இந்துக்கள் உலக மஹா புத்தகப் பிரியர்கள்!

IMG_3384

Article No.1987

Compiled by London swaminathan

Date 11th July 2015

Time uploaded in London: 18-33

உலகில் பல அறிஞர்கள் பிராணிகளையும் தாவரங்களையும் வகை வகையாகப் பிரித்தனர். இதிலும் இந்துக்கள்தான் முதலில் நிற்கின் றனர். தொல்காப்பியத்திலும் உயிரினங்களை ஆறு வகை யாகத் தொல்காப்பியர் பிரித்தார். அதற்கு முன் வடமொழி நூல்களில் பல வகையாகப் பிரித்தனர். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஆலமரம், அரசமரம், அத்திமரம் ஆகியன ஒரே வரியில் விஷ்ணுவின் பெயர்களாக வரும். இவை மூன்றும் ‘பைகஸ்’ என்னும் ஒரே ‘ஜீனஸ்’ என்று 17ஆம் நூற்றாண்டில்தான் தாவரவியல் அறிஞர்கள் பிரித்தனர். யாகத்துக்கு வேண்டிய சமித்துக் குச்சிகள், நவதான் யங்கள், பத்துவகைப் புற்கள் என்று எங்கு பர்த்தாலும் பிரித்து வைத்திருப்பதை சம்ஸ்கிருத நூல்களில் நாம் சர்வ சாதாரண மாகக் காணலாம்.

கலைக் களஞ்சியங்களில் பார்த்தால் ஐரோப்பியர்கள் பெயர்கள் மட்டுமே இருக்கும். ஐரோப்பியர்களுக்கு 17-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் சம்ஸ்கிருதம் தெரியாததால் நம் நூல்களில் இருப்பது தெரியவில்லை. அவர்கள் சொல்லும் அரிஸ்டாடில் போன்றோரும் அவருக்கு  முந்தைய பிதகோரஸ் போன்றோரும் உபநிஷத உண்மைகளை அப்படியே ஒப்புவித்திருப்பதால் அவர்களுக்கு இந்திய புத்தகங்கள் கிடைத்ததும் புலப்படும்.

IMG_3382

மேலும் வேதங்களில் மட்டும் யாரும் கை வைக்கக்கூடாது. அதில் இலக்கணப் பிழை இருந்தாலும் கூட திருத்தக்கூடாது என்ற மரபு இன்றுவரை இந்தியாவில் இருந்து வருகிறது. மற்ற எல்லா நூல்களையும் அவ்வப்போது திருத்தி, புதிய பகுதிகளைச் சேர்த்துப் புதுமைப் படுத்தியதால், வெள்ளைக்காரர்கள் அந்த கடைசியாகச் சேர்த்த பகுதியின் அடிப்படையில் நம் நூல்களுக்குப் புதுத் தேதியை முத்திரை குத்தினர்.

நம்முடைய பங்களிப்பை ஒத்துக் கொள்ளாவிடிலும் உலகில் புத்தக விஷயத்தில் நம்மை மறுதளிக்க எவரும் இல்லை. உலகில் எல்லா வகைப் புத்தகங்களும்—சமயம் முதல், இலக்கணம், அகராதி, இண்டெக்ஸ், நிகண்டு, செக்ஸ், பெண்களுக்கான சிலபஸ் (64 கலைகள்) வரை எல்லாம் சம்ஸ்கிருதத்தில்தான் முதல் முதலில் காணப்படுகின்றன. இது பற்றி முன்னரே எழுதிவிட்டேன். இப்போது புத்தகங்களை வகைப் படுத்திப் பிரித்திருப்பதை மட்டும் காண்போம்.

IMG_2789

வேதங்கள் நான்கு:

திருணதூமாக்கினி இயற்றிய தொல்காப்பியத்துக்கு முன்னுரை (பாயிரம்) எழுதிய பனம்பாரனார் கூட, அதங்கோட்டு ஆச்சார்யார் என்னும் நான் மறை முற்றிய வேதப் பிராமணன் தான் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நிலந்தரு திருவிற் பாண்டியனுக்கு சிபாரிசு செய்தார் என்று சொல்லியி ருக்கிறார். இந்த தொல்காப்பியத்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வேத வியாசர் என்பவர்தான் இப்படி வேதங்களை ருக், யஜூர், சாமம், அதர்வணம் என நான் மறையாக வகுத்தவர். ஆக உலகில் முதல் முதலில் புத்தகங்களை வகைப் படுத்தியவர் வியாசரே. அவரே புராணங்களை 18 ஆகவும் பிரித்து வைத்தார்.

