அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி

Compiled by London swaminathan

Article No.1840 Date: 1 May  2015

Uploaded at London time: 18-26

தமிழில் மேலும் ஒரு அதிசயம்

எதுகைத் தமிழ் அகராதி

தமிழ் இலக்கியத்தில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. இது வரை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்து வந்துள்ளேன். லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒவ்வொரு தமிழ் புத்தகமாகப் புரட்டிப் பார்த்து வருகையில் ஊத்தங்கரை பி ஆர் அப்பாய் செட்டியார் 1938 ஆம் ஆண்டில் வெளியிட்ட எதுகை அகராதியைக் கண்டேன். அது ஒரு அற்புதமான நூலாகும். தர்மபுரி ஸ்ரீ ராமலிங்கா பிரிண்டிங் ஒர்க்ஸில் அது அச்சிடப்பது. (தற்பொழுது சில பதிப்பகங்கள் இதை மறுபதிப்பு செய்துள்ளன).

“பல அகராதிகள் ஏற்கனவே இருந்தபோதிலும் தமிழ்க் கலைக்கு என்னாலியன்ற தொண்டாற்ற வெண்ணங்கொண்டு நூதன முறையில் அகர முதலாகவும் கடையெழுத்தொன்றியும் வார்த்தை களைத் தொகுத்து எதுகை அகராதி என்ற பெயரால்  இதனை வெளியிடலாயினேன்” – என்று செட்டியார் முன்னுரையில் எழுதியுள்ளார்.

தமிழில் ஓரெழுத்துக்கு உள்ள அர்த்தங்களைப் படிக்கையில் வியப்பு மேலிடும். ஆனால் முன் காலத்தவர் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு விழிகள் போல எண்ணியதால், செட்டியார் தமிழ் சொற்கள் போலவே சம்ஸ்கிருதச் சொற்களையும் அகராதியில் சேர்த்துக் கொடுத்துள்ளார். 70 க்கும் மேல் ஓரெழுத்துக்கள் அகராதியில் உள்ளன.

எல்லாப் பொருட்களையும் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் சில பொருளைத் தருகிறேன்.

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, சிவன், விஷ்ணு, பிரமன், பெயர், வினை முற்று விகுதி, சுட்டிடைச் சொல், அன்மை, இன்மை, மறுதலை, குறைவு, சம்மதி, சுட்டு, தடை, பிறிது, வியப்பு,  ஆறாம் வேற்றுமை யுருப்பிடைச் சொல், சாரியை இடைச் சொல், சுக்கு, திப்பிலி, எட்டு

ஆகாயம், பிரமன், தலை, ஓரெழுத்து, அரசன், ஆன்மா, உடல், கந்தருவ சாதி, காமன், காற்று, சூரியன், செல்வன், திருமால், தீ, தொனி, நமன் மயில், மணம், விநாயகன், ஒன்று எண்ணும் எண், சரீரம், சுகம், நீர், நனைத்தல், பொருத்து, மேகம், விட்டுணு, மயிர், வியாதி, வாயு, பட்சி

குருணிக்குறி

கூடிய (உதாரணம்- சோமாக்கந்தர், சோமன்)

பிரான்ஸ் வெளியிட்ட பிரம்மா  தபால் தலை

குபேரன், பிரமன்

இன்மை, அன்மை, எதிர்மறை (உதாரணம்- அரூபம், அத்துவிதம், அதன்மம்)

இருபதிலோர் பாகத்தைக் காட்டும் ஓர் கீழ்வாய் இலக்கக் குறி, ஆற்று, சாபம், காவல் செய்தல், குடித்தல்

இயமன் இறந்தகால இடை நிலை (உ.ம்.-என்மர், ஒரு மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுணு

இறந்தகால இடை நிலை (உ.ம்.போயது)

இறந்தகால இடை நிலை

ஆச்சாமரம், இசை, இரக்கம், பெண் பசு, வினா விடைச் சொல், அந்தம், ஆக என்பதன் குறுக்கம்,இச்சை, ஆத்மா,வியப்பு, விலங்கின் பெண் பொது, ஆவது, பெண் எருமை

