சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! (Post No.4819)

Written by London Swaminathan 

 

Date: 15 MARCH 2018

 

Time uploaded in London – 16-22

 

Post No. 4819

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

 

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

 

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

 

என்று தமிழ்ப் பெரும் சித்தர் சிவவாக்கியர் பாடினார். இது 2300 ஆண்டுகளாகப் பாரதத்தின் தென் குமரி முதல் வட இமயம் வரை நிலவிய கருத்து என்பது சாணக்கிய நீதியைப் படித்தோருக்கு விளங்கும்.

சாணக்கியன் சொல்கிறான்,

படந்தி சதுரோ வேதான் தர்மசாஸ்த்ராண்யனேகசஹ

ஆத்மானம் நைவ ஜானதி தர்வீ பாகரஸம் யதா

 

மக்கள் நான்கு வேதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் மீண்டும் மீண்டும் படித்தும் தன்னை அறியும் அறிவில்லாவிடில் என்ன பயன்? சுவையான உணவைப் பரிமாறும் கரண்டிக்கு அந்த உணவின் சுவை தெரியுமா?

–சாணக்கிய நீதி 16-12

 

 

சாணக்கியன் சொல்லும் மரபியல் விஞ்ஞானம்

சாணக்கியன் உலக மஹா அறிவாளி; அலெக்ஸாண்டர் காலத்தில் வாழ்ந்தவன்; 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அவன் மரபியல் பற்றிப் பேசுகிறான்; கருவிலேயே திரு உற்றதாக நாயன்மார்கள் பாடினர்; மாணிக்க வாசகரோவெனில் திருவாசகத்தில் ஒரு கருவின் பத்து மாத வளர்ச்சியைப் பாடினார்.

 

சாணக்கியன் பகர்வதாவது,

 

கருவில் இருக்கும்போதே கீழ்க்கண்ட ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன– அவனது ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரணம்.

என்ன அதிசயம்!

இதைப் பார்க்கையில் ஜோதிடம் உண்மையே என்பது விளங்கும்.

 

இந்துக்கள் குழந்தை பிறந்த ஓராண்டுக்குப் பின்னர் குடும்ப ஜோதிடர் மூலம் ஜாதகத்தை எழுதி வாங்குவர்; அதில் அவர் அக்குழந்தையின் படிப்பு, ஆயுள், வேலை, செல்வ வளம் முதலியன குறித்து எழுதி விடுகிறார். இது 2300 ஆண்டுகளாக இருப்பது சாணக்கிய நீதி மூலம் தெரிகிறது:–

ஆயுஹு கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச

பஞ்சைதானி ஹி ஸ்ருஜ்யதே கர்பஸ்தஸ்யைவ தேஹினஹ

4-1

 

ஒரு தாயின் கரு பத்து மாத வளர்ச்சியில் நோக்கும் ஆபத்துகளை போற்றித் திரு அகவல் என்னும் திருவாசகப்   பகுதியில் மாணிக்க வாசகர் பாடுகிறார். அவர் தேவாரம் அருளிய மூவர்க்கும் முதல்வர்.

 

 

யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

  1. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
  2. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
  3. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

–சுபம்–

தமிழர் கண்ட விஞ்ஞானம்- மரபியல் GENETICS அறிவு (Post No.4315)

Written by London Swaminathan

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 11-06 am

 

 

Post No. 4315

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ – என்ற பழமொழி பற்றியும் அதற்கிணையான சம்ஸ்கிருத பழமொழியையும் ஏற்கனவே கொடுத்தேன் (அடிக்குறிப்பை காண்க)

 

தமிழர்களுக்கு மரபியல்  (GENETICS ஜெனெடிக்ஸ்) மீது ரொம்ப நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நாலடியாரும் பழமொழியும் கூட இதே கருத்தை உறுதி ப்படுத்துகின்றன.