தமிழர்களும் அதையே செய்தனர்:

வியாசர் என்னென்ன செய்தாரோ அதைத் தமிழர்கள் அப்படியே செய்தனர்; அவ்வளவு மதிப்பு அவர் மீது! அவர் 4 என்ற நம்பரில் வேதங்களைப் பிரித்ததைப் பார்த்து அவர்களும் 4, 40, 400 என்னும் “லக்கி நம்பரை” எல்லா நூல்களுக்கும் சூட்டினர். அது மட்டுமல்ல. வேத வியாசருக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வேதங்கள் தோன்றியதால் அவருக்கே பல புலவர்கள் பெயர் தெரியவில்லை. ஆகவே அந்தப் புலவர் பயன்படுத்திய சொற்றொடரைவைத்து புதுப்பெயர் கொடுத்தார். இதையும் தமிழர்கள் தேய்புரிப்பழங்கயிறு, செம்புலப்பெயல்நீர் என்று புலவர்களின் பெயர்களாகச் சேர்த்தனர். தமிழர்களும் வேதவியாசர் புராணம், வேதம் முதலியவற்றைத் தொகுத்தது போலவே பல நூல்களைத் தொகுத்தனர்.

அதுமட்டுமல்ல புத்தகங்களுக்கு எண்களின் பெயர்களைக் கொடுத்தனர். உலகில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணினி என்னும் புலவர் தனது நூலுக்கு அஷ்டாத்யாயி – (எட்டு அத்தியாயம்) என்று பெயர் உண்டாக்கியது போல தமிழர்களும் எல்லாப் புத்தகங்களின் பெயரிலும் எண்களைச் சேர்த்தனர் (பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு). சம்ஸ்கிருதத்தில் அஷ்டகம் (8), சதகம் (100), சஹஸ்ரநாமம் (1000) முதலியன மிகவும் அதிகம்.

வேத வியாசரைப் பின்பற்றி தமிழர்களும் 18- என்ற எண்ணைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். வியாசர் செய்தது போலவே சங்க இலக்கியத்தை 18 மேல் கணக்கு நூல்கள் என்றும் சங்க இலக்கியத்துக்குப் பிற்காலத்தில் வந்த திருக்குறள் போன்ற 18 நூல்களைக் கீழ்க் கணக்கு நூல்கள் என்றும் பிரித்தனர். அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் பஞ்ச மஹா காவியங்களைப் பிரித்தது போல ஐம்பெருங் காப்பியங்களைப் பிரித்து அவைகளுக்கு காப்பியம் என்ற சம்ஸ்கிருதப் பெயரையும் சூட்டினர். சுருங்கச் சொன்னால் அவர்களுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் இரு வேறு மொழிகள் அல்ல. ஒரே உடலின் இரண்டு கண்கள்!

பிரஸ்தானத்ரயம் (3)

இந்து மதத்தின் அஸ்திவாரமாக அமைந்துள்ள மூன்று புத்தகங்கள்:

உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை. இதை பிரஸ்தானத்ரயம் என்பர். அதில் மூன்று என்ற எண் உள்ளது.

தசோப(10)நிஷத்துகள்

150–க்கும் மேலான உபபநிஷதங்கள் இருந்தபோதிலும் பத்து உபநிஷத்துகளே முக்கியமானவை:பிருஹத் ஆரண்யக, ஈச, ஐதரேன கேன, கதோ, சாந்தோக்ய, முண்டக, மாண்டூக்ய, தைத்ரீய என்று பத்து நூல்களை ஒன்றாக வகைப்படுத்தினர். அதை தச (பத்து) உபநிஷத் என்ற எண்ணால் குறிப்பர்.

IMG_3383

18 புராணங்கள்

வேத வியாசர் தொகுத்த புராணங்கள்:- அக்னி, பாகவத, பிரம்ம, பிரம்மாண்ட, பிரம்மவைவர்த்த, கருட, ஹரிவம்ச, கூர்ம, லிங்க, மார்க்கண்டேய, மத்ஸ்ய, நாரத, பத்ம, சிவ, ஸ்கந்த, வாமன, வராஹ, விஷ்ணு (வாயு=சிவ புராணம்) ஆகிய 18 புராணங்கள்

 

18 உபபுராணங்கள்

சிறிய, முக்கியமற்ற புராணங்களை 18 ஆகத் தொகுத்தனர்:-சநத்குமார, நரசிம்ம, பிருஹந்நாரதீய,சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வருண, காலிக, சம்பா, நந்தி, சௌர, பராசர, மஹேச்வர, பார்கவ, வசிட்ட, தேவிபாகவத, முத்கள, கணேச என்பன 18 உப புராணங்கள். சிலர் இதில் வேறு சில பெயர்களைச் சேர்த்து சிலவற்றை விடுப்பர்.

