ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,181

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

RV.10-16-4

இது தகனம் செய்யும் மந்திரம் / சுடுகாட்டில்

“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த  உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.

RV.10-16-5

“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.

இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??

 புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .

இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions  (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!

Xxx

ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி   ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.

xxx

ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்

RV. 10-56-1; 10-56-2

மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக

அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.

நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.

ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .

XXXX

RV.10-56-7

“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில்  நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன்  பலத்தால் தன்  புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .

இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.

xxxx

RV.10-58-12

58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT)  எழுதிவிட்டார்கள் .

எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம் என்பது பல்லவி போல  12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.

இதோ மந்திரம்  எண் 12

“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

மந்திரம் எண் 7

“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

………… மாணிக்கவாசகர், திருவாசகம்

xxx

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

இந்த  12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது

Xxxx

ஈமக்  கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே  எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .

இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –

RV.10-135-4

“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால்  பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )

RV.10-135-1

“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .

(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).

XXXX

ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)

xxx

எனது வியாக்கியானம்

நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX  தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —

RV.10-55-5

நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்

இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.

RV.10-30-9

இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)

இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.

இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம்  இல்லை. இது தவிர ‘மர்ம நாமம் (ரகசியப்  பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.

தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.

பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப்  புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

–சுபம்–

tags- வேதத்தில்,  புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,176

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

இன்னொரு ‘சுவையான’ விஷயத்தைச் சொல்லிவிட்டு ரிக் வேதம் பற்றிச் சொல்லுகிறேன். எகிப்திய கலாசாரம் பற்றி இருபது முப்பது நூல்கள் என் வீட்டில் (லண்டனில்) இருக்கிறது அதில் THE BOOK OF DEAD ‘தி புக் ஆப் டெட்’ இறந்தோர் பற்றிய புஸ்தகம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. அதில் சொன்ன பல விஷயங்களை இறந்தவர்கள் வீட்டில் வாசிக்கும் கருட புராணத்துடன் ஒப்பிடலாம். இறந்தோர் ஆவி பாதாள உலகத்துக்குச் செல்லுவது, ஒரு ஆற்றைக் கட்டப்பது, முதலிய விஷயங்கள் அதில் வருகின்றன.

திருக்குறளில் பிறவிப் பெருங்கடலை நீந்துவது பற்றி வள்ளுவர் பத்தாவது குறளில் பாடுகிறார். ஆனால் சம்ஸ்கிருதம் முழுவதும் பிறவிப் பெருங்கடலை கப்பலிலோ அல்லது படகிலோ கடப்பது பற்றியே பாடுகின்றனர் ; வள்ளுவன் ‘பக்கா’ நீச்சல் பேர்வழி போலும்!

என் அம்மா இறந்து போன செய்தி, நான் லண்டனில் இருந்தபோது வந்தது. எல்லாக் கிரியைகளையும் வழக்கமான நாட்களில் முடியுங்கள்; நான் மூன்றாவது நாள் கிரியை முதல் கலந்து கொள்கிறேன் என்று டெலிபோனில் சொல்லிவிட்டு, விமானத்தில் பறந்தேன். எனக்காக அங்கேயுள்ள பிராமணர்கள் மூன்று நாள் கிரியைகளை மீண்டும் ஒரு முறை சுருக்கமாக செய்துவைத்தார்கள் . பெரும் வெளிநாட்டுத் தலைவர்கள் டில்லியில் வந்து இறங்கியவுடன் நமது தேசீய கீதத்தை முழு க்கவும் இசைக்காமல் சுருக்கமாக இசைப்பார்கள் ABRIDGED VERSION OF NATIONAL ANTHEM  ; அது போல எனக்கு சுருக்கமான மந்திரம்.

 13 நாள் கிரியைகளில் எந்த நாள் என்று நினைவில்லை. ஈமச் சடங்கு  செய்யும் இடத்தில் ஒருநாள் அந்த புரோகிதர்கள் வாழை இலை , அதன் மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிறிய கப்பலை , படகை செய்து வைத்திருந்தார்கள். துக்கமான ஒரு நிகழ்ச்சியிலும் என ஆர்வமும் ஆராய்ச்சியும் வெளிக்காட்டின .

சுவாமிகளே ! இது என்ன ஈமச் சடங்கில் கப்பல் பொம்மை எதற்காக? என்று கேட்டேன். அம்மாவின் ஆவி நதியைக் கடந்து போக வேண்டும் இல்லையா ? என்றார் புரோகிதர். இப்படி எகிப்திலும் சில விஷயங்கள் வருவது கண்டு வியந்தேன். அதை விட  வியப்பு .ரிக் வேதத்தில் நேற்று அந்த கப்பல் விஷயத்தை படித்தபோது ஏற்பட்டது:-

வேள்விக் கப்பல் உவமை – 10-44-6;

இறந்தவனுக்கான  கப்பல் 10-56-7; 10-58-5

விண்கப்பல் – 10-63-10;

புறநானூறு சொல்லும் வலவன் ஏவா வானவூர்தி PILOTLESS PLANE OR DRONE  ; கண்ணகியை ஏற்றிச் செல்ல கோவலன் கொண்டுவந்த விண்கப்பல் (காண்க- வஞ்சிக் காண்டம் -சிலப்பதிகாரம் ; ALSO வனபர்வம் -மஹாபாரதம் PILOTED SPEACE SHIP )

XXXX

10-59-7; 10-58-5;

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் பிராமணர்கள் ஈமச் சடங்கில் ஓதும் மந்திரங்களில் 3 விஷயங்கள் வருகின்றன.