‘மகனறிவு தந்தை அறிவு’ Nature Vs Nurture

ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் அவனுடைய தாய் தந்தையர் மூலம் வரும் மரபணுவா  (GENE) அல்லது அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையா என்று மேல் நாட்டு அறிவியல் இதழ்களில் (Science Journals) அடிக்கடி கட்டுரைகள் ( Nature Vs Nurture or Heredity or Environment) வரும். இரண்டுக்கும் ஆதரவான, எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுவதால் முடிவு எதுவும் சொல்ல முடியாது. ஆயினும் தமிழர்களுக்கு மரபணு  GENE) விஷயத்தில்தான் அதிகம் நம்பிக்கை என்று தோன்றுகிறது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான பழமொழியிலும் நாலடியாரிலும் இக்கருத்து வருவதால் அந்தக் காலத்தில் இப்பழமொழி  மிகப் பிரசித்தம் என்பது புலனாகும்.

 

செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயலூர!

மகனறிவு தந்தை அறிவு — நாலடியார்

 

பொருள்:-

அதிகமான செந்நெற் பயிர் வயல்கள் உடைய வயலூரா!

 

செந்நெற்களால் உண்டாகிய செழிப்பான முளைகள், பின்னர் அந்த செந்நெற் பயிர்களாகவே வளர்வது போல, ஒரு தந்தையினுடைய அறிவு போலவே மகனுடைதைய அறிவு அமையும்.

 

நெல்லின் முளையினால் அந்த நெல்லே விளைவது போல, தந்தையின் குணமே மைந்தனுக்கும் அமையும் என்பது கருத்து. இதே கருத்தை பழமொழி என்னும் நூலிலும் காண்போம். இது 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்து.

 

இதே போல மகனைப் பார்த்தால், அவர்களுடைய தாய் தந்தையர் எப்பேற்பட்டவர் என்பதும் தெரியும். சில குழந்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும்  சண்டை போது பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை நாலு பேர் முன்னால் சொல்லிவிடும்; மற்றவர்கள் இதைக் கண்டும் காணாதது போல முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இச்சொற்கள் அந்த வீட்டில் நடந்த காரசார வாக்குவாதத்தின் போது உதிர்ந்த முத்துக்கள் என்பது; ஒரு குழந்தை வளரக்கூடிய தெரு, பேட்டை ஆகியனவும் இதன் மூலம் தெரியும்

“மகனுரைக்கும் தந்தை நலத்தை” என்ற தொடராலும்,  “தாயைத் தண்ணீர் தடத்தில் பார்த்தால் பிள்ளையைப் பார்க்க வேண்டியதில்லை” என்ற பழமொழியாலும் இதை அறியலாம். “தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்பது எல்லோரும் அறிந்த பழமொழி.

(பிள்ளை என்பது மகன், மகள் இருவரையும் குறிக்கும் சொல்)

 

நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி

நோக்கி யறிப; அதுவே போல் — நோக்கி

முகமறிவார் முன்ன மறிய வதுவே

மகனறிவு தந்தை யறிவு — பழமொழி

 

பொருள்:-

தன்னுடைய கண்களால் பார்த்து அறிய முடியாத முகத்தை, கண்ணாடியில் பார்த்து அறிவர்; அதுபோல ஒருவர் முகத்தைப் பார்த்தே அவர்கள் கருத்தை அறியலாம். மகனுடைய அறிவு தந்தையின் அறிவைப் போன்றது போல.

 

அதாவது மகனைக் கொண்டு தந்தையின் அறிவையோ, அல்லது தந்தையைக்  மகன்   கொண்டு  மகன்  அறிவையோ அறிந்து விடலாம் என்பது தமிழர் கண்ட உண்மை. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? என்பதும் இதன் அடிப்படையிற் பிறந்ததே.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

தாயைப் போல | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தாயைப்-போல/

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!! white crow (2). கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!! kannu kannu (2). தாயைப் போல பிள்ளைநூலைப் போல சேலை! poy thay …

 

–சுபம்–