கா

அசைச் சொல், காத்தல் , காவடி, சோலை, துலை, பூந்தோட்டம், வருத்தம், வலி, பாதுகாப்பு, நிறை, சரசுவதி, கள், காலடித் தண்டு

சா

சாதல், சாவெனல், பேய், மரணம், தேயிலைச் செடி, இற, காய்ந்து போ

ஞா

கட்டு, பொருந்து

தா

கேடு, தாண்டுதல், கொடு, பகை, வருத்தம், வலி, அழிவு, கொடியன், பாய்தல், பிரமன், தாண்டு, படை

நா

நடு, நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நா, அயலார், சுவாலை, பொலிவு, பூட்டின் தாள், வார்த்தை, தாரை, நாதசுரத்தின் ஊதுவாய்

பா

வெண்பா முதலிய பாட்டு, பஞ்சு நூல், பிரபை, நெசவு பா, அழகு, கடிகார ஊசி, கிழங்குப்பா, நிழல், பரப்பு, பஞ்சி நூல், பருகுதல், பாம்பு, தமிழ், தூக்கு, யாப்பு, காத்தல், சுத்தம், கப்பு, கை மரம்

மா

ஆண் குதிரை, அழகு, ஆண் பன்றி ஆண் யானை, இலக்குமி, கறுப்பு, சீலை, செல்வம், பெருமை, மாமரம், வண்டு, வயல், அறிவு, ஆணி, மாவு, நிறம், பரி, பிரபை, கட்டு, பெருமை, சரசுவதி, வலி, விலங்கின் பொது, வெறுப்பு, அருப்பம், மிகுதி, பிட்டம், பிண்டி, நுவனை

யா

ஒரு வகை மரம், வினாச்சொல், சந்தேகம், இல்லை

ரா

இராப் பொழுது, இரவு

வா

வருக எனல்

ஆண்பால், பெண்பால் பெயர் விகுதி (உ.ம்.பிறைசூடி, கண்ணி), முன்னிலை ஒருமை வினைமுற்று, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, அரை என்னும் எண்ணின் குறி

நி

அதிகம், இன்மை, உறுதி, எதிர்மறை, ஐயம், அமீபம், நிச்சயம், நிலை, பேறு, பூரணம், மிகுதி, வன்மை, விருப்பம்

பி

அழகு, பிரிவினை விகுதி

ஈ, கள், இலக்குமி, தேனீ, குகை, தாமரை இதழ், பாம்பு, அம்பு, அரை நாண், பார்வதி, தேனீ, சிறகு

கீ

கிளிக்குரல்

சீ

இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம், பெண்,இலக்குமி, வியப்பு,சரஸ்வதி, பார்வதி, நித்திரை, பிரகாசம், விடம், விந்து, சளி, ஒளி, சிரீ, சிகரம், சீகம், தமரத்தை, புனல், திரை, கவிரி, சீதல், காந்தி, சம்பத்து

நீ

நீ என்னும் முன்னிலைப் பெயர், நீங்குதல், விடு, உலகத்தை மறு, தள்ளு

தீ

நெருப்பு, தீமை,அறிவு, நரகம், இனிமை, கோபம், விடம், ஞானம், விளக்கு, அங்காரகன், ஆரல், ஒளி, முளரி, வசு, வடவை, சிகி

பீ

அச்சம், மலம், தொண்டி, பெருமாரம்பவ்வி

மீ

ஆகாயம், உயர்வு, மேல், மகிமை, மேற்புரம்

வீ

விருப்பம், கர்ப்பந்தரித்தல், பறவை, பூ, சிவன், நீக்கம், கேடு, ஒழிவு

அகச் சுட்டு, புறச்சுட்டு, ஆச்சரியம், உருக்கம், கட்டளை, கோபம், சின, பிரமன், சிவ சக்தி பிள்ளையார் சுழி, எண் 2

கு

பூமி,குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நான்காம் உருபு, நிந்தை, பாவம், இனமை, நீக்க, நிறம்