1.இறந்தவர்களின் ஆவி ஒளி ரூபத்தில் பயணம் செய்வது

2.கப்பலில் சென்று கரைகடப்பது ; சில நேரங்களில் விண்கப்பல்- சில இடங்களில் கடல்- கப்பல்

3.மீண்டும் வருக என்று ஆவியை அழைப்பது (மறு  பிறப்பு)

அர்ஜுனனை மாதலி என்பற பைலட் / PILOT OF SPACE SHIP விண்வெளி விமானி , இந்திரலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் காட்சி மஹாபாரத வன பாவத்தில் வருகிறது. அங்கு ஒளி ரூபத்தில் பலர் உலவுவதைக் கண்டு அர்ஜுனன் ஆச்சர்யத்துடன் வினாத் தொடுக்கிறான்.

அதற்கு அர்ஜுனனுக்கு PILOT OF SPACE SHIP MR MATHARI/ LI ஸ்பேஸ் ஷிப் பைலட் மாதரி பதில் கொடுக்கையில் “இவர்களைத்தான் நீங்கள் பூமியில் நட்சத்திரங்களாகப் பார்க்கிறீர்கள்” என்கிறான். இதை என்னால் விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியாது. ஆயினும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் எல்லோரும் நடசத்திரத் துகல்களில் இருந்து பிறந்ததை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். (WE ARE ALL STAR DUST)  இதை பி பி.சி ஸ்கை அட் நிகழ்சசியில் பிரிட்டிஷ் ஆஸ்தான விண்வெளி அறிஞர் பாட்ரிக் மோர் (PATRICK MOORE , SKY AT NIGHT, BBC) சொன்னபோது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே ! இது மஹாபாரத  வன பர்வத்தில் உள்ளதே என்று  (இது பற்றி முன்னரே இங்கு நிறைய எழுதியுள்ளேன் )

XXXX

பிராமணர்  வீட்டில் நடுகல்

எனக்கு மிகவும் சின்ன வயது; அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டது மட்டும் காதில் விழுந்தது; கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. தாத்தா இறந்து போனார், அவருடைய ஆவிக்கு இருட்டுப் பாதையில் வழி    காட்டுவதற்காக, நாங்கள் பேரப் பிள்ளைகள், நெய் பந்தத்தை ஏந்தி நிற்க, கோவிந்த கோவிந்த என்ற முழ க்கத்துடன் XXXXXX தூக்கினர் (அமங்களச் சொற்களை எழுதக் க கூடாது); சுடுகாட்டுக்கும் அப்பாவுடன்  போனேன்; தகனக் கிரியை முடிந்தது. வயதான தாத்தாதான். அப்படியும் என் அப்பாவின் கண்ணில் சிறு துளிகள் வழிந்தன. அந்த துக்ககதர நிகழ்ச்சியில் அந்த வெட்டியான் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன.

“சாமி, ஒரு கவலையும் இல்லாமல் போங்க சாமி. நாளைக்கு காலைல வாங்க; மல்லி கைப் பூப் போல சாம்பல் (அஸ்தி) தரேன்”. என்ன தொழில் சுத்தம் பாருங்கள். அவன் தொழில் சடலத்தை எரிப்பது; சாம்பல் தருவது ; அதிலும் அவன் 100 சதவிகித பெர்பெக்ஷன் CENT PERCENT PERFECTION IN HIS JOB பற்றிப் பேசுகிறான் !!

மல்லிகைப்  பூ போல தாத்தா சாம்பல் !!!

சப்ஜெக்டுக்கு வருகிறேன். எங்கள் அம்மாவும் அப்பாவும் பேசியது :

கல்லை எங்கே புதைப்பது?

என்ன கல் ? என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நாங்கள் வசித்ததோ மதுரை வடக்கு மாசி வீதியில் 20ம் எண் வீடு; பைரவப் பிள்ளைக்குச் சொந்தமானது; நாங்கள் பணக்காரர் அல்ல. வாடகைவீட்டில் எங்கே கல் புதைப்பது? என்று அவர்கள் கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. இதற்கு எப்போது அர்த்தம் புரிந்தது தெரியுமா?

லண்டனிலிருந்து பறந்து சென்று என் அம்மாவின் ஈமக்ரியைகளில் கலந்து கொண்டது பற்றிச் சொன்னேன் அல்லவா? அங்கும் ஒரு கல்லை வைத்து பல நாள் மந்திரங்கள் சொல்லி அந்த சடங்குகள் நடந்த இடத்திலேயே என் அண்ணனை கொண்டு புதைக்கச் சொன்னார் சாஸ்திரிகள் (வீட்டுப் புரோகிதர்); அதுவரை நான் நடுகல் (HERO STONES)  புதைக்கும் வழக்கம் பழந்தமிழர் இடையே மட்டும் இருந்தது என்று எண்ணி இருந்தேன். நடுகல் பற்றி இரண்டு தொல் பொருட் துறை புஸ்தகமும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த நடுகல் நம் இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது- அதை கிறிஸ்தவர்கள் (EPITAPH IN BURIAL GROUNDS) , முஸ்லீம்களும் பின்பற்றி இறந்தோர் இடத்தில் கல் புதைக்கின்றனர் என்பது இப்போது புரிகிறது..

