்னரே! இவர்கள் அனைவரும் பொய்யர்கள். கொள்ளையடித்தவர்கள். கற்பழித்தவர்கள். இவர்களை நிச்சயமாக நீங்கள் மீட்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் மர்யாதா புருஷோத்தமனான ராமனின் ராம நாமத்தை உச்சரித்ததால் கிடைத்த புண்ணியத்தை இவர்களுக்குத் தாருங்கள்” என்றான்.

உடனடியாக தனது புண்ய பலனை ஜனக மன்னர் அவர்களுக்கு அளித்தார். அவர்கள் துன்பம் தீர்ந்தது.

இப்போது ஜனகருக்கு ஒரு சந்தேகம் உதித்தது.

அவர் யமனை நோக்கி  தான் ஏன் இந்த நரகத்தின் அருகில் வந்து இந்தக் குரலைக் கேட்க நேர்ந்தது என்று கேட்டார்.

அதற்கு யமன், “ ஜனகரே! ஒரு சமயம் ஒரு பசு புல்லை மேய்ந்து கொண்டிருந்த சமயம் அதை நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்தச் செயல் தான் உங்களை நரகத்தைப் பார்க்கச் செய்து விட்டது” என்று பதில் கூறினான்.

பசு எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்த பத்ம புராணம் இந்தச் சம்பவத்தை இப்படி விளக்குகிறது.

*

மஹாபாரதத்தில் ஒரு சம்பவம்.

திரௌபதி தனது ஐந்து கணவர்களில் ஒருவர் வீட்டில் வசிக்கும் போது மற்ற நால்வரும் அந்த வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்பட்டிருந்தது.

இந்த விதியை யாரேனும் ஒருவர் மீறி விட்டால் அவர் 12 வருடம் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஒருமுறை திரௌபதி தர்மரின் இல்லத்தில் இருந்தாள். அப்போது ஒரு பிராமணன் அர்ஜுனனிடம் வந்து தனது பசுவை திருடர்கள் திருடிச் செல்வதாகச் சொல்லி அதைக் காக்க வேண்டும் என்று வேண்டினான்.

உடனே பிராமணனின் பசுவை எப்படியேனும் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தர்மபுத்திரரின் இல்லத்தில் இருந்த தனது காண்டீவத்தை எடுக்க அர்ஜுனன் அங்கு நுழைந்தான்.

பசு காப்பாற்றப்ப்பட்டது.

 

 

ஆனால் விதியை மீறிய செயலுக்காக அர்ஜுனன் 12 வருடம் வனவாசம் மேற்கொள்ள வேண்டி வந்தது.

ஆனாலும் கூட இந்த 12 வருடங்களில் அர்ஜுனன் பெறுதற்கரிய பல அஸ்திரங்களையும் பேரறிவையும் பெற்றான்.

பசுவைக் காத்த தர்மம் அவனைப் பின் தொடர்ந்தது.

இந்த அஸ்திரங்களின் உதவியாலேயே குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெல்ல  முடிந்தது.

பசு தெய்வம். அதைக் காப்பது ஹிந்துக்களின் கடமை.

அதை வதை செய்வதைத் தடுப்பது நமது கடமையே!

***

பசு மாட்டுக்கு பள பள தோல் வந்தது எப்படி? (Post No.4069)

Translated by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 14-46
Post No. 4069

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பசு மாட்டுக்கு கொம்பும் குளம்பும் வந்தது எப்படி என்பதை போன வாரம் சொன்னேன். இன்று அதற்கு பளபளப்பான தோல் எப்படி வந்தது என்று பார்ப்போம். இது சதபத பிராமண (3-1-2-16) த்தில் உள்ள கதை.