சு

நன்மை (சுபுத்தி), சொந்தம் (சுதேசம்), அதட்டும் ஓசை, சுவ, சுய, வியப்புக் குறிப்பு

து

துவ்வென்னேவல், அசைத்தல், அனுபவம்,எரித்தல், கெடுத்தல், கசத்தல், பிரிவு, சுத்தம்

நு

தியானம், தோணி, நிந்தை, நேரம், புகழ்

ஊன், உணவு,சந்திர, சதை, தசை, சிவன், சமாக்கிய கலை, இறைச்சி

கூ

பூமி, கூக்குரல், மலங்கழித்தல், கூவுதல், கூச்சல்

சூ

விலங்குகளையோட்டும் குறிப்பு, சுளுந்து, வியப்புச் சொல்

தூ

சுத்தம், தூவென்னேவல், பகை,பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை, தசை, மாமிசம், வலிமை, தூவு, இகழ்ச்சிக் குறிப்பு

நூ

ஆபரணம்,எள், யானை

பூ

மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குத்ல், இலை, ஓமாக்கினி, கண்ணோய், நரகம், தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, நீலநிறம், மென்மை, தேங்காய்த் துருவல், நுண்பொடி, அரைக்கால், மகளிர் சூதகம், நிரம், பூப்பு, மூப்பு, அலரி, இணர், குசுமம், தாமம், போது, வீ

எழு, வினாவெழுத்து

சிவன், விஷ்ணு, செலுத்துதல், அடே, அம்பு, எண்ணின் குறிப்பு, அடுக்கு, பாணம், இகழ்ச்சிக் குறிப்பு, பெருக்கம், இறுமாப்பு, உயர்ச்சி, வலியுறுத்தல் (உ.ம்.அவனே வந்தான், நானே செய்தேன்)

சே

அழிஞ்சில் மரம், இடப ராசி, சிவப்பு, சேரான் மரம், காளை, வெருட்டுங் குறி, வெறுப்புக் குறி, புல்வாய், குதிரை, சேரான்

தே

கடவுள், கிருபை, கொள்ளுகை,நாயகன், மாடு துரத்தும் குறிப்பு

நே

அன்பு, ஈரம், நேசம்,உழை, நெகு

பே

நுரை, மேகம், பேகடம்- ஒருவகை மீன், இல்லை, பேகம்-தவளை, முகில்

மே

அன்பு

வே

வேவு

குலோத்துங்க சோழன்

அரசன், அழகு, ஆசான், இரண்டாம் வேற்றுமை உருபு, கடவுள், கோழை, சாரியை, சுவாமி, நுண்மை, யானையைப் பாகன் ஓட்டும் ஓசை, கடுகு, கடவுள், குரு, வியப்பு, வீரம், கணவன், சுவாமி, பிதா, யசமானன்

சை

சீ, கைப்பொருள்

நை

நொந்து போ, இகழ்ழ்சிக் உறிப்பு, நையென்னேவல்

அழைத்தல், வியப்பு, அனந்தம், கடித்தல், பூமி

கௌ

கொள்ளு, தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கௌவென்னேவல்

கை

ஒப்பனை, ஒழுக்கம், கை, சிறுமை, வகுப்பு, இடம், உடனே, கட்சி, கைமரம், சேனை, ஆள், காந்தப்பூ, தங்கை, ஊட்டு, அலங்கரி, தோள், பாணி, சயம், விற்பிடி, முகுளம், சதுரம், இலதை, மான் தலை, சங்கு, வண்டு, அஞ்சலி, கற்கடகம், மகரம், கபோதம், விற்பிடி

தை

மாதம், பூச நாள்

பை

அழகு, பச்சை நிறம், பாம்பின் படம்

மை

அஞ்சனம், கருப்பு, பூமி, திசை, மலை, வச்சிராயுதம்

வை

கூர்மை, வைக்கோல், கீழெ வை என்னேவல்

ஒற்றுமையுடன் இரு, ஒன்றுபடு, ஒழிதல், ஒவ்வுதல்

இழிவு சிறப்பு, அடிசயவிரக்கச் சொல், எதிர்மறை, ஒழிபிசை, , வினா, நீக்க, மதகு நீர் தாங்கும் பலகை, மகிழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு,  மடையடைக்கும் கதவு