XXX

ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளை மட்டும் காண்போம்:

10-15-3

நான் கருணைமிக்க பிதாக்களை (இறந்து போன முன்னோர்கள்) – அடைந்தேன் . நான் விஷ்ணுவிடமிருந்து புதல்வனையும், வம்ச விருத்தியையும் பெற்றேன்; சோம ரசத்தைக் குடித்து இன்புறும் அவர்கள் இங்கே –  பூமிக்கு– அடிக்கடி வருகிறார்கள்; இந்த தர்ப்பைப் புல்லின் மீது அமர்கிறார்கள்.

திருக்குறள்

10-15-6

இங்கே கால்களை மடித்து தெற்குப் பக்கத்தில்  உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்த அவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் . பிதாக்களே ; மனிதர்களின் பலவீனம் காரணமாக நாங்கள் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால் அத்தற்காக எங்களைத் தண்டித்துவிடாதீர்கள் .

இறந்தோர் தென் திசையில் வாழ்வதை வள்ளுவரும் தென்புலத்தார் என்று குறிப்பிடுகிறார்.(குறள் 43)

அவி /ஹவிஸ் HAVIS  என்பதையும் 259, 413 குறள்களில் பயன்படுத்துகிறார்.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச்  சொற்களை முதல் 50 குறள்களில் வள்ளுவர் அள்ளித் தெளிக்கிறார். பிற்காலத்தில் சில திராவிடங்கள் உளறிக்கொட்டி கிளறி மூ டும் என்பதை அறிந்து ரிக் வேதச்  சொற்களான ஹவிஸ், தென்புலத்தார், அமிர்தம், தெய்வம்  ஆகியவற்றையும் வள்ளுவர் பயன்படுத்தினார்.

மேற்கூறிய குறிப்புகள் மறு  உலகம் ஒன்று உண்டு, அது தென் திசையில் இருக்கிறது; அங்குள்ள நம் முன்னோர்கள், நாம்  அழைக்கும்போது பூமிக்கு வந்து நெய் கலந்த சோற்று உருண்டை/ ஹவிஸ், எள் , நீர் ஆகியவற்றை ஏற்பது தெரிகிறது. பிராமணர்கள் ஆண்டுக்கு குறைந்தது 24 முறை- அதிகமாக 94 முறை – இப்படி இறந்துபோன முன்னோர்களை வீட்டுக்கு அழைத்து  எள்ளும் நீரும் இறைப்பதைக் காணலாம். (நான் லண்டனிலும் இதைச் செய்கிறேன்; ஹவிஸ் மட்டும் திதி என்று வருடத்துக்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. முற்காலத்தில் இதை மக்கள் தினமும் செய்தனர் என்பது குறள் 43ல் வரும் பஞ்ச யக்ஞம் மூலம் வெளிப்படுகிறது.

தொடரும்…………………….

tags– புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை ,

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!(Post No.10,174)

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!    (Post No.10,174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,174

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நம்முடைய பிளாக் Blog கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் ஒருவர் வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை பற்றி இல்லையாமே, இவை எல்லாம் புத்த, ஜைன மதத்திலிருந்து வந்ததாமே ! இது உண்மையா என்று கேட்டிருந்தார் .

சுருக்கமான பதில்- ரிக் வேதம் உலகில் பழமையான புஸ்தகம். அதிலேயே இந்தக் கருத்துக்கள் உள்ளன.அதைத் தொடர்ந்து வந்த பிராமணங்கள் என்னும் நூல்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவற்றில் தெள்ளத் தெளிவாக, ஐயம் திரிபற, இந்த விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் புத்த, ஜைன மதநூல்களுக்கு முற்பட்டவை என்பதைத் ‘தள்ளிப்போன வெள்ளைக்காரர்களும்’ ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே இவை இந்து மதத்திலிருந்து ஏனைய கீழ்த்திசை மதங்களுக்கு — அதாவது இந்து மதத்தின் கிளை மதங்களுக்குச் சென்றன என்பதே உண்மை.

முதலில், காலக் கணிப்பை எடுத்துக்கொள்வோம். நமது பஞ்சாங்கமும் மத நூல்களும் சொல்லும் கருத்துக்களை ஏற்காத– எதிர்த்துப் பேசுவோர்– சொல்லும் கருத்துக்கள் இவை என்பதை முதலில் நாம் மனதிற் கொள்ளவேண்டும் ;  நமது பஞ்சாங்கங்கள் கி.மு 3102-ல் கலி யுகம் துவங்குவதாகச் சொல்லுகின்றன சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. அதன்படி பகவத் கீதை அதற்கு முந்திய நூல். அதில் இரண்டாவது அத்தியாயத்தில் மறு பிறப்பு, கர்ம வினை என்பன தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஒரு வேளை கீதையின் காலத்தைச் சந்தேகிப்பவர்கள், வேறு சில ஆதாரங்களைக் கேட்கலாம். பிருஹத் ஆரண்யக உபநிஷத் மற்றும் சதபத பிரா(ஹ்)மணம் முதலிய நூல்களில் இருப்பதை வெளிநாட்டோரும் ஒப்புக் கொள்வதோடு அந்த நூல்களுக்கு கி.மு.850 அல்லது 800 என்றும் தேதி குறித்துவிட்டனர். அப்படிப்பார்த்தாலும் புத்தர், மஹாவீரர் முதலியோருக்கு முன்னரே இது எழுத்து வடிவில் வந்து விட்டது.