பஞ்ச (5) மஹா காவ்யங்கள்

காளிதாசனின் ரகுவம்சம், குமாரசம்பவம், மாகனின் சிசுபாலவாதம், பாரவியின் கிராதர்ஜுனீயம், ஹர்சனின் நைசத சரிதம்

தமிழர்கள் சாதனை

தமிழர்கள் சங்க இலக்கியத்தை 18 மேல் கணக்கு நூல்களாகப் பிரித்தனர்; அவையாவன:–

எட்டுத் தொகை (8)

புறநானூறு(400), அகநானூறு (400), நற்றிணை400, குறுந்தொகை400, ஐங்குறுநூறு (500), பதிற்றுப்பத்து (10×10=100), கலித்தொகை, பரிபாடல்

(தமிழர்களின் 4,40, 400 எண் மோஹம் குறித்து முன்னரே ஒரு கட்டுரை எழுதினேன்)

1995 ஆம் ஆண்டுத் தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் “சங்க இலக்கியத்தில் எண்கள்”, “சங்க இலக்கியத்தில் நிறங்கள்” என்ற இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தேன்.

பத்துப்பாட்டு (10)

திருமுருகாற்றுப் படை , பொருநர் ஆற்றுப் படை, பெரும் பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பட்டினப்பாலை, முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம்

தமிழ் புத்தகங்கள்

ஐம்பெருங் காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

18 கீழ்க் கணக்கு நூல்கள்

திருக்குறள், நாலடியார்400, பழமொழி400, நான் (4) மணிக்கடிகை, திரி(3) கடுகம், ஏலாதி, கார் நாற்பது40, களவழி நாற்பது 40, இன்னா நாற்பது40, இனியவை நாற்பது40, திணைமாலை நூற்றைம்பது 150, ஐந்திணை ஐம்பது 50, ஐந்திணை எழுபது70, திணைமொழி ஐம்பது 50, இன்னிலை, சிறுபஞ்ச (5)மூலம், முதுமொழிக்காஞ்சி,ஆசாரக் கோவை.

இவை எல்லாம் இந்துக்களின் மேதாவித்தனத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. ரிக்வேதத்திலேயே டெசிமல் சிஸ்டத்தை பயன்படுத்தி ஆயிரம், லட்சம் என தசமஸ்தானத்தில் எண்களை அடுக்கி தங்களுக்கு உள்ள எண் அன்பை, நியூமெராலஜி மோஹத்தைக் காட்டிவிட்டனர்.

swami_48@yahoo.com

படங்களுக்கு நன்றி

18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்

bhajan sippla

Written By S.Nagarajan
Post No.1145; Dated 3rd July 2014.

This is from the book Purana Thulikal (Honey Drops from the Puranas)- Part 2 written by my brother S Nagarajan. Part 1 and Part 2 are already published by nilacharal in e book formats for sale:- swami.

18 புராணங்களின் பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I
அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணத்தைக் குறிக்கும்.
இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும்.
மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும்.
நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும்.
‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும்.
நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும்.
‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும்.
‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும்.
‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும்.
‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும்.
‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

ஆக இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும்.
காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.

தேவி பாகவதத்தில் முதல் ஸ்கந்தத்தில் மூன்றாம் அத்தியாயத்தில் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் இந்தக் குறிப்பு இடம் பெறுகிறது.

***********

pbaaea095_sage_ved_vyasa

இரண்டாம் பகுதி
புராணத் துளிகள்

பல லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய 18 புராணங்களையும் , உப புராணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் படிப்பதற்கு ஒரு ஆயுள் போதாது. அதை முறையாக விளக்குவதற்கு போதிய பண்டிதர்கள் இல்லை. வாய்ப்புகள் குறைந்து விட்ட இந்த நாட்களில் முக்கிய சில பகுதிகளையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கும் உண்டு. அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதல் பாகம் நிலா பப்ளிஷர்ஸ் மூலம் வெளியானது. இதோ இரண்டாம் பாகம்!

பிரம்மாவின் வம்சம்

மரீசி,நாரதர்,அத்திரி,புலஸ்தியர்,புலகர்,கிருது,தக்‌ஷன், வசிஷ்டர் ஆகிய அனைவரும் பிரம்மாவின் பிரசித்தரான புத்திரர் ஆவர்.இவருள் மரீசி காஸ்யபரைப் பெற்றார்.தக்ஷனுடைய பதிந்மூன்று பெண்கள் அவருக்கு மனைவியர் ஆவர்.அப்பெண்கள் வழியாக தேவாசுரர் உண்டாயினர்.ஏனைய மானுடர்,மிருகங்கள், சரபங்கள் முதலில பலவகை சாதி பேதங்களாயுள்ள உயிர்கள் எல்லாம் உண்டாயின.பிரம்மனுடைய சரீரத்தில் வலப்பாதியில் “ஸ்வாயம்பு மநுவும்” இடப்பாதியில் “சதரூபி” என்கிற பெண்ணும் உண்டாயினர். சதரூபி என்பவளுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு பிள்ளைகளும், அதிக சுந்தரிகளாக உள்ள மூன்று பெண்களும் பிறந்தார்கள்.இவ்வண்ணம் பிரம்ம வம்சம் விருத்தியானது.
-ஜனமேஜய மஹாராஜனிடம் வியாஸர் கூறியது
தேவி பாகவதம் மூன்றாம் ஸ்கந்தம் அத்தியாயம் 13

