மூன்றாம் உலக மகாயுத்தம்! -4 (Post No.3206)

b-17g_formation

Written by S. NAGARAJAN

Date: 1 October 2016

Time uploaded in London:6-45 AM

Post No.3206

Pictures are taken from various sources; thanks (Pictures are from WW II)

 

 

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி

சிறிய கட்டுரைத் தொடர் – Before It’s News இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரைச் சுருக்கத்தின் கடைசிப் பகுதி

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 4

 

By ச.நாகராஜன்

 

 

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். அவற்றில் இறுதியான வழி முழு இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதாகும்.

 

இஸ்லாமிய அமைப்பை நிறுவுதல்

புகுந்த நாட்டில் இஸ்லாம் ஒன்றே ஒரே மதமாக ஆகிறது. அதுவே அரசியல் கட்சியைச் செல்வாக்குடன் ஆளுகிறது. அதுவே நீதிமன்றம். அதுவே பண்பாடு.

ஷரியத் நாட்டின் பொது விதியாக ஆகிறது

இஸ்லாம் அல்லாத அனைத்து மனித உரிமைகளும் நிராகரிக்கப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாதவர்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர் அல்லது அடியோடு ஒழிக்கப்படுகின்றனர்.

பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படுகிறது. பத்திரிகைகள் நிறுத்தப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாத இதர மதங்கள் தடை செய்யப்படுகின்றன அல்லது ஒழிக்கப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாத இதர மதங்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.இஸ்லாம் அல்லாதவர்களே இல்லை. (புத்த மடாலயங்கள், சர்ச்சுகள், ஹிந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன)

தாருல்-இஸ்லாம் (இஸ்லாமிய பூமி) இஸ்லாமிய வழி மட்டுமே கடைப்பிடிக்கப்படும் தேசங்களைக் குறிக்கும். அங்கு ஆன்மா நசுக்கப்படும். சுதந்திரம் அழிக்கப்படும். ஷரியத் மட்டுமே ஆளும்.

 

 

இதர உலக நாடுகள் தாருல்-ஹார்ப் – போருக்குரிய தேசங்கள் ஆகும். ஏனெனில் அவை ஷரியத்தை ஏற்கவில்லை.

இன்ஷா அல்லா – அல்லாவின் விருப்பப்படி அவைகளின் மீது போர் பிரகடனம் செய்யப்படும்.

இஸ்லாம் அல்லாத எந்த தேசத்தின் மக்களும் குற்றமற்றவர்கள் இல்லை. அல்லாவை நம்பாத குற்றத்திற்கு உள்ளானவர்கள் அவர்கள்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள், ஜொராஷ்டிர மதத்தவர் இந்தக் குற்றத்திற்காக பல நூற்றாண்டுகளாக சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம், புனருத்தாரணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஜெஸியா வரி போடப்பட்டு இருக்கும் செல்வத்தை இழந்து ஏழைகளாக்கப்பட்டனர்.

 

சமூக அவமானம், கிரிமினல் வழக்குகள் உள்ளிட்டவற்றால் இடைய்றாத பயத்துடன் வாழ வைக்கப்பட்டனர்.

எகிப்தில் நடந்த கட்டாய மதமாற்றங்கள், சூடானில் நடந்த அடிமைப்படுத்தல் ஆகியவை இன்றும் எந்தப் புத்தகத்திலும் படிக்கக்கூடியவையே!

ஈரானில் ஓரினச் சேர்க்கை செய்தவர்கள் பொதுச் சதுக்கத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

இளம் வயதுக் கன்னிகள் வயதானவர்களுக்குக் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்பட்டனர்.

இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான ‘துரோகிகள்’ மரண தண்டனை விதிக்கப்படும் என்று  பயமுறுத்தப்பட்டனர்.

 

second-world-war

 

கருணைக் கொலைகள் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்பட்டன.

புகுந்த நாட்டில் இஸ்லாமிய ஆண்கள் அங்குள்ளவ்ர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும் ஷரியத் அமுலில் இருக்கும் நாடுகளில் வாழும் பெண்கள் இரண்டாம் தரத்தவராகவே நடத்தப்படுவர்.

அங்கு விஞ்ஞானத்திற்கு இடமில்லை.

எழுதுவதற்கு முடியாது.

கலையும் இசையும் காணாமல் போகும்.

இளம் மங்கையரும், பெண்களும் பாலியல் ரீதியாக கொடுமைக்கு உள்ளாவர்.

தனிப்பட்ட ஒரு நபரின் தனிப்பட்ட சந்தோஷம், திருப்தி என்பதெல்லாம் பேச்சுக்குக் கூட இருக்காது.

 

இதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுச் சம்பவங்களை யார் வேண்டுமானாலும் தானாகவே தொகுத்துக் கொள்ளலாம்.

 

இந்தக் கட்டுரையைப் படிக்கவும் மற்றும் இது பற்றி மேல் அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் கீழ்க்கண்ட தொடுப்பை நாடலாம்.

https://civilusdefendus.wordpress.com/civil-defense/4-stages-of-islamic-conquest/

More great articles here: http://civilusdefendus.wordpress.com

 

கட்டுரையின் சுருக்கத்தை மேலே படித்தீர்கள். இனி தலைப்பிற்கு வருவோம்.

இஸ்லாமின் அசுர ஆதிக்க வெறி கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ள மேலை நாடுகளை உசுப்பி விட்டுள்ளது.

பழைய காலத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை முழங்கிய மேலை நாடுகள் கம்யூனிஸத்தை எதிர்த்தன.

ஆனால் பிறந்த நாட்டிலேயே கம்யூனிஸம் தற்கொலை செய்து கொண்டு செத்தொழிந்தது.

ரஷியா சிதறுண்டது. ஆகவே நிம்மதி கொண்டன அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள். ஆனால் இப்போது தீவிரவாதத்தை அமெரிக்காவிலேயே இரட்டைக் கோபுரத் தாக்குதல் மூலமாக அரங்கேற்றினான் ஒஸாமா பின் லேடன்.

அவனைத் தாமதமாகத் தான் என்றாலும் கூட பிடித்துக் கொன்று க்டலில் தூக்கிப் போட்டது அமெரிக்கா.

பிரான்ஸ், ஜெர்மனி. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் வெவ்வேறு வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இஸ்லாமியரின் தீவிரவாதம் உடனடியாக உலக யுத்தத்தில் கொண்டு விடும் என்பதை ஏராளமான இணைய தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இப்போது இறுதிப் போருக்கு இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் தயார்.

இந்தப் போரில் அழியப் போவது யார்? வெல்லப் போவது யார்?

தர்மம் வெல்லும்; பாவம் தோற்கும்.

 

 

மூளப் போகும் இந்த  மூன்றாம் உலக மகா யுத்தம் பற்றிய செய்திகளை கீழ்க்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்:

 

http://www.catholic.org/news/international/middle…/story.php?id…

http://www.speroforum.com/…/76705-ThirdWorldWar-when-Mu

freedomoutpost.com/worldwar-iii-happening-now-  .

 

 

 

                          -இந்தக் கட்டுரைத் தொடர் முற்றும்

உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!