ரிக் வேதத்தில் உள்ளது

இந்து மத நூல்கள் பெரிய சமுத்திரம் போல விரிவானவை ; எவரேனும் அவை முழுவதையும் படித்திருக்க முடியுமா என்று கேட்டால் நான் இல்லை என்றே சொல்லுவேன். ஆனால் ஏனைய மத நூல்களை ஒரே நாளில் பிடித்துவிடலாம். மேலும் நமது நூல்கள் மிகவும் அப்டேட் Update  ஆனவை. வேதம் தவிர மற்ற எல்லா நூல்களையும் நம் முன்னோர்கள் Update அப்டேட் செய்துள்ளனர்- புதுமைப்படுத்தியுள்ளனர். சில விஷயங்களை விளக்கத்துக்காக சேர்த்துள்ளனர். வெளிநாட்டார் கடைசியில் சேர்க்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து தேதி குறிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இந்துமதத்தைப் பின்பற்றாதவர்கள், அதில் சொல்லிய கருத்துக்களை நம்பாதவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களை அப்பணியில் பணம் கொடுத்து  ஈடு  படுத்தியவர்கள் ‘கிறிஸ்தவ மத கொள்கைகளை வலியுறுத்த உம்மை இப்பணியில் நியமித்துள்ளோம்’ என்றும் எழுத்து வடிவில் எழுதியும் வைத்துவிட்டனர். நம் வீட்டு எதிரி– குடும்ப எதிரி — நம் குடும்பத்திலுள்ளோர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொன்னால் நாம் உடனேயே அவைகளை உதறித் தள்ளிவிடுவோம். அது போல எதிரிகளின் கருத்தை ஏற்க வேண்டியது இல்லை.

அது சரி, ஒரு இந்து மத அன்பர், உண்மையிலேயே இது பற்றி தெரிந்து கொள்ள நம்மை அணுகினால் நாம் என்ன சொல்லுவோம்? இதோ பதில்.

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மரணம், இறுதிச் சடங்கு, மக் கிரியைகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. அவற்றில் இக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. இந்த மந்திரங்களை இன்றும் ஒருவர் இறந்தபின்னர் முதல் 13 நாட்களின் சடங்குகளில் பிராமணர்கள், பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஈமக் கிரியை விஷயங்களை எவரும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொவதில்லை. ஆனால் மிகவும்  வியாப்பான விஷயம், ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பாடும் பாட்டுக்களில் கூட  இந்தக் கருத்துக்கள் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

ரிக்வேத மந்திரங்களில் நுழைவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்த ஓரிரு விஷயங்களை சொல்லுகிறேன்.. முப்பது வருடங்களுக்கு முன்னால் — அதாவது 1987ல் பிரிட்டிஷ் அரசு என்னை லண்டனுக்கு பி.பி.சி . தமிழோசை ஒலிபரப்புக்கு அழைத்ததற்கு முன்னால்— நான் மதுரை ஜில்லா ஆர்.எஸ்.எஸ் கார்யவாஹ் (மாவட்டச் செயலர்) பொறுப்பில் இருந்தேன். மேலூர், உசிலம்பட்டி , திருமங்கலம், கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் முதலிய இடங்களுக்குச் சென்று ஆர். எஸ்.எஸ். கிளைகளைத் துவக்குவது, கூட்டங்களில் பேசுவது முதலியன வழக்கமான பணிகள் . ஒருமுறை உசிலம்பட்டி சென்றபோது பஸ் நிலையத்தில் பஸ்  நின்றவுடன் ஜன்னல் வழியாக கையை நுழைத்து காசு கேட்டு நச்சரித்தவன் கையில் ஒரு சிப்பலா க்கட்டையை வைத்து அடித்துக் கொண்டு பாடிய பாடல் என்னை அசத்திவிட்டத்து ; உபநிஷத்திலும் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலும் சொல்லும் கருத்துக்களை அவன் நாட்டுப்புற பாடலாகப் பாடுகிறான். கையில், பையில் இருந்த பணத்தில் ஊர் போய்ச்  சேரத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு  மிச்சத்தை அவன் கையில் போட்டேன் .

Xxx

லண்டனில் நான் BBC பி.பி.சி ஒப்பந்த வேலை பார்த்தது ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அதற்குப் பின்னர்  நான் பார்த்த பகுதி நேர வேலையில் ஒன்று, பிரபல ஆஸ்பத்திரியொன்றின் மொழிபெயர்ப்பாளர் வேலை. அதில் ஒரு புற்று நோய் நோயாளி இறக்கப்போகிறார் என்பதை அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அறிவிக்கும் நாள் வந்தது. இங்கெல்லாம் இவ்விஷயத்தை பட்டவர்த்தனாமாக்ச் சொல்லி விடுவார்கள். ஆனால் பக்குவமாக, சுற்றிவளைத்து, ஒரு மணிநேரம் பேசிவிட்டு, மிகவும் அழகாகச் சொல்லுவார்கள். அந்த SPECIALIST NURSES ஸ்பெஷலிஸ்ட் நர்ஸுகள்  இருவர், முதலில் குடும்பத்தினரை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்லி உயில் முதலியவற்றை எழுதச்  சொல்லுங்கள், அவருக்குக்ப் பிடித்த விஷயங்களைக் கேட்டு அதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் விக்கி விக்கி அழுதனர்.