 

“பசு மாட்டின் மீதுள்ள அதே தோல்தான் முன்னர் மனிதன் மீது இருந்தது. தேவர்கள் சொன்னார்கள்: ‘இந்த பூமியில் உள்ள எல்லோருக்கும் உணவு மற்றும்  வேறு பொருள்களை தருவது பசுதான்; ஆகையால் நாம் இப்போது மனிதன் மீதுள்ள தோலை எடுத்து பசுமாட்டுக்குப் போர்த்துவோம். அப்படிச் செய்தால் அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கும்’

 

இதன் பிரகாரம் மனிதனின் தோலை உரித்து பசு மாட்டின் மீது போர்த்தினார்கள்; அதற்குப் பின்னர்,  அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கியது

 

மனிதன் தோல் உரிக்கப்பட்டதால், அவனை ஒரு புல்லோ, முள்ளோ அல்லது வேறு ஏதாவதோ  அறுத்தால் அவன் மீது ரத்தம் வருகிறது. பின்னர் தேவர்கள் அவனுக்கு தோல் என்னும் ( தோலுக்குப் பதிலாக) உடையை அணிவித்தார்கள். இதனால்தான் மனிதன் மட்டும் உடை அணிகிறான். ஆகையால் ஒருவன் சரியாக ஆடை அணிய வேண்டும். அப்போதுதான் அவன் முழுமை அடைகிறான். இதனால்தான் அவலட்சணமான மனிதனாக இருந்தாலும் எல்லோரும் உடை அணிவதை  எதிர் பார்க்கிறார்கள்; அதுதான் அவனுடைய தோல்.

 

ஒரு பசு மாட்டிற்கு முன்னால் கூட அவன் நிர்வாணமாக நிற்கக்கூடாது ஏனெனில் பசுமாடு பயந்து ஓடிவிடும்; மனிதன் தன் மீதுள்ள ‘அவனுடைய தோலை’ எடுத்துக் கொண்டு விடுவானோ என்று அதற்கு அச்சம்.

 

 

ஆகையால்தான் நல்ல உடை அணிந்தவன் மீது பசுக்கள் அன்புடன் இருக்கின்றன.

 

இந்தக் கதையில் பல நீதிகள் உள்ளன. மேம்போக்காகப் பார்த்தால் “குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம், பட்டனம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்” என்ற சின்னக் குழந்தை கதை போல இருக்கும். ஆனால் அஸ்வமேதம், ராஜசூயம் வாஜபேயம் போன்ற மாபெரும் யக்ஞங்களை விவாதிக்கும் – விவரிக்கும் — சதபத பிராமண நூலில் இது இருப்பதால் இது ரகசிய மொழியில் – மறை மொழியில் சொல்லப்பட்ட கதை என்பது விளங்கும்

 

யாராவது நிர்வாணமாக நின்றால் பசுக்கள் பயப்படுமாம். இந்த ஆள் உடை இல்லாமல் வ ந்தி      ருக்கிறான்; நம்முடைய உடைகளை (தோல்) எடுத்துக்கொள்வான் என்று நினைத்து ஓடிவிடுமாம்.

 

நல்ல உடை அணிந்தவர்கள் இடம் பசுக்கள் அன்பு பாராட்டுவது இதனால்தான்.

 

இந்தக் கதையிலிருந்து பெறப்படும் நீதிகள் என்ன?

  1. மனிதன் தோலைப் போர்த்துமளவுக்கு பசு உயர்ந்த பிராணி; அது மனிதனுக்கு நிகரானது. இதை ருசுபிக்கும் வகையில் நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் (எண்.9) முதல் சிலப்பதிகாரம், தேவாரம் வரை பசுவையும் பார்ப்பனனையும் இணைத்துப் பேசியே புகழ்கின்றன.

 

2.இரண்டாவதாக பசுவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; ஒர் பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தர வேண்டும்; யாரும் நிர்வாணமாக நிற்கக் கூடாது அதற்காகத்தான் தேவர்கள் உடைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

 

(மனு ஸ்ம்ருதியும் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்; பெண்களை அழ வைக்கும் எந்தக் குடும்பமும் வேருடன் அழியும் என்று எச்சரிக்கிறார்.)

 

பசு ஒரு புனிதமான பிராணி மட்டும் அல்ல; மிகவும் உபயோகப்படும் மிருகம். அதன் பால், வெண்ணெய், மூத்திரம், சாணி, தயிர் ஆகிய எல்லா வற்றையும் இந்துக்கள் அன்றாடம் பயன்படுத்துவர்.

 

எல்லாப் பிராணிகளுக்கும் இந்துக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுத்தாலும் பசுவுக்கு தனி இடம்; எறும்பு முதல் யானை வரை – என்ற மரபு வாக்கியம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது. இத்தனைக்கும் உதவ இந்துக்கள் தினமும் ஐவேள்வி (பஞ்ச மஹா யக்ஞம்) செய்கிறார்கள். பசுவுக்கும் யானைக்கும் மட்டும் பூஜையும் செய்வார்கள்.

