லண்டனில் பஞ்சாங்க படனம்! பஞ்சாங்கம் ஒரு என்சைக்ளோபீடியா! (Post No.6266)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 15 April 2019


British Summer Time uploaded in London – 8-32 am

Post No. 6266

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Leave a comment

2 Comments

  1. R.Nanjappa (@Nanjundasarma)'s avatar

    பல விஷயங்களை சுருக்கமாக, ஆனால் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்க ஒரு புதிய கோணம் தெரிந்துகொண்டோம்.
    பொதுவாக புது பஞ்சாங்கம் படிக்கும்போது ஒரு பிரமிப்பும் கூடவே ஒரு வித அச்ச உணர்வும் ( உண்மையாக பயபக்தி) வருகிறது. இந்தப் பிரபஞ்சம் தான் எத்தனை பிரம்மாண்டமானது! மனிதன் எந்த மூலை! ஆனால் இந்தப் பிரபஞ்சத்தையும் ஓரளவுக்கு வசப்படுத்திக் கொண்டு விட்டான்- அதாவது இது நமக்குக் கட்டுப்படாது, நாம் அதை ஒட்டிப் போகவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டான். இதை வேத பாஷையில் “ரிதம்” என்பார்கள். ” ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்.” இதற்கு பஞ்சாங்கம் வழிகாட்டுகிறது. பஞ்சாங்கம் படிப்பதன் நிகர லாபம் இத்தகைய அடக்க உணர்வைப் பெறுவதுதான். நம்மை ஏதோ ஒரு சக்தி நடத்திச் செல்கிறது. காலம் நிற்காமல் சுழல்கிறது. பலவித அனுபவங்களப் பெறுகிறோம்.
    நாராயணீயத்தில் ( 98.11) ஒரு அருமையான ஶ்லோகம் காலத்தின் கோலத்தை தெளிவாகச் சொல்கிறது: அதன் பரிகாரத்தையும் சொல்கிறது.

    துர்வாரம் த்வாதஶாரம் த்ரிஶத பரிமிலத் ஷஷ்டி பர்வாபிவீதம்
    ஸம்ப்ராம்யத் க்ரூரவேகம் க்ஷணமனு ஜகதாச்சித்ய ஸ்ந்தாவமானம்
    சக்ரம் தே காலரூபம் வ்யதயத நதுமாம் தவத்பதை காவலம்பம்
    விஷ்ணோ காருண்ய ஸிந்தோ பவன புரபதே பாஹி ஸர்வாம யௌகாத்.

    விஷ்ணுவான ஹே குருவாயூரப்பா ! தங்களுடைய காலச்சக்கரம் ஒருவராலும் ஒருக்ஷணம்கூட தடுத்து நிறுத்த முடியாதது. அது பன்னிரண்டு மாதங்களாகிய ஆரங்கள் கொண்டது. முன்னூற்றறுபது நாட்களாகிய முனைகளைக் கொண்டது. நிறுத்த இயலாத வேகத்துடன் சுழல்கிறது. ஒவ்வொரு நொடியிலும் உலகை வலியப்பிடித்து வேகமாக இழுத்துச் செல்கிறது. அப்படிப்பட்ட இந்த காலச்சக்கரம் வேறு கதியின்றித் தங்கள் திருவடிகளையே பற்றிக்கொண்டிருக்கும் என்னைத் துன்புறுத்தாம லிருக்கட்டும். கருணைக்கடலான குருவாயூரப்பா! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காத்தருளவேண்டும்.

    பஞ்சாங்க படனம் நம்மை புனிதப்படுத்தட்டும்!

  2. Tamil and Vedas's avatar

    Narayaneeyam slokam is very good.Thanks for your valuable comment.

Leave a comment