பிறகு நோயாளியிடம் வந்து ஒரு அரை மணிநேரம் பேசிய பின்னர் விஷயத்தை உடை த்தோம் . அவர் அழ வும் இல்லை ஷாக் ஆகவும் இல்லை. “ஆமாம், ஆமாம், காடு வா,வா என்கிறது ;வீடு போ, போ, என்கிறது; போகத்தா னே வேண்டும்; எல்லாம் முடித்துவிட்டேனே” என்றார் . அவர் சொன்னதை நான் அ ப்படியே மொழி பெயர்த்துச் சொன்னேன். நர்ஸுகள்  லண் டன் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை . ஆள் மூளை குழம்பிவிட்டதோ என்று என்னைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு சுருக்கமாக வானப்பிரஸ்தம் என்னும் இந்துக்களின் மூன்றாவது கட்டத்தைச் சொல்லி வயதான இந்துக்கள் இதை அடிக்கடி வீட்டில் சொல்லுவார்கள். அவரும் மரணத்தை எதிர்கொண்டு மறு உலகத்துக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்று.

அந்த வெள்ளைக்கார நர்ஸுகளுக்கு எவ்வளவு புரிந்ததோ கடவுளுக்கே வெளிச்சம். உசிலம்பட்டி பஸ்  நிலைய பிச்சைக்காரனோ இறந்து போன புற்று நோய்காரனோ  பகவத் கீதையையோ பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தையோ படித்திருக்க மாட்டார்கள். ஆனால்  அவர்களுடைய மரபணுவில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊன்றிய வேத தத்துவங்கள் வெளிப்படுகின்றன என்றே நான் சொல்லுவேன்.

மரணம் தொடர்பாக உள்ள மந்திரங்களை வெள்ளைக்கார்களும் கூட விளக்காமல் அப்படியே மொழி பெயர்த்துவிட்டனர். நான் ரிக் வேதத்தில் 9000 மந்திரங்களுக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் சுமார் 1000 மந்திரங்களே பாக்கி. இதுவரை படித்த ஈமச் சடங்கு மந்திரங்களுக்கு பல இடங்களில் அர்த்தம் புரிவதில்லை.  பல மர்மமான புரியாத விஷயங்களைப் பேசுகினன்றனர் . ஆகவே இந்து மதம் பற்றிப் பேசுவோர் அதை முழுமையாக அறியவில்லை .

எங்கள் வீட்டுக்கு வாரம் தோறும் பிச்சை எடுக்க ஓர் நாமம் போட்டவர் வருவார். இராமனின் பெயரைச் சொன்னால் ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே என்ற கம்ப ராமாயணப்  பாடலை வாசலில் நின்று பாடுவார். உடனே சகோதரர்களில் ஒருவர் ஓடிச் சென்று அவர் பாத்திரத்தில் ஒரு பிடி அரிசி அல்லது ஒரு அணா காசு போடுவோம். கொஞ்சம்  தாமதமானால் அவர் அந்தப்பாடலை உரத்த குரலில் பாடி எங்களை மிரட்டுவார். நாங்கள் அண் ணன் தம்பி களுக்குள் ஜோக் அடித்துக் கொள்ளுவோம்; ஏய் , அதிகார ப் பிச்சைக்காரன் வந்துட்டான் ; அவன் அதிகாரம் செய்து அதட்டுவதற்குள் காசு போடுவோம் என்று பேசிக் கொள்வோம். அவர் பாடிய இராமன் என்னும் இரண்டு எழுத்தினால் ஜென் மமும் மரணமும் இன்றித் தீருமே என்பது இன்றும் காதில் ரீங்காரமாக ஒலிக்கிறது. யார் இவர்களுக்கு எல்லாம் இந்த உயரிய தத்துவங்களைச்  சொல்லிக் கொடுத்தார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தில் யார்  ஏற்றிவிட்டார்கள் ?

அமிர்தம்

காலா காலமாக நாம் நம்பும் விஷயங்கள் இவை. இதற்குப்  பெரிய ஆதாரம் “அமிர்தம்” என்ற சொல்லில் இருக்கிறது. இந்த சம்ஸ்கிருதகி  சொல் சங்க இலக்கியத்திலும் உளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய இந்தச் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான முறைகள் வரும்.

 இந்த அமிர்தம் என்பது என்ன காட்டுகிறது? மரணமில்லாப் பெரு வாழ்வு தரக்கூடியது அமிர்தம்.

எங்கே? இறைவனின் திருப்பாதத்தில் அல்லது சொர்க்கத்தில். அது கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்ற கருத்து ரிக் வேதம் முழுதும் இந்தச்  சொல்லால்  எதிரொலிக்கப்படுகிறது.

TO BE CONTINUED……………………

XXXXX

  tags –புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை,  ,ரிக்வேத,ம் 

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் (Post No.5486)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 September 2018

 

Time uploaded in London – 6-11 AM (British Summer Time)

 

Post No. 5486

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!

ச.நாகராஜன்

1

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; இந்தியாவில் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கிறிஸ்தவ பாதிரிகள் மும்முரமாக ஈடுபட்டு கோடிக் கணக்கில் டாலர்களைத் திரட்டுவதற்கான காரணம் அவர்களின் முதலுக்கே மோசம் வந்ததால் தான்!

 

மேலை நாடுகளில் இன்று ஏராளமானோர் மறுபிறப்பு நம்பிக்கை கொண்டு மறுபிறப்பு கொள்கை பற்றி அறிய மிகுந்த ஆவல் கொண்டு ஹிந்து மதத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

 

இது அடிப்படையையே ஆட்டம் காண வைப்பதால் ஹிந்து மதத்தின் மீது  ஒரு மோசமான வெறுப்பை கிறிஸ்தவ பாதிரிகள் கொண்டுள்ளனர்.

