பைரனின் உடைவாள் ஏலம் (Post No.7128)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-04 AM
Post No. 7128

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பைரன் என்னும் ஆங்கிலக் கவிஞரை பிரிட்டனை விட அதிகம் மதிப்பது கிரேக்க (Hellas= Greece) நாடுதான். அவருக்காக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தனர்.

லார்ட் பைரன் பாரதியாரைப் போலவே இலம் வயதில் மரணம் அடைந்தார். ஆனால் இலக்கிய உலகில் அழையாப் புகழ் பெற்றார்.

நான் 1992ம் ஆண்டில் நவம்பர் முதல் தேதி தினமணி பத்திரிக்கையில் எழுதிய ஆறு கட்டுரைகளில் பைரனின் உடைவாள் ஏலம் பற்றிய செய்தியைக் காண்போம்.

LORD BYRON

ENGLISH POET

BORN ON JANUARY 22, 1788

DIED ON April 19, 1824

Age at death 36

Publications

1807 Hours of Idleness

1809 English Bards and Scotch Reviewers

1812-18 Childe Harold’s Pilgrimage

1813 The Bride of Abydos

1817 Manfred

1818 Beppo

1819-24 Don Juan

1821 Cain

1822 The Vision of Judgement

My old articles on Byron

all the six articles were written by swaminathan in 1992.

Lord Byron | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › lord-byron

  1.  

10 Jan 2017 – Posts about Lord Byron written by Tamil and Vedas.

Byron | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › byron

  1.  

8 Aug 2018 – During one of Hobouse’s visit to Byron—Hobhouse was a College friend— at his villa near Genoa, and whilst they were walking in the garden, …

cccp = Soviet Union

வாளும் குண்டூசியும்; காந்தியும் நாதர்ஷாவும் (Post No.6753)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 17-
55

Post No. 6753

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

காந்திஜி மிகவும் சிக்கனம் கடைப் பிடிப்பவர். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பாலிஸியைக் கடைபிடிப்பவர். சிறு குண்டூசியும் பயன்படும் என்று அவர் சேகரித்த சம்பவம் இதோ.

ஏழு தலை முறை

வள்ளுவர் குறளிலும் சம்ஸ்கிருத நுல்களிலும் இந்துக்களின் 7 தலைமுறை பற்றி (எழுமை) நிறைய குறிப்புகள்  வருகின்றன். அதுபோல முஸ்லீம்களுக்கும் ஏழு தலை முறை நம்பிக்கை உண்டு போலும். அதைக் ,கேட்டவுடன் கோபம் கொண்ட நாதர்ஷா வாள் வம்சம் என்று ஏழு தலைமுறைக்கும் எழுதிக்கொள் என்று சொல்லி அனுப்பினாராம்.

இதோ 75 ஆண்டுகளுக்கு முந்தைய சக்தி மாத இதழ் துணுக்குகள்

பேனா முனையும், கத்தி முனையும்! சொல் வீச்சும் வாள் வீச்சும்! 2 சம்பவங்கள் (Post No. 2490)

pen_versus_sword

Written by london swaminathan

Date: 30 January 2016

Post No. 2490

Time uploaded in London :–  4-36 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact  swami_48@yahoo.com)

 

euripides

கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது! வில் முனையைவிட சொல் முனை வலியது என்பதை உலகம் அறியும். சோழ மன்னனை துச்சமாக மதித்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். போஜ ராஜனை கெஞ்சும்படி வைத்தான் உலக மஹா கவிஞன் காளிதாசன். கிரேக்க நாட்டிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளனின் சக்தி மிகப்பெரியதாக விளங்கியது. இதைக் காட்டும் இரண்டு சுவைமிகு சம்பவங்களைக் காண்போம்.

 

கிரேக்கர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையே மோதல் உருவானது. ரோமானியர்கள், ஏதென்ஸ் நகர அதீனீயர்களைச் சிறைப்பிடித்து சைரக்யூஸ் என்னுமிடத்தில் காவலில் வைத்தனர். போர்க் கைதிகளுக்குப் பொழுது போகவில்லை. கிரேக்க நாட்டின் கவிஞன், நாடகாசிரியன் யூரிபெடீசின் கவிதைகளை அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சொன்னார்கள். நாம் அந்தாதி விளையாட்டு விளையாடுவது போல, அவர்கள் உற்சாகம் காட்டினர். இதை காவற்காரர்களும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தார்கள்.

 

சாதாரணமாக கைதிகளை மிருகங்கள் போல நடத்தி, கண்ட வேலைகளைச் செய்யச் சொல்லுவது அங்கே வழக்கம். ஆனால் நாடகத்தில் வரும் கவிதையின் மஹா சக்தி, அந்தக் காவற்காரர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. இந்தச் செய்தி மேலதிகாரிகளுக்கும் போனது. அவர்களும் கைதிகளைத் தொடர்ந்து கவிதை வாசிக்கும்படி சொன்னார்கள். அந்தக் கைதிகளை, கவுரவ விருந்தாளிகளாக நடத்தி, பின்னர் விடுதலையும் செய்தார்கள்.