நொ

துன்பப்படு, நோய், வருத்தம், நொய்ம்மை

அதிசய விரக்கச் சொல், இரக்கம், வினா விடைச் சொல் (உ.ம்.சாத்தனோ)

கொ

ஒலிக்குறிப்பு

கோ

அம்பு, அரசன், ஆண்மகன், எருது, ஆகாயம், கண், கிரணம், சந்திரன், சூரியன், பசு, மலை, மாதா, மேன்மை, வாணி, குசவன், சுவர்க்கம், வெந்நீர், தொடு, தறி, தடு, பொறி, தேவலோகம், கோமேத யாகம்,வச்சிராயுதம்

சோ

அரண், வியப்புச் சொல், வாணாசுரன் நகர்,உமை

நோதல், துக்கம், துன்பம், பலஹீனம், வியாதி

தோ

தோ- நாயைக் கூப்பிடும் ஒலி

நோ

இன்னம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி, வலி, வேதனைப் படு, நொந்து பேசு, துக்கப்படு, இன்மை

போ

அசைநிலை, போவென்னுதல்

சௌ

சௌபாக்கியவதி என்பதன் சுருக்கம், சிறுமி, சுமங்கலி

நௌ

மரக்கலம்

ஸ்ரீ

லெட்சுமி, பாக்கியம்

அப்பாய் செட்டியார் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்திருக்கிறார். அதை நினைவிற் கொள்ளல் வேண்டும். அவர் மட்டுமின்றி அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் வெளியாகும் எல்லா அகராதிகளிலும், நிகண்டுகளிலும் சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்து தமிழாகக் கொடுத்திருப்பதிலிருந்து இரு மொழிகளையும் அவர்கள் இரு கண்கள் போல பாவித்ததும், இரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று அவர்கள் நம்பினர் என்பதும் வெள்ளிடை மலை. சுருங்கச் சொல்லின் வெள்ளைக்காரன் புகுத்திய ஆரிய-திராவிட இனவெறி வாதம் என்னும் விஷம் கலக்கும் வரை, தொல்காப்பியன் முதல் பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் அச்சமின்றி, கூச்சமின்றி சம்ஸ்கிருதத்தைக் கலந்தே எழுதினர். திரைப்படப் பாடல்களில் பிற மொழிக் கலப்பில்லாத படல்களைக் காண்பதும் அரிதே.

பாபநாசம் சிவன் எதுகை அகராதி

பாபநாசம் சிவன் சம்ஸ்கிருத எதுகை அகராதி ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி தனி கட்டுரையில் தருகிறேன். அதைத் தயாரிக்க அவருக்கு ஆகிய காலம் எட்டு ஆண்டுகள். இதே போல அப்பாய் செட்டியார், அபிதான சிந்தாமணி வெளியிட்ட சிங்காரவேலு முதலியார் ஆகியோரும் பல்லாண்டுக் காலம் உழைத்ததன் பேரிலேயே நமக்கு அற்புத அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் கிடைத்தன.

–சுபம்–

கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து– பதிற்றுப் பத்து)

வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201).

கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார்.

தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு

பருதி உருவிற் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்

புறம் 224 (கருங் குழலாதனார்)

 

கரிகாலனின் எல்லா மனைவியரும் அப்போது உடன் இருந்தனர். மனைவி உடன் இல்லாமல் வேள்வி செய்ய முடியாது. அவர்களை வேள்விக் கிழத்தியர் என்றே தமிழ் நூல்கள் கூறும்.

1008 அல்லது 10008 செங்கற்களை சுத்தி செய்து மந்திரம் கூறி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவர். சமீபத்தில் கேரளத்தில் கழுகு வடிவ யாக குண்டம் அமைத்து பெரிய யாகம் செய்தனர். கலிபோர்னியா பலகலைக் கழக ஆசிரியரகள், அறிவியல் வல்லுனர்கள் புடைசூழ இந்த யாகம் நிறைவேறியது.