 

ஆனால் மறுபிறப்பு நம்பிக்கையை நூறாண்டுகளுக்கு முன்பேயே  மேலை நாட்டில் பல பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கொண்டிருந்தனர் என்பதை ஆதாரபூர்வமாக  வரலாறு நிரூபிக்கிறது.

மறுபிறப்பு நம்பிக்கையே தனது வெற்றிக்குக் காரணம் என்று அழகுறச் சொன்னவர் ஹென்றி போர்ட். மோட்டார் மன்னன் என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படும் போர்ட் வாழ்க்கை சுவை தரும் ஒன்று.

 

 

2

 

ஹென்றி போர்ட் (பிறப்பு 30-7-1863 மறைவு 7-4-1947) தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே San Francisco Examiner என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

 

I adopted the theory of Reincarnation when I was twenty six. Religion offered nothing to the point. Even work could not give me complete satisfaction. Work is futile if we cannot utilise the experience we collect in one life in the next. When I discovered Reincarnation it was as if I had found a universal plan I realised that there was a chance to work out my ideas. Time was no longer limited. I was no longer a slave to the hands of the clock. Genius is experience. Some seem to think that it is a gift or talent, but it is the fruit of long experience in many lives. Some are older souls than others, and so they know more. The discovery of Reincarnation put my mind at ease. If you preserve a record of this conversation, write it so that it puts men’s minds at ease. I would like to communicate to others the calmness that the long view of life gives to us.

 

 

“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை. ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டுகொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை. மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர்  மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது. இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே

போர்ட் கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.

 

இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

 

3

அமெரிக்காவின் 25வது ஜனாதிபதியான வில்லியம் மக் கென்லி (William McKinley) (பிறப்பு : 29-1-1843 சுடப்பட்டு மரணமடைந்த தேதி 14-9-1901) 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி 50000 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டார். அவரைக் கொலை செய்ய முயன்ற ஜொல்காஸ் (Czolcosz) அது முடியாமல் போகவே மறுநாள் அவர் டெம்பிள் ஆஃப் மியூசிக் மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த போது அவர் அருகில் வந்து அவரது அடிவயிற்றில் இரு முறை சுட்டான். மரண காயமடைந்த மக்கென்லி செப்டம்பர் 14ஆம் தேதி மரணம்டைந்தார்.

அவரது இறுதிச் ச்டங்கில் கலந்து கொள்ள வந்தார் போர்ட். அப்போது அவரது நண்பரான ஆலிவர் பார்தெல் (Oliver Barthel) என்பவர் அவரிடம் ஆர்லாண்டோ ஸ்மித் (Orlando Smith)  எழுதிய “A Short view of the Great Questions and Eternalism : A Theory of Infinite Justica”  என்ற புத்தகத்தை அளித்தார். இரு தொகுதிகள் அடங்கிய அந்த நூல் மறுபிறப்பு பற்றி நன்கு விளக்கும் ஒரு நூல். அதை நன்கு ஊன்றிப் படித்தார் போர்ட். அவரது மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இன்னும் ஆழமானது. இதை போர்டின் வாழ்க்கை வரலாறை எழுதிய வின்செண்ட் கர்சியோ (Vincent Curcio) ‘ஹென்றி போர்ட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

 

4

இது போல ஏராளமான மேலை நாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தொழிலதிபர்களும், சாமானியர்களும் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் ஏராளமானோர் அறிவுக்கு இணக்கமான, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட இந்த நம்பிக்கையைக் கொள்வதில் ஆச்சரியம் இல்லை!

 

இது கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேர் கொள்கையான, ‘பிறப்பு ஒன்றே; பின்னர் மீளாத் துயில் தான்’ என்பதை ஆட்டம் காணச் செய்வதால் பாதிரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதிலும் ஆச்சரியம் இல்லை!!

***

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2 (Post No.3266)

1935-valluvar

Written by S. NAGARAJAN

Date: 19 October 2016

Time uploaded in London: 6-31 AM

Post No.3266

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் வள்ளுவர், பிறப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி அறுப்பது என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறார். மறுபிறப்புத் தத்துவம் பற்றிய இறுதிக் கட்டுரை இது. முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு பின்னர் தொடரவும்.

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

ச.நாகராஜன்

 

punul-valluvar

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.

 

 

தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.

ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

 

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி                   விழிப்பது போலும் பிறப்பு       (குறள் 339)

 

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

 

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

 

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது

வேண்டாமை வேண்ட வரும்       (குறள் 362)

 

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                                 இறைவனடி சேராதார்        (குறள் 10)

 

 

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும்.

இல்லையேல் இல்லை தான்!

 

 

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.

முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

 

 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

 

 valluvar-iyengar

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்    (குறள் 349)

 

 

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

 

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

 

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351) 

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

 

உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

 

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது?

இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்

 valluvar-gold

முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.

அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

 

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி!

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.

 

பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.

பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.

 

இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு!

ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!

 

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

 

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

 

எவ்வளவு பாக்கியசாலிகள்!

 

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

****************

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.

 

மறு பிறப்பு பற்றி பிரமுகர்கள் நம்பிக்கை!

napoleon

Written  by  S NAGARAJAN

Date: 3 November 2015

Post No:2296

Time uploaded in London :–  8-11 am

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடர்

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 30-10-2015 இதழில் வெளி வந்த கட்டுரை இது. இந்தத் தொடர் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வருகிறது.