 

 

அதீனிய கைதிகள், ஏதன்ஸ் நகரத்துக்குத் திரும்பியவுடன் நேராக யூரிபிடீசின் வீட்டுக்குப்போய் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். வாள் முனையில் தோற்றாலும், பேனா முனையில் வெற்றி கிடைத்தது குறித்து யூரிபிடீசுக்கு ஏக சந்தோஷம். முன்னாள் கைதிகள் அவரை வணங்கி, ஐயன்மீர்! நீங்கள்தான் எங்களை விடுதலை செய்தீர்கள், உயிர் கொடுத்து காப்பாற்றினீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.

Xxx

 

sophocles

சோபோக்ளிசுக்கு விடுதலை!

கிரேக்க நாட்டின் புகழ்மிகு எழுத்தாளர்களில் ஒருவர் சோபோக்ளீஸ். அவர் சோகச் சுவை நாடகங்கள் எழுதுவதில் மன்னன். சதா சர்வ காலமும், அல்லும் பகலும் அனவரதமும் பேனாவும் கையுமாகத் திரிந்ததால், நிலபுலன்களையும், வீடு வாசலையும் அவர் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கவலைப் பட்டனர்.

 

அவர்கள் என்ன சொன்னாலும் இவரோ “நமக்குத் தொழில் கவிதை- நாட்டிற்குழைத்தல்” என்ற கொள்கையுடன் எழுதினார்- எழுதினார்- எழுதிக் கொண்டேயிருந்தார். பிள்ளைகளுக்குப் பொறுக்கவில்லை. அப்பா மீது வழக்குத் தொடுத்தனர்.

 

வழக்கு, நீதி மன்றத்துக்குச் சென்றது. மகன்கள் சொன்னார்கள்: “எங்கள் அப்பனுக்கு படிச்சுப் படிச்சு மூளை குழம்பி போச்சு; வீட்டு வாசல் நினைவும் தப்பிப் போச்சு. ஆகையால் இந்தக் கிழவனை கையலாகாத பயல் என்று அறிவித்து, அந்த சொத்து சுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை எங்களிடம் தர உத்தரவிட வேண்டுமென்று கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.

 

சோபோக்ளீஸ் நகைத்தார்; அப்பொழுதுதான் அவர் ஒரு அருமையான நாடகத்தை எழுதி முடித்திருந்தார். கையில் அந்த ஓலைச் சுவடிகள் இருந்தன. எடுத்தார் சுவடிகளை; தொடுத்தார் சொல் அம்புகளை. ஐயன்மீர்! வயது காரணமாக மூளை குழம்பியிருந்தால் நான் இப்படி எழுத முடியுமா? என்று வினவினார். அவருடைய எழுத்தின் மஹா சக்தியைக் கேட்ட நீதிபதிகள் அனைவரும், “கூரிய புத்தியுடையவர் இவர்” என்று அறிவித்து விடுதலை செய்தனர். மகன்கள் தொடுத்த வழக்கு மண்ணைக் கவ்வியது!

சொல் அம்பு வலியது; வில் அம்பு மெலியது;

சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.

pen and sword

தன்னுடன் கிரேக்க நாட்டுக்கு வராவிடில், தலையைச் சீவிவிடுவேன் என்று இந்து சந்யாசியை மிரட்டினான் மாமன்னன் அலெக்ஸாண்டர். அந்த சந்யாசியோ இடிபோலச் சிரித்து, இந்த ஆன்மாவை வாள் வெட்டாது, தீ எரிக்காது, தண்ணீர் நனைக்காது; இது தோன்றியதுமில்லை; அழிவதுமில்லை. என்றுமுளது! –என்று இடிமுழக்கம் செய்யவே அலெக்ஸாண்டர் அசந்தே போனான்! அவனது வீர வாளை உறைக்குள் சொருகிவிட்டு அவரை வணங்கிச் சென்றான் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க, ரோமானிய எழுத்தாளைர்கள் எழுதிவைத்துள்ளனர் (முழு விவரம் வேண்டுவோர் “நிர்வாண சாமியார்களுடன் அலெக்சாண்டர்” என்ற என்னுடைய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் காண்க)

 

–சுபம்–

 

 

கெட்ட மனைவியும் விஷப் பாம்பும்!

snake

Article No.1983

Compiled by London swaminathan

Date 9th July 2015

Time uploaded in London: 8-44 am

 