chaitanyam

சுகம் எது, துக்கம் எது? சத்ரு எவர், நண்பர் எவர்?

சுக முனிவர் மிதிலை நகருக்கு வந்த போது துவாரபாலகன் ஒருவன் அவரிடம் சுகம் எது, துக்கம் எது, சத்ரு எவர், நண்பர் எவர், சுபத்தை வேண்டுபவனால் செய்யத் தக்கது என்ன, இவற்றை நன்றாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சுகர் இப்படி பதில் கூறுகிறார்:-

எல்லா உலகத்திலும் இரண்டு விதமிருக்கிறது. அதிலிருக்கும் பிரஜைகளும் ராகி, விராகி என்று இரண்டு விதமாக இருக்கின்றனர்.
அவர்களுதைய சித்தமும் இரண்டு விதம்.

இவைகளுள் விராகி என்பவர் அறிந்தவர், அறியாதவர்,அறிந்தும் அறியாதவர் என மூன்று விதமாய் இருப்பர்.

ராகி என்பவர் மூர்க்கர், சதுரர் என இரண்டு விதமாயிருப்பர்.
அந்தச் சதுர்ப்பாடு சாஸ்திர விசாரத்தால் வருவதாகிய சாமர்த்தியம், புத்தி சூக்ஷ்மத்தால் வருவதாகிய சாமர்த்தியம் என இரு வகைப்படும்.

அந்த புத்தியானது யுக்தம், அயுக்தம் என இரு வகைப்படும்.

இதைக் கேட்ட துவாரபாலகன், தான் அர்த்த ஞானமுடையவன் இல்லை என்று கூறி சுகர் கூறிய சொற்களுக்குப் பொருளை விளக்குமாறு வேண்டுகிறான். உடனே சுகர் விளக்கத்தை அளிக்கிறார் இப்படி:-

“எவனுக்கு சம்சாரத்தில் விருப்பம் இருக்கிறதோ அவன் ராகி எனப்படுவான். அவனே எல்லாவற்றிலும் மோகம் அடைகின்ற மூர்க்கன். அவனுக்குச் சுக துக்கங்கள் அநேக விதமாய் இருக்கின்றன. என்னவென்றால், தனம், புத்திரன்,செல்வம், மனைவி,மானம், விஜயம் முதலியவற்றையும் காரிய சாதனத்தையும் பெறுவதனால் சுகமும், அதைப் பெறாததால் துக்கமும், நிமிஷம் தோறும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றன. அவனது செய்கை எல்லாம் சுகத்தை அடைய வேண்டுமென்கிற விருப்பத்தை உடைத்தாய் இருக்கிறது.

அச் செய்கைகளுக்கு மாறான செய்கைகளைச் செய்து தடைப்படுத்துகிறவன் சத்ருவாகின்றான். அச்செய்கைக்குச் சாதகனாய் இருக்கிறவன் நண்பனாகிறான்.

விராகி, விஷய சுகங்களொன்றிலும் ஆசை வைக்காமல் ஏகாந்தத்தில் வேதாந்த விசாரம் செய்து ஆத்ம சுகத்தை அநுபவித்துக் கொண்டிருப்பான். அவனே மோகம் அடையாத பண்டிதன். அவனுக்கு சம்சார வாழ்க்கையின் சுகம் எல்லாம் துக்ககரமாகவே இருக்கும்.

ஆயினும் அப்படி ஆத்ம சுகத்தை நாடுகின்றவனுக்குக் காம குரோத லோப மத மாச்சரியம் முதலிய கொடிய சத்துருக்கள் பலருண்டு. இப்படிப்பட்ட சத்துருக்களால் பீடிக்கப்பட்டிருப்பவனுக்கு பந்து, சந்தோஷம் என்பவன் ஒருவனே! அவனைத் தவிர வேறொருவரும் மூன்று உலகிலும் இல்லை.”

இப்படி சுகர் கூறியதைக் கேட்ட துவாரபாலகன் அவர் ஞானி என்று எண்ணி அவரை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கிறான்.

தேவி பாகவதம் முதல் ஸ்கந்தம் அத்தியாயம்

To be continued………………….