மறு பிறப்பு பற்றிய சிந்தனையாளர்கள், கவிஞர்கள், தளகர்த்தர்களின் நம்பிக்கை!

 

.நாகராஜன்

வருந்தாதே. நீ இழப்பது இன்னொரு உருவத்தில் வந்து விடும்!” – ரூமி

உலகின் தலை சிறந்த தளகர்த்தர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மறுபிறப்பின் மீது அபாரமான நம்பிக்கை கொண்டவர்கள்.

 

நெப்போலியன் தன் படையை வழி நடத்திச் செல்லும் போது படை நடுவில் ஆவேசத்துடன் குதிரையின் மீது எழுந்து நின்று இரு கைகளையும் உயர்த்திநான் சார்லி மாக்னே நான் சார்லி மாக்னேஎன்று உரக்கக் கூவுவானாம். (மாவீரனான சார்லிமாக்னே மேற்கு ஐரோப்பா முழுவதையும் ஒன்று படுத்தியவன். நெப்போலியனுக்கு பல நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்தவன்). நெப்போலியனின் ஆவேசத்தைப் பார்க்கும் அவன் படைவீரர்கள் உக்கிரத்துடன் போரிடுவார்களாம்!

 

 

அடுத்து அமெரிக்க ராணுவ தளபதியான திறமைவாய்ந்த ஜார்ஜ் பேட்டன் சரித்திரத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர். இரண்டாம் உலகப் போரில் அவரது சாகஸ செயல்கள் பற்றிய ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. பேட்டன் என்ற படம் தலையாயது. பேட்டன் தனது ஆறு முந்தைய ஜென்மங்களை வரிசையாகக் கூறுவாராம். நெப்போலியனின் படையில் தான் பணி புரிந்து போர்க்களத்தில் போரில் உயிர் துறந்ததை அவர் கூறியதுண்டு. நேரம் வாய்க்கும் போதெல்லாம் தனது மறுபிறப்பு நம்பிக்கையை அவர் வலியுறுத்திக் கூறுவார்.

 

 dante

இத்தாலிய கவிஞனான தாந்தேக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. கவிஞர்கள் டென்னிஸன். ப்ரௌனிங், கிரேக்க சிந்தனையாளர்கள் சாக்ரடீஸ், ப்ளேடோ ஆகியோரும் மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்களே. லியனார்டோ டா வின்ஸி, வால்டேர், வாக்னர், ஹென்றி ஃபோர்ட், எடிஸன், எமர்ஸன், ரஸ்கின், பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் ஆகியோரும் இதில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தவர்கள்.

 

 

எட்கர் கேஸ் 3000 மறுபிறப்பு கேஸ்களை சுட்டிக் காட்டி இருப்பது உலக பிரசித்தமான தொகுப்பு நூலானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வேறொரு நாட்டில் இறந்து போய் அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கல்லறையைச் சரிபார்ப்பது வரை இவரது முன் ஜென்ம கேஸ்கள் பலராலும் தீவிரமாக ஆராயப்பட்டு சரிதான் என்று கண்டுபிடிக்கப்பட்டன.

 

தியாஸபி இயக்கம் எனப்படும் பிரம்மஞான சபை இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கியவுடன் மேடம் ப்ளாவட்ஸ்கி, அன்னிபெஸன்ட் ஆகியோர் மறுபிறப்பிற்கான காரணங்களை விரிவாக விளக்கி உலகெங்கும் பேசினர். அன்னிபெஸண்ட் எழுதியரீ இன்கார்னேஷன்என்ற 96 பக்கம் கொண்ட சிறு நூலில் மறுபிறப்பிற்கான ஆட்சேபங்களாக ஐந்தையும் அது உண்டு என்பதற்கு 14 காரணங்களையும் தெளிவாக விளக்குகிறார். நூறு குருடர்களின் ஆயிரம் வார்த்தைகளை விட நேரில் பார்த்து ஒன்றை விளக்கும் பார்வையுள்ளவனின் ஒரு வார்த்தை பொருள் பொதிந்தது என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

 Adolf_Hitler_42_Pfennig_stamp

ஹிட்லரின் ஆராய்ச்சிகள் எப்போதுமே சற்று ஆழமானவையாகவும் விசித்திரமானவையாகவும் இருக்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் ஐவர் அடங்கிய குழு ஒன்று 1946ஆம் ஆண்டு ஹிட்லர் என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்தார் என்பதை அறிவதற்காக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் டி லஸ்டிக் (Dr Robert T Lustig). இவர் எலக்ட்ரோ பயாலஜியில் பெரும் நிபுணர். இவர் ஜெர்மனி சென்று ஹிட்லர் செய்த ஆய்வுகளைக் கண்டு பிரமித்துப் போனார். அவற்றில் முக்கியமான சுவையான ஆய்வு ஃப்ராங்க்பர்ட்டில் உள்ள கெய்ஸர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட் டைரக்டரான டாக்டர் பி ராஜேஸ்வ்ஸ்கி (Dr B Rajewski) செய்த ஆராய்ச்சிகளே.