தமிழ் மன்னர்கள் வேத நெறியை தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டனர். காஞ்சி மகா சுவாமிகளும் தனது உரையில் வேதம், யாகம், பிராமணர்கள் ஆகியவற்றுக்கு சங்க காலத்தில் வழங்கும் தமிழ் சொற்களைப் பார்க்கையில் இந்தப் பண்பாடு எவ்வளவு காலத்துக்கு முன் எவ்வளவு ஆழ வேரூன்றியிருக்க வேண்டும் என்கிறார்.

வெளி நாட்டுக் காமாலைக் கண்ணர்கள் பொய்யான ஆரிய திராவிட வாதத்தை அவர்களுடைய மதத்தைப் புகுத்த நம் முன் வைத்ததால் நாம் மதி மயங்கிக் குழம்பிவிட்டோம்.

கல்யாண மந்திரங்களில் சப்தபதி என்னும் ஏழடி நடக்கும் மந்திரம் முக்கியமான மந்திரமாகும். மணப் பெண்ணும் மண மகனும் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருவார்கள். இந்த மந்திரங்களின் அர்த்தம் தமிழ் திரைப் பட காதல் பாடல்களை எல்லாம் மிஞ்சிவிடும். கண்ணகியும் கோவலனும் தீயை வலம் வந்து ஐயர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதை சிலப்பதிகாரம் பத்திரிக்கை நிருபர் தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக வருணிக்கிறது.

ஏழடிகள் ஒருவருடன் நடந்து சென்றால் பந்தமும் பாசமும் உறுதி பெற்றுவிடும் என்று ரிக்வேதம் சொல்லுகிறது. கரிகாலன் தன்னைப் பார்க்க வந்தவர்களை வழி அனுப்புகையில் வேத நெறிப்படி ஏழு அடிகள் கூடவே நடந்து சென்று வழி அனுப்புவானாம்.

 

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

காலின் ஏழடிப் பின் சென்று கோலின்

தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு

–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

 

மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக் கிழார் இன்னும் ஒரு அதிசிய விஷயத்தைச் சொல்லுகிறார். மற்ற எல்லா நாட்டு மன்னர்களும் சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு எழுந்திருப்பான். அனால் மதுரைப் பாண்டிய மன்னனோவெனில் ஐயர்கள் முழங்கும் வேத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பான் என்று.

சிறுபாண் ஆற்றுப் படை எழுதிய புலவர் இன்னும் ஒரு வியப்பான விஷயத்தைச் சொல்லுகிறார். பிராமணர்கள், பாணர்கள் போன்றோர் நல்லியக்கோடன் அரண்மனையில் 24 மணி நேரமும் அனுமதியின்றி உள்ளே போகலாம் என்கிறார்.

 

பொருனர்க் காயினும் புலவர்க் காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் (சிறு பாண்—வரிகள் 203-206)

 

பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர்களில் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி. அவனுக்கு அடைமொழியே பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்பதாகும். நாடு முழுதும் யாகத் தூண்கள் இருக்குமாம் (புறம் 6,15). அவன் தலை தாழ்வது இரண்டே முறைதானாம். ஒன்று சிவன் கோவிலில், இரண்டு நாலு வேதம் படித்த அந்தணர் முன்பு (புறம் 6).

அவ்வையாருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? உலகில் 1500 ஆண்டுகளுக்குக் குடுமி பிடிச் சண்டை போட்ட ஒரே இனம் தமிழ் இனம் தான். உள் சண்டையினாலேயே அழிந்த ஒரே இனம் என்ற பெருமை உடைத்து. அப்பேற்பட்ட மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் வீற்றிருந்ததைப் பார்தவுடன் அவ்வைப் பாட்டிப் பூரித்துப் போய்விட்டார். எப்போது தெரியுமா? சோழ மன்னன் பெரு நற் கிள்ளி ராஜசூய யாகம் செய்தபோது –ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை விட நீங்கள் நிறைய நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடினார் (புறம் 367)

அப்போது பெருநற் கிள்ளியுடன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர்.