இதுவரை ஆயிரத்துக்கும் மேலான சம்ஸ்கிருத பழமொழிகள், பொன் மொழிகளையும், ஆயிரத்துக்கும் மேலான தமிழ் பழமொழிகள், பொன் மொழிகளையும் இந்த பிளாக்-கில் கொடுத்திருக்கிறேன். கூடிய மட்டிலும் அதைத் தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாக வகைப் படுத்தி இருக்கிறேன். மேலும், அது குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது என்றும் புத்தகம், அத்தியாயம், வரிசை எண் ஆகியவற் றையும் கொடுத்திருக்கிறேன். இதோ மேலும் 20 அழகான பழமொழிகள்:–

1.தண்டேன ச ப்ரஜா ரக்ஷ மா ச தண்டமகாரணே – ராமாயணம்

சட்டத்தால் குடிகளைக் காக்க வேண்டும்; காரணமில்லாமல் தண்டிக்காதே.

2.துஷ்டா பார்யா சடம் மித்ரம் ப்ருத்யசசோத்தரதாயக:சமர்பே ச க்ருஹே வாஸோ ம்ருத்யுரேவ ந சம்சய: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்

பாம்புள்ள வீட்டில் இருப்பவனுக்கு மரணம் ஏற்படும்; அதே போல கெட்ட மனைவி, முட்டாள் நண்பன், கீழ்ப்படியாத வேலைக் காரன்  ஆகியோருடன் இருப்பவனுக்கும் மரணமே மிஞ்சும். சந்தேகமே யில்லை.

3.ந கச்சேத் ப்ராம்மணத்ரயம்

மூன்று பிராமணர்கள் சேர்ந்து போகக்கூடாது

(சகுன சாஸ்திரப்படி ஒற்றைப் பிராமணன் – அபசகுனம்)

4.ந நக்னோ ஜலம் ப்ரவிசேத்

நிர்வாணமாக நீரில் இறங்கக்கூடாது

5.ந நிஷ்ப்ரயோஜனம்  அதிகாரவந்த: ப்ரபுபிராஹூயந்தே- முத்ரா ராக்ஷசம்

அதிகார வர்கம், காரணமில்லாமல், பிரபுக்களை அணுகுவதில்லை.

6.ந யுக்தம் ப்ராக்ருதமபி ரிபுமவஞாதும்  – முத்ரா ராக்ஷசம்

சாதாரண எதிரிகளையும் புறக்கணிக்காதே

(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?)

2natarajan

7.நவாங்கானானாம் நவ ஏவ பந்தா: – சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

இளம் யுவதிகளின் நடை, உடை பாவனை எல்லாமே புதுமைதான்

8.ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி – ப்ரதிமா நாடகம்

மான் குட்டிகள், புலியை ஒன்றும் செய்ய முடியாது

 

9.நாங்கிக்ருதேஷு குணதோஷ விசாரணா ஸ்யாத்

ஏற்றுக் கொண்ட இடத்தில் குணமும் குற்றமும் காணக் கூடாது

10.நிகடஸ்தம் கரீயாம்சமபி லோகோ ந மன்யதே – ஹிதோபதேசம்

பெரியவர்கள் பக்கத்தில் இருந்தால் மதிக்கப்படுவதில்லை

(உள்ளூர் சரக்கு விலை போகாது)

11.நிஜமதனநிவிஷ்ட: ஸ்வா ந சிம்ஹாயதே கிம்

தன்னுடைய வீட்டில் நுழைந்த நாய் சிங்கம் போல இருக்காதா?

12.நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி தூமாயதே – ஹிதோபதேசம்

மரங்கள் இல்லாத இடத்தில் புதர்கள் கூட மரமாகக் கருதப்படும்

(ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை)

aaddu

13.கதானுகதிகோ லோக:– ஹிதோபதேசம்

ஒருவன் சென்ற பாதையை பின்பற்றிச் செல்வதே உலகம்

(மக்கள் ஆட்டு மந்தை)

14.ஜலபிந்து நிபாதேன க்ரமச: பூர்யதே கட: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்

ஒவ்வொரு சொட்டுச் சொட்டினாலும் பானையே நிரம்பிவிடும்.

(சிறு துளி பெரு வெள்ளம்)

15.தஸ்தபதி தர்மாம்சௌ கதமாவிர்பவிஷ்யதி – சாகுந்தலம்

சூரியன் பிரகாசிக்கையில் இருட்டு எங்கே வர முடியும்?

16.நிர்குண: ஸ்வஜன: ஸ்ரேயான், ய: பர: பர ஏவ ச: — ராமாயணம்

நமக்கு வேண்டியவர்கள் குணமில்லாதவரானாலும் சிறந்தவனே

17.நிர்வாணதீபே கிமு தைலதானம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அணைந்து போன தீபத்துக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்?