-சுபம்–

 

திருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.  இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

 

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

 

ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.

 

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,

குறைந்தது  மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.

 

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)

பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.

 

கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

 

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி  வருகி றது

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

 

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல  நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.

 

பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

 

 

தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.

 

இதைத் திருமூலரும் செப்புவார்:

 

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

பொருள்:-

 

எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

 

திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும்.  நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.

ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!

 

–Subahm–

 

 

 

பசு வதை செய்யாதே! (Post No.4017)

Written by S NAGARAJAN

 

Date: 20 June 2017

 

Time uploaded in London:-  5-17  am

 

 

Post No.4017

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

 

by ச.நாகராஜன்

 

 

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.

எந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.

 

 

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.

பசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.

 

 

இதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்!

கோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.

கோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.

 

பசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல முறைகள் கூறுகிறது.

 

அதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்!

 

சம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.

 

அதனால் வந்தது கோளாறு பெரிது!

 

பசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:

மூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.

 

 

உக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.

இந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.

 

ஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.

 

பெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்?!

எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?!

 

 

மேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வாயு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட  அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா?

 

செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.

 

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது!

 

 

பசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

நன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.

 

தாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.

 

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.

 

மறுபடி தர்மமே வெல்லும்!

****

 

மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது! (Post No.2761)

air ulavan

மே 2016 காலண்டர் (துர்முகி  சித்திரை/ வைகாசி)

Compiled by london swaminathan

Date: 27 ஏப்ரல் ,2016

 

Post No. 2761

 

Time uploaded in London :–  16-50

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 3 gaurs

பசு, காளை, மாடு பற்றிய 31 தமிழ்ப் பழமொழிகள் மே மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பழமொழியையும் யோசித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்; நீங்களே ஒவ்வொன்றைப் பற்றியும் கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். இது வரை இந்த பிளாக்கில் சுமார் 2000 தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். தமிழில் 20,000 பழமொழிகள் உள்ளன!! வாழ்க தமிழ்!

 

 

முக்கிய நாட்கள்:- மே 1 மே தினம்,  4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம், 9 அக்ஷய த்ருதியை, 21 புத்த ஜயந்தி, வைகாசி விசாகம், 28 அக்னி நட்சத்திரம் முடிவு.

முகூர்த்த நாட்கள்:- 2, 4, 9, 11, 12, 19,26; அமாவாசை:- 6; பௌர்ணமி:- 21; ஏகாதசி:- 3, 17.

 

மே 1 ஞாயிற்றுக் கிழமை

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.

மே 2 திங்கட் கிழமை

மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?

மே 3 செவ்வாய்க் கிழமை

மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்

மே 4 புதன் கிழமை

மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.

மே 5 வியாழக் கிழமை

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

 2PADDY THRASHING

 

மே 6 வெள்ளிக் கிழமை

அடியாத மாடு படியாது.

மே 7 சனிக் கிழமை

மாடு கிழமானாலும் பாலின் ருசி போகுமா?

மே 8 ஞாயிற்றுக் கிழமை

மாடு தின்கிற மாலவாடு, ஆடு தின்கிறது அரிதா?

மே 9 திங்கட் கிழமை

மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனிதனை சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.

மே 10 செவ்வாய்க் கிழமை

மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா?

beauty bull

 

மே 11 புதன் கிழமை

மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி

மே 12 வியாழக் கிழமை

மேய்க்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?

மே 13 வெள்ளிக் கிழமை

பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு, தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு.

மே 14 சனிக் கிழமை

பசு உழுதாலும் பயிரைத் தின்ன வொட்டான்.

மே 15 ஞாயிற்றுக் கிழமை

பசுத்தோல் போர்த்திய புலி போல

 azakana madu, cow

 

மே 16 திங்கட் கிழமை

பசுமாடு நொண்டியானால், பாலும் நொண்டியா?

மே 17 செவ்வாய்க் கிழமை

பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்தது போல.