 

 

ராஜேஸ்வ்ஸ்கி மூளை, நரம்பு மண்டலம் மூலமாக செய்திகளை அனுப்புகிறது என்ற பாரம்பரிய கொள்கையை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ரேடியோ ஒலிபரப்பு போல நேரடியாக செய்திகள் மூளையிலிருந்து உடல் அங்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றார். இதற்கான சோதனைச்சாலை ஆதாரங்களையும் அவர் வைத்திருந்தார். இந்த முடிவுகள் வியக்கத்தக்க ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் பற்றிய தீர்க்கமான உண்மைகளைத் தந்திருக்கும். ஆனால் உலக யுத்த முடிவில் அரைகுறையாக கைவிடப்பட்ட ஹிட்லரின் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகளுள் இதுவும் ஒன்றானது.

 

ஹிந்து மத யோகிகளை எடுத்துக் கொண்டால் பல ஆயிரம் பக்கம் மறு ஜென்மத்திற்கென்றே ஒதுக்க வேண்டும். அமெரிக்காவை மிகவும் கவர்ந்த யோகாதா சத் சங்கத்தை நிறுவிய பரமஹம்ஸ யோகானந்தா தனதுஆயோபயாக்ராபி ஆஃப் யோகி’ (Autobiography of a Yogi) நூலில் தரும் சம்பவம் சுவையானது.

 

அவருக்குத் தெரிந்த ஒரு பையன் சீக்கிரமாகவே இறக்கப் போகிறான் என அவருக்குத் தெரிந்து விட்டது. அந்தப் பையன் பெயர் காசி. அவன் யோகானந்தரிடம் நான் அடுத்த பிறவி எடுக்கும் போது எங்கு பிறந்திருந்தாலும் என்னைக் கண்டுபிடித்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வாக்குறுதியை வாங்கிக் கொண்டான்சில நாட்கள் கழித்து பொல்லாத விதிப்படி அவனது மரணம் சம்பவித்தது. சில காலம் சென்ற பின்னர், யோக முறை மூலம் ஆவி உலகில் சஞ்சரித்த யோகானந்தர், காசி மறு பிறவி அடைந்து விட்டானா என்று பார்த்தார். அவரது உள்ளுணர்வு அவன் சீக்கிரமே பிறக்கப் போகிறான் என்று கூறியது.

 yogananda

 

ஆனால் எங்குஎப்போது பிறக்கப் போகிறான்?

ஒரு நாள் யோகானந்தர் கல்கத்தா தெரு ஒன்றின் வழியே சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவரது உணர்வில்நான் காசி, இங்கு இருக்கிறேன்என்று தெளிவான குரல் ஒலித்தது.

 

காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல தன் சகாக்களுடன் ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்தார் யோகானந்தர். அந்த வீட்டு எஜமானிக்கு பிரசவ சமயம். யோகானந்தர் காசி பிறக்கும் இடம் இது தான் என நிச்சயித்தார். வீட்டு எஜமானன், எஜமானியிடம் உங்களுக்குப் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று ஆரம்பித்து அங்க அடையாளங்களைத் தெளிவாகச் சொன்னார். அவன் ஆன்மீகப் பாதையில் நாட்டம் கொண்டு அதில் செல்வான் என்பதையும் கூறி விட்டுச் சென்றார். அதன் படியே நடந்தது. பிறந்த குழந்தை காசியின் மறு தோற்றம் போல இருக்க, சில காலம் சென்ற பிறகு அவன் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியானான்.

 

 

இது போன்ற சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. புனரபி ஜனனம் புனரபி மரணம் (மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு) என்ற ஆதி சங்கரின் வாக்கும் நவீன விஞ்ஞானிகளின் வாக்கும் ஒத்துப் போகும் நாட்களில் நாம் வாழ்கிறோம்.

மனிதப் பிறவியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என வாழ்க்கையில் சில நிமிடங்களேனும் சிந்திக்க வைக்க விஞ்ஞானிகளின் ஆய்வுகள் பெரும் தூண்டுகோலாக விளங்குகின்றன!

 

 Benjamin-Franklin

அறிவியல் அறிஞர் வாழ்வில்

அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரும் சிறந்த ராஜ தந்திரியும் விஞ்ஞானியும் மாபெரும் கண்டுபிடிப்பாளருமான பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளின் (1706-1790) மறுபிறப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். 84 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தனது 22ஆம் வயதிலேயே தனது கல்லறையில் பொறிக்க வேண்டிய வாசகத்தை இப்படி எழுதி வைத்தார்:

 

The Body of B. Franklin, Printer                                                 

Like the Cover of an old book                                                         

Its contents worn out,                                                            

And Stripped of its Lettering and Gilding,                                           

Lies here, Food for Worms,                                                              

But the Work shall not be wholly lost:                                                     

  For it will, as he believed,                                                            

Appear once more                                                               

In a new and more elegant Edition                                                           

Corrected by the Author

 

 

இதன் சுருக்கமான பொருள் இது தான்: பிரிண்டர் பெஞ்சமின் ஃப்ராக்ளினின் உடல் பழைய புத்தகத்தின் அட்டை போல உள்ளடக்கம் தேய்ந்து, எழுத்துகள் உரிக்கப்பட்டு மெருகு தேய்ந்து புழுக்களுக்கு உணவாக இங்கே இருக்கிறது. ஆனால் அது முழுவதுமாக தொலைந்து போகாது; ஏனெனில் அவர் நம்புவது போலவே அது மீண்டும் தோன்றும்அதை எழுதியவரால் சரி செய்யப்பட்டு ஒரு புதிய இன்னும் அதிக எழிலுடன் கூடிய பதிப்பாகத் தோன்றும்.

 

இறுதி வரை அவருக்கு மறுபிறப்பு பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது.

*********