ஒவ்வொரு மன்னனும் என்ன யாகம் செய்தான் என்பதை தொல்பொருட்துறை அறிஞரும் வரலாற்று நிபுணருமான டாக்டர் நாகசாமி அவர்கள் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் யாவரும் கேளிர் என்னும் அவரது நூலில் பட்டியல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு மன்னரின் கோத்திரம் என்ன என்பதையும் செப்பேட்டுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாக சிவன் வாயில் கல்வெட்டு கூறுகிறது.

 

புதிய விஷயம்: அஸ்வமேத பாண்டியன்

குப்தர்கள் அஸ்வமேத யாகம் செய்தவுடன் குதிரைப் படத்துடன் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அப்படி தமிழ் மன்னர்களின் தங்க நாணயம் கிடைக்க வில்லை. ஆனால் ஒரு பாண்டிய மன்னனின் செப்பு நாணயம் குதிரைப் படத்துடன் கிடைத்துள்ளது. இது முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ஏனெனில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான காளிதாசன் அவனது ரகுவம்ச காவியத்தில் பாண்டிய மன்னர்கள் அவப்ருத ஸ்நானத்தால் நனைந்ததாக எழுதி இருக்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த முதுகுடுமிப் பெருவழுதியையே இது குறிக்கிறது. யாகம் செய்யும்போது குளிப்பதை அவப்ருத ஸ்நானம் என்று அழைப்பர். காளிதாசனின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதற்கு சங்கத் தமிழில் 200க்கும் மேலான சான்றுகள் இருக்கின்றன. (இதை எனது காளிதாசனின் காலம் என்ற கட்டுரையில் காண்க).

‘பொய்யா நாவிற் புகழ்’ உடைய கபிலர் தரும் இன்னொரு வியப்பான தகவல் (புறம்122): மலையமான் திருமுடிக்காரியின் நாட்டை யாரும் வெல்லவும் முடியாது, படை எடுக்கவும் முடியாதாம். ஏனேனில் நாடு முழுதையும் அவன் ஏற்கனவே அந்தணர்க்கு தானமாகக் கொடுத்துவிட்டானாம்!

 

கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார்,

கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;( புறம் 122—கபிலர்)

 

வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலில் திரு கே சி இலக்குமிநாராயணன் , ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் தந்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும்.

***********************

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

 

(கேள்விகள் கற்பனை, பதில்கள் திருப்புகழ் பாடல்களிலிருந்து; —ச. சுவாமிநாதன்)

அன்பரே, வணக்கம். நீர் ஒவ்வொரு திருப்புகழிலும் முருகப் பெருமானை வெவ்வேறு விதமாக வேண்டுவது என்ன?

 

“வாராய் மனக் கவலை தீராய் நினைத் தொழுது

வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்”

“இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன்னோடி வரவேணும்”

“உன் புகழே பாடி நான் இனி

அன்புடன் ஆசார பூசை செய்து

உய்ந்திட வீணால் படாது அருள் புரிவாயே”

“அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள் ஞான இன்பமது புரிவாயே”

 

நீங்கள் இந்துஸ்தானி உருது மொழி சொற்களைக் கூட

பயன்படுத்த அஞ்சுவதில்லையாமே?

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சல் என வரவேணும்”

நீங்கள் ஒரு மருத்துவரா?அழகாக எல்லா வியாதிகள் பெயர்களையும் பாடலில் அடுக்கி விட்டீர்களே?

“ இருமலும் ரோக முயலகன் வாத

எரிகுண நாசி        விடமே நீ

நீரிழிவு விடாத தலை வலி சோகை

எழு கள மாலை         இவையோடே

பெரு வயிறு ஈளை எரி குலை சூலை

பெரு வலி வேறு உள நோய்கள்

 

சரி தேனினும் இனிய தமிழ் பற்றி என்ன பாடினீர்கள்?