மே 18 புதன் கிழமை

பசுவுக்கு பிரசவ வேதனை , காளைக்கு காம வேதனை

மே 19 வியாழக் கிழமை

பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்

மே 20 வெள்ளிக் கிழமை

மாடு திருப்பினவன் அர்ச்சுனன்

 

buffalo boy, cambodia

மே 21 சனிக் கிழமை

மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?

மே 22 ஞாயிற்றுக் கிழமை

மாடு மறுத்தாலும் பால் கறக்கும், வாலில் கயிறைக் கட்டினால்.

மே 23 திங்கட் கிழமை

காளை போன வழியே கயிறு போகும்.

மே 24 செவ்வாய்க் கிழமை

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்

மே 25 புதன் கிழமை

எருதுக்கு நோய்வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?

 

fighting boys

மே 26 வியாழக் கிழமை

எருது ஏழையானால் (கூடாவிட்டால்), பசு பத்தினித்துவம் கொண்டாடும்

மே 27 வெள்ளிக் கிழமை

எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்

மே 28 சனிக் கிழமை

எழுது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.

மே 29 ஞாயிற்றுக் கிழமை

பசு மாடும் எருமை மாடும் ஒன்றாகுமா?

மே 30 திங்கட் கிழமை

பசு கருப்பென்று பாலும் கருப்பா?

மே 31 செவ்வாய்க் கிழமை

மாட்டை மேய்த்தானாம், கோலைப் போட்டானாம்

தண்ணீர் மாடு

–சுபம்–

 

 

பசுவும் பாம்பும் !

direct milk supply

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 30
Post No 851 Date 19-02-2014
ச.நாகராஜன்

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல வந்த கவிஞர் பசுவையும் பாம்பையும் பார்த்தார். அவருக்குப் பளிச்சென்று அற்புதமான கருத்து தோன்றியது.

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய பசுவையும் பாம்பையும் பாருங்கள்! பசுவானது பசும் புல்லைத் தின்று அதைப் பாலாக மாற்றிப் பாலைத் தருகிறது. பாம்போ பாலைக் குடித்து அதை விஷமாக மாற்றி விஷத்தைக் கக்குகிறது.

பாத்ராபாத்ரவிவேகோஸ்தி தேனுபன்னகயோ இவ I
த்ருணாத் சஞ்சாயதே க்ஷீரம் க்ஷீராத் சஞ்சாயதே விஷம் II

B_Id_411184_nag-panchmi

தேனு – பசு
பன்னகயோ இவ – பாம்பு இவற்றில் (பன்னகம் – பாம்பு)
பாத்ர அபாத்ர விவேக அஸ்தி – நல்லவன், கெட்டவன் ஆகியோரைப் பற்றிய விவேகம் உள்ளது.
த்ருணாத் சஞ்சாயதே க்ஷீரம் – புல்லைத் தின்று பாலாக மாற்றுகிறது (பசு)
க்ஷீராத் சஞ்சாயதே விஷம் – பாலைக் குடித்து விஷமாக மாற்றுகிறது (பாம்பு)

சரி கெட்டவரின் லக்ஷணம் என்ன?
தூர்த்த லக்ஷணம் பற்றி சுபாஷித ரத்னாகார பாண்டாரத்தில் வரும் சுபாஷிதம் தெளிவாக விளக்கத்தைத் தருகிறது.

முகம் பத்மதளாகாரம் – தூர்த்தனைப் பார்த்தால் தாமரை போன்ற முகம் இருக்கும்
வாணி சந்தன ஷீலதா – பேச்சோ சந்தனம் போல குளுமையாக இருக்கும்
ஹ்ருதயம் க்ரோத சம்யுக்தம் – இதயமோ கோபத்தால் கொப்பளிக்கும்

த்ரிவிதம் தூர்த்த லக்ஷணம் – இப்படி மூன்று விதமாக கெட்டவனின் லக்ஷணத்தை அறிந்து கொள்ள வேண்டும்

முகம் பத்மதளாகாரம் வாணி சந்தன ஷீலதா I
ஹ்ருதயம் க்ரோத சம்யுக்தம் த்ரிவிதம் தூர்த்த லக்ஷணம் II

இது தான் தூர்த்தனின் லக்ஷணம்! இவர்களைப் பார்த்தவுடன் இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்!

***************

contact swami_48@yahoo.com (Pictures rae used from different sources.Thanks.