(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

LION KING

18.நைகஸ்மின் காந்தாரே சிம்ஹயோர் வசதி: க்வசித்

ஒரு காட்டில் 2 சிங்கங்களின் வசிப்பிடம் இருப்பதில்லை

(ஒரே உறையில் இரண்டு வாட்கள் இருக்காது)

19.பங்கோ ஹி நபஹி க்ஷிப்த: க்ஷேப்து: பததி மூர்தனி – கதா சரித் சாகரம்

வானத்தைப் பார்த்து சேற்றை எறிந்தால் அது அவன் மீதே விழும்

(சேற்றில் கல்லை எறியாதே, உன் மீதுதான் தெறிக்கும்)

(யானை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்ளும்)

20.பயசா சிஞ்சிதம்  நித்யம் ந நிம்போ மதுராயதே

எலுமிச்சை மீது தினமும் பால் வார்த்தாலும் அது தித்திக்காது.

(நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு — —  — தின்னதான் போகும்)

படங்கள் என்னுடையவை அல்ல; பேஸ் புக் நண்பர்கள், பல வெப் சைட்டுகளில் இருந்து எடுத்தவை: பஹு தன்யவாத்! ரொம்ப ரொம்ப நன்றி!!

-சுபம்-

மீன்களுக்குப் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்? சம்ஸ்கிருத புதிர்

boat, bridge

Written by S NAGARAJAN

Post No.1853; Date: 9 May 2015

Uploaded at London time: 14-29

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:

 

கீத்ருக் கிம் ஸ்யான்ன மத்ஸ்யானாம் ஹிதம் ஸ்வேச்சாவிஹாரிணாம் I

குணை: பரேஷாமத்யர்தம் மோததே கீத்ருஷ: புமான் II

 

தங்கள் இஷடம் போல விளையாட நினைக்கும் மீன்களுக்கு எது, எதனால் பிடிக்காமல் இருக்கும்? இதற்கான விடை விமத்சரா –  இதன் பொருள் ; நீரிலேயே வாழும் பறவைகள்

 

ஏன் என்று சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். நீர் நிலைகளையே ஆதாரமாகக் கொண்டு வாழும் பறவைகளுக்கு உணவு அந்த நீர் நிலைகளில் வாழும் மீன்கள் தானே! ஆகவே தான் அப்படிப்பட்ட பறவைகள் வாழும் இடத்தில் வசிக்கவே அவை அஞ்சும்!

 

மற்ற மனிதர்களின் நல்ல குணங்களினால் எப்படிப்பட்ட மனிதன் சந்தோஷமடைகிறான்?

 

விடை : விமத்சரா: பொருள் : பொறாமை அற்ற ஒரு மனிதரால்.

விமத்சரா: என்ற ஒரே சொற்றொடரை இரு விதமாகப் பிரித்தால் அது இரு வேறு கேள்விகளுக்கு விடையை அளிக்கிறது.

 

இன்னொரு புதிர்:

கீத்ருக் தோயம் துஸ்தரம் ஸ்யாத் திதீர்ஷோ:                                                       

கா பூஜ்யாஸ்மின் கட்கமாமந்த்ரயஸ்வ  I                                   

த்ருஷ்ட்வா தூமம் தூரதோ மானவிஞ்ஞா:                                              

கிம் கர்தாஸ்மி ப்ராதரேவாஷ்ரயாஷம்  II

 

இது சாலினி என்ற சந்தத்தில் அமைந்துள்ள ஒரு புதிர் செய்யுள்.

 

ஒருவன் கடந்து செல்ல விரும்பும் போது எந்த நீர் நிலை (நதி) கடந்து செல்ல மிகவும் கஷ்டமானது? (தோயம் என்றால் நீர் அல்லது இங்கு நீர்நிலை/நதி)

 

இதற்கான விடை: நுபடகு இல்லாத போது

 mum and child deepu bhat

மதிக்கப்பட வேண்டியவர் மாதா (தாயார்)

மதிப்பதற்குத் தகுதியானவர் யார்?

இதற்கான விடை : மாதா (தாயார்)

 

வாளை எப்படி அழைப்பது? –

இதற்கான விடை: ஆஸே!  ( கத்தியே என்று)

மிக்க அறிவார்ந்தவர்களே, தூரத்தில் புகையைக் கண்டால் நான் என்ன செய்வது?

இதற்கான விடை: அனுமாதாஸே (காலையிலேயே தீ இருப்பதை அனுமானத்தால் அறியலாம்)

 

இப்படி, அனுமாதாஸே என்ற ஒரே சொற்றொடர் நான்கு கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது.

 shivaji sword

வீர சிவாஜியின் கத்தி

விடை தெரிந்து புதிர்களைக் கையாள்வது சுலபம். விடை தெரியாமல் இருக்கும் போது சம்ஸ்கிருதத்தில் சொற்விற்பன்னராக இருக்கும் ஒருவர் மட்டுமே விடையைச் சரியாகக் கூற முடியும், இல்லையா!

*************