இரவு பகல் பல காலும் இயல் இசை முத்தமிழ் கூறித்

திரம் அதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே”

“அரு மறை தமிழ் நூல் அடைவே

தெரிந்துரைக்கும் புலவோனே”

“வளமொடு செந்தமிழ் உரை செய அன்பரும்

மகிழ வரங்களும் அருள்வாயே”

 

நான் காவி உடை அணிந்து ஒரு மடத்தில் சேரலாம் என்று யோசித்து வருகிறேன். உங்கள் அறிவுரை என்ன? –மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று வள்ளுவர் கூறுகிறாரே.

காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும்

காடுகள் புக்கும் தடுமாறிக்

காய் கனி துய்த்தும் காயம் ஒறுத்தும்

காசினி முற்றும் திரியாதே.

 

அதிசயம் அநேகமுற்ற பழனி மலை” என்று ஒரு அடை மொழி போட்டீர்கள். அங்கே என்ன அதிசயம் இருக்கிறது?

செபமாலை தந்த சற்குணநாதா

திரு ஆவினன் குடி பெருமாளே.

 

ஓஹோ, அங்குதான் முருகன் உங்கள் கையில் உமக்கு சபமாலை தந்தாரா? நீர் அதிர்ஷ்ட சாலிதான். திருப்புகழைப் பழித்தால்………..

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்

 

ஒரு பாட்டில் நேர்மையில்லாதோர் யார் யார் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்?

“பஞ்ச பாதகன் பாவி மூடன் வெகு

வஞ்ச லோபியன் சூது கொலைகாரன்

பண்கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை

பங்கன் மோதியம் பாழ் நரகில் வீணின் விழ

பெண்டிர், வீடு பொன் தேடி நொடி மீதில் மறை

பஞ்ச மாமலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்”

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்

முறை மசக்கிகள் திருடிகள் மத வேணூல்

மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை

முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ்

கலை நெகிழ்த்திகள் இளைஞர்கள் பொருள் பறித்த மளியின் மிசை

கனி இதழ்ச் சுருள் ஒரு பாதி”

 

அப்பப்பா, திருப்புகழில் இப்படி வசை மாரி இருக்கும் என்று யாரும் எண்ணிக் கூட பார்க்கமாட்டார்கள்.

முருகனைத் திட்டினாலும் தமிழில் திட்டினால் பலன் உண்டாமே?

தமிழால் வைதாரையும் வாழவைப்பவன் (கந்தர் அலங்காரம் 22)

 

திருஞான சம்பந்தரைப் பல பாடல்களில் புகழ்ந்துள்ளீர்களே?

கதிர்காம திருப்புகழில் அவரை முருகன் என்றும் கூறீனீர்களா?

“வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே”

 “புமியதனிற் ப்ரபுவான

புகலியில் வித்தகர் போல

அமிர்த கவித் தொடை பாட

அடிமைதனக்கு அருள்வாயே”

 

குழந்தைச் செல்வம் பெற ஒரு திருப்புகழ் இருக்கிறதாமே. முதல் சில அடிகளை மட்டும் சொல்லுங்களேன்

செகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த

திரு மாது கெர்ப்பம் உடலூறித்

தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்

திரமாய் அளித்த பொருளாகி

 

கடைசியாக ஒரு கேள்வி. தேவியர் பெயர்களை எல்லாம் அடுக்கி ஒரு பாடல் பாடினீர்களா?

குமரி காளி வராகி மகேசுரி

கவுரி மோடி சுராரி நிராபரி

கொடிய சூலி சுடாரணி யாமளி      மகமாயி

குறளுரூப முராரி சகோதரி

உலகதாரி உதாரி பராபரி

குரு பராரி விகாரி நமோகரி         அபிராமி

சமர நீலி புராரி தனாயகி

மலை குமாரி கபாலின னாரணி

சலில மாரி  சிவாய மனோகரி    பரையோகி

சவுரி வீரி முநீர் விட போஜனி

திகிரி மேவுகை யாளி செயாளொரு

சகல வேதமுமாயினை தாய் உமை அருள் பாலா.

 

சந்தக் கவி புலவரே, நன்றி, நன்றி.